Category: அண்மைச் செய்திகள்

கழகத் தோழர் பிரவீன் – சமீம் மோனிஷா மதமறுப்பு திருமணம்!

கழகத் தோழர் பிரவீன் – சமீம் மோனிஷா மதமறுப்பு திருமணம்!

கழகத் தோழர் சீ. பிரவீன்குமார் – ஜா. சமீம் மோனிஷா ஆகியோரின் சுயமரியாதை திருமணம், மார்ச்-23, காலை 11 மணிக்கு, தேனாம்பேட்டை சமூகநலக் கூடத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் நடைபெற்றது. மயிலை சுகுமாரின் ஒருங்கிணைப்பில், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, விசிக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சாரநாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை மாவட்டத் தலைவர்கள் வேழவேந்தன், சேத்துபட்டு இராசேந்திரன், துணை செயலாளர் இராவணன், மாவட்ட அமைபாளர்கள் தட்சணாமூர்த்தி, ம.கி எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் கோபிநாத், சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர். கழக ஏட்டுக்கு மணமக்கள் ரூ. 2,000 நன்கொடையாக வழங்கினர். பெரியார் முழக்கம் இதழ் 23042026

உலக மகளிர் தினத்தையொட்டி 9 நூல்கள் வெளியிடு

உலக மகளிர் தினத்தையொட்டி 9 நூல்கள் வெளியிடு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசும் .வானதியின் கவிதைகள், வழி, தியாகச்சுடர் அன்னை பூபதி, கஸ்தூரியின் ஆக்கங்கள், மார்ச்-8, அனைத்து உலக பெண்கள் நாள், கனவுக்கு வெளியேயான உலகு, பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும், பெண்களும் புரட்சியும், வேர்கள் துளிர்க்கும், காதோடு சொல்லி எழு ஆகிய 9 நூல்கள் வெளியிடப்பட்டன. வெளியீட்டு விழா 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் சென்னை, வடபழனி திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் ம. டேவிட் பெரியார் தலைமையில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பௌமிகா வரவேற்புரையாற்றினார். இனியாழ், ஆண்டனி ராஜ் (அ. தி. மு. க), அன்பு தனசேகர் (தலைமைக்குழு உறுப்பினர் திவிக), லாரன்ஸ் பிரபாகரன் (தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்), வள்ளலார் நகர் தினகரன், அ. சி. சின்னப்பத்தமிழர் (தமிழ் வழிக்கல்வி இயக்கம்), M. K பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவி இயக்கத்தில் “எங்களின் குரல்” நாடகம்...

இலக்கியா – விஷ்ணுராம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா!

இலக்கியா – விஷ்ணுராம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா!

கோவை மாவட்டம், சீரபாளையம் பகுதியைச் சார்ந்த (விடியல் பதிப்பகம்) விசயக்குமார் – கற்பகவள்ளி இணையரின் மகள் இலக்கியா அவர்களுக்கும் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியைச் சார்ந்த பழனிசாமி – பாக்கியலட்சுமி இணையரின் மகன் விஷ்ணுராம் அவர்களுக்கும் திருமண வரவேற்பு விழா 23.02.2026 திங்கள் அன்று மாலை 6 மணி அளவில் பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள வேல் மஹாலில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். பொள்ளாச்சி வெள்ளிங்கிரி, கோவை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, காவை.அவினாசி ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 23042026

தமிழ்ஈழம் – தினேஷ் குமார் இணையேற்பு விழா!

தமிழ்ஈழம் – தினேஷ் குமார் இணையேற்பு விழா!

தோழர் அறக்கட்டளை நிறுவனர் சாந்தகுமார் – லதா ஆகியோரின் மகள் தமிழ்ஈழம் அவர்களுக்கும் மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் அவர்களுக்கும் வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா 22.02.2025 ஞாயிறு அன்று மாலை 6 மணி அளவில் கோவை நல்லாம்பாளையம் பொன்மணி திருமண மண்டத்தில் நடைபெற்றது. புதிய குரல் நிறுவனர் ஓவியா தலைமை வகித்து வாழ்த்துரையாற்றினார். பொள்ளாச்சி உமாபதி (மாநிலச் செயலாளர், தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை), ஆறுச்சாமி (த.பெ.தி.க தலைமை நிலையச் செயலாளர்), மயூரா தாமோதரசாமி (கல்வியாளர்), முனைவர் தமிழரசி, முகம்மது ஜியாவுதின் (நீதிபதி, மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம் தமிழ்நாடு அரசு), மோகனசுந்தரம் (ராகவேந்திரா சேவா டிரஸ்ட்), திருப்பூர் தமிழ்ச்செல்வி (கருணா மனோகரன் அறக்கட்டளை), அசோக்குமார் (அறிவுச்சோலை அறக்கட்டளை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் மணமக்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த. பெ. தி. க...

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்:   திருப்பரங்குன்றம் வரலாற்று ஆய்வு நூல் அறிமுக விழா!

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்: திருப்பரங்குன்றம் வரலாற்று ஆய்வு நூல் அறிமுக விழா!

சேலம்: தமுஎகச சார்பில் எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்ட ‘திருப்பரங்குன்றம் முழு வரலாறு’ ஆய்வு நூல் அறிமுக விழா 14.03.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம் கலைஞர் கருணாநிதி திருமண மண்டபத்தில், த.மு.எ.க.ச சேலம் மாவட்ட உதவித் தலைவர் மேவை.சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது. முன்னாள் முத்தவல்லி ஜாமியா மஸ்ஜித் நாசர்,சையத் மூஸா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர்), காஜாமொய்தீன் (வி.சி.க இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநிலச் செயலாளர்), ஷேக்முகம்மது (மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்), சதாம் உசேன் (மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர்), ஷரிப் பாஷா (எஸ்.டி.பி.அய் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர்), சோபனா (த.மு.எ.க.ச மாவட்டச் செயலாளர்), பிரவீன்குமார் (மக்கள் ஒற்றுமை மேடை ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக சேலம் மாநகரச் செயலாளர் ரகுபதி வரவேற்புரையாற்றினார்....

எனக்குப் பிறகு எவன் கேட்பான்? வேன் வழங்கும் விழாவில் பெரியாரின் உணர்ச்சி உரை!

எனக்குப் பிறகு எவன் கேட்பான்? வேன் வழங்கும் விழாவில் பெரியாரின் உணர்ச்சி உரை!

வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள் உரைகளுக்குப் பின்னர் இறுதியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை: இந்தப் பொருள்களை எல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. கார் ஒன்றுதான் எனக்கு அதிகம் பயன்படும். இந்த புதிய வேனில் சவாரி செய்வதால் ஒன்றும் நான் அதிகம் வாழப் போவதில்லை. ஆனால் இதைப் போன்று விழாக்களை காணும் போது தான் எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது. இந்த கார் வாங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஏராளமாக கேட்டதற்கு மேல் அதிகமாக கொடுத்துள்ளார்கள். அதில் குறிப்பாக தஞ்சை மாவட்டம் 40,000 ரூபாய் அளித்திருக்கிறது. அந்த அளவுக்கு நமது கொள்கைக்கு நாட்டில் வெற்றி கிட்டி இருக்கிறது; செல்வாக்கு பெருகிவிட்டது. எனக்கு இன்றைக்கு வயது 94 அடுத்த மாதம் பிறந்தால் 95 வயது. 60 வருடங்களுக்கு முன்பு எமது மக்களின் யோக்கியதை என்ன அதாவது நாம் முயற்சி எடுப்பதற்கு முன்பு இந்த நாட்டு மக்களின் யோக்கிதை...

1973-ல் தஞ்சையில் பெரியாருக்கு கார் வழங்கும் விழாவில் நடந்தது என்ன?

1973-ல் தஞ்சையில் பெரியாருக்கு கார் வழங்கும் விழாவில் நடந்தது என்ன?

1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தஞ்சையில் பெரியாருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது. மேடையில் ஏறுவதற்கு பெரியாருக்கு ஏற்பட்ட இடையூறுகளை தவிர்த்து பிரச்சாரத்திற்கான மேடையை காரின் ஒரு பகுதியாக இணைத்து இந்தக் கார் தயாரிக்கப்பட்டது. இந்தக் காரை 5 மாதங்கள் மட்டுமே பெரியார் பயன்படுத்தினார். தியாகராய நகரில் பெரியாரின் இறுதி உரையை இந்தக் காரில் இணைக்கப்பட்ட மேடையில் தான் ஆற்றினார். பெரியாரின் அந்தக் கார் திருச்சி உறையூரில் உள்ள பெரியார் மாளிகையில் நிறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேடு (ஏப்ரல்-19) படத்துடன் ஒரு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. திராவிடர் கழகம் திட்டமிட்டு வரும் ‘பெரியார் உலகத்தில்’ இந்த வேன் காட்சிப் பொருளாக இடம்பெறப்போவதாக செய்தி கூறுகிறது. இந்தக் கார் வழங்கும் விழா, 1973 ஆக-19-ல் தஞ்சையில் எழுச்சியுடன் மாநாடு போல் நடந்தது. அந்த நிகழ்வுகள் குறித்து சில செய்திகளை இளையதலைமுறையின் கவனத்துக் கொண்டு வருகிறோம்....

உலகிலேயே குடும்பத் தலைவிகளின் உழைப்புக்கு ஊதியம் வழங்கிய ஒரே ஆட்சி தமிழ்நாடு

உலகிலேயே குடும்பத் தலைவிகளின் உழைப்புக்கு ஊதியம் வழங்கிய ஒரே ஆட்சி தமிழ்நாடு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பரப்புரையில் மக்களின் இதயங்களோடு உரையாடுகிறார். குறிப்பாக ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் உரிமைத் தொகை திட்டம் அவர்களின் குடும்ப உழைப்புக்கு வழங்கப்படும் ஊதியம் என்பதை உள்ளத்தில் பதிய வைக்கிறார். குடும்பத் தலைவி என்ற பெயரில் அவர்கள் உழைக்கிறார்கள்; அதற்கு ஊதியம் இல்லை; வேலைக்குச் செல்லும் ஆண்கள் தான் ஊதியம் பெறுகிறார்கள் என்று சமூகம் கூறுகிறது. குடும்பத் தலைவிகள் காலையில் தொடங்கி குடும்பத்திற்கு வழங்கும் வேலைகளை முதல்வர் பட்டியலிட்டுக் காட்டும்போது பெண்கள் அந்த எதார்த்தத்தை உணர்ந்து முதல்வரின் உரையோடு ஒன்றிப் போகிறார்கள். குடும்பத் தலைவிகளின் ஊதியமற்ற உழைப்புக்கு ஊதியம் வழங்க வேண்டும்; உரிய அங்கீகாரம் வேண்டும் என்ற இயக்கம் உலகம் முழுதும் நடந்து வருகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் குடும்பத் தலைவிகளின் ஊதியமற்ற உழைப்புக்கு சட்ட அங்கீகாரம் மட்டுமே கிடைத்திருக்கிறது. குழந்தை வளர்ப்பு, சொத்துரிமை, ஓய்வூதியம் போன்றவற்றில் பெண்களின் குடும்ப...

டெல்லிக்கு எதிரான போராட்டங்களின் முதல் வெற்றி!

டெல்லிக்கு எதிரான போராட்டங்களின் முதல் வெற்றி!

ஒன்றிய அரசு அவசர அவசரமாகக் கொண்டு வந்த மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்து விட்டன. “டெல்லி வீழ்ந்தது! தமிழ்நாடு வென்றது!” என்று முதல்வர் மிகச் சரியாகப் பதிவிட்டு இருக்கிறார். பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் இருக்காது என்று ஒன்றிய பாஜக ஆட்சி சூழ்ச்சியாக திட்டமிட்டது. ஆனால் தொகுதி மறு சீரமைப்பு என்ற ஆபத்தையும் இணைத்து இந்த மசோதா கொண்டு வரப்படுவதன் நோக்கம்.தென்னகத்தின் உரிமைகளைப் பறிப்பது தான் என்று முதன் முதலாக எதிர்ப்புக் குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து தெலுங்கானா,கர்நாடகா, கேரள முதல்வர்களும் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் தமிழ்நாடு முதல்வரின் எதிர்ப்புக் குரலோடு இணைந்தனர். எடப்பாடி பழனிச்சாமி மட்டும் பச்சையாக தனது துரோகத்தை வெளிப்படுத்தினார். இன்றைய பரப்புரையில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஸ்டாலின் எதிர்க்கிறார் என்று மோடிக்கு வெட்கமின்றி ஜால்ரா அடித்தார். தொகுதி மறுவரையறை என்ற...

சட்டத்தின் ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?

சட்டத்தின் ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?

சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்க மறுப்பது ‘தீண்டாமைக் குற்றம்’ என்று 2019ல் உச்ச நீதிமன்றத்தில் ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் குவிந்தன. இப்போது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பினை சபரிமலை அய்யப்பன் கோயிலில் அமல்படுத்தவில்லை. தீர்ப்பை உறுதியாக ஆதரித்த கேரள இடதுசாரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி இப்போது தனது முடிவை தேர்தலுக்காக மாற்றிக் கொண்டு விட்டது பெரும் அவலம். சம்பிரதாயங்கள் தொடர்ந்து நீடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மனு போட்டுள்ளது. 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெண்கள் உரிமைக்காக கொண்டு வந்ததை எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டன என்று மோடி “பெண்ணுரிமைக் காவலர்” போல் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆனால் இதே மோடிஆட்சி உச்ச நீதிமன்றத்தில்...

தேர்தல் பரப்புரையில் கழகத் தோழர்கள்

தேர்தல் பரப்புரையில் கழகத் தோழர்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை இயக்கங்களை நடத்தினர். கடலூர்: புவனகிரி திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரவணன் அவர்களை சந்தித்து கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பாக பயனாடை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர். திண்டிவனம் தொகுதி விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு அவர்களை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கடலூர் சிவா தலைமையில் உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), பொன்ராஜ், சத்யா, லதா கலைக்குழுவினர் மற்றும் வீரா, அசோக் ஆகியோர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரகுமாரை ஆதரித்தும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை: ஏப்ரல் 16, 2026 முதல் ஏப்ரல் 19 வரை 4 நாள் புதுக்கோட்டை சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் மருத்துவர் வை.முத்துராஜா அவர்களை ஆதரித்து கழகம் சார்பாக தெருமுனை பிரச்சாரம் செய்து மக்களிடையே ஓட்டுகளை சேகரித்தனர். உமாபதி (சென்னை...

பாராட்டத்தக்க முயற்சி  குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூல்கள்!

பாராட்டத்தக்க முயற்சி குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூல்கள்!

விஜயபாஸ்கர் அறக்கட்டளை மற்றும் CISS அறக்கட்டளை இணைந்து பெரியார் வரலாற்றை குழந்தைகளுக்கான பட கதையாக வெளியிட்டுள்ளதை பாராட்டி வரவேற்க வேண்டும். ” ஏன் என்று கேட்க சொன்னவர் பெரியார்” ஒரு குருகுல கதை, தமிழ்நாடு தந்த அண்ணா என்ற தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளனர். முனைவர் நா.இல நரேன்குமார் கருத்தாக்கத்தில், முனைவர் கோவி. கனக விநாயகம் தமிழாக்கம் செய்துள்ளார். படம் மற்றும் நூலகத்தை நா.இல நரேன்குமார் ஏ.அய் உதவியுடன் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளார். 32 பக்கங்களில் வெளியிட்ட ஒவ்வொரு நூல்களின் விலை ரூ. 50 மட்டுமே. குழந்தைகளிடம் கருத்துக்களை பதிய வைக்கும் இந்த சிறிய முயற்சிகளை பாராட்ட வேண்டும். தோழர்கள் இந்த நூல்களை அன்பளிப்பாகவும் பரப்புவதற்கு பயன்படுத்தி இத்தகைய முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும். விஜயபாஸ்கர் அறக்கட்டளை மற்றும் CISS பவுண்டேசன் இணைந்து நடத்திய சிறார்களுக்கான படக்கதைப் புத்தகம் வெளியீட்டு விழா ஏப்ரல்-12, 2026 அன்று மாலை கலப்பை பதிப்பகம் கே.கே நகரில்...

சென்னை, திருப்பூர், கோவை, சேலம், ஈரோட்டில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு கழகத் தோழர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை, திருப்பூர், கோவை, சேலம், ஈரோட்டில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு கழகத் தோழர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன், ஏப்ரல்-2 மாலை 4 மணிக்கு, தியாகராய நகர் அமுதம் குடியிருப்பு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம‌.கி. எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பாரி சிவா, குடிஅரசு, சரண் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ததையொட்டி, திமுக பகுதிச் செயலாளர் ஏ. ஆர்.எம். காமராஜ் அவர்களின் அழைப்பின்பேரில், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பகுதிச் செயலாளர் சே. ராஜேஷ், பகுதி அமைப்பாளர்...

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

கடந்த 12.03.2026 வெளிவந்த இதழில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்த 1971 தேர்தல் வரலாற்றைப் பற்றிய கட்டுரையை வாசித்தேன். இன்றைய தலைமுறைக்கு பெரியாரை எடுத்துச் செல்லும் தேவைக்கேற்ப எழுதப்பட்ட அருமையான கட்டுரை அது. சமகாலத்தில் பெரியாரை மலினப்படுத்தும் நோக்கத்தோடு இங்கு பல்வேறு சங் பரிவார்களும், அவர்களின் அடிவறுடிகளும் முழுமூச்சாக செயல்படுவார்களெனில் அவர் வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்திருக்குமென்பதை புரிந்து கொள்ள உதவியது. கொள்கைத் தெளிவற்றும், கொள்கைப்பிடிப்பின்றி அலையாடிக்கொண்டிருக்கும் பொம்மை அரசியல் தலைவர்களும், அவதூறை மட்டும் அள்ளித்தெளிக்கும் பகுத்தறிவு குன்றியோரும் பெரியாரின் நிகரற்ற கொள்கைப் பிடிப்பிற்கும், இயக்கத்தை கட்டி எழுப்பிய அவரின் இயக்க அரசியலிற்கும் வெகு தூரத்தில் நிற்பதை பிரித்துப் பார்க்க உதவுகிறது. இனியும் இது போன்ற கட்டுரைகள், பெரியாரின் களமாடல்களென சமகாலத்தில் பொருந்திப்போகும் செயல்கள் அனைத்தையும் எழுத வேண்டுகோள் விடுக்கிறேன். இளைய தலைமுறையினர் திராவிட அரசியலைக் கற்கும் ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறது. -யதிந்தர், மதுரை. பெரியார் முழக்கம் இதழ்...

அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டா?

அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டா?

தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்; காவல்துறை இயக்குனர் ; உளவுத்துறை இயக்குனர் போன்ற உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி அவரிடம் அதிகாரிகள் இடமாற்றலை வலியுறுத்தினார் என்ற செய்தி ஏற்கனவே வந்தது. பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவது உறுதியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை கண்மூடித்தனமாக இடமாற்றம் செய்வதை எதிர்த்து மம்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் அதிகாரிகளின் இடமாட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் இந்த நாடகத்தை துவங்கி இருக்கிறது. உண்மையிலேயே உயர் அதிகாரிகளை இப்படி பந்தாடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா? இதுகுறித்து நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் பி.டி.டி ஆச்சாரி `இந்து’ ஆங்கில நாளேட்டில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். (ஏப்ரல்-3,2026) அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை சுட்டிக்காட்டுகிறோம். சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு அரசியல்...

அன்புமணியின் அற்பத்தனமான உளறல்கள்!

அன்புமணியின் அற்பத்தனமான உளறல்கள்!

பாமக தலைவர் அன்புமணி திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மதுவால் அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று வாட்ஸ்அப் வதந்தியை பேசியுள்ளார். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளள 2023 ஆண்டு சாலை விபத்துக்கான விவரத்தில் மது போதையில் நிகழ்ந்த வாகன விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை பதிவுகளில் தமிழ்நாடு 7வது இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு 320 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் உ.பியில் 3808-ஆகவும், ம.பி-1209 ஆகவும், ஒடிசா-649 ஆகவும் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. மதுபோதை வாகன விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 74 பேர் இறந்ததாகவும் 14வது இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. ஆனால் உ.பியில் இறந்தவர்கள் எண்ணிக்கை 1822. ஒடிசாவில் 254 மற்றும் ம.பியில் 219 பேர் மதுபோதையின் காரணமாக வாகன விபத்தில் இறந்துள்ளனர். உண்மையை மறைத்து பொய் பரப்புரையை செய்து வருகிறார் அன்புமணி. பெரியார் முழக்கம் இதழ் 16042026

மெட்ரோ இரயிலுக்கு தமிழ்நாட்டின் பங்கு அதிகம்!

மெட்ரோ இரயிலுக்கு தமிழ்நாட்டின் பங்கு அதிகம்!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டத்தை கொண்டு வரவில்லை என்று எடப்பாடி தோல்வி பயத்தில் கதறி வருகிறார். அதிமுக ஆட்சியில் தான் சென்னை போக்குவரத்து குறைக்க மெட்ரோ-2 கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.63,000 கோடி அனுமதி பெற்று திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகிறார். இதுவரை இந்தியாவில் ரூ 63,000 கோடிக்கு ஒரு திட்டத்துக்கு ஒன்றிய அரசிடம் இருந்து அனுமதி , கிடைத்தது இல்லை இதுவே முதல் முறை என்று இறுமாப்புடன் பேசுகிறார் எடப்பாடி. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வைத்து அடிக்கல் நாட்டினர் என்று பெருமிதத்துடன் திமுக ஆட்சியில் இப்படி எதாவது பெரிய திட்டத்தை சென்னைக்கு கொண்டு வந்தீர்களா என்று கேள்வி எழுப்புகிறார் எடப்பாடி. உண்மை என்ன தெரியுமா? சென்னையின் 2-ம் கட்ட மெட்ரோ பணிக்கான மதிப்பீடு 63,246 கோடி. இதற்கு எப்படி வருவாய் வருகிறது என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தந்த ஆண்டறிக்கையின்...

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம் தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு:  தமிழ்நாடு கடனில் தவிக்கிறதா? எடப்பாடிக்கு மறுப்பு

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம் தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு: தமிழ்நாடு கடனில் தவிக்கிறதா? எடப்பாடிக்கு மறுப்பு

தமிழ்நாட்டு தற்போது 5 இலட்சம் கோடி கடன் இருப்பதாக கதை சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது சகாக்கள். 2011-2020 வரை 9 ஆண்டுகள் எடப்பாடி ஆட்சியின் கடனே வாங்காது போலவும் திமுக 5 ஆண்டுகளில் கடன் வாங்கி குவிப்பது போல் பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா? 2006-2011 திமுக ஆட்சியில் ரூ.43,893 கோடி கடன்; 2011-2016 அதிமுக ஆட்சியில் ரூ.1,09,717 கோடி கடன். அதாவது முந்தைய ஆட்சியை விட 150 விழுக்காடு அதிகம் கடன் வாங்கியது அதிமுக ஆட்சி தான். எடப்பாடி முதலமைச்சராக இருந்த 2016-2021 அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன் ரூ.2,74,436 கோடி இது முந்தைய ஆட்சியை ஒப்பிட்டு பார்த்தால் 150 விழுக்காடு அதிகம் கடன் வாங்கியது எடப்பாடி ஆட்சி தான். 2021 ஆண்டு அறிக்கையின் படி தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.4,85 இலட்சம் கோடி. தற்போது திமுக ஆட்சி (2021-2026) ஆண்டில்...

விளம்பரத்துக்கு வீண்செலவு செய்யும் மோடி அரசு

விளம்பரத்துக்கு வீண்செலவு செய்யும் மோடி அரசு

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஷபி பரம்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த 5 ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்துக்கு ரூ2,447 கோடியை ஒன்றிய அரசு செலவிட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு ரூ.1.34 கோடி செலவாகியுள்ளது. மின்னணு, அச்சு ஊடகங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வாரியாக 2020-21 நிதியாண்டில் ரூ.409.55 கோடி, 2021-22 ஆண்டு ரூ.317.48 கோடி, 2022-23 ஆண்டு ரூ.408.37கோடி, 2023-24 ஆண்டு ரூ.656.6 கோடி, 2024-25 ஆண்டு ரூ.654.9 கோடி செலவிடப்பட்டுள்ளது. மோடி அரசின் விளம்பர செலவில் 5 அமைச்சகங்கள் மூலம் மேற்கொண்ட விளம்பரங்கள் மட்டுமே 60 சதவீதத்தை தாண்டிவிட்டன. கடந்த 2024-26 நிதியாண்டில் ரூ.526.90 கோடி விளம்ப ரத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. இதில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ரூ.208.35 கோடி, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் ரூ.42.51 கோடி, பாதுகாப்பு அமைச்சம் ரூ.31 கோடி,...

பெரு முதலாளிகளின் கடன் தள்ளுபடியில் மோசடி

பெரு முதலாளிகளின் கடன் தள்ளுபடியில் மோசடி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. வங்கிகள் மற்றும் நாட்டின் பெரு முதலாளிகளுக்கு வாராக் கடனை தள்ளுபடி செய்தது ரூ. 14 இலட்சம் கோடியா? ரூ.25 இலட்சம் கோடியா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கடந்த ஆகஸ்-7, 2023 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.பி கனிமொழி வாராக் கடன் குறித்து எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 2014-ம் நிதியாண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ரூ.14,56,226 வாராக் கடனை தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார். இந்த தகவலை ஒப்பிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக ரிசர்வ் வங்கிக்கு உண்மையில் வாராக் கடன் தள்ளுபடி எவ்வளவு? என்று குஜராத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர் மனு அளித்திருந்தார். ரிசர்வ் வங்கி கடந்த 9 ஆண்டுகளில் ரூ.25 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை தள்ளுபடி செய்ததாக தெரிவித்திருந்தது. ஆகவே நாடாளுமன்றத்தில்...

வடநாட்டு பிடிக்குள் தமிழ்நாட்டை அடகுவைக்கும் ஆபத்து!

வடநாட்டு பிடிக்குள் தமிழ்நாட்டை அடகுவைக்கும் ஆபத்து!

தொகுதி மறு வரையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வராது என்று மோடியே கூறிவிட்டார் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த எடப்பாடி, இப்போது தமிழ்நாட்டின் உரிமையையும் வெட்கப்படாமல் அடகு வைக்கிறார். இதனால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மிக மோசமாக பாதிக்கப்படுவதை கவலையோடு சுட்டிக்காட்டி கண்டனக் குரலை எழுப்பி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் உரிமைகளையே அடகு வைத்துவிட்டு முதலமைச்சர் நாற்காலியில் உட்கார துடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் ஆதாயத்திற்காக ஏற்கனவே அறிவித்த தனது கொள்கைகளை திடீரென்று மாற்றிக் கொண்டு, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வர ஒன்றிய ஆட்சி துடிக்கிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும் 106 ஆவது சட்டத் திருத்தத்தை மோடி ஆட்சி கொண்டு வந்தது. அப்போது இதை அமல்படுத்தும் காலத்தை தள்ளிப் போட்டது. 2006...

எடப்பாடி நடத்திய ‘பாஜக’ பினாமி ஆட்சி!

எடப்பாடி நடத்திய ‘பாஜக’ பினாமி ஆட்சி!

எடப்பாடி ஆட்சியில் நடைபெற்ற மக்கள் விரோத செயல்கள் ஒரு தொகுப்பு: தமிழ்நாட்டில் எடப்பாடி முதலமைச்சர் ஆக இருந்த காலத்தில் பாஜகவின் பினாமி ஆட்சி தான் நடந்தது. இதற்கு ஏராளமான சான்றுகளை பட்டியலிட முடியும். தமிழ்நாடு பாஜகவினரே எடப்பாடியை மிரட்டி வேலை வாங்கினார்கள். அவர்கள் வைத்த ஒவ்வொரு கோரிக்கைக்கும் எடப்பாடி பணிந்து போனார். உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறோம். தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட முக்கிய அதிகார பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களே இருந்தனர். தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் அரசு பணிகளில் சேரலாம் என்று அரசு தேர்வாணைய விதிகளை திருத்தி எழுதி தமிழ்நாட்டில் அரசு பணிகளிலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளிலும் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பணிகளிலும் ஏராளமான வடநாட்டுக்காரர்கள் தமிழ்நாட்டிற்கு உள்ளே நுழைய அதிமுக ஆட்சி எடப்பாடி ஆட்சி அனுமதித்தது. 12 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பதவிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் 80 விழுக்காடு வெளி மாநிலத்தவர்களையே தேர்வு...

கழக ஏட்டுக்கு வளர்ச்சிநிதி

கழக ஏட்டுக்கு வளர்ச்சிநிதி

ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முன்னெடுப்பில் பெரியார் முழக்க வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் ரூ.13, 500 வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளனர். ஆத்தூர் தோழர் கணபதி 17 பெரியார் முழக்கத்துக்கான ஆண்டு சந்தா ரூ.5,100 வழங்கியுள்ளார். தோழர் துரைராசு ரூ.3000 பெரியார் முழக்க சந்தா வழங்கியுள்ளார். பெரியார் முழக்கம் இதழ் 09042026

மேட்டூர் கிட்டு தந்தை காளியப்பன் இயற்கை எந்தினார்!

மேட்டூர் கிட்டு தந்தை காளியப்பன் இயற்கை எந்தினார்!

தோழர் மேட்டூர் கிட்டு அவர்களின் தந்தையார் காளியப்பன் 28.03.2026 அன்று இயற்கை எய்தினார். அவருடைய மறைவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி 30.03.2026 மேட்டூர் பாரதி நகரில் உள்ள இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்தார். கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச்செயலாளர் ப. இரத்தினசாமி, கோவை மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் சுதா, கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயக்குமார், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் ஐயப்பன், முத்துராஜ், ராஜா, அவினாசி ஆகியோர் கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 09042026

கடலூரில் கழகத் தலைவர் பேச்சு  பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது

கடலூரில் கழகத் தலைவர் பேச்சு பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது

கடலூர்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 28.03.2026 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகில் கடலூர் பெரியார் சிவா தலைமையில் பொதுகூட்டம் நடைப்பெற்றது. கடலூர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். அறிவழகன் முன்னிலை வகித்தார். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் ‘‘தகைசால் தமிழர்’’ தோழர் நல்லகண்ணு மற்றும் திராவிட இயக்கத் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியுமான அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி. மு. க தேர்தல் பணிக்குழு செயலாளர் வழக்கறிஞர் இள. புகழேந்தி அவர்களும் படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினர். உமாபதி, லதா, சத்யா, திராவிட மகிழன் கலைக்குழு ஆகியோரின் அரசியல் நையாண்டி மற்றும் கலைநிகழச்சி நடைபெற்றது. லோகு. அய்யப்பன் (திராவிடர் விடுகலைக் கழக புதுச்சேரி மாநில தலைவர்), இரா. உமாபதி (தலைமைக் குழு உறுப்பினர்), கே. எஸ். ராஜா...

ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஏற்காடு: 08.03.2026 அன்று ஏற்காடு பகுதியில் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்காடு டவுன், ஒண்டிக்கடை, மஞ்சக்குட்டை பகுதியில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது. ஏற்காடு ஒன்றிய செயலாளர் இரா. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் க. சரிதா முன்னிலை வகித்தார். தெருமுனைக் கூட்டத்தின் நோக்கம் குறித்து மக்களிடம் சேலம் மாவட்ட அமைப்பாளர் அ. பெருமாள், கோனூர் வைரமணி (திமுக தலைமைக் கழகப் பேச்சாளர், சேலம் மேற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவர்), தி.மு.க ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணித் தலைவர் ம. தேவபிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஏற்காடு பகுதி மக்கள் மட்டுமல்லாமல் ஏற்காடு சுற்றுலா பயணிகளும் பெருந்திரளாக நின்று கேட்டுச் சென்றனர். சுற்றுலா வந்த விசிகவை சேர்ந்த மகளிரணி தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு குடிநீர் வாங்கி கொடுத்து வாழ்த்தினார்கள். தெருமுனைக் கூட்டத்தை பொதுக்கூட்டத்தைப்போல த சுகந்தா ராமசந்திரன் (மஞ்சக்குட்டை பகுதியில் பஞ்சாயத்து தலைவர்), ராமசந்திரன்...

ஈரோடு, கடலூர், ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஈரோடு, கடலூர், ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஈரோடு: தெற்கு மாவட்டக் கழகம் சார்பாக தொடரட்டும் “தமிழ்நாட்டில் சாதனைகள், திமுக ஆட்சியை உறுதி செய்வோம்” என்கின்ற முழக்கத்தோடு அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஒருங்கிணைப்பில் 4 நாட்களில் 13 இடங்களில் தெமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தெருமுனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. 11.03.26 புதன் அன்று காலை சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் தெருமுனைக் கூட்ட மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, சண்முகப்பிரியன் (திமுக)ஆகியோர் சிறப்புரையாற்றினர். 2வது நாள் (12.03.26): வியாழன் அன்று கனி ராவுத்தர் குளம், அக்ரகாரம், காமராஜர் நகர், காந்திநகர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டங்களுக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டங்களில் அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் பரிமளராசன், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரையாற்றினார்கள்.மதிய உணவு சண்முகப்ரியன்...

பாஜகவின் ஊழல் ஒழிப்பு நாடகம்

பாஜகவின் ஊழல் ஒழிப்பு நாடகம்

ஊழல் ஊழல் என்று கூப்பாடு போடும் பாஜக ஊழல் ஒழிப்பு உத்தமர்களின் ஊழல் பட்டியல் இதோ: ஜார்கண்ட் மாநில நிலக்கரி ஊழலில் வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்த திலீப் ராய் 3 ஆண்டுகள் சிறை தண்டனை. கர்நாடகத்தில் டெண்டர் முறைகேட்டில் கர்நாடக பாஜக அமைச்சர் நேரு கெலேகர் 2 ஆண்டுகள் சிறை. 2013 வியாபம் ஊழலில் உச்ச நீதிமன்றம் சி.பி.அய் விசாரணைக்கு உத்தரவிட்டது. ம.பி பாஜக அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா 18 மாதம் சிறை. 1 கோடி 37 லட்சம் ரூபாய் ஊழல் வழக்கில் மிசோரம் பாஜக எம்.எல்.ஏ புத்த தன்சக்மா உட்பட 12 பாஜகவினருக்கு 1 ஆண்டு சிறை. 2001-ல் பாதுகாப்புத்துறை தளவாடங்கள் வாங்கும் ஊழலில் பாஜக தலைவர் பங்காரு லஷ்மணனுக்கு 7 ஆண்டு சிறை. பெங்களூர் மெகா சிட்டி ஊழலில் கர்நாடக பாஜக அமைச்சர் யோகேஸ்வரர் மீதான ஊழல் வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. ஒரு கோடி...

தொழில் முனைவோராக 3 இலட்சம் கிராமப் பெண்கள்; திமுகவின் தேர்தல் அறிக்கை!

தொழில் முனைவோராக 3 இலட்சம் கிராமப் பெண்கள்; திமுகவின் தேர்தல் அறிக்கை!

50 துறைகளில் 5 ஆண்டுகளில் செய்து முடித்த சாதனைகளையும்; அதே துறைகளில் தொடரப் போகும் ஆட்சியில் அதன் தொடர்ச்சியாக திட்டமிட்டுள்ள செயல் திட்டங்களையும் விரிவாக விளக்குகிறது தேர்தல் அறிக்கை. குறிப்பாக மகளிர் நலன் எனும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய செய்திகளை நாம் குறிப்பிட்டாக வேண்டும். மகளிர் உரிமைக்கான திட்டங்களை இலவசம் என்றும் பிச்சை என்றும் சில பேர் வழிகள் மேடைகளில் பேசி வருகிறார்கள். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கான ரூ.8,000 கூப்பன் திட்டத்தை ஊழல் திட்டமாக எடப்பாடி மலினப்படுத்தி வருகிறார். குளிர்சாதன பெட்டிகளை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கும் அவரது திட்டம் தான் ஊழலுக்கு வழி வகுக்கக் கூடிய ஒரு திட்டம். மாறாக இல்லத்தரசி திட்டம் 8000 ரூபாய்களுக்கான கூப்பன் மட்டும் வழங்குவதோடு அரசு கடமை முடிந்து விடுகிறது ; எந்தப் பொருளை வாங்குவது ; எந்தக் கடையில் வாங்குவது என்ற முழுமையான விருப்பஉரிமை பெண்களுக்கே வழங்கப்படுகிறது. இதில் பயனடைவது பெண்கள் மட்டுமல்ல;...

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்: எடப்பாடியின் முகத்திரையை கிழித்தார் முதல்வர்!

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்: எடப்பாடியின் முகத்திரையை கிழித்தார் முதல்வர்!

“எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப தோல்வி பயத்தில் தொடர்ந்து அவதூறுகளைப் பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தனது எஜமானர்களின் பாணியில் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார். சங்கிகளும் தம்பிகளும் பேசும் அதே பாணியில் தற்போது அதிமுகவும் பேசுகிறது. உண்மைக்கு மாறான பொய் தகவல்களை கூச்ச நாச்சமின்றி பொதுவெளியில் பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் பேசிய பொய் பட்டியல்: 2002 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் பிரதமராவதற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சொல்லும் திமுக இஸ்லாமியரான அப்துல் கலாம் அவர்களுக்கு எதிராக வாக்களித்தது என்று கூறினார். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் 2002 குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கலைஞர் அங்கம் வகித்தார். திமுக உட்பட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அப்துல் கலாம் அவர்களை ஆதரித்தது....

மகளிர் முன்னேற்றம் ஒன்றிய ஆட்சி பாராட்டுகிறது

மகளிர் முன்னேற்றம் ஒன்றிய ஆட்சி பாராட்டுகிறது

தமிழ்நாட்டில் 2021-இல் ஒரு லட்சத்து 1,26,000 ஆக இருந்த மகளிர் தொழில் முனைவோர் எண்ணிக்கை 2024-25-ல் 9,04,000 ஆக உயர்ந்தது! பி.ஜே.பி ஆளும் குஜராத் மாநிலத்தில் மகளிர் தொழில் முனைவோர் 2,18,000 பேர் மட்டுமே. ராஜஸ்தான் மாநிலத்திலும் 3,36,000 பேர் மட்டுமே! மகளிர் சாதனையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பெருமைகள் குன்றின் மேலிட்ட விளக்காய் புகழொளி பரப்புகிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மனித சமுதாயத்தில் ஏறத்தாழ சரி பாதியாக இருக்கும் மகளிர் சமுதாய முன்னேற்றத்தில் திராவிட இயக்கம் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதனால் இந்தியாவிலேயே அதிகமாக பெண்கள் கல்வி, அறிவியல், பொருளாதாரம், தொழில் முதலிய அனைத்திலும் ஆற்றல்கள் பெற்று பன்முகத் திறன்களுடன் வளர்ந்து இந்திய அளவில் முன்னிலை பெற்றுத் திகழ்கிறார்கள். ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில்...

தேர்தல் களத்திலும் மாநில உரிமைகளை மீட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தேர்தல் களத்திலும் மாநில உரிமைகளை மீட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இரண்டு மாநில உரிமைகளை மீட்டு தந்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட ஆர்.என் ரவியை எதிர்த்து சட்டமன்றத்தில் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக 9 திருத்தங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்‌ முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை எதிர்த்து வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். நெல்லை மாவட்ட பாஜக தலைவர் என்ற அடையாளத்தை மறைத்து பொதுநல வழக்கு என்ற முகமூடியோடு வழக்கை தொடர்ந்தார். வழக்கை ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் தேர்தலுக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்போதே விசாரணையை நடத்த வேண்டும் என்று மனு போட்டார்.தனது வழக்கு வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இதை திமுகவுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்றுவது அவர்களின் திட்டம். ஆனால் திட்டம் பாஜகவுக்கு எதிராகவே திரும்பி விட்டது; வழக்கை விசாரித்த தலைமை நீதிபதியின் அமர்வு துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை மாநில சட்டமன்றத்திற்கே உண்டு என்றும்; ஆளுநரிடமிருந்து...

குலுங்க குலுங்க சிரிக்கலாம்!

குலுங்க குலுங்க சிரிக்கலாம்!

முதல்வர் வேட்பாளராக களத்தில் இறங்கி உள்ள விஜய்க்கு வேட்பு மனுவைக் கூட ஒழுங்காக பூர்த்தி செய்யத் தெரியவில்லை. பெரம்பூரில் அவர் காட்டிய சொத்து மதிப்பு அடுத்த இரண்டு நாளில் திருச்சியில் எகிறி உள்ளது. இணை பொதுச்செயலாளராக உள்ள நிர்மல் குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே ஓய்வுபெற்ற உள்துறை செயலாளர் பெயருக்கு பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதுகிறார். தேர்தல் பரப்புரைச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தேவையில்லாமல் நடிகர் ரஜினியை சீண்டி விஜய்க்கு எதிராக ரஜினி ரசிகர்களை தூண்டி விட்டார். வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜூனா பரப்புரை கூட்டத்தில் குவாட்டர் பாட்டில் விழுந்தவுடன் உடனே தனது நுண்ணறிவை கொண்டு சிந்தித்து திமுக வீசியது தான் என்றார். வீசிய வரை மேடைக்கு கொண்டு வர வேண்டும் என்று சவால் விட்டார் ஆதவ் அர்ஜூனா. குவாட்டர் பாட்டில் வீசியவர்களை உடனே காவல்துறை பிடித்தது. ஆனால் அவர்கள் இரண்டு பேரும் விஜய் ரசிகர்கள் என்ற உண்மைதான் அம்பலமானது. விஜய் பரப்பரை...

தேர்தல் களத்தில் பார்ப்பனர்கள்!

தேர்தல் களத்தில் பார்ப்பனர்கள்!

1967-ல் ஆட்சிக்கு வந்த அண்ணா அமைத்த அமைச்சரவையில் ஒரு பார்ப்பனர் கூட இடம்பெறவில்லை. பார்ப்பனர் அல்லாத அமைச்சரவை என்று பெரியார் பாராட்டினார். இப்போது களத்தில் நிற்கும் திமுகவும் அதிமுகவும் ஒரு பார்ப்பன வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் பார்ப்பனர் இல்லை. விஜய் கட்சியான தவெகவில் 2 பார்ப்பனர்கள். பார்ப்பனக் கோடாரிக்காம்பு சீமான் கட்சியில் மட்டும் 6 பார்ப்பனர்கள் நாம் தமிழர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். இரண்டு கட்சிகளும் பார்ப்பனர்கள் நிறைந்த பகுதிகளான ரீரங்கம், மயிலாப்பூர் தொகுதிகளில் பார்ப்பன வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனாலும் பாஜக வேட்பாளர் பட்டியலிலும் பார்ப்பனர்கள் இடம்பெறவில்லை.‌ பார்ப்பனர்களை அமைச்சரவையில் சேர்த்தவர் எம்.ஜி.ஆர்தான். 1980,1986 ஆண்டுகளில் எச்.வி ஹண்டேவை மருத்துவத்துறை அமைச்சராக்கினார்‌ எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இரா.ராமநாதன் என்ற உச்சிக்குடுமி அடையாளத்துடன் வலம் வந்தவரை குடந்தை தொகுதியில் வேட்பாளராக்கினார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். 2016-ல் ஜெயலலிதா...

வேதமத மரபு திணிப்புகளை முறியடிக்க தமிழ்நாடு அரசின் திட்டங்கள்

வேதமத மரபு திணிப்புகளை முறியடிக்க தமிழ்நாடு அரசின் திட்டங்கள்

திமுக தேர்தல் அறிக்கையில் சமூக நீதி மற்றும் தமிழ் மொழி காத்தல் என்ற இரண்டு தலைப்புகளில் வெளிவந்த கருத்துக்களை சுட்டிக்காட்ட வேண்டும். “சமூக நீதி என்பது உயர்ந்தவர்களை கீழே இறக்கி விடுவது அல்ல; மாறாக பள்ளத்தை சமப்படுத்தி மேடாக்குவது தான்” என்ற பெரியார் விளக்கத்தோடு துவங்குகிறது தேர்தல் அறிக்கை. இரண்டு முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. ஜாதி வாரி கணக்கெடுப்பின் தரவுகள் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.20 இலட்சத்துக்கு மேல் ஊதியம் பெறும் உயர் பதவிகளில், ஆதிதிராவிடர்; பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை அமர்த்துவதற்கான திட்டமொன்றை தேர்தல் அறிக்கை முன்வைத்திருக்கிறது. அதாவது இப்படி வாய்ப்பு அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அரசே மானியங்களாகமுதலீடு செய்வதோடு ,வேறு பல சலுகைகளையும் வழங்கும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. தனியார் நிறுவனங்களின் உயர் அதிகார மையங்கள் விளிம்பு நிலை மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்படுகின்றன;‌ இதை மாற்றி...

10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் மூடப்பட்ட பள்ளிகள் 89400!

10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் மூடப்பட்ட பள்ளிகள் 89400!

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் 89400 க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடியுள்ளனர். இதில் 60 விழுக்காடு டபுள் இன்ஜின் சர்க்கார் என்று சொல்லப்படுகிற பாஜக ஆளும் மாநிலங்களில் தான். மத்தியிலும் நாங்கள் தான் மாநிலத்திலும் நாங்கள் தான் என்று கூப்பாடு போடுகிறவர்கள் ஆட்சியிலே பள்ளிகளை மூடி வருகின்றனர். இதே வேளையில் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் 2,72,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. PM SVANidhi சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 கோடி குழந்தைகள் பள்ளி கல்வி கட்டமைப்பில் இருந்து தங்களை விடுவித்துள்ளனர். ஆக கல்வி கட்டமைப்பை சீர்குலைத்து மீண்டும் இளைஞர்களை குழந்தைகளை, பெண்களை உடல் உழைப்பு சந்தைக்கு தள்ளுகிற வேலையை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பள்ளிகள் ஏன் மூடப்படுகின்றன என்று கேள்விகள் கேட்டால் குறைவான குழந்தைகளே படிக்க வருகிறார்கள் என்று காரணத்தைச் சொல்கிறார்கள். நாங்கள் பள்ளிகளை மூடவில்லை...

கோடி கோடியாக சங்கிகளுக்கு குவியும் வெளிநாட்டுநிதி!

கோடி கோடியாக சங்கிகளுக்கு குவியும் வெளிநாட்டுநிதி!

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று செயல்படும் நிறுவனங்களைக் குறிவைத்து ஒழிக்கும் முயற்சிகளில் ஒன்றிய ஆட்சி இறங்கியுள்ளது. இதற்கான FCRA சட்டத்தில் திருத்தங்களை செய்யும் மசோதாவை கடந்த மார்ச்-25ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக கிறிஸ்துவ நிறுவனங்களை முற்றாக ஒழித்துக் கட்டும் மசோதா இது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் சுட்டிக்காட்டி மசோதாவைத் திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த மசோதா அமலுக்கு வந்தால் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெறும் உரிமையை ஒன்றிய ஆட்சி ரத்து செய்ய முடியும். உரிமையை ரத்து செய்து விட்டால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நிதிக்கு மட்டும் தடையில்லை; மாறாக நிதி உதவியோடு நடத்தப்படும் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், சர்ச்சுகள் இவைகளை அரசு தானாகவே கைப்பற்றிக் கொள்ள முடியும். இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அடிப்படை உரிமைகளையே முடக்கும் கொடூரமான சட்டம்! வேத பார்ப்பனியம் “சூத்திர பஞ்சமர்களின்” கல்வி உரிமையைத்...

திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்வோம்! சென்னையில் சுற்றிச்சுழன்று கழகம் பரப்புரை!

திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்வோம்! சென்னையில் சுற்றிச்சுழன்று கழகம் பரப்புரை!

சென்னை மாவட்டக் கழகங்களின் (தென்சென்னை, வடசென்னை) சார்பில் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்…திமுக ஆட்சியை உறுதிசெய்வேம்! என்ற தலைப்பில் தினமும் 2 கூட்டங்கள் என 30 கூட்டங்களை நடத்தியுள்ளனர். அரசியல் நையாண்டி, பாடல்கள் என கலைநிகழ்ச்சிகளுடன் மக்கள் மத்தியில் திமுக ஆட்சியை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று விளக்கி வருகின்றனர். தோழர்கள் இரா. உமாபதி – சத்யா – கார்மேகம் – பொன்ராஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் தொய்வில்லாமல் மூன்று வாரங்கள் நடைபெற்றன. தெருமுனைக் கூட்டங்களின் தொகுப்பு: மார்ச் 3 முதல் மார்ச் 9 வரையிலான 12 கூட்டங்களை, ம.கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்) – இரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மார்ச்-4: மாலை 5 மணிக்கு, பிரீத்தி தலைமையில், மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலும், மாலை 7 மணிக்கு, அபிநந்தன் தலைமையில், கீழ்க்கட்டளை பெரிய தெருவிலும், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றன.கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், U2BRUTUS மைனர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திமுக:...

கலால் வரி குறைப்பு யாருக்காக?

கலால் வரி குறைப்பு யாருக்காக?

பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை அவசர அவசரமாக குறைத்து இருக்கிறது ஒன்றிய ஆட்சி. டீசலுக்கு முழுமையாக கலால் வரி ரத்தாகி இருக்கிறது. பெட்ரோலுக்கு 13 ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக குறைத்து இருக்கிறது. போர் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்காக கண்ணீர் சிந்தி இந்த விலை குறைப்பு நடவடிக்கையை ஒன்றிய ஆட்சி எடுத்து இருக்கிறது. மக்கள் பயன்பாட்டுக்கான பெட்ரோல் டீசல் விலை குறையாது; அப்படியே நீடிக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் பெட்ரோல் டீசல் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு முதலமைச்சர் மாநாட்டை மோடி கூட்டுவதாக அறிவித்து, மாநாடு கூடுவதற்கு முன்பே இந்த முடிவை ஒன்றியஆட்சி எடுத்திருப்பது தான். முக்கிய முடிவுகளை எடுத்து விட்டு பிறகு முதலமைச்சர்கள் மாநாட்டை ஏன் கூட்ட வேண்டும்? தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். ரஷ்யாவில் இருந்து மிகக்குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த காலத்திலும் ஒன்றிய ஆட்சி பெட்ரோல் டீசல்...

வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுகவா? அஇஅதிமுகவா?

வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுகவா? அஇஅதிமுகவா?

அதிமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகள் ஒரு ஒப்பீடு. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கின்ற பொழுது மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டது., 2018- 2019-லேயே மாணவர்கள் போராடினார்கள். மதுரையில் லேப்டாப்பை கொடுங்க, அந்த அம்மா கொடுத்தார்கள் நீங்க கொடுங்க என்று கேட்டார்கள். வழங்கவில்லை. திமுக அரசு வழங்கியது. 20 இலட்சம் மாணவர்களுக்கு வழங்கியது. 5 ஆண்டுகளில் 2016 -2021 வரைக்கு எந்த அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிமுக ஆட்சி குறைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையில் லிட்டருக்கு 3 ரூவாயும், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாயும் குறைத்தது திராவிட மாடல் அரசு. தேவைக்கேற்ப சிறுபான்மையிருக்கான விடுதிகள் துவக்கப்படும். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியது தொடங்கினார்களா! இல்லை. தற்போது திமுக அரசு ஹ்ஜ் பயணிகளுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு விடுதிகள் கொண்டுவரப்படும் என்றது அதிமுக தேர்தல் அறிகை சொன்னார்கள்....

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்! அண்ணனுக்கும் ஆலோசகருக்கும் இடையே நடக்கும் ஓர் கற்பனை உரையாடல்:

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்! அண்ணனுக்கும் ஆலோசகருக்கும் இடையே நடக்கும் ஓர் கற்பனை உரையாடல்:

அண்ணன்: ஏம்பா ஆட்சியில பங்கு தருவோம் என்று நீங்கதான் பேச சொன்னீங்க, இப்ப ஒரு கட்சியும் திரும்பிப் பார்க்கல்ல. இந்த லட்சணத்துல எனக்குதான் மக்கள் ஆதரவுன்னு பேச சொல்றீங்க மக்கள் நம்புவார்களா? ஆலோசகர்: கவலைப்படாதீங்க அண்ணே! ; மக்களை நம்ப வைக்கிறதுக்கு நம்ம கிட்ட ஒரு அய்டியா இருக்கு. அண்ணன்: என்ன அய்டியா? ஆலோசகர்: அப்படி கேளுங்க.”எனக்கும் ஸ்டாலினுக்கும் தான் போட்டி”அப்படின்னு அடிச்சு பேசுங்க எட்டு கட்டையில ஓங்கி பேசணும். அண்ணன்: இப்படி பேசினா மக்கள் நம்புவாங்களா? இப்படி பேசினதுக்கு அப்புறம் தான் எடப்பாடியை எதிர்க்க வச்சிட்டீங்க; “அதோ பார் விஜய் கொடி பறக்குது” அப்படின்னு புல்லரிக்க பேசினவர், இப்போ நடிகர்களை நம்பாதீங்கன்னு பேச ஆரம்பிச்சுட்டாரு. இதுதான் மிச்சம்! ஆலோசகர்: அத விடுங்க அண்ணே… அவர் எதிர்த்தால் என்ன? பாஜக நம்மை எதிர்க்கக் கூடாது; அதுதான் முக்கியம். ஸ்டாலின் மாதிரி பாஜகவுக்கும் நமக்கும் தான் போட்டி என்று பேசக்கூடாது. அதுதான் நமக்கு...

திருநர் சமூகத்தை இழிவுபடுத்துகிறது மோடி அரசு!

திருநர் சமூகத்தை இழிவுபடுத்துகிறது மோடி அரசு!

திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இது திருநங்கைகளின் சுய-அடையாளத்தை (self-identity) உறுதிப்படுத்தும் உரிமையைப் பறிக்கிறது என திருநர் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக , இந்தத் திருத்தம், தனது பாலினத்தைத் தானே அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையைக் குறிப்பிட்டிருந்த 2019ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 4(2)ஐ நீக்கப் பரிந்துரைக்கிறது. திருநர் சமூகத்தை குற்றவாளிகள் போல சித்தரிக்கும் தோற்றத்தையும் இந்த சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. “வயது வந்தவர்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டு, கடுமையான உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் பல்வேறு விதமான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, திருநர் அடையாளங்களை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பிற்காலத்தில் பிச்சை எடுத்தல் போன்ற செயல்கள் மூலம் அவர்களைச் சுரண்டுவதற்காகவே இது பெரும்பாலும் செய்யப்படுகிறது” என்று ஒன்றிய அரசாங்கம் கூறுகிறது. பொதுச்சமூத்தால் புறக்கணிக்கப்பட்டு அனைத்து நிலைகளிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் திருநர் சமூத்தை ஒரு அரசாங்கமே இவ்வளவு மோசமாகத்தான் மதிப்பிடுகிறது என்பது இந்த சட்டம் வெளிப்படுத்தியிருக்கும் முக்கிய...

ஈழத்தமிழர்கள் குடியுரிமை மற்றும் கூட்டாட்சிக்கு திமுக குரல்!

ஈழத்தமிழர்கள் குடியுரிமை மற்றும் கூட்டாட்சிக்கு திமுக குரல்!

திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்களின் கூட்டாட்சிக்கு குரல் கொடுப்போம் என்று வலியுறுத்தியுள்ளது. இலங்­கைத் தமி­ழர்­க­ளின் அர­சி­யல் சமூக உரி­மை­களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது திமுக. இதற்­காக ஆட்சி­யையே இழந்த வர­லாறு திமுகவுக்கு உண்டு. இலங்கையில் நடை­பெற்ற இனப்­­படு­கொலையில் இருந்து தப்பி, தமிழ்­நாட்டில் 40 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாகத் தங்­கி­யுள்ள தமி­ழர்­க­ளுக்கு இருப்­பி­டம், கல்வி, மருத்­து­வம் போன்ற உத­வி­களை மாநில அரசு வழங்கி வரு­கி­றது. அக­தி­கள் முகாமை மறுவாழ்வு மைய­மா­கப் பெயர் மாற்­றம் செய்துள்ளது. 630 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 10,469 வீடு­கள் கட்ட அனு­ம­தி­ய­ளிக்கப்பட்டு, இது­வ­ரை­யில் 5,920 வீடுகள் கட்­டி ­மு­டிக்­கப்­பட்டு முகாம் வாழ்மக்­க­ளுக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. மீத­முள்ள வீடு­க­ளுக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்சி­யில்… 2019–ஆம் ஆண்டு இந்­திய அரசு கொண்­டு­வந்த குடியு­ரி­மைத் திருத்­தச் சட்டத்­தின்­படி, இலங்­கைத் தமி­ழர்­கள் குடி­யு­ரி­மை கோரும் விண்­ணப்­பங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட மாட்­டாது என்ற நிலைப்பாட்­டைக் ­கை­வி­டு­மாறு ஒன்­றிய அரசை...

அழகிரி எனும் அஞ்சா நெஞ்சன்!

அழகிரி எனும் அஞ்சா நெஞ்சன்!

பெரியார் இயக்கத்தின் போர் படைத் தளபதி‌ பட்டுக்கோட்டை அழகிரிசாமி. அழகிரி அவரது நினைவு போற்றும் கூட்டங்களை பெரியார் இயக்கங்கள் நடத்தி வருகின்றன. அவர் பெயரோடு பிரிக்க முடியாது இணைந்து நிற்பது “அஞ்சா நெஞ்சன்” என்ற பட்டம். பேச்சிலும் செயலிலும் இதை உறுதிப்படுத்தியவர். முதல் உலகப் போரில் இராணுவத்தில் சேர்ந்தார். படையிலிருந்து விடுவித்துக் கொண்டு பட்டுக்கோட்டையில் தனது சித்தப்பா வேணுகோபால் இல்லத்தில் தங்கினார். அப்போது நெற்றியில் நாமம் தரித்து கதர் ஆடை உடுத்தி காந்தியின் சீடராக இருந்தார். அக்காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் வ.வே.சு அய்யர் காங்கிரஸ் நிதியில் நடத்திய சேரன் மாதேவி குருகுலத்தில் நிகழ்ந்த வர்ணாஸ்ரம கொடுமைக்கு எதிராக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் போர்க்கொடி உயர்த்திய காலகட்டம். இந்த சம்பவம்தான் அழகிரி கண்களைத் திறந்தது. பெரியாரின் பார்ப்பனர் அல்லாதார் போராட்டங்களின் நியாயங்களை உணர்ந்தார். பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டார். அவரது வலிமையான ஆற்றல்மிகு மேடைப்பேச்சுக்கள் தமிழ்நாட்டை அதிர வைத்தன. அவரது கூட்டங்களில்...

திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு; அரசுத்துறை கெடுபிடிகள் எளிமையாக்கப்படும்

திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு; அரசுத்துறை கெடுபிடிகள் எளிமையாக்கப்படும்

ஒற்றைச் சாளரத்தின் (Single Window) வழியே அனைத்து சேவைகளும் வழங்கப்படும். இருந்த இடத்தில் இருந்தபடியே இணையத்தில் ஒரு சாளரத்தைத் திறந்து, தங்களுக்குத் தேவையான சேவையைச் சுட்டிச் சொடுக்கினால், அதற்கான தகவல்களுடன் விண்ணப்பப் படிவமும் வழங்கப்படும். அதனை நிரப்பி பதிவேற்றம் செய்தால் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதற்கான சான்று அப்போதே அளிக்கப்பட்டு விரைவில் கோரிய சேவையும் நிறைவேற்றப்படும். கணினித் தொழில்நுட்பத்தின் மூலம் அரசு சேவை வழங்குவதை இத்தகைய நடைமுறை மூலம் எளிமையாக்க உறுதியளிக்கிறோம் இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்…. அரசு விதிமுறைகள் சான்றுகள் ஆகியவற்றில் எவை தற்காலத்தில் தேவையற்றவை என்று ஆய்வு செய்து அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வழங்க வேண்டிய சேவைகளில் மக்கள் சந்திக்கும் குறைபாடுகளை கோரிக்கை மனுவின் நிலை ஆகியவற்றை ஒரு சாளரத்தின் (Single Window) வழியை எடுத்துக் கூறித் தேர்வு பெறும் நடைமுறை உருவாக்கப்படும். பொதுமக்களுக்கு அரசிடம் இருந்து தேவைப்படும் சேவைகளை எளிமையாகப் பெரும் வகையில்...

அகில இந்திய ஒதுக்கீடுகளுக்கு திமுக எதிர்ப்பு!

அகில இந்திய ஒதுக்கீடுகளுக்கு திமுக எதிர்ப்பு!

‘குலத்­துக்கு ஒரு நீதி என்­பது அநீ­தியே’ என்பதை முழங்கி எழுந்­ததே திரா­விட இயக்கம். “சமூ­க­நீதி என்பது சமு­தா­யத்­தில் முன்னே உயர்ந்த­வர்களை கீழே இறக்கி விடு­வது அல்ல. பள்­ளத்­தை சமப்படுத்தி மேடு ஆக்­கு­வதே சமூ­க­நீதி எனப்­ப­டும் இட­ஒ­துக்­கீடு” என விளக்­கி­னார் தந்தை பெரி­யார். இட ஒதுக்­கீடு எனப்­ப­டும் சமூ­க­நீ­திக் கொள்கையானது யாரா­லும் கைவைக்க முடி­யாத கொள்கை­யாக மாற திரா­விட இயக்­கத்­தின் தொடர் போராட்டங்­கள் தான் கார­ணம். இது இந்­திய அரச­மைப்­புச் சட்­டம் ஏற்­றுக்­கொள்­ளும் கொள்கையாக மாற­வும் திரா­விட இயக்­கத் தலைவர்­க­ளின் போராட்­டமே கார­ணம். இன்று அகில இந்­தியா முழு­மைக்­கும் இக்­கொள்கை நடை­மு­றைக்கு வர முன்­னோடி மாநி­ல­மா­கத் தமிழ்­நாடே இருந்­தது. சமூகநீதி கண்­கா­ணிப்புக் குழு அமைத்­தது திரா­விட மாடல் அரசு. இதன் தொடர்ச்சி­யாக மேலும் பல முன்­னெ­டுப்­பு­களை எடுக்க வேண்டியது அவ­சியம் என திரா­விட முன்­னேற்­றக் கழகம் கருதுகி­றது. இதன் தொடர்ச்­சி­யாக, திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் இட­ஒ­துக்­கீட்டை முழு­மையாக எல்லா நிலை­க­ளி­லும் நடை­மு­றைப்­ப­டுத்­திட...

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற ஒரே குற்றச்சாட்டையே அஇஅதிமுக, தவெக கூறி வருகின்றனர். இதற்கு ஒரு ஆணித்தர மறுப்பு! பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு மோசமான நிலையில் உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி வருகிறார். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2023 பதிவின்படி இந்தியாவில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் உத்தரப்பிரதேசம் 66381 சம்பவங்கள் நடந்துள்ளது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா -47101 சம்பவங்கள் நிகந்துள்ளது. மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் -45450 வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளது. முதல் 10 இடங்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமாக பெண்களுக்கு கொடுமைகள் நடந்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. குஜராத்தில் 2016-2021 வரை காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 41,627. 2021-ம் முதல் தற்போது தேசிய குற்றப்பதிவேட்டில் NCRB குஜராத் பதிவுகளே இல்லை. ஒரு நாட்டின் பிரதமரின் சொந்த மாநிலத்தில்...

தெருக்களுக்கு ஜாதிப்பெயரை நீக்கக்கோரி மனு!

தெருக்களுக்கு ஜாதிப்பெயரை நீக்கக்கோரி மனு!

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 6 தெருக்களில் ஜாதிப் பெயர் பலகை அடையாளமாக வைத்ததை கண்டித்து 09.03.2026 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், கவியரசு ஆகியோர் இருந்தனர். – பெரியார் முழக்கம் இதழ் 26032026

லெனின் சுப்பையா நினைவுநாள்

லெனின் சுப்பையா நினைவுநாள்

பெரியார் சிந்தனையாளர் இயக்கம் நடத்திய லெனின் சுப்பையா நினைவேந்தல் படத்திறப்பு மற்றும் புதுச்சேரி மண்ணில் ஓபிசி,எஸ்.சி,எஸ்.டி பூர்வீகப் பெண்களின் (தாய் வழி) பிள்ளைகள் அகதிகளாக? நீதிக்கேட்போம்! உரிமை மீட்போம் பொதுக்கூட்டம் 21.02.2026 அன்று மாலை 5-மணிக்கு சுதேசி மில் புதுச்சேரியில் நடைபெற்றது. விடுதலை கலைக்குழு தோழர்கள் பாடல்களால் லெனின் சுப்பையா அவர்களின் சமூக அரசியல் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பாடல்கள் வழியாக உணர்வு அலைகளில் காண்போரை மூழ்கடித்தார்கள். பாடல்களுக்கு இடையே இணைப்புகளையும் வழங்கினார்கள். திராவிட மகிழன் குழுவினருடன் இணைந்து லெனின் சுப்பையா பாடல்களை பாடினார். மகேசு (மக்கள் மன்றம்) லெனின் சுப்பையா மற்றும் செந்தாரகை படத்தினை திறந்து வைத்து பாடல்கள் வழியாக பாமரனுக்கும் உணர்வூட்டியவர் லெனின் சுப்பையா என்றும் புதுச்சேரி தாய்வழி பிள்ளைகள் பிரச்சனையில் போராட்டமே தீர்வு என்றார். கோவன் (செயலாளர் மகஇக) தன் பாடல்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு...

ஸ்ரீராம்-காயத்ரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா!

ஸ்ரீராம்-காயத்ரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா!

சேலம் மாவட்டம் R.T.கிருஷ்ணன் – கவிதா ஆகியோரின் மகன் ஸ்ரீராம் அவர்களுக்கும், சென்னை மாவட்டம் R.சிவகுமார் – சாந்தகுமாரி ஆகியோரின் மகள் காயத்ரி அவர்களுக்கும், 15.03.2026 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் அயோத்தியாபட்டினம் வாசு மஹால் திருமண மண்டபத்தில், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலையில், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்தார். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், செட்டியூர் மாரி, கொளத்தூர் கணேசன், அமஜத்கான், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சுதர்சன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் நாகராஜ், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், கீதா, அமுதன், ஆனந்த், வெங்கடேஷ், இனியா, நந்தினி, தமிழ்நாடு மாணவர் கழக கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சுகந்தன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்....