பாஜகவின் வெற்றியை உறுதிசெய்வதே தொகுதி மறுவரையறை எனும் சூழ்ச்சித் திட்டம்
நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 33வது கூட்டம், 29/8/26 (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு தொகுத்து வழங்கினார். “ஜம்மு காஷ்மீர், அசாமில் தொகுதி மறுவரையறை ஏற்படுத்திய பாதிப்புகள்” குறித்து கார்த்தி ராஜேந்திரன், “50 விழுக்காடு தொகுதிகள் உயர்வு தீர்வாகுமா?” எனும் தலைப்பில் சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், தொகுதி மறுசீரமைப்பு ஆபத்துகளையும், பாஜவின் சதிதிட்டம் குறித்தும் ர.பிரகாசு, எழுத்தாளர் தமிழ் காமராசன் விளக்கி உரையாற்றினர். நிறைவாக பேசிய இடதுசாரி செயல்பாட்டாளர் மருதையன் அரசியல் சட்ட அமைப்புகளை சீர்குலைக்கும் அவசர காலத்தில் வாழ்கிறோம் என்று கூறினார். தொகுதி மறுவரையரைத் திட்டத்தின் ஆபத்துகளை விரிவாக விளக்கிப் பேசினார். “ஜம்மு காஷ்மீர், அசாமில் தொகுதி மறுவரையறை ஏற்படுத்திய பாதிப்புகள் என்ற தலைப்பில் கார்த்திக் ராஜேந்திரன் உரை: தொகுதி மறு வரையறை சட்டத் திருத்தத்தை யார் கையில்...
