பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது!
பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது! ஊழலில் சிக்கி கைது நடவடிக்கைக்கு ஆளானவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதா? கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்! தமிழ்நாட்டு அரசு இத்துணைவேந்தர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை! சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் பதவிக் காலம் ஜூன் மாதம் 30 தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் தனக்கு மீண்டும் பணி நீடிப்பு பெற தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். இத்துணைவேந்தர் மீது தனியார் நிறுவனத்தை பல்கலைக்கழகத்தில் துவங்கியது, பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாதது, தமிழ்நாடு அரசு பதிவாளரைப் பணி இடை நீக்கம் செய்யுமாறு அனுப்பிய கடிதத்திற்கு மதிப்பு அளிக்காமல் பதிவாளரைப் பணியில் இருந்து விடுவித்தது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் ஊழல் தொடர்பாக கைது நடவடிக்கையையும் எடுத்து உள்ள நிலையில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க முடிவு...