ஜாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்
தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் ஜாதிய வன்கொடுமைகள் பின்னணியும் சட்ட ரீதியான தீர்வும் என்ற தலைப்பில் எவிடென்ஸ் அமைப்பின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் 24.01.2026 அன்று காலை 10 மணியளவில் மதுரை, நரிமேடு பகுதியில் உள்ள பிசிஎஸ் ஹாலில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். எவிடென்ஸ் கதிர் ( எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர்) மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகளவு ஜாதிய வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. ஜாதிரீதியான படுகொலைகள், தாக்குதல்கள், ஆணவக் குற்றங்கள், பாலியல் வல்லுறவுகள் உள்ளிட்ட பல்வேறு வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்கு எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்த போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஜாதிய உணர்வுகளை தூண்டுகிற ஜாதிய சக்திகள் அதிகளவு வளர்ந்தும் வருகின்றன. அத்தகைய சக்திகளுக்கு எதிராக உரிய நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வன்கொடுமைகளுக்கு காரணமான சமூக, அரசியல்,...
