நீதித்துறையில் சமூகநீதி திமுக எம்.பி தனிநபர் மசோதா!
இந்தியாவில் உள்ள நீதிபதிகள் குறித்த விவரம் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் சுமார் 80% நீதிபதிகள் முன்னேறிய ஜாதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். வெறும் 20% மட்டுமே எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில் இந்திய நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குறித்து திமுக எம்பி வில்சன் ராஜ்யசபாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அதில் இந்திய உயர் நீதிமன்றங்களில் 2021 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 593 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பட்டியல் ஜாதிகளைச் சேர்ந்தவர்களில் 26 பேர், பழங்குடியினர் பிரிவில் இருந்து 14 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்தும் 80 பேரும் நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில்...
