Category: சென்னை

`தொடரட்டும் தமிழ்நாட்டில் திமுக சாதனைகள்’ தேர்தல் பரப்புரை: திருப்பூர், சென்னை,சேலம் கழகத் தோழர்கள் தீவிரம்

`தொடரட்டும் தமிழ்நாட்டில் திமுக சாதனைகள்’ தேர்தல் பரப்புரை: திருப்பூர், சென்னை,சேலம் கழகத் தோழர்கள் தீவிரம்

திருப்பூர்: 15-02-2026 அன்று கழக தலைவர், கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர், தோழர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் மேட்டூரில் நடந்த தலைமைக் குழு கூட்டத்தில், விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளை நடை முறைப்படுத்துவது குறித்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் 19-02-2026 வியாழன் மாலை 4 மணியளவில் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர் அதன் அடிப்பைடையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி மாநகர , நகர, ஒன்றியப் பகுதிகளில் “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள்! திமுக அரசை உறுதி செய்வோம்!” என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக 50 இடங்களில் பரப்பரை செய்வது கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்க சந்தாவை இந்த மாத இறுதிக்குள் தலைமைக்கு அனுப்பி வைப்பது என முடிவு...

“நாம் தொப்புள் கொடி உறவுகள்’’            கழக மாநாட்டில் தோழர் நல்லகண்ணுவின் பேச்சு

“நாம் தொப்புள் கொடி உறவுகள்’’ கழக மாநாட்டில் தோழர் நல்லகண்ணுவின் பேச்சு

இந்த நல்ல வாய்ப்பைத் தந்த ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’த்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது பெரியார் ‘குடிஅரசு’ கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி. ஏற்கனவே 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை தந்தை பெரியார் திராவிடர் கழகம் 2003-ல் வெளியிட்டிருக்கிறது. தந்தை பெரியாருடைய சிந்தனைகள் மனித சமூகத்துக்கு மிகவும் அடிப்படையானவை. அந்த சிந்தனைகள், தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் மனித சமூகத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகள். அத்தகைய சிந்தனைகளினால் தந்தை பெரியார் வரலாறு படைத்தார். வரலாறு படைத்தது மட்டுமல்ல, வரலாறாகவே வாழ்ந்தார். எதிர்கால வரலாற்றுக்கும் அவர் வழிகாட்டியாக விளங்குகிறார். அதனால்தான் கட்சி வேறுபாடின்றி, நாம் அனைவரும் தந்தை பெரியாரை வணங்குகிறோம்; பாராட்டுகிறோம்; வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறோம். பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகை நடத்திய காலங்களில் – அதில் தொடர்ந்து பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த சிங்காரவேலர், ஜீவா, சாத்தான்குளம் ராகவன் போன்றவர்கள் அதில் தொடர்ந்து எழுதி வந்தார்கள். பகத்சிங் ஆங்கிலத்தில் எழுதிய “நான் ஏன் நாத்திகன்...

புதுவையில் சீமானை தோலுரித்த பெண்கள்

புதுவையில் சீமானை தோலுரித்த பெண்கள்

பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் பெண் உரிமைப் போராளி என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதுச்சேரி பெரியார் படிப்பகம் ராஜா நகரில் 25.01.2026 அன்று மாலை 6 மணிக்கு தோழர். ஆனந்தி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் லதா, விடுதலை கலைக்குழு மணிமேகலை, திராவிட மகிழ்நன் ஆகியோர் பெண்ணிய பகுத்தறிவு பாடல்களை பாடினார்கள்.இளவரசி சங்கர் ( பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), காயத்திரி ஸ்ரீகாந்த் (திமுக -புதுச்சேரி), அ.அனுசுயா (விசிக) ஆகியோர் கருத்துரையாற்றினர். கழகத் தோழர் இரண்யா சீமானின் கேலவமான அரசியலையும், நாதகாவின் பெண்கள் மீதான தாக்குதலும், தமிழ்த்தேசியம் எனும் பெயரில் தன்னுடைய சுயலாபத்திற்காக பெண்களைக் கேவலப்படுத்தும் சீமானை தோலுரிக்கும் விதமாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேடை பேச்சு முழுக்க தோழமை இயக்க முற்போக்கு பெண் தோழர்களே கருத்துரையாற்றினர். கருத்தரங்கத்தில் பெரியார் போராட்டத்தின் விளைவால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது பற்றிய உணர்வுபூர்வமான பல்வேறு செய்திகளை பெண் தோழர்கள் பகிர்ந்து...

நிமிர்வோம் வாசகர் வட்ட கருத்தரங்கு

நிமிர்வோம் வாசகர் வட்ட கருத்தரங்கு

நிமிர்வோம் வாசகர் வட்ட 30-வது சந்திப்பு கழகத் தலைமை அலுவலகத்தில் பிப்-7 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. திராவிட மொழிந்நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரின் படத்தினை திறந்து வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கரிகாலன் ஊடகவியலாளர் “ஈழத்தடிகளும், மறைமலையடிகளும் பெரியாரை எதிர்த்தார்களா?” என்ற தலைப்பில் பல வரலாற்றுச் செய்திகளையும், பார்ப்பன எதிர்ப்பில் தமிழ்தேசியம் போர்வையில் எப்படி செயல்படுவது என்பதையும் சைவ-வைணவ முரண்பாடுகள் என பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் “காந்தியடிகள் படுகொலை ஏன் இன்றும் பேசுபொருள்” என்ற தலைப்பில் காந்தியின் கொலை எப்படி நிகழ்ந்தது, கொலைக்கு பிறகு பெரியார் அகில இந்திய வானொலியில் பேசியது, காந்தியின் இறப்பை இன்றும் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் என பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தோழர் தமிழ் குமரன் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்....

புதுவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கு

புதுவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கு

புதுச்சேரியில், 3/2/26 அன்று மாலை 6 மணிக்கு, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் மற்றும் திராவிட இயக்க வேங்கைகள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. “1965- மொழிப்போராட்ட வரலாறு, பராசக்தி படத்தின் வாழும் சாட்சி” என்றத் தலைப்பில் பொள்ளாச்சி மா. உமாபதி (திமுக) மொழிப்போர் தியாகிகள் குறித்து பல வரலாற்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார். “தீ பரவட்டும்” என்ற தலைப்பில் இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) பேரறிஞர் அண்ணா செய்த சாதனைகளையும், தமிழ்நாட்டில் அண்ணாவின் தாக்கமும், அரசியலில் சுயமரியாதை இயக்கத் தொண்டனாக அவர் செய்த செயல்களையும் பட்டியலிட்டு உரையாற்றினார். கழகத் தோழர்கள் ப. அருண் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்), கடலூர் சிவா, திராவிட மகிழன், கு.குமார், த.யாழினி, சுகந்தன் (கொளத்தூர் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர்), அசோக் , உதயா ஆகியோர் கலந்துக் கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ்12022026.

கழக ஏட்டுக்கு சந்தா தோழர்கள் ஆர்வம்

கழக ஏட்டுக்கு சந்தா தோழர்கள் ஆர்வம்

சென்னையில் கடந்த சனவரி-13 அன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் திருவல்லிக்கேணி பகுதிக் கழகம் சார்பாக சந்தாவாக ரூ.30000 அருண் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) கழகத் தலைவரிடம் வழங்கினார். திருச்சி மாவட்டக் கழகம் சார்பில் தோழர் மனோகரன் (திருச்சி மாவட்டத் தலைவர்) 20 பெரியார் முழக்க சந்தாவுக்கான தொகை ரூ.6000 பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். வடசென்னை மாவட்டக் கழகம் சார்பில் சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) அவர்கள் முதற்கட்டமாக 25 சந்தா ரூ.7500-அய் பிரசாந்த் (புரட்சிப் பெரியார் முழக்கம் செய்தியாளரிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்) பெரியார் முழக்கம் இதழ்12022026.

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

தாம்பரத்தில் ம. கி. எட்வின் பிரபாகரன் (சென்னை மாவட்ட அமைப்பாளர்) அருண் கோமதி (தாம்பரம் நகர அமைப்பாளர்), குகன் ஆகியோர் முன்னிலையில், பிப்-8, மாலை 6 மணிக்கு, தாம்பரத்தில், தோழர்கள் கிரிஸ்டோ, பிரதீபா, மகேஷ் ஆகியோர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மதிமுக மூத்த தோழர் துரை. மணிவண்ணன் தலைமையில், தோழர்களின் கலந்துரையாடல் நடந்தது. “இயக்கம் என்றால் என்ன?” “இயக்கமாதலின் அவசியம், பயன், தேவை” குறித்து தோழர் துரை மணிவண்ணன் ஆற்றிய உரை, தோழர்களை உத்வேகமடையச் செய்தது. தோழர் எட்வின் “பெரியார் வாழ்ந்த காலச்சூழலில் இயக்கவியலின் தன்மையும், தற்போதுள்ள மாறுபட்ட சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு, இயக்க அணுகுமுறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள்” குறித்தும் பேசினார். அருண் கோமதி, “வாசிப்பின் அவசியம் குறித்தும், தாம்பரத்தில் தொடர்ச்சியான இயக்க செயல்பாடுகளின் தேவை” குறித்தும் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாநில சுயாட்சி மற்றும் சட்ட நுணுக்கங்களைப் பற்றி கிரிஸ்டோவும், பெண் விடுதலையிலும் ஜாதி ஒழிப்பிலும் பெரியார்...

அண்ணா சிலைக்கு மரியாதை

அண்ணா சிலைக்கு மரியாதை

பேரறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி, (3/2/26) காலை 10 மணிக்கு, பத்ரிநாரயாணன் நினைவுப் படிப்பகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று இராயப்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தோழர்கள் கொள்கை முழக்கமிட்டனர். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம. கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப. அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த. நா. சூர்யா, தோழர்கள் இரண்யா, மகிழவன், குமார், தேன்மொழி, லட்சுமணன், லீலா, துரைராசு, மனோஜ், வீரமுத்து, செய்தியாளர்‌ பிரசாந்த், சுகந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா

ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா

கழகத் தோழர்கள் ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா பிப்ரவரி-01 அன்று காலை 9 மணியளவில் மந்தைவெளியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இருவரும் இணைந்து திறந்து வைத்தனர். பேராசிரியர்.சரசுவதி, மயிலாடுதுறை இளையராசா (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இணையர்களின் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். பாரி.சிவக்குமார் நண்பரான தோழர் சக்திவேல் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை மாவட்டக் கழகம் சார்பில் பெரியார் அம்பேத்கர் படம் பரிசாக கழகத் தலைவர் அவர்கள் பாரி சிவா அவர்களிடம் வழங்கினார். கழகத் தோழர் குமரன் தன்னுடைய ஆட்டோவில் எழுதியிருந்த ” மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்ற பெரியார் வாசகத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை.இராசேந்திரன் பார்வையிட்டனர். இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன் | ந. தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், ஊடகவியலாளர் பிரகாசு,...

பாஜக முயற்சி முறியடிப்பு!

பாஜக முயற்சி முறியடிப்பு!

திருவல்லிக்கேணி பகுதி வி.பி ராமன் சாலையில் பெரியார் சிந்தனைப் பலகை அருகில் பாஜகவினர் இரவு நேரத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பத்தை வைக்க முற்பட்டனர். செய்தியறிந்த கழகத் தோழர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்து கொடிக் கம்பத்தை எடுக்க வைத்தனர். ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் சு.கோபிநாத், சே.ராஜேஷ், த.நா.சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் குமார், யாழினி ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

சனவரி-25 அன்று நடராசன் – தாளமுத்து உள்ளிட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு மூலக்கொத்தலம் நினைவிடத்திற்கு பேரணியாகச் சென்று, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர்கள் சேத்துப்பட்டு இராசேந்திரன், மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, ம. கி. எட்வின் பிரபாகரன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.வ. வேலு, இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், சுகுமார், இரண்யா, குறளரசி, துரை, சு. கோபிநாத் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

பெரியார் பற்றிய செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா! ஜீவாவின் வாழ்க்கை வரலாறுகளில் விடுபட்டது எப்படி?ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 12-கொளத்தூர் மணி

பெரியார் பற்றிய செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா! ஜீவாவின் வாழ்க்கை வரலாறுகளில் விடுபட்டது எப்படி?ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 12-கொளத்தூர் மணி

காந்தி ஆசிரமத் தலைவர் கும்பலிங்கம் அவர்களுடைய அறிக்கை கூறுகிறது, அந்த ஆசிரமம் 11.2.1926 அன்று தொடங்கப்பட்டது என்று. இந்த செய்தியைத் தாங்கி இருக்கிற அதே ‘குடிஅரசு’ இதழின் 5ஆம் பக்கத்தில் மற்றொரு செய்தியும் பதிவாகி இருக்கிறது. அச்செய்தி “ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் 6.4.1926-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீமான்கள் பிச்சா சுப்பிரமணிய செட்டியார், ராய. சொக்கலிங்கம் செட்டியார், வ.ராமசாமி அய்யங்கார் முதலியவர்களுடன் காரைக்குடியில் இருந்து காலை 9 மணிக்கு வந்ததும், வாத்திய கோஷத்துடன் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்காக ஸ்ரீமான் கும்பலிங்கம் பிள்ளை பார்வையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காந்தி ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்ற செய்தியை நாம் பார்க்கிறோம். பெரியாரை தவிர்த்த ஜீவா ஏற்கனவே 7.4.1926 நாளிட்ட ‘குமரன்’ இதழில் வந்திருந்த செய்தியை நாம் பார்த்திருக்கிறோம். அந்த செய்தியில் இதே நாளில் “6.4.1926 அன்று பெரியார் 10 மணிக்கு சிராவயல் வந்து காந்தி கிணற்றைத் திறந்து வைத்ததும், அதேபோல மாலை 6 மணிக்கு...

தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்

தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்

இளங்கலை ஃபிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி படிப்புகளுக்கும் நீட் (NEET) நுழைவுத் தேர்வு. நீட் நுழைவுத் தேர்வு எனும் அநீதியை மருத்துவப் படிப்புகளில் அரங்கேற்றி வருவதோடு தற்போது இளங்கலை ஃபிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி படிப்புகளுக்கும் நீட்டைக் கட்டாயமாக்கி அறிவித்துள்ளது தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP). தமிழ்நாட்டை ஆண்ட அ.இ.அ.தி.மு.க-வும் ஆளுகின்ற தி.மு.க-வும் பலமுறை நீட் தேர்விற்கு எதிராகவும் தமிழ்நாட்டிற்கு நீட்டிலிருந்து விலக்கு கேட்டும் சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிருந்தார்கள். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தற்போது துணை மருத்துப் படிப்புகளுக்கும் நீட் என்பது “தமிழ்நாடு தமிழருக்கே!” என்கிற முழக்கத்தை ஓங்கி ஒலிக்க வேண்டிய தேவையை உருவாக்குகிறது! ஒவ்வொரு வருடமும் நீட் நுழைவுத் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் அதிகரித்து வரும் சூழலில் NCAHP-ன் இந்த நடவடிக்கை பச்சை அயோக்கியத்தனமே. வேறெந்த மாநிலத்தை விடவும் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பிலும், மருத்துவம்...

அமோக வரவேற்பை பெற்ற நிமிர்வோம் பதிப்பகம்!

அமோக வரவேற்பை பெற்ற நிமிர்வோம் பதிப்பகம்!

சனவரி 8 முதல் 21 வரை, 14 நாட்கள், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த 49-வது சென்னை புத்தகக் காட்சியில், கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 4 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. ம.கி. எட்வின் பிரபாகரன், புத்தகக் காட்சி சார்ந்த அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தார். நிமிர்வோம் பதிப்பகத்துக்கு அரங்கை ஒதுக்கிக் தரக்கோரி, தோழர்கள் தபசி குமரன், கு. அன்பு தனசேகர். பிரகாசு ஆகியோர் விண்ணப்பித்து, அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு, நிமிர்வோம் அரங்கை அமைக்கும் களப்பணியில் தோழர்கள் தபசி குமரன், ம. கி. ‌எட்வின் பிரபாகரன், ஆ.வ. வேலு, ர. பிரகாசு, பேரன்பு, தாமரை, ஸ்ரீலேகா, மடிப்பாக்கம் அருண், புகழேந்தி, சிபி ஆகியோர் ஈடுபட்டனர். விளம்பர பதாகை காவை. இளவரசன் செய்து கொடுத்தார். அரங்கில் வைக்க வேண்டிய 300 புத்தகத் தலைப்புகளின் பட்டியலை, தோழர்கள் ம.கி. எட்வின்...

தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

சென்னையில் கழகத்தினர் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக தமிழர் திருநாள் பொங்கல் விழாவை தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நடன நிகழச்சிகள் என கோலகல கொண்ட்டாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதன் செய்தி தொகுப்புகள்: சென்னை திருவல்லிக்கேணியில் மறைந்த கழகத் தோழர். பத்ரி நாரயணனின் முன்னெடுப்பில் பொதுமக்கள் அரசியல் கட்சியினர் என அனைவரும் இணைந்து தமிழர் திருநாள் பொங்கல் விழா கடந்த 26-ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை திருவல்லிக்கேணி பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என அனைவரும் இணைந்து, கோலாகல கொண்டாட்டத்துடன் சனவரி 13 மாலை 5 மணி அளவில் வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் நடைபெற்றது. தோழர் கார்மேகம் கலைக்குழுவினரின் பறை இசை ஆட்டம், ஒயிலாட்டம் மயிலாட்டம், கிராமிய பாடல்கள், பொக்களிக்கால் ஆட்டம், நெருப்பு நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மக்களை வெகுவாக ஈர்த்தது....

பெரியார் முழக்கம் சந்தா குவிகிறது!

பெரியார் முழக்கம் சந்தா குவிகிறது!

தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு 25 பெரியார் முழக்கத்துகான சந்தா தொகை ரூ.7,500 கழகத் தலைவரிடம் வழங்கினார். தோழர் முருகேசன் மதுரை மாவட்டக் கழகம் சார்பாக 29 பெரியார் முழக்க சந்தா மற்றும் ரூ.8,700 தொகையை பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தோழர் துரை. தாமோதரன் பெரம்பலூர் மாவட்டக் கழகம் சார்பாக ரூ.10,000 பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தோழர் வேணுகோபால் (தர்மபுரி மாவட்டத் தலைவர்) தர்மபுரி மாவட்டக் கழகம் சார்பாக ரூ.12,900 தொகையை பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தோழர் திருப்பூர் முத்து 20 பெரியார் முழக்கச் சந்தாவுகான ரூ.6000 தொகையை பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பெரியார் முழக்கம் இதழ் 29012026

சென்னை, கோவை, சேலத்தில் “வெனிசுலா ஆதரவுப் போராட்டம்”

சென்னை, கோவை, சேலத்தில் “வெனிசுலா ஆதரவுப் போராட்டம்”

சென்னையில் வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்காவின் போர் வெறியை முறியடிப்போம் என்ற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் 10.01.26 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) உரையாற்றினார். வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்) மற்றும் கழகத் தோழர் அசோக் ஆகியோர் பங்கேற்றனர். கோவையில் மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே மதுரோவை விடுதலை செய்,வெனிசுலாவிலிருந்து இராணுவத்தை வெளியேற்று என்ற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம், சிபிஎம்எல் ரெட் ஸ்டார், மக்கள் விடுதலை முன்னணி ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் நிர்மல் (கோவை மாநகரச் செயலாளர்) உரையாற்றினார். தோழர்கள் வெங்கட், தரணி, அறிவுக்கனல் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சேலத்தில், வெனிசுலா இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்க துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஆகியோர் கடத்தலை...

மண்டல் குழுப் போராளி நூல் வெளியீட்டு விழா

மண்டல் குழுப் போராளி நூல் வெளியீட்டு விழா

கிருஷ்ணகிரி ஈடன் கார்டன் வளாகத்தில் திருவள்ளுவர், பெரியார் மானுட ஒன்றிய அமைப்பின் சார்பில் திரு.வழ.முகமது சாதிக் (வெல்பேர் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர்) தலைமையில், திருவாளர்கள் கா.மாணிக்கம், கோ.தங்கராசு, ரபீக் அகமது, சென்னை அன்புசீலன், காமராசு ஆகியோர் முன்னிலையில் “மண்டல் குழுப் போராளி அறிஞர் ஆனைமுத்து” எனும் நூல் வெளியீடு 21-12-2025 அன்று நடைபெற்றது. வே.இராசா (வட்டாட்சியர் ப.நி) வரவேற்புரையாற்றினார். வழ. அன்பு தனசேகர் ( வருவாய் வரித்துறை அதிகாரி ப.நி) அறிமுகவுரையாற்றினார். கு.முத்துசாமி (செயற்பொறியாளர், மின்சார வாரியம். ப.நி) நூலை வெளியிட்டு உரையாற்றினார். கல்வி வள்ளல் PSV கல்லூரி தாளாளர் முனைவர் பி.செல்வம் சார்பாக அவர்தம் நண்பர் இராமசாமி நூலினைப் பெற்றுக் கொண்டார். பேரா.சிற்பி இராசன் அவர்கள் “மந்திரமா? தந்திரமா?” மூலம் மூட நம்பிக்கைகளைப் போக்கும் உரை நிகழ்த்தினார். கிருஷ்ணமூர்த்தி (அரசு ஊழியர் அய்க்கிய பேரவை) நன்றி கூறினார். நிகழ்வை குயில்தாசன் ஒருங்கிணைத்தார். மாணவர்களும், பொது மக்களும் பங்ககேற்று சிறப்பித்தனர்....

நிமிர்வோம் அரங்கில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

நிமிர்வோம் அரங்கில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சனவரியில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் முதன்முதலாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் இடம்பெற்றுள்ளது. அரங்கு எண் 10 நிமிர்வோம் பதிப்பகத்திற்கு ஒதுக்கப்பட்டது. திராவிட இயக்கத்தின் பணிகள், லட்சியங்கள், செயல்பாடுகளை விவரிக்கும் வகையிலும், திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனங்கள், அவதூறுகளுக்கு பதிலடி தரும் வகையிலும் வெளியீடுகள் நிமிர்வோம் பதிப்பக அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நிமிர்வோம் அரங்கை ஆர்வத்துடன் பார்வையிட்டு, முன்னாள் வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்துடன் செல்பி எடுத்துக்கொண்டு, நூல்களையும் வாங்கிச் செல்கின்றனர். அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் நிமிர்வோம் அரங்கிற்கு தவறாமல் வருகை தருகின்றனர். புத்தகக் காட்சி தொடங்கிய முதல் 5 நாட்களிலேயே நிமிர்வோம் அரங்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நூல்கள் விற்பனையாகியுள்ளன. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் அரங்க...

குடியுரிமையை பறிக்கும் கூட்டுச்சதி எஸ்.அய்.ஆர்.!

குடியுரிமையை பறிக்கும் கூட்டுச்சதி எஸ்.அய்.ஆர்.!

விசிக சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு எஸ்.அய்.ஆர் (S.I.R) குடியுரிமை பறிக்கும் கூட்டுச்சதி விளக்கத் தெருமுனைக் கூட்டம் டிச-7, 2025 அன்று மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ரூதர்புரம்.அ சுரேசு ( 125 வட்டச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) எஸ்.அய்.ஆர் குறித்தும் சனாதன எதிர்ப்பு களத்தில் தமிழ்நாடு எப்படி பயணிக்கிறது என்பது பற்றியும் கருத்துரையாற்றினார். யூதர் சு.கார்த்திக் (மண்டலச் செயலாளர்), வழக்கறிஞர் பி.சாரநாத் (மாவட்டச் செயலாளர்) மற்றும் பல்வேறு விசிக நிர்வாகிகள் உரையாற்றினார்கள். கழகத் தோழர்கள் குமார், பிரசாந்த் (முழக்கம் செய்தியாளர்) மற்றும் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 08012026

தோழர் லலிதா நினைவுநாளையொட்டி ஏழை – எளியோருக்கு உணவு!

தோழர் லலிதா நினைவுநாளையொட்டி ஏழை – எளியோருக்கு உணவு!

சென்னை கழகத் தோழர் புருஷோத்தமன் இணையர் லலிதாவின் நினைவு நாளையொட்டி, டிச-4, 2025, அவருடைய நந்தனம் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக்குழு உறுப்பினர்), இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, இராவணன் (மாவட்ட துணைச்செயலாளர் ), ப.அருண் ( மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), மயிலாப்பூர் பகுதித் தோழர்கள் மனோகர், சிவா, சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), சே. ராஜேஷ் (பகுதிச் செயலாளர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்), தோழர்கள் சைதை சிவா, தினகரன், இரண்யா, குறளரசி உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். புருஷோத்தமனின் மகனும் திரைப்பட இயக்குநருமான அருண் பிரபு, பேத்தி அனுகீர்த்தி அனைவரையும் வரவேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்...

பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!

பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: பெரியார் நினைவு நாளையொட்டி டிச.24 அன்று காந்திபுரம் பெரியார் சிலை முன்பு காலை 9.30மணிக்கு கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. ஏற்காடு: டிசம்பர்-24 அன்று கழகப் பொறுப்பாளர் ஏற்காடு பெருமாள் தலைமையில் தந்தை பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. சேலம் கிழக்கு: 24.12.2025 காலை 10.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), முத்துமாணிக்கம் (கிழக்கு மாவட்ட அமைப்பாளர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்), ரமேஷ்(இளம்பிள்ளை நகரத் தலைவர்), மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), தேவராஜ் (சேலம் மாநகர அமைப்பாளர்), வெற்றிமுருகன்(மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), பிரபு(சேலம் மாநகர பொருளாளர்) மற்றும் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம்...

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

பெரியாரின் 52வது நினைவுநாளில் (24/12/25), கழகப் பணியில் உயிர்நீத்த தோழர்கள் கண்ணன் – குமாரின் 20-ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம், சென்னை ராயப்பேட்டை வெங்கடாசலம் தெருவில், மாலை 6 மணியளவில் சு. பிரகாஷ் தலைமையில், தோழர்கள் ப. கணேசன், ரா. குட்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இரா. உமாபதி – வீரமணி – திராவிட மகிழன் குழுவினரின் பாடல்களும், சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சியும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. 60 பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தபசி குமரன் (கழக தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), ரூதர் கார்த்திக் (விசிக தென்சென்னை மண்டலச் செயலாளர்), கழகத் தோழர் அறிவுமதி ஆகியோர் கருத்துரையாற்றினர். கருத்துரையாற்றிய ரூதர் கார்த்திக் அவர்களுக்கு கழகத் தோழரும், கண்ணன் குமார் நண்பரும், அவர்களது விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்த வீரமுத்து, கழக வெளியீடுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும்...

ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், அரங்கு எண் 10-இல் இடம்பெறுகிறது. கழகத்தின் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், அரங்கு எண் 10-இல் இடம்பெறுகிறது. கழகத்தின் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!   தமிழ்நாடு  அரசை  வலியுறுத்தி  கோவையில்  போராட்டம்

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோவையில் போராட்டம்

2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ‘இது தமிழ்நாடு – இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை’ மாநாட்டில் ‘வைக்கம் போர் முடியவில்லை’ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்துப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டது. 2025-இல் கழகத் தலைமைக் குழுவில் செப்-17 முதல் செப்-24 வரை “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் நிறைவாக கோவையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களைக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கழகத்தின் சார்பில், கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கை கோரி மாநிலம் தழுவிய போராட்டம், டிசம்பர் 29-அன்று காலை 10.30 மணிக்கு...

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

2006-இல் காசி விஸ்வநாதர் கோயில் நிலத்துக்கு சொந்தமான இடத்தில் மசூதி கட்டுவதாக வெடித்த சர்ச்சையில், இந்து முன்னணியைச் சேர்ந்த குமார பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டனர். உண்மையிலேயே அந்த இடம் கோயில் நிலம்தானா இல்லையா என்ற வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி கலவரங்களை உருவாக்கி, அதில் இந்துத்துவ குளிர் காய்ந்துகொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். இப்போது திருப்பரங்குன்றம் வரை இது தொடர்கிறது. ஆனால் இதில் இழப்புகளைச் சந்திப்பது ஹெச்.ராஜாவை போன்ற பார்ப்பனர்கள் இல்லை, அப்பாவி சாமானிய இந்துக்களே. குமார பாண்டியன் குடும்பத்தினரும் அப்படிப்பட்ட சாமானிய இந்துக்களே. கொலை செய்யப்பட்டவர்களில் குமார பாண்டியன் சகோதரரின் மகளான ருத்ரா இந்த பார்ப்பன சூழ்ச்சியை புரிந்துகொண்டு, பெரியாரியத்தை நோக்கி தனது திசையை திருப்பிக்கொண்டு, இப்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவையுடன் பயணித்து வருகிறார். அவர், “ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்” என்ற...

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

கழக ஆதரவாளரான தோழர் ரஞ்சித் அவர்களின் சிற்றுண்டி கடை (SNACKIFY), இராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிலையம் அருகில் டிசம்பர்-14, 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் ப. அருண் (இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் கடை திறப்பு விழா நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) சிற்றுண்டி கடையைத் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஆர்.என்.துரை (திமுக தென்சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர்) கலந்து கொண்டார். திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் மற்றும் ரஞ்சித் குடும்பத்தினர், நண்பர்கள் உடனிருந்தனர். புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 மாவட்டச் செயலாளரிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 18122025

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

வடசென்னை கழகத் தோழர் அருள்தாஸின் தாயார் அஞ்சலை (என்கிற) அன்னை மரி முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு டிச-11, 2025 மாலை 6 மணிக்கு கே.பி.பார்க் இல்லத்தில் நடைபெற்றது. அருள்தாஸ் புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு 10 சந்தாக்களை வழங்கினார். நிகழ்வில், இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர் ), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மற்றும் ராஜன், தினகரன், விஜயன், அசோக் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 18122025

பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில், 1992-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மசூதி வழியாக நடத்தி, கலவரத்தில் முடிக்க முயன்றனர் சிலர். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது வி.எம்.தெரு. அடுத்த ஆண்டில் வி.எம்.தெருவுக்குள்ளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முயன்றார் ராமகோபாலன். அந்த முயற்சியை முறியடித்து, கலவர நோக்கத்தைத் தடுத்ததுடன், ஐஸ் அவுஸ் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு எதிர்ப்பாக பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தி, சமூகப் பதற்றத்தை தணித்தார் பத்ரி. அதேபோல, 2001-இல் அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலின்போது இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றன மேற்குலக நாடுகள். மேடை ஏறி...

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், கோவை மாநகர கழகத்தின் மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பு தபெதிக அமைத்த அம்பேத்கர் படம் முன்பு காலை 9.30 மணிக்கு கோவை தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் நிலவும் ஜாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை உறுதியாகப் போராடுவது என்று உறுதி ஏற்றனர். பன்னீர்செல்வம், வெங்கட், நிர்மல் குமார் உரையாற்றினர் தோழர்கள் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், நவீன், தரணி, சத்தியமூர்த்தி, மேட்டூர் பாலு, ஆதரவாளர்கள் சங்கனூர் கார்த்தி, பரத், இலக்கியா கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினர். திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவரது நினைவைப் போற்றும் விதமாக மாநகர அமைப்பாளர் இரா. சரசுவதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கழகப் பொருளாளர் சு.துரைசாமி, வீ.சிவகாமி (தலைவர்,...

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… எண் 61, வெங்கடாசலம் தெரு, ராயப்பேட்டை என்ற முகவரி கொண்ட ஒற்றைக் குடித்தன வாடகை வீடு, ஒரு உடைந்த நாற்காலி, ஓலைப்பாய், மர பீரோ… பத்ரி நாராயணனுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் அதற்குமேல் இல்லை. ஆனால், அவருடைய கண்ணசைவுக்கே கட்டுப்படும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை 1990-இல் உருவாக்கி வைத்திருந்தார் அவர். 1980-களில் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, பத்தாண்டுகளிலேயே பலமான கோட்டையாக ராயப்பேட்டையை மாற்றிய செயல் வீரர். ராஜீவ் காந்தி படுகொலையில் கைதாகி, 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த எழுவரை, விடுவிக்கக்கோரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டது இன்றைய...

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஒட்டி வழக்கமான உச்சி பிள்ளையார் கோயில் பகுதிக்கு மாற்றாக, சிக்கந்தர் பாஷா தர்கா பகுதியில் தீபம் ஏற்ற வேண்டுமென்று, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட இந்த நீதிபதியின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, உறுதியான எதிர்வினையாற்றி, தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது திமுக அரசு. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருள வேண்டும் என தீர்ப்பளிப்பது, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை உமிழ்வது என தொடர்ந்து மதவாத நஞ்சை விதைக்கும் இந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித்துறையில் தொடர இடம் அளிக்கக் கூடாது என நாடு முழுக்க கண்டனங்கள் வலுத்துள்ளன. இவரை நீக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 107 பேர் கையெழுத்திட்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். நீதிபதி என்று மக்களவையிலேயே அழுத்தம் திருத்தமாகப் பதிவு...

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்!   தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்! தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய நாகரீக உலகிலும் பல்வேறு வடிவங்களில் ஜாதியம் தலைதூக்கி நிற்கிறது. ஜாதிக் கயிறுகள், ஜாதிய குருபூஜைகள், ஜாதிய திருமண தகவல் மையங்கள், சமூக வலைதளங்களில் ஜாதி அடையாளத்தை வெட்கமின்றி ஒட்டிக்கொள்ளுதல் என ஜாதியை வலிமைப்படுத்தும் புதுவிதமான முயற்சிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. ஜாதிச்சங்கங்கள் இந்த வேலைகளை இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய ஜாதி வெறிச்செயல்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டிப்பதுடன், ஜாதிய நடவடிக்கைகளுக்கான எதிரான அரசின் உறுதியான சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, திராவிடர் விடுதலைக் கழகம் இந்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. தமிழ்நாடெங்கும் போராட்டத்திற்கு கழகத் தோழர்கள் தயாராகி வருவதுடன், “மனிதம் நம் அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பிலே போராட்ட நோக்கத்தை விளக்கி, பரப்புரைப் பயணங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த...

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!

சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘மனிதம் நமது அடையாளம் -ஜாதி நமக்கு அவமானம்’ என்ற முழக்கங்களோடு ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சமத்துவப் பரப்புரை தெருமுனைக் கூட்டம் 29.11.2025 காலை 11.00 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. சமுத்திரமம், மூலப்பாதை, கொங்கணாபுரம் பேருந்து நிலையம், எட்டிக்குட்டைமேடு ஆகிய நான்கு இடங்களில் பரப்புரை நடைபெற்றது. கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), கவியரசு(தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்), கொங்கணாபுரம் கோகுல் ஆகியோர் தலைமை வகித்தனர். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), முன்னிலை வகித்தனர். பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். இளம்பிள்ளை நகரச் செயலாளர் மோகன்ராஜ், குமரசேன், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), கோகுல் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. எடிசன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்....

கழக ஏட்டுக்கு தோழர் இரண்யா மாதந்தோறும் ரூ.2000 நன்கொடை

கழக ஏட்டுக்கு தோழர் இரண்யா மாதந்தோறும் ரூ.2000 நன்கொடை

கழகத் தோழர் இரண்யா சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக மாதம் ரூ.2000 கொடுப்பதாக தெரிவித்தார். டிசம்பர் மாத வளர்ச்சி நிதியாக ரூ.2000 தந்துள்ளார். சென்னை மாவட்டக் கழக தோழர் அன்பரசு முதல் கட்ட முழக்க சந்தாவாக ரூ.1000 மாவட்டச் செயலாளர் உமாபதியிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். -ஆசிரியர் பெரியார் முழக்கம் இதழ் 04122025

நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

தி.மு.க.- 75 அறிவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் 8 முதல் 16 வரை வள்ளுவர் கோட்டத்தில், சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கேற்க, ஊடவியலாளர் ர.பிரகாசு, தோழர் மகிழவன் முயற்சியில் அரங்கு ஒதுக்கப்பட்டது. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைப்பில், 9 நாட்கள் நிமிர்வோம் பதிப்பக அரங்கு செயல்பட்டது. கழக வெளியீடுகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் கழக வெளியீடுகளை தேடி வந்து வாங்கிச் சென்றனர். மொத்தம் ரூ.82,000-க்கு கழக நூல்கள் விற்பனையானது. இளைஞர் அணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு.கோபிநாத், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, காவை அஜித், முழக்கம் செய்தியாளர் பிரசாந்த், சுகந்தன், வீரா, யாழினி, அசோக், ஓவியா ஆகிய தோழர்கள் அரங்க வடிவமைப்பு பணிகளை முனைப்புடன் செய்தனர். தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி,...

பத்ரி நாராயணன் – இயக்கமாய் ஒரு தனிமனிதன்!

பத்ரி நாராயணன் – இயக்கமாய் ஒரு தனிமனிதன்!

(முரசொலி பாசறைப் பக்கத்தில் ஊடகவியலாளர் பிரகாசு எழுதி வரும் பெரியார் மண் தொடரில், ராயப்பேட்டையை இலட்சியக் கோட்டையாக்கிய கழக செயல் வீரர் மறைந்த பத்ரி நாராயணனின் குறித்து எழுதப்பட்ட கட்டுரை இது) ஒரு தனிமனிதன் வீழ்த்தப்பட்டால் அவர்களின் உடல் இயக்கம் மட்டும்தான் நின்று போகுமே தவிர, அவர்களின் சித்தாந்தம் வீழ்ந்துவிடாது. சிந்தனையாளர்களுக்கு அவர்களின் இறப்பு என்பது ஒருகாலும் மறைவாகாது’ என்பதற்கு திராவிட இயக்கத்தில் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. அதில் தலைநகர் சென்னையின் ஓர் உதாரணம் `பத்ரி நாராயணன்’. 2004-ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருந்தது. `மதமாற்றத் தடைச்சட்டம்’, `ஆடு – கோழி பலியிட தடை’ என ஆர்.எஸ்.எஸ். அரசாகவே மாறியிருந்த அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க ஓரணியில் திரண்டிருந்தன தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகள். சென்னையில் ஏப்ரல் 26-ஆம் தேதியில் இருந்து, தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது பெரியார் திராவிடர் கழகம். ஏப்ரல் 30-ஆம் நாள்...

தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

ஆஸ்திரேலியா: தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டு மாவீரர் நாள் தமிழ் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நவம்பர் 27 மாலை நடைபெற்றது இத்தாலி செயின்ட் ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார் அவர் தனது உரையில்”போர் தான் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போராட்ட களம் அரசியல் நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறது என்றும் விடுதலைப் புலிகளின் மகத்தான தியாகங்கள் குறித்தும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர் அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஐநாவின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாட்டில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை வலியுறுத்தி ஸ்ரீதர் ராஜ் உரையாற்றினார். சதீஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் பாடல்களை பாடியதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கொளத்தூரில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக 27.11.2025 வியாழக்கிழமை...

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

அரசிலமைப்புச் சட்டத்தில் 25, 26, 13, 19, 368, 372(1) ஆகிய பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கும் விதமாக உள்ளது என்றும், அவற்றை நீக்க வேண்டுமென்றும் 03.11.1957 அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக ஸ்பெசல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய பெரியார், கோரிக்கைக்கு செவிசாய்க்க அரசுக்கு 30 நாட்கள் கெடு விதித்தார். ஆனால் கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய அரசாங்கமோ, சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்று வரையறுத்து மசோதாவை இயற்றி நிறைவேற்றியது. 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமியற்றி அச்சுறுத்திய பின்பும், முதல் நாளே தந்தை பெரியாரை திருச்சியில் வைத்து கைது செய்த பின்பும், 26.11.1957-இல் நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நான்காயிரம் பேர் சிறைபுகுந்து, சிறைக்குள்ளேயும் விடுதலை ஆன ஒரு மாதத்தில் 18 பேர் உயிர் நீத்த வீரஞ்செறிந்த ஜாதி ஒழிப்புப் போராட்டம் இந்தியக் கண்டம் கண்டிராதது....

57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

மயிலாப்பூரில் கழகத் தலைமை அலுவலகத்தில் 18.11.2025 அன்று சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமையில் சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தோழர் இரண்யா கடவுள் மறுப்பு உறுதிமொழியை வாசித்தார். கடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் இருந்து தற்போது வரை 57 நிகழ்ச்சிகளை சென்னை மாவட்டக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்றிருக்கிறது. கடந்த ஜூன் முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளின் பட்டியலை தோழர் உமாபதி வாசித்தார். திமுக இளைஞர் அணி நடத்திய அறிவுத் திருவிழாவில் கழக வெளியீடுகள் ரூ. 81980 விற்பனையானது. அதை முழுபொறுப்பேற்று நடத்திய தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் மற்றும் அதற்கு மூலக் காரணமாக இருந்த தோழர் பிரகாசு இருவரையும் பாராட்டி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் சால்வை அணிவித்தார். முற்போக்கு புத்தகக் காட்சியில் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் இடம்பெற்று, நூல்கள் விற்க துணைநின்ற மாவட்டக் கழகத்தோழர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தோழர்கள் எட்வின்...

அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு- பெரியார் சொன்னார்; தி.மு.க. செய்தது!

அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு- பெரியார் சொன்னார்; தி.மு.க. செய்தது!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா நிறைவையொட்டி, அதன் இளைஞர் அணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நவம்பர் 8ஆம் தேதி ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற நூலை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார். இந்நூலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர் பிரகாசு ஆகியோர் கட்டுரை எழுதியுள்ளனர். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நவம்பர் 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை முற்போக்கு புத்தகக் காட்சியும் நடைபெறுகிறது. இதில் அரங்கு எண் 22-இல் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கு பெற்றுள்ளது. கருத்தரங்கில் மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன. அதில் கடைசி அமர்வு பெரியாரிய இயக்கத் தலைவர்களைக் கொண்டு நிறைவுற்றது முத்தாய்ப்பாக அமைந்தது. புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் நடைபெற்ற அந்த அமர்வில், ‘கருஞ்சட்டை கழகமும் கருப்பு...

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

பெரியார்: ஜாதி, தேசியம், சோசலிசம் (Periyar – Caste, Nation & Socialism) ஆங்கில நூல் குறித்த அறிமுகம் சிறப்பாக இருந்தது. பெரியாரியல்வாதி தோழர் எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள இந்நூல், வெளியீட்டில் இருந்து தொடர்ச்சியாக இந்நூல் குறித்த விவாதத்தை திராவிடர் விடுதலைக் கழகம் முன்னெடுப்பது இந்நூல் இன்னும் பலரைச் சென்றடைய உதவும். பெரியார் குறித்த அவதூறுகளை மறுத்து ஏற்கெனவே கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் நூல்கள் எழுதியுள்ள நிலையில் அதே பாணியிலான ஆங்கில நூல் வெளிவருவது வரவேற்கத்தக்கது. திராவிடர் விடுதலைக் கழகம் பயிலரங்கத்தில் தோழர் ஜீவா குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கழகத் தலைவர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது. அதையொட்டி ஆரோக்கியமான விவாதத்தை தலைவர் தொடங்கவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இன்றைய தலைமுறை பல்வேறு வரலாற்று தகவல்களையும் தரவுகளையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். -அருண்கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்) பெரியார் முழக்கம் இதழ் 30102025

தோழர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சியுரை!  ஈரோட்டுப் பாதையில் நடைபோடுவோம்!

தோழர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சியுரை! ஈரோட்டுப் பாதையில் நடைபோடுவோம்!

ஈரோட்டுப் பாதை தான் நமக்கு வழி காட்டுகிறது; பெரியார் இயக்கம் தான் எனது தாய் வீடு என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். சென்னையில் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி தலைவர் மறைந்த தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு நிறைவு மலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று துணை முதலமைச்சர் நிகழ்த்திய உரையிலிருந்து சில பகுதிகள்… பெரியாரின் தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. பெரியாரின் தொண்டர்களை, துறவிகளைவிட மேலானவர்கள் என்று பெருமையாக சொல்வார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் அய்யா ஆனைமுத்து அவர்கள். பெரியார் தொண்டர்களின் தன்னலம் இல்லாத உழைப்புதான், தமிழ்நாட்டை சுயமரியாதை மண்ணாக மாற்றி வைத்துள்ளது. எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விட, மிகமிக முக்கியமான நிகழ்ச்சியாக நான் கருதுவது, இன்றைக்கு இந்த அரங்கில் நடந்துகொண்டு இருக்கின்ற அறிஞர் ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழா. இன்னும் சொல்லப்போனால், எனது தாய் வீட்டிற்கு நான் வருகை தந்துள்ளேன். பெரியார் தொண்டர்கள் நிறைந்து...

கழகத்தினர் எடுத்த பெரியார் பிறந்தநாள் விழாக்கள்

கழகத்தினர் எடுத்த பெரியார் பிறந்தநாள் விழாக்கள்

கள்ளக்குறிச்சி: மாவட்டக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு நயனார்பாளையத்தில் தந்தை பெரியார் பள்ளியில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 10- மணியளவில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ப.அங்கமுத்து தலைமையில் மாலை அணிவித்து பெரியாரின் சிறப்புகள் குறித்து பேசப்பட்டன. இந்நிகழ்வில் க.அசன், க,மதியழகன், ஆ.நாகராசன், ந.வெற்றிவேல் ச.வீரப்பாண்டியன், ஜெயனுல்லாபுதீன், சேரன், மைக்கேல், அஜித்குமார், தண்டபாணி உள்ளிட்ட பல தோழர்களும் பள்ளி மாணவர்களும் கருப்பாயி, இலட்சுமி, வாசுகி, கோமதி, அஞ்சுகம், சாரதாமணி உள்ளிட பெண் தோழர்களும் கலந்து கொண்டனர். சங்கராபுரதில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 11 மணியளவில் ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாலை 5 மணி அளவில் கடுவனூரில் பெரியார் அம்பேத்கர் திடலில், பெரியார் பிறந்தநாள் மற்றும் தோழர்கள் பெ. கோவிந்தன் கா.கோவிந்தராஜ் சு.தினகரன் செ.விஜய் ஆகிய தோழர்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. க. இராமர் மாவட்டச் செயலாளர் தலைமை...

“பெரியாரிஸ்ட்” தமிழ்செல்வி இல்லத்தில் படத்திறப்பு

“பெரியாரிஸ்ட்” தமிழ்செல்வி இல்லத்தில் படத்திறப்பு

17/9/25 – சென்னை அன்று கொளத்தூர் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் பகுதியில் வசிக்கும் தோழர் தமிழ்ச்செல்வி இல்லத்தில் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் இல்லத்தில் பதிக்கப்பட்டு இருக்கும் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து திறந்து வைத்தார் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன். கட்டுமான தொழிலதிபரான தோழர் தமிழ்செல்வி, தலித் மற்றும் இஸ்லாமியர்கள், அசைவ உணவு சாப்பிடுவோர்க்கு வீடு வழங்குவதில் முன்னுரிமையும் விலைச் சலுகைகளையும் தந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. U2 BRUTUS ஞான சத்யா, தமிழ்ச் செல்வி ஆகியோர் உரையாற்றினர். சமூகநீதி நாள் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. திவிக சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 25092025

சென்னையில் வெற்றிநடை போட்ட ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

சென்னையில் வெற்றிநடை போட்ட ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம் என்ற தலைப்பில் கழக இளைஞரணி ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை செய்து வருகிறது. சென்னை, சேலம் மாவட்ட இளைஞரணி தோழர்கள் ஆர்வமுடன் இந்த பரப்புரைகளை நடத்தி வருகிறார்கள். சென்னையில் கடந்த 10 நாட்கள் தொடர் பரப்புரை தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. மிக நேர்த்தியாக சென்னை மாவட்டக் கழக இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ப.அருண் மற்றும் எட்வின் பிரபாகரன் இருவரும் இணைந்து பேச்சாளர்கள் மற்றும் இடங்களை தேர்வு செய்தனர். குறிப்பாக தோழமை இயக்கத் தோழர்கள், ஊடவியலாளர்கள் என பலர் சிறப்புரையாற்றினார்கள். கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள் சிலர் இந்த கூட்டங்களை தலைமையேற்று நடத்தினார்கள். இளைய தலைமுறையினரிடம் வெகுவாக இந்த கூட்டம் கவனிக்கப்பட்டது. அனைத்து தெருமுனைக் கூட்டங்களும் சென்னை மாவட்டக் கழக முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அருவி வலையொலியில் வீடியோ வெளிவந்துள்ளது. 10 நாட்களும் பாடல்கள் வழியாக, அரசியல் நையாண்டி வழியாக, பறை இசை வழியாக பொதுமக்களை கவரும்...

செப்-17-ல் சென்னையில் எழுச்சியுடன் நடந்த பொதுக்கூட்டம் ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி திரளும் இளைஞர்கள்

செப்-17-ல் சென்னையில் எழுச்சியுடன் நடந்த பொதுக்கூட்டம் ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி திரளும் இளைஞர்கள்

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம், செப்-17 அன்று, மாலை 5 மணிக்கு, திவிக திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத் தலைமையில், சென்னை இராயப்பேட்டை வி.எம் தெருவில் நடைபெற்றது. கழக இளைஞரணி மற்றும் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர்கள் இணைந்து பொதுக்கூட்ட வேலைகளை சிறப்பாக செய்திருந்தனர். பகுத்தறிவுப் பாடல்களை, “புதுவை விடுதலைக் குரல்” தோழர்கள் எழுச்சியுடன் பாடினார்கள். ராப் பாடலை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு பாடினார். திவிக மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – பொன்ராஜ் ஆகியோரின் சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சி, மக்களின் கவனத்தைப் பெற்றது. உச்சபட்ச ஆதிக்கத்தை செலுத்தும் பார்ப்பனர்களை எதிர்க்காமல் இருப்பதற்காக, பிற்படுத்தப்பட்டவர்களையும் பட்டியலினத்தவரையும் தங்களுக்குள் மோதிக்கொள்ளச் செய்யும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் விதமாக, புராண இதிகாசங்களை மேற்கோள் காட்டி, பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புதுவை தீனா உரையாற்றினார். ஜாதி...

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

People’s literature பதிப்பகம் வெளியிட்டுள்ள “Periyar: Caste, Nation and Socialism” நூலின் அறிமுக விழா, (24.8.25), சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்தினார். பெரியார் மீது எழும் கேள்விகள் அல்லது குற்றச்சாட்டுகள், அல்லது மனதறிந்து பேசுகிற பொய்கள் எல்லாவற்றையும் விளக்கும் நோக்கத்தோடு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கரின் பார்வைகள், புத்தம் குறித்த பெரியார், அம்பேத்கர் கருத்துக்கள் ஆகியவற்றை முதன்மை தலைப்பாக பதிவு செய்துள்ளார். ரங்கூன் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் கலந்து கொண்ட செய்திகளையும், வன்முறைக்கு எதிராக பெரியார் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வை தொகுத்து வழங்கினார். கோவி. கனக விநாயகம் (துணைப் போராசிரியர், எஸ்.ஆர்.எம் சட்டக் கல்லூரி , சென்னை) பேசுகையில், எளிய மொழிநடையில், கேள்வி பதிலாக தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல். 21ம் நூற்றாண்டில் திராவிடர் இயக்கத்துக்கு கிடைத்த ஆவணம் இந்த நூல் என்று வாழ்த்துரை வழங்கினார்....

களம் இறங்கிறது சென்னை இளைஞரணி!

களம் இறங்கிறது சென்னை இளைஞரணி!

சென்னை மாவட்ட இளைஞர் அணி சார்பாக “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள் என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, செப்டம்பர்-17 தேதி வரை தொடர் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், சைதாப்பேட்டை, தியாகராயர் நகர், எம்.ஜி.ஆர் நகர், அம்பத்தூர், அமைந்தகரை, வேளச்சேரி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. 10 நாட்கள் தினமும் மாலை 5 மணியளவில் தெருமுனைக் கூடட்ங்கள் நடைபெறும். தெருமுனைக் கூட்டங்களில் கழகத் தோழர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் கருத்துரை ஆற்ற உள்ளனர். செப்-17 நிறைவு பொதுக் கூட்டம் இராயப்பேட்டை பெரியார் படிப்பகம் அருகில் நடைபெறும். இளைஞர்களே ஜாதியை தகர்த்தெறிவோம்! சமத்துவ சமுதாயம் படைப்போம் வாரீர்!