‘ஜாதி அடையாளம் அல்ல அவமானம்’ – புதுச்சேரியில் கருத்தரங்கம்!
பெரியாரிய பற்றாளர் தோழர் சிற்பி ராசன் அவர்களின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில், ‘ஜாதி அடையாளம் அல்ல அவமானம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதுச்சேரி ராசா நகரில் டிசம்பர் 25 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. தியாகு தலைமையில் பாரதி வரவேற்புரையாற்ற புதுவை தீனா தொடக்க உரையாற்றினார். யூ2புரூடஸ் மைனர், இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), முனைவர் பன்னீர்செல்வம் (சமூக செயற்பாட்டாளர், புதுச்சேரி), வீ.ரா.பாலகிருஷ்ணன் (ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். திரைத்துறையில் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பேசிய திரை கலைஞர்களைச் சிறப்பிக்கும் விதமாக வெளிவந்துள்ள 2026-ஆம் ஆண்டுக்கான கழக நாட்காட்டியை (ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர்) பாலகிருஷ்ணன் வெளியிட அய்யா சிற்பி ராசன் பெற்றுக்கொண்டார். பா.சந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பெரியாரிய சிந்தனையாளர் இயக்கத் தோழர்கள் மற்றும் முற்போக்கு இயக்கத் தோழர்கள், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கடலூர் சிவா, சென்னை அசோக், வீரா,...
