Category: இணையத்தில் இருந்து

‘ஆணவக் கொலை’ தடுப்புச் சட்டம் வருமா?

‘ஆணவக் கொலை’ தடுப்புச் சட்டம் வருமா?

கருநாடக மாநில அரசைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் நீதிபதி சந்துரு `டைம்ஸ் ஆப் இந்தியா’ ஜூலை 17, நாளேட்டில் எழுதிய கட்டுரை. திருமணச் சட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை உருவாக்கிய தமிழ்நாடு, ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவருவதில் ஏன் இன்னும் தாமதிக்கிறது? கர்நாடகா ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளது. நாம் ஏன் இல்லை? இந்தக் கொலைகளில் எந்தவிதமான “குடும்ப கௌரவமும்” இல்லை. இத்தகைய ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு உடனடியாக ஒரு தனிச்சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. சமூக நீதி மற்றும் முற்போக்கு சீர்திருத்தங்களில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டதாக பெருமை பேசும் தமிழ்நாட்டில், “ஆணவக் கொலைகளைத்” (Honour Killings) தடுக்க தனிச்சட்டம் தேவையா? என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது. இதேவேளை, கர்நாடகா 2025, மார்ச் மாதத்தில் இதற்கென ஒரு சட்டத்தை இயற்றி இந்தத் துறையில்...

‘தாலி செண்டிமெண்ட்’தேவைதானா?

‘தாலி செண்டிமெண்ட்’தேவைதானா?

தாலி சென்டிமென்டை ஓவராகத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்டுவதால் சில பெண்களிடையே வேறுமாதிரியான பாதிப்பு உண்டாவதை நான் கவனித்திருக்கிறேன். தாலி என்பதைக் கணவனின் மறுபிம்பமாகக் கருதி கண்களில் ஒற்றிக்கொள்கிறோம், குங்குமம் வைக்கிறோம், கணவன் இறந்த பிறகு தாலி அணியக் கூடாது என்றும் சொல்கிறோம். இந்தக் கருத்தை வலியுறுத்திச் சொல்வதால் ஓர் எதிர்மறை சிந்தனை சிலரிடம் உண்டாகிறது. ‘ஒரு மலர் ஒரு முறைதான் பூக்கும், கணவன் கட்டிய தாலி என்னுடைய உடம்பில் ரத்த நாளங்களாக இருக்கிறது’ என்றெல்லாம் வசனங்களை அமைத்துவிடுவதால் கணவனை இழந்த அல்லது விவாகரத்து ஆன சில பெண்கள் மறுமணம் செய்துகொள்ளவே தயங்குவது எனக்குத் தெரியும். படங்களில் தாலி சென்டிமென்ட் வைத்து அதைப் பெண்களைப் பார்க்க வைப்பதன் மூலம் நன்றாக வியாபாரம் ஆகிறது எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், இதே தாலி சென்டிமென்ட் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட விதத்தில் எதிர்மறையாகப் பெண்களைப் பாதிப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மறுமணங்கள்...

‘‘பெரியாரை படித்ததால் அம்மாவுக்கு மறுமணம் செய்தோம்!’’

‘‘பெரியாரை படித்ததால் அம்மாவுக்கு மறுமணம் செய்தோம்!’’

கணவனை இழந்த அம்மாவுக்கு அவரது இரண்டு மகன்கள் மறுமணம் செய்து வைக்கும் நூறுசாமி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கணவனை இழந்த பெண் சமூகம் வழியாக சுமக்கும் வலிகளை பார்வையாளர்களிடம் உணர்வுபூர்வமாக கடத்துகிறது இப்படம். இது உண்மையில் நடந்த சம்பவம். கள்ளக்குறிச்சி மாவட்டம் வலையாம்பட்டு கிராமத்தைச் சார்ந்த சகோதரர்கள் சித்தார்த்தன் மற்றும் விவேக் இந்த புரட்சி திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.இந்தச் சிந்தனைக்கு காரணம் பெரியாரைப் படித்தது தான் என்கிறார் சித்தார்த்தன். இது குறித்து ‘ஆனந்த விகடனில்’ ஜூன் 26 ஆம் தேதி வெளிவந்த பேட்டியில் இருந்து… அவள் விகடனில்தான் எங்கள் முதல் பேட்டி வெளிவந்துச்சு. அதைப் பார்த்த பிறகு நிறைய ஊடகங்களில் பேட்டி எடுத்தாங்க. அதையெல்லாம் படிச்சுட்டு டைரக்டர் சசி சார் என்னைக் கூப்பிட்டார். சென்னைக்கு வந்து சாரை சந்திச்சேன். “உங்கம்மாவோட கதையைப் படமா பண்ணலாமா?”ன்னு கேட்டார். அம்மாவுக்கு மகன்கள் கல்யாணம் பண்ணி வெச்சதைப் பலரும் ஒரு செய்தியா கடந்து போனாங்க. ‘அதை...

பெண்களுக்கு இலவச விடுதி நடத்திய நாத்திகர்

பெண்களுக்கு இலவச விடுதி நடத்திய நாத்திகர்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். பெரியார் பெருந்தொண்டர் செ.தெ.நாயகம். குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை. “கண்ணை மூடிக்கொண்டு, பெரியாரைப் பின்பற்றியவர் இவர். பெரியாருக்கும் அவருக்கும் எந்த விஷயத்திலும் ஒன்று போலவே கருத்து உதிக்கும். பெரியார் கருத்தைச் சொல்லிவிட்டால், பெரியாருக்கு மேலாக அதை விளக்கிச் சொல்லுவார். அதற்கு ஆதாரங்கள் விநாடியில் சேகரித்து விடுவார். எந்தப் பதவியும் உத்தியோகமும் செய்யும் தொண்டும் தமிழ் மக்களுக்குப் பயன்படுத்தப்பட முடியாவிட்டால், அது எவ்வளவு பெரிதாயினும் திரும்பிப்பாரார். மிகவும் கண்ணியமானவர். வேஷத்துக்கு என்று நடக்கும் காரியம் அவரிடம் இருந்ததில்லை” என்று 16.12.1944-இல் குடி அரசு இதழில், பாராட்டப்பட்ட பெரியார் பெருந்தொண்டர் செ.தெ.நாயகம். தான் சென்ற ஊரையெல்லாம், வாழ்ந்த பகுதியையெல்லாம் பெரியார் மண்ணாக ஆக்கிட பாடுபட்ட பகுத்தறிவாளர் அவர். அன்றைய நெல்லை...

உயிரற்ற பொருளிலிருந்து உயிரை உருவாக்கி விட்டனர் விஞ்ஞானிகள் விடைபெறுகிறது; கடவுள் சக்தி!

உயிரற்ற பொருளிலிருந்து உயிரை உருவாக்கி விட்டனர் விஞ்ஞானிகள் விடைபெறுகிறது; கடவுள் சக்தி!

உலகையும் உயிரையும் கடவுள் படைத்தார் என்ற நம்பிக்கையை அறிவியல் தகர்த்து வருகிறது. செயற்கையாக உயிரை உண்டாக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் முன்னேறி வருகிறார்கள். 2010-ம் ஆண்டு மே 20-ம் தேதி அமெரிக்காவின் கிரேக்வென்டன் என்ற விஞ்ஞானி ஒரு நுண்ணுயிரிக்குள் (பாக்டீரியா) அதன் டி.என்.ஏ-க்களை அகற்றி கூட்டுக்குள் செயற்கையாக உருவாக்கிய மரபணுவை திணித்து செயற்கை உயிரை உண்டாக்கினார். இதற்கு `சிந்தடிக்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இப்போது உயிரற்ற ஜட பொருளிலிருந்து உயிரை உண்டாக்கி விட்டார்கள் விஞ்ஞானிகள். கடவுள் முற்றாக விடுவிக்கப்பட்டது. இது பற்றி `டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு கடந்த ஜூன் 30-ம் தேதி எழுதியுள்ள தலையங்கம்: இப்போது விஞ்ஞானிகள் ஒரு செல்லை பூஜ்ஜியத்திலிருந்து உருவாக்க முடிகிறது. இது பல உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் பயனுள்ள தொழில்நுட்பமாகும். இயற்கை முதல் உயிரணுவை (cell) உருவாக்க 500 மில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் எடுத்தது. அதன் பிறகு இந்த செல்லுக்கு அறிவாற்றல் (intelligence) உருவாக...

உயர்ஜாதி ஏழை ஒதுக்கீட்டில் மோசடிகள்

உயர்ஜாதி ஏழை ஒதுக்கீட்டில் மோசடிகள்

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், பொருளாதார நலிந்த பார்ப்ப னர்களுக்கான (EWS) இட ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஒன்றிய அரசின் விதிமுறைப்படி, ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கே 10% இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகைகள் வழங்கப்பட சட்டம் இருக்கிறது. ஆனால், அண்மையில் தேர்ச்சி பெற்ற உயர்ஜாதி ஏழைப் பிரிவைச் சேர்ந்த 104 மாணவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்தபோது பல அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளி வந்துள்ளன. தேர்ச்சி பெற்ற 104 பேரில் 67 மாணவர்கள், ஆண்டுக்கு ரூ. 2.65 லட்சம் வரை கட்டணம் வசூ லிக்கும் நாட்டின் மிக புகழ்பெற்ற சிவில் சர்வீசஸ் பயிற்சி மய்யங்களில் படித்துத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 46...

அய்.அய்.டி-களில் நடக்கும் ‘மறுபிறவி’ ஆராய்ச்சிகள்

அய்.அய்.டி-களில் நடக்கும் ‘மறுபிறவி’ ஆராய்ச்சிகள்

இந்திய அறிவுசார் முறை என்ற பெயரில் அய்.அய்.டிகளில் போலி அறிவியல் பாடமாக கற்பிக்கப்பட்டு இந்துத்துவா பழமை வாதத்துக்கு உயிர் கொடுப்பதை விளக்குகிறது இக்கட்டுரை. கடந்த சில ஆண்டுகளாக, “இந்திய அறிவு முறை” (Indian Knowledge System -IKS) என்ற திட்டம் குறித்த மூடநம்பிக்கையை பாரம்பரிய இந்திய அறிவு முறை என்ற பெயரில் மறுபிறவி கருத்துக்களை நவீன கல்விப் பாடத்திட்டங்களுடன் ஒருங்கிணைக்க முயன்று வருகிறது. கடந்த கால வரலாறுகளைப் பேசுவது தவறு அல்ல! ஆனால் மதம் சார்ந்த பழமை கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பாணினியின் மொழி ஆய்வு, நியாய (Nyaya)வாதம், , இரும்பின் பயன்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் தற்போது என்ன நடக்கிறது? மாண்டி அய்.அய்.டி இயக்குநர் லட்சுமிதர் பெஹேராவின் தலைமையின் கீழ் அமைத்த குழு புராணங்களை வரலாறாகக் கருதுதல், சடங்குகளை தொழில்நுட்பமாக திரித்துக் கூறல் போன்ற பாடத்திட்டங்களை பரிந்துரைக்கிறது. அறிவியல் அடிப்படையில் மறுக்கப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசுகிறது. 2020 –...

அறிஞர்களை உருவாக்கிய பகுத்தறிவு ஆசிரியர்

அறிஞர்களை உருவாக்கிய பகுத்தறிவு ஆசிரியர்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரைத் தொடர். உடையார்பாளையத்தை, சிற்பி போல செதுக்கி, கல்வி – வேலைவாய்ப்பில் முன்னேற்றமடைய பாடுபட்ட பகுத்தறிவு ஆசிரியர் வேலாயுதத்தைப் போலவே, அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செந்துறையை அடுத்த கீழமாளிகையைச் சேர்ந்தவர் மற்றொரு ஆசிரியர். பழுத்த ஆன்மிகவாதியாக இருந்த அந்த ஆசிரியரை, பகுத்தறிவு ஆசிரியராக மாற்றியது பெரியாரின் `குடி அரசு’ இதழ். பெரியாரியவாதியாக மாறிய பின்னர், கருப்புச்சட்டையோடுதான் பள்ளிக்குச் செல்வார். பெரியாரின் பகுத்தறிவைத் துணைகொள்வதற்கு முன்பே, மறைமலை அடிகளாரின் மொழியியல் கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டிருந்தார். 1926-31 வரையில் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பின்போது, மறைமலை அடிகளின் மகன் மறை. திருநாவுக்கரசுவும் பொன்னம்பலனாரும் ஒரே அறையில் தங்கிப் படித்தனர். அவர்கள்...

ஜாதி எதிர்ப்பும் உட்ஜாதி அரசியலும்!

ஜாதி எதிர்ப்பும் உட்ஜாதி அரசியலும்!

ஜாதி கடந்த காதல் உணர்வுகளைச் சார்ந்து நிற்கிறது! ஜாதிகளுக்கிடையே உள்ள பிரிவுகளை மறுக்கிறது. ஜாதி சமூக அடுக்குகளை எதிர்க்கிறது என்பது காதல் குறித்த பார்வையாக இருக்கிறது. அது உண்மைதான்; ஆனால் காதலை மட்டும் சமூகம் உணர்வு சார்ந்த பார்வையாக மட்டும் பார்க்காமல் அரசியலாகவும் பார்க்க வேண்டும். சமூகத்தில் காதல், ஜாதி எதிர்ப்புக்கான அரசியல் முன்னெடுப்புக்கும் சமூக மாற்றத்திற்கான அரசியல் கருவியாகவும் செயல்படுகிறது. காதலில் சமூக மாற்ற ஜாதி ஒழிப்பை நோக்கிய அரசியல் இருக்கிறது என்பதே அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர்கள் மற்றும் மேற்கத்திய சிந்தனையாளர்களின் கருத்தாகும். ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு பட்டப் படிப்பு மாணவரான ரோகித் வெமுலா அம்பேத்கர் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட மிகச் சிறந்த கவித்துனமான அறிவியல் மாணவர். மதவாத ஜாதி வெறி சக்திகளால் ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலையில் 2016 ஜனவரி 17 அன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் அவரது இறுதிக் கடிதம் ஒரு வரலாற்று ஆவணமாக மதிக்கப்படுகிறது. தனது...

அயோத்தி ராமன் கோயில் ஊழல் சந்தி சிரிக்கிறது! பெருகிவரும் கோயில் கொள்ளைகள்

அயோத்தி ராமன் கோயில் ஊழல் சந்தி சிரிக்கிறது! பெருகிவரும் கோயில் கொள்ளைகள்

அண்மைக்காலமாக கோயில் நிர்வாகிகள் அர்ச்சகர் திருட்டு மோசடியில் ஈடுபடும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.கோயிலுக்குள்ளே இருக்கும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கடவுளை ஏமாற்றி ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இந்தியாவின் தேசிய அடையாளம் போல் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயில் அயோத்தியில் கட்டப்பட்ட ” ராம ஜென்ம பூமி’’ கோயிலில் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை மோசடி குறித்து அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. கோயிலைக் கட்டிய ராமஜென்ம பூமி அறக்கட்டளை கோயிலுக்கு நிலம் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. பல மடங்கு கூடுதலாக விலையை உயர்த்தி நிலம் வாங்கப்பட்டது. இந்த ஊழல் மூடி மறைக்கப்பட்டது. இப்போது கோயில் கட்டுவதற்கு வசூலிக்கப்பட்ட நன்கொடையில் பெருமளவு ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அர்ச்சகர்கள் அறங்காவலர்கள் உறுப்பினர்கள் கையாடல் செய்துள்ளனர். இது குறித்து சி.பி.அய் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்துள்ளது. வழக்கு வந்தவுடன் உபியில் ராமராஜ்யம் நடத்தும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மூன்று சிறப்பு புலனாய்வுக்...

அன்றாட வாழ்வில் ஆணாதிக்க மொழிகள்

அன்றாட வாழ்வில் ஆணாதிக்க மொழிகள்

உங்கள் மனைவிக்கு சமையலறையில் நீங்கள் உதவி செய்வீர்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் ஆமாம் என்று தான் பதில் கூறுகிறார்கள். இப்படி கூறுகிறவர்கள் மிகவும் முற்போக்கானவர்கள் மனைவியை மிகவும் நேசிப்பவர்கள் என்று சமூகம் முடிவு செய்கிறது. சமூக ஊடகங்களில் ஒரு பிரபலமான இணையர்களிடம் பேட்டி எடுத்த போது இந்த பதில் கணவரிடம் இருந்து வந்தது. ஏராளமான லைக்குகளும் சேரும் குவிந்தன. இதில் அடங்கியுள்ள பாகுபாடு உணரப்படுவது இல்லை! உதவி என்ற சொல் எதைக் குறிக்கிறது? சமையலறை பொறுப்பை ஏற்க வேண்டியது பெண்; அவர் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கு கணவர் உதவுகிறார். இது கணவருக்கான பொறுப்பு அல்ல! என்பதே உதவி என்று சொல்லுக்கான உண்மையான உள்ளடக்கம். சமையல் பெண்களுக்கான பொறுப்பு என்று காலம் காலமாக மூளையில் திணிக்கப்பட்ட சிந்தனையின் தொடர்ச்சியாகவே உதவி என்ற சொல் வருகிறது. இங்கே உதவி என்பது ஒரு சொல் அல்ல; இது கருத்தியல். உதவி என்ற சொல்லுக்குள்...

சமூகத்தில் மாறிவரும் உளவியல்

சமூகத்தில் மாறிவரும் உளவியல்

அண்மையில் வெளியான மாதிரிப் பதிவு முறை (SRS) புள்ளியியல் அறிக்கை (Sample Registration System (SRS) Statistical Report 2024) புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மொத்தக் கருத்தரிப்பு விகிதம், அதாவது ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அளவு தற்போது 1.9 ஆகக் குறைந்துள்ளது. இது மக்கள்தொகையை நிலைத்திருக்கச் செய்யத் தேவையான 2.1 என்கிற மாற்று நிலையைவிடக் குறைவு. 2014இல் 21ஆக இருந்த பிறப்பு விகிதம் 2024இல் 18.3ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரம், இறப்பு விகிதம் 6.7இலிருந்து 6.4ஆக மட்டுமே குறைந்துள்ளது. இந்தியாவின் சராசரியான நடுத்தர வயது 40.2 தற்போது 29.2 சீனாவின் சராசரி நடுத்தர வயது 40.2 பல ஐரோப்பிய நாடுகளில் இது இன்னும் அதிகம். அதே நேரத்தில் இந்தியாவில் தற்போது 15 முதல் 29 வயதுக்குள் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 38கோடி. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 27% விழுக்காடாகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்...

நீட்தேர்வு நடத்தும் அமைப்பின்  படுதேல்விகள் ஊழலில் பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி!

நீட்தேர்வு நடத்தும் அமைப்பின் படுதேல்விகள் ஊழலில் பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி!

2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ’நீட்’ நடத்தப்பட்டது. பல மாதங்களாகவும், பல ஆண்டுகளாகவும் கடுமையாக உழைத்த மாணவர்கள் தேர்வு முடிந்த மகிழ்ச்சியை சமூக ஊடகங்களில் கொண்டாடினர். ஆனால் இரண்டு வாரங்களுக்குள் அந்த மகிழ்ச்சி துயரமாக மாறியது. மே 12 அன்று, “கெஸ் பேப்பர்” பரவியதாகவும், தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து தேசியத் தேர்வு முகமை (என்.டீ.ஏ) நீட்-2026 தேர்வை ரத்து செய்தது. அதன்பின்னர் மனஉளைச்சலால் குறைந்தது 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான பிரதீப் மேக்வால், கடந்த 3- ஆண்டுகளாக ’நீட்’ தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த ஆண்டு சிறந்த மருத்துவக் கல்லூரியில் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேசத்தின் லகிம்பூர் கேரியைச் சேர்ந்த 21 வயது ரித்திக்...

கொள்கைக்காக உயீர்நீத்த உடையார்பாளையம் வேலாயுதம்!

கொள்கைக்காக உயீர்நீத்த உடையார்பாளையம் வேலாயுதம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரைத் தொடர். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் நாம் இருக்கிறோம். இந்த நூற்றாண்டு காலபயணம் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார- பண்பாட்டு வளர்ச்சிக்கான பாதையை அமைத்திருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதரின் கல்வி, வேலைவாய்ப்புக்கான ஏணியாக மற்றெந்த இயக்கத்தையும் விடவும் அதீத பங்களிப்பைச் செய்த இயக்கமாக சுயமரியாதை இயக்கமும், அதன் பரிணாம வளர்ச்சியாக உருவெடுத்த திராவிட இயக்கமும் திகழ்கின்றன. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலம் அவ்வளவு இனிமையானது அல்ல. நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுவதற்கு சமமான காலம் அது. இயக்கத்தின் தலைவராக இருந்த பெரியார் மீதே செருப்பு வீசப்பட்டது, பாம்பு வீசப்பட்டது, மலம் வீசப்பட்டது என்றால் சாமானிய தொண்டர்களைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டுமா? அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்...

பட்டியலின பிரிவினருக்கு திமுக ஆட்சியின் சாதனைகள் சிந்தனைச்செல்வன் விளக்கம்!

பட்டியலின பிரிவினருக்கு திமுக ஆட்சியின் சாதனைகள் சிந்தனைச்செல்வன் விளக்கம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பட்டியலின பிரிவினருக்கு கிடைத்த திட்டங்களை விளக்கி வெளியிட்ட முகநூல் பதிவுவின் ஒரு பகுதி. எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில்...

புராண நாடகங்களுக்கு மாற்றாக புரட்சிகர நாடகங்களை நடத்திய கும்மம்பட்டி!

புராண நாடகங்களுக்கு மாற்றாக புரட்சிகர நாடகங்களை நடத்திய கும்மம்பட்டி!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டி குறித்த கடந்த இதழின் தொடர்ச்சி… திண்டுக்கல், சின்னாளப்பட்டி பகுதிகளில் அண்ணா, கலைஞர், பேராசிரியர், நாவலர் உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்கள் நடந்தால், கு.சி.பழனிச்சாமி தன் பகுதியில் இருந்து மாணவர்களை அழைத்துச் செல்வார். தினசரி நூல்களைப் படிப்பது, விவாதிப்பது, பேச்சுப்பயிற்சி என இருந்த மாணவர்களுக்கு அண்ணா, கலைஞர், பேராசிரியர் உள்ளிட்டோரின் உரைகள், கொள்கை உணர்வை ஊட்டி வளர்த்தன. ‘பவளக்கொடி’, ‘வள்ளித் திருமணம்’, ‘சாரங்கதாரா’, ‘நல்லதங்காள்’ ஆகிய நாடகங்கள்தான் கும்மம்பட்டியில் ஆண்டாண்டு காலமாக நடந்தன. அவை தவிர, வேறு எந்த நாடகத்தையும் கும்மம்பட்டி மக்கள் பார்த்ததில்லை. அதனால், பகுத்தறிவுக் கருத்துகளை நாடகம்மூலம் வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது, கலைமன்றம். சுமார் மூன்று ஆண்டுகள்...

தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே! தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும்!                        – மு.க ஸ்டாலின்

தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே! தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும்! – மு.க ஸ்டாலின்

பெரியார் முழக்கம் இதழ் 30042026

நீதித்துறையில் சமூகநீதி  திமுக எம்.பி தனிநபர் மசோதா!

நீதித்துறையில் சமூகநீதி திமுக எம்.பி தனிநபர் மசோதா!

இந்தியாவில் உள்ள நீதிபதிகள் குறித்த விவரம் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் சுமார் 80% நீதிபதிகள் முன்னேறிய ஜாதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். வெறும் 20% மட்டுமே எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில் இந்திய நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குறித்து திமுக எம்பி வில்சன் ராஜ்யசபாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அதில் இந்திய உயர் நீதிமன்றங்களில் 2021 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 593 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பட்டியல் ஜாதிகளைச் சேர்ந்தவர்களில் 26 பேர், பழங்குடியினர் பிரிவில் இருந்து 14 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்தும் 80 பேரும் நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில்...

ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் மீது பாலியல் புகார்கள் வருவது ஏன்? எஸ்.வி.சேகர் விளக்குகிறார்!

ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் மீது பாலியல் புகார்கள் வருவது ஏன்? எஸ்.வி.சேகர் விளக்குகிறார்!

பாஜகவின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளராக இருந்த கேசவ விநாயகம் மீதான பெண்கள் தொடர்பாக ஏராளமானப் புகார்கள் உண்டு என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் மீதான பாலியல் புகார்கள் வருவதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். இது குறித்து ‘தினகரன்’ நாளேட்டுக்கு பிப்-14, 2026 அன்று அவர் அளித்த பேட்டி.. கேசவ விநாயகத்தை பாஜவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியதை எப்படி பார்க்கிறீர்கள்? கேசவ விநாயகம் 2016ம் ஆண்டே நீக்கப்பட வேண்டும் என நான் சொல்லிக் கொண்டு இருந்தேன். இன்றைக்குக் கூட ஆர்.எஸ்.எஸ்-சில் முக்கியமானது தனிமனித ஒழுக்கம் எனச் சொல்லியுள்ளார்கள். அது நிறையப் பேருக்கு இருப்பது போன்றே தெரியவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பே 163 பேர் புகார் கொடுத்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்-சில் உள்ளவர்கள் ஆண்களுடனே பழகியதால், மாறுபட்ட பாலினத்தைப் பார்க்கும்போது பிரச்னை வந்து விடுகிறது. இன்றைக்காவது கேசவ விநாயகத்தை நீக்கியுள்ளதைப் பார்க்கும் போது அங்குள்ள நிறையப் பெண்கள் சந்தோஷப்படுவார்கள். பாஜவினர் தமிழ்நாட்டில் பெண்களுக்குப்...

வள்ளலாரின் ஜாதி-மத எதிர்ப்புக் கருத்துக்களை நூலாக வெளியிட்டவர் பெரியார்- தமிழக முதலமைச்சர்

வள்ளலாரின் ஜாதி-மத எதிர்ப்புக் கருத்துக்களை நூலாக வெளியிட்டவர் பெரியார்- தமிழக முதலமைச்சர்

சென்னையில் கடந்த பிப்-15 அன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ‘அனைத்துலக வள்ளலார் மாநாட்டைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து… இந்தச் சமூகத்தில், இறுகிப் போயிருந்த பழமைவாதங்களையும், மூடத்தனங்களையும் சாடியவர் அவர். சாதி, சமய வேறுபாடுகள் இல்லாத சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற அவருடைய பெருங்கனவுதான் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கை. அதனால்தான், திராவிட இயக்கம் உருவானதில் இருந்து, தொடர்ந்து வள்ளலாரை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆறாம் திருமுறை பாடல்களைத் தொகுத்து, ‘இராமலிங்கர் பாடல் திரட்டு’ என்ற நூலை 1929-ல் வெளியிட்டவர், தந்தை பெரியார். இன்னும் ஒருபடி மேலே சென்று, தமிழர்கள் முன்பு, பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார். தந்தை பெரியார் என்ன கேட்டார் தெரியுமா? “வட நாட்டு சாமியார்களைப் போற்றும் தமிழனே, வடலூர் வள்ளலார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்?” என்று கேட்டார். இதையெல்லாம் உணர்ந்துதான், “வள்ளலாரின் கொள்கைகளை சமுதாயக் களத்தில், பெரியார் பரப்புரை செய்தார்”...

மோடியை அதிரவைத்த `எப்ஸ்டீன் பைல்ஸ்’

மோடியை அதிரவைத்த `எப்ஸ்டீன் பைல்ஸ்’

ஜனநாயகம் என்றால் அமெரிக்கா; சுதந்திரம் என்றால் அமெரிக்கா என்று பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன. அந்த பிம்பங்களை சுக்கு நூறாக உடைத்து `எப்ஸ்டீன் பைல்ஸ்’ உலகையே அலற விட்டிருக்கிறது. இதில் முக்கிய பிரபலங்களின் பெயருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் அடிபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதே வேளையில் அமெரிக்காவிடம் இந்தியாவை அடகு வைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் ஒன்றிய அரசு தரப்பில் இருந்து விரிவான விளக்கம் எதுவும் வெளிவராத நிலையில் மக்களிடையே சந்தேகங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. `எப்ஸ்டீன் பைல்ஸ்’ என்றால் என்ன எனப் பார்ப்போம். அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதற்கு தண்டனையாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மர்மமான முறையில் உயிரிழந்தார். எப்ஸ்டீன் உயிரிழப்பிற்கு பின்னர் அவர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது பல ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்டவையே `எப்ஸ்டீன் பைல்ஸ்’...

உ.பி ‘ராமராஜ்ய’ ஆட்சியில்  சங்கராச்சாரிக்கு தடை

உ.பி ‘ராமராஜ்ய’ ஆட்சியில் சங்கராச்சாரிக்கு தடை

தமிழ்நாட்டில் ஒரு கும்பல் நீதிமன்றத்தில் இந்துக் கடவுள்களின் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வேலை இந்துக் கடவுளை புண்படுத்தி விட்டடார்கள் என்று மனு போடுவதுதான். உடனே பாஜக மேடைகளில் ‘திமுக ஆட்சி! இந்து விரோத ஆட்சி!” என்று முழங்குவார்கள். உ.பியில் ‘ராமராஜ்யம்’ நடத்தும் யோகியின் ஆட்சியில் இப்போது ஒரு பார்ப்பன சங்கராச்சாரியை ‘வச்சு செய்கிறார்கள்’ ஜோதிர்மட சங்கராச்சாரி அவிமுக்தேஸ்வரானந்த் திரிவேணி சங்கமத்தில் நீராட தனது சீடர்களுடன் பல்லக்கில் சென்றார். “சங்கராச்சாரி பல்லக்கை நேரடியாக நதியின் கரை வரை அனுமதிக்க முடியாது அதற்கு உனக்கு தகுதி இல்லை நீ இப்போது சங்கராச்சாரியே அல்ல; இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. பல்லக்கை விட்டு இறங்கு” என உ.பி காவல்துறை அதிகாரிகள் தடை போட்டனர். ஆத்திரமடைந்த சங்கராச்சாரி சீடர்களுக்கும் காவல்துறைக்கும் மோதல். சங்கராச்சாரியின் பெண் பக்தர்கள் தாக்கப்பட்டனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்லக்கில் சீடர்களுடன் புனித நீராட வந்த பார்ப்பன சங்கராச்சாரி மகர மேளா நடக்கும் இடத்தில்...

இதுதான் இந்திய நாடாளுமன்றமா?

இதுதான் இந்திய நாடாளுமன்றமா?

இந்தியாவின் நாடாளுமன்றத்தின் ஜனநாயகப் பெருமையை பார்த்து உலக நாடுகள் கைகொட்டி சிரிக்கின்றன. குடியரசுத் தலைவர் தேசப் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பேசுவதும் அதற்கு பிரதமராக இருப்பவர் நன்றி கூறுவதும் மரபு. “நான் அப்படியெல்லாம் நன்றி கூற முடியாது; நாடாளுமன்றத்தில் எனக்கே பாதுகாப்பு இல்லை; குறிப்பாக நான் அமர்ந்திருக்கும் இருக்கையிலேயே எனக்கு ஆபத்து; சந்தேகமிருந்தால் அந்த சபாநாயகர் நாற்காலியில் ஒருவரை உட்கார வைத்து இருக்கிறோமே அவரை கேட்டுப் பாருங்க”… என்று சபாநாயகரைக் கொண்டு அறிவிக்கச் செய்துவிட்டார் நாட்டின் பிரதமர். இதே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கினார். கைலாச மலையை சீனப் படைகள் ஆக்கிரமித்து வரும்போது இந்திய இராணுவ தளபதி அவசரமாக ஆலோசனை கேட்டார். தடுத்து நிறுத்துவதா? வேண்டாமா? என்று கேட்டிருக்கிறார். தேசத்தை காக்கும் ராணுவ அமைச்சர் ராஜநாத் சிங் கருத்து கூறவில்லை. பிரமர் மோடியோ “ சீனப்படைகளை எதிர்த்து போரிடலாமா? அல்லது ஆக்கிரமிப்புக்கு வழிவிடலாமா என்பது...

பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில், 1992-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மசூதி வழியாக நடத்தி, கலவரத்தில் முடிக்க முயன்றனர் சிலர். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது வி.எம்.தெரு. அடுத்த ஆண்டில் வி.எம்.தெருவுக்குள்ளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முயன்றார் ராமகோபாலன். அந்த முயற்சியை முறியடித்து, கலவர நோக்கத்தைத் தடுத்ததுடன், ஐஸ் அவுஸ் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு எதிர்ப்பாக பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தி, சமூகப் பதற்றத்தை தணித்தார் பத்ரி. அதேபோல, 2001-இல் அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலின்போது இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றன மேற்குலக நாடுகள். மேடை ஏறி...

தொழிலாளர் கொள்கையில் மூக்கை நுழைக்கும் மனுஸ்மிருதி!

தொழிலாளர் கொள்கையில் மூக்கை நுழைக்கும் மனுஸ்மிருதி!

தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு வரைவுக் கொள்கைகள், “ஷ்ரம் ஷக்தி நிதி 2025” எனும் பெயரில் மோடி அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இக்கொள்கைகளின் அதிர்ச்சியூட்டும் அம்சம் என்னவெனில், உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தவும், சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சட்டக் கோட்பாடுகளாக நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்பட்ட மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் போன்ற பழமையான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டே ஒன்றிய அரசின் இக்கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன எனப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதுதான். ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள வரைவுக் கொள்கை கூறுவதாவது: “பழமை ஆவணங்களான மனுஸ்மிருதி, யக்ஞ வல்கியஸ்மிருதி, நாரதஸ்மிருதி, சுக்ரநீதி, அர்த்தசாஸ்திரம் ஆகியவை அரச நீதி குறித்து வலுவாகக் கூறியுள்ளன. நீதி, நியாயமான ஊதியம், சுரண்டலிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை உத்தரவாதப்படுத்துவதில் ஆள்வோரின் கடமை என்ன என்பது கூறப்பட்டுள்ளது. நவீன தொழிலாளர் சட்டங்கள் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உழைப்பை நிர்வ கிக்கும் இத்தகைய கோட்பாடுகள் இந்திய நாகரிக உருவாக்கத்தில் வலுவான அடிப்படை அம்சங்களாக உள்ளன.” இந்தியாவின் பாரம்பரியப் புரிதல் என்னவெனில், உழைப்பு என்பது...

ஆர்.எஸ்.எஸ். கூடாரமாகிறதா அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்? – அப்பாவி மாணவர்களின் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

ஆர்.எஸ்.எஸ். கூடாரமாகிறதா அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்? – அப்பாவி மாணவர்களின் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 2024-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்-ஸை சேர்ந்த இருவர் உள்ளே நுழைந்து, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஆவணங்களைக் கையில் வைத்துக்கொண்டு மாணவர்களிடையே ஜாதிய மதவாத நச்சுக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக, ஏ.பி.வி.பி-யின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கையில் வைத்துக்கொண்டு, நாங்குநேரியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சின்னதுரை ஆதிக்க ஜாதிவெறி கொண்ட மாணவர்களால் தாக்கப்பட்டவுடன் தமிழ்நாடு அரசால் நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டியின் பரிந்துரையை விமர்சித்தும், அந்த அறிக்கை இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது என்றும் பிரச்சாரம் செய்துள்ளனர். இதனை அறிந்துகொண்ட சட்டக்கல்லூரி மாணவர்கள், குறிப்பாக சமூக அக்கறைகொண்ட, அரசியல் உணர்வு கொண்ட மாணவர்கள் (தமிழ்நாடு மாணவர் கழகம், இந்தியா மாணவர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனி) கல்லூர்ri மாணவர்கள் நேரில் சென்று ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் இருவரையும் விசாரித்தனர். விசாரிக்கும் போது...

அக்ரஹாரத் தடையை தகர்த்த கொக்கூர்

அக்ரஹாரத் தடையை தகர்த்த கொக்கூர்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். கொக்கூர் வரலாறு இது. கடந்த இதழின் தொடர்ச்சி… கொக்கூர் கிராமத்திற்குள் அக்ரஹாரம் வழியாகப் பெரியார் நுழைந்தபோது, அந்தத் தெருவில் பிறர் நுழையக் கூடாது என தடுக்கப்பட்டிருந்த தென்னை மரத் தடுப்புகள் தகர்த்து வீசப்பட்டன. பண்ணையார் ஐயர் குடும்பம் கதவைத் தாழிட்டுக்கொண்டது. மேல் சட்டையோடு, காலில் செருப்பு அணிந்துகொண்டு அக்ரஹாரத் தெருவுக்குள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் நுழைந்ததைக் கண்டு கொக்கூர் மக்கள் சுயமரியாதை உணர்வு பெற்றனர். அங்கிருந்து அரை கிலோ மீட்டருக்கு அப்பால்தான் கூட்டம் நடைபெற்றது. ஆனால் பெரியாரின் பேச்சை ஐயர் கேட்க வேண்டுமென்று அக்ரஹார முனையில் ஒலிபெருக்கி அமைத்திருந்தனர். 3 மணி நேரம் பெரியார் பேசினார். கொக்கூர் மக்களின் மூளைகளில் இடப்பட்டி ருந்த அடிமை விலங்கு அறுபட்டது. அதன்பின்னர்தான் எல்லோரும் கல்வி...

திருப்பூரில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

திருப்பூரில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

மனிதம் நமதுஅடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை திருப்பூர் மாவட்டக் கழகம் நடத்தவுள்ளது. 12.08.2025 செவ்வாய்க்கிழமை: அருள்புரம் மற்றும் பொங்கலூர் பகுதியில் மாலையில் நடைபெறும். 13.08.2025 புதன்கிழமை: பல்லடம் பகுதியிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறும். பெரியார்முழக்கம்இதழ்07082025.

உபா சட்டம் தேவையா?

உபா சட்டம் தேவையா?

2018-2022 வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) சட்டத்தில் 8947 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வெறும் 252 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலாக அளித்த பதிலில், 2018 – 1,421 பேர் 2019 – 1,948 பேர் 2020 – 1,321 பேர் 2021 – 1,621 பேர் 2022 – 2,636 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 2,633 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 2,162 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 252 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதைப் போல, உபா சட்டத்தை வைத்து சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களை ஒடுக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இச்சட்டத்தின் தேவையை கேள்விக்குள்ளாக்குகிறது இந்த புள்ளி விவரங்கள். பெரியார்முழக்கம்இதழ்07082025

உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடுகள்           கனிமொழி எம்பி கேள்வி

உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடுகள் கனிமொழி எம்பி கேள்வி

ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளில் நில­வும் தீண்­டாமை உள்­ளிட்ட பாகு­பா­டு­கள் குறித்து தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், திமுக நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி நேற்று (21-–07–2025) எழுத்­துப் பூர்­வ­மான கேள்­வி­களை எழுப்­பி­னார். “உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளில் சமத்­து­வத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கில், யு.ஜி.சி. விதி­மு­றை­கள் 2012 இன் படி ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளில் Equal Opportunity Cells எனப்­ப­டும் சம வாய்ப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளதா? அப்­ப­டி­யா­னால், அதன் விவ­ரங்­கள் மற்­றும் அத்­த­கைய பிரி­வு­களை உரு­வாக்­கிய மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் எண்­ணிக்கை விவ­ரங்­கள் என்ன? இல்­லை­யென்­றால், சம வாய்ப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­ப­டா­த­தற்­கான கார­ணங்­கள் என்ன? ஒன்­றிய அர­சின் கல்­லூ­ரி-­­பல்­க­லைக்­க­ழக வளா­கங்­க­ளில் சாதி அடிப்­ப­டை­யி­லான பாகு­பாடு காட்­டப் பட்ட சம்­ப­வங்­கள் குறித்த தர­வு­களை அர­சாங்­கம் பரா­ம­ரிக்­கி­றதா? அப்­ப­டி­யா­னால், கடந்த ஐந்து ஆண்­டு­க­ளி­லும் நடப்பு ஆண்­டி­லும் ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் நடந்த இத்­த­கைய சம்­ப­வங்­க­ளின் விவ­ரங்­கள், கல்­லூரி வாரி­யாக/பல்­க­லைக்­க­ழக வாரி­யாக...

தமிழ்நாட்டு பள்ளிகளில் ஜாதி கயிறுகளுக்குத் தடை!

தமிழ்நாட்டு பள்ளிகளில் ஜாதி கயிறுகளுக்குத் தடை!

பள்ளிகளில் ஜாதி அடிப்படையிலான மோதல், சமூக வேறுபாடுகளை ஆகியவற்றை தடுத்து, நல்லிணக்கம், நற்பண்புகள் வளர்க்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களை வரிசை மாற்றி அமர வைப்பது, ஆசிரியர்கள் ஜாதிப் பெயர் குறிப்பிடக்கூடாது உள்ளிட்ட முக்கிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் ஜாதிரீதியான சிந்தனை பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் ஜாதிய மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள் தோன்றுவதைத் தடுக்க வேண்டிய முக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்வியே அனைத்திற்கும் முக்கியம் என கற்பிக்கப்படும் இடத்தில், ஜாதி மாணவர்களின் மத்தியில் மோதலையும், வெறுப்பு உணர்வைத் தூண்டக்கூடாது என்பதில் பள்ளிக் கல்வித்துறை உறுதியுடன் உள்ளது எனவே, இதுபோன்ற உணர்வுகள் மூலம் ஏற்படும் வன்முறைகள் உருவாகுவதைத் தடுப்பதற்காகவும், மாணவர்களுக்கு நல்லிணக்கம். நற்பண்புகளை குறித்து அறிவுரை வழங்குவது தொடர்பான முயற்சியில்...

மகாராஷ்டிராவில் ‘மும்ழொழி’ ரத்தானது

மகாராஷ்டிராவில் ‘மும்ழொழி’ ரத்தானது

ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியைக் கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது. இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்” என்றார். இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், “அரசாணைகள் திரும்பப் பெறப்பட்டது...

ஊரையும் சேரியையும் இணைத்த `மாதிரிமங்கலம் புரட்சி’

ஊரையும் சேரியையும் இணைத்த `மாதிரிமங்கலம் புரட்சி’

இப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் மாதிரி மங்கலம் என்ற பார்ப்பனர்கள் தானம் பெற்ற ஊரில் பெரியார் இயக்கம் நடத்திய ஜாதி ஒழிப்பு புரட்சி பற்றி கடந்த இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி… பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். அம்பேத்கரின் `மகர்’ போராட்டத்தை மாதிரிமங்கலத்தில் சத்தமில்லாமல் செய்துகாட்டிய துரைசாமி அத்தோடு நிற்கவில்லை. பண்ணையார்களுக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும் தொடர்ந்த சுயமரியாதைப் போராட்டத்தால், 1960-களில் அங்கே இருந்த தலித் மக்கள் இறப்புக்குப் பறை அடிக்கச் செல்வதை நிறுத்தினர். இறந்துபோன மாட்டை தூக்கச் சொல்வதும் வழக்கொழிந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் சட்டை அணிந்தனர், காலில் செருப்பு போட்டனர், ஊர்த்தெருவுக்குள் நடக்கத் தொடங்கினர். குத்தகை பார்த்த பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவரை, ராமாமிர்தம் அய்யர் வீட்டு முற்றத்தில் கட்டி வைத்த செய்திகேட்டு, இருவரையும் மீட்ட துரைசாமி, அந்த வீட்டையே கொளுத்தி விட்டார். இச்செயல்களால் கொந்தளித்துப்போன பண்ணையார்கள், துரைசாமியோடு நெருக்கமாக...

செக்கடிக்குப்பம்-ஓர் பெரியார் மண்!

செக்கடிக்குப்பம்-ஓர் பெரியார் மண்!

தமிழ்நாட்டில் பெரியார் கொள்கைகளை முழுமையாக ஏற்ற கிராமங்கள் பற்றிய தொடர் ஒன்று முரசொலி நாளேட்டில் வாரந்தோறும் வெளிவருகிறது. அந்தத் தொடரை பெரியார் முழக்கம் நன்றியுடன் பதிவு செய்கிறது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, பார்ப்பனர்களை வைத்து, சடங்குகள் செய்து நடைபெற்றால்தான் அது திருமணம் என்று இன்றும் கருதுவோர் பலர் இருக்க, 1925-ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பெரியார், சுயமரியாதைத் திருமண முறையை, தமிழர்களுக்குத் தந்தார். இந்தத் திருமண முறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மதம் இருந்தால் போதும், பார்ப்பனர்களை அழைக்கத் தேவையில்லை, சடங்குகள் தேவையில்லை, தாலியும் கட்டாயமில்லை. மாலைமாற்றிக் கொண்டு, உறுதிமொழி எடுத்துக்கொண்டால் போதுமானது. பெரியார் அறிமுகப்படுத்திய இந்த எளிமையான திருமணமுறைக்கு, 1967-இல் அண்ணாவின் ஆட்சி அமையும் வரை சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனாலும், பல ஆயிரக்கணக்கானோர் சுயமரியாதைத் திருமணம் புரிந்தனர். அண்ணா இயற்றிய சட்டத்தால் இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாகிவிட்ட போதிலும், வைதீகத் திருமணங்களே இப்போதும் அதிகம். ஆனால்,...

மண் சோறு சாப்பிடுவோர் என்‌ ரசிகர்கள் அல்ல – நடிகர் சூரி.

மண் சோறு சாப்பிடுவோர் என்‌ ரசிகர்கள் அல்ல – நடிகர் சூரி.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள திரைப்படம் `மாமன்’. மே 15-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் வெற்றியடைய வேண்டுமென்று சூரியின் ரசிகர்கள் மதுரையில் மண் சோறு சாப்பிட்டு, அந்த வீடியோவைப் பகிர்ந்தனர். மண் சோறு உண்பது, நடிகர்களின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம், மொட்டை அடிப்பது. அலகுக் குத்துவது என விதவிதமான பிற்போக்குத்தனங்களை, பல்வேறு நடிகர்களுக்கு ரசிகர்கள் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இத்தகைய பிற்போக்குத்தனங்களை இதுவரை எந்த நடிகரும் கண்டித்ததில்லை. அல்லது அவை, பிற்போக்குத்தனங்கள், இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வெளிப்படையாகக் கூறியதும் இல்லை. ஆனால், முதன்முறையாக, தனது ரசிகர்களைக் கடுமையாக எச்சரித்து, முன்னுதாரணமாகியிருக்கிறார் நடிகர் சூரி. ‘மாமன்” படம் வெற்றியடைய மண்சோறு சாப்பிட்டவர்களை ‘தம்பிகள்* என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. தம்பிகளா, இது ரொம்ப முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் படம் ஓடும். அதைவிட்டு, மண் சோறு சாப்பிட்டால், படம் எப்படி...

இணையத்தை ஆக்கிரமித்த ஏ.ஐ. பெரியார்!

இணையத்தை ஆக்கிரமித்த ஏ.ஐ. பெரியார்!

சட்டகத்தில் அடங்காத பெரியாரின் படம் ஒன்று, `The Man who does not fit into frames’ என்ற குறிப்போடு புகழ்பெற்றது. அதன் அர்த்தமும் ஆழமானது. எந்தப் புதிய தொழில்நுட்பம் றிமுகம் ஆனாலும், அதை பெரியார் எப்படி அணுகுவார் என்பது பேசுபொருளாக ருக்கும். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. மறைந்து அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கருத்தியலாகவும், விவாதமாகவும் இருக்கும் பெரியார், இப்போது அழகியலாக `டிரெண்டிற்கு’ வந்திருக்கிறார். ஏ.ஐ.-யில் உருவாக்கப்பட்ட பெரியார் படங்கள் பல சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. புரட்சியாளர் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸோடு அமர்ந்து பேசுவது போலவும், மடிக்கணினி பயன்படுத்துவது போலவும், அம்பேத்கரை அமர த்து பெரியார் `புல்லட்’ ஓட்டிச் செல்வது போலவும், பள்ளிச் சிறுமியை அழைத்துச் செல்வதுபோலவும், பட்டம் வாங்கிய இளம்பெண்கள் பெரியாரைத் தூக்கிச் சுமந்து கொண்டாடுவது போலவும் என விதவிதமான பெரியார் படங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு சமூக ஊடக உலகில்...

ம.பி.யில்  பார்ப்பனரின் ‘இன ஒதுக்கல்’ சனாதன இந்துக்களுக்கு மட்டும் தனிக் கிராமாம்!

ம.பி.யில் பார்ப்பனரின் ‘இன ஒதுக்கல்’ சனாதன இந்துக்களுக்கு மட்டும் தனிக் கிராமாம்!

சனாதன இந்துக்களுக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனி கிராமம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அனுமார் கோயில் பார்ப்பன அர்ச்சகர். 1000 சனாதன இந்துக்கள் இந்த கிராமத்தில் குடியேறுகிறார்கள். சனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த கிராமத்தில் நுழைய தடை விதிக்கப்படும். அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்த தனிக் குடியிருப்புக்கு மாநில பாஜக ஆட்சி பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்துக்கள் மட்டும் வாழும் முதல் கிராமம் ம.பி. பாகேஷ்வர் அனுமர் கோயில் சார்பில் அமைகிறது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் கன்ஞ் மாவட்டத்தின் சத்தர்பூரில் உள்ளது கதா கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ‘பாகேஷ்வர் தாம்’ எனும் அனுமர் கோயில் உள்ளது. இதன் தலைமை அர்ச்சகர் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, பாகேஷ்வர் தாம் ஜன் சேவா சமிதி என்ற சமூக நல அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பின் சார்பில் கோயிலுக்கு அருகில் உள்ள பரந்த பகுதியில் ஒரு இந்து கிராமத்தை உருவாக்க இதற்காக...

ஜெயலலிதா –- ஆளுநர் சென்னா ரெட்டி மோதல்

ஜெயலலிதா –- ஆளுநர் சென்னா ரெட்டி மோதல்

ஆளுநர் ரவிக்கு உரிய மரியாதையை தமிழ்நாடு அரசு அளித்தும் ஆளுநர் சட்டமன்றத்தை அவமானப்படுத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை நியாயப்படுத்துகிறார். ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1994இல் ஆளுநரை எப்படி நடத்தினார்? மோதலில் பின்னணி குறித்த ஒரு மீள் பார்வை. 1994ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் இடையே முரன்பாடு வந்தது. தனது அரசைக் கவிழ்ப்பதற்கு அன்றைய காங்கிரஸ் ஆட்சியால் அனுப்பிவைக்கப்பட்டவர் தான் சென்னா ரெட்டி என்று உறுதியாக நம்பினார் ஜெயலலிதா. இருவரும் பத்திரிக்கை அறிக்கைகள் வழியாக தங்கள் எதிர்ப்புகளை வெளியிடத் தொடங்கினர். ஆளுநரிடமிருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் ஜெயலலிதா செயல்படத் தொடங்கினார். புத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கும். ( இப்போது ஆர்.என்.ரவி அந்த உரையைத் தான் வாசிக்க மறுத்து வெளியேறினார்.) அப்போது பேரவைத் தலைவராக இருந்த சேடப்பட்டி முத்தய்யா ஆளுநர் உரையே தேவையில்லை என்று கருதி ஆளுநருக்கு அழைப்பு விடுக்காமலேயே சட்டசபையைக் கூட்டினார்....

நஞ்சு விதைக்கும் மாதவி!

நஞ்சு விதைக்கும் மாதவி!

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஐதராபாத் தொகுதியில் போட்டியிடுபவர் மாதவி. இவர், தேர்தல் பிரசாரத்தின் போது மசூதியை நோக்கி அம்பு விடுவது போல செய்கை செய்து வெறுப்பு அரசியலை தூண்டியதுடன், அது சர்ச்சையானதும் ‘’நான் மசூதியை பார்த்து அம்பு விடவில்லை’ என்று பின்வாங்கினார். இவரை சமீபத்தில் ஊடகர் பர்கா தத், ஒரு பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் இடஒதுக்கீடுக்கு எதிரான வன்மத்தையும், இட ஒதுக்கீட்டில் பாஜக அரசியல் நிலையையும் தெளிவுபடுத்துகிறார் மாதவி. அரசியலுக்கு எப்படி வந்தீர்கள் என்கிற கேள்விக்கு, “தான் ஏழ்மையான சூழலில் வளர்ந்தேன். ஆனால், எஸ்.சி, எஸ்.டி இல்லை. கல்லூரியில் எனக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை. நான் படித்துக்கொண்டே பல்வேறு வேலைகளை செய்து என்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொண்டேன். அதேநேரத்தில், பொருளாதாரத்தில் வசதியான தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதை அறிந்த நேரத்தில்தான் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் வலுவாக தோன்றியது’’ என்று கூறுகிறார் மாதவி. வசதி...

அண்ணாமலையின் பொய் – புரட்டுக்கு ஆணித்தரமான பதிலடி – க.கனகராஜ் – சிபிஎம்

அண்ணாமலையின் பொய் – புரட்டுக்கு ஆணித்தரமான பதிலடி – க.கனகராஜ் – சிபிஎம்

வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதை அண்ணாமலை வழக்கமாக வைத்திருக்கிறார். அது தவறு என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டினாலும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் கிடையாது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு  அரசின் கடன் ரூ.8.23 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது என்றும், இது வரலாறு காணாத உயர்வு என்றும் ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.3.8 லட்சம் கடன் இருக்கிறது என்றும் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியுள்ளார்.  தமிழ்நாடு அரசின் கடன் நிலை குறித்து  அண்ணாமலையின் விமர்சனம் ஒருபுறமிருக்க, எல்லா வளங்களையும், வரிகளையும் வாங்கி வைத்துக் கொண்டு மாநிலங்க ளை அல்லல்பட வைக்கும் ஒன்றிய அரசு எப்படி கடன் வாங்கியிருக்கிறது என்பதை அவர் வசதியாக மறந்து விட்டு மார்தட்டி அலைகிறார். சமீபத்தில் புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ஒரு பைசாகூட கொடுப்ப தற்கு இன்றளவும் மோடி அரசாங்கம் முன் வரவில்லை. இதுதவிர, ஒவ்வொரு ஒன்றிய அரசின் திட்டத்திலும் மாநில அரசுகளை சிக்க வைத்து திண்டாட வைப்பதை...

இராஜராஜசோழன் நடத்திய பார்ப்பனிய ஆட்சி

இராஜராஜசோழன் நடத்திய பார்ப்பனிய ஆட்சி

இராஜ இராஜ சோழன் பதவிக்கு வருவதற்கு முன்பே நடந்த சம்பவங்கள் தான் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்களமாக இருந்தாலும் சோழ மன்னர்கள் அனைவருமே பார்ப்பனர்களின் அடிமை ஆட்சியைத் தான் நடத்தி வந்திருக்கிறார்கள் என்பதே  உண்மையான வரலாறு. “தமிழ்த் தேசியத்திற்கு முன்னோடி”, “தமிழர்களின் பொற்காலம்” என்று வர்ணிக்கப்படுற இராஜ ராஜனைப் பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் பார்க்கும் பொழுது இராஜராஜசோழன் ஆட்சி தமிழர்களின் பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை பார்ப்பனர்களுக்கே அது பொற்காலமாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது! பார்ப்பனர்களை சேனாதிபதிகளாகவும், அவைத் தலைவர்களாகவும், அரியணை யேற்றி அழகு பார்த்தவன் இராஜராஜன்! களப்பிரர்கள் காலத்தில் காயடிக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், மீண்டும் தலை விரித்தாடியது இராஜராஜன் காலத்தில். அருண்மொழித் தேவன் என்ற தமிழ்ப் பெயரை இராஜராஜசோழன் என்று வடமொழிக்கு மாற்றிக் கொண்டவன்! அடிமைகள் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள் சுட்டிக் காட்டுகின்றன. தாசியின் மக்கள், பெற்றோரால் விற்கப்பட்டவர் போன்ற பலவகையான...

மாவீரர் நாள் பாடல்

மாவீரர் நாள் பாடல்

மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி. வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி. விழிமூடி, இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி. இழிவாக வாழோம், தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் – அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் – உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை...

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! – தோழர் திருமாவேலன்

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! – தோழர் திருமாவேலன்

தோழர் ப.திருமாவேலன் அவர்களின் முக்கியமான கட்டுரை. தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! அனைவருக்கும் மீண்டும் ஒரு அன்பான வணக்கம். ‘தமிழ்த் தேசியமும், தந்தை பெரியாரும்” என்கின்ற தலைப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. உண்மையில் ஒரு வில்லங்கமான தலைப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உண ராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத்...

புரட்சியாளர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்கள்

புரட்சியாளர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்கள்

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல் தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்களை இங்கே பார்ப்போம். 1. ஜாதி ஒழிப்பு, மொழிவாரி மாகாணம், வீரரும் வீர வழிபாடும் முதல் தொகுதி 1. சாதி பற்றியவை, 2. மொழி வாரி மாகாணங்கள் குறித்து, 3. வீரரும், வீர வழிபாடும் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் இந்தியாவில் சாதிகள், அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி ஆகியன பற்றிப் பேசுகிறார் அம்பேத்கர்.  பல மானுடவியல் அறிஞர்களின் கூற்றுகளிலிருந்து மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி, சாதியின் தோற்ற இலக்கணத்தை விளக்கும் அம்பேத்கர் சாதித் தீவிரத்தில் அகமணமுறை எப்படிப் பங்களித்து வருகிறது என்று குறிப்பிடுகிறார்.  அடுத்து, சாதியை ஒழிக்க சமுதாய அமைப்பை எப்படிச் சீர்திருத்த வேண்டும் என்று தகுந்த வாதங்களை எடுத்து வைக்கிறார். நூலின் இரண்டாவது பகுதியில், மொழிவாரி மாகாணங்களினால் எழும் சிரமங்களையும், அனுகூலங்களையும் விவாதித்து, சிரமங்களைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் கூறுகிறார். மூன்றாவது பகுதி, மகாதேவ் கோவிந்த்...

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை  –   மா.பொழிலன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை – மா.பொழிலன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை  –   மா.பொழிலன் மா. பொழிலன்:  pozhilantamizh@gmail.com பாவலரேறு  ஐயா பெருஞ்சித்திரனார்  அவர்களின்  எழுத்தாற்றல், நூலாக்கங்கள் குறித்தெல்லாம் மணிக்கணக்காக, நாள் கணக்காகப் பேசிக் கொண்டிருக்கவும், எழுதிடவும் இயலும். அதே போல் மறு அச்சாக்கம் செய்யப்பெற்று அண்மையில் வெளிவந்துள்ள ஐயா அவர்களின் நான்கு நூல்களுள் செயலும் செயல் திறனும், ஓ…ஓ.. தமிழர்களே!, சாதி ஒழிப்பு  குறித்தெல்லாம் விரிவாக, அறிந்திட ஏராளமான செய்திகள் உள்ளன. இந்நிலையில், ஐயா அவர்கள் ‘பெரியார்’ குறித்து எழுதிய கட்டுரைகள், பாடல்களின் தொகுப்பாகவே இந்நூல் வெளி வந்துள்ளது. அண்மையில் பெரியார்  படத்தைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர் படத்தின் மீது சிறுநீர் பெய்து இழிவுபடுத்தியதுமான நிகழ்வுகள் நடைபெற்ற சூழலில் பெரியார் குறித்து அறிய வேண்டுவதும், ஆய்வு செய்ய வேண்டுவதும், இன்றியமையாததாகவே எண்ணுகிறோம். பெரியாரின் படத்தைச் சில நாள்களுக்கு முன்னர் எரித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களோ வைதீகக் கருத்துடைய வர்களோ மட்டும் அல்லர்; தமிழ்த்தேசம் தேவை என்பதாகக்...

பெரியார் என்ன பெருங்கேடரா….?  – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி

பெரியார் என்ன பெருங்கேடரா….? – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி

பெரியார் என்ன பெருங்கேடரா….?                                                    – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி கடந்த மார்ச்சுத் திங்களில் சென்னையில் நிகழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு பாடல்தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அங்கு நிகழ்வரங்கின் நுழைவாயிலில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நூல்களுள் நாம் வெளியிட்ட தூயதமிழ்ப்பெயர்கள் – நூலினையும் விற்பனைக்கு வைத்திருந்தோம்.  மேற்பார்வைக்கு எம்முடன் வந்த சிறுவன் ஒருவனை அமர்த்தியிருந்தேன்.  அந்தத் தூயதமிழ்ப் பெயர்கள் நூலின் முன்அட்டையில் திருவள்ளுவர் படமும் பின்அட்டையில் பாவாணர், பாவேந்தர், பாவலரேறு படங்களுடன் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் படமும் அச்சிட்டிருந்தோம்.  அந்த நூலைப் பார்த்த தோழர் ஒருவர், அதிலிருந்த பெரியாரின் படத்தைப் பார்த்து, “இவனைப் போட்டிருப்பதால் தான் இதை வாங்க யோசிக்கிறேன்…” என்றாராம்.  நிகழ்வின் இறுதியில் நாங்கள் புறப்படும்போதுதான் இதை அந்தச் சிறுவன் எங்களிடம்...

பெரியார் நினைவு நாள் – சென்னை – 24-12-2010 கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

பெரியார் நினைவு நாள் – சென்னை – 24-12-2010 கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

ரஷ்யாவில் தைத்துவிட்ட செருப்பை எடுத்துகொண்டு இங்குள்ள காலை வெட்டியவர் அல்ல பெரியார். இங்குள்ள காலை அளந்து பார்த்து செருப்பு தைத்தார் அதுதான் தனி தமிழ்நாடு போராட்டம். [24-12-2010 – சென்னை – தா.செ.மணி] இன்று பெரியாரின் நினைவு நாளில் நாம் கூடியிருக்கிறோம். வழக்கமாக பெரிய அளவில் எடுக்கப்படும் பிறந்தநாள் விழாக்களை விட, நினைவு நாள் விழாக்கள்தான் மிகவும் தேவையானதும், பொருத்தமானதும் என்று நாம் கருதுகிறோம். பிறந்த நாள் விழாக்ககளை அந்தந்த தலைவர்கள் வாழுகின்ற காலம் வரை எடுப்பார்கள், அவர்களிடம் இருந்து ஏதாவது பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு. இப்பொழுதெல்லாம் பார்க்கிறோம், அவர்களுக்கெல்லாம் கூச்சமாக இருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு கொடுக்கும் அடைமொழிகளை பார்த்து நமக்கு கூச்சமாக இருக்கிற அளவிற்கு, பல்வேறு அடைமொழிகளை கொடுத்து சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் மறைந்துவிட்ட தலைவர்களுக்கு நினைவு நாள் எடுப்பது என்பதுதான், அவர்களுடைய கொள்கைகளை, அவர்கள் ஆற்றிய தொண்டினை, அவற்றை நாம் தொடர்ந்து எடுத்து செல்லவேண்டிய தேவையை,...

ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி – பி.எஸ். கிருஷ்ணன்

ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி – பி.எஸ். கிருஷ்ணன்

இந்திய சமூகத்தில் ஒடுக்கப்படுகிற மக்களுக்கான இணையற்ற போராளி பி.எஸ்.கிருஷ்ணன். 1956-ல் ஐஏஎஸ் அதிகாரியாக ஆந்திர மாநிலத்தில் பதவியேற்றதிலிருந்து, மத்திய அரசின் செயலர் முதற்கொண்ட பல பதவிகளில் பணியாற்றியபோதும், ஓய்வு பெற்ற பின் மறையும் வரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக ஓயாமல் உழைத்தவர். பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், அந்த சமூகங்களுக் குட்பட்ட மதச் சிறுபான்மையினரின் முன்னேற்றத் துக்காகத் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர். இந்திய அரசு அதிகாரிகளில் பி.எஸ்.கிருஷ்ணனின் வாழ்வும் பணியும் அரிதினும் அரியவை. பார்ப்பன சமூகத்தில் பிறந்த அவர், சாதிகளை மேலிருந்து கீழ் நோக்கி அடுக்கும் பார்ப்பனியத்துக்கு எதிரான போரில் தன்னை உறுதியான சிப்பாயாக இணைத்துக் கொண்டார். எல்லாச் சமூகங்களும் சம இடம் நோக்கி நகர கீழேயுள்ள சமூகங்கள் மேல் நோக்கி வருவதற்கான இடங்களை உருவாக்குவதும் அதற்கான தடைகளை உடைப்பதும் முக்கியம் என்று கருதிச் செயல்பட்டார். “சாதி அமைப்பு இந்தியக் கலாச்சாரத்தின் கொடிய குற்றம்” என்பது...

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் யாராலும் தவிர்க்க முடியாத பெயர் மணியம்மை. தி.மு.க என்னும் அரசியல் கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர், தமிழகத்தில் முதன்முதலாக ஓர் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண், உலகளவில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண் என்னும் சிறப்புகள் மணியம்மைக்கு உண்டு. இத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மணியம்மையின் நூற்றாண்டுவிழா இந்த ஆண்டு தொடங்குகிறது. 1920, மார்ச் 10-ல் வேலூரில் கனகசபை – பத்மாவதி தம்பதிக்குப் பிறந்தவர் காந்திமதி. கனகசபையும் பத்மாவதியும் பெரியாரின் கொள்கைகளில் பற்றுகொண்டவர்கள். கனகசபையின் நண்பர், தனித்தமிழ் ஆர்வலர் கு.மு.அண்ணல்தங்கோ காந்திமதிக்கு ‘அரசியல் மணி’ என்னும் பெயரைச் சூட்டினார். கே.அரசியல்மணி என்பது கே.ஏ.மணி என்றாகி, ‘மணியம்மையார்’ என்று காலத்தில் நிலைத்தது. 1943-ல் அரசியல்மணியின் தந்தை இறந்தார். ஒருமாதத்திலேயே இயக்கப்பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார் மணியம்மை. பேச்சாளராக, கட்டுரையாளராக, போராட்டங்களில் பங்கெடுப்பவராக மணியம்மையின் இயக்க வாழ்க்கை அமைந்தது. திராவிடர் கழகக் கொடியின் தத்துவம், பெண்ணுரிமை, அண்ணல் அம்பேத்கர்...

சக்தி-கௌசல்யா திருமணத்தை ஒட்டி எழுந்த குற்றச்சாற்றுகள் – அறிக்கை

சக்தி-கௌசல்யா திருமணத்தை ஒட்டி எழுந்த குற்றச்சாற்றுகள் – அறிக்கை

முந்தைய அறிக்கை   தியாகு / கொளத்தூர் மணி                  13.01.2019 அனைவருக்கும் வணக்கம். 2018 திசம்பர் சக்தி-கௌசல்யா திருமணத்தை ஒட்டி எழுந்த குற்றச்சாற்றுகள் குறித்து நாங்கள் இருவரும் சேர்ந்து 29.12.2018இல் வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் ஊடகங்களிலும் பிற வழிகளிலும் நடந்த விவாதங்களைக் கவனத்தில் கொண்டுள்ளோம். பலதரப்பட்டவர்களும் கிளப்பிய புரளிகளுக்கும் அவதூறுகளுக்கும் நடுவில் எங்கள் அறிக்கையைப் புரிந்து கொண்டு சமூகப்பொறுப்புடன் நிலையெடுத்த தோழர்கள், நண்பர்களுக்கு நன்றி! பாதிப்புற்றதாக முன்வந்த தரப்பாரிடமிருந்து எங்கள் அறிக்கைக்குப் பிறகு ஒரு நீண்ட மடல் வரப்பெற்றோம். அது எங்கள் அறிக்கையைப் பெரும்பாலும் மறுதலிப்பது போல் அமைந்திருந்ததால் அவர்கள் எழுப்பிய ஒவ்வொரு கூறு குறித்தும் எங்கள் விளக்கத்தை அவர்களுக்கு எழுதியனுப்பினோம். இதன் பிறகு இத்தனை நாளாகியும் அவர்களிடமிருந்து மறுமொழி இல்லாததால் எங்கள் விளக்க மடலைப் பொதுவெளியில் முன்வைக்கிறோம். இந்தச் சிக்கலில் எழுப்பப்பட்ட பல குற்றாய்வுகளுக்கும் வினாக்களுக்கும் இது விடையாக அமையும் என நம்புகிறோம். தியாகு / கொளத்தூர்...