Category: திவிக

சாதனையாளர்களுக்கு விருது கோபி ஒன்றியக் கழகத்தின் எழுச்சி விழா

சாதனையாளர்களுக்கு விருது கோபி ஒன்றியக் கழகத்தின் எழுச்சி விழா

கோபி ஒன்றியம் அளுக்குளி கிளைக் கழகத்தின் சார்பில் சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் ஜாதி மறுப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, மாவட்டச் செயலாளர் செல்வகுமார், திமு கழகப் பொறுப்பாளர் அளுக்குளி தங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஒ.பி.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராம. இளங்கோவன் வெளியீட்டு செயலாளர் திவிக, வழக்குரைஞர் செகதீஸ்வரன், வேலுச்சாமி தலைமைக் கழகப் பேச்சாளர் திவிக, சுப்பிரமணியம் கொளப்பலூர் கிளை கழகப் பொறுப்பாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜாதி மறுப்பு மணம் புரிந்தவர்களுக்கும் மற்றும் கல்வி, அரசுப் பணி, விளையாட்டு துறைகளில் பல்வேறு சாதனைகள் புரிந்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கழகத்தலைவர் கொளத்தூர் மணி, கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஏ முருகன் ஆகியோர் நினைவுப்பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்வில் கோபி மாவட்டக் கழகத் தோழர்கள் மற்றும் அளுக்குளிப்...

பாஜகவின் வெற்றியை உறுதிசெய்வதே தொகுதி மறுவரையறை எனும் சூழ்ச்சித் திட்டம்

பாஜகவின் வெற்றியை உறுதிசெய்வதே தொகுதி மறுவரையறை எனும் சூழ்ச்சித் திட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 33வது கூட்டம், 29/8/26 (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு தொகுத்து வழங்கினார். “ஜம்மு காஷ்மீர், அசாமில் தொகுதி மறுவரையறை ஏற்படுத்திய பாதிப்புகள்” குறித்து கார்த்தி ராஜேந்திரன், “50 விழுக்காடு தொகுதிகள் உயர்வு தீர்வாகுமா?” எனும் தலைப்பில் சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், தொகுதி மறுசீரமைப்பு ஆபத்துகளையும், பாஜவின் சதிதிட்டம் குறித்தும் ர.பிரகாசு, எழுத்தாளர் தமிழ் காமராசன் விளக்கி உரையாற்றினர். நிறைவாக பேசிய இடதுசாரி செயல்பாட்டாளர் மருதையன் அரசியல் சட்ட அமைப்புகளை சீர்குலைக்கும் அவசர காலத்தில் வாழ்கிறோம் என்று கூறினார். தொகுதி மறுவரையரைத் திட்டத்தின் ஆபத்துகளை விரிவாக விளக்கிப் பேசினார். “ஜம்மு காஷ்மீர், அசாமில் தொகுதி மறுவரையறை ஏற்படுத்திய பாதிப்புகள் என்ற தலைப்பில் கார்த்திக் ராஜேந்திரன் உரை: தொகுதி மறு வரையறை சட்டத் திருத்தத்தை யார் கையில்...

அனிதா நினைவுநாளில் உறுதியேற்பு! ‘கல்வி உரிமைகளை மீட்டெடுப்போம்’

அனிதா நினைவுநாளில் உறுதியேற்பு! ‘கல்வி உரிமைகளை மீட்டெடுப்போம்’

நீட் எதிர்ப்புக்கு உயிர்ப்பலி தந்த அனிதாவின் 9-ஆம்ஆண்டு நினைவு நாள் செப்டம்பர்-1ம் தேதி மாலை 5.30 மணி அளவில் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நீட் ஒழிப்புக்கான உறுதி ஏற்பு நாளாக நடைபெற்றது. நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த நினைவு நாள் திட்டமிடப்பட்டது. கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததால் திராவிடர் கழகத்தின் தலைமையிடமான பெரியார் திடலுக்கு மாற்றப்பட்டது. பெரியார் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அனிதாவின் படத்திற்கு தலைவர்கள் பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். ஆசிரியர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ் வீரவணக்க உரையாற்றினர். நீட் எதிர்ப்பையும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும் தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது. தோழர் தியாகு உறுதிமொழியைப் படித்தார். நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர்....

ச.குப்பம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு!

ச.குப்பம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு!

முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் பெரியார் வெங்கட் தாயார் மறைந்த ச. குப்பம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில் பெரியார் வெங்கட் இல்லத்தில் ஆக-4, செவ்வாய்கிழமை அன்று காலை 10 மணியளவில் மு.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு கி.ஆனந்தன், இரா. கார்மேகம், வீ. முருகன், சி. சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் அதிகாரத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஆ.இராமலிங்கம், கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ. ஆ. இளையரசன், மாவட்டத் தலைவர் க.மதியழகன், ந. வெற்றிவேல், தபெதிக செ. பிரபு, திராவிடர் கழக சண்முகம், தலைமைக்குழு உறுப்பினர் ந. அய்யனார் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறைந்த ச. குப்பம்மாள் அவர்களின் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். மா. குமார் நன்றியுரையாற்றினார். வேலூர் மாவட்டச் செயலாளர் இரா. சிவா, குப்பம்மாள் அவர்களின் கணவர் மு.சத்தியமூர்த்தி மகன்களான ச. ஜெயபால்,...

கருத்தரங்கு, குடும்ப விழா நிகழ்வுகளுக்கு தயாராகிறது சென்னை மாவட்டம்

கருத்தரங்கு, குடும்ப விழா நிகழ்வுகளுக்கு தயாராகிறது சென்னை மாவட்டம்

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், ஆக-23 அன்று மாலை 6 மணிக்கு கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சமகால அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கழகச் செயல்பாடுகள் குறித்தும் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார். ‘‘கழகத் தோழர்களுக்கிடையே நட்புணர்வையும், ஒருங்கிணைப்பையும் வலிமையாக்கும் நோக்கத்துடன் இந்தப் பரப்புரைப் பயணத்தை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறோம். அந்த நோக்கத்தில் இந்தப் பயணங்கள் கழகத்துக்கு புத்துணர்வை உருவாக்கி வருகிறது’’என்றார். கட்சி அரசியல் வேண்டாம் என்று பெரியார் இயக்கம் நோக்கி, வரும் தோழர்கள் அரசியல் கட்சிகளின் பண்புகளாகிய சுய விளம்பரம், தன்முனைப்புகளை தவிர்த்துக் கொள்கை உணர்வுகளுக்கு முன்னுரிமை தரும் உளவியலை வளர்த்துக் கொள்ள வேண்டும். கழகத்தின் பதவிகள் செயல்பாட்டுக்கு உரியவைகளே தவிர, அதிகார மய்யம் அல்ல என்ற உணர்வோடு தோழமையை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். 1996 ஆம் ஆண்டிலிருந்து பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகமாக பயணித்து...

சேலம்-நாகர்கோவில் பரப்புரைப் பயணக் குழு கலந்துரையாடல் கூட்டம்!

சேலம்-நாகர்கோவில் பரப்புரைப் பயணக் குழு கலந்துரையாடல் கூட்டம்!

பயணத்தின் நிறை, குறை குறித்து விவாதிக்கப்பட்டு, வரவு செலவும் சரிபார்க்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்டப் பொருளாளர் சம்பத், மாவட்ட அமைப்பாளர்கள் அண்ணாதுரை, அன்பு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மேட்டூர் நகரத் தலைவர் மார்டின், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சீனிவாசன், காளியப்பன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், வனவாசி நகரத் தலைவர் செந்தில், கொளத்தூர் ராஜா, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நாகராஜ், கவியரசு, கொளத்தூர் கணேசன், செந்தமிழ் கலையமுதன், கோகுலகண்ணன், கே. ஆர். தோப்பூர் கண்ணன், ஆகியோர் பங்கேற்றனர். எஸ்.எம்.எஸ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் தவமணி 10 நாற்காலிகளை மேட்டூர் பெரியார் படிப்பகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.பயணகுழுத் தோழர்களுக்கு சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்....

மாநாட்டுத் திடலில் இயக்க முன்னோடிகள் வரலாறு!

மாநாட்டுத் திடலில் இயக்க முன்னோடிகள் வரலாறு!

தென் மாவட்டங்களைச் சார்ந்த `சுயமரியாதைச் சுடரொளி’களின் வரலாறுகள் படங்களுடன் மாநாட்டுத் திடலில் காட்சிப்படுத்தப்பட்டன. சுயமரியாதை இயக்க வீரர் சிவகங்கை இராமச்சந்திரனார் (16.09.1884-26.02.1933) ★ தென் மாவட்டங்களில் காரைக்குடிக்கு அருகே உள்ள சிவகங்கையைச் சார்ந்த இராமச்சந்திரனார் சுயஜாதியை எதிர்த்து தீண்டப்படாத மக்களுக்காக போராடிய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவர். முக்குலத்தோர் சமூகத்தில் முதல் முதலாக சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுடன் அரசியலுக்கு வந்த தலைவர். ★ 1929 செங்கல்பட்டு மாநாட்டில் பெரியார் நடத்திய முதல் சுயமரியாதை மாநாட்டில் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும்; ஜாதி,மத அடையாளங்களை தவிர்க்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்தவர் இவர் தான். அப்போது தனது பெயருக்குப் பின்னால் ஒட்டி இருந்த ‘சேர்வை’ பெயரை நீக்குவதாக அறிவித்தார். தனது நெற்றிப் பொட்டுக்களையும் அழித்துக் கொண்டார். தேவஸ்தான குழுத் தலைவராக இருந்தபோதுதான் தனது அதிகாரத்தின் கீழே இருந்த இந்து கோயில்களின் கிணறுகள், சாலைகள், குளங்களில் தீண்டாமையைத்...

மாநாட்டிலிருந்து சில துளிகள்…

மாநாட்டிலிருந்து சில துளிகள்…

★ மாநாட்டுத் திடலில் சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய பதாகைகள் இடம் பெற்றிருந்தன. ★ மாநாட்டில் பார்வையாளர்களிடம் துண்டு ஏந்தி திரட்டப்பட்ட ரூ.7420 நிதி, மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பாக ரூ.5,000, மதுரை மாவட்டக் கழகம் சார்பாக ரூ.15,000 கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு வழங்கப்பட்டது. ★ நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பாக தோழர்கள் ரூ.10,000 மாநாட்டுக்கு நன்கொடையாக வழங்கினர். ★ மாநாட்டு முன்னேற்பாட்டுக் குழுவினரான அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன் மற்றும் தோழர்கள் பெரியார் நம்பி, குமரேசன் ஆகியோர் கழக ஆதரவாளர்களை சந்தித்து நன்கொடை திரட்டும் பணிகளை மேற்கொண்டனர். ★ பரப்புரைப் பயணத்துக்கும், மாநாட்டுக்கும், மயிலாப்பூர் பகுதி கழகம் சார்பாக, ரூ. 5,000-அய் தோழர் மனோகர் நன்கொடையாக வழங்கினார். ★ இந்த பரப்புரைப் பயணத் திட்டத்துக்கும், துண்டறிக்கை தயாரிப்பு, சீருடை தயாரிப்புக்கும் நிதி திரட்டி மாநாட்டு பணிகளுக்கும் முதுகெலும்பாக நின்று...

உற்சாக வெள்ளத்தில் காரைக்குடி மாநாடு!

உற்சாக வெள்ளத்தில் காரைக்குடி மாநாடு!

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு” ஆகஸ்ட் -12,2026 அன்று காரைக்குடியில் சுயமரியாதை சுடரொளி கானாடுகாத்தான் வை.சு சண்முகம் அரங்கில், (பாண்டியன் தியேட்டர் அருகில்) மாலை 6 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் இருந்து பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வருகை தந்த கழகத் தோழர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியில் உற்சாகமாக தோழர்கள் கலந்து கொண்டு கொள்கை முழக்கங்களை எழுப்பியவாறு மாநாட்டுத் திடலை நோக்கி அணிவகுத்து வந்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. பேரணி செல்லும் பாதையில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், மாநாட்டு அமைப்பாளர் காரைக்குடி இளங்கோ ஆகியோர் மாலை அணிவித்தனர். தோழர்கள் பெரியார் வாழ்க! புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வாழ்க! என்று உணர்ச்சி முழக்கமிட்டனர்....

நீட்டை நீக்கு; போராட்டம் தீவிரம்!

நீட்டை நீக்கு; போராட்டம் தீவிரம்!

Ban_NEET! மற்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று!, தமிழ்நாடு அரசு நீட்விலக்கு மசோதாவை நிறைவேற்று, தொடர் போராட்டத்துக்கு இடம் கொடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் சென்னை கோயம்பேடு திருவள்ளுவர் இல்லத்தில், கடந்த 10 நாட்களாக காலவரையறையற்ற பட்டினிப் போராட்டத்தில் 4 தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தோழர் ரவி 7 நாட்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு தற்போது மருத்துவமனையில் உள்ளார். பட்டினிப் போராட்டத்துக்கு, ஆக-2, அன்று தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, ஷர்மிளா, குடிஅரசு, குறளரசி, பரணி, தமிழ்க்குமரன் ஆகியோரும், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.வ. வேலு, தோழர்கள் கார்த்தி ராஜேந்திரன், ராஜன், இளைஞரணி சார்பில் அருண்(மாவட்ட அமைப்பாளர்), யாழினி, குமார், இளவரசன், பிரசாந்த் ஆகியோர் பங்கேற்று ஆதரவளித்தனர்....

சலசலப்புகளை முறியடித்து பயணம் தொடர்கிறது

சலசலப்புகளை முறியடித்து பயணம் தொடர்கிறது

திருச்சி அணி: துவக்க பொதுக்கூட்டம் திருச்சி மேலப்புலிவார்டு பகுதியில் ஆக-6 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பயணக்குழு தலைவர் உமாபதியிடம் கழகக் கொடியைத் தந்து பயணத்தைத் துவக்கி வைத்தார். டார்வின் தாசன் தலைமை தாங்கினார். பெரியார் விருதாளர் தி.நெடுஞ்செழியன், தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மற்றும் லதா சத்யா குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். தலைமைக்குழு உறுப்பினர் திருச்சி மனோகரன் பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். கழகத் தோழர்கள் மணிகண்டன், குணா உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்து உதவினர். 2-ம் நாள்: திருச்சி புறநகர் அண்ணா நகர் 3வது பேருந்து நிலையம், MIET குண்டூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட்-7, அன்று பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், கருப்பு கோகுல் ஆகியோர்...

ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி முருகேசன் நினைவேந்தல் நிகழ்வு!

ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி முருகேசன் நினைவேந்தல் நிகழ்வு!

ஜாதி ஒழிப்பு – சமூக நீதி விடுதலைக் களத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஓய்வறியாமல் போராடிய ஒப்பற்ற போராளி, ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர் சு. முருகேசன் அவர்களின் மறைவையொட்டி நினைவேந்தல் கூட்டம் மற்றும், படத்திறப்பு நிகழ்வு ஆக-1, வல்லக்குண்டாபுரத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டக் கழகம் சார்பாக மாவட்டத் தலைவர் முகில் ராசு கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தி, இரங்கல் உரையாற்றினார். நிகழ்வில் திருப்பூர் குணா பங்கேற்றார். பெரியார் முழக்கம் இதழ் 13082026

கழகம் புகார் எதிரொலி  ஜாதிச் சங்க வாகனங்கள் பறிமுதல்

கழகம் புகார் எதிரொலி ஜாதிச் சங்க வாகனங்கள் பறிமுதல்

தீரன் சின்னமலை அவர்கள் நினைவுநாள் என்ற பெயரில் ஜாதிச் சங்கங்கள் நடத்தும் நிகழ்வுகளில் ஆணவப் படுகொலையை ஆதரித்தும், ஜாதிக் கலவரத்தை தூண்டுவதும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பியும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவதை தடுத்திடவும் மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல காவல்துறை அய்.ஜி அவர்களிடம் கோவை மாவட்டக் கழகம் சார்பில் ஆகஸ்ட்-1 அன்று மதியம் 12 மணி அளவில் மனு அளிக்கப்பட்டது. மனு கொடுத்ததன் எதிரொலியாக காவல்துறையால் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 220 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 13082026

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்

தென் மண்டல எல்.அய்.சி பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் கூட்டமைப்பு முன்னெடுத்த சமூக நீதி போராளி இரட்டைமலை சீனிவாசனார் பிறந்த நாள் கருத்தரங்கம் அண்ணாநகர் டவர் கிளப் இக்லு அரங்கில் ஆகஸ்ட்-1 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசன், பெரியார் அம்பேத்கர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ச.அய்யனார் (பொதுச்செயலாளர், தெ.ம.எல்.அய்.சி.பி. ஊழியர் கூட்டமைப்பு) தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. வி. சகாயராணி ( தலைவர், எல்.அய்.சி.பி ஊழியர் நலச்சங்கம் செ.கோ-1) வரவேற்புரை ஆற்றினார். ச.சுரேஷ்குமார் ( செயலாளர்(சமூக உறவு) தெ.ம.எல்.அய்.சி.எஸ்.சி/எஸ்.டி ஊழியர் நலச்சங்கம்), இரட்டைமலை சீனிவாசன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட நிகழ்வுகளை விவரித்தார். தமிழ் சாக்ரடீஸ் (திராவிட இயக்க பேச்சாளர்), இரட்டை மலை சீனிவாசன் குறித்த பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும் ஜாதியை எதிர்த்து களமாடிய நிகழ்வுகள் குறித்து கருத்துரையாற்றினார். க.கார்குழலி (தலைவர், தெ.ம.எல்.அய்.சி ஊழியர் கூட்டமைப்பு) பெண்கள் இது போன்ற முற்போக்கு செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும்,...

பரப்புரைப் பயணத்திலிருந்து சில துளிகள்….

பரப்புரைப் பயணத்திலிருந்து சில துளிகள்….

திருநெல்வேலி பணகுடி பகுதியில் கழகப் பரப்பரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் உற்சாகம் பெற்று மேடைக்கு வந்து தோழர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டினார். தோழர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பணகுடி பகுதியில் பரப்புரையைக் கவனித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ராஜலட்சுமி பயணக் குழு தோழர்களை பாராட்டி குளிர்பானம் வழங்கினார். அவருக்கு கழக வெளியீடுகளை தோழர்கள் வழங்கினர். அதிராம்பட்டினம் பள்ளிகொண்டான் பகுதியைச் சார்ந்த தோழர்கள் ராஜேஷ், வினோத், மகேஷ் ஆகியோர் கழகப் பொருளாளர் துரைசாமி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆடை போர்த்தி கழக வெளியீடுகளை வழங்கினார். கோவை ’தோழர்’ அறக்கட்டளை சாந்தகுமார் பேராவூரணி அணி தோழர்களுக்கு முதலுதவி மருந்து பொருட்களை வழங்கினார். பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் பேசிய கருத்துக்களை கவனித்து விட்டு ரூ.500 ஒருவரும் மற்றொருவர் ரூ.1000 வழங்கினர். திருச்சி பெரியார் பெருந்தொண்டர் தமிழ்ச்சுடர் இரண்டு நாட்களும் தனது இல்லத்தில் பயணக்குழு...

கழகத் தோழர்கள் களமிறங்கினர் பரப்புரைப் பயணம் தொடங்கியது

கழகத் தோழர்கள் களமிறங்கினர் பரப்புரைப் பயணம் தொடங்கியது

‘ஜாதியில் திருமணம்! மதத்தில் பார்ப்பனியம்! வாழ்வில் மூடநம்பிக்கை! என்ற மூன்று கருத்துகளை முன்னிறுத்தி `தடை, அதை உடை!’ என்ற முழக்கத்தோடு கழகத் தோழர்களின் பரப்புரைப் பயணம் திருச்சி, நாகர்கோவில், போராவூரணி என்ற மூன்று முனைகளிலிருந்து புறப்பட்டது. போராவூரணியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், நாகர்கோயிலில் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனும், திருச்சியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் பயணத்தை துவக்கி வைத்தனர். போராவூரணியிலும், திருச்சியிலும் பொதுக்கூட்டமாக நடந்தது. கழகப் பொருளாளர் திருப்பூர். துரைசாமி தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் போராவூரணி பயணக் குழுவினரோடு இணைந்து பயணம் செய்து வருகின்றனர். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன் இருவரும் பயணக்குழுவினரின் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 4 பரப்புரைக் கூட்டங்களை நடத்துகின்றனர். நூல்விற்பனை, மக்களிடம் உண்டியல் மூலம் நிதி திரட்டுதல், துண்டறிக்கை வழங்கல் என்று தோழர்கள் பணியாற்றுகிறார்கள். நாகர்கோவில் அணி: சேலம் அணியின் பயணக் குழு 05.08.2026 புதன்...

பரப்புரைப் பயண பாடல் வெளியீடு!

பரப்புரைப் பயண பாடல் வெளியீடு!

ஜாதி மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிரான பாடல் வெளியீட்டு விழா, ஜூலை-31, மாலை 6 மணிக்கு சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார், திரைப்படங்களின் மூலம் பரப்பப்படும் புராணக்கதைகளை கண்டித்து உரையாற்றினார். “வெங்காயம்” திரைப்பட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். நிறைவாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பாடல்வரிகளை வெகுவாகப் பாராட்டினார். இதுபோல் இன்னும் நிறைய பாடல்களை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். கழகப் பரப்புரைப் பயணத்தில் தோழர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளையும் பொறுப்புகளையும் விளக்கினார். பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்ட இசையமைப்பாளர் வசந்த ரமேஷ், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் சத்யா, லதா, குரல் கொடுத்த இரா. உமாபதி, இரண்யா ஆகியோருக்கும், வீடியோ உருவாக்கத்தில் ஈடுபட்ட தோழர்கள் அருண் கோமதி, குகன் ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது. U2BRUTUS மைனர் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்று பாடல்களை வரவேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 06082026

கழகத் தோழர் இலக்கம்பட்டி குமார் விடைபெற்றார்!

கழகத் தோழர் இலக்கம்பட்டி குமார் விடைபெற்றார்!

சேலம் மாவட்டம், கொளத்தூர் , இலக்கம்பட்டி கழகத் தோழர் குமார் (52) 01.08.2026 அன்று மாலை 6.00 மணியளவில் மறைவுற்றார். தோழரின் இறுதி நிகழ்வு 02.08.2026 காலை 10.00 மணிக்கு இலக்கம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தோழரின் உடலுக்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் அணிவகுத்து கழகக் கொடி மற்றும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பெண் தோழர்களே குமார் அவர்களின் உடலைச் சுமந்து இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர். இறுதி நிகழ்வை சடங்கு, சம்பிரதாயங்கள் இன்றி நடத்த தோழரின் குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு வழங்கினர். கழகத் தலைமைக்குழு உறுப்பினராக செயல்பட்டவர் தோழர் குமார். நிகழ்வில் கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ், சேலம் மாநகரம், நங்கவள்ளி, வனவாசி, இளம்பிள்ளை, ஏற்காடு, திருப்பூர், குருவரெட்டியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள்...

கழகப் பரப்புரைப் பயணம் மற்றும் காரைக்குடி நிறைவு மாநாடு – முன்னேற்பாட்டுக் குழு சந்திப்பு!

கழகப் பரப்புரைப் பயணம் மற்றும் காரைக்குடி நிறைவு மாநாடு – முன்னேற்பாட்டுக் குழு சந்திப்பு!

கழகத்தின் சார்பில் “ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை – தடை! அதை உடை!” என்ற முழக்கத்துடன் பரப்புரைப் பயணம் நடைபெற உள்ளது. இப்பயணத்தின் நிறைவு மாநாடு வருகிற ஆகஸ்ட்-12 அன்று காரைக்குடியில் எழுச்சிகரமாக நடைபெற உள்ளது. மாநாட்டின் முன்னேற்பாடுகளைச் செய்யவும், களப்பணிகளில் உள்ள இடர்பாடுகளைக் களையவும் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் ஆகியோர் தீவிரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காரைக்குடிக்கு வருகை தந்த அவர்கள், மாநாட்டுப் பணிகள் குறித்தும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்தும் கழகத் தோழர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினர். மேலும், பல்வேறு தோழர்களை நேரில் சந்தித்து மாநாட்டுக்கான அழைப்பிதழ்களையும் வழங்கினர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வேணுகோபால் (காரைக்குடி) அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. நாகர்கோயில் மாநகராட்சியின் மேனாள் மேயர், திமுக மாவட்டச் செயலாளர் ஆர். மகேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பயணக்குழுவிற்கு தேவையான...

நங்கவள்ளியில் கழகத் தோழர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு!

நங்கவள்ளியில் கழகத் தோழர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு!

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் நங்கவள்ளியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் நேரத்துக்குப் பள்ளி, கல்லூரிக்குச் செல்லவும், பள்ளி முடிந்த பின் பாதுகாப்பாக வீடு திரும்பவும் ஏதுவாக பேருந்து நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, சேலம் மாவட்டக் கழக ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் 20.07.2026 அன்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் மனு அளித்தனர். அமைச்சர், கழகத் தோழர்களின் கோரிக்கையை பரிசீலித்து இரண்டு நாளுக்குள் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படும் என உறுதியளித்தார். பெரியார் முழக்கம் இதழ் 30072026

காரைக்குடி அழைக்கிறது! தோழர்களே தயாராவீர்!

காரைக்குடி அழைக்கிறது! தோழர்களே தயாராவீர்!

கழகத்தின் பரப்புரைக்கு தோழர்கள் மிகுந்த உற்சாகத்தோடு தயாராகி வரும் செய்திகள் வருகின்றன. ஆணவப் படுகொலைகள் மனித மாண்புகளையும் கொலை செய்கின்றன. ஜாதியை மறுத்து வாழத் துடிக்கும் இளம் பிஞ்சுகளின் உயிரைத் துடிக்கத் துடிக்கப் பறிக்கின்றன. ஜாதிவெறியின் இரத்தப் பசி அடங்கவில்லை. சமூக ஒருங்கிணைப்பை மானுட ஒற்றுமையை ஜாதி என்னும் நச்சு சீர்குலைக்கிறது. கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் இது தெரியாதா? தெரியும்! ஆனாலும் வாக்கு வங்கி அரசியல் நியாயங்களைப் பேச மறுக்கிறது. இந்த நிலையில் தான் பெரியார் தந்த ஜாதி எதிர்ப்பு என்ற கொள்கைச் சுடரை ஏந்தி இலட்சியப் பெருமிதத்தோடு கழகத் தோழர்கள் பயணம் புறப்படுகிறார்கள். ஆகஸ்ட் 12-ல் காரைக்குடியில் நிறைவுவிழா மாநாட்டில் ஒவ்வொரு கழகத் தோழர்களும் கழக ஆதரவாளர்களும் திரளவேண்டும்!. குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். காரைக்குடி கருஞ்சட்டை கடலில் மிதக்க வேண்டும்! கழகத்தின் வலிமையை உணர்த்த வேண்டும்!. பெரியார் முழக்கம் இதழ் 30072026

நீட் தேர்வை நீக்கு; கழகத் தோழர்கள் போராட்டம்

நீட் தேர்வை நீக்கு; கழகத் தோழர்கள் போராட்டம்

கோவையில்: ஜூலை-22 அன்று அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கோவை மாவட்டக் கழகம் சார்பில் மாநகரச் செயலாளர் வெங்கட் கண்டன உரை ஆற்றினார். ஜூலை-26, அன்று மாலை 5 மணி அளவில் கோவை காந்திபுரம் பகுதியில் அனைத்துக் கட்சிகள் சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்களுடன் எழுச்சியோடு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது கோவை மாவட்டக் கழக தோழர்கள் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் பங்கேற்றனர். சேலத்தில்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் அனைத்து இந்திய இளைஞர்கள் அனைத்து இந்திய மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் ஜூலை 22, 2026 முதல் ஜூலை-24 வரை சேலம் மாவட்டம் தொடர்வண்டி நிலையம் அருகில் நடைபெற்றது. இரண்டு நாள் காத்திருப்பு போராட்டத்தில் சேலம் மாவட்டச் செயலாளர் டேவிட், தோழர்கள் சுதர்சன் மற்றும் ஆனந்தி கலந்து கொண்டனர். பொள்ளாச்சியில்: நீட் முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் செய்து வருகிற மாணவர்கள் மீது...

சென்னை, திருப்பூரில் காமராசர் சிலைக்கு மரியாதை

சென்னை, திருப்பூரில் காமராசர் சிலைக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக கல்வி வள்ளல் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாளை போற்றும் விதமாக 15-07-2026 புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் அனுப்பர்பாளையம், நகராட்சி அருகில் அமைந்துள்ள கர்மவீரர் காமராசர் அவர்களின் சிலைக்கு கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் கர்மவீரர் காமராசர் அவர்கள் குறித்து கொள்கை முழக்கமிட தொடர்ந்து தோழர்கள் முழக்கமிட்டனர். நிகழ்வில் மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகரத் துணைத் தலைவர் மாரிமுத்து, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் மற்றும் கழகத் தோழர்கள் சிரிஜா, இனியன், குணா, பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை: காமராஜர் பிறந்தநாளையொட்டி, மாவட்டக் கழகத்தின் சார்பில், ஜூலை-15 காலை 9 மணிக்கு, சென்னை சிம்சன் ஜிம்கானா கிளப் முன்புள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து, கொள்கை முழக்கமிட்டு தோழர்கள்...

தயாராகிறது சேலம் மாவட்டம்!

தயாராகிறது சேலம் மாவட்டம்!

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் ஜூலை-17, வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் மேட்டூர் நகரத் தலைவர் மார்டின் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்வரும் ஆகஸ்ட்-6 முதல் 12 வரை நடைபெற இருக்கும் “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயணம்” சிறப்பாக நடைபெற சேலம் மாவட்டக் கழகம் முழு ஒத்துழைப்பை வழங்குவது என்றும், சேலம்-நாகர்கோவில் பயணக் குழுவின் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சேலம் அணியின் இசைக்குழு, கடைவீதி வசூல், புத்தக விற்பனை, ஊடக பிரிவு, பேச்சாளர்கள் பட்டியல் குறித்தும் பயணத்திற்கான நன்கொடை திரட்டுதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், சேலம் மாவட்ட பொருளாளர் சம்பத், மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், வனவாசி நகரச் செயலாளர்...

பார்ப்பன சடங்குகளை ஒதுக்கிய பி.என் சண்முகம் நினைவேந்தல்!

பார்ப்பன சடங்குகளை ஒதுக்கிய பி.என் சண்முகம் நினைவேந்தல்!

மறைந்த பி. என் சண்முகம் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு ஜூலை-17, வெள்ளிக்கிழமை 12 மணி அளவில் திருப்பூர், பலவஞ்சிப்பாளையம் பகுதியில் உள்ள மறைந்த பி. என் சண்முகம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. சர்வேஸ்வரன் (அ.தி. மு.க) அவர்கள் வரவேற்புரையாற்றினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர், பி.என் சண்முகம் அவர்களின் உறவினர் கா.சு. நாகராசன் பேசுகையில் என்னுடைய தந்தையார், தாயார் இறந்த பிறகு குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டும், என் தாயார் மறைந்த பிறகு அவரின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கியதைக் கண்டும், உயிரற்ற உடல் மருத்துவ மாணவர்களுக்கு இவ்வளவு பயன்படுகிறதா? என்பதை உணர்ந்து மறைந்த பி.என். சண்முகம் அவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பொது நல பார்வையிலும், தொலைநோக்குப் பார்வையிலும் சிந்தித்து உயிருடன் இருக்கும் போது உடற்கொடை வழங்கும் சான்றிதழை பூர்த்தி செய்து வழங்கினார். எங்கள் வீட்டில்...

ஈழத்தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்; 13-ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!

ஈழத்தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்; 13-ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!

2013-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை மைலாப்பூர் தபால் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசி சேதம் விளைவித்ததாகக் கூறி, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தபசி குமரன், உமாபதி, ராவணன், மனோகரன், மாரிமுத்து, ஜான்சன் மற்றும் முகிலன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 13 ஆண்டுகளாக வழக்கு நடந்தது. தோழர்கள் நீதிமன்றம் சென்று வந்தனர். இது ஈழத் தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம். இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டு வரும் 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட அனைத்து சாட்சிகளும் வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அன்றாடம்...

‘ஆணவக் கொலை’ தடுப்புச் சட்டம் வருமா?

‘ஆணவக் கொலை’ தடுப்புச் சட்டம் வருமா?

கருநாடக மாநில அரசைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் நீதிபதி சந்துரு `டைம்ஸ் ஆப் இந்தியா’ ஜூலை 17, நாளேட்டில் எழுதிய கட்டுரை. திருமணச் சட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை உருவாக்கிய தமிழ்நாடு, ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவருவதில் ஏன் இன்னும் தாமதிக்கிறது? கர்நாடகா ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளது. நாம் ஏன் இல்லை? இந்தக் கொலைகளில் எந்தவிதமான “குடும்ப கௌரவமும்” இல்லை. இத்தகைய ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு உடனடியாக ஒரு தனிச்சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. சமூக நீதி மற்றும் முற்போக்கு சீர்திருத்தங்களில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டதாக பெருமை பேசும் தமிழ்நாட்டில், “ஆணவக் கொலைகளைத்” (Honour Killings) தடுக்க தனிச்சட்டம் தேவையா? என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது. இதேவேளை, கர்நாடகா 2025, மார்ச் மாதத்தில் இதற்கென ஒரு சட்டத்தை இயற்றி இந்தத் துறையில்...

நங்கவள்ளி கழகத் தோழர்களின் சிறப்பான செயல்!

நங்கவள்ளி கழகத் தோழர்களின் சிறப்பான செயல்!

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் தலைவர்களின் படங்கள் வரையப்பட்டன. அதில் தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படங்களை மட்டும் பெயர் பட்டியலில் இருந்தும் அவற்றை வரையாமல் தவிர்த்தனர்.கழகத் தோழர்கள் நங்கவள்ளி கிருஷ்ணன், சந்திரசேகரன், உமாசங்கர், மனோஜ் ஆகியோர் பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களிடம் இதுகுறித்து வலியுறுத்தினர். நமது கோரிக்கையை ஏற்று தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படங்கள் வரையப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நடந்த வரையும் பணி 10.07.2026 அன்று முடிவடைந்துள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 16072026

தோழர் ஆம்ஸ்ட்ராங் 2-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் ஜூலை-5 அன்று வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

தோழர் ஆம்ஸ்ட்ராங் 2-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் ஜூலை-5 அன்று வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் இதழ் 16072026

சேலத்தில் ஆணவப் படுகொலைக்கு கண்டனம்!

சேலத்தில் ஆணவப் படுகொலைக்கு கண்டனம்!

மயிலாடுதுறையில் நடந்த ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலையைத் தடுக்கும் சிறப்புத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டம் 07.07.2026 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) சார்பில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் தன் உரையில் “இந்தியா முழுவதும் ஜாதி மீறி காதலிக்கும் ஒரே காரணத்திற்காக ஜாதி கௌரவம் என்னும் பெயரில் காதலர்கள் காதல் இணையர்கள் கொடூரமாக கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 4 ஆணவக் கொலைகள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஜாதி ஆணவக் கொலைகள் நடந்து இருக்கின்றன. இவை அனைத்திற்கும் ஒரே காரணம் மனு சாஸ்திரத்தை இந்து மதத்தவர்கள் படிக்காமல் இருக்கலாம்; ஆனால் அவற்றின் இதிகாசபுராணக்...

பரப்புரை; சேலம், திருப்பூர் மாவட்டங்கள் தீவிரம்!

பரப்புரை; சேலம், திருப்பூர் மாவட்டங்கள் தீவிரம்!

சேலம்: 06.07.2026 திங்கள் மாலை 4.00 மணிக்கு கருப்பூரில் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் இல்லத்தில், மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தலைமையில், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் முன்னிலையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் கடந்த 28.06.2026 அன்று திருப்பூரில் நடைபெற்ற தலைமைக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் தென்மாவட்டங்களுக்கு பரப்புரை பயணம் மேற்கொள்வது குறித்தும், பயணக் குழுவின் தொடக்க நிகழ்வாக 05.08.2026 அன்று மாலை 4.00 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரையை சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் தொடங்குவது எனவும், அதன்பிறகு பரப்புரைக் குழு நாகர்கோவில் சென்றடைந்து காரைக்குடி நிறைவு விழா மாநாட்டு திடலை 12.08.2026 அன்று வந்தடையும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதிகாரத்தில் கால் பதிக்காத குரலற்றசமூகங்களின் உரிமைக்கு கருத்தரங்குகள் நடத்துவது, தந்தை பெரியார் பிறந்தநாளை குடும்ப விழாவாக நடத்துவது, பிரச்சார...

பரப்புரைக்கு தயாராகும் சென்னை மாவட்டக் கழகம்!

பரப்புரைக்கு தயாராகும் சென்னை மாவட்டக் கழகம்!

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், ஜூலை-5 மாலை 6 மணிக்கு, கழகத் தலைமை அலுவலகத்தில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் நடைபெற்றது. குரலற்றோரின் குரலாக கருத்தரங்கங்கள் நடத்துவது, தென் மாவட்டங்களுக்கு பரப்புரைப் பயணம் மேற்கொள்வது, பெரியார் பிறந்தநாளை குடும்ப விழாவாக நடத்துவது, சமூக வலைத்தள செயல்பாடுகள், தேர்தல் முடிவுகள், பிரச்சார அணுகுமுறை, நன்கொடை திரட்டுதல், மாநாட்டு சுவரெழுத்து, பயணப் பெயர் பட்டியல் தயாரிப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பரப்புரைப் பயணத்தை சிறப்பாக நடத்துவது குறித்து தோழர்கள் கருத்துகளை வழங்கினர். குறைந்தது 20 தோழர்கள் பயணக்குழுவில் பங்கேற்க வேண்டும், பெண் பேச்சாளர்களும், கலைக்குழுவினரும் இடம் பெற வேண்டும், பயண நோக்கம் குறித்த டீசர்ட்டை தயாரிப்பது, சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாள் பயணத்தையும் பல்வேறு நவீன வடிவத்தில் கொண்டு போய் சேர்ப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டன. உடனுக்குடன் செய்திகளை பதிவேற்றுவதற்கும் குழு ஒன்றை...

கரூரில் ஈழப் படைப்பாளிகளின் நூல்கள் அறிமுகம்

கரூரில் ஈழப் படைப்பாளிகளின் நூல்கள் அறிமுகம்

தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக தியாகி “பொன் சிவகுமரனின்” 52 -ஆவது ஆண்டு நினைவுகளோடு மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசும் 11 நூல்கள் அறிமுக விழா 27.06.2026 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் கரூர், அய்யப்பா சேவா சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சண்முகம் (சாமானிய மக்கள் கட்சி ) அவர்கள் தலைமை வகித்தார். முகிலன் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் – காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்) அவர்கள் முன்னிலை வகித்தார். ஆ. பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிவேதா சத்யாராஜ், முனைவர் சாலினி (பேராசிரியர், ஆய்வாளர்), முனைவர் ப. கிருட்டிணவேணி (முதுகலை அறிவியல் யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகியோர் நூல்களைப் பற்றி கருத்துரையாற்றினர். புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் நூல்களைப் பற்றி மதிப்புரையாற்றினார். “கஸ்தூரியின் ஆக்கங்கள், வானதியின் கவிதைகள், மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு, தமிழீழ...

கேத்ரின்-இலக்கியன் மதம் கடந்த மணவிழா!

கேத்ரின்-இலக்கியன் மதம் கடந்த மணவிழா!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் சிவானந்தம் – சங்கீதா இணையரின் மகன் இலக்கியன் அவர்களுக்கும், கேரளா மாநிலம், திருச்சூர் ஜோ. மனோஜ்- ம. மினி இணையரின் மகள் கேத்ரின் ஆகியோருக்கும் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11.00 மணி அளவில் , தாராபுரம் லயன்ஸ் மஹாலில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணை நல ஒப்பந்தம் செய்து வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் வாழ்த்துரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தவைவர் வீ. சிவகாமி ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். கழகத் தோழர் மடத்துக்குளம் சிவானந்தம் தீவிர கழகப் களப்பணியாளர். மறைந்த கழகச் செயல்வீரர் மடத்துக்குளம் மோகன் அவருடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பெரும் பங்காற்றியதையும்...

கள்ளக்குறிச்சியில்  நீட் தேர்வுக்கு     எதிரான ஒரு நாள் பரப்புரை!

கள்ளக்குறிச்சியில் நீட் தேர்வுக்கு எதிரான ஒரு நாள் பரப்புரை!

கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில், 20-06-2026 சனிக்கிழமை அன்று கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் மருத்துவக் கனவைச் சிதைக்கும் `நீட்’ தேர்வை இரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு நாள் பரப்புரைப் பயணம் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பாபா தலைமையில் நடைபெற்றது. காலை 10 மணி மூங்கில்துறைப்பட்டு, காலை 12 மணி மேல் சிறுவள்ளூர் கூட்டு சாலை, மாலை 3 மணி வாணாபுரம் கூட்டுச்சாலை, மாலை 6 மணிக்கு கடுவனூர் பேருந்து நிலைத்தியலும் நடைபெற்றது. இதில் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார், மாவட்டச் செயலாளர் க.ராமர், மாவட்டத் தலைவர் க.மதியழகன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.அ.இளையரசன் திமுக கல்லக்குறிச்சி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விசய் ஆனந்து மற்றும் சி.பி.அய்யை சார்ந்த சையத் கரீம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மு.நாகராஜ், ரிஷிவந்திய ஓன்றிய அமைப்பாளர் இரா. கார்மேகம், வீ.முருகன், ரிஷிவந்திய ஒன்றியத் தலைவர் மா.குமார், கி.ஆனந்தன் ஏ.ஜெயப்பிரகாஷ் சு.வல்லரசு,...

வி.பி.சிங் பிறந்தநாள்

வி.பி.சிங் பிறந்தநாள்

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிறகிந்தநாளையொட்டி, ஜூன் 25, 2026 காலை 10 மணிக்கு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், சென்னை பிரசிடென்ஸி கல்லூரி வளாகத்தில் உள்ள வி.பி. சிங் சிலைக்கு மாலை அணிவித்து, தோழர்கள் கொள்கை முழக்கமிட்டனர். நிகழ்வில், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன், மாவட்டத் தலைவர்கள் சேத்துப்பட்டு இராசேந்திரன், மா. வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பகுதி அமைப்பாளர் எம்.ஜி.ஆர் நகர் துரைராசு, முழக்கம் உமாபதி, ராஜன், விஜயன், தோழர்கள் ஏசுகுமார், மயிலை மனோகர், சு.பிரகாஷ், பாரி சிவா, சிகாமணி, அசோக், வீரா, லட்சுமணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 02072026

காவல் நிலையத்தில் கிடா வெட்டுவதா? கழகம் புகார்; அரசு உடனடி நடவடிக்கை!

காவல் நிலையத்தில் கிடா வெட்டுவதா? கழகம் புகார்; அரசு உடனடி நடவடிக்கை!

சேலம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக கிடாவெட்டி மாந்திரீக பூஜை போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் 26.06.2026 புகார் மனு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தி விவரம்: கடந்த 20.06.2026 ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் “குற்றங்கள் குறைய வேண்டும்” என்பதற்காக காவல்துறையினரே கிடாவை பலியிட்டு, அதன் ரத்தத்தை காவல் நிலைய கட்டிடத்தின் நான்கு மூலைகளிலும் பூசி, மாந்திரீக பூஜை நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ஆணைப்படி, அரசு அலுவலகங்கள் , காவல் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்களிலும் மதச்சார்புடைய வழிபாடுகள், பூஜைகள், கடவுள் படங்கள், மாந்திரீக சடங்குகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையே அரசு ஆணையை மீறி, மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில்...

வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

1.காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், 2.ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தனிச் சட்டம் இயற்றிக் கோரியும் வேலூர் மாவட்டக் கழகம் சார்பாக 20.6.2026 மாலை குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு மாவட்டத் தலைவர் காத்தவராயன், சிபிஎம் குடியாத்தம் நகரச் செயலாளர் குபேந்திரன், மாவட்டச் செயலாளர் சிவா நந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முரளி தன்மானன் நன்றி கூறினார். கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 25062026

நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு

நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு

நிமிர்வோம் வாசகர் வட்ட 32-வது சந்திப்பு, ஜூன் 14,2026 (ஞாயிறு) மாலை 6 மணிக்கு, கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தின் அமைப்பாளர் ர.பிரகாசு நிகழ்வை ஒருங்கிணைத்தார். “தேர்தல் முடிவுகளை எப்படி எடுத்துக்கொள்வது?” எனும் தலைப்பில், தோல்விக்கான காரணங்கள் குறித்தும், மக்களின் முதன்மையான ஊடகமாக மாறியுள்ள சமூக வலைத்தளங்களில் பகுத்தறிவுப் பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுக்கவேண்டிய அவசியம் குறித்தும், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் உரையாற்றினார். “பேருந்து தீண்டாமையை ஒழித்த இயக்கம்!” எனும் தலைப்பில், தோழர்கள் கெம்பனூரில் கள ஆய்வு செய்த அனுபவங்களையும், கோவை கெம்பனூர் வரை வரவிடாமல் தடுக்கப்பட்டிருந்த 21-ஆம் எண் பேருந்தை மீண்டும் வரவைக்க நடந்த போராட்டங்களின் வெற்றி குறித்தும், கோவையில் தலைமைக் குழு உறுப்பினர் நிர்மல்குமார் இணையவழியில் உரையாற்றினார். நிறைவாக தலைமையுரையாற்றிய தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், பாஜகவின் சமஸ்கிருத திணிப்பைப் பற்றியும், கடந்த காலங்களில் பெரியார் இயக்கம் முன்னெடுத்த வீரஞ்செறிந்த போராட்டங்களைப் பற்றியும்...

நிலாச்சோறு உணவக உரிமையாளர் தோழர் ரகுநாத் அவர்களின் குடும்பப் பின்னணி:

நிலாச்சோறு உணவக உரிமையாளர் தோழர் ரகுநாத் அவர்களின் குடும்பப் பின்னணி:

1950 அக்டோபரில் பெரியார் அறிவித்த வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டத்தில் 8.11.1950 அன்று தோழர் ரகுநாத் அவர்களின் பாட்டியும் சேலம் சிவதாபுரம் திராவிடர் கழகத்தின் பொருளாளருமான அகிலாண்டம் அவர்களும், அவரது மாமனார் 80 வயது உள்ள மாரி அவர்களும், அவரது குழந்தைகள் ஆன 13வயது சரஸ்வதி, 10 வயது சொர்ணாம்பாள், 8வயது ஜெகநாதன், 3வயது திராவிட கனி, 1,1/2 ஒன்றரை வயது பாண்டியராசா ஆகியவர்களுடன் கைதாகிறார். அதில் குழந்தைகளில் 1,1/2 வயது பாண்டிராசாவைத் தவிர மற்ற நால்வரையும் அன்னையை விட்டுப் பிரித்து Children’s Society-யில் தனியாக காவலில் வைக்கப்படுகிறார்கள். ஒரு வார தண்டனைக்குப் பின் விடுதலையான அகிலாண்டம் அம்மாள், அவரது கணவரும் சேலம் சிவதாபுரம் காட்டூர் திராவிடர் கழக தலைவருமான எஸ் எம் வெள்ளியங்கிரி அவர்களும் 21.11.1950 அன்று மீண்டும் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி உள்ளார்கள். ஒரு மாதம் தண்டனை வழங்கப்பட்டு 22.12.1950 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 16.5.1983 அன்று...

பயிலரங்கத்தின் வெற்றி; பயிற்சி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

பயிலரங்கத்தின் வெற்றி; பயிற்சி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

சேலம் பயிலரங்கத்தில் பங்கேற்றவர்கள் நிகழ்வின் இறுதியில் பயிலரங்கம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நாமக்கல் ரேஷிகா வர்சினி: பெரியார் குறித்த எனக்குத் தெரிந்த விவரங்களைத் தாண்டி பெரியார் பற்றிய வரலாறுகளை விரிவாக கற்றுக் கொள்ள முடிந்தது. இது என்னுடைய படிப்புக்கு உதவியாக இருக்கும். நான் பார்ப்பனரல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனைத்து சடங்குகளையும் பின்பற்றி வந்தது என்னுடைய குடும்பம். இந்த பயிலரங்கத்துக்கு வந்ததற்குப் பிறகு விடுதலை அடைந்த உணர்வை எட்டி இருக்கிறேன். இனி நல்ல வாழ்க்கை முறைக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் பெரியார் தான் என்று கூறினார். இசக்கி ராஜன் (திருநெல்வேலி): இங்கே வருவதற்கு முன் பெரியார் குறித்த நான் நிறைய படித்திருக்கிறேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இங்கே தோழர்கள் பேசியதற்குப் பிறகு நான் இன்னும் படிக்காதது நிறைய இருக்கு என்று உணர்ந்து கொண்டேன். ஜாதி குறித்தும் சடங்குகள் எப்படி பெண்கள் வழியாக கடத்தப்படுகிறது என்பது பற்றியும் பெரியாரின்...

கருத்து செறிவுடன் நடந்த     கழக இளைஞரணி பயிலரங்கம்

கருத்து செறிவுடன் நடந்த கழக இளைஞரணி பயிலரங்கம்

சேலம் மாவட்டக் கழக இளைஞரணி நடத்திய இரண்டு நாள் பயிலரங்கத்தில் எண்பது இளைஞர்கள் பெண்களும், ஆண்களுமாய் பங்கேற்றனர். கால மாற்ற சூழலில் பெரியார் கருத்தியல் மற்றும் பெரியார் இயக்கத்தின் தேவை குறித்து பயிலரங்கம் விரிவாக விவாதித்தது. சேலம் மாவட்ட இளைஞர் அணி பயிலரங்கம் ஜூன்20,21 தேதிகளில் சேலம் நிலாச்சோறு உணவக அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. 20.06.2026 சனிக்கிழமை இளைஞர்களின் எழுச்சியோடு தொடங்கியது. தோழர்கள் லதா, சத்யா, பொன்ராஜ், உமாபதி குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து “இன்றைய சமூக அரசியல் சூழலில் பெரியாரியத்தின் தேவை” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முதல் வகுப்பினை தொடங்கினார். தேநீர் இடைவேளைக்கு பிறகான இரண்டாவது அமர்வில் “சமூக ஊடகங்கள் – பயன்படுத்தல்” என்ற தலைப்பில் ( Wild South Raiders podcast) தோழர் கக்காஷி காணொளி மூலமாக விளக்கி வகுப்பெடுத்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான மூன்றாவது அமர்வில்...

பயிலரங்கம் நடத்த கோவை மாவட்டக் கழகம் திட்டம்!

பயிலரங்கம் நடத்த கோவை மாவட்டக் கழகம் திட்டம்!

ஜூன்-6,மாலை 4.30மணி அளவில் கோவை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்ப் புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: 21 ஆம் நம்பர் அரசுப் பேருந்து ஜாதிய தீண்டாமைகளைத் தகர்த்து கோவை தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு பல வருடங்களுக்குப் பிறகு சென்றது. அதற்கு காரணமாக இருந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, முதலமைச்சர் ஜோசப் விஜய் அகியோருக்கு நன்றி பாராட்டுகிறோம் ● பெரியார் கொள்கைகளை பரப்புவதற்கு தொடர்ந்து தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது; ● சமூக வலை தளங்களில் இளம் தலைமுறையினர் மூலம் புதிய(apps) செயலிகளைப் பயன்படுத்தி பெரியாரிய கொள்கைகளைக் கொண்டு செல்வது; ● விரைவில் புதிய தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார் , வெங்கட் ,சிவராசு,கிருஷ்ணன் சதீஷ், ஸ்டாலின் ராஜா,சத்தியமூர்த்தி, தரணி, நவீன், கதிரவன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம்...

கரட்டுப்பாளையம் செல்லப்பன் 82 வயதிலும் கொள்கை உறுதி!

கரட்டுப்பாளையம் செல்லப்பன் 82 வயதிலும் கொள்கை உறுதி!

சென்னிமலை கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் அவர்கள் 17 வயதில் தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சமூக மாற்றத்திற்கான பெரியாருடைய எதிர்நீச்சல் பணிக்கு வந்தவர். தற்போது 82 வயதிலும் பெரியாரியப்பற்றுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழராக வாழ்ந்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக பெரியார் பெருந்தொண்டர் சென்னியப்பன் அவர்களின் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், திருப்பூர் முத்து, அய்யப்பன் ஆகியோர் ஜூன் 11, 2026 அன்று மாலை தோழரின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். சிறுவயதில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் மதச் சடங்குகளுக்கு எதிராகவும் அன்றைய 1960,1970 காலகட்டங்களில் இருந்த மிகக் கொடுமையான ஜாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக செய்த பணிகளையும் பெரியாரிய இயக்கங்களில் நடந்த போராட்டங்கள் பிரச்சாரங்கள் சிறைக்குச் சென்று வந்த அனுபவம் ஊரில் கவுண்டர்கள் தாழ்த்தப்பட்டவர்களை நடத்திய ஜாதிக் கொடுமைகள் மற்றும் கவுண்டர்கள்...

புத்தக வெளியீட்டு விழா!

புத்தக வெளியீட்டு விழா!

மேட்டூர்த் தமிழ்ச் சங்கம், வாசகர் வட்டம், மேட்டூர் கிளை நூலகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நூலாசிரியர் அமிர்தம் பீட்டர் ராஜன் அவர்கள் எழுதிய ‘தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பகுதி-1 தமிழர்கள் வீழ்ந்த வரலாறு’ என்ற நூல் 29.05.2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் மேட்டூர், பொது நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். மேட்டூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆசிரியர் கு. பாரி முன்னிலை வகித்தரார். ஆய்வறிஞர் இரா.இலட்சுமி நாராயணன் வரவேற்புரையாற்றினார். கவிஞர் வை. சரவணன் நூல் அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் சிலம்பரசன் நூல் திறனாய்வு செய்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பகுதி-1 தமிழர்கள் வீழ்ந்த வரலாறு புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் அனுராதா புத்தகத்தை பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் அமிர்தம் பீட்டர் ராஜன் நூல் ஏற்புரையாற்றினார். மருத்துவர் சந்திரமோகன், எழுத்தாளர் மே. கா கிட்டு, வழக்கறிஞர்...

மடத்துக்குளம் மோகன் நினைவுநாள் பரப்புரைக் கூட்டங்கள்!

மடத்துக்குளம் மோகன் நினைவுநாள் பரப்புரைக் கூட்டங்கள்!

மறைந்த மடத்துக்குளம் மோகன் (கழகத் தலைமைக் குழு உறுப்பினர்) அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் சூன்-1, 2026 திங்கள் காலை 10 மணி அளவில் மடத்துக்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலையில் மடத்துக்குளம் மோகன் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழ் வணக்கங்களையும் பெரியாரின் கொள்கை முழக்கங்களையும் கழகத் தோழர்கள் எழுப்பினார்கள். நிகழ்விற்கு மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் சு.சிவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்களுக்கு மடத்துக்குளம் மோகன் குடும்பத்தினர் காலைச் சிற்றுண்டி வழங்கி சிறப்பித்தனர். தொடக்க உரையாக கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் ‘பெரியாரின் கொள்கைகளை, சுயமரியாதைக் கருத்துகளை தோழர் மடத்துக்குளம் மோகன் அவர்கள் பட்டித்தொட்டி எல்லாம்...

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் நினைவேந்தல்!

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் நினைவேந்தல்!

கோவை மாவட்டக் கழகத்தினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரியார் பெருந்தொண்டர், மறைந்த கோவை மாவட்டக் கழகத் தலைவர் பா. இராமச்சந்திரன் அவர்கள் 17.05.2026 அன்று மறைவுற்றார், அவரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில் மேட்டுப்பாளையம், கெண்டையூர் பகுதியில் உள்ள இராமச்சந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. கோவை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார்,கோவை மாநகரச் செயலாளர் வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இராமசந்திரன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, கழக சமூகஊடகப் பொறுப்பாளர் பரிமளாராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் வீ. சிவகாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்டப் பொறுப்பாளர் விஷ்ணு, தி.க மாவட்டத் தலைவர் ச. வேலுச்சாமி, பவானி நதிநீர் மற்றும்...

கோவையில் பேருந்து தீண்டாமை முடிவுக்கு வந்தது கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கு வெற்றி!

கோவையில் பேருந்து தீண்டாமை முடிவுக்கு வந்தது கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கு வெற்றி!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் கெம்பனூர் கிராமத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பேருந்து தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட்டமாக நடத்தாமல் கிராமங்களில் நிலவும் தீண்டாமை அவலங்களின் பட்டியலை தயாரிக்கும் செயல்திட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் இறங்கியது. அப்போதுதான் இந்த பேருந்துத் தீண்டாமை கவனத்திற்கு வந்தது. பேருந்து நிற்கும் இறுதி முனையமாக இந்த ஊர் இருந்த காரணத்தினால் பட்டியல் இனப் பிரிவினர் பேருந்துகளில் உட்கார்ந்து விடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கட்சிகளைக் கடந்து ஆதிக்க ஜாதியினர் கைகோர்த்துக் கொண்டு பேருந்து ஊருக்கு வராமல் தடுப்பதில் ஜாதி வெறியுடன் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் கவனத்தில் கொண்டு வந்தும் போக்குவரத்துத் துறை அலட்சியம் செய்தது. இந்தக் கோரிக்கைக்காக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்...

தமிழீழ எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம்!

தமிழீழ எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம்!

புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி சார்பில் 2009 மே-18 தமிழ் இன அழிப்பு நாள் நினைவுகளோடு, “தமிழீழ வரலாற்றில் பெண் புலிகள் நூல்கள் அறிமுகம் நிகழ்ச்சி” 18.05.2026 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரி, மறைமலை அடிகள் சாலை, தோழமை ஒன்றுகூடல் அலுவலகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி தலைவர் அன்பு எழிலன் வரவேற்புரையாற்றினார். எந்த வித எதிர்பார்ப்புமின்றி பெரியாரிய கொள்கைக்காக கழகப் பணிகளை செய்தும், கொள்கைக்காக பல வழக்குகளை சந்தித்து சிறைக்குச் சென்ற தோழர்.கடலூர் தாமரைகண்ணன் முயற்சியில் தமிழ் ஈழ எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நூல் வடிவம் பெறுகின்றன. அவருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் லோகு. அய்யப்பன் பாராட்டி சால்வை அணிவித்தனர். “கஸ்தூரியின் ஆக்கங்கள், வானதியின் கவிதைகள், மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு, தமிழீழ தியாகச்சுடர் அன்னைபூபதி, கனவுக்கு வெளியேயான உலகு, தமிழீழ...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்; கழகத் தலைவர் பங்கேற்பு!

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்; கழகத் தலைவர் பங்கேற்பு!

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சேலம், டவுன் ரயில்நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஆர். பி. மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மா. லெ. மா மாவட்டச் செயலாளர் மு. மாரியப்பன் வரவேற்புரையாற்றினார். மக்கள் தேசம் கட்சியின் மாநில செயலாளர் சி. சுலைமான் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சந்தியூர் இரா. பார்த்திபன் மார்க்சியத்தின் பார்வையில் அரசியல் அதிகாரம் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலன் மதவாத அரசியலும், மார்க்கியமும் சர்வதேச பாதையும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்திய ஒன்றியமும், மாநில சுயாட்சியும் என்ற தலைப்பில் பேசுகையில் இந்திய ஒன்றியம் என்பது பல்வேறு...