Category: சிறப்பு கட்டுரை

சென்னையில் மகிழ்ச்சி விழா! ஜாதி மறுப்பு மணம் புரிந்த பெரியார் குடும்பங்கள் சந்திப்பு

சென்னையில் மகிழ்ச்சி விழா! ஜாதி மறுப்பு மணம் புரிந்த பெரியார் குடும்பங்கள் சந்திப்பு

சென்னை மாவட்டக் கழகம் மற்றும் இளைஞர் அணி இணைந்து நடத்திய காதலர் தினத்தை முன்னிட்டு ஜாதி மறுப்பு இணையர்களின் குடும்ப விழா பிப்ரவரி 17 அன்று மாலை 6 மணி அளவில் ராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வை சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார். கவுசல்யா (நிறுவனர் சங்கர் அறக்கட்டளை) உடுமலை சங்கர் ஜாதியப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜாதி ஆணவ கொலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவர். தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் ஜாதி வெறி செயலுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருபவர். காவை.ஈசுவரன் (தலைமைக் குழு உறுப்பினர்), ஜாதி மறுப்பு திருமணங்களை முன்னின்று கடும் எதிர்ப்புகளை மீறி நடத்தி அவர்களுக்கு அடைக்கலம் தருபவர். சேலத்தில் 1000 கணக்கான ஜாதி,மத மறுப்பு திருமணங்களை நடத்தியவர். தீனா (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) புதுவை இயக்கத்தில் பெண்களை துணிச்சலோடு ஜாதி மறுப்பு திருமணங்களை புரிய ஊக்குவிப்பவர். தன்னுடைய இயக்கப் பெண்களில் சிலர்...

ஊடகவியலாளர்களிடம் முதல்வர் கேள்வி தமிழ்நாட்டைப் போல் சாதனைகள் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா?

ஊடகவியலாளர்களிடம் முதல்வர் கேள்வி தமிழ்நாட்டைப் போல் சாதனைகள் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா?

இங்கு ஏரா­ள­மான ஊட­க­வி­ய­லா­ளர்­கள் இருக்கிறீர்­கள். 11.19 சத­வி­கி­தம் வளர்ச்சி என்பதை, தமிழ்­நாட்டைத் தவிர வேறு எந்த மாநி­லத்­தால் சாதிக்க முடிந்­தி­ருக்­கிறது?அதுவும் எப்படிப்பட்ட சூழ­லில் இதை சாதித்திருக்கிறோம்? ஜன­நாயகத்­திற்­கும், கூட்டாட்­சிக்­கும்சிறி­தும் மதிப்பு தராத பா.ஜ.க. ஆட்சி ஒன்­றி­யத்தில் ஆளு­கி­றது. எதிர்க்­கட்சிகள் ஆளக்­கூ­டிய மாநிலங்­களை, எந்­த­ள­விற்கு வஞ்சகத்­து­டன், ஓரவஞ்­ச­னையுடன் அவர்­கள் Approach செய்கி­றார்­கள் என்று நான் உங்­களுக்கு விளக்கி சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை, உங்களுக்கே அது நன்­றாகத் தெரி­யும். ஆளு­நர்­கள் மூல­மாக நிர்­வா­கச் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தில் தொடங்கி, செயற்­கை­யான நிதிச் சுமையை உரு­வாக்கி மாநி­லங்­களை முடக்க நினைப்­பது வரைக்­கும், அத்­தனை செயல்­க­ளை­யும் செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இது மட்­டும்­தான் அவர்­களுக்குத் தெரிந்த Politics. ஆனால், இதை­யெல்­லாம் அர­சி­யல் தளத்திலும், ஆட்சி அதி­கா­ரத்­தி­லும் எதிர்­கொண்டு, “வளர்ச்சி அர­சி­யல் என்­றால், தமிழ்­நாட்டைப் பாருங்கள்” என்று சொல்­லும் அள­விற்கு Development Politics–க்கானஅடை­யா­ள­மாக தமிழ்­நாடு வளர்ந்திருக்­கிறது. அது­வும் ஒரு தரப்­புக்­கான வளர்ச்சி இல்லை; ‘எல்­லாருக்கும் எல்லாம்’ என்ற பரந்துபட்ட வளர்ச்சி!...

ஈரோடு-விருதுநகர் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவாவின் பங்கு என்ன?  ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 13 -கொளத்தூர் மணி

ஈரோடு-விருதுநகர் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவாவின் பங்கு என்ன? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 13 -கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் வரலாற்று வரலாற்றாளர்களான தோழர்கள் இஸ்மத் பாஷா, கே.பாலதண்டாயுதம் ஆகியோரே ஜீவாவுடன் நேரடியாக பழகி உரையாடி அவரது வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புடையவர்கள் என்பதாலேயே அவர்களது நூல்களை முதன்மை ஆவணமாகக் கொண்டு எழுதி வருகிறோம். அந்நூல்களில் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவா நிகழ்த்திய வீரதீர செயல்பாடுகள் குறித்து அந்நூல்களில் விதந்தோதப்பட்டுள்ள செய்திகளைப் பார்ப்போம். தோழர் இஸ்மத் பாஷாவின் நூலின் 23ஆம் பக்கத்தில் “சென்னையில் போலீஸ் அடக்குமுறை எல்லையை மீறி விட்டது; தொண்டர்கள் அடித்து வீழ்த்தப்பட்டார்கள். ஆறு போல் இரத்தம் ஓடிற்று. அச்சமயத்தில் ஈரோட்டில் சுயமரியாதை மகாநாடு கூடிற்று. போலீஸ் அடக்கு முறையை வன்மையாகக் கண்டித்து ஒரு தீர்மானம் விஷயலோசனைக் கமிட்டியில் வந்தது. ஜீவா அதை ஆதரித்து உணர்ச்சித் ததும்பப் பேசினார். ஜாதி மத விவகாரங்களில் மட்டும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொண்டால் போதாது; அரசியல் விவகாரங்களிலும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி எல்லோருடைய சுயமரியாதை...

`வந்தே மாதரம்’ தேசபக்தி பாடலா? மத பக்தி பாடலா?

`வந்தே மாதரம்’ தேசபக்தி பாடலா? மத பக்தி பாடலா?

வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கி இந்துத்துவ பாஜக ஆட்சி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை ‘இந்து’ கடவுள்களின் பூமியாக சித்தரிக்கும் பாடலை கட்டாயமாக்கி இது ‘இந்துக்கள்’ நாடு என்று காட்டி வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தும் ஆணை இது. வங்காளத்தில் பக்கிம் சந்திர சட்டர்ஜி என்றப் பார்ப்பனர் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற நாவலின் இடம்பெற்றுள்ள பாடல் இது. இந்தப் பாடல் சுதந்திரப் போராட்டக் காலத்தில் பாடப்பட்டது. இதை தேசிய கீதமாக மாற்ற வேண்டும் என்று பார்ப்பனர்கள் விரும்பினார்கள். 1937-இல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடலின் முதல் இரண்டு பகுதிகளை மட்டும் பாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மற்ற நான்கு பகுதிகள் ‘இந்து’ மதத்தோடு நாட்டை இணைப்பதால் அந்த பகுதிகள் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், காந்தி ஆகியோர் பங்கேற்றனர். துர்கா, லட்சுமி, சரஸ்வதி பெண் கடவுள்களின் பூமி நமது...

வள்ளலாரின் ஜாதி-மத எதிர்ப்புக் கருத்துக்களை நூலாக வெளியிட்டவர் பெரியார்- தமிழக முதலமைச்சர்

வள்ளலாரின் ஜாதி-மத எதிர்ப்புக் கருத்துக்களை நூலாக வெளியிட்டவர் பெரியார்- தமிழக முதலமைச்சர்

சென்னையில் கடந்த பிப்-15 அன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ‘அனைத்துலக வள்ளலார் மாநாட்டைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து… இந்தச் சமூகத்தில், இறுகிப் போயிருந்த பழமைவாதங்களையும், மூடத்தனங்களையும் சாடியவர் அவர். சாதி, சமய வேறுபாடுகள் இல்லாத சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற அவருடைய பெருங்கனவுதான் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கை. அதனால்தான், திராவிட இயக்கம் உருவானதில் இருந்து, தொடர்ந்து வள்ளலாரை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆறாம் திருமுறை பாடல்களைத் தொகுத்து, ‘இராமலிங்கர் பாடல் திரட்டு’ என்ற நூலை 1929-ல் வெளியிட்டவர், தந்தை பெரியார். இன்னும் ஒருபடி மேலே சென்று, தமிழர்கள் முன்பு, பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார். தந்தை பெரியார் என்ன கேட்டார் தெரியுமா? “வட நாட்டு சாமியார்களைப் போற்றும் தமிழனே, வடலூர் வள்ளலார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்?” என்று கேட்டார். இதையெல்லாம் உணர்ந்துதான், “வள்ளலாரின் கொள்கைகளை சமுதாயக் களத்தில், பெரியார் பரப்புரை செய்தார்”...

வாராது வந்த மாமணி ஸ்டாலின்!

வாராது வந்த மாமணி ஸ்டாலின்!

கடந்த சனவரி-24, சூலூர் பாவேந்தர் பேரவை நடத்திய மொழிப்போர் நினைவு உணர்ச்சி விழா மற்றும் பெரியார் நினைவு அறிவு விழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரை: நமக்கு வந்திருக்கிற ஆபத்து நமக்கு அமைந்திருக்கிற ஒரு வாய்ப்பு. மூடநம்பிக்கைகள் அற்ற பகுத்தறிவுவாதிகளாக நாம் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கெல்லாம் ஒரு மூடநம்பிக்கை இருந்தது. நன்றாக பேசுபவர்தான் நல்ல தலைவராக இருக்க முடியும் என்று கருதிக்கொண்டிருந்தோம். அதனால் ஸ்டாலின் கொஞ்சம் தகுதி குறைவானவர்தான் என்ற மூடநம்பிக்கை அவர் ஆட்சிக்கு வந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு வரை இருந்தது. அந்த மூடநம்பிக்கை அதற்கு பின்பு மறைந்தது. பேச்சாளராக இருக்க வேண்டியது அவசியம் இல்லை, செயல்படுபவராக இருந்தால் போதும் என்பது அவர் ஆட்சிக்கு வந்த பின்னால்தான் நமக்குத் தெரிய வந்தது. பதவி இல்லாத 10 ஆண்டுகாலத்தில் அவர் என்னென்ன நினைத்து வைத்திருந்தார் என்பதெல்லாம் தற்போதுதான் தெரிகிறது. இன்னும் 10-ஆண்டுகள் முடிந்தால்தான் வெளியே வரும் என நினைக்கிறேன். யாரும் எண்ணிப்...

பெரியார் பற்றிய செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா! ஜீவாவின் வாழ்க்கை வரலாறுகளில் விடுபட்டது எப்படி?ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 12-கொளத்தூர் மணி

பெரியார் பற்றிய செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா! ஜீவாவின் வாழ்க்கை வரலாறுகளில் விடுபட்டது எப்படி?ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 12-கொளத்தூர் மணி

காந்தி ஆசிரமத் தலைவர் கும்பலிங்கம் அவர்களுடைய அறிக்கை கூறுகிறது, அந்த ஆசிரமம் 11.2.1926 அன்று தொடங்கப்பட்டது என்று. இந்த செய்தியைத் தாங்கி இருக்கிற அதே ‘குடிஅரசு’ இதழின் 5ஆம் பக்கத்தில் மற்றொரு செய்தியும் பதிவாகி இருக்கிறது. அச்செய்தி “ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் 6.4.1926-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீமான்கள் பிச்சா சுப்பிரமணிய செட்டியார், ராய. சொக்கலிங்கம் செட்டியார், வ.ராமசாமி அய்யங்கார் முதலியவர்களுடன் காரைக்குடியில் இருந்து காலை 9 மணிக்கு வந்ததும், வாத்திய கோஷத்துடன் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்காக ஸ்ரீமான் கும்பலிங்கம் பிள்ளை பார்வையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காந்தி ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்ற செய்தியை நாம் பார்க்கிறோம். பெரியாரை தவிர்த்த ஜீவா ஏற்கனவே 7.4.1926 நாளிட்ட ‘குமரன்’ இதழில் வந்திருந்த செய்தியை நாம் பார்த்திருக்கிறோம். அந்த செய்தியில் இதே நாளில் “6.4.1926 அன்று பெரியார் 10 மணிக்கு சிராவயல் வந்து காந்தி கிணற்றைத் திறந்து வைத்ததும், அதேபோல மாலை 6 மணிக்கு...

சிராவயல் ஆசிரமம் தொடங்கப்பட்டதன் பின்னணி!      ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (11) – கொளத்தூர் மணி

சிராவயல் ஆசிரமம் தொடங்கப்பட்டதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (11) – கொளத்தூர் மணி

ஜீவாவின் காந்தி ஆசிரமக் கதைகளில் எதிலும் பதிவிடப்படாத அல்லது ஜீவாவால் சொல்லப்படாமல் தவிர்த்தத் தலைவரைப் பற்றி அறியும் முன்னர் வேறு சில செய்திகளையும் அறியவேண்டியுள்ளது. ஜீவா நிறுவியதாகவும் அதனுடைய செயலாளராக இருந்து பணியாற்றியதாகவும் நம்ப வைக்கப்பட்டிருக்கும் அந்த சிராவயலில் இயங்கிய நிறுவனங்களை முதலில் நாம் அறிந்தாக வேண்டும். சிராவயலில் 1923-ஆம் ஆண்டிலிருந்து காந்தி வாசக சாலை என்ற ஒன்று செயல்பட்டு வந்திருக்கின்றது. அதன் பின்னரே ‘தனவைசிய நாட்டுத் தமிழ்க் கல்விக் கழகம்’ உருவாக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏடுகள் தரும் செய்தி! அவ்வாறான காந்தி வாசக சாலையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா ஒன்று 12.05.1925 அன்று நடைபெற்றிருக்கிறது. அவ்விழா ‘நவசக்தி ஆசிரியர் திருவாளர் திரு.வி.கல்யாண சுந்தரம் முதலியார்’ அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும், அந்த விழாவில் திரு.வி.க. அவர்கள் ‘காந்தி தருமம், ஜீவகாருண்யம், தமிழின் இனிமை’ முதலியவைகளைப் பற்றி மிக அழகாக எடுத்துரைத்து உரையாற்றியதாகவும் ‘தனவைசிய ஊழியன்’ ஏட்டின் 12.05.1925...

சேரன்மாதேவி குருகுலத்தில் பணிபுரிந்தாரா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (10)- கொளத்தூர் மணி

சேரன்மாதேவி குருகுலத்தில் பணிபுரிந்தாரா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (10)- கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் காலத்தில் அவரது கருத்துக்களை நேரடியாக அறிந்து எழுதப்பட்டுள்ள தோழர் இஸ்மத் பாஷா, தோழர் கே.பாலதண்டாயுதம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் பல செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் முதன்மையானது சிராவயல் காந்தி ஆசிரமம் (பள்ளி வாசகசாலை) பற்றியது; அதாவது இந்த ஆசிரமத்தை தோழர் ஜீவானந்தம்தான் உருவாக்கினார் என்ற ஒரு அதீதமாக எழுப்பபட்டுள்ள மாய பிம்பம். தோழர் அ.ப.பாலையன் தொகுப்பாசிரியராக இருந்து தொகுத்த “ஜீவா தேடிய மானுடம்” என்ற நூலின் நான்காம் கட்டுரையான ‘பெரியார் ஜீவா – உறவும் பிரிவும்’ என்ற கட்டுரையில் “ நீண்ட நாட்கள் நடைபெற்ற கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்திலும் ஜீவா பங்கேற்கிறார் (1924) ”, (நூலில் 1924 என கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டு இருந்தாலும் 1924 ஏப்ரல் முதல் 1925 டிசம்பர் வரை போராட்டம் நடந்தது) என்றும் “சேரன்மாதேவி குருகுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜீவா, அங்கு நடைபெற்ற அநீதிக்கு எதிராக போராட்டத்தில் ஈவெரா, வரதராஜர்...

முதல் மொழிப்போரின் பின்னணி!

முதல் மொழிப்போரின் பின்னணி!

இந்தித் திணிப்புக்கான எதிரான தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்தை கதைக்களமாக கொண்டு வெளிவந்துள்ள சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வணிக ரீதியாகவும் பெருவெற்றி பெற்றிருக்கிறது. 1965 மொழிப்போர் குறித்த மாணவர் எழுச்சியை அறிந்துகொள்ள இன்றைய இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் இத்திரைப்படத்தை கண்டு வருவதுடன், பொதுத்தளத்திலும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இந்நிலையில் முதல் மொழிப்போர் குறித்து தினகரன் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் இருந்து… தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக நடந்து வரும் தாய்மொழிக்கான உரிமைப் போராட்டம் – இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்தான். இந்த பரந்த சரித்திரத்தை மூன்றாகப் பிரிக்கலாம். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல்கட்டமாக 1937ல் இருந்து 1940 வரையிலும், இரண்டாவது கட்டப் போராட்டம் 1948 – 1952 வரையிலும் மூன்றாம் கட்டமாக 1965லும் நடைபெற்றது. முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம்: தமிழகத்தையும் சேர்த்து இன்றைய பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கியதுதான் அன்றைய சென்னை மாகாணம். இந்த சென்னை மாகாணத்தில் 1937ல் நடந்த பொதுத்...

ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக ஓயாது பரப்புரை!

ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக ஓயாது பரப்புரை!

ஆகஸ்ட் 01: விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் மதக் கலவரத்தை தூண்டும் சங் பரிவார் அமைப்புகளைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் காவல்துறையிடம் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 03: சேலம் மாவட்டம் மேச்சேரியில் இளைஞர் அணி சார்பில் பெரியார் என்னும் பெரு நெருப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மில்டன், யூ2புரூடஸ் மைனர், இந்திரகுமார் தேரடி கருத்துரை வழங்கினர். கழகத் தலைவர் நிறைவுரையாற்றினார். ஆகஸ்ட் 06: ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும், கவின் படுகொலைக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தரக்கோரியும் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 08: குடியாத்தத்தில் குடிஅரசு மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. ஜாதி மறுப்பு மற்றும் விதவை மறுமணம் செய்துகொண்ட இணையர்கள் இந்நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர். கழகத்தலைவர் சிறப்புரையாற்றினார். ஆகஸ்ட் 09: சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் படத்திறப்பு நிகழ்ச்சி தேவநேயப் பாவாணார் அரங்கத்தில் நடைபெற்றது....

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஆள்பிடித்தாரா பெரியார்?  ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (9) – கொளத்தூர் மணி

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஆள்பிடித்தாரா பெரியார்? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (9) – கொளத்தூர் மணி

தோழர் ஜீவாவால் எழுதப்பட்ட ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூல் 1947 டிசம்பர் முதல் 1948 பிப்ரவரி முடிய மூன்று மாதங்கள் பொதுவுடைமை இதழான ‘ஜனநாயகத்’தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதை நாம் முன்னரே பார்த்தோம். அதில் 1946-இல் நடந்த சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலையொட்டி எழுதப்பட்ட சில செய்திகளை அந்த நூலில் இருந்து எடுத்து, கீழே கொடுத்திருக்கிறோம். “ஜாதி ஒழிப்பு, மதவொழிப்பு விஷயங்களை முக்கியப்படுத்தி திராவிடர் கழகத்தில் நல்ல அபிப்பிராயத்தோடும், பற்றுதலோடும் இருந்த இளைஞர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களைக் கண்டு புத்துணர்ச்சி அடைந்து வந்ததைத் தடுக்க நயமான முறைகளில் சூழ்ச்சி செய்தது. ‘ப.ஜீவானந்தம் நம் ஆள்தான்’ என்றும் ‘கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமக்கும் வித்தியாசமில்லை” என்றும் பொதுவுடைமை ஆர்வமுள்ள வாலிபர்களைத் திராவிடர் கழகம் வலை வீசிப்பிடிக்க முயன்றது” என்கிறார் ஜீவா. ஜீவா எழுதியதை நம்பி ஏற்றுக்கொண்டால், அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது; மக்களின் ஆதரவைப் பெற்று இருந்தது;...

இந்தியை ஆதரிக்கவில்லையா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (8) – கொளத்தூர் மணி

இந்தியை ஆதரிக்கவில்லையா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (8) – கொளத்தூர் மணி

தோழர் பொன்னீலனின் அதே நூலில் “1953 அக்டோபரில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளத்துக்கே உரியன” என்ற கருத்தை கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் வெளியிட்டார். இதை எதிர்த்து அக்டோபர் 14 தாமரை குளத்தில் ஆர்.சோமசுந்தரம் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜீவா இவ்வாறு கூறினார்: “தேவிகுளம் பீர்மேடு சம்பந்தமாக ஸ்ரீ ஏ.கே. கோபாலன் கூறியது அவரது சொந்த கருத்து. கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக கருத்து வெளியிடாமல் இருப்பது வரையிலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் அவர்கள் கூறுவது கட்சியின் முடிவாகாது. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை ‘எல்லைக் கமிஷன் முடிவுக்கு விட வேண்டியது அவசியம்’ இதுதான் கட்சியின் கருத்து” என்று கறாராக அறிவித்து விடுகிறார். வெண்டைக்காய் பதில் ஆனால் ‘சரியில்லாத ஈரோட்டு பாதை’ காட்டிய பெரியாரின் ‘விடுதலை’ ஏடு அதன் 22.11.1955 இதழில் “தேவிகுளம், பீர்மேடு தமிழ் வட்டாரங்களே! சென்னை சட்டசபையில் அமைச்சர் தந்த புள்ளிவிவரம்” என்ற தலைப்பில் செய்தி...

ஜீவாவும் மொழி வழி மாநில சீரமைப்பும் ; ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (7) – கொளத்தூர் மணி

ஜீவாவும் மொழி வழி மாநில சீரமைப்பும் ; ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (7) – கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பலர் எழுதி இருந்தாலும் 1946-இல் வெளிவந்த தோழர் இஸ்மத் பாஷா எழுதிய ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ மட்டும் அவர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த ஒன்றாகும். 1963 ஜனவரியில் முடிவெய்திய தோழர் ஜீவா குறித்து, ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’ என்ற நூல் 1966-ஆம் ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்த அவரது சிலை திறப்பு விழாவில் வெளியிடப்பட்டிருந்தாலும் நூலினை எழுதிய தோழர் கே.பாலதண்டாயுதம் இறுதிக்காலத்தில் ஜீவாவோடு நெருக்கமாக இருந்த ஒருவர் ஆவார். அதில் பதியப்பட்டுள்ள செய்திகள் பெரும்பாலும் ஜீவாவிடம் நேரில் கேட்டு அறிந்து கொண்டதாகவும், ஏற்கெனவே அறிந்ததை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும்தான் இருக்க முடியும். அதில் மொழி வழி மாநிலங்கள் உருவான காலத்தில் வட எல்லையிலும் சென்னை குறித்தும் தெற்கெல்லைப் போராட்டம் குறித்தும் பதிவாகியுள்ள நிகழ்வுகளின் பற்றிய உண்மைத் தன்மையைக் குறித்து திறனாய்வு செய்ய வேண்டியுள்ளது. அந்நூலின் 72 ஆம் பக்கத்தில் உள்ள “தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைய 1949-இல்...

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… எண் 61, வெங்கடாசலம் தெரு, ராயப்பேட்டை என்ற முகவரி கொண்ட ஒற்றைக் குடித்தன வாடகை வீடு, ஒரு உடைந்த நாற்காலி, ஓலைப்பாய், மர பீரோ… பத்ரி நாராயணனுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் அதற்குமேல் இல்லை. ஆனால், அவருடைய கண்ணசைவுக்கே கட்டுப்படும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை 1990-இல் உருவாக்கி வைத்திருந்தார் அவர். 1980-களில் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, பத்தாண்டுகளிலேயே பலமான கோட்டையாக ராயப்பேட்டையை மாற்றிய செயல் வீரர். ராஜீவ் காந்தி படுகொலையில் கைதாகி, 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த எழுவரை, விடுவிக்கக்கோரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டது இன்றைய...

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்கள் மீது இதுவரை அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நிகழ்த்தி வந்த பல்வேறு வகையான உழைப்பு சுரண்டலை சட்டரீதியாக செய்வதற்கான ஒரு ஏற்பாடு புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பாகும். விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாக இந்நாட்டின் உழைக்கும் மக்களும் போராடிப் பெற்ற 29 சட்டங்களையும் நீக்கிவிட்டு அவற்றை நான்கு சட்ட தொகுப்புகள் ஆக சுருக்கி புதிய தொழிலாளர் சட்டங்களை நிறுவியுள்ளது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இந்த சட்டத் தொகுப்பில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்வது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்/ள்களின் கடமையாகும். இந்தச் சட்ட தொகுப்பில் உள்ள சிக்கல்களை சுருக்கமாகப் பார்ப்போம். புதிய சட்டத்தின் சிக்கல்கள்! ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதே தற்போதைய வேலை நேரமாக உள்ளது. புதிய சட்ட தொகுப்பு இதில் ஒரு முக்கிய திருத்தத்தை செய்கிறது. வாரத்திற்கு ஆறு நாள் வேலை என்பது கட்டாயம் அல்ல. மாறாக...

பத்ரி நாராயணன் – இயக்கமாய் ஒரு தனிமனிதன்!

பத்ரி நாராயணன் – இயக்கமாய் ஒரு தனிமனிதன்!

(முரசொலி பாசறைப் பக்கத்தில் ஊடகவியலாளர் பிரகாசு எழுதி வரும் பெரியார் மண் தொடரில், ராயப்பேட்டையை இலட்சியக் கோட்டையாக்கிய கழக செயல் வீரர் மறைந்த பத்ரி நாராயணனின் குறித்து எழுதப்பட்ட கட்டுரை இது) ஒரு தனிமனிதன் வீழ்த்தப்பட்டால் அவர்களின் உடல் இயக்கம் மட்டும்தான் நின்று போகுமே தவிர, அவர்களின் சித்தாந்தம் வீழ்ந்துவிடாது. சிந்தனையாளர்களுக்கு அவர்களின் இறப்பு என்பது ஒருகாலும் மறைவாகாது’ என்பதற்கு திராவிட இயக்கத்தில் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. அதில் தலைநகர் சென்னையின் ஓர் உதாரணம் `பத்ரி நாராயணன்’. 2004-ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருந்தது. `மதமாற்றத் தடைச்சட்டம்’, `ஆடு – கோழி பலியிட தடை’ என ஆர்.எஸ்.எஸ். அரசாகவே மாறியிருந்த அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க ஓரணியில் திரண்டிருந்தன தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகள். சென்னையில் ஏப்ரல் 26-ஆம் தேதியில் இருந்து, தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது பெரியார் திராவிடர் கழகம். ஏப்ரல் 30-ஆம் நாள்...

தமிழர் இயக்கம் உருவானதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5)- கொளத்தூர் மணி

தமிழர் இயக்கம் உருவானதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5)- கொளத்தூர் மணி

“ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களைப் பார்ப்போம். ஈரோட்டுப் பாதையின் 20 ஆண்டுகள் என்ற தலைப்பில், “இன்று ஈரோட்டுப் பாதை திராவிடர் கழகம் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பித்த பொழுது இதற்கு இந்தப் பெயர் இல்லை; கூடு விட்டு கூடு பாய்வதைப் பாய்வது போல பல பெயர்களைத் தாங்கி ஈரோட்டுப் பாதை 20 ஆண்டுகளைக் கழித்து இருக்கிறது. பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமூகச் சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சமதர்ம நாஸ்திக இயக்கம், தமிழர் இயக்கம், திராவிடர் இயக்கம் என்ற பல பெயர்களோடு பாதை காட்டி வந்திருக்கிறார் தன்னைப் பின்பற்றிய தமிழ் மக்களுக்கு ஈரோட்டுப் பெரியார்” என்று எழுதியுள்ளார் ஜீவா. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மார்க்சியர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் ஆகும். வரலாற்றின் தொடக்கத்தில் கிரேக்க தத்துவஞானி ஹிராகிளிடஸ் சொல்லியிருந்தாலும், நவீன வரலாற்றில் பேராசான் மார்க்சும் இதனைச் சொல்லி உள்ளார். ஆனால்...

ஜீவா இந்தியை எதிர்த்தாரா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (4)- கொளத்தூர் மணி

ஜீவா இந்தியை எதிர்த்தாரா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (4)- கொளத்தூர் மணி

ஜீவா இந்தியை ஆதரித்தார் என்று குறிப்பிட்டதற்கு பல பேர் கொதித்தெழுந்து ஆதாரத்தைக் கேட்கத் தொடங்கினார்கள். அது குறித்தும் சில செய்திகளைப் பார்ப்போம். பெரியார் காங்கிரசில் இயங்கியபோது 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியார் பெரியாரின் இல்லத்துக்கு வந்து தங்கி இருந்திருக்கிறார். அப்போது அன்னியத் துணிகள் பகிஷ்கரிப்பு என்ற பெயரால் வெளிநாட்டுத் துணிகள் எரிக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்ததாக 1922-ஆம் ஆண்டில் ஈரோடு பெரியார் இல்லத்திற்கு மோதிலால் நேருவும், டாக்டர் அன்சாரியும் வந்ததன் நினைவாக ஈரோடு வெங்கட்ட நாயக்கர் சத்திரத்தில், ஒரு இந்தி மொழி கற்பிக்கும் பள்ளியை, ஒரு பாதி காங்கிரஸ் செலவிலும், மறுபாதி தமது செலவிலும் நடக்கும் வகையில் தொடங்கியுள்ளார். ஆனால் அதே ஆண்டு இறுதியில் திருப்பூரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் “இந்தியைப் பரப்புவது என்று கூறிக்கொண்டு இந்தியில் உள்ள துளசிதாஸ் இராமாயணத்தை பரப்புவதைக் கண்டித்தும், வருணத்தையும் தீண்டாமையும் காப்பாற்றும் இராமாயணத்தையும் மனுசாஸ்திரத்தையும் எரிக்க வேண்டும்” என்றும் பேசியுள்ளார்....

வாக்குத் திருட்டு அல்ல ஆட்சித் திருட்டு ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு அல்ல ஆட்சித் திருட்டு ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் என்பது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு அரசியலமைப்பு நிறுவனம். இந்நிறுவனம் பக்கசார்பின்றி பொதுவானதாக நடந்து கொள்வதற்காகவே அதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நீதித்துறை, புலனாய்வுத் துறை, தணிக்கைத் துறை என ஒவ்வொரு அரசியலமைப்பு நிறுவனங்களும் தவறாக கையாளப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு நிலவுகிறது. இதில் தேர்தல் ஆணையமும் விதிவிலக்கல்ல. தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க பாஜகாவின் ஏஜென்டாகவே மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக தாக்கி வருகிறார். பாஜகவை வெற்றி பெறச் செய்வதற்காக அக்கட்சியுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குத் திருட்டு நடத்தி வருவதாக குற்றம் சாட்டுகிறார். இதற்கெல்லாம் ஆதாரம் என்ன என தேர்தல் ஆணையம் கேட்டதற்கு, கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை ராகுல் காந்தி...

ஜீவாவை சுற்றி எழுப்பப்பட்ட மாய பிம்பம், ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (3) – கொளத்தூர் மணி

ஜீவாவை சுற்றி எழுப்பப்பட்ட மாய பிம்பம், ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (3) – கொளத்தூர் மணி

காரைக்குடி அருகே உள்ள சிராவயலில் காந்தி ஆசிரமத்தை ஜீவா தோற்றுவித்தார் என்ற செய்தி மிக அழுத்தமாக தமிழ்நாட்டில் பதிய வைக்கப்பட்டுள்ளது. 02.02.2019 விகடன் இணையதளத்தில் “ஜீவாவின் 22 நூல்களுக்கு மேல் தொகுத்த கே. ஜீவபாரதி சிராவயலில் காந்தி – ஜீவானந்தம் நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடம் கோரிக்கை வைத்ததாக” செய்தி காணப்படுகிறது. (முழு உள்ளடக்கங்களைப் பற்றி பின்னர் பார்ப்போம்) அந்த கோரிக்கை இன்றைய அரசால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஜீவா நினைவுக் கட்டடம் ஏறத்தாழ கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அங்கு ஜீவாவின் சிலை ஒன்றும் வைக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் உள்ளன. ஜீவா – சிராவயல் – காந்தி ஆசிரமம் என்ற செய்தியின் உண்மைத் தன்மையைக் குறித்து அறிவது தற்போது தேவையாக்கப்பட்டு விட்டது. இந்தக் கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிடப்பட்ட இஸ்மத் பாஷாவின் ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ (1946) கே.பாலதண்டாயுதம் எழுதிய ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’ (1966) ஆகிய...

மாற்றியமைக்கப்படும் கடவுள்கள் கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-21 –

மாற்றியமைக்கப்படும் கடவுள்கள் கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-21 –

பழையனவற்றிலிருந்து புதிய சடங்குகள் மட்டும் உருவமைக்கப்படுவதில்லை; ஆண்-பெண் கடவுளர்களும் புதிய வடிவத்தை அடைகின்றனர். அண்மைக்காலம் வரை சாதாரண மக்களோடு தொடர்புடைய கடவுளர்களும் தேவியர்களும் இப்போது பெருவணிக வளாகங்களும், பல்திரையரங்குகளும் (மால்களிலும் மட்டிபிளக்ஸுகளும்) கொண்ட ஆரவாரப் பகட்டுள்ள புதிய நகர்ப்புறங்களில் இருப்பிடம் பெறுகிறார்கள். நாட்டின் தென் பகுதியில், ஒருகாலத்தில் மக்களின் ஆரோக்கியத்தையும் மண்ணின் வளத்தையும் பாதுகாத்துவந்த கிராம தெய்வங்கள் அல்லது அம்மன்கள், இப்போது நடுத்தர வகுப்பினரால் ஏற்கப்படுகின்றனர். இப்போக்கு, ‘கடவுளரின் தரம் உயர்த்துதல்’ எனப்படுகிறது. நாட்டின் வடக்குப் பகுதியில், ‘மாதா’க்களின் கோயில்கள் அல்லது சக்திபீடங்களுக்குச் செல்லும் (சதி என்ற தேவியின் உடலுறுப்புகள் பலவும் விழுந்ததாகக் கருதப்படுகின்ற இடங்கள்) புனித யாத்திரைகள் மிகவும் பெருகியுள்ளன. சென்னை மாநகரத்தின் சாலையோரக் கோயில்கள் பற்றி அண்மையில் யு. கல்பகம் என்பவர் செய்த ஆய்வு, மாரியம்மனின் தரம் உயர்த்துதல் பற்றிய இயங்கு முறையைத் தெரிவிக்கிறது. தென் சென்னையின் மயிலாப்பூர் – மந்தை வெளிப் பகுதியில் உள்ள சாலையோரக் கோயிலான...

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா? (2)  ‘ஜீவா’ வரலாறுகளின் குழப்பங்கள்

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா? (2) ‘ஜீவா’ வரலாறுகளின் குழப்பங்கள்

ஜீவாவின் ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்பதை பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் சில செய்திகளை முன்னோட்டமாக முன்வைக்கிறோம். தோழர் ஜீவா அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை பலர் எழுதியிருந்தாலும், தோழர் எம். இஸ்மத் பாஷா எழுதிய ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ மட்டுமே ஜீவா வாழ்ந்த காலத்தில் (1946 மார்ச்) வெளிவந்த நூலாகும். அந்நூலுக்கு முகவுரை எழுதியுள்ள தோழர் ஏ.எஸ்.கே (அய்யங்கார்) அம்முகவுரையில் “நான் கண்டிப்பாக முகவுரை எழுத வேண்டும் என்று ஜீவாவே கூறினார். என் நண்பரின் கட்டளைக்குப் பணிகிறேன்” என்று குறிப்பிட்டே முகவுரை எழுதியுள்ளார். எனவே அந்த நூல் ஜீவாவின் பார்வைக்கும் ஏற்புக்கும் பின்னர் தான் வெளிவந்திருக்க வேண்டும். அந்நூலின் 12ஆம் பக்கத்தில் “கொள்கைக்காக வீட்டை விட்டு ஜீவா நேராக சுசீந்திரம் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு தெருப்பிரவேச சத்தியாகிரகம் ஆரம்பிக்கும் தருவாயில் இருந்தது. தெருக்களில் அரிஜனங்கள் செல்லக்கூடாது என்ற சமூக அநீதி அங்கு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது; உலகப் பிரசித்திப் பெற்ற வைக்கம்...

அண்ணாவின் ‘கடவுள்- புராண’ எதிர்ப்பு!

அண்ணாவின் ‘கடவுள்- புராண’ எதிர்ப்பு!

கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-20 அறிஞர் அண்ணா கடவுள் மத மறுப்பாளர். கடவுள்,மதம், புராண எதிர்ப்பு கட்டுரைகளை ஏராளமாக எழுதியுள்ளார். திமுக என்ற அரசியல் கட்சியான பிறகு ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கருத்தை சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தின் வழியாக முன்வைத்தார். இது திமுகவின் அதிகாரபூர்வமான கொள்கை அல்ல! 1945 -ல் அண்ணா எழுதிய கடவுள், மத எதிர்ப்பு கட்டுரை.. கரிமுகத்தோடு ஒரு கடவுள், நாக்கிலே நாயகியுடன் ஒரு கடவுள், நடனமாடும் மயில் மீது மற்றோர் கடவுள், அலைகடல் மீது ஆலிலைமேல் துயிலும் வேறோர் கடவுள், தலைமீது தையலுடன் பிறிதோர் தேவன், என்ற இன்னோரன்ன கடவுள்கள் இருந்து கொண்டு இன்னின்னவருக்கு இன்னின்ன விதமான நிலைமை இருக்க வேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வாழ்கிறார்கள் என்பதை இன்றும் நம்பி, அந்த நம்பிக்கைக்கேற்ற நாள் நட்சத்திரம் நடவடிக்கைகளிலே பாசம் வைத்துக் கொண்டுள்ள மக்களிடத்திலே, கான்ஸ்ட்டிடியூவண்ட் அசெம்பிளி பற்றியும், காரல் மார்க்சின் கருத்துப்...

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா?-                கொளத்தூர் மணி

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா?- கொளத்தூர் மணி

பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் ஜீவானந்தம் (ஜீவா) ஈரோட்டுப் பாதை சரியா? எனும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பெரியார் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு… கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த புதிய தோழர்களுக்கான பயிலரங்கின் நிறைவில் 28.9.2025 அன்று மாலை நடந்த ‘அய்யம் களைதல்’ நிகழ்வில் தோழர் பிரவீன் சுப்ரமணியன் எனும் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் “தோழர் ஜீவா எழுதிய ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் வைத்துள்ள விமர்சனங்களைப் பற்றித் தெளிவுபடுத்துமாறு கோரினார். நான் அந்த நூலினைப் பற்றி நூலின் செய்திகளைப் பற்றி நூல் ஆசிரியரைப் பற்றி முன்வைத்த பல செய்திகள் ஜீவா பற்றாளர்களைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கி விட்டது. ஆவேசமான எதிர்வினைகள் சமூக ஊடகங்களில் கொட்டப்பட்டன. பொழியப்பட்ட வசை மொழிகள் எளிய தோழர்களிடமிருந்து மட்டுமல்ல; முதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்தும் வந்தன. சீமானோடு ஒப்பிட்டு விட்டீர்களே என்ற சொற்கள் எல்லா பதிவுகளிலும்...

நாத்திகம் பேசிய பார்ப்பன சிந்தனையாளர்கள் – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(19)

நாத்திகம் பேசிய பார்ப்பன சிந்தனையாளர்கள் – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(19)

பார்ப்பனராக பிறந்தாலும் பார்ப்பனியத்தை மறுத்த இரண்டு நாத்திகர்கள் பற்றிய தகவல்களை இக்கட்டுரை விளக்குகிறது. ஒருவர் அஸ்ஸாமியப் பாடகர் ஜுபின் கார்க். அண்மையில் சிங்கப்பூரில் வடகிழக்கு இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற அவர் ஜான்ஸ் தீவின் கடற்கரையில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் நீந்தும்போது அவரை மரணம் அழைத்துக் கொண்டது. இப்போது மரணத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. மற்றொருவர் ஆந்திராவில் பார்ப்பனராக பிறந்து நாத்திகத்தை வாழ்வியலாக ஏற்று இயக்கம் நடத்திய கோரா (கோபராஜூ ராமசந்திர ராவ்). பெரியாருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் இணைந்து மாட்டுக்கறி-பன்றிகறி விழா நடத்தினார்கள். செப்டம்பர் 19, 2025 அன்று, கார்க் சிங்கப்பூரில் வடகிழக்கு இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றார். தனது 52 வயதில் இறந்தார். ஜான்ஸ் தீவின் கடற்கரையில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் நீந்தும்போது அவரை மரணம் அழைத்துக் கொண்டது. அசாம் அரசு செப்டம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாள் மாநில துக்கத்தை...

நாத்திகம் குறித்து தாய்-மகன் உரையாடல்   கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(18)

நாத்திகம் குறித்து தாய்-மகன் உரையாடல் கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(18)

1928 ஆம் ஆண்டு குடிஅரசு இதழில் நாத்திகம் என்னும் தலைப்பில் சித்திரபுத்திரன் எழுதிய நையாண்டி உரையாடலே இந்த கட்டுரை. சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதியவர் பெரியார். தாயும் மகனும் இதில் உரையாடுகிறார்கள் தந்தை தீவிரமான பெரியார் கொள்கைக்காரர். ‘குடிஅரசு’ அலுவலகத்திலேயே பணியில் சேர்ந்து விடுகிறார். நாத்திகப் பத்திரிகையான குடிஅரசு பத்திரிக்கைக்கு அப்பா ஏன் வேலைக்குப் போக வேண்டும்? என்று மகன் தாயிடம் கேட்கிறார். மகன் கருத்தை வைத்தே தாய் நாத்திகத்தை மகனுக்கு புரிய வைக்கிறார். இந்த உரையாடலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் இவை. இது ஒரு உண்மை சம்பவமாகவே இருக்கும் என்று கருதத் தோன்றுகிறது. உரையாடலை தூயவெழிலழகனார் என்பவர் எழுதி அதை சித்திரபுத்திரன் திருத்தம் செய்துள்ளார் என்று ‘குடிஅரசு’ குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்: – அப்பா மகனே, சாமி என்றால் என்ன? அதை முதலில் சொல்லு பார்ப்போம், அதாவது அதற்குப் பெயர் என்ன? ரூபம் (உருவம்) என்ன? நிறம் என்ன? குணம் என்ன?...

கடவுள் உண்டா? சவால் விட்ட நாத்திகர்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-17

கடவுள் உண்டா? சவால் விட்ட நாத்திகர்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-17

டாக்டர் ஆபிரகாம் கோவூர் அவர்கள் ஒரு தலைசிறந்த நாத்திகர், மனோதத்துவ நிபுணர். அறிவியல் அறிஞர். எதையும் அறிவுபூர்வமாகப் பேசி, உண்மைகளை நிலைநிறுத்திடும் ஆற்றல் வாய்ந்த ஒரு சமுதாய விஞ்ஞானி கேரளத்தில் பிறந்தவராயினும், இறுதி வாழ்க்கையை இலங்கையில் அமைத்துக் கொண்டவர். சிறீலங்காவில், கொழும்புவில்தான் 1978 செப்-18-ல் அவர் மறைந்தார். பல ஆண்டுகாலம் தமிழ் நாட்டிலும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் தீவிர பகுத்தறிவுப் பிரச்சாரம் புரிந்தவர் அவர். டாக்டர் கோவூர் “கடவுள்” உண்டு என நிரூபிப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று சவால்விட்டார். எவர் முன் வருவார்? அப்படி ஒன்று இருந்தால் அல்லவா நிரூபிக்க முடியும்? அவரது பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பெரியார் இயக்கம் பயன்படுத்திக் கொண்டது. கோவூர் பலமுறை தமிழ்நாடு வந்து திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது உண்டு. கோவூர் எழுதிய தன்னுடைய சுயவரலாற்றிலிருந்து சி ல கேரளாவில் தீண்டத்தகாதவர்கள் தாங்கள் நடக்கும் வழியிருந்தால் அகன்று போய்விடுவதற்கு எச்சரிக்கையாக, நம்பூதிரிகள்...

அல்பேனியா அரசின் அதிரடி முடிவு செயற்கை நுண்ணறிவுக்கு ஊழல் ஒழிப்பு அமைச்சர் பதவி!

அல்பேனியா அரசின் அதிரடி முடிவு செயற்கை நுண்ணறிவுக்கு ஊழல் ஒழிப்பு அமைச்சர் பதவி!

உலகில் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.அய்) அமைச்சர் பதவியை ஏற்று இருக்கிறது. அந்த அமைச்சரின் பெயர் ‘டியெல்லா’. அல்பேனியா நாட்டின் பிரதமர் ஏ.டி ராமா கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தனது அமைச்சரவையில் இணைத்துள்ளார். ‘டியெல்லா’வுக்கு ஊழல் ஒழிப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அல்பேனியா இணையதளத்தின் உதவியாளராக கடந்த ஜனவரியில் நியமனம் செய்யப்பட்டது. இப்போது அமைச்சராக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முதலாக அமைச்சராக பதவி ஏற்றுள்ளது ‘டியெல்லா’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். டியெல்லாவுக்கு அல்பேனிய நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த பெண் உருவம் தரப்பட்டுள்ளது. 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட அல்பேனியா, ஐரோப்பாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்டது இந்த நாடு. 18 வயதுக்கு உட்பட்ட நல்ல மனநிலை உள்ள எவரும் அமைச்சராக முடியும் என்று அல்பேனியாவின் அரசியல் சட்டம் கூறுகிறது. அல்பேனியா இணையதளத்தில்...

“கடவுளை” ஓரம் கட்டுகிறது அறிவியல்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-16(விடுதலை இராசேந்திரன்)

“கடவுளை” ஓரம் கட்டுகிறது அறிவியல்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-16(விடுதலை இராசேந்திரன்)

நடிகர் ரோபோ சங்கர்(46 வயது) இறந்த துயரமான செய்தி வந்தது. உண்மையிலேயே இது துயரமானதுதான். இதற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர் இவ்வாறு கூறினார்; “மரணத்துக்கு எவர் மீதும் குறைகாண முடியாது. கடவுள் அவருக்கு விதித்த ஆயுள் அவ்வளவுதான், முடிந்ததும் அவர் அழைத்துக் கொண்டார்.” ஒவ்வொருவருக்கும் கடவுள் ஆயுள் காலம் நிர்ணயித்துக் கொண்டு இருக்கிறாரா?.. * இறந்து போனவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சடங்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. ஒருகாலத்தில் வீடுகளில் நடத்தப்பட்ட சடங்குகள் இப்போது பொதுநிகழ்வாக திட்டமிட்டு மாற்றப்பட்டுவிட்டன. இதனால் வேத பார்ப்பன பண்டிதர்கள் கொள்ளை இலாபம் அடிக்கிறார்கள். இதற்கு சரியான நாளாக புரட்டாசி மாதம் அமாவாசையை தேர்வு செய்து இருக்கிறார்கள். அந்த ஒரு நாளில் மட்டும் தான் வேறு உலகத்தில் இருந்தும் மூதாதையர்களுக்கு இவர்கள் தரும் தர்ப்பணம் டெலிவெரி ஆகுமாம். இப்படி ஒரு புரட்டு! அதுவும் ஆண்களுக்கு மட்டுமே இப்படி தர்ப்பணம் செய்கின்ற உரிமை உண்டு. இப்படி...

‘குடிஅரசு’ தொகுப்பில் கழகம் சந்தித்த தடைகள்	 –   விருது வழங்கும் விழாவில் கொளத்தூர் மணி விளக்கம்

‘குடிஅரசு’ தொகுப்பில் கழகம் சந்தித்த தடைகள் – விருது வழங்கும் விழாவில் கொளத்தூர் மணி விளக்கம்

தொகுப்புகளை வெளியிட்ட பதிப்பாசிரியர் கொளத்தூர் மணிக்கு சிறந்த பதிப்பாளர் விருதை சீர் வாசகர் வட்டம் வழங்கியது.விருது ஏற்பு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை; எனக்கு குடிஅரசு நூல் பதிப்புக்காக இந்த விருதை அளித்திருக்கிறார்கள். அதனால் அதைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். பெரியாரின் உதவியாளராக இருந்த புலவர் இமயவரம்பன் அவர்களின் முயற்சியில் தோழர்களால் திரட்டப்பட்டு அப்போது வரை இருந்த குடிஅரசு இதழ்களை படி எடுத்து (ஜெராக்ஸ்) கையால் எழுதி திருச்சி பெரியார் மாளிகையில் பிரதியெடுத்தார்கள். இரண்டு ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெற்றன. பெரியார் மாளிகையில் புலவர் இமயவரம்பன் அவர்கள் அதற்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தனி அலமாரியில் ஆண்டு வாரியாக தனித்தனி ட்ராயரில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். என்னை பெரியார் திடலில் 1993-94ல் சந்தித்த போது சொன்னார். “ 25 கிலோ நாப்த்தாலின் குண்டுகளை வாங்கி குடிஅரசு இதழ் அலமாரியில் வைத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்; இன்னும் வெளியிடவில்லை என்றாலும்...

எல்லைகளைக் கடந்த சிந்தனையாளர் பெரியார்!

எல்லைகளைக் கடந்த சிந்தனையாளர் பெரியார்!

பகுத்­த­றி­வும், அறி­வி­ய­லும் ஒரே நேர்கோட்டில் இருக்­கும். அறிவின் கூர்மைதான் பகுத்­த­றிவு என்று எடுத்துச் சொன்­ன­தால்­தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்­கலைக்கழ­கம் அவ­ரைப் பற்றி அவர் மறைந்து இத்­தனை ஆண்டுகள் கழித்­தும் விவா­திக்­கி­றது. கேம்பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கம் புத்­த­கம் வெளியிடுகி­றது. சுய­ம­ரி­யாதை இயக்­கத்தை 1925–ஆம் ஆண்டு தொடங்­கி­னா­லும், சுயமரியாதைச் சிந்­த­னை­யா­னது பெரி­யா­ருக்கு இள­மைக் காலத்­தி­லேயே வந்து­விட்­டது. அவர் அப்­போதே அப்­ப­டித்­தான்! அவ­ரு­டைய சுயசரிதையை கொஞ்­சம் பார்த்­தால், அவர் காலத்தை மீறி செய்த புரட்­சி­கள் புரி­யும்! ஆதிக்க ஜாதி­யி­னர் வீட்­டில் தண்­ணீர் குடித்­த­தால் அவ­மா­னப்­படுத்தப்பட்டதும், தாழ்த்­தப்­பட்­டோர் வீட்­டில் தண்­ணீர் குடித்­த­தால் சொந்த வீட்­டில் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­ட­தும் சிறிய வய­தி­லேயே அவர் மன­தில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. பெரி­யா­ரின் தங்கை மகள் அம்­மா­யிக்கு 10 வய­தி­லேயே, 13 வயது பையன்கூட திரு­ம­ண­மாகி, மண­மான அறு­ப­தா­வது நாளே மண­மகன் இறந்­து விட்­டார். மறு­ம­ணத்­துக்கு குடும்­பத்­தில் உள்ள எல்­லோ­ரும் எதிர்ப்­புத் தெரி­வித்­தா­லும், அதை­யெல்­லாம் மீறி, அந்­தப் பெண்­ணுக்கு இரண்­டா­வது திரு­ம­ணம் நடத்தி வைத்­தார். மாற்­றுச்...

பெரியார் ஆயுதம் ஏந்தாத புரட்சியாளர்-ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உணர்ச்சி உரை

பெரியார் ஆயுதம் ஏந்தாத புரட்சியாளர்-ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உணர்ச்சி உரை

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில்–தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு உரை! முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் 4.9.2025 அன்று இங்­கி­லாந்து நாட்­டின் ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக் கழ­கத்­தில், பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரியார் அவர்­க­ளின் திரு­வு­ரு­வப் படத்­தைத் திறந்துவைத்து உரை­யாற்­று­கை­யில் “தந்தை பெரி­யார்தர­ணி­ம­ய­மாகி விட்­டார்” என்று உணர்ச்சிமேலி­டக் குறிப்­பிட்­டார். முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆற்றிய உரை வரு­மாறு:– பல நூறு ஆண்­டு­களாக, உல­கின் சிறந்த அறி­வா­ளி­களை உரு­வாக்கும் இந்த ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பேசு­வதை நான் பெருமை­யா­கக் கருதுகிறேன். இப்­போது புள­காங்­கித உணர்­வோடு உங்­கள் முன்­னால் நான் நின்று கொண்­டி­ருக்கிறேன். பெரி­யா­ரின் பேரன் என்ற கம்­பீ­ரத்து­டன் நிற்­கி­றேன்! இங்கே நான் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர், தெற்­கா­சிய அர­சி­யலை புரட்­டிப் போட்ட இயக்­க­மான தி.மு.கழ­கத்­தின் தலை­வர் என்ற தகு­தி­யு­டன் மட்­டு­மல்ல; பெரி­யா­ரின் பேரன் என்­கின்ற கம்­பீ­ரத்­து­டன் உங்­கள் முன்­னால் நான்நின்று கொண்­டி­ருக்­கி­றேன். பகுத்­த­றி­வுப் பக­ல­வன் அறி­வா­சான் தந்தை பெரியாரின் படத்தை...

உலக ஆய்வாளர்கள் பங்கேற்ற பெரியார் கருத்தரங்கம்

உலக ஆய்வாளர்கள் பங்கேற்ற பெரியார் கருத்தரங்கம்

தொன்­மை­யான தமிழ் பண்­பாடு உலக சிந்­த­னைக்கு அளித்த எத்­த­னையோ கொடை­க­ளில் இரண்­டினை முதன்­மைப்­படுத்திச் சொல்ல வேண்­டும் என்­றால் அது ஐயன் திரு­வள்­ளு­வ­ரின் திருக்குறளும், பெரியாரின் சிந்­த­னை­க­ளும் என­லாம். திரு­வள்­ளு­வர் தொடர்ந்து மொழி­யாக்­கம் செய்­யப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார். லண்­டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்­கு­றளை 1886-ஆம் ஆண்டே மொழி­யாக்­கம் செய்த ஜி.யு.போப் அவர்­க­ளின் கல்­ல­றைக்கு சென்று மரி­யாதை செலுத்தியுள்ளார். அத­னால் திருக்­கு­றள் உல­கில் பர­வ­லாக அறி­யப்பட்­டது. பெரி­யா­ரைப் பொறுத்­த­வரை அவர் தன் சிந்­தனைகளைத் தொகுத்து நூலாக எழு­த­வில்லை. ஒரு சில பிர­சு­ரங்­கள் அவர் பெய­ரில் வந்துள்ளனவே தவிர, ஒரு விரி­வான அர­சி­யல் தத்­துவ நூலா­கவோ, சித்­தாந்த நூலா­கவோ எழு­த­வில்லை. மாறாக அவர் தொடர்ந்து மக்களி­டையே பிரச்­சா­ரம் செய்து பெரும் சிந்­த­னைப் புரட்­சியை பொது­மன்­றத்­தில் உரு­வாக்­கி­ய­வர். செயல்­முறை தத்­து­வம் (philosophical praxis) என்­பதை மேற்­கொண்­ட­வர். கற்­றோ­ருக்­கான நூல்­களை எழுதுவதைவிட, அனைத்து மக்­க­ளை­யும் சிந்­திக்க வைத்து சுய­ம­ரியா­தையை சுடர் விடச் செய்­வதையே அவர் முக்­கி­யப் பணி­யா­கக் கரு­தி­னார். அவர்...

கொளத்தூர் மணியின் மிகச்சிறந்த ஆய்வுகளின் தொகுப்பு – பேரா.வீ.அரசு

கொளத்தூர் மணியின் மிகச்சிறந்த ஆய்வுகளின் தொகுப்பு – பேரா.வீ.அரசு

எதிர்நீச்சல் போட்டு குடிஅரசு தொகுப்பை வெளியிட்டு பதிப்புத் துறையில் சாதனை புரிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சீர் வாசகர் வட்டம் சிறந்த பதிப்பாளர் விருது வழங்கி ஒரு லட்சம் பணம் முடிப்பையும் வழங்கியது. விருது வழங்கி சிறப்புரையாற்றினார் பேராசிரியர், சென்னை பல்கலைக்கழக மேனாள் தமிழ் இலக்கியத்துறை தலைவர் வீ.அரசு. அவரது உரையில் இருந்து…. சீர்வாசகர் வட்டம் தோழர் மணி அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இந்த விருதை வழங்குகிறது. தோழர் மணி என்ன செய்திருக்கிறார்? நாங்கள் எல்லாம் 19-ஆம் நூற்றாண்டில் உருவான மார்க்ஸ், எங்கல்ஸ் உலகத்துக்கு தந்த ஒரு மிகப்பெரிய தத்துவ மரபின் மீது ஈடுபாடு கொண்டு அதை வாசித்தவர்கள், அதோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். அது உலகம் முழுவதும் என்னென்ன வடிவத்தில் எப்படி எப்படி எல்லாம் மாற்றிக்கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறது என்பது பற்றி மிகுந்த அக்கறை உடையவர்கள். லத்தின் அமெரிக்க நாடுகளிலே அது...

.    சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)

. சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். `நரசிம்மன் நகர்’ கடந்த இதழின் தொடர்ச்சி இது. ஆனைமலை ஆற்றங்கரையை அடுத்து, நரசிம்மனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருந்தது. மக்கள் போக்குவரத்து நிறைந்த பகுதி. அங்குள்ள நெடுஞ்சாலையை யொட்டி திராவிடர் கழகக் கட்டடமும் அதில் பகுத்தறிவுப் படிப்பகமும் அமைக்கப் பட்டிருந்தன. அங்குள்ள நாயக்கர் தெருவில்தான் நரசிம்மனின் வீடு இருந்தது. அந்த வீட்டிற்குள் பெரியாரின் வேன் வந்து செல்வதற்காகவே நுழைவாயிலில் தனிவழி அமைத்திருந்தார். வீட்டின் புல்தரையில் பெரியாருடன் அமர்ந்து பேசிய வரலாறும் உண்டு. இத்தகைய பேச்சுக்களின் ஊடாக, நரசிம்மனுக்கு மூன்று முக்கிய ஆலோசனைகளை வழங்கியிருந்தார் பெரியார். 1) தன்னிடம் இருக்கும் நிலத்திலோ அல்லது புதிதாக வாங்கியோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றாக இருக்கும் வகையில் பகிர்ந்தளிக்க வேண்டும். 2) தனது செல்வாக்கைப்...

ஊர்-சேரி பாகுபாட்டை ஒழித்த ‘ஆனைமலை’

ஊர்-சேரி பாகுபாட்டை ஒழித்த ‘ஆனைமலை’

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். `நரசிம்மன் நகர்’ வரலாறு இது. 1938-ஆம் ஆண்டில் முதல் இந்தி எதிர்ப்புப் போரில்’ பங்கேற்று தந்தை பெரியார் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட போது, அவருடன் சிறையில் இருந்தவர்களில் ஒருவர் `ஆனைமலை’ நரசிம்மன். பட்டம் படித்தவர் என்பதால், சிறையில் முதல் வகுப்பை அதிகாரிகள் வழங்க, தன் தோழர்கள் எல்லோரும் சாதாரண வகுப்பில் இருக்க, தனக்கு மட்டும் முதல் வகுப்பு வேண்டாம் என்று மறுத்துவிட்டார் நரசிம்மன். ஆனால், ஆனைமலையில் வசதி படைத்த, செல்வாக்கான குடும்பம் இவருடையது. ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் என அந்த காலத்தில் இவர் வீட்டில் பல தலைவர்கள் தங்கிச் சென்றுள்ளனர். 1906-ஆம் ஆண்டு நாராயண நாயக்கர்-குஞ்சம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாகப் பிறந்தவர் நரசிம்மன். சென்னை...

கடவுளை மறுத்த ஆன்மீகவாதி    கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-12  விடுதலை இராசேந்திரன்

கடவுளை மறுத்த ஆன்மீகவாதி கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-12 விடுதலை இராசேந்திரன்

‘மனம்’ என்று ஒன்று இல்லை அது மூளை என்ற ஒரு பொருளின் செயல்பாடு. மனதை ஒருமுகப்படுத்துவது ஆன்மிகம் சார்ந்தது அல்ல! அது ஒரு பயிற்சியே என்ற கட்டுரையை கடந்த இதழில் ‘பெரியார் முழக்கம்’ வெளியிட்டது. கடவுள் வழி நடத்தவில்லை, மனித மூளை தான் உடலை இயக்குகிறது என்பதே அந்த கட்டுரையின் மய்யமான கருத்து. இதற்கு நேர் மாறாக ‘மனமே’ மனிதரை இயக்குகிறது. தனி மனிதரின் ‘மன மாற்றமே’ அனைத்துக்கும் தீர்வு. மனிதருக்கு வெளியே புறத்தில் நிகழும் சமூகப் புரட்சிகள் உயிரற்றவை, நானே என்னை புரிந்து கொள்ளாத வரை வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், மற்றவர்களை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்ற சிந்தனையை உலகம் முழுதும் ஒருவர் பரப்பினார். உலகப் புகழ்பெற்ற தத்துவஞானியாக அவர் பேசப்பட்டார், அவரது பெயர் ‘ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி’. பொருளியல் நிகழ்வுகளை விலக்கிவிட்டு ‘மனப்புரட்சி’ பேசிய அவரது பின்னணியை சுருக்கமாக விளக்குவோம். 1875-இல் மதனப்பள்ளியில் பார்ப்பன குடும்பத்தில் அவர்...

கடவுளின் குரலை  “மனம்” பேசுகிறதா?  கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)

கடவுளின் குரலை “மனம்” பேசுகிறதா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)

கேள்வி: மனம் ஒரு குரங்கு, மனசை அடக்கு என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள். மனமும், சிந்தனையும் ஒன்றா? ‘சிந்தனைசெய் மனமே’ என்று திரைப்படப் பாடல் சொல்கிறதே! மனதும் அறிவும் வெவ்வேறுதானே! அப்படியாயின், மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே? மனசெல்லாம் மத்தாப்பு, மனநிம்மதி, மனநிறைவு, மனசாட்சி இப்படி ஏராளமான சொற்களை அன்றாடம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குரங்கு என்று ஆன்மீகவாதிகள் மட்டுமா சொன்னார்கள்? இல்லை. “மனசாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது” என்பது கலைஞர் சினிமா வசனமும் கூட. மார்க்சின் எழுத்துகளில் கூட மனசாட்சி என்ற சொல்லைக் காண முடியும். மனம் என்ற சொல் ஆன்மீகத்துக்கு பட்டாபோட்ட சொல் அல்ல; ஆனால் எது மனம் என்பதை விளக்குவதில்தான் ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவாளர்களும் மாறுபடுகின்றனர். மனம் என்பது தனித்து சுயம்புவாக இயங்குவதாக ஆன்மீகவாதிகள் சித்தரிப்பர். ஆனால் மனம் என்பது மூளை என்ற உறுப்பின் செயல்பாடென அறிவியலாளர் கூறுவர். மகிழ்ச்சி, கோபம் என பல்வேறு உணர்ச்சிகளை...

சுயமரியாதைக்காக கருப்புச் சட்டை ஏந்திய ‘கீழப்பாலையூர்’ (13)

சுயமரியாதைக்காக கருப்புச் சட்டை ஏந்திய ‘கீழப்பாலையூர்’ (13)

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். கீழப்பாலையூர் வரலாறு இது. ராஜராஜன் காலத்தில் சமணப்பள்ளியைக் கொண்டிருந்த ஊர், தஞ்சை பெரிய கோயிலின் தென்புறக் கருவறைச் சுவற்றில் பெரிய நெல் களம் குறித்த வரலாற்றுக் குறிப்பு என திருவாரூரில் உள்ள கீழப்பாலையூருக்கு வரலாற்றுப் பெருமிதங்கள் ஏராளம் சொல்லப்படுகின்றன. ஆனால், டெல்டா பகுதியில் நிலவிய கொடூரமான ஜாதிய- பண்ணை அடிமைத் தனத்திற்குத் தப்பாத பகுதி என்ற வரலாறு பதிவாகவில்லை. சுற்றியிருந்த சுமார் 50 கிராமங்களிலும் நிலமும் ஆதிக்கமும் விரல் விட்டு எண்ணக்கூடிய பார்ப்பனர்கள் வசம்தான் இருந்தன. ராமசுப்ரமணிய ஐயர், சேஷாத்ரி ஐயர் போன்றோரிடம்தான் கீழப்பாலையூர் மண்ணும் மக்களும் சிக்குண்டு இருந்தனர். அக்ரஹாரத் தெருவுக்குள் ஆடு, மாடுகள் நுழையலாம். ஆனால், ஐயர் வயலில் கூலியாட்களாக இருந்த தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்துவிடக்கூடாது. பிற்படுத்தப்பட்டவர்கள் ஆடு,...

இந்தியாவின் முதல் நாத்திகர் மாநாடு  – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(10)

இந்தியாவின் முதல் நாத்திகர் மாநாடு – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(10)

நம் நாட்டு வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத புதுமையானதொரு மாநாடு சென்னை எழும்பூரில் அமைந்த ‘ஒயிட்ஸ் மெமோரியல் ஹால்’ என்ற மண்டபத்தில் 31-12-1933 அன்று வெற்றியாக நடந்தேறியிருக்கிறது. நாஸ்திகர் மகாநாடு என்று அழைக்கப்பட்ட அம்மாநாட்டின் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை விரிவாகப் ‘புரட்சி’ ஏடு தந்தது. நாடெங்கிலுமிருந்து கணக்கற்ற எண்ணிக்கையில் மக்கள் வந்து கலந்து கொண்டார்கள். குறிப்பாக, படிப்பறிவு பெற்ற நிறையப் பெண் வீராங்கனைகள் மாநாட்டில் பங்கேற்ற செய்தியைப் படிக்கும்போது பெருமையாக இருக்கின்றது. இம்மாநாட்டில் கருத்துரைகள் ஆற்றிய சான்றோர்தம் சுவையான சில சொற்பொழிவுகள் படிப்பவர் எவருக்கும் உணர்ச்சியூட்டும் என்பதில் அய்யமில்லை. வரவேற்புரை நிகழ்த்திய சி.கே. குப்புசாமியின் கருத்துரை ஒவ்வொருவருக்கும் சிந்தனை விருந்தாகும். “நாஸ்திகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து சென்னை மாகாணத்தில் முதன் முதலாக மாகாண நாஸ்திகர் மகாநாட்டைக் கூட்டியிருக்கிறோம். இதிலிருந்து உலகத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பாமர மக்களுக்கும் நாஸ்திக உணர்ச்சி அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாஸ்திகம் என்றால் என்ன? சர்வசக்தி, சமகுணம், தயாளகுணம், ஜீவகாருண்யம்,...

மனிதம்-அடையாளம்; ஜாதி- அவமானம் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

மனிதம்-அடையாளம்; ஜாதி- அவமானம் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

ஜாதிப் பெருமைக்குள் புதையுண்டு கிடக்கும் ஜாதியவாதிகளே! உங்களிடம் சில கேள்விகள்: ஜாதி என்ற அடையாளம் நாம் தேர்வு செய்ததா? படிப்பு, தொழில், வாழ்க்கையைத் தான் நாம் தேர்வு செய்கிறோம். அதேபோல் ஜாதியை நாம் தேர்வு செய்கிறோமா? ஒரு காலத்தில் நமது மூதாதையர்கள் பிறந்த ஜாதிக்கு ஒதுக்கப்பட்ட தொழிலை மட்டும் செய்து வந்தார்கள் இப்போது அந்த தொழில்களை நாம் செய்கிறோமா? இல்லை. முடி வெட்டுவது, துணி துவைப்பது, செருப்பு தைப்பது, மலம் அள்ளுவது, செக்கு ஆட்டுவதும் ஜாதிக்கான தொழில் என்ற நிலையை இப்போது நாம் பின்பற்றுகிறோமா? ஜாதியை உதறி விட்டு வேறு தொழில்களுக்கு மாறிவிட்டோமா இல்லையா? இவற்றில் எல்லாம் ஜாதியைக் கைவிடலாம்; ஆனால் திருமணத்தில் மட்டும் கட்டாயமாக ஜாதியைப் பின்பற்ற வேண்டுமா? மேல் ஜாதி, கீழ் ஜாதி, தீண்டப்படாத ஜாதி என்று நம்மைப் பிரித்தார்கள். கெட்ட ஜாதி, நல்ல ஜாதி என்று இழிவுபடுத்தினார்கள்; நான் ஏன் கீழ் ஜாதி என்று ஜாதியை எதிர்த்து...

கொக்கூருக்கு குதிரை வண்டியில் வந்த பெரியார்

கொக்கூருக்கு குதிரை வண்டியில் வந்த பெரியார்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். கொக்கூர் என்ற ஊரின் வரலாறு இது.. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் கொக்கூர். 1940-கள் வரை பார்ப்பனிய மேலாதிக்கம் கொடூரமாக கோலோச்சியது, அந்தக் கிராமத்தில். கிருஷ்ணமூர்த்தி ஐயரின் மகன் குஞ்சிதபாதம் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் மொத்த ஊரும். பார்ப்பனர்களைத் தவிர, வேறு யாரும் மேல் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது, பள்ளிக்கூடம் செல்லக்கூடாது, முக்கிய சாலைகளைப் பயன்படுத்தக் கூடாது. தோளில் துண்டு, தலைப்பாகை கட்டவும் அனுமதி கிடையாது, ஊர்க்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. பார்ப்பனர்களின் வயல்களில்தான் வேலை செய்ய வேண்டும். ஐயர் தரும் மிகச்சொற்ப நெல்லுக்காக, அக்ரஹாரத்துக்கு வெளியே தென்னை மரத் தடுப்புக்குப் பின்னால் வரிசையில் கையைக் கட்டிக்கொண்டு நிற்க வேண்டும். ஐயரின் ஆட்கள் தரும்...

பெரியார் நடத்திய `ரிவோல்ட்’ வெளியிட்ட பட்டியல் மதவெறிக்கு உயிர்ப் பலியானவர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (9)

பெரியார் நடத்திய `ரிவோல்ட்’ வெளியிட்ட பட்டியல் மதவெறிக்கு உயிர்ப் பலியானவர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (9)

கடவுள், மதத்தை எதிர்த்ததால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் பட்டியலை பெரியார் நடத்திய `ரிவோல்ட்’ ஆங்கில வார ஏடு, 7-7-1929 இதழில் வெளியிட்டது. அதன் விவரம். புதிய சிந்தனைகளை வெளியிட்டமைக்காகப் பண்டைய கிரேக்க அறிஞர் பித்தகோரஸ் பழமை வெறியர்களால் பாய்ந்து துரத்தப்பட்டு, கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். இளைஞர்களை அரசு ஏற்றுக் கொண்ட `கடவுளர்’ களிடமிருந்து பிரித்தார் என்று குற்றஞ்சுமத்தப்பட்டு, நஞ்சு தரப்பட்டு சாகடிக்கப்பட்டார் சாக்ரட்டீஸ். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் மத நிறுவனத்தைத் துணிவாக எதிர்த்த ப்ரெஷ்யாவின் ஆர்னால்டு தூக்கு மரத்தில் தொங்கவிடப்பட்டார். மத நிறுவனத்தின் தீயபண்புகளை 15ஆம் நூற்றாண்டில் எதிர்த்த இத்தாலியச் சீர்திருத்தக்காரர் சவோன ரோலாவை தேடிப் பிடித்து உயிருடன் எரித்தனர். 16-ஆம் நூற்றாண்டில் அறிவு விடுதலை வேண்டிப் போராடிய பாவியாவின் உல்ரிச் வான் ஹட்டன் உடைமைகள் அனைத்தையும் இழந்து விட்ட நிலையில் தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அடிமட்டப் பணியாளர் படையில் சேருமாறு நேரிட்டது. அதே நூற்றாண்டில் சீர்திருத்தக்காரர் தாமஸ்முவென்ஸர்...

`இந்தியா டுடே’ ஆய்வறிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

`இந்தியா டுடே’ ஆய்வறிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத் திறன் மேன்மையை ஐ.நா. அமைப்பும், ஒன்றிய அரசின் நிறுவனங்களும் பாராட்டியுள்ளன. தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் முன்னணி மாநிலமாக திகழ்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2021 மே மாதம் 7ம் நாள் பொறுப்பேற்றது முதல் நிறைவேற்றி வரும் புதுமையான, புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு மிகக் குறுகிய காலத்தில் பல வெற்றிகளை பெற்று சாதனைகள் புரிந்து தேசிய அளவில் முதல் இடம் என்னும் பெருமையை நிலைநாட்டியுள்ளது. ‘இந்தியா டூடே ஆங்கில இதழ்’ ஒன்றின் இயக்குநர் கூறுகையில், “இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளை கணித்ததாகவும், அதில் ஒட்டு மொத்த செயல் திறனிலும் சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சர், “இந்த கடிதத்தைப் படித்தபோது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; இது தனிப்பட்ட எனக்கு கிடைத்த பெருமை அல்ல, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த பெருமையாகும். தமிழ்நாட்டிற்கு...

மதப் பண்டிகைகளை மறுக்கும் மேலமெஞ்ஞானபுரம்!

மதப் பண்டிகைகளை மறுக்கும் மேலமெஞ்ஞானபுரம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். மேலமெஞ்ஞானபுரம் என்ற ஊரின் வரலாறு இது.. 1967, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த ஆண்டு. தமிழ்நாட்டு இளைஞர்களைத் தன்னகத்தே வாரி அணைத்து வைத்திருந்த தி.மு.கழகத்தின் சூழலுக்குத் தப்பாமல், தங்களையும் இணைத்திருந்த உடன்பிறப்புகள் சீ.தங்கத்துரை, சீ.டேவிட் செல்லத்துரை. தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள மேலமெஞ்ஞானபுரம் இவர்களின் சொந்த ஊர். மாணவப் பருவத்திலேயே மதத்தைக் கடந்து, பகுத்தறிவுக் கொள்கைகளின் மீது நாட்டம் கொண்டிருந்தனர். தி.மு.க. கூட்டங்களில் பங்கேற்பதும், தேர்தல் பிரச்சார நாடகங்களில் நடிப்பதும், சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்வதும் இவர்களின் பணி. கழகம் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில், சட்டமன்ற உறுப்பினர் ஆலடி அருணா அவர்களின் பரிந்துரையால் தங்கத்துரைக்கு மின்சார வாரியத்தில் வேலை. தி.மு.க. உருவாகி அப்போது 20 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், பெரியாரின்...

செயற்கை உயிர் வந்து விட்டது கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(8)     – விடுதலை இராசேந்திரன்

செயற்கை உயிர் வந்து விட்டது கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(8) – விடுதலை இராசேந்திரன்

‘இது இறைவன் கொடுத்த உடல்’ என்ற நம்பிக்கையை பொது சமூகம் ஒரளவு புறக்கணித்து விட்டது என்றே கூறலாம். குழந்தை பிறப்புக்கு இறைவனே காரணம் என்ற கூற்று வாழ்வியலில் முறியடிக்கப்பட்டு விட்டது. குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை அரசாங்கங்கள் செயல்படுத்தி வருகின்றன. அதில் வெற்றியும் பெற்று விட்டன. கருத்தடைச் சாதனங்களை கடவுள் நம்பிக்கையாளர்களே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். குழந்தை இல்லாதவர்கள் பரிகார பூஜைகளை மட்டுமே நடத்தி வந்தனர். இப்போது கருத்தரிப்பு மருத்துவ மய்யங்கள் ஊருக்கு ஊர் வந்துவிட்டன. சினை முட்டை, விந்துக்களை இணைத்து அறிவியல் முறையில் கருவை உருவாக்குகிறார்கள். கருவை சுமக்க வாடகை பெண்களும் வந்து விட்டனர். கருத்தடைத் திட்டத்தை பெரியார் தீவிரமாக ஆதரித்தார். ‘கர்ப ஆட்சி’ என்ற நூலையும் அவரே வெளியிட்டார். குடும்ப வருமானம், சிக்கன வாழ்க்கை என்று குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை பொருளியல் பார்வையில் பலரும் அணுகினார்கள். ஆனால் பெரியார் பார்வை இதில் மாறுபட்டது. பெண்ணடிமைக்கு முக்கிய...

பண்ணையார்களை பணியவைத்த கொரடாச்சேரி

பண்ணையார்களை பணியவைத்த கொரடாச்சேரி

முரசொலியில் பெரியார் மண் தொடரில் ர.பிரகாசு எழுதி வரும் கட்டுரை தொடரில் நாகை மாவட்டம் கொரடாச்சேரி என்ற ஊரின் வரலாறு இது. எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கி’ என்பதுபோல, திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ‘எல்லா சாலைகளும் பெரியாரை நோக்கி’த்தான். இங்குள்ள கண்கொடுத்தவனிதம் கிராமம், இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான இணைப்புச் சங்கிலி. அந்த ஊரில், எந்தத் திசையில் சென்றாலும், தந்தை பெரியார் சிலையாக இருப்பார். மொத்தம் 7 சிலைகள் உள்ளன. கருப்புச்சட்டை சகிதமாய் எவரேனும் இன்றும் தென்படுவர். அங்கு அந்தக் கருப்புச் சட்டைகள் உருவான காலகட்டம் 1950. நேரடியாகப் பெரியாரின் பேச்சைக் கேட்டோ, எழுத்தைப் படித்தோ கருப்புச்சட்டை அணிந்தவர்கள் அல்ல அவர்கள். ஆனால், தாங்கள் சந்தித்த அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகக் கருப்புச்சட்டையைக் கருதினர். அந்த ஆயுதத்தை அவர்கள் ஏந்த பாலமாக இருந்தது திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம். கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள கண்கொடுத்தவனிதம், பருத்தியூர், விடையபுரம், வடபாதி, தென்பாதி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட இருபதுக்கும்...

பனகல் அரசரும் திராவிட மாடலும்

பனகல் அரசரும் திராவிட மாடலும்

நீதிக் கட்சியின் தலைவர்; இரண்டு முறை சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று! (09.07.1866) மகத்தான சாதனைகளை புரிந்தவர். தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சிக்கும் பனகல் அரசரின் ஆட்சிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.அரசு பதிவேடுகளில் `பறையர் பஞ்சமர்’ என்ற இழிசொற்களை நீக்கி ஆதிதிராவிடர் என்று அறிவிக்க ஆணையிட்டவர் பனகல்அரசர். திராவிட மாடல் ஆட்சி ஆதி திராவிட நல விடுதிகளை `சமூக நீதி’ விடுதிகளாக பெயர் மாற்றம் செய்துள்ளது. அவமானச் சொல்லான `காலனி’ என்ற சொல்லை அரசு பதிவேடுகளில் இருந்து நீக்கி இருக்கிறது. மாநிலங்களின் உரிமைக்காக திராவிட மாடல் ஆட்சி குரல் கொடுப்பதைப் போல் பனகல் அரசரும் போராடினார். பிரிட்டிஷ் அரசிடம் இருந்த மருத்துவத் துறையை கடுமையாக எதிர்த்துப் போராடி, மாகாண சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாநில உரிமைக்கு கொண்டு வந்தவர் பனகல் அரசர். முதல் இந்திய மருத்துவக்‌ கல்லூரியை அவர்தான் நிறுவினார். இன்று மும்மொழி வழியாக...