Category: இராமநாதபுரம்

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

தியாகி இம்மானுவேல் பேரவைச் செயலாளர் சந்திரபோசு இல்ல ஜாதி மறுப்பு மண விழாக்கள்

தியாகி இம்மானுவேல் பேரவைச் செயலாளர் சந்திரபோசு இல்ல ஜாதி மறுப்பு மண விழாக்கள்

21-4-2018 சனிக்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு, இராமநாதபுரம் மாவட்டம், பரமக் குடி, லேனா மகாலில், தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செயலாளர் சந்திர போசு-சரசுவதி இணையரின் மகன் களான ச.ச.அனீசு குமார், அம்பேத்ராஜ் ஆகியோருக்கு, ஜாதி, சடங்கு, தாலி மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறிட, ஆணவக் கொலையில் தனது இணையர் சங்கரைப் பறிகொடுத்த உடுமலை கவுசல்யா மாலைகளை எடுத்துக் கொடுக்க நடந்தேறியது. விழாவின் சிறப்பாக – திருமண முறை, பெண்ணுரிமை, ஜாதியொழிப்பு குறித்த கட்டுரைகள் அடங்கிய  ‘தமிழ்த்தேசிய விடுதலைக்கான வாழ்வியல் பண்பாடு’ எனும் நூல் வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசிய முன்னணி பொழிலன், தமிழ்த்தேச விடுதலை முன்னணி மீ.த.பாண்டியன், கிருஷ்ணஜோதி ஆகியோர்  இணையேற்பு விழா விளக்கவுரையாற்றினர். விழாவினை தியாகி இமானுவேல் பேரவையின் இளைஞரணிச் செயலாளர் புலி.பாண்டியன் தொகுத்து...

தோழர் சந்திரபோசு குடும்ப இணையேற்பு விழா ! பரமக்குடி 21042018

தோழர் சந்திரபோசு குடும்ப இணையேற்பு விழா ! பரமக்குடி 21042018

தோழர் சந்திரபோசு குடும்ப இணையேற்பு விழா ! 21-4-2018 அன்று காலை 10-00 மணிக்கு, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, லேனா மகாலில், தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச்செய்லாளர் சந்திர போசு-சரசுவதி இணையரின் மகன்களான ச.ச.அனீசுகுமார், அம்பேத்ராஜ் ஆகியோருக்கு, ஜாதி,சடங்கு,தாலி மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்துர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகத்தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத்துணைநல ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறிட, ஆணவக்கொலையில் தனது இணையர் சங்கரைப் பறிகொடுத்த தோழர் உடுமலை கவுசல்யா மாலைகளை எடுத்துக் கொடுக்க இணையேற்பு விழா நடந்தேறியது. விழா சிறப்பாக திருமண முறை, பெண்ணுரிமை, ஜாதியொழிப்பு குறித்த கட்டுரைகள் அடங்கிய ‘தமிழ்த்தேசிய விடுதலைக்கான வாழ்வியல் பண்பாடு’ எனும் நூல் வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசிய முன்னணியின் தோழர் பொழிலன், தமிழ்த்தேச விடுதலை முன்னணியின் தோழர் மீ.த.பாண்டியன்,தோழர் கிருஷ்ணஜோதி ஆகியோர் இணையேற்பு விழா விளக்கவுரையாற்றினர். விழாவினை தியாகி இமானுவேல் பேரவையின் இளைஞரணிச் செயலாளர் புலி.பாண்டியன் தொகுத்தார் பல்வேறு அரசியல்,...