Category: திவிக

சென்னை, திருப்பூரில் காமராசர் சிலைக்கு மரியாதை

சென்னை, திருப்பூரில் காமராசர் சிலைக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக கல்வி வள்ளல் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாளை போற்றும் விதமாக 15-07-2026 புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் அனுப்பர்பாளையம், நகராட்சி அருகில் அமைந்துள்ள கர்மவீரர் காமராசர் அவர்களின் சிலைக்கு கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் கர்மவீரர் காமராசர் அவர்கள் குறித்து கொள்கை முழக்கமிட தொடர்ந்து தோழர்கள் முழக்கமிட்டனர். நிகழ்வில் மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகரத் துணைத் தலைவர் மாரிமுத்து, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் மற்றும் கழகத் தோழர்கள் சிரிஜா, இனியன், குணா, பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை: காமராஜர் பிறந்தநாளையொட்டி, மாவட்டக் கழகத்தின் சார்பில், ஜூலை-15 காலை 9 மணிக்கு, சென்னை சிம்சன் ஜிம்கானா கிளப் முன்புள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து, கொள்கை முழக்கமிட்டு தோழர்கள்...

தயாராகிறது சேலம் மாவட்டம்!

தயாராகிறது சேலம் மாவட்டம்!

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் ஜூலை-17, வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் மேட்டூர் நகரத் தலைவர் மார்டின் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்வரும் ஆகஸ்ட்-6 முதல் 12 வரை நடைபெற இருக்கும் “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயணம்” சிறப்பாக நடைபெற சேலம் மாவட்டக் கழகம் முழு ஒத்துழைப்பை வழங்குவது என்றும், சேலம்-நாகர்கோவில் பயணக் குழுவின் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சேலம் அணியின் இசைக்குழு, கடைவீதி வசூல், புத்தக விற்பனை, ஊடக பிரிவு, பேச்சாளர்கள் பட்டியல் குறித்தும் பயணத்திற்கான நன்கொடை திரட்டுதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், சேலம் மாவட்ட பொருளாளர் சம்பத், மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், வனவாசி நகரச் செயலாளர்...

பார்ப்பன சடங்குகளை ஒதுக்கிய பி.என் சண்முகம் நினைவேந்தல்!

பார்ப்பன சடங்குகளை ஒதுக்கிய பி.என் சண்முகம் நினைவேந்தல்!

மறைந்த பி. என் சண்முகம் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு ஜூலை-17, வெள்ளிக்கிழமை 12 மணி அளவில் திருப்பூர், பலவஞ்சிப்பாளையம் பகுதியில் உள்ள மறைந்த பி. என் சண்முகம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. சர்வேஸ்வரன் (அ.தி. மு.க) அவர்கள் வரவேற்புரையாற்றினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர், பி.என் சண்முகம் அவர்களின் உறவினர் கா.சு. நாகராசன் பேசுகையில் என்னுடைய தந்தையார், தாயார் இறந்த பிறகு குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டும், என் தாயார் மறைந்த பிறகு அவரின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கியதைக் கண்டும், உயிரற்ற உடல் மருத்துவ மாணவர்களுக்கு இவ்வளவு பயன்படுகிறதா? என்பதை உணர்ந்து மறைந்த பி.என். சண்முகம் அவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பொது நல பார்வையிலும், தொலைநோக்குப் பார்வையிலும் சிந்தித்து உயிருடன் இருக்கும் போது உடற்கொடை வழங்கும் சான்றிதழை பூர்த்தி செய்து வழங்கினார். எங்கள் வீட்டில்...

ஈழத்தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்; 13-ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!

ஈழத்தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்; 13-ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!

2013-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை மைலாப்பூர் தபால் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசி சேதம் விளைவித்ததாகக் கூறி, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தபசி குமரன், உமாபதி, ராவணன், மனோகரன், மாரிமுத்து, ஜான்சன் மற்றும் முகிலன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 13 ஆண்டுகளாக வழக்கு நடந்தது. தோழர்கள் நீதிமன்றம் சென்று வந்தனர். இது ஈழத் தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம். இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டு வரும் 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட அனைத்து சாட்சிகளும் வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அன்றாடம்...

‘ஆணவக் கொலை’ தடுப்புச் சட்டம் வருமா?

‘ஆணவக் கொலை’ தடுப்புச் சட்டம் வருமா?

கருநாடக மாநில அரசைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் நீதிபதி சந்துரு `டைம்ஸ் ஆப் இந்தியா’ ஜூலை 17, நாளேட்டில் எழுதிய கட்டுரை. திருமணச் சட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை உருவாக்கிய தமிழ்நாடு, ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவருவதில் ஏன் இன்னும் தாமதிக்கிறது? கர்நாடகா ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளது. நாம் ஏன் இல்லை? இந்தக் கொலைகளில் எந்தவிதமான “குடும்ப கௌரவமும்” இல்லை. இத்தகைய ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு உடனடியாக ஒரு தனிச்சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. சமூக நீதி மற்றும் முற்போக்கு சீர்திருத்தங்களில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டதாக பெருமை பேசும் தமிழ்நாட்டில், “ஆணவக் கொலைகளைத்” (Honour Killings) தடுக்க தனிச்சட்டம் தேவையா? என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது. இதேவேளை, கர்நாடகா 2025, மார்ச் மாதத்தில் இதற்கென ஒரு சட்டத்தை இயற்றி இந்தத் துறையில்...

நங்கவள்ளி கழகத் தோழர்களின் சிறப்பான செயல்!

நங்கவள்ளி கழகத் தோழர்களின் சிறப்பான செயல்!

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் தலைவர்களின் படங்கள் வரையப்பட்டன. அதில் தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படங்களை மட்டும் பெயர் பட்டியலில் இருந்தும் அவற்றை வரையாமல் தவிர்த்தனர்.கழகத் தோழர்கள் நங்கவள்ளி கிருஷ்ணன், சந்திரசேகரன், உமாசங்கர், மனோஜ் ஆகியோர் பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களிடம் இதுகுறித்து வலியுறுத்தினர். நமது கோரிக்கையை ஏற்று தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படங்கள் வரையப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நடந்த வரையும் பணி 10.07.2026 அன்று முடிவடைந்துள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 16072026

தோழர் ஆம்ஸ்ட்ராங் 2-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் ஜூலை-5 அன்று வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

தோழர் ஆம்ஸ்ட்ராங் 2-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் ஜூலை-5 அன்று வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் இதழ் 16072026

சேலத்தில் ஆணவப் படுகொலைக்கு கண்டனம்!

சேலத்தில் ஆணவப் படுகொலைக்கு கண்டனம்!

மயிலாடுதுறையில் நடந்த ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலையைத் தடுக்கும் சிறப்புத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டம் 07.07.2026 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) சார்பில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் தன் உரையில் “இந்தியா முழுவதும் ஜாதி மீறி காதலிக்கும் ஒரே காரணத்திற்காக ஜாதி கௌரவம் என்னும் பெயரில் காதலர்கள் காதல் இணையர்கள் கொடூரமாக கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 4 ஆணவக் கொலைகள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஜாதி ஆணவக் கொலைகள் நடந்து இருக்கின்றன. இவை அனைத்திற்கும் ஒரே காரணம் மனு சாஸ்திரத்தை இந்து மதத்தவர்கள் படிக்காமல் இருக்கலாம்; ஆனால் அவற்றின் இதிகாசபுராணக்...

பரப்புரை; சேலம், திருப்பூர் மாவட்டங்கள் தீவிரம்!

பரப்புரை; சேலம், திருப்பூர் மாவட்டங்கள் தீவிரம்!

சேலம்: 06.07.2026 திங்கள் மாலை 4.00 மணிக்கு கருப்பூரில் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் இல்லத்தில், மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தலைமையில், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் முன்னிலையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் கடந்த 28.06.2026 அன்று திருப்பூரில் நடைபெற்ற தலைமைக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் தென்மாவட்டங்களுக்கு பரப்புரை பயணம் மேற்கொள்வது குறித்தும், பயணக் குழுவின் தொடக்க நிகழ்வாக 05.08.2026 அன்று மாலை 4.00 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரையை சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் தொடங்குவது எனவும், அதன்பிறகு பரப்புரைக் குழு நாகர்கோவில் சென்றடைந்து காரைக்குடி நிறைவு விழா மாநாட்டு திடலை 12.08.2026 அன்று வந்தடையும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதிகாரத்தில் கால் பதிக்காத குரலற்றசமூகங்களின் உரிமைக்கு கருத்தரங்குகள் நடத்துவது, தந்தை பெரியார் பிறந்தநாளை குடும்ப விழாவாக நடத்துவது, பிரச்சார...

பரப்புரைக்கு தயாராகும் சென்னை மாவட்டக் கழகம்!

பரப்புரைக்கு தயாராகும் சென்னை மாவட்டக் கழகம்!

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், ஜூலை-5 மாலை 6 மணிக்கு, கழகத் தலைமை அலுவலகத்தில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் நடைபெற்றது. குரலற்றோரின் குரலாக கருத்தரங்கங்கள் நடத்துவது, தென் மாவட்டங்களுக்கு பரப்புரைப் பயணம் மேற்கொள்வது, பெரியார் பிறந்தநாளை குடும்ப விழாவாக நடத்துவது, சமூக வலைத்தள செயல்பாடுகள், தேர்தல் முடிவுகள், பிரச்சார அணுகுமுறை, நன்கொடை திரட்டுதல், மாநாட்டு சுவரெழுத்து, பயணப் பெயர் பட்டியல் தயாரிப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பரப்புரைப் பயணத்தை சிறப்பாக நடத்துவது குறித்து தோழர்கள் கருத்துகளை வழங்கினர். குறைந்தது 20 தோழர்கள் பயணக்குழுவில் பங்கேற்க வேண்டும், பெண் பேச்சாளர்களும், கலைக்குழுவினரும் இடம் பெற வேண்டும், பயண நோக்கம் குறித்த டீசர்ட்டை தயாரிப்பது, சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாள் பயணத்தையும் பல்வேறு நவீன வடிவத்தில் கொண்டு போய் சேர்ப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டன. உடனுக்குடன் செய்திகளை பதிவேற்றுவதற்கும் குழு ஒன்றை...

கரூரில் ஈழப் படைப்பாளிகளின் நூல்கள் அறிமுகம்

கரூரில் ஈழப் படைப்பாளிகளின் நூல்கள் அறிமுகம்

தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக தியாகி “பொன் சிவகுமரனின்” 52 -ஆவது ஆண்டு நினைவுகளோடு மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசும் 11 நூல்கள் அறிமுக விழா 27.06.2026 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் கரூர், அய்யப்பா சேவா சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சண்முகம் (சாமானிய மக்கள் கட்சி ) அவர்கள் தலைமை வகித்தார். முகிலன் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் – காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்) அவர்கள் முன்னிலை வகித்தார். ஆ. பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிவேதா சத்யாராஜ், முனைவர் சாலினி (பேராசிரியர், ஆய்வாளர்), முனைவர் ப. கிருட்டிணவேணி (முதுகலை அறிவியல் யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகியோர் நூல்களைப் பற்றி கருத்துரையாற்றினர். புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் நூல்களைப் பற்றி மதிப்புரையாற்றினார். “கஸ்தூரியின் ஆக்கங்கள், வானதியின் கவிதைகள், மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு, தமிழீழ...

கேத்ரின்-இலக்கியன் மதம் கடந்த மணவிழா!

கேத்ரின்-இலக்கியன் மதம் கடந்த மணவிழா!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் சிவானந்தம் – சங்கீதா இணையரின் மகன் இலக்கியன் அவர்களுக்கும், கேரளா மாநிலம், திருச்சூர் ஜோ. மனோஜ்- ம. மினி இணையரின் மகள் கேத்ரின் ஆகியோருக்கும் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11.00 மணி அளவில் , தாராபுரம் லயன்ஸ் மஹாலில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணை நல ஒப்பந்தம் செய்து வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் வாழ்த்துரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தவைவர் வீ. சிவகாமி ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். கழகத் தோழர் மடத்துக்குளம் சிவானந்தம் தீவிர கழகப் களப்பணியாளர். மறைந்த கழகச் செயல்வீரர் மடத்துக்குளம் மோகன் அவருடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பெரும் பங்காற்றியதையும்...

கள்ளக்குறிச்சியில்  நீட் தேர்வுக்கு     எதிரான ஒரு நாள் பரப்புரை!

கள்ளக்குறிச்சியில் நீட் தேர்வுக்கு எதிரான ஒரு நாள் பரப்புரை!

கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில், 20-06-2026 சனிக்கிழமை அன்று கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் மருத்துவக் கனவைச் சிதைக்கும் `நீட்’ தேர்வை இரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு நாள் பரப்புரைப் பயணம் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பாபா தலைமையில் நடைபெற்றது. காலை 10 மணி மூங்கில்துறைப்பட்டு, காலை 12 மணி மேல் சிறுவள்ளூர் கூட்டு சாலை, மாலை 3 மணி வாணாபுரம் கூட்டுச்சாலை, மாலை 6 மணிக்கு கடுவனூர் பேருந்து நிலைத்தியலும் நடைபெற்றது. இதில் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார், மாவட்டச் செயலாளர் க.ராமர், மாவட்டத் தலைவர் க.மதியழகன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.அ.இளையரசன் திமுக கல்லக்குறிச்சி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விசய் ஆனந்து மற்றும் சி.பி.அய்யை சார்ந்த சையத் கரீம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மு.நாகராஜ், ரிஷிவந்திய ஓன்றிய அமைப்பாளர் இரா. கார்மேகம், வீ.முருகன், ரிஷிவந்திய ஒன்றியத் தலைவர் மா.குமார், கி.ஆனந்தன் ஏ.ஜெயப்பிரகாஷ் சு.வல்லரசு,...

வி.பி.சிங் பிறந்தநாள்

வி.பி.சிங் பிறந்தநாள்

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிறகிந்தநாளையொட்டி, ஜூன் 25, 2026 காலை 10 மணிக்கு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், சென்னை பிரசிடென்ஸி கல்லூரி வளாகத்தில் உள்ள வி.பி. சிங் சிலைக்கு மாலை அணிவித்து, தோழர்கள் கொள்கை முழக்கமிட்டனர். நிகழ்வில், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன், மாவட்டத் தலைவர்கள் சேத்துப்பட்டு இராசேந்திரன், மா. வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பகுதி அமைப்பாளர் எம்.ஜி.ஆர் நகர் துரைராசு, முழக்கம் உமாபதி, ராஜன், விஜயன், தோழர்கள் ஏசுகுமார், மயிலை மனோகர், சு.பிரகாஷ், பாரி சிவா, சிகாமணி, அசோக், வீரா, லட்சுமணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 02072026

காவல் நிலையத்தில் கிடா வெட்டுவதா? கழகம் புகார்; அரசு உடனடி நடவடிக்கை!

காவல் நிலையத்தில் கிடா வெட்டுவதா? கழகம் புகார்; அரசு உடனடி நடவடிக்கை!

சேலம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக கிடாவெட்டி மாந்திரீக பூஜை போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் 26.06.2026 புகார் மனு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தி விவரம்: கடந்த 20.06.2026 ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் “குற்றங்கள் குறைய வேண்டும்” என்பதற்காக காவல்துறையினரே கிடாவை பலியிட்டு, அதன் ரத்தத்தை காவல் நிலைய கட்டிடத்தின் நான்கு மூலைகளிலும் பூசி, மாந்திரீக பூஜை நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ஆணைப்படி, அரசு அலுவலகங்கள் , காவல் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்களிலும் மதச்சார்புடைய வழிபாடுகள், பூஜைகள், கடவுள் படங்கள், மாந்திரீக சடங்குகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையே அரசு ஆணையை மீறி, மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில்...

வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

1.காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், 2.ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தனிச் சட்டம் இயற்றிக் கோரியும் வேலூர் மாவட்டக் கழகம் சார்பாக 20.6.2026 மாலை குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு மாவட்டத் தலைவர் காத்தவராயன், சிபிஎம் குடியாத்தம் நகரச் செயலாளர் குபேந்திரன், மாவட்டச் செயலாளர் சிவா நந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முரளி தன்மானன் நன்றி கூறினார். கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 25062026

நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு

நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு

நிமிர்வோம் வாசகர் வட்ட 32-வது சந்திப்பு, ஜூன் 14,2026 (ஞாயிறு) மாலை 6 மணிக்கு, கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தின் அமைப்பாளர் ர.பிரகாசு நிகழ்வை ஒருங்கிணைத்தார். “தேர்தல் முடிவுகளை எப்படி எடுத்துக்கொள்வது?” எனும் தலைப்பில், தோல்விக்கான காரணங்கள் குறித்தும், மக்களின் முதன்மையான ஊடகமாக மாறியுள்ள சமூக வலைத்தளங்களில் பகுத்தறிவுப் பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுக்கவேண்டிய அவசியம் குறித்தும், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் உரையாற்றினார். “பேருந்து தீண்டாமையை ஒழித்த இயக்கம்!” எனும் தலைப்பில், தோழர்கள் கெம்பனூரில் கள ஆய்வு செய்த அனுபவங்களையும், கோவை கெம்பனூர் வரை வரவிடாமல் தடுக்கப்பட்டிருந்த 21-ஆம் எண் பேருந்தை மீண்டும் வரவைக்க நடந்த போராட்டங்களின் வெற்றி குறித்தும், கோவையில் தலைமைக் குழு உறுப்பினர் நிர்மல்குமார் இணையவழியில் உரையாற்றினார். நிறைவாக தலைமையுரையாற்றிய தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், பாஜகவின் சமஸ்கிருத திணிப்பைப் பற்றியும், கடந்த காலங்களில் பெரியார் இயக்கம் முன்னெடுத்த வீரஞ்செறிந்த போராட்டங்களைப் பற்றியும்...

நிலாச்சோறு உணவக உரிமையாளர் தோழர் ரகுநாத் அவர்களின் குடும்பப் பின்னணி:

நிலாச்சோறு உணவக உரிமையாளர் தோழர் ரகுநாத் அவர்களின் குடும்பப் பின்னணி:

1950 அக்டோபரில் பெரியார் அறிவித்த வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டத்தில் 8.11.1950 அன்று தோழர் ரகுநாத் அவர்களின் பாட்டியும் சேலம் சிவதாபுரம் திராவிடர் கழகத்தின் பொருளாளருமான அகிலாண்டம் அவர்களும், அவரது மாமனார் 80 வயது உள்ள மாரி அவர்களும், அவரது குழந்தைகள் ஆன 13வயது சரஸ்வதி, 10 வயது சொர்ணாம்பாள், 8வயது ஜெகநாதன், 3வயது திராவிட கனி, 1,1/2 ஒன்றரை வயது பாண்டியராசா ஆகியவர்களுடன் கைதாகிறார். அதில் குழந்தைகளில் 1,1/2 வயது பாண்டிராசாவைத் தவிர மற்ற நால்வரையும் அன்னையை விட்டுப் பிரித்து Children’s Society-யில் தனியாக காவலில் வைக்கப்படுகிறார்கள். ஒரு வார தண்டனைக்குப் பின் விடுதலையான அகிலாண்டம் அம்மாள், அவரது கணவரும் சேலம் சிவதாபுரம் காட்டூர் திராவிடர் கழக தலைவருமான எஸ் எம் வெள்ளியங்கிரி அவர்களும் 21.11.1950 அன்று மீண்டும் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி உள்ளார்கள். ஒரு மாதம் தண்டனை வழங்கப்பட்டு 22.12.1950 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 16.5.1983 அன்று...

பயிலரங்கத்தின் வெற்றி; பயிற்சி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

பயிலரங்கத்தின் வெற்றி; பயிற்சி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

சேலம் பயிலரங்கத்தில் பங்கேற்றவர்கள் நிகழ்வின் இறுதியில் பயிலரங்கம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நாமக்கல் ரேஷிகா வர்சினி: பெரியார் குறித்த எனக்குத் தெரிந்த விவரங்களைத் தாண்டி பெரியார் பற்றிய வரலாறுகளை விரிவாக கற்றுக் கொள்ள முடிந்தது. இது என்னுடைய படிப்புக்கு உதவியாக இருக்கும். நான் பார்ப்பனரல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனைத்து சடங்குகளையும் பின்பற்றி வந்தது என்னுடைய குடும்பம். இந்த பயிலரங்கத்துக்கு வந்ததற்குப் பிறகு விடுதலை அடைந்த உணர்வை எட்டி இருக்கிறேன். இனி நல்ல வாழ்க்கை முறைக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் பெரியார் தான் என்று கூறினார். இசக்கி ராஜன் (திருநெல்வேலி): இங்கே வருவதற்கு முன் பெரியார் குறித்த நான் நிறைய படித்திருக்கிறேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இங்கே தோழர்கள் பேசியதற்குப் பிறகு நான் இன்னும் படிக்காதது நிறைய இருக்கு என்று உணர்ந்து கொண்டேன். ஜாதி குறித்தும் சடங்குகள் எப்படி பெண்கள் வழியாக கடத்தப்படுகிறது என்பது பற்றியும் பெரியாரின்...

கருத்து செறிவுடன் நடந்த     கழக இளைஞரணி பயிலரங்கம்

கருத்து செறிவுடன் நடந்த கழக இளைஞரணி பயிலரங்கம்

சேலம் மாவட்டக் கழக இளைஞரணி நடத்திய இரண்டு நாள் பயிலரங்கத்தில் எண்பது இளைஞர்கள் பெண்களும், ஆண்களுமாய் பங்கேற்றனர். கால மாற்ற சூழலில் பெரியார் கருத்தியல் மற்றும் பெரியார் இயக்கத்தின் தேவை குறித்து பயிலரங்கம் விரிவாக விவாதித்தது. சேலம் மாவட்ட இளைஞர் அணி பயிலரங்கம் ஜூன்20,21 தேதிகளில் சேலம் நிலாச்சோறு உணவக அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. 20.06.2026 சனிக்கிழமை இளைஞர்களின் எழுச்சியோடு தொடங்கியது. தோழர்கள் லதா, சத்யா, பொன்ராஜ், உமாபதி குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து “இன்றைய சமூக அரசியல் சூழலில் பெரியாரியத்தின் தேவை” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முதல் வகுப்பினை தொடங்கினார். தேநீர் இடைவேளைக்கு பிறகான இரண்டாவது அமர்வில் “சமூக ஊடகங்கள் – பயன்படுத்தல்” என்ற தலைப்பில் ( Wild South Raiders podcast) தோழர் கக்காஷி காணொளி மூலமாக விளக்கி வகுப்பெடுத்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான மூன்றாவது அமர்வில்...

பயிலரங்கம் நடத்த கோவை மாவட்டக் கழகம் திட்டம்!

பயிலரங்கம் நடத்த கோவை மாவட்டக் கழகம் திட்டம்!

ஜூன்-6,மாலை 4.30மணி அளவில் கோவை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்ப் புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: 21 ஆம் நம்பர் அரசுப் பேருந்து ஜாதிய தீண்டாமைகளைத் தகர்த்து கோவை தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு பல வருடங்களுக்குப் பிறகு சென்றது. அதற்கு காரணமாக இருந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, முதலமைச்சர் ஜோசப் விஜய் அகியோருக்கு நன்றி பாராட்டுகிறோம் ● பெரியார் கொள்கைகளை பரப்புவதற்கு தொடர்ந்து தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது; ● சமூக வலை தளங்களில் இளம் தலைமுறையினர் மூலம் புதிய(apps) செயலிகளைப் பயன்படுத்தி பெரியாரிய கொள்கைகளைக் கொண்டு செல்வது; ● விரைவில் புதிய தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார் , வெங்கட் ,சிவராசு,கிருஷ்ணன் சதீஷ், ஸ்டாலின் ராஜா,சத்தியமூர்த்தி, தரணி, நவீன், கதிரவன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம்...

கரட்டுப்பாளையம் செல்லப்பன் 82 வயதிலும் கொள்கை உறுதி!

கரட்டுப்பாளையம் செல்லப்பன் 82 வயதிலும் கொள்கை உறுதி!

சென்னிமலை கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் அவர்கள் 17 வயதில் தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சமூக மாற்றத்திற்கான பெரியாருடைய எதிர்நீச்சல் பணிக்கு வந்தவர். தற்போது 82 வயதிலும் பெரியாரியப்பற்றுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழராக வாழ்ந்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக பெரியார் பெருந்தொண்டர் சென்னியப்பன் அவர்களின் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், திருப்பூர் முத்து, அய்யப்பன் ஆகியோர் ஜூன் 11, 2026 அன்று மாலை தோழரின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். சிறுவயதில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் மதச் சடங்குகளுக்கு எதிராகவும் அன்றைய 1960,1970 காலகட்டங்களில் இருந்த மிகக் கொடுமையான ஜாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக செய்த பணிகளையும் பெரியாரிய இயக்கங்களில் நடந்த போராட்டங்கள் பிரச்சாரங்கள் சிறைக்குச் சென்று வந்த அனுபவம் ஊரில் கவுண்டர்கள் தாழ்த்தப்பட்டவர்களை நடத்திய ஜாதிக் கொடுமைகள் மற்றும் கவுண்டர்கள்...

புத்தக வெளியீட்டு விழா!

புத்தக வெளியீட்டு விழா!

மேட்டூர்த் தமிழ்ச் சங்கம், வாசகர் வட்டம், மேட்டூர் கிளை நூலகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நூலாசிரியர் அமிர்தம் பீட்டர் ராஜன் அவர்கள் எழுதிய ‘தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பகுதி-1 தமிழர்கள் வீழ்ந்த வரலாறு’ என்ற நூல் 29.05.2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் மேட்டூர், பொது நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். மேட்டூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆசிரியர் கு. பாரி முன்னிலை வகித்தரார். ஆய்வறிஞர் இரா.இலட்சுமி நாராயணன் வரவேற்புரையாற்றினார். கவிஞர் வை. சரவணன் நூல் அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் சிலம்பரசன் நூல் திறனாய்வு செய்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பகுதி-1 தமிழர்கள் வீழ்ந்த வரலாறு புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் அனுராதா புத்தகத்தை பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் அமிர்தம் பீட்டர் ராஜன் நூல் ஏற்புரையாற்றினார். மருத்துவர் சந்திரமோகன், எழுத்தாளர் மே. கா கிட்டு, வழக்கறிஞர்...

மடத்துக்குளம் மோகன் நினைவுநாள் பரப்புரைக் கூட்டங்கள்!

மடத்துக்குளம் மோகன் நினைவுநாள் பரப்புரைக் கூட்டங்கள்!

மறைந்த மடத்துக்குளம் மோகன் (கழகத் தலைமைக் குழு உறுப்பினர்) அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் சூன்-1, 2026 திங்கள் காலை 10 மணி அளவில் மடத்துக்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலையில் மடத்துக்குளம் மோகன் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழ் வணக்கங்களையும் பெரியாரின் கொள்கை முழக்கங்களையும் கழகத் தோழர்கள் எழுப்பினார்கள். நிகழ்விற்கு மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் சு.சிவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்களுக்கு மடத்துக்குளம் மோகன் குடும்பத்தினர் காலைச் சிற்றுண்டி வழங்கி சிறப்பித்தனர். தொடக்க உரையாக கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் ‘பெரியாரின் கொள்கைகளை, சுயமரியாதைக் கருத்துகளை தோழர் மடத்துக்குளம் மோகன் அவர்கள் பட்டித்தொட்டி எல்லாம்...

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் நினைவேந்தல்!

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் நினைவேந்தல்!

கோவை மாவட்டக் கழகத்தினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரியார் பெருந்தொண்டர், மறைந்த கோவை மாவட்டக் கழகத் தலைவர் பா. இராமச்சந்திரன் அவர்கள் 17.05.2026 அன்று மறைவுற்றார், அவரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில் மேட்டுப்பாளையம், கெண்டையூர் பகுதியில் உள்ள இராமச்சந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. கோவை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார்,கோவை மாநகரச் செயலாளர் வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இராமசந்திரன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, கழக சமூகஊடகப் பொறுப்பாளர் பரிமளாராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் வீ. சிவகாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்டப் பொறுப்பாளர் விஷ்ணு, தி.க மாவட்டத் தலைவர் ச. வேலுச்சாமி, பவானி நதிநீர் மற்றும்...

கோவையில் பேருந்து தீண்டாமை முடிவுக்கு வந்தது கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கு வெற்றி!

கோவையில் பேருந்து தீண்டாமை முடிவுக்கு வந்தது கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கு வெற்றி!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் கெம்பனூர் கிராமத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பேருந்து தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட்டமாக நடத்தாமல் கிராமங்களில் நிலவும் தீண்டாமை அவலங்களின் பட்டியலை தயாரிக்கும் செயல்திட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் இறங்கியது. அப்போதுதான் இந்த பேருந்துத் தீண்டாமை கவனத்திற்கு வந்தது. பேருந்து நிற்கும் இறுதி முனையமாக இந்த ஊர் இருந்த காரணத்தினால் பட்டியல் இனப் பிரிவினர் பேருந்துகளில் உட்கார்ந்து விடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கட்சிகளைக் கடந்து ஆதிக்க ஜாதியினர் கைகோர்த்துக் கொண்டு பேருந்து ஊருக்கு வராமல் தடுப்பதில் ஜாதி வெறியுடன் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் கவனத்தில் கொண்டு வந்தும் போக்குவரத்துத் துறை அலட்சியம் செய்தது. இந்தக் கோரிக்கைக்காக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்...

தமிழீழ எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம்!

தமிழீழ எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம்!

புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி சார்பில் 2009 மே-18 தமிழ் இன அழிப்பு நாள் நினைவுகளோடு, “தமிழீழ வரலாற்றில் பெண் புலிகள் நூல்கள் அறிமுகம் நிகழ்ச்சி” 18.05.2026 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரி, மறைமலை அடிகள் சாலை, தோழமை ஒன்றுகூடல் அலுவலகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி தலைவர் அன்பு எழிலன் வரவேற்புரையாற்றினார். எந்த வித எதிர்பார்ப்புமின்றி பெரியாரிய கொள்கைக்காக கழகப் பணிகளை செய்தும், கொள்கைக்காக பல வழக்குகளை சந்தித்து சிறைக்குச் சென்ற தோழர்.கடலூர் தாமரைகண்ணன் முயற்சியில் தமிழ் ஈழ எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நூல் வடிவம் பெறுகின்றன. அவருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் லோகு. அய்யப்பன் பாராட்டி சால்வை அணிவித்தனர். “கஸ்தூரியின் ஆக்கங்கள், வானதியின் கவிதைகள், மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு, தமிழீழ தியாகச்சுடர் அன்னைபூபதி, கனவுக்கு வெளியேயான உலகு, தமிழீழ...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்; கழகத் தலைவர் பங்கேற்பு!

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்; கழகத் தலைவர் பங்கேற்பு!

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சேலம், டவுன் ரயில்நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஆர். பி. மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மா. லெ. மா மாவட்டச் செயலாளர் மு. மாரியப்பன் வரவேற்புரையாற்றினார். மக்கள் தேசம் கட்சியின் மாநில செயலாளர் சி. சுலைமான் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சந்தியூர் இரா. பார்த்திபன் மார்க்சியத்தின் பார்வையில் அரசியல் அதிகாரம் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலன் மதவாத அரசியலும், மார்க்கியமும் சர்வதேச பாதையும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்திய ஒன்றியமும், மாநில சுயாட்சியும் என்ற தலைப்பில் பேசுகையில் இந்திய ஒன்றியம் என்பது பல்வேறு...

எதையும் ஏன்? என்று கேள்வி கேள்!குழந்தைகள் மகிழ்வு பழகுமுகாம்

எதையும் ஏன்? என்று கேள்வி கேள்!குழந்தைகள் மகிழ்வு பழகுமுகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய குழந்தைகள் பழகு மகிழ்வு ஒரு நாள் முகாம் 30.05.2026 சனிக்கிழமை கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. சுகந்தன் பிரபாகரன் (தமிழ்நாடு மாணவர் கழகம்) தலைமை வகித்தார். செ.யாழ் இன்பன் (தமிழ்நாடு மாணவர் கழகம்) முன்னிலையில் நடைபெற்றது. முதல் வகுப்பாக தன்னை அறிதல் என்ற தலைப்பில் `சிறார் நண்பன்’ ஆனந்த் குழந்தைகள் தாங்கள் யார்? தங்களின் அடையாளம் என்ன? வாழ்வில் தாங்கள் அடையவேண்டிய இலக்குகளை எவ்வாறு திட்டமிடுவது? என்பது குறித்து ஒரு கலந்துரையாடலாக, செயல்பாடுகளுடன் வகுப்பு நடைபெற்றது. ஏனென்று கேள்வி கேள்? என்ற தலைப்பிலான வகுப்பை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி நடத்தினார். சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலையும் பெற வேண்டும் என்பதனை குழந்தைகள்...

ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர்களின் தந்தையார் சென்னியப்பன் (73) அவர்கள் உடல் நலக்குறைவின் காரணமாக சில நாட்களுக்கு முன்பு முடிவெய்தினார். 17.05.26 அன்று இரவு நசியனூர் சாமிக்கவுண்டன் பாளையத்தில் உள்ள சண்முகசுந்தரம் இல்லத்துக்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி  ஆறுதல் தெரிவித்தார்.

ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர்களின் தந்தையார் சென்னியப்பன் (73) அவர்கள் உடல் நலக்குறைவின் காரணமாக சில நாட்களுக்கு முன்பு முடிவெய்தினார். 17.05.26 அன்று இரவு நசியனூர் சாமிக்கவுண்டன் பாளையத்தில் உள்ள சண்முகசுந்தரம் இல்லத்துக்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆறுதல் தெரிவித்தார்.

`திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

`திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

மத நல்லிணக்கத்தை பேசும் “திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய களம் என்ற அமைப்பு இந்த படத்தை திரையிடும் முயற்சிகளில் ஈடுபட்டது. திராவிட மாடல் ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுதும் எந்த தடையுமின்றி இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு வந்தது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் திரையிடப்பட்டது. `திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்!’ என்ற வெறிக்கூச்சலோடு மதவாத சக்திகள் சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதையும்; நீதிமன்ற தீரப்பின் முரண்பாடுகளையும் இந்த ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது.தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கும் இந்த முயற்சியை திராவிட மாடல் ஆட்சி உறுதியாக முறியடித்தது. காவல்துறை அனுமதி மறுப்பதற்கு மேலிட உத்தரவு என்ற ஒரு காரணத்தை கூறுகிறது. எந்த மேல் இடத்திலிருந்து உத்தரவு வந்தது? பெரியார் அம்பேத்கரை தங்களின் கொள்கைத் தலைவராக அறிவித்துக் கொள்ளும் த.வெ.க ஆட்சி அவர்கள் வலியுறுத்திய கொள்கைக்கு...

சென்னையில் கழகம் ஆர்பாட்டம்  பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது!

சென்னையில் கழகம் ஆர்பாட்டம் பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது!

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக்கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “ஒன்றிய அரசே! பாடத்திட்டத்தில் இந்தியைத் திணிக்காதே! தமிழ்நாடு அரசே! பி.எம். பள்ளிகளை அனுமதிக்காதே” எனும் உரிமை முழக்க ஆர்ப்பாட்டம், 30/5/26 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில், மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், இரண்யா ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் நோக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – லதா – சத்யா குழுவினரின் பாடல்கள் உணர்வூட்டின. ராஜா தமிழ்தேச மக்கள் முன்னணி மும்மொழிக்கொள்கையின் ஆபத்துகளை படம்பிடித்துக் காட்டினார். தபசி குமரன் “தவெக அமைச்சர்கள் வெளிப்படுத்தும் கருத்துகளில்” அதிருப்தியை வெளிப்படுத்தினார், திமுக வழக்கறிஞர் ஆலிம் அல்புகாரி “கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு...

ஜீவா நூலுக்கு சரியான பதில்!

ஜீவா நூலுக்கு சரியான பதில்!

கம்யூனிஸ்ட்களிலிருந்து ஆள் பிடித்தாரா பெரியார்? சில நாட்களுக்கு முன்பாக முகப்புத்தகத்தில் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. அதில் ஈரோட்டுப் பாதை சரியா? என ஜீவா எழுதிய புத்தகத்தை கண்டு கொளத்தூர் மணியே ஆடிபோனார். அவரால் கூட பதில் சொல்ல முடியாத ஏற்கத்தக்க விமர்சனங்களால் ஆன புத்தகம் அது எனப் பெரியாரை இகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. இதற்கு சரியான பதிலை கொளத்தூர் மணி எழுதினார். மிகச்சரியான புள்ளிவிவரங்களுடனும், அதை அந்தகாலத்தில் நடந்த சம்பவங்களுடனும் ஒப்பிட்டு எழுதியிருப்பது மிக அருமை. என்னைப் போன்றோர் பெரியாரை சரியாக புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது. – ந.யதிந்தர். மதுரை பெரியார் முழக்கம் இதழ் 29052026

ஆனூர்.ஜெகதீசன் துணைவியார் முடிவெய்தினார்

ஆனூர்.ஜெகதீசன் துணைவியார் முடிவெய்தினார்

தோழர் ஆனூர்.ஜெகதீசன் அவர்களின் இணையர் மறைவுற்றார். அவருக்கு கழகம் சார்பில் 13.05.26 அன்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையைச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர். அவரது மறைவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் 15.05.2025 மதியம் 2 மணி அளவில் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஆனூர் ஜெகதீசன் அவர்களது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 29052026

பொம்மைகளை பகுத்தறிவு பேச வைத்த கலைவாணன் விடைபெற்றார்

பொம்மைகளை பகுத்தறிவு பேச வைத்த கலைவாணன் விடைபெற்றார்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் இரங்கல் அறிக்கை: கலைவாணன் (67) இறந்துவிட்டார் என்ற செய்தியை உள்ளம் ஏற்கவே மறுக்கிறது; அவருடன் பழகிய எவரும் அவருடைய நினைவுகளில் இருந்து மீளவே முடியாது. தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் எப்போதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கக்கூடிய உயர்ந்த பண்பாளர். அவரது தந்தை முத்துக்கூத்தன் மிகச்சிறந்த திராவிட இயக்கத்தின் கலைப் போராளி; வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் வழியாக பகுத்தறிவு சிந்தனைகளையும் திராவிட இயக்க கொள்கைகளையும் பரப்பியவர். தனது மகனை மிகச்சிறந்த கொள்கை வாரிசாக வளர்த்து எடுத்தார். மகனுக்கு என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக அவர் சூட்டிய பெயர்தான் கலைவாணன். தந்தையிடமிருந்து பெற்ற உணர்வுகளோடு தனது கலை ஆர்வத்தை மிகச் சிறப்பாக வளர்த்துக் கொண்டார் கலைவாணன். தமிழ்நாட்டில் அபூர்வமாக உள்ள பொம்மலாட்டக் கலைஞர்களில் ஒருவர் கலைவாணன்.புராணங்களுக்கும் மடமை பிரச்சாரங்களுக்கும் பயன்படுத்தப்பட்ட பொம்மலாட்ட கலை வடிவத்தை சமூக மாற்றத்திற்கு பயன்படுத்திய பெருமை முத்துக்கூத்தன் அவர்களுக்கும் கலைவாணன் அவர்களுக்கும் உண்டு. பன்முக கலைத்திறன் அவரோடு இணைந்து...

இரண்டு நாள் பயிரங்கம் சேலம் மாவட்ட இளைஞர் அணி முடிவு!

இரண்டு நாள் பயிரங்கம் சேலம் மாவட்ட இளைஞர் அணி முடிவு!

24.05.2026 அன்று மாலை 5.00 மணியளவில் இளம்பிள்ளையில் சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவசண்முகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் இளைஞர் அணியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்பைடையில்கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூத்த பெரியார் பெருந்தொண்டர் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் வயது மூப்பின் காரணமாக கடந்த 17.05.2026 அன்று காலமானார். அவரது மறைவிற்கு சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், புகழ் வணக்கத்தையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் ஜீன் மாதத்தில் இளைஞர் அணியின் சார்பில் 2-நாள் பெரியாரியல் பயிலரங்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களின் மூலமாக இயக்கச் செயல்பாடுகளையும், இளைய தலைமுறையினருக்குச் சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைச் சிந்தனைகளை இளைஞர் அணி வாயிலாக அதிகளவில் கொண்டு செல்வதெனவும் ஆலோசிக்கப்பட்டது. சேலம் மாவட்ட...

பாலியல் படுகொலை:  சிறுமியின் குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் ஆறுதல்

பாலியல் படுகொலை: சிறுமியின் குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் ஆறுதல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம்,கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பகுதியில் உள்ள சிறுமியின் இல்லத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேரில் சென்று சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். இதில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயக்குமார், கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன், ஆசிரியர் செல்வேந்திரன், சுரேஷ், ராஜா, அழகேஸ்வரி, அவினாசி, குமரன் நகர் பகுதித் தலைவர் தேவராஜ், கார்த்தி, அரவிந்த், பிரசாந்த், அமுதன், கணேஷ், அம்ஜித்கான், கோபிகிருஷ்ணன் கோபால், மணிரத்தினம், ப்ரீத்தி, ராஜேஸ்வரன், அம்முகுட்டி, செந்தமிழ் கலைஅமுதன் ஆகிய மேட்டூர், கொளத்தூர் பகுதி கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 29052026

வந்துவிட்டது கட்சிமாறல் கலாச்சாரம்!

வந்துவிட்டது கட்சிமாறல் கலாச்சாரம்!

தமிழ்நாடு இதுவரை இத்தகைய கட்சி மாறும் காட்சிகளைக் கண்டது இல்லை. குதிரை பேரம் கொடி கட்டி பறக்கிறது. பெரும்பான்மை இல்லாத ’தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ காங்கிரஸ் ஓடிப்போய் ஆதரவு அளித்தது. திமுக அணியில் இருந்து போட்டியிட்டு தவெக, அஇஅதிமுக வேட்பாளர்களைத் தோற்கடித்தவர்கள் ஒரே நாளில் அணி மாறினார்கள். அடுத்த 5-ஆண்டுகளுக்கு தவெக அணிதான் என்று கூச்சமின்றி அறிவித்தார்கள். பாஜக தலையிடாமல் தடுக்கிறோம் என்று காரணம் கூறினார்கள். ஆனால் பாஜகவின் கட்சிமாறல் கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை! காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பல மாநிலங்களில் அந்த கட்சியில் இருந்து எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசி இழுத்து கட்சி மாறசெய்யும் பாஜகவின் அரசியல் கலாச்சாரத்தை அப்படியே இப்போது வெட்கமின்றி பின்பற்றுகிறது காங்கிரஸ். அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளை உடைத்து தனது ஆட்சிகளை நியமித்துக் கொண்டது பாஜக. 2017-ல்...

கழகத்தின் மூத்த பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடை பெற்றார்!; உடல் மருத்துவமனைக்குக் கொடையளிக்கப்பட்டது

கழகத்தின் மூத்த பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடை பெற்றார்!; உடல் மருத்துவமனைக்குக் கொடையளிக்கப்பட்டது

பெரியார் கொள்கைகளை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்த கழகத்தின் மூத்த தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடைபெற்றுக் கொண்டார். அவரது விருப்பப்படி அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. கொளத்தூர் மணி கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள இரங்கல் செய்தி: திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் (83) அவர்கள் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 17.05.26 ஞாயிறு காலை 04.30 மணியளவில் காலமானார். தோழர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்கள் மூத்த பெரியார் தொண்டர் ஆவார்.தந்தை பெரியாரை நேரில் சந்தித்தவர்.தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் கொள்கைகளை பரப்பி அதனை தன் சொந்த வாழ்விலும் கடைபிடித்து செயல்படுத்திய கொள்கைப் பற்றாளர் ஆவார். மிகவும் துணிச்சலாக செயல்படக்கூடியவர். மிகவும் சுறுசுறுப்பானவர்.வயதான நிலையிலும் ஒரு இளைஞரை போல பெரியார் பணி செய்வதில் மிகுந்த ஆர்வமும்...

சென்னிமலை செல்வராஜ் இணையர் முடிவெய்தினார்!

சென்னிமலை செல்வராஜ் இணையர் முடிவெய்தினார்!

கழக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ் அவர்களின் இணையர் பழனியம்மாள் (48) 17.05.2026 முடிவெய்தினார்.. அவர்களது இறுதி நிகழ்வு மாலை 7 மணியளவில் பெருந்துறை மின் மயானத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு பழனியம்மாள் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.   மறைந்த தோழர் பழனியம்மாள் (48) அவர்களின் விருப்பப்படியும், அவரின் இணையர் செல்வராஜ் அவர்களின் விருப்பப்படியும்  பழனியம்மாள் அவர்களின் உடல் கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க  இசைவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அன்னாரின் உடல் தானமாக பெறும் நிலையில் இல்லை என்று தெரிவித்துவிட்ட நிலையில் அவரது கண்கள் மட்டும் தானமாக வழங்கப்பட்டது.   கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ப.ரத்தினசாமி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சமூக ஊடகப் பொறுப்பாளர்...

சார் பதிவாளர் சீனு.தமிழ்ச்செல்வி  பணி நிறைவு பாராட்டு விழா!

சார் பதிவாளர் சீனு.தமிழ்ச்செல்வி பணி நிறைவு பாராட்டு விழா!

தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறையில் 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி, கடந்த 30.04.2026 தேதியன்று பணி நிறைவு பெற்ற தமிழர் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் மா.கந்தசாமி அவர்களின் இணையர், “பெரியார் கொள்கையாளர்” சார்பதிவாளர் சீனு. தமிழ்ச்செல்வி பணி நிறைவு பாராட்டு விழா 02.05.2026 சனிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சீதா திருமண மண்டப்பதில் நடைபெற்றது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். தற்சார்பு விவாயிகள் சங்கத்தின் தலைவர் கி.வே.பொன்னையன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் “அரசுப் பணியில் நியாமாகவும், நேர்மையாகவும் செயல்பட்டதால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளிலும் மற்றவர்கள் ஏற்படுத்திய பிரச்சனைகளிலும் தைரியமாக எதிர்வினையாற்றியும், பெரியாரிய கொள்கையில் (கல்லைப்) போன்று உறுதியாக நின்று செயலாற்றி பணி ஓய்வு பெறும் சீனு. தமிழ்ச்செல்வியை பாராட்டி வாழ்த்துரையாற்றினார். கே.ஏ.செங்கோட்டையன் (பொது பணித்துறை அமைச்சர்), சத்யபாமா (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), வழக்கறிஞர் ப.பா.மோகன், வந்தியத்தேவன் (ம.தி....

கழகத்தை பாராட்டி குரோஷியாவிலிருந்து ஓர் உணர்ச்சி மடல்!

கழகத்தை பாராட்டி குரோஷியாவிலிருந்து ஓர் உணர்ச்சி மடல்!

கழகத்தில் புதிதாக தன்னை இணைத்துக் கொண்ட தோழர் மனோஜ் ரூ.5,000 வளர்ச்சி நிதி அளித்துள்ளார். அய்ரோப்பா குரோஷியாவில் பணியாற்றி வரும் இவர் கழக செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.தீண்டாமை, ஜாதிய வன்கொடுமைகள், பெண் அடிமைத்தனம் மற்றும் ஆதிக்க மனப்பான்மையோடு சக மனிதர்களை இழிவுபடுத்தும் பிற்போக்குச் சக்திகளிடமிருந்து, உழைக்கும் எளிய மக்களைக் காத்து நிற்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தில் என்னை ஒரு துரும்பாக இணைத்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். ஜாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் மனிதர்களைப் பிரித்து, “இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன்; இவன் படிக்க வேண்டும், இவன் குலத்தொழில் செய்ய வேண்டும்” என்று மனித மாண்பைச் சிதைக்கும் ஆரிய பார்ப்பனிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் சமரசமற்ற போர்க்களத்தில் என்னையும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறேன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் புரட்சிகரமான கொள்கைகளை...

மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு!

மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் மே-15, அன்று பகல் 12-மணியளவில் சந்தித்தனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஆகியோர் உடனிருந்தனர். முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வரவேற்று மனம் திறந்து உரையாடினார். “ஆட்சியில் இருந்தபோது உங்களை நாங்கள் சந்திக்கவில்லை; இனி அடிக்கடி சந்திப்போம் என்று கூறி விடைபெற்றனர்”. பெரியார் முழக்கம் இதழ் 21052026

கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மயூரப்ரியன் உரை மாணவர்களுக்கு சமூக அரசியல் பயிற்சி

கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மயூரப்ரியன் உரை மாணவர்களுக்கு சமூக அரசியல் பயிற்சி

இளைய தலைமுறைக்கு சமூக அரசியல் வரலாறுகளைப் புரிய வைக்கும் தேவை உருவாகி இருக்கிறது. இட ஒதுக்கீட்டு உரிமையைப் பயன்படுத்தி கல்வி வேலைவாய்ப்புகளைப் பெறும் மாணவர்களுக்கு அந்த இட ஒதுக்கீட்டின் வரலாறு, நோக்கம் பற்றிய புரிதல் இருப்பது இல்லை! சமூகம் மற்றும் கல்வி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு ஜாதி ஒரு அடையாளமாக ஏன் ஏற்கப்பட்டது என்ற சமூகப் புரிதலை இளைஞர்களிடம் விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இட ஒதுக்கீட்டு கொள்கைகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு மனுஸ்மிருதி அடிப்படையிலேயே சமூகத்தில் இட ஒதுக்கீடு இருந்தது. அதன்படி பிராமணர்களே கல்வி கற்கும் உரிமையை பெற்றிருந்தார்கள்; ‘சூத்திரர்கள்’ பிராமணர்களின் அடிமைகளாகவும், அவர்களுக்கு கல்வியே கிடைக்காமல் தடை செய்யப்பட வேண்டும் என்பதுமே எழுதப்படாத சமூக சட்டமாக இருந்தது. சமூகத்தை மனுஸ்மிருதி வழியாக பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தார்கள். சேர, சோழ, பாண்டியர்கள் மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் பள்ளிகளைக் கட்டவில்லை; கோயில்களைக் கட்டி பார்ப்பனர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்கள்....

தோப்புக்கரணம் போடுகிறார்!

தோப்புக்கரணம் போடுகிறார்!

சபாஷ்! வாழ்த்து என்று பூரித்து பூங்கொத்து கொடுத்து மாலையிட்டு பாராட்டு விழா நடத்தத் துடிக்கிறோம்; அப்படி யாருக்கப்பா! பாராட்டு விழா என்று கேட்கிறீர்களா? சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்! இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தான் அந்த பாராட்டுக்குரிய ‘மகாபுருஷர்’. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்? ‘பிராமண’ சேவையை கைக்கழுவி விட்டாரா? எதற்கெடுத்தாலும் இந்து விரோதி என்று கூச்சலிடமாட்டேன் என்று சபதமெடுத்துவிட்டாரா? ‘பிராமணர்’களைக் குறை கூறினால் மேடையில் கொதித்தெழுந்து அடிக்க பாயமாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டாரா? அப்படியெல்லாம் இல்லை! இனி இந்து மதத்தை எதிர்த்தால் மிரட்ட மாட்டேன்; நீதிமன்றம் போக மாட்டேன்; ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டேன்; மாறாக கடவுளிடம் மனு கொடுப்பேன் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். “சனாதனத்தை எதிர்க்கும் உதயநிதிக்கு நல்ல புத்தியைக் கொடு!” என்று கோவை புளியங்குளம் விநாயகரிடம் தோப்புக்கரணம் போட்டார் சம்பத் என்று தினமலர் செய்தி வெளியிட்டு இருக்கிறது. “ஓ விநாயகனே.. யானை முகத்தோனே; தும்பிக்கை நாயகனே; இது அடுக்குமா?...

எதை நோக்கிப் பயணிக்கிறது தவெக!

எதை நோக்கிப் பயணிக்கிறது தவெக!

தமிழ்நாட்டின் சமூக அரசியல் அடையாளங்களாக மூன்றை குறிப்பிடலாம். மாநில உரிமை, சமூக நீதி, மதச் சார்பின்மை என்ற மூன்று கோட்பாடுகள் தான் அவை. காமராசர் ஆட்சிக் காலத்தில் இருந்து திமுக, அதிமுக ஆட்சி வரை இதுதான் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படைக் கொள்கை. இதற்கு மாறாக ஆட்சி நடத்த முயன்ற இராஜகோபாலாச்சாரி ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார். ஜெயலலிதா ஒரு பார்ப்பனராக இருந்தாலும் கூட இந்துமத கொள்கையில் அவருக்கு ஈடுபாடு இருந்தாலும் மாநில உரிமை, சமூக நீதியைக் கொள்கையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இந்திய தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்க மறுத்தது; மதச்சார்பின்மை கொள்கையையும் ஏற்க மறுத்தது; பார்ப்பனியக் கட்சியாகவே அது திகழ்ந்தது. சோனியா காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி வந்ததற்குப் பிறகு அதில் பண்பு மாற்றங்கள் ஏற்பட்டன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் திமுகவின் வற்புறுத்தல் காரணமாக மண்டல் பரிந்துரையில்...

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

கடலூர்: ஏப்ரல்-14 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பாக கடலூர் மஞ்ச குப்பத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு பெரியார் சிவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, ராஜேந்திரன், திராவிட மகிழன், சத்யா, சதீஷ், திருமூர்த்தி, அசோக், வீரா, அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நங்கவள்ளி: ஒன்றிய கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளையொட்டி ஏப்ரல்-14 காலை 11.00 மணியளவில் நங்கவள்ளியில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கம் எழுப்பப்பட்டது. நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கவியரசு, நங்கவள்ளி பகுதி புகழேந்தி, பிரபாகரன், ஹரி, தினேஷ், சித்திக் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். சென்னை:...

விடைபெற்ற தேனிசை செல்லப்பாவுக்கு கழகம் இறுதிமரியாதை!

விடைபெற்ற தேனிசை செல்லப்பாவுக்கு கழகம் இறுதிமரியாதை!

மறைந்த பெரியார் தொண்டர் பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு, ஏப்ரல்-28 மாலை 7 மணிக்கு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், போராசிரியர் சரசுவதி ஆகியோருடன், கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செய்தனர். பெரியார் முழக்கம் இதழ் 07052026

கழகத் தோழர் பத்ரிநாரயணன் நினைவேந்தல் நிகழ்வு!

கழகத் தோழர் பத்ரிநாரயணன் நினைவேந்தல் நிகழ்வு!

இராயப்பேட்டையை பெரியார் பாசறையாக மாற்றிய கழகச் செயல் வீரர் பத்ரி நாராயணன் அவர்களின் 22-வது நினைவு நாளை முன்னிட்டு இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மயிலாப்பூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 30.04.2026‌ அன்று ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தோழர் பத்ரி நாரயணனின் நினைவுகளை பாடலாக தோழர்கள் பொன்ராஜ், சத்யா, லதா ஆகியோர் இணைந்து பாடினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் சென்னையில் தலித்துக்களையும், இஸ்லாமியர்களையும் பெரியார் இயக்கத்தின் பக்கம் ஒன்றிணைத்தவர்களில் பத்ரி முதன்மையானவர். மேலும் கொண்ட கொள்கையில் துடிப்போடு பணியாற்றிய ஆற்றல்மிகு இளைஞர் என்று கூறினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் அனைத்து இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழர் திருநாள் பொங்கல் விழாவை எழுச்சியுடன் நடத்தி வந்தவர். பத்ரியின் நினைவு நாளில் தோழர்கள் இன்றைய தலைமுறையினரை திராவிடர் இயக்கம் நோக்கி அணிதிரட்ட சூளுரைத்தனர். ஆர்.என் துரை (திமுக மாவட்டத் துணை.செயலாளர்), க.வே...

புத்துணர்வூட்டிய சென்னை பயிலரங்கம்!

புத்துணர்வூட்டிய சென்னை பயிலரங்கம்!

மறைந்த கழக செயல்வீரர் பத்ரி நாராயணனின் 22வது நினைவு நாளான ஏப்ரல்-30 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சே. ராஜேஷ் தலைமையில், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா முன்னிலையில், பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. பகுதித் தலைவர் சு. கோபிநாத் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – சத்யா – லதா, பொன்ராஜ் குழுவினரின் பாடல்கள் சிந்திக்க வைத்தன. “அமைப்பாக திரள வேண்டியதின் அவசியம் என்ன?” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். ஒரே நாளில், ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை ஒருங்கிணைப்பதன் காரணத்தை விளக்கினார். “சமகால சிக்கல்களில் பெரியாரிய பார்வை” குறித்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். கம்யூனிச இயக்கங்களும் பெரியார் இயக்கமும் ஒன்றிவரும் புள்ளிகளையும் – வேறுபடும் புள்ளியையும் எடுத்துரைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திரகுமார் தேரடி, “பெரியாரியலும்...