சென்னையில் மகிழ்ச்சி விழா! ஜாதி மறுப்பு மணம் புரிந்த பெரியார் குடும்பங்கள் சந்திப்பு
சென்னை மாவட்டக் கழகம் மற்றும் இளைஞர் அணி இணைந்து நடத்திய காதலர் தினத்தை முன்னிட்டு ஜாதி மறுப்பு இணையர்களின் குடும்ப விழா பிப்ரவரி 17 அன்று மாலை 6 மணி அளவில் ராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வை சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார். கவுசல்யா (நிறுவனர் சங்கர் அறக்கட்டளை) உடுமலை சங்கர் ஜாதியப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜாதி ஆணவ கொலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவர். தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் ஜாதி வெறி செயலுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருபவர். காவை.ஈசுவரன் (தலைமைக் குழு உறுப்பினர்), ஜாதி மறுப்பு திருமணங்களை முன்னின்று கடும் எதிர்ப்புகளை மீறி நடத்தி அவர்களுக்கு அடைக்கலம் தருபவர். சேலத்தில் 1000 கணக்கான ஜாதி,மத மறுப்பு திருமணங்களை நடத்தியவர். தீனா (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) புதுவை இயக்கத்தில் பெண்களை துணிச்சலோடு ஜாதி மறுப்பு திருமணங்களை புரிய ஊக்குவிப்பவர். தன்னுடைய இயக்கப் பெண்களில் சிலர்...
