தலையங்கம் – தனிச்சட்டமே தீர்வு!
திருநெல்வேலி மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மிக நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். தாக்குதலில் ஈடுபட்ட ஜாதிச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதில் விளக்கியிருக்கிறார். அத்துடன், “சமூகநீதிக் கொள்கையை தனது உயிர் மூச்சாகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பெண் கல்வி – சமஉரிமை – ஜாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பகாலம் தொட்டே ஆதரித்து வரக்கூடிய இயக்கமாகும். இதனை இந்த அவையில் உள்ள அனைவரும் அறிவார்கள்” என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஜாதிப்புனிதம் கெட்டுவிடாமல் பாதுகாப்பதில் தான் இந்து மதத்தின் பெருமை அடங்கியிருக்கிறது. அத்தகைய ஜாதிப் புனிதத்தை காக்க வேண்டிய பொறுப்பு முழுமையாக பெண்களிடமே இருக்கிறது என்கிறது மனு சாஸ்திரம். “பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள்...