Category: திவிக

கழகத் தோழர் பிரவீன் – சமீம் மோனிஷா மதமறுப்பு திருமணம்!

கழகத் தோழர் பிரவீன் – சமீம் மோனிஷா மதமறுப்பு திருமணம்!

கழகத் தோழர் சீ. பிரவீன்குமார் – ஜா. சமீம் மோனிஷா ஆகியோரின் சுயமரியாதை திருமணம், மார்ச்-23, காலை 11 மணிக்கு, தேனாம்பேட்டை சமூகநலக் கூடத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் நடைபெற்றது. மயிலை சுகுமாரின் ஒருங்கிணைப்பில், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, விசிக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சாரநாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை மாவட்டத் தலைவர்கள் வேழவேந்தன், சேத்துபட்டு இராசேந்திரன், துணை செயலாளர் இராவணன், மாவட்ட அமைபாளர்கள் தட்சணாமூர்த்தி, ம.கி எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் கோபிநாத், சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர். கழக ஏட்டுக்கு மணமக்கள் ரூ. 2,000 நன்கொடையாக வழங்கினர். பெரியார் முழக்கம் இதழ் 23042026

இலக்கியா – விஷ்ணுராம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா!

இலக்கியா – விஷ்ணுராம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா!

கோவை மாவட்டம், சீரபாளையம் பகுதியைச் சார்ந்த (விடியல் பதிப்பகம்) விசயக்குமார் – கற்பகவள்ளி இணையரின் மகள் இலக்கியா அவர்களுக்கும் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியைச் சார்ந்த பழனிசாமி – பாக்கியலட்சுமி இணையரின் மகன் விஷ்ணுராம் அவர்களுக்கும் திருமண வரவேற்பு விழா 23.02.2026 திங்கள் அன்று மாலை 6 மணி அளவில் பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள வேல் மஹாலில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். பொள்ளாச்சி வெள்ளிங்கிரி, கோவை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, காவை.அவினாசி ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 23042026

தமிழ்ஈழம் – தினேஷ் குமார் இணையேற்பு விழா!

தமிழ்ஈழம் – தினேஷ் குமார் இணையேற்பு விழா!

தோழர் அறக்கட்டளை நிறுவனர் சாந்தகுமார் – லதா ஆகியோரின் மகள் தமிழ்ஈழம் அவர்களுக்கும் மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் அவர்களுக்கும் வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா 22.02.2025 ஞாயிறு அன்று மாலை 6 மணி அளவில் கோவை நல்லாம்பாளையம் பொன்மணி திருமண மண்டத்தில் நடைபெற்றது. புதிய குரல் நிறுவனர் ஓவியா தலைமை வகித்து வாழ்த்துரையாற்றினார். பொள்ளாச்சி உமாபதி (மாநிலச் செயலாளர், தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை), ஆறுச்சாமி (த.பெ.தி.க தலைமை நிலையச் செயலாளர்), மயூரா தாமோதரசாமி (கல்வியாளர்), முனைவர் தமிழரசி, முகம்மது ஜியாவுதின் (நீதிபதி, மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம் தமிழ்நாடு அரசு), மோகனசுந்தரம் (ராகவேந்திரா சேவா டிரஸ்ட்), திருப்பூர் தமிழ்ச்செல்வி (கருணா மனோகரன் அறக்கட்டளை), அசோக்குமார் (அறிவுச்சோலை அறக்கட்டளை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் மணமக்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த. பெ. தி. க...

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்:   திருப்பரங்குன்றம் வரலாற்று ஆய்வு நூல் அறிமுக விழா!

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்: திருப்பரங்குன்றம் வரலாற்று ஆய்வு நூல் அறிமுக விழா!

சேலம்: தமுஎகச சார்பில் எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்ட ‘திருப்பரங்குன்றம் முழு வரலாறு’ ஆய்வு நூல் அறிமுக விழா 14.03.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம் கலைஞர் கருணாநிதி திருமண மண்டபத்தில், த.மு.எ.க.ச சேலம் மாவட்ட உதவித் தலைவர் மேவை.சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது. முன்னாள் முத்தவல்லி ஜாமியா மஸ்ஜித் நாசர்,சையத் மூஸா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர்), காஜாமொய்தீன் (வி.சி.க இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநிலச் செயலாளர்), ஷேக்முகம்மது (மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்), சதாம் உசேன் (மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர்), ஷரிப் பாஷா (எஸ்.டி.பி.அய் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர்), சோபனா (த.மு.எ.க.ச மாவட்டச் செயலாளர்), பிரவீன்குமார் (மக்கள் ஒற்றுமை மேடை ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக சேலம் மாநகரச் செயலாளர் ரகுபதி வரவேற்புரையாற்றினார்....

எனக்குப் பிறகு எவன் கேட்பான்? வேன் வழங்கும் விழாவில் பெரியாரின் உணர்ச்சி உரை!

எனக்குப் பிறகு எவன் கேட்பான்? வேன் வழங்கும் விழாவில் பெரியாரின் உணர்ச்சி உரை!

வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள் உரைகளுக்குப் பின்னர் இறுதியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை: இந்தப் பொருள்களை எல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. கார் ஒன்றுதான் எனக்கு அதிகம் பயன்படும். இந்த புதிய வேனில் சவாரி செய்வதால் ஒன்றும் நான் அதிகம் வாழப் போவதில்லை. ஆனால் இதைப் போன்று விழாக்களை காணும் போது தான் எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது. இந்த கார் வாங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஏராளமாக கேட்டதற்கு மேல் அதிகமாக கொடுத்துள்ளார்கள். அதில் குறிப்பாக தஞ்சை மாவட்டம் 40,000 ரூபாய் அளித்திருக்கிறது. அந்த அளவுக்கு நமது கொள்கைக்கு நாட்டில் வெற்றி கிட்டி இருக்கிறது; செல்வாக்கு பெருகிவிட்டது. எனக்கு இன்றைக்கு வயது 94 அடுத்த மாதம் பிறந்தால் 95 வயது. 60 வருடங்களுக்கு முன்பு எமது மக்களின் யோக்கியதை என்ன அதாவது நாம் முயற்சி எடுப்பதற்கு முன்பு இந்த நாட்டு மக்களின் யோக்கிதை...

தேர்தல் பரப்புரையில் கழகத் தோழர்கள்

தேர்தல் பரப்புரையில் கழகத் தோழர்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை இயக்கங்களை நடத்தினர். கடலூர்: புவனகிரி திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரவணன் அவர்களை சந்தித்து கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பாக பயனாடை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர். திண்டிவனம் தொகுதி விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு அவர்களை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கடலூர் சிவா தலைமையில் உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), பொன்ராஜ், சத்யா, லதா கலைக்குழுவினர் மற்றும் வீரா, அசோக் ஆகியோர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரகுமாரை ஆதரித்தும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை: ஏப்ரல் 16, 2026 முதல் ஏப்ரல் 19 வரை 4 நாள் புதுக்கோட்டை சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் மருத்துவர் வை.முத்துராஜா அவர்களை ஆதரித்து கழகம் சார்பாக தெருமுனை பிரச்சாரம் செய்து மக்களிடையே ஓட்டுகளை சேகரித்தனர். உமாபதி (சென்னை...

கழக ஏட்டுக்கு வளர்ச்சிநிதி

கழக ஏட்டுக்கு வளர்ச்சிநிதி

ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முன்னெடுப்பில் பெரியார் முழக்க வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் ரூ.13, 500 வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளனர். ஆத்தூர் தோழர் கணபதி 17 பெரியார் முழக்கத்துக்கான ஆண்டு சந்தா ரூ.5,100 வழங்கியுள்ளார். தோழர் துரைராசு ரூ.3000 பெரியார் முழக்க சந்தா வழங்கியுள்ளார். பெரியார் முழக்கம் இதழ் 09042026

மேட்டூர் கிட்டு தந்தை காளியப்பன் இயற்கை எந்தினார்!

மேட்டூர் கிட்டு தந்தை காளியப்பன் இயற்கை எந்தினார்!

தோழர் மேட்டூர் கிட்டு அவர்களின் தந்தையார் காளியப்பன் 28.03.2026 அன்று இயற்கை எய்தினார். அவருடைய மறைவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி 30.03.2026 மேட்டூர் பாரதி நகரில் உள்ள இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்தார். கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச்செயலாளர் ப. இரத்தினசாமி, கோவை மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் சுதா, கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயக்குமார், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் ஐயப்பன், முத்துராஜ், ராஜா, அவினாசி ஆகியோர் கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 09042026

கடலூரில் கழகத் தலைவர் பேச்சு  பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது

கடலூரில் கழகத் தலைவர் பேச்சு பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது

கடலூர்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 28.03.2026 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகில் கடலூர் பெரியார் சிவா தலைமையில் பொதுகூட்டம் நடைப்பெற்றது. கடலூர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். அறிவழகன் முன்னிலை வகித்தார். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் ‘‘தகைசால் தமிழர்’’ தோழர் நல்லகண்ணு மற்றும் திராவிட இயக்கத் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியுமான அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி. மு. க தேர்தல் பணிக்குழு செயலாளர் வழக்கறிஞர் இள. புகழேந்தி அவர்களும் படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினர். உமாபதி, லதா, சத்யா, திராவிட மகிழன் கலைக்குழு ஆகியோரின் அரசியல் நையாண்டி மற்றும் கலைநிகழச்சி நடைபெற்றது. லோகு. அய்யப்பன் (திராவிடர் விடுகலைக் கழக புதுச்சேரி மாநில தலைவர்), இரா. உமாபதி (தலைமைக் குழு உறுப்பினர்), கே. எஸ். ராஜா...

ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஏற்காடு: 08.03.2026 அன்று ஏற்காடு பகுதியில் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்காடு டவுன், ஒண்டிக்கடை, மஞ்சக்குட்டை பகுதியில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது. ஏற்காடு ஒன்றிய செயலாளர் இரா. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் க. சரிதா முன்னிலை வகித்தார். தெருமுனைக் கூட்டத்தின் நோக்கம் குறித்து மக்களிடம் சேலம் மாவட்ட அமைப்பாளர் அ. பெருமாள், கோனூர் வைரமணி (திமுக தலைமைக் கழகப் பேச்சாளர், சேலம் மேற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவர்), தி.மு.க ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணித் தலைவர் ம. தேவபிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஏற்காடு பகுதி மக்கள் மட்டுமல்லாமல் ஏற்காடு சுற்றுலா பயணிகளும் பெருந்திரளாக நின்று கேட்டுச் சென்றனர். சுற்றுலா வந்த விசிகவை சேர்ந்த மகளிரணி தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு குடிநீர் வாங்கி கொடுத்து வாழ்த்தினார்கள். தெருமுனைக் கூட்டத்தை பொதுக்கூட்டத்தைப்போல த சுகந்தா ராமசந்திரன் (மஞ்சக்குட்டை பகுதியில் பஞ்சாயத்து தலைவர்), ராமசந்திரன்...

ஈரோடு, கடலூர், ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஈரோடு, கடலூர், ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஈரோடு: தெற்கு மாவட்டக் கழகம் சார்பாக தொடரட்டும் “தமிழ்நாட்டில் சாதனைகள், திமுக ஆட்சியை உறுதி செய்வோம்” என்கின்ற முழக்கத்தோடு அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஒருங்கிணைப்பில் 4 நாட்களில் 13 இடங்களில் தெமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தெருமுனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. 11.03.26 புதன் அன்று காலை சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் தெருமுனைக் கூட்ட மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, சண்முகப்பிரியன் (திமுக)ஆகியோர் சிறப்புரையாற்றினர். 2வது நாள் (12.03.26): வியாழன் அன்று கனி ராவுத்தர் குளம், அக்ரகாரம், காமராஜர் நகர், காந்திநகர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டங்களுக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டங்களில் அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் பரிமளராசன், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரையாற்றினார்கள்.மதிய உணவு சண்முகப்ரியன்...

திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்வோம்! சென்னையில் சுற்றிச்சுழன்று கழகம் பரப்புரை!

திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்வோம்! சென்னையில் சுற்றிச்சுழன்று கழகம் பரப்புரை!

சென்னை மாவட்டக் கழகங்களின் (தென்சென்னை, வடசென்னை) சார்பில் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்…திமுக ஆட்சியை உறுதிசெய்வேம்! என்ற தலைப்பில் தினமும் 2 கூட்டங்கள் என 30 கூட்டங்களை நடத்தியுள்ளனர். அரசியல் நையாண்டி, பாடல்கள் என கலைநிகழ்ச்சிகளுடன் மக்கள் மத்தியில் திமுக ஆட்சியை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று விளக்கி வருகின்றனர். தோழர்கள் இரா. உமாபதி – சத்யா – கார்மேகம் – பொன்ராஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் தொய்வில்லாமல் மூன்று வாரங்கள் நடைபெற்றன. தெருமுனைக் கூட்டங்களின் தொகுப்பு: மார்ச் 3 முதல் மார்ச் 9 வரையிலான 12 கூட்டங்களை, ம.கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்) – இரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மார்ச்-4: மாலை 5 மணிக்கு, பிரீத்தி தலைமையில், மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலும், மாலை 7 மணிக்கு, அபிநந்தன் தலைமையில், கீழ்க்கட்டளை பெரிய தெருவிலும், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றன.கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், U2BRUTUS மைனர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திமுக:...

தெருக்களுக்கு ஜாதிப்பெயரை நீக்கக்கோரி மனு!

தெருக்களுக்கு ஜாதிப்பெயரை நீக்கக்கோரி மனு!

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 6 தெருக்களில் ஜாதிப் பெயர் பலகை அடையாளமாக வைத்ததை கண்டித்து 09.03.2026 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், கவியரசு ஆகியோர் இருந்தனர். – பெரியார் முழக்கம் இதழ் 26032026

லெனின் சுப்பையா நினைவுநாள்

லெனின் சுப்பையா நினைவுநாள்

பெரியார் சிந்தனையாளர் இயக்கம் நடத்திய லெனின் சுப்பையா நினைவேந்தல் படத்திறப்பு மற்றும் புதுச்சேரி மண்ணில் ஓபிசி,எஸ்.சி,எஸ்.டி பூர்வீகப் பெண்களின் (தாய் வழி) பிள்ளைகள் அகதிகளாக? நீதிக்கேட்போம்! உரிமை மீட்போம் பொதுக்கூட்டம் 21.02.2026 அன்று மாலை 5-மணிக்கு சுதேசி மில் புதுச்சேரியில் நடைபெற்றது. விடுதலை கலைக்குழு தோழர்கள் பாடல்களால் லெனின் சுப்பையா அவர்களின் சமூக அரசியல் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பாடல்கள் வழியாக உணர்வு அலைகளில் காண்போரை மூழ்கடித்தார்கள். பாடல்களுக்கு இடையே இணைப்புகளையும் வழங்கினார்கள். திராவிட மகிழன் குழுவினருடன் இணைந்து லெனின் சுப்பையா பாடல்களை பாடினார். மகேசு (மக்கள் மன்றம்) லெனின் சுப்பையா மற்றும் செந்தாரகை படத்தினை திறந்து வைத்து பாடல்கள் வழியாக பாமரனுக்கும் உணர்வூட்டியவர் லெனின் சுப்பையா என்றும் புதுச்சேரி தாய்வழி பிள்ளைகள் பிரச்சனையில் போராட்டமே தீர்வு என்றார். கோவன் (செயலாளர் மகஇக) தன் பாடல்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு...

ஸ்ரீராம்-காயத்ரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா!

ஸ்ரீராம்-காயத்ரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா!

சேலம் மாவட்டம் R.T.கிருஷ்ணன் – கவிதா ஆகியோரின் மகன் ஸ்ரீராம் அவர்களுக்கும், சென்னை மாவட்டம் R.சிவகுமார் – சாந்தகுமாரி ஆகியோரின் மகள் காயத்ரி அவர்களுக்கும், 15.03.2026 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் அயோத்தியாபட்டினம் வாசு மஹால் திருமண மண்டபத்தில், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலையில், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்தார். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், செட்டியூர் மாரி, கொளத்தூர் கணேசன், அமஜத்கான், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சுதர்சன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் நாகராஜ், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், கீதா, அமுதன், ஆனந்த், வெங்கடேஷ், இனியா, நந்தினி, தமிழ்நாடு மாணவர் கழக கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சுகந்தன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்....

ஜாதிப்பெருமை நூல் அறிமுக விழா!

ஜாதிப்பெருமை நூல் அறிமுக விழா!

மதுரை: திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி இணைந்து ஜாதிப் பெருமை நூல் அறிமுக கூட்டம், மதுரையில் உள்ள மணியம்மை பள்ளியில் 08.03.2026 நடைபெற்றது. ஊடகவியலாளர் சத்யராஜ் குப்புசாமி, கனியமுதன் (விசிக துணைப் பொதுச் செயலாளர்), பேரறிவாளன் (தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர்) மற்றும் பிரபாகரன் (புஇமு) ஆகியோர் புத்தகத்திற்கான கருத்துரை நிகழ்த்தினார்கள். காமாட்சி பாண்டியன் (மதுரை மாவட்டத் தலைவர்) வரவேற்புரை ஆற்றினார். தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி தலைவர் மணிபாபா தலைமையில் நடைபெற்றது. மதுரைச் சேர்ந்த அனைத்து ஜனநாயக இயக்கங்களும், பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய தோழர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வினை தோழர் தவம் அறக்கலம் வலையொலி (YouTube) பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். குமரன் (புஇமு) நன்றி கூறினார். – பெரியார் முழக்கம் இதழ் 26032026

கோவை, திருப்பூரில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்!

கோவை, திருப்பூரில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்!

திருப்பூர்: மார்ச்04 (4வது நாள்): கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் முகில் இராசு மாவட்டத் தலைவர் முன்னிலையிலும் “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள், திமுக அரசை உறுதி செய்வோம்” என்ற தலைப்பில் 4வது நாளாக 04.03.2026 அன்று காங்கேயம், பேருந்து நிலையம், வெள்ளக்கோவில் பகுதியில், முத்தூர் (மூன்று சந்திப்பு சாலையில்), நத்தகாடையூர் ஆகிய பகுதிகளில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன. மார்ச்-05 (5வது நாள்): தாராபுரம், வட தாரை பகுதி, தாராபுரம் அய்ந்து முக்கு சாலை, தாராபுரம், அண்ணா சாலை, தாராபுரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஈரோடு இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), சூலூர் பன்னீர்செல்வம் (தலைமைக் குழு உறுப்பினர்), பரிமளராசன் (சமூக வலைதளப் பொறுப்பாளர்), முகில் இராசு (மாவட்டத் தலைவர்), சங்கீதா (மாவட்ட அமைப்பாளர்), முத்து (மாநகர அமைப்பளர்), கவி பு.இ.மு காங்கேயம் பகுதி பொறுப்பாளர், ஆறுமுகம் ஆசிரியர் (தி.க காங்கேயம் ஒன்றியத் தலைவர்) கதிர்வன் (தாராபுரம் பகுதியின்...

பாலியல் கொலையாளிக்கு துணை போகிறதா  காவல்துறை?

பாலியல் கொலையாளிக்கு துணை போகிறதா காவல்துறை?

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 11.12.2025 அன்று இரண்டரை வயது பெண் குழந்தை சாதிய மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியாக கைது செய்யாமலும், சட்டப்படியான சரியான விசாரணையை மேற்கொள்ளாமலும் அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் சுமித்ரா மிகுந்த அலட்சியமாக செயல்பட்டு வந்தார். அதனால் காவல் ஆய்வாளர் சுமித்ராவையும், இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டிருந்தால் அவர்களையும் விசாரித்து கைது செய்ய வேண்டும் என 17.03.2026 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மானுஷ், செய்தியாளர் சிவசுப்ரமணி, சமூக செயல்பாட்டாளர் சுரேஷ், செய்தியாளர் சிவகுரு மற்றும் பாதிக்கப்பட்டு இறந்த பெண் குழந்தையின் தந்தை வீட்டார் முறையிட்டனர். இதில் திராவிடர் விடுதலைக் கழக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச்...

கழகப்பணிகளைப் பாராட்டி நன்கொடை!

கழகப்பணிகளைப் பாராட்டி நன்கொடை!

கோவை:- சிறுமுகை அருகே உள்ள வெள்ளிக்குப்பம்பாளையத்தைச் சார்ந்தவர் மாரண்ணன். இவர் அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். தனது இளம் வயதில் இருந்தே பொதுவுடைமைக் கொள்கைகள் மீதும், திராவிடர் இயக்கக் கொள்கைகள் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டவர். மேலும் தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் இயக்கங்களை ஊக்குவிப்பதைத் தனது தலையாய கடமையாகக் கொண்டவர் ஆசிரியர் மாரண்ணன். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இயங்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஜாதி ஒழிப்புப் பணிகளை பாராட்டியும் மேலும் தொடர்ந்து செயல்பட விருப் பத்தைத் தெரிவித்து ரூ.10,000/-யை கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமாரிடம் அவர் வழங்கினார். பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியுடன் சில நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார். நிறைவாகக் கழகத்தின் வார இதழான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு ஆண்டு சந்தா ரூ.300/- செலுத்தி மகிழ்ந்தார். மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர் அமுல்ராஜ், மற்றும் அன்னூர் விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் இதழ்...

பொள்ளாச்சியில் நடைபெற்ற பெரியாரியல் பயிலரங்கம்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற பெரியாரியல் பயிலரங்கம்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் “தேர்தல் அரசியலும் தந்தை பெரியாரும்” என்ற தலைப்பில் “பெரியாரியல் பயிலரங்கம்” 23.02.2026 திங்கள் அன்று காலை 11 முதல் 5 மணி வரை இரண்டு வகுப்புகளாக நடைபெற்றது. கோவை மாவட்ட பொறுப்பாளர் யாழ்.வெள்ளியங்கிரி தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். ஆனைமலை நகரச் செயலாளர் ஆனந்த், அரிதாசு ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி நகரச் செயலாளர் சபரிகிரி வரவேற்புரையாற்றினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் காசு நாகராசன் “திராவிட மாடல் இன்றும் நாளையும்” என்ற தலைப்பில் திராவிட கட்சிகள் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்து மாணவ, மாணவிகள் ஆரம்ப தொடக்கப்பள்ளி தொடங்கி கல்லூரி உயர் படிப்பு முடிக்கும் வரை அவர்களை பல்வேறு திட்டங்களால் ஊக்கப்படுத்தி வாழ்வில் முன்னேற்றி சென்றதையும் நிகழ்கால திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை அறிவு ஒளி பெற செய்து கொண்டிருப்பதைப் பற்றியும், மீண்டும் இந்தத் திராவிட மாடல் அரசு ஆட்சி அமைத்திட நம்மை போன்ற...

கழகம் இறங்கியது சேலம் கிழக்கு! –  இளம்பிள்ளை  சிந்தாமணியூர்  கே.ஆர் தோப்பூர்  ஏற்காடு  சேலம் மாநகரம்   கொளத்தூர்  பகுதிகளில் கழகப் பிரச்சார அலை!

கழகம் இறங்கியது சேலம் கிழக்கு! –  இளம்பிள்ளை  சிந்தாமணியூர்  கே.ஆர் தோப்பூர்  ஏற்காடு  சேலம் மாநகரம்  கொளத்தூர் பகுதிகளில் கழகப் பிரச்சார அலை!

சேலம் கிழக்கு மாவட்டக் கழகம் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்.. திமுக ஆட்சியை உறுதிசெய்வோம்” என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை முனைப்புடன் நடத்தி வருகிறது. கிளைக் கழகத் தோழர்கள் ஏற்பாட்டில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் மக்களை சந்தித்து பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் தொகுப்பு: 3வது நாள் மார்ச்-02 இளம்பிள்ளை: கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் 02.03.2026 நாள் முழுவதும் தாரமங்கலம் பேருந்து நிலையம், சின்னப்பம்பட்டி பேருந்து நிறுத்தம், கொல்லப்பட்டி பேருந்து நிறுத்தம் ஆகிய 3 இடங்களில் கூட்டம் நடைபெற்றது. தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), குடந்தை பாலன், ரமேஷ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்) ஆகியோர் தலைமை வகித்தனர். சக்திவேல் (சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர்), டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரை ஆற்றினார். திமுக தலைமைக்...

என்.டி.ஏ தோல்வியை உறுதிசெய்வோம்! கள்ளக்குறிச்சியில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உரை

என்.டி.ஏ தோல்வியை உறுதிசெய்வோம்! கள்ளக்குறிச்சியில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உரை

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகில் உள்ள கடுவனூர் கிராமத்தில் 2005-ஆம் ஆண்டு நடந்த ஜாதிக் கலவர மோதலில் களமாடி சிறை சென்று 21 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த தோழர்கள் அ.சக்தி, ஆ.தங்கராசு, ஆ.சங்கர், மா.சங்கர் குரு, ச.கு.செயபால், ஆ.முனுசாமி, அ.பாலு, க.சங்குபாலகன், மா.குமார் உள்ளிட்ட தோழர்கள் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை பாராட்டியும், “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள், தி.மு.க ஆட்சியை உறுதி செய்வோம்! மதவெறி கூட்டணியை விரட்டி அடிப்போம்! என்ற தலைப்பிலும் 07.03.2026 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தோழர்களுக்கு கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்திற்கு மா.குமார் தலைமை வகித்தார், மு.நாகராஜ் வரவேற்புரையாற்றினர். க.இராமர் (மாவட்டச் செயலாளர்), ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), செ.பிரபு (த.பெ.தி.க.கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்) ஆகியயோர் கலவரம் மற்றும் வழக்கு குறித்து விரிவாகப் பேசினார்கள். க.மதியழகன் (மாவட்டத் தலைவர்), ந.வெற்றிவேல் (மாவட்டத் துணைச் செயலாளர்), பூ.ஆ.இளையரசன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்),...

திருப்பூர்,சேலம்,கோவையில் ஒவ்வொரு நாளும் 4 கூட்டங்கள்  கலைநிகழ்ச்சியுடன் சென்னை கூட்டங்கள் களம் இறங்கியது கழகத்தின் பரப்புரை படை!

திருப்பூர்,சேலம்,கோவையில் ஒவ்வொரு நாளும் 4 கூட்டங்கள் கலைநிகழ்ச்சியுடன் சென்னை கூட்டங்கள் களம் இறங்கியது கழகத்தின் பரப்புரை படை!

திருப்பூர், கோவை, சேலம், சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தினமும் 2 முதல் 4 இடங்களில் மாவட்டத்தின் பல முக்கிய சாலைகளில் நாள் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைமைக்குழு அறிவித்த சில நாட்களில் தோழர்கள் சுமார் 90-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களில் திமுக ஆட்சியை ஆதரித்து பரப்புரை செய்து வருகிள்ளனர். தொய்வில்லாமல் தோழர்கள் கடும் வெயிலிலும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் செய்தி தொகுப்பு. திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பில் 5 நாட்கள் தினமும் 4 இடங்களில் தேர்தல் பரப்புரை கூட்டங்களை தோழர்கள் மாவட்டத்தின் மங்கலம் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு என பல முக்கிய சாலைகளில் பரப்புரைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். முதற்கட்டமாக 5 நாட்களில் 20 கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். தோழர்களின் இந்த பரப்புரையில் பேசிய கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் முகில் இராசு (மாவட்ட தலைவர்)...

பேரறிவாளன்-தீபா இணையேற்பு விழா

பேரறிவாளன்-தீபா இணையேற்பு விழா

திருவண்ணமலை மாவட்டம் தமிழ்தாசன்- வல்லினத்தமிழ் ஆகிய இணையரின் மகன் பேரறிவாளன், கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்வம்- கோவிந்தம்மாள் ஆகிய இணையரின்மகள் தீபா ஆகிய இருவருக்கும் 09-02-2026 அன்று கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இணையேற்பு நடைபெற்றது. “விடுதலைக் குரல்” தோழர்களின் பகுத்தறிவு பாடல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர்கள் ஆ.ஆசைத்தம்பி, க.இராமர், ந.வெற்றிவேல், க.மதியழகன், மு.நாகராஜ், ஏ.ஜெயப்பிரகாஷ், இரா.கார்மேகம், மா.குமார் ,சி. சாமிதுரை, தே.இராமச்சந்திரன், பெரியார் பாரதிதாசன்,செ.வே.ராஜேஷ், ச.கு.பெரியார் வெங்கட், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ இளையரசன், த.பெ.தி.க மண்டலச் செயலாளர் செ.பிரபு (மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர்) ஆ.இராமலிங்கம், ஆ.நாகராசன் (சி.அய்.டி.யு.தொழிற்சங்கம்)உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 12032026

காவலாண்டியூர் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு திருமணம்!

காவலாண்டியூர் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு திருமணம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காடையாம்பட்டி மாதையன்-செல்வி ஆகியோரது மகள் அபிநயா, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், ஆயிக்கவுண்டன் பாளையம் வேல்முருகன்-பானுமதி ஆகியோரது மகன் தமிழ்வாணன் ஆகியோருக்கு 20.02.2026 வெள்ளிக்கிழமை காவலாண்டியூர் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈஸ்வரன் தலைமையில் தோழர்கள் கணேசன்,அவிநாசி ஆகியோரது முன்னிலையில் ஜாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. குமரேசன் மற்றும் மணமக்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 05032026

கழகம் சார்பில் தோழர் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்

கழகம் சார்பில் தோழர் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்

சென்னை: தோழர் நல்லகண்ணு விடைபெற்றார். 25.02.2026 அன்று தியாகராயர் நகர் பாலன் இல்லத்தில் அவரது உடலுக்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் பங்கேற்று வீரவணக்கத்தை செலுத்தினார்கள். போராசிரியர் சரஸ்வதி, தபசிகுமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), உமாபதி (மாவட்டச் செயலாளர்), இராவணன் (மாவட்டத்துணைச் செயலாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (மாவட்ட அமைப்பாளர்), அருண் (இளைஞரணி அமைப்பாளர்), பேரன்பு (சென்னை மாவட்ட மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்) மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். சேலம்: இந்திய பொதுவுடைமை கட்சியின் நங்கவள்ளி ஒன்றியம் சார்பாக நல்லகண்ணு அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தோழர் நல்லகண்ணு அவர்களின் படத்திற்கு மலர் தூவி, இரங்கல் உரையாற்றி வீரவணக்கம் செலுத்தினார். எம்.எம் ரத்தினவேல் (காங்கிரஸ்), நல்லபிரபு (தி.மு.க, நங்கவள்ளி மத்திய ஒன்றியச் செயலாளர்), (தி. மு.க ) ஜெயவேல், மாணிக்கவேல்...

தேர்தல் பரப்புரையில்  பம்பரமாய்  சுழலும்  கழகத்  தோழர்கள்

தேர்தல் பரப்புரையில் பம்பரமாய் சுழலும் கழகத் தோழர்கள்

தமிழ்நாட்டில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து கழகத் தலைமைக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்தும் விதமாக திருப்பூர்,சேலம்,சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தயாராகி வருகின்றனர். தினமும் 3 முதல் 4 தெருமுனை கூட்டங்கள், பொதுகூட்டங்கள் என கழகத் தோழர்கள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் நாள் நடைபெற்ற பரப்புரை செய்திகளின் தொகுப்பு: திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் ‘தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!’ என்றத் தலைப்பில் 27.02.2026 அன்று புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம்- பெரியார் சிலை, சிடிசி வளைவு,வீரபாண்டி ஆகிய இடங்களில் நாள் முழுவதும் தொடர் பரப்புரைக் கூட்டங்கள் முகில்ராசு முன்னிலையில் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் பரப்புரை தொடக்கமாக கழகம் சார்பாக நல்லகண்ணு அவர்களுக்கு கழகப் பொருளாளர் சு.துரைசாமி...

`தொடரட்டும் தமிழ்நாட்டில் திமுக சாதனைகள்’ தேர்தல் பரப்புரை: திருப்பூர், சென்னை,சேலம் கழகத் தோழர்கள் தீவிரம்

`தொடரட்டும் தமிழ்நாட்டில் திமுக சாதனைகள்’ தேர்தல் பரப்புரை: திருப்பூர், சென்னை,சேலம் கழகத் தோழர்கள் தீவிரம்

திருப்பூர்: 15-02-2026 அன்று கழக தலைவர், கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர், தோழர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் மேட்டூரில் நடந்த தலைமைக் குழு கூட்டத்தில், விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளை நடை முறைப்படுத்துவது குறித்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் 19-02-2026 வியாழன் மாலை 4 மணியளவில் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர் அதன் அடிப்பைடையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி மாநகர , நகர, ஒன்றியப் பகுதிகளில் “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள்! திமுக அரசை உறுதி செய்வோம்!” என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக 50 இடங்களில் பரப்பரை செய்வது கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்க சந்தாவை இந்த மாத இறுதிக்குள் தலைமைக்கு அனுப்பி வைப்பது என முடிவு...

“நாம் தொப்புள் கொடி உறவுகள்’’            கழக மாநாட்டில் தோழர் நல்லகண்ணுவின் பேச்சு

“நாம் தொப்புள் கொடி உறவுகள்’’ கழக மாநாட்டில் தோழர் நல்லகண்ணுவின் பேச்சு

இந்த நல்ல வாய்ப்பைத் தந்த ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’த்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது பெரியார் ‘குடிஅரசு’ கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி. ஏற்கனவே 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை தந்தை பெரியார் திராவிடர் கழகம் 2003-ல் வெளியிட்டிருக்கிறது. தந்தை பெரியாருடைய சிந்தனைகள் மனித சமூகத்துக்கு மிகவும் அடிப்படையானவை. அந்த சிந்தனைகள், தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் மனித சமூகத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகள். அத்தகைய சிந்தனைகளினால் தந்தை பெரியார் வரலாறு படைத்தார். வரலாறு படைத்தது மட்டுமல்ல, வரலாறாகவே வாழ்ந்தார். எதிர்கால வரலாற்றுக்கும் அவர் வழிகாட்டியாக விளங்குகிறார். அதனால்தான் கட்சி வேறுபாடின்றி, நாம் அனைவரும் தந்தை பெரியாரை வணங்குகிறோம்; பாராட்டுகிறோம்; வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறோம். பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகை நடத்திய காலங்களில் – அதில் தொடர்ந்து பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த சிங்காரவேலர், ஜீவா, சாத்தான்குளம் ராகவன் போன்றவர்கள் அதில் தொடர்ந்து எழுதி வந்தார்கள். பகத்சிங் ஆங்கிலத்தில் எழுதிய “நான் ஏன் நாத்திகன்...

அருள்மொழி-கோபிநாதன் ஜாதிமறுப்பு இணையேற்பு விழா!

அருள்மொழி-கோபிநாதன் ஜாதிமறுப்பு இணையேற்பு விழா!

சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ் – கீதா இணையரின் மகள் அருள்மொழி அவர்களுக்கும் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, மஞ்சள்பட்டணம் பகுதியை சார்ந்த மோகன்தாஸ் – சுதா இணையரின் மகன் கோபிநாதன் அவர்களுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் உள்ள அரசப்பா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. டி.கே.ஆர் இசைக்குழுவினரின் பறை இசை நிகழ்த்தப்பட்டது. சிற்பி ராசன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி மூலமாக சமூகத்தில் கடவுள் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளை செய்து காட்டினார். சூரிய குமார் (சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ) வரவேற்புரையாற்றினார். குமரப்பா (மேட்டூர் நகரச் செயலாளர்), கா.மாரியப்பன் ( ஆசிரியர் ஓய்வு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, சமூக வலைத்தளப் பொருப்பாளர் பரிமள ராசன், வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத்...

புதுவையில் சீமானை தோலுரித்த பெண்கள்

புதுவையில் சீமானை தோலுரித்த பெண்கள்

பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் பெண் உரிமைப் போராளி என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதுச்சேரி பெரியார் படிப்பகம் ராஜா நகரில் 25.01.2026 அன்று மாலை 6 மணிக்கு தோழர். ஆனந்தி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் லதா, விடுதலை கலைக்குழு மணிமேகலை, திராவிட மகிழ்நன் ஆகியோர் பெண்ணிய பகுத்தறிவு பாடல்களை பாடினார்கள்.இளவரசி சங்கர் ( பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), காயத்திரி ஸ்ரீகாந்த் (திமுக -புதுச்சேரி), அ.அனுசுயா (விசிக) ஆகியோர் கருத்துரையாற்றினர். கழகத் தோழர் இரண்யா சீமானின் கேலவமான அரசியலையும், நாதகாவின் பெண்கள் மீதான தாக்குதலும், தமிழ்த்தேசியம் எனும் பெயரில் தன்னுடைய சுயலாபத்திற்காக பெண்களைக் கேவலப்படுத்தும் சீமானை தோலுரிக்கும் விதமாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேடை பேச்சு முழுக்க தோழமை இயக்க முற்போக்கு பெண் தோழர்களே கருத்துரையாற்றினர். கருத்தரங்கத்தில் பெரியார் போராட்டத்தின் விளைவால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது பற்றிய உணர்வுபூர்வமான பல்வேறு செய்திகளை பெண் தோழர்கள் பகிர்ந்து...

நிமிர்வோம் வாசகர் வட்ட கருத்தரங்கு

நிமிர்வோம் வாசகர் வட்ட கருத்தரங்கு

நிமிர்வோம் வாசகர் வட்ட 30-வது சந்திப்பு கழகத் தலைமை அலுவலகத்தில் பிப்-7 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. திராவிட மொழிந்நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரின் படத்தினை திறந்து வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கரிகாலன் ஊடகவியலாளர் “ஈழத்தடிகளும், மறைமலையடிகளும் பெரியாரை எதிர்த்தார்களா?” என்ற தலைப்பில் பல வரலாற்றுச் செய்திகளையும், பார்ப்பன எதிர்ப்பில் தமிழ்தேசியம் போர்வையில் எப்படி செயல்படுவது என்பதையும் சைவ-வைணவ முரண்பாடுகள் என பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் “காந்தியடிகள் படுகொலை ஏன் இன்றும் பேசுபொருள்” என்ற தலைப்பில் காந்தியின் கொலை எப்படி நிகழ்ந்தது, கொலைக்கு பிறகு பெரியார் அகில இந்திய வானொலியில் பேசியது, காந்தியின் இறப்பை இன்றும் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் என பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தோழர் தமிழ் குமரன் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்....

மேட்டூர், திருப்பூரில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

மேட்டூர், திருப்பூரில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

கண்டன ஆர்ப்பாட்டம் மேட்டூரில் 12.02.2026 மாலை 5.00 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்றது. திமுக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதி தலைமை ஏற்றுக் கண்டன உரை நிகழ்த்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ரத்தினவேல் (காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர்), மெய்யழகன் (விசிக சேலம்மேற்கு மாவட்டச் செயலாளர்) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருப்பூர்: 12-02-2026 மாலை 4.30 மணி அளவில் பெரியார் சிலை அருகில் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவின் மத்திய மாவட்டச் செயலாரும் சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. தோழமை கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழமை இயக்கத் தோழர்கள் மற்றும் முகில்ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்) தமிழகத்திற்கு நிதி மறுத்த ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்கள்....

காதலர் தினத்தில் ஜாதிமறுப்பு மணவிழா

காதலர் தினத்தில் ஜாதிமறுப்பு மணவிழா

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன் – ஜானகி ஆகியோரின் மகள் விவேகா அவர்களுக்கு, கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சார்ந்த சிவகாமி – தமிழ்செல்வி ஆகியோரின் மகன் மோகனகிருஷ்ணன் அவர்களுக்கும் சுயமரியாதை இணையேற்பு விழா 14.02.2026 சனிக்கிழமை (அன்பின் நாளான காதலர் தினத்தன்று) மாலை 6 மணி அளவில் கோவை மாவட்டம், குன்னத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பழனியாண்டவர் கலையரங்கத்தில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி, பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ), சூலூர்.தமிழ்செல்வி (கோவை மாவட்ட அமைப்பாளர்), வெங்கட் (கோவை மாநகரச் செயலாளர் ) ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கோவை மாவட்டக் கழகம் வழிகாட்டுகிறது கோவை மாவட்டக் கழகம் சார்பில் 2026 ஆம் ஆண்டு புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா முதல் தவணையாக...

கழகத் தலைமைக்குழு முடிவு திமுக கூட்டணியை ஆதரித்து      1,000 பரப்புரைக் கூட்டங்கள்

கழகத் தலைமைக்குழு முடிவு திமுக கூட்டணியை ஆதரித்து 1,000 பரப்புரைக் கூட்டங்கள்

தேர்தல் களத்தில் முழுவீச்சுடன் களமிறங்கி செயல்பட கழகம் முடிவுசெய்துள்ளது “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!” என்றத் தலைப்பில் 1000 பரப்புரைக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 15.02.2026 ஞாயிறு அன்று சேலம் மேட்டூரில் பிற்பகல் 3:30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழு கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு, இணையதளச் செயல்பாடுகள், முழக்கம் சந்தா சேர்ப்பு, மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு, கோவையில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் தாக்கங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் குழுவில் கலந்து கொண்ட கழகத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள். அனைவரின் கருத்துக்களை விவாதித்து நிறைவாக கீழ்கண்ட...

புதுவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கு

புதுவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கு

புதுச்சேரியில், 3/2/26 அன்று மாலை 6 மணிக்கு, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் மற்றும் திராவிட இயக்க வேங்கைகள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. “1965- மொழிப்போராட்ட வரலாறு, பராசக்தி படத்தின் வாழும் சாட்சி” என்றத் தலைப்பில் பொள்ளாச்சி மா. உமாபதி (திமுக) மொழிப்போர் தியாகிகள் குறித்து பல வரலாற்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார். “தீ பரவட்டும்” என்ற தலைப்பில் இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) பேரறிஞர் அண்ணா செய்த சாதனைகளையும், தமிழ்நாட்டில் அண்ணாவின் தாக்கமும், அரசியலில் சுயமரியாதை இயக்கத் தொண்டனாக அவர் செய்த செயல்களையும் பட்டியலிட்டு உரையாற்றினார். கழகத் தோழர்கள் ப. அருண் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்), கடலூர் சிவா, திராவிட மகிழன், கு.குமார், த.யாழினி, சுகந்தன் (கொளத்தூர் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர்), அசோக் , உதயா ஆகியோர் கலந்துக் கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ்12022026.

கழக ஏட்டுக்கு சந்தா தோழர்கள் ஆர்வம்

கழக ஏட்டுக்கு சந்தா தோழர்கள் ஆர்வம்

சென்னையில் கடந்த சனவரி-13 அன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் திருவல்லிக்கேணி பகுதிக் கழகம் சார்பாக சந்தாவாக ரூ.30000 அருண் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) கழகத் தலைவரிடம் வழங்கினார். திருச்சி மாவட்டக் கழகம் சார்பில் தோழர் மனோகரன் (திருச்சி மாவட்டத் தலைவர்) 20 பெரியார் முழக்க சந்தாவுக்கான தொகை ரூ.6000 பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். வடசென்னை மாவட்டக் கழகம் சார்பில் சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) அவர்கள் முதற்கட்டமாக 25 சந்தா ரூ.7500-அய் பிரசாந்த் (புரட்சிப் பெரியார் முழக்கம் செய்தியாளரிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்) பெரியார் முழக்கம் இதழ்12022026.

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

தாம்பரத்தில் ம. கி. எட்வின் பிரபாகரன் (சென்னை மாவட்ட அமைப்பாளர்) அருண் கோமதி (தாம்பரம் நகர அமைப்பாளர்), குகன் ஆகியோர் முன்னிலையில், பிப்-8, மாலை 6 மணிக்கு, தாம்பரத்தில், தோழர்கள் கிரிஸ்டோ, பிரதீபா, மகேஷ் ஆகியோர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மதிமுக மூத்த தோழர் துரை. மணிவண்ணன் தலைமையில், தோழர்களின் கலந்துரையாடல் நடந்தது. “இயக்கம் என்றால் என்ன?” “இயக்கமாதலின் அவசியம், பயன், தேவை” குறித்து தோழர் துரை மணிவண்ணன் ஆற்றிய உரை, தோழர்களை உத்வேகமடையச் செய்தது. தோழர் எட்வின் “பெரியார் வாழ்ந்த காலச்சூழலில் இயக்கவியலின் தன்மையும், தற்போதுள்ள மாறுபட்ட சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு, இயக்க அணுகுமுறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள்” குறித்தும் பேசினார். அருண் கோமதி, “வாசிப்பின் அவசியம் குறித்தும், தாம்பரத்தில் தொடர்ச்சியான இயக்க செயல்பாடுகளின் தேவை” குறித்தும் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாநில சுயாட்சி மற்றும் சட்ட நுணுக்கங்களைப் பற்றி கிரிஸ்டோவும், பெண் விடுதலையிலும் ஜாதி ஒழிப்பிலும் பெரியார்...

கழகத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: அருந்ததியர் சமூகநீதி கூட்டமைப்பு

கழகத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: அருந்ததியர் சமூகநீதி கூட்டமைப்பு

அருந்ததியர் சமூகநீதி கூட்டமைப்பின் சார்பாக அருந்ததியர் உள் ஒதுக்கீடு மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த மாநில கலந்தாய்வு கூட்டம் 04.02.2026 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள சாந்தி இன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். அருந்ததியர் சமூக நீதி கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் V. அலமேலு தலைமை வகித்து நோக்கவுரையாற்றினார். (Manager-voice program, Dhwanin foundation) M. அய்யப்பன், (ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர்) கு. ஜக்கையன், (த. அ. இ. முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்) S. T. கல்யாணசுந்தரம், (சமூக விடுதலை முன்னணி) சுந்தர், (தமிழ்ப் புலிகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர்) செல்வ வில்லாளன், (விடுதலை வேங்கை கட்சியின் நிறுவனத் தலைவர்) தமிழ் இன்பன், (TN SCA Best Association மாநில பொறுப்பாளர்) ஜெகதீஸ்வரன், (இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் உதவி தலைவர்) S. முருகேசன், (திராவிடர் தமிழர் கட்சி மாநில...

கழகத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: எழில் நிலா- தினேஷ் குமார்  வாழ்க்கை இணையேற்பு விழா!

கழகத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: எழில் நிலா- தினேஷ் குமார் வாழ்க்கை இணையேற்பு விழா!

திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த குப்புசாமி – சுலோச்சனா ஆகியோரது மகன் தினேஷ் குமார் அவர்களுக்கும் திருப்பூர் மாவட்டம் சிட்கோ பகுதியைச் சார்ந்த ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர், பழ. கௌதமன் – அமுதா ஆகியோரது மகள் எழில் நிலா ஆகியோருக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா 25.01.2026 அன்று காலை 9 மணியளவில் திருப்பூர் ஊத்துக்குளி காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கவிஞர் பழ. புகழேந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். சுப. வீரபாண்டியன் (தலைவர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை) வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணை நல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினர். வந்தியதேவன் (ம.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர்), காமராஜ் (சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்), ஊத்துக்குளி குமார் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்.உஷா (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க...

எதிர்கால வேலைத் திட்டங்கள்; கோவை மாவட்டக் கழகம் முடிவு

எதிர்கால வேலைத் திட்டங்கள்; கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 8/2/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் தமிழ்ப்புலிகள் கட்சி அலுவலகத்தில் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுவில் பேசப்படும் வேலைத் திட்டங்களை பற்றி கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆலோசனைகளை கூறினர். பிப்ரவரி 14 அன்று கழகத் தோழர் மோகனகிருஷ்ணன் விவேகா சுயமரியாதை திருமண விழாவில் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் 1. கோவை மாநகர புதிய பொறுப்பாளர்கள் கோவை மாநகர அமைப்பாளர்களாக தோழர்கள் சிவராசு,நவீன், நிலவழகன், மாநகர துணைத் தலைவர்களாக தோழர் சத்தியமூர்த்தி , மாநகர துணைச் செயலாளராக தோழர் தரணி , கோவில்பாளையம் பகுதி அமைப்பாளராக தோழர் மோகனகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 2. “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!” தலைப்பில் தொடர்ந்து தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்துவது. 3. கோவையில்...

ஜாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

ஜாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் ஜாதிய வன்கொடுமைகள் பின்னணியும் சட்ட ரீதியான தீர்வும் என்ற தலைப்பில் எவிடென்ஸ் அமைப்பின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் 24.01.2026 அன்று காலை 10 மணியளவில் மதுரை, நரிமேடு பகுதியில் உள்ள பிசிஎஸ் ஹாலில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். எவிடென்ஸ் கதிர் ( எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர்) மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகளவு ஜாதிய வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. ஜாதிரீதியான படுகொலைகள், தாக்குதல்கள், ஆணவக் குற்றங்கள், பாலியல் வல்லுறவுகள் உள்ளிட்ட பல்வேறு வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்கு எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்த போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஜாதிய உணர்வுகளை தூண்டுகிற ஜாதிய சக்திகள் அதிகளவு வளர்ந்தும் வருகின்றன. அத்தகைய சக்திகளுக்கு எதிராக உரிய நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வன்கொடுமைகளுக்கு காரணமான சமூக, அரசியல்,...

தோழர் சக்குபாய் நெடுஞ்செழியன் நினைவேந்தல்!கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்!

தோழர் சக்குபாய் நெடுஞ்செழியன் நினைவேந்தல்!கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்!

பெரியார் பேருரையாளர், ஆசீவக ஆய்வாளர், பேராசிரியர் முனைவர் தோழர் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 26.01.2025 திங்கட்கிழமை காலை 9.30 மணி அளவில் திருச்சி, இராசாராம் சாலை, கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள கயிலை மணி அரங்கத்தில் நடைபெற்றது. நடராசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஆ. இராசா (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் தோழர் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களின் படத்திறப்பு செய்து மலர்தூவி மரியாதை செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினார்.அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளி கல்வித்துறை அமைச்சர்) அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார். குடந்தை இகவரசன் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களின் நினைவைப் பகிரும் வகையில் கவிதை பாடல்கள் பாடினார். பெ. மணியரசன் (தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர்), ஓய்வுப்பெற்ற ஐ.ஜி க.வடிவேல், மருத்துவர்கள் செந்தில்குமார், யாழினியன், நடராசன், இளவஞ்சி இளையகுமார், இராசா. இரகுநாதன், பாப்பாநாடு காமராசு,கவித்துவன், திருமாறன், அறிவு, பேராசிரியர் வீரமணி, பிரவீன், ஐயம் பெருமாள், ம.பொன்னிறைவன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். நிறைவாக...

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்! மாபெரும் கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி!

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்! மாபெரும் கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி!

தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேசன் மற்றும் சேலம் ராயல் பவர் அரிமா சங்கம் சார்பாக நடத்திய 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி சேலம் கருப்பூர் பத்மவாணி மகளிர் கல்லூரியில் 12.01.2026 திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. பத்மவாணி மகளிர் கல்லூரி சேர்மேன் சத்யமூர்த்தி தலைமையேற்றார். சிவகேந்திரன் குட்டி (துணைத் தலைவர், தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன்) முன்னிலை வகித்தார். சிவபெருமாள் (பொதுச்செயலாளர்-தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேசன்) வரவேற்புரையாற்றினார். மகேஷ் (காஞ்சி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர்), அரிமா விவேகானந்தன் (தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன் மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளர்), பத்மவாணி மகளிர் கல்லூரி நிர்வாக அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர். சௌந்திரராஜன் (பள்ளி தாளாளர்,சௌத் இந்தியன் மெட்ரிக்குலேசன்), கஞ்சமலை (பள்ளி தாளாளர், சுவாமி விவேகானந்தா மெட்ரிக்குலேசன்), முத்து (பள்ளி தாளாளர், நார்த் பார்க் மெட்ரிக்குலேசன்), முதல்வர் சுந்தர், வழக்கறிஞர் ஆனந்த் ராஜ்...

அண்ணா சிலைக்கு மரியாதை

அண்ணா சிலைக்கு மரியாதை

பேரறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி, (3/2/26) காலை 10 மணிக்கு, பத்ரிநாரயாணன் நினைவுப் படிப்பகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று இராயப்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தோழர்கள் கொள்கை முழக்கமிட்டனர். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம. கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப. அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த. நா. சூர்யா, தோழர்கள் இரண்யா, மகிழவன், குமார், தேன்மொழி, லட்சுமணன், லீலா, துரைராசு, மனோஜ், வீரமுத்து, செய்தியாளர்‌ பிரசாந்த், சுகந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா

ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா

கழகத் தோழர்கள் ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா பிப்ரவரி-01 அன்று காலை 9 மணியளவில் மந்தைவெளியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இருவரும் இணைந்து திறந்து வைத்தனர். பேராசிரியர்.சரசுவதி, மயிலாடுதுறை இளையராசா (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இணையர்களின் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். பாரி.சிவக்குமார் நண்பரான தோழர் சக்திவேல் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை மாவட்டக் கழகம் சார்பில் பெரியார் அம்பேத்கர் படம் பரிசாக கழகத் தலைவர் அவர்கள் பாரி சிவா அவர்களிடம் வழங்கினார். கழகத் தோழர் குமரன் தன்னுடைய ஆட்டோவில் எழுதியிருந்த ” மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்ற பெரியார் வாசகத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை.இராசேந்திரன் பார்வையிட்டனர். இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன் | ந. தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், ஊடகவியலாளர் பிரகாசு,...

நாமக்கல்லில் சமத்துவ பொங்கல் விழா

நாமக்கல்லில் சமத்துவ பொங்கல் விழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கம்பன் நகரில் தேவி மாதேஸ்வரன் இல்லத்தில் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கழகத் தலைமைக் குழு உறுப்பினர் கேப்டன் அண்ணாதுரை பொங்கல் விழா சிறப்புரை நிகழ்த்தினார். இலக்கிய தளம் அன்பழகன், பகலவன் (மொழிப்போர் தியாகிகள் நினைவு குழு), மு.சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்), ஆர் கே.குமார் (தி. க மாவட்டத் தலைவர்), ஸ்ரீ வடிவேலு (நகரச் செயலாளர்), மி.த தண்டபாணி (நகரத் தலைவர்), தோழர்கள் பிரகாஷ், மோகன், கார்த்தி சரவணன் ஆகியோரின் குடும்பமும் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். கம்பன் நகர் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.பகுதிக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாலை 4-மணியளவில் அனைவருக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவாக சுதாமணி ராஜ் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் இதழ்05022026.

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!

தை-2 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது! சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 16.01.2026 காலை 10 மணி அளவில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள திருவள்ளுவர் உருவச் சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தங்கதுரை, வெற்றிமுருகன், மாநகரத் தலைவர் பாலு, மாநகர செயலாளர் ஆனந்தி, மாநகரப் பொருளாளர் பிரபு, மாநகர அமைப்பாளர் தேவராஜ், செந்தில், FM பாலமுருகன், பரமேஷ், கோகுலகண்ணன், பாரப்பட்டி முருகேசன், நவராஜ், விக்ரம், அலாவுதீன், தமிழினி, நீலகண்டன், ஹரினி, சுதர்சன் ஆகிய கழகத் தோழர்கள் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

திருப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா!

திருப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா!

திருப்பூரில் கடந்த 10- ஆண்டுகளுக்கு மேலாக கழகத்தினர் தமிழர் திருநாள் பொங்கல்விழாவை பகுதி மக்கள் மற்றும் தோழமை சக்திகளின் ஆதரவுடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வீரபாண்டி பிரிவு பாரதி நகரில் கழகப் பொருளாளர் துரைசாமி , மாஸ்கோ நகரில் மாதவன் முன்னெடுப்பிலும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். வீரபாண்டி பிரிவு: பாரதி நகர் பெரியார் படிப்பகம் பகுதியில் பொங்கல் விழா 15.01.26 அன்று காலை பொங்கல் வழங்குதலில் தொடங்கி, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் வாழ்த்துரை வழங்குதல் பரிசு வழங்குதல் என மாலை வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சரசுவதி (கழக மாநகர அமைப்பாளர்) பொங்கல் வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளை வீரபாண்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், ஆர்.குமார் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்) தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளை ஆர்.கணேசன், சி.லட்சுமணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாலை வரை விளையாட்டுப்...

பாஜக முயற்சி முறியடிப்பு!

பாஜக முயற்சி முறியடிப்பு!

திருவல்லிக்கேணி பகுதி வி.பி ராமன் சாலையில் பெரியார் சிந்தனைப் பலகை அருகில் பாஜகவினர் இரவு நேரத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பத்தை வைக்க முற்பட்டனர். செய்தியறிந்த கழகத் தோழர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்து கொடிக் கம்பத்தை எடுக்க வைத்தனர். ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் சு.கோபிநாத், சே.ராஜேஷ், த.நா.சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் குமார், யாழினி ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.