பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை சமர்பிப்பு!
கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அரசுப் பள்ளி மாணவரை, சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டினார்கள். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவர் விரிவாக ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். பள்ளிச்சூழலில் ஜாதிய மோதல்கள், விவாதங்களைத் தவிர்க்கும் பொருட்டு பல நல்ல ஆலோசனைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு : • ‘கள்ளர் மறுசீரமைப்புப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்றவற்றை நீக்கி, அரசுப் பள்ளி என அழைக்க அரசாணை வெளியிட வேண்டும். • பள்ளிப் பெயரில் ஜாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே, புதிய பள்ளித் துவங்க அனுமதி அளிக்க...