கடலூர் மாவட்ட அமைப்பாளராக மதன்குமார் நியமனம்
கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், 28.5.2024 அன்று கருவேப்பிலங்குறிச்சி வசந்தம் மகாலில் மாவட்டத் தலைவர் அ.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் நா.கொளஞ்சி வரவேற்புரை யாற்றினார். மாவட்டத் தலைவர் அ.மதன்குமார், மாவட்ட துணைத் தலைவர் செ.பிரகாஷ் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், தற்போதைய சூழல் குறித்தும் உரையாற்றினார்கள். மாவட்ட அமைப்பாளர் நா.கொளஞ்சி இயக்க நிலை குறித்தும், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் ப.அறிவழகன் கழகத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும் தற்போதைய சூழல் குறித்தும் பேசினார். நிறைவாக கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் “இன்றைய அரசியல் சூழலில் பெரியார் இயக்கத்தின் தேவை, எதிர்கால செயல்பாடுகள், இயக்க தோழர்களின் செயல்பாடுகள்” குறித்து விரிவாக உரையாற்றினார்கள். நிறைவாக முத்துகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கடலூர் மாவட்டத்தில் பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டு தோழர் மதன்குமார் மாவட்ட அமைப்பாளராக நியமனம்...