ஊடகவியலாளர்களிடம் முதல்வர் கேள்வி தமிழ்நாட்டைப் போல் சாதனைகள் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா?

இங்கு ஏரா­ள­மான ஊட­க­வி­ய­லா­ளர்­கள் இருக்கிறீர்­கள். 11.19 சத­வி­கி­தம் வளர்ச்சி என்பதை, தமிழ்­நாட்டைத் தவிர வேறு எந்த மாநி­லத்­தால் சாதிக்க முடிந்­தி­ருக்­கிறது?அதுவும் எப்படிப்பட்ட சூழ­லில் இதை சாதித்திருக்கிறோம்? ஜன­நாயகத்­திற்­கும், கூட்டாட்­சிக்­கும்சிறி­தும் மதிப்பு தராத பா.ஜ.க. ஆட்சி ஒன்­றி­யத்தில் ஆளு­கி­றது. எதிர்க்­கட்சிகள் ஆளக்­கூ­டிய மாநிலங்­களை, எந்­த­ள­விற்கு வஞ்சகத்­து­டன், ஓரவஞ்­ச­னையுடன் அவர்­கள் Approach செய்கி­றார்­கள் என்று நான் உங்­களுக்கு விளக்கி சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை, உங்களுக்கே அது நன்­றாகத் தெரி­யும்.

ஆளு­நர்­கள் மூல­மாக நிர்­வா­கச் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தில் தொடங்கி, செயற்­கை­யான நிதிச் சுமையை உரு­வாக்கி மாநி­லங்­களை முடக்க நினைப்­பது வரைக்­கும், அத்­தனை செயல்­க­ளை­யும் செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இது மட்­டும்­தான் அவர்­களுக்குத் தெரிந்த Politics.

ஆனால், இதை­யெல்­லாம் அர­சி­யல் தளத்திலும், ஆட்சி அதி­கா­ரத்­தி­லும் எதிர்­கொண்டு, “வளர்ச்சி அர­சி­யல் என்­றால், தமிழ்­நாட்டைப் பாருங்கள்” என்று சொல்­லும் அள­விற்கு Development Politics–க்கானஅடை­யா­ள­மாக தமிழ்­நாடு வளர்ந்திருக்­கிறது. அது­வும் ஒரு தரப்­புக்­கான வளர்ச்சி இல்லை; ‘எல்­லாருக்கும் எல்லாம்’ என்ற பரந்துபட்ட வளர்ச்சி! பெண்கள், மாணவர்கள், இளை­ஞர்­கள், உழவர்­கள், தொழிலா­ளர்கள், நெச­வா­ளர்­கள், தொழில் முனை­வோர், அரசு ஊழி­யர்­கள், ஆசி­ரியர்கள், திரு­நர்­கள், மாற்றுத்தி­ற­னா­ளி­கள் என்று எல்லோரை­யும் ‘Empower’ செய்­யும் Politics–யை நாங்­கள் முன்­னெ­டுத்து இருக்­கி­றோம்.

நாங்­கள் செய்­தி­ருப்­பது மாதி­ரி­யான திட்டங்களை வேறு எந்த மாநி­லத்­தி­லா­வது செய்து இருக்­கி­றார்­களா? ‘Growth’ சாதா­ர­ணமாக வந்­து­வி­டுமா? இத்­தனை திட்­டங்­களை­யும் வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்­து­வ­தால்­தான் 11.19 சத­வி­கி­தம் ‘Growth’ சாத்­தி­ய­மா­கி­யி­ருக்­கி­றது!

தமிழ்­நாட்­டில் எந்­தக் குடும்­பத்தை எடுத்துக்கொண்­டா­லும், அவர்­க­ளில் ஒருவராவது நம்மு­டைய அர­சின் திட்டங்களால் பயனடைந்து கொண்­டி­ருப்­பார்கள்! அதனால்தான், ஆட்சிக்கு ஆத­ர­வான மன­நிலை­யில் மக்களை இன்றைக்கு நாங்­கள் சந்திக்கி­றோம்! தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியும், தனித்துவமும், உண்மையான வளர்ச்சி அரசியல் என்­றால் என்ன என்று இந்தி­யா­வின் மற்ற மாநி­லங்­க­ளுக்கு காண்பிக்கும் செயல்பாடுக­ளும் பா.ஜ.க.வை கடு­மையாக எரிச்­சல் அடைய வைக்­கி­றது. ஆனால், அவர்களின் சதி அர­சி­யல் Expose ஆகி, அவமானப்­பட்டு, அசிங்­கப்­பட்டு நிற்கிறார்­கள்.

பா.ஜ.க.வின் ‘Pattern’ என்ன என்று தி.மு.க. மட்­டு­மல்ல ஒட்­டு­மொத்த தமிழ்­நாடே உணர்ந்திருக்கிறது. அவர்­கள் மேல் மக்களுக்கு நம்பகத்தன்மை கிடை­யாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி, ஆட்­சி­களைக் கவிழ்த்து, தங்க­ளின் அர­சைக் கொண்டு­ வ­ரப் பயன்படுத்திக் ­கொண்ட‘வாஷிங் மெஷினை’, கொண்டு வந்து கூட்­டணி அமைத்­தி­ருக்­கி­றார்­கள். அவர்க­ளின் N.D.A. கூட்­டணி என்­பது முழுக்க முழுக்க ஊழல்வா­திகளை மிரட்டி அமைக்கப்பட்­டுள்ள கூட்டணிதான்.

கடந்த அ.தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் இருந்த முன்­னாள் அமைச்­சர்­கள் பல பேர் ரெய்டுகளுக்கு ஆளா­ன­வர்­கள். 10 பேர் மேல் D.V&A.C–யில் வழக்­குகள் இருக்­கிறது. ஆனால், கூட்­ட­ணிக்­காக அவர்­களை இப்போது பாதுகாத்துக் கொண்­டி­ருக்­கிறார்­கள். இன்­னும் சொல்ல வேண்­டும் என்­றால், முன்னாள் அமைச்சர்­கள் சில பேர் மேல் F.I.R. கூட பதிவு செய்ய விடா­மல் நிறைய ஆண்­டு­க­ளாக ஆளு­நர் மூல மாக நிறுத்தி வைத்­தி­ருக்­கி­றார்­கள்.

இந்த இலட்­ச­ணத்­தில், இப்­போது E.D., I.T., C.B.I. ஆகி­ய­வற்றை வைத்து எங்களையும் மிரட்ட­லாமா என்று பார்க்­கி­றார்­கள். என்னதான் பா.ஜ.க. E.D., I.T., C.B.I. என்று தன்­னு­டைய படைப் பரி­வா­ரத்தை அழைத்து வந்­தா­லும், அதை ஒரு கை பார்க்க நாங்­க­ளும் தயா­ரா­கத் தான் இருக்­கிறோம்.

E.D. இது­வ­ரைக்­கும் பதிவு செய்த 8000-க்கும் அதி­க­மான வழக்­கு­க­ளில் எத்­தனை வழக்குகள் முழு­மை­யாக நடை­பெற்­றி­ருக்­கிறது? அவர்களின் உண்­மை­யான ‘Conviction rate’ என்ன? ஊழல் குற்­றச்­சாட்டிற்கு உள்­ளானவர்கள் எல்­லோ­ரும் உட­ன­டி­யாக யாரு­டன் கூட்டணி சேருகிறார்கள்? புல­னாய்வு முக­மைகளை இவ்­வ­ளவு மலி­வாக பயன்­ப­டுத்­தி­தான் பா.ஜ.க. அர­சி­யல் சது­ரங்க வேட்டை நடத்­திக் கொண்டிருக்கி­றது. அதற்கு N.D.A. கூட்­டணி என்று பெயர்.

மக்­கள் பா.ஜ.க.வை நம்ப வேண்­டும் என்று, பழனி­சாமி போன்ற ஆமாம் ­சாமியை பா.ஜ.க.வின் கிளைக் கழ­கச் செய­லா­ள­ராக வைத்­துக் கொண்டு ‘டப்பா எஞ்­சின்’ எடுத்துக் ­கொண்டு உள்ளே வர நினைக்­கி­றார்­கள்.

பாஜக நுழைந்தால்

பா.ஜ.க. உள்ளே நுழைந்­தால், எப்­ப­டி யெல்லாம் நடந்­து­கொள்­வார்­கள் என்பதைதான் இப்போது அண்­மை­யில் மகா­ராஷ்­டி­ராவில் பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றோம். மாநிலக் கட்சியை உடைத்து ஆட்­சிக்கு வந்த அவர்கள், இப்போது பிற்படுத்தப்­பட்ட முஸ்­லீம்­க­ளுக்கான 5 விழுக்காடு இட­ஒ­துக்­கீட்டை இரத்து செய்திருக்­கி­றார்­கள்.

“மக­ளிர் உத­வித்­தொகை திட்­டத்­தில் 28 இலட்சம் பெண்­களை நீக்­கி­யி­ருக்­கி­றார்­கள். இதைத் தான் தமிழ்­நாட்­டி­லும் செய்ய நினைக்கிறார்கள். அதற்கு அவர்­கள் பயன்­ப­டுத்­திக்­கொள்ள நினைக்­கும் ‘ட்ரோஜன் குதிரை’ தான் அ.தி.மு.க. அத­னால்­தான் பழ­னி­சாமி அவர்­கள் வழங்­கும் எந்த வாக்­கு­று­தி­யை­யும் மக்­கள் நம்பத் தயா­ராக இல்லை. மண்­கு­தி­ரையை நம்பி யாரா­வது ஆற்றில் இறங்­கு­வார்­களா? நிச்­ச­யம் மாட்­டார்­கள்!

எங்­களைப் பொறுத்­த­வ­ரைக்­கும் எங்­களின் இலட்சி­ங்­க­ளும் கட­மை­க­ளும் மிக­வும் பெரி­யது. அதை நோக்­கிய பய­ணம்­தான் எங்­க­ளு­டைய தேர்­தல் வெற்­றி­கள். “எல்­லா­ருக்­கும் எல்­லாம்”, “எங்­கும் தமிழ் – எதி­லும் தமிழ்”, “அனைத் துத் துறை வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி” என்று மக்­கள் நலத் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம்.

அடுத்து, ஒன்­று­பட்ட இந்­தி­யா­வில், மாநிலங்களுக்­கான உரி­மை­க­ளைப் பெற்­றுத் தந்து, உண்மை­யான கூட்­டாட்­சிக் கருத்தியலை நிறுவ வேண்­டும் என்று எங்­க­ளின் அடுத்­த கட்டப் பய­ணத்­தை­யும் தொடங்­கி­யி­ருக்கிறோம்”.
வளர்ச்சி அரசியலுக்கு அடையாளம் தமிழ்நாடு
என்.டி.ஏ வாஷிங்மெஷின் கூட்டணி
பெரியார் முழக்கம் இதழ்26022026

You may also like...