Category: இயக்கம்

சாதனைகளைத் தொடர வைப்போம்!

சாதனைகளைத் தொடர வைப்போம்!

இந்த ஆட்சியின் சாதனைகள் தொடர வேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? நேர்மையுடன் சிந்தித்துப் பார்ப்போம்! கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் போல் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திருக்கிறதா? “பதவி ஏற்றவுடன் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்தோடு தொடங்கியது பெண்களின் கட்டணம் இல்லாப் பேருந்து பயணம்; மகளிர் உரிமைத்தொகை; புதுமைப்பெண்; பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; என்று நூற்றுக்கணக்கான திட்டங்கள் அணிவகுத்து வந்து கொண்டே இருந்தன. அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இதுவரை நிறைவேற்றப்படாத திட்டம் என்று எந்த ஒரு திட்டத்தையாவது கூற முடியுமா ? எதிர்க்கட்சிகளால் கூடஇந்த திட்டங்களில் குற்றம் குறைகளை காணமுடியவில்லை? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இத்தகைய சாதனைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறதா? இங்கே தான் நடந்தது. அதுமட்டுமா! பெண்களுக்கான உரிமை திட்டங்களின் வெற்றிகளை உணர்ந்து இந்தியாவில் பாஜக உள்ளிட்ட 8 மாநிலங்கள் இதை செயல்படுத்த தொடங்கிவிட்டன. வழிகாட்டியது தமிழ்நாடுதான். பொருளாதார...

முடிவெய்தினார் தோழர் நல்லகண்ணு

முடிவெய்தினார் தோழர் நல்லகண்ணு

தோழர் நல்லகண்ணு விடைப்பெற்றுக் கொண்டார். அவர் தமிழ்நாட்டின் அடையாளம். தகைசால் தமிழர் என்ற விருதுக்கு அவர் பொருத்தமானவர். அவருடைய வாழ்க்கை பல பாடங்களை விட்டுச் சென்று இருக்கிறது. ஒரு தலைமை உறுதியான, எளிமையான, நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும். அதுவும் நூறாண்டுகள் கடந்தும் வாழ முடியும் என்ற செய்தியை தமிழ்நாட்டு பொது வாழ்க்கைக்கு விட்டு சென்று இருக்கிறார். பொது வாழ்க்கை என்றாலே கறை படிந்த வாழ்க்கை என்று ஆகிவிட்ட ஒரு சமூகத்தில் நேர்மையான ஒரு வாழ்க்கையை இலட்சியவாதி வாழ்ந்து காட்ட முடியும் என்பதை அவர் நிருபித்து காட்டியிருக்கிறார். பொதுவாக பெரியாரிய, மார்க்சிய இலட்சியத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற தலைவர்களின் ஆயுளும் நீண்டு இருக்கிறது. அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையும் சமூகத்திற்கு பாடமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் வழி அனுப்பி வைப்பது மிகச்சிறந்த முடிவு. தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு முடிவு. தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக அவர் முக்கிய...

கடவுளை எதிர்க்கும் வடகொரியா

கடவுளை எதிர்க்கும் வடகொரியா

வடகொரியாவில் 400கி.மீ இலக்கு வைத்து தாக்கக்கூடிய ராக்கெட்டுகள், அணு ஆயுதங்கள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பை தலைநகர் பியாங்யாங்கில் பார்வையிட்ட அதிபர் கிம்ஜொங் இவ்வாறு கூறினார்: ‘`இவற்றை நாங்கள் பயன்படுத்தினால் எதிரிகளை கடவுள்களாலும் காப்பாற்ற முடியாது. வட கொரிய ‘கடவுளையும்’ வீழ்த்தும் போர்க் கருவியைக் கண்டுபிடித்துவிட்டது’’.                       பெரியார் முழக்கம் இதழ்26022026

அருள்மொழி-கோபிநாதன் ஜாதிமறுப்பு இணையேற்பு விழா!

அருள்மொழி-கோபிநாதன் ஜாதிமறுப்பு இணையேற்பு விழா!

சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ் – கீதா இணையரின் மகள் அருள்மொழி அவர்களுக்கும் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, மஞ்சள்பட்டணம் பகுதியை சார்ந்த மோகன்தாஸ் – சுதா இணையரின் மகன் கோபிநாதன் அவர்களுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் உள்ள அரசப்பா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. டி.கே.ஆர் இசைக்குழுவினரின் பறை இசை நிகழ்த்தப்பட்டது. சிற்பி ராசன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி மூலமாக சமூகத்தில் கடவுள் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளை செய்து காட்டினார். சூரிய குமார் (சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ) வரவேற்புரையாற்றினார். குமரப்பா (மேட்டூர் நகரச் செயலாளர்), கா.மாரியப்பன் ( ஆசிரியர் ஓய்வு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, சமூக வலைத்தளப் பொருப்பாளர் பரிமள ராசன், வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத்...

ஈரோடு-விருதுநகர் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவாவின் பங்கு என்ன?  ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 13 -கொளத்தூர் மணி

ஈரோடு-விருதுநகர் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவாவின் பங்கு என்ன? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 13 -கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் வரலாற்று வரலாற்றாளர்களான தோழர்கள் இஸ்மத் பாஷா, கே.பாலதண்டாயுதம் ஆகியோரே ஜீவாவுடன் நேரடியாக பழகி உரையாடி அவரது வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புடையவர்கள் என்பதாலேயே அவர்களது நூல்களை முதன்மை ஆவணமாகக் கொண்டு எழுதி வருகிறோம். அந்நூல்களில் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவா நிகழ்த்திய வீரதீர செயல்பாடுகள் குறித்து அந்நூல்களில் விதந்தோதப்பட்டுள்ள செய்திகளைப் பார்ப்போம். தோழர் இஸ்மத் பாஷாவின் நூலின் 23ஆம் பக்கத்தில் “சென்னையில் போலீஸ் அடக்குமுறை எல்லையை மீறி விட்டது; தொண்டர்கள் அடித்து வீழ்த்தப்பட்டார்கள். ஆறு போல் இரத்தம் ஓடிற்று. அச்சமயத்தில் ஈரோட்டில் சுயமரியாதை மகாநாடு கூடிற்று. போலீஸ் அடக்கு முறையை வன்மையாகக் கண்டித்து ஒரு தீர்மானம் விஷயலோசனைக் கமிட்டியில் வந்தது. ஜீவா அதை ஆதரித்து உணர்ச்சித் ததும்பப் பேசினார். ஜாதி மத விவகாரங்களில் மட்டும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொண்டால் போதாது; அரசியல் விவகாரங்களிலும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி எல்லோருடைய சுயமரியாதை...

காதலர் தினத்தில் ஜாதிமறுப்பு மணவிழா

காதலர் தினத்தில் ஜாதிமறுப்பு மணவிழா

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன் – ஜானகி ஆகியோரின் மகள் விவேகா அவர்களுக்கு, கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சார்ந்த சிவகாமி – தமிழ்செல்வி ஆகியோரின் மகன் மோகனகிருஷ்ணன் அவர்களுக்கும் சுயமரியாதை இணையேற்பு விழா 14.02.2026 சனிக்கிழமை (அன்பின் நாளான காதலர் தினத்தன்று) மாலை 6 மணி அளவில் கோவை மாவட்டம், குன்னத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பழனியாண்டவர் கலையரங்கத்தில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி, பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ), சூலூர்.தமிழ்செல்வி (கோவை மாவட்ட அமைப்பாளர்), வெங்கட் (கோவை மாநகரச் செயலாளர் ) ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கோவை மாவட்டக் கழகம் வழிகாட்டுகிறது கோவை மாவட்டக் கழகம் சார்பில் 2026 ஆம் ஆண்டு புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா முதல் தவணையாக...

கழகத் தலைமைக்குழு முடிவு திமுக கூட்டணியை ஆதரித்து      1,000 பரப்புரைக் கூட்டங்கள்

கழகத் தலைமைக்குழு முடிவு திமுக கூட்டணியை ஆதரித்து 1,000 பரப்புரைக் கூட்டங்கள்

தேர்தல் களத்தில் முழுவீச்சுடன் களமிறங்கி செயல்பட கழகம் முடிவுசெய்துள்ளது “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!” என்றத் தலைப்பில் 1000 பரப்புரைக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 15.02.2026 ஞாயிறு அன்று சேலம் மேட்டூரில் பிற்பகல் 3:30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழு கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு, இணையதளச் செயல்பாடுகள், முழக்கம் சந்தா சேர்ப்பு, மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு, கோவையில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் தாக்கங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் குழுவில் கலந்து கொண்ட கழகத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள். அனைவரின் கருத்துக்களை விவாதித்து நிறைவாக கீழ்கண்ட...

கழக ஏட்டுக்கு சந்தா தோழர்கள் ஆர்வம்

கழக ஏட்டுக்கு சந்தா தோழர்கள் ஆர்வம்

சென்னையில் கடந்த சனவரி-13 அன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் திருவல்லிக்கேணி பகுதிக் கழகம் சார்பாக சந்தாவாக ரூ.30000 அருண் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) கழகத் தலைவரிடம் வழங்கினார். திருச்சி மாவட்டக் கழகம் சார்பில் தோழர் மனோகரன் (திருச்சி மாவட்டத் தலைவர்) 20 பெரியார் முழக்க சந்தாவுக்கான தொகை ரூ.6000 பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். வடசென்னை மாவட்டக் கழகம் சார்பில் சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) அவர்கள் முதற்கட்டமாக 25 சந்தா ரூ.7500-அய் பிரசாந்த் (புரட்சிப் பெரியார் முழக்கம் செய்தியாளரிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்) பெரியார் முழக்கம் இதழ்12022026.

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!   தமிழ்நாடு  அரசை  வலியுறுத்தி  கோவையில்  போராட்டம்

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோவையில் போராட்டம்

2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ‘இது தமிழ்நாடு – இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை’ மாநாட்டில் ‘வைக்கம் போர் முடியவில்லை’ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்துப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டது. 2025-இல் கழகத் தலைமைக் குழுவில் செப்-17 முதல் செப்-24 வரை “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் நிறைவாக கோவையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களைக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கழகத்தின் சார்பில், கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கை கோரி மாநிலம் தழுவிய போராட்டம், டிசம்பர் 29-அன்று காலை 10.30 மணிக்கு...

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்!   தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்! தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய நாகரீக உலகிலும் பல்வேறு வடிவங்களில் ஜாதியம் தலைதூக்கி நிற்கிறது. ஜாதிக் கயிறுகள், ஜாதிய குருபூஜைகள், ஜாதிய திருமண தகவல் மையங்கள், சமூக வலைதளங்களில் ஜாதி அடையாளத்தை வெட்கமின்றி ஒட்டிக்கொள்ளுதல் என ஜாதியை வலிமைப்படுத்தும் புதுவிதமான முயற்சிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. ஜாதிச்சங்கங்கள் இந்த வேலைகளை இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய ஜாதி வெறிச்செயல்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டிப்பதுடன், ஜாதிய நடவடிக்கைகளுக்கான எதிரான அரசின் உறுதியான சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, திராவிடர் விடுதலைக் கழகம் இந்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. தமிழ்நாடெங்கும் போராட்டத்திற்கு கழகத் தோழர்கள் தயாராகி வருவதுடன், “மனிதம் நம் அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பிலே போராட்ட நோக்கத்தை விளக்கி, பரப்புரைப் பயணங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த...

நாகரீக உலகிலும் ஜாதிவெறி தலைதூக்கலாமா?  சமத்துவ சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்க ஜாதி ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது கழகம்!

நாகரீக உலகிலும் ஜாதிவெறி தலைதூக்கலாமா? சமத்துவ சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்க ஜாதி ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது கழகம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மாநிலம் தழுவிய அளவிலான இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழகத்தின் சார்பில், சுவர் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோழர்கள் ஆத்தூர் மகேந்திரன், சென்னிமலை செல்வராசு ஆகியோர் சுவர் விளம்பரங்கள் தீட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு என பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராவதற்கான திட்டமிடல் பணிகளில் கழகத் தோழர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள், தனியார் வாகனங்களில் தோழர்களை திரட்டி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். ஏற்பாடுகள் ஒருபக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்க இந்த ஆர்ப்பாட்டம் ஏன் என்ற விவாதமும் எழத் தொடங்கியிருக்கிறது. ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது. இனி இந்த ஆர்ப்பாட்டம் தேவைதானா என்ற உரையாடலும் ஒருபக்கம் நடந்து...

1947 ஆகஸ்ட் 15-ல் ஆர்.எஸ்.எஸ் ஏற்றிய ஹிட்லர் கொடி

1947 ஆகஸ்ட் 15-ல் ஆர்.எஸ்.எஸ் ஏற்றிய ஹிட்லர் கொடி

தேசத்துக்கு மாபெரும் தொண்டாற்றிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ் என்கிறார் மோடி. உலகின் மிகப்பெரும் தொண்டு நிறுவனம் என்றும் புகழாரம் சூட்டியது, சுதந்திரதின கொடியேற்று விழாவில். ஆகஸ்ட் 15 சுதந்திர நாளை பெரியார் ‘துக்க நாள்’ என்று வெளிப்படையாகவே அறிவித்தார். அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து பார்ப்பனிய பனியாவுக்கு கைமாற்றப்பட்டது என்றார். இதற்காக பார்ப்பனியம் பெரியாரை ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்தியது. பார்ப்பன தேசத்துக்கு நான் விரோதி தான் என்று பெரியார் அறிவித்தார். ஆனால் தேச பக்தி வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ் சுதந்திர தினத்தில் என்ன செய்தது? பிரிட்டிசார் ஆட்சி உரிமையைத் தங்களிடம் விட்டுச் செல்வார்கள் என்று அவர்கள் கனவில் மிதந்து கொண்டு இருந்தார்கள், வெளிப்படையாக சில இடங்களில் பேசினார்கள். இஸ்லாமிய வெறுப்பைக் கடுமையாக கண்டித்த காந்தியையும் நேருவையையும் தங்கள் எதிரிகளாக கருதினார்கள், அதற்காக காந்தியின் உயிரையே விலையாக கேட்டவர்கள், ஆகஸ்டு 15 சுதந்திர நாளில் அவர்கள் என்ன செய்தார்கள்? “இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில்...

மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!” என்ற தலைப்பில் கழகத் தோழர்கள் ஜாதி எதிர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் செய்தி விவரம்: சென்னை: ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தெருமுனைக் கூட்டம் 12.08.2025 அன்று திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் நடைபெற்றது. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), தலைமையில், லட்சுமணன் முன்னிலையில் நடைபெற்றது. சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்களை தோழர்களை வெகுவாக ஈர்த்தது. ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நெல்லை கவின் படத்திறப்பு நடைபெற்றது. வழக்கறிஞர் சாரநாத் (மாவட்டச் செயலாளர் -விசிக) ஜாதி எதிர்ப்புப் பரப்புரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கழக செயல்பாடுகளை பாராட்டி உரை நிகழ்த்தினார். நிறைவாக சிறப்புரையாற்றிய பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் தேவை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இரண்டாம் நாள்: 13.08.2025 அன்று சென்னை சி.என்.கே சாலை...

ஈரோட்டில் ஜாதிமறுப்பு இணையர்கள் ஒன்றுகூடல்;  மாவட்டக் கழகம் முடிவு

ஈரோட்டில் ஜாதிமறுப்பு இணையர்கள் ஒன்றுகூடல்; மாவட்டக் கழகம் முடிவு

ஈரோடு தெற்கு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 10.8.25 அன்று ஞாயிற்றுக்கிழமை, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு மதிமுக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். எழிலன்( மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஈரோட்டில் ஜாதி மறுப்பு இணையர்களின் ஒன்று கூடல் நிகழ்வை முழு நாள் நிகழ்வாக நடத்துவது என்றும், தமிழ்நாடு முழுவதும் இருந்து ஜாதி மறுப்பு இணையர்களை அணிதிரட்டுவது என்றும், சிறப்பு அழைப்பாளர்களாக தலைவர் பொதுச் செயலாளர் உள்ளிட்டோரை அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கிருஷ்ணன், குமார், ஆசிரியர் சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கார்மேகம், நல்லதம்பி, சசிக்குமார் போதி சத்துவா, விருதுநகர் செந்தில், வீரப்பன்சத்திரம் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். * 10.08.2025 அன்று கழக செயல்பாடுகளை இணையத்தில் தொடர்ந்து கவனித்து வந்த தோழர் ந.கெளரி சங்கர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்....

ஆணவப் படுகொலை சட்டம் கோரி பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலை சட்டம் கோரி பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும், நெல்லை கவின் படுகொலை செய்தவர்கள் அனைவரின் மீதும் கடுமையான தண்டனையை நிறைவேற்ற கோரியும் கண்டன‌ ஆர்பாட்டம் பொள்ளாச்சி மாவட்டக் கழகம் சார்பில் 6.8.2025 அன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தோழர் யாழ் வெள்ளியங்கிரி தலைமையில் நடைபெற்றது. சபரிகிரி வரவேற்புரையாற்றினார். மாரிமுத்து (தி.க), சண்முகவேல் பிரபாகரன் (திஇதபே), தமிழ் குமரன் (ஆதித்தமிழர் பேரவை), வழக்குரைஞர் சேதுபதி (தமிழ் தன்னுரிமை மீட்பு இயக்கம்), மாரிமுத்து (மவிமு), தமிழ் பிரபாகரன் (மே17), மற்றும் கழகத் தோழர்கள் ரூபா, ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இலக்கியா நன்றியுரை ஆற்றினார். பெரியார்முழக்கம்இதழ்14082025

ஓட்டுத் திருட்டுகள்

ஓட்டுத் திருட்டுகள்

“தேர்தல் ஜனநாயகத்தின் முதலாளிகள் வாக்காளர்கள்” என்று சொல்லப்படுவது உண்டு. இப்போது வாக்காளர்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பறித்துக் கொண்டுவிட்டது. இதுதான் ‘ இந்துத்துவ ஜனநாயகம்’. தேர்தல் ஆணையம் நடத்திய ‘ஓட்டுத் திருட்டுகளை’ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி. வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்று அந்த எந்திரத்தை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற பொறியாளரே அமெரிக்காவிலிருந்து ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார். இப்போது ராகுல் காந்தி தேர்தல் ஆணையமே போலி வாக்காளர்களை உருவாக்கி மோசடி செய்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் மகாதேவபுரா என்ற சட்டசபை தொகுதியை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அதில் நடந்துள்ள போலி வாக்காளர் மோசடிகளை ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார். தேர்தல் ஆணையம் தொடர்ந்து மோசடிகளை செய்து வருகிறது. மகாராஷ்டிராவில் 2024 ஏப்ரலில் நடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை அடுத்த 9 மாதங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில்...

விநாயகர் ஊர்வலத்தில்   விதிமீறல்களை தடுக்க மனு

விநாயகர் ஊர்வலத்தில் விதிமீறல்களை தடுக்க மனு

கோவை: விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சியாக நீதிமன்ற ஆணைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கோவை மாநகர வடக்கு துணை காவல் ஆணையர், கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் ஜீலை 28 அன்று மனு அளிக்கப்பட்டது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பதிவு அஞ்சலில் மனு அனுப்பப்பட்டது. தோழர்கள் நிர்மல் குமார், வெங்கடேசன், கிருஷ்ணன், ஸ்டாலின், மாதவன், நவீன் கலந்து கொண்டனர். கடலூர்: விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சியாக நீதிமன்ற ஆணைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 1.8.25 அன்று பெரியார் சிவா தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. வழக்கறிஞர் இள.புகழேந்தி( திமுகவின் தேர்தல் பணி குழு...

20 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகை

20 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகை

கழக செயல் வீரர்கள் கண்ணன் மற்றும் குமார் இருவரையும் விபத்தில் கழகம் பறிகொடுத்தது. பெரியார் நினைவு நாள் சுவரொட்டிகளை ஒட்ட சென்றபோது களப்பணியில் அந்த தோழர்கள் உயிரிழத்தார்கள். உயிர் நீத்த டிசம்பர் 2005 ஆண்டு 24ம் நாள் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சுவரொட்டி அடித்து அவரது நினைவைப் போற்றி வருகிறது. இவர்களுக்கான காப்பீட்டுத் தொகைக்கான வழக்கு 20 ஆண்டு காலத்திற்கு மேல் நடந்தது. இப்போது அந்த தீர்ப்பு தோழர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பெரியார் நினைவு நாள் சுவரொட்டி சென்றபோது அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று மோதி தோழர்களின் உயிரைப் பறித்தது. இதற்காக காப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை வழக்கறிஞர் குமாரதேவன் நடத்தினார். நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக வழக்கு நிலுவையிலே இருந்தது. பிறகு முதலமைச்சர் தனிப்...

வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 29வது கூட்டம் அன்பு தனசேகர் (கழக தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்வை மாவட்டச் செயலாளர் இ.ரா.உமாபதி ஒருங்கிணைத்தார். மறைந்த பகுத்தறிவு இயக்குனர் வேலு பிரபாகரன் படத்தைத் திறந்து வைத்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். நினைவேந்தல் உரையாற்றிய திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கொள்கையில் சமரசமற்ற கடவுள் மறுப்பாளரின் பணிகளையும், வேலு பிரபாகரன் உடன் பயணித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். வேலுபிரபாகரன் இயக்கிய `கடவுள்’ படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), ம.கி.எட்வின் பிரபாகரன்(தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்), ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), சேத்துபட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வட சென்னை அமைப்பாளர்), ஆ.வ வேலு (வட சென்னை ஒருங்கிணைப்பாளர்), கோபி(திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), சூர்யா(திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் ஊடக நண்பர்கள்...

“மனிதம் நமது அடையாளம்!  ஜாதி அவமானம்!”

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி அவமானம்!”

சமூகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஜாதியப் படுகொலைகளை (ஆணவ கொலைகள்) தடுக்க சட்டம் மட்டும் போதாது மக்களின் மன உணர்வுகளில் இருந்து அதை நீக்க வேண்டும். நாகரீக சமூகமாக இந்த தமிழ் சமுதாயத்தை மாற்றி அமைக்கப் போராடியவர் பெரியார். அவர் தொடங்கிய இயக்கம் தொடர்ந்து ஜாதி எதிர்ப்பு, சடங்கு மறுப்பு கருத்தியலை வலிமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது. அதன் விளைவாக இன்று பல்வேறு மாற்றங்கள் வந்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் யாரும் பெயருக்குப் பின்னால் ஜாதி போடும் வழக்கத்தைப் பின்பற்றுவது இல்லை. ஆகவே அதன் தொடர்ச்சியாக திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு தலைப்புகளில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களை கள ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து SC/ST ஆணையத்திடம் மனு அளித்தது. தற்போது இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்து உள்ளது. ஜாதிவெறி சிந்தனைகளில் இருந்து இளைஞர்களை மீட்க சென்னை மாவட்டக் கழகம் “மனிதம் நமது அடையாளம்! ஜாதி...

ஜாதி ஆணவப் படுகொலை; திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்!

ஜாதி ஆணவப் படுகொலை; திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்!

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஜாதி ஆதிக்க மனநிலையில் இருந்து அம்மன நிலையில் உள்ளோர் வெளியில் வரவேண்டும் என கோரிக்கை! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ் (27) கவினை 27.7.25 அன்று பாளையங்கோட்டையில் சுஜித் என்பவர் வெட்டி படுகொலை செய்கிறார். கவின் பட்டியல் சமூகத்தையும் சுஜித் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் சார்ந்தவர்கள். சுஜித்தின் சகோதரியை கவின் காதலித்த காரணத்தினால் கவினை சுஜித் ஜாதி ஆணவப் படுகொலை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. ஜாதி ஆணவப் படுகொலை செய்த சுஜித் தானாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. கவின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டு அவர்கள் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.இந்நிலையில்...

படுகொலைகளின் பீடமாகிய ‘தர்மஸ்தலா’

படுகொலைகளின் பீடமாகிய ‘தர்மஸ்தலா’

கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் மஞ்சுநாதா என்ற கோயில் பாஜக எம்.பி வீரேந்திர ஹெக்டே கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான‌ நிலத்தில் 100க்கும்‌ மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாகவும், உடல்களைப் புதைத்ததாகவும், மஞ்சுநாதா கோயிலின் முன்னாள் ஊழியர் பீமா கடந்த ஜீலை 4-ம் தேதி புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தென் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் பத்தாண்டுகளாக பாலியல் வல்லுறவுகளும் படுகொலைகளும் நடந்து வருவதாக தற்போது ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது: 1995ம் ஆண்டு முதல் 2014 வரை, மஞ்சுநாதா கோவிலில் துாய்மைப் பணியாளராக வேலை செய்தேன். இந்த காலகட்டத்தில் கோயிலின் அருகில் ஓடும், நேத்ராவதி ஆற்றங்கரையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி புதைத்தேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளார். தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்று‌ விடுவதாக மிரட்டியதால் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக அவர் சொல்கிறார். குற்ற...

பனகல் அரசரும் திராவிட மாடலும்

பனகல் அரசரும் திராவிட மாடலும்

நீதிக் கட்சியின் தலைவர்; இரண்டு முறை சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று! (09.07.1866) மகத்தான சாதனைகளை புரிந்தவர். தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சிக்கும் பனகல் அரசரின் ஆட்சிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.அரசு பதிவேடுகளில் `பறையர் பஞ்சமர்’ என்ற இழிசொற்களை நீக்கி ஆதிதிராவிடர் என்று அறிவிக்க ஆணையிட்டவர் பனகல்அரசர். திராவிட மாடல் ஆட்சி ஆதி திராவிட நல விடுதிகளை `சமூக நீதி’ விடுதிகளாக பெயர் மாற்றம் செய்துள்ளது. அவமானச் சொல்லான `காலனி’ என்ற சொல்லை அரசு பதிவேடுகளில் இருந்து நீக்கி இருக்கிறது. மாநிலங்களின் உரிமைக்காக திராவிட மாடல் ஆட்சி குரல் கொடுப்பதைப் போல் பனகல் அரசரும் போராடினார். பிரிட்டிஷ் அரசிடம் இருந்த மருத்துவத் துறையை கடுமையாக எதிர்த்துப் போராடி, மாகாண சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாநில உரிமைக்கு கொண்டு வந்தவர் பனகல் அரசர். முதல் இந்திய மருத்துவக்‌ கல்லூரியை அவர்தான் நிறுவினார். இன்று மும்மொழி வழியாக...

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

சென்னை மாவட்டக் கழகத் தோழர் கன்னியப்பன் உடல்நலக் குறைவால் கடந்த 12.07.2025 அன்று முடிவெய்தினார். அவரின் உடலுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தட்சிணாமூர்த்தி, ஏசுகுமார், மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

பெரியார் பல்கலைகழகத்தில் ஜாதியப் பாகுபாடு

பெரியார் பல்கலைகழகத்தில் ஜாதியப் பாகுபாடு

சேலம் பெரியார் பல்கலையில் ஜாதியப் பாகுபாடு, வன்கொடுமை நிலை தமிழக அரசு தலையிட்டு தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின முனைவர் பட்ட மாணவர்கள் முனைவர் பட்டத்தை முடிக்க முடியாமல் தமிழ் துறைப் பேராசிரியர் பெரியசாமி இடையூறு செய்து வருவதால் பல பட்டியலின முனைவர் பட்ட மாணவ மாணவிகள் வெளிப்படையாகப் புகார் அளித்துள்ளது மிகவும் வேதனையான ஒன்றாகும். படிக்கும் மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வது, வீட்டிற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூறுவது, மளிகை பொருட்களை வாங்க சொல்வது போன்ற கொடுமைகள் பெரியார் பல்கலையில் நடப்பது வேதனையான ஒன்று. இனியும் இதை அனுமதிக்க முடியாது.பட்டியலின, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளை வேலைக்காரர்களாக எஜமான மனப்பான்மையோடு நடத்துவது கண்டனத்திற்கு உரியது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள்...

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார அமைப்புகளைக் கட்டுப்படுத்தவும், அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைத்து மத மோதல்களைத் தூண்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலி பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள், தமிழ்நாடு அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்ய வலியுறுத்தி மனுக்களை நீதிமன்ற ஆணை நகல்களுடன் இணைத்து கோரிக்கை மனு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,மாவட்ட...

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் வருமான வரித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி 36 வருட பணிக்குப் பின் ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வு பாராட்டு விழா கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் சிறப்புடன் நடைபெற்றது. உடன் பணியாற்றிய அலுவலர்கள், உறவினர்கள், கழகத் தோழர்கள் நண்பர்கள் திரண்டு வந்திருந்தனர். அன்பு தனசேகர் மகள் வழக்கறிஞர் இளவேனில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். உரையாற்றியவர்கள் அன்பு தனசேகரின் சமூகத் தொண்டுகளை சமூக தொண்டாற்றுவதில் அவரின் ஆர்வத்தையும் பாராட்டினர். தனது பெண் மக்களை முழு சுதந்திரத்துடன் வளர்த்தார். அலுவலகத்தில் ஆளுமைகளை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். அதிகாரியாக இருந்தும் ஒரு அதிகாரியாக நடந்து கொள்ளாமல் எளிமையான மனிதராக எல்லோரிடமும் பழகியவர். தனக்கு கீழே பணியாற்றும் ஊழியர்களுக்கு உதவியவர். அமைப்புகளை உருவாக்கி வழி நடத்தியவர். பிற்படுத்தப்பட்டோர் சமூக உரிமைக்காக தொடர்ந்து களத்தில் நின்றவர். பல ஊர்களுக்கு சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தியவர். நடைபயிற்சி...

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் வெள்ளார் பகுதியில் 06.07.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம், சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து தோழர்கள் அனைவரும் தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கினார்கள். தீர்மானங்கள்: 1). ஜூலை மாத இறுதிக்குள் சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் மேச்சேரியில் கருத்தரங்கம் நடத்துவது எனவும், 2). கிராமப்புற பகுதிகளில் மாதம் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்துவது, 3). மாதம் ஒரு பகுதியில் கிளைக் கழக சந்திப்பு நடத்தி புதிய இளைஞர்களை திரட்டுவது. 4). புதிய இளைஞர்களுக்கு வருடம் ஒரு பயிலரங்கம் இளைஞர் அணி சார்பாக நடத்துவது,...

உடற் கொடை அளிப்பு!

உடற் கொடை அளிப்பு!

திருப்பூர் தி.வி.க தோழர் மலரவன் என்கிற மலர் மணி நாதன் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 28.06.2025 இரவு 8. 30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது உடல் சோளிபாளையம் பாரதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பிறகு அவரது விருப்பத்தின் பேரில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக் கிழமை 29.6.2025 காலை 12.30 மணிக்கு அவரது உடல் கொடையாக வழங்கப்பட்டது. தோழர் மலரவனின் உடலுக்கு எந்தவிதமான ஜாதி மத சடங்குகளும் செய்யப்படவில்லை. மலர் மாலை கூட அணிவிக்கப்படாமல் பெண் தோழர்கள் கொள்கை முழக்கமிட்டு உடலை சுமந்து வந்தனர். தோழரின் இணையர் பாண்டிச்செல்வி, மகள் மதுலதா, மகன் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கொடையாக வழங்கப்பட்டது. மலரவன் அவர்கள் 41 ஆண்டுகளாக தந்தை பெரியார் கொள்கையை கடைபிடித்தவர். தனது குடும்ப உறுப்பினர்களை பெரியார் வழியில் நடத்தியவர் ஆவார். நிகழ்வில் சு.துரைசாமி பொருளாளர், வீ.சிவகாமி தலைவர் தமிழ்நாடு...

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

வரலாற்று பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த சமூக புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். இது பூந்தோட்டத்தில் நடந்த புரட்சி! “எங்கள் ஊரில் முன்பு கோயில் இருந்தது. பெரியார் ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தார். ‘இந்த ஊர்ல இத்தன கோயில் இருக்கே? எத்தனை பள்ளிக்கூடம் இருக்கு? எவ்வளவு தற்குறியாவும், கைநாட்டுப் பசங்களாகவும் திரியறீங்க? பொம்பளங்கள, புள்ளை பெக்குற மெஷினாட்டம் வச்சிருக்கீங்க! பெண்களைப் படிக்க வச்சிங்கன்னா மொத்த சமுதாயத்தையும் காப்பாத்துவாங்க’ என்று பேசினார். உடனே கோயில்கள் எல்லாம் பள்ளிகளாக மாறிவிட்டன. இப்போது வீட்டுக்கு ஒரு குழந்தையை ஆசிரியருக்குப் படிக்க வைக்கிறோம். அதுவும் பெண் குழந்தையை” என்று கூறியுள்ளார். தினமணியின் மகளிர் மலர் ஒன்றில் ஒருமுறை மனோரமா அளித்த நேர்காணலில் சொன்ன தகவல் இது. மனோரமா சொன்ன அந்த ஊர், கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகே உள்ள பூந்தோட்டம் கிராமம்....

‘டார்வின்’ நேருக்கு நேர் நடந்த விவாதம்! கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(6) -விடுதலை இராசேந்திரன்

‘டார்வின்’ நேருக்கு நேர் நடந்த விவாதம்! கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(6) -விடுதலை இராசேந்திரன்

உயிர்கள் எப்படி தோன்றின? இந்த கேள்விக்கான பதில்கள் காலத்துக்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த கேள்வி எப்போது உருவானது? மனித மூளை உருவான பிறகுதான். கடவுளை, மதத்தை, ஜாதியை உருவாக்கியது மனித மூளை தான். ஆதிசேஷன் என்ற பாம்புதான் பூமியைத் தாங்கிக் கொண்டு இருப்பதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. நானே கடவுள்; பக்தர்களைக் காக்கவும் வர்ண தர்மத்தை நிலைநாட்டவும் நான் வந்திருக்கிறேன். தர்மம் மீறப்படும்போது நான் அவதாரம் எடுத்து வருவேன். அது சாம்ப வாமி யுகே, யுகே என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறுவதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல கடவுளே மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்று படைத்தார் என்றும் கீதை கூறுகிறது. இந்த மனிதர்களை வர்ண பாகுபாடுடன் உயிரையும் உடலையும் தந்து பூமிக்கு அனுப் பியவர்கள் கடவுள்கள் தான் என்ற நம்பிக்கை மக்கள் மீது திணிக்கப்பட்டது. உண்மையில் கடவுள் எந்த மனிதரையும் படைக்கவில்லை. அது...

சிந்தனையை தூண்டும் நூல்!

சிந்தனையை தூண்டும் நூல்!

நீங்கள் நாத்திகரா? இதைப் படிக்க வேண்டாம் என்ற தலைப்பில் அறிவுச் சுடர் வெளியீட்டகம் நூல் ஒன்று வெளியிட்டுள்ளது. நூலின் நோக்கம் விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாத்திகரா? இதைப் படிக்கவேண்டாம் என்று தலைப்பிட்டதன் காரணம் இந்தப் புத்தகத்தின் கேள்விகள் அனைத்தும் உங்களைப் பொருத்த வரையில் பொருத்தமற்றதே. ஆனாலும் புத்தகம் முழுவதையும் படித்துவிட்டீர்களானால் ஒரு கடவுள் நம்பிக்கையாளரிடம் எவ்வாறு விவாதிப்பது அல்லது சிந்தனையைத் தூண்டுவது என்பதற்கு ஒரு வழிகாட்டலாக இருக்கும். அதுபோல மறு வெளியீடுகளில் இதனை மேம்படுத்த நீங்களும் உதவலாம். நூல் விலை: ரூ.50 கிடைக்கும் இடம்: அறிவுச் சுடர் வெளியீட்டகம், திருச்சி பெரியார் முழக்கம் 10072025இதழ்

கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

20.06.2025 அன்று கழகத் தலைவரின் 78 வது பிறந்தநாளில் சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில் தலைவரை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கழகத் தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக மகளிர் அணி சார்பில் ரூ.10,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி மற்றும் தோழர்கள் கலைச்செல்வி, காயத்ரி, கோமதி, கீதா, தேன்மொழி, இராணி, அருள்மொழி, மகிழினி ஆகியோர் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 10072025இதழ்

சமுகநீதி விடுதிகள்

சமுகநீதி விடுதிகள்

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் விடுதிகளாக அழைக்கப்பட்டு வந்தன. `சமூகநீதி விடுதிகள்’ என்றே அழைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பாராட்டி வரவேற்கத்தக்க அறிவிப்பாகும். விடுதிகளில் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் சில விடுதிகளும் உள்ளன. அந்த விடுதிகள் அந்தத் தலைவரின் பெயர்களோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் ஜாதி அடையாளத்தை அறிவிக்கும் கயிறுகளைக் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று இந்த ஆண்டு பள்ளி திறப்புக்கு முன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்படும் ஜாதி மோதல்களைத் தடுப்பது குறித்து ஆராய நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு நியமித்தது. ஆணையம் மிக சிறப்பான பரிந்துரைகளை அரசுக்கு...

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி!

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி!

கழக மாவட்டச் செயலாளர் உமாபதி-பாரதி இணையரின் 21-ம் ஆண்டு இணையேற்பு நாளை முன்னிட்டு கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். மேலும் மதுரை கழகத் தோழர் அழகர் பிரபாகரன் அவரது மகன் இளமகிழன் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 10072025இதழ்

பீகாரில் பில்லி சூனிய‌ நம்பிக்கையால் 200 பேர் முன்னிலையில் ஒரே குடும்பத்தில் ஐவர் எரித்து கொலை!

பீகாரில் பில்லி சூனிய‌ நம்பிக்கையால் 200 பேர் முன்னிலையில் ஒரே குடும்பத்தில் ஐவர் எரித்து கொலை!

பில்லி சூனியக்காரர் என்று ஒரு குடும்பத்தின் ஐந்து பேர் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகாரில் அரங்கேறி உள்ளது. பியூரின் மாவட்டத்தில் டெட்காமா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வாழும் ராம்தேவ் மகத்தோ என்பவரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத நிலையில் சிகிச்சைக்கு கிராம வைத்தியர் பாபுலால் ஒரன் (50) என்பவரிடம் சென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு ஊர்த் தலைவர் முன்னிலையில் கிராம மக்கள் கூடினார்கள். சிகிச்சை அளித்த கிராம வைத்தியர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பில்லி சூனியக்காரர்கள் என்று கிராமத்தினர் முடிவு செய்தனர். அவர்களை கட்டையால் அடித்து சாகடித்து பிறகு தீ வைத்து எரித்து சடலங்களை ட்ராக்டர் ஒன்றில் ஏற்றி கிராமத்தில் குழித் தோண்டி புதைத்தனர். இதில் உயிர் தப்பிய வைத்தியரின் 16 வயது மகன் இந்த தகவலை தங்களுடைய உறவினர்களிடம் தெரிவித்தார். மாவட்ட காவல்துறை அதிகாரி...

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

5/7/25 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை நங்கநல்லூரில், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் தலைமையில், ம.குகாநந்தன் முன்னிலையில் நடைபெற்றது. இரண்யா வரவேற்புரையாற்றினார். “சுயமரியாதை இயக்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள்” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். வரலாற்று ஆவணமாக இவ்வுரை அமைந்தது. “குடிஅரசு உருவாக்கிய அதிர்வலைகள்” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆழமான ஆய்வுரையை நிகழ்த்தினார். பொதுக்கூட்டத்தின் சிறப்பம்சமாக, பொதுக்கூட்ட மேடையிலேயே ஆனந்தகுமார் – ஷர்மிளா இணையரின் சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணமும் நடைபெற்றது. இந்நிகழ்வு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. கார்மேகம் – வீரமணி – பேரன்பு – திராவிட மகிழன் குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்கள் மக்களை சிந்திக்க வைத்தன. தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி நன்றியுரையாற்றினார். களப்பணியாற்றிய தோழர்களுக்கும் கலைஞர்களுக்கும் நினைவுப்பரிசாக புத்தகங்களை, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, தென்சென்னை மாவட்டத்...

கழக ஏட்டுக்கு நன்கொடை!

கழக ஏட்டுக்கு நன்கொடை!

கழகத் தோழர் இரண்யா தனது மகன் அகராதி பிறந்தநாளை முன்னிட்டு ரூ.2000 சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி அவர்களிடம் வழங்கினார். கழகத் தோழர் அஜித் ரூ.1000 கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 03072025இதழ்

மொக்கைப் பேச்சு அமித்ஷா!

மொக்கைப் பேச்சு அமித்ஷா!

அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட இந்திராகாந்தியின் காலம் உண்மையில் “இருண்ட காலம்” தான். தமிழ்நாட்டில் திக, திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மிசா, ஒடுக்குமுறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சென்னை சிறையில் தாக்கப்பட்டனர். விடுதலை, முரசொலி, தீக்கதிர் நாளேடுகள் கொடூரமான தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அக்ரஹார அதிகாரவர்க்கம் விடுதலை நாளேட்டை ஒவ்வொரு நாளும் தணிக்கை செய்த காலத்தில் நான் ‘விடுதலை’யில் பணியாற்றினேன் அடக்குமுறை சூழலை எதிர் கொண்டோம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இன்றைய நிலைப்பாடும் அது ‘இரண்ட காலம்’ என்பதுதான். ஆனால் `அமித்ஷாக்கள்’ இப்போது காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு இதைப் பயன்படுத்த தீவிரம் காட்டுகிறார்கள். சொல்லப்போனால் மோடியின் ஆட்சி அறிவிக்கப்படாத அவசரநிலை அடக்குமுறை ஆட்சியாகத் தான் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் ஒற்றை சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்ல அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை சீர்குலைத்து கருத்துரிமையைப் பறித்து எதிர்க்கட்சிகளை அழித்து ஒழிக்கும்...

ஆகமக்காரர்களின் குத்தாட்டம்

ஆகமக்காரர்களின் குத்தாட்டம்

ஆகமக் கோயிலில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும். பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராக முடியாது என்ற ‘இன ஒதுக்கல்’ சட்டப்படியே நிலை நிறுத்தப்பட்டுள்ளது மிகப்பெரும் அவமானம்! அரசியல் சட்டம் தீண்டாமையை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இந்து மதம் தீண்டாமையை ஆகமங்களின் பெயரில் புனிதமாக்குகிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திர உரிமையை தீண்டாமைக்கு ஆதரவாக முறைகேடாக பயன்படுத்துவதற்கு நீதிமன்றங்களும் துணை போகின்றன என்பதுதான் பேரவலம். ‘பிராமணர்கள்’ மட்டுமே கோயிலுக்குள் நுழைய முடியும் என்ற தீண்டாமை ஒரு காலத்தில் இருந்தது; சாஸ்த்திரமும் அப்படித்தான் கூறியது என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஆலயப்பிரவேச உரிமை என்ற பெயரில் போராட்டங்கள் நடந்தன. சுயமரியாதை இயக்கம் முதலில் தொடங்கியது. பிறகு காந்தியும் காங்கிரஸும் இந்த போராட்டங்களை நடத்தியது. ஆகம விதிகளைத் திருத்தித்தான் 1959-ஆம் ஆண்டு அனைத்து இந்துக்களும் கோயிலுக்குள் நுழையலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் கர்ப்பகிரகத்துக்குள் இப்போதும் பார்ப்பனர் அல்லாதவர்களால் அர்ச்சகர் முடியாது...

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

சமூக நீதிக் காவலர் விபி சிங் பிறந்தநாளான (25/6/25), சென்னை பிரசிடென்சி கல்லூரியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாலை 5 மணியளவில், திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா.சூர்யா, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இளவரசன் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம்03072025இதழ்

சரஸ்வதி நாகரீகத்துக்கு ஆய்வறிக்கை உண்டா?…  – விடுதலை இராசேந்திரன்.

சரஸ்வதி நாகரீகத்துக்கு ஆய்வறிக்கை உண்டா?… – விடுதலை இராசேந்திரன்.

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு பிறகு அந்த அறிக்கையை திருத்தி எழுதித் தருமாறு ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது. அதில் திருத்துவதற்கு எதுவும் இல்லை என்று ஆய்வாளர் மறுத்துவிட்டார். ஆய்வாளர் அமர்நாத் மீண்டும் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்கப்பட்டுளளார். இப்போது அந்த அறிக்கை போதுமானது அல்ல, மேலும் தகவல்கள் தேவைப்படுகிறது என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் சேக்வாத் சென்னையில் பேட்டியளித்து இருக்கிறார். ஆய்வாளர் அமர்நாத் பாஜக விரும்புகிறபடி அறிக்கையை திருத்தி அனுப்பி இருந்தால் அதை வெளியிட்டு இருப்பார்கள். இப்போது ஆர்எஸ்எஸ் ரசாயன பரிசோதனை ஆலைக்கு அனுப்பி சோதனை செய்த பிறகு அதை அங்கீகரிப்பார்கள் போலும். வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி என்ற ஆறு எங்கே இருக்கிறது, என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இதைக் கண்டுபிடிப்பதற்காகவே பல கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கி இன்னமும் ஆண்டுகணக்கில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தேடிக் கொண்டிருக்கின்ற ஒரு...

முழக்கத்திற்குப் பாராட்டு!

முழக்கத்திற்குப் பாராட்டு!

கொளத்தூரில் நடைபெற்ற நாத்திகர் விழா நிகழ்ச்சியில் மாநாட்டில் மூன்றாவது தீர்மானமாக கணவன் இறந்த பிறகு பெண்களுக்கு நடக்கும் சடங்குகளின் தடுக்க கோரி மூடநம்பிக்கைகளில் இது கொடூரமான மூடநம்பிக்கை என்பதை சுட்டிக்காட்டி தீர்மானம் இருப்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது, படிக்கிற போது நா தழுதழுக்கிறது. அதேபோல கடந்த வாரம் வந்த முழக்கத்தில் ‘நாத்திகர் விழா சிந்தனை இரண்டு தொகுப்பில்’ 1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பு கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதற்கு கீழே இருக்கிற கட்டுரையில் ஆசிரியர் ஊசி ஒன்று எனக்கு வேண்டும் மாணவர்கள் வாங்கி வர வேண்டும் என்று சொல்லி ஒரு மாணவர் கிளம்ப எல்லோருமாக சேர்ந்து வாங்கி வருகிறோம் என்று, உடன் இருந்த மாணவர்களும் உடன் செல்ல அவர்கள் வாங்கி வந்த விதமும் அந்த ஊசியின் கதையும், தெருவில் இழுத்து வருகிற தேரின் கதையையும் எளிமையாக புரிய வைத்த பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நா...

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன் மகன் கி.பிரபாகரன், ஆனைமலை ஒன்றியச் செயலாளர் நடராஜ் மகள் ந.கஸ்தூரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை இணை யேற்பு விழா ஆனைமலை பரிமளா சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில் 11.06.2025 புதன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. இணையர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை ஏற்று தாங்களும் மலர் மாலையை மாற்றிக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு நடைபெற்றது. நிமிர்வு கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. யாழ்.வெள்ளிங்கிரி வரவேற்புரை நிகழ்த்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் இணையேற்பினை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், வேலூர் மாவட்டச் செயலாளர் சிவா, சேலம்...

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் 21-06-2025 மாலை 5 மணி அளவில் வ.உ.சி திடல் (செங்காடு) அவினாசி பகுதியில் ஒன்றிய அரசே! கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடு எனக் கோரி திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய கழகம் சார்பாக கையெழுத்து இயக்கம், மற்றும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் திவிக சார்பாக மாவட்டச் செயலாளர் முகில்ராசு கண்டன உரையாற்றினார். நிகழ்வில் மாரிமுத்து மாநகர துணைத் தலைவர், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

பாராட்டத்தக்க முயற்சி!  பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

பாராட்டத்தக்க முயற்சி! பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

ஆசிரியர் சிவகாமி முன்னெடுப்பில் புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஒரு வருட செயல் திட்டமாக மாதம் 500 ரூபாய் நிதி பங்களிப்பு செய்வதாக தீர்மானித்து செயல்பட்டு வருகிறது. முதல் தவணையாக ஜூன் மாதம் ரூ.8000 வழங்கியள்ளனர். குழுவில் இணைந்து ஒரு வருடத்திற்கு வளர்ச்சி நிதி வழங்க விருப்பமுள்ள தோழர்கள் தகவல் தெரிவிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். பெரியார் முழக்கம் 26062025இதழ்

மலக்குழி சாவுகள் தொடரக்கூடாது பால்.பிரபாகரன் வலியுறுத்தல்

மலக்குழி சாவுகள் தொடரக்கூடாது பால்.பிரபாகரன் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பாதாள சாக்கடை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கி கங்கைகொண்டான் – ஆலடிப்பட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுடலைமணி (வயது 40) என்ற தூய்மை பணியாளர் கடந்த 08.06.2025ல்உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: பாதுகாப்பற்ற முறையில் ஒப்பந்த தூய்மை பணியாளரை எவ்வித பாதுகாப்பு கருவியுமின்றி பாதாள சாக்கடைக்குள் இறக்கி தூய்மைப் பணி செய்ய வைத்துள்ளனர். மனிதக்கழிவை மனிதன் அகற்றத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 இருந்தும் அச்சட்டம் மிகத் தெளிவாக மனிதனைப் பாதாள சாக்கடை மற்றும் மனிதக் கழிவு குழிக்குள் இறங்கத் தடை விதித்து இருந்தும் அந்த சட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் சற்றும் சட்டை செய்யாமல், மனிதர்களை பாதாள சாக்கடைக்குள் எவ்வித பாதுகாப்பு கருவிகள் கூட இல்லாமல் இறக்குவதும் அதனால் மனித உயர்கள் பலியாவதும் வாடிக்கையாகிவிட்டது. நீதிமன்றங்கள் இச்செயல்பாடுகளைக் கண்டித்து பல தீர்ப்புகளை தந்து...

கடவுளுக்கு மனிதநேயம் கிடையாதா?

கடவுளுக்கு மனிதநேயம் கிடையாதா?

எதிர்காலக் கனவுகளையும் மகிழ்ச்சியான உணர்வுகளையும் சுமந்து சென்ற 246 மனித உயிர்கள் பலியாகி விட்டன. ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் விழுந்து நொறுங்கியது, என்ற செய்தி மனிதத்தை இடித்து நொறுக்கி விட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன் டாட்டாவிடம் விலை பேசி விட்டது இன்றைய ஆட்சி. தற்போது ஒன்றிய ஆட்சியின் நிர்வாகத்தின் கீழ் எந்த ஒரு விமான சேவையும் இல்லை. விபத்துகள் நிகழவில்லை என்றாலும் போயிங் 787 விமானம் பாதுகாப்பானது அல்ல என்ற குற்றச்சாட்டுகள், 2011-ஆம் ஆண்டிலிருந்து வரத் துவங்கி விட்டன; பயணிகள் சேவை; விமான கட்டமைப்பு கோளாறு; தரமற்ற உதிரி பாகங்கள்; இணைப்புக் கோளாறு என்று தொழில்நுட்ப ரீதியாகவும் சேவை ரீதியாகவும் குற்றச்சாட்டுகள் வரத் துவங்கின,… ஏர் இந்தியா நிறுவனம் இவைகளை தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த விமான உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு பொறியாளர்கள் இதன் ஆபத்து குறித்து பிபிசி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தனர்....

அசைவ இந்துக்களை அவமதிக்கும் பார்ப்பனியம்!

அசைவ இந்துக்களை அவமதிக்கும் பார்ப்பனியம்!

திருவண்ணாமலை கோயில் வளாகத்தில் கிராமத்தில் இருந்து வந்த ஒரு தம்பதியினர் முட்டை பிரியாணி சாப்பிட்டார்கள் என்பதற்காக கோயில் தீட்டாகிவிட்டது என்று கூறி, தீட்டு கழிக்கும் சடங்குகளையும் யாகங்களையும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் அசைவம் சாப்பிடுகிறவர்கள்தான்! அவர்களை கடவுள் ஏற்றுகொள்கிறார், ஆனால் அவர்கள் சாப்பிடுகிற அசைவ உணவு ஆண்டவனுக்கு தீட்டு என்று சொல்லி அசைவ உணவுக்காரர்களையே ஆரியம் அவமதிக்கிறது. ஆண்டவனின் உணவு பியூர் வெஜிடேரியன் என்று இவர்களுக்கு யார் சொன்னது? அர்ச்சகராக இருக்கிறவர்கள் சைவ உணவுக்காரர்களாக இருக்கிறார்கள், என்பதற்காக கடவுளையும் சைவத்திற்கு இவர்கள் மாற்றிக் கொண்டு விட்டார்களா? அசைவ உணவுக்காரர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று சொன்னால் கோயில்களை இழுத்து மூடி விட வேண்டியதுதான். பெரும்பான்மை மக்களை இப்படி புண்படுத்துகிறவர்கள்தான் இந்துக்களைப் புண்படுத்துகிறார்கள் என்று அவ்வப்போது கூச்சல் போட்டு வருகிறார்கள். மதக்கலவர நோக்கத்தோடு மதுரையில் முருகன் மாநாட்டை நடத்துகிறது பாரதிய ஜனதா கட்சி. முருகன்...

திராவிடம் வென்றே தீரும்!

திராவிடம் வென்றே தீரும்!

பாமகவை மருத்துவர் ராமதாஸ் தொடங்கியபோது பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று கூறினார். இப்போது பாமகவில் நடக்கும் குடும்பச் சண்டையை தீர்த்து வைக்க ராஜகுரு குருமூர்த்தி களம் இறக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு குருமூர்த்தி யார் என்று தெரியாது, ஆனால் அவர்தான் பாஜகவின் அதிகார மய்யம். அதிமுகவை இரண்டாக உடைத்ததில் இவரது பங்கு மிகவும் பெரியது. ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் செய்ய உத்தரவிட்டவர் இதே ஆடிட்டர்தான். அதிமுகவினர் ஆண்மையற்றவர்கள்; காலில் விழக்கூடியவர்கள் என்று அவமானப்படுத்தினார். ஒரு வழியாக எடப்பாடியின் அதிமுக பாஜகவின் பிடிக்குள் வந்துவிட்டது. தினகரன் ஓபிஎஸ் குழுக்கள் பாஜகவின் உத்தரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன. இப்போது பாமகவும் பாஜக பிடிக்குள் போகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது ஒழித்தாக வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவில் இருக்கும்”சூத்திர” அண்ணாமலைகளோ, நயினார்களோ, தமிழிசைகளோ சாலை ஓரத்தில் கூவுவதற்குத்தான் உரிமை. ஆனால் கட்சியின் அதிகாரம் மக்களுக்கே தெரியாத...