இழிவில் பிறந்தது ஜாதி – பெரியார்
வெவ்வேறு வர்ணத்தவருக்கு இடையே நடந்த கலப்பு உறவின் காரணமாகத் தான் ஜாதியே பிறந்தது. இது குறித்து ‘விபச்சாரத்தில் பிறந்த ஜாதி’ எனும் தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரை. ஜாதிப் பிரிவும் வித்தியாசங்களும் இருக்கக் கூடாதென்பது இந்தியாவின் ஒருமுகப்பட்ட அபிப்பிராயமென்பதும், கோரிக்கையென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். பொதுவாகப் பார்க்கும் போது போதிய உலக ஞானமற்ற மக்களுக்கு ஜாதிப் பிரிவுகளை ஒழிப்பது என்றால் பிரமாதமாகத் தோன்றுவதும், சிலருக்கு ஏதோ குடிமுழுகிப் போவது போல் அவர்கள் மனதிற்குப் பெரிய திகில்கள் உண்டாவதும் சகஜமாகக் காணப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் ஜாதி என்பதன் உண்மையும், உற்பவமும் இன்னதென்று அறியாத மயக்கத்தினால் தோன்றப்படுவதே தவிர வேறில்லை. ஒரே நாட்டு மக்கள் பிறவியில் பல ஜாதியாகப் பிரிக்கப்பட்டிருப்பது நமது இந்தியாவில்தான் இருக்கின்றதே தவிர வேறெங்கும் இல்லை என்பது உலகக் கல்வி ஞானமுடையவர்கள் யாவரும் அறிந்ததாகும். அந்தப்படி இந்தியாவில் பிரிக்கப்பட்டிருக்கும் ஜாதியும் எவ்வித கொள்கைக்கும் பொருத்தமில்லாமல் வெறும் பிரிவுக்கும் இழிவுக்கும் மாத்திரம் ஆதாரமாய்...
