Category: சிறப்பு கட்டுரை

“நான் எரிந்து விழுந்த ராக்கெட்”

“நான் எரிந்து விழுந்த ராக்கெட்”

ஜூன் 25, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆவது பிறந்தநாள். இந்தியாவில் முதல்முறையாக அவருக்கு சிலை அமைத்த மாநிலம் தமிழ்நாடு. திராவிட மாடல் அரசு அவருக்கு முழு உருவச்சிலையை நிறுவி தமிழ்நாடு சமூகநீதி மண் என்பதை இந்திய ஒன்றியத்திற்கே உணர்த்தியது. இந்தியாவில் எந்தவொரு வீதிக்கும் வி.பி.சிங் பெயர் சூட்டியதாக வரலாறு கிடையாது. எந்தவொரு அரசுக் கட்டடத்திற்கும் அவர் பெயரை சூட்டியது இல்லை. தமிழ்நாடு மட்டும் தான் அவருக்கு உரிய மரியாதையை வழங்கியது. வி.பி.சிங், மண்டல் அறிக்கையின் ஒரு பகுதியான அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது தான் இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போது ராமன் கோயில் பிரச்சனையை கையில் எடுத்து வி.பி.சிங் அரசை கவிழ்த்தது பாஜக. அந்த நிலையில் தமிழ்நாடு முதல்வராக இருந்த கலைஞர், வி.பி.சிங்கை தமிழ்நாட்டிற்கு அழைத்து பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி, தமிழ்நாடு உங்களின் பின்னால் நிற்கிறது என்பதை வி.பி.சிங்கிற்கு...

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அங்கு அமர்ந்து ஒரு நூலினை வாசித்தபோது… குழந்தைகளை மையப்படுத்திய கொண்டாட்டமான கல்வி அளிப்பதில் சிறந்து விளங்கும் சுவீடன், நார்வே, டென்மார்க், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கல்வி அமைப்பைப் பார்வையிட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த வாரம் சென்றிருந்தார். அந்நாடுகளின் பள்ளிக்கூட வகுப்பறை செயல்பாடுகள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாகக் கவனித்தவர் அது தொடர்பான தகவல்களை சமூக ஊடக பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதில், 75 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சுவீடன் நாட்டில் அனைவரின் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவதை வியப்புடன் பகிர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது. படிப்புக்குப் பசி ஒருபோதும் தடைக்கல்லாக இருத்தலாகாது என்று அரசு பள்ளிக்கூடத்தில் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்து...

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

சமூகச் செயல்பாட்டாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை தொடர்பாகப் பத்தாண்டுகளாக நடைபெற்ற வழக்கில், இருவருக்கு (மட்டும்!) ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பு எழுதிய நீதிபதி பிரபாகர் ஜாதவ், “இந்த இருவர் தங்களுக்கு இடப்பட்ட வேலையைச் செய்து முடித்தவர்கள். ஆனால், அந்தத் திட்டத்தைத் தீட்டியது வேறு யாரோ(வாக இருக்கும்)” என்று குறிப்பிட்டிருந்தார். கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா என்ன? மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்பிவந்தவர் தபோல்கர். மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றில் இருந்தெல்லாம் சமூகம் விடுபட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தானே தபோல்கரைக் குறிவைத்திருக்க வேண்டும்? அந்தச் சூத்ரதாரிகளுக்கு ஏன் தண்டனை கிடைக்கவில்லை? அடுத்தடுத்துப் படுகொலைகள்: தபோல்கரைத் தனது விரோதி என்று வெளிப்படையாக எச்சரித்தவர், வீரேந்திரசிங் சரத்சந்திர தவாதே. இந்நிலையில்தான் 2013 ஆகஸ்ட் 20 அன்று புணே நகரில் காலை நடைப்பயிற்சியின்போது மிகவும் குறுகிய இடைவெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் தபோல்கர். ஆனால், தவாதே உள்ளிட்ட மூவர் போதுமான சாட்சியங்கள் இல்லை...

சமூகப் போக்கைப் புரட்டிப்போட்ட ‘குடிஅரசு’ 100 ஆண்டுகள் ஆகியும் அடங்காத அதிர்வலைகள் – க. இரவிபாரதி

சமூகப் போக்கைப் புரட்டிப்போட்ட ‘குடிஅரசு’ 100 ஆண்டுகள் ஆகியும் அடங்காத அதிர்வலைகள் – க. இரவிபாரதி

(சென்னை மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில், 19.05.2024 அன்று நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பில், காஞ்சிபுரம் மாவட்டக் கழக அமைப்பாளர் தோழர் இரவிபாரதி ‘தமிழ்ச் சூழலில் குடிஅரசு ஏற்படுத்திய அதிர்வலைகள்’ என்னும் தலைப்பில் ஆற்றிய உரை) “நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் பத்திரிகை நடத்துவதை நிறுத்த மாட்டேன், ‘குடிஅரசை’ தொடர்ந்து வெளியிட்டு வருவேன். என் கருத்துக்களை எதிர்வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை” என்ற காத்திரமான எழுத்துக்களுடன் இதழியல் களத்திற்கு வந்தவர் பெரியார். லோகோபகாரி, தேசோபகாரி, தேசபிமானி, ஜனாநுகூலன், சுதேச அபிமானி’, சுதேசமித்திரன், மஹாராணி’, கலாதரங்கிணி இதெல்லாம் அந்தக் காலத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் பெயர்கள். இந்தப் பெயர்கள் எளிதில் உச்சரிக்கக்கூடியதாக இல்லை. பத்திரிகைகள் தமிழில் வந்தன, ஆனால் அதன் பெயர்கள் தமிழில் இல்லை. காரணம் அப்போது மேட்டுக்குடிகளிடம் மட்டுமே இதழியல் இருந்தது. தமிழ் குடிகளுக்காக இதழ் நடத்த...

ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?

ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?

மறைந்து அரை நூற்றாண்டுகள் ஆகிவிட்ட பெரியார்தான் இன்னும் காவிகளை கதற வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், பெரியாருக்கு 12 வயதாக இருக்கும்போதே மறைந்துவிட்ட கால்டுவெலும் தன் பங்குக்கு கதற வைத்துக்கொண்டிருக்கிறார். கால்டுவெல் பெரியாரைப் போல நாத்திகர் இல்லை, பெரியாரைப் போல கடவுள் இல்லவே இல்லை என்று கூறவில்லை. பிறகு ஏன் காவிக்கூட்டம் அவரைக் கண்டு அஞ்சுகிறது என்றால், தனித்துவ ‘தமிழ்’நாட்டுக்கான அடித்தளத்தில் அவருக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. செத்த மொழி சமஸ்கிருதத்தில் இருந்தே இந்திய மொழிகள் அனைத்தும் உருவானவை என்ற ஆரியக் கற்பிதங்களை உடைத்து, சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நிறுவியவர் கால்டுவெல். கால்டுவெல் மீது காழ்ப்புணர்ச்சி ஏன்? உண்மையில் ஆர்.என்.ரவி கூறுவதுபோல இராபர்ட் கால்டுவெல் மதபோதகராகத்தான் சென்னைக்கு வந்திறங்கினார். ஆனால் அதனால்தான் ஆர்.என்.ரவி வகையறாக்களுக்கு கால்டுவெலின் மீது கோபம் என்றால் அது பெரும் நகைப்புக்குரியது. இன்றைக்கும் இந்தியாவில் கிருத்தவர்களின் மக்கள்தொகை என்பது 2.3%-ஆக மட்டுமே உள்ளது. இந்து மதத்தில் இருந்து...

வாலிபர்களே தயாராய் இருங்கள்!

வாலிபர்களே தயாராய் இருங்கள்!

பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. 02.05.2024 இதழின் தொடர்ச்சி… இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் மறைந்து விடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும்; தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால் போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம். அதாவது பண்டிகைக்காக ஓய்வெடுத்துக்கொண்ட மக்கள் பலர் கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ விளையாடும்போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவதுபோல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக்கும் உயிருள்ளவரை இருந்து தான் தீரும். “சரீரமில்லாத ஆத்மாவுக்கும் கண்ணுக்குத் தெரியாத சூட்சம சரீரத்திற்கும்” கூட “மோட்சமும்” “முக்தியும்” கற்பித்திருப்பதில் ஜீவனுக்கு வேலை யில்லாமலும் அநுபவமில்லாமலும் மோட்சம் – முக்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருந்து...

“திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்

“திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்

பெரியார் சிந்தனையை இலக்கியமாக்கியவர் புரட்சிக்கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி புதுவையில் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி. 1928 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் மாயவரத்தில் பெரியாரும், டாக்டர் வரதராசலு நாயுடும் பேசுவதாக அறிந்த பாரதிதாசன் ஒரு காங்கிரசுக்காரராக – சைவ பக்திமானாக அக்கூட்டத்திற்குச் சென்று மாற்றம் பெற்று அன்றோடு கடவுள், மதம் ஆகியவற்றைப் பாடுவதை விட்டுவிட முடிவெடுத்துக் கொண்டார். எதையும் ஏன், எதற்கு என்று பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து தனக்கு சரியெனப்பட்டதை ஏற்றுக் கொள்க என்று பெரியார் கூறியது கவிஞருக்கு மிகவும் பிடித்தது. அதிலிருந்து பெரியார் கொள்கையை தனது பாடல்களின் கருப்பொருளாக பயன்படுத்தி பாடல்களை எழுதினார். 1928 இல் கருத்தடைப் பற்றி முதன் முதலாகப் பெரியார் கூறியதை 1936 இல் ‘காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்’ எனப் பாட்டால் வழி மொழிந்த முதற் கவிஞர்...

சுயமரியாதை இயக்கம் ஏன்? எதற்காக? – 1- பெரியார்

சுயமரியாதை இயக்கம் ஏன்? எதற்காக? – 1- பெரியார்

பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925இல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால் தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும். எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சி யடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ (எனக்கு...

பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்? – ர.பிரகாசு

பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்? – ர.பிரகாசு

(நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் சார்பில் 14.04.2024 அன்று திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 20-வது கூட்டத்தில் ர.பிரகாசு ஆற்றிய உரை) பாரதமா அல்லது இந்தியாவா? என்கிற விவாதத்தில் நாம் எந்த பக்கம் நிற்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது. அதனால்தான் பாரதமும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் என்ற தலைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன். தனித் தமிழ்நாடு கொள்கையைக் கொண்ட திராவிட இயக்கம் இந்தியா பக்கம் நிற்க வேண்டிய தேவை எங்கே எழுகிறது என்ற கேள்வியை சிலர் முன்வைக்கிறார்கள். ம.பொ.சி.-யை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற தமிழ்தேசியர்களிடம் இருந்தே இக்கேள்வி பெரும்பாலும் எழுகிறது. தெற்கெல்லை போராட்டத்தில் பெரியார் எடுத்த நிலைப்பாடுதான் இதற்கும் சரியான பதிலாகும் என்று கருதுகிறேன். தேவிக்குளம், பீர்மேடு என்ற 2 பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென்ற போராட்டம் எழும்போது, முதலில் தட்சணப் பிரதேசத்தில் இருந்து நாம் தமிழ்நாட்டைக் காக்க வேண்டுமென்று பெரியார் கூறினார். அதாவது, முதலில் தலையைக் காப்போம், பிறகு தலைப்பாகையை காப்போம் என்பது...

தோல்வி பயத்தில் தரம்தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி? தகுதி நீக்கம் செய்யுமா தேர்தல் ஆணையம்!

தோல்வி பயத்தில் தரம்தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி? தகுதி நீக்கம் செய்யுமா தேர்தல் ஆணையம்!

10 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் நரேந்திர மோடி, சாதனைகளைச் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க முடியாத அவலத்தில் இருக்கிறார். பணமதிப்பழிப்பு கொண்டு வந்து பல லட்சக் கணக்கானோரை வரிசையில் நிற்க வைத்து, அதில் ஆயிரக்கணக்கானோரை உயிரிழக்க வைத்ததுதான் பாஜக ஆட்சியின் சாதனை. ஜிஎஸ்டியை திணித்து பல்லாயிரக்கணக்கான சிறு குறு நிறுவனங்களுக்கு பூட்டுப் போட வைத்ததுதான் பாஜக அரசின் சாதனை. பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக வேளாண் சட்டங்களை திருத்தியமைத்து விவசாயிகளின் பெருங் கோபத்தை பெற்றதுதான் பாஜக அரசின் சாதனை. கொரோனா பேரிடரில் கொத்து கொத்தாக மக்கள் செத்து கொண்டிருந்தபோது வாசலில் நின்று கை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்று சொன்னதுதான் பாஜக அரசின் சாதனை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் தருகிறோம் என்று உறுதியளித்துவிட்டு, இருக்கிற வேலைகளையும் பறித்ததுதான் பாஜக அரசின் சாதனை. சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்டு, எல்லோர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருகிறோம் என்று...

விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா – கொளத்தூர் மணி

விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா – கொளத்தூர் மணி

கோவை மாவட்டக் கழக சார்பில் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை :- 14.03.2024 இதழின் தொடர்ச்சி… கலை வடிவத்தை விரிவுபடுத்தினார் அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றியபோது பெரியாருக்கும், அவருக்கும் உண்டான மொழி நடை, உரை ஆகியவை வேறுபட்டிருந்தது. அண்ணாவின் வருகைக்கு பிறகு திராவிடர் கழகத்தில் கலை வடிவம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. திராவிட நடிகர் சங்கம், திராவிட நாடக சபை மூலமாக நாடகங்களை அரங்கேற்றினார்கள். அண்ணா எழுதிய சில முக்கியமான நூல்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம். இந்து ராஜ்ஜியம் அமைந்தால் என்ன பலன் ஏற்படும் என்பதுதான் அந்த நாடகத்தின் கரு. சிவாஜி பெரிய வீரன், மராட்டியத்தையே வெற்றிகொண்டான். ஜோதிபாபூலே போன்றோர் மராட்டியத்தின் அடையாளமாக சிவாஜியைப் போற்றினார்கள். சங் பரிவார கும்பல் இந்துக்களின் எழுச்சி சின்னமாக சிவாஜியை மாற்றிவிட்டனர். ஆனால்...

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

கர்நாடக இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்குவதாக மியூசிக் அகாடெமி அறிவித்தவுடன்இரண்டு பெண் பார்ப்பன கர்நாடக இசைக் கலைஞர்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். மியூசிக் அகாடெமி சங்கராச்சாரிகளை எதிர்க்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எப்படி விருது வழங்கலாம் என்று மியூசிக் அகாடெமியின் தலைவர் முரளி அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதோடு டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்கும் இசை மாநாட்டை தாங்கள் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்து ள்ளனர். அகாடெமியின் தலைவருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தை முகநூலிலும் வெளியிட்டுள்ளனர். இதற்கு அகாடெமியின் தலைவர் முரளி, நாங்கள் விருது வழங்குவதற்கு ஒருவரது இசைத் திறமையைத் தான் மதிப்பிடுகிறோமே தவிர அவர் எந்த கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதின் அடிப்படையில் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார். எனக்கு எழுதியுள்ள கடிதத்தை எப்படி முகநூலில் வெளியிட்டீர்கள். உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டு மியூசிக் அகாடெமி தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் அகாடெமியின் தலைவர் முரளி. இதற்காக நாம் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்....

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகின

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகின

தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடித் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட எஸ்.பி.ஐ.-க்கு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு பத்திரங்களை வாங்கின, எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற விவரங்களை எஸ்.பி.ஐ. மார்ச் 13ஆம் தேதி வெளியிட்டது. 2018ஆம் ஆண்டிலேயே தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்திருந்தாலும் 2019 ஏப்ரல் 12 முதல் நடப்பாண்டு ஜனவரி 11ஆம் தேதி வரையிலான விவரங்கள் மட்டுமே முதலில் வெளியிடப்பட்டன. எஸ்.பி.ஐ. தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டு, அதற்கு அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தலையில் கொட்டிய பின்பே, இந்த அரைகுறை விவரங்களும் வெளியிடப்பட்டன. தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் பாஜகவை காக்கும் நோக்கிலேயே எஸ்.பி.ஐ. செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதற்கேற்ப, எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் நிதி கொடுத்தது என்பதை கண்டுபிடிப்பதை தடுக்க தேர்தல் பத்திரத்தின் எண் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,...

காங்கிரசின் வாக்குறுதிகளை வரவேற்போம்!

காங்கிரசின் வாக்குறுதிகளை வரவேற்போம்!

தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாயை ‘திராவிட மாடல்’ திமுக அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் இத்தகைய திட்டம் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டது. நேரடியாக மக்களிடத்தில் பணத்தை வழங்குவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் தூண்டி விடப்பட்டு, பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது என்றும், சாமானிய மக்களின் சமூகப் பொருளாதார ஏற்றத்துக்கு தூண்டுகோலாக இருக்கிறது என்றும் இருக்கிற பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்பு, இத்திட்டமே பிச்சை போடுவது என மிக அநாகரீகமாகப் பேசி, மக்களிடத்தில் எதிர்ப்பைப் பெற்றிருக்கிறார். ஒரு திட்டம் சிறப்பாக இருந்தால் மட்டுமே அதைப் பார்த்து மற்ற மாநிலங்களிலும் பின்பற்றுவார்கள். தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்தை டெல்லி, கர்நாடகா போன்ற அரசுகளும் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளன. சில மாநிலங்களில் பாஜகவே இதை காப்பியடித்து தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருக்கிறது. அதையும் ‘பிச்சை’...

எழுதிய தீர்ப்பை திருத்துவதுதான் சனாதன தர்மமா? நீதிபதி அனிதா சுமந்துக்கு குவியும் கண்டனம்

எழுதிய தீர்ப்பை திருத்துவதுதான் சனாதன தர்மமா? நீதிபதி அனிதா சுமந்துக்கு குவியும் கண்டனம்

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் சனாதனத்திற்கு எதிராக பேசியது சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பதற்காக அந்த தீர்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். இந்த தீர்ப்பின் நகல் கடந்த மார்ச் 7ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. திடீரென்று அடுத்த தினமே அந்த தீர்ப்பு இணையதளத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. மார்ச் 9 ஆம் தேதி பல்வேறு திருத்தங்களுடன் அந்த தீர்ப்பு மீண்டும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சனாதனம் பற்றிய கருத்துக்கள் அதில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சனாதனம் பற்றி குப்புசாமி சாஸ்திரியின் ஆய்வு மையத்தில் உள்ள பேராசிரியரின் கருத்தை நீதிமன்றம் கேட்டதாகவும், அவர்கள் தந்த விளக்கத்தின் அடிப்படையில் “சனாதன தர்மம் பிராமண – வைசிய – சத்திரிய – சூத்திர வர்ணாசிரம தர்மத்திற்கு எந்தத் தொடர்பும் கிடையாது, சனாதன தர்மம் வாழ்க்கையின் விழுமியங்களை பேசுகிறது. அது...

சனாதனத்தை வேரறுக்க பாடுபட்டவர் அய்யா வைகுண்ட சுவாமிகள்

சனாதனத்தை வேரறுக்க பாடுபட்டவர் அய்யா வைகுண்ட சுவாமிகள்

வள்ளலார், திருவள்ளுவர் என சனாதனத்துக்கு எதிராக, சமத்துவத்தைப் பேசிய தமிழின் பெருமைக்குரிய தலைவர்களை எல்லாம் ‘சனாதனவாதிகள்’ என திரிபுவாதம் செய்கிற வேலையை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துகொண்டே இருக்கிறார். அந்த வரிசையில் இப்போது அய்யா வைகுண்ட சுவாமிகளையும் சேர்த்திருக்கிற ஆர்.என்.ரவி, “சனாதன தர்மத்துக்கு புத்துயிர் ஊட்டி வளப்படுத்தியவர் அய்யா வைகுண்டர்” என்று கூறியிருக்கிறார். அய்யா வைகுண்ட சுவாமிகளை இழிவுபடுத்துகிற ஆர்.என்.ரவியின் இப்பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள், தலைவர்களிடம் இருந்து கண்டனம் வலுத்து வருகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்ட சுவாமிகளைப் பற்றி 2018ஆம் ஆண்டு மே மாதம் நிமிர்வோம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகளை தருகிறோம். ஜாதி தீண்டாமை பார்ப்பனிய எதிர்ப்புடன் தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்பே 1833இல் இயக்கம் தொடங்கியவர் வைகுண்டசாமி. அவர் வாழ்ந்த குமரிப் பகுதி அன்றைக்கு திருவிதாங்கூர் இராஜ்யத்திலிருந்தது. அதனை அப்பொழுது ஆண்டு வந்தவர் சுவாதித் திருநாள் மகாராஜா, சங்கீத விற்பன்னர்கள் இன்றளவும் போற்றிப் புகழுகிற இந்த மன்னரின் ஆட்சியில்...

200 நிறுவனங்களில் ஓ.பி.சி. எஸ்.சி-க்கு சொந்தமாக ஒன்றுகூட இல்லை : ராகுல் காந்தி

200 நிறுவனங்களில் ஓ.பி.சி. எஸ்.சி-க்கு சொந்தமாக ஒன்றுகூட இல்லை : ராகுல் காந்தி

‘நாட்டின் மக்கள்தொகையில் 73 விழுக்காடு பேர் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தாலும், முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட அவர்களுக்கு சொந்தமானதாக இல்லை’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிப்ரவரி 18ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எக்ஸ்ரே. அதுதான் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும். சாதிவாரி கணக்கெடுப்பு இளைஞர்களின் ஆயுதம். அதன்மூலம் தான் உங்கள் மக்கள்தொகை என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். நாட்டின் செல்வத்தில் உங்கள் பங்கு என்ன என்பதை அறிய முடியும். தற்போது நாட்டில் ஓ.பி.சி. வகுப்பினர் 50 விழுக்காடு, தாழ்த்தப்பட்டவர்கள் 15 விழுக்காடு, பழங்குடியினர் 8 விழுக்காடு உள்ளனர். இவர்களின் மொத்த மக்கள் தொகை 73 விழுக்காடு. ஆனால் நாட்டில் உள்ள முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட ஓ.பி.சி. அல்லது தாழ்த்தப்பட்ட...

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

(08.02.2024  இதழில்   வெளியான உரையின் தொடர்ச்சி) 1892-இல் ஆங்கிலக் கல்வி வந்தபோது சென்னை மாகாணத்தில் சர்வீஸ் கமிசன் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த 1892-க்கும் 1904-க்கும் இடையில் அய்.சி.எஸ். அதிகாரிகளாக 16 இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் 15 பேர் பிராமணர்கள். அந்த காலகட்டத்தில் ஆளுநர் நிர்வாக கவுன்சிலில் 3 இந்தியர்கள், அதில் இருவர் பிராமணர்கள். 1900-ஆம் ஆண்டு ஐந்து பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். அதில் நால்வர் பிராமணர்கள். 1907-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்களாக 12 நியமிக்கப்பட்டனர். அதில் 11 பேர் பிராமணர்கள். அவர்கள் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கக்கூடாது என்று கூறி அதை எடுத்துவிட்டனர். அதற்குப் பின்னர் ஆட்சியமைத்த பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி காலத்தில்தான் தமிழ் மீண்டும் கொண்டுவரப்பட்டது. திராவிடம் என்ற சொல் 7ஆம் நூற்றாண்டில் குமரில பட்டர் எழுதிய தாந்திர வார்த்திகா என்பதில் ஆந்திரா திராவிட பாஷை என்று வருகிறது. இந்த மண்ணில்...

பாஜகவின் மோசடிகளை தோலுரிக்க பெரியார் தேவைப்படுகிறார் –  ஆளூர் ஷா நவாஸ்

பாஜகவின் மோசடிகளை தோலுரிக்க பெரியார் தேவைப்படுகிறார் – ஆளூர் ஷா நவாஸ்

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு வட சென்னை மாவட்டக் கழகம் சார்பில் 20.12.2023 புதன்கிழமை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உரை பின்வருமாறு :- நினைவுநாள் என்பது வருடத்தில் ஒருநாள், ஆனால் நினைவுநாளில் மட்டும் நினைவுகூறப்பட வேண்டிய தலைவரல்ல பெரியார். எந்நாளும் நமக்கு அவருடைய நினைவுநாள்தான். பெரியாரை நீக்கிவிட்டு அல்லது பெரியாரை மறந்துவிட்டு அல்லது பெரியாரை நினைக்காமல் இருந்துவிட்டு நம்மால் இந்த சமூகத்தில் நடமாடவே முடியாது. அந்தளவுக்கு இங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு மகத்தான தலைவர் பெரியார். அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள், அவதூறுகள், போலியான சித்தரிப்புகள் என இவற்றின் ஊடாக நாளுக்கு நாள் பெரியார் அதிகம் வாசிக்கப்படுகிறார். நினைவுகூறப்படுகிறார், இந்த தலைமுறையின் மத்தியில் அவர் உயர்ந்து கொண்டே செல்கிறார். அப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தி கொண்ட ஒரு தலைவர் பெரியார். காந்தியை எதிர்த்தார்,...

பெரியார் தமிழுக்கு எதிரியா?

பெரியார் தமிழுக்கு எதிரியா?

1956ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ் ஆட்சிமொழி மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஒட்டி, 28-ஆம் தேதி விடுதலையில் வெளியான தலையங்கம்… “சட்டம் மட்டும் போதாது” இனித் தமிழ்தான் ஆட்சி மொழியாயிருக்கும் என்று திரு. காமராசர் ஆட்சியின் முயற்சியினால் தமிழ்நாடு சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. சட்டசபை உறுப்பினர்களையும் மந்திரி சபையையும் பாராட்டுகிறோம். இச் சட்டத்தை இக்கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமென்று பிடிவாதமிருந்த முதலமைச்சர் திரு.காமராசர் அவர்களையும் பாராட்டுகிறோம். ஆனால் இச்சட்டத்தை நிறைவேற்றினால் மட்டும் போதாது. இதை உடனடியாக நடைமுறையில் கொண்டுவர வேண்டும். நிர்வாகத்துக்குரிய எல்லா இங்கிலீஷ் சொற்களுக்கும் நேரான தமிழ்ச்சொற்கள் கிடைக்கும்வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. தெரியாத சொற்களை இங்கிலீஷிலேயே கலந்து எழுதலாம். இடைக்காலத்தில், ஒருசில மாதங்கள் வரையில், “மணிப்பிரவாள” நடையில் எழுதுவதனால் ஒன்றும் தவறில்லை. மனிதனின் கருத்தைத் தெரிவிப்பதற்குத்தானே மொழி? காஃபி, ஃபவுண்டன் பேனா, சைக்கிள், பேனா, டெலிபோன், காலெண்டர், மோட்டார் கார், ஃபோட்டோ, தர்மாஸ் ஃபிளாஸ்க் போன்ற பல சொற்களை...

ட்ரெண்டிங்கில் பெரியார்

ட்ரெண்டிங்கில் பெரியார்

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்றி உருவம் போல பெரியாரை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரப்பப்பட்டது. அந்த படத்தைப் பார்த்தால் பெரியாரியவாதிகளின் மனம் புண்படும், அதில் ஆனந்தமடையலாம் என்று கருதி எவரோ பரப்பியிருக்கிறார். ஆனால் நடந்ததோ வேறு. “இந்த படம் அழகாக இருக்கிறது, படத்தை வரைந்தவருக்கு பாராட்டுக்கள், பெரியார் இருந்திருந்தால் அவரும் நிச்சயம் பாராட்டியிருப்பார். ஆடு, மாடு, கோழி, சிங்கம், புலி போன்ற மற்ற விலங்குகளைப் போல பன்றியும் ஒரு விலங்கு. அந்த விலங்கைப் போல பெரியாரை சித்தரித்தால் அதில் என்ன அவமானம் இருக்கிறது? அப்படியானால் விஷ்ணுவின் வராக அவதாரமும் இழிவானது தானா?” என பெரியாரியவாதிகள் எழுப்பிய கேள்விகள் சமூக வலைத்தளங்களை 2 நாட்கள் ஆக்கிரமித்துவிட்டன. வாய்ப்பை ஏற்படுத்தியாவது பெரியாரை அவ்வப்போது டிரெண்டிங்கில் வைத்துவிடுகிறார்கள் கொள்கை எதிரிகள். “எனக்கு விளம்பரமே எனது எதிரிகள்தான்” என பெரியார் சொன்னது அவர் மறைந்து அரைநூற்றாண்டுகள் ஆகியும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது....

பகுத்தறிவை போதித்த கலைஞரின் கலைப் படைப்புகள்

பகுத்தறிவை போதித்த கலைஞரின் கலைப் படைப்புகள்

(கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  நீர்வளத்துறை வெளியிட்டுள்ள மலரில் “பகுத்தறிவு சீர்த்திருத்தச் செம்மல்” என்ற தலைப்பில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை) கடந்த இதழின் தொடர்ச்சி… மக்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கிற மூட நம்பிக்கைகள், புராணங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கிற ஆபாசங்களை எழுதியெல்லாம் ஆதாரப்பூர்வமாக விளக்கி, ‘சோ’ அதற்கு மறுப்பே எழுத இயலாத அளவுக்கு பகுத்தறிவுச் சுடராக மிளிர்ந்தவர் கலைஞர். இந்தியாவில் வேறெந்த தலைவர்களுக்கும் தோன்றாத, சமத்துவபுரம் என்ற மாபெரும் திட்டம் கலைஞரின் எண்ணத்தில் உதித்து செயல்வடிவம் பெற்றதுதான் அவரது பகுத்தறிவின் ஆற்றலுக்கான உச்சபட்ச சான்று. ஊர், சேரி, அக்ரகாரம் என மூன்றாய் பிரிந்து கிடக்கும் சமூகக் கட்டமைப்பை தகர்த்து, சமன்படுத்தும் முன்முயற்சியை செய்ய வேண்டுமென்று தேர்தல் அரசியலில் எவருக்குமே தோன்றவில்லை, கலைஞருக்கு மட்டும்தான் தோன்றியது. அதற்கான முன்மாதிரியாக பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், உயர்ஜாதியினர் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக வாழும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை கட்டியெழுப்பினார். அதிலும் ஆழமாக...

ஜாதி பேதமும் வர்க்க பேதமும் வேறு வேறல்ல! – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

ஜாதி பேதமும் வர்க்க பேதமும் வேறு வேறல்ல! – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

டிசம்பர் 16-ஆம் தேதி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடந்த அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கத்தின் 5-வது அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு கழகத் தலைவர் ஆற்றிய உரை. பொதுவுடமை இயக்கங்கள் ஜாதியின்பால் தன் கருத்தைத் திருப்புமா என்ற எண்ணம் பல வேளைகளில் இருந்திருக்கிறது. அதுகுறித்த விவாதங்களும் கூட இருந்திருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்கூட எம்.சி.பி.அய் கட்சியினர் (யுனைடெட்) என்னிடம் வந்து பெரியார் நினைவுநாளை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் “மார்க்சியத்தின் மீதான எங்கள் விமர்சனங்கள்” என்ற தலைப்பில் நீங்கள் உரையாற்ற வேண்டும் என்று கேட்டனர். மார்க்சியர்கள் எப்போதுமே உலக நடப்புகளை துல்லியமாகக் கணித்து அதற்கேற்ப தங்கள் வரையறைகளை, செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ளும் பண்பு கொண்டவர்கள். ஜாதிய சிக்கல்களை கையிலெடுக்கிற மார்க்சிய இயக்கங்கள் அண்மைக்காலங்களில் பல இயக்கங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்குமுன்புவரை ஏன் இவ்வளவு காலம் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு வலுவான இயக்கத்தை முன்னெடுக்கவில்லை என்ற ஏக்கம்...

வள்ளுவருக்குப் பூணூல் போடுவதைத் தடுத்த கலைஞர்

வள்ளுவருக்குப் பூணூல் போடுவதைத் தடுத்த கலைஞர்

(கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  நீர்வளத்துறை வெளியிட்டுள்ள மலரில் “பகுத்தறிவு சீர்த்திருத்தச் செம்மல்” என்ற தலைப்பில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை) பகுத்தறிவு என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று கலைஞர் கொடுத்த விளக்கத்தில் இருந்தே இந்த கட்டுரையை தொடங்கலாம் என்று கருதுகிறேன். “எல்லாவற்றையும் பகுத்தறியத்தான் பகுத்தறிவு. கடவுள் உண்டா இல்லையா என்று ஆராயக் கூட பகுத்தறிவு தேவைப்படுகிறது. சிந்திக்கிற, பகுத்தறிகிற ஆற்றலைப் பெற்றதால்தான் மனிதன் மற்ற உயிரினங்களை விட மேலானவனாக மனிதன் கருதப்படுகிறான். அப்படிப்பட்ட அந்த ஆற்றலை எதிர்கால சமுதாயம் வாழ்வதற்குப் பயன்படுத்த வேண்டும்.”  1.1.81 அன்று சென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டை தொடங்கிவைத்து கலைஞர் குறிப்பிட்டவை இவை. எழுத்தாளர், பத்திரிகையாளர், வசனகர்த்தா, அரசியலாளர், கவிஞர், பாடலாசிரியர் என கலைஞருக்கு பன்முக அடையாளங்கள் இருந்தாலும், தன்னை அவர் எவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டார் என்பதில் இருந்துதான் கலைஞரின் வரலாற்றை அணுக வேண்டும். “5 முறை முதல்வராக இருந்தேன், 50 ஆண்டுகாலம் திராவிட...

இராமாயணம் ஆரிய – திராவிடப் போர்

இராமாயணம் ஆரிய – திராவிடப் போர்

“ஆரியர்களால் தோற்கடிக்கப் பட்ட எதிரிகளாகிய திராவிடர் களை, தங்களின் புத்தகங்களில் திராவிடர்கள் – தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்” “ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெருப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுக சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.” (சி.எஸ்.சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ்.ராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திர முதல் பாகம் எனும் புத்தகத்தில் ‘இந்து இந்தியா’ எனும் தலைப்பில் 16,17வது பக்கங்களில்) பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

ஆட்சி அதிகாரம் : அம்பேத்கர் பார்வை என்ன? – கொளத்தூர் மணி

ஆட்சி அதிகாரம் : அம்பேத்கர் பார்வை என்ன? – கொளத்தூர் மணி

நாம் புரட்சியாளர் அம்பேத்கரை, அவரின் கொள்கைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது அவரது ‘ஜாதி ஒழிப்பு’ நூல். லாகூர் மாநாட்டில் அவர் ஆற்ற இருந்த உரையை நூலாக வெளியிட்டார். நூல் வெளி வந்த இரண்டாம் மாதத்தில், அம்பேத்கரின் அனுமதியோடு தமிழில் பெரியார் வெளியிட்டார். அந்த நூல் தாங்கியிருந்த சிந்தனையைதான் பெரியாரும் கொண்டிருந்தார். அரசியல் நிலைபாடுகளில் இருவருக்கும் சிறு சிறு மாற்றங்கள் இருந்திருக்கலாம். அம்பேத்கர் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார். பெரியார் தனித் தமிழ்நாடு பேசினார். இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். பெரியார் இந்தி கூடாது என்று சொன்னார். அரசியல் நிலைகளில் அவரவர்களுக்கு இருந்த கருத்தின் அடிப்படையில் சொன்னார்கள். தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பை பிற சாதியினர் வாழும் பகுதிகளில் நிறுவ வேண்டும் என்பது பெரியாரின் கருத்தாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு வெட்ட காங்கிரஸ் நிதி அனுப்பியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் வந்த நாற்பத்தி...

மோடி ஆட்சி இஸ்ரேலை ஆதரிப்பது ஏன் (5) இந்தியாவில் பார்ப்பனர்கள், அமெரிக்காவில் யூதர்கள் – விடுதலை இராசேந்திரன்

மோடி ஆட்சி இஸ்ரேலை ஆதரிப்பது ஏன் (5) இந்தியாவில் பார்ப்பனர்கள், அமெரிக்காவில் யூதர்கள் – விடுதலை இராசேந்திரன்

1968-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட நிக்சன், ஹம்ப்ரி இருவருமே யூதர்களின் ஆதரவுக்கு வலைவீசினார்கள். தேர்தல் செலவுக்குப் பெருந்தொகையை யூதர்களிடமிருந்து பெறுவதே இதன் நோக்கம். ஹம்ப்ரிக்குத்தான் யூதர்கள் ஆதரவு கிடைத்தது. 85 சதவீத யூதர்களின் வாக்கு ஹம்ப்ரிக்குக் கிடைத்தும், அவரால் வெற்றி பெற முடியவில்லை! நிக்சன் வெற்றி பெற்றுவிட்டார். அரபு – இஸ்ரேல் பிரச்சனைக்கு நியாயமான முறையில் அமைதித் தீர்வு ஒன்றை உருவாக்க விரும்பி, 1967-க்குப் பிறகு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை, அரபு நாடுகளிடம் திரும்ப ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கினார். யூதர்கள் நிக்சனை மிரட்டத் துவங்கினர். யூத அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரட்டி, வலிமையான போராட்டங்களில் இறங்கின. எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல் நிக்சன் திணறினார். 1970 மார்ச்சில் – பிரான்ஸ்அதிபர் அமெரிக்கா வந்தபோது, அவரது அரபு ஆதரவுக் கொள்கைகளை எதிர்த்து யூத அமைப்புகள் போராட்டம் நடத்தின. அமெரிக்க – பிரான்ஸ்உறவு சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காக, பிரான்ஸ்அதிபரிடம் நிக்சன் மன்னிப்புக் கோரினார். இதற்காக...

“தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை” – பெரியார் அறிக்கை

“தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை” – பெரியார் அறிக்கை

1970ஆம் ஆண்டில் “தமிழ்ப் பாடமொழித் திட்டத்தை” கலைஞர் அமல்படுத்தியபோது அதனை வரவேற்று பெரியார் அளித்த அறிக்கை. தமிழ்நாட்டில் வீழ்ச்சி அடைந்த காங்கிரஸ் இயக்கம் தலை எடுக்க, வளர நான் காரணமாக இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டு  நீதிக்கட்சித் தலைவரானதன் காரணமே பார்ப்பனரல்லாத தமிழர்களின் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக ஆக்குவதற்காகவேயாகும். அதற்காக அன்றிலிருந்து இன்றுவரை நான் ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறியும் ஒரு நிமிடமும் ஓய்வு கொள்ளாமல் பணியாற்றிக்கொண்டுள்ளேன். லட்சியங்களில் வெற்றி பலருக்குக் கிடைத்தது போல், எனக்கு இளமைக் காலத்தில் கிடைக்காவிட்டாலும் எனது முதுமைக் காலத்திலாவது கிடைத்தது என்பதற்கு அடையாளமாகத்தான் என்னோடு  இருந்து  வளர்ந்தவர்களால்  ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்ப் பாட மொழி என்ற யுத்த தளவாடம்: இந்த ஆட்சியுனுடைய சாதனைகளில் எந்தவித ஓட்டை உடைசல்களையும் குறிப்பிட்டுக்காட்டி எதிர்க்கமுடியாமல்  தமிழ்ப் பாட மொழிப் பயற்சியைத் தங்கள் யுத்த தளவாடமாக எடுத்துக்கொண்டு, ஆச்சாரியாருடைய சுதந்திராக்கட்சியும், ஆரிய ஏடுகளும் இந்த ஆட்சியைக்...

நிர்மலாவின் பொய்யுரைகளுக்கு அமைச்சர் பதில்

நிர்மலாவின் பொய்யுரைகளுக்கு அமைச்சர் பதில்

சென்னை மேற்கு மாம்பலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014-2023 வரை ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு வழங்கிய வரி ரூ.6.23 இலட்சம் கோடி. ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.6.96 கோடி. தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட கூடுதலான நிதியினை நாங்கள் வழங்கிவருகிறோம் என்று உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்துள்ளார். அதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக அரசு, கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.4000, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை, நிறைவேற்றவே முடியாது என்று எதிரிகளால் விமர்சிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசாக ரூ.1000 என ஒன்றிய அரசின் எந்தவித ஒத்துழைப்புமின்றி தமிழ்நாடு அரசு தொடர்ந்து தனது திட்டங்களை செயல்படுத்திவருகிறது....

பேராபத்து சட்டங்களுக்காக ஜனநாயகப் படுகொலை –   எட்வின் பிரபாகரன்

பேராபத்து சட்டங்களுக்காக ஜனநாயகப் படுகொலை – எட்வின் பிரபாகரன்

வரலாற்றில் இல்லாத வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் 11 கட்சிகளின் 140 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.மோடிக்கு எதிராக, நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருதி, பதாகைகளை ஏந்தி வந்ததற்காக இந்த அக்கிரம நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. INDIA கூட்டணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல்,  சங்கிகள் செய்த வெறிச்செயல் இதுவாகும். இனி நம்முடைய நாடாளுமன்றம் வடகொரிய நாடாளுமன்றத்தைப் போல இருக்கப் போகிறது என கார்த்தி சிதம்பரம் (காங்) விமர்சித்துள்ளார். எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு பல்வேறு சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஒன்றிய சனாதன அரசு, எந்த எதிர்ப்புக்கும் இடமின்றி நிறைவேற்றி உள்ளது. இதை மணிஷ் திவாரியும் (காங்) குறிப்பிட்டுப் பேசியுள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இரங்கல் உரை எழுத வேண்டிய நிலையில் இருக்கிறோம் என சசி தரூர் (காங்) கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. உண்மையை பேசுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக சுஷில் குமார் ரிங்கு (ஆம்ஆத்மி) கண்டித்துள்ளார். தன்னுடைய கூர்மையான கேள்விகளால் பாஜகவினரை துளைத்து வந்த,...

பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிப்போம் – ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ

பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிப்போம் – ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ

(28.12.2023 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி) ஒன்றிய அரசின் எந்தவொரு உயர் பொறுப்புகளிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புச் சார்ந்தவர்கள் கிடையாது என்று ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் கூறுகிறது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், இராணுவம் என ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் முற்பட்ட வகுப்பினர்தான் நிறைந்துள்ளனர். இந்த நாட்டின் அதிகாரம் முழுமைக்கும் இன்றைக்கு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு செல்லும்போது பெரியார் ஏன் இது உண்மையான விடுதலை கிடையாது, அதிகாரம் கைமாறி இருக்கிறது என்று கூறினார்? ஆங்கிலேயரிடமாவது நம் உரிமைகளைப் போராடி பெற்றுவிடலாம் என்று பெரியார் கூறினார். சுதந்தர நாளை துக்கநாளாக அறிவித்தவர் பெரியார். விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகிறது. ஆனால் இன்னும் கல்விக்காக, வேலைவாய்ப்புகளுக்காக முட்டிமோதிக்கொண்டுதானே இருக்கிறோம். பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் மோடி பிரதமராக இருக்கும்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வென்றது திமுக, விசிக உள்ளிட்ட...

நாத்திகப் புரட்சியை நோக்கி சமூகத்தை நகர்த்துவோம் – எட்வின் பிரபாகரன்

நாத்திகப் புரட்சியை நோக்கி சமூகத்தை நகர்த்துவோம் – எட்வின் பிரபாகரன்

“உலகம் முழுவதும் பல நாடுகளில் நாத்திகக் கொள்கைகள் நசுக்கப்படுவதும், நாத்திகர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவதும், முன்னொரு காலத்தில் வழமையாக இருந்து வந்த நிலையில், தற்போதும் சில நாடுகளில் அத்தகையதொரு நிலையே தொடர்வது வேதனைக்குரிய ஒன்றாகும். நாத்திகர்களுக்கு எதிரான எதிர்மறை எண்ணங்களும், அச்சுறுத்தல்களும், பாரபட்சங்களும், விரோதங்களும் சகிப்புத்தன்மையற்ற மனநிலையும் பல்வேறு வலதுசாரி நாடுகளில் இன்றளவும் பரவலாக இருக்கின்றன. நாத்திகர்கள் என்றாலே “ஒழுக்கம் இல்லாதவர்கள்” என்கிற அடிப்படை முகாந்திரமற்ற வெறுப்புப் பிரச்சாரமும் செய்யப்படுகின்றது. சொந்த குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, உறவுகளால் கைவிடப்பட்டு, சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு, அரசுகளால் தண்டிக்கப்பட்டு, ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்படியான வாழ்க்கையை நாத்திகர்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. இதெல்லாம் தாண்டி நாத்திகர்கள் தங்களை மனிதநேயர்களாக (humanist) அடையாளப்படுத்திக் கொண்டு, சர்வதேச அளவில் மனித உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும், புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடும், பாலின உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும், LGBTQ+ உரிமைகளை வென்றெடுக்கவும் தொடர்ச்சியாக...

தமிழ்க் குடிகளும் ஆரிய ஜாதிகளும் ஒன்றல்ல! – பேராசிரியர் ஜெயராமன்

தமிழ்க் குடிகளும் ஆரிய ஜாதிகளும் ஒன்றல்ல! – பேராசிரியர் ஜெயராமன்

(ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் 24.12.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்மண் தன்னுரிமைக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் பேசிய உரை) இந்த கூட்டத்தை சுற்றும் முற்றிலும் பாருங்கள்.. நாகரீகமான உடை உடுத்தியுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், அறிவார்ந்த பெருமக்கள், பெயருக்கு பின்னால் எம்.பி.பி.எஸ், எம்.காம், எம்.ஏ.பி.எல் போன்ற பட்டங்கள், பையில் பணம், ஒரு மகிழ்ச்சியான  உளநிலை….  நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இந்த உரையை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.  மகிழ்ச்சியான ஒரு நல்ல சூழ்நிலை நிலவுவதாக நாம் கருதுகிறோம். ஆனால் இது ஒரு நூறாண்டுகளுக்குள் உருவானதுதான். நான் பேசுவதை உரையாக யாரும் கருத வேண்டாம், ஆனால் உருப்படியான தகவல்களாக கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த உலகம் 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி கிடையாது. பல தெருக்களில் நம்மை போன்ற பெரும்பான்மையானோர் நடக்கவே உரிமை கிடையாது. சில ஜாதிகளுக்கு திருமணம் செய்துகொள்ள உரிமை கிடையாது. சொத்து வைத்துக்கொள்ள...

பார்ப்பனர்களுக்கு பதவிகளை வாரி இறைக்கும் பாஜக!

பார்ப்பனர்களுக்கு பதவிகளை வாரி இறைக்கும் பாஜக!

1980-களில் பாஜக தொடங்கப்பட்ட சமயத்தில் அது முழுக்க பார்ப்பன – பனியாக்கள் கூடராமாகத்தான் இருந்தது. இப்போதும் அதிகாரம் மிக்க உயர் பதவிகளில் அவர்கள்தான் இருக்கின்றனர் என்றாலும், ராமர் கோயில் இயக்கத்தில்தான் பிற்படுத்தப்பட்டவர்களை பொறுப்புகளில் அமர்த்தியது பாஜக. இப்போது கோயில் கட்டி முடிக்கப்படும் தருவாயில் மீண்டும் பார்ப்பனர்களுக்கே பதவி என்ற வழியில் வேகமாக பயணிக்கத் தொடங்கியிருக்கிறது பாஜக. ஏற்கெனவே பார்ப்பனரான ஹிமந்த பிஸ்வா சர்மாவை அசாம் முதல்வராக நியமித்திருந்த பாஜக, சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த ராஜஸ்தானிலும் பார்ப்பனரான பஜன் லால் சர்மாவை முதல்வராக்கியிருக்கிறது. 2023-ஆம் ஆண்டின் இறுதியில் மத்தியப் பிரதேச துணை முதல்வராக ராஜேந்திர சுக்லா என்ற பார்ப்பனரையும்,  சத்தீஸ்கர் துணை முதல்வராக விஜய் சர்மா என்ற பார்ப்பனரையும் நியமித்தது பாஜக. ஏற்கெனவே உத்தரப் பிரதேச துணை முதல்வராக பிரஜேஷ் பதக் என்ற பார்ப்பனரும், மகாராஷ்டிர துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் என்ற பார்ப்பனரும் இருக்கிறார்கள். மக்கள் மிகச்சொற்பமாக இருக்கிற பார்ப்பனர்கள்...

சுங்கச் சாவடிகளை வைத்து பகல் கொள்ளை

சுங்கச் சாவடிகளை வைத்து பகல் கொள்ளை

“மராட்டிய மாநிலத்தில் மும்பையுடன் நவி மும்பையை இணைக்கும் அடல் சேது பாலத்தை இம்மாதத் தொடக்கத்தில் (ஜன.12) பிரதமர் மோடி திறந்துவைத்தார். 22 கிமீ நீளம் கொண்ட இப்பாலம் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் மிக நீண்ட கடல் பாலம் இதுதான்” என்றெல்லாம் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் இன்னொரு செய்தியைக் குறிப்பிட மறந்துவிட்டன. இந்த 22 கிமீ நீள பாதையில் பயணிக்க சுங்கக் கட்டணம் 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இனி நாடு முழுக்க எல்லா சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இப்படித்தான் தாறு மாறாக இருக்கப் போகிறது என்பதுதான் கடந்த 9 ஆண்டுகால ஆட்சி உணர்த்துகிறது. 2014-15 நிதியாண்டில் மோடி ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவில் இருந்த சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 145. ஆனால் அதை படிப்படியாக உயர்த்தி தற்போது 959-ஆக அதிகரித்திருக்கிறது ஒன்றிய அரசு. அதிலும் குறிப்பாக கொரோனா பேரிடருக்குப் பிறகு மட்டும் 650-க்கும் அதிகமான...

இராமனுக்கு கோயில் கட்டியது எதற்காக? (2) – பேராசிரியர் ஜெயராமன்

இராமனுக்கு கோயில் கட்டியது எதற்காக? (2) – பேராசிரியர் ஜெயராமன்

(18.01.2024 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி) தென்னிந்தியாவில்  கிபி மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் சங்ககாலம் என்று பெயர். அந்த காலத்தில் ஜாதி என்பதே அறவே கிடையாது. ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்து அவள் மீது ஆசை கொண்டால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை போன்ற வாழ்க்கைமுறைகளில் இவர்கள் வாழ்ந்தார்கள். அந்த காலகட்டத்தில் பல்லவர்கள் வருகிறார்கள். பின்னர் தமிழ்நாட்டை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் பரத்வாஜ கோத்திரம் எனும் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள். இது அவர்களுடைய கல்வெட்டு செப்பேடுகளில் உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டில் நுழையும் போதே வர்ண தர்மத்தை கொண்டுவருகிறார்கள். பின்னர் சிறுகச்சிறுக பார்ப்பனர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தனர். இந்த பல்லவர்கள் காலத்தில் தான் குகை கோயிகள், கற்கோயில்கள் வடிவமைக்கப்பட்டன. பல்லவர் காலத்திற்கு பிறகு கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் இங்கு சோழர்கள் ஆட்சி தொடங்கியது. அப்பொழுது தான் இங்கு மிகப்பெரிய அளவில் கோயில்கள் கட்டப்பட்டன. வெறும் கற் கோயில்கள் உருவாக்கப்பட்ட போதே...

“ஜல்லிக்கட்டின் காட்டுமிராண்டித்தனங்களும் மூடநம்பிக்கைகளும்” – ம.கி.எட்வின் பிரபாகரன்

“ஜல்லிக்கட்டின் காட்டுமிராண்டித்தனங்களும் மூடநம்பிக்கைகளும்” – ம.கி.எட்வின் பிரபாகரன்

ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எத்தனையோ போலியான பண்பாட்டு பெருமிதக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட, உண்மை வேறாக இருக்கின்றது. ஜல்லிக்கட்டினுடைய மூலாதாரமான நோக்கம் ஒரு வீரனின் ரத்தம் விவசாய நிலத்தில் சிந்தப்பட வேண்டும் என்பதுதான்.  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு நீங்கள் சென்றால் தெரியும். முதல் காளையான ஊரின் கோவில் காளையை அவிழ்த்து விடுவதற்கு முன்பு, அந்த மக்கள் சாமியிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், “இந்த வருசம் அதிகமா குத்து விழணும் சாமி” என்பதுதான். நிறைய காளைகள் பிடிபட வேண்டும் என்று சாமி கும்பிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டின் பிரதான நோக்கம் காளையை அணைவதல்ல; வீரனை அடையாளப்படுத்துவதுதான். தனது நிலத்தில் வீரனின் ரத்தம் சிந்தப்படுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்ற விவசாய சமூகத்தின் ஆதி நம்பிக்கையே இதன் அடிப்படை. கோவில்களில் நடக்கும் வேள்வியின் எச்சங்களை கொண்டு வந்து நிலத்தில் தூவுவதோ அல்லது கோவில் தீர்த்தங்களை கொண்டு வந்து நிலத்தில் தெளிப்பதோதான் விவசாயம் செழிப்பதற்கான வழி என்ற வைதீக...

பெரியார் பெயரைக் கேட்டாலே மோடியும், அமித் ஷாவும் அலறுவது ஏன்? (3) – பேராசிரியர் ஜெயராமன்

பெரியார் பெயரைக் கேட்டாலே மோடியும், அமித் ஷாவும் அலறுவது ஏன்? (3) – பேராசிரியர் ஜெயராமன்

(25.01.2024 இதழில் வெளியான உரையின்  தொடர்ச்சி) இந்தியா விடுதலை அடையும் நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மனுஸ்மிருதியை அரசியல் சட்டமாக்க வேண்டும் என்று கேட்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக போற்றப்படுகிற பாலகங்காதர திலகர் அடிப்படையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர் பிரிவைச் சேர்ந்தவர். மராட்டியத்தில் சிவாஜி மற்றும் அவரது வகையறாக்கள் சத்ரபதிகள். பிரதமருக்கு பேஷ்வாக்கள் என்று பெயர். மன்னர்கள் குடித்துவிட்டு நடனமாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆட்சியதிகாரத்தை சித்பவன் பார்ப்பனர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அவர்களுக்கு கீழே தான் கெய்க்வாட், பான்சிலேவ், சிந்தியா, கோல்கார் உள்ளிட்ட மராட்டியப் பகுதித் தலைவர்கள் இருப்பார்கள். பின்னர் ஆங்கிலேயர்களுடன் போர் புரிந்து அந்த மராட்டிய பேஷ்வாக்களை தோற்கடித்துதான் மராட்டியப் பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்ட சித்பவன் பார்ப்பனர்கள், வெளியேறும்போது இந்த நாட்டை எங்களிடம் (சித்பவன் பார்ப்பனர்களிடம்) தந்துவிட்டு செல்லுங்கள் என்றனர்....

இந்தியை மண்டியிடச் செய்த சிங்கங்கள் – கொளத்தூர் மணி

இந்தியை மண்டியிடச் செய்த சிங்கங்கள் – கொளத்தூர் மணி

(21.01.2023 அன்று சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட மாநாட்டு மலருக்காக கழகத் தலைவர் எழுதிய சிறப்புக் கட்டுரை) இந்தி பேசாத மக்களின் மீது இந்தியைத் திணிப்பது என்ற மொழியை மையமாகக் கொண்ட அரசியல் நூறாண்டு கால வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டதாகும். இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் மொழியால் மக்களை ஒன்றிணைத்தால் இந்திய விடுதலையை எளிதாக அடைய முடியும் என்பது காந்தியாரின் கணிப்பாகவும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட காங்கிரஸ் தலைவர்களின் விருப்பமாகவும் இருந்தது. 31.7.1917 அன்று இன்றைய குஜராத் மாநிலம் பரோச்சில் நடந்த கல்வி மாநாட்டில் காந்தியார் இந்தியாவின் பொதுமொழி குறித்து அழுத்தமாகப் பதிவு செய்தார். அதற்கான எதிர்ப்புக்குரல் தமிழ்நாட்டிலிருந்து உடனே வெளிப்பட்டது. நீதிக் கட்சியின் நாளேடான ‘திராவிடன்’ இதழில் அடுத்த நாள் 1.8.1917 அன்று ‘மிஸ்டர் காந்தியும் இந்தியும்’ என்று இந்தி எதிர்ப்புத் தலையங்கம் வெளிவந்தது. தொடர்ந்து மூன்று கட்டுரைகள் அதே மாதத்தில் வெளிவந்தன....

பறைக் கருவிகளை எரிக்கச் சொன்னவர் பெரியார் திரிபு வாதங்களுக்கு ஆதரத்துடன் மறுப்பு (2) – கொளத்தூர் மணி

பறைக் கருவிகளை எரிக்கச் சொன்னவர் பெரியார் திரிபு வாதங்களுக்கு ஆதரத்துடன் மறுப்பு (2) – கொளத்தூர் மணி

பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், தாக்கங்களும் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக மற்றொரு செய்தியையும் பார்ப்போம்.  அது 21.12.1946 நாளிட்ட ‘குடிஅரசு’  இதழில் துணைத் தலையங்கமாக “தாழ்த்தப் பட்டோரும் தப்பட்டை வாசித்தாலும்”  என்ற தலைப்பில் வந்துள்ள வேண்டுகோள் அறிவிப்பு. “சென்ற சில மாதங்களுக்கு முன்பு (கடந்த நவம்பர் மாதம் என்பதே சரி) பெரியார் ஈ.வெ.ராமசாமியவர்கள்  வாணியம்பாடியில் சொற்பொழிவு நிகழ்த்தும் போது (சொற்பொழிவு முடிந்தவுடன் என்பதே சரி)  அக்கூட்டத்திலேயே “பறையர்கள்”  எனப்படுவோர் தமது இழிவுக்கு காரணமான தப்பட்டைகளைக் கொளுத்திவிட்டனர்  என்ற செய்தி யாவரும் அறிந்ததே.  இந்நிகழ்ச்சியை அப்பகுதியில் பல இடங்களில் பலர் தமது பறைகளைக் கொளுத்தி வருகின்றனராம். தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் ஒருவரான “பறையர்” எனப்படுவோர் தமது தொழிலின் காரணமாகவே பறையர் என்று அழைக்கப்படுவதும், அதனாலேயே இழிவாக எண்ணப்படுவதும், நடத்தப்படுவதும் யாவரும் நன்கு அறிந்த செய்திகளே யாகும்.  எனவே, வாணியம்பாடி தோழர்களைத் தொடர்ந்து எல்லா...

பகுத்தறிவு நடிகர் மாரிமுத்து உடலுக்கு தோழர்கள் இறுதி மரியாதை

பகுத்தறிவு நடிகர் மாரிமுத்து உடலுக்கு தோழர்கள் இறுதி மரியாதை

திரைப்பட நடிகரும் பகுத்தறிவாளருமான தோழர் மாரிமுத்து அவர்கள் சென்னையில் 08.09.2023 அன்று காலை 10 மணியளவில் முடிவெய்தினார். தேனி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து பொறியியல் படிப்பு முடித்து சென்னையில் திரைப்படத் துறைக்கு வந்த அவர் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். நீண்ட காலம் ஊடக வெளிச்சம் பெறாமல் இருந்த அவர் அண்மைக்காலமாக அவர் சீரியல் வழியாகவும், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களின் வழியாகவும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றார். தனக்கு ஜாதி கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கருப்புச் சட்டை தான் தனக்கு பிடித்த உடை என்றும் பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறியதோடு தனது மகன், மகளுக்கு ஜாதி மறுப்புத் திருமணம் செய்வதே தனது நோக்கம் என்றார். நடிகர் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவை காட்சிகளான ‘கிணறு காணாமல் போவது, போலிஸ் அடிச்சுக் கேட்டாலும் சொல்லிவிடாதே’ போன்ற காட்சிகளை உருவாக்கியதே மாரிமுத்து தான் என்று நடிகர் வடிவேலு பதிவு...

‘சனாதன வாழ்வியல்’ எது என்று பதில் சொல்! சனாதன முகமூடிக்குள் பார்ப்பனியம்

‘சனாதன வாழ்வியல்’ எது என்று பதில் சொல்! சனாதன முகமூடிக்குள் பார்ப்பனியம்

சனாதனம் என்ற முகமூடியில் பார்ப்பனியம் இப்போது பதுங்கி நிற்கிறது. சனாதனம் என்பது ஒரு வாழ்க்கை முறை, அது வர்ணாசிரமம் அல்ல என்று வாதிடுகிறார்கள். சனாதனவாதிகளுக்கு சில கேள்விகள். வர்ணாசிரமம் வேறு; சனாதனம் வேறு என்று கூறும் நீங்கள், வர்ணாசிரமத்தை எதிர்க்கிறோம் என்று கூறத் தயாரா? சனாதனம் ஒரு வாழ்க்கை முறை என்று கூறுகிறார்கள், அந்த வாழ்க்கை முறை என்ன? அதன் பண்புகள் என்ன என்பதை விளக்குவார்களா? வருணாசிரமம் அல்லாத சனாதன வாழ்க்கை முறை எப்போது எந்த காலத்தில் இங்கே நிலவியவது? பால்ய விவாகம், சதி எனும் உடன்கட்டை ஏற்றும் கொடுமை தீண்டாமை, பிராமணன் வணக்கத்தக்கவன், சூத்திரன் பிராமணர்களின் வைப்பாட்டி மகன், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடித்து காவி வெள்ளை ஆடை அணிவித்து சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்தல், 10 வயது பிராமண சிறுவன் 70 வயது சூத்திர முதியவரை வாடா போடா என்று அழைத்து இழிவுபடுத்துதல், இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை...

இழி தொழில்களை தலித் மக்கள் செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னாரா? அவதூறு பரப்புவோருக்கு மறுப்பு (1) – கொளத்தூர் மணி

இழி தொழில்களை தலித் மக்கள் செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னாரா? அவதூறு பரப்புவோருக்கு மறுப்பு (1) – கொளத்தூர் மணி

பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், அதனால் ஏற்படும் அதிர்வுகளும் தாக்கங்களும் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, தோழர் அல்லது அய்யா பெ.மணியரசன் (நோக்கம் வேறுவேறாகக் கூட இருக்கலாம்) போன்ற விபீசண, அனுமார் கூட்டங்கள் சில வரிகளை உருவி எடுத்தும், திரித்தும் எப்படியேனும் பெரியாரை, திராவிடத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்று செயல்பட்ட வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு தரவுகளைத் தேடும் சிரமத்தை இவர்களது முன்னோடிகளான ரவிக்குமார், குணா, ம.பொ.சி, வ.வே.சு அய்யர் போன்ற பலரின் அன்றைய பதிவுகள் பயன்படுகின்றன. ஒருமுறை பார்ப்பன பேச்சு அடியாள் எச்.ராஜாவிடம் “பெரியாரைப் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு “நான் மணியரசன் எழுதி வருவதைப் படிக்கிறேன்; அதுவே போதும்” என்றான். அப்படித்தான் பல வாழ்க்கை வரலாறுகளும் கூட எழுதப்பட்டு வருகின்றன. ஓர் எடுத்துக்காட்டாக தோழர் ‘பாலசிங்கம் இராஜேந்திரன்’ என்பவர் எழுதி ‘நீலம்’ வெளியீட்டில் “இளையபெருமாள்...

‘ராஜாஜி’க்கு ‘மூக்காஜீ’ பதிலடி

‘ராஜாஜி’க்கு ‘மூக்காஜீ’ பதிலடி

74. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பார்ப்பனர் ஹெச்.வி.ஹண்டே இது மூன்றாம் தர ஆட்சி என்று திமுகவை சாடிய போது முதல்வராக இருந்த கலைஞர் எழுந்து அதற்கு பதிலடி தந்தார். “இது மூன்றாம் தர ஆட்சி அல்ல, நான்காம் தர ஆட்சி, சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக ஆளப்படும் ஆட்சி” என்று பதிலடி தந்து சட்டப்பேரவை குறிப்பிலும் அதை பதிவேற்ற வைத்தார். 75. இட ஒதுக்கீடு அமல்படுத்துவதால் உயர் சாதியினர் பாதிக்கப்படுகிறார்கள் என்று எதிர்ப்பு எழும்பிய போது கலைஞர் அதற்கு ஒரு உதாரணத்துடன் பதில் அளித்தார். சலவை செய்து அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்ட துணிகளுக்கு மீண்டும் சலவை செய்ய தேவையில்லை, அழுக்காகி கிடைக்கும் துணிகளுக்குத் தான் சலவை செய்ய வேண்டும் என்று பதில் அளித்தார். 76. சாலையில் தார் ஊற்றி கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளிகளின் அவலம் கலைஞரின் கண்ணில் தான் பட்டது. நேரில் கண்ட அவர் காலில் சாக்கு துணியை கட்டிக்...

வாலாஜா வல்லவனின் உரை; கடந்த இதழின் தொடர்ச்சி! தேவதாசி முறை –  ‘மனுநீதி’ சனாதனங்களை எதிர்த்தது திராவிடம்

வாலாஜா வல்லவனின் உரை; கடந்த இதழின் தொடர்ச்சி! தேவதாசி முறை – ‘மனுநீதி’ சனாதனங்களை எதிர்த்தது திராவிடம்

நீங்கள் நான்கு வருணங்களாக பிரித்து வைத்தீர்கள், ஊருக்கு வெளியே தான் குடியிருக்க வேண்டும், நல்ல நகை போடக்கூடாது, சூத்திரர்கள், மேல் ஜாதிக்காரர்கள் பயன்படுத்திய பழைய ஆடைகளைத் தான் உடுத்த வேண்டும், ஈய பாத்திரம் தான் பயன்படுத்த வேண்டும், பொன் வெள்ளி நகைகளை அணியக்கூடாது என்று துரத்திய மக்களை ஊருக்குள் அழைத்து சமத்துவபுரம் கட்டிக் கொடுத்தவர் தான் கலைஞர், இதுதான் திராவிடம். மேற்கூறியவை சனாதனம், அதற்கு எதிரானது தான் திராவிடம். ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து நீங்கள் தேவதாசி முறையை கொண்டு வந்தீர்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மசோதா காரணமாக 1929 இல் தேவதாசி முறையை ஒழித்துக் கட்டியது எங்கள் திராவிடம். சனாதனத்திற்கு நேர் எதிரானது திராவிடம், ‘எதைக் கொடுத்தாலும் கொடு ஆனால் சூத்திரனுக்கு கல்வியை மட்டும் கொடுக்காதே என்கிறது மனுநீதி’, அதற்கு நேர் எதிராக சென்னை மாகாணத்தில் 1922 முதல் 1926 க்குள் பனகல் அரசர் ஆட்சியில் 12250 தொடக்கப் பள்ளிகள்...

அமலாக்கத்துறையா? ஆளும்கட்சி எடுபிடியா?

அமலாக்கத்துறையா? ஆளும்கட்சி எடுபிடியா?

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டித்தது சட்ட விரோதம், வரும் ஜூலை 31ஆம் தேதியோடு அவரை பணியில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்க மிக முக்கிய கேடயமாக அமலாக்கத்துறையை பயன்படுத்தி வந்த பாஜகவிற்கு இத்தீர்ப்பு பேரதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 1984-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய்த்துறை அதிகாரி சஞ்சய் குமார் மிஸ்ரா. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான இவரை, 2018ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை இயக்குநராக ஒன்றிய பாஜக அரசு நியமித்தது. 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இவருடைய பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், ஒன்றிய அரசால் மேலும் ஒரு ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. மீண்டும் 2021-ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2022-ஆம் ஆண்டில் ஒருமுறையும் என தொடர்ந்து பணி நீட்டிப்பு கொடுத்துக்கொண்டே இருந்தது ஒன்றிய அரசு. 2020-ஆம் ஆண்டு மே மாதத்திலேயே 60 வயதை நிறைவு செய்த சஞ்சய்...

அவசர நிலையை எதிர்த்து வீதிக்கு வந்த கலைஞர்

அவசர நிலையை எதிர்த்து வீதிக்கு வந்த கலைஞர்

40.1975 ஜூன் 25-ம் தேதி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் இந்திரா காந்தி. எமர்ஜென்சி காமராசரையும் கலைஞரையும் ஒன்று சேர்த்தது. இருவரும் வெவ்வேறு காலங்களில் இந்திரா காந்தியை ஆதரித்ததற்கு இன்று நாடு விலை கொடுக்கிறது என கலைஞரிடம் கூறினார் காமராசர்.   41.எமர்ஜென்சி காலத்தில் பத்திரிகைகள் கடும் தணிக்கைகளுக்கு உள்ளாகின. எமர்ஜென்சிக்கு எதிராக காமராசரின் கருத்துக்களை முரசொலியில் வெளியிட்டார் கலைஞர். காமராசரின் கருத்துக்கள் முரசொலியில் முதல்முதலாக வெளியானது அப்போதுதான்.   சென்னை கடற்கரையில் பல லட்சம் மக்களை திரட்டி அனைவரையும் அவசரநிலை பிரகடனத்திற்கு எதிராக உறுதி ஏற்க வைத்தார் கலைஞர்.   43 . மத்திய தகவல் தொடர்பு துறை விடுதலை, முரசொலி ஏடுகளை தணிக்கை செய்தது. அகில இந்திய வானொலியில் தலைமை செய்தியாளராக இருந்து ஓய்வு பெற்ற சங்கராச்சாரி சீடர் சவுமி நாராயணன் என்ற பார்ப்பனர், விடுதலை முரசொலி ஏடுகளின் தணிக்கை அதிகாரியாக இருந்தார். “அண்ணாவை பெற்ற தாயை விட நேசிக்கிறேன்”...

ஆகமம் தெரிந்தால் போதும்; ஜாதி ஒரு தடையல்ல ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் •  சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு

ஆகமம் தெரிந்தால் போதும்; ஜாதி ஒரு தடையல்ல ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் • சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு

அர்ச்சகர் பதவி மதம் தொடர்பானது அல்ல, அவர் நடத்தும் பூஜை, சடங்குகள் தான் மதம் தொடர்பானது. முறையாக ஆகமம் தெரிந்த எந்த ஜாதியினரும் ஆகமக் கோயில்களில் அர்ச்சகராகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை (ஜுன் 26) வழங்கியுள்ளது.   அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்றம் மிகச் சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரி அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது. இதை எதிர்த்து கோயில் பரம்பரை அர்ச்சகர் முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பாரம்பரிய முறையில் தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் பழக்கவழக்கங்களை மாற்றக்கூடாது என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் சில முக்கிய கருத்துகளை சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆகம கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பவர்கள் ஆகமங்களையும் சடங்குகளையும் தெரிந்திருந்தால் போதும், அவர்களுக்கு ஜாதியோ, பரம்பரையோ ஒரு தடையாக இருக்க...

கலைஞர் 100 ; வரலாற்றுப் பக்கங்களில் இருந்து (2) கலைஞர் முதல்வராக விரும்பிய பெரியார்

கலைஞர் 100 ; வரலாற்றுப் பக்கங்களில் இருந்து (2) கலைஞர் முதல்வராக விரும்பிய பெரியார்

1952-இல் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒருவருக்கொருவர் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒரே பாணியில் போராட்டம் நடத்தினர். திருச்சி ரயில் நிலையத்தில் பெரியாரும் கலைஞரும் ஒன்றாக நின்று இந்தி எழுத்துக்களை கறுப்பு மை பூசி அழித்தனர்.   1952-இல் கலைஞர் கதை, வசனம் எழுதி வெளியான பராசக்தி திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி அடைந்தது. சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் அதுதான். கிட்டத்தட்ட 72 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்றளவிலும் பராசக்தி திரைப்படத்தின் வசனங்கள் பேசப்படுகின்றன.   1953-இல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் கலைஞரின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமானது. ராஜாஜியின் குலக்கல்வி திட்ட எதிர்ப்பு, தமிழர்கள் பற்றிய நேருவின் கருத்துக்கு எதிர்ப்பு, டால்மியாபுரம் ரயில் நிலையத்தை கல்லக்குடி என பெயர் மாற்றுவது இப்போராட்டத்தின் நோக்கம். ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ என நாகூர்...

கலைஞர் 100.. வரலாற்றுப் பக்கங்களில் இருந்து

கலைஞர் 100.. வரலாற்றுப் பக்கங்களில் இருந்து

திராவிடர் இயக்க வரலாற்றோடு கலைஞர் வரலாறும் இணைந்தே பயணிக்கிறது. இளைய தலைமுறையின் புரிதலுக்காக அந்த வரலாற்றின் சுருக்கமான தொகுப்பை பெரியார் முழக்கம் பதிவு செய்கிறது.   பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய 1924 இல் பிறந்த கலைஞர், சுதந்திரம் பெறுவதற்கு 9 ஆண்டு காலத்திற்குப் முன்பு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அந்த பயணம் 80 ஆண்டு காலம் 2018 வரை நீடித்தது.   ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தார். அதில் இரண்டு முறை சட்ட விரோத குறுக்கு வழிகளால் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ஒன்றிய ஆட்சியால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.   அறுபது ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றார்.   நான்கு வயதில் தந்தை விருப்பப்படி இசைப் பயிற்சிக்கு சென்றார் கலைஞர். கோயில்களில் தான் இசைப் பயிற்சி நடக்கும், கோயில்கள் பெரிய மனிதர், உயர் சாதியினர் வரும் இடம் என்பதால்...