Category: கட்டுரைகள்

‘ஆணவக் கொலை’ தடுப்புச் சட்டம் வருமா?

‘ஆணவக் கொலை’ தடுப்புச் சட்டம் வருமா?

கருநாடக மாநில அரசைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் நீதிபதி சந்துரு `டைம்ஸ் ஆப் இந்தியா’ ஜூலை 17, நாளேட்டில் எழுதிய கட்டுரை. திருமணச் சட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை உருவாக்கிய தமிழ்நாடு, ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவருவதில் ஏன் இன்னும் தாமதிக்கிறது? கர்நாடகா ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளது. நாம் ஏன் இல்லை? இந்தக் கொலைகளில் எந்தவிதமான “குடும்ப கௌரவமும்” இல்லை. இத்தகைய ஜாதி அடிப்படையிலான ஆணவக் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு உடனடியாக ஒரு தனிச்சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. சமூக நீதி மற்றும் முற்போக்கு சீர்திருத்தங்களில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டதாக பெருமை பேசும் தமிழ்நாட்டில், “ஆணவக் கொலைகளைத்” (Honour Killings) தடுக்க தனிச்சட்டம் தேவையா? என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது. இதேவேளை, கர்நாடகா 2025, மார்ச் மாதத்தில் இதற்கென ஒரு சட்டத்தை இயற்றி இந்தத் துறையில்...

‘தாலி செண்டிமெண்ட்’தேவைதானா?

‘தாலி செண்டிமெண்ட்’தேவைதானா?

தாலி சென்டிமென்டை ஓவராகத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்டுவதால் சில பெண்களிடையே வேறுமாதிரியான பாதிப்பு உண்டாவதை நான் கவனித்திருக்கிறேன். தாலி என்பதைக் கணவனின் மறுபிம்பமாகக் கருதி கண்களில் ஒற்றிக்கொள்கிறோம், குங்குமம் வைக்கிறோம், கணவன் இறந்த பிறகு தாலி அணியக் கூடாது என்றும் சொல்கிறோம். இந்தக் கருத்தை வலியுறுத்திச் சொல்வதால் ஓர் எதிர்மறை சிந்தனை சிலரிடம் உண்டாகிறது. ‘ஒரு மலர் ஒரு முறைதான் பூக்கும், கணவன் கட்டிய தாலி என்னுடைய உடம்பில் ரத்த நாளங்களாக இருக்கிறது’ என்றெல்லாம் வசனங்களை அமைத்துவிடுவதால் கணவனை இழந்த அல்லது விவாகரத்து ஆன சில பெண்கள் மறுமணம் செய்துகொள்ளவே தயங்குவது எனக்குத் தெரியும். படங்களில் தாலி சென்டிமென்ட் வைத்து அதைப் பெண்களைப் பார்க்க வைப்பதன் மூலம் நன்றாக வியாபாரம் ஆகிறது எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், இதே தாலி சென்டிமென்ட் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட விதத்தில் எதிர்மறையாகப் பெண்களைப் பாதிப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மறுமணங்கள்...

இழிவில் பிறந்தது ஜாதி – பெரியார்

இழிவில் பிறந்தது ஜாதி – பெரியார்

வெவ்வேறு வர்ணத்தவருக்கு இடையே நடந்த கலப்பு உறவின் காரணமாகத் தான் ஜாதியே பிறந்தது. இது குறித்து ‘விபச்சாரத்தில் பிறந்த ஜாதி’ எனும் தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரை. ஜாதிப் பிரிவும் வித்தியாசங்களும் இருக்கக் கூடாதென்பது இந்தியாவின் ஒருமுகப்பட்ட அபிப்பிராயமென்பதும், கோரிக்கையென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். பொதுவாகப் பார்க்கும் போது போதிய உலக ஞானமற்ற மக்களுக்கு ஜாதிப் பிரிவுகளை ஒழிப்பது என்றால் பிரமாதமாகத் தோன்றுவதும், சிலருக்கு ஏதோ குடிமுழுகிப் போவது போல் அவர்கள் மனதிற்குப் பெரிய திகில்கள் உண்டாவதும் சகஜமாகக் காணப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் ஜாதி என்பதன் உண்மையும், உற்பவமும் இன்னதென்று அறியாத மயக்கத்தினால் தோன்றப்படுவதே தவிர வேறில்லை. ஒரே நாட்டு மக்கள் பிறவியில் பல ஜாதியாகப் பிரிக்கப்பட்டிருப்பது நமது இந்தியாவில்தான் இருக்கின்றதே தவிர வேறெங்கும் இல்லை என்பது உலகக் கல்வி ஞானமுடையவர்கள் யாவரும் அறிந்ததாகும். அந்தப்படி இந்தியாவில் பிரிக்கப்பட்டிருக்கும் ஜாதியும் எவ்வித கொள்கைக்கும் பொருத்தமில்லாமல் வெறும் பிரிவுக்கும் இழிவுக்கும் மாத்திரம் ஆதாரமாய்...

‘‘பெரியாரை படித்ததால் அம்மாவுக்கு மறுமணம் செய்தோம்!’’

‘‘பெரியாரை படித்ததால் அம்மாவுக்கு மறுமணம் செய்தோம்!’’

கணவனை இழந்த அம்மாவுக்கு அவரது இரண்டு மகன்கள் மறுமணம் செய்து வைக்கும் நூறுசாமி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கணவனை இழந்த பெண் சமூகம் வழியாக சுமக்கும் வலிகளை பார்வையாளர்களிடம் உணர்வுபூர்வமாக கடத்துகிறது இப்படம். இது உண்மையில் நடந்த சம்பவம். கள்ளக்குறிச்சி மாவட்டம் வலையாம்பட்டு கிராமத்தைச் சார்ந்த சகோதரர்கள் சித்தார்த்தன் மற்றும் விவேக் இந்த புரட்சி திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.இந்தச் சிந்தனைக்கு காரணம் பெரியாரைப் படித்தது தான் என்கிறார் சித்தார்த்தன். இது குறித்து ‘ஆனந்த விகடனில்’ ஜூன் 26 ஆம் தேதி வெளிவந்த பேட்டியில் இருந்து… அவள் விகடனில்தான் எங்கள் முதல் பேட்டி வெளிவந்துச்சு. அதைப் பார்த்த பிறகு நிறைய ஊடகங்களில் பேட்டி எடுத்தாங்க. அதையெல்லாம் படிச்சுட்டு டைரக்டர் சசி சார் என்னைக் கூப்பிட்டார். சென்னைக்கு வந்து சாரை சந்திச்சேன். “உங்கம்மாவோட கதையைப் படமா பண்ணலாமா?”ன்னு கேட்டார். அம்மாவுக்கு மகன்கள் கல்யாணம் பண்ணி வெச்சதைப் பலரும் ஒரு செய்தியா கடந்து போனாங்க. ‘அதை...

நவீன பொருளாரதாத்தில் ஜாதியின் புதிய வடிவங்கள்

நவீன பொருளாரதாத்தில் ஜாதியின் புதிய வடிவங்கள்

இந்தியாவில் பார்ப்பனர்களும் உயர் ஜாதியினரும் பாகுபாடுகளைக் கொண்ட சமூகத்தில் மிகவும் சொகுசான வாழ்க்கைக்கு பழகிவிட்டனர். அவர்கள் தாராளமயம் என்ற ஏற்றத்தாழ்வு கொள்கையை நியாயப்படுத்த ஜாதிகள் தானாகவே மறைந்துவிடும் என்று பேசி வருகிறார்கள் என்கிறார் இந்தியாவின் தலை சிறந்த சமூகவியல் ஆய்வாளர், பேராசிரியர் சுரிந்தர் ஜோத்கா. இவர் புதுடெல்லியில் ஜவஹர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். உலகமயமாக்கல் கொள்கை வந்த பிறகு ஜாதி மீண்டும் புதிய வடிவம் எடுத்துள்ளது என்பதை அவர் ஒரு பேட்டியில் விளக்குகிறார். அவரது பேட்டியில் இருந்து சில பகுதிகள். கேள்வி: இந்தியாவின் நவதாராளவாத பொருளாதார சூழலில் ஜாதி எவ்வாறு வெளிப்பட்டுள்ளது? இது முக்கிய விவாதம். எல்லாமே மாறுகின்றன; ஜாதியும் அதற்கு விதிவிலக்கல்ல. ஜாதி என்பது நிலையான ஒன்றல்ல. அது மனித உறவுகளை ஒழுங்குபடுத்தும் ஒரு சமூக நடைமுறை. ஜாதியை ஒரு உறவாகப் புரிந்துகொண்டால், அது படிநிலை, சமத்துவமின்மை, ஒதுக்கல், மறுப்பு மற்றும் பாகுபாடு ஆகியவற்றோடு தொடர்புடையது. மனித வாழ்வின்...

அய்.அய்.டி-களில் நடக்கும் ‘மறுபிறவி’ ஆராய்ச்சிகள்

அய்.அய்.டி-களில் நடக்கும் ‘மறுபிறவி’ ஆராய்ச்சிகள்

இந்திய அறிவுசார் முறை என்ற பெயரில் அய்.அய்.டிகளில் போலி அறிவியல் பாடமாக கற்பிக்கப்பட்டு இந்துத்துவா பழமை வாதத்துக்கு உயிர் கொடுப்பதை விளக்குகிறது இக்கட்டுரை. கடந்த சில ஆண்டுகளாக, “இந்திய அறிவு முறை” (Indian Knowledge System -IKS) என்ற திட்டம் குறித்த மூடநம்பிக்கையை பாரம்பரிய இந்திய அறிவு முறை என்ற பெயரில் மறுபிறவி கருத்துக்களை நவீன கல்விப் பாடத்திட்டங்களுடன் ஒருங்கிணைக்க முயன்று வருகிறது. கடந்த கால வரலாறுகளைப் பேசுவது தவறு அல்ல! ஆனால் மதம் சார்ந்த பழமை கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பாணினியின் மொழி ஆய்வு, நியாய (Nyaya)வாதம், , இரும்பின் பயன்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் தற்போது என்ன நடக்கிறது? மாண்டி அய்.அய்.டி இயக்குநர் லட்சுமிதர் பெஹேராவின் தலைமையின் கீழ் அமைத்த குழு புராணங்களை வரலாறாகக் கருதுதல், சடங்குகளை தொழில்நுட்பமாக திரித்துக் கூறல் போன்ற பாடத்திட்டங்களை பரிந்துரைக்கிறது. அறிவியல் அடிப்படையில் மறுக்கப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசுகிறது. 2020 –...

ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மக்கள் மனதிலிருந்து ஜாதிய உணர்வை ஒழிப்பதற்கான பொறுப்பை அரசு முன்னெடுக்க வேண்டும்’ என, ஆணவக் கொலை வழக்கு விசாரணையின் போது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் மென் பொறியாளர் கவின், 25, ஆணவக் கொலை வழக்கில், கவின் காதலியின் தந்தையான போலீஸ் எஸ்.அய்., சரவணன் ஜாமின் மனு மீதான விசாரணை, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் நேற்று நடந்தது. வழக்கை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘மனுதாரர் தன் மனைவியுடன் சேர்ந்து ஆதாரங்களை மறைத்தார். அவரது மகள், கவின் இடையிலான காதல் விவகாரத்தை அறிந்திருந்தும், சுர்ஜித் குற்றம் செய்ய உடந்தையாக இருந்தார். ஜாமினில் விடுவித்தால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும். அது விசாரணையை பாதிக்கும்’ என்றார். ‘‘குற்றம் செய்வதில் மனுதாரர் நேரடி பங்காற்றவில்லை என்றாலும், தன் மகனை ஜாதிய மனப்பான்மையுடன் வளர்த்ததற்காக அவர் பொறுப்பேற்க வேண்டும். ஜாதிய மனப்பான்மையின் உச்சகட்ட...

அறிஞர்களை உருவாக்கிய பகுத்தறிவு ஆசிரியர்

அறிஞர்களை உருவாக்கிய பகுத்தறிவு ஆசிரியர்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரைத் தொடர். உடையார்பாளையத்தை, சிற்பி போல செதுக்கி, கல்வி – வேலைவாய்ப்பில் முன்னேற்றமடைய பாடுபட்ட பகுத்தறிவு ஆசிரியர் வேலாயுதத்தைப் போலவே, அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செந்துறையை அடுத்த கீழமாளிகையைச் சேர்ந்தவர் மற்றொரு ஆசிரியர். பழுத்த ஆன்மிகவாதியாக இருந்த அந்த ஆசிரியரை, பகுத்தறிவு ஆசிரியராக மாற்றியது பெரியாரின் `குடி அரசு’ இதழ். பெரியாரியவாதியாக மாறிய பின்னர், கருப்புச்சட்டையோடுதான் பள்ளிக்குச் செல்வார். பெரியாரின் பகுத்தறிவைத் துணைகொள்வதற்கு முன்பே, மறைமலை அடிகளாரின் மொழியியல் கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டிருந்தார். 1926-31 வரையில் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பின்போது, மறைமலை அடிகளின் மகன் மறை. திருநாவுக்கரசுவும் பொன்னம்பலனாரும் ஒரே அறையில் தங்கிப் படித்தனர். அவர்கள்...

ஜாதி எதிர்ப்பும் உட்ஜாதி அரசியலும்!

ஜாதி எதிர்ப்பும் உட்ஜாதி அரசியலும்!

ஜாதி கடந்த காதல் உணர்வுகளைச் சார்ந்து நிற்கிறது! ஜாதிகளுக்கிடையே உள்ள பிரிவுகளை மறுக்கிறது. ஜாதி சமூக அடுக்குகளை எதிர்க்கிறது என்பது காதல் குறித்த பார்வையாக இருக்கிறது. அது உண்மைதான்; ஆனால் காதலை மட்டும் சமூகம் உணர்வு சார்ந்த பார்வையாக மட்டும் பார்க்காமல் அரசியலாகவும் பார்க்க வேண்டும். சமூகத்தில் காதல், ஜாதி எதிர்ப்புக்கான அரசியல் முன்னெடுப்புக்கும் சமூக மாற்றத்திற்கான அரசியல் கருவியாகவும் செயல்படுகிறது. காதலில் சமூக மாற்ற ஜாதி ஒழிப்பை நோக்கிய அரசியல் இருக்கிறது என்பதே அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர்கள் மற்றும் மேற்கத்திய சிந்தனையாளர்களின் கருத்தாகும். ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு பட்டப் படிப்பு மாணவரான ரோகித் வெமுலா அம்பேத்கர் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட மிகச் சிறந்த கவித்துனமான அறிவியல் மாணவர். மதவாத ஜாதி வெறி சக்திகளால் ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலையில் 2016 ஜனவரி 17 அன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் அவரது இறுதிக் கடிதம் ஒரு வரலாற்று ஆவணமாக மதிக்கப்படுகிறது. தனது...

‘உண்மையான’ பக்தர்கள் எங்கே?

‘உண்மையான’ பக்தர்கள் எங்கே?

“கோயில் அறங்காவலர்களாக உண்மையான கடவுள் பக்தர்களையே நியமிக்க வேண்டும். நாத்திகர்களை நியமிக்கக் கூடாது” என்கிறார் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். பார்ப்பனர்கள், நீதிபதிகள், சங்கிகள் பலரும் உண்மையான பக்தர்களைத் தேடி அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் உண்மையான பக்தர்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதுதான்! உண்மையான நோய்களை கண்டுபிடிப்பதற்கு ஸ்கேன், எக்ஸ்ரே வந்துவிட்டன. உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் வந்துவிட்டன. உண்மையான பக்தர்களை எப்படி கண்டுபிடிப்பது? நாள் தவறாமல் பூஜைகளை செய்கிறவர்கள்; நெற்றியில் அடையாள மார்க்குகளை வைத்திருப்பவர்கள்; ஆச்சாரங்களை அனுதினமும் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவர்கள் இவர்களை எல்லாம் உண்மையான பக்தர்களாக அங்கீகரிக்கலாமா? அதற்கும் வாய்ப்பு இல்லை! கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து நீதிமன்றம் கொண்டுவரப்படும் குற்றவாளிகளைப் பாருங்கள்; அவர்கள் பழுத்த பக்தர்களாக விபூதி, குங்குமத்துடன் காட்சித் தருகிறார்கள். ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு முன்ஜாமின் பெற்று வெற்றிப் புன்னகையுடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் அரசியல் தலைவர்களைப்...

நீட்தேர்வு நடத்தும் அமைப்பின்  படுதேல்விகள் ஊழலில் பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி!

நீட்தேர்வு நடத்தும் அமைப்பின் படுதேல்விகள் ஊழலில் பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி!

2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ’நீட்’ நடத்தப்பட்டது. பல மாதங்களாகவும், பல ஆண்டுகளாகவும் கடுமையாக உழைத்த மாணவர்கள் தேர்வு முடிந்த மகிழ்ச்சியை சமூக ஊடகங்களில் கொண்டாடினர். ஆனால் இரண்டு வாரங்களுக்குள் அந்த மகிழ்ச்சி துயரமாக மாறியது. மே 12 அன்று, “கெஸ் பேப்பர்” பரவியதாகவும், தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து தேசியத் தேர்வு முகமை (என்.டீ.ஏ) நீட்-2026 தேர்வை ரத்து செய்தது. அதன்பின்னர் மனஉளைச்சலால் குறைந்தது 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான பிரதீப் மேக்வால், கடந்த 3- ஆண்டுகளாக ’நீட்’ தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த ஆண்டு சிறந்த மருத்துவக் கல்லூரியில் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேசத்தின் லகிம்பூர் கேரியைச் சேர்ந்த 21 வயது ரித்திக்...

கொள்கைக்காக உயீர்நீத்த உடையார்பாளையம் வேலாயுதம்!

கொள்கைக்காக உயீர்நீத்த உடையார்பாளையம் வேலாயுதம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரைத் தொடர். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் நாம் இருக்கிறோம். இந்த நூற்றாண்டு காலபயணம் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார- பண்பாட்டு வளர்ச்சிக்கான பாதையை அமைத்திருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதரின் கல்வி, வேலைவாய்ப்புக்கான ஏணியாக மற்றெந்த இயக்கத்தையும் விடவும் அதீத பங்களிப்பைச் செய்த இயக்கமாக சுயமரியாதை இயக்கமும், அதன் பரிணாம வளர்ச்சியாக உருவெடுத்த திராவிட இயக்கமும் திகழ்கின்றன. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலம் அவ்வளவு இனிமையானது அல்ல. நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுவதற்கு சமமான காலம் அது. இயக்கத்தின் தலைவராக இருந்த பெரியார் மீதே செருப்பு வீசப்பட்டது, பாம்பு வீசப்பட்டது, மலம் வீசப்பட்டது என்றால் சாமானிய தொண்டர்களைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டுமா? அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்...

பட்டியலின பிரிவினருக்கு திமுக ஆட்சியின் சாதனைகள் சிந்தனைச்செல்வன் விளக்கம்!

பட்டியலின பிரிவினருக்கு திமுக ஆட்சியின் சாதனைகள் சிந்தனைச்செல்வன் விளக்கம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பட்டியலின பிரிவினருக்கு கிடைத்த திட்டங்களை விளக்கி வெளியிட்ட முகநூல் பதிவுவின் ஒரு பகுதி. எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில்...

புராண நாடகங்களுக்கு மாற்றாக புரட்சிகர நாடகங்களை நடத்திய கும்மம்பட்டி!

புராண நாடகங்களுக்கு மாற்றாக புரட்சிகர நாடகங்களை நடத்திய கும்மம்பட்டி!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டி குறித்த கடந்த இதழின் தொடர்ச்சி… திண்டுக்கல், சின்னாளப்பட்டி பகுதிகளில் அண்ணா, கலைஞர், பேராசிரியர், நாவலர் உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்கள் நடந்தால், கு.சி.பழனிச்சாமி தன் பகுதியில் இருந்து மாணவர்களை அழைத்துச் செல்வார். தினசரி நூல்களைப் படிப்பது, விவாதிப்பது, பேச்சுப்பயிற்சி என இருந்த மாணவர்களுக்கு அண்ணா, கலைஞர், பேராசிரியர் உள்ளிட்டோரின் உரைகள், கொள்கை உணர்வை ஊட்டி வளர்த்தன. ‘பவளக்கொடி’, ‘வள்ளித் திருமணம்’, ‘சாரங்கதாரா’, ‘நல்லதங்காள்’ ஆகிய நாடகங்கள்தான் கும்மம்பட்டியில் ஆண்டாண்டு காலமாக நடந்தன. அவை தவிர, வேறு எந்த நாடகத்தையும் கும்மம்பட்டி மக்கள் பார்த்ததில்லை. அதனால், பகுத்தறிவுக் கருத்துகளை நாடகம்மூலம் வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது, கலைமன்றம். சுமார் மூன்று ஆண்டுகள்...

உமர்காலித் பெற்றுத்தந்த தீர்ப்பு!

உமர்காலித் பெற்றுத்தந்த தீர்ப்பு!

ஒன்றிய ஆட்சியின் அடக்குமுறை சட்டங்களில் ஒன்றான உபா. (Unlawful Activities Prevention Act) சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த சட்டமே அரசியல் சட்டத்திற்கு எதிரான சட்டம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். பிணை வழங்காமல் நீண்டகாலம் சிறையில் அடைத்து வைப்பதற்காகவே இந்த சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டம் குறித்து அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் உயான் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். உபா சட்டத்தில் கைதானவர்களுக்கும் பிணை வழங்கலாம் என்று கூறிய நீதிபதிகள் “பிணை என்பது விதியாகவும்; சிறை என்பது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும்” என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்ல ஏற்கனவே இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றமே பிணை வழங்க மறுத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது என்றும் அந்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சையத் இப்திகார்...

தோப்புக்கரணம் போடுகிறார்!

தோப்புக்கரணம் போடுகிறார்!

சபாஷ்! வாழ்த்து என்று பூரித்து பூங்கொத்து கொடுத்து மாலையிட்டு பாராட்டு விழா நடத்தத் துடிக்கிறோம்; அப்படி யாருக்கப்பா! பாராட்டு விழா என்று கேட்கிறீர்களா? சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்! இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தான் அந்த பாராட்டுக்குரிய ‘மகாபுருஷர்’. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்? ‘பிராமண’ சேவையை கைக்கழுவி விட்டாரா? எதற்கெடுத்தாலும் இந்து விரோதி என்று கூச்சலிடமாட்டேன் என்று சபதமெடுத்துவிட்டாரா? ‘பிராமணர்’களைக் குறை கூறினால் மேடையில் கொதித்தெழுந்து அடிக்க பாயமாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டாரா? அப்படியெல்லாம் இல்லை! இனி இந்து மதத்தை எதிர்த்தால் மிரட்ட மாட்டேன்; நீதிமன்றம் போக மாட்டேன்; ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டேன்; மாறாக கடவுளிடம் மனு கொடுப்பேன் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். “சனாதனத்தை எதிர்க்கும் உதயநிதிக்கு நல்ல புத்தியைக் கொடு!” என்று கோவை புளியங்குளம் விநாயகரிடம் தோப்புக்கரணம் போட்டார் சம்பத் என்று தினமலர் செய்தி வெளியிட்டு இருக்கிறது. “ஓ விநாயகனே.. யானை முகத்தோனே; தும்பிக்கை நாயகனே; இது அடுக்குமா?...

வந்தே மாதரம் இஸ்ஸாமிய வெறுப்புப் பாடல்!

வந்தே மாதரம் இஸ்ஸாமிய வெறுப்புப் பாடல்!

‘ஜெய் ஹிந்த்’-தைப் போல ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லையும் தேசபக்தி முழக்கம் என்கிறார்கள் ‘சங்கிகள்’; அது உண்மையல்ல. பக்கிம் சந்திரா சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர் 1880இல் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற வங்க மொழி நாவலில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் அது. அப்போது ஆட்சியிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி, முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சென்னை, பம்பாய், கலகத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் அது. முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போர் மூலம் ஒழித்துவிட்டு, இந்து – ஆங்கிலேய ஆட்சியை உருவாக்க வைணவ இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதே நாவலின் மய்யமான கருத்து. சத்யானந்தா என்ற கதை நாயகன், இந்து இளைஞர்களைத் திரட்டும்போது, அந்த கதாநாயகன் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’. “நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கு இனம் – மதம் – பண்பாடு பெருமையைக் காப்பதற்கு, முஸ்லிம்களை ஒழித்தாக வேண்டும்; அவர்களை ஒழிக்காவிட்டால்...

1967-ல் திமுக வெற்றியின் போது பெரியார் கூறியது என்ன?

1967-ல் திமுக வெற்றியின் போது பெரியார் கூறியது என்ன?

எப்படியோ இன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வி அடைந்து மாற்றான் எதிரி ஆட்சியாகவே ஏற்பட்டுவிட்டது; அந்தப்படியே எதிரிகளும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள்; நானும் நினைத்துக் கவலைப்பட்டேன் ; துக்கப்பட்டேன்; என்னமோ நமது நல்ல வாய்ப்பின் காரணமாய், எதிரியின், புத்தி இல்லாத தன்மையின் காரணமாய்ப் பெரிதும் தங்களால், தங்கள் முயற்சியால் ஏற்பட்ட ஆட்சியை அனுபவிக்க வாய்ப்பு பெறாமல் ஒரே முழுக்கில் மண்ணெடுக்க ஆசைப்பட்டு ஆட்சியாளர்களை சங்கடமான நிலைக்குத் கொண்டுவர ஆசைப்பட்டதால் ஆட்சியாளர் நேர்மையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததும், ஆட்சியாளர்களை ஒழிக்கத் திட்டம் போட்டு விட்டார்கள். இது நமக்கு ஒரு நல்வாய்ப்பாய் வாய்த்தது என்று கருதி இந்த ஆட்சியை விழாமல் செய்து அது உள்ளவரையிலாவது மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படும்படி செய்ய முடியுமா? என்று சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பெரிதும் பார்ப்பனர் முயற்சியால் ஆட்சி தி.மு.க.வுக்குக் கிடைக்கும் வாய்ப்பு வந்தது என்றாலும் தி.மு.க. பார்ப்பனர் அல்லாதார் என்பதையும், அதிலும் அவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்பதையும், இவர்கள் பதவிக்காக...

கலையின் வழியாக கலகம் செய்த கும்மம்பட்டி

கலையின் வழியாக கலகம் செய்த கும்மம்பட்டி

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டி குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை தொடர். 1948-ஆம் ஆண்டு, ஓமந்தூர் ராமசாமி தலைமையிலான அரசு, சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தியை மீண்டும் கட்டாயப் பாடமாக்கியது. நீறுபூத்த நெருப்பாக இருந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரின் உணர்ச்சிப் பிழம்புகள் மீண்டும் வெடிக்கத் தொடங்கின. அந்த உணர்வுகளுக்குத் தப்பாத ஒரு கிராமம் கும்மம்பட்டி. திண்டுக்கல்லில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர். அந்த ஊரைச் சேர்ந்த கு.சி.பழனிச்சாமி, எந்நேரமும் கையில் பெரியார், அண்ணா நூல்களை வைத்திருப்பவர். பத்தாம் வகுப்பு மாணவரான அவர், சக மாணவர்களோடு உரையாடும்போதுகூட தமிழ், தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு பற்றியதாகவே இருக்கும். ‘திராவிடப் பண்ணை’ நூல்களை வாங்கி, தான் படிப்பதோடு...

தேடிவந்த முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்தவர் பெரியார்!

தேடிவந்த முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்தவர் பெரியார்!

சென்னை மாகாண முதலமைச்சர் பதவி தன்னை நாடி வந்த போது பெரியார் ஏற்க மறுத்தார். நீதிக்கட்சியின் உள்ளேயே பெரியார் பதவி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தற்கிடையே பெரியார் கடும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. அந்தப் போராட்டம் குறித்து பெரியார் ஈரோட்டில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. உள்ளூரில் என்னை மதிக்கும் அளவுக்கு நானில்லை என்பது வாஸ்தவந்தான். அதைப் பொறுத்துத்தானே கழக வேலையும் இங்கு இருக்கும்? இன்று கூட இக்கூட்டத்தில் அரசியல் நிலையைப் பற்றிப் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். எனக்கு முன்னால் பேசிய நண்பர்களும் அரசியலைப் பற்றியும் பேசினார்கள். ஆனால், நான் அரசியலைப் பற்றி இந்த ஊரில் பேச இஷ்டப்படவில்லை. காரணம், அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் இவ்வூரில் மிகமிகச் சொற்பம்! இந்த ஊரில் பெரும்பாலும் எல்லாம் வியாபாரிகள்: அவர்களுக்கு அடிக்கடி ஆண்டவனிடம் மன்னிப்புக் கேட்கவும், அதற்கான பூசை, திருவிழா செய்யவுமே காலமெல்லாம் சரியாய் விடுகிறது. அதுவும்...

1973-ல் தஞ்சையில் பெரியாருக்கு கார் வழங்கும் விழாவில் நடந்தது என்ன?

1973-ல் தஞ்சையில் பெரியாருக்கு கார் வழங்கும் விழாவில் நடந்தது என்ன?

1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தஞ்சையில் பெரியாருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது. மேடையில் ஏறுவதற்கு பெரியாருக்கு ஏற்பட்ட இடையூறுகளை தவிர்த்து பிரச்சாரத்திற்கான மேடையை காரின் ஒரு பகுதியாக இணைத்து இந்தக் கார் தயாரிக்கப்பட்டது. இந்தக் காரை 5 மாதங்கள் மட்டுமே பெரியார் பயன்படுத்தினார். தியாகராய நகரில் பெரியாரின் இறுதி உரையை இந்தக் காரில் இணைக்கப்பட்ட மேடையில் தான் ஆற்றினார். பெரியாரின் அந்தக் கார் திருச்சி உறையூரில் உள்ள பெரியார் மாளிகையில் நிறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேடு (ஏப்ரல்-19) படத்துடன் ஒரு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. திராவிடர் கழகம் திட்டமிட்டு வரும் ‘பெரியார் உலகத்தில்’ இந்த வேன் காட்சிப் பொருளாக இடம்பெறப்போவதாக செய்தி கூறுகிறது. இந்தக் கார் வழங்கும் விழா, 1973 ஆக-19-ல் தஞ்சையில் எழுச்சியுடன் மாநாடு போல் நடந்தது. அந்த நிகழ்வுகள் குறித்து சில செய்திகளை இளையதலைமுறையின் கவனத்துக் கொண்டு வருகிறோம்....

வந்துட்டாங்கப்பா தேர்தல் ஆணையம்!

வந்துட்டாங்கப்பா தேர்தல் ஆணையம்!

டும் டும்..டும்…டும்..தேர்தல் அறிவிப்பு வந்தாச்சு; தேர்தல் ஆணையம் களத்தில் இறங்கி விட்டோம்.  இனி வாகனங்களில் லட்சக்கணக்கில் வணிகத்துக்கோ குடும்ப செலவுக்கோ திருமணத்துக்கோ பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து விடுவோம். நாங்கள் தேர்தலில் பணப்பழக்கத்தையே முற்றாக ஒழித்து விட உறுதி எடுத்து வந்து விட்டோம் இதை நீங்கள் நம்ப வேண்டும்.  அடுத்த 30-நாட்களுக்கு கட்சி அடையாளங்களையே உங்கள் நினைவில் இருந்து அகற்றப் போகிறோம்; இதற்காக சுவர் எழுத்துக்களை அழிக்க கிளம்பிவிட்டோம்; எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்களை பூட்டு போட புறப்பட்டு விட்டோம்; தலைவர்கள் படங்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு அரசு அலுவலகத்தில் இருக்கவே கூடாது அகற்றப் போகிறோம். எந்தத் தலைவரின் நினைவும் உங்கள் கனவில் கூட வரக்கூடாது அதற்கான மந்திரக்கோல் எங்களிடம் இருக்கிறது.  ஆனால் அலுவலகங்களில் பூஜை போடும் சரஸ்வதி,விநாயகர், ராமன் படங்களில் கை வைக்க மாட்டோம். இது பாஜகவின் சின்னம்தான் என்பது எங்களுக்கும் தெரியும். இதில் கை வைத்தால்...

1971-ல் பெரியார் சொன்னதை மனதில் வைப்போம் -மு.க.ஸ்டாலின்

1971-ல் பெரியார் சொன்னதை மனதில் வைப்போம் -மு.க.ஸ்டாலின்

இங்கு கூடி­யி­ருக்­கும் ஒவ்­வொரு உடன்­பி­றப்­பும், மக்­களிடம் போகும் போது சொல்ல வேண்­டி­யது என்ன? நடக்க இருக்­கும் தேர்­தல், தி.மு.க. vs NDA கிடை­யாது! தமிழ்­நாடு வெர்­சஸ் NDA! இன்­னும் எளி­மை­யாக சொல்ல வேண்­டும் என்­றால், வெல்­லப் போ­வது, தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா? என்­ப­துதான் 2026 தேர்­தல்! இதில் நம்­மு­டைய தமிழ்­நாடு அணி வெற்றி பெற வேண்­டும் என்­றால், தி.மு.க. தலைமையி­லான மதச்­சார்பற்ற முற்போக்­குக் கூட்­ட­ணி தான் வெற்றி பெற வேண்­டும்! உங்கள் வாக்­கு­க­ளைத் தி.மு.க.வுக்­கும் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்­கும் போடுங்கள் என்று கேளுங்­கள்! இது­தான் நீங்­கள் அடுத்த இரண்டு மாதத்திற்கு இடை­விடாமல் மக்­க­ளி­டம் பரப்ப வேண்­டிய மெசேஜ்! இந்த நேரத்­தில், தந்தை பெரி­யார் 1971 தேர்­த­லின்­போது சொன்னதை, நினைத்­துப் பார்க்­கி­றேன். “தி.மு.க. ஆட்சி தொடர்ந்­தால்­தான், தமிழ்ச்­ச­முதா­யம் எதிர்­பார்க்­கும் முன்னேற்­றம் ஏற்­ப­டும்” என்­றார். இப்­போ­தும் தந்தை பெரியார் சொன்­னதை மன­தில் வைத்து நம்­மு­டைய பயணத்­தைத் தொடர வேண்­டும்! இங்கே வந்­த­தும் என்­னு­டைய நினை­விற்கு...

‘அவதார’ ராமனுக்கு அவசர வேண்டுகோள்!

‘அவதார’ ராமனுக்கு அவசர வேண்டுகோள்!

ஓ..ஸ்ரீராம பகவானே! இந்து ராஷ்டிரத்தின் காட் பாதரே.. வழிகாட்டியே தத்துவமே.. உங்களை நம்பி வாழும் எங்கள் மோடி ராஜ்ஜியத்துக்கு சோதனைமேல் சோதனை வந்துகொண்டே இருக்கிறதே. உன் ஞானக் கண்களுக்கு தெரிகிறதா? நம்புகிறோம்! நாங்கள் நம்புகிறோம். எல்லாம் அறிந்த உனக்கு நிச்சயமாக இது தெரியாமல் இருக்காது. எங்கள் மோடிஜியும் எங்கள் அமைச்சர்களும், உனக்கு கோயில் கட்ட உத்தரவிட்ட எங்கள் மோகன் பகவத்தும், சேவக்குகளும் சனாதனிகளும் உனது மகா சக்தியைத் தானே நம்பி இருக்கிறோம்? நாங்கள் எல்லாம் இப்போது திக்குமுக்காடி அரசியல், பொருளாதார நெருக்கடிகளில் தவிக்கிறோம்! திணருகிறோம். இது உனக்கு தெரியவில்லையா சுவாமி?. அமெரிக்கா மிரட்டுகிறது; வரி போடுகிறது. ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் வாங்காதே என்று ஆணையிடுகிறது. இந்துக்கள் வாழும் நமது புண்ணிய ஆன்மீக பூமியில் ஒரு ரூபாயின் மதிப்பு என்ன தெரியுமா? சொல்வதற்கே வாய் கூசுகிறது. அமெரிக்காகாரன் ஒரு டாலர் கொடுத்தால் அதற்கு நாம் 92 ரூபாயை எண்ணி வைக்க வேண்டும். அய்யகோ அமெரிக்காவின்...

பாஜக எங்கள் பண்பாட்டு எதிரி!  காவியை கருப்பு, சிவப்பு விரட்டி அடிக்கும்!

பாஜக எங்கள் பண்பாட்டு எதிரி! காவியை கருப்பு, சிவப்பு விரட்டி அடிக்கும்!

தி.மு.க. என்­கிற மாபெ­ரும் இயக்கம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்­க­ளி­டம் வரும் கட்சியல்ல. மக்­க­ளின் உரிமைகளுக்காக எப்போதும் களத்­தில் நிற்­கும் கட்சி. எங்­க­ளுக்­குத் தெரி­யும்! தமிழ்நாட்­டின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்­பாட்டின், உண்மை­யான எதிரி யார்? என்று எங்க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். அந்த எதிரியை எதிர்க்­கும் தெம்­பும், திரா­ணியும் கொண்ட ஒரே இயக்­கம் தி.மு.க என்­பது மக்­க­ளுக்­கும் நன்றாகத் தெரி­யும்! அ.தி.மு.க. என்­கிற முக­மூ­டியை போட்­டுக் கொண்டு வந்தால், எங்­க­ளு­டைய தமிழ்நாட்டு மக்­க­ளுக்கு உங்களை அடையாளம் தெரி­யாமல் போய்­வி­டுமா? உங்­க­ளின் முகத்திரை­யைக் கிழித்து, தமிழ்­நாட்டு மக்க­ளி­டம் நாங்­கள் அம்­ப­லப்­ப­டுத்து­வோம். தமிழ்நாட்டை எப்ப­டி­யா­வது நம்மிடம் இருந்து, விழுங்கிட­லாம் என்று நினைக்­கி­றது காவிக் கூட்டம். எங்­கள் கருப்பு – சிவப்பு பட்டாளம் இருக்­கி­ற­வரை அது நடக்­கவே நடக்­காது. உங்­கள் அப்பனே வந்தா­லும் நடக்­காது. நடக்க விட­மாட்­டோம். இது அவர்­க­ளுக்­கும் நன்­றா­கத் தெரி­யும். அத­னால்­தான், அ.தி.மு.க. என்ற கட்­சி­யைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்­கு­கி­றார்­கள். அர­சி­ய­லில் நேர்...

தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்!-ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி

தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்!-ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி

‘ஈரோட்டுப் பாதை சரியா?’ நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களுக்கான பதிலின் தொடர்ச்சி. தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியாக 22.11.1925 குடிஅரசு இதழில் ‘தமிழ் தினசரி பத்திரிக்கை’ என்ற ஒரு தலையங்கத்தை பெரியார் எழுதியுள்ளார். அதில், ‘தென்னிந்தியாவுக்கு, தென் இந்தியர்களுக்கு, ஒரு நம்பிக்கையும் யோக்கியமும் உள்ள தமிழ் தினசரி பத்திரிக்கை வேண்டுமா? வேண்டாமா? என்று யோசிக்க வேண்டும். குறைந்தது ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். ஒரு வருடத்தில் பத்தாயிரம் சந்தாக்கள் சேர வேண்டும். 50,000 இல்லாமல் ஆரம்பிப்பது நிலை பெற தக்கதாகாது. அதற்கு பங்கு ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் 20 ஆயிரம் பங்கு கொண்ட ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். 50 ஆயிரம் ரூபாய் வசூலித்த பிறகுதான் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் ஜில்லாக்களாகிய 12 ஜில்லாக்களுக்கும் ஜில்லா ஒன்றுக்கு 5000 ரூபாய் முன்பணம் வசூலிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டு, “பத்திரிகையின் கொள்கை பிராமணரல்லாதாருடையவும்...

குடிமங்கலத்தில் பெரியார் நினைவுநாளில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

குடிமங்கலத்தில் பெரியார் நினைவுநாளில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று “மனிதம் நமது அடையாளம் ; ஜாதி என்பதுஅவமானம்” எனும் தலைப்பில் மடத்துக்குளம் ஒன்றிய மாவட்டக் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கணக்கன் (மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர்) தலைமை தாங்கினார். சிவானந்தம் (மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர்), கடத்தூர் அய்யப்பன் (மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 11:00 மணிக்கு குடிமங்கலம் நான்கு சாலை சந்திப்பு, மதியம் 12.00 மணி அளவில் கொங்கல் நகரம் பேருந்து நிறுத்தம் அருகில், மாலை 03.00 மணியளவில் பெதப்பம் பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் என் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. துரைசாமி (கழகப் பொருளாளர்), பரிமள ராசன் (சமூக வலைதள பொறுப்பாளர்), முகில் ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), தமிழ் அமுதன் ( மார்க்சிய சிந்தனையாளர்), வழக்கறிஞர்.பெரியார்தாசன் (ஆதித்தமிழர் பேரவை), ஈழவேந்தன்...

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்கள் மீது இதுவரை அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நிகழ்த்தி வந்த பல்வேறு வகையான உழைப்பு சுரண்டலை சட்டரீதியாக செய்வதற்கான ஒரு ஏற்பாடு புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பாகும். விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாக இந்நாட்டின் உழைக்கும் மக்களும் போராடிப் பெற்ற 29 சட்டங்களையும் நீக்கிவிட்டு அவற்றை நான்கு சட்ட தொகுப்புகள் ஆக சுருக்கி புதிய தொழிலாளர் சட்டங்களை நிறுவியுள்ளது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இந்த சட்டத் தொகுப்பில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்வது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்/ள்களின் கடமையாகும். இந்தச் சட்ட தொகுப்பில் உள்ள சிக்கல்களை சுருக்கமாகப் பார்ப்போம். புதிய சட்டத்தின் சிக்கல்கள்! ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதே தற்போதைய வேலை நேரமாக உள்ளது. புதிய சட்ட தொகுப்பு இதில் ஒரு முக்கிய திருத்தத்தை செய்கிறது. வாரத்திற்கு ஆறு நாள் வேலை என்பது கட்டாயம் அல்ல. மாறாக...

கொள்கைக்காக உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள்-  அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு

கொள்கைக்காக உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள்- அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 8,9 ஆகிய தேதிகளில் திமுக இளைஞர் அணி நடத்திய இருவண்ணக் கொடிக்கு வயது 75 நிகழ்ச்சியில் ‘கருஞ்சட்டை கழகமும் கருப்பு சிவப்புக் கழகமும்’ என தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி. இந்திய விடுதலையைப் பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இரண்டு விதமான கருத்து வேறுபாடு இருந்தது. தலைவர் பெரியார் துக்கநாள் என்றார். பொதுச்செயலாளர் அண்ணா மகிழ்ச்சியான நாள் என்றார். இரண்டு எதிரிகளில் ஒருவன் போய்விட்டான், மகிழ்ச்சி என்றார் அண்ணா. வெள்ளைக்காரனை விட இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பவன் மோசமானவன் என்பது பெரியாரின் நிலை. அப்படித்தான் இருந்தது நிலைமை. ஆகஸ்ட் 15 விடுதலை என்றார்கள், பார்ப்பனர்களுக்கு விடுதலையாக இருந்தது. அப்படித்தான் தூத்துக்குடி மாநாட்டில் ஒரு தீர்மானத்தை பெரியார் 1948-இல் இயற்றினார். மற்ற மாகாணங்களில் என்னமோ செய்துவிட்டுப்போ. “ சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் இந்திய யூனியன் அரசாங்கம் சென்னை மாகாண ஜாதிவாரி பிரதிநிதித்துவ முறை சட்டத்தை தபால், தந்தி, ரயில்வே,...

ஆணவப் படுகொலை; சில வரலாற்றுத் தகவல்கள்

ஆணவப் படுகொலை; சில வரலாற்றுத் தகவல்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி கே.என் பாஷா தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளார். ஆணவப் படுகொலைகள் குறித்து பல வரலாற்றுத் தகவல்களை தருகிறது இக்கட்டுரை… தீண்டாமைக் குற்றச் சட்டம் (Untouchability offences act, 1955) என்னும் சட்டம்தான் தற்போதைய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கான முன்னோடி. முந்தைய சட்டத்தின் போதாமைகளால் உருவானதுதான் பட்டியல் ஜாதியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம். இளையபெருமாள் ஆணையத்தை அடிப்படையாகக் கொண்டு, இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒரு படுகொலை ஆணவப் படுகொலையா இல்லையா என்பதை வேறுபடுத்தி, அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளத் தனிச்சட்டம் தேவையாக இருக்கிறது. இத்தகைய தனிச்சட்டங்கள் குறித்து நீதிமன்றங்களின் பார்வையை கணக்கில் கொண்டால் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளலாம். உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளுக்கான தனிச்சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டேதான் இருந்திருக்கிறது. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அளித்த மூன்று வழக்குகளின் தீர்ப்புகளில் இவை வலியுறுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டாக...

எளிய ஆங்கிலத்தில் பெரியாரியலை பேசும் நூல் “Periyar, Caste, Nation,Socialism”

எளிய ஆங்கிலத்தில் பெரியாரியலை பேசும் நூல் “Periyar, Caste, Nation,Socialism”

பெரியாரிய மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ஆர் (எஸ்.வி ராஜதுரை) எழுதிய பெரியார் குறித்த ஆங்கில நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. “பெரியார் ஜாதி, தேசம் மற்றும் சோசலிசம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆங்கில நூல், உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பெரியார் அம்பேத்கர் சிந்தனையாளரான வித்யாபூஷன்ராவத் என்ற ஜாதி எதிர்ப்புப் போராளி எஸ்.வி.ஆர் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பே இந்த நூல். பெரியார், அம்பேத்கர் இடையிலான கொள்கை உறவுகள், பெரியாரின் வடநாட்டு பயணங்கள், புத்த மார்க்கம் குறித்த இவர்களது பார்வைகள், திராவிட இயக்கம் பட்டியலின பிரிவினருக்கான உறவுகள் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. பல வரலாற்றுச் செய்திகள் இதில் குவிந்து கிடக்கின்றன. பெரியாரின் வடநாட்டுப் பயணங்கள் குறித்த விரிவான செய்திகள் இடம் பெற்றுள்ளன. 1944 தொடங்கி 1970 வரை பெரியார் கல்கத்தா, கான்பூர் (இரண்டு முறை), லக்னோ (இரண்டு முறை), டெல்லி, பம்பாய் (மூன்று முறை) மற்றும் பூனே நகரங்களுக்கு பெரியார்...

பெரியார் பற்றிய சரியான புரிதலுக்கு  அவரது மூலநூல்களைப் படிக்க வேண்டும் – கொளத்தூர் மணி

பெரியார் பற்றிய சரியான புரிதலுக்கு அவரது மூலநூல்களைப் படிக்க வேண்டும் – கொளத்தூர் மணி

குடிஅரசு தொகுப்புகளை வெளியிட்ட பதிப்பாசிரியர் கொளத்தூர் மணிக்கு சிறந்த பதிப்பாளர் விருதை சீர் வாசகர் வட்டம் வழங்கியது.விருது ஏற்பு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை; கடந்த இதழின் தொடர்ச்சி. பெரியார் பட்டத்தை யார் கொடுத்தது என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பெரியார் பட்டத்தை யாரும் கொடுக்கவில்லை. 1929-ல் செங்கல்பட்டு மாநாட்டில் கடைசி தீர்மானம், இந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டி எழுப்பி இதை நடத்திக் கொண்டிருக்கிற ராமசாமி பெரியார் என்பவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 1938-ல் பெரியார் என்ற பட்டம் வழங்கவில்லை. பெண்கள் நடத்திய அந்த மாநாட்டில் ஈ.வெ.ராமசாமியை எழுத்திலும், பேச்சிலும் ‘பெரியார்’ என்று குறிப்பிட வேண்டும் என்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் என்ற பட்டம் வழங்கப்படவில்லை. தியாகராய நகர் மாதர் முன்னேற்றக் கழகம் செயலாளராக இருந்த டாக்டர் தர்மாம்பாள் தீர்மானங்களை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தை 11.11.1938-ல் விடுதலை இதழில் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த...

திடீர் நிகழ்வுகளுக்குக் கடவுள் காரணமா?  கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-15

திடீர் நிகழ்வுகளுக்குக் கடவுள் காரணமா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-15

கேள்வி: நாம் நினைத்துப் பார்க்காத ஓர் நொடிக்குள் எல்லாம் நடந்து போகிறது. அப்படியாயின், நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றுதானே பொருள்? அதனை உங்களால் நிராகரிக்க முடியுமா? பதில்: அப்படி ஓர் நொடிக்குள் நடந்து முடிவதாக நாம் கருதுகிறோம். ஆனால் அது மெய்யல்ல. “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்” -என்பார் வள்ளுவர். மென்மையான மயிலிறகுதான் என்றாலும், ஏற்றியுள்ள வண்டி, அம்மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து கெடும். அளவு மாறும் போதும் குணம் மாறுகிறது. ஆம் மயிலிறகை ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆயினும் ஒரு கட்டத்தில்தான் அச்சு முறிகிறது. இதன் பொருள், அந்தக் கணத்தில் ஏற்றப்பட்ட ஒற்றை மயிலிறகின் பாரம் தாங்காமலா அச்சு முறிந்தது. இல்லை மயிலிறகு ஏற ஏற அச்சு இற்றுக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அதன் தாங்கும் சக்தி தகர, அச்சு முறிகிறது. அளவு மாற்றத்தால் ஏற்பட்டது குணமாற்றம். அந்த நொடியில், பாய்ச்சல்...

உலக ஆய்வாளர்கள் பங்கேற்ற பெரியார் கருத்தரங்கம்

உலக ஆய்வாளர்கள் பங்கேற்ற பெரியார் கருத்தரங்கம்

தொன்­மை­யான தமிழ் பண்­பாடு உலக சிந்­த­னைக்கு அளித்த எத்­த­னையோ கொடை­க­ளில் இரண்­டினை முதன்­மைப்­படுத்திச் சொல்ல வேண்­டும் என்­றால் அது ஐயன் திரு­வள்­ளு­வ­ரின் திருக்குறளும், பெரியாரின் சிந்­த­னை­க­ளும் என­லாம். திரு­வள்­ளு­வர் தொடர்ந்து மொழி­யாக்­கம் செய்­யப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார். லண்­டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்­கு­றளை 1886-ஆம் ஆண்டே மொழி­யாக்­கம் செய்த ஜி.யு.போப் அவர்­க­ளின் கல்­ல­றைக்கு சென்று மரி­யாதை செலுத்தியுள்ளார். அத­னால் திருக்­கு­றள் உல­கில் பர­வ­லாக அறி­யப்பட்­டது. பெரி­யா­ரைப் பொறுத்­த­வரை அவர் தன் சிந்­தனைகளைத் தொகுத்து நூலாக எழு­த­வில்லை. ஒரு சில பிர­சு­ரங்­கள் அவர் பெய­ரில் வந்துள்ளனவே தவிர, ஒரு விரி­வான அர­சி­யல் தத்­துவ நூலா­கவோ, சித்­தாந்த நூலா­கவோ எழு­த­வில்லை. மாறாக அவர் தொடர்ந்து மக்களி­டையே பிரச்­சா­ரம் செய்து பெரும் சிந்­த­னைப் புரட்­சியை பொது­மன்­றத்­தில் உரு­வாக்­கி­ய­வர். செயல்­முறை தத்­து­வம் (philosophical praxis) என்­பதை மேற்­கொண்­ட­வர். கற்­றோ­ருக்­கான நூல்­களை எழுதுவதைவிட, அனைத்து மக்­க­ளை­யும் சிந்­திக்க வைத்து சுய­ம­ரியா­தையை சுடர் விடச் செய்­வதையே அவர் முக்­கி­யப் பணி­யா­கக் கரு­தி­னார். அவர்...

.    சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)

. சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். `நரசிம்மன் நகர்’ கடந்த இதழின் தொடர்ச்சி இது. ஆனைமலை ஆற்றங்கரையை அடுத்து, நரசிம்மனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருந்தது. மக்கள் போக்குவரத்து நிறைந்த பகுதி. அங்குள்ள நெடுஞ்சாலையை யொட்டி திராவிடர் கழகக் கட்டடமும் அதில் பகுத்தறிவுப் படிப்பகமும் அமைக்கப் பட்டிருந்தன. அங்குள்ள நாயக்கர் தெருவில்தான் நரசிம்மனின் வீடு இருந்தது. அந்த வீட்டிற்குள் பெரியாரின் வேன் வந்து செல்வதற்காகவே நுழைவாயிலில் தனிவழி அமைத்திருந்தார். வீட்டின் புல்தரையில் பெரியாருடன் அமர்ந்து பேசிய வரலாறும் உண்டு. இத்தகைய பேச்சுக்களின் ஊடாக, நரசிம்மனுக்கு மூன்று முக்கிய ஆலோசனைகளை வழங்கியிருந்தார் பெரியார். 1) தன்னிடம் இருக்கும் நிலத்திலோ அல்லது புதிதாக வாங்கியோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றாக இருக்கும் வகையில் பகிர்ந்தளிக்க வேண்டும். 2) தனது செல்வாக்கைப்...

புத்தர் பேசிய கடவுள் மறுப்பு              கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-14

புத்தர் பேசிய கடவுள் மறுப்பு கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-14

பேராசிரியர் அருணன் எழுதிய ‘கடவுளின் கதை’ மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. முதல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரையிலுருந்து சில செய்திகள்… உலக வரலாற்றிலேயே ஒரு மதத்தின் நிறுவனர் வலுவான கடவுள் எதிர்ப்பு வாதங்களை முதன்முதலாக முன்வைத்தார் என்றால் அவர் புத்தர்தான். கடவுள் எதிர்ப்போடு ஒரு புதிய சமூக ஒழுங்குமுறையை, சிந்தனை கட்டமைப்பை நடைமுறைப்படுத்த முயன்ற மகா புதுமையான முயற்சி புத்தருடையது. அவருக்குப் பிறகு இத்தகைய முயற்சியில் ஈடுபட்ட வேறு மத நிறுவனர் உலகில் தோன்றவும் இல்லை. இவரே முதலும் முடிவும் ஆனவர். புத்தரின் வாக்கு என்று பலராலும் ஒப்புக்கொள்ளப்படுகிற ஓர் உரையாடல் ‘தீவிக்க சுத்தம்’ எனும் நூலில் உள்ளது. அதில் ”பிரம்மா” எனத் தாங்கள் கூறுகிற ஒன்றை பார்ப்பனர்களில் எவராவது நேருக்கு நேர் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்களா எனும் கேள்வியை எழுப்பினார் புத்தர். அப்படிச் சொல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார், ஆனால், “தாங்கள் எதை அறியவில்லையோ, எதைப் பார்க்கவில்லையோ அதனோடு ஒன்றுபடுகிற மார்க்கத்தை மட்டும்...

கடவுளின் குரலை  “மனம்” பேசுகிறதா?  கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)

கடவுளின் குரலை “மனம்” பேசுகிறதா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)

கேள்வி: மனம் ஒரு குரங்கு, மனசை அடக்கு என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள். மனமும், சிந்தனையும் ஒன்றா? ‘சிந்தனைசெய் மனமே’ என்று திரைப்படப் பாடல் சொல்கிறதே! மனதும் அறிவும் வெவ்வேறுதானே! அப்படியாயின், மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே? மனசெல்லாம் மத்தாப்பு, மனநிம்மதி, மனநிறைவு, மனசாட்சி இப்படி ஏராளமான சொற்களை அன்றாடம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குரங்கு என்று ஆன்மீகவாதிகள் மட்டுமா சொன்னார்கள்? இல்லை. “மனசாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது” என்பது கலைஞர் சினிமா வசனமும் கூட. மார்க்சின் எழுத்துகளில் கூட மனசாட்சி என்ற சொல்லைக் காண முடியும். மனம் என்ற சொல் ஆன்மீகத்துக்கு பட்டாபோட்ட சொல் அல்ல; ஆனால் எது மனம் என்பதை விளக்குவதில்தான் ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவாளர்களும் மாறுபடுகின்றனர். மனம் என்பது தனித்து சுயம்புவாக இயங்குவதாக ஆன்மீகவாதிகள் சித்தரிப்பர். ஆனால் மனம் என்பது மூளை என்ற உறுப்பின் செயல்பாடென அறிவியலாளர் கூறுவர். மகிழ்ச்சி, கோபம் என பல்வேறு உணர்ச்சிகளை...

சட்டத்தில் `கடவுள்’ சொல்லை இணைக்க மறுத்த அம்பேத்கர்

சட்டத்தில் `கடவுள்’ சொல்லை இணைக்க மறுத்த அம்பேத்கர்

“அம்பேத்கரின் முகப்புரை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரகசிய வரலாறு” எனும் தலைப்பில் ஆகாஷ் சிங் ரத்தோ எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை ‘எதிர் வெளியீடு’ வெளியிட்டுள்ளது. இந்த நூலை திறனாய்வு செய்து ம.கி எட்வின் பிரபாகரன் ஜூலை 12.07.2025 அன்று நடைபெற்ற 28வது நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை (preamble) எழுதியது யார்? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, ஆய்வாளர் ஆகாஷ் சிங் ரத்தோர் ஆங்கிலத்தில் எழுதிய Ambedkar’s preamble: A secret history of the constitution of India என்ற புத்தகத்தை, எழுத்தாளர் ச.வின்சென்ட் தமிழில் மொழிபெயர்த்து, “அம்பேத்கரின் முகப்புரை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இரகசிய வரலாறு” எனும் பெயரில் நூலாகக் கொண்டு வந்துள்ளார். சந்தர்ப்பசாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, வேறு யாரும் இதனை எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பதை நிறுவுவதற்கான தரவுகளையும் மேற்கோள்களையும் தொகுத்தளித்து, அதன்மூலம் அம்பேத்கர்தான் முகப்புரையை எழுதினார் என்பதை...

மனிதம்-அடையாளம்; ஜாதி- அவமானம் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

மனிதம்-அடையாளம்; ஜாதி- அவமானம் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

ஜாதிப் பெருமைக்குள் புதையுண்டு கிடக்கும் ஜாதியவாதிகளே! உங்களிடம் சில கேள்விகள்: ஜாதி என்ற அடையாளம் நாம் தேர்வு செய்ததா? படிப்பு, தொழில், வாழ்க்கையைத் தான் நாம் தேர்வு செய்கிறோம். அதேபோல் ஜாதியை நாம் தேர்வு செய்கிறோமா? ஒரு காலத்தில் நமது மூதாதையர்கள் பிறந்த ஜாதிக்கு ஒதுக்கப்பட்ட தொழிலை மட்டும் செய்து வந்தார்கள் இப்போது அந்த தொழில்களை நாம் செய்கிறோமா? இல்லை. முடி வெட்டுவது, துணி துவைப்பது, செருப்பு தைப்பது, மலம் அள்ளுவது, செக்கு ஆட்டுவதும் ஜாதிக்கான தொழில் என்ற நிலையை இப்போது நாம் பின்பற்றுகிறோமா? ஜாதியை உதறி விட்டு வேறு தொழில்களுக்கு மாறிவிட்டோமா இல்லையா? இவற்றில் எல்லாம் ஜாதியைக் கைவிடலாம்; ஆனால் திருமணத்தில் மட்டும் கட்டாயமாக ஜாதியைப் பின்பற்ற வேண்டுமா? மேல் ஜாதி, கீழ் ஜாதி, தீண்டப்படாத ஜாதி என்று நம்மைப் பிரித்தார்கள். கெட்ட ஜாதி, நல்ல ஜாதி என்று இழிவுபடுத்தினார்கள்; நான் ஏன் கீழ் ஜாதி என்று ஜாதியை எதிர்த்து...

“விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல நீதித்துறை”

“விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல நீதித்துறை”

நீதித்துறை மீதான விமர்சனங்கள் வைக்கப்படும்போதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு என்கிற “பூச்சாண்டி” காட்டப்படுவது வழக்கமாகி வருகிறது. நீதிமன்றங்களும், தீர்ப்புகளும், நீதிபதிகளின் நடவடிக்கைகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையா என்றால் இல்லை…! அரசமைப்பு சட்ட சரத்து 19 (1) (a) படி இந்திய குடிமக்களுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது. இதன் பொருள், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனது கருத்துக்களை எந்த தடையும் இன்றி வெளிப்படுத்தவும், சுதந்திரமாகப் பேசவும் உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமை வரம்புகள் இல்லாமல் இல்லை. சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த உரிமை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படலாம். அதாவது சரத்து 19 (2) படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம் அல்லது ஒழுக்கம் அல்லது நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக பேச்சு மற்றும் கருத்துரிமை கட்டுப்படுத்தப்படலாம். இதில் நீதிமன்ற அவமதிப்பு என்பதைத்தான் நீதிபதி திரு.ஜி.ஆர்...

மானுடத்தை வாழவிடுங்கள்

மானுடத்தை வாழவிடுங்கள்

நாடார்கள், கவுண்டர்கள், முதலியார், வன்னியர்கள் என்று ஜாதிக்கொரு திருமண சேவை மையங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் இதற்கான விளம்பரங்கள் வரிசை கட்டி வருகின்றன. மக்களுக்கான சேவை மையங்கள் இப்போது மறைந்து விட்டன. ஜாதி கடந்த திருமணங்கள் என்றாலே அதை குற்றமாகப் பார்க்கிறது சமூகம். இதே ஜாதி நம்பிக்கையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டால் ஜாதி பார்க்க மாட்டார்கள். எந்த வகை இரத்தம் என்று தான் பார்ப்பார்கள். அது தனது ஜாதிக்காரர்கள் வகை இரத்தமாகத் தான் இருக்க வேண்டும் என்று பொங்கி எழ மாட்டார்கள். “எந்த ஜாதியாக இருந்தால் என்ன நல்ல மனசு இருக்கிறதே” என்று மாலை போட்டு பாராட்டுவார்கள். தன் வீட்டுப் பெண்ணுக்கு திருமணமாகி மணமுறிவு ஏற்பட்டு இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடும்போது மட்டும், ஜாதி தடையில்லை. பையன் நல்லவனாக இருந்தால் போதும் என்று ஜாதி மறுப்புக்கு வந்து விடுவார்கள். இந்தியாவில் ஜாதி அடையாளம் இப்படி தடுமாறுகிறது. இப்போது ‘குடிமகன்’...

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

வரலாற்று பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த சமூக புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். இது பூந்தோட்டத்தில் நடந்த புரட்சி! “எங்கள் ஊரில் முன்பு கோயில் இருந்தது. பெரியார் ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தார். ‘இந்த ஊர்ல இத்தன கோயில் இருக்கே? எத்தனை பள்ளிக்கூடம் இருக்கு? எவ்வளவு தற்குறியாவும், கைநாட்டுப் பசங்களாகவும் திரியறீங்க? பொம்பளங்கள, புள்ளை பெக்குற மெஷினாட்டம் வச்சிருக்கீங்க! பெண்களைப் படிக்க வச்சிங்கன்னா மொத்த சமுதாயத்தையும் காப்பாத்துவாங்க’ என்று பேசினார். உடனே கோயில்கள் எல்லாம் பள்ளிகளாக மாறிவிட்டன. இப்போது வீட்டுக்கு ஒரு குழந்தையை ஆசிரியருக்குப் படிக்க வைக்கிறோம். அதுவும் பெண் குழந்தையை” என்று கூறியுள்ளார். தினமணியின் மகளிர் மலர் ஒன்றில் ஒருமுறை மனோரமா அளித்த நேர்காணலில் சொன்ன தகவல் இது. மனோரமா சொன்ன அந்த ஊர், கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகே உள்ள பூந்தோட்டம் கிராமம்....

கண்டா வரச்சொல்லுங்க!

கண்டா வரச்சொல்லுங்க!

சர்வதேச விண்வெளி நிலையமாம்! அங்கே மனிதர்கள் போகிறார்களாம்! நமது பகவான்களும் தேவதைகளும் வாசம் செய்யும் புண்ணிய ஆகாயம் அது. “நாம் ஆண்டுதோறும் தர்ப்பைப்புல் வழியாக தர்ப்பணம் செய்து அரிசி, பருப்பு போன்ற பதார்த்தங்களை பிதுர்களுக்கு பார்சல் செய்கிறோம். அவர்களும் அதை சாப்பிட்டு சகல சௌபாக்கியத்துடன் வாழும் போது இந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஏன் இந்த வீண் வேலை? இது ஆச்சாரத்துக்கு பங்கம் விளைச்சுடும்” இப்படி வேத புரோகிதர்கள் நியாயமாக கேட்டிருக்க வேண்டும்; ஆனால் வாயைத் திறக்கவில்லை. சுபான்சு சுக்லா என்பவர் இப்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மய்யத்துக்கு போய்விட்டார்! அங்கே ஏற்கெனவே பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கிறார்கள். “சூரிய மண்டலத்தில் சூரிய பகவான் ஏழு குதிரைகளைப் பூட்டிய ஒற்றைச் சக்கரம் உள்ள ரதத்திலிருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் உலகத்துக்கு வெளிச்சத்தை தந்து கொண்டு வந்து வருகிறான். `பிராமண’ குடும்பத்துக்கு அவன் தான் தெய்வம். வேத ஆகம மந்திரங்களுக்கு அதி தேவதை” என்று...

கடவுளின் இருப்பை உடைக்கும் கேள்விகள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(5) -விடுதலை இராசேந்திரன்

கடவுளின் இருப்பை உடைக்கும் கேள்விகள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(5) -விடுதலை இராசேந்திரன்

உலகத்தையே உலுக்கியது அகமதாபாத் விமான விபத்து. பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர 234 பயணிகளும் மரணமடைந்து விட்டார்கள். கடவுள் இப்படி ஒரு தண்டனையைத் தர வேண்டுமா? என்ற கேள்வியை கடவுள் நம்பிக்கையாளர்கள் எவருமே கேட்கவில்லை. காசாவில் 54,000 அப்பாவி மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை கடவுள் ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வியையும் கடவுளை நோக்கி எவரும் கேட்கவில்லை. இஸ்ரேல் ஈரான் மீது குண்டு வீசுகிறது, ஈரான் பதிலளித்திருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக குண்டு வீசுகிறது. நாட்டில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் நான் அவதாரம் எடுத்து வருவேன் என்று கூறிய ‘கிருஷ்ண பகவான்’ ஏன் வரவில்லை என்று எந்த கீதை பக்தர்களாவது கேட்டர்களா? கேட்கவில்லை. மாறாக என்ன நடந்தது? விமான விபத்தையும் இஸ்லாமிய எதிர்ப்புக்கு பயன்படுத்தினர். விபத்துக்குள்ளான விமானத்தை இஸ்லாமிய நாடான துருக்கியின் நிறுவனம் ஒன்று பராமரிக்கிறது. எனவே விபத்தில் இஸ்லாமிய சதி இருக்கிறது என்றார் ஒருவர். அவர்தான் சங்கிகளின் ஊது குழலான...

தேசிய கூட்டணியில் முருக பகவான்

தேசிய கூட்டணியில் முருக பகவான்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையப் போகின்றன என்று எடப்பாடியும் நயினாரும் பேசாத நாள் இல்லை. அது வந்தே விட்டது கூட்டணிக்குள் கட்சிகளை இழுக்க அமித் ஷாவின் கீழ் இரண்டு படைகள் தயார் நிலையில் உள்ளன. ஒன்று, அமலாக்கப்படை! மற்றொன்று மத்திய புலனாய்வுப் படை! இப்போது மூன்றாவதாக ஒரு படை கிளம்பியுள்ளது, இது அறுபடை. ஆமாம்! தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப்போகிறார் முருக பகவான். மதுரை மாநாட்டுக்கு அறுபடை வீடுகளுடன் முருகன் வந்து சேர்ந்து விட்டார்! அதுவும் தனது மயில் வாகனத்தில், விபத்துக்கள் ஏதும் இன்றி பாதுக்காப்பாக வந்து விட்டார்! மாநாட்டுக்கு மாதிரி கோயில்களை முகப்புகளாக்கி அங்கே பூஜை சடங்குகளோடு பிரசாதம் வழங்கப் போகிறார்களாம். இது ஆகமத்துக்கு எதிரானது என்று அனைத்து ஜாதி அர்ச்சகர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. “இது எங்கள் கட்சி முருகன்; ஆகம முருகன் அல்ல” என்று வாதாடி நீதிமன்றத்தின் அனுமதியையும் பாஜகவினர் வாங்கி...

“நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”   நாத்திக விழா சிந்தனை(2)

“நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?” நாத்திக விழா சிந்தனை(2)

1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதில் அந்த வாசகங்களை விளக்கி பெரியார் எழுதிய கட்டுரையைக் கடந்த இதழில் வெளியிட்டு இருந்தோம். இதுகுறித்து மறைந்த பேராசிரியர் இராமநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். கடவுளை வணங்குகிறவர்களைக் காட்டுமிராண்டிகள் என கடுமையான சொற்களைப் பயன்படுத்தியவர் பெரியார் அதற்கான காரணம் என்ன தெரியுமா…. காட்டுமிராண்டி மக்களுக்கும், மற்ற மக்களுக்கும் என்ன வேறபாடு? எல்லோரும் மக்கள்தான். பொது இயல்பில் வேறுபாடில்லை. நடைமுறையில் வேறுபாடு உண்டு. காட்டுமிராண்டி மக்கள் வாழ்வில் அறிவொடுபட்ட செயல்முறைகள் இல்லை. மானம் இல்லாதவர். அறிவும் மானமும் இல்லாமல் விலங்கொடு விலங்காக வாழ்பவர். மனிதனுக்கு மற்ற உயிரினங்களைவிடப் பகுத்தறிவு இருக்கின்றது. அந்த அறிவைக்கொண்டே மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு உலகில் முன்னேறியிருக்கின்றான். ஆயினும் அவன் தன்னுடைய பகுத்தறிவைக் கொண்டு முன்னேற முடியாமல் கடவுள் கருத்தும், இதனை ஒட்டி எழுந்துள்ள கற்பனைகளும்,...

திருப்பரங்குன்றத்தின் வரலாறு என்ன?  மதக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா

திருப்பரங்குன்றத்தின் வரலாறு என்ன? மதக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா

மதுரையில் பாஜக ஜூன் 23 அன்று முருகன் அரசியல் மாநாடு ஒன்றுக்கு திட்டமிட்டுள்ளது திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அங்கே இந்து முஸ்லிம் பகைமையை உருவாக்கி மதக் கலவரத்தை உருவாக்குவது இந்த மாநாட்டின் நோக்கம். அங்கே இருக்கிற தர்காவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது. மதுரையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலையாக மாற்ற திமுக ஆட்சி முயற்சிக்கிறது என்றும் அதை முறியடிக்க வேண்டும் என்றும் மதவெறியை தூண்டும் வகையில் பேசி இருக்கிறார். உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன… திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான வெவ்வேறு பிரச்சினைகள் ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்த மதவெறிக் கும்பல்தான், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இதனைக் கையாண்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலில் சில தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற வெறியில், அதிகார வர்க்கத்தில் ஊடுருவியிருக்கும்...

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

கடவுள் இல்லை; எங்கே கடவுள் சக்தி? என்று நாத்திகர்கள் பேரணி நடத்துகிறார்கள் என்பதற்காக எந்த கடவுளும் கொந்தளிக்கவில்லை. “இதோ அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்கிறேன்,பார்!” என்று ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு ஓடி வரவில்லை. சரி, போகட்டும்;கொளத்தூர் கழக மகளிர் கனவில் வந்தாவது மிரட்டி இருக்கலாம் அதற்கும் தயாராக இல்லை உண்மையில் கொந்தளித்தது யார் தெரியுமா? கொளத்தூர் காவல்துறை தான். “அய்யோ கடவுள் எதிர்ப்புக்கு நாங்கள் அனுமதி தர முடியுமா? அது பாவமல்லவா?” என்பதற்காக காவல்துறை கொந்தளிக்கவில்லை. “சங்கிகள் கூச்சல்களை சந்திக்க வேண்டியிருக்குமே என்பதுதான் அவர்களின் பயம். “என்னை எதிர்ப்பவருக்கு பேரணி நடத்த அனுமதிக்காதே! அழித்துவிடுவேன்” என்று ஏதேனும் ஒரு காவல் அதிகாரி கனவில் வந்தாவது கடவுள் மிரட்டி இருக்கலாம் அதுவும் இல்லை” அப்படி எதுவும் நடக்காமலேயே கடவுள் பக்தியோ, பக்தர்களின் மனம் புண்படும் செயல்களையோ நிகழ்த்த மாட்டோம் என்று எழுதிக் கேட்டது காவல்துறை. “எதற்கு நாங்கள் எழுதித் தர வேண்டும்; கடவுளைப்...

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

பெரியார் மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசிய பார்ப்பனக் கைக்கூலிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி, பார்ப்பன சங்கராச்சாரிகளின் பார்ப்பன முகமூடியைக் கிழித்துக் காட்டியது. பெரியார் மீது கைவைத்தால் சங்கரச்சாரிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் களம் இறங்கியது. குறிப்பாக சங்கரமடம் உள்ள காஞ்சிபுரத்தில் 21.04.2025 மாலை 5 மணியளவில் பேருந்து நிலையம் அருகே எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனி பேருந்தில் காஞ்சிபுரம் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். காஞ்சி விஜயேந்திரன் கடந்த ஜனவரி 19 அன்று பெங்களூரில் ‘பிராமணர்கள்’ மாநாட்டில் இந்து சமூகத்தில் சூத்திர, பஞ்சமர்களிடம் இருந்து பிராமணர்கள் விலகி தங்களது மேலாண்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற இன ஒதுக்கல் கருத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசி இருந்தார். சூத்திர, பஞ்சமர்கள் அடிமைப்பட்டவர்கள் என்ற மனுதர்மம் விதிக்கும் கோட்பாடுகளுக்கு உயிரூட்டுவதே அவரது பேச்சின்...

“இந்து மதத்தை நாசப்படுத்துகிற கொடிய நஞ்சு பார்ப்பனியமே”

“இந்து மதத்தை நாசப்படுத்துகிற கொடிய நஞ்சு பார்ப்பனியமே”

அம்பேத்கரை உரையாற்ற அழைத்திருந்த ஜாத் பட்தோடக் மண்டல் அமைப்பில் 1920-ஆம் ஆண்டுகளில் துணைத் தலைவராக இருந்தவர் பெரியார். அப்போதும் பெரியாரை ‘நாத்திகர்’, ‘இந்து விரோதி’.’பார்ப்பன எதிர்ப்பாளர்’ என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் கூறிய புகாரின் அடிப்படையில் பெரியார் துணைத் தலைவர் பதவியில் நீட்டிக்கப்பட்டவில்லை. அதே அமைப்புதான் 1936-இல் அம்பேத்கரை ஜாதி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை ஏற்க அழைத்து, அவரது உரையை மாற்றியமைக்க வற்புறுத்தி அம்பேத்கர் மறுத்த நிலையில் மாநாட்டையே நிறுத்தியது. குடிஅரசில் பதிவுசெய்த அம்பேத்கர் உரையை ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்ற தலைப்பில் 4 அணா விலையில் நூலாக வெளியிட்டார் பெரியார். அம்பேத்கரின் உரை குறித்து காந்தியும் தனது ‘அரிஜன்’ நாளேட்டில் விமர்சித்து எழுதினார். அம்பேத்கர் எழுப்பிய வாதங்களுக்கு எந்த பதிலும் கூறாத காந்தி. “ஒரு மதத்தை அதன் மோசமான உதாரணங்களைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. அது உருவாக்கிய மிகச் சிறந்த உதாரணங்களைக் கொண்டே மதிப்பிட வேண்டும்” என்பதே காந்தியாரின் பதிலாக இருந்தது....