Category: செய்திகள்

சென்னை, திருப்பூரில் காமராசர் சிலைக்கு மரியாதை

சென்னை, திருப்பூரில் காமராசர் சிலைக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக கல்வி வள்ளல் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாளை போற்றும் விதமாக 15-07-2026 புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் அனுப்பர்பாளையம், நகராட்சி அருகில் அமைந்துள்ள கர்மவீரர் காமராசர் அவர்களின் சிலைக்கு கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் கர்மவீரர் காமராசர் அவர்கள் குறித்து கொள்கை முழக்கமிட தொடர்ந்து தோழர்கள் முழக்கமிட்டனர். நிகழ்வில் மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகரத் துணைத் தலைவர் மாரிமுத்து, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் மற்றும் கழகத் தோழர்கள் சிரிஜா, இனியன், குணா, பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை: காமராஜர் பிறந்தநாளையொட்டி, மாவட்டக் கழகத்தின் சார்பில், ஜூலை-15 காலை 9 மணிக்கு, சென்னை சிம்சன் ஜிம்கானா கிளப் முன்புள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து, கொள்கை முழக்கமிட்டு தோழர்கள்...

பார்ப்பனப் பிடியில் இந்துமதம்  ஏழை இந்துக்களை ஒதுக்கும் `ஏழுமலையான்’

பார்ப்பனப் பிடியில் இந்துமதம் ஏழை இந்துக்களை ஒதுக்கும் `ஏழுமலையான்’

திருப்பதி ஏழுமலையானுக்கு ஜூலை-16, அன்று ஒரே நாளில் மட்டும் 97 கோடி ரூபாய் காணிக்கையாக வந்திருக்கிறது. இதற்கான காரணமும் இப்போது வெளிவந்து இருக்கிறது. ஏழுமலையானுக்கு தொடர்ந்து நன்கொடை வழங்குகிறவர்களின் பட்டியல் ஒன்று இருக்கிறது. இதில் 1.97 லட்சம் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் திருப்பதி ஏழுமலையான் கூடுதலாக தரிசனங்களை வழங்குவார். எவ்வளவு அதிகமான தொகை நன்கொடை வழங்குகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தரிசனங்களில் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு தரிசனம்; கருவறைக்கு அருகில் உள்ள குறுக்கு வழி வழியாக அனுமதி; பிரேக் அப் தரிசனம்; விடியற்காலை தரிசனம்; சுப்ரபாத சேவை; கல்யாண உற்சவத்தில் அனுமதி. இவை தவிர லட்டு பட்டு வஸ்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணய பரிசுகள், தங்குமிட வசதிகள் எல்லாமும் கிடைக்கும். இந்தச் சலுகைகளில் புதிய மாற்றங்கள் ஜூலை-16, முதல் அமுலுக்கு வந்தன. இதன்படி நன்கொடையாளர்கள் மேலும் புதிதாக நன்கொடை அளித்தால் மட்டுமே பழைய சலுகைகள் அனுமதிக்கப்படும் என்று...

தயாராகிறது சேலம் மாவட்டம்!

தயாராகிறது சேலம் மாவட்டம்!

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் ஜூலை-17, வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் மேட்டூர் நகரத் தலைவர் மார்டின் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்வரும் ஆகஸ்ட்-6 முதல் 12 வரை நடைபெற இருக்கும் “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயணம்” சிறப்பாக நடைபெற சேலம் மாவட்டக் கழகம் முழு ஒத்துழைப்பை வழங்குவது என்றும், சேலம்-நாகர்கோவில் பயணக் குழுவின் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சேலம் அணியின் இசைக்குழு, கடைவீதி வசூல், புத்தக விற்பனை, ஊடக பிரிவு, பேச்சாளர்கள் பட்டியல் குறித்தும் பயணத்திற்கான நன்கொடை திரட்டுதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், சேலம் மாவட்ட பொருளாளர் சம்பத், மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், வனவாசி நகரச் செயலாளர்...

பார்ப்பன சடங்குகளை ஒதுக்கிய பி.என் சண்முகம் நினைவேந்தல்!

பார்ப்பன சடங்குகளை ஒதுக்கிய பி.என் சண்முகம் நினைவேந்தல்!

மறைந்த பி. என் சண்முகம் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு ஜூலை-17, வெள்ளிக்கிழமை 12 மணி அளவில் திருப்பூர், பலவஞ்சிப்பாளையம் பகுதியில் உள்ள மறைந்த பி. என் சண்முகம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. சர்வேஸ்வரன் (அ.தி. மு.க) அவர்கள் வரவேற்புரையாற்றினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர், பி.என் சண்முகம் அவர்களின் உறவினர் கா.சு. நாகராசன் பேசுகையில் என்னுடைய தந்தையார், தாயார் இறந்த பிறகு குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டும், என் தாயார் மறைந்த பிறகு அவரின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கியதைக் கண்டும், உயிரற்ற உடல் மருத்துவ மாணவர்களுக்கு இவ்வளவு பயன்படுகிறதா? என்பதை உணர்ந்து மறைந்த பி.என். சண்முகம் அவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பொது நல பார்வையிலும், தொலைநோக்குப் பார்வையிலும் சிந்தித்து உயிருடன் இருக்கும் போது உடற்கொடை வழங்கும் சான்றிதழை பூர்த்தி செய்து வழங்கினார். எங்கள் வீட்டில்...

பரப்புரைப் பயண களப்பணியில் ஏற்பாட்டு குழுவினர்

பரப்புரைப் பயண களப்பணியில் ஏற்பாட்டு குழுவினர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை இவற்றிற்கு எதிரான “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயணம்’’ என்கின்ற தலைப்பில் வருகின்ற ஆகஸ்ட் 6-ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மூன்று முனைகளிலிருந்து தொடங்கும் பரப்புரை நடைபெற உள்ளது. இந்தப் பயணத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை கழகப் பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் அப்பகுதிகளுக்குச் சென்று கலந்தாய்வு செய்தனர். 08.07.2026 அன்று மதியம் நிறைவு மாநாடு நடைபெற உள்ள காரைக்குடிக்கு சென்று கழக மாவட்டப் பொறுப்பாளர் முத்துவை சந்தித்து மாநாடு நடைபெற உள்ள இடத்தையும் பேரணி தொடங்கும் இடத்தையும் பார்வையிட்டு இறுதி செய்தனர். மாநாட்டின் ஏற்பாடு குறித்தும் தோழர்கள் தங்குமிடம், உணவு மற்றும் மாநாட்டிற்கான விளம்பரம் செய்வது குறித்தும் ஆலோசனை வழங்கினர். மாலை 05.00 மணியளவில் பேராவூரணி சென்று தலைமைக்குழு உறுப்பினர் திருவேங்கடம் அவர்களை சந்தித்து பேராவூரணியில் 06.08.2026...

கனவுகளில் வந்த ’ராமன்’  களவாடலை ஏன் தடுக்கவில்லை!

கனவுகளில் வந்த ’ராமன்’ களவாடலை ஏன் தடுக்கவில்லை!

இந்து இந்தியாவின் தேசியக் கடவுளாக பகவான் பாலராமனை முன்னிறுத்தியது ஒன்றிய பாஜக ஆட்சி. அந்தத் தேசியக் கடவுளுக்கே நாமம் போட்டு இருக்கிறார்கள் ராமரின் பக்தர்கள். கோடிக்கணக்கான பக்தர்களின் காணிக்கைப் பணம் களவாடப்பட்டு இருக்கிறது; வெள்ளி நகைகள் காணாமல் போயிருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை 70 முறை காணிக்கைப் பணத்தை களவாடியதை சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்துள்ளன. வேறு வழியின்றி உ.பி. ராமராஜ்யம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இப்போது உச்சநீதிமன்றமே தலையிட்டு இதுவரை வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டிருக்கும் ஒன்றிய ஆட்சிக்கும் மாநில ஆட்சிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்து இருக்கிறது. பாபர் மசூதிக்குள் இந்து ராமன் கோயில் இருந்தது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, நம்பிக்கையின் அடிப்படையில் கோயில் கட்ட அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதி தனது கனவில் ராமன் வந்து...

ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி    கருத்தரங்கம்!

ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி கருத்தரங்கம்!

ஓபிசி மக்கள் உரிமை கட்சியின் சார்பில், கடந்த ஜூலை-12, (ஞாயிறன்று), சென்னை ராயப்பேட்டை இ.என். சேஷா மகாலில், “இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மீதான ஜாதி கணக்கெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் விளைவுகள்’’ எனும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி தோழர் அன்பரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் சூரஜ் மண்டல்; பிற்படுத்தப்பட்டோரை பாஜக ஏமாற்றுவது குறித்தும், பார்ப்பனர் ஒற்றுமை – ஓபிசி ஒற்றுமையின்மை குறித்தும் உரையாற்றினார். அடுத்ததாக உரையாற்றிய, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அசோக் வர்தன், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஓபிசி ஜாதிகளின் எண்ணிக்கையை 46 லட்சமாக உயர்த்திக்காட்டும் மோசடிகளைச் சுட்டிக்காட்டினார். நீதிபதிகள், அரசுத்துறைச் செயலாளர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பெருநிறுவனங்களின் நிர்வாகக் குழுவினர் பெரும்பாலும் முன்னேறிய ஜாதிகளாகவே இருப்பதை வினவினார். நீதிமன்றங்களில் புள்ளிவிவரங்களை வழங்காமல், பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது மோடி தான்...

ஜாதித் தடைகளை தகர்த்த 14,500 உடல் உறுப்புகள்!

ஜாதித் தடைகளை தகர்த்த 14,500 உடல் உறுப்புகள்!

உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதில் தமிழ்நாடு முன்னிலையில் நிற்கிறது. கடந்த ஆறு மாதங்களில் மரணம் அடைந்த 169 பேர்களது உறுப்புகள் கொடையாக பெறப்பட்டுள்ளன. கொடையாக பெறப்பட்ட 937 உறுப்புகள் உயிரோடு போராடியவர்களுக்குப் பொருத்தப்பட்டு உயிர் வாழ்க்கை தரப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய செயலாளர் அறிவித்துள்ளார், இது ஆறு மாதங்களில் மட்டுமே பெறப்பட்டுள்ள கொடை. இது 2008-ஆம் ஆண்டு முதல் இதுவரை 2,490 பேரிடமிருந்து 14,533 உறுப்புகள் கொடையாக பெறப்பட்டு மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. உடலுக்கோ உடல் உறுப்புக்கோ ஜாதி அடையாளங்கள் இல்லை! உறுப்புகள் ஜாதி பார்ப்பதில்லை! எந்த ஒரு ஜாதி பற்றாளரும் பிற ஜாதியினரின் உறுப்பு தங்கள் குடும்ப உறுப்பினருக்கு தேவை இல்லை என்று மறுப்பதும் இல்லை. எப்போது கிடைக்கும் என்று துடிக்கிறார்கள். நோய்களும் ஜாதி பார்ப்பதில்லை; சிகிச்சைகளுக்கும் ஜாதி இல்லை; எல்லா ஜாதியினருக்கும் ஒரே சிகிச்சைதான்! ஜாதி கடந்து உறுப்புகள் பொருத்துவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்கள். ஆனால் ஜாதி...

பரப்புரைக்கு தயாராவீர்

பரப்புரைக்கு தயாராவீர்

தமிழ்நாட்டில் சமூகத்திலும் வாழ்க்கையிலும் மாற்றங்கள் வந்தாலும் ஜாதி கட்டமைப்பு குலைந்துவிடவில்லை. பல்வேறு புதிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வருகின்றன. ஒவ்வொரு ஜாதிக் குழுவும் தனக்கான பெருமைகளைப் பேசுகிறது. ஜாதிச் சங்கங்களை அமைக்கிறார்கள்; ஒவ்வொரு ஜாதிக்கும் திருமணத்திற்கு வரன் தேடித்தரும் அமைப்புகள் வந்துவிட்டன; தொலைக்காட்சிகளிலும் அவை விளம்பரம் செய்கின்றன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே ஜாதி குறித்து ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்திய போது அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. பள்ளி கல்லூரி மாணவர்களிடையே 50% விழுக்காட்டிற்கும் மேல் ஜாதி உணர்வு இருப்பதையும் சமூக வலைதளங்களில் அவர்கள் ஜாதிப் பெருமைகளை பதிவு செய்து வருவதையும் அந்த ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டில் பாஜக தனது `இந்துத்துவா’ அரசியலை வளர்ப்பதற்கு ஜாதிச் சங்கங்களை பெருமளவில் பயன்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் சமுதாயத்தில் ஜாதிக் கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்று கவலைப்படவே இல்லை. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் அடக்கம். அரசியலுக்குள்...

ஈழத்தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்; 13-ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!

ஈழத்தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்; 13-ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!

2013-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை மைலாப்பூர் தபால் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசி சேதம் விளைவித்ததாகக் கூறி, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தபசி குமரன், உமாபதி, ராவணன், மனோகரன், மாரிமுத்து, ஜான்சன் மற்றும் முகிலன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 13 ஆண்டுகளாக வழக்கு நடந்தது. தோழர்கள் நீதிமன்றம் சென்று வந்தனர். இது ஈழத் தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம். இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டு வரும் 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட அனைத்து சாட்சிகளும் வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அன்றாடம்...

‘ஆணவக் கொலை’ தடுப்புச் சட்டம் வருமா?

‘ஆணவக் கொலை’ தடுப்புச் சட்டம் வருமா?

கருநாடக மாநில அரசைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் நீதிபதி சந்துரு `டைம்ஸ் ஆப் இந்தியா’ ஜூலை 17, நாளேட்டில் எழுதிய கட்டுரை. திருமணச் சட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை உருவாக்கிய தமிழ்நாடு, ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவருவதில் ஏன் இன்னும் தாமதிக்கிறது? கர்நாடகா ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளது. நாம் ஏன் இல்லை? இந்தக் கொலைகளில் எந்தவிதமான “குடும்ப கௌரவமும்” இல்லை. இத்தகைய ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு உடனடியாக ஒரு தனிச்சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. சமூக நீதி மற்றும் முற்போக்கு சீர்திருத்தங்களில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டதாக பெருமை பேசும் தமிழ்நாட்டில், “ஆணவக் கொலைகளைத்” (Honour Killings) தடுக்க தனிச்சட்டம் தேவையா? என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது. இதேவேளை, கர்நாடகா 2025, மார்ச் மாதத்தில் இதற்கென ஒரு சட்டத்தை இயற்றி இந்தத் துறையில்...

நங்கவள்ளி கழகத் தோழர்களின் சிறப்பான செயல்!

நங்கவள்ளி கழகத் தோழர்களின் சிறப்பான செயல்!

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் தலைவர்களின் படங்கள் வரையப்பட்டன. அதில் தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படங்களை மட்டும் பெயர் பட்டியலில் இருந்தும் அவற்றை வரையாமல் தவிர்த்தனர்.கழகத் தோழர்கள் நங்கவள்ளி கிருஷ்ணன், சந்திரசேகரன், உமாசங்கர், மனோஜ் ஆகியோர் பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களிடம் இதுகுறித்து வலியுறுத்தினர். நமது கோரிக்கையை ஏற்று தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படங்கள் வரையப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நடந்த வரையும் பணி 10.07.2026 அன்று முடிவடைந்துள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 16072026

தோழர் ஆம்ஸ்ட்ராங் 2-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் ஜூலை-5 அன்று வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

தோழர் ஆம்ஸ்ட்ராங் 2-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் ஜூலை-5 அன்று வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் இதழ் 16072026

சேலத்தில் ஆணவப் படுகொலைக்கு கண்டனம்!

சேலத்தில் ஆணவப் படுகொலைக்கு கண்டனம்!

மயிலாடுதுறையில் நடந்த ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலையைத் தடுக்கும் சிறப்புத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டம் 07.07.2026 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) சார்பில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் தன் உரையில் “இந்தியா முழுவதும் ஜாதி மீறி காதலிக்கும் ஒரே காரணத்திற்காக ஜாதி கௌரவம் என்னும் பெயரில் காதலர்கள் காதல் இணையர்கள் கொடூரமாக கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 4 ஆணவக் கொலைகள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஜாதி ஆணவக் கொலைகள் நடந்து இருக்கின்றன. இவை அனைத்திற்கும் ஒரே காரணம் மனு சாஸ்திரத்தை இந்து மதத்தவர்கள் படிக்காமல் இருக்கலாம்; ஆனால் அவற்றின் இதிகாசபுராணக்...

பரப்புரை; சேலம், திருப்பூர் மாவட்டங்கள் தீவிரம்!

பரப்புரை; சேலம், திருப்பூர் மாவட்டங்கள் தீவிரம்!

சேலம்: 06.07.2026 திங்கள் மாலை 4.00 மணிக்கு கருப்பூரில் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் இல்லத்தில், மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தலைமையில், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் முன்னிலையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் கடந்த 28.06.2026 அன்று திருப்பூரில் நடைபெற்ற தலைமைக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் தென்மாவட்டங்களுக்கு பரப்புரை பயணம் மேற்கொள்வது குறித்தும், பயணக் குழுவின் தொடக்க நிகழ்வாக 05.08.2026 அன்று மாலை 4.00 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரையை சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் தொடங்குவது எனவும், அதன்பிறகு பரப்புரைக் குழு நாகர்கோவில் சென்றடைந்து காரைக்குடி நிறைவு விழா மாநாட்டு திடலை 12.08.2026 அன்று வந்தடையும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதிகாரத்தில் கால் பதிக்காத குரலற்றசமூகங்களின் உரிமைக்கு கருத்தரங்குகள் நடத்துவது, தந்தை பெரியார் பிறந்தநாளை குடும்ப விழாவாக நடத்துவது, பிரச்சார...

‘தாலி செண்டிமெண்ட்’தேவைதானா?

‘தாலி செண்டிமெண்ட்’தேவைதானா?

தாலி சென்டிமென்டை ஓவராகத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்டுவதால் சில பெண்களிடையே வேறுமாதிரியான பாதிப்பு உண்டாவதை நான் கவனித்திருக்கிறேன். தாலி என்பதைக் கணவனின் மறுபிம்பமாகக் கருதி கண்களில் ஒற்றிக்கொள்கிறோம், குங்குமம் வைக்கிறோம், கணவன் இறந்த பிறகு தாலி அணியக் கூடாது என்றும் சொல்கிறோம். இந்தக் கருத்தை வலியுறுத்திச் சொல்வதால் ஓர் எதிர்மறை சிந்தனை சிலரிடம் உண்டாகிறது. ‘ஒரு மலர் ஒரு முறைதான் பூக்கும், கணவன் கட்டிய தாலி என்னுடைய உடம்பில் ரத்த நாளங்களாக இருக்கிறது’ என்றெல்லாம் வசனங்களை அமைத்துவிடுவதால் கணவனை இழந்த அல்லது விவாகரத்து ஆன சில பெண்கள் மறுமணம் செய்துகொள்ளவே தயங்குவது எனக்குத் தெரியும். படங்களில் தாலி சென்டிமென்ட் வைத்து அதைப் பெண்களைப் பார்க்க வைப்பதன் மூலம் நன்றாக வியாபாரம் ஆகிறது எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், இதே தாலி சென்டிமென்ட் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட விதத்தில் எதிர்மறையாகப் பெண்களைப் பாதிப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மறுமணங்கள்...

இழிவில் பிறந்தது ஜாதி – பெரியார்

இழிவில் பிறந்தது ஜாதி – பெரியார்

வெவ்வேறு வர்ணத்தவருக்கு இடையே நடந்த கலப்பு உறவின் காரணமாகத் தான் ஜாதியே பிறந்தது. இது குறித்து ‘விபச்சாரத்தில் பிறந்த ஜாதி’ எனும் தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரை. ஜாதிப் பிரிவும் வித்தியாசங்களும் இருக்கக் கூடாதென்பது இந்தியாவின் ஒருமுகப்பட்ட அபிப்பிராயமென்பதும், கோரிக்கையென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். பொதுவாகப் பார்க்கும் போது போதிய உலக ஞானமற்ற மக்களுக்கு ஜாதிப் பிரிவுகளை ஒழிப்பது என்றால் பிரமாதமாகத் தோன்றுவதும், சிலருக்கு ஏதோ குடிமுழுகிப் போவது போல் அவர்கள் மனதிற்குப் பெரிய திகில்கள் உண்டாவதும் சகஜமாகக் காணப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் ஜாதி என்பதன் உண்மையும், உற்பவமும் இன்னதென்று அறியாத மயக்கத்தினால் தோன்றப்படுவதே தவிர வேறில்லை. ஒரே நாட்டு மக்கள் பிறவியில் பல ஜாதியாகப் பிரிக்கப்பட்டிருப்பது நமது இந்தியாவில்தான் இருக்கின்றதே தவிர வேறெங்கும் இல்லை என்பது உலகக் கல்வி ஞானமுடையவர்கள் யாவரும் அறிந்ததாகும். அந்தப்படி இந்தியாவில் பிரிக்கப்பட்டிருக்கும் ஜாதியும் எவ்வித கொள்கைக்கும் பொருத்தமில்லாமல் வெறும் பிரிவுக்கும் இழிவுக்கும் மாத்திரம் ஆதாரமாய்...

தாமரை நன்கொடை

தாமரை நன்கொடை

கழக செயல்பாட்டாளர் தோழர் கடலூர் தாமரை கழக வளர்ச்சிக்கு ரூ.8,000 நன்கொடையாக வழங்கினார். -( நன்றியுடன் பெற்றுக்கொண்டோம் ஆசிரியர்) பெரியார் முழக்கம் இதழ் 16072026

கழக வளர்ச்சி நிதி

கழக வளர்ச்சி நிதி

தஞ்சை மாவட்டக் கழகத் தோழர் சார்கோட்டை இளங்கோவன் அவர்களை 09.06.26 வியாழக்கிழமை அன்று பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது குடந்தை கழக ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் இணையர் வைக்கம் தங்களது புதிய இல்லம்”பெரியார் இல்லம்” திறப்பின் மகிழ்வாக புரட்சிப் பெரியார் முழக்கம் வளர்ச்சிக்கு ரூ.5,000 நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 16072026

சென்னையில் ராயப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கழகத் தோழர்கள் தொடர்ச்சியாக சுவரெழுத்துப் பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் ராயப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கழகத் தோழர்கள் தொடர்ச்சியாக சுவரெழுத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியார் முழக்கம் இதழ் 16072026

விஜய் பேச்சும் நீரோ மன்னரும்!

விஜய் பேச்சும் நீரோ மன்னரும்!

முதலமைச்சர் விஜய் கரூர் பேச்சு ஒரு முதலமைச்சர் தகுதிக்குரிய பேச்சாக இல்லை.மாறாக ஏதோ படை எடுத்து வந்து தமிழ்நாட்டைப் பிடித்து மன்னர் ஆகிவிட்டது போன்ற மனநிலையில் பேசுகிறார். குறிப்பாக கரூர் சம்பவம் குறித்து அவர் உருவாக்கி உள்ள சதி திரைக்கதை வஞ்சகமானது. ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தார் என்ற ஒரு வரலாற்று நிகழ்வு உண்டு. தீ பற்றியதற்கு காரணம் மன்னர்தான் என்ற குற்றச்சாட்டு வந்த போது அதை மறைக்க கிறிஸ்தவர்கள் மீது பழி போட்டு அவர்களைக் கைது செய்து பழிவாங்கி தன் குற்றத்தை மறைக்கப் பார்த்தார் என்ற வரலாறு தான் இப்போது நினைவுக்கு வருகிறது. கரூர் கூட்டத்தில் போலீசார் திட்டமிட்டு தன்னை உள்ளே அனுப்பியதாக அவர் பேசுவதும் அந்தக் கூட்டத்திற்கு ஏன் தடை போடவில்லை என்று கேட்பதும் எதிர்மறையான நேர்மையற்ற பழிச்சொற்கள். இவர்களே கேட்டு அனுமதி வாங்கிய கூட்டத்திற்கு காவல்துறை தடை...

வி.பி.எஸ்.ஏ ஆபத்து

வி.பி.எஸ்.ஏ ஆபத்து

உயர் கல்வியை முழுமையாக மாநிலக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து தனது ஆளுகைக்குக் கீழே கொண்டு வரும் மசோதா ஒன்றை ஒன்றிய ஆட்சி 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த மசோதா கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானதால் நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு வந்துள்ளது. 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். குழுவின் தலைவர் பாஜகவைச் சேர்ந்த டி.குடந்தீஸ்வரி. உயர் கல்விக்கான பல்கலைகழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆகிய அமைப்புகள் கலைக்கப்படுகின்றன. வி.பி.எஸ்.ஏ (விக்சித் பாரத் சிக்க்ஷா ஆதிஷ்டான்) என்ற ஒரே அமைப்பின் கீழ் இந்த அனைத்து அமைப்புகளையும் கொண்டு வருகிறது இந்த புதிய சட்டம். இதன் வழியாக உயர்கல்வியின் முழுமையான அதிகாரத்தை ஒன்றிய ஆட்சி எடுத்துக் கொள்கிறது. மாநிலங்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகங்களை நடத்தும் உரிமை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான சட்டத்தை பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களே கடுமையாக எதிர்க்கின்றன....

தடை, அதை உடை!

தடை, அதை உடை!

இடிப்போம்‌ ஜாதிச் சுவரை! உடைப்போம் இந்த பழைய பூட்டை! ஒரே குரலில் முழங்குவோம்! “நாமெல்லாம் ஒன்று” இப்படி நாம் கூறினால் எதிர்ப்பு வருகிறது. நீ வேறு; நான் வேறு; எப்படி சமமாக முடியும்? இப்படித்தான் நமது சமூகம் கேட்கிறது. 3,000 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத கணக்கு இது . இந்தத் தடை உடைய வேண்டாமா? இந்தக் கேள்வியுடன் தான் நாங்கள் உங்களிடம் வருகிறோம். கல்வியும் கால மாற்றமும் இளையோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள வேலை வாய்ப்பு, சம வாய்ப்பு, சந்திப்பு காதலை நோக்கி நகர்த்துகிறது. ஆனால் ஜாதி அதற்குத் தடை போடுகிறது. வாழ வேண்டிய இளையோர் வாழ்க்கையையே தடுக்கிறது; இல்லையேல் ஆணவக் கொலை என்று வாழ்க்கையே முடிக்கிறது. ஜாதி பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொரு இந்து மீதும் பிரிக்க முடியாமல் ஒட்டப்படும் ஸ்டிக்கர். ஜாதி விலை கொடுத்து பத்திரம் எழுதி வாங்கிய சொத்தா? பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கிய பட்டமா? இல்லை இல்லை;...

வான்மதி-கந்தசாமி இணையர்களின் சுயமரியாதை மணவிழா!

வான்மதி-கந்தசாமி இணையர்களின் சுயமரியாதை மணவிழா!

வான்மதி – கந்தசாமி – இணையரின் சுயமரியாதைத் திருமணம், ஜூலை 5,2026 (ஞாயிறு), பூவிருந்தவல்லி இதயம் மகாலில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலை வகித்தார்.தலைமைக் குழு உறுப்பினர் கு.அன்பு தனசேகர், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, இரண்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மணப்பெண் அக்காவும் கழகத் தோழர்களுமான இணையர்கள் புகழேந்தி- ஸ்ரீலேகா இந்தத் திருமணத்தை எந்தவித சடங்குகளும் இன்றி சுயமரியாதைத் திருமணமாக நடத்த வேண்டும் என்ற முனைப்புடன் நடத்திக் காட்டியுள்ளனர். ஸ்ரீலேகா நன்றியுரையாற்றினார். மணமக்கள் புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு வளர்ச்சி நிதியாக ரூ. 3,000, பரப்புரைப் பயணத்துக்கு ரூ. 4,000, புத்தகங்களுக்கு ரூ. 1,680 வழங்கினர். இந்நிகழ்வில், மாவட்ட அமைப்பாளர் ம.கி.எட்வின் பிரபாகரன், தோழர்கள் பிரனேஷ், ராகுல், ஹானஸ்ட்ராஜ், நவெந்தன், கார்த்தி ராஜேந்திரன், பாரி சிவா, போரூர் அபிநந்தன், நந்தகுமார், அசோக், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா....

‘‘பெரியாரை படித்ததால் அம்மாவுக்கு மறுமணம் செய்தோம்!’’

‘‘பெரியாரை படித்ததால் அம்மாவுக்கு மறுமணம் செய்தோம்!’’

கணவனை இழந்த அம்மாவுக்கு அவரது இரண்டு மகன்கள் மறுமணம் செய்து வைக்கும் நூறுசாமி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கணவனை இழந்த பெண் சமூகம் வழியாக சுமக்கும் வலிகளை பார்வையாளர்களிடம் உணர்வுபூர்வமாக கடத்துகிறது இப்படம். இது உண்மையில் நடந்த சம்பவம். கள்ளக்குறிச்சி மாவட்டம் வலையாம்பட்டு கிராமத்தைச் சார்ந்த சகோதரர்கள் சித்தார்த்தன் மற்றும் விவேக் இந்த புரட்சி திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.இந்தச் சிந்தனைக்கு காரணம் பெரியாரைப் படித்தது தான் என்கிறார் சித்தார்த்தன். இது குறித்து ‘ஆனந்த விகடனில்’ ஜூன் 26 ஆம் தேதி வெளிவந்த பேட்டியில் இருந்து… அவள் விகடனில்தான் எங்கள் முதல் பேட்டி வெளிவந்துச்சு. அதைப் பார்த்த பிறகு நிறைய ஊடகங்களில் பேட்டி எடுத்தாங்க. அதையெல்லாம் படிச்சுட்டு டைரக்டர் சசி சார் என்னைக் கூப்பிட்டார். சென்னைக்கு வந்து சாரை சந்திச்சேன். “உங்கம்மாவோட கதையைப் படமா பண்ணலாமா?”ன்னு கேட்டார். அம்மாவுக்கு மகன்கள் கல்யாணம் பண்ணி வெச்சதைப் பலரும் ஒரு செய்தியா கடந்து போனாங்க. ‘அதை...

பரப்புரைக்கு தயாராகும் சென்னை மாவட்டக் கழகம்!

பரப்புரைக்கு தயாராகும் சென்னை மாவட்டக் கழகம்!

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், ஜூலை-5 மாலை 6 மணிக்கு, கழகத் தலைமை அலுவலகத்தில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் நடைபெற்றது. குரலற்றோரின் குரலாக கருத்தரங்கங்கள் நடத்துவது, தென் மாவட்டங்களுக்கு பரப்புரைப் பயணம் மேற்கொள்வது, பெரியார் பிறந்தநாளை குடும்ப விழாவாக நடத்துவது, சமூக வலைத்தள செயல்பாடுகள், தேர்தல் முடிவுகள், பிரச்சார அணுகுமுறை, நன்கொடை திரட்டுதல், மாநாட்டு சுவரெழுத்து, பயணப் பெயர் பட்டியல் தயாரிப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பரப்புரைப் பயணத்தை சிறப்பாக நடத்துவது குறித்து தோழர்கள் கருத்துகளை வழங்கினர். குறைந்தது 20 தோழர்கள் பயணக்குழுவில் பங்கேற்க வேண்டும், பெண் பேச்சாளர்களும், கலைக்குழுவினரும் இடம் பெற வேண்டும், பயண நோக்கம் குறித்த டீசர்ட்டை தயாரிப்பது, சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாள் பயணத்தையும் பல்வேறு நவீன வடிவத்தில் கொண்டு போய் சேர்ப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டன. உடனுக்குடன் செய்திகளை பதிவேற்றுவதற்கும் குழு ஒன்றை...

கட்சி மாறினால் பதவி, பணம்;  ஜாதி மாறினால் மரணமா?

கட்சி மாறினால் பதவி, பணம்; ஜாதி மாறினால் மரணமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாத்தான்குடி கிராமத்தில் ஜாதி மாறி காதலித்த இளைஞர்களை ஜாதிவெறி உயிர்ப்பலி வாங்கியிருக்கிறது. பட்டியல் இனப் பிரிவைச் சேர்ந்த 19 வயது இளைஞரும் பிளஸ் டூ வகுப்பை முடித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 17 வயது பெண்ணும் காதலித்துள்ளனர். பெண்ணின் பெற்றோர்கள் ஜாதி வெறியுடன் எதிர்ப்பு தெரிவித்து பட்டியல் இனப்பிரிவு இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பொறையார் காவல் நிலையத்தில் திங்கட்கிழமை இளைஞர் புகார் செய்திருக்கிறார்.செவ்வாய்க்கிழமை விடியற்காலை தங்களது மகளைக் காணவில்லை என்றும் பட்டியல் சமூகத்தின் இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பெண்ணின் பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர். புகார் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் காதலர் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பெண்ணின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாதி மாறி திருமணம் செய்ய விரும்பினால் அவர்கள் உயிருடனே வாழ முடியாது என்ற கொடூரமான சமூக அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புரையோடி நிற்கும்...

பெண்களுக்கு இலவச விடுதி நடத்திய நாத்திகர்

பெண்களுக்கு இலவச விடுதி நடத்திய நாத்திகர்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். பெரியார் பெருந்தொண்டர் செ.தெ.நாயகம். குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை. “கண்ணை மூடிக்கொண்டு, பெரியாரைப் பின்பற்றியவர் இவர். பெரியாருக்கும் அவருக்கும் எந்த விஷயத்திலும் ஒன்று போலவே கருத்து உதிக்கும். பெரியார் கருத்தைச் சொல்லிவிட்டால், பெரியாருக்கு மேலாக அதை விளக்கிச் சொல்லுவார். அதற்கு ஆதாரங்கள் விநாடியில் சேகரித்து விடுவார். எந்தப் பதவியும் உத்தியோகமும் செய்யும் தொண்டும் தமிழ் மக்களுக்குப் பயன்படுத்தப்பட முடியாவிட்டால், அது எவ்வளவு பெரிதாயினும் திரும்பிப்பாரார். மிகவும் கண்ணியமானவர். வேஷத்துக்கு என்று நடக்கும் காரியம் அவரிடம் இருந்ததில்லை” என்று 16.12.1944-இல் குடி அரசு இதழில், பாராட்டப்பட்ட பெரியார் பெருந்தொண்டர் செ.தெ.நாயகம். தான் சென்ற ஊரையெல்லாம், வாழ்ந்த பகுதியையெல்லாம் பெரியார் மண்ணாக ஆக்கிட பாடுபட்ட பகுத்தறிவாளர் அவர். அன்றைய நெல்லை...

ஆண்மையும் பெண்மையும் வேண்டாம்!

ஆண்மையும் பெண்மையும் வேண்டாம்!

பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கு பெரியார் முன்வைத்த கருத்துகள்: காது குத்துவது பெண்களை அடிமைப்படுத்துவதற்குத்தான். உடலில் மூக்கு, காதுகளில் ஓட்டை போட்டு நகைகளை மாட்டி விட்டால் ஆண்களின் வன்முறையை எதிர்த்து திருப்பி அடித்து விடக்கூடாது என்பதற்குத் தான் இந்தச் சடங்குகளை உருவாக்கினார்கள். பெண்கள் முடியை கத்தரித்துக் கொண்டு கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்; பெண்களின் கூந்தல் அழகை புலவர்கள் வர்ணிப்பார்கள். செயற்கை மணமா? இயற்கை மணமா? என்று ஆராய்ச்சி செய்கிறார்கள் கணவன் மனைவியைத் தாக்குவதற்கு கூந்தலைப் பிடித்து தாக்குகிறான். நீண்ட முடி பெண் சுதந்திரத்துக்கு தடை! நகை அணியக் கூடாது; பெண்கள் அலங்கார பொம்மைகளாக மாற்றப்படுகிறார்கள். நகை அணிவதால் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. உலக நாடுகளில் பெண்கள் நகை அணிவதில்லை. அளவுக்கு மீறி நகை அணிந்தால் தண்டனை அல்லது வரி விதிக்க வேண்டும்; நகை அணிவதில் அழகு இல்லை! நன்கு படித்துவிட்டு திருமணத்துக்குப் பிறகு பெண்கள் வீட்டு வேலை செய்வதை அனுமதிக்கக் கூடாது....

சூழ்ச்சிகர பாஜக அரசியல்

சூழ்ச்சிகர பாஜக அரசியல்

ஜெயலலிதா மறைந்த உடன் அக்கட்சியை இரண்டாக உடைத்து மாறி மாறி உதவிகளை செய்து அதிமுகவின் ரிமோட் கண்ட்ரோலை தன்வசம் வைத்துக் கொண்டது ஒன்றிய பாஜக ஆட்சி. திமுக எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையோடு எம்.ஜி.ஆர் உருவாக்கிய அஇஅதிமுக திராவிட இயக்கத்தின் கொள்கை அடையாளங்களை படிப்படியாக கைவிட்டு அதிகார அமைப்பாக மட்டும் மாறியது. இந்துத்துவா உணர்வில் ஊறிப்போன ஜெயலலிதா சமூக நீதி மற்றும் மாநில உரிமை என்ற இரண்டு அடையாளங்களை உறுதியாக பின்பற்றி வந்தார். எடப்பாடி பழனிச்சாமி அந்த அடையாளங்களையும் தனது பதவி அதிகாரத்துக்காக கைவிடத் துணிந்தார். ஒன்றிய பாஜக ஆட்சி கொண்டு வந்த அனைத்து மாநில உரிமைப் பறிப்பு சட்டங்களுக்கும், இந்துத்துவ சட்டங்களுக்கும் அஇஅதிமுக பச்சைக்கொடி காட்டியது. முதல்வர் பதவிக்காகவும், கட்சித் தலைமை பதவிக்காகவும் எஞ்சி இருந்த கொள்கை அடையாளங்களையும் எடப்பாடி காவு கொடுத்ததன் விளைவுகளைத்தான் இன்று பார்க்கிறோம். கொள்கை அடையாளங்களை இழந்து பதவி அதிகாரங்களுக்காகவே கட்சி மாறிப் போனதால் இன்று...

பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக  பட்டியல் இனத்தவரை நியமிக்க வேண்டும்!

பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பட்டியல் இனத்தவரை நியமிக்க வேண்டும்!

இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : சேலம், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நிருவாகக்குழுவில் மாற்றங்கள் செய்ய அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறோம். இவ்வேளையில் பெரியார் பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படி பணிமூப்பில் முதல்நிலையிலுள்ள பேராசிரியர் ஒருவரைத் துணைவேந்தர் பொறுப்பில் நியமனம் செய்யலாம் என்ற விதிப்படி பணிமூப்பில் முதலாவதாகவுள்ள பட்டியலினப் பேராசிரியரைப் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்க வேண்டுகிறோம். பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே பட்டியலினப் பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக இருந்துள்ளார். எனவே, இடைக்கால ஏற்பாடாக அரசு தற்போது துணைவேந்தர் பணிகளைக் கவனிக்க பட்டியலினப் பேராசிரியரைப் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்க வேண்டும். அதுவே சமூகநீதியாகும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரே ஜாதியின் ஆதிக்கம் முடிந்து, துணைவேந்தர் நிருவாகக்குழு அமைக்கப்பட்டுக் கடந்த ஓராண்டாக நிருவாகக்குழு பல்வேறு பாராட்டத்தக்க சமூகநீதி சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்தது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை துறைத்தலைவர் மாற்றம்,...

உயிரற்ற பொருளிலிருந்து உயிரை உருவாக்கி விட்டனர் விஞ்ஞானிகள் விடைபெறுகிறது; கடவுள் சக்தி!

உயிரற்ற பொருளிலிருந்து உயிரை உருவாக்கி விட்டனர் விஞ்ஞானிகள் விடைபெறுகிறது; கடவுள் சக்தி!

உலகையும் உயிரையும் கடவுள் படைத்தார் என்ற நம்பிக்கையை அறிவியல் தகர்த்து வருகிறது. செயற்கையாக உயிரை உண்டாக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் முன்னேறி வருகிறார்கள். 2010-ம் ஆண்டு மே 20-ம் தேதி அமெரிக்காவின் கிரேக்வென்டன் என்ற விஞ்ஞானி ஒரு நுண்ணுயிரிக்குள் (பாக்டீரியா) அதன் டி.என்.ஏ-க்களை அகற்றி கூட்டுக்குள் செயற்கையாக உருவாக்கிய மரபணுவை திணித்து செயற்கை உயிரை உண்டாக்கினார். இதற்கு `சிந்தடிக்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இப்போது உயிரற்ற ஜட பொருளிலிருந்து உயிரை உண்டாக்கி விட்டார்கள் விஞ்ஞானிகள். கடவுள் முற்றாக விடுவிக்கப்பட்டது. இது பற்றி `டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு கடந்த ஜூன் 30-ம் தேதி எழுதியுள்ள தலையங்கம்: இப்போது விஞ்ஞானிகள் ஒரு செல்லை பூஜ்ஜியத்திலிருந்து உருவாக்க முடிகிறது. இது பல உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் பயனுள்ள தொழில்நுட்பமாகும். இயற்கை முதல் உயிரணுவை (cell) உருவாக்க 500 மில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் எடுத்தது. அதன் பிறகு இந்த செல்லுக்கு அறிவாற்றல் (intelligence) உருவாக...

கரூரில் ஈழப் படைப்பாளிகளின் நூல்கள் அறிமுகம்

கரூரில் ஈழப் படைப்பாளிகளின் நூல்கள் அறிமுகம்

தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக தியாகி “பொன் சிவகுமரனின்” 52 -ஆவது ஆண்டு நினைவுகளோடு மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசும் 11 நூல்கள் அறிமுக விழா 27.06.2026 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் கரூர், அய்யப்பா சேவா சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சண்முகம் (சாமானிய மக்கள் கட்சி ) அவர்கள் தலைமை வகித்தார். முகிலன் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் – காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்) அவர்கள் முன்னிலை வகித்தார். ஆ. பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிவேதா சத்யாராஜ், முனைவர் சாலினி (பேராசிரியர், ஆய்வாளர்), முனைவர் ப. கிருட்டிணவேணி (முதுகலை அறிவியல் யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகியோர் நூல்களைப் பற்றி கருத்துரையாற்றினர். புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் நூல்களைப் பற்றி மதிப்புரையாற்றினார். “கஸ்தூரியின் ஆக்கங்கள், வானதியின் கவிதைகள், மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு, தமிழீழ...

கேத்ரின்-இலக்கியன் மதம் கடந்த மணவிழா!

கேத்ரின்-இலக்கியன் மதம் கடந்த மணவிழா!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் சிவானந்தம் – சங்கீதா இணையரின் மகன் இலக்கியன் அவர்களுக்கும், கேரளா மாநிலம், திருச்சூர் ஜோ. மனோஜ்- ம. மினி இணையரின் மகள் கேத்ரின் ஆகியோருக்கும் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11.00 மணி அளவில் , தாராபுரம் லயன்ஸ் மஹாலில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணை நல ஒப்பந்தம் செய்து வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் வாழ்த்துரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தவைவர் வீ. சிவகாமி ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். கழகத் தோழர் மடத்துக்குளம் சிவானந்தம் தீவிர கழகப் களப்பணியாளர். மறைந்த கழகச் செயல்வீரர் மடத்துக்குளம் மோகன் அவருடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பெரும் பங்காற்றியதையும்...

கள்ளக்குறிச்சியில்  நீட் தேர்வுக்கு     எதிரான ஒரு நாள் பரப்புரை!

கள்ளக்குறிச்சியில் நீட் தேர்வுக்கு எதிரான ஒரு நாள் பரப்புரை!

கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில், 20-06-2026 சனிக்கிழமை அன்று கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் மருத்துவக் கனவைச் சிதைக்கும் `நீட்’ தேர்வை இரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு நாள் பரப்புரைப் பயணம் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பாபா தலைமையில் நடைபெற்றது. காலை 10 மணி மூங்கில்துறைப்பட்டு, காலை 12 மணி மேல் சிறுவள்ளூர் கூட்டு சாலை, மாலை 3 மணி வாணாபுரம் கூட்டுச்சாலை, மாலை 6 மணிக்கு கடுவனூர் பேருந்து நிலைத்தியலும் நடைபெற்றது. இதில் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார், மாவட்டச் செயலாளர் க.ராமர், மாவட்டத் தலைவர் க.மதியழகன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.அ.இளையரசன் திமுக கல்லக்குறிச்சி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விசய் ஆனந்து மற்றும் சி.பி.அய்யை சார்ந்த சையத் கரீம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மு.நாகராஜ், ரிஷிவந்திய ஓன்றிய அமைப்பாளர் இரா. கார்மேகம், வீ.முருகன், ரிஷிவந்திய ஒன்றியத் தலைவர் மா.குமார், கி.ஆனந்தன் ஏ.ஜெயப்பிரகாஷ் சு.வல்லரசு,...

நவீன பொருளாரதாத்தில் ஜாதியின் புதிய வடிவங்கள்

நவீன பொருளாரதாத்தில் ஜாதியின் புதிய வடிவங்கள்

இந்தியாவில் பார்ப்பனர்களும் உயர் ஜாதியினரும் பாகுபாடுகளைக் கொண்ட சமூகத்தில் மிகவும் சொகுசான வாழ்க்கைக்கு பழகிவிட்டனர். அவர்கள் தாராளமயம் என்ற ஏற்றத்தாழ்வு கொள்கையை நியாயப்படுத்த ஜாதிகள் தானாகவே மறைந்துவிடும் என்று பேசி வருகிறார்கள் என்கிறார் இந்தியாவின் தலை சிறந்த சமூகவியல் ஆய்வாளர், பேராசிரியர் சுரிந்தர் ஜோத்கா. இவர் புதுடெல்லியில் ஜவஹர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். உலகமயமாக்கல் கொள்கை வந்த பிறகு ஜாதி மீண்டும் புதிய வடிவம் எடுத்துள்ளது என்பதை அவர் ஒரு பேட்டியில் விளக்குகிறார். அவரது பேட்டியில் இருந்து சில பகுதிகள். கேள்வி: இந்தியாவின் நவதாராளவாத பொருளாதார சூழலில் ஜாதி எவ்வாறு வெளிப்பட்டுள்ளது? இது முக்கிய விவாதம். எல்லாமே மாறுகின்றன; ஜாதியும் அதற்கு விதிவிலக்கல்ல. ஜாதி என்பது நிலையான ஒன்றல்ல. அது மனித உறவுகளை ஒழுங்குபடுத்தும் ஒரு சமூக நடைமுறை. ஜாதியை ஒரு உறவாகப் புரிந்துகொண்டால், அது படிநிலை, சமத்துவமின்மை, ஒதுக்கல், மறுப்பு மற்றும் பாகுபாடு ஆகியவற்றோடு தொடர்புடையது. மனித வாழ்வின்...

வி.பி.சிங் பிறந்தநாள்

வி.பி.சிங் பிறந்தநாள்

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிறகிந்தநாளையொட்டி, ஜூன் 25, 2026 காலை 10 மணிக்கு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், சென்னை பிரசிடென்ஸி கல்லூரி வளாகத்தில் உள்ள வி.பி. சிங் சிலைக்கு மாலை அணிவித்து, தோழர்கள் கொள்கை முழக்கமிட்டனர். நிகழ்வில், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன், மாவட்டத் தலைவர்கள் சேத்துப்பட்டு இராசேந்திரன், மா. வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பகுதி அமைப்பாளர் எம்.ஜி.ஆர் நகர் துரைராசு, முழக்கம் உமாபதி, ராஜன், விஜயன், தோழர்கள் ஏசுகுமார், மயிலை மனோகர், சு.பிரகாஷ், பாரி சிவா, சிகாமணி, அசோக், வீரா, லட்சுமணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 02072026

‘தாய்மாமன்’ திட்டம் தேவையற்றது!

‘தாய்மாமன்’ திட்டம் தேவையற்றது!

“தாய் மாமன்” தங்க மோதிரம் திட்டத்துக்காக ஆண்டு ஒன்றுக்கு தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.755.83 கோடி. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்படும் இவ்வளவு பெரிய தொகையை அரசு மருத்துவக் கட்டமைப்புகளுக்காக செலவிடப்பட வேண்டும் என்பதே நமது உறுதியான கருத்து! ஏற்கனவே “டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி” திட்டத்தின் கீழ் நலிவுற்ற பெண்களுக்கு 14,000 ரூபாய் ரொக்கமாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ரூ.4,000 மதிப்பில் சத்துணவுகளும் வழங்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 667 குழந்தைகள் பிறப்பதாக கணக்கிடப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 17,000 ரூபாய். கடும் நிதிச்சுமையை உருவாக்கும் இத்திட்டம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அவர்களுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கப்படும் என்று இத்திட்டம் கூறுகிறது. தமிழ்நாடு பின்பற்றி வரும் குடும்பக் கட்டுப்பாடு...

யாத்திரையில் `மோட்சம்’ போன 198 பக்தர்கள்!

யாத்திரையில் `மோட்சம்’ போன 198 பக்தர்கள்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடப்பு பருவத்தில் சார்தாம் யாத்திரை மேற்கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை 37 இலட்சத்தைக் கடந்துள்ளதாம். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் சார்தாம் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. கேதார்நாத் கோயில் ஏப்ரல் 22-ஆம் தேதியும், பத்ரிநாத் கோயில் ஏப்ரல் 23-ஆம் தேதியும் திறக்கப்பட்டன. கேதார்நாத் கோயிலுக்கு 12.61 இலட்சம் பக்தர்களும், பத்ரிநாத் கோயிலுக்கு 11.67 இலட்சம் பக்தர்களும் வருகை தந்துள்ளனர். கங்கோத்ரிக்கு 6.17 இலட்சம் பேரும், யமுனோத்ரிக்கு 5.83 இலட்சம் பேரும், ஹேம்குண்ட் சாஹிப்பிற்கு 1.05 இலட்சம் பக்தர்களும் சென்றுள்ளனர். கவுமுக் பனியாற்றுக்கு 5,795 பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பருவம் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 3.54 இலட்சம் வாகனங்கள் யாத்திரை பாதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநில அவசர கால செயல்பாட்டு மய்யத்தின் தரவுகளின்படி, கடந்த 17.6.2026 வரை மொத்தம் 37.35 இலட்சம் பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனராம். இதற்கிடையே, யாத்திரையின் போது உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை...

‘சிட்டிசன்’ அடையாளம் ஏன் உறுத்துகிறது?

‘சிட்டிசன்’ அடையாளம் ஏன் உறுத்துகிறது?

`இந்தியாவின் குடிமகன்/குடிமகள்’  என்பதற்கான சான்றாகவே  கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வந்தது. வெளியுறவுத் துறை அமைச்சகம் இப்போது அதை மறுக்கிறது; அது ஒரு பயண ஆவணம் தான் என்று கூறுகிறது. அதேபோல் ஆதார் அடையாளமும் குடிமகன் அல்லது குடிமகள் என்பதற்கான சான்று இல்லை என்றும் கூறுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் குடிமகன் அல்லது குடிமகள் என்றே சட்டம் கூறுகிறது. ஆங்கிலத்தில் `சிட்டிசன்’என்று அழைக்கப்படும் இந்தச் சொல்லுக்கு ஜாதி, மத அடையாளங்கள் பாலின அடையாளங்கள் எதுவும் இல்லை. இதுதான் சங் பரிவாரங்களை உறுத்துகிறது. இந்தியாவில் வாழும் எவரும் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு தான் வாழ வேண்டுமே தவிர, அதை மறுக்கும் `சிட்டிசன்’ என்ற அடையாளத்தை ஏற்க முடியாது என்பதுதான் அவர்களின் கொள்கை. இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தும் குடிமக்கள் என்ற அடையாளத்தை அகற்றிவிட்டு இந்துராஷ்டிரத்துக்கான சனாதன அடையாளங்களை நோக்கி நாட்டை நகர்த்துகிறது சங்பரிவார். அரசியல்...

உயர்ஜாதி ஏழை ஒதுக்கீட்டில் மோசடிகள்

உயர்ஜாதி ஏழை ஒதுக்கீட்டில் மோசடிகள்

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், பொருளாதார நலிந்த பார்ப்ப னர்களுக்கான (EWS) இட ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஒன்றிய அரசின் விதிமுறைப்படி, ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கே 10% இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகைகள் வழங்கப்பட சட்டம் இருக்கிறது. ஆனால், அண்மையில் தேர்ச்சி பெற்ற உயர்ஜாதி ஏழைப் பிரிவைச் சேர்ந்த 104 மாணவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்தபோது பல அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளி வந்துள்ளன. தேர்ச்சி பெற்ற 104 பேரில் 67 மாணவர்கள், ஆண்டுக்கு ரூ. 2.65 லட்சம் வரை கட்டணம் வசூ லிக்கும் நாட்டின் மிக புகழ்பெற்ற சிவில் சர்வீசஸ் பயிற்சி மய்யங்களில் படித்துத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 46...

காவல் நிலையத்தில் கிடா வெட்டுவதா? கழகம் புகார்; அரசு உடனடி நடவடிக்கை!

காவல் நிலையத்தில் கிடா வெட்டுவதா? கழகம் புகார்; அரசு உடனடி நடவடிக்கை!

சேலம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக கிடாவெட்டி மாந்திரீக பூஜை போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் 26.06.2026 புகார் மனு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தி விவரம்: கடந்த 20.06.2026 ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் “குற்றங்கள் குறைய வேண்டும்” என்பதற்காக காவல்துறையினரே கிடாவை பலியிட்டு, அதன் ரத்தத்தை காவல் நிலைய கட்டிடத்தின் நான்கு மூலைகளிலும் பூசி, மாந்திரீக பூஜை நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ஆணைப்படி, அரசு அலுவலகங்கள் , காவல் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்களிலும் மதச்சார்புடைய வழிபாடுகள், பூஜைகள், கடவுள் படங்கள், மாந்திரீக சடங்குகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையே அரசு ஆணையை மீறி, மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில்...

கழகப் பரப்புரைப் பயணத்துக்கான தலைப்பு

கழகப் பரப்புரைப் பயணத்துக்கான தலைப்பு

* ஜாதியில் திருமணம் * மதத்தில் பார்ப்பனியம் * வாழ்வில் மூடநம்பிக்கை தடை, அதை உடை…… * மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரை பயணம் பெரியார் முழக்கம் இதழ் 02072026

வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

1.காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், 2.ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தனிச் சட்டம் இயற்றிக் கோரியும் வேலூர் மாவட்டக் கழகம் சார்பாக 20.6.2026 மாலை குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு மாவட்டத் தலைவர் காத்தவராயன், சிபிஎம் குடியாத்தம் நகரச் செயலாளர் குபேந்திரன், மாவட்டச் செயலாளர் சிவா நந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முரளி தன்மானன் நன்றி கூறினார். கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 25062026

நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு

நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு

நிமிர்வோம் வாசகர் வட்ட 32-வது சந்திப்பு, ஜூன் 14,2026 (ஞாயிறு) மாலை 6 மணிக்கு, கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தின் அமைப்பாளர் ர.பிரகாசு நிகழ்வை ஒருங்கிணைத்தார். “தேர்தல் முடிவுகளை எப்படி எடுத்துக்கொள்வது?” எனும் தலைப்பில், தோல்விக்கான காரணங்கள் குறித்தும், மக்களின் முதன்மையான ஊடகமாக மாறியுள்ள சமூக வலைத்தளங்களில் பகுத்தறிவுப் பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுக்கவேண்டிய அவசியம் குறித்தும், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் உரையாற்றினார். “பேருந்து தீண்டாமையை ஒழித்த இயக்கம்!” எனும் தலைப்பில், தோழர்கள் கெம்பனூரில் கள ஆய்வு செய்த அனுபவங்களையும், கோவை கெம்பனூர் வரை வரவிடாமல் தடுக்கப்பட்டிருந்த 21-ஆம் எண் பேருந்தை மீண்டும் வரவைக்க நடந்த போராட்டங்களின் வெற்றி குறித்தும், கோவையில் தலைமைக் குழு உறுப்பினர் நிர்மல்குமார் இணையவழியில் உரையாற்றினார். நிறைவாக தலைமையுரையாற்றிய தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், பாஜகவின் சமஸ்கிருத திணிப்பைப் பற்றியும், கடந்த காலங்களில் பெரியார் இயக்கம் முன்னெடுத்த வீரஞ்செறிந்த போராட்டங்களைப் பற்றியும்...

பொன்னம்பலனார் நடத்திய கொள்கைப்  போராட்டங்கள்

பொன்னம்பலனார் நடத்திய கொள்கைப் போராட்டங்கள்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் பொன்னம்பலனார் குறித்து எழுதிய கடந்த இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி… வேலூர் கந்தசாமி கண்டர் பள்ளியில், பொன்னம்பலனார் பணியாற்றிய காலத்திலேயே தனது சொந்த ஊரான செந்துறையில் இருந்து ஆண்டுக்கு, ஏழெட்டு மாணவர்களை அழைத்துச்சென்று, பரமத்தி வேலூரில் தன் வீட்டிலேயே தங்கவைத்து, அவர்களைப் படிக்கவைத்தார். பின்னர், அங்கிருந்து பணியில் நீக்கப்பட்டபோது, சேலத்தில் பணி வழங்கிட அவருக்குப் பரிந்துரைத்தவர் தந்தை பெரியார். கந்தசாமி கண்டர் பள்ளியில் இருந்து பொன்னம்பலனார் நீக்கப்பட்டபோது, அவரோடு ஏழு ஆசிரியர்கள் வேலையை விட்டுவிட்டனர். ஏறத்தாழ 6 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின்னர், முசிறிக்குப் பணி மாறுதல் அடைந்தார். அப்போது, திருச்சியில் பெரியாரின் கூட்டம் எங்கு நடைபெற்றாலும், பொன்னம்பலனார் சென்று விடுவார். இவர் பணியாற்றிய...

நிலாச்சோறு உணவக உரிமையாளர் தோழர் ரகுநாத் அவர்களின் குடும்பப் பின்னணி:

நிலாச்சோறு உணவக உரிமையாளர் தோழர் ரகுநாத் அவர்களின் குடும்பப் பின்னணி:

1950 அக்டோபரில் பெரியார் அறிவித்த வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டத்தில் 8.11.1950 அன்று தோழர் ரகுநாத் அவர்களின் பாட்டியும் சேலம் சிவதாபுரம் திராவிடர் கழகத்தின் பொருளாளருமான அகிலாண்டம் அவர்களும், அவரது மாமனார் 80 வயது உள்ள மாரி அவர்களும், அவரது குழந்தைகள் ஆன 13வயது சரஸ்வதி, 10 வயது சொர்ணாம்பாள், 8வயது ஜெகநாதன், 3வயது திராவிட கனி, 1,1/2 ஒன்றரை வயது பாண்டியராசா ஆகியவர்களுடன் கைதாகிறார். அதில் குழந்தைகளில் 1,1/2 வயது பாண்டிராசாவைத் தவிர மற்ற நால்வரையும் அன்னையை விட்டுப் பிரித்து Children’s Society-யில் தனியாக காவலில் வைக்கப்படுகிறார்கள். ஒரு வார தண்டனைக்குப் பின் விடுதலையான அகிலாண்டம் அம்மாள், அவரது கணவரும் சேலம் சிவதாபுரம் காட்டூர் திராவிடர் கழக தலைவருமான எஸ் எம் வெள்ளியங்கிரி அவர்களும் 21.11.1950 அன்று மீண்டும் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி உள்ளார்கள். ஒரு மாதம் தண்டனை வழங்கப்பட்டு 22.12.1950 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 16.5.1983 அன்று...

பயிலரங்கத்தின் வெற்றி; பயிற்சி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

பயிலரங்கத்தின் வெற்றி; பயிற்சி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

சேலம் பயிலரங்கத்தில் பங்கேற்றவர்கள் நிகழ்வின் இறுதியில் பயிலரங்கம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நாமக்கல் ரேஷிகா வர்சினி: பெரியார் குறித்த எனக்குத் தெரிந்த விவரங்களைத் தாண்டி பெரியார் பற்றிய வரலாறுகளை விரிவாக கற்றுக் கொள்ள முடிந்தது. இது என்னுடைய படிப்புக்கு உதவியாக இருக்கும். நான் பார்ப்பனரல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனைத்து சடங்குகளையும் பின்பற்றி வந்தது என்னுடைய குடும்பம். இந்த பயிலரங்கத்துக்கு வந்ததற்குப் பிறகு விடுதலை அடைந்த உணர்வை எட்டி இருக்கிறேன். இனி நல்ல வாழ்க்கை முறைக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் பெரியார் தான் என்று கூறினார். இசக்கி ராஜன் (திருநெல்வேலி): இங்கே வருவதற்கு முன் பெரியார் குறித்த நான் நிறைய படித்திருக்கிறேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இங்கே தோழர்கள் பேசியதற்குப் பிறகு நான் இன்னும் படிக்காதது நிறைய இருக்கு என்று உணர்ந்து கொண்டேன். ஜாதி குறித்தும் சடங்குகள் எப்படி பெண்கள் வழியாக கடத்தப்படுகிறது என்பது பற்றியும் பெரியாரின்...

அய்.அய்.டி-களில் நடக்கும் ‘மறுபிறவி’ ஆராய்ச்சிகள்

அய்.அய்.டி-களில் நடக்கும் ‘மறுபிறவி’ ஆராய்ச்சிகள்

இந்திய அறிவுசார் முறை என்ற பெயரில் அய்.அய்.டிகளில் போலி அறிவியல் பாடமாக கற்பிக்கப்பட்டு இந்துத்துவா பழமை வாதத்துக்கு உயிர் கொடுப்பதை விளக்குகிறது இக்கட்டுரை. கடந்த சில ஆண்டுகளாக, “இந்திய அறிவு முறை” (Indian Knowledge System -IKS) என்ற திட்டம் குறித்த மூடநம்பிக்கையை பாரம்பரிய இந்திய அறிவு முறை என்ற பெயரில் மறுபிறவி கருத்துக்களை நவீன கல்விப் பாடத்திட்டங்களுடன் ஒருங்கிணைக்க முயன்று வருகிறது. கடந்த கால வரலாறுகளைப் பேசுவது தவறு அல்ல! ஆனால் மதம் சார்ந்த பழமை கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பாணினியின் மொழி ஆய்வு, நியாய (Nyaya)வாதம், , இரும்பின் பயன்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் தற்போது என்ன நடக்கிறது? மாண்டி அய்.அய்.டி இயக்குநர் லட்சுமிதர் பெஹேராவின் தலைமையின் கீழ் அமைத்த குழு புராணங்களை வரலாறாகக் கருதுதல், சடங்குகளை தொழில்நுட்பமாக திரித்துக் கூறல் போன்ற பாடத்திட்டங்களை பரிந்துரைக்கிறது. அறிவியல் அடிப்படையில் மறுக்கப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசுகிறது. 2020 –...

“சவுண்ட் – ஆக்க்ஷன் “டயலாக்”

“சவுண்ட் – ஆக்க்ஷன் “டயலாக்”

ரசிகர்களை வெறியூட்டுவதற்கும் உசுப்பேற்றுவதற்கும் தயாரிக்கப்பட்ட பேச்சுகளை பேசி பழக்கப்பட்டவர் விஜய். இப்போது முதல்வர் பதவிக்கு வந்த பிறகும் அதைத் தவிர வேறு எந்த பேச்சையும் அவரால் பேச முடியவில்லை. எனவே தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் அவையை விட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்பது அவரது முதல் பிரச்சினையாக இருந்தது. அதற்காகவே வசைச் சொற்களை வீசினார் ; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு தான் அவருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்தது” அப்பாடா; இனி ஸ்கிரிப்ட்டை ரசிகர்களிடம் பேசுவது போல் பேசலாம் என்ற நிம்மதி பெருமூச்சு அவருக்கு வந்திருக்கிறது. எதிரே அமர்ந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ரசிகர்கள் அல்ல! அவர்கள் முதல்வர் விஜயின் பேச்சுக்கு விசில் அடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய சட்டமன்றத்திற்கு வரவில்லை என்பதை அவருக்கு பேச்சு தயாரித்து கொடுத்தவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். விஜய் வருகைக்கு முன் தங்கள் அலுவலகத்துக்கு சோபா வந்தது என்பதை சில தலைவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்;...