நீதிபதியின் துணிவானக் கருத்து
உச்ச நீதிமன்றத்தைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரம் கொண்ட நிபுணர்கள் குழு ஒன்றை (Distinguished Jurists) குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேசி இருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்றாகும். குடியரசுத் தலைவருக்கு சட்டம் இந்த உரிமையை வழங்கி இருக்கிறது என்றாலும், 76 ஆண்டு காலமாக இதுவரை அப்படி ஒரு நியமனம் நடக்கவில்லை என்று நீதிபதி புயான் புதுதில்லி தேசிய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசியிருக்கிறார். இந்த உரை நிகழ்த்தப்பட்ட சூழல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.கே.அய் சூரியகாந்த் இளைஞர்களைக் கரப்பான் பூச்சிக்கு ஒப்பிட்டுக் கூறிய கருத்துக்கு இளைஞர்கள், மாணவர்களிடையே எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்பின. இதைத் தொடர்ந்து அய்தராபாத்தில் உள்ள நெல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தலைமை நீதிபதி அழைக்கப்பட்டதற்கு, மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தலைமை நீதிபதி நிகழ்ச்சிக்கு வரவில்லை. உடனே வழக்கறிஞர்களின் அமைப்பான பார்...
