Category: பெரியார் முழக்கம் 2025

தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்!-ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி

தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்!-ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி

‘ஈரோட்டுப் பாதை சரியா?’ நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களுக்கான பதிலின் தொடர்ச்சி. தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியாக 22.11.1925 குடிஅரசு இதழில் ‘தமிழ் தினசரி பத்திரிக்கை’ என்ற ஒரு தலையங்கத்தை பெரியார் எழுதியுள்ளார். அதில், ‘தென்னிந்தியாவுக்கு, தென் இந்தியர்களுக்கு, ஒரு நம்பிக்கையும் யோக்கியமும் உள்ள தமிழ் தினசரி பத்திரிக்கை வேண்டுமா? வேண்டாமா? என்று யோசிக்க வேண்டும். குறைந்தது ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். ஒரு வருடத்தில் பத்தாயிரம் சந்தாக்கள் சேர வேண்டும். 50,000 இல்லாமல் ஆரம்பிப்பது நிலை பெற தக்கதாகாது. அதற்கு பங்கு ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் 20 ஆயிரம் பங்கு கொண்ட ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். 50 ஆயிரம் ரூபாய் வசூலித்த பிறகுதான் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் ஜில்லாக்களாகிய 12 ஜில்லாக்களுக்கும் ஜில்லா ஒன்றுக்கு 5000 ரூபாய் முன்பணம் வசூலிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டு, “பத்திரிகையின் கொள்கை பிராமணரல்லாதாருடையவும்...

ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் டிசம்பர் 29 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள போராட்டத்திற்கு தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் பொதுமக்கள் தங்களால் ஆன ஆதரவை கொடுத்து உதவுமாறு பொதுவெளியில் சமூக ஊடகங்களில் தோழர்கள் பலரும் பதிவிட்டனர் அந்த பதிவை பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, தங்களால் முடிந்த சிறு தொகையை அவரவர் சக்திக்கு ஏற்றவாறு நிர்மல் குமாரின் கூகுள் பே எண்ணுக்கு அனுப்பி, போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த, தற்போது கத்தாரில் பணியாற்றி வரும் தோழர் ஒருவர் இந்த போராட்டம் மிக அவசியமானது எனக்கூறி, ஆர்வத்துடன் நிதி உதவி அளித்திருப்பதோடு, கழகத்தின் இந்த போராட்டத்திற்கான தீர்மானம் 2023-இல் சேலம் மாநாட்டில் இயற்றப்பட்ட சமயத்தில் இருந்து கவனித்து வருவதாக கூறியுள்ளார்....

அம்பேத்கர் நினைவு நாளில் மரியாதை!

அம்பேத்கர் நினைவு நாளில் மரியாதை!

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, டிச-6,2025 காலை 8 மணியளவில், ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கொள்கை முழக்கமிட்டோம். ம.கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ம. குகாநந்தன், அருண் கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்), இமானுவேல் துரை, ஷேக் முகமது, மருத்துவர் கணேஷ், கார்த்தி ராஜேந்திரன், தீபக், மஞ்சுநாதன், மடிப்பாக்கம் அருண், புகழேந்தி, ஸ்ரீலேகா, நந்தகுமார், ராஜஸ்ரீ, ரஞ்சித், ஜெயவேல், யாழ் நிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 25122025

ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து மத நல்லிணக்க பேரணி!

ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து மத நல்லிணக்க பேரணி!

மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் நடைபெற்ற அமைதிக்கான நல்லிணக்க பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கழகத் தோழர்கள் பங்கேற்றனர். தளபதி, காமாட்சி பாண்டி, சத்தியமூர்த்தி, முருகேசன், வேங்கைமாறன், தோழர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர். அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மதச்சார்பின்மைக்கு எதிராக, மாநில உரிமைக்கு எதிராக சனாதன தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும், தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் மதவாத கும்பல்களை தடை செய்ய வேண்டும் என்றும், சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடும் மதவெறி அமைப்புகளை எச்சரித்தும் பேரணியில் முழக்கங்கள் பேரணியில் முழக்கங்கள் எழுப்பட்டன. மதவாதத்தை தூண்டி திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என அதிகாரத் திமிருடன் பேசி கலவரத்தை தூண்டும் இந்துத்துவ பயங்கரவாதிகளை கைது செய்ய இந்த பேரணி வலியுறுத்தியது. பெரியார் முழக்கம் இதழ் 25122025 =

வடசென்னையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

வடசென்னையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

“மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” முழுநாள் பிரச்சாரக் கூட்டங்கள், டிசம்பர்-15,2025 முழுநாள் ஜாதி எதிர்ப்பு பரப்புரை வடசென்னை திருவொற்றியூர் அஜக்ஸ், புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ, பழைய வண்ணாரப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்றது. தோழர்கள் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. (சென்னை மாவட்டச் செயலாளர்) இரா. உமாபதி ஒருங்கிணைத்தார். தோழர்கள் உமாபதி – வீரமணிதாசன் – லோகநாதன் குழுவினரின் சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சி சிறுவர் சிறுமியரையும் கவர்ந்திழுத்தது. “சமஸ்கிருத ஆதிக்கம்” குறித்து துரை தலைமையுரையாற்றினார். “திராவிடம்தான் தமிழ் தேசியம்” என்பதை வலியுறுத்தி தொழிலாளர் சீரமைப்பு இயக்கத் தோழர் ம.சேகர் உரையாற்றினார். “பாஜகவின் போலி ஆன்மீக வேடத்தை” விசிக மண்டலத் துணைச்செயலாளர் நிலமேலவளவன் தோலுரித்துக் காட்டினார். “குடும்பமும் சடங்குகளும் பழக்க வழக்கங்களும் ஜாதியை பாதுகாக்கின்றன” என்பதை விளக்கி கழகத்தோழர்- வழக்கறிஞர் இரண்யா கருத்துரையாற்றினார். “அம்பேத்கரை உள்வாங்கும் சங் அமைப்புகளால்,...

`தேசீய கீதப் புரளி’

`தேசீய கீதப் புரளி’

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாட இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அதையொட்டி ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து பல்வேறு விவாதங்களும் எழுந்தன. இந்த ‘வந்தே மாதரம்’ தொடர்பாக 1937-இல் குடிஅரசு வெளியிட்ட கருத்துக்கள் இவை. ஆகஸ்டு 31ந் தேதி கூடிய சென்னை அசம்பிளி – கெளன்சில் கூட்டு சம்மேளனத்தில் “வந்தேமாதர” தேசீய கீதம் பாடியபோது இரண்டு முஸ்லீம் மெம்பர்கள் எழுந்து நிற்கவில்லையென்று தெரிய வருகிறது. காங்கரஸ்காரரான ஹிந்துக்கள் வந்தேமாதர கீதத்தை தேசீய கீதமென்றோ தேசீய ஞான சங்கீர்த்தனமென்றோ கூறிக்கொள்ளலாம். ஆனால் இதர கட்சி மெம்பர்களும் இதர சமூக மெம்பர்களும் அதை காங்கரஸ் கீதம் என்றே மதிப்பார்கள். முக்கியமாக முஸ்லீம்கள் வந்தேமாதர கீதத்தை அறவே வெறுக்கிறார்கள். எனவே “வந்தே மாதர” கீதம் பாடியபோது உட்கார்ந்திருந்த அந்த இரண்டு முஸ்லீம்களையும் குறை கூறுவதற்கில்லை. வந்தேமாதர கீதம் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “ஆனந்த மடம்” என்ற நாவலில் முதன்...

இந்தியை ஆதரிக்கவில்லையா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (8) – கொளத்தூர் மணி

இந்தியை ஆதரிக்கவில்லையா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (8) – கொளத்தூர் மணி

தோழர் பொன்னீலனின் அதே நூலில் “1953 அக்டோபரில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளத்துக்கே உரியன” என்ற கருத்தை கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் வெளியிட்டார். இதை எதிர்த்து அக்டோபர் 14 தாமரை குளத்தில் ஆர்.சோமசுந்தரம் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜீவா இவ்வாறு கூறினார்: “தேவிகுளம் பீர்மேடு சம்பந்தமாக ஸ்ரீ ஏ.கே. கோபாலன் கூறியது அவரது சொந்த கருத்து. கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக கருத்து வெளியிடாமல் இருப்பது வரையிலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் அவர்கள் கூறுவது கட்சியின் முடிவாகாது. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை ‘எல்லைக் கமிஷன் முடிவுக்கு விட வேண்டியது அவசியம்’ இதுதான் கட்சியின் கருத்து” என்று கறாராக அறிவித்து விடுகிறார். வெண்டைக்காய் பதில் ஆனால் ‘சரியில்லாத ஈரோட்டு பாதை’ காட்டிய பெரியாரின் ‘விடுதலை’ ஏடு அதன் 22.11.1955 இதழில் “தேவிகுளம், பீர்மேடு தமிழ் வட்டாரங்களே! சென்னை சட்டசபையில் அமைச்சர் தந்த புள்ளிவிவரம்” என்ற தலைப்பில் செய்தி...

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

“மதவெறி பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?” என்ற தலையங்கத்தில், ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து இளைய தலைமுறை அறிந்திடாத பல உள்ளார்ந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன், இதனைத் தூக்கிப் பிடிக்கும் பாஜக-வின் உண்மை நோக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியுள்ளது. அதேபோல், தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்டங்கள் தொடர்பான தோழர் அருண் கோமதி எழுதிய கட்டுரையில், அந்தச் சட்டங்கள் எவ்வாறு பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்பதை மிக அழுத்தமாகவும் திருத்தமாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய சட்டத் தொகுப்பு என்பது, இந்திய விடுதலைக்கு முன்பே (தொழிற்சங்க சட்டம் 1926-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திலேயே) தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தொழிற்சங்க உரிமைகளை, குறிப்பாக வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை அடியோடு பறித்துள்ளது. தொழிலாளர்களின் இறுதி ஆயுதமாகவும், முதலாளிகளைப் பணியவைக்கும் பலமிக்க ஆயுதமாகவும் விளங்கும் வேலைநிறுத்தத்தை ஒன்றுமில்லாமல் செய்து, தொழிலாளர் வர்க்கத்தை நவீன கொத்தடிமைகளாக மாற்றியுள்ளது. -இளங்கோவன் ஏ காரைக்குடி பெரியார் முழக்கம் இதழ் 25122025

குழப்பங்கள், குளறுபடிகளுடன் நடத்தப்பட்ட எஸ்.அய்.ஆர்.!

குழப்பங்கள், குளறுபடிகளுடன் நடத்தப்பட்ட எஸ்.அய்.ஆர்.!

தமிழ்நாட்டில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புப் திருத்தத்தில் நடந்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை தி இந்து பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. 75018 வாக்குச் சாவடிகளில் குறித்த தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 14 வாக்குச் சாவடிகளில் இளவயதில் இறந்தவர்கள் என்கிற பெயரில் நீக்கப்பட்டுள்ள வாக்குகளின் விகிதம் அசாதாரண அளவு அதிகமாக இருக்கிறது. 35 வாக்குச்சாவடிகளில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. 8,361 சாவடிகளில் நீக்கப்பட்ட பெயர்களின் விகிதம் அசாதாரண அளவு அதிகமாக இருக்கிறது. 3,907 இடங்களில் இறந்தவர்களாகக் கருதப்பட்டவர்களின் விகிதம் மிகையாக இருக்கிறது. 6,139 பாகங்களில் வீட்டில் இல்லை (absent) என்று நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 172 பாகங்களில் ‘ நிரந்தரமாக குடிமாறிப் போன பெண்கள் ’ என்கிற வகைமை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. 50 பேருக்கும் மேல் இறந்து விட்டதாகக் கூறப்படும் 14 வாக்குச்சாவடிகளில், 50% பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள். பொதுவாக மக்கள் தொகையியல் (Demographic) கணக்குப்படி ,...

பாஜக என்றால் பம்முகிறார் விஜய்!

பாஜக என்றால் பம்முகிறார் விஜய்!

“ஈரோடு கூட்டத்திற்கு நடிகர் விஜய்க்கு பேச்சு எழுதிக் கொடுத்தவர்களுக்கு விஜய் மீது என்ன கோபமோ தெரியவில்லை. அவருக்கே ஆப்பு வைத்திருக்கிறார்கள். அதனால்தான் “மக்களுக்கு ஒன்று என்றால் ஓடிவந்து மக்களோடு நிற்பேன், மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை கேட்டு அறிந்த பிறகுதான் இங்கே பேச வந்திருக்கிறேன்” என்ற டயலாக்கை விஜயை வைத்தே பேச வைத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை பனையூர் பங்களாவுக்கு அழைத்து சந்திக்கும் ஒருவரை இதைவிட கிண்டல் அடிக்க முடியாது. “விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்கள் உரிமைத்தொகை” என்று தமிழ்நாடு அரசு திட்டங்களுக்கு பெயர் வைத்துள்ளது. இதுகூட விஜய்க்கு தெரியாது என்பதை மக்களிடம் அம்பலப்படுத்துவதற்காக இலவச திட்டம் என்று திமுக கூறுவதாக பொய்யாக பேச வைத்து மக்கள் மன்றத்தில் காமெடியன் ஆக்கி இருக்கிறார்கள். விஜய் எதிர்ப்பு அரசியலை திமுக கண்டு கொள்வதே இல்லை. அவரது பெயரைக் கூட தமிழ்நாடு முதல்வர் உச்சரித்ததே இல்லை ஆனால் ஏதோ தங்கள் கட்சியைப் பார்த்து மிரண்டு...

விஷச் சிந்தனைகளுக்கு இடமளிக்கக்கூடாது!

விஷச் சிந்தனைகளுக்கு இடமளிக்கக்கூடாது!

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் டிசம்பர் 21-ஆம் தேதி பொருநை அருங்காட்சியத்தை தமிழ்நாடு அரசு திறந்துவைத்துள்ளது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடத்தில் இரும்பின் பயன்பாடு இருந்ததை, இரும்பை உருக்கி ஆயுதங்கள் தயாரிக்கும் அறிவைப் பெற்றிருந்தனர் என உலகை வியக்கவைத்தது பொருநை அகழாய்வு முடிவுகள். அதேபோல கீழடியிலும் தமிழர்களின் நாகரிகம் உயர்ந்தது என்பதற்கான அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அங்கும் ஒரு அருங்காட்சியகத்தை திமுக அரசு அமைத்திருக்கிறது. டிஜிட்டல் வசதிகளுடன் இரு அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தோடு கீழடி, பொருநை நாகரிகங்கள் ஒத்துப்போகின்றன என்பது மட்டுமல்ல, இரண்டு இடங்களிலும் கடவுள், மத, ஜாதி அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் வெளிநாட்டு வணிகத் தொடர்புகளுடன், ஒரு உயர்ந்த நாகரிகமாக தமிழர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளாக அவை திகழ்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறைக்கு கற்பித்து, இடையே புகுத்தப்பட்ட ஜாதி – மதப் பாகுபாடுகளை விட்டொழித்து நாம், ஜாதியற்ற- மதமற்ற தமிழர்களாக ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துவதுதான் கல்வித்துறையின் சேவையாக...

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

2006-இல் காசி விஸ்வநாதர் கோயில் நிலத்துக்கு சொந்தமான இடத்தில் மசூதி கட்டுவதாக வெடித்த சர்ச்சையில், இந்து முன்னணியைச் சேர்ந்த குமார பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டனர். உண்மையிலேயே அந்த இடம் கோயில் நிலம்தானா இல்லையா என்ற வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி கலவரங்களை உருவாக்கி, அதில் இந்துத்துவ குளிர் காய்ந்துகொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். இப்போது திருப்பரங்குன்றம் வரை இது தொடர்கிறது. ஆனால் இதில் இழப்புகளைச் சந்திப்பது ஹெச்.ராஜாவை போன்ற பார்ப்பனர்கள் இல்லை, அப்பாவி சாமானிய இந்துக்களே. குமார பாண்டியன் குடும்பத்தினரும் அப்படிப்பட்ட சாமானிய இந்துக்களே. கொலை செய்யப்பட்டவர்களில் குமார பாண்டியன் சகோதரரின் மகளான ருத்ரா இந்த பார்ப்பன சூழ்ச்சியை புரிந்துகொண்டு, பெரியாரியத்தை நோக்கி தனது திசையை திருப்பிக்கொண்டு, இப்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவையுடன் பயணித்து வருகிறார். அவர், “ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்” என்ற...

டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்!  ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!

டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்! ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், டிசம்பர் 29-ஆம் தேதி, ஜாதி தீண்டாமைக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகள் கோரி போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டுக் கிராமங்கள் இன்னமும் ஜாதியக் கட்டமைப்புக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையிலேயே ஒரு வெட்கப்படத்தக்க நிலையாகும். இன்னமும் கிராமங்களில் ஜாதி தீண்டாமைகள் எப்படி நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன, நிலைநாட்டப்பட்டு வருகின்றன, அதன் வடிவங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதையெல்லாம் கோவை, திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமம் கிராமமாகச் சென்று ஆராய்ந்து, அதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஆணையத்தின் முன் திராவிடர் விடுதலைக் கழகம் கையளித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ‘ஜாதி ஒரு அவமானம், மனிதம் நமக்கு அடையாளம்’ என்ற ஒரு தலைப்பில் தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, மக்களிடம் ஜாதியத் தீண்டாமைக் கொடுமைகளுக்கு...

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

கழக ஆதரவாளரான தோழர் ரஞ்சித் அவர்களின் சிற்றுண்டி கடை (SNACKIFY), இராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிலையம் அருகில் டிசம்பர்-14, 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் ப. அருண் (இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் கடை திறப்பு விழா நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) சிற்றுண்டி கடையைத் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஆர்.என்.துரை (திமுக தென்சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர்) கலந்து கொண்டார். திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் மற்றும் ரஞ்சித் குடும்பத்தினர், நண்பர்கள் உடனிருந்தனர். புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 மாவட்டச் செயலாளரிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 18122025

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

வடசென்னை கழகத் தோழர் அருள்தாஸின் தாயார் அஞ்சலை (என்கிற) அன்னை மரி முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு டிச-11, 2025 மாலை 6 மணிக்கு கே.பி.பார்க் இல்லத்தில் நடைபெற்றது. அருள்தாஸ் புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு 10 சந்தாக்களை வழங்கினார். நிகழ்வில், இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர் ), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மற்றும் ராஜன், தினகரன், விஜயன், அசோக் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 18122025

பொள்ளாச்சி, மேட்டூரில் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி, மேட்டூரில் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய் எனும் முழக்கத்தோடு 11.12.25 அன்று மாலை பொள்ளாச்சி திருவள்ளுவர் சிலை அருகில் சனநாயகக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வே.வெள்ளிங்கிரி (திவிக) தலைமையில் நடைபெற்றது. தமிழ்க்குமரன் (ஜெய் பீம் பொதுநல அறக்கட்டளை) தொடக்க உரையாற்றினார். கோபாலகிருஷ்ணன் (தமிழ்ப்புலிகள் கட்சி), மாரிமுத்து (தி.க.), ராஜ்குமார் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), க.மாரிமுத்து (மக்கள் விடுதலை முன்னணி), மணிமாறன் (திமுக), மாறன் (மக்கள் அதிகார கழகம்), முகமது யாசின் (எஸ்.டி.பி.அய்.), மனோகரன் (சிபிஎம்), பிரபாகரன் (மே 17 இயக்கம்), வழக்கறிஞர்கள் சேதுபதி (தமிழ்நாடு தன்னுரிமை இயக்கம்), சூரியகுமார் (நீலம் பண்பாட்டு மையம்), மதி.அம்பேத்கர் (விசிக) ஆகியோர் கண்டனவுரையாற்றினார்கள். மேட்டூரில் கண்டனப் பொதுக்கூட்டம்! மேட்டூர்: மேட்டூர் நகர கழகத்தின் சார்பாக மதுரை திருப்பரங்குன்ற உச்சி பிள்ளையார் கோவில் தீப வழக்கில் தமிழ்நாட்டில் பதட்டத்தை உண்டாக்க ஒருவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து கண்டனப்...

பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில், 1992-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மசூதி வழியாக நடத்தி, கலவரத்தில் முடிக்க முயன்றனர் சிலர். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது வி.எம்.தெரு. அடுத்த ஆண்டில் வி.எம்.தெருவுக்குள்ளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முயன்றார் ராமகோபாலன். அந்த முயற்சியை முறியடித்து, கலவர நோக்கத்தைத் தடுத்ததுடன், ஐஸ் அவுஸ் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு எதிர்ப்பாக பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தி, சமூகப் பதற்றத்தை தணித்தார் பத்ரி. அதேபோல, 2001-இல் அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலின்போது இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றன மேற்குலக நாடுகள். மேடை ஏறி...

பெங்களூர் கழகத் தோழர் ந.சித்தார்த் தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு  புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு வளர்ச்சி நிதியாக  ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார்.

பெங்களூர் கழகத் தோழர் ந.சித்தார்த் தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார்.

பெரியார் முழக்கம் 18122025

ஜீவாவும் மொழி வழி மாநில சீரமைப்பும் ; ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (7) – கொளத்தூர் மணி

ஜீவாவும் மொழி வழி மாநில சீரமைப்பும் ; ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (7) – கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பலர் எழுதி இருந்தாலும் 1946-இல் வெளிவந்த தோழர் இஸ்மத் பாஷா எழுதிய ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ மட்டும் அவர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த ஒன்றாகும். 1963 ஜனவரியில் முடிவெய்திய தோழர் ஜீவா குறித்து, ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’ என்ற நூல் 1966-ஆம் ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்த அவரது சிலை திறப்பு விழாவில் வெளியிடப்பட்டிருந்தாலும் நூலினை எழுதிய தோழர் கே.பாலதண்டாயுதம் இறுதிக்காலத்தில் ஜீவாவோடு நெருக்கமாக இருந்த ஒருவர் ஆவார். அதில் பதியப்பட்டுள்ள செய்திகள் பெரும்பாலும் ஜீவாவிடம் நேரில் கேட்டு அறிந்து கொண்டதாகவும், ஏற்கெனவே அறிந்ததை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும்தான் இருக்க முடியும். அதில் மொழி வழி மாநிலங்கள் உருவான காலத்தில் வட எல்லையிலும் சென்னை குறித்தும் தெற்கெல்லைப் போராட்டம் குறித்தும் பதிவாகியுள்ள நிகழ்வுகளின் பற்றிய உண்மைத் தன்மையைக் குறித்து திறனாய்வு செய்ய வேண்டியுள்ளது. அந்நூலின் 72 ஆம் பக்கத்தில் உள்ள “தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைய 1949-இல்...

சமூகநீதிக் கொள்கையில் உறுதிகாட்டும் ராகுல் காந்தி!

சமூகநீதிக் கொள்கையில் உறுதிகாட்டும் ராகுல் காந்தி!

பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதி அதிகாரிகளின் பிடியில்தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் மய்யம் சிக்கிக் கிடக்கிறது. முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்த பதவிகளில் அனைத்துப் பிரிவு மக்களும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் ராகுல் காந்தி. கடந்த புதன்கிழமை டெல்லியில் ஒரு முக்கிய கூட்டம் நடந்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இடம் பெற்ற குழுவின் கூட்டம். தலைமை தகவல் ஆணையர், கண்காணிப்பு ஆணையர் மற்றும் 8 தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக இந்த குழு கூடியது. தகவல் தொடர்பு ஆணையர் பதவி 2023-ஆம் ஆண்டில் இருந்தும் தலைமை ஆணையர்கள் பதவி கடந்த செப்டம்பரில் இருந்தும் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது. இந்தப் பதவிகளுக்கு மோடியும் அமித் ஷாவும் தேர்வு செய்துள்ள பட்டியல்களில் பார்ப்பனர்களே அதிகம். 90 நிமிடம் நடந்த இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி இந்த பட்டியலில்...

ராமர் கால வரலாறு திரும்பாது!

ராமர் கால வரலாறு திரும்பாது!

மகளிர் உரிமை திட்டத்தை ஒரு கோடியே 30 லட்சம் பெண்களுக்கு விரிவுப்படுத்தி இருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. உணர்வு பூர்வமாக நடந்து முடிந்துள்ள “வெல்லும் தமிழ் பெண்கள்” விழாவில் பெண்களின் அடையாளமாக கும்மியும் கோலாட்டமும் இல்லாமல் வீரத்தையும் விளையாட்டையும் முன்னிறுத்தி பயனாளிகளின் நெகிழ்வான உரைகளோடு நடந்து முடிந்திருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியின் பெண்கள் உரிமைத் திட்டங்களை இப்போது 10 மாநில அரசுகள் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன. இதில் பாஜக ஆளும் மாநிலங்களும் உண்டு. சனாதனமும் மனுதர்மமும் பார்ப்பனியமும் ஒரே நேர்கோட்டில்தான் பயணிக்கின்றன. இதற்கான அரசியல் வடிவம்தான் இந்துத்துவம். இந்துத்துவக் கருத்துகளை வழங்கிய பார்ப்பனர்கள், சாவர்க்கரும் கோல்வாக்கரும். பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வர்ணாசிரம சமூக அமைப்பை வலிமையாக ஆதரித்தவர்கள். வர்ணாசிரமம் பெண்களை அடிமையாக்கியது; பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும் அவர்கள் பிராமணர்களாக முடியாது; பூணூல் போட முடியாது; சூத்திரர்கள் தான் என்று பறைசாற்றியது. கல்வி உரிமையையும், சொத்து உரிமையையும் மறுத்தது. அதன் காரணமாகத்தான்...

மீண்டும் மீண்டும் கொல்லப்படும் காந்தி!

மீண்டும் மீண்டும் கொல்லப்படும் காந்தி!

2005-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், அன்றைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 100 நாட்கள் ஊரக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இது வேலைவாய்ப்பு திட்டமாக இல்லாமல், சமூகப் பாதுகாப்புத் திட்டமாக மன்மோகன் சிங் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கும் கிராமப்புற மக்களுக்கு, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் வேலைவாய்ப்பு கிடைக்காத காலங்களில், அவர்களிடத்தில் பணப்புழக்கம் இருப்பதை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே இத்திட்டம். இந்தியா முழுவதும் பல கோடி மக்களை வறுமையில் இருந்த மீட்டது இந்தத் திட்டம். ஆனால் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 11 ஆண்டுகளாகவே வேலை நாட்களைக் குறைத்து, நிதியை விடுவிக்காமல், வேலை பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைத்து இத்திட்டத்தை பாழ்படுத்தி வருகிறது. 2013-14 நிதியாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்துக்கு ரூ.39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது....

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… எண் 61, வெங்கடாசலம் தெரு, ராயப்பேட்டை என்ற முகவரி கொண்ட ஒற்றைக் குடித்தன வாடகை வீடு, ஒரு உடைந்த நாற்காலி, ஓலைப்பாய், மர பீரோ… பத்ரி நாராயணனுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் அதற்குமேல் இல்லை. ஆனால், அவருடைய கண்ணசைவுக்கே கட்டுப்படும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை 1990-இல் உருவாக்கி வைத்திருந்தார் அவர். 1980-களில் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, பத்தாண்டுகளிலேயே பலமான கோட்டையாக ராயப்பேட்டையை மாற்றிய செயல் வீரர். ராஜீவ் காந்தி படுகொலையில் கைதாகி, 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த எழுவரை, விடுவிக்கக்கோரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டது இன்றைய...

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்கள் மீது இதுவரை அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நிகழ்த்தி வந்த பல்வேறு வகையான உழைப்பு சுரண்டலை சட்டரீதியாக செய்வதற்கான ஒரு ஏற்பாடு புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பாகும். விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாக இந்நாட்டின் உழைக்கும் மக்களும் போராடிப் பெற்ற 29 சட்டங்களையும் நீக்கிவிட்டு அவற்றை நான்கு சட்ட தொகுப்புகள் ஆக சுருக்கி புதிய தொழிலாளர் சட்டங்களை நிறுவியுள்ளது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இந்த சட்டத் தொகுப்பில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்வது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்/ள்களின் கடமையாகும். இந்தச் சட்ட தொகுப்பில் உள்ள சிக்கல்களை சுருக்கமாகப் பார்ப்போம். புதிய சட்டத்தின் சிக்கல்கள்! ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதே தற்போதைய வேலை நேரமாக உள்ளது. புதிய சட்ட தொகுப்பு இதில் ஒரு முக்கிய திருத்தத்தை செய்கிறது. வாரத்திற்கு ஆறு நாள் வேலை என்பது கட்டாயம் அல்ல. மாறாக...

காதலர்களின் காவல்கோட்டை காவலாண்டியூர்!

காதலர்களின் காவல்கோட்டை காவலாண்டியூர்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வலுவான கோட்டையாக சேலம் மாவட்டம் காவலாண்டியூர் திகழ்கிறது. பாலமலையை ஒட்டியுள்ள அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள் குடும்பம் குடும்பமாக கழகப் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடெங்கும் ஜாதி மறுப்பு காதல் திருமணம் புரிவோருக்கு அடைக்கலம் தந்து, இணையேற்பையும் நடத்தி வைக்கும் சமத்துவ மண். காவலாண்டியூரைச் சேர்ந்த தலைமைக் குழு உறுப்பினரான காவை ஈஸ்வரன் இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்திவைத்துள்ளார். இதனால் ஜாதிச் சங்கங்களின் அச்சுறுத்தல்கள், கொடுந்தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளார். ஆனால் ஒருபோதும் தனது இலட்சியத்தில் இருந்து பின் வாங்கியதில்லை. இந்த வரலாறுகள் எல்லாம் நிகழ்காலத்திலேயே ஊடக வெளிச்சம் பெற்று சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. DW சேனலில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலாண்டியூரின் செயல்பாடுகள் குறித்து மிக நேர்த்தியான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. காவை ஈஸ்வரன், ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்த இணையர்களின் நேர்காணல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. சமூக ஊடகங்களில் சிறு சிறு துணுக்குகளாக இலட்சக்கணக்கோரிடம் அந்த...

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்!

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்!

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்! ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புலனாய்வு செய்து ‘கேரவன்’ பத்திரிக்கை விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ஆர்.எஸ்.எஸின் சட்டப்பிரிவான ஏ.பி.ஏ.பி. அமைப்பு நீதித்துறையில் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சியான தகவல்களை அதன் அதிகாரபூர்வ பதிவேடுகளில் இருந்து அம்பலப்படுத்தி இருந்தது. நீதிபதிகளாக, வழக்கறிஞர்களாக, சட்டத்துறை அதிகாரிகளாக பல்வேறு மட்டங்களில் ஊடுருவி தங்களின் இந்துத்துவா கொள்கைக்காக நீதித்துறையை பயன்படுத்தி வருகிறார்கள். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கும் தீர்ப்புகளும்,சட்டத்துக்கு எதிரான எல்லை மீறிய செயல்பாடுகளும் இதற்கு சான்றாக நிற்கின்றன. இதற்கான வெகுமதி எதிர்காலத்தில் இவர்களுக்கு காத்திருக்கிறது. அதே நேரத்தில் மதவாத சக்திகளின் மிரட்டலுக்கு பணியாமல் நேர்மையாக மனித உரிமைக்காக குரல் கொடுத்த சென்னையைச் சேர்ந்த மற்றொரு நீதிபதியை பற்றியும் குறிப்பிட வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் பழிவாங்கலுக்கு உள்ளான. இந்த நீதிபதிக்கு இப்போது ஐ.நா.மனித உரிமை ஆணையம் மிக உயர்ந்த பதவியை வெகுமதியாக வழங்கி கவுரவித்திருக்கிறது. அவரது பெயர் “சீனிவாச முரளிதர்.” பாலஸ்தீன...

மதவெறிப் பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?

மதவெறிப் பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயல் குறித்து விவாதிக்க வேண்டுமென்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அதுகுறித்து விவாதிக்க முன்வரவில்லை. சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து விவாதமில்லை, மணிப்பூர் குறித்து விவாதமில்லை, இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து விவாதம் இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த எந்த விவகாரம் குறித்தும் விவாதம் இல்லை. ஆனால் வந்தே மாதரம் பாடல் குறித்து 10 மணி நேர விவாதம் நடத்தியிருக்கிறது பா.ஜ.க. அரசு. இப்பாடல் பாடப்பெற்று 150 ஆண்டுகள் ஆனதையொட்டி, நாடு தழுவிய அளவில் நவம்பர் 2025 தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட சென்ற அக்டோபரில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து, ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் ஓராண்டுத் தொடர் நிகழ்வுகளைக் கொண்டாட விரிவான செயல் திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் நாடாளுமன்றத்தில்...

மதவாத கும்பல்களின் கலவர முயற்சிகளை முறியடிப்போம்!

மதவாத கும்பல்களின் கலவர முயற்சிகளை முறியடிப்போம்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை! மதுரை திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்ய முயற்சிக்கும் பாஜக இந்து முன்னணி அமைப்புகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்! தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து வன்முறைக் காடாக்கி அதில் அரசியல் லாபம் அடைய முயற்சிக்கும் மத தீவிரவாத கூட்டத்தை அனுமதியோம்! இந்துத்துவ அமைப்புகளின் கலவரம் உருவாக்கும் சூழ்ச்சியை தக்க சமயத்தில் முறியடித்து அமைதியை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம்! மதவாத சக்திகளுக்கு எதிரான முதல்வரின் நடவடிக்கைகளுக்கு என்றும் துணை நிற்போம்! “மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு பல நூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக முருகன் கோயில் கருவறைக்கு நேர் மேலே இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் இருக்கும் தீபத்தூணில் ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. மேலும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தலைமை அர்ச்சகர் ராஜா...

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஒட்டி வழக்கமான உச்சி பிள்ளையார் கோயில் பகுதிக்கு மாற்றாக, சிக்கந்தர் பாஷா தர்கா பகுதியில் தீபம் ஏற்ற வேண்டுமென்று, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட இந்த நீதிபதியின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, உறுதியான எதிர்வினையாற்றி, தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது திமுக அரசு. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருள வேண்டும் என தீர்ப்பளிப்பது, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை உமிழ்வது என தொடர்ந்து மதவாத நஞ்சை விதைக்கும் இந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித்துறையில் தொடர இடம் அளிக்கக் கூடாது என நாடு முழுக்க கண்டனங்கள் வலுத்துள்ளன. இவரை நீக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 107 பேர் கையெழுத்திட்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். நீதிபதி என்று மக்களவையிலேயே அழுத்தம் திருத்தமாகப் பதிவு...

மக்கள் திரளில் நடைபெற்ற தாரமங்கலம் பொதுக்கூட்டம்.!

மக்கள் திரளில் நடைபெற்ற தாரமங்கலம் பொதுக்கூட்டம்.!

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில்.. “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” பொதுக்கூட்டம் டிசம்பர் 14,.2025 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு தாரமங்கலம் அண்ணாதிடல் (சின்னப்பம்பட்டி சாலை) பகுதியில் மக்கள் பேராதரவுடன் நடைபெற்றது. சி.தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார். (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்),டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) , குடந்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தோழர் சிற்பி ராசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்கள், பெண்கள் என அனைவரையும் கவனம் ஈர்க்கச் செய்து மிகுந்த வரவேற்பை பெற்றது. பொதுக்கூட்டத்தில் கே.ஆர்.தோப்பூர் கண்ணன், (சேலம் மாநகரச்...

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்!   தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்! தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய நாகரீக உலகிலும் பல்வேறு வடிவங்களில் ஜாதியம் தலைதூக்கி நிற்கிறது. ஜாதிக் கயிறுகள், ஜாதிய குருபூஜைகள், ஜாதிய திருமண தகவல் மையங்கள், சமூக வலைதளங்களில் ஜாதி அடையாளத்தை வெட்கமின்றி ஒட்டிக்கொள்ளுதல் என ஜாதியை வலிமைப்படுத்தும் புதுவிதமான முயற்சிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. ஜாதிச்சங்கங்கள் இந்த வேலைகளை இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய ஜாதி வெறிச்செயல்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டிப்பதுடன், ஜாதிய நடவடிக்கைகளுக்கான எதிரான அரசின் உறுதியான சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, திராவிடர் விடுதலைக் கழகம் இந்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. தமிழ்நாடெங்கும் போராட்டத்திற்கு கழகத் தோழர்கள் தயாராகி வருவதுடன், “மனிதம் நம் அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பிலே போராட்ட நோக்கத்தை விளக்கி, பரப்புரைப் பயணங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த...

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!

சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘மனிதம் நமது அடையாளம் -ஜாதி நமக்கு அவமானம்’ என்ற முழக்கங்களோடு ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சமத்துவப் பரப்புரை தெருமுனைக் கூட்டம் 29.11.2025 காலை 11.00 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. சமுத்திரமம், மூலப்பாதை, கொங்கணாபுரம் பேருந்து நிலையம், எட்டிக்குட்டைமேடு ஆகிய நான்கு இடங்களில் பரப்புரை நடைபெற்றது. கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), கவியரசு(தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்), கொங்கணாபுரம் கோகுல் ஆகியோர் தலைமை வகித்தனர். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), முன்னிலை வகித்தனர். பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். இளம்பிள்ளை நகரச் செயலாளர் மோகன்ராஜ், குமரசேன், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), கோகுல் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. எடிசன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்....

கழக ஏட்டுக்கு தோழர் இரண்யா மாதந்தோறும் ரூ.2000 நன்கொடை

கழக ஏட்டுக்கு தோழர் இரண்யா மாதந்தோறும் ரூ.2000 நன்கொடை

கழகத் தோழர் இரண்யா சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக மாதம் ரூ.2000 கொடுப்பதாக தெரிவித்தார். டிசம்பர் மாத வளர்ச்சி நிதியாக ரூ.2000 தந்துள்ளார். சென்னை மாவட்டக் கழக தோழர் அன்பரசு முதல் கட்ட முழக்க சந்தாவாக ரூ.1000 மாவட்டச் செயலாளர் உமாபதியிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். -ஆசிரியர் பெரியார் முழக்கம் இதழ் 04122025

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

இதழ் தாங்கி வரும் கருத்துக்கள் மிகவும் சிறப்பானவை. வாசிப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. இந்த அளவுக்கு யாரும் இவ்வளவு விவரமாக யாரும் வாரப் பத்திரிகையில் எழுதவில்லை. எந்தவிதமான சினிமா விளம்பரங்கள் இல்லாமல், புரட்சிப் பெரியார் செய்திகள் மட்டுமே வெளிவருகிறது. தொடரட்டும் தங்கள் பணி வாழ்க! எஸ்.இராமுபிள்ளை நூலகம், சமூகநலம் வானொலியாளர், பெரம்பலூர். பெரியார் முழக்கம் இதழ் 04122025

நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

தி.மு.க.- 75 அறிவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் 8 முதல் 16 வரை வள்ளுவர் கோட்டத்தில், சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கேற்க, ஊடவியலாளர் ர.பிரகாசு, தோழர் மகிழவன் முயற்சியில் அரங்கு ஒதுக்கப்பட்டது. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைப்பில், 9 நாட்கள் நிமிர்வோம் பதிப்பக அரங்கு செயல்பட்டது. கழக வெளியீடுகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் கழக வெளியீடுகளை தேடி வந்து வாங்கிச் சென்றனர். மொத்தம் ரூ.82,000-க்கு கழக நூல்கள் விற்பனையானது. இளைஞர் அணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு.கோபிநாத், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, காவை அஜித், முழக்கம் செய்தியாளர் பிரசாந்த், சுகந்தன், வீரா, யாழினி, அசோக், ஓவியா ஆகிய தோழர்கள் அரங்க வடிவமைப்பு பணிகளை முனைப்புடன் செய்தனர். தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி,...

தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி

தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி

‘ஈரோட்டுப் பாதை சரியா?’ நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களுக்கான பதிலின் தொடர்ச்சி. தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியாக 22.11.1925 குடிஅரசு இதழில் ‘தமிழ் தினசரி பத்திரிக்கை’ என்ற ஒரு தலையங்கத்தை பெரியார் எழுதியுள்ளார். அதில், ‘தென்னிந்தியாவுக்கு, தென் இந்தியர்களுக்கு, ஒரு நம்பிக்கையும் யோக்கியமும் உள்ள தமிழ் தினசரி பத்திரிக்கை வேண்டுமா? வேண்டாமா? என்று யோசிக்க வேண்டும். குறைந்தது ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். ஒரு வருடத்தில் பத்தாயிரம் சந்தாக்கள் சேர வேண்டும். 50,000 இல்லாமல் ஆரம்பிப்பது நிலை பெற தக்கதாகாது. அதற்கு பங்கு ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் 20 ஆயிரம் பங்கு கொண்ட ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். 50 ஆயிரம் ரூபாய் வசூலித்த பிறகுதான் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் ஜில்லாக்களாகிய 12 ஜில்லாக்களுக்கும் ஜில்லா ஒன்றுக்கு 5000 ரூபாய் முன்பணம் வசூலிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டு, “பத்திரிகையின் கொள்கை பிராமணரல்லாதாருடையவும்...

ஆர்.எஸ்.எஸ்க்காக கோயில் இடிப்பு!

ஆர்.எஸ்.எஸ்க்காக கோயில் இடிப்பு!

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் கட்டியுள்ள புதிய தலைமையகத்தின் வாகன நிறுத்துமிட வசதிக்காக, அப்பகுதியில் இருந்த பழமையான கோயில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி, மாநகராட்சியின் துணைகொண்டு இந்த ‘கர’சேவையை நடத்தியிருக்கிறது ஆர்எஸ்எஸ். இந்துக்கள், ஆலயங்கள் என்றெல்லாம் பாஜகவும், சங் பரிவார் கும்பலும் பேசுவது வெறும் அரசியலுக்காகத்தானா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் நிர்வாக நடைமுறையைப் பின்பற்றித்தான் கோயில் இடிக்கப்பட்டுள்ளது இதில் எந்த விதிமீறலும் இல்லை என விளக்கம் தந்திருக்கிறது பாஜக தரப்பு. நடைபாதை கோயில்களை அகற்ற வேண்டுமென்று நீதிமன்றங்கள் எத்தனையோ முறை கூறிவிட்டன. விதிமுறைகளைப் பின்பற்றித்தான் அந்த கோயில்களையும் அதிகாரிகள் இடிக்க முயன்றனர். ஆனால் இந்துத்துவாதிகள் விட்டார்களா? ஜெய்பூரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இப்போது தங்கள் தேவைக்காக கோயிலை இடித்திருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு பக்தியைப் பரப்பும் இயக்கமல்ல, பாகுபாட்டை விதைக்கும் நஞ்சு. அதற்கு...

கொழுக்கும் கோச்சிங் செண்டர்கள்!

கொழுக்கும் கோச்சிங் செண்டர்கள்!

`நீட்’ என்பது சமமற்ற வாய்ப்பு. `நீட்’ என்பது அநீதி. ஏழைகள், கிராமப்புற மக்களுக்கு எதிரானது. சமச்சீரான கல்விமுறையை சீரழித்துவிடும். எனவே, நீட் ரத்து செய்யப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு போராடி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத ஒன்றிய அரசு, இப்போது தகுதித் தேர்வுகளை நடத்துவதில் சீர்திருத்தம் செய்யலாமா எனத் தேர்வு முகமை ஆலோசித்து வருவதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வெளியான செய்தியைப் பகிர்ந்து தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன். “நீட் தேர்வு பள்ளிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து, கோச்சிங் நிறுவனங்களின் வணிக வேட்டைக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தது தமிழ்நாடு! dummy schools அதிகரித்துவிட்டன; நாள்தோறும் 6 மணி நேரம் கோச்சிங் மையங்களில் மாணவர்கள் வதைபடுகிறார்கள் என்ற அவலம் டெல்லியை, இப்போதுதான் உறுத்தத் தொடங்கி இருக்கிறது. ப்ளஸ்-ஒன் படிக்கும்போதே நீட்டை நடத்திவிடலாமா? கோச்சிங் மையத்தில் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என...

பெண்ணுரிமைக்கான உரையாடல்கள் பெருகட்டும்!

பெண்ணுரிமைக்கான உரையாடல்கள் பெருகட்டும்!

பழம்பெரும் பாலிவுட் நடிகையும், சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான ஜெயா பச்சன் (அமிதாப் பச்சனின் மனைவி) சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “தனது பேத்தி நவ்யா நவேலி நந்தாவுக்கு விரைவில் 28 வயதாகப்போகிறது. அவர் திருமண வாழ்வில் ஈடுபடுவதில் எனக்கு விருப்பமில்லை. திருமணம் என்பது காலாவதியான நடைமுறை. இன்றைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு என்னுடைய வயதும் இல்லை. இப்போதைய குழந்தைகள் நம்மை விட மிகவும் புத்திசாலிகள். திருமணத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் மட்டுமே ஒரு உறவைத் தீர்மானிக்காது. வாழ்க்கையைச் சிக்கலாக்கி கொள்ளாமல், அப்படியே அனுபவித்துக் கொண்டாடுங்கள்” என்று பேசியிருக்கிறார். இது ஏதோ தனி நபரின் கருத்து என்ற அளவில் சுருக்கிப் பார்க்க வேண்டியதல்ல. பெண்களின் உளவியல் போக்கும் ஏற்படும் பண்பு மாற்றமாக இப்பேச்சை கருத வேண்டியுள்ளது. வளர்ந்த நாடுகளில் இந்த கருத்தாக்கம் பொதுச்சமூகமாக உளவியலாகவே மாறியிருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக, அமெரிக்காவில் 2030-ஆம் ஆண்டுக்குள்...

தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

ஆஸ்திரேலியா: தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டு மாவீரர் நாள் தமிழ் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நவம்பர் 27 மாலை நடைபெற்றது இத்தாலி செயின்ட் ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார் அவர் தனது உரையில்”போர் தான் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போராட்ட களம் அரசியல் நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறது என்றும் விடுதலைப் புலிகளின் மகத்தான தியாகங்கள் குறித்தும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர் அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஐநாவின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாட்டில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை வலியுறுத்தி ஸ்ரீதர் ராஜ் உரையாற்றினார். சதீஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் பாடல்களை பாடியதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கொளத்தூரில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக 27.11.2025 வியாழக்கிழமை...

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

அரசிலமைப்புச் சட்டத்தில் 25, 26, 13, 19, 368, 372(1) ஆகிய பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கும் விதமாக உள்ளது என்றும், அவற்றை நீக்க வேண்டுமென்றும் 03.11.1957 அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக ஸ்பெசல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய பெரியார், கோரிக்கைக்கு செவிசாய்க்க அரசுக்கு 30 நாட்கள் கெடு விதித்தார். ஆனால் கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய அரசாங்கமோ, சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்று வரையறுத்து மசோதாவை இயற்றி நிறைவேற்றியது. 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமியற்றி அச்சுறுத்திய பின்பும், முதல் நாளே தந்தை பெரியாரை திருச்சியில் வைத்து கைது செய்த பின்பும், 26.11.1957-இல் நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நான்காயிரம் பேர் சிறைபுகுந்து, சிறைக்குள்ளேயும் விடுதலை ஆன ஒரு மாதத்தில் 18 பேர் உயிர் நீத்த வீரஞ்செறிந்த ஜாதி ஒழிப்புப் போராட்டம் இந்தியக் கண்டம் கண்டிராதது....

57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

மயிலாப்பூரில் கழகத் தலைமை அலுவலகத்தில் 18.11.2025 அன்று சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமையில் சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தோழர் இரண்யா கடவுள் மறுப்பு உறுதிமொழியை வாசித்தார். கடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் இருந்து தற்போது வரை 57 நிகழ்ச்சிகளை சென்னை மாவட்டக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்றிருக்கிறது. கடந்த ஜூன் முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளின் பட்டியலை தோழர் உமாபதி வாசித்தார். திமுக இளைஞர் அணி நடத்திய அறிவுத் திருவிழாவில் கழக வெளியீடுகள் ரூ. 81980 விற்பனையானது. அதை முழுபொறுப்பேற்று நடத்திய தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் மற்றும் அதற்கு மூலக் காரணமாக இருந்த தோழர் பிரகாசு இருவரையும் பாராட்டி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் சால்வை அணிவித்தார். முற்போக்கு புத்தகக் காட்சியில் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் இடம்பெற்று, நூல்கள் விற்க துணைநின்ற மாவட்டக் கழகத்தோழர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தோழர்கள் எட்வின்...

சேலம் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள்!

சேலம் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள்!

கே.ஆர்.தோப்பூரில் கணேசன் இல்லத்தில் 18.11.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: தீர்மானம்-1: “மனிதம் நமது அடையாளம் – ஜாதி நமக்கு அவமானம்” தெருமுனைக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 29,30 ஆகிய நாட்களில் புதிய பகுதிகளில் நடத்துவது. தீர்மானம்-2: டிசம்பர் 14 அன்று “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” நிறைவுக்கூட்டம் பொதுக்கூட்டமாக தாரமங்கலம் அண்ணா சிலை பகுதியில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம்-3: புரட்சிப் பெரியார் முழக்க இதழை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் கொண்டு சேர்ப்பது குறித்தும், புதிய சந்தாக்களை அதிகப்படுத்தி வருகிற டிசம்பர் 24 அன்று மாவட்டக் கழகத்திடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தீர்மானம்-4: டிசம்பர் 24 கோவையில் நடைபெறும் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்வது எனவும்...

கழக நாட்காட்டிக்கு முன்பதிவு செய்யலாம்!

கழக நாட்காட்டிக்கு முன்பதிவு செய்யலாம்!

திரைத்துறையைச் சார்ந்த (மறைந்த) கடவுள், மத மறுப்பாளர்களின் படங்கள், கருத்துக்கள் அடங்கிய, 2026-ஆம் ஆண்டுக்கான கழக நாட்காட்டி விரைவில் தயாராக உள்ளது. ரூ.100 மதிப்புள்ள நாட்காட்டி முன்பதிவு சலுகை விலையில் ரூ 75/- மட்டும். 2025 டிசம்பர் 15-க்கு முன்னதாக முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே நாட்காட்டி வழங்கப்படும். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். 22.11.25. தொடர்பு எண்: 99417 59641 புரட்சிப் பெரியார் முழக்கம் 27112025

க.கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு & நினைவேந்தல்

க.கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு & நினைவேந்தல்

திராவிடர் விடுதலைக் கழக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் கருப்பூர் க.சக்திவேல் சகோதரரும், ஓய்வுபெற்ற ஆசிரியரும், சேலம் மாவட்ட திராவிடர் கழக காப்பாளருமான க.கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 11.11.2025 செவ்வாய்கிழமை கருப்பூர் சாமிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில், திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் பழநி.புள்ளையணன் தலைமையில் நடைபெற்றது. சேலம் அம்மணி மருத்துவமனை நிர்வாக இயக்குனர், மருத்துவர் இரா. சரவணன் முன்னிலை வகித்தார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசும்போது, தோழர் க.கிருட்டிணமூர்த்தியும் அவரது குடும்பமும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததையும், அவர் பெரியாரிய இயக்கப் பணிகளை செய்த உணர்வுகளைப் பகிர்ந்து நினைவேந்தல் உரையாற்றினார். இறுதியாக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள், தி.க., தி.மு.க. தோழர்கள், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், அ.இ.தி.மு.க.வினர், பா.ம.க.வினர் பலர்...

இளங்கோவன்- வினிதா சுயமரியாதை திருமணம்!

இளங்கோவன்- வினிதா சுயமரியாதை திருமணம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், குறுக்குப்பட்டி கிராமம், பவளத்தனூர் பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர். சரவணன்- சித்ரா ஆகியோரின் மகன் இளங்கோவன் அவர்களுக்கும் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், உடையார்குடி கிராமம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன்- ஆனந்தி ஆகியோரின் மகள் வினிதா அவர்களுக்கும் 04.11.2025 காலை 11 மணியளவில் மேட்டூர்ள பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் இணையர்களுக்கு சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட இணையர்கள் கழகத் தலைவரிடம் பயணச் செலவிற்காக ரூ. 5000 வழங்கினர். பெரியார் முழக்கம் இதழ் 27112025

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்- கொளத்தூரில் கண் மருத்துவ முகாம்!

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்- கொளத்தூரில் கண் மருத்துவ முகாம்!

இலவச மருத்துவ முகாமை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். சேலம் வள்ளி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை சார்பாக 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூர் ஸ்ரீ கொளத்தூர் கஃபே, S. K. C கார்னரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். இம்முகாமை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் கழகத் தோழர். ஜலகண்டாபுரம் ரமேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் கழக தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், செட்டியூர் மாரி, கத்தரிப்பட்டி பழனியப்பன் ஆகிய கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 27112025

தமிழர் இயக்கம் உருவானதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5)- கொளத்தூர் மணி

தமிழர் இயக்கம் உருவானதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5)- கொளத்தூர் மணி

“ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களைப் பார்ப்போம். ஈரோட்டுப் பாதையின் 20 ஆண்டுகள் என்ற தலைப்பில், “இன்று ஈரோட்டுப் பாதை திராவிடர் கழகம் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பித்த பொழுது இதற்கு இந்தப் பெயர் இல்லை; கூடு விட்டு கூடு பாய்வதைப் பாய்வது போல பல பெயர்களைத் தாங்கி ஈரோட்டுப் பாதை 20 ஆண்டுகளைக் கழித்து இருக்கிறது. பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமூகச் சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சமதர்ம நாஸ்திக இயக்கம், தமிழர் இயக்கம், திராவிடர் இயக்கம் என்ற பல பெயர்களோடு பாதை காட்டி வந்திருக்கிறார் தன்னைப் பின்பற்றிய தமிழ் மக்களுக்கு ஈரோட்டுப் பெரியார்” என்று எழுதியுள்ளார் ஜீவா. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மார்க்சியர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் ஆகும். வரலாற்றின் தொடக்கத்தில் கிரேக்க தத்துவஞானி ஹிராகிளிடஸ் சொல்லியிருந்தாலும், நவீன வரலாற்றில் பேராசான் மார்க்சும் இதனைச் சொல்லி உள்ளார். ஆனால்...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

தமிழ்நாடு அறிவியல் மன்ற நிர்வாகிகளான ஆசிரியர்கள் சிவகாமி, ஆசிரியர் சிவகுமார் (ஈரோடு) ஆகியோர் முன்னெடுப்பில் பெரியார் முழக்கம் வளர்ச்சிக் குழு உருவாக்கப்பட்டு, பல்வேறு தோழர்கள் மாதம்தோறும் தலா ரூ.500 வழங்கி வருகிறார்கள். அவர்களின் பெயர் பட்டியல்: தலைமைக் குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகர், இளையராஜா, துரை. தாமோதரன், தோழர்கள் நாத்திக ஜோதி (ஈரோடு), முத்து (திருப்பூர்), சண்முகசுந்தரம் (மயிலாடுதுறை), பிரபாகரன் (மேட்டூர்), பிரபாகரன் (பவானிசாகர்), ஜோதி (மடத்துக்குளம்), சாக்கோட்டை இளங்கோவன், அஜீத் (மேட்டூர்), அறிவழகன் (கடலூர்), வீரமணி, முத்து (சத்தியமங்கலம்), சுந்தரம் (பவானி), தினேஷ், சந்தோஷ், அறிவழகன், மலைக் கொழுந்தன், வெங்கட், வீரன், கோபிநாத், வடிவேல் ராமசாமி, செளந்தர்யன், சரவணகுமார், மதன், மகேஷ், பழனிச்சாமி கோபி, அழகர் பிரபாகரன், ஆனந்த், மாதவன், இளங்கோ, ரவி, கோடி சுந்தரம். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். நவம்பர் மாத நன்கொடையாக ரூ.15,500 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). ——————————————————————————————————————————- கழகத் தலைமை...

குலுங்கிய கைகள்

குலுங்கிய கைகள்

புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழாவில் மோடியை மேடையில் வைத்துக் கொண்டே நடிகை ஐஸ்வர்யா ராய் வெளுத்து வாங்கி விட்டார். உலகின் ஒரே மதம் அன்பு; ஒரே மொழி அன்பின் மொழி ஒரே கடவுள் -உலகம் முழுதும் நிறைந்துள்ள சக்தி என்று பேசியதோடு உரையை முடிக்கும் முன் நக்கலாக ஒர் பஞ்ச் வைத்தார்”ஜெய் ராம்; ஜெய்ஹிந்த்” மோடியின் முகம் செத்து கிடந்தது. அடுத்த நாள் தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச மாநாட்டில் ஆஸ்திரேலியா நாட்டு பிரதமரை மோடி சந்தித்து உடன்பாடுகளை செய்து கொண்டார் என்ற செய்தி வந்தது. ஆஸ்திரேலியாவில் இப்போது தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களின் தேசம். கூட்டாட்சி அரசாங்கம் நடக்கிறது. அனைத்து இனங்களுக்கும் சம உரிமை, தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலாய்டு நகரில் கடந்த 14ஆம் தேதி கலாச்சாரங்களின் திருவிழா ஒன்று அரசு சார்பில் நடத்தப்பட்டது. இது ஆண்டுதோறும் நடக்கும் விழா. ஒவ்வொரு தேசிய இன...