Category: சிவகங்கை

காரைக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்!

காரைக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்!

‘பெரியார் எனும் அறிவியல்’ என்ற தலைப்பில் பயிலரங்கம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள குறளரங்கத்தில் 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. முதல் வகுப்பாக EH you tube channel, கழக பேராவூரணி நகர அமைப்பாளர் கலைச்செல்வன் ‘மனித பரிணாமமும் பகுத்தறிவும்’ என்ற தலைப்பில் ஆரம்ப காலம் முதல் இப்பொழுது இருக்கும் காலம் வரை மனிதன் பரிணாமம் அடைந்ததைப் பற்றி அறிவியல்பூர்வ விளக்கவுரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘அறிவியல் பார்வையில் பெரியாரியம்’ என்ற தலைப்பில் பார்பனர்கள் நம் மக்களை கடவுள் பெயரைச் சொல்லி அடிமைப்படுத்தியதையும், சுரண்டி பிழைப்பு நடத்தியதையும் அதிலிருந்து பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களிடம் எடுத்துக்கூறி மீட்ட வரலாற்றைப் பற்றியும் விளக்கவுரையாற்றினார். பெரியார் தொண்டர் சிற்பி இராசனின் ‘மூடநம்பிக்கையும் அறிவியலும்’ என்ற தலைப்பில் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கடவுள் என்ற பெயரால் சாமியார்கள் மக்களை ஏமாற்றும் வகையிலும், பணம் சேர்க்கும் வகையிலும் செய்யும்...

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும், அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று ‘பெரியார் பணி செய்வதே என் கடன்’ என்ற லட்சிய வெறியோடு ஒரு வாரகாலம் பயணித்த கழகச் செயல் வீரர்களை இம்மாநாடு பாராட்டுகிறது, மகிழ்கிறது.இந்தப் பயணத்தில் தோழர்கள் செலுத்திய உழைப்பு வீண் போகாது; வரலாற்றில் பதியப்படும் என்று இந்த மாநாடு பெருமை அடைகிறது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

காரைக்குடியில் கருத்தரங்கம்

காரைக்குடியில் கருத்தரங்கம்

இந்தி இந்துத்துவம் இந்தியா பற்றிய பெரியாரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் 8.2.25 அன்று கருத்தரங்கம் காரைக்குடியில் நடைபெற்றது. இதில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இந்துத்துவம் இந்தி இந்தியா பற்றிய பெரியாரின் சிந்தனைகளையும் நாம் இதில் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதனையும் விரிவாக பேசினார். கருத்தரங்கத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், பேராசிரியர் சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் கருத்துரையாற்றினர். நிகழ்வு ஏற்பாட்டை மார்க்சு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு செய்தது. தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாவட்ட பொறுப்பாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார் திராவிடர் விடுதலை கழகத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பெரியார் முத்து தலைமையில் வைத்தார், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாவெல் மற்றும் திவிக இளங்கோவன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்கள். இந்நிகழ்வில் திவிக மாவட்ட தலைவர் முத்துக்குமார், ரமேஷ், இளங்கோ, திருநாவுக்கரசு, அன்புக்கரசு, தவச்செல்வன் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்த பேராசிரியர் கோச்சடை,...

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

சேலம் மேற்கு: சேலம் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பறை முழக்கத்தோடு தொடங்கிய இந்நிகழ்விற்கு மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக மேட்டூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி, அறிவுமதி, தேன்மொழி, காயத்ரி ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தோழர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா கொள்கை முழக்கங்களை எழுப்ப.. தொடர்ந்து தோழர்கள் கொள்கை முழக்கங்களை எழுப்பினர். அதன் பிறகு தோழர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணி சமத்துவபுரம் பெரியார் சிலையில் தொடங்கி நங்கவள்ளி, மேட்டூர் RS, மேட்டூர், கொளத்தூர், காவலாண்டியூரில் நிறைவுபெற்றது. நங்கவள்ளி...

பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

காரைக்குடியில் கழகத் தோழர் இளங்கோவன் புதிதாகக் கட்டிய தனது இல்ல வளாகத்துக்குள் பெரியார் மார்பளவு சிலை ஒன்றை நிறுவி, அதன் திறப்பு விழாவுக்காக கழகத் தலைவர் கொளத்தூர் மணியை அழைத்திருந்தார். ஜன. 29 அன்று இல்லத் திறப்புக்கு முன்பே சிலையை அதிகாரிகள் அகற்றி விட்டனர். காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து வந்து அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டுள்ளது; அகற்றுமாறு கோரினர். வீட்டின் வளாகத்துக்குள் சொந்த இடத்தில் வைத்துள்ள சிலையை ஏன் அகற்ற வேண்டும்? எதற்காக அனுமதி? என்று கேட்டு நீதிமன்றத் தீர்ப்புகளையும் கழகத் தோழர் எடுத்துக் காட்டினார். அதிகாரிகள் அது பற்றி கேட்காமலேயே சிலையை அகற்றி மூட்டையில் கட்டி வருவாய்த் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். பெரியார் சிலை அகற்றப் பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பிரச்சினை உடனடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கோட்டையூரில் கழகத் தோழர் இல்லம் அருகே தான் பா.ஜ.க.வின் எச். ராஜா பண்ணை இல்லம் இருக்கிறது....

சிவகங்கை மண்டலத்தில் தொடர் பரப்புரை  மாநில கல்வி உரிமைகளைப் பறித்து, மதவெறியைத் திணிக்கிறது, ஆரிய மாடல்

சிவகங்கை மண்டலத்தில் தொடர் பரப்புரை மாநில கல்வி உரிமைகளைப் பறித்து, மதவெறியைத் திணிக்கிறது, ஆரிய மாடல்

மதுரை – சிவகங்கை : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” தெருமுனைக் கூட்டங்களின் நிறைவாக சிவகங்கையில் 13.05.2022 வெள்ளி மாலை 5.00 மணியளவில் சிவகங்கை சண்முக ராஜா கலையரங் கில் இராமச்சந்திரனார் நினைவரங்கத் தில் மண்டல மாநாடு நடை பெற்றது. மண்டல மாநாட்டிற்கு நா.முத்துக் குமார் தலைமை தாங்கினார். தவச் செல்வன், ரமேஷ் முன்னிலை வகித்தனர். அறிவுமதி வரவேற்புரை யாற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநிலப் பொரு ளாளர் திருப்பூர் துரைசாமி, மதுரை மாவட்டச் செயலாளர் மணியமுதன், மா.பா., மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் பெரியார் முத்து நன்றி கூறினார். முன்னதாக மாநில உரிமையை பறிக்காதே! கல்வி உரிமையை தடுக்காதே! மத வெறியை திணிக்காதே! எனும் முழக்கத்தோடு நமக்கான அடையாளம் திராவிட மாடல் தெருமுனைக்...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை,சிவகங்கை,விருதுநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 24.12.205 அன்று மதுரையில் வழக்கறிஞர் தோழர் பொற்கொடி அவர்கள் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்றது. மதுரையில் பிப்ரவரி மாதம்  ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” நடத்துவது குறித்து கழக தோழர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.மதுரை மாவட்ட செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் முன்னிலை வகித்தார்.மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளை சாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். விருதுநகர் ஜெயக்குமார்,செந்தில்குமார்,சிவகங்கை நா.முத்துக்குமார், கா.தர்மலிங்கம்,ராஜா,ராமகிருஷ்ணன்,அருண்குமார்,திருநாவுக்கரசு,  நித்தீஷ்,செந்தில்குமார்,மஜீத் உள்ளிட்ட தோழர்கள் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்