Category: ஈரோடு வடக்கு

குன்னத்தூரில் ஜாதி வெறிச்செயல்  கழகம் எதிர்வினை!

குன்னத்தூரில் ஜாதி வெறிச்செயல் கழகம் எதிர்வினை!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருப்பண நாடார் பள்ளியில் 30-01-2026 அன்று சக மாணவர்களால் 8-ம் வகுப்பு பட்டியலின வகுப்பைச் சார்ந்த ரக்சத் என்னும் மாணவன் தீயில் தூக்கி வீசப்பட்ட ஜாதி வெறிச் சம்பவம் நடந்துள்ளது. தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட மாணவனை பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். உடனே செய்தி அறிந்த திராவிடர் விடுதலைக் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் அவர்களுடைய தலைமையில் முகில் ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), செல்வக்குமார் (கோபி மாவட்டச் செயலாளர்), மாரிமுத்து (திருப்பூர் மாநகர துணை தலைவர்), கோபி அருளானந்தம், ஈசுவரமூர்த்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவனைச் சந்திக்கச் சென்றனர். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆறுதல் கூறியதோடு அவனுடைய பெற்றோர்களிடமும் மற்றும் மாணவனிடமும் தோழர் இராம.இளங்கோவன் அவர்கள் நடந்த உண்மை சம்பவங்களைக் கேட்டு அறிந்தார். பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய லெனினிய அமைப்புகளை ஒன்றிணைத்து இச்சம்பவத்திற்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தையும் மற்றும் தொடர்ந்து பள்ளியில் ஜாதிய பாகுபாடுகளுக்கு எதிராக புகாரளித்தும் கண்டும் காணாமல்...

கோபியில் தெருமுனைப் பிரச்சாரம்!

கோபியில் தெருமுனைப் பிரச்சாரம்!

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 04.01.2026 ஞாயிறு அன்று கோபி அம்மாபேட்டை ஒன்றியம் சனி சந்தை பகுதியில், ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. செல்வகுமார் (மாவட்டச் செயலாளர்) தலைமையேற்றார். சிவானந்தம் (தோணி மடுவுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்), தைரியமணி (புஇமு), பாரி (அருந்தமிழர் வாழ்வுரிமைக் கட்சி), காவலாண்டியூர் குமரேசன், நாத்திகசோதி (மாவட்டத் தலைவர்) ஆகியோர் உரையாற்றினர். பரப்புரை பயணத்தின் நோக்கத்தினை விளக்கி இராம. இளங்கோவன் (வெளியீட்டுச் செயலாளர்) விளக்க உரையாற்றினார். இரமேசு நன்றி கூறினார். பெரியார், அம்பேத்கர், கழகத்தின் செயல்பாடுகள் குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டன. கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தோழர்களும், காவலாண்டியூர் பகுதி கழகத் தோழர்களும், பெரியார் தொழிற்சங்க பேரவை தோழர்களும் கலந்து கொண்டனர். தோழருக்கான உணவு ஏற்பாடுகளை தோனிமடுவு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் ஏற்பாடு செய்தார். பெரியார் முழக்கம் இதழ் 22012026

பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!

பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: பெரியார் நினைவு நாளையொட்டி டிச.24 அன்று காந்திபுரம் பெரியார் சிலை முன்பு காலை 9.30மணிக்கு கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. ஏற்காடு: டிசம்பர்-24 அன்று கழகப் பொறுப்பாளர் ஏற்காடு பெருமாள் தலைமையில் தந்தை பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. சேலம் கிழக்கு: 24.12.2025 காலை 10.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), முத்துமாணிக்கம் (கிழக்கு மாவட்ட அமைப்பாளர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்), ரமேஷ்(இளம்பிள்ளை நகரத் தலைவர்), மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), தேவராஜ் (சேலம் மாநகர அமைப்பாளர்), வெற்றிமுருகன்(மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), பிரபு(சேலம் மாநகர பொருளாளர்) மற்றும் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம்...

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

பொள்ளாச்சி, ஈரோடு, மயிலாப்பூரில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

பொள்ளாச்சி, ஈரோடு, மயிலாப்பூரில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

பொள்ளாச்சி: தந்தை பெரியார் நினைவு நாளான டிச-24 அன்று ஜாதி தீண்டாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தெருமுனைக் பரப்புரைக் கூட்டங்கள் பொள்ளாச்சி ஆனைமலை வேட்டைக்காரன் புதூர் பகுதியில் வே.வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது. பாடகர் கண்ணையன், வழக்கறிஞர் சேதுபதி (தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம்), தமிழ் குமரன் (ஜெய் பீம் அறக்கட்டளை), பிரபா (மே 17 இயக்கம்), பிரபாகரன் (திராவிட இயக்க தமிழர் பேரவை), வழக்கறிஞர் ரிசி (தமிழ்ப்புலிகள் கட்சி), பொறியாளர் பரமசிவம், (திக), ராஜ்குமார் (திமுக இலக்கிய அணி), முத்தமிழன் (மக்கள் விடுதலை முன்ணனி), சபரிகிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்) மற்றும் கழகத் தோழர்கள் ஆனந்த், அரிதாஸ், நடராஜ் மணி தோழமை அமைப்புத் தோழர்கள் பங்கேற்றனர். ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 21.12.2025 ஞாயிறு மாலை 6 மணி அளவில் அம்மாப்பேட்டை ஒன்றியம் குருவரெட்டியூர் பகுதியில் “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்”...

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!   தமிழ்நாடு  அரசை  வலியுறுத்தி  கோவையில்  போராட்டம்

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோவையில் போராட்டம்

2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ‘இது தமிழ்நாடு – இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை’ மாநாட்டில் ‘வைக்கம் போர் முடியவில்லை’ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்துப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டது. 2025-இல் கழகத் தலைமைக் குழுவில் செப்-17 முதல் செப்-24 வரை “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் நிறைவாக கோவையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களைக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கழகத்தின் சார்பில், கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கை கோரி மாநிலம் தழுவிய போராட்டம், டிசம்பர் 29-அன்று காலை 10.30 மணிக்கு...

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், கோவை மாநகர கழகத்தின் மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பு தபெதிக அமைத்த அம்பேத்கர் படம் முன்பு காலை 9.30 மணிக்கு கோவை தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் நிலவும் ஜாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை உறுதியாகப் போராடுவது என்று உறுதி ஏற்றனர். பன்னீர்செல்வம், வெங்கட், நிர்மல் குமார் உரையாற்றினர் தோழர்கள் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், நவீன், தரணி, சத்தியமூர்த்தி, மேட்டூர் பாலு, ஆதரவாளர்கள் சங்கனூர் கார்த்தி, பரத், இலக்கியா கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினர். திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவரது நினைவைப் போற்றும் விதமாக மாநகர அமைப்பாளர் இரா. சரசுவதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கழகப் பொருளாளர் சு.துரைசாமி, வீ.சிவகாமி (தலைவர்,...

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஒட்டி வழக்கமான உச்சி பிள்ளையார் கோயில் பகுதிக்கு மாற்றாக, சிக்கந்தர் பாஷா தர்கா பகுதியில் தீபம் ஏற்ற வேண்டுமென்று, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட இந்த நீதிபதியின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, உறுதியான எதிர்வினையாற்றி, தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது திமுக அரசு. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருள வேண்டும் என தீர்ப்பளிப்பது, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை உமிழ்வது என தொடர்ந்து மதவாத நஞ்சை விதைக்கும் இந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித்துறையில் தொடர இடம் அளிக்கக் கூடாது என நாடு முழுக்க கண்டனங்கள் வலுத்துள்ளன. இவரை நீக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 107 பேர் கையெழுத்திட்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். நீதிபதி என்று மக்களவையிலேயே அழுத்தம் திருத்தமாகப் பதிவு...

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்!   தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்! தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய நாகரீக உலகிலும் பல்வேறு வடிவங்களில் ஜாதியம் தலைதூக்கி நிற்கிறது. ஜாதிக் கயிறுகள், ஜாதிய குருபூஜைகள், ஜாதிய திருமண தகவல் மையங்கள், சமூக வலைதளங்களில் ஜாதி அடையாளத்தை வெட்கமின்றி ஒட்டிக்கொள்ளுதல் என ஜாதியை வலிமைப்படுத்தும் புதுவிதமான முயற்சிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. ஜாதிச்சங்கங்கள் இந்த வேலைகளை இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய ஜாதி வெறிச்செயல்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டிப்பதுடன், ஜாதிய நடவடிக்கைகளுக்கான எதிரான அரசின் உறுதியான சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, திராவிடர் விடுதலைக் கழகம் இந்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. தமிழ்நாடெங்கும் போராட்டத்திற்கு கழகத் தோழர்கள் தயாராகி வருவதுடன், “மனிதம் நம் அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பிலே போராட்ட நோக்கத்தை விளக்கி, பரப்புரைப் பயணங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த...

மனோஜ்குமார் – அஞ்சலி இணையேற்பு விழா!

மனோஜ்குமார் – அஞ்சலி இணையேற்பு விழா!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தந்தை பெரியார் பிரியாணி கடை உரிமையாளர் கழகத் தோழர். கி.சுப்பிரமணியன்- சாவித்திரி ஆகியோரின் மகன் மனோஜ்குமார் அவர்களுக்கும், திருச்சி மாவட்டம், மணப்பாறை பண்ணாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த வை.சுப்பிரமணி – பார்வதி ஆகியோரின் மகள் அஞ்சலி அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 16.11.2025- அன்று, ஞாயிற்றுக்கிழமை 11 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் சீதா திருமண மண்டபம் முதன்மை அரங்கத்தில் நடைபெற்றது. தி.மு.க. நெசவாளர் அணி மாநிலச் செயலாளர் சிந்து இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் க.நாத்திக ஜோதி வரவேற்புரையாற்றினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையுரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, கழகப் பொருளாளர். துரைசாமி, தலைமைக் கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வக்குமார், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், திராவிடர் விடுதலைக் கட்சி தலைவர் அன்பு மகேசு, அதிமுக...

“ஜாதி நமக்கு அவமானம்” ஈரோடு, கோவையில் தீவிர பரப்புரை!

“ஜாதி நமக்கு அவமானம்” ஈரோடு, கோவையில் தீவிர பரப்புரை!

ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 09.11.2025 ஞாயிறு மாலை பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் ‘ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமையேற்க, பரப்புரைச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகிக்க செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, விசிகவின் ஆற்றல், தலைமைக் கழகப் பேச்சாளர் .கா.சு வேலுச்சாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மமகவின் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது ஆகியோர் கருத்துரையாற்றினர். இராம. இளங்கோவன் கழக வெளியீட்டுச் செயலாளர், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி நிறைவுரையாற்றினார். பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பெரியார் குறித்த பாடலை பாட பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்கள்...

ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 09.11.2025 ஞாயிறு மாலை பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் ‘ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமையேற்க, பரப்புரைச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகிக்க செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, விசிகவின் ஆற்றல், தலைமைக் கழகப் பேச்சாளர் .கா.சு வேலுச்சாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மமகவின் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது ஆகியோர் கருத்துரையாற்றினர். இராம. இளங்கோவன் கழக வெளியீட்டுச் செயலாளர், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி நிறைவுரையாற்றினார். பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பெரியார் குறித்த பாடலை பாட பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்கள்...

கோவையில் தீண்டாமை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்! மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!

கோவையில் தீண்டாமை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்! மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!

திருப்பூர் வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் 03-11-2025 மாலை 5 மணி அளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : தீர்மானம் -1 டிசம்பர் 24 தலைவர் பெரியார் நினைவு நாளையொட்டி கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் மாபெரும் போராட்டத்தை நடத்துவது. அதற்கான சுவர் எழுத்து, சுவரொட்டி, சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதின் மூலமாக ஜாதியத் தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் நோக்கத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்வது அதன் வாயிலாக தோழர்கள் மற்றும் மக்களை அணி திரட்டுவது தீர்மானம்- 2 கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” ஆண்டு சந்தா மூன்று மாவட்டங்கள் இணைந்து மொத்தம் 500 சந்தாக்களை நவம்பர் 03 தேதி முதல் டிசம்பர்...

சிவகிரியில் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

சிவகிரியில் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

ஈரோடு தெற்கு மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிவகிரி பேரூராட்சி, அண்ணா கலையரங்கத்தில் 11.10..2025 சனிக்கிழமை அன்று மாலை 5:30 மணி அளவில் கழக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழிலன், முன்னாள் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர்செ. சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகச் செயல்பாட்டாளர் ஈரோடு நல்லதம்பி வரவேற்புரையாற்றினார். சிவகிரி பேரூராட்சித் தலைவர் பிரதீபா கோபிநாத், சிவகிரி தி. மு. க 10 வார்டு செயலாளர் தண்டாம்பாளையம் தா. கு. அன்பரசு, சமூக நீதி மக்கள் கட்சித் தலைவர் வடிவேல்ராமன், ஆதித்தமிழர் பேரவை மாநில நிதிச் செயலாளர் பெருமாவளவன், மதிமுக ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் மு. கோபால், திகஒன்றிய பொறுப்பாளர் சிவகிரி சண்முகம், திராவிடர் எழுச்சிப் பேரவைத் தலைவர் சக்திவேந்தன், தமிழ்ப்...

பெரியார் பிறந்த நாள் விழாக்கள்!

பெரியார் பிறந்த நாள் விழாக்கள்!

கடலூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக 17.9.2025 காலை 9 மணி அளவில் கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தோழர்கள் பெரியார் சிவா, அறிவழகன், அருணாச்சலம் வழக்கறிஞர், குப்பசாமி, பெரியார் பிஞ்சு திராவிட மகிழன் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் தி.ச திருமார்பன் வழக்கறிஞர் மாநில அமைப்பு செயலாளர் வி சி க ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர்: பேராவூரணி பெரியார் சிலைக்கு தலைமைக்குழு உறுப்பினர் திருவேங்கடம் தலைமையில் ஒன்றியச் செயலாளர் உதயகுமார், தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் அறிவுச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பேராவூரணி நகர அமைப்பாளர் தா.கலைச்செல்வன் மாலை அணிவித்தார். தி.க மாவட்டச் செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், மதிமுக நகரச் செயலாளர் குமார், அதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன், காங்கிரஸ் நகரச் செயலாளர் பொன் நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு...

உணர்வலைகளில் மூழ்கிய சீர் விருது வழங்கும் விழா

உணர்வலைகளில் மூழ்கிய சீர் விருது வழங்கும் விழா

❖ சீர் விருது வழங்கும் விழா ஈரோடு மல்லிகை அரங்கில் 07-09-2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. ❖ விழா அரங்கத்திற்கு 100 மீட்டர் தூரத்திலிருந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணியை தோழர்கள் கொள்கை முழக்கத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ❖ விழா சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கி 9 மணிக்கு நிறைவடைந்தது. ❖ ஜாதி, மத எதிர்ப்பு இசைப் பாடல்கள் பாடி அரங்கத்தை சூடேற்றினர். உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தியது. “போராடடா” என்ற பாடலில் பார்வையாளர்களும் மேடைக்கு வந்து நடனமாடிய காட்சி உணர்ச்சி அலைகளைத் தட்டி எழுப்பியது. ❖ திருநங்கை நேகா குழுவினரின் QUEER நாடகம் அரங்கேறியது. பால்புதுமையினர் (LGBTQ) பற்றிய புரிதலை ஏற்படுத்தும் விதமாக நாடகம் அமைந்தது. ❖ வழக்கறிஞர் ப.பா மோகன் நாடகக் குழுவினரைப் பாரட்டி நினைவுப் பரிசினை வழங்கினார். கழகத் தலைவரைப் பாராட்டி வாழ்த்துரை ஆற்றினார். ❖ கழகத் தலைவர் கொளத்தூர் மணி பற்றிய...

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

சென்னை: கழகம் 14-ம் ஆண்டு துவக்க விழா சென்னை மாவட்டக் கழகம் சார்பில் இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவு படிப்பகத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கொடியோற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கழகத் தோழர்கள் தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்),வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), ம.கி எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ப.அருண்( இளைஞரணி அமைப்பாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வடசென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), த.நா சூர்யா (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் தோழி, குறளரசி மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 12.08.2025 மாலை 5.00 மணியளவில் கோனூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து...

ஈரோட்டில் ஜாதிமறுப்பு இணையர்கள் ஒன்றுகூடல்;  மாவட்டக் கழகம் முடிவு

ஈரோட்டில் ஜாதிமறுப்பு இணையர்கள் ஒன்றுகூடல்; மாவட்டக் கழகம் முடிவு

ஈரோடு தெற்கு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 10.8.25 அன்று ஞாயிற்றுக்கிழமை, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு மதிமுக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். எழிலன்( மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஈரோட்டில் ஜாதி மறுப்பு இணையர்களின் ஒன்று கூடல் நிகழ்வை முழு நாள் நிகழ்வாக நடத்துவது என்றும், தமிழ்நாடு முழுவதும் இருந்து ஜாதி மறுப்பு இணையர்களை அணிதிரட்டுவது என்றும், சிறப்பு அழைப்பாளர்களாக தலைவர் பொதுச் செயலாளர் உள்ளிட்டோரை அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கிருஷ்ணன், குமார், ஆசிரியர் சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கார்மேகம், நல்லதம்பி, சசிக்குமார் போதி சத்துவா, விருதுநகர் செந்தில், வீரப்பன்சத்திரம் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். * 10.08.2025 அன்று கழக செயல்பாடுகளை இணையத்தில் தொடர்ந்து கவனித்து வந்த தோழர் ந.கெளரி சங்கர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்....

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக 15-07-2025 மாலை 4 மணி அளவில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் மாநகரச் செயலாளர் மாதவன் முன்னிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கல்விக் கண் திறந்த காமராசர் அவர்களின் 123 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உரிமைப் பாதுகாப்புப் பரப்புரைப் பயணம் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலும், அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகிலும் காமராஜர் செய்த அரும்பணிகள் குறித்து மக்களிடத்தில் எடுத்துரைக்கும் விதமாக தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்வில் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத்தலைவர் முகில் ராசு, ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செல்வன்,மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, சரஸ்வதி,தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மற்றும் கழகத் தோழர்கள் ராஜசிங்கம்,ஸ் ரீஜா, ஆத்துப்பாளையம் மதன், முத்து...

பாராட்டத்தக்க முயற்சி!  பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

பாராட்டத்தக்க முயற்சி! பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

ஆசிரியர் சிவகாமி முன்னெடுப்பில் புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஒரு வருட செயல் திட்டமாக மாதம் 500 ரூபாய் நிதி பங்களிப்பு செய்வதாக தீர்மானித்து செயல்பட்டு வருகிறது. முதல் தவணையாக ஜூன் மாதம் ரூ.8000 வழங்கியள்ளனர். குழுவில் இணைந்து ஒரு வருடத்திற்கு வளர்ச்சி நிதி வழங்க விருப்பமுள்ள தோழர்கள் தகவல் தெரிவிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். பெரியார் முழக்கம் 26062025இதழ்

குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!

குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!

கடந்த 20 ஆண்டுகளாக கழக மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் மீது பொய்யாக சரித்திர குற்றவாளி பதிவேட்டை கோபி காவல் துறையினர் பராமரித்து வருகிறார்கள், அதனால் தான் பெரும் அவதிக்கு ஆளாகியிருப்பதாகவும், தன்னுடைய தனி மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தன் மீது கடுமையான குற்றப் பின்னணி எதுவும் கிடையாது, நான் விடுதலைப் புலிகளை ஆதரித்த காரணத்திற்காகவும், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “இனி என்ன செய்யப் போகிறோம்” என்ற குறுந்தகடு வெளியிட்டதற்காகவும் என் மீது வழக்கு பதியப்பட்டு சுமார் மூன்றரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். 2009-ஆம் ஆண்டு ஈரோடு மாநகரில் உள்ள ஒரு கோயில் மேல் மேம்பாலம் கட்டக்கூடாது என்று இந்து முன்னணியினர் உண்ணாவிரதம் இருப்பதை எதிர்த்து, நானும் கழகத்தினருடன் இணைந்து உண்ணும் விரதம் மேற்கொண்டதற்காக ஈரோடு போலீசாரால் வழக்கு பதியப்பட்டு அதற்காக 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். 2006 ஆம்...

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

கோவை: சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 135-வது பிறந்தநாளில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் நவீன் அவர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனர். பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் டெம்போ சிவா, திவிக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், திவிக கோவை மாநகரச் செயலாளர் வெங்கட், திவிக கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், முன்னாள் கோவை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் மதிவாணன், தமிழ்ப்புலிகள் தோழர்கள் தம்பி செந்தில், கோவை குமார், ராமகிருஷ்ணன், திவிக தோழர்கள் ஸ்டாலின், மாதவன், நிலவழகன், ராமகிருஷ்ணன், கீர்த்தீகா, அபிலேஸ் பாண்டியன் மற்றும் மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதியாக ரத்தினபுரி பகுதி திவிக பொறுப்பாளர்...

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

கோவை: காஞ்சி விஜயேந்திர சங்கராச்சாரி அரசியல் சட்டத்திற்கு எதிராக இன ஒதுக்கல் பேசியதைக் கண்டித்து கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு, கழகத்தின் கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் இரவிக்குமார், தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் இளவேனில், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், Cpi ml ரெட் ஸ்டார் இனியவன், மக்கள் அதிகாரம் கணேஷ், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிக்குமார் மற்றும் தோழமை அமைப்பினரும், திராவிடர் விடுதலைக் கழக மாநகரச் செயலாளர் வெங்கட், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாதவன், சதீஷ், ஸ்டாலின் ராஜா, மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், கௌதம், கதிரவன் கலந்து கொண்டனர். நாமக்கல்: குமாரபாளையம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாலை...

சனாதன-ஜாதி எதிர்ப்புக் கூட்டங்களுடன்  கழகம் எடுத்த அம்பேத்கர் விழாக்கள்!

சனாதன-ஜாதி எதிர்ப்புக் கூட்டங்களுடன் கழகம் எடுத்த அம்பேத்கர் விழாக்கள்!

சென்னை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, 14-04-25 காலை 9:30 மணியளவில், அடையார் அம்பேத்கர் மணி மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 10:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் மயிலாப்பூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது… மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், கழக இளைஞரணி அமைப்பாளர் ப.அருண ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். தென்சென்னை காலை 8 மணிக்கு, சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு, தோழர்கள் மாலை அணிவித்து, கொள்கை முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “அம்பேத்கருக்கு இந்துமதச் சாயம் பூசும் அவதூறுகளுக்கு மறுப்பு” நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வை திவிக தென்சென்னை மாவட்ட...

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும், அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று ‘பெரியார் பணி செய்வதே என் கடன்’ என்ற லட்சிய வெறியோடு ஒரு வாரகாலம் பயணித்த கழகச் செயல் வீரர்களை இம்மாநாடு பாராட்டுகிறது, மகிழ்கிறது.இந்தப் பயணத்தில் தோழர்கள் செலுத்திய உழைப்பு வீண் போகாது; வரலாற்றில் பதியப்படும் என்று இந்த மாநாடு பெருமை அடைகிறது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

சென்னை பரப்புரைக் குழு: கிழக்கு தாம்பரம் வால்மீகி நகரில் சங்கராச்சாரியார் படத்தை சட்டைப் பையில் வைத்திருந்த வெங்கடேஷ் என்ற புதிய ஆதரவாளர் பரப்புரை பயணத்தைக் கூர்ந்து கவனித்து கூட்டம் முடிந்ததும் தோழர்களுக்கு தேநீர் வாங்கி கொடுத்தார். மேலும், “நான் ஆன்மிகவாதிதான். ஆனால் பக்தி வேறு அரசியல் வேறு” என்றும், “எனக்குப் பெரியாரை பிடிக்கும். பெரியார் இல்லை என்றால் நான் இன்றைக்கு இந்த டிராவல்ஸ் தொழிலை வைத்திருக்க முடியாது” என உணர்ச்சி பொங்க கூறினார். “இன்றைக்கு சீமான் போன்ற ஆட்கள் பெரியாரைப் பற்றி அவதூறு பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் இந்த மாறி அயோக்கியனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துங்கள். பெரியார் இல்லை என்றால் இன்றைக்கு கல்வி கற்க முடியமா தமிழர்கள்” என்றும் கூறினார். அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பரப்புரை வாகனத்திற்கு பெட்ரோலை கேனில் தர மறுத்தனர். வெங்கடேஷ் அவர்கள் சென்று கழகப் பிரச்சார ஜெனரேட்டர்க்கு 610 ரூபாய்க்கு பெட்ரோல்...

பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…

பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…

பெரியார் ஏன் எதிரிகளைப் பதறவைக்கிறார்? பரப்புரைப் பயணம் கடந்த 15-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது 16-ஆம் தேதி ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடங்கியது. கழக செயல் வீரர்கள் தனி வாகனங்களில் பயணத்தில் பங்கேற்கிறார்கள். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கழக செயல் வீரர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த பரப்புரையில் இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். கழக நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பெரியாரின் எதிர்நீச்சல் அவர் உருவாக்கிய சமூக மாற்றங்களைக் கழகப் பேச்சாளர்கள் மக்களிடம் எடுத்துக் கூறுகிறார்கள். கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. பயணங்களின் செய்தித் தொகுப்பு சென்னை: “பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” எனும் தலைப்பில் சென்னை அணி செல்லும் பரப்புரைப் பயணத்தின் தொடக்க விழா,இராயப்பேட்டையில் 15.03.2025 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் சிறப்புரையாற்றி பரப்புரைப் பயணத்தை துவக்கி வைத்தார். திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.என்.துரை, 119-வது...

ஈரோடு வடக்கில் கலந்துரையாடல் கூட்டம்!

ஈரோடு வடக்கில் கலந்துரையாடல் கூட்டம்!

மாவட்ட தலைமை அலுவலகத்தில் 2.3.2025 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர். நிவாஸ் தலைமை வகிக்க மாநில வெளியிட்டுச் செயலாளர் தோழர். இராம. இளங்கோவன் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் 1: கடந்த 22 2.2025 கோபி ஒன்றிய கழகத்தின் சார்பாக நடைபெற்ற ‘பெரியார் எனும் பெரும் நெருப்பு’ கருத்தரங்கு வரவு செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டு தோழர்கள் வசம் கணக்கு ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வை சிறப்பாக நடத்திய தோழர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. தீர்மானம் 2: வருகின்ற 16 /3/2025 அன்று தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பரப்புரைப பயணம் தொடங்க இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக ஈரோட்டில் தொடங்க இருக்கும் பரப்புரைப் பயணத்தில் மாவட்டக் கழகத்தின் சார்பாக கலந்து கொள்வது எனவும், பயணக் குழுவோடு ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தோழர்கள் இணைந்து பயணிப்பது எனவும்...

“பெரியார் எனும் பெருநெருப்பு” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

“பெரியார் எனும் பெருநெருப்பு” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

கோபி: ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கடந்த 22.02.2025 சனிக்கிழமை மாலை கோபியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான் தியாகசீலர் சி.எஸ்.எஸ் அரங்கத்தில் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்க நிகழ்விற்கு மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் அவர்கள் தலைமையேற்றார். ரூட்ஸ் தமிழ் கரிகாலன், பேரலை இந்திரகுமார் தேரடி, பேரலை மில்டன், அதர்மம் மனோஜ், யூ2 புரூட்டஸ் மைனர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியில் மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றிட அரங்கம் நிறைந்த கோபி பெருமக்களால் கருத்தரங்கம் நிறைவு பெற்றது. நிகழ்வில் கழகத்தோழர்கள், பொதுமக்கள், மாற்று அரசியல் கட்சியினர், இயக்கத்தோழர்கள் என பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 06032025இதழ்

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய அரசு தமிழ்நாட்டின்‌ பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்து தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் டெல்லியில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்‌ நடந்து முடிந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்‌ தமிழ்நாடடின்‌ முக்கிய நகரங்களில் பிப்.13 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பல்கலைக் கழக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த புதிய விதிகளில் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின்‌ நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆபத்து அடங்கியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி துண்டறிக்கை அச்சிடப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டன. கழகம்‌ ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு… சேலம்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் யூஜிசி விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 13.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்...

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

சேலம் மேற்கு: சேலம் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பறை முழக்கத்தோடு தொடங்கிய இந்நிகழ்விற்கு மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக மேட்டூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி, அறிவுமதி, தேன்மொழி, காயத்ரி ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தோழர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா கொள்கை முழக்கங்களை எழுப்ப.. தொடர்ந்து தோழர்கள் கொள்கை முழக்கங்களை எழுப்பினர். அதன் பிறகு தோழர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணி சமத்துவபுரம் பெரியார் சிலையில் தொடங்கி நங்கவள்ளி, மேட்டூர் RS, மேட்டூர், கொளத்தூர், காவலாண்டியூரில் நிறைவுபெற்றது. நங்கவள்ளி...

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

கோவை: மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து 12.9‌.2024 அன்று கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் வெங்கட் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், திமுக மாணவரணிப் பொறுப்பாளர் மதிவாணன், மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் மூர்த்தி, பெண்ணிய செயற்பாட்டாளர் லோகநாயகி, மாநகரத் தலைவர் நிர்மல்குமார், CPIML ரெட்ஸ்டார் இனியவன், புரட்சிகர இளைஞர் முன்னணிப் பொறுப்பாளர் மலரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் சூலூர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். முன்னதாக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில்...

ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று தர்மபுரி B.அக்ரகாரத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழகத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது. நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தர்மபுரி மாவட்டத் தலைவராக வெ.வேணுகோபால், தர்மபுரி மாவட்டச் செயலாளராக கு.நாகராஜ், மாவட்ட அமைப்பாளராக மா.பரமசிவம், பென்னாகரம் ஒன்றிய அமைப்பாளராக இரா.சரவணன் (B.அக்ரஹாரம்), காரிமங்கலம் ஒன்றிய அமைப்பாளராக கோ.செந்தில்குமார், நல்லம்பள்ளி ஒன்றிய அமைப்பாளராக மு.இராமதாஸ், தர்மபுரி ஒன்றிய அமைப்பாளராக பி.முத்துலட்சுமி, அரூர் ஒன்றிய அமைப்பாளராக பெருமாள், ஏரியூர் ஒன்றிய அமைப்பாளராக மா.அசோக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளராக சா.வையாபுரி ஆகியோரை நியமனம் செய்தார். சேலம் கிழக்கு: சேலம் கிழக்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று மாலை 6 மணியளவில் கருப்பூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில்...

“பாண்டியாறு – மோயாறு” இயக்கத்தினர் தலைவருடன் சந்திப்பு

“பாண்டியாறு – மோயாறு” இயக்கத்தினர் தலைவருடன் சந்திப்பு

கோபி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பளையத்திற்கு வருகைபுரிந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், பாண்டியாறு – மோயாறு இணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் கழக முன்னோடியுமான அக்ரி அ.நே.ஆசைத்தம்பி சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை ஆகிய 4 மாவட்டங்களில், உள்ள சுமார் ஒரு கோடி பொதுமக்களுக்கும், லட்சக்கணக்கான கால் நடைகளுக்கும், 5 இலட்சம் ஏக்கர் பயிர் சாகுபடிக்கும் பெரிதும் பயனளிக்கும் “பாண்டியாறு – மோயாறு” இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற கழகத்தின், ஆதரவு கோரியும், உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ள வலியுறுத்தியும் கோரிக்கை மனுவினை வழங்கினார். இந்தச் சந்திப்பில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்பாளர் நிவாஸ், அருளானந்தம் ஆகியோர் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

ரூ.5,000 வளர்ச்சி நிதி

ரூ.5,000 வளர்ச்சி நிதி

கோபி : ஓய்வுபெற்ற வேளாண் இயக்குநரும், கழக முன்னோடியுமான ஆசைத்தம்பி – கற்பகம் இணையரின் மகளான தமிழ்ப்பாவை – அருண் இணையருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனையொட்டி 28.07.2024 அன்று கோபியில் உள்ள அவரது இல்லத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். குழந்தை பிறந்ததன் மகிழ்வாக கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ. 5000/-யைக் கழகத் தலைவரிடம் வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

பெருந்துறை ஒன்றிய திவிக செயலாளர் தோழர் விசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று, மேட்டுப்புதூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விசுவின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

ஈரோடு வடக்கு : தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு விழா 26.05.2024 சத்தி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்விற்கு வழக்கறிஞர் தமிழரசன் தலைமை தாங்கினார். சத்தி ஒன்றிய செயலாளர் சிதம்பரம் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் செகதீஸ்வரன், மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் படிப்பகத்தை கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர் கிருட்டிணசாமி நன்றி கூறினார். இதில் கோபி, நம்பியூர், தூ.நா.பாளையம் மற்றும் சத்தி ஒன்றிய கழகத் தோழர்கள், பொதுமக்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

விஜயமங்கலம் விசு முடிவெய்தினார்

விஜயமங்கலம் விசு முடிவெய்தினார்

ஈரோடு வடக்கு : கழக பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயமங்கலம் விசு உடல்நலக்குறைவால் 11.05.2024 அன்று அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த தோழர் விசுவின் உடலுக்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வகுமார், வடக்கு மாவட்ட அமைப்பாளர் நிவாஸ், இரமேசு மற்றும் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். குறிப்பு : விஜயமங்கலம் விசு அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று காலை மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றுகிறார். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

குருவரெட்டியூர் மகேஸ்வரி காலமானார் பெண்கள் முன்னின்று இறுதி நிகழ்வுகளை செய்தனர்

குருவரெட்டியூர் மகேஸ்வரி காலமானார் பெண்கள் முன்னின்று இறுதி நிகழ்வுகளை செய்தனர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் குருவரெட்டியூர் தோழர் நாத்திகசோதி அவர்களின் இணையர் தோழர் மகேஸ்வரி அவர்கள் 13.03.2024 காலை மறைவுற்றார். அவரது கண்கள் ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக பெண் தோழர்கள் மறைந்த அம்மையாரின் உடலை சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது, சுடுகாடு வரை பெண்கள் வர கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து. மத, ஜாதிய சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தினர். இந்நிகழ்வு குருவரெட்டியூர் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் திராவிடர் கழக, திராவிடர் விடுதலைக் கழக, மாநில மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக மறைந்த தோழர் மகேஸ்வரி அவர்களின் பட திறப்பும் நினைவேந்தல்...

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பெரியாரின் 50-வது நினைவு நாள் பொதுக்கூட்டம், 24.12.2023 அன்று மாலை 6.00 மணிக்கு குருவரெட்டியூர் பெரியார் திடல், தோழர் பிரகலாதன் நினைவரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகசோதி கூட்டத்திற்கு தலைமை வகிக்க, வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். மறைந்த தோழர் பிரகலாதன் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். நிகழ்வின் தொடக்கத்தில் கோபி யாழ் திலீபன், அறிவுக்கனல் ஆகியோர் பாடல்கள் பாடினர். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமிக்கு அடுத்ததாகப் பேசிய, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், திராவிடம் – சனாதனம் குறித்து உரையாற்றினார். அப்போது, தோழர்கள் கழக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்ட இராம. இளங்கோவன், அதற்கு முன்னுதாரணமாக கழக நூல் வெளியீட்டு திட்டங்களுக்காக தனது தனிப்பட்ட நிதியாக ரூ. 3,00,000. (மூன்று இலட்சம் ) வழங்குவதாக அறிவித்து, தலைவர் கொளத்தூர்...

நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்

நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்

ஈரோடு வடக்கு : ஈரோடு வடக்கு மாவட்டக் கழக சார்பாக  03.12.2023  ஞாயிறு மாலை 04.30 மணியளவில் நம்பியூர் அஞ்சானூர் சமத்துவபுரத்தில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூடக்கரை கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக அமைப்பாளர் கோபி நிவாசு, நம்பியூர் ரமேசு ஆகியோர் தொடக்க  உரையாற்றினார். தொடர்ந்து தலைமைக் கழக பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அடுத்தக் கூட்டம் கூடக்கரையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடக்கரை பகுதி திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பு (எ) சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வக்குமார், கோபி அருளானந்தம், சத்தி முத்து, சித்தா பழனிச்சாமி, சின்னதம்பி, நம்பியூர் ஒன்றியச் செயலாளர் இரமேஷ், சிவராஜ், கூடக்கரை செல்வன், வழக்குரைஞர் தமிழரசன், பன்னீர் செல்வம், இராவணன், ராஜன் பாபு, குட்டி, புலவன்சிறை நடராஜன்,...

இந்தியா கூட்டணியை ஆதரித்து கோபியில் பரப்புரை

இந்தியா கூட்டணியை ஆதரித்து கோபியில் பரப்புரை

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.01.2024 அன்று கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோபி ஈசுவரமூர்த்தி தலைமை தாங்கினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு மற்றும் மேட்டூர் ராஜா அகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தாவை விரைந்து அனுப்புவது, பரப்புரைக் கூட்டங்கள் நடத்துவது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடர் விடுதலைக் கழகம் I.N.D.I.A கூட்டணியை ஆதரிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட செயல்பாடுகளுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் சதுமுகை பழனிச்சாமி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்பது தோழர்கள் அனைவரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டது. கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்...

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

காலை சிற்றுண்டி வழங்குவதன் காரணமாக பள்ளிக் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன என்ற வர்ணாசிரம திமிரோடு தலைப்பு செய்தி வெளியிட்ட தினமலம் நாளேட்டை கழகத் தோழர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். சென்னை : பள்ளி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தினமலம் நாளேடு அலுவலகம் அருகே இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலம் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை...

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை : சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக 21.08.2023 திங்கள் மாலை 5 மணிக்கு கோடம்பாக்கம் மார்கெட் அருகிலும், மாலை 7 மணிக்கு தர்மாபுரம் மாரியம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 செவ்வாய் மாலை 5 மணிக்கு, மடுவாங்கரை புதியத் தெருவிலும் இரவு 7:30 மணிக்கு, பழைய பூந்தமல்லி சாலை, கங்கை அம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஜாபர்கான்பேட்டை, கங்கையம்மன் கோயில் அருகிலும், மாலை 7 மணி ஜோன்ஸ் சாலை சாரதி நகர் சந்திப்பிலும், 24.08.2023 வியாழன் அன்று மாலை 5.30 மணிக்கு ஜோன்ஸ் சாலை கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவிலும், மாலை 7.30 மணிக்கு சைதாப்பேட்டை, குயவர் வீதியிலும், 25/08/2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகிலும், மாலை 7.30 மணிக்கு அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகிலும், 26.08.2023 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையிலும்,...

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டங்கள் சென்னை மாவட்டக் கழகம் சார்பாக இரண்டாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது பின்வருமாறு :- ஜுலை 15-ஆம் தேதியன்று ராயப்பேட்டை இலாயிட்ஸ் காலனி மற்றும் வி.எம்.தெருவிலும், ஜுலை 17-ஆம் தேதியன்று இராயபேட்டை பகுதிகளில் உள்ள கொலைகாரப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பெருமாள் கோயில் வீதியிலும், ஜுலை 18-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் NKT பள்ளி அருகில் மற்றும் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் சாலையிலும், ஜுலை 19-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் இஸ்ஸபா தெரு மற்றும் ஷேக் தாவூத் தெருவிலும் ஜூலை 20-ஆம் தேதியன்று மீசார்பேட்டை மார்கெட் மற்றும் ஜாம் பஜார் சிட்டிபாபு சாலையிலும், ஜுலை 21-ஆம் தேதியன்று திருவல்லிக்கேணி மாணிக்கவாசகம் தெரு மற்றும் தேவராஜ் தெருவிலும் ஜுலை 22-ஆம் தேதியன்று ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி அருகில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள மக்கிஸ் கார்டனிலும் நடைபெற்றது. நாத்திகன் – உமாபதி குழுவின் அரசியல்...

ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் மாநாட்டு நிதி!

ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் மாநாட்டு நிதி!

முதல் தவணையாக கழகத் தலைவரிடம் வழங்கினார்கள் ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக வருகின்ற  ஏப்ரல் 29, 30 சேலத்தில் நடைபெறும் இது தமிழ்நாடு! இளைய தலைமுறை யின் எச்சரிக்கை மாநாட்டிற்காக கழகத் தோழர்கள் ஈரோடு வடக்கு மாவட்டத் திற்கு உட்பட்ட கோபி, கொளப்பலூர், காசிபாளையம், அளுக்குளி, அந்தியூர், குருவரெட்டியூர், பவானி ஆகிய பகுதிகளில் கழக ஆதராவாளர்களிடம் துண்டறிக்கை அளித்தல் மற்றும் நன்கொடை திரட்டும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டனர்.  மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் மாவட்ட தலைவர் நாத்திகசோதி, மாவட்ட செயலாளர் எலத்தூர் செல்வக்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இரமேசு, அழகிரி, கிருஷ்ணமூர்த்தி, இராவணன், அருளானந்தம், வேணுகோபால், வீரகார்த்திக், சுந்தரம், வினோத், வேலுச்சாமி, கருப்பணன், சுப்பிரமணியம், ரகுநாதன், மூர்த்தி, நிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடை திரட்டும் பணியில் இணைந்து செயல்பட்டனர். அவ்வாறு நன்கொடையாக பெறப்பட்ட மாநாட்டு நிதியை முதல் தவணையாக ரூ. 1,00,000 (ஒரு லட்சம்...

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

ஏப். 29, 30 தேதிகளில் கழக மாநாட்டுப் பணிகளில் கழகச் செயல் வீரர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளனர். கோவை : கோவை மாவட்டக் கழகத்தினர் ஏப்ரல் 8-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வ.உ.சி மைதானத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டலக்குழுத் தலைவர் கதிர்வேல், மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் நா.மாலதி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.ஆ.ரவி, வடவள்ளி சண்முகசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்கள். கலந்து கொண்டோர்: தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருட்டிணன், வெங்கட், மாதவன் சங்கர், துளசி, நிலா. ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது. பொள்ளாச்சி : கழக மாநாட்டு விளக்க தெருமுனைக்...

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய “பெண்கள் சந்திப்பு” நிகழ்வு 5.2.2023 ஞாயிறு அன்று ஈரோடு பிரியாணிபாளையம் உணவக அரங்கில் நடைபெற்றது. ஈரோடு மணிமேகலை நிகழ்விற்கு தலைமையேற்று சுவையான கவிதை நடையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திருப்பூர் கார்த்திகா வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்கவுரையாற்றினார். பெரியார் தனது இயக்கத்தில் பெண்களுக்கு அளித்த முக்கியத்துவம் பற்றியும் பெரியார் நடத்திய மாநாடுகளில் தொடக்க உரையாகவோ கொடியேற்றி தொடங்கி வைப்பவராகவோ கட்டாயம் ஒரு பெண் தோழர் இருக்கும் படி பார்த்துக் கொண்டார் என்பதையும் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் இயக்கங்கள் தங்களது பணியை சிறப்பாக செய்ய முடியும் என்பதை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து ‘அம்பேத்கரும் பெரியாரும்’ என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, ‘மூடநம்பிக்கைகளை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, ‘பெண் கல்வியும் தமிழ்நாடும்’ என்ற தலைப்பில் கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர்...

மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள் எழுச்சி நடை சேலம் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள், கழக ஏட்டுக்கு  ரூ. 2,48,500 சந்தாத் தொகை

மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள் எழுச்சி நடை சேலம் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள், கழக ஏட்டுக்கு  ரூ. 2,48,500 சந்தாத் தொகை

சேலம் : சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.01.2023 வியாழன் காலை 10.00 மணியளவில் கொளத்தூர் எஸ்.எஸ். மஹாலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.  கலந்துரையாடல் கூட்டம் கடவுள் மறுப்பு – ஆத்மா மறுப்புடன் தொடங்கியது. கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில் சேலம் மேற்கு மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டிற்கான ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தா இதுவரை 475 ஆண்டு சந்தாக்களும், 84 ஐந்தாண்டு சந்தாக்களும் பெறப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள சந்தாக்களை விரைவில் முடித்து கொடுக்க வேண்டுமாய் தோழர்களிடம் கேட்டுக் கொண்டார். (கிழக்கு மாவட்ட சந்தாக்களையும் சேர்த்து ரூ.2,48,500/- வழங்கப்பட்டது) தொடர்ந்து பேசிய கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், “தமிழ்நாடு அரசு நமது இயக்க செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறதென்றும், தோழர்கள் அனைவரும் நமது இயக்க ஏடான (புரட்சிப் பெரியார் முழக்க’த்தை முழுமையாகப் படிக்க...