Category: செங்கல்பட்டு

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

சிலை உடைப்பைக் கண்டித்து பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

சிலை உடைப்பைக் கண்டித்து பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் களியப்பேட்டை கிராமத்தில் உள்ள  பெரியார் சிலை 23.01.2020 அன்று இரவு மர்ம நபர்களால் மர்மமான முறையில்  உடைக்கப்பட்டது. பெரியாரின் சிலை உடைப்பைக்  கண்டித்து செங்கல்பட்டு பேருந்து நிலையம் எதிரில், செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில், மர்ம நபர்களை கைது செய்யக்கோரி மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், செங்கல்பட்டு மாவட்ட கழகத் தோழர்கள் மற்றும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30012020 இதழ்