Category: தலையங்கம்

மோடியின் அற்ப அரசியல்

மோடியின் அற்ப அரசியல்

மோடி தனது பிரதமர் பதவிக்கு உரிய தகுதியை இழந்துகொண்டு வருவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. மதுரை வந்த அவர் 7 ஆண்டுகளாக கட்டி முடிக்கபடாத எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் அரைகுறை வேலைகளைப் பார்வையிட கூடத் தயாராக இல்லை. மாறாக மதவாத சக்திகள் கலவரத்திற்கு திட்டமிடும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட கலவரம் தோல்வியில் முடிந்த நிலையில் அதைத் தூண்டி விடுவதுபோல் அமைந்திருக்கிறது இந்த தரிசனம். அங்கே தீபம் ஏற்றச் சென்ற இந்து தீவிரவாதிகள் ‘திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்’ என்று வெறிப்பிடித்து பேசியதை ஊடகங்கள் ஒளிப்பரப்பின. “சிக்கந்தர் தர்காவை திருப்பரங்குன்றத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் இதுவே எங்கள் நோக்கம்” என்று ஹெச்.ராசா வெளிப்படையாகப் பேசினார். திருப்பரங்குன்றம் தரிசனத்திற்கு பிறகு பேட்டியளித்த மோடி இந்து மக்களின் உணர்வுகளை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை என்கிறார். உண்மையில் திருப்பரங்குன்றத்தில் இந்துமக்களின் உணர்வுகளை கோயில் நடைமுறைகளை பின்பற்றிக் காப்பாற்றியது தமிழ்நாடு அறநிலையத்துறைதான்....

தமிழ்நாட்டு அணியா?  டெல்லி அணியா?

தமிழ்நாட்டு அணியா? டெல்லி அணியா?

“இப்போது நடக்கும் தேர்தல் தமிழ்நாட்டு அணிக்கும் டெல்லி அணிக்கும் நடக்கும் தேர்தல்” என்று தெளிவாக அறிவித்துவிட்டார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு சுயமரியாதைக்கும் தன்னாட்சிக்கும் களத்தில் இருக்கிறது. எதிரணியில் இரண்டு கட்சிகள் இருக்கின்றன. ஒன்று பாஜகவின் உரிமை பறிப்புகளை தமிழ்நாட்டின் மீதான வஞ்சகத்தை எதிர்க்காமல் அமித் ஷாவின் ஆணைகளின் கீழ் இயங்கும் எடப்பாடி அணி. மற்றொன்று தமிழ்நாட்டை வஞ்சித்தாலும்”ஜனநாயக” மிரட்டல்களை திணித்தாலும் பாஜகவை எதிர்த்து வாய் திறக்க மாட்டோம் என மவுன விரதம் இருக்கும் விஜய் கட்சியின் அணி. இந்த இரண்டு அணிகளுக்குமே திமுக ஆட்சி நடத்தி வரும் தத்துவார்த்த சுயமரியாதை, தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை முடக்கி இந்துத்துவ அரசியலிடம் சரணாகதி அடையச் செய்வது தான் நோக்கம். முதலமைச்சர் பதவி என்பதைத் தவிர தங்களுக்கு வேறு எந்த லட்சியமும் கொள்கையும் கிடையாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் தான். தமிழ்நாடு அரசைப் போலவே ஒன்றிய ஆட்சிக்கு எதிரான தத்துவப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து...

கேரள உயர்நீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு

கேரள உயர்நீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு

தமிழ்நாட்டில் இந்து கோயில்களில் பிற மதத்தினர் நுழையக் கூடாது; அதற்கு நீதிமன்றம் தடை போட்டுவிட்டது; கோயில் கொடி மரத்திலேயே அறிவிப்பு பலகையை நிறுவ வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்தது. குறிப்பாக பழனி முருகன் கோயிலில் இந்த அறிவிப்புப் பலகையை நிறுவ நீதிபதி உத்தரவிட்டார். சித்தர் மரபில் உருவாக்கபப்ட்ட பழனி கோயிலில் கொடி மரங்களே இல்லை என்பது கூட அந்த நீதிபதிக்கு தெரியவில்லை. இதற்கு நேர்மாறாக இப்போது கேரள உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இந்து கோயிலில் பிற மதத்தினரையும் அனுமதிக்க வேண்டும்; அதற்கேற்ப சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அடூர் என்ற ஊரில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் 2023-ஆம் ஆண்டு நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்க இரண்டு கிறிஸ்துவ பாதிரியார்கள் அழைக்கப்பட்டனர். `திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு’ நிர்வாகத்தின் கீழ் இந்தக் கோயில் இருக்கிறது. இதை...

நீதித்துறையில் காவி ஆடுகள்!

நீதித்துறையில் காவி ஆடுகள்!

“சனாதன ஒழிப்பு” பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய, சங்கி அமித் மாளவியா “80 சதவிகிதமான மக்களை இனப்படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா?” என்று பதிவிட்டிருந்தார். சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால் சனாதனம் என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிற பாகுபாடுகளை ஒழிக்க வேண்டுமென்பதுதான் அர்த்தமே தவிர, அதைப் பின்பற்றுகிற இந்துக்களை கொல்ல வேண்டுமென்பது அர்த்தம் கிடையாது. இது தெரிந்திருந்தாலும் சங்கிகள், இதைப்பயன்படுத்தி ஒரு சமூகப் பதற்றத்தை உருவாக்கலாம், அதன் மூலம் தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கு எதிராக ஒரு வெறுப்புணர்வை உருவாக்கலாம் என்ற உள்நோக்கத்தோடு வன்ம கருத்துக்களை பரப்பினர். இதனால், அமித் மாளவியாவுக்கு எதிராக திருச்சி நகர காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி ஸ்ரீமதி, அரசியலமைப்புக்கு புறம்பான, பல்வேறு அபத்தமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்....

டிரம்பின் திமிர்த்தனம் அடக்கப்பட வேண்டும்!

டிரம்பின் திமிர்த்தனம் அடக்கப்பட வேண்டும்!

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே சர்வதேச அளவில் குழப்பங்கள், பொருளாதார நெருக்கடிகள், போர்ப்பதற்றங்களை உருவாக்கும் செயல்களைத் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது, குறிப்பாக அமெரிக்காவின் டாலரைத் தவிர்த்துவிட்டு ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யவே கூடாது என மிரட்டல் விடுத்து, இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்திருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் அம்பானி நிறுவனம் கச்சா எண்ணெய் வாங்கினாலும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதன் பலன் இந்தியர்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டது ஒன்றிய அரசு. பலனை அனுபவித்தது பெரும்பாலும் அம்பானிதான். ஆனால் இப்போது வரியேற்றத்தால் ஜவுளிகள், நகைகள், மீன்கள், தோல் பொருட்கள் ஏற்றுமதி துறையினரே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, பல லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டிரம்பை எதிர்த்து கருத்துச்சொல்லவோ, வரிவிதிப்பை நீக்கவோ எந்த முயற்சியும் எடுக்காமல் கள்ள மவுனம் காக்கிறது மோடி அரசு. அதேபோல உலக அளவில் 17%...

நீலிக்கண்ணீர் வடிக்கும் மோகன் பகவத்!

நீலிக்கண்ணீர் வடிக்கும் மோகன் பகவத்!

ஜாதி ஒழிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன. இதில், மோகன் பகவத்தின் கருத்தை சற்றே உற்று நோக்க வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசும்போது, “சமூக நடைமுறையில் இருந்து ஜாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில் மனதிலிருந்து ஜாதியை அகற்ற வேண்டும். கடந்த காலங்களில் ஜாதி என்பது தொழில் மற்றும் வேலையுடன் தொடர்புடையதாக இருந்தது. பின்னர் அது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, பாகுபாட்டிற்கு வழிவகுத்தது. இதற்கு முடிவுகட்ட, ஒவ்வொரு மனதிலிருந்தும் ஜாதியை அகற்ற வேண்டும். இதை நேர்மையாகச் செய்தால், 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் ஜாதிப் பாகுபாடு ஒழிக்கப்படும்” என்று பேசியிருக்கிறார். அடடே, மோகன் பகவத்திற்கு ஜாதி ஒழிப்பில் எவ்வளவு அக்கறை பாருங்கள் என்ற ஆச்சரியக் குரல்களும் எழுந்திருக்கின்றன. இந்த சமயத்தில் மோகன் பகவத்திற்கு நாம் சில கேள்விகளை...

ஜாதி ஒழிப்பு இயக்கம் தொடரும்!

ஜாதி ஒழிப்பு இயக்கம் தொடரும்!

சட்டமன்றத் தேர்தல் களம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுக்கும் ஒன்றிய அரசு, மசோதாக்களை நிறுத்திவைக்கும் ஆளுநர், சிறப்புத் தீவிர திருத்தத்தின் பெயரால் சாமானியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையம், அப்பட்டமான அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் அமலாக்கத்துறை, சோதனை நடத்தி நடிகர்களை அரசியலுக்கு இழுத்து வரும் வருமான வரித்துறை என ஒன்றிய பா.ஜ.க. அரசு தரும் நெருக்கடிகளும், இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை தி.மு.க அரசு தந்திருப்பதும்தான் இந்தத் தேர்தலில் இதுதான் பேசுபொருளாக இருக்கப்போகிறது. அரசியல் களம் அதை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தை முன்னெடுத்து, பாஜகவின் சூழ்ச்சிகளை, தமிழர் விரோத கொள்கைகளை முறியடிக்க வேண்டியது அவசியமானது. எனினும் பெரியார் இயக்கத்திற்கு அடிப்படையான ஜாதி ஒழிப்பு கொள்கையை சமரசமில்லாமல் முன்னெடுக்க வேண்டியதே, மற்ற எல்லாவற்றையும் விட தலையாய கடமை. அந்த கடமையின் பொருட்டு, சேலத்தில் 2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற,...

விஷச் சிந்தனைகளுக்கு இடமளிக்கக்கூடாது!

விஷச் சிந்தனைகளுக்கு இடமளிக்கக்கூடாது!

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் டிசம்பர் 21-ஆம் தேதி பொருநை அருங்காட்சியத்தை தமிழ்நாடு அரசு திறந்துவைத்துள்ளது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடத்தில் இரும்பின் பயன்பாடு இருந்ததை, இரும்பை உருக்கி ஆயுதங்கள் தயாரிக்கும் அறிவைப் பெற்றிருந்தனர் என உலகை வியக்கவைத்தது பொருநை அகழாய்வு முடிவுகள். அதேபோல கீழடியிலும் தமிழர்களின் நாகரிகம் உயர்ந்தது என்பதற்கான அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அங்கும் ஒரு அருங்காட்சியகத்தை திமுக அரசு அமைத்திருக்கிறது. டிஜிட்டல் வசதிகளுடன் இரு அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தோடு கீழடி, பொருநை நாகரிகங்கள் ஒத்துப்போகின்றன என்பது மட்டுமல்ல, இரண்டு இடங்களிலும் கடவுள், மத, ஜாதி அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் வெளிநாட்டு வணிகத் தொடர்புகளுடன், ஒரு உயர்ந்த நாகரிகமாக தமிழர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளாக அவை திகழ்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறைக்கு கற்பித்து, இடையே புகுத்தப்பட்ட ஜாதி – மதப் பாகுபாடுகளை விட்டொழித்து நாம், ஜாதியற்ற- மதமற்ற தமிழர்களாக ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துவதுதான் கல்வித்துறையின் சேவையாக...

மீண்டும் மீண்டும் கொல்லப்படும் காந்தி!

மீண்டும் மீண்டும் கொல்லப்படும் காந்தி!

2005-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், அன்றைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 100 நாட்கள் ஊரக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இது வேலைவாய்ப்பு திட்டமாக இல்லாமல், சமூகப் பாதுகாப்புத் திட்டமாக மன்மோகன் சிங் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கும் கிராமப்புற மக்களுக்கு, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் வேலைவாய்ப்பு கிடைக்காத காலங்களில், அவர்களிடத்தில் பணப்புழக்கம் இருப்பதை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே இத்திட்டம். இந்தியா முழுவதும் பல கோடி மக்களை வறுமையில் இருந்த மீட்டது இந்தத் திட்டம். ஆனால் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 11 ஆண்டுகளாகவே வேலை நாட்களைக் குறைத்து, நிதியை விடுவிக்காமல், வேலை பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைத்து இத்திட்டத்தை பாழ்படுத்தி வருகிறது. 2013-14 நிதியாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்துக்கு ரூ.39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது....

மதவெறிப் பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?

மதவெறிப் பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயல் குறித்து விவாதிக்க வேண்டுமென்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அதுகுறித்து விவாதிக்க முன்வரவில்லை. சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து விவாதமில்லை, மணிப்பூர் குறித்து விவாதமில்லை, இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து விவாதம் இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த எந்த விவகாரம் குறித்தும் விவாதம் இல்லை. ஆனால் வந்தே மாதரம் பாடல் குறித்து 10 மணி நேர விவாதம் நடத்தியிருக்கிறது பா.ஜ.க. அரசு. இப்பாடல் பாடப்பெற்று 150 ஆண்டுகள் ஆனதையொட்டி, நாடு தழுவிய அளவில் நவம்பர் 2025 தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட சென்ற அக்டோபரில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து, ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் ஓராண்டுத் தொடர் நிகழ்வுகளைக் கொண்டாட விரிவான செயல் திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் நாடாளுமன்றத்தில்...

பெண்ணுரிமைக்கான உரையாடல்கள் பெருகட்டும்!

பெண்ணுரிமைக்கான உரையாடல்கள் பெருகட்டும்!

பழம்பெரும் பாலிவுட் நடிகையும், சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான ஜெயா பச்சன் (அமிதாப் பச்சனின் மனைவி) சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “தனது பேத்தி நவ்யா நவேலி நந்தாவுக்கு விரைவில் 28 வயதாகப்போகிறது. அவர் திருமண வாழ்வில் ஈடுபடுவதில் எனக்கு விருப்பமில்லை. திருமணம் என்பது காலாவதியான நடைமுறை. இன்றைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு என்னுடைய வயதும் இல்லை. இப்போதைய குழந்தைகள் நம்மை விட மிகவும் புத்திசாலிகள். திருமணத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் மட்டுமே ஒரு உறவைத் தீர்மானிக்காது. வாழ்க்கையைச் சிக்கலாக்கி கொள்ளாமல், அப்படியே அனுபவித்துக் கொண்டாடுங்கள்” என்று பேசியிருக்கிறார். இது ஏதோ தனி நபரின் கருத்து என்ற அளவில் சுருக்கிப் பார்க்க வேண்டியதல்ல. பெண்களின் உளவியல் போக்கும் ஏற்படும் பண்பு மாற்றமாக இப்பேச்சை கருத வேண்டியுள்ளது. வளர்ந்த நாடுகளில் இந்த கருத்தாக்கம் பொதுச்சமூகமாக உளவியலாகவே மாறியிருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக, அமெரிக்காவில் 2030-ஆம் ஆண்டுக்குள்...

தலையங்கம்: குழப்பத்தை விளைவிக்கும் உச்சநீதிமன்றம்!

தலையங்கம்: குழப்பத்தை விளைவிக்கும் உச்சநீதிமன்றம்!

தமிழ்நாடு அரசின் `10-க்கும் மேற்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், “ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல், சட்டத்துக்கு எதிரானது. மசோதா மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும், மசோதாவை நிறுத்திவைப்பதாக இருந்தால், 3 மாதங்களுக்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் 3 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும், மறுபரிசீலனை செய்வதற்காக மசோதா திருப்பி அனுப்பப்பட்டால் ஒரு மாதத்துக்குள் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். எதுவுமே செய்யாமல் மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைத்திருக்க ஆளுநருக்கு எவ்வித தனி அதிகாரமும் (வீட்டோ) கிடையாது” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பு தொடர்பாக, உரிய காலக்கெடு தாண்டிய பிறகு, திடீரென 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்துக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...

அறிவுத் திருவிழாக்கள் பெருகட்டும்!

அறிவுத் திருவிழாக்கள் பெருகட்டும்!

கோயில் திருவிழாக்கள், குடும்ப விழாக்கள் என நம் நாட்டில் எத்தனையோ திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கோயில்களில் கூட சைவ, வைணவக் கோயில்களில் ஒரு மாதிரியாகவும், கிராமப்புறங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் வேறு விதமாகவும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சைவ, வைணவக் கோயில்களின் திருவிழாக்கள் மாரியம்மனை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. மாரியம்மன் கோயில் திருவிழாக்களோ ஜாதியை மட்டுமே பொருட்டாக வைத்துக்கொண்டு, யார் பங்கேற்கலாம், யார் பங்கேற்கக் கூடாது என எல்லைக்கோடுகள் வரைந்திருக்கும். அதேபோல குடும்ப விழாக்களிலும் திருமணங்கள் முதல் பூப்புனித நீராட்டு என்பன வரை அனைத்திலும் பிற்போக்குத்தனமே நிறைந்திருக்கும். பொதுவாக கோயில் திருவிழாக்களோ, குடும்ப விழாக்களோ எல்லாவற்றிலும் குடியும், தகராறுமே நிரம்பியிருக்கும். இளைய தலைமுறை கற்றுக்கொள்ளவோ, அறிவைப் பெருக்கிக்கொள்ளவோ இத்தகைய திருவிழாக்களில் எதுவும் இருப்பதில்லை, சீரழிவதற்கான சாத்தியங்களை மட்டுமே நிரப்பி வைத்துள்ளன. ஆனால் இத்தகைய பிற்போக்குத்தனங்கள், சமூக சீரழிவுகளுக்கு மாற்றான ஒரு புதிய கொண்டாட்டத்தை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி. அக்கட்சியின் பவள...

மற்றுமொரு ஜனநாயகப் படுகொலை!

மற்றுமொரு ஜனநாயகப் படுகொலை!

பீகாரில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் என ஆளும் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க எண்ணமில்லாதவர்கள் 65 லட்சம் பேரை நீக்கிய கையோடு தமிழ்நாடு விரைந்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதற்குப் பெயர் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.). வாக்காளர் பட்டியலில் ஆட்களை குறைப்பதோ, சேர்ப்பதோ அரசியல் கட்சிகளின் பிரச்னை, தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத அமைப்புகளுக்கு அதைப்பற்றி என்ன கவலை என்று ஒதுங்கிவிட முடியாது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. நீதித்துறையைக் கைப்பற்றுதல், அமலாக்கத்துறையைத் தன்வயப்படுத்துதல், எதிர்க்கட்சிகளை அழித்து அரசியல்வாதிகளை – சட்டமன்ற உறுப்பினர்களை – மக்களவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் என்பன போன்ற பாஜக ஆட்சியின் சர்வாதிகாரப் போக்குகள் இப்போது, ‘மக்களைத் தகுதிநீக்கம் செய்தல்’ என்ற இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. இந்தத் திருநாட்டில் வாக்காளர் பட்டியல் ஒன்றைத் தவிர வேறெங்கும் அனைவரும் சமமானவர்கள் இல்லை. சேரியை விட ஊர் மேலானது, ஊரை விட அக்ரஹாரம் மேலானது என்ற மோசமான வருணாசிரம...

அரசியல் ஊழலும்  ஆன்மீக ஊழலும்

அரசியல் ஊழலும் ஆன்மீக ஊழலும்

திருப்பதி ஏழுமலையான், சபரிமலை அய்யப்பன், குருவாயூர் கிருஷ்ணன் என்ற பிரபலமான கோயில்களின் ஊழல் மோசடிகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. திருப்பதியில் பக்தர்கள் காணிக்கையான உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இணைந்து திருடியப் பணத்தில் பங்கு போட்டு இருக்கிறார்கள். திருடியவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பங்குச் சந்தையிலும், வீடு, மனைகள் வாங்கிக் குவிப்பதிலும் ஏழுமலையான் காணிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர நெய், லட்டு பிரசாதம், தரிசன டிக்கெட் ஊழல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதே போல் சபரிமலை கோயிலின் கருவறை வாயிலில் உள்ள துவாரக பாலர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் பூசப்பட்டிருந்த தங்கம் திருடப்பட்டுள்ளது. இந்த தங்கக் கவசத்தை பழுது நீக்கி செப்பனிட்டு தரும் வேலை ஒரு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு முறை சீரமைத்து ஒப்படைத்துள்ளார். இந்த சீரமைப்பின் போது 4.5 கிலோ தங்கம் திருடப்பட்டது கண்டறியப்பட்டு,...

முதன்மை எதிரியை அடையாளம் காட்டுகிறார் முதலமைச்சர்

முதன்மை எதிரியை அடையாளம் காட்டுகிறார் முதலமைச்சர்

திராவிட மாடல் ஆட்சியின் முதன்மை எதிரி யார்? என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டிவிட்டார். மதவாத, சனாதன பாஜகதான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை எதிரி என்று செங்கல்பட்டு திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை நூற்றாண்டு விழாவிலும், தமிழ்நாடு ஆளுநருக்கு அளித்த பதிலிலும் முதலமைச்சர் தெளிவாக விளக்கி இருக்கிறார். அவரது இந்த கருத்து மிகவும் முக்கியத்துவமானது. தமிழ்நாட்டில் பாஜகவும், பாஜகவின் முகமூடிகளும் திமுகவுக்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்கின்றனர். அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒன்றிய ஆட்சியின் இன துரோகங்களுக்கு குடை பிடிக்கிறார். அக்கட்சியிலிருது பிரிந்து நிற்கும் ஓ.பன்னீர் செல்வம், தினகரன் அணியினர் பாஜக அணியில் தங்களை இணைத்துக் கொள்ள மறுப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் பேசி வருகிறார்கள். பெரியார், அம்பேத்கரை கொள்கைத் தலைவராக கூறிக் கொண்டாலும் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இப்போது பாஜகவை நெருங்கி வருகிறது. அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்த கட்சியைத்...

அறிவியல் வளர்ச்சியும் பார்ப்பனியமும்!

அறிவியல் வளர்ச்சியும் பார்ப்பனியமும்!

அதிவேகமாக வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியால் நடுங்கிப் போய் நிற்கிறது வைதீக பார்ப்பனியம். பாரம்பரியம் என்ற பெயரில் தாங்கள் கட்டமைத்த சனாதன மரபுகள் சீர்குலைந்து விடாமல் காப்பாற்றும் முயற்சிகளில் அது இறங்கியிருக்கிறது. அதற்காக அறிவியலை சனாதான பழமைக்குள் தொடர்புபடுத்தும் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பள்ளி பாடத்திட்டங்களில் இந்த கருத்துக்களை திணிக்க தொடங்கி இருக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டாலும் ஒன்றிய ஆட்சி தமிழ்நாடு மீது திணிக்க முயிற்சிக்கிறது. தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்கமாக இந்த கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என்று மிரட்டுகிறார். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உருவாக்கப்படும் பாடத்திட்டங்களில் “பாரதத்தின் பாரம்பரிய அறிவை முன்னிறுத்துதல்” என்ற பெயரில் மிக மோசமான பார்ப்பனிய கருத்துக்களை திணித்து வைத்துள்ளனர். இதற்காக பல்கலைக்கழக நிதி உதவிக்குழு வரைவு பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக தேசிய கல்விக் கொள்கையின்...

ஜாதி எதிர்ப்பை இயக்கமாக்குவோம்

ஜாதி எதிர்ப்பை இயக்கமாக்குவோம்

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி அவமானம்! எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ச்சியாக ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கத்தை நடத்தி வருகிறது. பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் நினைவு நாளான டிசம்பர் 24 வரை இப்பரப்புரை இயக்கத்தை இடைவிடாது தொடர்ந்து முன்னெடுக்க திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு முடிவு எடுத்துள்ளது. ஜாதி ஒழிப்பு என்ற நோக்கத்துக்காகவே தொடங்கப்பட்டது தான் பெரியார் இயக்கம். சுயமரியாதை இயக்கத்தின் ஒரு நூற்றாண்டு கால பயணத்தில் இறுகிப் போய்க் கிடந்த ஜாதிக் கட்டமைப்பை அது அசைத்து இருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்னும் கடக்க வேண்டிய தூரம் வெகுதொலைவில் இருக்கிறது. காலம் எவ்வளவோ மாறிவிட்டது, இப்போது எல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள்? என்று பொது வெளிகளில் பேசிக்கொண்டே சொந்த ஜாதிக்குள் வரன் தேடும் அமைப்புகளில் பதிவு செய்து வருகிறார்கள். நகர்மயமாவதில் தமிழ்நாடு முன்னணியில்...

பாஜக பிடியில் திணறும் அஇஅதிமுக

பாஜக பிடியில் திணறும் அஇஅதிமுக

பார்ப்பனிய பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் அஇஅதிமுக சிக்கி சீர்குலைந்து வருவதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்து வருகிறார்கள். எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அஇஅதிமுக, திமுகவுக்கு மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்து தமிழ்நாட்டு அரசியலில் வலிமையான சக்தியாக பரிணமித்தது. இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை, இட ஒதுக்கீடு கொள்கைகளின் வழியாக மட்டுமே திராவிட இயக்கத்தின் அடையாளத்தைப் பேணியது. அதே நேரத்தில் இந்து மத அடையாளத்தை தீவிரமாக ஏற்றுக் கொண்டது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் பார்ப்பனியத்தின் ஆதரவாளரானார். அறநிலையத்துறை வழியாக பார்ப்பனியக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்தார். காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி வடநாடு யாத்திரையை முடித்து தமிழ்நாடு திரும்பிய போது, வேலூர் அருகே தமிழ்நாட்டின் எல்லையில் அவரை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்றார். சங்கராச்சாரியை கை ரிக்க்ஷாவில் அமர வைத்து அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இழுத்து வந்து தனது பார்ப்பனிய அடிமைத்தனத்தை பெருமையுடன் பறை சாற்றினார். பார்ப்பனர்- பார்ப்பனர்...

உலகமயமாகிறார் பெரியார்

உலகமயமாகிறார் பெரியார்

நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கின்றேன். -பெரியார் வரலாற்றுப் பெருமை கொண்ட இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவும் பெரியார் படத்திறப்பும் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வரலாற்றுப் பெருமை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்துள்ளது. உலகில் உள்ள மற்ற சமுதாயத்தைப் போல் மானமும் அறிவும் கொண்ட சமுதாயமாக மாற்றி அமைப்பதே தனது ஒரே குறிக்கோள் என்றார் பெரியார். அவரது சமுதாயப் பார்வை உலக சமுதாயத்தின் வளர்ச்சி பாதையை நோக்கி இருந்தது. ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் ரஷ்யாவிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்தார் பெரியார், பார்ப்பனிய வர்ணாசிரம ஒடுக்குமுறை அந்த...

இது  ‘ஜனநாயக திருட்டு’

இது ‘ஜனநாயக திருட்டு’

புதிய சட்டத் திருத்தம் ஒன்றை அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். 5 ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய குற்றத்தின் கீழ் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தாலே, அவர்கள் பதவி பறிக்கப்படும் என்று கூறுகிறது இந்த மசோதா. நீதிமன்ற விசாரணை, நீதிமன்ற தீர்ப்புகள் இல்லாமலே குற்றவாளிகளை ஒன்றிய பாஜக ஆட்சியே தனது புலனாய்வு, அமலாக்கத்துறை அமைப்புகளை வைத்து முடிவு செய்து விட முடியும். “ஓட்டு திருட்டு செய்தவர்கள் அடுத்து ஜனநாயக திருட்டுக்கு தயாராகிறார்கள்” என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே மிகச்சரியாகவே சுட்டிக்காட்டி உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எதிர்க்கட்சி ஆட்சிகளை குறுக்கு வழியில் வீழ்த்துவது இந்த சட்டத்தின் நோக்கம். மாநில ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஏற்கனவே 356 என்ற ஒரு சட்டப்பிரிவு இருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இந்த பிரிவு செயலற்றதாக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது ஒரு புதிய குறுக்கு வழியை கண்டுபிடித்து இருக்கிறது ஒன்றிய ஆட்சி....

பார்ப்பன “தீண்டாமை”

பார்ப்பன “தீண்டாமை”

வைணவ கோயில்களில் அர்ச்சகர் உரிமை மட்டும் அல்ல, பிரசாதம் விற்கும் உரிமையும் ‘வைணவ பிராமணர்களுக்கு’ மட்டுமே உண்டு என்று உயர் நீதிமன்றத்தில் பார்ப்பனர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். காஞ்சிபுரம் தேவநாதன் கோயிலில் பிரசாத விற்பனை நிலையம் அமைக்க இந்து அறநிலையத்துறை ஏல அறிவிப்பை வெளியிட்டது. அந்த ஏலத்தில் அனைத்து பிரிவுகளும் பங்கேற்க முடியும் என்று அறிவித்திருந்தது. இதற்கு வைணவ ‘பிராமணர்களுக்கு’ மட்டுமே உரிமை என்றும் ஏனைய சமூகத்தினர் இதில் பங்கேற்க உரிமை கிடையாது என்றும் அறநிலையத்துறை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த பார்ப்பனர் வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார். காலம் காலமாக பார்ப்பன வைணவர்களுக்கு மட்டுமே இந்த விற்பனை நிலையத்திற்கு உரிமை வழங்கப்பட்டு வருகிறது என்றும், பழக்க வழக்கங்களை மாற்றக்கூடாது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் கடந்த ஆண்டில் வைணவ பார்ப்பனர் அல்லாத ஒருவருக்கு உரிமை வழங்கப்பட்டதால் பெருமாள் வளாகத்தின் புனிதம் மீறப்பட்டது என்றும், பிரசாதத்தில் பெருமாளுக்கு எதிராக...

ஓட்டுத் திருட்டுகள்

ஓட்டுத் திருட்டுகள்

“தேர்தல் ஜனநாயகத்தின் முதலாளிகள் வாக்காளர்கள்” என்று சொல்லப்படுவது உண்டு. இப்போது வாக்காளர்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பறித்துக் கொண்டுவிட்டது. இதுதான் ‘ இந்துத்துவ ஜனநாயகம்’. தேர்தல் ஆணையம் நடத்திய ‘ஓட்டுத் திருட்டுகளை’ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி. வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்று அந்த எந்திரத்தை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற பொறியாளரே அமெரிக்காவிலிருந்து ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார். இப்போது ராகுல் காந்தி தேர்தல் ஆணையமே போலி வாக்காளர்களை உருவாக்கி மோசடி செய்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் மகாதேவபுரா என்ற சட்டசபை தொகுதியை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அதில் நடந்துள்ள போலி வாக்காளர் மோசடிகளை ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார். தேர்தல் ஆணையம் தொடர்ந்து மோசடிகளை செய்து வருகிறது. மகாராஷ்டிராவில் 2024 ஏப்ரலில் நடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை அடுத்த 9 மாதங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில்...

காசாவில் இனப்படுகொலை

காசாவில் இனப்படுகொலை

ஒவ்வொரு நாளும் காசாவில் இருந்து வரும் செய்திகள் உள்ளத்தை உலுக்குகிறது. இந்த படுகொலை எப்போது முடிவுக்கு வரும்? மனிதம் செத்துவிட்டதா? என்ற கேள்விகள் துளைத்தெடுக்கின்றன. நடப்பது இனப்படுகொலைதான் என்று நார்வேயில் உள்ள சர்வதேச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. தென்னாப்பிரிக்கா நாடு தொடர்ந்த இந்த வழக்கில் இந்த முடிவுக்கு வருவதற்கு சர்வதேச நீதிமன்றம் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீன போராளி குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து, இஸ்ரேலினுடைய தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதுவரை 51,821 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவார். சடலங்களை அடக்கம் செய்வதற்குக் கூட இடமில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. யுத்தம் தொடங்கியபோதே காசாவில் வாழ்ந்த மக்கள் 23 லட்சம் பேர். இதில் 90% பேர் இருப்பிடங்களை பலமுறை மாற்றிக்கொண்டு உயிர் வாழ்கின்ற கட்டாயத்திற்கு உள்ளானார்கள். 46 சதுர கிலோமீட்டர் பகுதிக்குள் இவர்கள் முடக்கப்பட்டுள்ளார்கள்....

ஆர்.எஸ்.எஸ் கல்வி மாநாடு நடத்துவது ஏன்?

ஆர்.எஸ்.எஸ் கல்வி மாநாடு நடத்துவது ஏன்?

கேரள மாநிலம் காலடியில் நான்கு நாள் கல்வி மாநாடு ஜூலை 25 முதல் 28 வரை நிகழப்போகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், ஒன்றிய ஆட்சியின் உயர்கல்வி நிறுவனத் தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், இவர்களோடு ஆன்மீகம் பேசும் மதத் தலைவர்கள் இதில் பங்கேற்கப் போகிறார்கள். மாநாட்டைக் கூட்டி இருப்பது ஒன்றிய ஆட்சியா? கல்வியாளர்களா? கேரள மாநில அரசா? இல்லை. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூட்டி இருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையைத் தீவிரமாக செயல்படுத்துதல், பாரம்பரிய கல்வி முறையை முன்னெடுத்தல் என்பது பற்றி இவர்கள் ஆராயப் போகிறார்களாம். ஒன்றிய கல்வி அமைச்சகம் இந்த பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஒப்படைத்து விட்டது போலும். நாட்டை ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றுவதற்கு அடிப்படையாக கல்வியை காவிமயமாக்க வேண்டும் என்ற உறுதியான முடிவோடு முயற்சிகள் நடக்கின்றன. காந்தி கொலையில் தொடர்புடைய அமைப்பு, கலவரங்களை உருவாக்கிய அமைப்பு என்று பல விசாரணை ஆணையங்கள் உறுதிப்படுத்தி உள்ளன....

காவிமயமாகிறதா நீதித்துறை?

காவிமயமாகிறதா நீதித்துறை?

நீதிமன்றங்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை தகர்ப்பதற்கும் தங்களின் சொந்த கருத்துகளை பரப்புவதற்குமான மேடைகளாகவும் மாறி வருகின்றன. நீதிமன்றம் என்பது `பார்ப்பன மன்றமாகவே’ இருக்கிறது என்று வெளிப்படையாகவே பெரியார் அறிவித்தார். தன்மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே “பார்ப்பனர்கள் நீதிபதியாக வாழும் நாடு கடும்புலி வாழும் காடு” என்று நீதிபதிகள் முன் அறிக்கை சமர்ப்பித்தார். சமூக நீதியின் தாய் வீடு என்று சொல்லப்படும் தமிழ்நாட்டிலேயே நீதிமன்றம் நவீன சனாதனத்தையும், வர்ணாஸ்ரமத்தையும் பேசிக் கொண்டு இருக்கிறது. இதற்கு ஏராளமான சான்றுகளை பட்டியலிட முடியும். சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய `பிராமணர்’ சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டு புரளும் சடங்கை பாரம்பரிய மதச் சடங்கு என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். உச்சநீதிமன்றத்தாலும் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வினாலும் தடை செய்யப்பட்ட இந்த சடங்கை சட்டத்தை மீறி நீதிபதி ஜீஆர் சுவாமிநாதன் அனுமதித்தார். கோயில்களை அறநிலையத்துறையிடமிருந்து மீட்க வேண்டும் என்ற பாஜகவின்...

சமுகநீதி விடுதிகள்

சமுகநீதி விடுதிகள்

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் விடுதிகளாக அழைக்கப்பட்டு வந்தன. `சமூகநீதி விடுதிகள்’ என்றே அழைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பாராட்டி வரவேற்கத்தக்க அறிவிப்பாகும். விடுதிகளில் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் சில விடுதிகளும் உள்ளன. அந்த விடுதிகள் அந்தத் தலைவரின் பெயர்களோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் ஜாதி அடையாளத்தை அறிவிக்கும் கயிறுகளைக் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று இந்த ஆண்டு பள்ளி திறப்புக்கு முன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்படும் ஜாதி மோதல்களைத் தடுப்பது குறித்து ஆராய நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு நியமித்தது. ஆணையம் மிக சிறப்பான பரிந்துரைகளை அரசுக்கு...

ஆகமக்காரர்களின் குத்தாட்டம்

ஆகமக்காரர்களின் குத்தாட்டம்

ஆகமக் கோயிலில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும். பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராக முடியாது என்ற ‘இன ஒதுக்கல்’ சட்டப்படியே நிலை நிறுத்தப்பட்டுள்ளது மிகப்பெரும் அவமானம்! அரசியல் சட்டம் தீண்டாமையை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இந்து மதம் தீண்டாமையை ஆகமங்களின் பெயரில் புனிதமாக்குகிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திர உரிமையை தீண்டாமைக்கு ஆதரவாக முறைகேடாக பயன்படுத்துவதற்கு நீதிமன்றங்களும் துணை போகின்றன என்பதுதான் பேரவலம். ‘பிராமணர்கள்’ மட்டுமே கோயிலுக்குள் நுழைய முடியும் என்ற தீண்டாமை ஒரு காலத்தில் இருந்தது; சாஸ்த்திரமும் அப்படித்தான் கூறியது என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஆலயப்பிரவேச உரிமை என்ற பெயரில் போராட்டங்கள் நடந்தன. சுயமரியாதை இயக்கம் முதலில் தொடங்கியது. பிறகு காந்தியும் காங்கிரஸும் இந்த போராட்டங்களை நடத்தியது. ஆகம விதிகளைத் திருத்தித்தான் 1959-ஆம் ஆண்டு அனைத்து இந்துக்களும் கோயிலுக்குள் நுழையலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் கர்ப்பகிரகத்துக்குள் இப்போதும் பார்ப்பனர் அல்லாதவர்களால் அர்ச்சகர் முடியாது...

சமஸ்கிருத படை எடுப்பு

சமஸ்கிருத படை எடுப்பு

2014 ஆண்டிலிருந்து 2025 வரை சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி 2,533 கோடி ரூபாய் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 230 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கும் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 13 கோடி ரூபாய் மட்டுமே. சமஸ்கிருதத்தை விட 22 மடங்கு தமிழுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கும் ஒதுக்கிய நிதியை விட 17 மடங்கு கூடுதலாக சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சமஸ்கிருதம் பேசும் மாநிலம் இல்லை. சமஸ்கிருதம் தெரிந்தவர்களாக பதிவு செய்தவர்கள் 24,821 பேர் தான். அவர்கள் கூட சமஸ்கிருதத்தில் உரையாடுவது இல்லை. சமஸ்கிருத மந்திரங்களை மனப்பாடம் செய்து வழிபாடுகளை நடத்தும் வேத பார்ப்பனர்கள் கூட வீடுகளில் சமஸ்கிருதம் பேசுவது இல்லை. கல்லூரிகளில் சமஸ்கிருதப் பட்டப்படிப்புகளுக்கு தொடர்பு மொழி சமஸ்கிருதம் அல்ல, ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. சமஸ்கிருதத்திற்கு தமிழைப் போல் தனி எழுத்து...

100 விழுக்காடு!

100 விழுக்காடு!

கல்விக்காக இந்து வேத மதம் தனித்துறை ஒன்றை உருவாக்கி அதன் அதிகாரத்தை சரஸ்வதி என்ற கடவுளுக்கு ஒதுக்கியது, பள்ளிகளில் சரஸ்வதி படமாக தொங்கினார். ஆனால் `சூத்திர’மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. கல்விக்காக ஒரு கடவுள் இருந்தும் ஏன் மக்களுக்கு கல்வி கிடைக்கவில்லை என்ற கேள்வியை பெரியார் இயக்கம் கேட்டது. `சூத்திரர்களுக்கு’ கல்வியை தராதே என்ற மனுதர்மத்தை அமல்படுத்துவதிலேயே தான் பார்ப்பனர்கள் குறியாக இருந்தார்கள். 1952-ல் தேர்தலில் நிற்காமல் மேலவை வழியாக முதலமைச்சர் பதவிக்கு வந்த ராஜகோபாலாச்சாரி தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஜாதித் தொழிலை பயிற்றுவிக்கும் குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெரியார் இயக்கம் போராடி அதை ஒழித்தது. சென்னை திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் “நீங்கள் படிக்க வந்து விட்டால் துணி துவைக்கும் தொழிலை யார் செய்வது?” என்று கேட்டார் ராஜகோபாலாச்சாரி. சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தியதால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிகட்ட 6000 அரசுப் பள்ளிகளை அவர் மூடினார். இந்த...

ஆளுநர் அத்துமீறல்களுக்கு துணைபோவதா?

ஆளுநர் அத்துமீறல்களுக்கு துணைபோவதா?

இந்தியாவில் ஒற்றை மதவாத ஆட்சியைத் திணிக்கும் நோக்கத்தோடு செயல்படும் ஒன்றிய ஆட்சியின் அத்துமீறல்களுக்கு எதிராக திராவிட மாடல் ஆட்சி தான்‌ கொள்கைப் போராட்டம் நடத்துகிறது. தொகுதி மறுவரையறை திட்டத்தைப் பயன்படுத்தி தென் மாநிலங்களின் சட்டமன்ற, நாடாளுமன்ற எண்ணிக்கையைக் குறைக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே கண்டறிந்து முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர். இப்போது மீண்டும் மாநில முதலமைச்சர்களுக்கு சட்டமன்றஉரிமையை மீட்கும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.ஆளுநரின் அதிகாரப் பிடியில் இருந்து சட்டமன்ற உரிமையை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த உரிமைகளை ஒழிப்பதற்கு குறுக்கு வழியில் குடியரசுத் தலைவருக்கான 143-ஆவது அதிகாரத்தைப் பயன்படுத்த முன் வந்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. இதில் ஒன்றிய ஆட்சிக்கு என்ன பாதிப்பு வந்துவிட்டது? ஏன் இதை குறுக்கு வழியில் சீர்குலைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்? நாடாளுமன்றம் நிறைவேற்றுகிற மசோதாவுக்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்து விடுகிறார். பாஜக ஆட்சி செய்யும் மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் தீர்மானத்திற்கு உடனே...

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்குமா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்குமா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய‌ அமைச்சரவை ஏன் திடீர் முடிவுக்கு வந்தது? இதற்குப் பின்னால் பீகார் சட்டமன்றத் தேர்தல் எனும் கட்சி அரசியல் அடங்கி இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைக் குறிவைப்பதே இந்த திடீர் அறிவிப்பின் நோக்கம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த சமூகநீதி கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒருமித்த குரலாக இந்த கோரிக்கை உருவாகியுள்ளது. ஒன்றிய‌ பாஜக ஆட்சி இதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி கடுமையாக எதிர்த்துப் பேசினார். ஜாதி கணக்கீடு கேட்பவர்கள் பிரிவினைவாதிகள் என்றும் `அர்பன் நக்சல்கள்’ என்றும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி கணக்கெடுப்புகள் எடுக்கும் திட்டம்...

அமித்ஷாவின் பார்ப்பனியம்

அமித்ஷாவின் பார்ப்பனியம்

இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதமே என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் பேசி இருக்கிறார். ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 சமஸ்கிருத்துக்கு மட்டுமே அழுத்தத்தையும் முன்னுரிமையும் தருகிறது. வணிகம், வானவியல், தத்துவம் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுடன் சமஸ்கிருத தொடர்புகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்தை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜகவினர் இதில் இந்தி இல்லை என்று வாதிட்டனர். தாய்மொழி தான் வலியுறுத்தப்படுகிறது என்றும் இதற்காக மோடி இந்தி குறித்த சொற்றொடர்களை நீக்கி விட்டார் என்றும் பேசினார்கள். நடைமுறையில் மும்மொழி திட்டம் என்பது இந்தி திணிப்புக்கே வழிவகுக்கும் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் அமித்ஷாவின் இந்த பேச்சு மும்மொழி திட்டம் பார்ப்பனியத்தை வலியுறுத்துவதே என்பதை உறுதிப்படுத்துகிறது. அமித்ஷா மொழி அறிஞர் அல்ல. அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதமே தாய்மொழி என்பதற்கு அவர் எந்த வித சான்றுகளையும் முன்வைக்கவில்லை. உண்மையில் அமித் ஷாவின்...

மாற்றங்களுக்கு முகம் கொடுத்த ‘போப் பிரான்சிஸ்’!

மாற்றங்களுக்கு முகம் கொடுத்த ‘போப் பிரான்சிஸ்’!

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் நீண்ட மருத்துவப் போராட்டத்திற்கு பிறகு விடைபெற்றுக்கொண்டார். நம்மை பொறுத்தவரை மதங்கள் மனித சமூகத்துக்கு கேடு விளைவிப்பவைதான். மனித சமூகத்தில் சுரண்டலுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் கலவரங்களுக்கும் ஊற்றுக் கண்களாகவே மதங்கள் இருக்கின்றன. கடவுளை விட மதங்கள்தான்‌ ஆபத்தானவை என்று பெரியார் கூறினார். அனைத்துக் கடவுளும் ஒன்றுதான்‌ என்பதை மதவாதிகள் ஏற்றுக்கொள்ளவார்கள். அனைத்து மதங்களும் ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். மதத்தின் பெயரால் சிந்தப்பட்ட குருதிகளை வரலாறுகள் உணர்த்திக்கொண்டு இருக்கின்றன. ஆனாலும் மதங்களின் நாடுகள் உலக வரைபடத்தில் இருக்கவே செய்கின்றன. காலத்தின் மாற்றங்களை கருத்தில்கொள்ள மறுத்து பிடிவாதம் காட்டும் மதக் கருத்தியல்வாதிகள் நிறைந்த உலகில் போப் பிரான்சிஸ் சீர்த்திருத்தங்களுக்கு முகம் கொடுத்து இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 2019-ல் ஐக்கிய அரபு அமீரகம் சென்று, கத்தோலிக்க-இஸ்லாமிய உறவுகளை வலுப்படுத்தினார். ‘திருச்சபை ஏழைகளுக்கானது’ என்ற கொள்கையை வலியுறுத்தி, உலகளாவிய ஏழ்மை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்....

“குரியன் ஜோசப்” குழு காலத்தின் தேவை!

“குரியன் ஜோசப்” குழு காலத்தின் தேவை!

ஒன்றிய பாஜக ஆட்சி இந்திய அரசியல் அமைப்புக்குள் செயல்படும் மாநிலங்களின் அடையாளங்களை சிதைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. உரிமைகளை பறிப்பதற்கான முறைகேடான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது ஒன்றிய பாஜக ஆட்சி. இந்து ராஷ்டிரம் உருவாக்க மாநிலங்களின் மொழி மற்றும் கலாச்சாரங்கள் அவர்களுக்கு பெரும் தடையாக வந்து நிற்கின்றன. தமிழ்நாடு அரசு குறிவைத்து நசுக்கப்படுகிறது. இந்து ராஷ்டிராவை திராவிட மாடல் முற்றாக எதிர்த்து நிற்பதே இதற்குக் காரணம். ஆளுநர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு தந்த நெருக்கடிகளை சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார் தமிழ்நாடு முதல்வர். இது மாநிலங்களின் வரலாற்றில் நிலைப்பெற்று நிற்கும் சாதனை. இதைத் தொடர்ந்து ஒன்றிய ஆட்சியின் உரிமை பறிப்பு அடாவடிகளை எதிர்கொள்ள முன்னாள் உச்சநீதிமன்றம் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஒன்றிய ஆட்சி சட்டத்தை எப்படி முறைகேடாகப் பயன்படுத்துகிறது என்பது குறித்தும் மாநில உரிமைகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளையும் இந்தக்...

வீழ்த்தப்பட்டது ரவி அல்ல, அமித்ஷா!

வீழ்த்தப்பட்டது ரவி அல்ல, அமித்ஷா!

மாநில அரசை விருப்பம் போல கலைத்து விளையாடிய ஒன்றிய அரசுக்கு, 1994-இல் `எஸ்.ஆர்.பொம்மை வழக்கு’ கடிவாளம் போட்டதைப் போல, ஆளுநர்களின் எதேச்சிகாரப் போக்குக்குக் கடிவாளம் போடும் தீர்ப்பை தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு போராடி வென்றிருக்கிறது. பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஆர்.என்.ரவிக்கு எதிராக தி.மு.க. அரசு தொடர்ந்த வழக்கில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை, மாநில அரசைப் பின்பற்றித்தான் ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாகச் செயல்படக்கூடாது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார்” என்று தீர்ப்பிலேயே கண்டித்துள்ளது. மேலும், “அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது”...

காஞ்சி விஜயேந்திரனின் ‘இன ஒதுக்கல்’ APARTHEID!

காஞ்சி விஜயேந்திரனின் ‘இன ஒதுக்கல்’ APARTHEID!

பெங்களூரில் மூவாயிரம் பார்ப்பனர்கள் திரண்ட ‘கர்நாடக பிராமண மகா சபாவில்’ (19/01/2025) பேசிய காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி ‘பிராமண வெறியை’ தூண்டி விட்டு இருக்கிறார். அவர் இந்து மதம் பற்றிப் பேசவில்லை; வேதமதம் பற்றி பேசியிருக்கிறார். வேத மதம்தான்‌ சனாதனம் என்றும் ‘பிரமாணிசம்’ மட்டுமே வேத மதத்தைக் காப்பாற்றும் என்பதால் ‘பிராமணர்கள்’ ஒன்றுபட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். ‘பிராமணர்கள்’ தங்கள் பிறவி அடையாளங்களை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகளையும் பட்டியலிட்டுள்ளார். “1. ஒவ்வொரு நாளும் தங்களுக்கு உரிய வேத சடங்குகளை வீட்டில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும். 2. பிராமணர்கள் வெளிநாடு போகக்கூடாது. (கடல் தாண்டுவது குற்றம் என்று சாஸ்திரம் கூறுகிறது). இங்கேயே தங்கி சனாதன கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும். 3. ‘பிராமணர்கள்’ மட்டுமே குடியிருக்கும் ‘அக்கிரகாரங்களை’ உருவாக்க வேண்டும். சுமார் 100 பிராமணர்கள் வசிக்கக் கூடிய தனிக் குடியிருப்புகள்(gated communities)...

சங்கராச்சாரிகளை அம்பலப்படுத்துவோம்!

சங்கராச்சாரிகளை அம்பலப்படுத்துவோம்!

“சமூக மாற்றத்திற்கு வாழ்நாள் முழுதும் போராடியவர் பெரியார். சமூகத்தை அடிமைப்படுத்திய சக்திகளை சரியாக அடையாளம் கண்டார். ”ஜாதி வர்ணாசிரம” கட்டமைப்பே தமிழர்களின் எதிரி என்ற முடிவுக்கு வந்தார். அதற்கான கருத்தியல்களை வழங்கிய பார்ப்பனியத்தையும், அதன் தலைமை பீடமான சங்கராச்சாரிகளையும் கடுமையாக எதிர்த்தார். பெரியார் ஜாதி ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பிறவியின் அடிப்படையில் பிராமண, சூத்திர பேதத்தை நியாயப்படுத்தும் வர்ணாசிரமமே நமக்கான தர்மம் என்றனர். பெரியார் தீண்டாமைக்கு எதிராகக் களமாடினார். வைக்கத்தில் போராடினார். சங்கராச்சாரிகள் தீண்டாமை தேவை அது ஷேமகரமானது என்றார்கள். பெரியார் பெண்ணடிமை ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பெண்கள், ஆண்களுக்கு அடிமைப்படுவதே நமக்கான தர்மம் என்றனர். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள் தரிசு நிலம். அவர்கள் பார்க்கக்கூடாதவர்கள், தீண்டப்படாதவர்கள் இதுவே நமது தர்மம் என்றார்கள். பெரியார் தமிழை அறிவியல் மொழியாக்க விரும்பினார். இன்னும் தமிழ் காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கலாமா என்று கவலைப்பட்டார். திருக்குறள்...

வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு!

வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களைக் கவரக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியதாக தமிழ்நாடு நிதிநிலை இருக்கும் என்று ஊடகங்கள் பேசின. ஆனால் தமிழ்நாட்டின்‌ கட்டமைப்பு வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். வாக்குகளை விட தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் முக்கியம் என்ற கவலையோடு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது என்பதையே இந்த நிதி நிலை அறிக்கை உணர்த்துகிறது. தலைசிறந்த பொருளாதார நிபுணர்களையும் விளிம்புநிலை மக்களையும் கலந்து ஆலோசித்து சர்வதேச அளவில் வெற்றியடைந்த திட்டங்களைக் கண்டறிந்து அவற்றை தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்ப வடிவமைத்து பல மாதங்கள் தீவிர ஆலோசனைக்கு பிறகு இந்த பட்ஜெட் உருவாக்கபட்டு இருக்கிறது என்று தமிழ்நாடு முதல்வர் விளக்கம் தந்துள்ளார். நிதி நிலை அறிக்கையில் கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் பெரியார் கவலையோடு கவனிப்பார். திராவிட இயக்கத்தின் அந்த கொள்கையின் பார்வையில் நின்று கல்விக்கு மட்டும் ரூ.55,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்‌...

“ஜாதிக்கு ஒரு கோயில் தேவையா?”

“ஜாதிக்கு ஒரு கோயில் தேவையா?”

ஆகமக் கோயில்களை பார்ப்பனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதை எதிர்த்து, பெரியார் இயக்கம் குரல் கொடுத்து வருகிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 100-வது நாளில் செயல்படுத்தினார். ஆனாலும் 24 பார்ப்பனரல்லாத அர்ச்சகர்க்கு மேல் நியமனம் செய்ய முடியாமல், நீதிமன்றங்களில் பார்ப்பனர்கள் தடை வாங்கிவிட்டார்கள். தடையை நீக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அறநிலையத்துறை இந்த பிரச்சினையில் ஆர்வம் காட்டாமல் செயல்படுகிறது. பெரியார் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை அகற்றும் இந்த சமூக மாற்றக் கொள்கையில் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கதக்கவையாகவே இருக்கின்றன. இந்த நிலையில் பல கிராம கோயில்கள் ஜாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கியுள்ள தீர்ப்பைப் பாராட்டி வரவேற்க வேண்டும். “கோயில்களை நிர்வகிக்கும் உரிமையை ஒரு குறிப்பிட்ட ஜாதிகள் கோர முடியாது‌. கோயில்களை ஜாதி அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது ஜாதியை நிலை...

தமிழ்நாடு அரசுக்குத் துணைநிற்போம்!

தமிழ்நாடு அரசுக்குத் துணைநிற்போம்!

2026-ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. வழக்கம்போல தமிழ்நாடுதான் இதன் ஆபத்துகளையும் முதலில் உணர்ந்து அதுகுறித்த ஓர் எச்சரிக்கையை எழுப்பியிருக்கிறது. குறிப்பாகத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்னிந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஏற்படப்போகும் இழப்புகள் என்ன என்பதை சுட்டிக்காட்டி, மிகுந்த விழிப்புணர்வோடு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டியது தமிழ்நாடு அரசு. ஆனால் தொகுதி மறுவரையறை தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லையே! திமுக அரசு வேண்டுமென்றே அரசியல் நோக்கங்களுக்கு இவ்விவகாரத்தை கையிலெடுத்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறையும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு பிறகு, அதற்கேற்பத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும். இதற்காக 1952-ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறை சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்ட ஆணையங்கள் 1971 வரை 3 முறை மக்களவைத் தொகுதிகளை சீரமைத்துள்ளன. தற்போதிருக்கும் 543 மக்களவைத் தொகுதிகள் என்பது அப்போது இறுதி செய்யப்பட்டதுதான். ஆனால் அதன்பிறகு நெருக்கடி நிலை காலத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திவிட்டு,...

மொழிப்போருக்கு தமிழ்நாடு தயார்!-

மொழிப்போருக்கு தமிழ்நாடு தயார்!-

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் புதிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த நிதியை விடுவிப்போம் என்று அடாவடியாக பேசியிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளபோது, ஒன்றிய அரசு தன்னிச்சையாக ஒன்றை உருவாக்கி, அதனை ஏற்றுக்கொண்டால்தான், மற்ற திட்டங்களுக்கு நிதி கொடுப்போம் என்று பேசுவதென்பது அரசியலமைப்புக்கு விரோதமானது. தமிழ்நாட்டின் கொள்கையே இருமொழிதான் என்பதை இன்றைய திமுக அரசு மட்டுமல்ல, பாஜகவின் அடிமை அரசாக இதற்கு முன்பிருந்த அதிமுகவே தெளிவுபடுத்தியிருக்கிறது. உள்ளூர் தொடர்புக்குத் தாய்மொழி, உலகத் தொடர்புக்கு ஆங்கிலம், இதைத்தவிர இன்னொரு மொழி எந்த வகையிலும் தமிழ்நாட்டுக்கு தேவைப்படவில்லை. அப்படியே பணி நிமித்தமாக எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவைப்பட்டால் அது தனிநபரின் விருப்பத்துக்கு உட்பட்டது, தேவைக்குட்பட்டது. யாரும் கற்றுக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தப்போவதில்லை. ஆனால்...

நீதிமன்றத்தின் ஜாதி எதிர்ப்பு குரல்.

நீதிமன்றத்தின் ஜாதி எதிர்ப்பு குரல்.

ஜாதி சமூகத்தை பிளவுப்படுத்துகிறது! வளர்ச்சியை தடுக்கிறது. “ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே அரசியல் சட்டத்தை வடிவமைத்த தலைவர்களின் கனவு. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜாதி என்ற தேவை இல்லாத சுமையை சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கி வைக்கவில்லை.” -இந்த வரலாற்று தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி வழங்கி உள்ளார். தீர்ப்பின் ஒவ்வொரு வரியும் “கல்வெட்டுப்” பதிவுகளாகும்.பொள்ளாச்சி வட்டம் ஆவல்பட்டிக் கிராமத்தில் உள்ள இரண்டு பெருமாள் கோவில்களில் அறங்காவலர்களாக ஒரு குறிப்பிட்ட ஜாதியின் உட்ஜாதிப் பிரிவினரையே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை தீர்ப்பாகவே பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோயில்கள் குறிப்பிட்ட ஜாதிகளின் கட்டுப்பாட்டில் தான்‌ இயங்க வேண்டும் என்றும் அப்போதுதான் அவை காப்பாற்றப்படும் என்றும் பேசி இருக்கிறார். சமூக ஊடகங்களில் அவர் பேச்சு வலம் வருகிறது. பாஜக...

ஒன்றிய ஆட்சியின் ஆணவம்

ஒன்றிய ஆட்சியின் ஆணவம்

விளிம்பு நிலை மக்களின் கல்வியை வேத காலம் தொடங்கி பார்ப்பனியம் மறுத்தே வருகிறது. “சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று கட்டளை இட்டது”.பாடசாலைகள் என்றாலே வேதம் கற்பிப்பதற்கு மட்டும் தான்.தமிழ் மன்னர்கள் கோவில்களைக் கட்டினார்களே தவிர பள்ளிக்கூடங்களை நிறுவவில்லை. வேத பாடசாலைகளைத் தான்‌ அமைத்தார்கள்.பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே தான்‌,முதன்‌ முதலாக ஆங்கில வழியில் பொதுப் பள்ளிகளைக் கொண்டு வந்தார்(1835).அந்த கல்வித் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் பார்ப்பனர்கள்தான். வேதம்‌ படித்தவர்கள் ஆங்கிலம் படித்து பிரிட்டிஷ் ஆட்சியில் உயர் பதவிகளை கைப்பற்றினார்கள். 1916-ம் ஆண்டு பார்ப்பன அல்லாதார் இயக்கம் வரலாற்றுத் தேவையாக வந்த பிறகு பார்ப்பனர் ஆதிக்கம் கேள்விக்கு உள்ளானது. நீதிக்கட்சியின் முதல் ஆட்சியில் 1921-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி உத்தரவு பார்ப்பனர் அதிகார வர்க்கத்தால் முடக்கப்பட்டது.அதற்கு பிறகு 1928 ஆம்‌ ஆண்டில் தான்,ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு,சுப்பராயன்‌ முதல்வராக இருந்த போது அமைச்சர் முத்தையா முதலியார் அவர்களால் வகுப்புவாரி உரிமைச்...

மாநில உரிமையைப் பறிக்கும் உச்சநீதிமன்றம்!

மாநில உரிமையைப் பறிக்கும் உச்சநீதிமன்றம்!

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, 2019-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் முதுநிலை படிப்புகளில், வசிப்பிடத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று ஜனவரி 30-ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள இத்தீர்ப்பால் தமிழ்நாடு பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலமான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இத்தீர்ப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவ முதுகலை படிப்பில் 2 ஆயிரத்து 294 இடங்கள் இருக்கின்றன. அதில் இடஒதுக்கீட்டின்படி ஒன்றிய அரசு 50 விழுக்காடு இடங்களையும், தமிழ்நாடு அரசு 50...

உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டுகிறோம்!

உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டுகிறோம்!

டெங்கு, காலராவைப் போல் சனாதனம் ஒரு நோய். அது ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 2023, செப்டம்பரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் பேசிய இந்த கருத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சங்கிகளும் பார்ப்பனர்களும் கொந்தளித்தார்கள். பல்வேறு மாநிலங்களில் உதயநிதி மீது வழக்குகளைத் தொடர்ந்தார்கள். ஒரு பார்ப்பன சாமியார் அவரது தலைக்கு விலை வைத்தார். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்கள். ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் சாபமிட்டார். அவரது கட்சியினர் கோயில் வாசலில் உதயநிதி படத்தை மிதியடியாகப் போட்டு காலால் மிதித்தனர். உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், ஒரு அமைச்சரே சனாதனத்தை எதிர்க்கலாமா? கருத்துச் சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு நீதிபதி வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார். விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் உதயநிதி...

இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்ற பா.ஜ.க.-வின் பெரும்பான்மைவாதம் வெறும் வாக்கு அரசியலுக்கான உத்தி என்பதை வருணாசிரமவாதிகள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். “பார்ப்பனர்களே ஒன்றுபடுங்கள், பார்ப்பனர்களே உங்கள் மேலாதிக்கத்தை விட்டுவிடாதீர்கள்” என்பதுதான் அவர்களின் உண்மையான முழக்கம். அந்த முழக்கத்தைக் கர்நாடாகாவிற்கு சென்று எதிரொலித்திருக்கிறார் காஞ்சி காமகோடி பீடத்தின் விஜயேந்திர சரஸ்வதி. சனவரி 19-ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெற்ற ‘அகில கர்நாடகா பிராமண மகாசபா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கும் இவர், “சனாதன தர்மத்தைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றுவது பார்ப்பனர்களே. இந்திய விடுதலைக்குப் பிறகு வேத தர்மத்தைப் பரப்ப பார்ப்பனர்கள் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். வைதீக மதம் நிலையாக இருக்கவும், பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாசார பெருமைகளைப் பாதுகாக்கவும் பார்ப்பனியத்தின் இருப்பு அவசியம். நிர்வாக மட்டத்தில் பார்ப்பனர்களை அதீத எண்ணிக்கையில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் சனதான தர்மத்தைப் பரப்ப முடியும். பார்ப்பன சமூகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அவரது பேச்சில் ஒரு இடத்தில் கூட,...

வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்

வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்

பெரியார் பற்றி அண்ணா இவ்வாறு கூறினார்; “ஒரு சகாப்தம்; ஒரு திருப்புமுனை; ஒரு காலகட்டம்; நூற்றாண்டு வரலாற்றை ஒரு குடுவைக்குள் அடக்கியவர்.” (Putting Centuries In Capsules) சமூகவியல் பார்வையில் வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார். இந்தியாவில் பார்ப்பனியத்தை எதிர்த்த முதல் புரட்சிக்காரர் புத்தர். வேதம் – யாகம் – சமூகக் கொடுமைகளை எதிர்த்து புத்தர் மக்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் கொள்கைகளைப் பரப்ப அவரது சீடர்கள் மக்களைச் சந்தித்து புத்தரின் கருத்தியலைப் பரப்பினார்கள். அதே புத்தர் இயக்கத்தை அவரது மறைவுக்குப் பிறகு பார்ப்பனியம் ஊடுருவிச் சிதைத்தது. பார்ப்பனியத்தை எதிர்த்து சார்வாகர்கள், சித்தர்கள், சமணர்கள், வள்ளலார் என்ற சீர்திருத்தவாதிகள் வந்தார்கள். பார்ப்பனியம் அவர்களை ஜீரணித்துவிட்டது. வரலாற்றில் இருந்து பாடம் பெற்ற பெரியார் எந்த இயக்கமும் எந்தப் புரட்சியாளரும் பின்பற்றாத புதிய நடைமுறைகளையும், கருத்துகளையும் தனது இயக்கத்துக்காகக் கட்டமைத்தார். 1. தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக்கினார். 2. எதைச் சொன்னால்...

பல்கலைக்கழக உரிமைகளைப் பறிப்பதா?

பல்கலைக்கழக உரிமைகளைப் பறிப்பதா?

பல்கலைக்கழகங்களை தமிழ்நாடு அரசிடம் இருந்து விடுவித்து தனது நேரடிக் கண்காணிப்பில் கொண்டுவரப் போகிறது ஒன்றிய பாஜக ஆட்சி. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் எதிர்ப்போம் என்று அறிவித்துள்ளதைப் பாராட்டி வரவேற்கிறோம். பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிகளுக்கு இடமில்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு ஒரு சட்டத்தைக் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது. ஆளுநரின் பிரதிநிதி, மானியக் குழுவின் பிரதிநிதி, பல்கலைக்கழகப் பிரதிநிதி என்ற மூவர் மட்டுமே துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பார்களாம். கல்வித்துறை சாராதோரும் துணைவேந்தர்களாகலாம் என்றும் புதிய சட்டம் கூறுகிறது. இதற்கான மசோதா இப்போது வெளியிடப்பட்டுள்ளது. 21 பக்கங்கள் கொண்ட சட்டத்துக்கான வரைவு அறிக்கை ஒன்றை கல்வித்துறை அமைச்சகத்திடம் பல்கலைக்கழக மானியக்குழு அளித்துள்ளது. இந்தப் புதியக் கொள்கையை ஏற்காத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாநிலக்குழுவின் வரம்பில் இருந்து நீக்கப்பட்டு நிதி வழங்குவது நிறுத்தப்படும் என்றும் இந்த நிறுவனங்கள் தரும் பட்டங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படும்...

தலையங்கம் – நூற்றாண்டு காணும் ஜாதி ஒழிப்புப் போராளி

தலையங்கம் – நூற்றாண்டு காணும் ஜாதி ஒழிப்புப் போராளி

ஜாதி ஒழிப்புக் களத்தில் உயிர்நீத்த மாவீரன் இமானுவேல் சேகரன் நூற்றாண்டு இது. தென் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடிய ஜாதிவெறிக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடிய மாவீரன். 1924, அக்டோபர் 09ஆம் தேதி முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூரில் அவர் பிறந்தார். இராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக் காலங்களில் ஊருக்கு வரும் போது ஒடுக்கப்பட்ட மக்களின் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார். மக்களை அணிதிரட்டினார். ஒருகட்டத்தில் இராணுவத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஜாதி ஒழிப்புக் களத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்டார். தேவேந்திர குல வேளாளர் என்ற ஜாதிப் பிரிவில் அவர் பிறந்தாலும் சுயஜாதியைக் கடந்து தீண்டாமையால் பாதிக்கப்பட்ட நாடார் உள்ளிட்ட அனைத்து ஜாதிகளையும் அவர் ஒருங்கிணைத்தார். 1953இல் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை அவர் தொடங்கினார். ஜாதி ஒழிப்புடன் பெண்ணுரிமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். கணவனை இழந்தப் பெண்கள் மறுமணம் செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் நேரடியாகச் சென்று பரப்புரை செய்தார். அன்றைய காலகட்டத்தில் இராஜகோபாலாச்சாரி...