சக்லத்வாலா எழுதிக் கொடுத்ததைத் தான் பெரியார் படித்தாரா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (14) -கொளத்தூர் மணி
1931 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி விருதுநகர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிந்து இரவு சாப்பாட்டிற்குப் பிறகு விஷய ஆலோசனைக் கூட்டம் மாநாட்டு பந்தலில் திருவாளர் பாண்டியன் அவர்கள் தலைமையில் இரவு 10:30 மணிக்குத் துவங்கப்பட்டு இரவு 3:30 வரை நடந்தது. விஷய ஆலோசனைக் கமிட்டி ஆரம்பம் ஆனதும், சோழவந்தான் திரு. வெங்கடசாமி அய்யர் அவர்கள் விஷய ஆலோசனைக் கமிட்டிக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார். இதற்குத் தலைவர் அவர்கள் அகாலம் ஆகிவிட்டதால் இனி தேர்தல் நடத்துவது சிரமம் என்றும், இருந்தபோதிலும் கூட்டத்தின் அபிப்ராயத்தைத் தெரிய ஆசைப்பட்டு சபையின் அபிப்பிராயம் கேட்டார். பெரும்பான்மையானவர்கள் பொதுக் கூட்ட முழுமையுமே விஷய ஆலோசனைக் கமிட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு அந்தப்படியே தீர்மானிக்கப்பட்டது. முதன்முதலாக மதங்கள் கண்டனத் தீர்மானம் விவாதிக்கப்பட்டது. அதில் சிறிது காரமான விவாதம் நடந்தது என்றாலும் முடிவில் ஒரே ஒரு ஓட்டு தான்...
