காவலாண்டியூர் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு திருமணம்!
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காடையாம்பட்டி மாதையன்-செல்வி ஆகியோரது மகள் அபிநயா, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், ஆயிக்கவுண்டன் பாளையம் வேல்முருகன்-பானுமதி ஆகியோரது மகன் தமிழ்வாணன் ஆகியோருக்கு 20.02.2026 வெள்ளிக்கிழமை காவலாண்டியூர் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈஸ்வரன் தலைமையில் தோழர்கள் கணேசன்,அவிநாசி ஆகியோரது முன்னிலையில் ஜாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. குமரேசன் மற்றும் மணமக்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 05032026
