Category: கட்டுரைகள்

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க! – மருத்துவர் எஸ்.காசி

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க! – மருத்துவர் எஸ்.காசி

நீட் 2024 தேர்வு முடிவுகள், இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கடந்த வரு டங்களில் ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் மட்டுமே 720/720 மதிப்பெண் பெற்று வந்த நிலை யில், இந்த வருடம் 67 பேர் 720/720 மதிப்பெண் பெற்றுள் ளனர். தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட ‘இறுதி விடைகளுடன்’ மாணவர்கள் தனது OMR (Optical Mark Recognition Sheet) நகலை ஒப்பிட்டுப் பார்த்த போது கிடைத்த மதிப்பெண்ணுக்கும், அறிவிக்கப்பட்ட மதிப்பெண்ணுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருந்ததால், முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனையடுத்து உச்சநீதி மன்றத்திலும், பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்க ளிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களில், ‘நீட் தேர்வு மைய’ அதிகாரிகளே பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று கேள்வித்தாளைக் கசியவிட்டது, ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் தொடர்ச்சியான தேர்வு எண் கொண்ட 6 பேர் 720/720 பெற்றது, 1563...

வர்ணமும் வர்க்கமும் பின்னிப்பிணைந்தது! – ர.பிரகாசு

வர்ணமும் வர்க்கமும் பின்னிப்பிணைந்தது! – ர.பிரகாசு

டிசம்பர் 16-ஆம் தேதி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடந்த அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கத்தின் 5-வது அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “வர்க்கமும் ஜாதியும் ஒருங்கிணைந்தது, இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஜாதியால் அடக்கப்பட்டவர்கள்தான் வர்க்க சுரண்டலுக்கும் ஆளானவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் பெரு முதலாளிகளில் உயர் ஜாதிக்காரர்களே இருக்கிறார்கள். பாம்பே டையிங் நுஸ்லி வாடியா, அசிம் பிரேம்ஜி என 2 இசுலாமியர்கள் மட்டும் தவறிப்போய் வந்துவிட்டார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் கூட சொல்லிக்கொள்ள ஆள் இல்லை. வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையிலான உறவு என்னவென்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.” என்று வர்க்கத்துக்கும் வருணத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து நீண்ட உரையாற்றினார். அந்த உரையின் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமான ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. “இந்தியாவில் வரி நீதி மற்றும் செல்வ மறுபகிர்வு: சமீபத்திய சமத்துவமின்மை மதிப்பீடுகளின் அடிப்படையில் முன்மொழிவுகள்” என்ற தலைப்பில் World Inequality Lab...

ஜி.ஆர்.சாமிநாதனின் சித்தாந்தப் பின்புலம் – கொளத்தூர் மணி

ஜி.ஆர்.சாமிநாதனின் சித்தாந்தப் பின்புலம் – கொளத்தூர் மணி

பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக Voice of South யூடியூப் சேனலுக்கு கழகத் தலைவர் அளித்த நேர்காணலின் தொடர்ச்சி. இந்த வழக்கு மட்டுமல்ல, பல வழக்குகளில் ஜி.ஆர்.சாமிநாதன் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. அண்மையில் சவுக்கு சங்கர் என்பவரின் வழக்கில் கூட, 15 வழக்குகளை தள்ளிவைத்துவிட்டு அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். 2 செல்வாக்கு உள்ள நபர்கள் அவருடைய அறைக்குச் சென்று, சவுக்கு சங்கர் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வற்புறுத்தினார்கள் என்றும், அது நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிரானது என்பதால் உடனடியாக விசாரித்தேன் என்றும் ஜி.ஆர்.சாமிநாதன் கூறியிருக்கிறார். அது ஒருவேளை உண்மை என்றால், தானாகவே (suo moto) அவர்கள் மீது விசாரணை நடத்தலாம் அல்லது நடவடிக்கை...

திருமணம் தனிநபரின் உரிமை

திருமணம் தனிநபரின் உரிமை

“திருமணம் என்பதில் சம்மந்தபட்ட ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தவிர, மற்ற எவருக்கும் அதில் முடிவெடுக்க உரிமையில்லை. கட்டாயத் திருமணங்கள் ஒழிக்கப்பட்டு, மேலை நாடுகளைப் போல நம் நாட்டிலும் அவரவர் வாழ்க்கைத் துணையை அவரவரே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பேசியவர் பெரியார். பேசியதோடு மட்டுமில்லாமல் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நம்மை அடிமைப்படுத்தும் பார்ப்பன மதச் சடங்குகளில் இருந்து விடுவித்துக் கொண்டு, சுயமரியாதை உணர்வோடு இணையர்களாய் கரம் கோர்ப்பதற்கான சுயமரியாதைத் திருமண முறையையும் பெரியார் அறிமுகப்படுத்தினார். முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது 1928ஆம் ஆண்டில். இன்னும் 4 ஆண்டுகளில் சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்து ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. ஆனால் இன்றைக்கும் தமிழ்நாட்டைத் தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் இத்தகைய சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. அதனாலேயே காதல் திருமணங்களோ அல்லது ஜாதி கடந்த திருமணங்களோ...

தரத்தைக் கெடுக்கும் தேர்வு ‘நீட்’

தரத்தைக் கெடுக்கும் தேர்வு ‘நீட்’

தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்கு வதற்காக நீட் தேர்வை கொண்டு வருவதாகக் கூறினார்கள். ஆனால் நீட் எத்தகைய தரங்கெட்ட தேர்வு என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தான் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 ஆம் தேதி அவசர அவசரமாக தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது தேசியத் தேர்வு முகமை. இத்தேர்வில் நடைபெற்றிருக்கிற மோசடிகள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் தேர்வு முடிவுகளும் வெளியிடப் பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வரவைக்கும் அளவுக்கு எக்கச்சக்கமான குளறுபடிகள் நடந்திருக்கின்றன. தேர்வு நடைபெற்ற 4750 மையங்களில், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஆறு பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளார்கள். இந்த ஆறு பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளன. எனவே இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று எவராலும்...

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அங்கு அமர்ந்து ஒரு நூலினை வாசித்தபோது… குழந்தைகளை மையப்படுத்திய கொண்டாட்டமான கல்வி அளிப்பதில் சிறந்து விளங்கும் சுவீடன், நார்வே, டென்மார்க், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கல்வி அமைப்பைப் பார்வையிட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த வாரம் சென்றிருந்தார். அந்நாடுகளின் பள்ளிக்கூட வகுப்பறை செயல்பாடுகள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாகக் கவனித்தவர் அது தொடர்பான தகவல்களை சமூக ஊடக பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதில், 75 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சுவீடன் நாட்டில் அனைவரின் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவதை வியப்புடன் பகிர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது. படிப்புக்குப் பசி ஒருபோதும் தடைக்கல்லாக இருத்தலாகாது என்று அரசு பள்ளிக்கூடத்தில் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்து...

நீதித்துறை ஒழுங்கைக் கெடுக்கும் ஜி.ஆர்.சாமிநாதன்! உள்நோக்கத்தோடு வழங்கப்படும் தீர்ப்புகள்

நீதித்துறை ஒழுங்கைக் கெடுக்கும் ஜி.ஆர்.சாமிநாதன்! உள்நோக்கத்தோடு வழங்கப்படும் தீர்ப்புகள்

பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக Voice of South யூடியூப் சேனலுக்கு கழகத் தலைவர் அளித்த நேர்காணல். நெறியாளர்: ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளித்து உள்ளீர்களே! எதனால்? கொளத்தூர் மணி : கரூர் மாவட்டம் நெரூரில் ஒரு துறவியின் சமாதிக்கு வருகிறவர்கள் உண்ணும் எச்சில் இலைகளில் பக்தர்கள் உருளுவதை ஒரு பழக்கமாக வைத்திருந்துள்ளார்கள். அதை நீண்டகாலமான பழக்கம் என்றுசொல்லி, மனித மாண்புக்கு எதிரான ஒரு செயலை செய்துகொண்டிருந்தார்கள். இதைத் தடை செய்ய வேண்டுமென்று தலித் பாண்டியன் என்பவர் 2015ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி திரு மணிக்குமார், நீதிபதி திரு வேலுமணி ஆகிய இருவர் அடங்கிய...

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

சமூகச் செயல்பாட்டாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை தொடர்பாகப் பத்தாண்டுகளாக நடைபெற்ற வழக்கில், இருவருக்கு (மட்டும்!) ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பு எழுதிய நீதிபதி பிரபாகர் ஜாதவ், “இந்த இருவர் தங்களுக்கு இடப்பட்ட வேலையைச் செய்து முடித்தவர்கள். ஆனால், அந்தத் திட்டத்தைத் தீட்டியது வேறு யாரோ(வாக இருக்கும்)” என்று குறிப்பிட்டிருந்தார். கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா என்ன? மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்பிவந்தவர் தபோல்கர். மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றில் இருந்தெல்லாம் சமூகம் விடுபட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தானே தபோல்கரைக் குறிவைத்திருக்க வேண்டும்? அந்தச் சூத்ரதாரிகளுக்கு ஏன் தண்டனை கிடைக்கவில்லை? அடுத்தடுத்துப் படுகொலைகள்: தபோல்கரைத் தனது விரோதி என்று வெளிப்படையாக எச்சரித்தவர், வீரேந்திரசிங் சரத்சந்திர தவாதே. இந்நிலையில்தான் 2013 ஆகஸ்ட் 20 அன்று புணே நகரில் காலை நடைப்பயிற்சியின்போது மிகவும் குறுகிய இடைவெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் தபோல்கர். ஆனால், தவாதே உள்ளிட்ட மூவர் போதுமான சாட்சியங்கள் இல்லை...

எச்சில் இலை தீர்ப்பு

எச்சில் இலை தீர்ப்பு

எச்சில் இலையில் அங்கபிரதிஷ்டம் செய்வது குற்றமல்ல, அது 500 ஆண்டுகால சடங்கு, மகாபாரதத்திலேயே இதுகுறித்து சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இதை யாரும் தடைசெய்யமுடியாது என்று புரட்சிகரமான தீர்ப்பை வழ்ங்கியிருக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன். நாம் வணங்கும் கடவுள் கூட பிராமண எச்சில் இலை என்று சொன்னால் அதை உடனே ஏற்றுக்கொண்டு பக்தனின் கோரிக்கையை உடனடியாக தீர்த்துவைத்துவிடுவார்கள். ஆனால் சூத்திரன் எச்சில் இலை என்றால் மட்டும் அது தெய்வ குத்தம் ஆகிவிடும். இப்படி பிராமணர்களே ஒரு சடங்கை உருவாக்கிவிட்டார்கள். அதற்கு இப்போது சட்டமும் துணையாக வந்துநிற்கிறது. பிராமணர்களுக்கும் போஜனத்திற்கும் உள்ள தொடர்புக்கு ஏராளமான வரலாறுகள் இருக்கின்றன. பிராமண போஜன விருந்து போட்டால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்று அந்த காலத்தில் பிராமண போஜனங்கள் நடந்தன. பெரியாரின் தந்தை கூட அப்படி பிராமண போஜனம் நடத்தியவர் தான். அந்த போஜன விருந்திற்கு ஒரு மோசடி பார்ப்பான் வந்தான். ஊரை ஏமாற்றிய அந்த...

அமலாக்கத்துறைக்கு கடும் கட்டுப்பாடு

அமலாக்கத்துறைக்கு கடும் கட்டுப்பாடு

கடந்த 10 ஆண்டுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை செய்திருக்கிறது. பணமோசடியின் வரையறை மாற்றப்பட்டது. பிரிவு 19-இன் கீழ் அமலாக்கத்துறைக்கு கைது செய்வதற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு பிறகு சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடை சட்டம் ஆளும் கட்சிக்கு வேண்டாத எதிர்க்கட்சியினர், தொழிலதிபர்கள் மீது அதிகம் பாய்ந்திருக்கிறது. இந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், அந்த சட்டத்தின் பிரிவு 45ன் கீழ் ஜாமீன் பெறுவதற்கான இரட்டை நிபந்தனைகள் என்பது பொருந்தக் கூடியதா என்று தெரிவிக்க வேண்டும் என்று ஜலந்தரை சேர்ந்த தர்சம் லால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. “ஜாமீன்...

யானையின் மதம்

யானையின் மதம்

தெருவில் யானை வருகிறது என்றால் அவ்வளவுதான் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். ஆண், பெண் அனைவரும் வீதிக்கு ஓடிவந்துவிடுவார்கள். யானை மணியோசையுடன் நடந்து செல்லும் அழகே அழகு. அந்த கம்பீரமான யானைகள் இப்போது வாழ்வுரிமைக்கு போராடுகிறதே சார் என்றார் நண்பர் ஒருவர்… உண்மைதான், போர்க்களத்தில் நின்ற யானைகள் இப்போது வாழ்விடங்களை பறிகொடுத்து நிற்கின்றன. கூட்டம் கூட்டமாக சென்று இனப்பெருக்கம் செய்ய வேண்டிய யானைகள் ஏன் பாதைத் தடுமாறுகின்றன. அதற்கு மனிதர்களின் ஆக்கிரமிப்புகள் தான் காரணம். இந்தியா முழுவதும் 150 யானை வழிப்பாதைகள் இருப்பதாகவும், அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 26 வழிப்பாதைகள் இருப்பதாகவும் கடந்த ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் வனத்துறை தமிழ்நாட்டில் மொத்தம் 42 வழிப்பாதைகள் இருப்பதைக் கண்டறிந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட யானை வழிப்பாதைகளை கண்டறியாமல் போய்விட்டதா? என்று தெரியவில்லை. யானைகள் இயற்கையோடு இணைந்தே வாழ்கின்றன. இரத்த அழுத்தம், மன அழுத்தம், கொரோனா, டைபாய்டு,...

ராகுல்– – மோடி நேரடி விவாதம்

ராகுல்– – மோடி நேரடி விவாதம்

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அஜித் பி ஷா மற்றும் பத்திரிகையாளர் என்.ராம் ஆகிய மூவரும் இணைந்து ராகுல்காந்திக்கும் நரேந்திர மோடிக்கும் நேரடி விவாதத்தை ஏற்பாடு செய்தனர். அந்த அழைப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். ஆனால் மோடி தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. இவர்கள் இருவரும் சந்தித்து உரையாடினால் எப்படி இருக்கும். ஒரு கற்பனை… ராகுல் : நமஸ்தே.. விவாதத்திற்கு வந்துட்டிங்களே.! சபாஷ்!! மோடி : விவாதமா? அதுக்கெல்லாம் நான் வரல, அப்படினா எனக்கு என்னென்னே தெரியாது. பத்து வருட நாடாளுமன்ற அனுபவத்தில சொல்றேன். நான் எந்த விவாதத்திலாவது பேசிருக்கேனா? சொல்லுங்க பாப்போம். வாய்ப்பில்லை ராஜா, சாரி இளவரசரே..! ராகுல் : அப்போ இங்க எதுக்கு வந்துருக்கீங்க, ஷோ நடத்தவா? மோடி : பயந்துக்கிட்டேனு நெனைச்சு மக்கள் உண்மையை புரிஞ்சுகிட்டாங்கன்னா, நான் விவாதத்துக்கு அஞ்சாத சிங்கம் என்று ஷோ காட்ட வந்துருக்கேன்.. ராகுல் :...

தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ! சிசிடிவி ஆதாரங்கள் கூட சேகரிக்கப்படாத அவலம்!

தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ! சிசிடிவி ஆதாரங்கள் கூட சேகரிக்கப்படாத அவலம்!

சமூக செயற்பாட்டாளரும், மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவின் தலைவருமான நரேந்திர தபோல்கர் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காலை நேரத்தில் புனேவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடைய மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளுக்கு இந்துத்துவ அமைப்பான சனாதன் சன்ஸ்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இக்கொலை நடந்தது. தபோல்கர் கொலை வழக்கை முதலில் புனே போலீசார் விசாரித்தனர். பின்னர் பம்பாய் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2014-ல் சிபிஐ விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கில் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் வீரேந்திரசிங் தவாடேவை 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ கைது செய்தது. மேலும், சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகியோர் தபோல்கரை சுட்டுக் கொன்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட அதே பாணியில் கோவிந்த் பன்சாரே (2015), கல்புர்கி (2015), கவுரி லங்கேஷ் (2017) என முற்போக்காளர்கள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்து மதத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு, மூட நம்பிக்கைகளுக்கு...

உடைந்து தொங்கும் மோடி பிம்பம்

உடைந்து தொங்கும் மோடி பிம்பம்

10 ஆண்டுகால மோடி ஆட்சியில் உலக நாடுகள் கண்டு அஞ்சுகிற அளவுக்கு மிகப்பெரிய வல்லாதிக்க சக்தியாக இந்தியாவை வளர்த்துவிட்டார் என பார்ப்பனக் கூட்டம் தங்களுக்கு தாங்களே குதூகலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகளின் புள்ளி விவரங்கள் அனைத்தும் மோடி ஆட்சி இந்தியாவின் இருண்ட காலம் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிக்கொண்டிருக்கின்றன. • உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்த ஆண்டு இந்தியா 159வது இடத்துக்கு பின்தங்கிவிட்டதாக உலகளாவிய ஊடக கண்காணிப்பு நிருபர்கள் ஆய்வறிக்கை கூறுகிறது. தரவரிசையில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கையே 176-தான். இந்த பட்டியலில் 2022ஆம் ஆண்டில் 150-வது இடத்தில் இந்தியா இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. • 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 111-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. மொத்த நாடுகளின் எண்ணிக்கை 125. இந்த பட்டியலிலும் முந்தைய ஆண்டில் இந்தியா 107-வது இடத்தில் இருந்தது. • 2022ஆம் ஆண்டு...

நஞ்சு விதைக்கும் மாதவி!

நஞ்சு விதைக்கும் மாதவி!

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஐதராபாத் தொகுதியில் போட்டியிடுபவர் மாதவி. இவர், தேர்தல் பிரசாரத்தின் போது மசூதியை நோக்கி அம்பு விடுவது போல செய்கை செய்து வெறுப்பு அரசியலை தூண்டியதுடன், அது சர்ச்சையானதும் ‘’நான் மசூதியை பார்த்து அம்பு விடவில்லை’ என்று பின்வாங்கினார். இவரை சமீபத்தில் ஊடகர் பர்கா தத், ஒரு பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் இடஒதுக்கீடுக்கு எதிரான வன்மத்தையும், இட ஒதுக்கீட்டில் பாஜக அரசியல் நிலையையும் தெளிவுபடுத்துகிறார் மாதவி. அரசியலுக்கு எப்படி வந்தீர்கள் என்கிற கேள்விக்கு, “தான் ஏழ்மையான சூழலில் வளர்ந்தேன். ஆனால், எஸ்.சி, எஸ்.டி இல்லை. கல்லூரியில் எனக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை. நான் படித்துக்கொண்டே பல்வேறு வேலைகளை செய்து என்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொண்டேன். அதேநேரத்தில், பொருளாதாரத்தில் வசதியான தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதை அறிந்த நேரத்தில்தான் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் வலுவாக தோன்றியது’’ என்று கூறுகிறார் மாதவி. வசதி...

இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது! பெரியாரியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது! பெரியாரியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒருபோதும் எதிர்த்ததில்லை. பாகுபாடுகள் அகற்றப்படாத வரையில், இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்க வேண்டும். தேவை இருக்கும் வரை இடஒதுக்கீட்டை தொடர வேண்டும்” என்று பேசியிருக்கிறார். இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டுமென்று மோகன் பகவத் ஏற்கெனவே பேசிய காணொளி ஒன்று, தற்போது தேர்தல் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இக்கருத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடே இருக்காது என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்துக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் பதிலளித்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எஸ்.சி.,, எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இடஒதுக்கீட்டை பாஜக என்றைக்கும் ஆதரிக்கும். அவர்களின் உரிமையை என்றைக்கும் பாதுகாப்போம்” எனக் கூறியுள்ளார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., பாஜக இரண்டுமே கடந்த காலங்களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உறுதியாகச் செயல்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் 2015ஆம் ஆண்டில் ‘தி இந்து’ ஊடகத்திற்கு பேட்டி அளித்த...

ரூ.12,000 கோடிக்கு மேல் சுருட்டிய பாஜக அடுத்தடுத்து அம்பலமாகும் மெகா ஊழல்கள்!

ரூ.12,000 கோடிக்கு மேல் சுருட்டிய பாஜக அடுத்தடுத்து அம்பலமாகும் மெகா ஊழல்கள்!

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மூலம் நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திர திட்டம் மூலம் ரூ.12,000 கோடிக்கு மேல் ஒன்றிய பாஜ சுருட்டிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, ‘பிஎம் கேர்ஸ்’ நிதித் திட்டம் மூலம் பாஜ செய்த முறைகேடுகளை முழுமையாக வெளிக் கொணர வேண்டும் என எதிர்க்கட்சிகள் சட்டப்போராட்டத்தைத் துவக்கியுள்ளன. தேர்தல் பத்திர திட்டம் மூலம் திரட்டிய நிதி விவரத்தை மறைக்க ஒன்றிய பாஜ அரசும், பாரத ஸ்டேட் வங்கியும் சேர்ந்து எந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட்டனவோ, அதைவிட தீவிரமாக பிஎம் கேர்ஸ் திட்ட நிதி விவரத்தை மறைக்க முயற்சி செய்து வருகிறது பாஜ. இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியும் ஒன்றிய அரசு வாய் திறப்பதாக இல்லை. நீதித்துறையையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை போல, எந்த நோட்டீசுக்கும் முறையான பதில் தராமல் அலட்சியம் காட்டி வருகிறது. கொரோனா தொற்று இந்தியாவில் பரவியது 2020 ஜனவரி 30ம் தேதி...

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2) – விடுதலை இராசேந்திரன்

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2) – விடுதலை இராசேந்திரன்

வேலை இல்லாத் திண்டாட்டம் மிக மோசம் வேலைவாய்ப்பு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என்று உறுதி கூறி பதவிக்கு வந்தார் மோடி. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுவோம். இஸ்ரேல் நாடு இப்பொழுது காசா மக்கள் மீது மிகப்பெரிய போரை தொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏராளமானவர்கள் அங்கே உயிர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் ஜியோனிசம் என்ற கொள்கையை பின்பற்றுகிறது. இது இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. மோடி ஆட்சி பேசுகிற இந்து ராஷ்டிரமும் இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே சித்தாந்த ரீதியில் இருவரும் ஒரே தளத்தில் பயணிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அங்கே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும்போது இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை அனுப்புகிற முயற்சியில் ஒன்றிய ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக இஸ்ரேல் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டு 45 ஆயிரம்...

காங்கிரஸ் கட்சியின்  ‘திராவிட’ வாக்குறுதிகள்! பாஜகவை வீழ்த்த வழிகாட்டும் ‘தமிழ்நாடு’

காங்கிரஸ் கட்சியின் ‘திராவிட’ வாக்குறுதிகள்! பாஜகவை வீழ்த்த வழிகாட்டும் ‘தமிழ்நாடு’

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி ஒரு நூற்றாண்டு ஆகிறது. அதன்பிறகு பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டது முதல் இப்போது வரை தமிழ்நாடு அடைந்திருக்கிற சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி என அனைத்துக்குமே மையப்புள்ளி இடஒதுக்கீடுதான். அதனால்தான் இந்தியாவின் மற்றெந்த மாநிலங்களையும் விட இடஒதுக்கீடு, சமூக நீதி சிந்தனைகளில் இன்றளவிலும் தமிழ்நாடுதான் முன்னோடியாக இருக்கிறது. நீட், புதிய கல்விக்கொள்கை போன்ற பாஜகவின் சூழ்ச்சிகரமான திட்டங்களை உடனுக்குடன் எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மதவாத வெறுப்புணர்வை உள்வாங்காத மாநிலம் தமிழ்நாடு. ஒட்டுமொத்தத்தில் சமூகநீதி களத்துக்கான சிந்தனைப் போக்கைக் கட்டமைக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டின் இந்த ‘திராவிட மாடல்’ சிந்தனைப்போக்குதான் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியாகவும், சவாலாகவும் இருந்து கொண்டிருக்கிறது. எனவே பாஜகவை வீழ்த்த இந்த சிந்தனைப்போக்கு கையிலெடுக்க தேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இருக்கிறது. இதை காங்கிரஸ் கட்சி நன்கு உணர்ந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டும் ஆவணமாக, அக்கட்சியின்...

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?

கடந்த 10 ஆண்டுகால மோடியின் தலைமையிலான பாஜக ஒன்றிய ஆட்சி நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு சென்றிருக்கிறது. இதனுடைய தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ் இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை முதன்மையாகக் கொண்டது. அந்த லட்சியத்தை செயல் வடிவமாக்கும் முயற்சியில் தான் பாஜக ஆட்சி தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனைகள் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனைகளே அல்ல. மதச்சார்பற்ற கொள்கையோடு நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவும் ஒரு நாட்டை மதச் சார்புள்ள ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு இங்கே ஜனநாயகமும் ஜனநாயகக் கட்டமைப்புகளும் மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. எனவே ஜனநாயகத்தையும் ஜனநாயகத்தின் நிறுவனங்களையும் சீர்குலைத்து அவைகளை பலவீனம் ஆக்க வேண்டும். முதலில் நாடாளுமன்றத்தை பார்ப்போம். நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக சீர் குலைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக நசுக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வராமல் வெளியேற்றப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான...

பார்ப்பனர்களை புறக்கணிக்கிறதா பாஜக?

பார்ப்பனர்களை புறக்கணிக்கிறதா பாஜக?

திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் ஒரு இசுலாமியரைக் கூட தேர்வு செய்யவில்லை என்று அதிமுகவினரும், பாஜகவினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். அதிமுக வேட்பாளர் பட்டியலிலும் ஒரு இசுலாமியர் கூட இல்லாததை அடுத்து, இந்த விவாதம் தானாக ஓய்ந்துவிட்டது. இசுலாமியர்களுக்கு திமுக இடம் ஒதுக்கியிருக்க வேண்டுமென்பது நியாயமான கேள்விதான். இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இசுலாமியர்களுக்கு ஏன் சீட் ஒதுக்கவில்லை என பாஜக ஆதரவாளர்கள் கேட்கும் கேள்விதான் நகைப்பை ஏற்படுத்துகிறது. நாமும் அவர்களை நோக்கி ஒரு கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு பார்ப்பனர் கூட வேட்பாளர்களாக இல்லை. ஆனால் பார்ப்பனக் கட்சியான பாஜகவும் ஒரு தொகுதியில்கூட பார்ப்பனர்களை நிறுத்த முன்வரவில்லையே ஏன்? எந்த பார்ப்பனராவது பாஜகவை நோக்கி இக்கேள்வியை எழுப்பினார்களா என்றால் நிச்சயம் இல்லை. வேட்பாளராக தங்களை நிறுத்தாவிட்டாலும், பாஜக...

அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? மோடியின் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!

அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? மோடியின் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!

எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான ஆயுதமாக அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு புதிதல்ல. சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் நெறியாளர் இதை கேள்வியாக வைத்திருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, அமலாக்கத்துறையை நாங்களா உருவாக்கினோம்? பணமோசடி தடுப்புச் சட்டத்தை (PMLA) நாங்களா கொண்டு வந்தோம்? அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. சுதந்திரமாக அவர்களுடைய பணிகளை மேற்கொள்கிறார்கள். நாங்கள் அமலாக்கத்துறையை நிறுத்தவும் இல்லை, அனுப்பவும் இல்லை. அமலாக்கத்துறை சுமார் 7,000 வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. அதில் அரசியல் சார்பான வழக்குகள் 3 விழுக்காட்டுக்கும் குறைவுதான். காங்கிரஸ் ஆட்சியில் 35 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் 2,200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். அமலாக்கத்துறையின் தரவுகள் அடிப்படையில் மோடியின் பேச்சு குறித்து சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த PMLA சட்டமானது 2002ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில்தான் இயற்றப்பட்டது. சர்வதேச போதைப்பொருள்...

ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?

ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?

தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடித் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட வேண்டுமென்று எஸ்.பி.ஐ.-க்கு இட்ட உத்தரவால், மெகா ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து ஆட்டம் கண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. பணம் கொடுக்காத நிறுவனங்களை அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களை வைத்து மிரட்டுவதும், தாராளமாக நன்கொடைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் விசாரணை வளையத்தில் இருக்கிற 41 நிறுவனங்கள் 2,471 கோடி ரூபாயை பாஜகவுக்கு வழங்கியிருக்கின்றன. இதில் சோதனைக்கு பிறகு மட்டுமே 1,698 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வாரி வழங்கியிருக்கின்றன. 121 கோடி ரூபாய் சோதனை நடந்த 3 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 33 நிறுவனக் குழுமங்கள் 172 முக்கியமான திட்டங்கள் மற்றும் திட்ட அனுமதிகளை அரசிடம் இருந்து பெற்றிருக்கின்றன. இந்த திட்டங்கள் மட்டும் ஒப்பந்தங்களின் மதிப்பு 3.7 லட்சம் கோடி...

விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா – கொளத்தூர் மணி

விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா – கொளத்தூர் மணி

கோவை மாவட்டக் கழக சார்பில் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை :- 14.03.2024 இதழின் தொடர்ச்சி… கலை வடிவத்தை விரிவுபடுத்தினார் அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றியபோது பெரியாருக்கும், அவருக்கும் உண்டான மொழி நடை, உரை ஆகியவை வேறுபட்டிருந்தது. அண்ணாவின் வருகைக்கு பிறகு திராவிடர் கழகத்தில் கலை வடிவம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. திராவிட நடிகர் சங்கம், திராவிட நாடக சபை மூலமாக நாடகங்களை அரங்கேற்றினார்கள். அண்ணா எழுதிய சில முக்கியமான நூல்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம். இந்து ராஜ்ஜியம் அமைந்தால் என்ன பலன் ஏற்படும் என்பதுதான் அந்த நாடகத்தின் கரு. சிவாஜி பெரிய வீரன், மராட்டியத்தையே வெற்றிகொண்டான். ஜோதிபாபூலே போன்றோர் மராட்டியத்தின் அடையாளமாக சிவாஜியைப் போற்றினார்கள். சங் பரிவார கும்பல் இந்துக்களின் எழுச்சி சின்னமாக சிவாஜியை மாற்றிவிட்டனர். ஆனால்...

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

கர்நாடக இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்குவதாக மியூசிக் அகாடெமி அறிவித்தவுடன்இரண்டு பெண் பார்ப்பன கர்நாடக இசைக் கலைஞர்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். மியூசிக் அகாடெமி சங்கராச்சாரிகளை எதிர்க்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எப்படி விருது வழங்கலாம் என்று மியூசிக் அகாடெமியின் தலைவர் முரளி அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதோடு டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்கும் இசை மாநாட்டை தாங்கள் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்து ள்ளனர். அகாடெமியின் தலைவருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தை முகநூலிலும் வெளியிட்டுள்ளனர். இதற்கு அகாடெமியின் தலைவர் முரளி, நாங்கள் விருது வழங்குவதற்கு ஒருவரது இசைத் திறமையைத் தான் மதிப்பிடுகிறோமே தவிர அவர் எந்த கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதின் அடிப்படையில் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார். எனக்கு எழுதியுள்ள கடிதத்தை எப்படி முகநூலில் வெளியிட்டீர்கள். உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டு மியூசிக் அகாடெமி தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் அகாடெமியின் தலைவர் முரளி. இதற்காக நாம் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்....

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகின

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகின

தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடித் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட எஸ்.பி.ஐ.-க்கு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு பத்திரங்களை வாங்கின, எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற விவரங்களை எஸ்.பி.ஐ. மார்ச் 13ஆம் தேதி வெளியிட்டது. 2018ஆம் ஆண்டிலேயே தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்திருந்தாலும் 2019 ஏப்ரல் 12 முதல் நடப்பாண்டு ஜனவரி 11ஆம் தேதி வரையிலான விவரங்கள் மட்டுமே முதலில் வெளியிடப்பட்டன. எஸ்.பி.ஐ. தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டு, அதற்கு அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தலையில் கொட்டிய பின்பே, இந்த அரைகுறை விவரங்களும் வெளியிடப்பட்டன. தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் பாஜகவை காக்கும் நோக்கிலேயே எஸ்.பி.ஐ. செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதற்கேற்ப, எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் நிதி கொடுத்தது என்பதை கண்டுபிடிப்பதை தடுக்க தேர்தல் பத்திரத்தின் எண் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,...

நான் கேரண்டி

நான் கேரண்டி

என் மீது பாசத்தைப் பொழியும் தமிழ் மக்களே! உங்களுக்கு நான் கேரண்டி தருகிறேன். ஒன்றல்ல; இரண்டல்ல; வண்டி வண்டியாக…. • ‘நீட்’டை திரும்பப் பெற மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி • வெள்ளம் வந்தால் உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி • வெள்ள நிவாரண நிதி ஒரு பைசா கூட தர மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி • மெட்ரோ ரயில் திட்டமா? எங்கள் நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் தந்தார்களா? கவலைப்படாதீர்கள். அதற்கு நிதி ஒதுக்காமல் பார்த்துக் கொள்வதற்கு நான் கேரண்டி • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் வராது. இப்போது அடிக்கல் நாட்டு விழா நடத்தியிருப்பது ஒரு நாடகம். கவலைப்படாதீங்க, அடுத்தக்கல்லு வராமல் பார்த்துக் கொள்வதற்கு நான் கேரண்டி • கிராமப்புற வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை முழுமையாக வழங்காமல் முடக்கிப் போடுவதற்கு நான் கேரண்டி • அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறைகளை எங்களை எதிர்ப்பவர்களுக்கு...

எதையுமே அழுத்தமாகப் பேசுபவர் அறிஞர் அண்ணா! – கொளத்தூர் மணி

எதையுமே அழுத்தமாகப் பேசுபவர் அறிஞர் அண்ணா! – கொளத்தூர் மணி

கோவை மாவட்டக் கழக சார்பில் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:- அண்ணாவின் பொதுவுடைமை சிந்தனை அண்ணாவின் நினைவுநாளில் அவரைப் பற்றி பேசுவதும், அவரின் சிந்தனைப் போக்கும் செயல்பாடுகளும் என்னவாக இருந்தன என்பதைப் பற்றி சிலவற்றை பகிர்ந்து கொள்வது நமக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தில்தான் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கை ஏற்படுத்தியிருப்பார்கள் என்று கருதுகிறேன். 1930-களில் எம்.ஏ என்பது உயர்ந்த படிப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த உயர்ந்த படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணிக்கோ, மற்ற வேலைக்கோ செல்லாமல் சமூகப் பணிக்கு வந்தார் என்பதே அண்ணாவை பற்றிய ஒரு பெரிய மதிப்பை நம் மனதில் ஏற்படுத்தும். அறிஞர் அண்ணா எளிய குடும்பத்தில் பிறந்து முதுநிலை கல்வியை முடித்தவர். அரசியலில் சமூகப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவர் பெரியாரிடம் வந்த பிறகு ஏற்பட்டது என்று கூட நான்...

தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!

தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மிக மோசமாக சித்திரிப்பு செய்கிறது வேலையில் இறங்கியிருக்கிறது பாஜக. பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரப் பிரதேசத்தில் என்ன நிலைமை என்பது கூட தெரியாமல், தமிழ்நாட்டின் மீது சேற்றை வாரி இறைக்கும் பாஜகவினருக்கு பத்திரிகையாளர் அரவிந்தாக்‌ஷன் தரவுகளால் பதிலடி கொடுத்திருக்கிறார். 15.02.2024 அன்று West Delhi-ல் இருக்கும் Aventa Company-ன் basement -ல் போதை மருந்து தயாரிப்பதற்கான pseudoephedrine எனும் மூலப்பொருள் 50.070 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய அரசின் போதைத் தடுப்புப் பிரிவின் (NCB) டெல்லி மண்டல அலுவலகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கு எண்-VIII /03/DZU/2024 – இந்த வழக்குக்கு விகாஷ் ஷர்மா என்ற ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரி. இது சம்பந்தமாக 23-02-2024 அன்று ஜாபர் சாதிக் என்ற தமிழ்நாட்டைச் சார்ந்தவருக்கு சம்மன் வழங்கப்பட்டு,தொடர் சோதனைகள்...

மோடி ஆட்சியின் மோசமான சர்வாதிகாரம்

மோடி ஆட்சியின் மோசமான சர்வாதிகாரம்

இந்தியாவில் மோடி ஆட்சி படு மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் தனது 2024ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் V-Dem Institute ஆகும். உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான ஜனநாயகங்கள் எப்படி செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து மிக நுட்பமாக ஆய்வு செய்யும் உலகின் முதன்மையானது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தில் மட்டும் 180 நாடுகளை சேர்ந்த 4080 பேர் பணியாற்றுகின்றனர். 201 நாடுகளை பற்றிய 31 மில்லியன் தரவுகள் இந்த நிறுவனத்திடம் உள்ளது. 1789 முதல் 2023 வரை உள்ள தரவுகள் இதில் அடங்கியுள்ளது. மிக துல்லியமாக ஒவ்வொரு நாட்டில் உள்ள வெவ்வேறு வகையான ஜனநாயகப் பண்பு குறித்து அறிக்கை தருவது இந்த நிறுவனம். அத்தகைய நிறுவனம் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் மோடி ஆட்சி மிக மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது....

பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக

பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறத் தொடங்கியிருக்கிறது. அதற்கேற்ப மக்கள் மனநிலையைக் கட்டமைக்கும் விதமாக, பல ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை திணிக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கும் அளவுக்குக்கூட வளர்ந்திடாத பாஜக 18% வாக்குகளுக்கு மேல் பெறும் என்றும், 4 முதல் 6 தொகுதிகள் வரை வெல்லக்கூடும் என்றும் புதிய தலைமுறை ஊடகம் கூட கருத்துத் திணிப்பு செய்தது. இப்படி பாஜகவிற்கு ஆதரவாக கருத்துருவாக்கம் செய்ய முயலும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு எப்படி நடத்தியிருக்கிறது என்பது பெரும் விவாதத்துக்கு உரியது. இதுகுறித்து “தி ஸ்கிரால்” ஊடகத்தில் அயூஷ் திவாரி என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: 2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 180 நாடுகளில் 140-வது நாடாக இருந்தது. அதுவே மோசமான நிலைதான் என்றால், இப்போது 163வது இடத்துக்கு மேலும்...

சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?

சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?

தமிழ்நாட்டு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சிற்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது. ஒரு அமைச்சரே இப்படி சனாதனத்தை எதிர்க்கலாமா? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், கருத்து சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளது. சனாதனம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. சனாதன தர்மம் என்றால் என்ன? என்பதை விவாதித்து விளக்கமளிக்காத உச்சநீதிமன்றம், ஒட்டுமொத்தமாக சனாதன தர்மத்தை எதிர்க்க கூடாது, அது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவது என்று கூறுவது சற்றும் நியாயமற்ற ஒரு வாதமாகும். சனாதன தர்மத்தை வாழ்க்கை முறை என்கிறார்கள். ஆனால் வேத பண்டிதர்கள் முதல் சங்கராச்சாரியார் வரை சனாதனம் என்பது வர்ணாசிரம தர்மம் தான் என்று கூறியுள்ளனர். பிராமணன் – சத்திரியன் – வைசியன் – சூத்திரன் என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது தான் சனாதன தர்மம் என்று கூறுகிறார்கள். கீதையிலே கிருஷ்ணனும் இந்த நான்கு வர்ணத்தை காப்பாற்றுவதற்கு...

வேலையில்லா கொடுமை; உயிரை இழக்கவும் துணியும் இந்தியர்கள்!

வேலையில்லா கொடுமை; உயிரை இழக்கவும் துணியும் இந்தியர்கள்!

உத்தரப் பிரதேச இளைஞர்களை சில விதிகளைத் தளர்த்தி இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்பியிருப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. பாலஸ்தீன படைகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நடக்கும் சூழலில் இது தேவைதானா என அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. இப்போது, நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கடந்த ஓராண்டில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இருதரப்பிலும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடரும் வேளையில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாட்டவரையும் தங்கள் நாட்டு ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய படையில் சேர அந்நாட்டு இளைஞர்கள் தயக்கம் காட்டுவதாக கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாகவே இதுபோல வெளிநாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து தங்கள் நாட்டு ராணுவத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. விடுமுறை இல்லை,...

பாஜக செய்த ஆட்சி கலைப்புகள்

பாஜக செய்த ஆட்சி கலைப்புகள்

சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ளாத பாஜக, தேர்தல் அதிகாரியாக பாஜகவைச் சேர்ந்தவரை நியமித்து தேர்தலை நடத்த வைத்தது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், பாஜக தோல்வி தேர்தலுக்கு முன்பே உறுதியானது. ஆனாலும், தேர்தல் அதிகாரி பாஜகவின் கவுன்சிலர் என்பதால் 8 வாக்குகள் செல்லாது என்று அறிவித்து பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தார். கண்காணிப்பு கேமிராவில் தேர்தல் அதிகாரி அனில் மாஷி  வாக்குச்சீட்டுக்களை திருத்துவது அப்பட்டமாக பதிவானது. உச்சநீதிமன்றம் இதைக் கடுமையாக கண்டித்ததுடன், அரிதினும் அரிதான வழக்குகளில் பயன்படுத்தக்கூடிய விதி 142-யைப் பயன்படுத்தி ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது. சண்டிகர் மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றம் வழங்கிய நீதியை 2016 ஆம் ஆண்டிலிருந்து பல மாநிலங்களில் பாஜக செய்த ஆட்சி கவிழ்ப்புகளுக்கும் வழங்கியிருந்தால், பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். தற்போது 12 மாநிலங்களில் நேரடியாகவும், 5 மாநிலங்களில் கூட்டணியுடனும் பாஜக...

ஊழல் கறையைப் போக்கும் அதிநவீன வாஷிங்மெசின் பாஜக

ஊழல் கறையைப் போக்கும் அதிநவீன வாஷிங்மெசின் பாஜக

எதிர்க்கட்சியில் இருக்கும்போது பாஜகவால் தீவிரமான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், அமலாக்கத்துறை- வருமான வரித்துறை போன்ற ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளால் சோதனைகளுக்கும், விசாரிப்புகளுக்கு உள்ளானவர்கள் பாஜகவில் இணைந்துவிட்டாலோ அல்லது பாஜக ஆதரவாளர்கள் ஆகிவிட்டாலோ அவர்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுக்களும் ஒரு நொடியில் பறந்துவிடும், பிறவிப் புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். அப்படி பாஜகவின் வாஷிங் மெஷினில் சிக்கி தூய்மையானவர்களின் பட்டியல். பாவனா கவாலி : சிவசேனாவை சேர்ந்த இவர், பொது அறக்கட்டளைக்கு சொந்தமான 7 கோடி ரூபாய் பணத்தை முறைகேடு செய்ததாக 2020ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கினார். இந்த வழக்கில் சில மாதங்கள் கழித்து இவருக்கு நெருக்கமான சயீத் கான் என்பவர் கைது செய்யப்பட்டார். 2021, 2022-இல் பாவனாவை விசாரிக்க அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. குற்றப்பத்திரிகையில் இவருடைய பெயரும் இருந்தது. ஆனால் 2022 ஜூலையில் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தார் பாவனா. மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைமைக் கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார்....

தமிழ்நாட்டை முந்துகிறதா உத்தரப் பிரதேசம்? சங்கிகளின் பொய்யுரைகளை அம்பலப்படுத்துவோம்

தமிழ்நாட்டை முந்துகிறதா உத்தரப் பிரதேசம்? சங்கிகளின் பொய்யுரைகளை அம்பலப்படுத்துவோம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை பின்னுக்குத்தள்ளி உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டதாக, பாஜகவினர் சமூக ஊடகங்களில் பொய்ச்செய்தி ஒன்றை பரப்பினர். இதுபோன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுதான் “குஜராத் மாடல்” என்ற போலி பிம்பத்தை உருவாக்கினார்கள். அந்த பிம்பம் இப்போது சுக்குநூறாக உடைந்துவிட்டதால் “உ.பி. மாடல்” என்ற ஒன்றுக்கும் உதவாத மாடலை போலிச் செய்திகளால் கட்டமைக்க பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். உண்மையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ன? உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி என்பதற்கான சிறு ஒப்பீட்டை இங்கு காணலாம். 2024-25 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் மதிப்பீட்டின்படி, ஒன்றிய நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கப் போகிற தொகை 49,754.95 கோடி ரூபாய். ஆனால் உத்தரப் பிரதேசத்துக்கு கிடைக்கப் போகிற தொகையோ 2,18,816.84 கோடி ரூபாய். ஒன்றியத்துக்கு வரியாகச் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது தமிழ்நாடு. ஆனால் உத்தரப் பிரதேசமோ 2.73 ரூபாயாக...

வந்திடுச்சு; ராமராஜ்ஜியம் வந்துடுச்சு – கோடங்குடி மாரிமுத்து

வந்திடுச்சு; ராமராஜ்ஜியம் வந்துடுச்சு – கோடங்குடி மாரிமுத்து

”பங்கஜம் இனி நம்மளவா ஆட்சி தான்டீ. ராமன் கோயில் திறந்த அந்த நிமிஷத்திலேயே ராமராஜ்ஜியம் வந்திருச்சு. அமித்ஷா இதை அறிவிச்சுட்டாரு, இனி ஆயிரம் ஆண்டு ராமராஜ்ஜியம் தான் என்று அவரே கூறிட்டாரு. பாஜக தேசியக் குழு தீர்மானமே போட்டுடுச்சுடீ. போய் பால் பாயாசம் கொண்டு வா” இப்படி ஆனந்தக் கூத்தாடி இருக்கும் ஒரு கூட்டம். அவர்களுக்கு பல பெயர்கள் உண்டு. சமூக ஆர்வலர்கள், வலதுசாரி, அரசியல் ஆய்வாளர், பாஜக, இந்து முண்ணனி என்று பல பல முகமூடிகளில் வருவார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள். எதிர்த்து பேசுபவர்களின் நெத்தியடி கேள்விகளால் திக்குமுக்காடினாலும் கூச்சல் போட்டு மடைமாற்றம் செய்துவிடுவார்கள்.இவர்களெல்லாம் யார்? ஒற்றை இந்தியாவைப் போல ஒற்றை வரியில் சொல்லப்போனால் சங்கிகள் பாமர வாக்காளர்களுக்கு தலை சுற்றுகிறது. அவர்களுக்கு பல சந்தேகங்கள் வந்துவிட்டன. சங்கிகள் என்ன கூறுகிறார்கள், பாமர மக்கள் என்ன நினைக்கிறார்கள். இருவரும் நேருக்கு நேராக சந்தித்தால்… ஒரு உரையாடல் பாமர வாக்காளன் :...

மிருகத்துக்கும் மதச்சாயம்

மிருகத்துக்கும் மதச்சாயம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிசத் அமைப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறது. அம்மாநிலத்தில் சிலிகுரி என்ற பகுதியில் பெங்கால் சவேரி என்ற உயிரியல் பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்றும், பெண் சிங்கத்துக்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிங்கங்களும் திரிபுராவில் இருந்து வந்தவை. இதற்கு திரிபுராவிலேயே பெயர் சூட்டப்பட்டுவிட்டது. ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்ற இஸ்லாமியப் பெயரையும், பெண் சிங்கத்துக்கு சீதா என்ற ராமாயண பாத்திரப் பெயரையும் சூட்டியிருப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருக்கிறது. எனவே பெண் சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்பதுதான் விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் கருத்து. அக்பர் ராமாயணத்துக்கு எதிரானவரா? இந்துமதத்துக்கு எதிரானவரா? என்பதையும் வரலாற்றுரீதியாக நாம் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. ராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் இருந்து பாரசீக மொழிக்கு மொழிப்பெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட மன்னர் தான் அக்பர். ...

‘திராவிட மாடல் ஆட்சி’யின் ஈராண்டு சாதனைகள் – பட்டியலிட்ட முதலமைச்சர்

‘திராவிட மாடல் ஆட்சி’யின் ஈராண்டு சாதனைகள் – பட்டியலிட்ட முதலமைச்சர்

சட்டப்பேரவையில் பிப்ரவரி 15-ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அவற்றால் ஏற்பட்ட பலன்கள் குறித்து முதலமைச்சர் ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகளைக் காணலாம். இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம்! இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது; ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது! இந்திய அளவில் பணவீக்கமானது 6.65 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்து உள்ளது! ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம்! கல்வியில்...

இன அழிப்புக்கு துணைபோகும் அதானி?

இன அழிப்புக்கு துணைபோகும் அதானி?

காஸா நகரில் பாலஸ்தீனிய மக்களையும், படைகளையும் குறிவைத்து இஸ்ரேலிய படைகள் கடந்த 4 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை வைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 28,000 பேர் உயிரிழந்தனர். அதில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இனப்படுகொலைக்கு ஒப்பான இக்கொடூரச் செயலுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வழக்கை எதிர்கொள்ளும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இந்த ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை அதானி குழுமம் தற்போது தயாரித்து அனுப்பியிருக்கிறது என்ற தகவல்  வெளியாகியிருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட டிரோன்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு உபகரணங்கள் சார்ந்த பிரபல ஊடகமான ஷெப்பர்டு மீடியா கூறியுள்ளது. இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2018ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் 15 மில்லியன் டாலர் முதலீட்டில் அதானி குழுமம் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு ஆலையை நிறுவியது. அந்த ஆலையில் இருந்துதான் இந்த டிரோன்கள் தயாரித்து அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதானி குழுமத்திற்கு எதிராக...

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

(08.02.2024  இதழில்   வெளியான உரையின் தொடர்ச்சி) 1892-இல் ஆங்கிலக் கல்வி வந்தபோது சென்னை மாகாணத்தில் சர்வீஸ் கமிசன் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த 1892-க்கும் 1904-க்கும் இடையில் அய்.சி.எஸ். அதிகாரிகளாக 16 இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் 15 பேர் பிராமணர்கள். அந்த காலகட்டத்தில் ஆளுநர் நிர்வாக கவுன்சிலில் 3 இந்தியர்கள், அதில் இருவர் பிராமணர்கள். 1900-ஆம் ஆண்டு ஐந்து பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். அதில் நால்வர் பிராமணர்கள். 1907-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்களாக 12 நியமிக்கப்பட்டனர். அதில் 11 பேர் பிராமணர்கள். அவர்கள் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கக்கூடாது என்று கூறி அதை எடுத்துவிட்டனர். அதற்குப் பின்னர் ஆட்சியமைத்த பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி காலத்தில்தான் தமிழ் மீண்டும் கொண்டுவரப்பட்டது. திராவிடம் என்ற சொல் 7ஆம் நூற்றாண்டில் குமரில பட்டர் எழுதிய தாந்திர வார்த்திகா என்பதில் ஆந்திரா திராவிட பாஷை என்று வருகிறது. இந்த மண்ணில்...

ஆளுநரின் ‘மனசாட்சி’ உரை இப்படி…

ஆளுநரின் ‘மனசாட்சி’ உரை இப்படி…

ஆளுநர் உரை : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களே, உறுப்பினர்களே, அவைத் தலைவரே உங்கள் அனைவருக்கும் குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநரின் நமஷ்காரம். ஜெய் சிரி ராம் என்று நான் இப்போது கூறுவேன். அதை நீங்கள் திருப்பி முழங்க வேண்டும் (அவையில் நான்கு பேர் மட்டுமே திருப்பி முழங்குகிறார்கள்) சரி அனைவரும் இதை முழங்காவிட்டாலும், நான் அனைவரும் முழங்கியதாக பேரவைக் குறிப்பில் பதிவு செய்ய உத்தரவிடுகிறேன். தமிழ்நாட்டில் இப்போது மாநில உரிமை என்ற கூச்சல் காதை துளைக்கிறது. இப்போதைய தேவை மாநில உரிமை அல்ல, ஆளுநர்களின் உரிமை. அதுவும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களுக்கான உரிமை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் சனாதன தர்மம். இந்த சனாதன தர்மம் இல்லாவிட்டால் ஜனநாயகமே இல்லை என்று நமது முன்னோர்களும், ரிஷிகளும், தேவர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அடித்து கூறிவிட்டார்கள். சூத்திரர்கள், பஞ்சமர்கள் அன்னிய மதத்தினர் ஓட்டு போட்டதாலேயே மக்கள் பிரதிநிதியாகிவிட...

பாஜகவின் மோசடிகளை தோலுரிக்க பெரியார் தேவைப்படுகிறார் –  ஆளூர் ஷா நவாஸ்

பாஜகவின் மோசடிகளை தோலுரிக்க பெரியார் தேவைப்படுகிறார் – ஆளூர் ஷா நவாஸ்

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு வட சென்னை மாவட்டக் கழகம் சார்பில் 20.12.2023 புதன்கிழமை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உரை பின்வருமாறு :- நினைவுநாள் என்பது வருடத்தில் ஒருநாள், ஆனால் நினைவுநாளில் மட்டும் நினைவுகூறப்பட வேண்டிய தலைவரல்ல பெரியார். எந்நாளும் நமக்கு அவருடைய நினைவுநாள்தான். பெரியாரை நீக்கிவிட்டு அல்லது பெரியாரை மறந்துவிட்டு அல்லது பெரியாரை நினைக்காமல் இருந்துவிட்டு நம்மால் இந்த சமூகத்தில் நடமாடவே முடியாது. அந்தளவுக்கு இங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு மகத்தான தலைவர் பெரியார். அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள், அவதூறுகள், போலியான சித்தரிப்புகள் என இவற்றின் ஊடாக நாளுக்கு நாள் பெரியார் அதிகம் வாசிக்கப்படுகிறார். நினைவுகூறப்படுகிறார், இந்த தலைமுறையின் மத்தியில் அவர் உயர்ந்து கொண்டே செல்கிறார். அப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தி கொண்ட ஒரு தலைவர் பெரியார். காந்தியை எதிர்த்தார்,...

ட்ரெண்டிங்கில் பெரியார்

ட்ரெண்டிங்கில் பெரியார்

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்றி உருவம் போல பெரியாரை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரப்பப்பட்டது. அந்த படத்தைப் பார்த்தால் பெரியாரியவாதிகளின் மனம் புண்படும், அதில் ஆனந்தமடையலாம் என்று கருதி எவரோ பரப்பியிருக்கிறார். ஆனால் நடந்ததோ வேறு. “இந்த படம் அழகாக இருக்கிறது, படத்தை வரைந்தவருக்கு பாராட்டுக்கள், பெரியார் இருந்திருந்தால் அவரும் நிச்சயம் பாராட்டியிருப்பார். ஆடு, மாடு, கோழி, சிங்கம், புலி போன்ற மற்ற விலங்குகளைப் போல பன்றியும் ஒரு விலங்கு. அந்த விலங்கைப் போல பெரியாரை சித்தரித்தால் அதில் என்ன அவமானம் இருக்கிறது? அப்படியானால் விஷ்ணுவின் வராக அவதாரமும் இழிவானது தானா?” என பெரியாரியவாதிகள் எழுப்பிய கேள்விகள் சமூக வலைத்தளங்களை 2 நாட்கள் ஆக்கிரமித்துவிட்டன. வாய்ப்பை ஏற்படுத்தியாவது பெரியாரை அவ்வப்போது டிரெண்டிங்கில் வைத்துவிடுகிறார்கள் கொள்கை எதிரிகள். “எனக்கு விளம்பரமே எனது எதிரிகள்தான்” என பெரியார் சொன்னது அவர் மறைந்து அரைநூற்றாண்டுகள் ஆகியும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது....

பகுத்தறிவை போதித்த கலைஞரின் கலைப் படைப்புகள்

பகுத்தறிவை போதித்த கலைஞரின் கலைப் படைப்புகள்

(கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  நீர்வளத்துறை வெளியிட்டுள்ள மலரில் “பகுத்தறிவு சீர்த்திருத்தச் செம்மல்” என்ற தலைப்பில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை) கடந்த இதழின் தொடர்ச்சி… மக்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கிற மூட நம்பிக்கைகள், புராணங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கிற ஆபாசங்களை எழுதியெல்லாம் ஆதாரப்பூர்வமாக விளக்கி, ‘சோ’ அதற்கு மறுப்பே எழுத இயலாத அளவுக்கு பகுத்தறிவுச் சுடராக மிளிர்ந்தவர் கலைஞர். இந்தியாவில் வேறெந்த தலைவர்களுக்கும் தோன்றாத, சமத்துவபுரம் என்ற மாபெரும் திட்டம் கலைஞரின் எண்ணத்தில் உதித்து செயல்வடிவம் பெற்றதுதான் அவரது பகுத்தறிவின் ஆற்றலுக்கான உச்சபட்ச சான்று. ஊர், சேரி, அக்ரகாரம் என மூன்றாய் பிரிந்து கிடக்கும் சமூகக் கட்டமைப்பை தகர்த்து, சமன்படுத்தும் முன்முயற்சியை செய்ய வேண்டுமென்று தேர்தல் அரசியலில் எவருக்குமே தோன்றவில்லை, கலைஞருக்கு மட்டும்தான் தோன்றியது. அதற்கான முன்மாதிரியாக பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், உயர்ஜாதியினர் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக வாழும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை கட்டியெழுப்பினார். அதிலும் ஆழமாக...

ஜாதி பேதமும் வர்க்க பேதமும் வேறு வேறல்ல! – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

ஜாதி பேதமும் வர்க்க பேதமும் வேறு வேறல்ல! – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

டிசம்பர் 16-ஆம் தேதி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடந்த அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கத்தின் 5-வது அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு கழகத் தலைவர் ஆற்றிய உரை. பொதுவுடமை இயக்கங்கள் ஜாதியின்பால் தன் கருத்தைத் திருப்புமா என்ற எண்ணம் பல வேளைகளில் இருந்திருக்கிறது. அதுகுறித்த விவாதங்களும் கூட இருந்திருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்கூட எம்.சி.பி.அய் கட்சியினர் (யுனைடெட்) என்னிடம் வந்து பெரியார் நினைவுநாளை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் “மார்க்சியத்தின் மீதான எங்கள் விமர்சனங்கள்” என்ற தலைப்பில் நீங்கள் உரையாற்ற வேண்டும் என்று கேட்டனர். மார்க்சியர்கள் எப்போதுமே உலக நடப்புகளை துல்லியமாகக் கணித்து அதற்கேற்ப தங்கள் வரையறைகளை, செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ளும் பண்பு கொண்டவர்கள். ஜாதிய சிக்கல்களை கையிலெடுக்கிற மார்க்சிய இயக்கங்கள் அண்மைக்காலங்களில் பல இயக்கங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்குமுன்புவரை ஏன் இவ்வளவு காலம் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு வலுவான இயக்கத்தை முன்னெடுக்கவில்லை என்ற ஏக்கம்...

வள்ளுவருக்குப் பூணூல் போடுவதைத் தடுத்த கலைஞர்

வள்ளுவருக்குப் பூணூல் போடுவதைத் தடுத்த கலைஞர்

(கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  நீர்வளத்துறை வெளியிட்டுள்ள மலரில் “பகுத்தறிவு சீர்த்திருத்தச் செம்மல்” என்ற தலைப்பில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை) பகுத்தறிவு என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று கலைஞர் கொடுத்த விளக்கத்தில் இருந்தே இந்த கட்டுரையை தொடங்கலாம் என்று கருதுகிறேன். “எல்லாவற்றையும் பகுத்தறியத்தான் பகுத்தறிவு. கடவுள் உண்டா இல்லையா என்று ஆராயக் கூட பகுத்தறிவு தேவைப்படுகிறது. சிந்திக்கிற, பகுத்தறிகிற ஆற்றலைப் பெற்றதால்தான் மனிதன் மற்ற உயிரினங்களை விட மேலானவனாக மனிதன் கருதப்படுகிறான். அப்படிப்பட்ட அந்த ஆற்றலை எதிர்கால சமுதாயம் வாழ்வதற்குப் பயன்படுத்த வேண்டும்.”  1.1.81 அன்று சென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டை தொடங்கிவைத்து கலைஞர் குறிப்பிட்டவை இவை. எழுத்தாளர், பத்திரிகையாளர், வசனகர்த்தா, அரசியலாளர், கவிஞர், பாடலாசிரியர் என கலைஞருக்கு பன்முக அடையாளங்கள் இருந்தாலும், தன்னை அவர் எவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டார் என்பதில் இருந்துதான் கலைஞரின் வரலாற்றை அணுக வேண்டும். “5 முறை முதல்வராக இருந்தேன், 50 ஆண்டுகாலம் திராவிட...

ஆட்சி அதிகாரம் : அம்பேத்கர் பார்வை என்ன? – கொளத்தூர் மணி

ஆட்சி அதிகாரம் : அம்பேத்கர் பார்வை என்ன? – கொளத்தூர் மணி

நாம் புரட்சியாளர் அம்பேத்கரை, அவரின் கொள்கைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது அவரது ‘ஜாதி ஒழிப்பு’ நூல். லாகூர் மாநாட்டில் அவர் ஆற்ற இருந்த உரையை நூலாக வெளியிட்டார். நூல் வெளி வந்த இரண்டாம் மாதத்தில், அம்பேத்கரின் அனுமதியோடு தமிழில் பெரியார் வெளியிட்டார். அந்த நூல் தாங்கியிருந்த சிந்தனையைதான் பெரியாரும் கொண்டிருந்தார். அரசியல் நிலைபாடுகளில் இருவருக்கும் சிறு சிறு மாற்றங்கள் இருந்திருக்கலாம். அம்பேத்கர் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார். பெரியார் தனித் தமிழ்நாடு பேசினார். இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். பெரியார் இந்தி கூடாது என்று சொன்னார். அரசியல் நிலைகளில் அவரவர்களுக்கு இருந்த கருத்தின் அடிப்படையில் சொன்னார்கள். தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பை பிற சாதியினர் வாழும் பகுதிகளில் நிறுவ வேண்டும் என்பது பெரியாரின் கருத்தாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு வெட்ட காங்கிரஸ் நிதி அனுப்பியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் வந்த நாற்பத்தி...

மோடி ஆட்சி இஸ்ரேலை ஆதரிப்பது ஏன் (5) இந்தியாவில் பார்ப்பனர்கள், அமெரிக்காவில் யூதர்கள் – விடுதலை இராசேந்திரன்

மோடி ஆட்சி இஸ்ரேலை ஆதரிப்பது ஏன் (5) இந்தியாவில் பார்ப்பனர்கள், அமெரிக்காவில் யூதர்கள் – விடுதலை இராசேந்திரன்

1968-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட நிக்சன், ஹம்ப்ரி இருவருமே யூதர்களின் ஆதரவுக்கு வலைவீசினார்கள். தேர்தல் செலவுக்குப் பெருந்தொகையை யூதர்களிடமிருந்து பெறுவதே இதன் நோக்கம். ஹம்ப்ரிக்குத்தான் யூதர்கள் ஆதரவு கிடைத்தது. 85 சதவீத யூதர்களின் வாக்கு ஹம்ப்ரிக்குக் கிடைத்தும், அவரால் வெற்றி பெற முடியவில்லை! நிக்சன் வெற்றி பெற்றுவிட்டார். அரபு – இஸ்ரேல் பிரச்சனைக்கு நியாயமான முறையில் அமைதித் தீர்வு ஒன்றை உருவாக்க விரும்பி, 1967-க்குப் பிறகு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை, அரபு நாடுகளிடம் திரும்ப ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கினார். யூதர்கள் நிக்சனை மிரட்டத் துவங்கினர். யூத அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரட்டி, வலிமையான போராட்டங்களில் இறங்கின. எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல் நிக்சன் திணறினார். 1970 மார்ச்சில் – பிரான்ஸ்அதிபர் அமெரிக்கா வந்தபோது, அவரது அரபு ஆதரவுக் கொள்கைகளை எதிர்த்து யூத அமைப்புகள் போராட்டம் நடத்தின. அமெரிக்க – பிரான்ஸ்உறவு சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காக, பிரான்ஸ்அதிபரிடம் நிக்சன் மன்னிப்புக் கோரினார். இதற்காக...

“தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை” – பெரியார் அறிக்கை

“தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை” – பெரியார் அறிக்கை

1970ஆம் ஆண்டில் “தமிழ்ப் பாடமொழித் திட்டத்தை” கலைஞர் அமல்படுத்தியபோது அதனை வரவேற்று பெரியார் அளித்த அறிக்கை. தமிழ்நாட்டில் வீழ்ச்சி அடைந்த காங்கிரஸ் இயக்கம் தலை எடுக்க, வளர நான் காரணமாக இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டு  நீதிக்கட்சித் தலைவரானதன் காரணமே பார்ப்பனரல்லாத தமிழர்களின் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக ஆக்குவதற்காகவேயாகும். அதற்காக அன்றிலிருந்து இன்றுவரை நான் ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறியும் ஒரு நிமிடமும் ஓய்வு கொள்ளாமல் பணியாற்றிக்கொண்டுள்ளேன். லட்சியங்களில் வெற்றி பலருக்குக் கிடைத்தது போல், எனக்கு இளமைக் காலத்தில் கிடைக்காவிட்டாலும் எனது முதுமைக் காலத்திலாவது கிடைத்தது என்பதற்கு அடையாளமாகத்தான் என்னோடு  இருந்து  வளர்ந்தவர்களால்  ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்ப் பாட மொழி என்ற யுத்த தளவாடம்: இந்த ஆட்சியுனுடைய சாதனைகளில் எந்தவித ஓட்டை உடைசல்களையும் குறிப்பிட்டுக்காட்டி எதிர்க்கமுடியாமல்  தமிழ்ப் பாட மொழிப் பயற்சியைத் தங்கள் யுத்த தளவாடமாக எடுத்துக்கொண்டு, ஆச்சாரியாருடைய சுதந்திராக்கட்சியும், ஆரிய ஏடுகளும் இந்த ஆட்சியைக்...