பரப்புரைக்கு தயாராவீர்
தமிழ்நாட்டில் சமூகத்திலும் வாழ்க்கையிலும் மாற்றங்கள் வந்தாலும் ஜாதி கட்டமைப்பு குலைந்துவிடவில்லை. பல்வேறு புதிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வருகின்றன. ஒவ்வொரு ஜாதிக் குழுவும் தனக்கான பெருமைகளைப் பேசுகிறது. ஜாதிச் சங்கங்களை அமைக்கிறார்கள்; ஒவ்வொரு ஜாதிக்கும் திருமணத்திற்கு வரன் தேடித்தரும் அமைப்புகள் வந்துவிட்டன; தொலைக்காட்சிகளிலும் அவை விளம்பரம் செய்கின்றன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே ஜாதி குறித்து ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்திய போது அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. பள்ளி கல்லூரி மாணவர்களிடையே 50% விழுக்காட்டிற்கும் மேல் ஜாதி உணர்வு இருப்பதையும் சமூக வலைதளங்களில் அவர்கள் ஜாதிப் பெருமைகளை பதிவு செய்து வருவதையும் அந்த ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டில் பாஜக தனது `இந்துத்துவா’ அரசியலை வளர்ப்பதற்கு ஜாதிச் சங்கங்களை பெருமளவில் பயன்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் சமுதாயத்தில் ஜாதிக் கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்று கவலைப்படவே இல்லை. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் அடக்கம். அரசியலுக்குள்...
