நீட் தேர்வை நீக்கு; கழகத் தோழர்கள் போராட்டம்
கோவையில்: ஜூலை-22 அன்று அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கோவை மாவட்டக் கழகம் சார்பில் மாநகரச் செயலாளர் வெங்கட் கண்டன உரை ஆற்றினார். ஜூலை-26, அன்று மாலை 5 மணி அளவில் கோவை காந்திபுரம் பகுதியில் அனைத்துக் கட்சிகள் சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்களுடன் எழுச்சியோடு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது கோவை மாவட்டக் கழக தோழர்கள் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் பங்கேற்றனர். சேலத்தில்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் அனைத்து இந்திய இளைஞர்கள் அனைத்து இந்திய மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் ஜூலை 22, 2026 முதல் ஜூலை-24 வரை சேலம் மாவட்டம் தொடர்வண்டி நிலையம் அருகில் நடைபெற்றது. இரண்டு நாள் காத்திருப்பு போராட்டத்தில் சேலம் மாவட்டச் செயலாளர் டேவிட், தோழர்கள் சுதர்சன் மற்றும் ஆனந்தி கலந்து கொண்டனர். பொள்ளாச்சியில்: நீட் முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் செய்து வருகிற மாணவர்கள் மீது...
