Category: கட்டுரைகள்

தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்!-ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி

தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்!-ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி

‘ஈரோட்டுப் பாதை சரியா?’ நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களுக்கான பதிலின் தொடர்ச்சி. தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியாக 22.11.1925 குடிஅரசு இதழில் ‘தமிழ் தினசரி பத்திரிக்கை’ என்ற ஒரு தலையங்கத்தை பெரியார் எழுதியுள்ளார். அதில், ‘தென்னிந்தியாவுக்கு, தென் இந்தியர்களுக்கு, ஒரு நம்பிக்கையும் யோக்கியமும் உள்ள தமிழ் தினசரி பத்திரிக்கை வேண்டுமா? வேண்டாமா? என்று யோசிக்க வேண்டும். குறைந்தது ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். ஒரு வருடத்தில் பத்தாயிரம் சந்தாக்கள் சேர வேண்டும். 50,000 இல்லாமல் ஆரம்பிப்பது நிலை பெற தக்கதாகாது. அதற்கு பங்கு ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் 20 ஆயிரம் பங்கு கொண்ட ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். 50 ஆயிரம் ரூபாய் வசூலித்த பிறகுதான் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் ஜில்லாக்களாகிய 12 ஜில்லாக்களுக்கும் ஜில்லா ஒன்றுக்கு 5000 ரூபாய் முன்பணம் வசூலிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டு, “பத்திரிகையின் கொள்கை பிராமணரல்லாதாருடையவும்...

குடிமங்கலத்தில் பெரியார் நினைவுநாளில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

குடிமங்கலத்தில் பெரியார் நினைவுநாளில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று “மனிதம் நமது அடையாளம் ; ஜாதி என்பதுஅவமானம்” எனும் தலைப்பில் மடத்துக்குளம் ஒன்றிய மாவட்டக் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கணக்கன் (மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர்) தலைமை தாங்கினார். சிவானந்தம் (மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர்), கடத்தூர் அய்யப்பன் (மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 11:00 மணிக்கு குடிமங்கலம் நான்கு சாலை சந்திப்பு, மதியம் 12.00 மணி அளவில் கொங்கல் நகரம் பேருந்து நிறுத்தம் அருகில், மாலை 03.00 மணியளவில் பெதப்பம் பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் என் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. துரைசாமி (கழகப் பொருளாளர்), பரிமள ராசன் (சமூக வலைதள பொறுப்பாளர்), முகில் ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), தமிழ் அமுதன் ( மார்க்சிய சிந்தனையாளர்), வழக்கறிஞர்.பெரியார்தாசன் (ஆதித்தமிழர் பேரவை), ஈழவேந்தன்...

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்கள் மீது இதுவரை அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நிகழ்த்தி வந்த பல்வேறு வகையான உழைப்பு சுரண்டலை சட்டரீதியாக செய்வதற்கான ஒரு ஏற்பாடு புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பாகும். விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாக இந்நாட்டின் உழைக்கும் மக்களும் போராடிப் பெற்ற 29 சட்டங்களையும் நீக்கிவிட்டு அவற்றை நான்கு சட்ட தொகுப்புகள் ஆக சுருக்கி புதிய தொழிலாளர் சட்டங்களை நிறுவியுள்ளது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இந்த சட்டத் தொகுப்பில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்வது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்/ள்களின் கடமையாகும். இந்தச் சட்ட தொகுப்பில் உள்ள சிக்கல்களை சுருக்கமாகப் பார்ப்போம். புதிய சட்டத்தின் சிக்கல்கள்! ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதே தற்போதைய வேலை நேரமாக உள்ளது. புதிய சட்ட தொகுப்பு இதில் ஒரு முக்கிய திருத்தத்தை செய்கிறது. வாரத்திற்கு ஆறு நாள் வேலை என்பது கட்டாயம் அல்ல. மாறாக...

கொள்கைக்காக உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள்-  அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு

கொள்கைக்காக உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள்- அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 8,9 ஆகிய தேதிகளில் திமுக இளைஞர் அணி நடத்திய இருவண்ணக் கொடிக்கு வயது 75 நிகழ்ச்சியில் ‘கருஞ்சட்டை கழகமும் கருப்பு சிவப்புக் கழகமும்’ என தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி. இந்திய விடுதலையைப் பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இரண்டு விதமான கருத்து வேறுபாடு இருந்தது. தலைவர் பெரியார் துக்கநாள் என்றார். பொதுச்செயலாளர் அண்ணா மகிழ்ச்சியான நாள் என்றார். இரண்டு எதிரிகளில் ஒருவன் போய்விட்டான், மகிழ்ச்சி என்றார் அண்ணா. வெள்ளைக்காரனை விட இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பவன் மோசமானவன் என்பது பெரியாரின் நிலை. அப்படித்தான் இருந்தது நிலைமை. ஆகஸ்ட் 15 விடுதலை என்றார்கள், பார்ப்பனர்களுக்கு விடுதலையாக இருந்தது. அப்படித்தான் தூத்துக்குடி மாநாட்டில் ஒரு தீர்மானத்தை பெரியார் 1948-இல் இயற்றினார். மற்ற மாகாணங்களில் என்னமோ செய்துவிட்டுப்போ. “ சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் இந்திய யூனியன் அரசாங்கம் சென்னை மாகாண ஜாதிவாரி பிரதிநிதித்துவ முறை சட்டத்தை தபால், தந்தி, ரயில்வே,...

ஆணவப் படுகொலை; சில வரலாற்றுத் தகவல்கள்

ஆணவப் படுகொலை; சில வரலாற்றுத் தகவல்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி கே.என் பாஷா தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளார். ஆணவப் படுகொலைகள் குறித்து பல வரலாற்றுத் தகவல்களை தருகிறது இக்கட்டுரை… தீண்டாமைக் குற்றச் சட்டம் (Untouchability offences act, 1955) என்னும் சட்டம்தான் தற்போதைய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கான முன்னோடி. முந்தைய சட்டத்தின் போதாமைகளால் உருவானதுதான் பட்டியல் ஜாதியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம். இளையபெருமாள் ஆணையத்தை அடிப்படையாகக் கொண்டு, இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒரு படுகொலை ஆணவப் படுகொலையா இல்லையா என்பதை வேறுபடுத்தி, அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளத் தனிச்சட்டம் தேவையாக இருக்கிறது. இத்தகைய தனிச்சட்டங்கள் குறித்து நீதிமன்றங்களின் பார்வையை கணக்கில் கொண்டால் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளலாம். உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளுக்கான தனிச்சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டேதான் இருந்திருக்கிறது. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அளித்த மூன்று வழக்குகளின் தீர்ப்புகளில் இவை வலியுறுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டாக...

எளிய ஆங்கிலத்தில் பெரியாரியலை பேசும் நூல் “Periyar, Caste, Nation,Socialism”

எளிய ஆங்கிலத்தில் பெரியாரியலை பேசும் நூல் “Periyar, Caste, Nation,Socialism”

பெரியாரிய மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ஆர் (எஸ்.வி ராஜதுரை) எழுதிய பெரியார் குறித்த ஆங்கில நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. “பெரியார் ஜாதி, தேசம் மற்றும் சோசலிசம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆங்கில நூல், உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பெரியார் அம்பேத்கர் சிந்தனையாளரான வித்யாபூஷன்ராவத் என்ற ஜாதி எதிர்ப்புப் போராளி எஸ்.வி.ஆர் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பே இந்த நூல். பெரியார், அம்பேத்கர் இடையிலான கொள்கை உறவுகள், பெரியாரின் வடநாட்டு பயணங்கள், புத்த மார்க்கம் குறித்த இவர்களது பார்வைகள், திராவிட இயக்கம் பட்டியலின பிரிவினருக்கான உறவுகள் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. பல வரலாற்றுச் செய்திகள் இதில் குவிந்து கிடக்கின்றன. பெரியாரின் வடநாட்டுப் பயணங்கள் குறித்த விரிவான செய்திகள் இடம் பெற்றுள்ளன. 1944 தொடங்கி 1970 வரை பெரியார் கல்கத்தா, கான்பூர் (இரண்டு முறை), லக்னோ (இரண்டு முறை), டெல்லி, பம்பாய் (மூன்று முறை) மற்றும் பூனே நகரங்களுக்கு பெரியார்...

பெரியார் பற்றிய சரியான புரிதலுக்கு  அவரது மூலநூல்களைப் படிக்க வேண்டும் – கொளத்தூர் மணி

பெரியார் பற்றிய சரியான புரிதலுக்கு அவரது மூலநூல்களைப் படிக்க வேண்டும் – கொளத்தூர் மணி

குடிஅரசு தொகுப்புகளை வெளியிட்ட பதிப்பாசிரியர் கொளத்தூர் மணிக்கு சிறந்த பதிப்பாளர் விருதை சீர் வாசகர் வட்டம் வழங்கியது.விருது ஏற்பு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை; கடந்த இதழின் தொடர்ச்சி. பெரியார் பட்டத்தை யார் கொடுத்தது என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பெரியார் பட்டத்தை யாரும் கொடுக்கவில்லை. 1929-ல் செங்கல்பட்டு மாநாட்டில் கடைசி தீர்மானம், இந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டி எழுப்பி இதை நடத்திக் கொண்டிருக்கிற ராமசாமி பெரியார் என்பவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 1938-ல் பெரியார் என்ற பட்டம் வழங்கவில்லை. பெண்கள் நடத்திய அந்த மாநாட்டில் ஈ.வெ.ராமசாமியை எழுத்திலும், பேச்சிலும் ‘பெரியார்’ என்று குறிப்பிட வேண்டும் என்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் என்ற பட்டம் வழங்கப்படவில்லை. தியாகராய நகர் மாதர் முன்னேற்றக் கழகம் செயலாளராக இருந்த டாக்டர் தர்மாம்பாள் தீர்மானங்களை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தை 11.11.1938-ல் விடுதலை இதழில் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த...

திடீர் நிகழ்வுகளுக்குக் கடவுள் காரணமா?  கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-15

திடீர் நிகழ்வுகளுக்குக் கடவுள் காரணமா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-15

கேள்வி: நாம் நினைத்துப் பார்க்காத ஓர் நொடிக்குள் எல்லாம் நடந்து போகிறது. அப்படியாயின், நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றுதானே பொருள்? அதனை உங்களால் நிராகரிக்க முடியுமா? பதில்: அப்படி ஓர் நொடிக்குள் நடந்து முடிவதாக நாம் கருதுகிறோம். ஆனால் அது மெய்யல்ல. “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்” -என்பார் வள்ளுவர். மென்மையான மயிலிறகுதான் என்றாலும், ஏற்றியுள்ள வண்டி, அம்மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து கெடும். அளவு மாறும் போதும் குணம் மாறுகிறது. ஆம் மயிலிறகை ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆயினும் ஒரு கட்டத்தில்தான் அச்சு முறிகிறது. இதன் பொருள், அந்தக் கணத்தில் ஏற்றப்பட்ட ஒற்றை மயிலிறகின் பாரம் தாங்காமலா அச்சு முறிந்தது. இல்லை மயிலிறகு ஏற ஏற அச்சு இற்றுக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அதன் தாங்கும் சக்தி தகர, அச்சு முறிகிறது. அளவு மாற்றத்தால் ஏற்பட்டது குணமாற்றம். அந்த நொடியில், பாய்ச்சல்...

உலக ஆய்வாளர்கள் பங்கேற்ற பெரியார் கருத்தரங்கம்

உலக ஆய்வாளர்கள் பங்கேற்ற பெரியார் கருத்தரங்கம்

தொன்­மை­யான தமிழ் பண்­பாடு உலக சிந்­த­னைக்கு அளித்த எத்­த­னையோ கொடை­க­ளில் இரண்­டினை முதன்­மைப்­படுத்திச் சொல்ல வேண்­டும் என்­றால் அது ஐயன் திரு­வள்­ளு­வ­ரின் திருக்குறளும், பெரியாரின் சிந்­த­னை­க­ளும் என­லாம். திரு­வள்­ளு­வர் தொடர்ந்து மொழி­யாக்­கம் செய்­யப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார். லண்­டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்­கு­றளை 1886-ஆம் ஆண்டே மொழி­யாக்­கம் செய்த ஜி.யு.போப் அவர்­க­ளின் கல்­ல­றைக்கு சென்று மரி­யாதை செலுத்தியுள்ளார். அத­னால் திருக்­கு­றள் உல­கில் பர­வ­லாக அறி­யப்பட்­டது. பெரி­யா­ரைப் பொறுத்­த­வரை அவர் தன் சிந்­தனைகளைத் தொகுத்து நூலாக எழு­த­வில்லை. ஒரு சில பிர­சு­ரங்­கள் அவர் பெய­ரில் வந்துள்ளனவே தவிர, ஒரு விரி­வான அர­சி­யல் தத்­துவ நூலா­கவோ, சித்­தாந்த நூலா­கவோ எழு­த­வில்லை. மாறாக அவர் தொடர்ந்து மக்களி­டையே பிரச்­சா­ரம் செய்து பெரும் சிந்­த­னைப் புரட்­சியை பொது­மன்­றத்­தில் உரு­வாக்­கி­ய­வர். செயல்­முறை தத்­து­வம் (philosophical praxis) என்­பதை மேற்­கொண்­ட­வர். கற்­றோ­ருக்­கான நூல்­களை எழுதுவதைவிட, அனைத்து மக்­க­ளை­யும் சிந்­திக்க வைத்து சுய­ம­ரியா­தையை சுடர் விடச் செய்­வதையே அவர் முக்­கி­யப் பணி­யா­கக் கரு­தி­னார். அவர்...

.    சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)

. சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். `நரசிம்மன் நகர்’ கடந்த இதழின் தொடர்ச்சி இது. ஆனைமலை ஆற்றங்கரையை அடுத்து, நரசிம்மனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருந்தது. மக்கள் போக்குவரத்து நிறைந்த பகுதி. அங்குள்ள நெடுஞ்சாலையை யொட்டி திராவிடர் கழகக் கட்டடமும் அதில் பகுத்தறிவுப் படிப்பகமும் அமைக்கப் பட்டிருந்தன. அங்குள்ள நாயக்கர் தெருவில்தான் நரசிம்மனின் வீடு இருந்தது. அந்த வீட்டிற்குள் பெரியாரின் வேன் வந்து செல்வதற்காகவே நுழைவாயிலில் தனிவழி அமைத்திருந்தார். வீட்டின் புல்தரையில் பெரியாருடன் அமர்ந்து பேசிய வரலாறும் உண்டு. இத்தகைய பேச்சுக்களின் ஊடாக, நரசிம்மனுக்கு மூன்று முக்கிய ஆலோசனைகளை வழங்கியிருந்தார் பெரியார். 1) தன்னிடம் இருக்கும் நிலத்திலோ அல்லது புதிதாக வாங்கியோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றாக இருக்கும் வகையில் பகிர்ந்தளிக்க வேண்டும். 2) தனது செல்வாக்கைப்...

புத்தர் பேசிய கடவுள் மறுப்பு              கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-14

புத்தர் பேசிய கடவுள் மறுப்பு கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-14

பேராசிரியர் அருணன் எழுதிய ‘கடவுளின் கதை’ மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. முதல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரையிலுருந்து சில செய்திகள்… உலக வரலாற்றிலேயே ஒரு மதத்தின் நிறுவனர் வலுவான கடவுள் எதிர்ப்பு வாதங்களை முதன்முதலாக முன்வைத்தார் என்றால் அவர் புத்தர்தான். கடவுள் எதிர்ப்போடு ஒரு புதிய சமூக ஒழுங்குமுறையை, சிந்தனை கட்டமைப்பை நடைமுறைப்படுத்த முயன்ற மகா புதுமையான முயற்சி புத்தருடையது. அவருக்குப் பிறகு இத்தகைய முயற்சியில் ஈடுபட்ட வேறு மத நிறுவனர் உலகில் தோன்றவும் இல்லை. இவரே முதலும் முடிவும் ஆனவர். புத்தரின் வாக்கு என்று பலராலும் ஒப்புக்கொள்ளப்படுகிற ஓர் உரையாடல் ‘தீவிக்க சுத்தம்’ எனும் நூலில் உள்ளது. அதில் ”பிரம்மா” எனத் தாங்கள் கூறுகிற ஒன்றை பார்ப்பனர்களில் எவராவது நேருக்கு நேர் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்களா எனும் கேள்வியை எழுப்பினார் புத்தர். அப்படிச் சொல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார், ஆனால், “தாங்கள் எதை அறியவில்லையோ, எதைப் பார்க்கவில்லையோ அதனோடு ஒன்றுபடுகிற மார்க்கத்தை மட்டும்...

கடவுளின் குரலை  “மனம்” பேசுகிறதா?  கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)

கடவுளின் குரலை “மனம்” பேசுகிறதா? கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (11)

கேள்வி: மனம் ஒரு குரங்கு, மனசை அடக்கு என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள். மனமும், சிந்தனையும் ஒன்றா? ‘சிந்தனைசெய் மனமே’ என்று திரைப்படப் பாடல் சொல்கிறதே! மனதும் அறிவும் வெவ்வேறுதானே! அப்படியாயின், மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே? மனசெல்லாம் மத்தாப்பு, மனநிம்மதி, மனநிறைவு, மனசாட்சி இப்படி ஏராளமான சொற்களை அன்றாடம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குரங்கு என்று ஆன்மீகவாதிகள் மட்டுமா சொன்னார்கள்? இல்லை. “மனசாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது” என்பது கலைஞர் சினிமா வசனமும் கூட. மார்க்சின் எழுத்துகளில் கூட மனசாட்சி என்ற சொல்லைக் காண முடியும். மனம் என்ற சொல் ஆன்மீகத்துக்கு பட்டாபோட்ட சொல் அல்ல; ஆனால் எது மனம் என்பதை விளக்குவதில்தான் ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவாளர்களும் மாறுபடுகின்றனர். மனம் என்பது தனித்து சுயம்புவாக இயங்குவதாக ஆன்மீகவாதிகள் சித்தரிப்பர். ஆனால் மனம் என்பது மூளை என்ற உறுப்பின் செயல்பாடென அறிவியலாளர் கூறுவர். மகிழ்ச்சி, கோபம் என பல்வேறு உணர்ச்சிகளை...

சட்டத்தில் `கடவுள்’ சொல்லை இணைக்க மறுத்த அம்பேத்கர்

சட்டத்தில் `கடவுள்’ சொல்லை இணைக்க மறுத்த அம்பேத்கர்

“அம்பேத்கரின் முகப்புரை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரகசிய வரலாறு” எனும் தலைப்பில் ஆகாஷ் சிங் ரத்தோ எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை ‘எதிர் வெளியீடு’ வெளியிட்டுள்ளது. இந்த நூலை திறனாய்வு செய்து ம.கி எட்வின் பிரபாகரன் ஜூலை 12.07.2025 அன்று நடைபெற்ற 28வது நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை (preamble) எழுதியது யார்? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, ஆய்வாளர் ஆகாஷ் சிங் ரத்தோர் ஆங்கிலத்தில் எழுதிய Ambedkar’s preamble: A secret history of the constitution of India என்ற புத்தகத்தை, எழுத்தாளர் ச.வின்சென்ட் தமிழில் மொழிபெயர்த்து, “அம்பேத்கரின் முகப்புரை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இரகசிய வரலாறு” எனும் பெயரில் நூலாகக் கொண்டு வந்துள்ளார். சந்தர்ப்பசாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, வேறு யாரும் இதனை எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பதை நிறுவுவதற்கான தரவுகளையும் மேற்கோள்களையும் தொகுத்தளித்து, அதன்மூலம் அம்பேத்கர்தான் முகப்புரையை எழுதினார் என்பதை...

மனிதம்-அடையாளம்; ஜாதி- அவமானம் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

மனிதம்-அடையாளம்; ஜாதி- அவமானம் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

ஜாதிப் பெருமைக்குள் புதையுண்டு கிடக்கும் ஜாதியவாதிகளே! உங்களிடம் சில கேள்விகள்: ஜாதி என்ற அடையாளம் நாம் தேர்வு செய்ததா? படிப்பு, தொழில், வாழ்க்கையைத் தான் நாம் தேர்வு செய்கிறோம். அதேபோல் ஜாதியை நாம் தேர்வு செய்கிறோமா? ஒரு காலத்தில் நமது மூதாதையர்கள் பிறந்த ஜாதிக்கு ஒதுக்கப்பட்ட தொழிலை மட்டும் செய்து வந்தார்கள் இப்போது அந்த தொழில்களை நாம் செய்கிறோமா? இல்லை. முடி வெட்டுவது, துணி துவைப்பது, செருப்பு தைப்பது, மலம் அள்ளுவது, செக்கு ஆட்டுவதும் ஜாதிக்கான தொழில் என்ற நிலையை இப்போது நாம் பின்பற்றுகிறோமா? ஜாதியை உதறி விட்டு வேறு தொழில்களுக்கு மாறிவிட்டோமா இல்லையா? இவற்றில் எல்லாம் ஜாதியைக் கைவிடலாம்; ஆனால் திருமணத்தில் மட்டும் கட்டாயமாக ஜாதியைப் பின்பற்ற வேண்டுமா? மேல் ஜாதி, கீழ் ஜாதி, தீண்டப்படாத ஜாதி என்று நம்மைப் பிரித்தார்கள். கெட்ட ஜாதி, நல்ல ஜாதி என்று இழிவுபடுத்தினார்கள்; நான் ஏன் கீழ் ஜாதி என்று ஜாதியை எதிர்த்து...

“விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல நீதித்துறை”

“விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல நீதித்துறை”

நீதித்துறை மீதான விமர்சனங்கள் வைக்கப்படும்போதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு என்கிற “பூச்சாண்டி” காட்டப்படுவது வழக்கமாகி வருகிறது. நீதிமன்றங்களும், தீர்ப்புகளும், நீதிபதிகளின் நடவடிக்கைகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையா என்றால் இல்லை…! அரசமைப்பு சட்ட சரத்து 19 (1) (a) படி இந்திய குடிமக்களுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது. இதன் பொருள், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனது கருத்துக்களை எந்த தடையும் இன்றி வெளிப்படுத்தவும், சுதந்திரமாகப் பேசவும் உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமை வரம்புகள் இல்லாமல் இல்லை. சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த உரிமை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படலாம். அதாவது சரத்து 19 (2) படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம் அல்லது ஒழுக்கம் அல்லது நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக பேச்சு மற்றும் கருத்துரிமை கட்டுப்படுத்தப்படலாம். இதில் நீதிமன்ற அவமதிப்பு என்பதைத்தான் நீதிபதி திரு.ஜி.ஆர்...

மானுடத்தை வாழவிடுங்கள்

மானுடத்தை வாழவிடுங்கள்

நாடார்கள், கவுண்டர்கள், முதலியார், வன்னியர்கள் என்று ஜாதிக்கொரு திருமண சேவை மையங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் இதற்கான விளம்பரங்கள் வரிசை கட்டி வருகின்றன. மக்களுக்கான சேவை மையங்கள் இப்போது மறைந்து விட்டன. ஜாதி கடந்த திருமணங்கள் என்றாலே அதை குற்றமாகப் பார்க்கிறது சமூகம். இதே ஜாதி நம்பிக்கையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டால் ஜாதி பார்க்க மாட்டார்கள். எந்த வகை இரத்தம் என்று தான் பார்ப்பார்கள். அது தனது ஜாதிக்காரர்கள் வகை இரத்தமாகத் தான் இருக்க வேண்டும் என்று பொங்கி எழ மாட்டார்கள். “எந்த ஜாதியாக இருந்தால் என்ன நல்ல மனசு இருக்கிறதே” என்று மாலை போட்டு பாராட்டுவார்கள். தன் வீட்டுப் பெண்ணுக்கு திருமணமாகி மணமுறிவு ஏற்பட்டு இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடும்போது மட்டும், ஜாதி தடையில்லை. பையன் நல்லவனாக இருந்தால் போதும் என்று ஜாதி மறுப்புக்கு வந்து விடுவார்கள். இந்தியாவில் ஜாதி அடையாளம் இப்படி தடுமாறுகிறது. இப்போது ‘குடிமகன்’...

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

வரலாற்று பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த சமூக புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். இது பூந்தோட்டத்தில் நடந்த புரட்சி! “எங்கள் ஊரில் முன்பு கோயில் இருந்தது. பெரியார் ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தார். ‘இந்த ஊர்ல இத்தன கோயில் இருக்கே? எத்தனை பள்ளிக்கூடம் இருக்கு? எவ்வளவு தற்குறியாவும், கைநாட்டுப் பசங்களாகவும் திரியறீங்க? பொம்பளங்கள, புள்ளை பெக்குற மெஷினாட்டம் வச்சிருக்கீங்க! பெண்களைப் படிக்க வச்சிங்கன்னா மொத்த சமுதாயத்தையும் காப்பாத்துவாங்க’ என்று பேசினார். உடனே கோயில்கள் எல்லாம் பள்ளிகளாக மாறிவிட்டன. இப்போது வீட்டுக்கு ஒரு குழந்தையை ஆசிரியருக்குப் படிக்க வைக்கிறோம். அதுவும் பெண் குழந்தையை” என்று கூறியுள்ளார். தினமணியின் மகளிர் மலர் ஒன்றில் ஒருமுறை மனோரமா அளித்த நேர்காணலில் சொன்ன தகவல் இது. மனோரமா சொன்ன அந்த ஊர், கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகே உள்ள பூந்தோட்டம் கிராமம்....

கண்டா வரச்சொல்லுங்க!

கண்டா வரச்சொல்லுங்க!

சர்வதேச விண்வெளி நிலையமாம்! அங்கே மனிதர்கள் போகிறார்களாம்! நமது பகவான்களும் தேவதைகளும் வாசம் செய்யும் புண்ணிய ஆகாயம் அது. “நாம் ஆண்டுதோறும் தர்ப்பைப்புல் வழியாக தர்ப்பணம் செய்து அரிசி, பருப்பு போன்ற பதார்த்தங்களை பிதுர்களுக்கு பார்சல் செய்கிறோம். அவர்களும் அதை சாப்பிட்டு சகல சௌபாக்கியத்துடன் வாழும் போது இந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஏன் இந்த வீண் வேலை? இது ஆச்சாரத்துக்கு பங்கம் விளைச்சுடும்” இப்படி வேத புரோகிதர்கள் நியாயமாக கேட்டிருக்க வேண்டும்; ஆனால் வாயைத் திறக்கவில்லை. சுபான்சு சுக்லா என்பவர் இப்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மய்யத்துக்கு போய்விட்டார்! அங்கே ஏற்கெனவே பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கிறார்கள். “சூரிய மண்டலத்தில் சூரிய பகவான் ஏழு குதிரைகளைப் பூட்டிய ஒற்றைச் சக்கரம் உள்ள ரதத்திலிருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் உலகத்துக்கு வெளிச்சத்தை தந்து கொண்டு வந்து வருகிறான். `பிராமண’ குடும்பத்துக்கு அவன் தான் தெய்வம். வேத ஆகம மந்திரங்களுக்கு அதி தேவதை” என்று...

கடவுளின் இருப்பை உடைக்கும் கேள்விகள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(5) -விடுதலை இராசேந்திரன்

கடவுளின் இருப்பை உடைக்கும் கேள்விகள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(5) -விடுதலை இராசேந்திரன்

உலகத்தையே உலுக்கியது அகமதாபாத் விமான விபத்து. பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர 234 பயணிகளும் மரணமடைந்து விட்டார்கள். கடவுள் இப்படி ஒரு தண்டனையைத் தர வேண்டுமா? என்ற கேள்வியை கடவுள் நம்பிக்கையாளர்கள் எவருமே கேட்கவில்லை. காசாவில் 54,000 அப்பாவி மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை கடவுள் ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வியையும் கடவுளை நோக்கி எவரும் கேட்கவில்லை. இஸ்ரேல் ஈரான் மீது குண்டு வீசுகிறது, ஈரான் பதிலளித்திருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக குண்டு வீசுகிறது. நாட்டில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் நான் அவதாரம் எடுத்து வருவேன் என்று கூறிய ‘கிருஷ்ண பகவான்’ ஏன் வரவில்லை என்று எந்த கீதை பக்தர்களாவது கேட்டர்களா? கேட்கவில்லை. மாறாக என்ன நடந்தது? விமான விபத்தையும் இஸ்லாமிய எதிர்ப்புக்கு பயன்படுத்தினர். விபத்துக்குள்ளான விமானத்தை இஸ்லாமிய நாடான துருக்கியின் நிறுவனம் ஒன்று பராமரிக்கிறது. எனவே விபத்தில் இஸ்லாமிய சதி இருக்கிறது என்றார் ஒருவர். அவர்தான் சங்கிகளின் ஊது குழலான...

தேசிய கூட்டணியில் முருக பகவான்

தேசிய கூட்டணியில் முருக பகவான்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையப் போகின்றன என்று எடப்பாடியும் நயினாரும் பேசாத நாள் இல்லை. அது வந்தே விட்டது கூட்டணிக்குள் கட்சிகளை இழுக்க அமித் ஷாவின் கீழ் இரண்டு படைகள் தயார் நிலையில் உள்ளன. ஒன்று, அமலாக்கப்படை! மற்றொன்று மத்திய புலனாய்வுப் படை! இப்போது மூன்றாவதாக ஒரு படை கிளம்பியுள்ளது, இது அறுபடை. ஆமாம்! தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப்போகிறார் முருக பகவான். மதுரை மாநாட்டுக்கு அறுபடை வீடுகளுடன் முருகன் வந்து சேர்ந்து விட்டார்! அதுவும் தனது மயில் வாகனத்தில், விபத்துக்கள் ஏதும் இன்றி பாதுக்காப்பாக வந்து விட்டார்! மாநாட்டுக்கு மாதிரி கோயில்களை முகப்புகளாக்கி அங்கே பூஜை சடங்குகளோடு பிரசாதம் வழங்கப் போகிறார்களாம். இது ஆகமத்துக்கு எதிரானது என்று அனைத்து ஜாதி அர்ச்சகர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. “இது எங்கள் கட்சி முருகன்; ஆகம முருகன் அல்ல” என்று வாதாடி நீதிமன்றத்தின் அனுமதியையும் பாஜகவினர் வாங்கி...

“நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”   நாத்திக விழா சிந்தனை(2)

“நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?” நாத்திக விழா சிந்தனை(2)

1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதில் அந்த வாசகங்களை விளக்கி பெரியார் எழுதிய கட்டுரையைக் கடந்த இதழில் வெளியிட்டு இருந்தோம். இதுகுறித்து மறைந்த பேராசிரியர் இராமநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். கடவுளை வணங்குகிறவர்களைக் காட்டுமிராண்டிகள் என கடுமையான சொற்களைப் பயன்படுத்தியவர் பெரியார் அதற்கான காரணம் என்ன தெரியுமா…. காட்டுமிராண்டி மக்களுக்கும், மற்ற மக்களுக்கும் என்ன வேறபாடு? எல்லோரும் மக்கள்தான். பொது இயல்பில் வேறுபாடில்லை. நடைமுறையில் வேறுபாடு உண்டு. காட்டுமிராண்டி மக்கள் வாழ்வில் அறிவொடுபட்ட செயல்முறைகள் இல்லை. மானம் இல்லாதவர். அறிவும் மானமும் இல்லாமல் விலங்கொடு விலங்காக வாழ்பவர். மனிதனுக்கு மற்ற உயிரினங்களைவிடப் பகுத்தறிவு இருக்கின்றது. அந்த அறிவைக்கொண்டே மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு உலகில் முன்னேறியிருக்கின்றான். ஆயினும் அவன் தன்னுடைய பகுத்தறிவைக் கொண்டு முன்னேற முடியாமல் கடவுள் கருத்தும், இதனை ஒட்டி எழுந்துள்ள கற்பனைகளும்,...

திருப்பரங்குன்றத்தின் வரலாறு என்ன?  மதக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா

திருப்பரங்குன்றத்தின் வரலாறு என்ன? மதக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா

மதுரையில் பாஜக ஜூன் 23 அன்று முருகன் அரசியல் மாநாடு ஒன்றுக்கு திட்டமிட்டுள்ளது திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அங்கே இந்து முஸ்லிம் பகைமையை உருவாக்கி மதக் கலவரத்தை உருவாக்குவது இந்த மாநாட்டின் நோக்கம். அங்கே இருக்கிற தர்காவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது. மதுரையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலையாக மாற்ற திமுக ஆட்சி முயற்சிக்கிறது என்றும் அதை முறியடிக்க வேண்டும் என்றும் மதவெறியை தூண்டும் வகையில் பேசி இருக்கிறார். உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன… திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான வெவ்வேறு பிரச்சினைகள் ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்த மதவெறிக் கும்பல்தான், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இதனைக் கையாண்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலில் சில தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற வெறியில், அதிகார வர்க்கத்தில் ஊடுருவியிருக்கும்...

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

கடவுள் இல்லை; எங்கே கடவுள் சக்தி? என்று நாத்திகர்கள் பேரணி நடத்துகிறார்கள் என்பதற்காக எந்த கடவுளும் கொந்தளிக்கவில்லை. “இதோ அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்கிறேன்,பார்!” என்று ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு ஓடி வரவில்லை. சரி, போகட்டும்;கொளத்தூர் கழக மகளிர் கனவில் வந்தாவது மிரட்டி இருக்கலாம் அதற்கும் தயாராக இல்லை உண்மையில் கொந்தளித்தது யார் தெரியுமா? கொளத்தூர் காவல்துறை தான். “அய்யோ கடவுள் எதிர்ப்புக்கு நாங்கள் அனுமதி தர முடியுமா? அது பாவமல்லவா?” என்பதற்காக காவல்துறை கொந்தளிக்கவில்லை. “சங்கிகள் கூச்சல்களை சந்திக்க வேண்டியிருக்குமே என்பதுதான் அவர்களின் பயம். “என்னை எதிர்ப்பவருக்கு பேரணி நடத்த அனுமதிக்காதே! அழித்துவிடுவேன்” என்று ஏதேனும் ஒரு காவல் அதிகாரி கனவில் வந்தாவது கடவுள் மிரட்டி இருக்கலாம் அதுவும் இல்லை” அப்படி எதுவும் நடக்காமலேயே கடவுள் பக்தியோ, பக்தர்களின் மனம் புண்படும் செயல்களையோ நிகழ்த்த மாட்டோம் என்று எழுதிக் கேட்டது காவல்துறை. “எதற்கு நாங்கள் எழுதித் தர வேண்டும்; கடவுளைப்...

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

பெரியார் மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசிய பார்ப்பனக் கைக்கூலிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி, பார்ப்பன சங்கராச்சாரிகளின் பார்ப்பன முகமூடியைக் கிழித்துக் காட்டியது. பெரியார் மீது கைவைத்தால் சங்கரச்சாரிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் களம் இறங்கியது. குறிப்பாக சங்கரமடம் உள்ள காஞ்சிபுரத்தில் 21.04.2025 மாலை 5 மணியளவில் பேருந்து நிலையம் அருகே எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனி பேருந்தில் காஞ்சிபுரம் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். காஞ்சி விஜயேந்திரன் கடந்த ஜனவரி 19 அன்று பெங்களூரில் ‘பிராமணர்கள்’ மாநாட்டில் இந்து சமூகத்தில் சூத்திர, பஞ்சமர்களிடம் இருந்து பிராமணர்கள் விலகி தங்களது மேலாண்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற இன ஒதுக்கல் கருத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசி இருந்தார். சூத்திர, பஞ்சமர்கள் அடிமைப்பட்டவர்கள் என்ற மனுதர்மம் விதிக்கும் கோட்பாடுகளுக்கு உயிரூட்டுவதே அவரது பேச்சின்...

“இந்து மதத்தை நாசப்படுத்துகிற கொடிய நஞ்சு பார்ப்பனியமே”

“இந்து மதத்தை நாசப்படுத்துகிற கொடிய நஞ்சு பார்ப்பனியமே”

அம்பேத்கரை உரையாற்ற அழைத்திருந்த ஜாத் பட்தோடக் மண்டல் அமைப்பில் 1920-ஆம் ஆண்டுகளில் துணைத் தலைவராக இருந்தவர் பெரியார். அப்போதும் பெரியாரை ‘நாத்திகர்’, ‘இந்து விரோதி’.’பார்ப்பன எதிர்ப்பாளர்’ என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் கூறிய புகாரின் அடிப்படையில் பெரியார் துணைத் தலைவர் பதவியில் நீட்டிக்கப்பட்டவில்லை. அதே அமைப்புதான் 1936-இல் அம்பேத்கரை ஜாதி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை ஏற்க அழைத்து, அவரது உரையை மாற்றியமைக்க வற்புறுத்தி அம்பேத்கர் மறுத்த நிலையில் மாநாட்டையே நிறுத்தியது. குடிஅரசில் பதிவுசெய்த அம்பேத்கர் உரையை ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்ற தலைப்பில் 4 அணா விலையில் நூலாக வெளியிட்டார் பெரியார். அம்பேத்கரின் உரை குறித்து காந்தியும் தனது ‘அரிஜன்’ நாளேட்டில் விமர்சித்து எழுதினார். அம்பேத்கர் எழுப்பிய வாதங்களுக்கு எந்த பதிலும் கூறாத காந்தி. “ஒரு மதத்தை அதன் மோசமான உதாரணங்களைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. அது உருவாக்கிய மிகச் சிறந்த உதாரணங்களைக் கொண்டே மதிப்பிட வேண்டும்” என்பதே காந்தியாரின் பதிலாக இருந்தது....

காஞ்சி சீனியரின் “நச்சுக் கருத்துக்கள்”-

காஞ்சி சீனியரின் “நச்சுக் கருத்துக்கள்”-

பார்ப்பனர் என்றால் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவர்கள் என்று கூறும் பார்ப்பனர்களே! பார்ப்பன அடிமைகளே! இதோ காஞ்சி சீனியர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்துக்களை தொகுத்துத் தந்து இருக்கிறோம் இதற்கு என்ன பதில்…. “நான்கு வர்ணம் தேவையே!” சங்கராச்சாரியார் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலிலே வெளிப்படையாகவே சொல்லு கின்றார். “நம் மதத்தில் (இந்துமதம்) ‘பிராமணர்’, ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த “வர்ணங்களை நாம் “ஜாதி” என்கிறோம். வாஸ்தவத்தில் ஜாதி வேறே, வர்ணம் வேறே: வர்ணங்கள் மேலே சொன்ன நான்குதான். இதற்குள்ளேயே ஒவ்வொன்றிலும் பல ஜாதிகள் இருக்கின்றன. “பிராமண” வர்ணத்திலேயே அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல சாதிகள் இருக்கின்றன. நான்காம் வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டி, நாயக்கர், நாயுடு, கவுண்டர், படையாட்சி என்கிற மாதிரி எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன. நான்கு ஜாதிகளுக்கும் (அதாவது வர்ண ங்களுக்கும்) சாஸ்திரங்களில் வெவ்வேறு விதமான கர்மாக்களையும் ஆசாரங்களையும் விதித்திருக்கிறது. இதனால் ஒரே...

மாநாட்டிலிருந்து சில துளிகள்

மாநாட்டிலிருந்து சில துளிகள்

பயணக் குழுவினர் மயிலாடுதுறை கேணிக்கறையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக முழக்கங்களுடன் மாநாட்டு மேடைக்கு அணிவகுத்து வந்தனர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனின் திராவிட மாடலா? ஆரிய மாடலா? நூலை (தலையங்கத் தொகுப்பு) கள்ளக்குறிச்சி பயணக்குழு பொறுப்பாளர் இராமர் வெளியிட பயணக்குழுவில் தொடர்ந்து வந்த சென்னை இரண்யா, சேலம் ஆனந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ரூபாய் 500 மதிப்புள்ள நூல் 400-க்கு விற்கப்பட்டது. அனைத்து பிரதிகளும் மாநாட்டில் விற்றுத் தீர்ந்தன. மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் கழக வளர்ச்சிக்கு ரூ.25,000 கழகப் பொருளார் சு.துரைசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது. மேடை அருகே அமைக்கப்பட்ட தனித்‌திரையில் பெரியார் பற்றிய குறும்படம் ஒளிப்பரப்பட்டது. குறும்படம் தோழர்கள் இடையே உணர்வலைகளை உருவாக்கியது. .பிரகாஷ் எழுத்தில் கொளத்தூர் கபிலன் ஸ்டுடியோ இந்த குறும்படத்தை உருவாக்கியது. பயணக் குழுவை வழிநடத்திய இரா.உமாபதி, காவை ஈசுவரன்,‌ கள்ளக்குறிச்சி இராமர்,‌‌ கோவை நிர்மல் பயண அனுபவங்களையும்‌, மக்கள் தந்த ஆதரவுகளையும்...

உண்மைக்குப் புறம்பாக விமர்சிக்கும் கயவர் கூட்டம்! பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி- -கொளத்தூர் மணி

உண்மைக்குப் புறம்பாக விமர்சிக்கும் கயவர் கூட்டம்! பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி- -கொளத்தூர் மணி

சென்னையில் நிமிர்வோம் வாசகர் வட்ட கூட்டத்தில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி… அண்ணா ஏராளமான நாடகங்களை எழுதியுள்ளார். முதலில் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், இந்து ராஜ்ஜியம் என்றால் எப்படி இருக்கும்? அரசனாக இருந்தாலும் என்பதுதான் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம். சந்திர மோகன் என்பவர் பார்ப்பனர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் சிவாஜியிடம். ஆனாலும் சிவாஜி அவமானப்படுத்தப்படுவார், என்பதை எல்லாம் எழுதி அது எப்படி இந்த இந்து மத சாஸ்திரங்கள் என்ற பெயரால் அரசனைக் கூட கைப்பாவையாக வைத்திருந்தனர் பார்ப்பனர்கள் என்று சொல்வது தான் அந்த நாடகம். அம்பேத்கர் பாகிஸ்தான் பிரிவினை என்ற நூலில் எழுதியுள்ளார். “எப்படியாவது எந்த வழியிலாவது இந்து இராஜ்ஜியம் அமைந்து விடுமேயானால், அதை விட இந்த நாட்டுக்கு பெரும் கேடு எதுவும் இருக்க முடியாது”. இந்து இராஜ்ஜியம் என்றால் என்ன அது அமைந்தால் என்ன நிலை என்பதை அழகாக எடுத்துச் சொன்ன நாடகம்தான் ‘சிவாஜி கண்ட...

தமிழை அறிவியல் பார்வையில் அணுகினார் பெரியார்!

தமிழை அறிவியல் பார்வையில் அணுகினார் பெரியார்!

(பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட 28-வது சந்திப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை) பெரியார் தமிழ்மீது ஆர்வம் இல்லாதவராக இருந்தால் திருக்குறள் மீது அக்கறை இல்லாதவராக இருந்தால் ஒரு மாநாடு நடத்தி தீர்மானம் போடுவரா, அந்த தீர்மானத்தைத் ஓட்டி தொண்டர்கள் உரை எழுதுவார்களா… பெரியாரின் தமிழறிவு இப்படிப் பல செய்திகள் சொல்லிக்கொண்டே போகலாம். பெரியார், திராவிடர் இயக்க தொண்டர்கள் தமிழுக்கு செய்த நன்மைகள் ஏராளம். இன்னொரு செய்தி சொற்களைத் தமிழ்ப்படுத்துவதற்கு அரசே ஒரு குழு அமைக்கிறது. கலைச்சொற்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற‌ ஒரு முயற்சி நடந்தது. “ஹைட்ரஜன்” என்பதை “ஆப்ஜனகம்” என்று தமிழில் மொழிபெயர்க்கிறார்கள். Disinfectant என்பதற்கு பூதி நாசினி என்று போடுகிறார்கள். இதற்கு பதிலடியாக பெரியார் பேசுகிறார் நான் தமிழ்ச்சங்கம் மொழிப்பெயர்ப்பை படித்திருக்கிறேன் ‘ஹைட்ரஜன்’ என்பதற்கு ‘நீரகம்’ என்றும் ஹைட்ரோலிசிஸ் என்பதற்கு...

பார்ப்பனிய பண்பாட்டை எதிர்த்தவர் மேதகு பிரபாகரன்

பார்ப்பனிய பண்பாட்டை எதிர்த்தவர் மேதகு பிரபாகரன்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . கடந்த வார தொடர்ச்சி … போராட்டத்தில் வீரமரணம் எய்திய விடுதலைப்புலிகளின் இறுதி நிகழ்வில் மதச் சடங்குகள் நடப்பதில்லை. பெற்றோர்கள் கூட எந்த வித மதச் சடங்குகள் இல்லாமல் மலர் வளையம் வைத்துத் தான் மரியாதை செய்வார்கள். துயிலும் இடங்களை மக்கள் வாகனங்களில்‌ கடக்கும்‌ போது தலைகுனிந்து ஒரு மரியாதை செலுத்திவிட்டு தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடந்து செல்வார்கள். விடுதலைப்புலிகள் வைப்பகம்(வங்கி) ஒன்றை நடத்தினார்கள்.தமிழேந்தி என்ற போராளி தான் பொறுப்பாளராக இருந்தார். தமிழேந்தி முழுமையான பகுத்தறிவாளர்‌. சித்திரையில் மதவாதிகள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு நான் கிளிநொச்சியிஸ் இருந்தேன். சித்திரை மாத தமிழ்ப்புத்தாண்டை விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்கவில்லை. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அந்த நாள்...

சோவியத் புரட்சி இங்கேயே நடக்க வேண்டுமென விரும்பினார் பெரியார்! -இனியவன்

சோவியத் புரட்சி இங்கேயே நடக்க வேண்டுமென விரும்பினார் பெரியார்! -இனியவன்

24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி.. சுயமரியாதை முக்கியம்! ஒடுக்கப்பட்டவர்களுக்கு நில உரிமை வேண்டும் என்று போராடிய அம்பேத்கர் அவர்கள் அதே நேரத்தில் மகாராஷ்டிரத்தில் நிலவிய ‘மகர்வர்தான்’ முறையை நீக்க வேண்டி பம்பாய் மாகாணத்தில் கோரிக்கை வைத்தார். மகர்வர்தான் என்பது கிராமங்களில் ஏவல் பணியில் ஈடுபடும் மகர்களுக்கு (ஒடுக்கப்பட்ட ஜாதி) கிராம மக்கள இலவசமாக அளித்திடும் சிறு நிலம் ஆகும். ஆனால் அந்த நிலத்தை பெற்ற காரணத்தாலேயே நேரம் காலம் பார்க்காமல் கிராமத்திற்கான ஏவல் பணிகள் அனைத்தையும் ஓர் மகர் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும். அந்த மகர் மட்டும் அல்லாமல் அவரின் குடும்ப உறுப்பினர்கள் கூட கிராமத்தினரால் அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டார்கள். உயர்ஜாதியினரின் பணிகளைச் செய்ய ஒரு மகர் மறுத்தால் அவரது நிலம் அவர்களிடமிருந்து பிடுங்கப்படுவதுடன் சமூக விலக்கத்திற்கும் ஆளாக நேரிடும். இத்தகைய...

இந்துமதத்தைக் கருத்தியல் – செயல்ரீதியாகக் கடுமையாகத் தாக்கியவர் அம்பேத்கர்-இனியவன்

இந்துமதத்தைக் கருத்தியல் – செயல்ரீதியாகக் கடுமையாகத் தாக்கியவர் அம்பேத்கர்-இனியவன்

24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி.. இதனைக் கண்டித்து மகத் நகரில் மீண்டும் அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது என பம்பாய் தாமோதர் கூட்ட அரங்கில் பேசிய அம்பேத்கர் “சட்டம் சாத்தியமான இடங்களில் வன்முறையற்றதாகவும், தேவையான இடங்களில் வன்முறையாகவும் இருக்க வேண்டும்” என அரசின் பாராமுகத்தைக் கடுமையாக சாடினார் (11 செப்டம்பர் 1927). 1919இல் புதிய சட்டங்களை வடிவமைக்க பிரிட்டிஷ் இந்திய அரசால் அமைக்கப்பட்ட சவுத்பரோ குழுவில் அம்பேத்கர் ஓர் தரப்பின் சாட்சியமாக அழைக்கப்பட்டார் (தலித்துகளுக்கு தனித் தொகுதி, இரட்டை வாக்குரிமை ஆகியவை இந்த குழுவில் தான் அம்பேத்கரால் முதன் முதலில் முன் வைக்கப்பட்டது), 1925இல் சைமன் குழுவில் பம்பாய் மாகாண உறுப்பினராக பணியாற்றிய நிலையில் கூட அவர் தீண்டத்தகாதோர் நலனில் அக்கறை அற்ற பிரிட்டிஷ் இந்திய அரசின் போக்கை விமர்சனம் செய்யவும் தயங்கவில்லை...

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவில் கூடும் சாமியார்கள், 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இந்து நாடாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்து அரசமைப்புச் சட்டம் கும்பமேளா தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதுவே மனிதத்தின் மதம். நமது வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், மதம் ஒன்றுதான். அந்த மதம் சனாதன தர்மம். அந்த சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது. பிரயாக்ராஜில் நடந்து வரும் மாபெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, எந்த ஒரு ஜாதி அல்லது மதத்திற்கும் உட்பட்டது அல்ல. இது அனைத்து மதம், கலாசாரம் மற்றும் சமயங்களின் மாபெரும் கலவையாக திகழ்கிறது.’’ என்று கூறியுள்ளார். ஆனால் கும்பமேளாவில் கூடிய சாமியார் கூட்டம் இந்து அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கக் குழு அமைத்துள்ளது....

பார்ப்பனிய புனித பிம்பங்களை உடைத்த அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகர எழுத்துக்கள்

பார்ப்பனிய புனித பிம்பங்களை உடைத்த அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகர எழுத்துக்கள்

24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி.. இந்திய அரசியல் களத்தில் ஜாதி குறித்தான விவாதங்கள் அண்ணல் அம்பேத்கருக்கு முன்பாகவே வெகுவாக தொடங்கிவிட்டது. 1917இல் மாண்டேகு – செம்ஸ்போர்ட் குழு உருவாக்கப்பட்டது. முதல் உலகப்போர் முடிவில் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசு அதிகாரத்துவத்தில் இந்தியர்களுக்கு குறைந்தபட்ச பிரதிநிதித்துவமாவது வழங்கப்பட்ட வேண்டும் என்கிற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இக்குழுவினை பல்வேறு தரப்பினர் சென்று சந்தித்து தங்கள் கருத்தை முன் வைத்தனர். அதில் மதராஸ் மாகாணத்தின் ‘பஞ்சமர் கல்வி அபிவிருத்தி அபிமான சங்கம்’, ‘மதராஸ் ஆதி திராவிட சங்கம்’, வங்காள மாகாணத்திலிருந்து குரு சந்த் தாக்கூர் உருவாக்கிய அமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த அமைப்புகள் “சமூகத்தில் நீடித்து வரும் ஜாதி அமைப்பு முறையை ஒழிக்காமல் உயர் ஜாதி இந்துக்கள் கையில் அளிக்கப்படும் எவ்விதமான அதிகார பகிர்வு அல்லது அதிகார மாற்றம் மிகவும்...

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார். பெரியார் குறித்து அவர் வைக்கும் விமர்சனங்களுக்கு ஆதாரம் கேட்டால், அவரின் சங்கி நண்பர்களான அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும், தமிழிசை செளந்தரராஜனும், துக்ளக் குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களும் ஆதாரத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை சீமானும் ஆதாரத்தைத் தரவில்லை, அவருடைய சங்கி நண்பர்களும் ஆதாரத்தைத் தரவில்லை. சீமானின் இத்தகைய அவதூறுப் பேச்சு பெரியாரிய உணர்வாளர்கள் மத்தியிலும், பொதுமக்களிடத்திலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அவதூறுப் பேச்சுக்களை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று பல்வேறு தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சீமானோ மீண்டும் மீண்டும் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனால் சனவரி 22-ஆம் தேதி பனையூரில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடப்போவதாக ‘பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ அறிவித்திருந்தது. சீமானின் அருவருப்புப் பேச்சுகளால் ஆத்திரமடைந்த பெரியாரியத் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைநகர்...

ஜாதி அமைப்பு முறையைத் தகர்க்காமல் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடாது!

ஜாதி அமைப்பு முறையைத் தகர்க்காமல் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடாது!

தற்போது இந்தியாவில் நிலவுகிற பாசிச காவி கார்ப்ரேட் இந்துத்துவ அரசியல் சூழலில் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த அரசியல் மாநாட்டிற்கு (24.12.2024) நான் சார்ந்திருக்கும் சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார் சார்பாக புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிய பார்வையில் பெரியார், அம்பேத்கார் என்கிற தலைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரை மார்க்சிய பார்வையில் அணுகுவது என்னளவில் சற்று கடினமான பணி என்பதால் தோழர்களின் ஒப்புதலோடு அதனை சற்று மாற்றத்திற்கு உட்படுத்தி “கம்யூனிஸ்ட் பார்வையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்” என்கிற தலைப்பினில் எனது உரையை முன்வைக்கிறேன். ஏனென்றால், மார்க்சியம் என்பது சமூக அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டு அடிப்படையிலான தத்துவம். பொதுவாக கோட்பாட்டளவில் ஓர் மார்க்சிஸ்ட்டாக வாழ்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் கம்யூனிஸ்ட் என்பது மார்க்சிய அடிப்படையிலான கட்சி, கொள்கை அரசியல் முன்னெடுப்பு சார்ந்தது என்பதனால்...

வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்

வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்

பெரியார் பற்றி அண்ணா இவ்வாறு கூறினார்; “ஒரு சகாப்தம்; ஒரு திருப்புமுனை; ஒரு காலகட்டம்; நூற்றாண்டு வரலாற்றை ஒரு குடுவைக்குள் அடக்கியவர்.” (Putting Centuries In Capsules) சமூகவியல் பார்வையில் வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார். இந்தியாவில் பார்ப்பனியத்தை எதிர்த்த முதல் புரட்சிக்காரர் புத்தர். வேதம் – யாகம் – சமூகக் கொடுமைகளை எதிர்த்து புத்தர் மக்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் கொள்கைகளைப் பரப்ப அவரது சீடர்கள் மக்களைச் சந்தித்து புத்தரின் கருத்தியலைப் பரப்பினார்கள். அதே புத்தர் இயக்கத்தை அவரது மறைவுக்குப் பிறகு பார்ப்பனியம் ஊடுருவிச் சிதைத்தது. பார்ப்பனியத்தை எதிர்த்து சார்வாகர்கள், சித்தர்கள், சமணர்கள், வள்ளலார் என்ற சீர்திருத்தவாதிகள் வந்தார்கள். பார்ப்பனியம் அவர்களை ஜீரணித்துவிட்டது. வரலாற்றில் இருந்து பாடம் பெற்ற பெரியார் எந்த இயக்கமும் எந்தப் புரட்சியாளரும் பின்பற்றாத புதிய நடைமுறைகளையும், கருத்துகளையும் தனது இயக்கத்துக்காகக் கட்டமைத்தார். 1. தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக்கினார். 2. எதைச் சொன்னால்...

ஜெயலலிதா –- ஆளுநர் சென்னா ரெட்டி மோதல்

ஜெயலலிதா –- ஆளுநர் சென்னா ரெட்டி மோதல்

ஆளுநர் ரவிக்கு உரிய மரியாதையை தமிழ்நாடு அரசு அளித்தும் ஆளுநர் சட்டமன்றத்தை அவமானப்படுத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை நியாயப்படுத்துகிறார். ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1994இல் ஆளுநரை எப்படி நடத்தினார்? மோதலில் பின்னணி குறித்த ஒரு மீள் பார்வை. 1994ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் இடையே முரன்பாடு வந்தது. தனது அரசைக் கவிழ்ப்பதற்கு அன்றைய காங்கிரஸ் ஆட்சியால் அனுப்பிவைக்கப்பட்டவர் தான் சென்னா ரெட்டி என்று உறுதியாக நம்பினார் ஜெயலலிதா. இருவரும் பத்திரிக்கை அறிக்கைகள் வழியாக தங்கள் எதிர்ப்புகளை வெளியிடத் தொடங்கினர். ஆளுநரிடமிருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் ஜெயலலிதா செயல்படத் தொடங்கினார். புத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கும். ( இப்போது ஆர்.என்.ரவி அந்த உரையைத் தான் வாசிக்க மறுத்து வெளியேறினார்.) அப்போது பேரவைத் தலைவராக இருந்த சேடப்பட்டி முத்தய்யா ஆளுநர் உரையே தேவையில்லை என்று கருதி ஆளுநருக்கு அழைப்பு விடுக்காமலேயே சட்டசபையைக் கூட்டினார்....

தீபாவளி வாழ்த்து கிடையாது போயா! – கோடங்குடி மாரிமுத்து

தீபாவளி வாழ்த்து கிடையாது போயா! – கோடங்குடி மாரிமுத்து

விஜயதசமி நாளில் இராவணன் படத்தைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். இராவணன் எரிவதைப் பார்த்து கைத்தட்டி கும்மாளம் அடிக்கிறார்கள். இராவணன் மீது அம்புகள் ஏவப்படுகின்றன. தொலைக்காட்சிகள் இதை ஒளிபரப்புகின்றன. மோடியும், அதன் பரிவாரங்களும் மட்டுமல்ல, ராகுல், சோனியாவும் இதில் பங்கேற்கிறார்கள். ஏன் இந்த எரிப்புகள் நடக்கின்றன? தொலைக்காட்சியில் பார்த்த இருவர் இதுகுறித்து உரையாடுகிறார்கள். (விவாதம் தொடங்குகிறது) கேள்வி : தசரா என்பது இந்துப் பண்டிகை. இதுல எதுக்கு இராவணனை எரிக்கனும்? இராமனைக் கொண்டாடனும்? இராமாயணக் காலத்துலயே இந்துமதம் வந்துடுச்சா? பதில் : அப்படியெல்லாம் ஒன்னுமில்ல… இந்து என்ற பெயரே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல தான் வந்துச்சு. ஆனால் பிராமணர் தெய்வம், அவர் பேச்சை மீறுவது குற்றம், மற்றவர்கள் சூத்திரர்கள், பிராமணர்களுக்கு அடிமை என்ற கருத்து இராமாயணக் காலத்துலேயே வந்துருச்சு. அதனால் தான் இராமன், சூத்திரன் சம்பூகனின் தலையை வெட்டி வீசினான். இந்துமதம் அப்போது வரல, ஆனால் வர்ணாசிரம தர்மம் வந்துருச்சு. கேள்வி : இந்துமதம்...

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார். சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்.. வள்ளலார் விழா ஒன்றில் பேசிய கலைஞர், வள்ளலார் சாமிகளைப் போல மென்மையானக் கருத்துகளை எல்லாம் சொல்லி இந்த மக்களைத் திருத்த முடியாது. இந்தத் தமிழன் கும்பகர்ணனாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். தூங்கிக் கொண்டிருக்கிற இந்தக் கும்பகர்ணன் விழிப்பதற்குப் பெரியார் என்ற யானை மிதித்தால் தான் நடக்கும் என்று பேசினார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் இருக்கலாமா? என்ற கேள்விக்குப் பெரியார் இப்படி பதிலளித்தார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் தாராளமாக இருக்கலாம். கோயில் சொத்துக்களை மக்களுக்கு பயன்படுத்துகிற முயற்சியில் நீங்கள் பங்களிக்கலாம். ஆனால் வெறும் மூடநம்பிக்கைகளையும், வர்ணாசிரமத்தை மட்டும் பரப்புவதற்காக மட்டும் அந்தக் கமிட்டி இருக்கிறது என்று சொன்னால் அதில் இருப்பதற்கான...

முடிவெய்தினார் மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா

முடிவெய்தினார் மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா

மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா முடிவெய்தினார். அவரது உடலில் 90 சதவீத உறுப்புகள் செயலிழந்தவை. சக்கர நாற்காலியிலேயே அவரது வாழ்க்கை நகர்ந்தது. மாவோயிஸ்ட் நூல்களை தனது வீட்டில் வைத்திருந்தார் என்பதற்காக ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை இணைந்து அவரை உஃபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. 3592 நாட்கள் சிறையில் கழித்தார். அவர் செய்த குற்றமே மாவோயிசம் சம்பந்தப்பட்ட நூல்களை தனது அறையில் வைத்திருந்தார் என்பது தான். அந்த நூல்களை ரகசியமாக சுற்றுக்கு அனுப்பி நாட்டை உடைப்பதற்கு சதி செய்தார் என்று கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 3592 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு அவரிடம் அப்படி நூல்கள் கைப்பற்றுவதற்கான ஆதாரமே இல்லை என கூறி உச்சநீதிமன்றம் அவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்தது. சிறைக்கு சென்ற பின் கடுமையான நோய் உபாதைகளுக்கு உள்ளானார். எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாத நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கழிவறைக்கு...

நவராத்திரி கொலுவில் இப்படி ஓர் கலகம்

நவராத்திரி கொலுவில் இப்படி ஓர் கலகம்

நவராத்திரி கொலுவில் சரசுவதி, லட்சுமி, கிருஷ்ணன், இராமன், சீதை, பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. தனது வீட்டுக்கு வந்த நவராத்திரி விருந்தினருக்கு சுண்டல், தயிர் சாதம் வழங்கினார், கோபால அய்யர். இரவு ஓ.டி.டி-யில் நடிகர்கள், கடவுள் வேடமிட்டு நடித்த பக்திப் படம் ஒன்றைப் பார்த்து உறங்கச் சென்றார். கனவில் கொலுவில் இருந்த கடவுள் பொம்மைகளும், உருவங்களாகப் பேசத் தொடங்கின…. கிருஷ்ணன் கீழே இறங்கி வந்து அய்யர் ‘ஆத்து’ சமையலறைக்குப் போகிறான். பாத்திரங்களை உருட்டுகிறான். சத்தம் கேட்ட விநாயகன், கிருஷ்ணனைப் பின் தொடருகிறான். கிருஷ்ணன் : டேய், யானைத் தலையா! இங்கே, ஏண்டா வந்தே? விநாயகன் : நிறுத்துடா, வெண்ணெய் திருடா; நீ எதையெதை எல்லாம் உருட்டப் போகிறாய், திருடப் போகிறாய் என்பதைப் பார்க்கத்தான் வந்தேன். கிருஷ்ணன் : நான் திருடினாலும் சரி; குளிக்கும் பெண்களின் ஆடைகளை உருவி மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டாலும்; நான் எப் போதுமே பக்தர்களுக்கு...

ஆர்.எஸ்.எஸ் நடத்திய ‘ஆண்கள் பேரணி’

ஆர்.எஸ்.எஸ் நடத்திய ‘ஆண்கள் பேரணி’

‘அது என்னப்பா! ஆர்.எஸ்.எஸ் பேரணியில அமைச்சர் முருகன் சீருடையுடன் போஸ் குடுக்குறாரு. தமிழிசையும், வானதியும் காணோமே என்றார் ஒரு நண்பர். ஆமாம் அப்படித்தான். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை ஊடகங்கள் ஒளிபரப்பின. காக்கி பேண்ட் – குல்லாவுடன் நடந்தார்கள். ஒரு பெண்ணை மருந்துக்குக் கூட காணவில்லை . அது ‘ஆர்.எஸ்.எஸ் ஆண்கள்’ மட்டும் பேரணி. ஏதோ ஒரு சுயம் சேவக்கைப் பிடித்து அவருக்கு பெண் வேடம் போட்டுக்கூட அழைத்து வந்திருக்கலாம். அதற்கும் தயாராக இல்லை. பெண்கள் விண்வெளிக்குப் போகிறார்கள். பல மாதங்கள் சந்திர மண்டலத்தில் எங்களால் வாழ முடியும் என்று சாதனை படைக்கிறார்கள். இராணுவக் கமாண்டர்களாக வருகிறார்கள். குடியரசுத் தலைவராகக் கூட வரலாம், ஆனால் அதே பெண் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக மட்டும் முடியாது. சனாதன தர்மம் அப்படி ஒரு இரும்புக் கோட்டை. ‘என்னப்பா இது; தமிழிசையும் வானதியும் ஒவ்வொரு நாளும் இந்து தர்மத்துக்காக முழங்குறாங்க, ஆனா அவங்க தாய் அமைப்பு பேரணிக்குள் வராதே என்று...

‘அய்யங்கார்’ புடிச்ச லட்டு

‘அய்யங்கார்’ புடிச்ச லட்டு

“பாவம்! பாவம்! அனாச்சாரம் பகவான் பிரசாதத்துலேயே மாமிசம் கலந்துடுச்சு! இது அடுக்குமா? எதுல கலப்படம்னு ஒரு விவஸ்தை வேண்டாமோ? இதுக்கெல்லாம் என்ன பரிகாரம் செய்யுறது? நேக்கு எதுவுமே பிடிக்கல” என்று பதறுகின்றன வைஷ்ணவ ஆன்மீக வட்டாரங்கள். “ஆபத்து வந்துடுச்சு, நாட்டுக்கே ஆபத்து, சங்கராச்சாரிகளே, வேதப் பண்டிதர்களே, முன்னாள், இன்னாள் ஏழுமலையான் அர்ச்சகர்களே! இதற்கு ஒரு பரிகாரம் காணுங்கள், ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்த போது தான் இந்த பாவம் நடந்திருக்கு. அவரை சிறையில் தள்ள ஆகமத்தில் ஏதேனும் விதி இருக்கிறதா? என்று பார்த்து சொல்லுங்க” என்கிறார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு. “ஆமாம்! அவா ஆட்சிக்காலத்திலே தான் இந்த அநியாயம் நடந்துடுச்சு, அப்பவே சொன்னேன்” என்கிறார் ரிட்டையர்டு தலைமை அர்ச்சகர். “ஓய் ஒன்றும் குடி முழுகிப் போயிடல நம்ம வைஷ்ணவ ஆகம ஆராய்ச்சிக்காரர்களெல்லாம் இதற்கு தீர்வு கண்டுட்டுடோம். அண்மையில் தான் சாமிக்கு மலையில் ‘பவித்ரோட்சவம்’ செய்து முடுச்சுருக்கோம். இது ஒன்றே போதும்....

“யாருடைய தயவுக்கோ, சுயநல வாழ்வுக்கோ ‘குடிஅரசு’ இல்லை” பெரியாரின் உருக்கமான கட்டுரை

“யாருடைய தயவுக்கோ, சுயநல வாழ்வுக்கோ ‘குடிஅரசு’ இல்லை” பெரியாரின் உருக்கமான கட்டுரை

சகோதர வாசகர்களே ! நமது “குடி அரசு” ஆரம்பமாகி இரண்டு வருஷம் முடிந்து மூன்றா வது வருஷத்தின் முதல் இதழ் இன்று வெளியாகிறது. “குடி அரசு” ஆரம்ப இதழில் “குடி அரசு” என்று ஒரு தலையங்கமும், ஆறு மாதம் கழிந்து “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது வருஷ ஆரம்பத்தில் “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் எழுதி இருக்கிறோம். இப்போது இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருஷ ஆரம்ப முதல் இதழிலும் அவ்வாறே “நமது பத்திரிகை” என்று தலையங்கமிட்டு ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம். நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கக் “குடி அரசு” என்னும் ஒரு பத்திரிகை யை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளையும் 1922ல் கோயமுத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம். அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச...

புதிய கல்விக்கொள்கை – பாஜக பதில் சொல்லுமா? – ர.பிரகாசு

புதிய கல்விக்கொள்கை – பாஜக பதில் சொல்லுமா? – ர.பிரகாசு

கல்வித் தரத்தில் இந்தியாவில் உயர்ந்து நிற்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுப்பதாக தி இந்து பத்திரிகையில் செப்டம்பர் 9ஆம் தேதி ஆதாரத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை. ஒன்றிய பாஜக அரசு தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிப்பது இப்படித்தானா? இதை முடிவு செய்ய நம் தேசம் மற்றும் நம் மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார். ஒன்றிய அரசு நியாயமாக நடந்துகொள்வதென்றால் நிலுவை நிதியை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானோ, முதலமைச்சரின் பதிவைப் பகிர்ந்து சில அபத்தமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்ப தென்றால், 1. தமிழ் உள்ளிட்ட தாய்மொழிக் கல்வியை எதிர்க்கிறீர்களா?...

காவிமயத்தில் கரையும் கல்வித்துறை! – ர.பிரகாசு

காவிமயத்தில் கரையும் கல்வித்துறை! – ர.பிரகாசு

ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் கட்டாயக் கல்வி (சர்வ சிக்சா அபியான்) சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இத்திட்டத்திற்கான நிதியில் 60 விழுக்காடு ஒன்றிய அரசும், 40 விழுக்காடு மாநில அரசும் பங்களிப்புச் செய்கின்றன. அதன்படி பார்த்தால் 2024-25 கல்வி ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு 4 தவணைகளில் ரூ.2,152 கோடி வழங்க வேண்டும். கடந்த ஜூன் மாதமே ஒன்றிய அரசு முதல் தவணையாக ரூ.573 கோடியை வழங்கியிருக்க வேண்டும். இதை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு பல முறை கடிதம் எழுதியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை, என்றும் கடந்த சில மாதங்களாக மாநில அரசின் முழுமையான நிதியில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டை வைத்துள்ளார். கைவிரிக்கும் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி...

முருகனை சு-பிராமணனிடம் இருந்து உலக மாநாடு மீட்டெடுக்குமா? – விடுதலை இராசேந்திரன்

முருகனை சு-பிராமணனிடம் இருந்து உலக மாநாடு மீட்டெடுக்குமா? – விடுதலை இராசேந்திரன்

தமிழ்நாடு முதல்வர் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி தமிழகத்தின் தொழில் கட்டமைப்புகளை வளர்க்கத் துடிக்கிறார். ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முருகனுக்கு ‘உலக மாநாடு’ நடத்த முனைப்புக் காட்டுகிறார். கோயில் நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய அறநிலையத்துறை முருக பக்தியை மக்களிடம் பரப்புவதில் ஏன் இப்படி முனைப்புக் காட்ட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ‘திராவிட மாடல்’ ஆட்சி இந்து விரோதமானது என்ற பார்ப்பனியப் பரப்புரைகளை முறியடித்து அமைச்சர் சேகர்பாபு நடத்திவரும் கோயில் திருப்பணிகளே இதற்கு சரியான பதிலாக இருக்கும் போது இப்போது ஏன் இந்த மாநாடு? என்ற கேள்வியுடன் இந்த மாநாட்டை பரிசீலிப்போம். தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகன் ஆகமப் பிடிக்குள் தான் சிக்கியிருக்கிறான். அன்றாடம் வேத மந்திரங்கள், அபிஷேகம், அர்ச்சனை, கும்பாபிஷேகம் என்று வேத சடங்குகள் நடத்தப்படுகின்றன. ஆகமப் பிடிக்குள் இருந்து ஆராய்ச்சிக் கருத்தரங்கிற்குள் முருகன் கொண்டுவரப்பட்டிருப்பதைக்கூட ஒரு வகையில் ஆகம எதிர்ப்பு தான் என்று...

மோடியின் போலித் தமிழ்ப்பாசம்; அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ.!

மோடியின் போலித் தமிழ்ப்பாசம்; அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ.!

ஒன்றிய பாஜ அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.. ரயில்வே நிதி, வெள்ள நிவாரண நிதி, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தேவையான நிதிகளைகூட வழங்காமல் ஏதோ தமிழ்நாட்டினர் அந்நியர்கள் என்ற அளவில்தான் ஒன்றிய அரசு வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டு மக்கள் பாஜவைப் புறந்தள்ளி வைத்திருப்பதால்தான். எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலமாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யக்கூடாது என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து தமிழர்கள் மீது பாசம் கொண்டவர்போல பிரதமர் காட்டிக்கொண்டார். ஆனால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்காததால் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் திட்டப்பணிகளுக்கு ஒதுக்கிய நிதியைக்கூட குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி வந்து ஒரு திருக்குறளைச் சொல்லியும், உலகின் மூத்த மொழி தமிழ் என்று பெருமை...

ஹிந்துஸ்தானில் கரையும் காஷ்மீர்! – அபூர்வானந்த்

ஹிந்துஸ்தானில் கரையும் காஷ்மீர்! – அபூர்வானந்த்

(நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2019ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தைப் பறித்தது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், 5 ஆண்டுகளில் காஷ்மீர் மிகப்பெரிய வளர்ச்சிக் கண்டிருப்பதாகப் பாஜகவும், சங்கிகளும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீரத்து அமைதியின் பின்னால் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அரச வன்முறைகளை விவரித்து டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த் தி வயரில் எழுதிவரும் தொடரின் ஒரு பாகம் தமிழில்) அவமானம், அநீதி மற்றும் அடக்குமுறையின் மற்றொரு ஆண்டு கடந்துவிட்டது. காலண்டர் ஆண்டில் ஏற்படும் மாற்றம் இந்தச் சூழ்நிலைகளில் மாற்றத்தைக் கொண்டு வருமா? நான் ஒரு காஷ்மீரியாக இருந்திருந்தால், ஆகஸ்ட் 5 தேதியைக் காலண்டரில் பார்த்ததும் இதுதான் என் நினைவுக்கு வந்திருக்கும். இந்த அவமானத்தையும், அநீதியையும், அடக்குமுறையையும் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணம் என் பார்வையிலேயே என்னைச் சிறுமைப்படுத்துகிறது. இத்தகைய அவமானம் மற்றும் அடக்குமுறையை எனக்கு நினைவூட்டும் தேதி இந்தியாவின் பிற பகுதிகளுக்கு...