1973-ல் தஞ்சையில் பெரியாருக்கு கார் வழங்கும் விழாவில் நடந்தது என்ன?
1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தஞ்சையில் பெரியாருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது. மேடையில் ஏறுவதற்கு பெரியாருக்கு ஏற்பட்ட இடையூறுகளை தவிர்த்து பிரச்சாரத்திற்கான மேடையை காரின் ஒரு பகுதியாக இணைத்து இந்தக் கார் தயாரிக்கப்பட்டது. இந்தக் காரை 5 மாதங்கள் மட்டுமே பெரியார் பயன்படுத்தினார். தியாகராய நகரில் பெரியாரின் இறுதி உரையை இந்தக் காரில் இணைக்கப்பட்ட மேடையில் தான் ஆற்றினார். பெரியாரின் அந்தக் கார் திருச்சி உறையூரில் உள்ள பெரியார் மாளிகையில் நிறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேடு (ஏப்ரல்-19) படத்துடன் ஒரு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. திராவிடர் கழகம் திட்டமிட்டு வரும் ‘பெரியார் உலகத்தில்’ இந்த வேன் காட்சிப் பொருளாக இடம்பெறப்போவதாக செய்தி கூறுகிறது. இந்தக் கார் வழங்கும் விழா, 1973 ஆக-19-ல் தஞ்சையில் எழுச்சியுடன் மாநாடு போல் நடந்தது. அந்த நிகழ்வுகள் குறித்து சில செய்திகளை இளையதலைமுறையின் கவனத்துக் கொண்டு வருகிறோம்....
