Category: சிறப்பு கட்டுரை

இழிவில் பிறந்தது ஜாதி – பெரியார்

இழிவில் பிறந்தது ஜாதி – பெரியார்

வெவ்வேறு வர்ணத்தவருக்கு இடையே நடந்த கலப்பு உறவின் காரணமாகத் தான் ஜாதியே பிறந்தது. இது குறித்து ‘விபச்சாரத்தில் பிறந்த ஜாதி’ எனும் தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரை. ஜாதிப் பிரிவும் வித்தியாசங்களும் இருக்கக் கூடாதென்பது இந்தியாவின் ஒருமுகப்பட்ட அபிப்பிராயமென்பதும், கோரிக்கையென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். பொதுவாகப் பார்க்கும் போது போதிய உலக ஞானமற்ற மக்களுக்கு ஜாதிப் பிரிவுகளை ஒழிப்பது என்றால் பிரமாதமாகத் தோன்றுவதும், சிலருக்கு ஏதோ குடிமுழுகிப் போவது போல் அவர்கள் மனதிற்குப் பெரிய திகில்கள் உண்டாவதும் சகஜமாகக் காணப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் ஜாதி என்பதன் உண்மையும், உற்பவமும் இன்னதென்று அறியாத மயக்கத்தினால் தோன்றப்படுவதே தவிர வேறில்லை. ஒரே நாட்டு மக்கள் பிறவியில் பல ஜாதியாகப் பிரிக்கப்பட்டிருப்பது நமது இந்தியாவில்தான் இருக்கின்றதே தவிர வேறெங்கும் இல்லை என்பது உலகக் கல்வி ஞானமுடையவர்கள் யாவரும் அறிந்ததாகும். அந்தப்படி இந்தியாவில் பிரிக்கப்பட்டிருக்கும் ஜாதியும் எவ்வித கொள்கைக்கும் பொருத்தமில்லாமல் வெறும் பிரிவுக்கும் இழிவுக்கும் மாத்திரம் ஆதாரமாய்...

பெண்களுக்கு இலவச விடுதி நடத்திய நாத்திகர்

பெண்களுக்கு இலவச விடுதி நடத்திய நாத்திகர்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். பெரியார் பெருந்தொண்டர் செ.தெ.நாயகம். குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை. “கண்ணை மூடிக்கொண்டு, பெரியாரைப் பின்பற்றியவர் இவர். பெரியாருக்கும் அவருக்கும் எந்த விஷயத்திலும் ஒன்று போலவே கருத்து உதிக்கும். பெரியார் கருத்தைச் சொல்லிவிட்டால், பெரியாருக்கு மேலாக அதை விளக்கிச் சொல்லுவார். அதற்கு ஆதாரங்கள் விநாடியில் சேகரித்து விடுவார். எந்தப் பதவியும் உத்தியோகமும் செய்யும் தொண்டும் தமிழ் மக்களுக்குப் பயன்படுத்தப்பட முடியாவிட்டால், அது எவ்வளவு பெரிதாயினும் திரும்பிப்பாரார். மிகவும் கண்ணியமானவர். வேஷத்துக்கு என்று நடக்கும் காரியம் அவரிடம் இருந்ததில்லை” என்று 16.12.1944-இல் குடி அரசு இதழில், பாராட்டப்பட்ட பெரியார் பெருந்தொண்டர் செ.தெ.நாயகம். தான் சென்ற ஊரையெல்லாம், வாழ்ந்த பகுதியையெல்லாம் பெரியார் மண்ணாக ஆக்கிட பாடுபட்ட பகுத்தறிவாளர் அவர். அன்றைய நெல்லை...

பொன்னம்பலனார் நடத்திய கொள்கைப்  போராட்டங்கள்

பொன்னம்பலனார் நடத்திய கொள்கைப் போராட்டங்கள்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் பொன்னம்பலனார் குறித்து எழுதிய கடந்த இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி… வேலூர் கந்தசாமி கண்டர் பள்ளியில், பொன்னம்பலனார் பணியாற்றிய காலத்திலேயே தனது சொந்த ஊரான செந்துறையில் இருந்து ஆண்டுக்கு, ஏழெட்டு மாணவர்களை அழைத்துச்சென்று, பரமத்தி வேலூரில் தன் வீட்டிலேயே தங்கவைத்து, அவர்களைப் படிக்கவைத்தார். பின்னர், அங்கிருந்து பணியில் நீக்கப்பட்டபோது, சேலத்தில் பணி வழங்கிட அவருக்குப் பரிந்துரைத்தவர் தந்தை பெரியார். கந்தசாமி கண்டர் பள்ளியில் இருந்து பொன்னம்பலனார் நீக்கப்பட்டபோது, அவரோடு ஏழு ஆசிரியர்கள் வேலையை விட்டுவிட்டனர். ஏறத்தாழ 6 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின்னர், முசிறிக்குப் பணி மாறுதல் அடைந்தார். அப்போது, திருச்சியில் பெரியாரின் கூட்டம் எங்கு நடைபெற்றாலும், பொன்னம்பலனார் சென்று விடுவார். இவர் பணியாற்றிய...

அறிஞர்களை உருவாக்கிய பகுத்தறிவு ஆசிரியர்

அறிஞர்களை உருவாக்கிய பகுத்தறிவு ஆசிரியர்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரைத் தொடர். உடையார்பாளையத்தை, சிற்பி போல செதுக்கி, கல்வி – வேலைவாய்ப்பில் முன்னேற்றமடைய பாடுபட்ட பகுத்தறிவு ஆசிரியர் வேலாயுதத்தைப் போலவே, அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செந்துறையை அடுத்த கீழமாளிகையைச் சேர்ந்தவர் மற்றொரு ஆசிரியர். பழுத்த ஆன்மிகவாதியாக இருந்த அந்த ஆசிரியரை, பகுத்தறிவு ஆசிரியராக மாற்றியது பெரியாரின் `குடி அரசு’ இதழ். பெரியாரியவாதியாக மாறிய பின்னர், கருப்புச்சட்டையோடுதான் பள்ளிக்குச் செல்வார். பெரியாரின் பகுத்தறிவைத் துணைகொள்வதற்கு முன்பே, மறைமலை அடிகளாரின் மொழியியல் கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டிருந்தார். 1926-31 வரையில் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பின்போது, மறைமலை அடிகளின் மகன் மறை. திருநாவுக்கரசுவும் பொன்னம்பலனாரும் ஒரே அறையில் தங்கிப் படித்தனர். அவர்கள்...

அன்றாட வாழ்வில் ஆணாதிக்க மொழிகள்

அன்றாட வாழ்வில் ஆணாதிக்க மொழிகள்

உங்கள் மனைவிக்கு சமையலறையில் நீங்கள் உதவி செய்வீர்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் ஆமாம் என்று தான் பதில் கூறுகிறார்கள். இப்படி கூறுகிறவர்கள் மிகவும் முற்போக்கானவர்கள் மனைவியை மிகவும் நேசிப்பவர்கள் என்று சமூகம் முடிவு செய்கிறது. சமூக ஊடகங்களில் ஒரு பிரபலமான இணையர்களிடம் பேட்டி எடுத்த போது இந்த பதில் கணவரிடம் இருந்து வந்தது. ஏராளமான லைக்குகளும் சேரும் குவிந்தன. இதில் அடங்கியுள்ள பாகுபாடு உணரப்படுவது இல்லை! உதவி என்ற சொல் எதைக் குறிக்கிறது? சமையலறை பொறுப்பை ஏற்க வேண்டியது பெண்; அவர் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கு கணவர் உதவுகிறார். இது கணவருக்கான பொறுப்பு அல்ல! என்பதே உதவி என்று சொல்லுக்கான உண்மையான உள்ளடக்கம். சமையல் பெண்களுக்கான பொறுப்பு என்று காலம் காலமாக மூளையில் திணிக்கப்பட்ட சிந்தனையின் தொடர்ச்சியாகவே உதவி என்ற சொல் வருகிறது. இங்கே உதவி என்பது ஒரு சொல் அல்ல; இது கருத்தியல். உதவி என்ற சொல்லுக்குள்...

சமூகத்தில் மாறிவரும் உளவியல்

சமூகத்தில் மாறிவரும் உளவியல்

அண்மையில் வெளியான மாதிரிப் பதிவு முறை (SRS) புள்ளியியல் அறிக்கை (Sample Registration System (SRS) Statistical Report 2024) புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மொத்தக் கருத்தரிப்பு விகிதம், அதாவது ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அளவு தற்போது 1.9 ஆகக் குறைந்துள்ளது. இது மக்கள்தொகையை நிலைத்திருக்கச் செய்யத் தேவையான 2.1 என்கிற மாற்று நிலையைவிடக் குறைவு. 2014இல் 21ஆக இருந்த பிறப்பு விகிதம் 2024இல் 18.3ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரம், இறப்பு விகிதம் 6.7இலிருந்து 6.4ஆக மட்டுமே குறைந்துள்ளது. இந்தியாவின் சராசரியான நடுத்தர வயது 40.2 தற்போது 29.2 சீனாவின் சராசரி நடுத்தர வயது 40.2 பல ஐரோப்பிய நாடுகளில் இது இன்னும் அதிகம். அதே நேரத்தில் இந்தியாவில் தற்போது 15 முதல் 29 வயதுக்குள் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 38கோடி. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 27% விழுக்காடாகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்...

நீட்தேர்வு நடத்தும் அமைப்பின்  படுதேல்விகள் ஊழலில் பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி!

நீட்தேர்வு நடத்தும் அமைப்பின் படுதேல்விகள் ஊழலில் பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி!

2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ’நீட்’ நடத்தப்பட்டது. பல மாதங்களாகவும், பல ஆண்டுகளாகவும் கடுமையாக உழைத்த மாணவர்கள் தேர்வு முடிந்த மகிழ்ச்சியை சமூக ஊடகங்களில் கொண்டாடினர். ஆனால் இரண்டு வாரங்களுக்குள் அந்த மகிழ்ச்சி துயரமாக மாறியது. மே 12 அன்று, “கெஸ் பேப்பர்” பரவியதாகவும், தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து தேசியத் தேர்வு முகமை (என்.டீ.ஏ) நீட்-2026 தேர்வை ரத்து செய்தது. அதன்பின்னர் மனஉளைச்சலால் குறைந்தது 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான பிரதீப் மேக்வால், கடந்த 3- ஆண்டுகளாக ’நீட்’ தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த ஆண்டு சிறந்த மருத்துவக் கல்லூரியில் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேசத்தின் லகிம்பூர் கேரியைச் சேர்ந்த 21 வயது ரித்திக்...

கொள்கைக்காக உயீர்நீத்த உடையார்பாளையம் வேலாயுதம்!

கொள்கைக்காக உயீர்நீத்த உடையார்பாளையம் வேலாயுதம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரைத் தொடர். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் நாம் இருக்கிறோம். இந்த நூற்றாண்டு காலபயணம் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார- பண்பாட்டு வளர்ச்சிக்கான பாதையை அமைத்திருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதரின் கல்வி, வேலைவாய்ப்புக்கான ஏணியாக மற்றெந்த இயக்கத்தையும் விடவும் அதீத பங்களிப்பைச் செய்த இயக்கமாக சுயமரியாதை இயக்கமும், அதன் பரிணாம வளர்ச்சியாக உருவெடுத்த திராவிட இயக்கமும் திகழ்கின்றன. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலம் அவ்வளவு இனிமையானது அல்ல. நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுவதற்கு சமமான காலம் அது. இயக்கத்தின் தலைவராக இருந்த பெரியார் மீதே செருப்பு வீசப்பட்டது, பாம்பு வீசப்பட்டது, மலம் வீசப்பட்டது என்றால் சாமானிய தொண்டர்களைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டுமா? அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்...

புராண நாடகங்களுக்கு மாற்றாக புரட்சிகர நாடகங்களை நடத்திய கும்மம்பட்டி!

புராண நாடகங்களுக்கு மாற்றாக புரட்சிகர நாடகங்களை நடத்திய கும்மம்பட்டி!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டி குறித்த கடந்த இதழின் தொடர்ச்சி… திண்டுக்கல், சின்னாளப்பட்டி பகுதிகளில் அண்ணா, கலைஞர், பேராசிரியர், நாவலர் உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்கள் நடந்தால், கு.சி.பழனிச்சாமி தன் பகுதியில் இருந்து மாணவர்களை அழைத்துச் செல்வார். தினசரி நூல்களைப் படிப்பது, விவாதிப்பது, பேச்சுப்பயிற்சி என இருந்த மாணவர்களுக்கு அண்ணா, கலைஞர், பேராசிரியர் உள்ளிட்டோரின் உரைகள், கொள்கை உணர்வை ஊட்டி வளர்த்தன. ‘பவளக்கொடி’, ‘வள்ளித் திருமணம்’, ‘சாரங்கதாரா’, ‘நல்லதங்காள்’ ஆகிய நாடகங்கள்தான் கும்மம்பட்டியில் ஆண்டாண்டு காலமாக நடந்தன. அவை தவிர, வேறு எந்த நாடகத்தையும் கும்மம்பட்டி மக்கள் பார்த்ததில்லை. அதனால், பகுத்தறிவுக் கருத்துகளை நாடகம்மூலம் வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது, கலைமன்றம். சுமார் மூன்று ஆண்டுகள்...

வந்தே மாதரம் இஸ்ஸாமிய வெறுப்புப் பாடல்!

வந்தே மாதரம் இஸ்ஸாமிய வெறுப்புப் பாடல்!

‘ஜெய் ஹிந்த்’-தைப் போல ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லையும் தேசபக்தி முழக்கம் என்கிறார்கள் ‘சங்கிகள்’; அது உண்மையல்ல. பக்கிம் சந்திரா சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர் 1880இல் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற வங்க மொழி நாவலில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் அது. அப்போது ஆட்சியிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி, முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சென்னை, பம்பாய், கலகத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் அது. முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போர் மூலம் ஒழித்துவிட்டு, இந்து – ஆங்கிலேய ஆட்சியை உருவாக்க வைணவ இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதே நாவலின் மய்யமான கருத்து. சத்யானந்தா என்ற கதை நாயகன், இந்து இளைஞர்களைத் திரட்டும்போது, அந்த கதாநாயகன் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’. “நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கு இனம் – மதம் – பண்பாடு பெருமையைக் காப்பதற்கு, முஸ்லிம்களை ஒழித்தாக வேண்டும்; அவர்களை ஒழிக்காவிட்டால்...

1967-ல் திமுக வெற்றியின் போது பெரியார் கூறியது என்ன?

1967-ல் திமுக வெற்றியின் போது பெரியார் கூறியது என்ன?

எப்படியோ இன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வி அடைந்து மாற்றான் எதிரி ஆட்சியாகவே ஏற்பட்டுவிட்டது; அந்தப்படியே எதிரிகளும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள்; நானும் நினைத்துக் கவலைப்பட்டேன் ; துக்கப்பட்டேன்; என்னமோ நமது நல்ல வாய்ப்பின் காரணமாய், எதிரியின், புத்தி இல்லாத தன்மையின் காரணமாய்ப் பெரிதும் தங்களால், தங்கள் முயற்சியால் ஏற்பட்ட ஆட்சியை அனுபவிக்க வாய்ப்பு பெறாமல் ஒரே முழுக்கில் மண்ணெடுக்க ஆசைப்பட்டு ஆட்சியாளர்களை சங்கடமான நிலைக்குத் கொண்டுவர ஆசைப்பட்டதால் ஆட்சியாளர் நேர்மையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததும், ஆட்சியாளர்களை ஒழிக்கத் திட்டம் போட்டு விட்டார்கள். இது நமக்கு ஒரு நல்வாய்ப்பாய் வாய்த்தது என்று கருதி இந்த ஆட்சியை விழாமல் செய்து அது உள்ளவரையிலாவது மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படும்படி செய்ய முடியுமா? என்று சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பெரிதும் பார்ப்பனர் முயற்சியால் ஆட்சி தி.மு.க.வுக்குக் கிடைக்கும் வாய்ப்பு வந்தது என்றாலும் தி.மு.க. பார்ப்பனர் அல்லாதார் என்பதையும், அதிலும் அவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்பதையும், இவர்கள் பதவிக்காக...

கலையின் வழியாக கலகம் செய்த கும்மம்பட்டி

கலையின் வழியாக கலகம் செய்த கும்மம்பட்டி

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டி குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை தொடர். 1948-ஆம் ஆண்டு, ஓமந்தூர் ராமசாமி தலைமையிலான அரசு, சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தியை மீண்டும் கட்டாயப் பாடமாக்கியது. நீறுபூத்த நெருப்பாக இருந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரின் உணர்ச்சிப் பிழம்புகள் மீண்டும் வெடிக்கத் தொடங்கின. அந்த உணர்வுகளுக்குத் தப்பாத ஒரு கிராமம் கும்மம்பட்டி. திண்டுக்கல்லில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர். அந்த ஊரைச் சேர்ந்த கு.சி.பழனிச்சாமி, எந்நேரமும் கையில் பெரியார், அண்ணா நூல்களை வைத்திருப்பவர். பத்தாம் வகுப்பு மாணவரான அவர், சக மாணவர்களோடு உரையாடும்போதுகூட தமிழ், தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு பற்றியதாகவே இருக்கும். ‘திராவிடப் பண்ணை’ நூல்களை வாங்கி, தான் படிப்பதோடு...

பெரியாரின் இந்தி எதிர்ப்பை இழிவு செய்தவர் ஜீவா! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (16)- கொளத்தூர் மணி

பெரியாரின் இந்தி எதிர்ப்பை இழிவு செய்தவர் ஜீவா! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (16)- கொளத்தூர் மணி

“ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது சுமத்தியுள்ள விமர்சனங்களுக்கும் (பழிசுமத்தல் என்ற சொல்லைக் கூட தவிர்க்கிறேன்). தோழர் ஜீவானந்தம் மீதான மிகைமதிப்பீட்டுக்கும் பதில் அளிப்பதே எனது நோக்கம் “ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் தோழர் ஜீவா எழுதியுள்ளவற்றுள் நினைவூட்டலுக்காக சில “நாகரிக” சொற்றொடர்கள் கீழே: “ஜஸ்டிஸ் கட்சியுடைய குற்றவாளித்தனத்தை மறைத்தார். பொதுவுடைமை இயக்கமல்ல என்று அரசாங்கத்தை நம்பச் செய்ய வேண்டுமென்று எண்ணுகிற, எழுதுகிற அளவுக்குச் சாக்கடையில் சறுக்கி விழுந்தார். தான் உயிரோடு இருக்க (யாருக்காக?) பிற்போக்குக் கும்பல்களின் யோசனைப்படி ஈவெரா யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.” “சென்னையில் ‘நால்வர் சந்திப்பு’ நடந்தது (1-8- 1927). அடுத்த வார குடிஅரசில் வெளியான பிராமணியச் சடங்கை விலக்கியவர் பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஆர்.கே.ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன்வரிசையில் இடம் பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரர்களோடு இணைந்து, சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி, காங்கிரஸ் ஒழிப்பு...

தேடிவந்த முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்தவர் பெரியார்!

தேடிவந்த முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்தவர் பெரியார்!

சென்னை மாகாண முதலமைச்சர் பதவி தன்னை நாடி வந்த போது பெரியார் ஏற்க மறுத்தார். நீதிக்கட்சியின் உள்ளேயே பெரியார் பதவி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தற்கிடையே பெரியார் கடும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. அந்தப் போராட்டம் குறித்து பெரியார் ஈரோட்டில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. உள்ளூரில் என்னை மதிக்கும் அளவுக்கு நானில்லை என்பது வாஸ்தவந்தான். அதைப் பொறுத்துத்தானே கழக வேலையும் இங்கு இருக்கும்? இன்று கூட இக்கூட்டத்தில் அரசியல் நிலையைப் பற்றிப் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். எனக்கு முன்னால் பேசிய நண்பர்களும் அரசியலைப் பற்றியும் பேசினார்கள். ஆனால், நான் அரசியலைப் பற்றி இந்த ஊரில் பேச இஷ்டப்படவில்லை. காரணம், அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் இவ்வூரில் மிகமிகச் சொற்பம்! இந்த ஊரில் பெரும்பாலும் எல்லாம் வியாபாரிகள்: அவர்களுக்கு அடிக்கடி ஆண்டவனிடம் மன்னிப்புக் கேட்கவும், அதற்கான பூசை, திருவிழா செய்யவுமே காலமெல்லாம் சரியாய் விடுகிறது. அதுவும்...

நூற்றாண்டு அநீதியை ஒழித்த பெரியார் இயக்கம்!

நூற்றாண்டு அநீதியை ஒழித்த பெரியார் இயக்கம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். அன்னூர் நல்லிச்செட்டிபாளையத்தில் நடந்த போராட்டம் குறித்த கட்டுரை. கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் உள்ள சுற்றுவட்ட கிராமங்களில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எண்ணற்ற தீண்டாமைக் கொடுமைகள் நிலவி வந்தன. பொதுக்குழாயில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் பிடிக்கத் தடை, செல்போன் பேசத் தடை, இரட்டைக் குவளை முறை, சலூன்களில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிவெட்டத் தடை, பொது சுடுகாட்டில் தாழ்த்தப்பட்டோரை புதைக்கத் தடை, மோட்டார் பைக் ஓட்டத் தடை என விதவிதமான தீண்டாமைக் கொடுமைகளுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகியிருந்தனர். 2000-க்குப் பிந்தைய நவீன உலகிலும்கூட இத்தகைய ஜாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடுவதை சகித்துக்கொள்ள முடியாமல், இவற்றுக்கெதிராகப் போராட வேண்டுமென்ற எண்ணம் அங்குள்ள நல்லிசெட்டிபாளையம் பகுதி இளைஞர்களுக்கு ஏற்பட்டது. ஈஸ்வரன், ஜோதிராம், ராமன்...

கழகத் தோழர் பத்ரிநாரயணன் நினைவேந்தல் நிகழ்வு!

கழகத் தோழர் பத்ரிநாரயணன் நினைவேந்தல் நிகழ்வு!

இராயப்பேட்டையை பெரியார் பாசறையாக மாற்றிய கழகச் செயல் வீரர் பத்ரி நாராயணன் அவர்களின் 22-வது நினைவு நாளை முன்னிட்டு இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மயிலாப்பூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 30.04.2026‌ அன்று ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தோழர் பத்ரி நாரயணனின் நினைவுகளை பாடலாக தோழர்கள் பொன்ராஜ், சத்யா, லதா ஆகியோர் இணைந்து பாடினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் சென்னையில் தலித்துக்களையும், இஸ்லாமியர்களையும் பெரியார் இயக்கத்தின் பக்கம் ஒன்றிணைத்தவர்களில் பத்ரி முதன்மையானவர். மேலும் கொண்ட கொள்கையில் துடிப்போடு பணியாற்றிய ஆற்றல்மிகு இளைஞர் என்று கூறினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் அனைத்து இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழர் திருநாள் பொங்கல் விழாவை எழுச்சியுடன் நடத்தி வந்தவர். பத்ரியின் நினைவு நாளில் தோழர்கள் இன்றைய தலைமுறையினரை திராவிடர் இயக்கம் நோக்கி அணிதிரட்ட சூளுரைத்தனர். ஆர்.என் துரை (திமுக மாவட்டத் துணை.செயலாளர்), க.வே...

பார்ப்பனிய எதிர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்தவர் ஜீவா ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (15)- கொளத்தூர் மணி

பார்ப்பனிய எதிர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்தவர் ஜீவா ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (15)- கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்கள் தனது ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூலில் முன் வைத்திருக்கும் வேறொரு குற்றச்சாட்டைப் பற்றியும் பார்ப்போம். “1.8.1927இல் சென்னையில் நால்வர் சந்திப்பு நடந்தது. அது குறித்து அடுத்த வார குடிஅரசில் வெளியான “பிராமணிய சடங்கை விலக்கியவர்” பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன் வரிசையில் இடம்பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரரோடு இணைந்து சமூக சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி காங்கிரஸ் ஒழிப்பு வேலைக்கு மறைமுகமாகப் பணம் திரட்ட முனைந்தார் ஈ.வெ.ரா.” என்னதான் உண்மை? 25.7.1926 குடிஅரசு இதழின் 9ஆம் பக்கத்தில் ‘சென்னையில் நால்வர்’ என்ற தலைப்பில் ஒரு குறிப்பு காணப்படுகிறது.அதில் “காங்கிரஸ் பார்ப்பனரல்லாத தலைவர்களான ஸ்ரீமான்கள் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடுகார், ஆர்கே சண்முகம் செட்டியார் ஆகிய நால்வரும் அரசியல் சமுதாய விஷயங்களில் தற்காலம் இருக்கும் நிலைமையில் இனி தாங்கள் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்தைப்...

பண்ணையார்களைப் பணியவைத்த திருவாதிரைமங்கலம்!

பண்ணையார்களைப் பணியவைத்த திருவாதிரைமங்கலம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திருவாதிரை மங்கலம் குறித்தும் திராவிட தொழிலாளர் சங்கம் குறித்தும் விவரிக்கிறது இக்கட்டுரை தொடர். நெடுங்காட்டன்குடி, சூரனூர், சோழிங்கநல்லூர், வடகுடி, எழுமுக்கால், கீழவைப்பூர், குரும்பேரி, தேராகுளம் உள்ளிட்ட 18 கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி, திருவாதிரை மங்கலம். அதன் தலைகிராமம் திருவாதிரை மங்கலம்தான். 1950-க்கு முன்பு, ஊராட்சி முழுவதுமே ஆண்டான் – அடிமை, முதலாளி – தொழிலாளி, ‘ஆதிக்கஜாதி – ஒடுக்கப்பட்ட ஜாதி’ என வர்க்கமும் வர்ணமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த சூழலே நிலவியது. பண்ணையார்கள் வீட்டிற்குள்கூட தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாது. உணவோ, தண்ணீரோ திண்ணையில் அமர்ந்துகூட உண்ண முடியாது. கொல்லைப்புறத்தில் வைத்து கொடுப்பார்கள். பள்ளி செல்லவும் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி கிடையாது. இந்தச் சூழலில் 1950-களின் பிற்பகுதியில், நாகை...

தீர்ப்பை மாற்றி எழுத மக்களைத் தயார் செய்வோம்!

தீர்ப்பை மாற்றி எழுத மக்களைத் தயார் செய்வோம்!

ஒவ்வொரு முறையும் கொளத்தூர் தொகுதிக்கு போகும்போதெல்லாம் மக்களை சந்திக்கும் போது மிகவும் உற்சாகம் பெறுவதாக மு.க ஸ்டாலின் பெருமையுடன் கூறுவார்; மிகவும் கவலை எடுத்து தனது தொகுதியை வளர்த்தெடுத்து அடுக்கடுக்கான திட்டங்களைக் கொண்டு வந்தார். அதே கொளத்தூர் தொகுதி இன்று முதல்வரை கைவிட்டதை அறியும்போது இதயம் வலிக்கிறது. தனது ஐந்தாண்டு ஆட்சியை சாதனைகளின் சரித்திரம் ஆக்கினார் மு. க.ஸ்டாலின். இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் முதலிடத்தில் கொண்டு வந்த நிறுத்தினார். ஒன்றிய ஆட்சி வஞ்சகத்தை இவரைப் போல் துணிவுடன் வேறு எந்த மாநில முதல்வரும் எதிர் கொள்ளவில்லை. இவர் செயல்படுத்திய பெண்களுக்கான உரிமை திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு மாநிலங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு கிடைத்த உரிமை பல்வேறு மாநில பெண்களுக்கும் இவரால்தான் கிடைத்தது. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கும் ஆளுநரின் அத்துமீறல்களிலிருந்து மாநில உரிமைகளை காப்பாற்றுவதற்கும் இவர் மேற்கொண்ட சட்டப் போராட்டங்களும் ;அதில் கிடைத்த வெற்றிகளும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல;‌‌ இந்தியாவின்...

ஈழ விடுதலைக் கவிஞர் விடைபெற்றார்!

ஈழ விடுதலைக் கவிஞர் விடைபெற்றார்!

தேனிசை செல்லப்பா எனும் இசைப் போராளி விடை பெற்றுக் கொண்டு விட்டார். தமிழீழ விடுதலை வரலாற்றில் தேனிசை செல்லப்பாவுக்கு நிலைத்த இடம் உண்டு. தமிழ்நாட்டு விடுதலை இலட்சியத்தை முன்னிறுத்தி `தினத்தந்தி ’ நாளேட்டின் நிறுவனர் சி.பா ஆதித்தனார் தொடங்கிய `நாம் தமிழர் கட்சி’யிலிருந்து அவரது அரசியல் பயணம் தொடங்கியது. தனிநாடு விடுதலையில் தோய்ந்து நின்றவர். அந்த இலட்சியம்தான் அவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நோக்கி நகர்த்தியது. 1983-இல் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை உணர்வுகள் வெடித்து கிளம்பிய போது தேனிசை செல்லப்பாவின் இசை நாடா வெளிச்சத்துக்கு வந்தது. நாம் தமிழர் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டிருந்த கவிஞர் காசி.ஆனந்தன் எழுதிய உணர்ச்சிமிகு கவிதை வரிகளுக்கு இசை வடிவம் தந்திருந்தார் தேனிசை செல்லப்பா. தமிழ்நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இயக்கங்களில் குறிப்பாக பெரியார் இயக்கங்களில் அவரது இசை நிகழ்ச்சிகள் உணர்வலைகளைத் தட்டி எழுப்பின....

கை விலங்கிலிருந்து கருப்பு அங்கி வரை!

கை விலங்கிலிருந்து கருப்பு அங்கி வரை!

கை விலங்கோடு குற்றம் சாட்டப்பட்டவராக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பேரறிவாளன், அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக படியேறுகிறார். ராசீவ் கொலையில் குற்றவாளியாக அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு 31 ஆண்டுகள் சிறைவாசத்தை ஏற்றவர் பேரறிவாளன். நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவராக நிறுத்தப்பட்டார். பூந்தமல்லியிலும் வேலூரிலும் பிறகு சென்னையிலும் அவர் சிறைவாசம் தொடர்ந்தது. சிறைக்குள் இருந்து கொண்டே மன உறுதியோடு சட்டப் போராட்டம் நடத்தினார். மரண தண்டனை அறிவிக்கப்பட்டது; மரண தண்டனைக்கு எதிராக மக்கள் இயக்கம் தமிழ்நாட்டில் நடந்தது. எழுவர் விடுதலைக்கான தொடர் பரப்புரைகள், கருத்தரங்குகள், மாநாடுகள், போராட்டங்கள் தமிழ்நாடு முழுதும் தீவிரமாக நடந்தன. மரண தண்டனையை எதிர்த்து தனக்கு மரண தண்டனையைத் தந்து கொண்டார் செங்கொடி என்ற வீரப்பெண். மரண தண்டனைக்கு எதிராக உலகில் தமிழ்நாட்டில் நடந்தது போல் வேறு எந்தப் பகுதியிலும் இயக்கங்கள் நடந்த வரலாறு இல்லை. இந்த மக்கள் இயக்கம் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளையும், புலன் விசாரணை செய்த தலைமை இயக்குனரையும், வாக்குமூலம் வாங்கிய...

எனக்குப் பிறகு எவன் கேட்பான்? வேன் வழங்கும் விழாவில் பெரியாரின் உணர்ச்சி உரை!

எனக்குப் பிறகு எவன் கேட்பான்? வேன் வழங்கும் விழாவில் பெரியாரின் உணர்ச்சி உரை!

வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள் உரைகளுக்குப் பின்னர் இறுதியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை: இந்தப் பொருள்களை எல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. கார் ஒன்றுதான் எனக்கு அதிகம் பயன்படும். இந்த புதிய வேனில் சவாரி செய்வதால் ஒன்றும் நான் அதிகம் வாழப் போவதில்லை. ஆனால் இதைப் போன்று விழாக்களை காணும் போது தான் எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது. இந்த கார் வாங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஏராளமாக கேட்டதற்கு மேல் அதிகமாக கொடுத்துள்ளார்கள். அதில் குறிப்பாக தஞ்சை மாவட்டம் 40,000 ரூபாய் அளித்திருக்கிறது. அந்த அளவுக்கு நமது கொள்கைக்கு நாட்டில் வெற்றி கிட்டி இருக்கிறது; செல்வாக்கு பெருகிவிட்டது. எனக்கு இன்றைக்கு வயது 94 அடுத்த மாதம் பிறந்தால் 95 வயது. 60 வருடங்களுக்கு முன்பு எமது மக்களின் யோக்கியதை என்ன அதாவது நாம் முயற்சி எடுப்பதற்கு முன்பு இந்த நாட்டு மக்களின் யோக்கிதை...

1973-ல் தஞ்சையில் பெரியாருக்கு கார் வழங்கும் விழாவில் நடந்தது என்ன?

1973-ல் தஞ்சையில் பெரியாருக்கு கார் வழங்கும் விழாவில் நடந்தது என்ன?

1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தஞ்சையில் பெரியாருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது. மேடையில் ஏறுவதற்கு பெரியாருக்கு ஏற்பட்ட இடையூறுகளை தவிர்த்து பிரச்சாரத்திற்கான மேடையை காரின் ஒரு பகுதியாக இணைத்து இந்தக் கார் தயாரிக்கப்பட்டது. இந்தக் காரை 5 மாதங்கள் மட்டுமே பெரியார் பயன்படுத்தினார். தியாகராய நகரில் பெரியாரின் இறுதி உரையை இந்தக் காரில் இணைக்கப்பட்ட மேடையில் தான் ஆற்றினார். பெரியாரின் அந்தக் கார் திருச்சி உறையூரில் உள்ள பெரியார் மாளிகையில் நிறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேடு (ஏப்ரல்-19) படத்துடன் ஒரு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. திராவிடர் கழகம் திட்டமிட்டு வரும் ‘பெரியார் உலகத்தில்’ இந்த வேன் காட்சிப் பொருளாக இடம்பெறப்போவதாக செய்தி கூறுகிறது. இந்தக் கார் வழங்கும் விழா, 1973 ஆக-19-ல் தஞ்சையில் எழுச்சியுடன் மாநாடு போல் நடந்தது. அந்த நிகழ்வுகள் குறித்து சில செய்திகளை இளையதலைமுறையின் கவனத்துக் கொண்டு வருகிறோம்....

எடப்பாடி நடத்திய ‘பாஜக’ பினாமி ஆட்சி!

எடப்பாடி நடத்திய ‘பாஜக’ பினாமி ஆட்சி!

எடப்பாடி ஆட்சியில் நடைபெற்ற மக்கள் விரோத செயல்கள் ஒரு தொகுப்பு: தமிழ்நாட்டில் எடப்பாடி முதலமைச்சர் ஆக இருந்த காலத்தில் பாஜகவின் பினாமி ஆட்சி தான் நடந்தது. இதற்கு ஏராளமான சான்றுகளை பட்டியலிட முடியும். தமிழ்நாடு பாஜகவினரே எடப்பாடியை மிரட்டி வேலை வாங்கினார்கள். அவர்கள் வைத்த ஒவ்வொரு கோரிக்கைக்கும் எடப்பாடி பணிந்து போனார். உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறோம். தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட முக்கிய அதிகார பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களே இருந்தனர். தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் அரசு பணிகளில் சேரலாம் என்று அரசு தேர்வாணைய விதிகளை திருத்தி எழுதி தமிழ்நாட்டில் அரசு பணிகளிலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளிலும் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பணிகளிலும் ஏராளமான வடநாட்டுக்காரர்கள் தமிழ்நாட்டிற்கு உள்ளே நுழைய அதிமுக ஆட்சி எடப்பாடி ஆட்சி அனுமதித்தது. 12 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பதவிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் 80 விழுக்காடு வெளி மாநிலத்தவர்களையே தேர்வு...

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்

தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு:  பாஜக தூண்ட முயற்சித்த கலவரங்களும்; உறுதுணையாக இருந்த அதிமுகவும்.  தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்; மதமாற்றம் காரணமல்ல சிபிஅய் அறிக்கை:  அதே 2022 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள ஒரு கிறுத்துவ பள்ளியில் பயின்ற மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, “மத மாற்றம் தான் காரணம்” என்று பேசியது போல ஒரு காணொளி தஞ்சாவூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவரால் பகிரப்பட்டது. அந்தக் காணொளியை பாஜக அண்ணாமலை பகிர்ந்து பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். காவல்துறை விசாரணையில் அந்த காணொளி வதந்தி என கண்டறியப்பட்டது. அண்ணாமலை பள்ளி நிர்வாகத்தை குறி வைத்ததற்கான காரணம் பள்ளி நிர்வாகம் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தது.  தமிழ்நாடு அரசு மிக...

கருப்பை புற்றுநோய் தடுப்பில் மோடிக்கு வழிகாட்டிய மு.கஸ்டாலின்!

கருப்பை புற்றுநோய் தடுப்பில் மோடிக்கு வழிகாட்டிய மு.கஸ்டாலின்!

பெண்களுக்கான கருப்பை புற்றுநோய் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்தைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியது திராவிட மாடல் ஆட்சி. கடந்த சனவரியில் அரசு இத்திட்டத்தை அறிவித்து மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. ஒரு ஊசியின் மதிப்பு ரூ.14,000. தமிழ்நாட்டில் இலவசமாக போடப்படுகிறது. இதுவரை 4 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமாக தொடரும்.தமிழ்நாடு அரசின் பெண்கள் உரிமைக் கான திட்டங்களை வாக்கு திரட்டும் திட்டமாக சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த திட்டம் வாக்களிக்கும் வயதிற்கு வராத 14 வயது சிறுமிகளுக்கான திட்டம். தமிழ்நாட்டைப் பார்த்த பிறகு தான் மோடி கடந்த பிப்ரவரியில் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மோடி வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இந்தியா முழுவதும் 14 வயதான 1.5 கோடி பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படும் என்று கூறியிருக்கிறார். உலகளாவிய புற்றுநோய் ஆய்வகம் `Globocan’ 2022-ல் வந்துள்ள தகவலின் படி இந்தியாவில் 35...

1971-ஆம் ஆண்டு தேர்தல் வரலாற்றுப் பின்னணி

1971-ஆம் ஆண்டு தேர்தல் வரலாற்றுப் பின்னணி

முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி மாநாட்டு உரையில் இவ்வாறு குறிப்பிட்டார். “இந்த நேரத்தில் தந்தை பெரியார் 1971-ல் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன் திமுக ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமுதாயம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் ஏற்படும் என்றார். “இப்போதும் தந்தை பெரியார் சொன்னதை மனதில் வைத்து நமது பயணத்தை தொடர வேண்டும்” என்று பேசி உள்ளார். முதலமைச்சர் இப்போது 1971 ஆம் ஆண்டை ஏன் நினைவு கூற வேண்டும்? அதற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு. 1971 ஆம் ஆண்டு சனவரி 23,24 சேலத்தில் பெரியார் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை நடத்தினார். கோவை ஜிடி நாயுடு மாநாட்டை திறந்து வைத்தார்.மூட நம்பிக்கைகளை தோலுரித்த பகுத்தறிவு மாநாட்டில் திராவிடர் கழக தோழர்கள் மட்டுமே பங்கேற்றனர். வேறு கட்சிகள் அழைக்கப்படவில்லை. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. மூடநம்பிக்கைகளை விளக்கும் அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், ராமன் சீதைகளை கடவுளாக கருதும் நம்பிக்கைகளை...

சக்லத்வாலா எழுதிக் கொடுத்ததைத் தான் பெரியார் படித்தாரா?            ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (14) -கொளத்தூர் மணி

சக்லத்வாலா எழுதிக் கொடுத்ததைத் தான் பெரியார் படித்தாரா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (14) -கொளத்தூர் மணி

1931 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி விருதுநகர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிந்து இரவு சாப்பாட்டிற்குப் பிறகு விஷய ஆலோசனைக் கூட்டம் மாநாட்டு பந்தலில் திருவாளர் பாண்டியன் அவர்கள் தலைமையில் இரவு 10:30 மணிக்குத் துவங்கப்பட்டு இரவு 3:30 வரை நடந்தது. விஷய ஆலோசனைக் கமிட்டி ஆரம்பம் ஆனதும், சோழவந்தான் திரு. வெங்கடசாமி அய்யர் அவர்கள் விஷய ஆலோசனைக் கமிட்டிக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார். இதற்குத் தலைவர் அவர்கள் அகாலம் ஆகிவிட்டதால் இனி தேர்தல் நடத்துவது சிரமம் என்றும், இருந்தபோதிலும் கூட்டத்தின் அபிப்ராயத்தைத் தெரிய ஆசைப்பட்டு சபையின் அபிப்பிராயம் கேட்டார். பெரும்பான்மையானவர்கள் பொதுக் கூட்ட முழுமையுமே விஷய ஆலோசனைக் கமிட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு அந்தப்படியே தீர்மானிக்கப்பட்டது. முதன்முதலாக மதங்கள் கண்டனத் தீர்மானம் விவாதிக்கப்பட்டது. அதில் சிறிது காரமான விவாதம் நடந்தது என்றாலும் முடிவில் ஒரே ஒரு ஓட்டு தான்...

சென்னையில் மகிழ்ச்சி விழா! ஜாதி மறுப்பு மணம் புரிந்த பெரியார் குடும்பங்கள் சந்திப்பு

சென்னையில் மகிழ்ச்சி விழா! ஜாதி மறுப்பு மணம் புரிந்த பெரியார் குடும்பங்கள் சந்திப்பு

சென்னை மாவட்டக் கழகம் மற்றும் இளைஞர் அணி இணைந்து நடத்திய காதலர் தினத்தை முன்னிட்டு ஜாதி மறுப்பு இணையர்களின் குடும்ப விழா பிப்ரவரி 17 அன்று மாலை 6 மணி அளவில் ராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வை சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார். கவுசல்யா (நிறுவனர் சங்கர் அறக்கட்டளை) உடுமலை சங்கர் ஜாதியப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜாதி ஆணவ கொலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவர். தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் ஜாதி வெறி செயலுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருபவர். காவை.ஈசுவரன் (தலைமைக் குழு உறுப்பினர்), ஜாதி மறுப்பு திருமணங்களை முன்னின்று கடும் எதிர்ப்புகளை மீறி நடத்தி அவர்களுக்கு அடைக்கலம் தருபவர். சேலத்தில் 1000 கணக்கான ஜாதி,மத மறுப்பு திருமணங்களை நடத்தியவர். தீனா (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) புதுவை இயக்கத்தில் பெண்களை துணிச்சலோடு ஜாதி மறுப்பு திருமணங்களை புரிய ஊக்குவிப்பவர். தன்னுடைய இயக்கப் பெண்களில் சிலர்...

ஊடகவியலாளர்களிடம் முதல்வர் கேள்வி தமிழ்நாட்டைப் போல் சாதனைகள் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா?

ஊடகவியலாளர்களிடம் முதல்வர் கேள்வி தமிழ்நாட்டைப் போல் சாதனைகள் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா?

இங்கு ஏரா­ள­மான ஊட­க­வி­ய­லா­ளர்­கள் இருக்கிறீர்­கள். 11.19 சத­வி­கி­தம் வளர்ச்சி என்பதை, தமிழ்­நாட்டைத் தவிர வேறு எந்த மாநி­லத்­தால் சாதிக்க முடிந்­தி­ருக்­கிறது?அதுவும் எப்படிப்பட்ட சூழ­லில் இதை சாதித்திருக்கிறோம்? ஜன­நாயகத்­திற்­கும், கூட்டாட்­சிக்­கும்சிறி­தும் மதிப்பு தராத பா.ஜ.க. ஆட்சி ஒன்­றி­யத்தில் ஆளு­கி­றது. எதிர்க்­கட்சிகள் ஆளக்­கூ­டிய மாநிலங்­களை, எந்­த­ள­விற்கு வஞ்சகத்­து­டன், ஓரவஞ்­ச­னையுடன் அவர்­கள் Approach செய்கி­றார்­கள் என்று நான் உங்­களுக்கு விளக்கி சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை, உங்களுக்கே அது நன்­றாகத் தெரி­யும். ஆளு­நர்­கள் மூல­மாக நிர்­வா­கச் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தில் தொடங்கி, செயற்­கை­யான நிதிச் சுமையை உரு­வாக்கி மாநி­லங்­களை முடக்க நினைப்­பது வரைக்­கும், அத்­தனை செயல்­க­ளை­யும் செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இது மட்­டும்­தான் அவர்­களுக்குத் தெரிந்த Politics. ஆனால், இதை­யெல்­லாம் அர­சி­யல் தளத்திலும், ஆட்சி அதி­கா­ரத்­தி­லும் எதிர்­கொண்டு, “வளர்ச்சி அர­சி­யல் என்­றால், தமிழ்­நாட்டைப் பாருங்கள்” என்று சொல்­லும் அள­விற்கு Development Politics–க்கானஅடை­யா­ள­மாக தமிழ்­நாடு வளர்ந்திருக்­கிறது. அது­வும் ஒரு தரப்­புக்­கான வளர்ச்சி இல்லை; ‘எல்­லாருக்கும் எல்லாம்’ என்ற பரந்துபட்ட வளர்ச்சி!...

ஈரோடு-விருதுநகர் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவாவின் பங்கு என்ன?  ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 13 -கொளத்தூர் மணி

ஈரோடு-விருதுநகர் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவாவின் பங்கு என்ன? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 13 -கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் வரலாற்று வரலாற்றாளர்களான தோழர்கள் இஸ்மத் பாஷா, கே.பாலதண்டாயுதம் ஆகியோரே ஜீவாவுடன் நேரடியாக பழகி உரையாடி அவரது வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புடையவர்கள் என்பதாலேயே அவர்களது நூல்களை முதன்மை ஆவணமாகக் கொண்டு எழுதி வருகிறோம். அந்நூல்களில் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவா நிகழ்த்திய வீரதீர செயல்பாடுகள் குறித்து அந்நூல்களில் விதந்தோதப்பட்டுள்ள செய்திகளைப் பார்ப்போம். தோழர் இஸ்மத் பாஷாவின் நூலின் 23ஆம் பக்கத்தில் “சென்னையில் போலீஸ் அடக்குமுறை எல்லையை மீறி விட்டது; தொண்டர்கள் அடித்து வீழ்த்தப்பட்டார்கள். ஆறு போல் இரத்தம் ஓடிற்று. அச்சமயத்தில் ஈரோட்டில் சுயமரியாதை மகாநாடு கூடிற்று. போலீஸ் அடக்கு முறையை வன்மையாகக் கண்டித்து ஒரு தீர்மானம் விஷயலோசனைக் கமிட்டியில் வந்தது. ஜீவா அதை ஆதரித்து உணர்ச்சித் ததும்பப் பேசினார். ஜாதி மத விவகாரங்களில் மட்டும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொண்டால் போதாது; அரசியல் விவகாரங்களிலும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி எல்லோருடைய சுயமரியாதை...

`வந்தே மாதரம்’ தேசபக்தி பாடலா? மத பக்தி பாடலா?

`வந்தே மாதரம்’ தேசபக்தி பாடலா? மத பக்தி பாடலா?

வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கி இந்துத்துவ பாஜக ஆட்சி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை ‘இந்து’ கடவுள்களின் பூமியாக சித்தரிக்கும் பாடலை கட்டாயமாக்கி இது ‘இந்துக்கள்’ நாடு என்று காட்டி வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தும் ஆணை இது. வங்காளத்தில் பக்கிம் சந்திர சட்டர்ஜி என்றப் பார்ப்பனர் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற நாவலின் இடம்பெற்றுள்ள பாடல் இது. இந்தப் பாடல் சுதந்திரப் போராட்டக் காலத்தில் பாடப்பட்டது. இதை தேசிய கீதமாக மாற்ற வேண்டும் என்று பார்ப்பனர்கள் விரும்பினார்கள். 1937-இல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடலின் முதல் இரண்டு பகுதிகளை மட்டும் பாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மற்ற நான்கு பகுதிகள் ‘இந்து’ மதத்தோடு நாட்டை இணைப்பதால் அந்த பகுதிகள் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், காந்தி ஆகியோர் பங்கேற்றனர். துர்கா, லட்சுமி, சரஸ்வதி பெண் கடவுள்களின் பூமி நமது...

வள்ளலாரின் ஜாதி-மத எதிர்ப்புக் கருத்துக்களை நூலாக வெளியிட்டவர் பெரியார்- தமிழக முதலமைச்சர்

வள்ளலாரின் ஜாதி-மத எதிர்ப்புக் கருத்துக்களை நூலாக வெளியிட்டவர் பெரியார்- தமிழக முதலமைச்சர்

சென்னையில் கடந்த பிப்-15 அன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ‘அனைத்துலக வள்ளலார் மாநாட்டைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து… இந்தச் சமூகத்தில், இறுகிப் போயிருந்த பழமைவாதங்களையும், மூடத்தனங்களையும் சாடியவர் அவர். சாதி, சமய வேறுபாடுகள் இல்லாத சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற அவருடைய பெருங்கனவுதான் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கை. அதனால்தான், திராவிட இயக்கம் உருவானதில் இருந்து, தொடர்ந்து வள்ளலாரை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆறாம் திருமுறை பாடல்களைத் தொகுத்து, ‘இராமலிங்கர் பாடல் திரட்டு’ என்ற நூலை 1929-ல் வெளியிட்டவர், தந்தை பெரியார். இன்னும் ஒருபடி மேலே சென்று, தமிழர்கள் முன்பு, பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார். தந்தை பெரியார் என்ன கேட்டார் தெரியுமா? “வட நாட்டு சாமியார்களைப் போற்றும் தமிழனே, வடலூர் வள்ளலார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்?” என்று கேட்டார். இதையெல்லாம் உணர்ந்துதான், “வள்ளலாரின் கொள்கைகளை சமுதாயக் களத்தில், பெரியார் பரப்புரை செய்தார்”...

வாராது வந்த மாமணி ஸ்டாலின்!

வாராது வந்த மாமணி ஸ்டாலின்!

கடந்த சனவரி-24, சூலூர் பாவேந்தர் பேரவை நடத்திய மொழிப்போர் நினைவு உணர்ச்சி விழா மற்றும் பெரியார் நினைவு அறிவு விழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரை: நமக்கு வந்திருக்கிற ஆபத்து நமக்கு அமைந்திருக்கிற ஒரு வாய்ப்பு. மூடநம்பிக்கைகள் அற்ற பகுத்தறிவுவாதிகளாக நாம் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கெல்லாம் ஒரு மூடநம்பிக்கை இருந்தது. நன்றாக பேசுபவர்தான் நல்ல தலைவராக இருக்க முடியும் என்று கருதிக்கொண்டிருந்தோம். அதனால் ஸ்டாலின் கொஞ்சம் தகுதி குறைவானவர்தான் என்ற மூடநம்பிக்கை அவர் ஆட்சிக்கு வந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு வரை இருந்தது. அந்த மூடநம்பிக்கை அதற்கு பின்பு மறைந்தது. பேச்சாளராக இருக்க வேண்டியது அவசியம் இல்லை, செயல்படுபவராக இருந்தால் போதும் என்பது அவர் ஆட்சிக்கு வந்த பின்னால்தான் நமக்குத் தெரிய வந்தது. பதவி இல்லாத 10 ஆண்டுகாலத்தில் அவர் என்னென்ன நினைத்து வைத்திருந்தார் என்பதெல்லாம் தற்போதுதான் தெரிகிறது. இன்னும் 10-ஆண்டுகள் முடிந்தால்தான் வெளியே வரும் என நினைக்கிறேன். யாரும் எண்ணிப்...

பெரியார் பற்றிய செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா! ஜீவாவின் வாழ்க்கை வரலாறுகளில் விடுபட்டது எப்படி?ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 12-கொளத்தூர் மணி

பெரியார் பற்றிய செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா! ஜீவாவின் வாழ்க்கை வரலாறுகளில் விடுபட்டது எப்படி?ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 12-கொளத்தூர் மணி

காந்தி ஆசிரமத் தலைவர் கும்பலிங்கம் அவர்களுடைய அறிக்கை கூறுகிறது, அந்த ஆசிரமம் 11.2.1926 அன்று தொடங்கப்பட்டது என்று. இந்த செய்தியைத் தாங்கி இருக்கிற அதே ‘குடிஅரசு’ இதழின் 5ஆம் பக்கத்தில் மற்றொரு செய்தியும் பதிவாகி இருக்கிறது. அச்செய்தி “ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் 6.4.1926-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீமான்கள் பிச்சா சுப்பிரமணிய செட்டியார், ராய. சொக்கலிங்கம் செட்டியார், வ.ராமசாமி அய்யங்கார் முதலியவர்களுடன் காரைக்குடியில் இருந்து காலை 9 மணிக்கு வந்ததும், வாத்திய கோஷத்துடன் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்காக ஸ்ரீமான் கும்பலிங்கம் பிள்ளை பார்வையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காந்தி ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்ற செய்தியை நாம் பார்க்கிறோம். பெரியாரை தவிர்த்த ஜீவா ஏற்கனவே 7.4.1926 நாளிட்ட ‘குமரன்’ இதழில் வந்திருந்த செய்தியை நாம் பார்த்திருக்கிறோம். அந்த செய்தியில் இதே நாளில் “6.4.1926 அன்று பெரியார் 10 மணிக்கு சிராவயல் வந்து காந்தி கிணற்றைத் திறந்து வைத்ததும், அதேபோல மாலை 6 மணிக்கு...

சிராவயல் ஆசிரமம் தொடங்கப்பட்டதன் பின்னணி!      ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (11) – கொளத்தூர் மணி

சிராவயல் ஆசிரமம் தொடங்கப்பட்டதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (11) – கொளத்தூர் மணி

ஜீவாவின் காந்தி ஆசிரமக் கதைகளில் எதிலும் பதிவிடப்படாத அல்லது ஜீவாவால் சொல்லப்படாமல் தவிர்த்தத் தலைவரைப் பற்றி அறியும் முன்னர் வேறு சில செய்திகளையும் அறியவேண்டியுள்ளது. ஜீவா நிறுவியதாகவும் அதனுடைய செயலாளராக இருந்து பணியாற்றியதாகவும் நம்ப வைக்கப்பட்டிருக்கும் அந்த சிராவயலில் இயங்கிய நிறுவனங்களை முதலில் நாம் அறிந்தாக வேண்டும். சிராவயலில் 1923-ஆம் ஆண்டிலிருந்து காந்தி வாசக சாலை என்ற ஒன்று செயல்பட்டு வந்திருக்கின்றது. அதன் பின்னரே ‘தனவைசிய நாட்டுத் தமிழ்க் கல்விக் கழகம்’ உருவாக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏடுகள் தரும் செய்தி! அவ்வாறான காந்தி வாசக சாலையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா ஒன்று 12.05.1925 அன்று நடைபெற்றிருக்கிறது. அவ்விழா ‘நவசக்தி ஆசிரியர் திருவாளர் திரு.வி.கல்யாண சுந்தரம் முதலியார்’ அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும், அந்த விழாவில் திரு.வி.க. அவர்கள் ‘காந்தி தருமம், ஜீவகாருண்யம், தமிழின் இனிமை’ முதலியவைகளைப் பற்றி மிக அழகாக எடுத்துரைத்து உரையாற்றியதாகவும் ‘தனவைசிய ஊழியன்’ ஏட்டின் 12.05.1925...

சேரன்மாதேவி குருகுலத்தில் பணிபுரிந்தாரா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (10)- கொளத்தூர் மணி

சேரன்மாதேவி குருகுலத்தில் பணிபுரிந்தாரா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (10)- கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் காலத்தில் அவரது கருத்துக்களை நேரடியாக அறிந்து எழுதப்பட்டுள்ள தோழர் இஸ்மத் பாஷா, தோழர் கே.பாலதண்டாயுதம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் பல செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் முதன்மையானது சிராவயல் காந்தி ஆசிரமம் (பள்ளி வாசகசாலை) பற்றியது; அதாவது இந்த ஆசிரமத்தை தோழர் ஜீவானந்தம்தான் உருவாக்கினார் என்ற ஒரு அதீதமாக எழுப்பபட்டுள்ள மாய பிம்பம். தோழர் அ.ப.பாலையன் தொகுப்பாசிரியராக இருந்து தொகுத்த “ஜீவா தேடிய மானுடம்” என்ற நூலின் நான்காம் கட்டுரையான ‘பெரியார் ஜீவா – உறவும் பிரிவும்’ என்ற கட்டுரையில் “ நீண்ட நாட்கள் நடைபெற்ற கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்திலும் ஜீவா பங்கேற்கிறார் (1924) ”, (நூலில் 1924 என கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டு இருந்தாலும் 1924 ஏப்ரல் முதல் 1925 டிசம்பர் வரை போராட்டம் நடந்தது) என்றும் “சேரன்மாதேவி குருகுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜீவா, அங்கு நடைபெற்ற அநீதிக்கு எதிராக போராட்டத்தில் ஈவெரா, வரதராஜர்...

முதல் மொழிப்போரின் பின்னணி!

முதல் மொழிப்போரின் பின்னணி!

இந்தித் திணிப்புக்கான எதிரான தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்தை கதைக்களமாக கொண்டு வெளிவந்துள்ள சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வணிக ரீதியாகவும் பெருவெற்றி பெற்றிருக்கிறது. 1965 மொழிப்போர் குறித்த மாணவர் எழுச்சியை அறிந்துகொள்ள இன்றைய இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் இத்திரைப்படத்தை கண்டு வருவதுடன், பொதுத்தளத்திலும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இந்நிலையில் முதல் மொழிப்போர் குறித்து தினகரன் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் இருந்து… தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக நடந்து வரும் தாய்மொழிக்கான உரிமைப் போராட்டம் – இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்தான். இந்த பரந்த சரித்திரத்தை மூன்றாகப் பிரிக்கலாம். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல்கட்டமாக 1937ல் இருந்து 1940 வரையிலும், இரண்டாவது கட்டப் போராட்டம் 1948 – 1952 வரையிலும் மூன்றாம் கட்டமாக 1965லும் நடைபெற்றது. முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம்: தமிழகத்தையும் சேர்த்து இன்றைய பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கியதுதான் அன்றைய சென்னை மாகாணம். இந்த சென்னை மாகாணத்தில் 1937ல் நடந்த பொதுத்...

ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக ஓயாது பரப்புரை!

ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக ஓயாது பரப்புரை!

ஆகஸ்ட் 01: விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் மதக் கலவரத்தை தூண்டும் சங் பரிவார் அமைப்புகளைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் காவல்துறையிடம் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 03: சேலம் மாவட்டம் மேச்சேரியில் இளைஞர் அணி சார்பில் பெரியார் என்னும் பெரு நெருப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மில்டன், யூ2புரூடஸ் மைனர், இந்திரகுமார் தேரடி கருத்துரை வழங்கினர். கழகத் தலைவர் நிறைவுரையாற்றினார். ஆகஸ்ட் 06: ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும், கவின் படுகொலைக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தரக்கோரியும் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 08: குடியாத்தத்தில் குடிஅரசு மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. ஜாதி மறுப்பு மற்றும் விதவை மறுமணம் செய்துகொண்ட இணையர்கள் இந்நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர். கழகத்தலைவர் சிறப்புரையாற்றினார். ஆகஸ்ட் 09: சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் படத்திறப்பு நிகழ்ச்சி தேவநேயப் பாவாணார் அரங்கத்தில் நடைபெற்றது....

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஆள்பிடித்தாரா பெரியார்?  ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (9) – கொளத்தூர் மணி

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஆள்பிடித்தாரா பெரியார்? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (9) – கொளத்தூர் மணி

தோழர் ஜீவாவால் எழுதப்பட்ட ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூல் 1947 டிசம்பர் முதல் 1948 பிப்ரவரி முடிய மூன்று மாதங்கள் பொதுவுடைமை இதழான ‘ஜனநாயகத்’தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதை நாம் முன்னரே பார்த்தோம். அதில் 1946-இல் நடந்த சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலையொட்டி எழுதப்பட்ட சில செய்திகளை அந்த நூலில் இருந்து எடுத்து, கீழே கொடுத்திருக்கிறோம். “ஜாதி ஒழிப்பு, மதவொழிப்பு விஷயங்களை முக்கியப்படுத்தி திராவிடர் கழகத்தில் நல்ல அபிப்பிராயத்தோடும், பற்றுதலோடும் இருந்த இளைஞர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களைக் கண்டு புத்துணர்ச்சி அடைந்து வந்ததைத் தடுக்க நயமான முறைகளில் சூழ்ச்சி செய்தது. ‘ப.ஜீவானந்தம் நம் ஆள்தான்’ என்றும் ‘கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமக்கும் வித்தியாசமில்லை” என்றும் பொதுவுடைமை ஆர்வமுள்ள வாலிபர்களைத் திராவிடர் கழகம் வலை வீசிப்பிடிக்க முயன்றது” என்கிறார் ஜீவா. ஜீவா எழுதியதை நம்பி ஏற்றுக்கொண்டால், அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது; மக்களின் ஆதரவைப் பெற்று இருந்தது;...

இந்தியை ஆதரிக்கவில்லையா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (8) – கொளத்தூர் மணி

இந்தியை ஆதரிக்கவில்லையா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (8) – கொளத்தூர் மணி

தோழர் பொன்னீலனின் அதே நூலில் “1953 அக்டோபரில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளத்துக்கே உரியன” என்ற கருத்தை கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் வெளியிட்டார். இதை எதிர்த்து அக்டோபர் 14 தாமரை குளத்தில் ஆர்.சோமசுந்தரம் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜீவா இவ்வாறு கூறினார்: “தேவிகுளம் பீர்மேடு சம்பந்தமாக ஸ்ரீ ஏ.கே. கோபாலன் கூறியது அவரது சொந்த கருத்து. கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக கருத்து வெளியிடாமல் இருப்பது வரையிலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் அவர்கள் கூறுவது கட்சியின் முடிவாகாது. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை ‘எல்லைக் கமிஷன் முடிவுக்கு விட வேண்டியது அவசியம்’ இதுதான் கட்சியின் கருத்து” என்று கறாராக அறிவித்து விடுகிறார். வெண்டைக்காய் பதில் ஆனால் ‘சரியில்லாத ஈரோட்டு பாதை’ காட்டிய பெரியாரின் ‘விடுதலை’ ஏடு அதன் 22.11.1955 இதழில் “தேவிகுளம், பீர்மேடு தமிழ் வட்டாரங்களே! சென்னை சட்டசபையில் அமைச்சர் தந்த புள்ளிவிவரம்” என்ற தலைப்பில் செய்தி...

ஜீவாவும் மொழி வழி மாநில சீரமைப்பும் ; ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (7) – கொளத்தூர் மணி

ஜீவாவும் மொழி வழி மாநில சீரமைப்பும் ; ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (7) – கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பலர் எழுதி இருந்தாலும் 1946-இல் வெளிவந்த தோழர் இஸ்மத் பாஷா எழுதிய ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ மட்டும் அவர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த ஒன்றாகும். 1963 ஜனவரியில் முடிவெய்திய தோழர் ஜீவா குறித்து, ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’ என்ற நூல் 1966-ஆம் ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்த அவரது சிலை திறப்பு விழாவில் வெளியிடப்பட்டிருந்தாலும் நூலினை எழுதிய தோழர் கே.பாலதண்டாயுதம் இறுதிக்காலத்தில் ஜீவாவோடு நெருக்கமாக இருந்த ஒருவர் ஆவார். அதில் பதியப்பட்டுள்ள செய்திகள் பெரும்பாலும் ஜீவாவிடம் நேரில் கேட்டு அறிந்து கொண்டதாகவும், ஏற்கெனவே அறிந்ததை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும்தான் இருக்க முடியும். அதில் மொழி வழி மாநிலங்கள் உருவான காலத்தில் வட எல்லையிலும் சென்னை குறித்தும் தெற்கெல்லைப் போராட்டம் குறித்தும் பதிவாகியுள்ள நிகழ்வுகளின் பற்றிய உண்மைத் தன்மையைக் குறித்து திறனாய்வு செய்ய வேண்டியுள்ளது. அந்நூலின் 72 ஆம் பக்கத்தில் உள்ள “தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைய 1949-இல்...

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… எண் 61, வெங்கடாசலம் தெரு, ராயப்பேட்டை என்ற முகவரி கொண்ட ஒற்றைக் குடித்தன வாடகை வீடு, ஒரு உடைந்த நாற்காலி, ஓலைப்பாய், மர பீரோ… பத்ரி நாராயணனுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் அதற்குமேல் இல்லை. ஆனால், அவருடைய கண்ணசைவுக்கே கட்டுப்படும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை 1990-இல் உருவாக்கி வைத்திருந்தார் அவர். 1980-களில் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, பத்தாண்டுகளிலேயே பலமான கோட்டையாக ராயப்பேட்டையை மாற்றிய செயல் வீரர். ராஜீவ் காந்தி படுகொலையில் கைதாகி, 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த எழுவரை, விடுவிக்கக்கோரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டது இன்றைய...

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்கள் மீது இதுவரை அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நிகழ்த்தி வந்த பல்வேறு வகையான உழைப்பு சுரண்டலை சட்டரீதியாக செய்வதற்கான ஒரு ஏற்பாடு புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பாகும். விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாக இந்நாட்டின் உழைக்கும் மக்களும் போராடிப் பெற்ற 29 சட்டங்களையும் நீக்கிவிட்டு அவற்றை நான்கு சட்ட தொகுப்புகள் ஆக சுருக்கி புதிய தொழிலாளர் சட்டங்களை நிறுவியுள்ளது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இந்த சட்டத் தொகுப்பில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்வது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்/ள்களின் கடமையாகும். இந்தச் சட்ட தொகுப்பில் உள்ள சிக்கல்களை சுருக்கமாகப் பார்ப்போம். புதிய சட்டத்தின் சிக்கல்கள்! ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதே தற்போதைய வேலை நேரமாக உள்ளது. புதிய சட்ட தொகுப்பு இதில் ஒரு முக்கிய திருத்தத்தை செய்கிறது. வாரத்திற்கு ஆறு நாள் வேலை என்பது கட்டாயம் அல்ல. மாறாக...

பத்ரி நாராயணன் – இயக்கமாய் ஒரு தனிமனிதன்!

பத்ரி நாராயணன் – இயக்கமாய் ஒரு தனிமனிதன்!

(முரசொலி பாசறைப் பக்கத்தில் ஊடகவியலாளர் பிரகாசு எழுதி வரும் பெரியார் மண் தொடரில், ராயப்பேட்டையை இலட்சியக் கோட்டையாக்கிய கழக செயல் வீரர் மறைந்த பத்ரி நாராயணனின் குறித்து எழுதப்பட்ட கட்டுரை இது) ஒரு தனிமனிதன் வீழ்த்தப்பட்டால் அவர்களின் உடல் இயக்கம் மட்டும்தான் நின்று போகுமே தவிர, அவர்களின் சித்தாந்தம் வீழ்ந்துவிடாது. சிந்தனையாளர்களுக்கு அவர்களின் இறப்பு என்பது ஒருகாலும் மறைவாகாது’ என்பதற்கு திராவிட இயக்கத்தில் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. அதில் தலைநகர் சென்னையின் ஓர் உதாரணம் `பத்ரி நாராயணன்’. 2004-ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருந்தது. `மதமாற்றத் தடைச்சட்டம்’, `ஆடு – கோழி பலியிட தடை’ என ஆர்.எஸ்.எஸ். அரசாகவே மாறியிருந்த அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க ஓரணியில் திரண்டிருந்தன தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகள். சென்னையில் ஏப்ரல் 26-ஆம் தேதியில் இருந்து, தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது பெரியார் திராவிடர் கழகம். ஏப்ரல் 30-ஆம் நாள்...

தமிழர் இயக்கம் உருவானதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5)- கொளத்தூர் மணி

தமிழர் இயக்கம் உருவானதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5)- கொளத்தூர் மணி

“ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களைப் பார்ப்போம். ஈரோட்டுப் பாதையின் 20 ஆண்டுகள் என்ற தலைப்பில், “இன்று ஈரோட்டுப் பாதை திராவிடர் கழகம் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பித்த பொழுது இதற்கு இந்தப் பெயர் இல்லை; கூடு விட்டு கூடு பாய்வதைப் பாய்வது போல பல பெயர்களைத் தாங்கி ஈரோட்டுப் பாதை 20 ஆண்டுகளைக் கழித்து இருக்கிறது. பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமூகச் சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சமதர்ம நாஸ்திக இயக்கம், தமிழர் இயக்கம், திராவிடர் இயக்கம் என்ற பல பெயர்களோடு பாதை காட்டி வந்திருக்கிறார் தன்னைப் பின்பற்றிய தமிழ் மக்களுக்கு ஈரோட்டுப் பெரியார்” என்று எழுதியுள்ளார் ஜீவா. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மார்க்சியர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் ஆகும். வரலாற்றின் தொடக்கத்தில் கிரேக்க தத்துவஞானி ஹிராகிளிடஸ் சொல்லியிருந்தாலும், நவீன வரலாற்றில் பேராசான் மார்க்சும் இதனைச் சொல்லி உள்ளார். ஆனால்...

ஜீவா இந்தியை எதிர்த்தாரா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (4)- கொளத்தூர் மணி

ஜீவா இந்தியை எதிர்த்தாரா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (4)- கொளத்தூர் மணி

ஜீவா இந்தியை ஆதரித்தார் என்று குறிப்பிட்டதற்கு பல பேர் கொதித்தெழுந்து ஆதாரத்தைக் கேட்கத் தொடங்கினார்கள். அது குறித்தும் சில செய்திகளைப் பார்ப்போம். பெரியார் காங்கிரசில் இயங்கியபோது 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியார் பெரியாரின் இல்லத்துக்கு வந்து தங்கி இருந்திருக்கிறார். அப்போது அன்னியத் துணிகள் பகிஷ்கரிப்பு என்ற பெயரால் வெளிநாட்டுத் துணிகள் எரிக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்ததாக 1922-ஆம் ஆண்டில் ஈரோடு பெரியார் இல்லத்திற்கு மோதிலால் நேருவும், டாக்டர் அன்சாரியும் வந்ததன் நினைவாக ஈரோடு வெங்கட்ட நாயக்கர் சத்திரத்தில், ஒரு இந்தி மொழி கற்பிக்கும் பள்ளியை, ஒரு பாதி காங்கிரஸ் செலவிலும், மறுபாதி தமது செலவிலும் நடக்கும் வகையில் தொடங்கியுள்ளார். ஆனால் அதே ஆண்டு இறுதியில் திருப்பூரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் “இந்தியைப் பரப்புவது என்று கூறிக்கொண்டு இந்தியில் உள்ள துளசிதாஸ் இராமாயணத்தை பரப்புவதைக் கண்டித்தும், வருணத்தையும் தீண்டாமையும் காப்பாற்றும் இராமாயணத்தையும் மனுசாஸ்திரத்தையும் எரிக்க வேண்டும்” என்றும் பேசியுள்ளார்....

வாக்குத் திருட்டு அல்ல ஆட்சித் திருட்டு ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு அல்ல ஆட்சித் திருட்டு ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் என்பது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு அரசியலமைப்பு நிறுவனம். இந்நிறுவனம் பக்கசார்பின்றி பொதுவானதாக நடந்து கொள்வதற்காகவே அதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நீதித்துறை, புலனாய்வுத் துறை, தணிக்கைத் துறை என ஒவ்வொரு அரசியலமைப்பு நிறுவனங்களும் தவறாக கையாளப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு நிலவுகிறது. இதில் தேர்தல் ஆணையமும் விதிவிலக்கல்ல. தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க பாஜகாவின் ஏஜென்டாகவே மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக தாக்கி வருகிறார். பாஜகவை வெற்றி பெறச் செய்வதற்காக அக்கட்சியுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குத் திருட்டு நடத்தி வருவதாக குற்றம் சாட்டுகிறார். இதற்கெல்லாம் ஆதாரம் என்ன என தேர்தல் ஆணையம் கேட்டதற்கு, கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை ராகுல் காந்தி...

ஜீவாவை சுற்றி எழுப்பப்பட்ட மாய பிம்பம், ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (3) – கொளத்தூர் மணி

ஜீவாவை சுற்றி எழுப்பப்பட்ட மாய பிம்பம், ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (3) – கொளத்தூர் மணி

காரைக்குடி அருகே உள்ள சிராவயலில் காந்தி ஆசிரமத்தை ஜீவா தோற்றுவித்தார் என்ற செய்தி மிக அழுத்தமாக தமிழ்நாட்டில் பதிய வைக்கப்பட்டுள்ளது. 02.02.2019 விகடன் இணையதளத்தில் “ஜீவாவின் 22 நூல்களுக்கு மேல் தொகுத்த கே. ஜீவபாரதி சிராவயலில் காந்தி – ஜீவானந்தம் நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடம் கோரிக்கை வைத்ததாக” செய்தி காணப்படுகிறது. (முழு உள்ளடக்கங்களைப் பற்றி பின்னர் பார்ப்போம்) அந்த கோரிக்கை இன்றைய அரசால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஜீவா நினைவுக் கட்டடம் ஏறத்தாழ கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அங்கு ஜீவாவின் சிலை ஒன்றும் வைக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் உள்ளன. ஜீவா – சிராவயல் – காந்தி ஆசிரமம் என்ற செய்தியின் உண்மைத் தன்மையைக் குறித்து அறிவது தற்போது தேவையாக்கப்பட்டு விட்டது. இந்தக் கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிடப்பட்ட இஸ்மத் பாஷாவின் ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ (1946) கே.பாலதண்டாயுதம் எழுதிய ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’ (1966) ஆகிய...