Category: திவிக

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

எழுத்தாளர் விஜயபாஸ்கர் புதிதாக எழுதியுள்ள “பாலஸ்தீனம் முதல் இஸ்ரேல் வரை – ஒரு வரலாற்றுச் சுருக்கம்” நூலை சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் புக்ஸ்.காம் அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட கருப்புப் பிரதிகள் நீலகண்டன், பத்திரிகையாளர் நீரை.மகேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் விஜயபாஸ்கர் “உயர்ஜாதியினருக்கு EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?” என்ற நூலை தொகுத்து  கவனம் ஈர்த்தவர். நிகழ்வில் அற்புதம்மாள், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ர.பிரகாசு, அன்னூர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

2014ஆம் ஆண்டில் “முழக்கம்” உமாபதி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட வழக்கு! குற்றமிழைத்த போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2014ஆம் ஆண்டில் “முழக்கம்” உமாபதி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட வழக்கு! குற்றமிழைத்த போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிராபகரன் அவர்களின் 60-வது பிறந்தநாளையொட்டி, 2014-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்களும், பொதுமக்களும் இணைந்து கொண்டாட்ட நிகழ்வுக்கு தயாராகினர்.  E-4 அபிராமபுர காவல் நிலைய அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மயிலாப்பூர் பகுதி மக்கள் காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். தகவல் அறிந்து செய்தி சேகரிக்க அங்கு சென்ற “பெரியார் முழக்கம்” நிருபர் உமாபதி. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதை தன்னுடைய கைபேசியில் படம் பிடித்துக்கொண்டிருந்தார். காவல் நிலைய அதிகாரிகள் இளையராஜா, வடிவேலு, கலைச்செல்வி ஆகியோர் கைபேசியை பிடுங்க முற்பட்டனர். பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்ட போலீசாரின் அராஜகப் போக்கை நிருபர் உமாபதி கேள்வி கேட்டார். அப்போது நிருபர் என்றும் பாராமல் முழக்கம் உமாபதியை போலீசார் லத்தியால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி, காவல்நிலையத்திற்கு தூக்கிச்சென்று அடித்துத் துன்புறுத்தி...

குடும்ப விழாக்கள் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

குடும்ப விழாக்கள் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.01.2024, வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை அசோக் அலுவலகத்தில் நடைபெற்றது. கழக மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற மார்ச் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் கருத்தரங்கம், தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது, கோவை மாவட்டக் கழகத்திற்கு மாவட்ட அலுவலகம் அமைப்பது, ஆண்டிற்கு ஒருமுறை கோவை மாவட்டத் தோழர்கள் ஒன்றிணைந்து குடும்ப விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவில் புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா தொகையாக ரூ.25,000 வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 18012024  இதழ்

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 24-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் 07.01.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திமுக இளைஞரணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் 13.01.2024, சனிக்கிழமை நடைபெற்றது. “மாணவக் கலைஞர்கள் குழுவின்” பறையிசை – ஒயிலாட்டம் – மரக்கால் ஆட்டம் – தீச்சிலம்பம் – மயிலாட்டம் – மாடாட்டம் – புலி ஆட்டம், Dude’z in Madras குழுவின் ராப் இசை, U Won Dance Crewe பகுதி மாணவிகளின் நடனம், கானா சுதாகர்‌ – புரட்சிமணியின் மக்களிசை சங்கமம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். இராஜேசு வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, 119வது வார்டு மாமன்ற...

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

மயிலைப்பகுதி 8ம் ஆண்டு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா பரிசளிப்பு – கலை நிகழ்ச்சிகள் 15.01.2024 அன்று சுப்பராயன் சாலை பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்றது. நடனம் – சிலம்பாட்டம் – குத்துச்சண்டை – மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தென்சென்னை மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் சரவணன், விசிக 126வது வட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மயிலாப்பூர் கிழக்கு பகுதிச் செயலாளர் முரளி, மயிலாப்பூர் மேற்கு பகுதிச் செயலாளர் நந்தனம் கி.மதி ஆகியோர் பரிசளித்து சிறப்பு செய்தனர்.. Arun Ace Dance குழு, ஆசான் ஆதி கேசவன் சிலம்பம் குழு, VS Boxing Club குழு மற்றும் SS மயிலாட்டம் குழுவினருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். மயிலைப் பகுதி பொங்கல் விழாக்குழு மயிலைப்பகுதி : தி.இராவணன், க.சுகுமாறன், ம.மனோகர்,...

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளான ஜனவரி 25ஆம் தேதி அன்று சென்னை மூலக்கொத்தலத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து – தருமாம்பாள் அம்மையார் ஆகியோரின் நினைவு இடங்களில் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவி பாரதி, வடசென்னை துரை உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

சேலம் : கோவில் வெள்ளாரை சேர்ந்த கழகத் தோழர் K. நாகராஜ் 22.01.2024 அன்று சாலை விபத்தில் முடிவெய்தினார். அவரது உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் தானமாக வழங்கப்பட்டது.  உடலுறுப்பு தானம் செய்வோரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தோழர் நாகராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தோழரின் உடலுக்கு கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் சேலம் மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜி, நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, தங்கமாபுரிப்பட்டினம் ராமச்சந்திரன், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன், மூலப்பாதை கவியரசு, கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். வெள்ளார் சுற்றுவட்டாரப் பகுதியில் உடல் உறுப்பு தானம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

திருவல்லிக்கேணி : கழக திருவல்லிக்கேணி பகுதிக் கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில்  பகுதிச் செயலாளர் ப.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடந்து முடிந்த 24ஆம் ஆண்டு பொங்கல் விழா வரவு – செலவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பகுதி கழக செயல்வீரர்களுக்கு பயிலரங்கம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடுத்தகட்டப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர் பழனி அ.கலையம்புத்தூர் ஊராட்சி வண்டிவாய்க்காலில் அமைந்துள்ள தந்தை பெரியார் படிப்பகத்தை பார்வையிட்டனர். இதில் மாக்சிம் கார்க்கி, ராஜா, பெரியார், நாச்சிமுத்து, கபாலி, சங்கர், ஆயுதன், உஷாராணி, இம்ரான்...

கழகத் தோழர் நித்தியானந்தம் காலமானார்!

கழகத் தோழர் நித்தியானந்தம் காலமானார்!

கோவை மாவட்டம், பனப்பட்டியை சேர்ந்த கழகத் தோழர் நித்தியானந்தம் (37) 25.01.2024 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த நித்தியானந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஜாதி ஒழிப்பு இயக்கத்தில் இணைந்ததற்காக தனது குடும்பத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட இவர். இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக எந்தவித சமரசமின்றி போராடி வந்தார். ஊரின் எதிர்ப்பையும் மீறி கழகப் பரப்புரைக் கூட்டங்களை பனப்பட்டியில் கழகத் தோழர் முருகேசனுடன் இணைந்து நடத்தியவர். தொடர்ந்து தனது நண்பர்களுக்கு தனது சொந்த பணத்தை செலுத்தி புரட்சிப் பெரியார் முழக்கம் இதழை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

ஆகம உருட்டு

ஆகம உருட்டு

குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி திணிக்க முயன்றபோது, வருணாசிரம தர்மத்தை வேரறுக்க பிள்ளையார் பொம்மையை உடைக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 27.05.1953 அன்று திராவிடர் கழகத்தினரால் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிள்ளையார் பொம்மைகள் உடைக்கப்பட்டன. “கடவுள் பொம்மையை உடைக்கிறார்களே” என்று ராஜாஜியிடம் சிலர் கேட்க, “அது ஆகம விதிப்படி வைக்கப்பட்ட சிலை அல்ல, களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மை” என்றார். ஆனால் சேலத்தில் 1971-இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டதோ அட்டையால் செய்யப்பட்ட ராமன் படம். அப்போதும் ராஜாஜியிடம் கேட்டார்கள், “அது பரங்கிமலை போன்ற சின்ன விஷயம், இது இமயமலை போன்ற பெரிய விஷயம். இரண்டையும் ஒப்பிடக் கூடாது” என்றாராம் ராஜாஜி. ஆக இடத்திற்கேற்றால் போல் மாற்றிக்கொள்ளும் பார்ப்பன ‘உருட்டு’தான் ஆகமம் என்பதை அப்போதே தெளிவுபடுத்திவிட்டார் ராஜாஜி. பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

இந்தியா கூட்டணியை ஆதரித்து கோபியில் பரப்புரை

இந்தியா கூட்டணியை ஆதரித்து கோபியில் பரப்புரை

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.01.2024 அன்று கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோபி ஈசுவரமூர்த்தி தலைமை தாங்கினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு மற்றும் மேட்டூர் ராஜா அகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தாவை விரைந்து அனுப்புவது, பரப்புரைக் கூட்டங்கள் நடத்துவது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடர் விடுதலைக் கழகம் I.N.D.I.A கூட்டணியை ஆதரிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட செயல்பாடுகளுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் சதுமுகை பழனிச்சாமி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்பது தோழர்கள் அனைவரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டது. கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்...

சென்னையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறது

சென்னையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறது

சென்னை மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 – நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 10, 2024, மாலை 6 மணிக்கு வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட முன்னேற்றக் கழக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சென்னை தெற்கு மாவட்டத் துணை அமைப்பாளர் தடா ஓ.சுந்தரம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் உமா ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றவுள்ளனர். திண்டுக்கல் : பழனியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் பிப்ரவரி 10, 2024, காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பெரியார் முழக்கம் 08022024 இதழ்

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

“சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்!" "சமூக ஒற்றுமையைக் காப்போம்!" 1. பத்தாண்டு மோடி ஆட்சியில் என்ன நடந்தது? சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டன. மதவெறி தூண்டப்பட்டது. மாநில அடையாளங்கள் அழிக்கப்பட்டன. 2. நீட் தேர்வால் நமது அனிதாக்களை இழந்தோம். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டின் வருவாயை இழந்தோம். வரலாறு காணாத மழை வெள்ளத்தை நமது மாநிலம் சந்தித்த போதும் ஈவுஇரக்கமின்றி நிவாரண நிதியே இல்லை போ என்று இறுமாப்புடன் பேசியது ஒன்றிய மோடி ஆட்சி. 3. ஆளுநர் ரவி சனாதனப் பெருமை பேசுகிறார். தமிழ்மறை தந்த வள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். தலித்மக்களுக்கு பூணூல் அணிவிக்கிறார். தீட்சிதர்கள் நடத்தும் குழந்தைத் திருமணங்களை ஆதரிக்கிறார். தேசத்தந்தை காந்தியை அவமதிக்கிறார். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமறுக்கிறார். அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரை ஏற்க முடியாது என்கிறார். ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் தலைமையிடமாக மாற்றிவிட்டார். உச்சநீதிமன்றமே தலையில் குட்டிய பிறகும் பாஜக ஆட்சிதரும் இறுமாப்பில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காலில் போட்டு...

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில்  மக்கள்  பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் மக்கள் பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர்: ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் மங்கலம் நான்கு வழி சந்திப்பு, சுல்தான் பேட்டை, பெரியாண்டிபாளையம் பிரிவு, குமரன் கல்லூரி, ஊத்துக்குளி ஆர்.எஸ், கூழிபாளையம், மன்னரை, காங்கேயம் பேருந்து நிலையம், நத்தக்காடையூர், படியூர், பொங்கலூர், அருள்புரம், வீரபாண்டி பிரிவு, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 21,22 ஆகிய தேதிகளில் பல்லடம் பகுதிகளுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், வடுகபாளையம், கேத்தனூர், காமநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், காரணம்பேட்டை, அனுப்பட்டி, எம்.ஜி.ஆர் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 22 அன்று பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் 50வது தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அதனையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சுப்பிரமணியம், திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு ஒன்றிய தலைவர் முஜிபுர் ரகுமான், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர...

கொலைகார சாமியாரை  கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

கொலைகார சாமியாரை கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

சென்னை : “டெங்கு, மலேரியா, காலரா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி நிர்ணயித்த அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைக்க கோரி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் இராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, சனாதன சக்திகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது, சனாதனத்திற்கு எதிரான கருத்தில் உறுதியாக நிற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் துணை நிற்கும் என்று கூறினார். கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் காட்டூர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கழக அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் திண்டுக்கல் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது....

ஆளுநரே திரும்பி போ திண்டுக்கல் மாவட்ட கழகம் கருப்புகொடி

ஆளுநரே திரும்பி போ திண்டுக்கல் மாவட்ட கழகம் கருப்புகொடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை மதர்தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் 10க்கும் மேற்பட்ட இயக்கத் தோழர்கள் ஒன்றாக இணைந்து பல்கலைக்கழகம் அருகே கருப்புக் கொடிகாட்டி போராட முயன்ற நிலையில் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து பழனி அழைத்து வரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து தமிழக கவர்னர் R.N.ரவியே திரும்பிப்போ சனாதானத்தின் மறு உருவமே வராதே உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பெரியார்முழக்கம் 07092023

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

காலை சிற்றுண்டி வழங்குவதன் காரணமாக பள்ளிக் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன என்ற வர்ணாசிரம திமிரோடு தலைப்பு செய்தி வெளியிட்ட தினமலம் நாளேட்டை கழகத் தோழர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். சென்னை : பள்ளி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தினமலம் நாளேடு அலுவலகம் அருகே இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலம் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை...

மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்

மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்

சென்னை : சென்னை மாவட்டக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் 28.08.2023 திங்கள் அன்று சிந்தாதிரிப்பேட்டை, சாமி நாயக்கன் தெருவில் மாலை 5 மணிக்கும், மாலை 7:30 மணியளவில் கலவைத் தெருவிலும் நடைபெற்றது. அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தமிழ்நாடு மாணவர் கழகம் தேன்மொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன் ஆகியோர் உரையாற்றினர். 29.08.2023 செவ்வாய் மாலை 6 மணிக்கு தரமணி நூறடி சாலையிலும், அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு பெருங்குடி நூறாடி சாலையில் நடைப்பெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, பெரியார் நம்பி, இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், இரண்யா ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்கள்.. கூட்டத்தில் பங்கேற்ற கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கருத்துரையாற்றிய தோழர்களுக்கு நூல்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்....

கோவையில் ஆளுநருக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்

கோவையில் ஆளுநருக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்

கோவை : பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொள்ள வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், கோவை மாவட்ட தலைவர் இராமச்சந்திரன், திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு திண்டுக்கல் மாவட்ட தலைவர் மருதமூர்த்தி, திராவிடத் தமிழர் விடுதலை இயக்க நந்தன் தம்பி உட்பட 37 தோழர்கள் கைதாகினர். கைதான தோழர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உக்கடம் கண்ணன், கல்லூரி மாணவர் தொண்டாமுத்தூர் நவீன் ஆகியோர் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். பெரியார்முழக்கம் 31082023

கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை கோரி நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை கோரி நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

நங்கவள்ளி கிளைக் கழக சார்பில் எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் 26.07.2023 அன்று மாலை 5 மணியளவில் தானாபதியூர் பகுதியில் காவல் துறை அனுமதியுடன் நடைபெற்ற போது, திட்டமிட்டு தெருமுனைக் கூட்டத்தை தடுத்து நிறுத்தி கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்ட இந்து முன்னணியினர் மீது கழக தோழர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு மாத காலம் ஆகியும், வழக்கு பதிவு செய்யாத நங்கவள்ளி காவல் துறையை கண்டித்து. 24.08.2023 (வியாழன்) மாலை 4 மணிக்கு நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூர்யகுமார், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் இராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி...

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை : சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக 21.08.2023 திங்கள் மாலை 5 மணிக்கு கோடம்பாக்கம் மார்கெட் அருகிலும், மாலை 7 மணிக்கு தர்மாபுரம் மாரியம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 செவ்வாய் மாலை 5 மணிக்கு, மடுவாங்கரை புதியத் தெருவிலும் இரவு 7:30 மணிக்கு, பழைய பூந்தமல்லி சாலை, கங்கை அம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஜாபர்கான்பேட்டை, கங்கையம்மன் கோயில் அருகிலும், மாலை 7 மணி ஜோன்ஸ் சாலை சாரதி நகர் சந்திப்பிலும், 24.08.2023 வியாழன் அன்று மாலை 5.30 மணிக்கு ஜோன்ஸ் சாலை கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவிலும், மாலை 7.30 மணிக்கு சைதாப்பேட்டை, குயவர் வீதியிலும், 25/08/2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகிலும், மாலை 7.30 மணிக்கு அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகிலும், 26.08.2023 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையிலும்,...

மணிப்பூர் கலவரம்; பாஜக ஆட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரம்; பாஜக ஆட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் : ஜூலை 23- ஆம் தேதியன்று கொளத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப் புலிகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளை தடுக்கத் தவறிய ஆளும் பாஜக மற்றும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர் பன்னீர்செல்வம், கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கொளத்தூர் நகரத் தலைவர் சி.இராமமூர்த்தி, கொளத்தூர் வி.சி.க மாணவரணி ஜீவா, வி.சி.க. கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் சேட்டுகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.வி.சி.க. நகர து.செயலாளர் பழனி நன்றி கூறினார்.

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட ஆய்வு

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட ஆய்வு

மதுரை மாவட்டக் கழக சார்பில் சமத்துவ சமுதாயத்தை நோக்கிய கலைப் படைப்பான “கழுவேத்தி மூர்க்கன்” திரைப்படத்திற்கு பாராட்டு விழா, ஜூலை 21, மாலை 5 மணிக்கு மதுரை பிரசிடென்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலூர் சத்யமூர்த்தி வரவேற்புரையாற்றினார், மாவட்ட செயலாளர்.மா.பா.மணி அமுதன் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார், மாவட்ட கழக காப்பாளர் தளபதி வாழ்த்துரை வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட இயக்குநர் சை.கெளதமராஜ் ஏற்புரையாற்றினார். வாசுகி நன்றி கூறினார்.

மதுரையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம்

மதுரையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம்

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூலை 1 அன்று மெஜஸ்டிக் ஹோட்டலில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் யோகேஸ் வரவேற்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமை தாங்கினார், சத்தியமூர்த்தி – முருகேசன் முன்னிலை வகித்தனர். சேரன் மாதேவி போராட்டம் குறித்து மாவட்ட கழக காப்பாளர் தளபதியும், திராவிடமும் சமூக நீதியும் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணித் தலைவர் ராஜிவ் காந்தியும், வைக்கம் போராட்டத்தின் தேவை நேற்றும் இன்றும் எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் கருத்துரையாற்றினார்கள். அழகர் பிரபாகரன், வாசுகி, வேங்கைமாறன், விஜய், வீரலட்சுமி, கண்ணன், காமாட்சி உள்ளிட்ட கழகத் தோழர்களும், பல்வேறு தோழமை அமைப்பு தோழர்களும் மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளும் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டங்கள் சென்னை மாவட்டக் கழகம் சார்பாக இரண்டாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது பின்வருமாறு :- ஜுலை 15-ஆம் தேதியன்று ராயப்பேட்டை இலாயிட்ஸ் காலனி மற்றும் வி.எம்.தெருவிலும், ஜுலை 17-ஆம் தேதியன்று இராயபேட்டை பகுதிகளில் உள்ள கொலைகாரப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பெருமாள் கோயில் வீதியிலும், ஜுலை 18-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் NKT பள்ளி அருகில் மற்றும் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் சாலையிலும், ஜுலை 19-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் இஸ்ஸபா தெரு மற்றும் ஷேக் தாவூத் தெருவிலும் ஜூலை 20-ஆம் தேதியன்று மீசார்பேட்டை மார்கெட் மற்றும் ஜாம் பஜார் சிட்டிபாபு சாலையிலும், ஜுலை 21-ஆம் தேதியன்று திருவல்லிக்கேணி மாணிக்கவாசகம் தெரு மற்றும் தேவராஜ் தெருவிலும் ஜுலை 22-ஆம் தேதியன்று ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி அருகில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள மக்கிஸ் கார்டனிலும் நடைபெற்றது. நாத்திகன் – உமாபதி குழுவின் அரசியல்...

பட்டியல் தயாரிப்பு ; வழிகாட்டுகிறது திண்டுக்கல் மாவட்டம்

பட்டியல் தயாரிப்பு ; வழிகாட்டுகிறது திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 9.7.2023 அன்றுகாலை 10 மணியளவில் பழனியில் உள்ள பூம்புகார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார், மாவட்ட அமைப்பாளர் மருத மூர்த்தி முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர்.துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் செயற்குழு உறுப்பினர் இரா.உமாபதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் “வைக்கம் போர் இன்னும் முடியவில்லை” என்கிற தலைப்பில் சேகரிக்கப்பட்ட ஜாதித் தீண்டாமை குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலை தலைமைக் குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர்.பட்டியல் தயாரிப்புக்கு தனிப் படிவங்களை அச்சிட்டு நூறு கிராமங்களுக்கு மேள் நேரில் சென்று தீண்டாமைக் கொடுமைகளை திரட்டியுள்ளனர். 1. எது திராவிடம்? எது சனாதனம்? என்னும் தலைப்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 50 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது. 2 ஐம்பது புரட்சிபெரியார் முழக்கம் இதழுக்கு ஒரு மாதத்திற்குள் சந்தா சேர்த்து...

சமூக வலைதளங்களில் இயங்கும் தோழர்களின் கவனத்திற்கு…

சமூக வலைதளங்களில் இயங்கும் தோழர்களின் கவனத்திற்கு…

தோழர்களுக்கு வணக்கம் தற்போதைய நேரத்தில் எந்த ஒரு கட்சியையோ அமைப்புகளையோ தனி மனிதரையோ கொச்சையாக விமர்சனம் செய்துவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். நம்மீது பாயும் சட்டங்களை சட்டரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் நாம் எதிர்கொள்வோம். இவற்றால் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே தவிர தொடர்ந்து பிரச்சனைகளை எதிர்கொள்ள ஏதுவாக எதுவும் அமைய வேண்டாம் என்ற நோக்கத்தோடு கேட்டுக்கொள்கிறோம். நம்மை வெறுப்பு ஏற்றவும் பல சிக்கல்களில் ஆளாகவும் நமக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சில சிக்கல்களை உருவாக்க சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர் அவற்றில் தோழர்கள் கவனமுடன் செயல்பட கேட்டுக்கொள்கின்றோம். அவரவர் வயதிற்கேற்ப கோபமோ, ஆத்திரங்களோ இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் நாம் கண்ணியமாக செயல்படவும் விமர்சிக்கவும் வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பாடுகளையும், அடுத்தடுத்த செயல்களையும் மாவட்ட பொறுப்பாளர்களை கலந்துகொள்ளாமல் சமூக வலைதளத்தில் செய்தியை பதிய வேண்டாம். பொறுப்பாளர்கள் தி.வி.க. சேலம் மாவட்டம்

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் இரண்டு நாள் மாநாடு தோழர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. ‘இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு’ என்ற தலைப்பு தோழர்களை ஈர்த்துள்ளது. சேலத்தில் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் கூடி மாநாட்டுப் பணிகளை ஆலோசித்தது. 20.02.2023 திங்கள் மாலை 4.00 மணியளவில் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29, 30 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் திராhவிடர் விடுதலைக் கழக மாநில மாநாடு குறித்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரை யாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களும், பொறுப்பாளர் களும் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் மாநாட்டினை குறித்து பொதுமக்களிடம் சுவரெழுத்து மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக...

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் கூட்டம்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் கூட்டம்

01.06.2023 காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாவட்ட திவிக சார்பாக மறைந்த கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் நிகழ்வு மடத்து குளம் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மடத்து குளம் திவிக ஒன்றியத் தலைவர் த.கணக்கன் தலைமையில் நடைபெற்றது. மோகன் குடும்பத்தினர் ஜோதி  – அறிவுமதி முன்னிலை வகித்தனர்.   பன்னீர்செல்வம், CITU தாலுகா செயலாளர். வீ.சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். முகில் ராசு, மாவட்ட தலைவர் , திவிக. முருகேசன், வழக்கறிஞர் பிரிவு, திராவிட தமிழர் பேரவை. தங்கவேல், மாவட்ட  அமைப்பாளர், திராவிட தமிழர் கட்சி, ஜின்னா ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.   சபரி, சரசுவதி, ஜெயந்தி, சிரிஜா, ரூபா, மாரிமுத்து, தாராபுரம் செல்வம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் யாழிசை,யாழினி, அறிவுமதி, முத்தமிழ், காரைக்குடி கனல் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.   நிகழ்வினை மடத்துக்குளம் திவிக ஒன்றியச் செயலாளர் சிவானந்தம்...

நங்கவள்ளி ஒன்றியம் தயாராகிறது

நங்கவள்ளி ஒன்றியம் தயாராகிறது

18.06.2023 ஞாயிறு பிற்பகல் 2 மணியளவில் நங்கவள்ளி நகர கழக கலந்துரையாடல் கூட்டம் தோழர் காவை ஈசுவரன் , தலைமைக் குழு உறுப்பினர் தலைமையில், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன்  இல்லத்தில் கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:   1). தீண்டாமை நிலவுகின்ற கிராம பகுதிகளான நங்கவள்ளி ஒன்றியத்தில் தோழர்கள் பிரபாகரன், அருள்குமார், நாகராஜ் ஆகியோரது தலைமையில் கணக்கெடுப்பு நடத்துவதெனவும், கொங்கனாபுரம் ஒன்றியத்தில் தங்கதுரை, கண்ணன், கவியரசு ஆகியோரது தலைமையிலும், மேச்சேரி ஒன்றியத்தில் கிருஷ்ணன், சிவா, சந்திரசேகர் ஆகியோரது தலைமையிலும், தீண்டாமை நிலவுகின்ற கிராம பகுதிகளை கண்கெடுப்பு நடத்தி வருகிற ஜூன் 25 ஆம் தேதிக்குள் மாவட்ட கழகத்திடம் ஒப்படைப்பதென தீர்மானிக்கப்பட்டது.   2) எது திராவிடம், எது சனாதனம் என்னும் தலைப்பில் கிராம பிரச்சார கூட்டங்கள் நங்கவள்ளி ஒன்றிய கிளைக் கழகத்தின் சார்பில் முதல்கட்டமாக 10 கிராமங்களில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.   3) நங்கவள்ளியில்...

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் நடந்த ஜாதி மறுப்புத் திருமணம்

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் நடந்த ஜாதி மறுப்புத் திருமணம்

சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 20.06.2023 செவ்வாய் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.   கலந்துரையாடல் கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.   கொளத்தூர் நகர தலைவர் ராமமூர்த்தி கடவுள் – ஆத்மா மறுப்புடன் கூட்டம் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகர , நகர, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் தீண்டாமை நிலவும் பகுதிகளின் பட்டியலை கணக்கெடுத்துக் கொண்டிருப்பதாகவும் வரும் 25.06.2023ம் தேதி பட்டியலை மாவட்ட கழகத்திற்கு சமர்பிப் பதாகவும் தெரிவித்தனர்.   மேலும் சேலம் மாநகரம் சார்பாக 25 தெருமுனைக் கூட்டங்களும், மேட்டூர் நகர கழகம் 30...

தோழர்களுக்கு வேண்டுகோள்!

தோழர்களுக்கு வேண்டுகோள்!

கழக நூல்கள் தோழர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் சில பகுதிகளில் தோழர்கள் அதற்கான தொகையை அனுப்பி வைக்கவில்லை, கடும் பொருளாதார நெருக்கடியில் நூல்கள் அச்சடிக்கப்படுகிற நிலையில் தோழர்கள் இதில் ஒத்துழைக்க வேண்டுகிறோம். விற்பனையாகாத நூல்களை தலைமை கழகத்திற்கு உடனடியாக அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.   தபசி குமரன் தலைமை நிலைய செயலாளர் பெரியார் முழக்கம் 29062023 இதழ்

சென்னையில் கழக தலைமைக் குழு கூடியது

சென்னையில் கழக தலைமைக் குழு கூடியது

திராவிடர் விடுதலைக் கழக தலைமை குழு கூட்டம் ஜூன் 23 காலை 10:30 மணியளவில் பெருங்குடியில் கழகப் பொதுச் செயலாளர் இல்லத்தில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் தலைமைக் குழு உறுப்பினர்கள் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ,அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, சூலூர் பன்னீர்செல்வம், விழுப்புரம் அய்யனார், காவலாண்டியூர் ஈஸ்வரன், சென்னை இரா.உமாபதி, அன்பு தனசேகர், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   தமிழ்நாட்டில் கிராமங்களில் நிலவும் தீண்டாமை வடிவங்களை நேரில் சென்று பார்த்த அனுபவங்களை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட பட்டியல்களை தொகுத்து மாவட்ட காவல்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்,...

ஆனைமலையில் – கழகத் தலைவர் நடத்தி வைத்த திருமணம்

ஆனைமலையில் – கழகத் தலைவர் நடத்தி வைத்த திருமணம்

பொன்னமராவதி திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஆறுமுகம் – அமுதா ஆகியோரது மகன் அ.ஆ.பாலச்சந்தர் (எ) இனியவன், ஆனைமலை வெல்ஃபேர் கட்சி மாநில துணைத் தலைவர் மணிமாறன் – திலகவதி ஆகியோரது மகள் ம.தி.புனிதா ஆகியோரது “ வாழ்க்கை இணை ஏற்பு விழா” ஆனைமலையில் 25.06.2023 ஞாயிறு அன்று நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. ம.தி. பிரபு அம்பேத்கர் வரவேற்புரை ஆற்றினார். இரா அதியமான், நிறுவனத் தலைவர் – ஆதித் தமிழர் பேரவை. கே.எஸ். அப்துல் ரஹ்மான், மாநிலத் தலைவர் – வெல்ஃபேர் கட்சி. பேராசிரியர் சுந்தரவள்ளி, த.மு.எ.க.ச. சி.விசயராகவன், பெரியாரியல் சிந்தனையாளர். காசு.நாகராசன், அமைப்பு செயலாளர் – தி.இ.த.பே. இரா.கருப்புச்சாமி, கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம். முகமது கவுஸ், மாநில செயலாளர் – வெல்ஃபேர் கட்சி. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழகத் தோழர் ம.ஏ. இளங்கோவன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 06072023 இதழ்

பொள்ளாச்சியில் கழக மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

பொள்ளாச்சியில் கழக மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநில மாநாட்டின் விளக்கப் பொதுக்கூட்டம், திருவள்ளுவர் திடலில் மடத்துக்குளம் மோகன் நினைவு மேடையில், 24.06.2023 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக கோவன் தலைமையிலான ம.க.இ.க மய்யம் தோழர்களின் புரட்சிகரப் பாடல்களுடனும், கண்ணையா திவிக-விற்கு என்று அவரே எழுதிய பாடலுடன் நிகழ்வுகள் தொடங்கியது. சபரிகிரி வரவேற்புரையாற்ற, பொள்ளாச்சி நகரமன்ற தலைவர். சியாமளா நவநீதகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து மாரிமுத்து மக்கள் விடுதலை முன்னணி, தி.செ.கோபால் ஆதித்தமிழர்பேரவை, வானுகன் தமிழ்ப்புலிகள்கட்சி, வழ.சேதுபதி தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம், ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். அதைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுந்தரவள்ளி – த.மு.எ.க.ச, இராஜீவ் காந்தி தலைவர் – திமுக மாணவரணி, காசு. நாகராசன் – அமைப்புச் செயலாளர் – தி.இ.த.பே., இரா.நவநீதகிருஷ்ணன் – நகரசெயலாளர் – திமுக ஆகியோர்...

ஆர்.எஸ்.எஸ். பிடியில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தை மீட்க வேண்டும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தல்

ஆர்.எஸ்.எஸ். பிடியில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தை மீட்க வேண்டும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தல்

சேலத்தில் ஆளுநருக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று கழகத் தலைவர் கொளத்தூர்மணி பேசுகையில் குறிப்பிட்டதாவது: அளுநர் என்பவருக்கு அரசியல் சட்டப்படி தனியாக இயங்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.மாநில அரசின் அறிவுரையின் படி, ஆலோசனையின் படி தான் நடந்துகொள்ள வேண்டும், ஆனால் இந்த ஆளுநரோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகம் போன்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களோ அப்படி நடந்துகொள்வதில்லை. அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களைப் போல் நடந்துகொள்கிறார்கள். வேந்தர் பதவி கூட கர்நாடகாவில் ஆகட்டும், குஜராத்தில் ஆகட்டும் அங்கு வேந்தராக இருப்பது அம்மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் தான்.தமிழ்நாட்டில் மட்டும் தான் ஆளுநர் என்பதாக கடந்த 15 ஆண்டுகளாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கு எதிரான செயல்களில், தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்ட இருமொழிக் கொள்கைக்கு எதிராக மும்மொழி கொள்கை, ஏற்க மறுக்கிற சமஸ்கிருத்தை சனாதன தர்மம் என்கிற வருணாஸ்ரம தர்மத்தை தொடர்ந்து ஆதரித்து பேசிக்கொண்டிருக்கிறார்....

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து சென்னையில் ரயில் மறியல்

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து சென்னையில் ரயில் மறியல்

சென்னை : மணிப்பூரில் நடைப்பெற்ற இனப்படுகொலையை தடுக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும். கிருஸ்துவர்கள் – பழங்குடியினர் மீதான வன்முறையை நிறுத்தக் கோரியும்.   மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் சென்னை எழும்பூரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.   போராட்டத்தில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 22062023 இதழ்  

தீண்டாமை கிராமங்கள் : பட்டியல் தயாரிப்பு – கழகத் தோழர்கள் களமிறங்கினர்

தீண்டாமை கிராமங்கள் : பட்டியல் தயாரிப்பு – கழகத் தோழர்கள் களமிறங்கினர்

17.06.2023 சனி மாலை 5.00 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது.   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :   1) 17.05.2023-ல் இயற்கை எய்திய குமரன் நகர் கிளைக் கழக செயலாளர் பொன்.செல்வம் அவர்களுக்கு சேலம் மாவட்ட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும்,புகழ் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.   2) தீண்டாமை நிலவுகின்ற கிராம பகுதிகளில் இரட்டை சுடுகாடு, தேனீர் கடைகளில் இரட்டைக் குவளை, பொது கோயில்களில் பட்டியலின மக்கள் வழிபடுவதை தடுக்கும் இடங்களை கணக்கிட்டு வருகின்ற 25.06.2023ம் தேதிக்குள் மாவட்ட கழகத்திற்கு பட்டியலை ஒப்படைப்ப‍து எனவும் தீர்மானிக்கப்பட்டது.   3) எது திராவிடம்! எது சனாதனம்! எனும் தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை அனைத்து கிராம பகுதிகளிலும் நடத்துவதெனவும், தெரு முனைக் கூட்டங்கள் நடத்தும் பகுதிகளின் பெயர்களை மாவட்ட கழகத்திற்கு 25.06.2023ம் தேதி ஒப்படைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.  ...

கோயில் நுழைவு உரிமை கோரி கழகம் முற்றுகைப் போராட்டம்

கோயில் நுழைவு உரிமை கோரி கழகம் முற்றுகைப் போராட்டம்

  ஜாதி – தீண்டாமை – வன்கொடுமைக்கு எதிராக உரிய நடவடியை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் 15-06-2023 அன்று மாலை 3 மணியளவில்  நடைபெற்றது.   முற்றுகை போராட்டம் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமையில் நடைபெற்றது.   விழுப்புரம் மாவட்ட தலைவர் இளையரசன், செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இராமர், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.   போராட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் மதியழகன், கடலூர் மாவட்ட கழகச்  செயலாளர் சிவக்குமார்,  கள்ளக்குறிச்சி மாவட்ட கழக அமைப்பாளர் சாமிதுரை, கடலூர் மாவட்ட கழக அமைப்பாளர் சதீஷ், விடுதலை இசைக் குழு கார்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி பரப்புரை செயலாளர் விஜி, பகுத்தறிவு, தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா மற்றும் தோழர்கள் ...

பட்டியல் தயாரிப்பு – தெருமுனைக் கூட்டங்கள் ; திருப்பூர் மாவட்டம் தீவிரம்

பட்டியல் தயாரிப்பு – தெருமுனைக் கூட்டங்கள் ; திருப்பூர் மாவட்டம் தீவிரம்

திருப்பூர் மாவட்ட திவிக ஆலோசனைக் கூட்டம் 12.06.2023 திங்கள் மாலை 4.30 மணி அளவில்  மாஸ்கோ நகர் மாதவன் அலுவலகத்தில் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டம் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் தலைமையில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.   கூட்டத்தில் ஏப்ரல் 29,30 நடைபெற்ற மாநாட்டில் திருப்பூர் மாவட்டம் சார்பாக சிறப்பாக கலந்துகொண்டு பேரணியில் இரண்டாம் இடம் பரிசு பெற்றமைக்கு பேரணியில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.   இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழக செயலவையில் அறிவிக்கப்பட்ட படி தீண்டாமை நடக்கும் இடங்கள் கணக்கெடுப்பு மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள 1000 தெருமுனை கூட்டங்களில் திருப்பூர் மாவட்டத்தில் 50 கூட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன.   மேலும் தாராபுரத்தில் நகராட்சி அரசு அலுவலகத்திற்குள் நிர்வாண அகோரி சாமியார்களை அழைத்து வந்து  பூஜை நடத்திய நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி...

ஆதினங்களின்  பல்லக்கு சவாரியை  தடை  செய் மயிலாடுதுறையில் கழகம் – தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கைது

ஆதினங்களின் பல்லக்கு சவாரியை தடை செய் மயிலாடுதுறையில் கழகம் – தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கைது

சைவத்தையும் தமிழையும் பரப்புவதற்காக சைவ மதங்கள் உருவாக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. ஆனால் ஆதீனங்கள் இன்றைக்கு அந்த பணியை விட்டுவிட்டு இந்துத்துவாவின் தூதர்களாக மாறிப் போய் இருக்கிறார்கள். மோடிக்கு நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நேரு சென்று செங்கோல் ஒன்றை ஆதீனங்கள் பரிசாக அளித்து இருக்கின்றன.   அந்த செங்கோல் மவுண்ட் பேட்டன்  பிரபுவிடம் இந்தியாவில் ஆட்சி  மாற்றத்திற்கு அடையாளமாக தரப்பட்டது என்று  ஒன்றிய ஆட்சியும், அமித்ஷாவும் கட்டிவிட்ட கற்பனைகளை திருவாடுதுறை ஆதீனம் இந்து நாளேட்டில் அளித்த பேட்டியில் மறுத்துவிட்டார். அப்படி எந்த ஆதாரமும் இல்லை என்றும், எதற்காக மவுண்ட் பேட்டனிடம் போய் செங்கோலை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார். ஆக பாஜகவின் பொய்யான கதை வசனம் கிழிந்து தொங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.   இந்த மடாதிபதிகள் மோடியின் ஆட்சி தான் இந்த காலம் முழுவதும் நீடித்திருக்க வேண்டும் என்று அரசியலும் பேசி இந்துத்துவாவின் பரப்புரையாளர்களாக மாறிப்போய் இருப்பதோடு  தருமபுரம்...

தீண்டாமைப் பட்டியல் : ஈரோடு தெற்கு மாவட்டம் களமிறங்குகிறது

தீண்டாமைப் பட்டியல் : ஈரோடு தெற்கு மாவட்டம் களமிறங்குகிறது

ஈரோடு தெற்கு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் மே 26, மாலை 6 மணியளவில் மாவட்டச் செயலாளர் எழிலன் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏப்ரல் 29.30 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு மிக எழுச்சியோடு நடைபெற உழைத்திட்ட அனைத்து தோழர்களுக்கும் கூட்டம் பாராட்டுதலையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. மே 21-இல் சேலத்தில் கூடிய தலைமை செயலவை கூட்டத்தில் தலைமை அறிவித்த வைக்கம் போராட்டம் இன்னும் முடியவில்லை  . இன்றும் தொடரும் தீண்டாமையை கணக்கெடுக்கும் பணியை இரண்டு குழுவாக பிரிந்து ஜூன் 04,05 ஆகிய தேதிகளில் கிராமப்புரங்களில் நிலவும் தீண்டாமையை கணக்கெடுத்து தலைமைக்கு தெரிவிப்பது. “எது திராவிடம்? எது சனாதனம்?” என்ற தலைப்பில் ஈரோடு புறநகர் பகுதிகளில் 25 கூட்டங்களும், மாநகரப் பகுதிகளில் 25 கூட்டம் என 50 கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தெருமுனைக் கூட்டங்களின் நிறைவுக் கூட்டம் ஈரோடு...

மேல்பாதி – திரெளபதி கோயிலில் பட்டியல் சமூகத்தின் நுழைவு உரிமை மறுப்பைக் கண்டித்து மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

மேல்பாதி – திரெளபதி கோயிலில் பட்டியல் சமூகத்தின் நுழைவு உரிமை மறுப்பைக் கண்டித்து மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மேல்பாதி திரெளபதி கோவிலில் பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும், ஜாதி வெறியர்களை கண்டித்தும், இந்து அறநிலையத்துறையின் கீழுள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமைகளை நிலை நிறுத்திட கோரியும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமை தாங்கினார்.மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தார்.   தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன், தமிழ்தேசியப் புலிப்படைத் தலைவர் ஆ.முத்துப்பாண்டி, மக்கள் தமிழகம் கட்சி பொதுச்செயலாளர் நிலவழகன், மக்கள் சட்ட உரிமை இயக்கம் அண்ணாத்துரை, புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன், நிலக்கோட்டை வீர லட்சுமி, “உயர்நீதி மன்றத்தில் தமிழ் போராட்டக்குழு” ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பகத்சிங், தமிழ்தேச குடியரசு இயக்கம் மெய்யப்பன், தபெதிக தமிழ் பித்தன், கடலூர் மாவட்டச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள். யோகேஸ், வேங்கைமாறன், குமார்,...

கோவை – சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த – தோழர்கள் தீவிரம்

கோவை – சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த – தோழர்கள் தீவிரம்

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், 28.05.2023 ஞாயிறு மாலை 6 மணியளவில், முருகேசன் திருமண மண்டபத்தில்  சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது.   கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நோக்கவுரையாற்றினார்.  மாவட்டத் தலைவர் வேழவேந்தன் முன்னிலை வகித்தார்.   நிகழ்வில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கான வரவு செலவு கணக்குகள் குறித்தும் செயலவையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் “எது திராவிடம்! எது சனாதானம்!” சென்னையில் 200 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகரன், கரு.அண்ணாமலை உட்பட்ட சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், பகுதி கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் 25.5.2023 அன்று கோவை இரயில் நிலையம் அருகேயுள்ள வழக்கறிஞர் கார்கி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் கூட்டம்  நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு...

சென்னையில் இணையதளப் பிரிவு கருத்தரங்கம்

சென்னையில் இணையதளப் பிரிவு கருத்தரங்கம்

கழகத்தின் இணையதளப் பிரிவு கருத்தரங்கம் சென்னை மாவட்ட இணையதளப் பிரிவு பொறுப்பாளர் இரண்யா தலைமையில் 26.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டுச் செய்திகளை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. யூடியூபில் செயல்பட வேண்டிய அவசியம், யூடியூப் சேனல்களைத் தொடங்கி இயக்குவது குறித்த அடிப்படையான தகவல்கள், சமூக வலைத்தளமான டிவிட்டரில் செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்தரங்கில் பேசப்பட்டது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்க, தோழர்கள் சமூக வலைதளங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து சில முன்னணி யூடியூபர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இறுதியாக திருப்பூர் மகிழவன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 30032023 இதழ்

திருப்பூரில் மகளிர் தின விழா

திருப்பூரில் மகளிர் தின விழா

திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 8.3.2023 புதன்கிழமை மாலை 6 மணியளவில் மகளிர் தின விழா திருப்பூர் அம்மாபாளையம் பெரியார் படிப்பகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு சுசிலா அவர்கள் தலைமை ஏற்று பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி முன்னிலை வகித்தார். நஜ்முன்னிசா வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் சங்கீதா, வீரலட்சுமி, ஷோபனா ராணி, சகுந்தலா, காயத்ரி ஆகியோர் “பெண்களின் உரிமைகள் பற்றியும் பெரியாரின் பெண் விடுதலை கொள்கைகள்” பற்றியும் கருத்துரை யாற்றினர். நிறைவாக சங்கவி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் முத்துலட்சுமி, கௌசல்யா, மனிஷா, திவ்யா, ரூபா, விஜி, காளியம்மாள் மற்றும் பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, வெற்றிமாறன், வெற்றிகொண்டான், ரித்திசாய், ஃபெர்லின் சோபியா, ஷெர்லின் மரியா, மெர்சி, தழல் சிறகன், இயல் ஆழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கேக் வெட்டப்பட்டது.இரவு உணவாக மாட்டுக் கறி வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 23032023...

கள்ளக்குறிச்சியில் ‘பறிபோகும் மாநில உரிமைகள்’ விளக்கப் பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சியில் ‘பறிபோகும் மாநில உரிமைகள்’ விளக்கப் பொதுக்கூட்டம்

11-03-2023 அன்று மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நைனார்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . கழக பரப்புரைச் செயலாளர் தூத்துகுடி பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள் விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன். கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கடலூர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், நைனார்பாளையம் நடராஜ், பெரியார் வெங்கட், அசி.சின்னப்பா, தமிழர் பாவலர் கீர்த்தி, பெரியார் பிஞ்சு பாடகர் திராவிட மகிழன், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டும் கருத்துரையாற்றியும் சிறப்பித்தார்கள். தோழர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு பேசப்பட்ட கருத்துகளை ஆர்வமுடன் கேட்டார்கள். பெரியார் முழக்கம் 23032023 இதழ்

சுவரெழுத்துப் பணியில்  உற்சாக மூட்டிய நிகழ்வு

சுவரெழுத்துப் பணியில் உற்சாக மூட்டிய நிகழ்வு

15.3.2023 மதியம் சூலூர் வழி பல்லடம் சாலையில் ஒரு சுவரில் சுவரெழுத்து விளம்பரம் எழுதிக் கொண்டிருக்கும் போது அதன் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள்  சென்று கொண்டே இருந்தன. அப்படிச் சென்ற ஒரு இருசக்கர வாகனம் சுவரெழுத்து விளம்பரத்தைக் கடந்து சென்றது.  மீண்டும் திரும்பி வந்தது. நீங்கள் திக வா என்றார்; திவிக என்றோம். “ஓகே ஓகே நீங்கள் எங்கள் அனைத்து ஜாதி அர்ச்சகர் உரிமைக்காக தொடர்ந்து போராடறீங்க; துணை நிற்கறீங்க; கொஞ்ச நாளுக்கு முன்னால் கூட உங்க  சென்னை தோழர்கள் எங்கள் பொறுப்பாளர் அரங்கநாதனை மேடையில் ஏற்றி பாராட்டுனாங்க. ஆர்ப்பாட்டத்திற்கு கூப்பிட்டு பேச வைத்தீர்கள்; தொடர்ந்து எங்களுக்காக போராட்டங்களை நடத்துறீங்க. உங்கள் இதழில் எங்கள் உரிமைகளைப் பற்றி எழுதறீங்க; எனக்கும் இதழ் அனுப்புங்க; சந்தா தருகின்றேன்” பெருமிதத்துடன் கூறினார். “நான் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சி முடித்தவன். இப்போ 2 அர்ச்சகரை நீக்கம் பண்ணியிருக்காங்க, கொடுமை. ஆனா அந்த வழக்கில் நாங்க...

உணர்வுகளைப் பகிர்ந்த பெண்கள் சந்திப்பு

உணர்வுகளைப் பகிர்ந்த பெண்கள் சந்திப்பு

அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு நிகழ்வு, 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் தொங்கி மாலை 5.30 வரை நடைபெற்றது. நிகழ்விற்கு தேன்மொழி தலைமை ஏற்று நடத்தினார். ஜெயந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். மதிவதனி அன்னை மணியம்மையார் குறித்து தொடக்கவுரை ஆற்றினார். குறளரசி மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் திராவிட இயக்கத்தின் பெண் தலைவர்களான அன்னை நாகம்மையார், தோழர் கண்ணம்மாள், அன்னை சத்தியவாணிமுத்து, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், குஞ்சிதம் அம்மையார், டாக்டர் எஸ்.தருமாம்பாள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். அடுத்த நிகழ்வாக தோழர்கள் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர். றடிஆஹசூ – உடலும், உளவியலும் – தேன்மொழி; பெண்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் திராவிட மாடல் (அன்றும்-இன்றும்) – ரம்யா; குடும்ப கௌரவத்தின் அடையாளம் பெண்கள் (உருட்டுகளும், புரட்டுகளும்) – அறிவுமதி; சட்டம் பேசாதே! டாக்டர் அம்பேத்கர் பெற்றுத்தந்த பெண்ணிய உரிமைகள் –...

திலீபன் மீது கொலை வெறித் தாக்குதல் வேலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திலீபன் மீது கொலை வெறித் தாக்குதல் வேலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திலீபன் மீது காவலர்கள் முன்னிலையில் கொலை வெறித் தாக்குதல் நடத்திய ராமமூர்த்தி தலைமையிலான வன்முறை கும்பலை கைது செய்! திலீபன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறு! எனும் கோரிக்கைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் முன்பு 08.05.2023 திங்கள் காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் பெரப்பேரி திலீபன், தன் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு எதிராக ஊர் கட்டுப்பாடு போட்டதை எதிர்த்து போராடியதற்காகவும், தன் கிராமத்தில் பொது வழிப் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான ஆணையைப் பெற்று வந்தார். இந்நிலையில்...