தேர்தல் பரப்புரையில் பம்பரமாய் சுழலும் கழகத் தோழர்கள்
தமிழ்நாட்டில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து கழகத் தலைமைக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்தும் விதமாக திருப்பூர்,சேலம்,சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தயாராகி வருகின்றனர். தினமும் 3 முதல் 4 தெருமுனை கூட்டங்கள், பொதுகூட்டங்கள் என கழகத் தோழர்கள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் நாள் நடைபெற்ற பரப்புரை செய்திகளின் தொகுப்பு: திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் ‘தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!’ என்றத் தலைப்பில் 27.02.2026 அன்று புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம்- பெரியார் சிலை, சிடிசி வளைவு,வீரபாண்டி ஆகிய இடங்களில் நாள் முழுவதும் தொடர் பரப்புரைக் கூட்டங்கள் முகில்ராசு முன்னிலையில் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் பரப்புரை தொடக்கமாக கழகம் சார்பாக நல்லகண்ணு அவர்களுக்கு கழகப் பொருளாளர் சு.துரைசாமி...
