Category: இயக்கம்

சாதனையாளர்களுக்கு விருது கோபி ஒன்றியக் கழகத்தின் எழுச்சி விழா

சாதனையாளர்களுக்கு விருது கோபி ஒன்றியக் கழகத்தின் எழுச்சி விழா

கோபி ஒன்றியம் அளுக்குளி கிளைக் கழகத்தின் சார்பில் சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் ஜாதி மறுப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, மாவட்டச் செயலாளர் செல்வகுமார், திமு கழகப் பொறுப்பாளர் அளுக்குளி தங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஒ.பி.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராம. இளங்கோவன் வெளியீட்டு செயலாளர் திவிக, வழக்குரைஞர் செகதீஸ்வரன், வேலுச்சாமி தலைமைக் கழகப் பேச்சாளர் திவிக, சுப்பிரமணியம் கொளப்பலூர் கிளை கழகப் பொறுப்பாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜாதி மறுப்பு மணம் புரிந்தவர்களுக்கும் மற்றும் கல்வி, அரசுப் பணி, விளையாட்டு துறைகளில் பல்வேறு சாதனைகள் புரிந்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கழகத்தலைவர் கொளத்தூர் மணி, கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஏ முருகன் ஆகியோர் நினைவுப்பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்வில் கோபி மாவட்டக் கழகத் தோழர்கள் மற்றும் அளுக்குளிப்...

பாஜகவின் வெற்றியை உறுதிசெய்வதே தொகுதி மறுவரையறை எனும் சூழ்ச்சித் திட்டம்

பாஜகவின் வெற்றியை உறுதிசெய்வதே தொகுதி மறுவரையறை எனும் சூழ்ச்சித் திட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 33வது கூட்டம், 29/8/26 (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு தொகுத்து வழங்கினார். “ஜம்மு காஷ்மீர், அசாமில் தொகுதி மறுவரையறை ஏற்படுத்திய பாதிப்புகள்” குறித்து கார்த்தி ராஜேந்திரன், “50 விழுக்காடு தொகுதிகள் உயர்வு தீர்வாகுமா?” எனும் தலைப்பில் சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், தொகுதி மறுசீரமைப்பு ஆபத்துகளையும், பாஜவின் சதிதிட்டம் குறித்தும் ர.பிரகாசு, எழுத்தாளர் தமிழ் காமராசன் விளக்கி உரையாற்றினர். நிறைவாக பேசிய இடதுசாரி செயல்பாட்டாளர் மருதையன் அரசியல் சட்ட அமைப்புகளை சீர்குலைக்கும் அவசர காலத்தில் வாழ்கிறோம் என்று கூறினார். தொகுதி மறுவரையரைத் திட்டத்தின் ஆபத்துகளை விரிவாக விளக்கிப் பேசினார். “ஜம்மு காஷ்மீர், அசாமில் தொகுதி மறுவரையறை ஏற்படுத்திய பாதிப்புகள் என்ற தலைப்பில் கார்த்திக் ராஜேந்திரன் உரை: தொகுதி மறு வரையறை சட்டத் திருத்தத்தை யார் கையில்...

செங்கொடிக்கு கழக சார்பில் வீரவணக்கம்; பேரறிவாளன் பங்கேற்றார்!

செங்கொடிக்கு கழக சார்பில் வீரவணக்கம்; பேரறிவாளன் பங்கேற்றார்!

தோழர் செங்கொடியின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை, ஆக-28, அன்று மாலை 6 மணிக்கு சென்னை ஷெனாய் நகர் வைத்தியநாதன் தெருவில், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.வ. வேலு ஒருங்கிணைத்தார். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் இராவணன், தோழர்கள் சிகாமணி, அசோக், சுரேந்தர் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக, தோழர்கள் ஷர்மிளா, குடிஅரசு (மாவட்ட அமைப்பாளர்) ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தோழர் பேரறிவாளன் பங்கேற்றார். பெரியார் முழக்கம் இதழ் 03092026

அனிதா நினைவுநாளில் உறுதியேற்பு! ‘கல்வி உரிமைகளை மீட்டெடுப்போம்’

அனிதா நினைவுநாளில் உறுதியேற்பு! ‘கல்வி உரிமைகளை மீட்டெடுப்போம்’

நீட் எதிர்ப்புக்கு உயிர்ப்பலி தந்த அனிதாவின் 9-ஆம்ஆண்டு நினைவு நாள் செப்டம்பர்-1ம் தேதி மாலை 5.30 மணி அளவில் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நீட் ஒழிப்புக்கான உறுதி ஏற்பு நாளாக நடைபெற்றது. நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த நினைவு நாள் திட்டமிடப்பட்டது. கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததால் திராவிடர் கழகத்தின் தலைமையிடமான பெரியார் திடலுக்கு மாற்றப்பட்டது. பெரியார் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அனிதாவின் படத்திற்கு தலைவர்கள் பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். ஆசிரியர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ் வீரவணக்க உரையாற்றினர். நீட் எதிர்ப்பையும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும் தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது. தோழர் தியாகு உறுதிமொழியைப் படித்தார். நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர்....

இந்தியாவுக்கு அய்.நா. கண்டனம் ஜாதியும் இனப்பாகுபாடுதான்; உள்நாட்டுப் பிரச்சனை அல்ல!

இந்தியாவுக்கு அய்.நா. கண்டனம் ஜாதியும் இனப்பாகுபாடுதான்; உள்நாட்டுப் பிரச்சனை அல்ல!

“மனிதர்கள் அனைவருமே சமமாக முடியாது; பிறப்பிலேயே கடவுள் உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாகுபாடுகளை ஏற்றுக்கொண்டு வாழப் பழக வேண்டும் இந்த வாழ்க்கை தர்மம் தான் நமது சனாதனம்” இதுதான் சனாதன நெறிமுறை என்கிறது பார்ப்பனியம். வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். வேற்றுமை என்பது இவர்கள் பூசி மெழுகி ஏமாற்றும் சொல். ‘பிராமண’ அர்ச்சகர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் வேற்றுமை என்ற அடையாளத்திற்குள் கொண்டுவர முடியுமா? நிச்சயமாக முடியாது. இதற்குப் பெயர் பாகுபாடு (Discrimination). வெள்ளையர்கள் கருப்பர்களை ஒதுக்கி வைத்தது பாகுபாடு. ‘பிராமணர்’கள் உயர் பிறவிகள்; ‘சூத்திர, பஞ்சமர்’கள் இழி பிறவிகள் என்பது பாகுபாடு. மனிதர்களுக்குள் திணிக்கப்படும் பாகுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச சட்டம். இனப் பாகுபாடுகளை ஒழிக்கும் அமைப்பு (Committee on the Elimination of Racial Discrimination-CERD) 1968-ல் அய்.நாவில் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு நாட்டையும் கண்காணித்து வருகிறது. இந்த சர்வதேச உடன்பாட்டில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இனப் பாகுபாடு...

தொடர்கிறது, பார்ப்பன ஆதிக்கம்

தொடர்கிறது, பார்ப்பன ஆதிக்கம்

அரசியலிலும் சமூகத்திலும் பார்ப்பனியமும் மனுசாஸ்திரமும் அதிகாரம் பெற்றுவருகிறது; இதை உறுதிப்படுத்தும் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு. திருட்டுக்கு ’தீண்டாமை’ இல்லை கோயில் கர்ப்பக் கிரகத்தில் “தீண்டாமை”யை ஆகமங்களைக்கூறி பின்பற்றி வருகிறது பார்ப்பனியம். அந்த ’கர்ப்பக்கிரகத்தில்’ அம்மன் நகைகளை திருடுகிறார்கள் அர்ச்சகர்கள். ஆலந்தூர் பொன்னி அம்மன் கோயில் அர்ச்சகராக இருக்கும் ரெங்கநாதன் கருவறையில் இருந்த 190 கிராம் வெள்ளி கிரீடம், 270கிராம் வெள்ளி ஜல்லடை, 10 கிராம் தங்கத் தாலியை திருடி கைது செய்யப்பட்டுள்ளார். கோயில் அறங்காவலர் புகாரில் அர்ச்சகர் வீட்டில் இருந்த திருட்டுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பார்ப்பனர் அல்லாதார் கருவறையில் நுழைந்தால் தீட்டு; ஆனால் கருவறையில் நுழையும் பிறவி உரிமை பெற்றவர்களே கடவுளுக்கு ஏதும் சக்தி இல்லை என்பதை நன்கு உணர்ந்ததால் அம்மன் தாலியையே திருடி கைதாகிறார்கள். சாக்கடைக் குழியில் இட ஒதுக்கீடு கருவறையில் ‘பிராமணர்’களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருப்பது போல் கழிவுநீர் அடைப்பைச் சுத்தம் செய்யும் வேலை பட்டியலினப் பிரிவினருக்கு...

பேரணியில் முழக்கங்கள்

பேரணியில் முழக்கங்கள்

பேரணியில் கழகத் தோழர்கள் எழுப்பி வந்த முழக்கங்கள் மக்களைக் கவர்ந்தது. ஒழியட்டும் ஒழியட்டும்! மக்களைப் பிரிக்கும் பார்ப்பனியம் ஒழியட்டும் ஒழியட்டும் சுயமரியாதை வாழ்க்கையே சுகமான வாழ்க்கை பில்லி,சூனியம்,ஜோசியம் எல்லாம் சாமியர்கள் வயிறு வளர்க்க உதவுது காசை எல்லாம் செலவு செய்து தமிழர் வாழ்வு சீரழியுது! நடந்ததைச் சொல்லும் ஜோதிடத்தால் நடக்கப் போவதை சொல்ல முடியுமா? அறிவுடனே நாம் இருந்தால் ஜோதிடப் புரட்டு நடக்குமா? ஜாதி மறுப்பு திருமணம் செய்வீர் காதலோடு மகிழ்வாய் வாழ்வீர் ஜாதியத்தைக் காப்பாற்ற பெண்களைத்தான் நம்புறான்! பெண்கள் உரிமை பேசினால் நான் ஆம்பள என்கிறான். தடுத்திடுவோம் தடுத்திடுவோம் ஜாதி ஆணவக்கொலையைத் தடுத்திடுவோம் காதல் செய்வீர் காதல் செய்வீர் இளைஞர்களே காதல் செய்வீர் ஜாதி ஒழிக்க காதல் செய்வீர் சட்டமியற்று சட்டமியற்று ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டமியற்று வேண்டாம் வேண்டாம் ஜாதிக்குள்ளே திருமணம் வேண்டவே வேண்டாம் வாழ்வில் மூடநம்பிக்கை வேண்டாம் வேண்டாம் சனாதனம் என்பது பார்ப்பனியமே பார்ப்பனியம் என்பது...

உழைப்புக்குக் கிடைத்த வெற்றி

உழைப்புக்குக் கிடைத்த வெற்றி

மாநாட்டுப் பொறுப்பாளர்கள் காரைக்குடி இளங்கோ, பெரியார்முத்து விடுத்துள்ள அறிக்கை. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “வாழ்வியல் மாற்றத்திற்கான பரப்புரைப் பயணத்தின்” நிறைவு மாநாடு, 12.08.2026 அன்று காரைக்குடியில் எழுச்சியுடனும், சிறப்புடனும், வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையிலும் நடைபெற்று முடிந்துள்ளது. தோழர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள தென் மாவட்டத்தில் இத்தகைய சிறப்பான மாநாட்டை நடத்த முடியும் என்பதை காரைக்குடி மாநாடு நிரூபித்துள்ளது. இது ஒரு மாநாட்டின் வெற்றி மட்டுமல்ல; சிவகங்கை மாவட்டத்தில் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் புதிய தொடக்கம். காரைக்குடியில் மாநாடு நடத்தப்படும் என்று தலைமைக்குழு அறிவித்தபோது, “இவ்வளவு பெரிய மாநாட்டை நம்மால் நடத்த முடியுமா?” என்ற தயக்கம் எங்களுக்குள் இருந்தது. ஆனால் தலைவர், தலைமைக்குழு மற்றும் முன்னணித் தோழர்களின் வழிகாட்டுதலும், மாவட்டத் தோழர்களின் அர்ப்பணிப்பும், தமிழகம் முழுவதிலுமிருந்து கிடைத்த ஒத்துழைப்பும், நன்கொடையாளர்களின் ஆதரவும் அந்தத் தயக்கத்தை நம்பிக்கையாக மாற்றின. நம்பிக்கை செயலாக மாறியது; செயல்பாடு வரலாற்று வெற்றியாக மாறியது. மாநாட்டிற்கான...

★	மூடநம்பிக்கை மற்றும் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க  ★	தனிச்சட்டம்   எண்ணிக்கை பலமற்ற சேவை ஜாதிப் பிரிவினருக்கு சமூகநீதி இயக்கம், ★	ஆட்சிப் புலத்தில் மதத்தைத் திணிக்கும் அமைச்சர்களுக்குக் கண்டனம்! கழக மாநாட்டின் தீர்மானங்கள்

★ மூடநம்பிக்கை மற்றும் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ★ தனிச்சட்டம் எண்ணிக்கை பலமற்ற சேவை ஜாதிப் பிரிவினருக்கு சமூகநீதி இயக்கம், ★ ஆட்சிப் புலத்தில் மதத்தைத் திணிக்கும் அமைச்சர்களுக்குக் கண்டனம்! கழக மாநாட்டின் தீர்மானங்கள்

12.08.2026 அன்று காரைக்குடியில் நடைபெற்ற மாற்றத்திற்கான வாழ்வியல் பரப்புரைப் பயணங்களின் நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள். எதிர்ப்பைப் பதிவு செய்க தீர்மானம்-1: ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பார்ப்பன சொற்பொழிவாளர்களும், பிராமணர் மாநாடு போன்ற மாநாடுகளில் உரையாற்றுபவர்களும் முன்வைக்கும் பல வாதங்கள் அரசியல் சட்டம் தனது நோக்கமாக கொண்டுள்ள சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்கு எதிராகவும், பிற சமுதாய மக்களை இழிவுபடுத்துவதாகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட குற்ற வரையறைக்குள் வருவதாகவும் உள்ளன. அ) அவ்வாறான உரைகள் ஆற்றப்படும் இடங்களிலேயே எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டுமாறு தோழர்களை, பார்ப்பனரல்லாத மக்களை – குறிப்பாக இளைஞர்களை இம்மாநாடு தமிழ்நாட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறது ஆ) தனி இடங்களில் அவ்வாறு பேசப்பட்டாலும் காணொலி வழியாக பொது வெளியில் பரப்பப்படும் போது உரிய நிறுவனங்களுக்கு புகார் (Report) பதிவிடுமாறும், அதே வேளையில் காவல் நிலையங்களில் புகார் அளித்து உரிய ஒப்புகையைப் பெறுமாறும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. குரலற்ற சேவை ஜாதி...

சலசலப்புகளை முறியடித்து பயணம் தொடர்கிறது

சலசலப்புகளை முறியடித்து பயணம் தொடர்கிறது

திருச்சி அணி: துவக்க பொதுக்கூட்டம் திருச்சி மேலப்புலிவார்டு பகுதியில் ஆக-6 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பயணக்குழு தலைவர் உமாபதியிடம் கழகக் கொடியைத் தந்து பயணத்தைத் துவக்கி வைத்தார். டார்வின் தாசன் தலைமை தாங்கினார். பெரியார் விருதாளர் தி.நெடுஞ்செழியன், தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மற்றும் லதா சத்யா குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். தலைமைக்குழு உறுப்பினர் திருச்சி மனோகரன் பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். கழகத் தோழர்கள் மணிகண்டன், குணா உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்து உதவினர். 2-ம் நாள்: திருச்சி புறநகர் அண்ணா நகர் 3வது பேருந்து நிலையம், MIET குண்டூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட்-7, அன்று பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், கருப்பு கோகுல் ஆகியோர்...

கழகம் புகார் எதிரொலி  ஜாதிச் சங்க வாகனங்கள் பறிமுதல்

கழகம் புகார் எதிரொலி ஜாதிச் சங்க வாகனங்கள் பறிமுதல்

தீரன் சின்னமலை அவர்கள் நினைவுநாள் என்ற பெயரில் ஜாதிச் சங்கங்கள் நடத்தும் நிகழ்வுகளில் ஆணவப் படுகொலையை ஆதரித்தும், ஜாதிக் கலவரத்தை தூண்டுவதும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பியும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவதை தடுத்திடவும் மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல காவல்துறை அய்.ஜி அவர்களிடம் கோவை மாவட்டக் கழகம் சார்பில் ஆகஸ்ட்-1 அன்று மதியம் 12 மணி அளவில் மனு அளிக்கப்பட்டது. மனு கொடுத்ததன் எதிரொலியாக காவல்துறையால் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 220 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 13082026

பரப்புரைப் பயணத்திலிருந்து சில துளிகள்….

பரப்புரைப் பயணத்திலிருந்து சில துளிகள்….

திருநெல்வேலி பணகுடி பகுதியில் கழகப் பரப்பரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் உற்சாகம் பெற்று மேடைக்கு வந்து தோழர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டினார். தோழர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பணகுடி பகுதியில் பரப்புரையைக் கவனித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ராஜலட்சுமி பயணக் குழு தோழர்களை பாராட்டி குளிர்பானம் வழங்கினார். அவருக்கு கழக வெளியீடுகளை தோழர்கள் வழங்கினர். அதிராம்பட்டினம் பள்ளிகொண்டான் பகுதியைச் சார்ந்த தோழர்கள் ராஜேஷ், வினோத், மகேஷ் ஆகியோர் கழகப் பொருளாளர் துரைசாமி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆடை போர்த்தி கழக வெளியீடுகளை வழங்கினார். கோவை ’தோழர்’ அறக்கட்டளை சாந்தகுமார் பேராவூரணி அணி தோழர்களுக்கு முதலுதவி மருந்து பொருட்களை வழங்கினார். பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் பேசிய கருத்துக்களை கவனித்து விட்டு ரூ.500 ஒருவரும் மற்றொருவர் ரூ.1000 வழங்கினர். திருச்சி பெரியார் பெருந்தொண்டர் தமிழ்ச்சுடர் இரண்டு நாட்களும் தனது இல்லத்தில் பயணக்குழு...

கழகத் தோழர்கள் களமிறங்கினர் பரப்புரைப் பயணம் தொடங்கியது

கழகத் தோழர்கள் களமிறங்கினர் பரப்புரைப் பயணம் தொடங்கியது

‘ஜாதியில் திருமணம்! மதத்தில் பார்ப்பனியம்! வாழ்வில் மூடநம்பிக்கை! என்ற மூன்று கருத்துகளை முன்னிறுத்தி `தடை, அதை உடை!’ என்ற முழக்கத்தோடு கழகத் தோழர்களின் பரப்புரைப் பயணம் திருச்சி, நாகர்கோவில், போராவூரணி என்ற மூன்று முனைகளிலிருந்து புறப்பட்டது. போராவூரணியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், நாகர்கோயிலில் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனும், திருச்சியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் பயணத்தை துவக்கி வைத்தனர். போராவூரணியிலும், திருச்சியிலும் பொதுக்கூட்டமாக நடந்தது. கழகப் பொருளாளர் திருப்பூர். துரைசாமி தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் போராவூரணி பயணக் குழுவினரோடு இணைந்து பயணம் செய்து வருகின்றனர். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன் இருவரும் பயணக்குழுவினரின் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 4 பரப்புரைக் கூட்டங்களை நடத்துகின்றனர். நூல்விற்பனை, மக்களிடம் உண்டியல் மூலம் நிதி திரட்டுதல், துண்டறிக்கை வழங்கல் என்று தோழர்கள் பணியாற்றுகிறார்கள். நாகர்கோவில் அணி: சேலம் அணியின் பயணக் குழு 05.08.2026 புதன்...

கழகப் பரப்புரைப் பயணம் மற்றும் காரைக்குடி நிறைவு மாநாடு – முன்னேற்பாட்டுக் குழு சந்திப்பு!

கழகப் பரப்புரைப் பயணம் மற்றும் காரைக்குடி நிறைவு மாநாடு – முன்னேற்பாட்டுக் குழு சந்திப்பு!

கழகத்தின் சார்பில் “ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை – தடை! அதை உடை!” என்ற முழக்கத்துடன் பரப்புரைப் பயணம் நடைபெற உள்ளது. இப்பயணத்தின் நிறைவு மாநாடு வருகிற ஆகஸ்ட்-12 அன்று காரைக்குடியில் எழுச்சிகரமாக நடைபெற உள்ளது. மாநாட்டின் முன்னேற்பாடுகளைச் செய்யவும், களப்பணிகளில் உள்ள இடர்பாடுகளைக் களையவும் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் ஆகியோர் தீவிரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காரைக்குடிக்கு வருகை தந்த அவர்கள், மாநாட்டுப் பணிகள் குறித்தும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்தும் கழகத் தோழர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினர். மேலும், பல்வேறு தோழர்களை நேரில் சந்தித்து மாநாட்டுக்கான அழைப்பிதழ்களையும் வழங்கினர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வேணுகோபால் (காரைக்குடி) அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. நாகர்கோயில் மாநகராட்சியின் மேனாள் மேயர், திமுக மாவட்டச் செயலாளர் ஆர். மகேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பயணக்குழுவிற்கு தேவையான...

பரப்புரைக்கு தயாராவீர்

பரப்புரைக்கு தயாராவீர்

தமிழ்நாட்டில் சமூகத்திலும் வாழ்க்கையிலும் மாற்றங்கள் வந்தாலும் ஜாதி கட்டமைப்பு குலைந்துவிடவில்லை. பல்வேறு புதிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வருகின்றன. ஒவ்வொரு ஜாதிக் குழுவும் தனக்கான பெருமைகளைப் பேசுகிறது. ஜாதிச் சங்கங்களை அமைக்கிறார்கள்; ஒவ்வொரு ஜாதிக்கும் திருமணத்திற்கு வரன் தேடித்தரும் அமைப்புகள் வந்துவிட்டன; தொலைக்காட்சிகளிலும் அவை விளம்பரம் செய்கின்றன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே ஜாதி குறித்து ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்திய போது அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. பள்ளி கல்லூரி மாணவர்களிடையே 50% விழுக்காட்டிற்கும் மேல் ஜாதி உணர்வு இருப்பதையும் சமூக வலைதளங்களில் அவர்கள் ஜாதிப் பெருமைகளை பதிவு செய்து வருவதையும் அந்த ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டில் பாஜக தனது `இந்துத்துவா’ அரசியலை வளர்ப்பதற்கு ஜாதிச் சங்கங்களை பெருமளவில் பயன்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் சமுதாயத்தில் ஜாதிக் கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்று கவலைப்படவே இல்லை. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் அடக்கம். அரசியலுக்குள்...

தோழர் ஆம்ஸ்ட்ராங் 2-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் ஜூலை-5 அன்று வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

தோழர் ஆம்ஸ்ட்ராங் 2-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் ஜூலை-5 அன்று வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் இதழ் 16072026

பரப்புரை; சேலம், திருப்பூர் மாவட்டங்கள் தீவிரம்!

பரப்புரை; சேலம், திருப்பூர் மாவட்டங்கள் தீவிரம்!

சேலம்: 06.07.2026 திங்கள் மாலை 4.00 மணிக்கு கருப்பூரில் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் இல்லத்தில், மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தலைமையில், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் முன்னிலையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் கடந்த 28.06.2026 அன்று திருப்பூரில் நடைபெற்ற தலைமைக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் தென்மாவட்டங்களுக்கு பரப்புரை பயணம் மேற்கொள்வது குறித்தும், பயணக் குழுவின் தொடக்க நிகழ்வாக 05.08.2026 அன்று மாலை 4.00 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரையை சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் தொடங்குவது எனவும், அதன்பிறகு பரப்புரைக் குழு நாகர்கோவில் சென்றடைந்து காரைக்குடி நிறைவு விழா மாநாட்டு திடலை 12.08.2026 அன்று வந்தடையும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதிகாரத்தில் கால் பதிக்காத குரலற்றசமூகங்களின் உரிமைக்கு கருத்தரங்குகள் நடத்துவது, தந்தை பெரியார் பிறந்தநாளை குடும்ப விழாவாக நடத்துவது, பிரச்சார...

‘தாலி செண்டிமெண்ட்’தேவைதானா?

‘தாலி செண்டிமெண்ட்’தேவைதானா?

தாலி சென்டிமென்டை ஓவராகத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்டுவதால் சில பெண்களிடையே வேறுமாதிரியான பாதிப்பு உண்டாவதை நான் கவனித்திருக்கிறேன். தாலி என்பதைக் கணவனின் மறுபிம்பமாகக் கருதி கண்களில் ஒற்றிக்கொள்கிறோம், குங்குமம் வைக்கிறோம், கணவன் இறந்த பிறகு தாலி அணியக் கூடாது என்றும் சொல்கிறோம். இந்தக் கருத்தை வலியுறுத்திச் சொல்வதால் ஓர் எதிர்மறை சிந்தனை சிலரிடம் உண்டாகிறது. ‘ஒரு மலர் ஒரு முறைதான் பூக்கும், கணவன் கட்டிய தாலி என்னுடைய உடம்பில் ரத்த நாளங்களாக இருக்கிறது’ என்றெல்லாம் வசனங்களை அமைத்துவிடுவதால் கணவனை இழந்த அல்லது விவாகரத்து ஆன சில பெண்கள் மறுமணம் செய்துகொள்ளவே தயங்குவது எனக்குத் தெரியும். படங்களில் தாலி சென்டிமென்ட் வைத்து அதைப் பெண்களைப் பார்க்க வைப்பதன் மூலம் நன்றாக வியாபாரம் ஆகிறது எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், இதே தாலி சென்டிமென்ட் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட விதத்தில் எதிர்மறையாகப் பெண்களைப் பாதிப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மறுமணங்கள்...

தாமரை நன்கொடை

தாமரை நன்கொடை

கழக செயல்பாட்டாளர் தோழர் கடலூர் தாமரை கழக வளர்ச்சிக்கு ரூ.8,000 நன்கொடையாக வழங்கினார். -( நன்றியுடன் பெற்றுக்கொண்டோம் ஆசிரியர்) பெரியார் முழக்கம் இதழ் 16072026

கழக வளர்ச்சி நிதி

கழக வளர்ச்சி நிதி

தஞ்சை மாவட்டக் கழகத் தோழர் சார்கோட்டை இளங்கோவன் அவர்களை 09.06.26 வியாழக்கிழமை அன்று பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது குடந்தை கழக ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் இணையர் வைக்கம் தங்களது புதிய இல்லம்”பெரியார் இல்லம்” திறப்பின் மகிழ்வாக புரட்சிப் பெரியார் முழக்கம் வளர்ச்சிக்கு ரூ.5,000 நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 16072026

சென்னையில் ராயப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கழகத் தோழர்கள் தொடர்ச்சியாக சுவரெழுத்துப் பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் ராயப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கழகத் தோழர்கள் தொடர்ச்சியாக சுவரெழுத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியார் முழக்கம் இதழ் 16072026

தடை, அதை உடை!

தடை, அதை உடை!

இடிப்போம்‌ ஜாதிச் சுவரை! உடைப்போம் இந்த பழைய பூட்டை! ஒரே குரலில் முழங்குவோம்! “நாமெல்லாம் ஒன்று” இப்படி நாம் கூறினால் எதிர்ப்பு வருகிறது. நீ வேறு; நான் வேறு; எப்படி சமமாக முடியும்? இப்படித்தான் நமது சமூகம் கேட்கிறது. 3,000 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத கணக்கு இது . இந்தத் தடை உடைய வேண்டாமா? இந்தக் கேள்வியுடன் தான் நாங்கள் உங்களிடம் வருகிறோம். கல்வியும் கால மாற்றமும் இளையோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள வேலை வாய்ப்பு, சம வாய்ப்பு, சந்திப்பு காதலை நோக்கி நகர்த்துகிறது. ஆனால் ஜாதி அதற்குத் தடை போடுகிறது. வாழ வேண்டிய இளையோர் வாழ்க்கையையே தடுக்கிறது; இல்லையேல் ஆணவக் கொலை என்று வாழ்க்கையே முடிக்கிறது. ஜாதி பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொரு இந்து மீதும் பிரிக்க முடியாமல் ஒட்டப்படும் ஸ்டிக்கர். ஜாதி விலை கொடுத்து பத்திரம் எழுதி வாங்கிய சொத்தா? பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கிய பட்டமா? இல்லை இல்லை;...

வான்மதி-கந்தசாமி இணையர்களின் சுயமரியாதை மணவிழா!

வான்மதி-கந்தசாமி இணையர்களின் சுயமரியாதை மணவிழா!

வான்மதி – கந்தசாமி – இணையரின் சுயமரியாதைத் திருமணம், ஜூலை 5,2026 (ஞாயிறு), பூவிருந்தவல்லி இதயம் மகாலில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலை வகித்தார்.தலைமைக் குழு உறுப்பினர் கு.அன்பு தனசேகர், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, இரண்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மணப்பெண் அக்காவும் கழகத் தோழர்களுமான இணையர்கள் புகழேந்தி- ஸ்ரீலேகா இந்தத் திருமணத்தை எந்தவித சடங்குகளும் இன்றி சுயமரியாதைத் திருமணமாக நடத்த வேண்டும் என்ற முனைப்புடன் நடத்திக் காட்டியுள்ளனர். ஸ்ரீலேகா நன்றியுரையாற்றினார். மணமக்கள் புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு வளர்ச்சி நிதியாக ரூ. 3,000, பரப்புரைப் பயணத்துக்கு ரூ. 4,000, புத்தகங்களுக்கு ரூ. 1,680 வழங்கினர். இந்நிகழ்வில், மாவட்ட அமைப்பாளர் ம.கி.எட்வின் பிரபாகரன், தோழர்கள் பிரனேஷ், ராகுல், ஹானஸ்ட்ராஜ், நவெந்தன், கார்த்தி ராஜேந்திரன், பாரி சிவா, போரூர் அபிநந்தன், நந்தகுமார், அசோக், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா....

பரப்புரைக்கு தயாராகும் சென்னை மாவட்டக் கழகம்!

பரப்புரைக்கு தயாராகும் சென்னை மாவட்டக் கழகம்!

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், ஜூலை-5 மாலை 6 மணிக்கு, கழகத் தலைமை அலுவலகத்தில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் நடைபெற்றது. குரலற்றோரின் குரலாக கருத்தரங்கங்கள் நடத்துவது, தென் மாவட்டங்களுக்கு பரப்புரைப் பயணம் மேற்கொள்வது, பெரியார் பிறந்தநாளை குடும்ப விழாவாக நடத்துவது, சமூக வலைத்தள செயல்பாடுகள், தேர்தல் முடிவுகள், பிரச்சார அணுகுமுறை, நன்கொடை திரட்டுதல், மாநாட்டு சுவரெழுத்து, பயணப் பெயர் பட்டியல் தயாரிப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பரப்புரைப் பயணத்தை சிறப்பாக நடத்துவது குறித்து தோழர்கள் கருத்துகளை வழங்கினர். குறைந்தது 20 தோழர்கள் பயணக்குழுவில் பங்கேற்க வேண்டும், பெண் பேச்சாளர்களும், கலைக்குழுவினரும் இடம் பெற வேண்டும், பயண நோக்கம் குறித்த டீசர்ட்டை தயாரிப்பது, சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாள் பயணத்தையும் பல்வேறு நவீன வடிவத்தில் கொண்டு போய் சேர்ப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டன. உடனுக்குடன் செய்திகளை பதிவேற்றுவதற்கும் குழு ஒன்றை...

ஆண்மையும் பெண்மையும் வேண்டாம்!

ஆண்மையும் பெண்மையும் வேண்டாம்!

பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கு பெரியார் முன்வைத்த கருத்துகள்: காது குத்துவது பெண்களை அடிமைப்படுத்துவதற்குத்தான். உடலில் மூக்கு, காதுகளில் ஓட்டை போட்டு நகைகளை மாட்டி விட்டால் ஆண்களின் வன்முறையை எதிர்த்து திருப்பி அடித்து விடக்கூடாது என்பதற்குத் தான் இந்தச் சடங்குகளை உருவாக்கினார்கள். பெண்கள் முடியை கத்தரித்துக் கொண்டு கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்; பெண்களின் கூந்தல் அழகை புலவர்கள் வர்ணிப்பார்கள். செயற்கை மணமா? இயற்கை மணமா? என்று ஆராய்ச்சி செய்கிறார்கள் கணவன் மனைவியைத் தாக்குவதற்கு கூந்தலைப் பிடித்து தாக்குகிறான். நீண்ட முடி பெண் சுதந்திரத்துக்கு தடை! நகை அணியக் கூடாது; பெண்கள் அலங்கார பொம்மைகளாக மாற்றப்படுகிறார்கள். நகை அணிவதால் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. உலக நாடுகளில் பெண்கள் நகை அணிவதில்லை. அளவுக்கு மீறி நகை அணிந்தால் தண்டனை அல்லது வரி விதிக்க வேண்டும்; நகை அணிவதில் அழகு இல்லை! நன்கு படித்துவிட்டு திருமணத்துக்குப் பிறகு பெண்கள் வீட்டு வேலை செய்வதை அனுமதிக்கக் கூடாது....

காவல் நிலையத்தில் கிடா வெட்டுவதா? கழகம் புகார்; அரசு உடனடி நடவடிக்கை!

காவல் நிலையத்தில் கிடா வெட்டுவதா? கழகம் புகார்; அரசு உடனடி நடவடிக்கை!

சேலம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக கிடாவெட்டி மாந்திரீக பூஜை போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் 26.06.2026 புகார் மனு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தி விவரம்: கடந்த 20.06.2026 ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் “குற்றங்கள் குறைய வேண்டும்” என்பதற்காக காவல்துறையினரே கிடாவை பலியிட்டு, அதன் ரத்தத்தை காவல் நிலைய கட்டிடத்தின் நான்கு மூலைகளிலும் பூசி, மாந்திரீக பூஜை நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ஆணைப்படி, அரசு அலுவலகங்கள் , காவல் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்களிலும் மதச்சார்புடைய வழிபாடுகள், பூஜைகள், கடவுள் படங்கள், மாந்திரீக சடங்குகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையே அரசு ஆணையை மீறி, மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில்...

கழகப் பரப்புரைப் பயணத்துக்கான தலைப்பு

கழகப் பரப்புரைப் பயணத்துக்கான தலைப்பு

* ஜாதியில் திருமணம் * மதத்தில் பார்ப்பனியம் * வாழ்வில் மூடநம்பிக்கை தடை, அதை உடை…… * மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரை பயணம் பெரியார் முழக்கம் இதழ் 02072026

பயிலரங்கத்தின் வெற்றி; பயிற்சி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

பயிலரங்கத்தின் வெற்றி; பயிற்சி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

சேலம் பயிலரங்கத்தில் பங்கேற்றவர்கள் நிகழ்வின் இறுதியில் பயிலரங்கம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நாமக்கல் ரேஷிகா வர்சினி: பெரியார் குறித்த எனக்குத் தெரிந்த விவரங்களைத் தாண்டி பெரியார் பற்றிய வரலாறுகளை விரிவாக கற்றுக் கொள்ள முடிந்தது. இது என்னுடைய படிப்புக்கு உதவியாக இருக்கும். நான் பார்ப்பனரல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனைத்து சடங்குகளையும் பின்பற்றி வந்தது என்னுடைய குடும்பம். இந்த பயிலரங்கத்துக்கு வந்ததற்குப் பிறகு விடுதலை அடைந்த உணர்வை எட்டி இருக்கிறேன். இனி நல்ல வாழ்க்கை முறைக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் பெரியார் தான் என்று கூறினார். இசக்கி ராஜன் (திருநெல்வேலி): இங்கே வருவதற்கு முன் பெரியார் குறித்த நான் நிறைய படித்திருக்கிறேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இங்கே தோழர்கள் பேசியதற்குப் பிறகு நான் இன்னும் படிக்காதது நிறைய இருக்கு என்று உணர்ந்து கொண்டேன். ஜாதி குறித்தும் சடங்குகள் எப்படி பெண்கள் வழியாக கடத்தப்படுகிறது என்பது பற்றியும் பெரியாரின்...

கருத்து செறிவுடன் நடந்த     கழக இளைஞரணி பயிலரங்கம்

கருத்து செறிவுடன் நடந்த கழக இளைஞரணி பயிலரங்கம்

சேலம் மாவட்டக் கழக இளைஞரணி நடத்திய இரண்டு நாள் பயிலரங்கத்தில் எண்பது இளைஞர்கள் பெண்களும், ஆண்களுமாய் பங்கேற்றனர். கால மாற்ற சூழலில் பெரியார் கருத்தியல் மற்றும் பெரியார் இயக்கத்தின் தேவை குறித்து பயிலரங்கம் விரிவாக விவாதித்தது. சேலம் மாவட்ட இளைஞர் அணி பயிலரங்கம் ஜூன்20,21 தேதிகளில் சேலம் நிலாச்சோறு உணவக அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. 20.06.2026 சனிக்கிழமை இளைஞர்களின் எழுச்சியோடு தொடங்கியது. தோழர்கள் லதா, சத்யா, பொன்ராஜ், உமாபதி குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து “இன்றைய சமூக அரசியல் சூழலில் பெரியாரியத்தின் தேவை” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முதல் வகுப்பினை தொடங்கினார். தேநீர் இடைவேளைக்கு பிறகான இரண்டாவது அமர்வில் “சமூக ஊடகங்கள் – பயன்படுத்தல்” என்ற தலைப்பில் ( Wild South Raiders podcast) தோழர் கக்காஷி காணொளி மூலமாக விளக்கி வகுப்பெடுத்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான மூன்றாவது அமர்வில்...

மடத்துக்குளம் மோகன் நினைவுநாள் பரப்புரைக் கூட்டங்கள்!

மடத்துக்குளம் மோகன் நினைவுநாள் பரப்புரைக் கூட்டங்கள்!

மறைந்த மடத்துக்குளம் மோகன் (கழகத் தலைமைக் குழு உறுப்பினர்) அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் சூன்-1, 2026 திங்கள் காலை 10 மணி அளவில் மடத்துக்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலையில் மடத்துக்குளம் மோகன் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழ் வணக்கங்களையும் பெரியாரின் கொள்கை முழக்கங்களையும் கழகத் தோழர்கள் எழுப்பினார்கள். நிகழ்விற்கு மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் சு.சிவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்களுக்கு மடத்துக்குளம் மோகன் குடும்பத்தினர் காலைச் சிற்றுண்டி வழங்கி சிறப்பித்தனர். தொடக்க உரையாக கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் ‘பெரியாரின் கொள்கைகளை, சுயமரியாதைக் கருத்துகளை தோழர் மடத்துக்குளம் மோகன் அவர்கள் பட்டித்தொட்டி எல்லாம்...

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் நினைவேந்தல்!

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் நினைவேந்தல்!

கோவை மாவட்டக் கழகத்தினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரியார் பெருந்தொண்டர், மறைந்த கோவை மாவட்டக் கழகத் தலைவர் பா. இராமச்சந்திரன் அவர்கள் 17.05.2026 அன்று மறைவுற்றார், அவரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில் மேட்டுப்பாளையம், கெண்டையூர் பகுதியில் உள்ள இராமச்சந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. கோவை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார்,கோவை மாநகரச் செயலாளர் வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இராமசந்திரன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, கழக சமூகஊடகப் பொறுப்பாளர் பரிமளாராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் வீ. சிவகாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்டப் பொறுப்பாளர் விஷ்ணு, தி.க மாவட்டத் தலைவர் ச. வேலுச்சாமி, பவானி நதிநீர் மற்றும்...

சமூகத்தில் மாறிவரும் உளவியல்

சமூகத்தில் மாறிவரும் உளவியல்

அண்மையில் வெளியான மாதிரிப் பதிவு முறை (SRS) புள்ளியியல் அறிக்கை (Sample Registration System (SRS) Statistical Report 2024) புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மொத்தக் கருத்தரிப்பு விகிதம், அதாவது ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அளவு தற்போது 1.9 ஆகக் குறைந்துள்ளது. இது மக்கள்தொகையை நிலைத்திருக்கச் செய்யத் தேவையான 2.1 என்கிற மாற்று நிலையைவிடக் குறைவு. 2014இல் 21ஆக இருந்த பிறப்பு விகிதம் 2024இல் 18.3ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரம், இறப்பு விகிதம் 6.7இலிருந்து 6.4ஆக மட்டுமே குறைந்துள்ளது. இந்தியாவின் சராசரியான நடுத்தர வயது 40.2 தற்போது 29.2 சீனாவின் சராசரி நடுத்தர வயது 40.2 பல ஐரோப்பிய நாடுகளில் இது இன்னும் அதிகம். அதே நேரத்தில் இந்தியாவில் தற்போது 15 முதல் 29 வயதுக்குள் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 38கோடி. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 27% விழுக்காடாகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்...

தவெக அரசே சமூக அநீதிக்கு துணைபோகலாமா?

தவெக அரசே சமூக அநீதிக்கு துணைபோகலாமா?

ரூ.12,698 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.3,923 கோடி: தென் மாநிலங்களை ஓரம்கட்டும் ஒன்றிய அரசு. ஒட்டுமொத்த நிதியில், தமிழ்நாடு இதுவரை 10 சதவீத பங்கைப் பெற்று முன்னணியில் இருந்தது. ஆனால், புதிய கணக்கீட்டு முறையின்படி, தமிழ்நாட்டின் பங்கு 4.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் எதிர்கால நிதி உரிமை, ஒரேயடியாக பாதிக்கும் கீழ் சரிந்துள்ளதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. இதுமட்டுமின்றி, ஜிராம்ஜி திட்டத்தின் கீழ் ஆந்திராவுக்கு 8.8 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் 4.20 சதவீதமும், கேரளாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.38 சதவீதமும், தெலங்கானாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.17 சதவீதமும் குறைப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. ஆனால் பாஜ ஆளக்கூடிய உத்தரபிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி 9.67 சதவீதத்தில் இருந்து 17.62 சதவீதமும், பீகாருக்கான நிதி...

ஆனூர்.ஜெகதீசன் துணைவியார் முடிவெய்தினார்

ஆனூர்.ஜெகதீசன் துணைவியார் முடிவெய்தினார்

தோழர் ஆனூர்.ஜெகதீசன் அவர்களின் இணையர் மறைவுற்றார். அவருக்கு கழகம் சார்பில் 13.05.26 அன்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையைச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர். அவரது மறைவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் 15.05.2025 மதியம் 2 மணி அளவில் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஆனூர் ஜெகதீசன் அவர்களது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 29052026

சமஸ்கிருதத்துக்கு ரூ.2532 கோடி!

சமஸ்கிருதத்துக்கு ரூ.2532 கோடி!

2015-லிருந்து 2020 வரை சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகை அதன் பார்ப்பனிய ஆதரவை வெளிப்படுத்துகிறது. சமஸ்கிருதம் – ரூ. 2,532 கோடி; உருது – ரூ.837 கோடி இந்தி – ரூ. 426 கோடி தமிழ்- ரூ. 113 கோடி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளுக்கு சேர்த்து ஒதுக்கிய தொகை வெறும் ரூ.31 கோடி. மக்கள் பேச்சு வழக்கில் இல்லாத பார்ப்பனிய வேதமத சடங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் மொழிக்கு ரூ.2,532 கொடி ஒதுக்கியுள்ளனர். மக்கள் பேசாத மொழி; பார்ப்பனர்கள் கோயிலில் மட்டும் பேசும் மொழி சமஸ்கிருதம். இந்நிலையில் கடந்த மே-15, ஆம் தேதி மத்திய மேல்நிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.சி-க்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்சி பள்ளிகளில் 9-ம் வகுப்பில் மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த வற்புறுத்துகிறது அந்த சுற்றறிக்கை. இரண்டு இந்திய மொழிகளோடு அந்நிய மொழியை கற்பிக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழி, ஆங்கிலம் இரண்டைத்...

புராண நாடகங்களுக்கு மாற்றாக புரட்சிகர நாடகங்களை நடத்திய கும்மம்பட்டி!

புராண நாடகங்களுக்கு மாற்றாக புரட்சிகர நாடகங்களை நடத்திய கும்மம்பட்டி!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டி குறித்த கடந்த இதழின் தொடர்ச்சி… திண்டுக்கல், சின்னாளப்பட்டி பகுதிகளில் அண்ணா, கலைஞர், பேராசிரியர், நாவலர் உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்கள் நடந்தால், கு.சி.பழனிச்சாமி தன் பகுதியில் இருந்து மாணவர்களை அழைத்துச் செல்வார். தினசரி நூல்களைப் படிப்பது, விவாதிப்பது, பேச்சுப்பயிற்சி என இருந்த மாணவர்களுக்கு அண்ணா, கலைஞர், பேராசிரியர் உள்ளிட்டோரின் உரைகள், கொள்கை உணர்வை ஊட்டி வளர்த்தன. ‘பவளக்கொடி’, ‘வள்ளித் திருமணம்’, ‘சாரங்கதாரா’, ‘நல்லதங்காள்’ ஆகிய நாடகங்கள்தான் கும்மம்பட்டியில் ஆண்டாண்டு காலமாக நடந்தன. அவை தவிர, வேறு எந்த நாடகத்தையும் கும்மம்பட்டி மக்கள் பார்த்ததில்லை. அதனால், பகுத்தறிவுக் கருத்துகளை நாடகம்மூலம் வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது, கலைமன்றம். சுமார் மூன்று ஆண்டுகள்...

கழகத்தை பாராட்டி குரோஷியாவிலிருந்து ஓர் உணர்ச்சி மடல்!

கழகத்தை பாராட்டி குரோஷியாவிலிருந்து ஓர் உணர்ச்சி மடல்!

கழகத்தில் புதிதாக தன்னை இணைத்துக் கொண்ட தோழர் மனோஜ் ரூ.5,000 வளர்ச்சி நிதி அளித்துள்ளார். அய்ரோப்பா குரோஷியாவில் பணியாற்றி வரும் இவர் கழக செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.தீண்டாமை, ஜாதிய வன்கொடுமைகள், பெண் அடிமைத்தனம் மற்றும் ஆதிக்க மனப்பான்மையோடு சக மனிதர்களை இழிவுபடுத்தும் பிற்போக்குச் சக்திகளிடமிருந்து, உழைக்கும் எளிய மக்களைக் காத்து நிற்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தில் என்னை ஒரு துரும்பாக இணைத்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். ஜாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் மனிதர்களைப் பிரித்து, “இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன்; இவன் படிக்க வேண்டும், இவன் குலத்தொழில் செய்ய வேண்டும்” என்று மனித மாண்பைச் சிதைக்கும் ஆரிய பார்ப்பனிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் சமரசமற்ற போர்க்களத்தில் என்னையும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறேன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் புரட்சிகரமான கொள்கைகளை...

திராவிட மாடல் சாதனைகளுக்கு விருது

திராவிட மாடல் சாதனைகளுக்கு விருது

மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் செயல்பட்ட “திராவிட மாடல்” ஆட்சி பல்வேறு சாதனைகளுக்காக கொள்கை எதிரியான ஒன்றிய பாஜக அரசிடம் இருந்தே விருதுகளைப் பெற்று வந்தது. ஆனாலும் ஆட்சியின் சாதனைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இயலாத நிலையை தேர்தல் களம் உருவாக்கி விட்டது.இப்போதும் அந்த சாதனை விருதுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடலோரங்களில்இருக்கும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துகளுக்கான கொள்கைகள்; திட்டங்களை உருவாக்குதல்; அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்துதல் உள்ளிட்டவைகளில் “திராவிட மாடல்” ஆட்சியே முதலிடத்தைப் பெறுகிறது என்ற 2025ம் ஆண்டுக்கான விருதை ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. வேடிக்கை என்னவென்றால் இந்த பாராட்டு விருதுக்கான சான்றிதழை புதிய முதல்வர் ஜோசப் விஜயிடம் டிட்கோ அதிகாரிகள் நேரில் வழங்கி வாழ்த்து பெற்று உள்ளனர். வாழ்த்து பெறும் படத்தை இன்று தினமலர் நாளிதழ் வெளியிட்டு இருக்கிறது. நடந்தது தீய சக்தியின் ஆட்சி அல்ல; வளர்ச்சி சக்தியின் வரலாற்று சிறப்புமிக்க ஆட்சி என்பதை புதிய முதல்வர்...

உமர்காலித் பெற்றுத்தந்த தீர்ப்பு!

உமர்காலித் பெற்றுத்தந்த தீர்ப்பு!

ஒன்றிய ஆட்சியின் அடக்குமுறை சட்டங்களில் ஒன்றான உபா. (Unlawful Activities Prevention Act) சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த சட்டமே அரசியல் சட்டத்திற்கு எதிரான சட்டம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். பிணை வழங்காமல் நீண்டகாலம் சிறையில் அடைத்து வைப்பதற்காகவே இந்த சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டம் குறித்து அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் உயான் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். உபா சட்டத்தில் கைதானவர்களுக்கும் பிணை வழங்கலாம் என்று கூறிய நீதிபதிகள் “பிணை என்பது விதியாகவும்; சிறை என்பது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும்” என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்ல ஏற்கனவே இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றமே பிணை வழங்க மறுத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது என்றும் அந்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சையத் இப்திகார்...

கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மயூரப்ரியன் உரை மாணவர்களுக்கு சமூக அரசியல் பயிற்சி

கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மயூரப்ரியன் உரை மாணவர்களுக்கு சமூக அரசியல் பயிற்சி

இளைய தலைமுறைக்கு சமூக அரசியல் வரலாறுகளைப் புரிய வைக்கும் தேவை உருவாகி இருக்கிறது. இட ஒதுக்கீட்டு உரிமையைப் பயன்படுத்தி கல்வி வேலைவாய்ப்புகளைப் பெறும் மாணவர்களுக்கு அந்த இட ஒதுக்கீட்டின் வரலாறு, நோக்கம் பற்றிய புரிதல் இருப்பது இல்லை! சமூகம் மற்றும் கல்வி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு ஜாதி ஒரு அடையாளமாக ஏன் ஏற்கப்பட்டது என்ற சமூகப் புரிதலை இளைஞர்களிடம் விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இட ஒதுக்கீட்டு கொள்கைகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு மனுஸ்மிருதி அடிப்படையிலேயே சமூகத்தில் இட ஒதுக்கீடு இருந்தது. அதன்படி பிராமணர்களே கல்வி கற்கும் உரிமையை பெற்றிருந்தார்கள்; ‘சூத்திரர்கள்’ பிராமணர்களின் அடிமைகளாகவும், அவர்களுக்கு கல்வியே கிடைக்காமல் தடை செய்யப்பட வேண்டும் என்பதுமே எழுதப்படாத சமூக சட்டமாக இருந்தது. சமூகத்தை மனுஸ்மிருதி வழியாக பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தார்கள். சேர, சோழ, பாண்டியர்கள் மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் பள்ளிகளைக் கட்டவில்லை; கோயில்களைக் கட்டி பார்ப்பனர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்கள்....

தோப்புக்கரணம் போடுகிறார்!

தோப்புக்கரணம் போடுகிறார்!

சபாஷ்! வாழ்த்து என்று பூரித்து பூங்கொத்து கொடுத்து மாலையிட்டு பாராட்டு விழா நடத்தத் துடிக்கிறோம்; அப்படி யாருக்கப்பா! பாராட்டு விழா என்று கேட்கிறீர்களா? சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்! இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தான் அந்த பாராட்டுக்குரிய ‘மகாபுருஷர்’. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்? ‘பிராமண’ சேவையை கைக்கழுவி விட்டாரா? எதற்கெடுத்தாலும் இந்து விரோதி என்று கூச்சலிடமாட்டேன் என்று சபதமெடுத்துவிட்டாரா? ‘பிராமணர்’களைக் குறை கூறினால் மேடையில் கொதித்தெழுந்து அடிக்க பாயமாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டாரா? அப்படியெல்லாம் இல்லை! இனி இந்து மதத்தை எதிர்த்தால் மிரட்ட மாட்டேன்; நீதிமன்றம் போக மாட்டேன்; ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டேன்; மாறாக கடவுளிடம் மனு கொடுப்பேன் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். “சனாதனத்தை எதிர்க்கும் உதயநிதிக்கு நல்ல புத்தியைக் கொடு!” என்று கோவை புளியங்குளம் விநாயகரிடம் தோப்புக்கரணம் போட்டார் சம்பத் என்று தினமலர் செய்தி வெளியிட்டு இருக்கிறது. “ஓ விநாயகனே.. யானை முகத்தோனே; தும்பிக்கை நாயகனே; இது அடுக்குமா?...

வந்தே மாதரம் இஸ்ஸாமிய வெறுப்புப் பாடல்!

வந்தே மாதரம் இஸ்ஸாமிய வெறுப்புப் பாடல்!

‘ஜெய் ஹிந்த்’-தைப் போல ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லையும் தேசபக்தி முழக்கம் என்கிறார்கள் ‘சங்கிகள்’; அது உண்மையல்ல. பக்கிம் சந்திரா சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர் 1880இல் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற வங்க மொழி நாவலில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் அது. அப்போது ஆட்சியிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி, முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சென்னை, பம்பாய், கலகத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் அது. முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போர் மூலம் ஒழித்துவிட்டு, இந்து – ஆங்கிலேய ஆட்சியை உருவாக்க வைணவ இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதே நாவலின் மய்யமான கருத்து. சத்யானந்தா என்ற கதை நாயகன், இந்து இளைஞர்களைத் திரட்டும்போது, அந்த கதாநாயகன் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’. “நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கு இனம் – மதம் – பண்பாடு பெருமையைக் காப்பதற்கு, முஸ்லிம்களை ஒழித்தாக வேண்டும்; அவர்களை ஒழிக்காவிட்டால்...

தேடிவந்த முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்தவர் பெரியார்!

தேடிவந்த முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்தவர் பெரியார்!

சென்னை மாகாண முதலமைச்சர் பதவி தன்னை நாடி வந்த போது பெரியார் ஏற்க மறுத்தார். நீதிக்கட்சியின் உள்ளேயே பெரியார் பதவி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தற்கிடையே பெரியார் கடும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. அந்தப் போராட்டம் குறித்து பெரியார் ஈரோட்டில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. உள்ளூரில் என்னை மதிக்கும் அளவுக்கு நானில்லை என்பது வாஸ்தவந்தான். அதைப் பொறுத்துத்தானே கழக வேலையும் இங்கு இருக்கும்? இன்று கூட இக்கூட்டத்தில் அரசியல் நிலையைப் பற்றிப் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். எனக்கு முன்னால் பேசிய நண்பர்களும் அரசியலைப் பற்றியும் பேசினார்கள். ஆனால், நான் அரசியலைப் பற்றி இந்த ஊரில் பேச இஷ்டப்படவில்லை. காரணம், அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் இவ்வூரில் மிகமிகச் சொற்பம்! இந்த ஊரில் பெரும்பாலும் எல்லாம் வியாபாரிகள்: அவர்களுக்கு அடிக்கடி ஆண்டவனிடம் மன்னிப்புக் கேட்கவும், அதற்கான பூசை, திருவிழா செய்யவுமே காலமெல்லாம் சரியாய் விடுகிறது. அதுவும்...

பாஜக எங்கள் பண்பாட்டு எதிரி!  காவியை கருப்பு, சிவப்பு விரட்டி அடிக்கும்!

பாஜக எங்கள் பண்பாட்டு எதிரி! காவியை கருப்பு, சிவப்பு விரட்டி அடிக்கும்!

தி.மு.க. என்­கிற மாபெ­ரும் இயக்கம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்­க­ளி­டம் வரும் கட்சியல்ல. மக்­க­ளின் உரிமைகளுக்காக எப்போதும் களத்­தில் நிற்­கும் கட்சி. எங்­க­ளுக்­குத் தெரி­யும்! தமிழ்நாட்­டின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்­பாட்டின், உண்மை­யான எதிரி யார்? என்று எங்க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். அந்த எதிரியை எதிர்க்­கும் தெம்­பும், திரா­ணியும் கொண்ட ஒரே இயக்­கம் தி.மு.க என்­பது மக்­க­ளுக்­கும் நன்றாகத் தெரி­யும்! அ.தி.மு.க. என்­கிற முக­மூ­டியை போட்­டுக் கொண்டு வந்தால், எங்­க­ளு­டைய தமிழ்நாட்டு மக்­க­ளுக்கு உங்களை அடையாளம் தெரி­யாமல் போய்­வி­டுமா? உங்­க­ளின் முகத்திரை­யைக் கிழித்து, தமிழ்­நாட்டு மக்க­ளி­டம் நாங்­கள் அம்­ப­லப்­ப­டுத்து­வோம். தமிழ்நாட்டை எப்ப­டி­யா­வது நம்மிடம் இருந்து, விழுங்கிட­லாம் என்று நினைக்­கி­றது காவிக் கூட்டம். எங்­கள் கருப்பு – சிவப்பு பட்டாளம் இருக்­கி­ற­வரை அது நடக்­கவே நடக்­காது. உங்­கள் அப்பனே வந்தா­லும் நடக்­காது. நடக்க விட­மாட்­டோம். இது அவர்­க­ளுக்­கும் நன்­றா­கத் தெரி­யும். அத­னால்­தான், அ.தி.மு.க. என்ற கட்­சி­யைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்­கு­கி­றார்­கள். அர­சி­ய­லில் நேர்...

சாதனைகளைத் தொடர வைப்போம்!

சாதனைகளைத் தொடர வைப்போம்!

இந்த ஆட்சியின் சாதனைகள் தொடர வேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? நேர்மையுடன் சிந்தித்துப் பார்ப்போம்! கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் போல் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திருக்கிறதா? “பதவி ஏற்றவுடன் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்தோடு தொடங்கியது பெண்களின் கட்டணம் இல்லாப் பேருந்து பயணம்; மகளிர் உரிமைத்தொகை; புதுமைப்பெண்; பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; என்று நூற்றுக்கணக்கான திட்டங்கள் அணிவகுத்து வந்து கொண்டே இருந்தன. அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இதுவரை நிறைவேற்றப்படாத திட்டம் என்று எந்த ஒரு திட்டத்தையாவது கூற முடியுமா ? எதிர்க்கட்சிகளால் கூடஇந்த திட்டங்களில் குற்றம் குறைகளை காணமுடியவில்லை? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இத்தகைய சாதனைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறதா? இங்கே தான் நடந்தது. அதுமட்டுமா! பெண்களுக்கான உரிமை திட்டங்களின் வெற்றிகளை உணர்ந்து இந்தியாவில் பாஜக உள்ளிட்ட 8 மாநிலங்கள் இதை செயல்படுத்த தொடங்கிவிட்டன. வழிகாட்டியது தமிழ்நாடுதான். பொருளாதார...

முடிவெய்தினார் தோழர் நல்லகண்ணு

முடிவெய்தினார் தோழர் நல்லகண்ணு

தோழர் நல்லகண்ணு விடைப்பெற்றுக் கொண்டார். அவர் தமிழ்நாட்டின் அடையாளம். தகைசால் தமிழர் என்ற விருதுக்கு அவர் பொருத்தமானவர். அவருடைய வாழ்க்கை பல பாடங்களை விட்டுச் சென்று இருக்கிறது. ஒரு தலைமை உறுதியான, எளிமையான, நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும். அதுவும் நூறாண்டுகள் கடந்தும் வாழ முடியும் என்ற செய்தியை தமிழ்நாட்டு பொது வாழ்க்கைக்கு விட்டு சென்று இருக்கிறார். பொது வாழ்க்கை என்றாலே கறை படிந்த வாழ்க்கை என்று ஆகிவிட்ட ஒரு சமூகத்தில் நேர்மையான ஒரு வாழ்க்கையை இலட்சியவாதி வாழ்ந்து காட்ட முடியும் என்பதை அவர் நிருபித்து காட்டியிருக்கிறார். பொதுவாக பெரியாரிய, மார்க்சிய இலட்சியத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற தலைவர்களின் ஆயுளும் நீண்டு இருக்கிறது. அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையும் சமூகத்திற்கு பாடமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் வழி அனுப்பி வைப்பது மிகச்சிறந்த முடிவு. தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு முடிவு. தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக அவர் முக்கிய...

கடவுளை எதிர்க்கும் வடகொரியா

கடவுளை எதிர்க்கும் வடகொரியா

வடகொரியாவில் 400கி.மீ இலக்கு வைத்து தாக்கக்கூடிய ராக்கெட்டுகள், அணு ஆயுதங்கள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பை தலைநகர் பியாங்யாங்கில் பார்வையிட்ட அதிபர் கிம்ஜொங் இவ்வாறு கூறினார்: ‘`இவற்றை நாங்கள் பயன்படுத்தினால் எதிரிகளை கடவுள்களாலும் காப்பாற்ற முடியாது. வட கொரிய ‘கடவுளையும்’ வீழ்த்தும் போர்க் கருவியைக் கண்டுபிடித்துவிட்டது’’.                       பெரியார் முழக்கம் இதழ்26022026

அருள்மொழி-கோபிநாதன் ஜாதிமறுப்பு இணையேற்பு விழா!

அருள்மொழி-கோபிநாதன் ஜாதிமறுப்பு இணையேற்பு விழா!

சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ் – கீதா இணையரின் மகள் அருள்மொழி அவர்களுக்கும் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, மஞ்சள்பட்டணம் பகுதியை சார்ந்த மோகன்தாஸ் – சுதா இணையரின் மகன் கோபிநாதன் அவர்களுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் உள்ள அரசப்பா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. டி.கே.ஆர் இசைக்குழுவினரின் பறை இசை நிகழ்த்தப்பட்டது. சிற்பி ராசன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி மூலமாக சமூகத்தில் கடவுள் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளை செய்து காட்டினார். சூரிய குமார் (சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ) வரவேற்புரையாற்றினார். குமரப்பா (மேட்டூர் நகரச் செயலாளர்), கா.மாரியப்பன் ( ஆசிரியர் ஓய்வு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, சமூக வலைத்தளப் பொருப்பாளர் பரிமள ராசன், வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத்...

ஈரோடு-விருதுநகர் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவாவின் பங்கு என்ன?  ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 13 -கொளத்தூர் மணி

ஈரோடு-விருதுநகர் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவாவின் பங்கு என்ன? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 13 -கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் வரலாற்று வரலாற்றாளர்களான தோழர்கள் இஸ்மத் பாஷா, கே.பாலதண்டாயுதம் ஆகியோரே ஜீவாவுடன் நேரடியாக பழகி உரையாடி அவரது வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புடையவர்கள் என்பதாலேயே அவர்களது நூல்களை முதன்மை ஆவணமாகக் கொண்டு எழுதி வருகிறோம். அந்நூல்களில் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவா நிகழ்த்திய வீரதீர செயல்பாடுகள் குறித்து அந்நூல்களில் விதந்தோதப்பட்டுள்ள செய்திகளைப் பார்ப்போம். தோழர் இஸ்மத் பாஷாவின் நூலின் 23ஆம் பக்கத்தில் “சென்னையில் போலீஸ் அடக்குமுறை எல்லையை மீறி விட்டது; தொண்டர்கள் அடித்து வீழ்த்தப்பட்டார்கள். ஆறு போல் இரத்தம் ஓடிற்று. அச்சமயத்தில் ஈரோட்டில் சுயமரியாதை மகாநாடு கூடிற்று. போலீஸ் அடக்கு முறையை வன்மையாகக் கண்டித்து ஒரு தீர்மானம் விஷயலோசனைக் கமிட்டியில் வந்தது. ஜீவா அதை ஆதரித்து உணர்ச்சித் ததும்பப் பேசினார். ஜாதி மத விவகாரங்களில் மட்டும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொண்டால் போதாது; அரசியல் விவகாரங்களிலும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி எல்லோருடைய சுயமரியாதை...

காதலர் தினத்தில் ஜாதிமறுப்பு மணவிழா

காதலர் தினத்தில் ஜாதிமறுப்பு மணவிழா

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன் – ஜானகி ஆகியோரின் மகள் விவேகா அவர்களுக்கு, கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சார்ந்த சிவகாமி – தமிழ்செல்வி ஆகியோரின் மகன் மோகனகிருஷ்ணன் அவர்களுக்கும் சுயமரியாதை இணையேற்பு விழா 14.02.2026 சனிக்கிழமை (அன்பின் நாளான காதலர் தினத்தன்று) மாலை 6 மணி அளவில் கோவை மாவட்டம், குன்னத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பழனியாண்டவர் கலையரங்கத்தில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி, பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ), சூலூர்.தமிழ்செல்வி (கோவை மாவட்ட அமைப்பாளர்), வெங்கட் (கோவை மாநகரச் செயலாளர் ) ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கோவை மாவட்டக் கழகம் வழிகாட்டுகிறது கோவை மாவட்டக் கழகம் சார்பில் 2026 ஆம் ஆண்டு புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா முதல் தவணையாக...