Category: பெரியார் முழக்கம் 2026

மோடியின் அற்ப அரசியல்

மோடியின் அற்ப அரசியல்

மோடி தனது பிரதமர் பதவிக்கு உரிய தகுதியை இழந்துகொண்டு வருவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. மதுரை வந்த அவர் 7 ஆண்டுகளாக கட்டி முடிக்கபடாத எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் அரைகுறை வேலைகளைப் பார்வையிட கூடத் தயாராக இல்லை. மாறாக மதவாத சக்திகள் கலவரத்திற்கு திட்டமிடும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட கலவரம் தோல்வியில் முடிந்த நிலையில் அதைத் தூண்டி விடுவதுபோல் அமைந்திருக்கிறது இந்த தரிசனம். அங்கே தீபம் ஏற்றச் சென்ற இந்து தீவிரவாதிகள் ‘திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்’ என்று வெறிப்பிடித்து பேசியதை ஊடகங்கள் ஒளிப்பரப்பின. “சிக்கந்தர் தர்காவை திருப்பரங்குன்றத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் இதுவே எங்கள் நோக்கம்” என்று ஹெச்.ராசா வெளிப்படையாகப் பேசினார். திருப்பரங்குன்றம் தரிசனத்திற்கு பிறகு பேட்டியளித்த மோடி இந்து மக்களின் உணர்வுகளை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை என்கிறார். உண்மையில் திருப்பரங்குன்றத்தில் இந்துமக்களின் உணர்வுகளை கோயில் நடைமுறைகளை பின்பற்றிக் காப்பாற்றியது தமிழ்நாடு அறநிலையத்துறைதான்....

சாதனைகளைத் தொடர வைப்போம்!

சாதனைகளைத் தொடர வைப்போம்!

இந்த ஆட்சியின் சாதனைகள் தொடர வேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? நேர்மையுடன் சிந்தித்துப் பார்ப்போம்! கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் போல் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திருக்கிறதா? “பதவி ஏற்றவுடன் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்தோடு தொடங்கியது பெண்களின் கட்டணம் இல்லாப் பேருந்து பயணம்; மகளிர் உரிமைத்தொகை; புதுமைப்பெண்; பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; என்று நூற்றுக்கணக்கான திட்டங்கள் அணிவகுத்து வந்து கொண்டே இருந்தன. அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இதுவரை நிறைவேற்றப்படாத திட்டம் என்று எந்த ஒரு திட்டத்தையாவது கூற முடியுமா ? எதிர்க்கட்சிகளால் கூடஇந்த திட்டங்களில் குற்றம் குறைகளை காணமுடியவில்லை? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இத்தகைய சாதனைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறதா? இங்கே தான் நடந்தது. அதுமட்டுமா! பெண்களுக்கான உரிமை திட்டங்களின் வெற்றிகளை உணர்ந்து இந்தியாவில் பாஜக உள்ளிட்ட 8 மாநிலங்கள் இதை செயல்படுத்த தொடங்கிவிட்டன. வழிகாட்டியது தமிழ்நாடுதான். பொருளாதார...

`தொடரட்டும் தமிழ்நாட்டில் திமுக சாதனைகள்’ தேர்தல் பரப்புரை: திருப்பூர், சென்னை,சேலம் கழகத் தோழர்கள் தீவிரம்

`தொடரட்டும் தமிழ்நாட்டில் திமுக சாதனைகள்’ தேர்தல் பரப்புரை: திருப்பூர், சென்னை,சேலம் கழகத் தோழர்கள் தீவிரம்

திருப்பூர்: 15-02-2026 அன்று கழக தலைவர், கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர், தோழர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் மேட்டூரில் நடந்த தலைமைக் குழு கூட்டத்தில், விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளை நடை முறைப்படுத்துவது குறித்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் 19-02-2026 வியாழன் மாலை 4 மணியளவில் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர் அதன் அடிப்பைடையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி மாநகர , நகர, ஒன்றியப் பகுதிகளில் “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள்! திமுக அரசை உறுதி செய்வோம்!” என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக 50 இடங்களில் பரப்பரை செய்வது கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்க சந்தாவை இந்த மாத இறுதிக்குள் தலைமைக்கு அனுப்பி வைப்பது என முடிவு...

“நாம் தொப்புள் கொடி உறவுகள்’’            கழக மாநாட்டில் தோழர் நல்லகண்ணுவின் பேச்சு

“நாம் தொப்புள் கொடி உறவுகள்’’ கழக மாநாட்டில் தோழர் நல்லகண்ணுவின் பேச்சு

இந்த நல்ல வாய்ப்பைத் தந்த ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’த்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது பெரியார் ‘குடிஅரசு’ கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி. ஏற்கனவே 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை தந்தை பெரியார் திராவிடர் கழகம் 2003-ல் வெளியிட்டிருக்கிறது. தந்தை பெரியாருடைய சிந்தனைகள் மனித சமூகத்துக்கு மிகவும் அடிப்படையானவை. அந்த சிந்தனைகள், தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் மனித சமூகத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகள். அத்தகைய சிந்தனைகளினால் தந்தை பெரியார் வரலாறு படைத்தார். வரலாறு படைத்தது மட்டுமல்ல, வரலாறாகவே வாழ்ந்தார். எதிர்கால வரலாற்றுக்கும் அவர் வழிகாட்டியாக விளங்குகிறார். அதனால்தான் கட்சி வேறுபாடின்றி, நாம் அனைவரும் தந்தை பெரியாரை வணங்குகிறோம்; பாராட்டுகிறோம்; வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறோம். பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகை நடத்திய காலங்களில் – அதில் தொடர்ந்து பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த சிங்காரவேலர், ஜீவா, சாத்தான்குளம் ராகவன் போன்றவர்கள் அதில் தொடர்ந்து எழுதி வந்தார்கள். பகத்சிங் ஆங்கிலத்தில் எழுதிய “நான் ஏன் நாத்திகன்...

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி

தமிழ்நாடு அறிவியல் மன்ற நிர்வாகிகளான ஆசிரியர்கள் சிவகாமி, ஆசிரியர் ஈரோடு சிவகுமார் ஆகியோர் முன்னெடுப்பில் பெரியார் முழக்கம் வளர்ச்சிக் குழு உருவாக்கப்பட்டு, பல்வேறு தோழர்கள் மாதம்தோறும் தலா ரூ.500 வழங்கி வருகிறார்கள். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். பிப்ரவரி மாத நன்கொடையாக ரூ.14,000 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). பிப்-18 கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தோழர் அருண் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்) பிறந்தநாளை முன்னிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் ரூ.2000 பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதி அளித்தார். பிறந்தநாள் மகிழ்வாக தோழர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். பெரியார் முழக்கம் இதழ்27022026

திட்டங்களை மலினப்படுத்தும் எடப்பாடி!

திட்டங்களை மலினப்படுத்தும் எடப்பாடி!

எடப்பாடி பழனிச்சாமி உலக வங்கியை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விட்டார் போலிருக்கிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் சலுகையை அள்ளிவிட்டு இருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் மகளிர் உரிமைத் தொகை தடைபடாமல் கிடைப்பதற்கு ரூ.5000 ரூபாயை வழங்கியதற்கு பிறகு இவர்கள் தூக்கமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் எதிரொலி தான் இன்றைய அறிவிப்புகள். ரூ.10,000 அறிவித்து விட்டால் பிகார் மாடலில் வெற்றி பெறலாம் என்று கற்பனையில் மிதக்கிறார்கள்.கடந்த தேர்தலில் மாதம் பெண்களுக்கு திமுக-வைவிட கூடுதலாக ரூ.500 சேர்த்து 1,500 ரூபாய் வழங்குவதாக இவர் அறிவித்த பிறகும் மக்கள் எடப்பாடியை நம்பத் தயாராக இல்லை. தமிழ்நாடு அரசு கடனில் மூழ்கி கிடக்கிறது என்று நேற்று வரை பேசியவர். ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி இந்த அறிவிப்புகளை அமல்படுத்தப் போகிறார் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. இதுவரை அவர் வெளியிட்ட சுமார் 16 அறிவிப்புகள் அனைத்தும் நிதி சார்ந்தது தான். அக்கட்சியின் தேர்தல் தயாரிப்புக் குழுவும் அவர்தான். இரண்டு...

டெல்லி ஏ.அய் மாநாட்டில் தலைகுனிவு!

டெல்லி ஏ.அய் மாநாட்டில் தலைகுனிவு!

டெல்லியில் நடைபெறும் ஏ.அய் (AI) மாநாட்டில் ஏற்பட்ட பல குழப்பங்கள் உலக அரங்கில், இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் ஏற்பாடுகளில் சரியான திட்டமிடல் இல்லாமல், சர்வதேச அழைப்பாளர்கள் அலைச்சலைச் சந்தித்தனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உணவு, குடிநீர் பற்றாக்குறை, பொருட்கள் திருட்டு ஆகியவற்றால் பார்வையாளர்கள் சிரமங்களைச் சந்தித்துள்ளனர். அதைவிடவும் முக்கியமாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் (Galgotias University), சீன நிறுவனத்தின் ரோபோ நாய் (Orion) இயந்திரத்தைத் தங்களது தயாரிப்பு என விளம்பரப்படுத்தி, விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. இந்தத் தகவல்கள் வெளியாகி சீன ஊடகங்களால் கேலிக்கு ஆளாகியுள்ளது இந்த ஏ.ஐ (AI) மாநாடு. இந்த உண்மை தெரிந்ததும் அந்தப் பல்கலைக்கழகம் அமைத்திருந்த அரங்கை, அதிகாரிகள் மூடியுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி, இந்திய கல்வி நிறுவனங்களின் பெருமை என இந்த ரோபோவின் வீடியோவைத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்ததுடன்,...

முடிவெய்தினார் தோழர் நல்லகண்ணு

முடிவெய்தினார் தோழர் நல்லகண்ணு

தோழர் நல்லகண்ணு விடைப்பெற்றுக் கொண்டார். அவர் தமிழ்நாட்டின் அடையாளம். தகைசால் தமிழர் என்ற விருதுக்கு அவர் பொருத்தமானவர். அவருடைய வாழ்க்கை பல பாடங்களை விட்டுச் சென்று இருக்கிறது. ஒரு தலைமை உறுதியான, எளிமையான, நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும். அதுவும் நூறாண்டுகள் கடந்தும் வாழ முடியும் என்ற செய்தியை தமிழ்நாட்டு பொது வாழ்க்கைக்கு விட்டு சென்று இருக்கிறார். பொது வாழ்க்கை என்றாலே கறை படிந்த வாழ்க்கை என்று ஆகிவிட்ட ஒரு சமூகத்தில் நேர்மையான ஒரு வாழ்க்கையை இலட்சியவாதி வாழ்ந்து காட்ட முடியும் என்பதை அவர் நிருபித்து காட்டியிருக்கிறார். பொதுவாக பெரியாரிய, மார்க்சிய இலட்சியத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற தலைவர்களின் ஆயுளும் நீண்டு இருக்கிறது. அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையும் சமூகத்திற்கு பாடமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் வழி அனுப்பி வைப்பது மிகச்சிறந்த முடிவு. தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு முடிவு. தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக அவர் முக்கிய...

டெல்லி ஆதிக்கத்தை தமிழ்நாடு முறியடிக்கும்!

டெல்லி ஆதிக்கத்தை தமிழ்நாடு முறியடிக்கும்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சலசலப்புகளால் மகிழ்ச்சிக்கூத்தாடியவர்கள் இன்று சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். தேமுதிக அணி திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டது. இதற்கு அக்கட்சியின் தலைவர் பிரேமலதா கூறிய காரணம் மிகவும் முக்கியமானது: தொண்டர்களின் விருப்பத்தின் காரணமாகவே இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்; தொண்டர்களின் மனநிலை இயல்பாகவே திமுக அணிக்கு ஆதரவாகவும் அதுவே வெற்றி பெறும் அணி என்ற உறுதியான நம்பிக்கையாலும் உருவாகிறது. ஆட்சியில் இருக்கும் கட்சியின் மீது அதிருப்திகள் உருவாவது இயல்புதான் என்ற பொதுவான கருத்தை திராவிட மாடல் ஆட்சி தன்னுடைய சாதனைகளால் தகர்த்து இருக்கிறது; அதன் காரணமாகத்தான் இதுவரை கூட்டணியில் இடம் பெறாத தேமுதிக, திமுக அணியில் வந்து சேர்ந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் அறியப்பட்ட அதிமுக கூட்டணி இப்போது பெயர் மாற்றம் பெற்று என்.டி.ஏ.கூட்டணி ஆகிவிட்டது. எடப்பாடி தான் முதல்வர் என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டும் அதன் அடையாளம் தெரிகிறது. தினகரனையும் அன்பு மணியையும்...

ஊடகவியலாளர்களிடம் முதல்வர் கேள்வி தமிழ்நாட்டைப் போல் சாதனைகள் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா?

ஊடகவியலாளர்களிடம் முதல்வர் கேள்வி தமிழ்நாட்டைப் போல் சாதனைகள் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா?

இங்கு ஏரா­ள­மான ஊட­க­வி­ய­லா­ளர்­கள் இருக்கிறீர்­கள். 11.19 சத­வி­கி­தம் வளர்ச்சி என்பதை, தமிழ்­நாட்டைத் தவிர வேறு எந்த மாநி­லத்­தால் சாதிக்க முடிந்­தி­ருக்­கிறது?அதுவும் எப்படிப்பட்ட சூழ­லில் இதை சாதித்திருக்கிறோம்? ஜன­நாயகத்­திற்­கும், கூட்டாட்­சிக்­கும்சிறி­தும் மதிப்பு தராத பா.ஜ.க. ஆட்சி ஒன்­றி­யத்தில் ஆளு­கி­றது. எதிர்க்­கட்சிகள் ஆளக்­கூ­டிய மாநிலங்­களை, எந்­த­ள­விற்கு வஞ்சகத்­து­டன், ஓரவஞ்­ச­னையுடன் அவர்­கள் Approach செய்கி­றார்­கள் என்று நான் உங்­களுக்கு விளக்கி சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை, உங்களுக்கே அது நன்­றாகத் தெரி­யும். ஆளு­நர்­கள் மூல­மாக நிர்­வா­கச் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தில் தொடங்கி, செயற்­கை­யான நிதிச் சுமையை உரு­வாக்கி மாநி­லங்­களை முடக்க நினைப்­பது வரைக்­கும், அத்­தனை செயல்­க­ளை­யும் செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இது மட்­டும்­தான் அவர்­களுக்குத் தெரிந்த Politics. ஆனால், இதை­யெல்­லாம் அர­சி­யல் தளத்திலும், ஆட்சி அதி­கா­ரத்­தி­லும் எதிர்­கொண்டு, “வளர்ச்சி அர­சி­யல் என்­றால், தமிழ்­நாட்டைப் பாருங்கள்” என்று சொல்­லும் அள­விற்கு Development Politics–க்கானஅடை­யா­ள­மாக தமிழ்­நாடு வளர்ந்திருக்­கிறது. அது­வும் ஒரு தரப்­புக்­கான வளர்ச்சி இல்லை; ‘எல்­லாருக்கும் எல்லாம்’ என்ற பரந்துபட்ட வளர்ச்சி!...

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மயானத்தில் பாகுபாடு காட்டுவது தீண்டாமையே!

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மயானத்தில் பாகுபாடு காட்டுவது தீண்டாமையே!

பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பது தீண்டாமைக்குச் சமமான குற்றம் என்று குறிப்பிட்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணா, ஈரோடு மாவட்டத்தில் மயான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவும், கல்லறைகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். “வாழும் போது கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளது போல, இறந்த பிறகு கண்ணியமான இறுதிச் சடங்குகளைப் பெறுவதும் அடிப்படை உரிமையே” என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பது, தீண்டாமைக்கு சமமே என சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், கருமாண்டி செல்லிப்பாளையம் கிராமத்தில் உள்ள வண்டிப்பாதை நிலத்தை மயானமாக மாற்றக் கோரியும் மயானம் என்று வரையறை செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய உறுதி கோரியும் கிராமத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி.லட்சுமி நாராயணா முன்பு வெள்ளிக்கிழமை...

கடவுளை எதிர்க்கும் வடகொரியா

கடவுளை எதிர்க்கும் வடகொரியா

வடகொரியாவில் 400கி.மீ இலக்கு வைத்து தாக்கக்கூடிய ராக்கெட்டுகள், அணு ஆயுதங்கள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பை தலைநகர் பியாங்யாங்கில் பார்வையிட்ட அதிபர் கிம்ஜொங் இவ்வாறு கூறினார்: ‘`இவற்றை நாங்கள் பயன்படுத்தினால் எதிரிகளை கடவுள்களாலும் காப்பாற்ற முடியாது. வட கொரிய ‘கடவுளையும்’ வீழ்த்தும் போர்க் கருவியைக் கண்டுபிடித்துவிட்டது’’.                       பெரியார் முழக்கம் இதழ்26022026

அருள்மொழி-கோபிநாதன் ஜாதிமறுப்பு இணையேற்பு விழா!

அருள்மொழி-கோபிநாதன் ஜாதிமறுப்பு இணையேற்பு விழா!

சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ் – கீதா இணையரின் மகள் அருள்மொழி அவர்களுக்கும் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, மஞ்சள்பட்டணம் பகுதியை சார்ந்த மோகன்தாஸ் – சுதா இணையரின் மகன் கோபிநாதன் அவர்களுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் உள்ள அரசப்பா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. டி.கே.ஆர் இசைக்குழுவினரின் பறை இசை நிகழ்த்தப்பட்டது. சிற்பி ராசன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி மூலமாக சமூகத்தில் கடவுள் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளை செய்து காட்டினார். சூரிய குமார் (சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ) வரவேற்புரையாற்றினார். குமரப்பா (மேட்டூர் நகரச் செயலாளர்), கா.மாரியப்பன் ( ஆசிரியர் ஓய்வு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, சமூக வலைத்தளப் பொருப்பாளர் பரிமள ராசன், வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத்...

புதுவையில் சீமானை தோலுரித்த பெண்கள்

புதுவையில் சீமானை தோலுரித்த பெண்கள்

பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் பெண் உரிமைப் போராளி என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதுச்சேரி பெரியார் படிப்பகம் ராஜா நகரில் 25.01.2026 அன்று மாலை 6 மணிக்கு தோழர். ஆனந்தி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் லதா, விடுதலை கலைக்குழு மணிமேகலை, திராவிட மகிழ்நன் ஆகியோர் பெண்ணிய பகுத்தறிவு பாடல்களை பாடினார்கள்.இளவரசி சங்கர் ( பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), காயத்திரி ஸ்ரீகாந்த் (திமுக -புதுச்சேரி), அ.அனுசுயா (விசிக) ஆகியோர் கருத்துரையாற்றினர். கழகத் தோழர் இரண்யா சீமானின் கேலவமான அரசியலையும், நாதகாவின் பெண்கள் மீதான தாக்குதலும், தமிழ்த்தேசியம் எனும் பெயரில் தன்னுடைய சுயலாபத்திற்காக பெண்களைக் கேவலப்படுத்தும் சீமானை தோலுரிக்கும் விதமாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேடை பேச்சு முழுக்க தோழமை இயக்க முற்போக்கு பெண் தோழர்களே கருத்துரையாற்றினர். கருத்தரங்கத்தில் பெரியார் போராட்டத்தின் விளைவால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது பற்றிய உணர்வுபூர்வமான பல்வேறு செய்திகளை பெண் தோழர்கள் பகிர்ந்து...

நிமிர்வோம் வாசகர் வட்ட கருத்தரங்கு

நிமிர்வோம் வாசகர் வட்ட கருத்தரங்கு

நிமிர்வோம் வாசகர் வட்ட 30-வது சந்திப்பு கழகத் தலைமை அலுவலகத்தில் பிப்-7 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. திராவிட மொழிந்நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரின் படத்தினை திறந்து வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கரிகாலன் ஊடகவியலாளர் “ஈழத்தடிகளும், மறைமலையடிகளும் பெரியாரை எதிர்த்தார்களா?” என்ற தலைப்பில் பல வரலாற்றுச் செய்திகளையும், பார்ப்பன எதிர்ப்பில் தமிழ்தேசியம் போர்வையில் எப்படி செயல்படுவது என்பதையும் சைவ-வைணவ முரண்பாடுகள் என பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் “காந்தியடிகள் படுகொலை ஏன் இன்றும் பேசுபொருள்” என்ற தலைப்பில் காந்தியின் கொலை எப்படி நிகழ்ந்தது, கொலைக்கு பிறகு பெரியார் அகில இந்திய வானொலியில் பேசியது, காந்தியின் இறப்பை இன்றும் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் என பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தோழர் தமிழ் குமரன் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்....

மேட்டூர், திருப்பூரில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

மேட்டூர், திருப்பூரில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

கண்டன ஆர்ப்பாட்டம் மேட்டூரில் 12.02.2026 மாலை 5.00 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்றது. திமுக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதி தலைமை ஏற்றுக் கண்டன உரை நிகழ்த்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ரத்தினவேல் (காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர்), மெய்யழகன் (விசிக சேலம்மேற்கு மாவட்டச் செயலாளர்) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருப்பூர்: 12-02-2026 மாலை 4.30 மணி அளவில் பெரியார் சிலை அருகில் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவின் மத்திய மாவட்டச் செயலாரும் சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. தோழமை கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழமை இயக்கத் தோழர்கள் மற்றும் முகில்ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்) தமிழகத்திற்கு நிதி மறுத்த ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்கள்....

நீதித்துறையில் சமூகநீதி  திமுக எம்.பி தனிநபர் மசோதா!

நீதித்துறையில் சமூகநீதி திமுக எம்.பி தனிநபர் மசோதா!

இந்தியாவில் உள்ள நீதிபதிகள் குறித்த விவரம் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் சுமார் 80% நீதிபதிகள் முன்னேறிய ஜாதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். வெறும் 20% மட்டுமே எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில் இந்திய நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குறித்து திமுக எம்பி வில்சன் ராஜ்யசபாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அதில் இந்திய உயர் நீதிமன்றங்களில் 2021 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 593 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பட்டியல் ஜாதிகளைச் சேர்ந்தவர்களில் 26 பேர், பழங்குடியினர் பிரிவில் இருந்து 14 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்தும் 80 பேரும் நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில்...

ஈரோடு-விருதுநகர் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவாவின் பங்கு என்ன?  ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 13 -கொளத்தூர் மணி

ஈரோடு-விருதுநகர் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவாவின் பங்கு என்ன? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 13 -கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் வரலாற்று வரலாற்றாளர்களான தோழர்கள் இஸ்மத் பாஷா, கே.பாலதண்டாயுதம் ஆகியோரே ஜீவாவுடன் நேரடியாக பழகி உரையாடி அவரது வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புடையவர்கள் என்பதாலேயே அவர்களது நூல்களை முதன்மை ஆவணமாகக் கொண்டு எழுதி வருகிறோம். அந்நூல்களில் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவா நிகழ்த்திய வீரதீர செயல்பாடுகள் குறித்து அந்நூல்களில் விதந்தோதப்பட்டுள்ள செய்திகளைப் பார்ப்போம். தோழர் இஸ்மத் பாஷாவின் நூலின் 23ஆம் பக்கத்தில் “சென்னையில் போலீஸ் அடக்குமுறை எல்லையை மீறி விட்டது; தொண்டர்கள் அடித்து வீழ்த்தப்பட்டார்கள். ஆறு போல் இரத்தம் ஓடிற்று. அச்சமயத்தில் ஈரோட்டில் சுயமரியாதை மகாநாடு கூடிற்று. போலீஸ் அடக்கு முறையை வன்மையாகக் கண்டித்து ஒரு தீர்மானம் விஷயலோசனைக் கமிட்டியில் வந்தது. ஜீவா அதை ஆதரித்து உணர்ச்சித் ததும்பப் பேசினார். ஜாதி மத விவகாரங்களில் மட்டும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொண்டால் போதாது; அரசியல் விவகாரங்களிலும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி எல்லோருடைய சுயமரியாதை...

காதலர் தினத்தில் ஜாதிமறுப்பு மணவிழா

காதலர் தினத்தில் ஜாதிமறுப்பு மணவிழா

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன் – ஜானகி ஆகியோரின் மகள் விவேகா அவர்களுக்கு, கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சார்ந்த சிவகாமி – தமிழ்செல்வி ஆகியோரின் மகன் மோகனகிருஷ்ணன் அவர்களுக்கும் சுயமரியாதை இணையேற்பு விழா 14.02.2026 சனிக்கிழமை (அன்பின் நாளான காதலர் தினத்தன்று) மாலை 6 மணி அளவில் கோவை மாவட்டம், குன்னத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பழனியாண்டவர் கலையரங்கத்தில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி, பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ), சூலூர்.தமிழ்செல்வி (கோவை மாவட்ட அமைப்பாளர்), வெங்கட் (கோவை மாநகரச் செயலாளர் ) ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கோவை மாவட்டக் கழகம் வழிகாட்டுகிறது கோவை மாவட்டக் கழகம் சார்பில் 2026 ஆம் ஆண்டு புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா முதல் தவணையாக...

ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் மீது பாலியல் புகார்கள் வருவது ஏன்? எஸ்.வி.சேகர் விளக்குகிறார்!

ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் மீது பாலியல் புகார்கள் வருவது ஏன்? எஸ்.வி.சேகர் விளக்குகிறார்!

பாஜகவின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளராக இருந்த கேசவ விநாயகம் மீதான பெண்கள் தொடர்பாக ஏராளமானப் புகார்கள் உண்டு என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் மீதான பாலியல் புகார்கள் வருவதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். இது குறித்து ‘தினகரன்’ நாளேட்டுக்கு பிப்-14, 2026 அன்று அவர் அளித்த பேட்டி.. கேசவ விநாயகத்தை பாஜவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியதை எப்படி பார்க்கிறீர்கள்? கேசவ விநாயகம் 2016ம் ஆண்டே நீக்கப்பட வேண்டும் என நான் சொல்லிக் கொண்டு இருந்தேன். இன்றைக்குக் கூட ஆர்.எஸ்.எஸ்-சில் முக்கியமானது தனிமனித ஒழுக்கம் எனச் சொல்லியுள்ளார்கள். அது நிறையப் பேருக்கு இருப்பது போன்றே தெரியவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பே 163 பேர் புகார் கொடுத்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்-சில் உள்ளவர்கள் ஆண்களுடனே பழகியதால், மாறுபட்ட பாலினத்தைப் பார்க்கும்போது பிரச்னை வந்து விடுகிறது. இன்றைக்காவது கேசவ விநாயகத்தை நீக்கியுள்ளதைப் பார்க்கும் போது அங்குள்ள நிறையப் பெண்கள் சந்தோஷப்படுவார்கள். பாஜவினர் தமிழ்நாட்டில் பெண்களுக்குப்...

`வந்தே மாதரம்’ தேசபக்தி பாடலா? மத பக்தி பாடலா?

`வந்தே மாதரம்’ தேசபக்தி பாடலா? மத பக்தி பாடலா?

வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கி இந்துத்துவ பாஜக ஆட்சி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை ‘இந்து’ கடவுள்களின் பூமியாக சித்தரிக்கும் பாடலை கட்டாயமாக்கி இது ‘இந்துக்கள்’ நாடு என்று காட்டி வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தும் ஆணை இது. வங்காளத்தில் பக்கிம் சந்திர சட்டர்ஜி என்றப் பார்ப்பனர் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற நாவலின் இடம்பெற்றுள்ள பாடல் இது. இந்தப் பாடல் சுதந்திரப் போராட்டக் காலத்தில் பாடப்பட்டது. இதை தேசிய கீதமாக மாற்ற வேண்டும் என்று பார்ப்பனர்கள் விரும்பினார்கள். 1937-இல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடலின் முதல் இரண்டு பகுதிகளை மட்டும் பாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மற்ற நான்கு பகுதிகள் ‘இந்து’ மதத்தோடு நாட்டை இணைப்பதால் அந்த பகுதிகள் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், காந்தி ஆகியோர் பங்கேற்றனர். துர்கா, லட்சுமி, சரஸ்வதி பெண் கடவுள்களின் பூமி நமது...

தமிழ்நாட்டு அணியா?  டெல்லி அணியா?

தமிழ்நாட்டு அணியா? டெல்லி அணியா?

“இப்போது நடக்கும் தேர்தல் தமிழ்நாட்டு அணிக்கும் டெல்லி அணிக்கும் நடக்கும் தேர்தல்” என்று தெளிவாக அறிவித்துவிட்டார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு சுயமரியாதைக்கும் தன்னாட்சிக்கும் களத்தில் இருக்கிறது. எதிரணியில் இரண்டு கட்சிகள் இருக்கின்றன. ஒன்று பாஜகவின் உரிமை பறிப்புகளை தமிழ்நாட்டின் மீதான வஞ்சகத்தை எதிர்க்காமல் அமித் ஷாவின் ஆணைகளின் கீழ் இயங்கும் எடப்பாடி அணி. மற்றொன்று தமிழ்நாட்டை வஞ்சித்தாலும்”ஜனநாயக” மிரட்டல்களை திணித்தாலும் பாஜகவை எதிர்த்து வாய் திறக்க மாட்டோம் என மவுன விரதம் இருக்கும் விஜய் கட்சியின் அணி. இந்த இரண்டு அணிகளுக்குமே திமுக ஆட்சி நடத்தி வரும் தத்துவார்த்த சுயமரியாதை, தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை முடக்கி இந்துத்துவ அரசியலிடம் சரணாகதி அடையச் செய்வது தான் நோக்கம். முதலமைச்சர் பதவி என்பதைத் தவிர தங்களுக்கு வேறு எந்த லட்சியமும் கொள்கையும் கிடையாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் தான். தமிழ்நாடு அரசைப் போலவே ஒன்றிய ஆட்சிக்கு எதிரான தத்துவப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து...

வள்ளலாரின் ஜாதி-மத எதிர்ப்புக் கருத்துக்களை நூலாக வெளியிட்டவர் பெரியார்- தமிழக முதலமைச்சர்

வள்ளலாரின் ஜாதி-மத எதிர்ப்புக் கருத்துக்களை நூலாக வெளியிட்டவர் பெரியார்- தமிழக முதலமைச்சர்

சென்னையில் கடந்த பிப்-15 அன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ‘அனைத்துலக வள்ளலார் மாநாட்டைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து… இந்தச் சமூகத்தில், இறுகிப் போயிருந்த பழமைவாதங்களையும், மூடத்தனங்களையும் சாடியவர் அவர். சாதி, சமய வேறுபாடுகள் இல்லாத சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற அவருடைய பெருங்கனவுதான் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கை. அதனால்தான், திராவிட இயக்கம் உருவானதில் இருந்து, தொடர்ந்து வள்ளலாரை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆறாம் திருமுறை பாடல்களைத் தொகுத்து, ‘இராமலிங்கர் பாடல் திரட்டு’ என்ற நூலை 1929-ல் வெளியிட்டவர், தந்தை பெரியார். இன்னும் ஒருபடி மேலே சென்று, தமிழர்கள் முன்பு, பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார். தந்தை பெரியார் என்ன கேட்டார் தெரியுமா? “வட நாட்டு சாமியார்களைப் போற்றும் தமிழனே, வடலூர் வள்ளலார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்?” என்று கேட்டார். இதையெல்லாம் உணர்ந்துதான், “வள்ளலாரின் கொள்கைகளை சமுதாயக் களத்தில், பெரியார் பரப்புரை செய்தார்”...

கழகத் தலைமைக்குழு முடிவு திமுக கூட்டணியை ஆதரித்து      1,000 பரப்புரைக் கூட்டங்கள்

கழகத் தலைமைக்குழு முடிவு திமுக கூட்டணியை ஆதரித்து 1,000 பரப்புரைக் கூட்டங்கள்

தேர்தல் களத்தில் முழுவீச்சுடன் களமிறங்கி செயல்பட கழகம் முடிவுசெய்துள்ளது “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!” என்றத் தலைப்பில் 1000 பரப்புரைக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 15.02.2026 ஞாயிறு அன்று சேலம் மேட்டூரில் பிற்பகல் 3:30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழு கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு, இணையதளச் செயல்பாடுகள், முழக்கம் சந்தா சேர்ப்பு, மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு, கோவையில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் தாக்கங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் குழுவில் கலந்து கொண்ட கழகத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள். அனைவரின் கருத்துக்களை விவாதித்து நிறைவாக கீழ்கண்ட...

புதுவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கு

புதுவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கு

புதுச்சேரியில், 3/2/26 அன்று மாலை 6 மணிக்கு, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் மற்றும் திராவிட இயக்க வேங்கைகள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. “1965- மொழிப்போராட்ட வரலாறு, பராசக்தி படத்தின் வாழும் சாட்சி” என்றத் தலைப்பில் பொள்ளாச்சி மா. உமாபதி (திமுக) மொழிப்போர் தியாகிகள் குறித்து பல வரலாற்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார். “தீ பரவட்டும்” என்ற தலைப்பில் இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) பேரறிஞர் அண்ணா செய்த சாதனைகளையும், தமிழ்நாட்டில் அண்ணாவின் தாக்கமும், அரசியலில் சுயமரியாதை இயக்கத் தொண்டனாக அவர் செய்த செயல்களையும் பட்டியலிட்டு உரையாற்றினார். கழகத் தோழர்கள் ப. அருண் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்), கடலூர் சிவா, திராவிட மகிழன், கு.குமார், த.யாழினி, சுகந்தன் (கொளத்தூர் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர்), அசோக் , உதயா ஆகியோர் கலந்துக் கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ்12022026.

கழக ஏட்டுக்கு சந்தா தோழர்கள் ஆர்வம்

கழக ஏட்டுக்கு சந்தா தோழர்கள் ஆர்வம்

சென்னையில் கடந்த சனவரி-13 அன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் திருவல்லிக்கேணி பகுதிக் கழகம் சார்பாக சந்தாவாக ரூ.30000 அருண் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) கழகத் தலைவரிடம் வழங்கினார். திருச்சி மாவட்டக் கழகம் சார்பில் தோழர் மனோகரன் (திருச்சி மாவட்டத் தலைவர்) 20 பெரியார் முழக்க சந்தாவுக்கான தொகை ரூ.6000 பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். வடசென்னை மாவட்டக் கழகம் சார்பில் சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) அவர்கள் முதற்கட்டமாக 25 சந்தா ரூ.7500-அய் பிரசாந்த் (புரட்சிப் பெரியார் முழக்கம் செய்தியாளரிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்) பெரியார் முழக்கம் இதழ்12022026.

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

தாம்பரத்தில் ம. கி. எட்வின் பிரபாகரன் (சென்னை மாவட்ட அமைப்பாளர்) அருண் கோமதி (தாம்பரம் நகர அமைப்பாளர்), குகன் ஆகியோர் முன்னிலையில், பிப்-8, மாலை 6 மணிக்கு, தாம்பரத்தில், தோழர்கள் கிரிஸ்டோ, பிரதீபா, மகேஷ் ஆகியோர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மதிமுக மூத்த தோழர் துரை. மணிவண்ணன் தலைமையில், தோழர்களின் கலந்துரையாடல் நடந்தது. “இயக்கம் என்றால் என்ன?” “இயக்கமாதலின் அவசியம், பயன், தேவை” குறித்து தோழர் துரை மணிவண்ணன் ஆற்றிய உரை, தோழர்களை உத்வேகமடையச் செய்தது. தோழர் எட்வின் “பெரியார் வாழ்ந்த காலச்சூழலில் இயக்கவியலின் தன்மையும், தற்போதுள்ள மாறுபட்ட சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு, இயக்க அணுகுமுறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள்” குறித்தும் பேசினார். அருண் கோமதி, “வாசிப்பின் அவசியம் குறித்தும், தாம்பரத்தில் தொடர்ச்சியான இயக்க செயல்பாடுகளின் தேவை” குறித்தும் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாநில சுயாட்சி மற்றும் சட்ட நுணுக்கங்களைப் பற்றி கிரிஸ்டோவும், பெண் விடுதலையிலும் ஜாதி ஒழிப்பிலும் பெரியார்...

கழகத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: அருந்ததியர் சமூகநீதி கூட்டமைப்பு

கழகத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: அருந்ததியர் சமூகநீதி கூட்டமைப்பு

அருந்ததியர் சமூகநீதி கூட்டமைப்பின் சார்பாக அருந்ததியர் உள் ஒதுக்கீடு மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த மாநில கலந்தாய்வு கூட்டம் 04.02.2026 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள சாந்தி இன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். அருந்ததியர் சமூக நீதி கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் V. அலமேலு தலைமை வகித்து நோக்கவுரையாற்றினார். (Manager-voice program, Dhwanin foundation) M. அய்யப்பன், (ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர்) கு. ஜக்கையன், (த. அ. இ. முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்) S. T. கல்யாணசுந்தரம், (சமூக விடுதலை முன்னணி) சுந்தர், (தமிழ்ப் புலிகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர்) செல்வ வில்லாளன், (விடுதலை வேங்கை கட்சியின் நிறுவனத் தலைவர்) தமிழ் இன்பன், (TN SCA Best Association மாநில பொறுப்பாளர்) ஜெகதீஸ்வரன், (இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் உதவி தலைவர்) S. முருகேசன், (திராவிடர் தமிழர் கட்சி மாநில...

கழகத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: எழில் நிலா- தினேஷ் குமார்  வாழ்க்கை இணையேற்பு விழா!

கழகத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: எழில் நிலா- தினேஷ் குமார் வாழ்க்கை இணையேற்பு விழா!

திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த குப்புசாமி – சுலோச்சனா ஆகியோரது மகன் தினேஷ் குமார் அவர்களுக்கும் திருப்பூர் மாவட்டம் சிட்கோ பகுதியைச் சார்ந்த ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர், பழ. கௌதமன் – அமுதா ஆகியோரது மகள் எழில் நிலா ஆகியோருக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா 25.01.2026 அன்று காலை 9 மணியளவில் திருப்பூர் ஊத்துக்குளி காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கவிஞர் பழ. புகழேந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். சுப. வீரபாண்டியன் (தலைவர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை) வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணை நல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினர். வந்தியதேவன் (ம.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர்), காமராஜ் (சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்), ஊத்துக்குளி குமார் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்.உஷா (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க...

எதிர்கால வேலைத் திட்டங்கள்; கோவை மாவட்டக் கழகம் முடிவு

எதிர்கால வேலைத் திட்டங்கள்; கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 8/2/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் தமிழ்ப்புலிகள் கட்சி அலுவலகத்தில் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுவில் பேசப்படும் வேலைத் திட்டங்களை பற்றி கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆலோசனைகளை கூறினர். பிப்ரவரி 14 அன்று கழகத் தோழர் மோகனகிருஷ்ணன் விவேகா சுயமரியாதை திருமண விழாவில் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் 1. கோவை மாநகர புதிய பொறுப்பாளர்கள் கோவை மாநகர அமைப்பாளர்களாக தோழர்கள் சிவராசு,நவீன், நிலவழகன், மாநகர துணைத் தலைவர்களாக தோழர் சத்தியமூர்த்தி , மாநகர துணைச் செயலாளராக தோழர் தரணி , கோவில்பாளையம் பகுதி அமைப்பாளராக தோழர் மோகனகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 2. “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!” தலைப்பில் தொடர்ந்து தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்துவது. 3. கோவையில்...

கலாச்சார அமைப்பு அரசியல் அமைப்பானது

கலாச்சார அமைப்பு அரசியல் அமைப்பானது

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 2025 அக்டோபரில் தனது 100வது ஆண்டில் கால்பதித்துள்ளது. இந்த முக்கியமான காலகட்டத்தில் தனது கருத்தியலை நாடு முழுவதும் கொண்டு செல்ல பாஜக போன்ற பலமான அரசியல் அதிகாரத்தின் துணை அதற்குத் தேவைப்படுகிறது. கட்சியின் தேசியத் தலைவர் தேர்வு மற்றும் முக்கியக் கொள்கை முடிவுகளில் ஆர்.எஸ்.எஸ் தனது செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தத் தொடங்கியுள்ளது. முன்னதாக `பாஜக தனித்து இயங்கக் கூடியது’ என்ற பிம்பம் உருவாக்கப்பட்ட நிலையில், இப்போது ஆர்.எஸ்.எஸ்-ஸே `அடித்தளம்’ என்பது தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ரகசியமாக நடந்த ஆலோசனைகள் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு, மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்த இந்த வெளிப்படையான கூட்டங்கள் அவசியமாகின்றன என்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக மாற்றங்களை வெறும் அரசியலாக மட்டும் பார்க்காமல், ஒரு பண்பாட்டுப் புரட்சியாக முன்னெடுக்க ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. இதற்கு பாஜக-வின் ஆட்சி அதிகாரத்தை ஒரு...

மோடியை அதிரவைத்த `எப்ஸ்டீன் பைல்ஸ்’

மோடியை அதிரவைத்த `எப்ஸ்டீன் பைல்ஸ்’

ஜனநாயகம் என்றால் அமெரிக்கா; சுதந்திரம் என்றால் அமெரிக்கா என்று பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன. அந்த பிம்பங்களை சுக்கு நூறாக உடைத்து `எப்ஸ்டீன் பைல்ஸ்’ உலகையே அலற விட்டிருக்கிறது. இதில் முக்கிய பிரபலங்களின் பெயருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் அடிபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதே வேளையில் அமெரிக்காவிடம் இந்தியாவை அடகு வைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் ஒன்றிய அரசு தரப்பில் இருந்து விரிவான விளக்கம் எதுவும் வெளிவராத நிலையில் மக்களிடையே சந்தேகங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. `எப்ஸ்டீன் பைல்ஸ்’ என்றால் என்ன எனப் பார்ப்போம். அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதற்கு தண்டனையாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மர்மமான முறையில் உயிரிழந்தார். எப்ஸ்டீன் உயிரிழப்பிற்கு பின்னர் அவர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது பல ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்டவையே `எப்ஸ்டீன் பைல்ஸ்’...

வாராது வந்த மாமணி ஸ்டாலின்!

வாராது வந்த மாமணி ஸ்டாலின்!

கடந்த சனவரி-24, சூலூர் பாவேந்தர் பேரவை நடத்திய மொழிப்போர் நினைவு உணர்ச்சி விழா மற்றும் பெரியார் நினைவு அறிவு விழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரை: நமக்கு வந்திருக்கிற ஆபத்து நமக்கு அமைந்திருக்கிற ஒரு வாய்ப்பு. மூடநம்பிக்கைகள் அற்ற பகுத்தறிவுவாதிகளாக நாம் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கெல்லாம் ஒரு மூடநம்பிக்கை இருந்தது. நன்றாக பேசுபவர்தான் நல்ல தலைவராக இருக்க முடியும் என்று கருதிக்கொண்டிருந்தோம். அதனால் ஸ்டாலின் கொஞ்சம் தகுதி குறைவானவர்தான் என்ற மூடநம்பிக்கை அவர் ஆட்சிக்கு வந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு வரை இருந்தது. அந்த மூடநம்பிக்கை அதற்கு பின்பு மறைந்தது. பேச்சாளராக இருக்க வேண்டியது அவசியம் இல்லை, செயல்படுபவராக இருந்தால் போதும் என்பது அவர் ஆட்சிக்கு வந்த பின்னால்தான் நமக்குத் தெரிய வந்தது. பதவி இல்லாத 10 ஆண்டுகாலத்தில் அவர் என்னென்ன நினைத்து வைத்திருந்தார் என்பதெல்லாம் தற்போதுதான் தெரிகிறது. இன்னும் 10-ஆண்டுகள் முடிந்தால்தான் வெளியே வரும் என நினைக்கிறேன். யாரும் எண்ணிப்...

உ.பி ‘ராமராஜ்ய’ ஆட்சியில்  சங்கராச்சாரிக்கு தடை

உ.பி ‘ராமராஜ்ய’ ஆட்சியில் சங்கராச்சாரிக்கு தடை

தமிழ்நாட்டில் ஒரு கும்பல் நீதிமன்றத்தில் இந்துக் கடவுள்களின் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வேலை இந்துக் கடவுளை புண்படுத்தி விட்டடார்கள் என்று மனு போடுவதுதான். உடனே பாஜக மேடைகளில் ‘திமுக ஆட்சி! இந்து விரோத ஆட்சி!” என்று முழங்குவார்கள். உ.பியில் ‘ராமராஜ்யம்’ நடத்தும் யோகியின் ஆட்சியில் இப்போது ஒரு பார்ப்பன சங்கராச்சாரியை ‘வச்சு செய்கிறார்கள்’ ஜோதிர்மட சங்கராச்சாரி அவிமுக்தேஸ்வரானந்த் திரிவேணி சங்கமத்தில் நீராட தனது சீடர்களுடன் பல்லக்கில் சென்றார். “சங்கராச்சாரி பல்லக்கை நேரடியாக நதியின் கரை வரை அனுமதிக்க முடியாது அதற்கு உனக்கு தகுதி இல்லை நீ இப்போது சங்கராச்சாரியே அல்ல; இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. பல்லக்கை விட்டு இறங்கு” என உ.பி காவல்துறை அதிகாரிகள் தடை போட்டனர். ஆத்திரமடைந்த சங்கராச்சாரி சீடர்களுக்கும் காவல்துறைக்கும் மோதல். சங்கராச்சாரியின் பெண் பக்தர்கள் தாக்கப்பட்டனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்லக்கில் சீடர்களுடன் புனித நீராட வந்த பார்ப்பன சங்கராச்சாரி மகர மேளா நடக்கும் இடத்தில்...

கேரள உயர்நீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு

கேரள உயர்நீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு

தமிழ்நாட்டில் இந்து கோயில்களில் பிற மதத்தினர் நுழையக் கூடாது; அதற்கு நீதிமன்றம் தடை போட்டுவிட்டது; கோயில் கொடி மரத்திலேயே அறிவிப்பு பலகையை நிறுவ வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்தது. குறிப்பாக பழனி முருகன் கோயிலில் இந்த அறிவிப்புப் பலகையை நிறுவ நீதிபதி உத்தரவிட்டார். சித்தர் மரபில் உருவாக்கபப்ட்ட பழனி கோயிலில் கொடி மரங்களே இல்லை என்பது கூட அந்த நீதிபதிக்கு தெரியவில்லை. இதற்கு நேர்மாறாக இப்போது கேரள உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இந்து கோயிலில் பிற மதத்தினரையும் அனுமதிக்க வேண்டும்; அதற்கேற்ப சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அடூர் என்ற ஊரில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் 2023-ஆம் ஆண்டு நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்க இரண்டு கிறிஸ்துவ பாதிரியார்கள் அழைக்கப்பட்டனர். `திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு’ நிர்வாகத்தின் கீழ் இந்தக் கோயில் இருக்கிறது. இதை...

இதுதான் இந்திய நாடாளுமன்றமா?

இதுதான் இந்திய நாடாளுமன்றமா?

இந்தியாவின் நாடாளுமன்றத்தின் ஜனநாயகப் பெருமையை பார்த்து உலக நாடுகள் கைகொட்டி சிரிக்கின்றன. குடியரசுத் தலைவர் தேசப் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பேசுவதும் அதற்கு பிரதமராக இருப்பவர் நன்றி கூறுவதும் மரபு. “நான் அப்படியெல்லாம் நன்றி கூற முடியாது; நாடாளுமன்றத்தில் எனக்கே பாதுகாப்பு இல்லை; குறிப்பாக நான் அமர்ந்திருக்கும் இருக்கையிலேயே எனக்கு ஆபத்து; சந்தேகமிருந்தால் அந்த சபாநாயகர் நாற்காலியில் ஒருவரை உட்கார வைத்து இருக்கிறோமே அவரை கேட்டுப் பாருங்க”… என்று சபாநாயகரைக் கொண்டு அறிவிக்கச் செய்துவிட்டார் நாட்டின் பிரதமர். இதே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கினார். கைலாச மலையை சீனப் படைகள் ஆக்கிரமித்து வரும்போது இந்திய இராணுவ தளபதி அவசரமாக ஆலோசனை கேட்டார். தடுத்து நிறுத்துவதா? வேண்டாமா? என்று கேட்டிருக்கிறார். தேசத்தை காக்கும் ராணுவ அமைச்சர் ராஜநாத் சிங் கருத்து கூறவில்லை. பிரமர் மோடியோ “ சீனப்படைகளை எதிர்த்து போரிடலாமா? அல்லது ஆக்கிரமிப்புக்கு வழிவிடலாமா என்பது...

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல்

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல்

நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 18,727 பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும் அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமான அளவில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் பள்ளிக் கல்வி முறையில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஒராண்டிலேயே சுமார் 8475 தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது கல்விக்கான அணுகல், கிராமப்புற வாய்ப்புகள் மற்றும் கல்வி சமத்துவம் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது, நாட்டின் பொதுக் கல்வி அமைப்பில் அடிப்படை மாற்றங்களை இது சுட்டிக்காட்டுகிறது. அரசிதழ் தரவுகளின்படி, பொதுப் பள்ளிகளின் வீழ்ச்சியையும், தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்களின் எழுச்சியையும் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

பகவத்துக்குப் பதிலடி

பகவத்துக்குப் பதிலடி

● ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருப்பதற்கு `இந்து’ மட்டுமே; தகுதி ஜாதி தடையல்ல! -மோகன் பகவத் ஆனால் இந்துவாக இருப்பதற்கு ஜாதி மட்டுமே தகுதி; இதை எதிர்க்க மாட்டீர்களா? ● பாரம்பரியமாக ஜாதிக்கும் தொழிலுக்கும் இருந்த தொடர்பு தற்போது மறைந்து விட்டது. -மோகன் பகவத் மறைந்துவிடக் கூடாது என்பதால் தான் மோடிஜி ‘விஸ்வகர்மா திட்டத்தை’ கொண்டு வந்து இருக்கிறார். அர்ச்சகர் தொழிலை ஜாதியிலிருந்து பிரித்து விடக்கூடாது என்பதால் தான் நீங்கள் கட்டிய ராமர் கோயிலில் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்கின்றார்கள்.அந்த பாராம்பரிய தொழிலை உருவாக்கியதே, நீங்கள் பேசும் `இந்து’ மதம் தானே! ● ஜாதிப் பாகுபாடுகளை அகற்ற மக்கள் மனதிலிருந்து ஜாதியை அகற்ற வேண்டும் -மோகன் பகவத் மிக்க நல்லது. அதேபோல் வர்ணாஸ்ரமப் பாகுபாடுகளை வலியுறுத்தும் மனு சாஸ்திரங்களையும், பகவத் கீதையும், வேத உபநிடங்களையும் இந்து மதத்தில் இருந்து அகற்ற தயாரா? ● சமூகப் பாகுபாடுகளைக் களைய வேண்டும் -மோகன் பகவத் சபாஷ்....

மொழிப்போர் நினைவு உணர்ச்சி விழா மற்றும் பெரியார் நினைவு அறிவு விழா!

மொழிப்போர் நினைவு உணர்ச்சி விழா மற்றும் பெரியார் நினைவு அறிவு விழா!

சூலூர் பாவேந்தர் பேரவையின் சார்பாக மொழிப்போர் நினைவு உணர்ச்சி விழா மற்றும் பெரியார் நினைவு அறிவு விழா கோவை மாவட்டம், சூலூரில் எஸ். ஆர். எஸ் திருமண மண்டபத்தில் 24.01.2026 (காரி) சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் வெ.க.சண்முகவேல் (பாவேந்தர் பேரவைத் தலைவர்) தலைமையில் நடைபெற்றது. சூ.நா.வரதராசு (பாவேந்தர் பேரவைச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். சூலூர் ஏ.டி.ஆர் பரதநாட்டியப் பள்ளி மாணவியரின் தமிழுணர்வு இசை நாட்டியத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களுக்கு இசையாலும் நடனத்தாலும் மாணவியர் உயிரூட்டிக் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழினத்தின் மொழி உரிமை மீட்க உயிர்நீத்த மொழிப்போர் ஈகியர்களின் படத்தினை திறந்து வைத்தார். கடந்த 19.1.2026-ம் நாள் மறைந்த தன்மானப் பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களின் படத்தினை தேவி மன்னவன் (சூலூர் பேரூராட்சித் தலைவர்) திறந்து வைத்தார். சூலூர் பாவேந்தர் பேரவை முன்னாள் செயலாளர், மறைந்த தோழர் சூ.நா.தமிழ்நெஞ்சன் (எ) சக்திவேல்...

ஜாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

ஜாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் ஜாதிய வன்கொடுமைகள் பின்னணியும் சட்ட ரீதியான தீர்வும் என்ற தலைப்பில் எவிடென்ஸ் அமைப்பின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் 24.01.2026 அன்று காலை 10 மணியளவில் மதுரை, நரிமேடு பகுதியில் உள்ள பிசிஎஸ் ஹாலில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். எவிடென்ஸ் கதிர் ( எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர்) மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகளவு ஜாதிய வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. ஜாதிரீதியான படுகொலைகள், தாக்குதல்கள், ஆணவக் குற்றங்கள், பாலியல் வல்லுறவுகள் உள்ளிட்ட பல்வேறு வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்கு எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்த போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஜாதிய உணர்வுகளை தூண்டுகிற ஜாதிய சக்திகள் அதிகளவு வளர்ந்தும் வருகின்றன. அத்தகைய சக்திகளுக்கு எதிராக உரிய நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வன்கொடுமைகளுக்கு காரணமான சமூக, அரசியல்,...

தோழர் சக்குபாய் நெடுஞ்செழியன் நினைவேந்தல்!கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்!

தோழர் சக்குபாய் நெடுஞ்செழியன் நினைவேந்தல்!கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்!

பெரியார் பேருரையாளர், ஆசீவக ஆய்வாளர், பேராசிரியர் முனைவர் தோழர் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 26.01.2025 திங்கட்கிழமை காலை 9.30 மணி அளவில் திருச்சி, இராசாராம் சாலை, கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள கயிலை மணி அரங்கத்தில் நடைபெற்றது. நடராசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஆ. இராசா (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் தோழர் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களின் படத்திறப்பு செய்து மலர்தூவி மரியாதை செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினார்.அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளி கல்வித்துறை அமைச்சர்) அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார். குடந்தை இகவரசன் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களின் நினைவைப் பகிரும் வகையில் கவிதை பாடல்கள் பாடினார். பெ. மணியரசன் (தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர்), ஓய்வுப்பெற்ற ஐ.ஜி க.வடிவேல், மருத்துவர்கள் செந்தில்குமார், யாழினியன், நடராசன், இளவஞ்சி இளையகுமார், இராசா. இரகுநாதன், பாப்பாநாடு காமராசு,கவித்துவன், திருமாறன், அறிவு, பேராசிரியர் வீரமணி, பிரவீன், ஐயம் பெருமாள், ம.பொன்னிறைவன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். நிறைவாக...

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்! மாபெரும் கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி!

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்! மாபெரும் கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி!

தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேசன் மற்றும் சேலம் ராயல் பவர் அரிமா சங்கம் சார்பாக நடத்திய 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி சேலம் கருப்பூர் பத்மவாணி மகளிர் கல்லூரியில் 12.01.2026 திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. பத்மவாணி மகளிர் கல்லூரி சேர்மேன் சத்யமூர்த்தி தலைமையேற்றார். சிவகேந்திரன் குட்டி (துணைத் தலைவர், தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன்) முன்னிலை வகித்தார். சிவபெருமாள் (பொதுச்செயலாளர்-தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேசன்) வரவேற்புரையாற்றினார். மகேஷ் (காஞ்சி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர்), அரிமா விவேகானந்தன் (தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன் மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளர்), பத்மவாணி மகளிர் கல்லூரி நிர்வாக அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர். சௌந்திரராஜன் (பள்ளி தாளாளர்,சௌத் இந்தியன் மெட்ரிக்குலேசன்), கஞ்சமலை (பள்ளி தாளாளர், சுவாமி விவேகானந்தா மெட்ரிக்குலேசன்), முத்து (பள்ளி தாளாளர், நார்த் பார்க் மெட்ரிக்குலேசன்), முதல்வர் சுந்தர், வழக்கறிஞர் ஆனந்த் ராஜ்...

அண்ணா சிலைக்கு மரியாதை

அண்ணா சிலைக்கு மரியாதை

பேரறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி, (3/2/26) காலை 10 மணிக்கு, பத்ரிநாரயாணன் நினைவுப் படிப்பகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று இராயப்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தோழர்கள் கொள்கை முழக்கமிட்டனர். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம. கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப. அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த. நா. சூர்யா, தோழர்கள் இரண்யா, மகிழவன், குமார், தேன்மொழி, லட்சுமணன், லீலா, துரைராசு, மனோஜ், வீரமுத்து, செய்தியாளர்‌ பிரசாந்த், சுகந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா

ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா

கழகத் தோழர்கள் ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா பிப்ரவரி-01 அன்று காலை 9 மணியளவில் மந்தைவெளியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இருவரும் இணைந்து திறந்து வைத்தனர். பேராசிரியர்.சரசுவதி, மயிலாடுதுறை இளையராசா (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இணையர்களின் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். பாரி.சிவக்குமார் நண்பரான தோழர் சக்திவேல் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை மாவட்டக் கழகம் சார்பில் பெரியார் அம்பேத்கர் படம் பரிசாக கழகத் தலைவர் அவர்கள் பாரி சிவா அவர்களிடம் வழங்கினார். கழகத் தோழர் குமரன் தன்னுடைய ஆட்டோவில் எழுதியிருந்த ” மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்ற பெரியார் வாசகத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை.இராசேந்திரன் பார்வையிட்டனர். இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன் | ந. தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், ஊடகவியலாளர் பிரகாசு,...

நாமக்கல்லில் சமத்துவ பொங்கல் விழா

நாமக்கல்லில் சமத்துவ பொங்கல் விழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கம்பன் நகரில் தேவி மாதேஸ்வரன் இல்லத்தில் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கழகத் தலைமைக் குழு உறுப்பினர் கேப்டன் அண்ணாதுரை பொங்கல் விழா சிறப்புரை நிகழ்த்தினார். இலக்கிய தளம் அன்பழகன், பகலவன் (மொழிப்போர் தியாகிகள் நினைவு குழு), மு.சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்), ஆர் கே.குமார் (தி. க மாவட்டத் தலைவர்), ஸ்ரீ வடிவேலு (நகரச் செயலாளர்), மி.த தண்டபாணி (நகரத் தலைவர்), தோழர்கள் பிரகாஷ், மோகன், கார்த்தி சரவணன் ஆகியோரின் குடும்பமும் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். கம்பன் நகர் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.பகுதிக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாலை 4-மணியளவில் அனைவருக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவாக சுதாமணி ராஜ் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் இதழ்05022026.

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!

தை-2 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது! சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 16.01.2026 காலை 10 மணி அளவில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள திருவள்ளுவர் உருவச் சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தங்கதுரை, வெற்றிமுருகன், மாநகரத் தலைவர் பாலு, மாநகர செயலாளர் ஆனந்தி, மாநகரப் பொருளாளர் பிரபு, மாநகர அமைப்பாளர் தேவராஜ், செந்தில், FM பாலமுருகன், பரமேஷ், கோகுலகண்ணன், பாரப்பட்டி முருகேசன், நவராஜ், விக்ரம், அலாவுதீன், தமிழினி, நீலகண்டன், ஹரினி, சுதர்சன் ஆகிய கழகத் தோழர்கள் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

திருப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா!

திருப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா!

திருப்பூரில் கடந்த 10- ஆண்டுகளுக்கு மேலாக கழகத்தினர் தமிழர் திருநாள் பொங்கல்விழாவை பகுதி மக்கள் மற்றும் தோழமை சக்திகளின் ஆதரவுடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வீரபாண்டி பிரிவு பாரதி நகரில் கழகப் பொருளாளர் துரைசாமி , மாஸ்கோ நகரில் மாதவன் முன்னெடுப்பிலும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். வீரபாண்டி பிரிவு: பாரதி நகர் பெரியார் படிப்பகம் பகுதியில் பொங்கல் விழா 15.01.26 அன்று காலை பொங்கல் வழங்குதலில் தொடங்கி, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் வாழ்த்துரை வழங்குதல் பரிசு வழங்குதல் என மாலை வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சரசுவதி (கழக மாநகர அமைப்பாளர்) பொங்கல் வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளை வீரபாண்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், ஆர்.குமார் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்) தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளை ஆர்.கணேசன், சி.லட்சுமணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாலை வரை விளையாட்டுப்...

பாஜக முயற்சி முறியடிப்பு!

பாஜக முயற்சி முறியடிப்பு!

திருவல்லிக்கேணி பகுதி வி.பி ராமன் சாலையில் பெரியார் சிந்தனைப் பலகை அருகில் பாஜகவினர் இரவு நேரத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பத்தை வைக்க முற்பட்டனர். செய்தியறிந்த கழகத் தோழர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்து கொடிக் கம்பத்தை எடுக்க வைத்தனர். ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் சு.கோபிநாத், சே.ராஜேஷ், த.நா.சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் குமார், யாழினி ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

சனவரி-25 அன்று நடராசன் – தாளமுத்து உள்ளிட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு மூலக்கொத்தலம் நினைவிடத்திற்கு பேரணியாகச் சென்று, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர்கள் சேத்துப்பட்டு இராசேந்திரன், மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, ம. கி. எட்வின் பிரபாகரன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.வ. வேலு, இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், சுகுமார், இரண்யா, குறளரசி, துரை, சு. கோபிநாத் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

யுஜிசி விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்!

யுஜிசி விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்!

ஆனால் “ஜாதிப் பாகுபாடு” என்பது எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஒபிசிபிரிவினருக்கு எதிரான பாகுபாடுகளை மட்டுமே குறிக்கும் வகையில் இருப்பதாக உயர்ஜாதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வி.பி. சிங் அமல்படுத்தியபோது வெளிப்படுத்திய கண்மூடித்தனமான எதிர்ப்பை இதற்கும் வெளிக்காட்டியுள்ளனர். உயர் ஜாதியினரே ஒடுக்குமுறையாளர்கள் என்று இந்த விதிகள் மறைமுகமாகக் கருதுகின்றன, இதனால் அவர்கள் துன்புறுத்தப்படலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். பொய்யான புகார்களுக்குத் தீர்வு காணும் வழிமுறைகள் இதில் இல்லை. இவற்றில் ஏதாவது அடிப்படை நியாயமோ, நேர்மையோ இருக்கிறதா? ஆனால் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த இந்த விதிகளுக்கு பா.ஜ.க.விலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் ரே பரேலி மாவட்டம் சலோனில் பாஜக கிசான் மோர்ச்சாவின் மாவட்டத் தலைவரான ஷியாம் சுந்தர் திரிபாதி, எதிர்ப்பின் காரணமாக ராஜினாமா செய்த தலைவர்களில் ஒருவர். ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், “விதிகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என்றார். “இன்று இல்லையென்றாலும் நாளை...