ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக ஓயாது பரப்புரை!

ஆகஸ்ட் 01: விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் மதக் கலவரத்தை தூண்டும் சங் பரிவார் அமைப்புகளைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் காவல்துறையிடம் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 03: சேலம் மாவட்டம் மேச்சேரியில் இளைஞர் அணி சார்பில் பெரியார் என்னும் பெரு நெருப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மில்டன், யூ2புரூடஸ் மைனர், இந்திரகுமார் தேரடி கருத்துரை வழங்கினர். கழகத் தலைவர் நிறைவுரையாற்றினார்.

ஆகஸ்ட் 06: ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும், கவின் படுகொலைக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தரக்கோரியும் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 08: குடியாத்தத்தில் குடிஅரசு மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. ஜாதி மறுப்பு மற்றும் விதவை மறுமணம் செய்துகொண்ட இணையர்கள் இந்நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர். கழகத்தலைவர் சிறப்புரையாற்றினார்.

ஆகஸ்ட் 09: சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் படத்திறப்பு நிகழ்ச்சி தேவநேயப் பாவாணார் அரங்கத்தில் நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படத்தைத் திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி 5 ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு நினைவேந்தல் உரையாற்றினார்.

ஆகஸ்ட் 11: சென்னை ரிப்பன் மாளிகை முன்பு நடைபெற்ற தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு தபசி குமரன் தலைமையில் கழகத் தோழர்கள் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 12-14: சென்னையில் ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!’ என்ற தலைப்பில் 3 நாட்கள் தொடர் பிரச்சாரம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 12-14: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!’ என்ற தலைப்பில் 2 நாட்கள் தொடர் பிரச்சாரம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 16: ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 17: சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள கே.வி.ஆர். திருமண மண்டபத்தில் ‘பெரியார் என்னும் பெருநெருப்பு’ கருத்தரங்கம் மாநாடு போல நடைபெற்றது. வழக்குரைஞர் திருமூர்த்தி, மில்ட்டன், மைனர், இந்திரகுமார் தேரடி, கரிகாலன், ‘லவுட் ஸ்பீக்கர்’ ஸ்ரீநிதி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

ஆகஸ்ட் 24: எஸ்.வி.ராஜதுரையின் Periyar: Caste, Nation and Socialism நூலின் அறிமுக விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அன்பகத்தில் நடைபெற்றது. ஏ.எஸ்.பன்னீர்செல்வன், டெல்லியைச் சேர்ந்த வித்யா பூஷன் ராவத், முனைவர் கார்த்திக் ராம் மனோகர், ஆந்திர திராவிடப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம் ஆகியோர் விரிவாக உரை நிகழ்த்தினர்.

ஆகஸ்ட் 23- 25: சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!’ என்ற தலைப்பில் 3 நாட்கள் தொடர் பிரச்சாரம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 27: திருப்பூர் மாஸ்கோ நகரில் இந்து முன்னணி சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை கழகத் தோழர்கள் முயற்சியால் அகற்றப்பட்டது.

செப்டம்பர் 01- 10: சென்னை மாவட்ட இளைஞர் அணி சார்பில் ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!’ என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் பிரச்சாரம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சி, நையாண்டி நிகழ்ச்சி, 20க்கும் மேற்பட்ட பேச்சாளர்களின் உரை வீச்சு என பெரிதும் கவனம் ஈர்த்தது இப்பரப்புரை.

செப்டம்பர் 2- 3: ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் 2 நாட்கள் தொடர் பிரச்சாரம் நடைபெற்றது.

செப்டம்பர் 07: ஈரோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தலைமைக்குழு கூடியது. செப்டம்பர் 17 முதல் டிசம்பர் 24 வரை தமிழ்நாடெங்கும் ஜாதி எதிர்ப்பு பரப்புரையை தீவிரமாக மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் 07: ஈரோடு மல்லிகை அரங்கில் சீர் வாசகர் விருது விழா நடைபெற்றது. குடிஅரசு தொகுப்புப் பணிக்காக கழகத் தலைவருக்கு சீர் விருதுடன், ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. கழகத் தலைவர் குறித்து மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு, கழகத் தோழர்களை உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்த்தியது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் ராஜஸ்தானி உணவகம் ஒன்று தமிழில் பெயர்ப்பலகை வைக்காததைக் கண்டித்து கழகத் தோழர்கள் இருமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணையை நாங்களே நிறைவேற்ற நேரிடும் என எச்சரித்ததை அடுத்து, பெயர்ப்பலகையில் தமிழ்ப்பெயரும் சேர்க்கப்பட்டது.

செப்டம்பர் 14: ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சத்யா, மைனர், இந்திரகுமார் தேரடி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

செப்டம்பர் 17: பெரியார் பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டையில் ‘மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நடிகர் சத்யராஜ், வழக்குரைஞர் ப.பா.மோகன், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். 20-க்கும் மேற்பட்ட ஜாதி மறுப்பு இணையர்களுக்கு நடிகர் சத்யராஜ் நினைவுப்பரிசு வழங்கினார்.

செப்டம்பர் 19: காசா மீதான போரை நிறுத்தக்கோரி இஸ்ரேலை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை புதுப்பேட்டையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கழகத்தோழர்கள் பங்கேற்றனர்.

செப்டம்பர் 23: தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் பெரியாரின் 147-வது பிறந்தநாளையொட்டி, ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் நிறைவுரையாற்றினார்.

செப்டம்பர் 28: கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய இளைஞர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. பால்.பிரபாகரன், ஆசிரியர் சிவகாமி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். சிற்பி ராசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.

* ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ என்ற தலைப்பில் குமாரபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கேப்டன் அண்ணாதுரை, கோபி வேலுச்சாமி ஆகியோர் உரையாற்றினர். சிற்பி ராஜனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.

அக்டோபர் 04: திருச்சியில் பெரியார் என்னும் பெருநெருப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திரகுமார் தேரடி, மைனர், ராஜீவ் காந்தி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

அக்டோபர் 05: ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ என்ற தலைப்பில் திருப்பூரில் ஒரே நாளில் 11 கூட்டங்கள் நடைபெற்றன.

அக்டோபர் 10: ஆனைமுத்து நூற்றாண்டு விழா மலர் வெளியீட்டு நிகழ்ச்சி அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் வாலாசா வல்லவன் தலைமையில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் மலர் வெளியிட்டார். ஆ.ராசா, விடுதலை இராசேந்திரன், கு.ராமகிருஷ்ணன், செந்தலை கவுதமன், சுப.வீ ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

அக்டோபர் 11: ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு வீரமணி, மைனர், இந்திரகுமார் தேரடி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

அக்டோபர் 15, 16: திருவண்ணாமலையில் ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ என்ற தலைப்பில் 8 இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன.

நவம்பர் 08: திமுகவின் பவள விழாவை அக்கட்சியின் இளைஞர் அணி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழாவாகக் கொண்டாடியது. அதன் ஒரு அங்கமாக நடைபெற்ற முற்போக்கு புத்தகக் காட்சியில் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் பங்குபெற்றது. 9 நாட்கள் நடைபெற்ற இப்புத்தகக் காட்சியில் ரூ.82,000-க்கு கழக நூல்கள் விற்பனையாகின.

நவம்பர் 09: அறிவுத்திருவிழாவின் அங்கமாக நடைபெற்ற “இருவண்ணக் கொடி வயது 75” இருநாள் கருத்தரங்கின் இறுதி அமர்வில், ‘கருஞ்சட்டைக் கழகமும் கருப்பு சிவப்புக் கழகமும்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.

* ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பவானியில் “மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. நாத்திக சோதி, கோபி வேலுச்சாமி, நாமக்கல் சாமிநாதன், இராம.இளங்கோவன் உள்ளிட்டோர் உரையாற்றினர். சூலூரில் ‘மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் துரைசாமி, பரிமளராசன், நிர்மல், வெங்கட், திருப்பூர் முத்து ஆகியோர் உரையாற்றினர்.

நவம்பர் 14: ஆஸ்திரேலியா தமிழ் கலை மற்றும் கலாச்சார இயக்கம் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் பேராசிரியர் சரசுவதி ஆகியோருக்கு அடிலெய்டில் பாராட்டு விழா நடைபெற்றது.

நவம்பர் 26: கோவை, திருப்பூர், மேட்டூர், சென்னை ஆகிய பகுதிகளில் சட்ட எரிப்பு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவுகூர்ந்து பலர் உரையாற்றினர்.

நவம்பர் 27: சேலம் கொளத்தூரில் தமிழீழப் போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாவீரர் நாள் உரை நிகழ்த்தினார்.

* ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் தமிழ்தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நவம்பர் 29: சேலத்தில் ‘, மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ பரப்புரைக் கூட்டம் ஒரே நாளில் 4 இடங்களில் நடைபெற்றது.

டிசம்பர் 07: கோவையில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி ஈரோடு வடக்கு மாவட்டம் சித்தாரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. நாத்திக சோதி, கோபி வேலுச்சாமி, இராம.இளங்கோவன் உரையாற்றினர்.

* திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைக் கண்டித்து கோபியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 08: கோவையில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி மயிலாப்பூர் பல்லக்கு மாநகரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. உமாபதி, தேன்மொழி, மைனர், புதுவை தீனா, விசிக சாரநாத் ஆகியோர் உரையாற்றினர்.திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைக் கண்டித்து சென்னை எழும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 09: திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைக் கண்டித்து திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 10: கோவையில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி மயிலாப்பூரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அன்பு தனசேகர், வழக்குரைஞர் திருமூர்த்தி, உமாபதி, ரவுத்திரா ஆகியோர் உரையாற்றினர்.

டிசம்பர் 11: மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் தீர்ப்பளித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைக் கண்டித்து மேட்டூரில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மைனர், கரிகாலன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

டிசம்பர் 13: கோவையில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், கணேசபுரம் ஆகிய 4 இடங்களில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. 20-க்கும் மேற்பட்டோர் உரையாற்றினர்.

டிசம்பர் 14: ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் வாராந்திர தெருமுனைக் கூட்டம் அம்மாபேட்டை பகுதியில் நடைபெற்றது. பெரியார், அம்பேத்கர் மற்றும் கழக களப்பணிகள் குறித்த காணொளிகள் திரையிடப்பட்டன. தாரமங்கலத்தில் சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ‘மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம் ’ பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெருந்திரள் மக்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

டிசம்பர் 15: கோவையில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி, ‘மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் வடசென்னையில் முழு நாள் பரப்புரை நடைபெற்றது.

டிசம்பர் 21: கோவையில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி, ‘மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் ஈரோடு வடக்கு மாவட்டம் குருவரெட்டியூரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. டிசம்பர் 24-இல் பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 24: ராயப்பேட்டையில் களப்பணியில் உயிர்நீத்த கண்ணன் – குமாரின் 20-ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தபசி குமரன், அன்பு தனசேகர், விசிக ரூதர் கார்த்திக், அறிவுமதி ஆகியோர் உரையாற்றினர். ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் பெரியாரின் நினைவுநாளில் இரத்தினசாமி, சண்முகப்பிரியன், செல்வராசு உள்ளிட்ட 13 தோழர்கள் உடல்தானம் பதிவு செய்தனர். கோவை ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி, ‘மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் மடத்துக்குளத்தில் 3 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

டிசம்பர் 26: ஏற்காடு மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் பெரியார் பெரியாரை நாம் தமிழர் கட்சி மறைத்ததை கண்டித்து, மீண்டும் பெரியார் பெயரை கழகத் தோழர்கள் எழுதி பதிலடி கொடுத்தனர்.

டிசம்பர் 29: கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாபெரும் ஜாதி ஒழிப்புப் போராட்டம் நடைபெற்றது. ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரியார் முழக்கம் இதழ்08012026

You may also like...