சுயஜாதிப் பற்று ஜாதி எதிர்ப்பு அல்ல!
திரிபுவனம் காவல் நிலையத்தில் நடந்த சித்திரவதை படுகொலையை சகித்துக் கொள்ள முடியவில்லை. காவல்துறையின் அடக்குமுறை கலாச்சாரம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. அதே நேரத்தில் இப்படி ஒரு படுகொலை நடந்திருக்கிறது என்ற செய்தி வந்தவுடன் தமிழ்நாடு முதல்வர் அவசரமாக அதிகாரிகளைக் கூட்டி ஆலோசித்து குற்றத்தில் தொடர்புடைய ஐந்து காவல்துறையினர் மீது சஸ்பெண்ட் என்ற பெயரளவிலான நடவடிக்கையை எடுக்காமல், கொலைக் குற்றத்தின் கீழ்கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல்துறை அதிகாரியும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்குப் பிறகும் இதில் அரசை குற்றம் சாட்டுவதற்கு ஏதேனும் ‘சந்து பொந்து ‘இருக்கிறதா? என்று தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. காவல் மரணம், போதை மருந்து, பெண்கள் பாதுகாப்புப் பிரச்சனைகளில் தவறு செய்யும் காவல்துறையானாலும் அரசியல்வாதியாக ஆனாலும் சமூக விரோதியானாலும் கடும் நடவடிக்கை எடுக்க...
