சட்டத்தின் ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?
சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்க மறுப்பது ‘தீண்டாமைக் குற்றம்’ என்று 2019ல் உச்ச நீதிமன்றத்தில் ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் குவிந்தன. இப்போது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பினை சபரிமலை அய்யப்பன் கோயிலில் அமல்படுத்தவில்லை. தீர்ப்பை உறுதியாக ஆதரித்த கேரள இடதுசாரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி இப்போது தனது முடிவை தேர்தலுக்காக மாற்றிக் கொண்டு விட்டது பெரும் அவலம். சம்பிரதாயங்கள் தொடர்ந்து நீடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மனு போட்டுள்ளது. 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெண்கள் உரிமைக்காக கொண்டு வந்ததை எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டன என்று மோடி “பெண்ணுரிமைக் காவலர்” போல் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆனால் இதே மோடிஆட்சி உச்ச நீதிமன்றத்தில்...
