Category: அண்மைச் செய்திகள்

மற்றுமொரு ஜனநாயகப் படுகொலை!

மற்றுமொரு ஜனநாயகப் படுகொலை!

பீகாரில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் என ஆளும் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க எண்ணமில்லாதவர்கள் 65 லட்சம் பேரை நீக்கிய கையோடு தமிழ்நாடு விரைந்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதற்குப் பெயர் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.). வாக்காளர் பட்டியலில் ஆட்களை குறைப்பதோ, சேர்ப்பதோ அரசியல் கட்சிகளின் பிரச்னை, தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத அமைப்புகளுக்கு அதைப்பற்றி என்ன கவலை என்று ஒதுங்கிவிட முடியாது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. நீதித்துறையைக் கைப்பற்றுதல், அமலாக்கத்துறையைத் தன்வயப்படுத்துதல், எதிர்க்கட்சிகளை அழித்து அரசியல்வாதிகளை – சட்டமன்ற உறுப்பினர்களை – மக்களவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் என்பன போன்ற பாஜக ஆட்சியின் சர்வாதிகாரப் போக்குகள் இப்போது, ‘மக்களைத் தகுதிநீக்கம் செய்தல்’ என்ற இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. இந்தத் திருநாட்டில் வாக்காளர் பட்டியல் ஒன்றைத் தவிர வேறெங்கும் அனைவரும் சமமானவர்கள் இல்லை. சேரியை விட ஊர் மேலானது, ஊரை விட அக்ரஹாரம் மேலானது என்ற மோசமான வருணாசிரம...

தூத்துக்குடியில் ஜாதி எதிர்ப்பு பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் ஜாதி எதிர்ப்பு பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட க் கழகம் சார்பில் தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு தருவை குளம் முதன்மை சாலையில் 23.09.2025 அன்று மாலை 05.30 மணியளவில் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு “மனிதம் நமது அடையாளம் – ஜாதி நமக்கு அவமானம் ” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழகப் பொருளாளர் கே. சந்திரசேகர் தலைமை வகித்தார். வடக்கு சோட்டையன் தோப்பு ச.கா.பால சுப்பிரமணியன், ஆழ்வை ஒன்றிய கழகச் செயலாளர் ஆழ்வை இரா.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ச.ரவிசங்கர் வரவேற்புரையாற்றினார். நெல்லை மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன், தென்காசி மாவட்ட தலைவர் குறும்பை அரு.மாசிலாமணி, தென்காசி செந்தமிழ், பாலசுப்பிரமணியன், மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் செய்யது சம்சுதீன், சமம் குடிமக்கள் இயக்க மாவட்டப் பொறுப்பாளர் ஜாண்.பி.ராயர், வி.சி.க. மகேஷ், தி.மு.க. ஒட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர், இளம்பேச்சாளர் இள.கார்த்திக், மனித நேய மக்கள்...

தந்தை பெரியார் தொழிற்சங்கம் திறப்பு

தந்தை பெரியார் தொழிற்சங்கம் திறப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தந்தை பெரியார் தொழிற்சங்க பேரவையின் கிளை திறப்பு விழா ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் சார்பாக தந்தை பெரியார் தொழிற்சங்கம் திறப்பு விழா 23.10.2025 அன்று நடைபெற்றது. சி.குப்புசாமி (பொதுச் செயலாளர் தந்தை பெரியார் தொழிற்சங்க, பேரவை) தலைமையில் கோ. செல்லதுரை (அந்தியூர் கிளை தலைவர்) வரவேற்புரையாற்றினார். காவை ஈஸ்வரன் (தலைமைக் குழு உறுப்பினர்), நாத்திக ஜோதி (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர்), ஈஸ்வரன் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் விசிக, வேங்கை பொன்னுச்சாமி தமிழ்ப் புலிகள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் ஆகியோர் தொழிற்சங்கத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். கௌசல்யா அந்தியூர், பெருமாள் அந்தியூர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கழகத்தின் சார்பாக வேணுகோபால் பவானி, சேகர் வெள்ளி திருப்பூர், குமரேசன் கொளத்தூர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியாரிய உணர்வாளர்கள், தோழமை இயக்கத் தோழர்கள்...

மதுரையில் ஜாதி எதிர்ப்பு கருத்தரங்கம்

மதுரையில் ஜாதி எதிர்ப்பு கருத்தரங்கம்

ஜாதிய – வளர்க்க ஆணவப் படுகொலைகள் எதிர்ப்பு,பெண்களின் காதல் திருமணத் தேர்வு உரிமை, காதலர் உயிர் காக்க சட்டம், சமூகப் பாதுகாப்பும் என்ற தலைப்பில் சமத்துவக் கருத்தரங்கம் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் கிராமசுப்பு அரங்கம்(கவின் – சதீஷ்குமார் நினைவு அரங்கத்தில்) மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. ஜாதி ஒழிப்பு முன்னணி மதுரை மாவட்டச் செயலாளர் சீ.கா. தெய்வம்மாள் தலைமையில் நடைபெற்றது. தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் மதுரை மாவட்டச் அமைப்பாளர் கொ. மனோகரன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு பெண்கள் இயக்கத் தலைவர் தொ. ஆரோக்கிய மேரி நோக்க உரையாற்றினார். ஐந்திணை மக்கள் கட்சித் தலைவர் தேவதாசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாலின், தமிழ் புலிகள் கட்சியை முத்துக்குமார், மக்கள் தேசம் கட்சியைச் குரு விஜயன், திராவிடத் தமிழர் கட்சி விடுதலை வீரன், ஆதித்தமிழர் பேரவைச் கார்த்திக்,நீதிவேந்தன், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவை காமேஸ்வரி, மக்கள் பாதை...

சிவகிரியில் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

சிவகிரியில் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

ஈரோடு தெற்கு மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிவகிரி பேரூராட்சி, அண்ணா கலையரங்கத்தில் 11.10..2025 சனிக்கிழமை அன்று மாலை 5:30 மணி அளவில் கழக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழிலன், முன்னாள் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர்செ. சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகச் செயல்பாட்டாளர் ஈரோடு நல்லதம்பி வரவேற்புரையாற்றினார். சிவகிரி பேரூராட்சித் தலைவர் பிரதீபா கோபிநாத், சிவகிரி தி. மு. க 10 வார்டு செயலாளர் தண்டாம்பாளையம் தா. கு. அன்பரசு, சமூக நீதி மக்கள் கட்சித் தலைவர் வடிவேல்ராமன், ஆதித்தமிழர் பேரவை மாநில நிதிச் செயலாளர் பெருமாவளவன், மதிமுக ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் மு. கோபால், திகஒன்றிய பொறுப்பாளர் சிவகிரி சண்முகம், திராவிடர் எழுச்சிப் பேரவைத் தலைவர் சக்திவேந்தன், தமிழ்ப்...

அமெரிக்க ஜாதி எதிர்ப்பு பெண் போராளிக்கு வைக்கம் விருது

அமெரிக்க ஜாதி எதிர்ப்பு பெண் போராளிக்கு வைக்கம் விருது

2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது! கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜனுக்கு அறிவிப்பு! ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப்பாடுபட்டு, மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேன்மொழி சவுந்தரராஜனுடைய பெற்றோர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமெரிக்காவில் வசித்து வரும் தேன்மொழி சவுந்தரராஜன், இந்திய அமெரிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கட்டமைப்பு ஜாதியத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அமெரிக்காவிலும், உலக அளவிலும் ஜாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சிவில் உரிமைகள் அமைப்பான ‘ ஈக்வாலிட்டி லேப்ஸின்’ (Equality Lab) நிறுவனர் / நிர்வாக இயக்குநர் ஆவார். தலித் பெண் பார்வையில் ஜாதிய ஒடுக்குமுறை குறித்து ஆய்வு நூலை எழுதியவர். வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேன்மொழி...

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

பெரியார்: ஜாதி, தேசியம், சோசலிசம் (Periyar – Caste, Nation & Socialism) ஆங்கில நூல் குறித்த அறிமுகம் சிறப்பாக இருந்தது. பெரியாரியல்வாதி தோழர் எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள இந்நூல், வெளியீட்டில் இருந்து தொடர்ச்சியாக இந்நூல் குறித்த விவாதத்தை திராவிடர் விடுதலைக் கழகம் முன்னெடுப்பது இந்நூல் இன்னும் பலரைச் சென்றடைய உதவும். பெரியார் குறித்த அவதூறுகளை மறுத்து ஏற்கெனவே கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் நூல்கள் எழுதியுள்ள நிலையில் அதே பாணியிலான ஆங்கில நூல் வெளிவருவது வரவேற்கத்தக்கது. திராவிடர் விடுதலைக் கழகம் பயிலரங்கத்தில் தோழர் ஜீவா குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கழகத் தலைவர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது. அதையொட்டி ஆரோக்கியமான விவாதத்தை தலைவர் தொடங்கவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இன்றைய தலைமுறை பல்வேறு வரலாற்று தகவல்களையும் தரவுகளையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். -அருண்கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்) பெரியார் முழக்கம் இதழ் 30102025

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

பெரியார் வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் 37 பேர் இணைந்து வாட்ஸ்அப் குழு வழியாக புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு மாதம் தலா ரூ. 500 என நன்கொடை திரட்டி வருகின்றனர். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். அக்டோபர் மாத நன்கொடையாக ரூ.18,300 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). பெரியார் முழக்கம் இதழ் 30102025

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா? (2)  ‘ஜீவா’ வரலாறுகளின் குழப்பங்கள்

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா? (2) ‘ஜீவா’ வரலாறுகளின் குழப்பங்கள்

ஜீவாவின் ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்பதை பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் சில செய்திகளை முன்னோட்டமாக முன்வைக்கிறோம். தோழர் ஜீவா அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை பலர் எழுதியிருந்தாலும், தோழர் எம். இஸ்மத் பாஷா எழுதிய ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ மட்டுமே ஜீவா வாழ்ந்த காலத்தில் (1946 மார்ச்) வெளிவந்த நூலாகும். அந்நூலுக்கு முகவுரை எழுதியுள்ள தோழர் ஏ.எஸ்.கே (அய்யங்கார்) அம்முகவுரையில் “நான் கண்டிப்பாக முகவுரை எழுத வேண்டும் என்று ஜீவாவே கூறினார். என் நண்பரின் கட்டளைக்குப் பணிகிறேன்” என்று குறிப்பிட்டே முகவுரை எழுதியுள்ளார். எனவே அந்த நூல் ஜீவாவின் பார்வைக்கும் ஏற்புக்கும் பின்னர் தான் வெளிவந்திருக்க வேண்டும். அந்நூலின் 12ஆம் பக்கத்தில் “கொள்கைக்காக வீட்டை விட்டு ஜீவா நேராக சுசீந்திரம் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு தெருப்பிரவேச சத்தியாகிரகம் ஆரம்பிக்கும் தருவாயில் இருந்தது. தெருக்களில் அரிஜனங்கள் செல்லக்கூடாது என்ற சமூக அநீதி அங்கு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது; உலகப் பிரசித்திப் பெற்ற வைக்கம்...

ஜாதி எதிர்ப்பைப் பேசும் ‘பைசன்’

ஜாதி எதிர்ப்பைப் பேசும் ‘பைசன்’

“மாரி செல்வராஜின் படைப்பாக்கத்தில் ஐந்தாவது திரைப்படமாக ‘பைசன்’ வந்திருக்கிறது .திரை அரங்கில் இந்தப் படத்தைப் பார்த்த போது படம் முழுதும் பார்வையாளர்களிடம் அப்படி ஒரு அமைதி.படம் முடிந்து வெளியேறும் போதும் கனத்த இதயத்துடன் எந்தப் பேச்சும் இல்லாமல் வெளியேறியதை பார்க்க முடிந்தது. பார்வையாளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை படம் உருவாக்கி இருக்கிறது என்பதை உணர்த்தியது. 1990-களின் முற்பகுதியில் நெல்லை மாவட்டம் ஜாதிக் கலவரங்களில் மூழ்கிக் கிடந்த நேரத்தில், ஜாதி வலிகளை சுமந்து ஒரு இளைஞன் தான் நேசித்த கபடியில் சர்வதேச அளவில் தடம் பதித்த வெற்றிக்கதையை ஜாதி எதிர்ப்போடு படம் பேசுகிறது. கதையின் நாயகர் நாயகிகளை, உணர்வுகளின் வடிவமாக்கி, தனது நுட்பமான திரை மொழியில் எமோஷன்களாக மக்களிடம் கடத்தும் இயக்குனர், இந்த உணர்வுகளோடு ஜாதி எதிர்ப்பையும் குழைத்துத் தந்திருக்கிறார். படத்தின் மய்யம் கபடியாக இருப்பதால் அது இளைஞர்களை ஈர்க்கிறது. கபடியோடு ஜாதித் தடைகளும், கொடுமைகளும் இணையும் போது புரிதலற்ற, இளைஞர்களை சிந்திக்கத் தூண்டுகிறது.ஜாதி...

அரசியல் சட்டத்திக்கு எதிரான “பழக்க வழக்கங்களை” ஏற்க முடியாது. கேரள உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

அரசியல் சட்டத்திக்கு எதிரான “பழக்க வழக்கங்களை” ஏற்க முடியாது. கேரள உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சனையில் கேரள உயர்நீதிமன்றம் புரட்சிகர தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. “பழக்க வழக்கங்கள்” என்ற சட்டத்தின் பிரிவை கண்மூடித்தனமாக ஏற்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. `பழக்க வழக்கம்’ அரசியல் சட்டத்தின் நோக்கத்திற்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. “அர்ச்­ச­கர்­கள் குறிப்­பிட்ட ஜாதி அல்­லது பரம்பரையைச் சேர்ந்­தவராக இருக்க வேண்­டும் என்ற கட்­டாய மத நடை­முறை எது­வும் இல்லை” என்றும் கேரள உயர்­நீ­தி­மன்­றம் தீர்ப்­ப­ளித்துள்­ளது. “தகு­தி­யின் அடிப்­ப­டை­யில் நியமனங்­கள் செய்வது அர­சி­ய­ல­மைப்பு கூறும் சமத்­து­வத்தை உறுதி செய்யும். ஜாதிக்­கும் பாரம்­ப­ரி­யத்­திற்­கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்­பதை ஏற்றுக் ­கொள்ள முடியா­து” என்­றும் கூறி­யி­ருக்­கும் நீதி­ப­திகள், இதுதொ­டர்பான விவ­கா­ரத்­தில், அகில கேரள தந்திரி சமா­ஜம் (AKTS) என்ற பார்ப்பனர்கள் அமைப்பு தாக்­கல் செய்த ரிட் மனுவையும் அதிரடி­யாகத் தள்ளுபடி செய்துள்ளது 2023-24ஆம் ஆண்­டில் (அர்ச்சகர்கள்) நிய­மன நடவடிக்கைகளை கேரள தேவசம் பணிநியமன வாரியம் (KDRB) மேற்­கொண்­டது. அப்­போது உரிய பயிற்சிப் பெற்றவர்கள்...

கண்களை பறித்த தீபாவளி

கண்களை பறித்த தீபாவளி

ம.பி மாநிலத்தில் தீபாவளிக்காக கார்பைடு துப்பாக்கி பட்டாசு கடைகளில் விற்பனையானது. கடும் ஆபத்துகளை உருவாக்கும் ரசாயனம் கலந்த இந்த துப்பாக்கி தடை ஏதும் இல்லாமல் கடைகளில் விற்கப்பட்டன. இந்த துப்பாக்கியை வெடித்த 23 பேர் மோசமாக கண்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் குழந்தைகள். தோட்டங்களில் குரங்குகளை விரட்டுவதற்கு பயன்படுத்தும் ரசாயனம் இந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் இந்த துப்பாக்கியின் சிறப்பை விளம்பரம் செய்து விற்பனைகளை தூண்டிவிட்டன. சிகிச்சை பெறும் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும், பார்வை இழக்கும் நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. பெரியார் முழக்கம் இதழ் 30102025

ஆக்கிரமிப்பு கோயில்கள்; விளக்கம் கேட்கிறது உயர்நீதிமன்றம்

ஆக்கிரமிப்பு கோயில்கள்; விளக்கம் கேட்கிறது உயர்நீதிமன்றம்

பொது இடங்களிலும், சாலைகளிலும் (சட்ட) அனுமதி பெறாமல், கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் அதேபோன்று மத நிறுவனங்களால் கட்டப்பட்ட அமைப்புகள் எவையும் இல்லை என்பதை உறுதி செய்து தகவல் தெரிவிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து அரசிடம் விளக்கம் கேட்டு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் சிறீவத்சவா, ஜஸ்டிஸ் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு இப்படி ஒரு முக்கிய வழக்கைத் தாங்களே பதிவு செய்துள்ளது. 31.1.2018 அன்று தந்த ஒரு நீதிமன்றத் தீர்ப்பில், ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றிடவேண்டும் என்று தீர்ப்பு தந்தும், ஆக்கிரமிப்புக் கோவில்கள் அமைப்புகள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் பாயாமல், மறைமுகமாக அதனை ஊக்குவிக்கும் வகையில், காவல்துறையும், அரசும் கண்டும் காணாததுபோல அலட்சியப்படுத்தி வருவதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 30102025

கழுதைகளை காணோம்

கழுதைகளை காணோம்

மனித குல வரலாற்றில் பொதி சுமந்து தொண்டாற்றிய கழுதை இனம் மறைந்து வருகிறது. நாடு முழுதும் 70 விழுக்காட்டிற்கு மேற்பட்ட கழுதைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன என்றும், மத்திய பிரதேச மாநிலத்தில் 94 விழுக்காடு கழுதைகள் காணவில்லை என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ம.பியில் 7 மாவட்டங்களில் ஒரு கழுதை கூட இல்லை. சீனாவில் முகப்பொலிவுக்கும், உடல் தோலுக்கும் கிரீம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கழுதைகள் கொல்லப்பட்டு ஏற்றுமதியாவதும் காரணம் என்று கூறப்படுகிறது. பசுமாட்டுக்குத் தான் இந்த நாட்டில் மதம் கண்ணீர் வடிக்கும். கழுதை பற்றி கவலைப்படாதது காரணம் பசு ’பிராமணர்’ பிரிவிலும் கழுதை ’சூத்திர’ பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 30102025

மத உரிமையில் அரசு தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்

மத உரிமையில் அரசு தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்

மதமாற்றத் தடைச் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எந்த மதத்தில் இருப்பது என்பது தனி மனித உரிமை. அதில் அரசு தலையிட உரிமை இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உ.பி உள்ளிட்ட பல மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் நீதிபதி ஜே.பட்டிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு தனி மனித சுதந்திரத்தை அடிப்படை உரிமையாகவே வெளிப்படுத்துகிறது என்று கூறிய நீதிபதிகள், மனசாட்சி உரிமை என்பது தனி மனிதரின் சிந்தனை உரிமை என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்கள். அதேபோல் திருமணத்தில் துணைவரைத் தேர்வு செய்யும் உரிமையும் தனி மனித உரிமை என்றும், யாரைத் திருமணம் செய்து கொள்வது என்பதில் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை என்றும், அது தனி நபர் உரிமையைச் சார்ந்தது என்றும் தீர்ப்பளித்துள்ளது. திருமணம் வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தும் யாரைத் திருமணம் செய்து...

பெரியார் பிறந்த நாள் விழாக்கள்!

பெரியார் பிறந்த நாள் விழாக்கள்!

கடலூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக 17.9.2025 காலை 9 மணி அளவில் கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தோழர்கள் பெரியார் சிவா, அறிவழகன், அருணாச்சலம் வழக்கறிஞர், குப்பசாமி, பெரியார் பிஞ்சு திராவிட மகிழன் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் தி.ச திருமார்பன் வழக்கறிஞர் மாநில அமைப்பு செயலாளர் வி சி க ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர்: பேராவூரணி பெரியார் சிலைக்கு தலைமைக்குழு உறுப்பினர் திருவேங்கடம் தலைமையில் ஒன்றியச் செயலாளர் உதயகுமார், தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் அறிவுச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பேராவூரணி நகர அமைப்பாளர் தா.கலைச்செல்வன் மாலை அணிவித்தார். தி.க மாவட்டச் செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், மதிமுக நகரச் செயலாளர் குமார், அதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன், காங்கிரஸ் நகரச் செயலாளர் பொன் நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு...

திருப்பூர், திருவண்ணாமலை, நாமக்கல்லில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

திருப்பூர், திருவண்ணாமலை, நாமக்கல்லில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

திருப்பூர்: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு 11 இடங்களில் “ஜாதி நமக்கு அவமானம் மனிதம் நமது அடையாளம்” தெருமுனைக் கூட்டங்கள் அக்-05 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.ஒரே நாளில் 11 இடங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையை திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள் நடத்தினர்.பறை இசை முழக்கங்களோடு தொடங்கி, குழந்தைகள், மற்றும் பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். முகில் இராசு மாவட்டத் தலைவர் முன்னிலை வகித்தார். முதல் நிகழ்வாக பாரதி நகர் பகுதியில் பெரியார் படிப்பகத்தில் ஜாதி எதிர்ப்பு பரப்புரைக் கூட்டம் தொடங்கியது. வீரபாண்டி பிரிவு, கொளத்துப்பாளையம், கரை தோட்டம் (தென்னம்பாளையம்), மாஸ்கோ நகர், பெரியார் காலனி, அனுப்பர்பாளையம், அம்மா பாளையம், ஆத்துப்பாளையம் 15 வேலம்பாளையம் ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. (கழகப் பொருளாளர்) சு துரைசாமி, வீ.சிவகாமி (தலைவர் தமிழ்நாடு அறிவியல் மன்றம்), பரிமளராசன் (சமூகஊடகப்...

அண்ணாவின் ‘கடவுள்- புராண’ எதிர்ப்பு!

அண்ணாவின் ‘கடவுள்- புராண’ எதிர்ப்பு!

கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-20 அறிஞர் அண்ணா கடவுள் மத மறுப்பாளர். கடவுள்,மதம், புராண எதிர்ப்பு கட்டுரைகளை ஏராளமாக எழுதியுள்ளார். திமுக என்ற அரசியல் கட்சியான பிறகு ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கருத்தை சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தின் வழியாக முன்வைத்தார். இது திமுகவின் அதிகாரபூர்வமான கொள்கை அல்ல! 1945 -ல் அண்ணா எழுதிய கடவுள், மத எதிர்ப்பு கட்டுரை.. கரிமுகத்தோடு ஒரு கடவுள், நாக்கிலே நாயகியுடன் ஒரு கடவுள், நடனமாடும் மயில் மீது மற்றோர் கடவுள், அலைகடல் மீது ஆலிலைமேல் துயிலும் வேறோர் கடவுள், தலைமீது தையலுடன் பிறிதோர் தேவன், என்ற இன்னோரன்ன கடவுள்கள் இருந்து கொண்டு இன்னின்னவருக்கு இன்னின்ன விதமான நிலைமை இருக்க வேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வாழ்கிறார்கள் என்பதை இன்றும் நம்பி, அந்த நம்பிக்கைக்கேற்ற நாள் நட்சத்திரம் நடவடிக்கைகளிலே பாசம் வைத்துக் கொண்டுள்ள மக்களிடத்திலே, கான்ஸ்ட்டிடியூவண்ட் அசெம்பிளி பற்றியும், காரல் மார்க்சின் கருத்துப்...

ஆணவப் படுகொலை; சில வரலாற்றுத் தகவல்கள்

ஆணவப் படுகொலை; சில வரலாற்றுத் தகவல்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி கே.என் பாஷா தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளார். ஆணவப் படுகொலைகள் குறித்து பல வரலாற்றுத் தகவல்களை தருகிறது இக்கட்டுரை… தீண்டாமைக் குற்றச் சட்டம் (Untouchability offences act, 1955) என்னும் சட்டம்தான் தற்போதைய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கான முன்னோடி. முந்தைய சட்டத்தின் போதாமைகளால் உருவானதுதான் பட்டியல் ஜாதியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம். இளையபெருமாள் ஆணையத்தை அடிப்படையாகக் கொண்டு, இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒரு படுகொலை ஆணவப் படுகொலையா இல்லையா என்பதை வேறுபடுத்தி, அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளத் தனிச்சட்டம் தேவையாக இருக்கிறது. இத்தகைய தனிச்சட்டங்கள் குறித்து நீதிமன்றங்களின் பார்வையை கணக்கில் கொண்டால் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளலாம். உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளுக்கான தனிச்சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டேதான் இருந்திருக்கிறது. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அளித்த மூன்று வழக்குகளின் தீர்ப்புகளில் இவை வலியுறுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டாக...

அரசியல் ஊழலும்  ஆன்மீக ஊழலும்

அரசியல் ஊழலும் ஆன்மீக ஊழலும்

திருப்பதி ஏழுமலையான், சபரிமலை அய்யப்பன், குருவாயூர் கிருஷ்ணன் என்ற பிரபலமான கோயில்களின் ஊழல் மோசடிகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. திருப்பதியில் பக்தர்கள் காணிக்கையான உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இணைந்து திருடியப் பணத்தில் பங்கு போட்டு இருக்கிறார்கள். திருடியவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பங்குச் சந்தையிலும், வீடு, மனைகள் வாங்கிக் குவிப்பதிலும் ஏழுமலையான் காணிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர நெய், லட்டு பிரசாதம், தரிசன டிக்கெட் ஊழல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதே போல் சபரிமலை கோயிலின் கருவறை வாயிலில் உள்ள துவாரக பாலர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் பூசப்பட்டிருந்த தங்கம் திருடப்பட்டுள்ளது. இந்த தங்கக் கவசத்தை பழுது நீக்கி செப்பனிட்டு தரும் வேலை ஒரு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு முறை சீரமைத்து ஒப்படைத்துள்ளார். இந்த சீரமைப்பின் போது 4.5 கிலோ தங்கம் திருடப்பட்டது கண்டறியப்பட்டு,...

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா?-                கொளத்தூர் மணி

ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா?- கொளத்தூர் மணி

பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் ஜீவானந்தம் (ஜீவா) ஈரோட்டுப் பாதை சரியா? எனும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பெரியார் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு… கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த புதிய தோழர்களுக்கான பயிலரங்கின் நிறைவில் 28.9.2025 அன்று மாலை நடந்த ‘அய்யம் களைதல்’ நிகழ்வில் தோழர் பிரவீன் சுப்ரமணியன் எனும் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் “தோழர் ஜீவா எழுதிய ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் வைத்துள்ள விமர்சனங்களைப் பற்றித் தெளிவுபடுத்துமாறு கோரினார். நான் அந்த நூலினைப் பற்றி நூலின் செய்திகளைப் பற்றி நூல் ஆசிரியரைப் பற்றி முன்வைத்த பல செய்திகள் ஜீவா பற்றாளர்களைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கி விட்டது. ஆவேசமான எதிர்வினைகள் சமூக ஊடகங்களில் கொட்டப்பட்டன. பொழியப்பட்ட வசை மொழிகள் எளிய தோழர்களிடமிருந்து மட்டுமல்ல; முதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்தும் வந்தன. சீமானோடு ஒப்பிட்டு விட்டீர்களே என்ற சொற்கள் எல்லா பதிவுகளிலும்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

தமிழ்மதி-பிரகாஷ் இணையேற்பு விழா நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மின்னக்கல் பகுதியைச் சார்ந்த திக வெண்ணந்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் செல்வகுமார் – மணிமேகலை ஆகியோரின் மகள் தமிழ்மதி அவர்களுக்கும், ராணிப்பேட்டை, நெமிலி வட்டத்தைச் சார்ந்த சௌந்தர் காந்திமதி ஆகியோரின் மகன் பிரகாஷ் அவர்களுக்கும் 06.10.2025 திங்கட்கிழமை அன்று காலை 11 மணியளவில் ஓலைப்பட்டியில் மணமகள் இல்லத்தில் சுயமரியாதை வாழ்க்கை இணை ஏற்பு விழா திராவிடர் கழகம் (பெரியார் அறக்கட்டளை தலைவர்) பொத்தனூர் க. சண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வி.சி.க நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் அன்பரசன் வரவேற்புரையாற்றினார். திக (மாநில ஒருங்கிணைப்பாளர்) ஊமை ஜெயராமன், திக (நாமக்கல் மாவட்டத் தலைவர்) குமார், திவிக (நாமக்கல் மாவட்டத் தலைவர்) சாமிநாதன், வி. சி. க (நாமக்கல் சேலம் மண்டல துணைச் செயலாளர்) அரசன், திவிக ( தலைமைக் குழு உறுப்பினர்) காவை. ஈஸ்வரன், திக(சேலம் மாவட்டத் தலைவர்) வீரமணிராஜ், திக (சேலம்...

நாத்திகம் பேசிய பார்ப்பன சிந்தனையாளர்கள் – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(19)

நாத்திகம் பேசிய பார்ப்பன சிந்தனையாளர்கள் – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(19)

பார்ப்பனராக பிறந்தாலும் பார்ப்பனியத்தை மறுத்த இரண்டு நாத்திகர்கள் பற்றிய தகவல்களை இக்கட்டுரை விளக்குகிறது. ஒருவர் அஸ்ஸாமியப் பாடகர் ஜுபின் கார்க். அண்மையில் சிங்கப்பூரில் வடகிழக்கு இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற அவர் ஜான்ஸ் தீவின் கடற்கரையில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் நீந்தும்போது அவரை மரணம் அழைத்துக் கொண்டது. இப்போது மரணத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. மற்றொருவர் ஆந்திராவில் பார்ப்பனராக பிறந்து நாத்திகத்தை வாழ்வியலாக ஏற்று இயக்கம் நடத்திய கோரா (கோபராஜூ ராமசந்திர ராவ்). பெரியாருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் இணைந்து மாட்டுக்கறி-பன்றிகறி விழா நடத்தினார்கள். செப்டம்பர் 19, 2025 அன்று, கார்க் சிங்கப்பூரில் வடகிழக்கு இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றார். தனது 52 வயதில் இறந்தார். ஜான்ஸ் தீவின் கடற்கரையில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் நீந்தும்போது அவரை மரணம் அழைத்துக் கொண்டது. அசாம் அரசு செப்டம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாள் மாநில துக்கத்தை...

ஆர்.எஸ்.எஸ் முகாமில் பாலியல் வன்முறைகள்

ஆர்.எஸ்.எஸ் முகாமில் பாலியல் வன்முறைகள்

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பொன்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் அஜி. இவரது மகன் ஆனந்த் அஜி (24) ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வந்த இவர் சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகினார். இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன் மரணமடைந்தார். ஆனந்த் அஜி பொன்குன்னத்தில் தன்னுடைய தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வீட்டினர் கோட்டயம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் அனந்து அஜி திருவனந்தபுரத்திலுள்ள ஒரு லாட்ஜில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார். இந்நிலையில் ஆனந்த் அஜியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியானது. இந்த பதிவை அவர் தன்னுடைய மரணத்திற்குப் பின் வெளியாகும் வகையில் டைம் செட்யூல் செய்திருந்தார். அதில் கூறியிருந்த விவரங்கள் வருமாறு: என்னுடைய...

கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரியாரின் ஆதரவு

கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரியாரின் ஆதரவு

பெரியாரிய மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ஆர்(எஸ்வி ராஜதுரை) எழுதிய பெரியார் குறித்த ஆங்கில நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. “பெரியார்: ஜாதி தேசம் மற்றும் சோசலிசம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆங்கில் நூல், உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர் சிந்தனையாளரான வித்யாபூஷன்ராவத் என்ற ஜாதி எதிர்ப்புப் போராளி எஸ்.வி.ஆர் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பே இந்த நூல். கடந்த இதழின் தொடர்ச்சி…. கீழ்வெண்மணி படுகொலை தொடர்பாக பெரியார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கெனவே திட்டவட்டமான மறுப்புகள் வெளிவந்துள்ளன. எஸ்.வி.ஆர் இந்த நூலிலும் ஒரு தனி அத்தியாயத்தையே ஒதுக்கி விரிவாக பெரியார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இதேபோன்று தீவிர காங்கிரஸ்காராகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்தவருமான எல்.இளையபெருமாள் பெரியார் தலித் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார், பெரியார் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கே.பி.எஸ் மணி, தொண்டு வீராசாமி ஆகியோர் பெரியார் தலித் மக்களின் ஆதரவாளர் அல்ல...

தோழர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சியுரை!  ஈரோட்டுப் பாதையில் நடைபோடுவோம்!

தோழர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சியுரை! ஈரோட்டுப் பாதையில் நடைபோடுவோம்!

ஈரோட்டுப் பாதை தான் நமக்கு வழி காட்டுகிறது; பெரியார் இயக்கம் தான் எனது தாய் வீடு என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். சென்னையில் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி தலைவர் மறைந்த தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு நிறைவு மலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று துணை முதலமைச்சர் நிகழ்த்திய உரையிலிருந்து சில பகுதிகள்… பெரியாரின் தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. பெரியாரின் தொண்டர்களை, துறவிகளைவிட மேலானவர்கள் என்று பெருமையாக சொல்வார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் அய்யா ஆனைமுத்து அவர்கள். பெரியார் தொண்டர்களின் தன்னலம் இல்லாத உழைப்புதான், தமிழ்நாட்டை சுயமரியாதை மண்ணாக மாற்றி வைத்துள்ளது. எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விட, மிகமிக முக்கியமான நிகழ்ச்சியாக நான் கருதுவது, இன்றைக்கு இந்த அரங்கில் நடந்துகொண்டு இருக்கின்ற அறிஞர் ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழா. இன்னும் சொல்லப்போனால், எனது தாய் வீட்டிற்கு நான் வருகை தந்துள்ளேன். பெரியார் தொண்டர்கள் நிறைந்து...

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

குடிஅரசு வெளியிட ஏற்பட்ட தடைகள் குறித்த கழகத் தலைவரின் உரை பல புதிய தகவல்களை அறிந்து கொள்ள உதவியது. குடிஅரசு தொகுப்பில் உள்ள பல தோழர்களின் கூட்டு உழைப்பு தற்போதைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைகிறது. பேராசிரியர் வீ.அரசு அவர்களின் உரை ஈழப் பிரச்சனையிலும், வீரப்பன் பிரச்சனையிலும் கழகத் தலைவரின் தியாகத்தை, பறைசாற்றும் வகையில் அமைந்தது. மேலும் குடிஅரசு தொகுப்பை வெளியிட ஏற்படும் பொருளாதார செலவை சமாளிக்க தன் வீட்டையே தர முன்வந்த கழகப் பொதுச் செயலாளரின் குணம் சிலிர்க்க வைக்கிறது. குடிஅரசை தொகுக்க ஏற்பட்ட சிரமங்கள் புரட்சிப் பெரியார் முழக்கம் உரிய முறையில் ஆவணப்படுத்தி சேமித்து வைக்கப்பட வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. குடிஅரசுத் தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளக் காரணமாக இருந்த சீர் வாசகர் வட்டத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். -அருண் கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்) பெரியார் முழக்கம் இதழ் 09102025

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முயற்சியில் ஆதரவாளர்கள் மற்றும் கழகத் தோழர்களை ஒருங்கிணைந்து வாட்ஸ்அப் குழு வழியாக புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு மாதம் ரூ. 500 என நன்கொடை திரட்டி வருகின்றனர். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். செப்டம்பர் மாத நன்கொடையாக ரூ.15000 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). பெரியார் முழக்கம் இதழ் 09102025

கழகத்தினர் எடுத்த பெரியார் பிறந்தநாள் விழாக்கள்

கழகத்தினர் எடுத்த பெரியார் பிறந்தநாள் விழாக்கள்

கள்ளக்குறிச்சி: மாவட்டக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு நயனார்பாளையத்தில் தந்தை பெரியார் பள்ளியில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 10- மணியளவில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ப.அங்கமுத்து தலைமையில் மாலை அணிவித்து பெரியாரின் சிறப்புகள் குறித்து பேசப்பட்டன. இந்நிகழ்வில் க.அசன், க,மதியழகன், ஆ.நாகராசன், ந.வெற்றிவேல் ச.வீரப்பாண்டியன், ஜெயனுல்லாபுதீன், சேரன், மைக்கேல், அஜித்குமார், தண்டபாணி உள்ளிட்ட பல தோழர்களும் பள்ளி மாணவர்களும் கருப்பாயி, இலட்சுமி, வாசுகி, கோமதி, அஞ்சுகம், சாரதாமணி உள்ளிட பெண் தோழர்களும் கலந்து கொண்டனர். சங்கராபுரதில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 11 மணியளவில் ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாலை 5 மணி அளவில் கடுவனூரில் பெரியார் அம்பேத்கர் திடலில், பெரியார் பிறந்தநாள் மற்றும் தோழர்கள் பெ. கோவிந்தன் கா.கோவிந்தராஜ் சு.தினகரன் செ.விஜய் ஆகிய தோழர்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. க. இராமர் மாவட்டச் செயலாளர் தலைமை...

சென்னிமலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

சென்னிமலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பேரணி- மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை 14.09.2025 அன்று மாலை 6 மணியளவில் சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தோழர்கள் கலந்து கொண்ட வாகனப் பேரணி வெள்ளோடு மாரியம்மன் கோவில் திடலில் இருந்து மேளதாளத்துடன் தொடங்கியது. தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் பேரணிக்கு தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, கரூர் மாவட்டத் தலைவர் மோகன் தாஸ், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சென்னிமலை செல்வராசு, திராவிடர் எழுச்சிப் பேரவை மாநிலத் தலைவர் சக்திவேந்தன், சுற்றுச்சூழல் போராளி முகிலன், கழக மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திமுக சென்னிமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் செங்கோட்டையன் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணி வெள்ளோடு, அனுமன்பள்ளி ,...

நாத்திகம் குறித்து தாய்-மகன் உரையாடல்   கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(18)

நாத்திகம் குறித்து தாய்-மகன் உரையாடல் கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(18)

1928 ஆம் ஆண்டு குடிஅரசு இதழில் நாத்திகம் என்னும் தலைப்பில் சித்திரபுத்திரன் எழுதிய நையாண்டி உரையாடலே இந்த கட்டுரை. சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதியவர் பெரியார். தாயும் மகனும் இதில் உரையாடுகிறார்கள் தந்தை தீவிரமான பெரியார் கொள்கைக்காரர். ‘குடிஅரசு’ அலுவலகத்திலேயே பணியில் சேர்ந்து விடுகிறார். நாத்திகப் பத்திரிகையான குடிஅரசு பத்திரிக்கைக்கு அப்பா ஏன் வேலைக்குப் போக வேண்டும்? என்று மகன் தாயிடம் கேட்கிறார். மகன் கருத்தை வைத்தே தாய் நாத்திகத்தை மகனுக்கு புரிய வைக்கிறார். இந்த உரையாடலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் இவை. இது ஒரு உண்மை சம்பவமாகவே இருக்கும் என்று கருதத் தோன்றுகிறது. உரையாடலை தூயவெழிலழகனார் என்பவர் எழுதி அதை சித்திரபுத்திரன் திருத்தம் செய்துள்ளார் என்று ‘குடிஅரசு’ குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்: – அப்பா மகனே, சாமி என்றால் என்ன? அதை முதலில் சொல்லு பார்ப்போம், அதாவது அதற்குப் பெயர் என்ன? ரூபம் (உருவம்) என்ன? நிறம் என்ன? குணம் என்ன?...

திருச்சியில் பேரெழுச்சியுடன் நடந்த     பெரியார் எனும் பெரும்நெருப்பு

திருச்சியில் பேரெழுச்சியுடன் நடந்த பெரியார் எனும் பெரும்நெருப்பு

திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் எனும் பெரும்நெருப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் 04.10.2025 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் திருச்சி, அருண் ஹோட்டலில் உள்ள சுமங்கலி அரங்கத்தில் தலைமைக் குழு உறுப்பினர் இரா. உமாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வி. சி. க. (திருச்சி மண்டலச் செயலாளர்) அ. க. தமிழாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி (திருச்சி மாவட்டச் செயலாளர்) ராயல் ராஜா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி (திருச்சி மாவட்டச் செயலாளர்) ராயல் சித்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர்) செ. ராஜ்குமார், ம. க. இ. க (மாநில பொதுச்செயலாளர்) கோவன், மக்கள் அதிகாரம் (மாநில பொதுச் செயலாளர்) செழியன், த. பெ. தி. க (மாநில கொள்கை பரப்புச் செயலாளர்) சீனி விடுதலை அரசு, அங்குசம் செய்திகள் (பொறுப்பாசிரியர்) பேராசிரியர். நெடுஞ்செழியன், திராவிடர் இயக்கத் தமிழர்...

ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசு மரியாதையா?

ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசு மரியாதையா?

நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்-க்கு ஒன்றிய அரசு சார்பில் தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த அவலத்திற்கு சரியான எதிர்வினை ஆற்றி இருக்கிறார். “தேசத் தந்தையைக் கொன்ற மதவாதிகளின் கனவுகளை செயல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு, அரசு கவுரவம் வழங்குவது மிகப்பெரும் அவலம்”என்று முதலமைச்சர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் தான் காந்தியின் உயிரைப் பலி கேட்டது. * மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ் *’சுயம் சேவக்குகளாக ’பெண்களை’ நூறு ஆண்டுகளாக ஏற்க மறுக்கும் அமைப்பு. *கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராக தொடரக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைமை விரும்பியது. கடவுளின் குழந்தை என்று மோடி தனக்கு தெய்வீக முலாம் பூசிக் கொண்டதை மோகன் பகவத் கடுமையாக எதிர்த்தார். “இனி எங்களுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு தேவையில்லை”என்று பாஜக தலைவர் நட்டா பேட்டி அளித்தார். பதவி பறிபோய்...

தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்கில் கழகத் தலைவர் விடுதலை

தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்கில் கழகத் தலைவர் விடுதலை

2009 – ஆம் ஆண்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தி கொலை என்று பேசாதீர்கள், ராஜீவ்காந்தி செய்த தவறுக்காக அவருக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனை என்றும், அமைதிப்படையை ஏவி எத்தனை படுகொலைகள் செய்து இருப்பார்; அதற்காக கொடுக்கப்பட்ட மரண தண்டனை அது. விடுதலைப் புலிகள் செய்திருந்தால் பாராட்டுகிறேன்; இல்லையெனில் கண்டிக்கிறேன். ஈழமக்களுக்கான பாதுகாவலர்கள் ஆன விடுதலைப் புலிகளே, நீங்கள் தானே செய்திருக்க வேண்டும். நீங்கள் செய்யாமல் வேறோருவனை ஏன் கொலை செய்ய விட்டீர்கள் என்று விடுதலைப் புலிகளைக் கண்டித்திருப்பேன் என பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. ஓராண்டுக்கான தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ச்சப்பட்டது. 3மாதம் சிறையிலிருந்தார். இவ்வழக்கை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு 16 ஆண்டு காலம் கடந்து 29.09.2025 திங்கட்கிழமை திண்டுக்கல் மாவட்டம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கழகத்...

இளைஞர்கள் புடைசூழ நடந்து முடிந்த கோவை பயிலரங்கம்!

இளைஞர்கள் புடைசூழ நடந்து முடிந்த கோவை பயிலரங்கம்!

கோவை மாவட்டக் கழகச் சார்பில் பெரியாரியல் பயிலரங்கம் 28.09.2025 அன்று கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. பயிலரங்கில் பங்கேற்ற தோழர்களின் அறிமுகத்துடன் நிகழ்வு தொடங்கியது. பயிலரங்கின் முதல் வகுப்பாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, இந்திய வரலாற்றில் பார்ப்பனிய எதிர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்‌.பிரபாகரன், திராவிடர் இயக்க வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பெரியார் தொண்டர் சிற்பி இராசனின் மந்திரமா! தந்திரமா! மூடநம்பிக்கை விளக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜாதி ஒழிப்புப் பணியில் திராவிடர் இயக்கம் என்ற தலைப்பில் வரலாற்றுச் சிறப்பிக்க உரையை நிகழ்த்தினார். கழகத் தலைவர் முன்னிலையில் கோவையைச் சேர்ந்த மோகன் கிருட்டிணன், வழக்கறிஞர் ஆல்டன், ஹரிஹரன், கவுதம், அஜய், சுதர்சன் ஆகியோர் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்குக் கழகத் தலைவர், கழக வெளியீடுகளை வழங்கி வரவேற்றார். பயிலரங்கில்...

சினிமா மட்டுமே அரசியல் அல்ல!-விடுதலை இராசேந்திரன்

சினிமா மட்டுமே அரசியல் அல்ல!-விடுதலை இராசேந்திரன்

ஏழை எளிய விளிம்பு நிலை குடும்பங்களில் 40 உயிர்கள் பலியாகி விட்டன. கடந்த பல ஆண்டுகளாக கதாநாயகன் பிம்பத்தில் தங்கள் உள்ளத்தில் பதிந்துள்ள ஒரு உருவத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற உளவியலால் உந்தப்பட்டு இளைஞர்கள் பெண்களும் ஆண்களுமாய் கரூரில் திரணடனர். காலை 8:30 மணிக்கு விஜய் நாமக்கல் வருகிறார் என்பதால் விடியற் காலையிலே அவர்கள் வீட்டை விட்டு கிளம்பி திரண்டு வந்து விட்டார்கள். ஆனால் நடிகர் விஜய் தனி விமானத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டதே காலை 8 45 மணிக்குத் தான்; அதனால் அவர் கரூருக்கு வந்து சேர்ந்ததும் 10 மணி நேர தாமதத்திற்குப் பிறகு தான்! ஒவ்வொரு வினாடியும் உணர்வுகளால் உந்தப்பட்டு விஜய்க்காக காத்திருந்த மக்கள், அந்த உணர்வுகளின் அழுத்தத்தால் விஜய் வருகிறார் என்றவுடன் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பில் உயிர் பாதுகாப்பைப் பற்றியும் கவலைப்படாமல் மேடை நோக்கி ஓடி இருக்கிறார்கள். தங்களுடைய காலின் கீழ் மிதிபட்டுக்...

கடவுள் உண்டா? சவால் விட்ட நாத்திகர்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-17

கடவுள் உண்டா? சவால் விட்ட நாத்திகர்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-17

டாக்டர் ஆபிரகாம் கோவூர் அவர்கள் ஒரு தலைசிறந்த நாத்திகர், மனோதத்துவ நிபுணர். அறிவியல் அறிஞர். எதையும் அறிவுபூர்வமாகப் பேசி, உண்மைகளை நிலைநிறுத்திடும் ஆற்றல் வாய்ந்த ஒரு சமுதாய விஞ்ஞானி கேரளத்தில் பிறந்தவராயினும், இறுதி வாழ்க்கையை இலங்கையில் அமைத்துக் கொண்டவர். சிறீலங்காவில், கொழும்புவில்தான் 1978 செப்-18-ல் அவர் மறைந்தார். பல ஆண்டுகாலம் தமிழ் நாட்டிலும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் தீவிர பகுத்தறிவுப் பிரச்சாரம் புரிந்தவர் அவர். டாக்டர் கோவூர் “கடவுள்” உண்டு என நிரூபிப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று சவால்விட்டார். எவர் முன் வருவார்? அப்படி ஒன்று இருந்தால் அல்லவா நிரூபிக்க முடியும்? அவரது பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பெரியார் இயக்கம் பயன்படுத்திக் கொண்டது. கோவூர் பலமுறை தமிழ்நாடு வந்து திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது உண்டு. கோவூர் எழுதிய தன்னுடைய சுயவரலாற்றிலிருந்து சி ல கேரளாவில் தீண்டத்தகாதவர்கள் தாங்கள் நடக்கும் வழியிருந்தால் அகன்று போய்விடுவதற்கு எச்சரிக்கையாக, நம்பூதிரிகள்...

அச்சுத்துறையில் அதிர்வலைகளை உருவாக்கிய “சீர்”

அச்சுத்துறையில் அதிர்வலைகளை உருவாக்கிய “சீர்”

ஈரோட்டில் செப்-7-ல் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு சீர் வாசகர் வட்டம் விருது வழங்கும் விழாவில் பேரா. வீ.அரசு உரையிலிருந்து… யாருக்கு பரிசு கொடுக்க வேண்டுமோ அந்த சரியான நபருக்கு பரிசு கொடுப்பதுதான் இந்த சீர் வாசகர் வட்டத்தின் நோக்கமாக அவர்கள் வரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தான் தமிழறிஞர் பொதியவெற்பனுக்கும் அதைப்போல நம் தோழர் கொளத்தூர் மணிக்கும் அவர்கள் பரிசளித்திருக்கிறார்கள். இந்த சீர்வாசகர் வட்டத்தை பற்றி ஒரு குறுகிய காணொளியும் ஒளிபரப்பட்டது. கவிஞர் தம்பி அவர்கள் பேசுகிற பொழுது சில தகவல்களையும் சொன்னார். சில முக்கியமான தகவல்களை அவர் பகிர்ந்து கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று எனக்கு ஒரு சங்கடம் இருந்தது. அவர் சொன்னார், நீங்கள் அதை சொல்லிவிடுங்கள் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். இந்த சீர்வாசகர் வட்டம் என்கிற அமைப்பு தனக்கான அறவியலை உறுதிப்படுத்திக் கொண்டு செயல்படும் ஒரு இளைஞர் பாசறை. பெருமைப்படக்கூடிய பல்வேறு பணிகளை அவர்கள் செய்துள்ளார்கள். “பெண் ஏன்...

எளிய ஆங்கிலத்தில் பெரியாரியலை பேசும் நூல் “Periyar, Caste, Nation,Socialism”

எளிய ஆங்கிலத்தில் பெரியாரியலை பேசும் நூல் “Periyar, Caste, Nation,Socialism”

பெரியாரிய மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ஆர் (எஸ்.வி ராஜதுரை) எழுதிய பெரியார் குறித்த ஆங்கில நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. “பெரியார் ஜாதி, தேசம் மற்றும் சோசலிசம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆங்கில நூல், உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பெரியார் அம்பேத்கர் சிந்தனையாளரான வித்யாபூஷன்ராவத் என்ற ஜாதி எதிர்ப்புப் போராளி எஸ்.வி.ஆர் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பே இந்த நூல். பெரியார், அம்பேத்கர் இடையிலான கொள்கை உறவுகள், பெரியாரின் வடநாட்டு பயணங்கள், புத்த மார்க்கம் குறித்த இவர்களது பார்வைகள், திராவிட இயக்கம் பட்டியலின பிரிவினருக்கான உறவுகள் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. பல வரலாற்றுச் செய்திகள் இதில் குவிந்து கிடக்கின்றன. பெரியாரின் வடநாட்டுப் பயணங்கள் குறித்த விரிவான செய்திகள் இடம் பெற்றுள்ளன. 1944 தொடங்கி 1970 வரை பெரியார் கல்கத்தா, கான்பூர் (இரண்டு முறை), லக்னோ (இரண்டு முறை), டெல்லி, பம்பாய் (மூன்று முறை) மற்றும் பூனே நகரங்களுக்கு பெரியார்...

தமிழ்நாடு அரசின் 12-ம் வகுப்பு பாடத்தில் திணிக்கப்பட்டுள்ள  சனாதன கருத்துக்களை திரும்பப் பெறுக!

தமிழ்நாடு அரசின் 12-ம் வகுப்பு பாடத்தில் திணிக்கப்பட்டுள்ள சனாதன கருத்துக்களை திரும்பப் பெறுக!

தேசியகல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு எதிராக தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை என்ற ஒன்றை தமிழ்நாடு அரசு சமீபத்தில் முன்வைத்தது. தமிழ்நாடு அரசு முன்வைத்த மாநில கல்விக் கொள்கையில் பல்வேறு பிரிவுகள் தேசியகல்விக் கொள்கையை ஒத்ததாக இருப்பதாக பல்வேறு கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு அரசு தேசியகல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டது போல் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கக்கூடிய தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள 12-ம் வகுப்பு “அறவியலும் இந்திய பண்பாடும்” என்கிற பாட புத்தகத்தில் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட பல்வேறு கருத்துக்கள் இந்த பாடப்புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கிறது. உதாரணமாக பக்கம் 53 மற்றும் 54 இல் “நவீன காலத்திற்கு வேதங்களின் ஏற்புடைமை” என்கிற தலைப்பின் கீழ் “விண்வெளியில் காணப்படும் பல்வேறு கிரகங்கள் நட்சத்திரங்கள் பற்றி விளக்கமான செய்திகள் வேதங்களில் கூறப்பட்டுள்ளன” என்றும், பக்கம்- 53-இல் “புராணங்களின் இன்றியமையாமை” என்கிற...

அல்பேனியா அரசின் அதிரடி முடிவு செயற்கை நுண்ணறிவுக்கு ஊழல் ஒழிப்பு அமைச்சர் பதவி!

அல்பேனியா அரசின் அதிரடி முடிவு செயற்கை நுண்ணறிவுக்கு ஊழல் ஒழிப்பு அமைச்சர் பதவி!

உலகில் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.அய்) அமைச்சர் பதவியை ஏற்று இருக்கிறது. அந்த அமைச்சரின் பெயர் ‘டியெல்லா’. அல்பேனியா நாட்டின் பிரதமர் ஏ.டி ராமா கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தனது அமைச்சரவையில் இணைத்துள்ளார். ‘டியெல்லா’வுக்கு ஊழல் ஒழிப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அல்பேனியா இணையதளத்தின் உதவியாளராக கடந்த ஜனவரியில் நியமனம் செய்யப்பட்டது. இப்போது அமைச்சராக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முதலாக அமைச்சராக பதவி ஏற்றுள்ளது ‘டியெல்லா’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். டியெல்லாவுக்கு அல்பேனிய நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த பெண் உருவம் தரப்பட்டுள்ளது. 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட அல்பேனியா, ஐரோப்பாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்டது இந்த நாடு. 18 வயதுக்கு உட்பட்ட நல்ல மனநிலை உள்ள எவரும் அமைச்சராக முடியும் என்று அல்பேனியாவின் அரசியல் சட்டம் கூறுகிறது. அல்பேனியா இணையதளத்தில்...

“பெரியாரிஸ்ட்” தமிழ்செல்வி இல்லத்தில் படத்திறப்பு

“பெரியாரிஸ்ட்” தமிழ்செல்வி இல்லத்தில் படத்திறப்பு

17/9/25 – சென்னை அன்று கொளத்தூர் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் பகுதியில் வசிக்கும் தோழர் தமிழ்ச்செல்வி இல்லத்தில் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் இல்லத்தில் பதிக்கப்பட்டு இருக்கும் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து திறந்து வைத்தார் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன். கட்டுமான தொழிலதிபரான தோழர் தமிழ்செல்வி, தலித் மற்றும் இஸ்லாமியர்கள், அசைவ உணவு சாப்பிடுவோர்க்கு வீடு வழங்குவதில் முன்னுரிமையும் விலைச் சலுகைகளையும் தந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. U2 BRUTUS ஞான சத்யா, தமிழ்ச் செல்வி ஆகியோர் உரையாற்றினர். சமூகநீதி நாள் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. திவிக சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 25092025

பெரியார் பற்றிய சரியான புரிதலுக்கு  அவரது மூலநூல்களைப் படிக்க வேண்டும் – கொளத்தூர் மணி

பெரியார் பற்றிய சரியான புரிதலுக்கு அவரது மூலநூல்களைப் படிக்க வேண்டும் – கொளத்தூர் மணி

குடிஅரசு தொகுப்புகளை வெளியிட்ட பதிப்பாசிரியர் கொளத்தூர் மணிக்கு சிறந்த பதிப்பாளர் விருதை சீர் வாசகர் வட்டம் வழங்கியது.விருது ஏற்பு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை; கடந்த இதழின் தொடர்ச்சி. பெரியார் பட்டத்தை யார் கொடுத்தது என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பெரியார் பட்டத்தை யாரும் கொடுக்கவில்லை. 1929-ல் செங்கல்பட்டு மாநாட்டில் கடைசி தீர்மானம், இந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டி எழுப்பி இதை நடத்திக் கொண்டிருக்கிற ராமசாமி பெரியார் என்பவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 1938-ல் பெரியார் என்ற பட்டம் வழங்கவில்லை. பெண்கள் நடத்திய அந்த மாநாட்டில் ஈ.வெ.ராமசாமியை எழுத்திலும், பேச்சிலும் ‘பெரியார்’ என்று குறிப்பிட வேண்டும் என்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் என்ற பட்டம் வழங்கப்படவில்லை. தியாகராய நகர் மாதர் முன்னேற்றக் கழகம் செயலாளராக இருந்த டாக்டர் தர்மாம்பாள் தீர்மானங்களை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தை 11.11.1938-ல் விடுதலை இதழில் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த...

“கடவுளை” ஓரம் கட்டுகிறது அறிவியல்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-16(விடுதலை இராசேந்திரன்)

“கடவுளை” ஓரம் கட்டுகிறது அறிவியல்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-16(விடுதலை இராசேந்திரன்)

நடிகர் ரோபோ சங்கர்(46 வயது) இறந்த துயரமான செய்தி வந்தது. உண்மையிலேயே இது துயரமானதுதான். இதற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர் இவ்வாறு கூறினார்; “மரணத்துக்கு எவர் மீதும் குறைகாண முடியாது. கடவுள் அவருக்கு விதித்த ஆயுள் அவ்வளவுதான், முடிந்ததும் அவர் அழைத்துக் கொண்டார்.” ஒவ்வொருவருக்கும் கடவுள் ஆயுள் காலம் நிர்ணயித்துக் கொண்டு இருக்கிறாரா?.. * இறந்து போனவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சடங்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. ஒருகாலத்தில் வீடுகளில் நடத்தப்பட்ட சடங்குகள் இப்போது பொதுநிகழ்வாக திட்டமிட்டு மாற்றப்பட்டுவிட்டன. இதனால் வேத பார்ப்பன பண்டிதர்கள் கொள்ளை இலாபம் அடிக்கிறார்கள். இதற்கு சரியான நாளாக புரட்டாசி மாதம் அமாவாசையை தேர்வு செய்து இருக்கிறார்கள். அந்த ஒரு நாளில் மட்டும் தான் வேறு உலகத்தில் இருந்தும் மூதாதையர்களுக்கு இவர்கள் தரும் தர்ப்பணம் டெலிவெரி ஆகுமாம். இப்படி ஒரு புரட்டு! அதுவும் ஆண்களுக்கு மட்டுமே இப்படி தர்ப்பணம் செய்கின்ற உரிமை உண்டு. இப்படி...

திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

திருப்பூர் மாஸ்கோ நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக விநாயகர் சிலை வைப்பதற்கு இந்து முன்னணி அமைப்பினர் முயற்சித்தனர். திராவிடர் விடுதலைக் கழகத்தோழர்கள் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அரசு வழிகாட்டுதல் முறையில் சிலையை அகற்றுவதாக காவல்துறை தெரிவித்தது. உடனடியாக இந்தச் செய்தி புகைப்பட ஆதாரங்களுடன் காவல் துறைக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இணைய வழியாக புகாராக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் சிலையை இந்து முன்னணியினர் அகற்றவில்லை. இதை அறிந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநகரச் செயலாளர் மாதவன் ஆகியோர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று விதிகளை மீறி வைக்கப்பட்டிருக்கும் சிலையை அகற்ற வலியுறுத்தி எழுத்துப்பூர்வமாக முறையான புகார் மனுவை அளித்தனர். அதன் அடிப்படையில் 27.08.25 அன்று காலை வைக்கப்பட்ட சிலை அன்று மாலையே காவல்துறையால் அகற்றப்பட்டது.. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை எடுத்த திருப்பூர்...

தமிழக மக்கள் முன்னணி பரப்புரை

தமிழக மக்கள் முன்னணி பரப்புரை

தமிழக மக்கள் முன்னணி சார்பாக நடத்தும் முற்றத்திகார தமிழ்நாடே முதன்மை இலக்கு என்ற முழக்கத்தோடு சென்னை மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, ராமேசுவரம், திருச்செந்தூர், ஈரோடு என 6 முனைகளில் இருந்து பரப்புரை பேரணிகள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் வந்தடைந்து 31.08.2025 மாலை 5 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. நிலவழகன் பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பு உரையாற்றினார் தமிழ்வாணன், கண குறிஞ்சி, நிலவன், செல்வவேள், தங்க குமரவேல், பாவெல், சுப்பு மகேஷ், நாகேசுவரன், சௌ. சுந்தரமூர்த்தி, எட்வின், காஞ்சனா, குணசேகரன் ஆகிய தோழர்கள் தீர்மானங்களை வலியுறுத்தி உரையாற்றினார்கள். ஆசிரியர் தேன்மொழி, முனைவர் மா. பூங்குன்றன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மீ. தா. பாண்டியன், தபெதிக சீனி.விடுதலை அரசு, மக்கள் கலை இலக்கியக் கழகம் கோவன், மக்கள் அதிகாரம் கழகத் குருசாமி, மார்க்சிய பெரியார் பொதுவுடைமைக் கட்சி துரை சித்தார்த்தன், திக சி. தங்கராசு, தமிழ் தேசக்...

சூரியகுமார்-காயத்ரி இல்ல மணவிழா!

சூரியகுமார்-காயத்ரி இல்ல மணவிழா!

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் கழக சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ப. கு. சூரியகுமார்- காயத்ரி ஆகியோரின் மகன் இனியன் அவர்களுக்கும், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தை சேர்ந்த ம.சதிஷ்குமார்- ம.சுமதி ஆகியோரின் மகள் ரிதிசக்தி அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா 14.09.2025 அன்று காலை 10.30 மணியளவில் மேட்டூர், நவப்பட்டி திருமலை மாதவி மகாலில் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றி பெரியார் பாடல்களை பாடினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் தலைமையேற்புரையாற்றி, இணையர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இணையர்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஏற்பு ஒப்பந்தம் செய்து வைத்து உரையாற்றினார். இணையர்கள் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ 25,000 கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் அவர்களிடமும், ரூ25,000 கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடமும் வழங்கினர். இறுதியாக சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ப.கு....

எதிர்ப்புகளை புறந்தள்ளி மயிலாடுதுறையில் கழகம் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

எதிர்ப்புகளை புறந்தள்ளி மயிலாடுதுறையில் கழகம் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் “ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்” என்ற தலைப்பில் பரப்புரைப் பயணமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. 6 பரப்புரைக் கூட்டங்களை தோழர்கள் நடத்தியுள்ளனர். முதல் நாள்: செப்-2 அன்று மாலை 4.00 மணிக்கு சீர்காழியில் மாவட்டச் செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. தபெதிக மண்டலச் செயலாளர் பெரியார் செல்வம் கலந்து கொண்டு பயணத்தின் நோக்கங்கள் வெற்றி பெற ஆதரித்து பேசினார். மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியை துரை.தாமோதரன் செய்து காட்டி மக்களிடையே பரப்புரை பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். தலைமைக் குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்ட அமைப்பாளர் செந்தில், மாவட்டப் பொருளாளர் விஜயராகவன், தில்லை நாதன், சிதம்பரம் மதன்குமார், பாடாலூர் சுதாகர், மெளனி, வழக்குரைஞர் நன்மாறன், தபெதிக மாவட்டத் தலைவர் பரசுராமன், தமிழர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப்பு.மகேசு, தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர்...

சென்னையில் வெற்றிநடை போட்ட ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

சென்னையில் வெற்றிநடை போட்ட ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம் என்ற தலைப்பில் கழக இளைஞரணி ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை செய்து வருகிறது. சென்னை, சேலம் மாவட்ட இளைஞரணி தோழர்கள் ஆர்வமுடன் இந்த பரப்புரைகளை நடத்தி வருகிறார்கள். சென்னையில் கடந்த 10 நாட்கள் தொடர் பரப்புரை தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. மிக நேர்த்தியாக சென்னை மாவட்டக் கழக இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ப.அருண் மற்றும் எட்வின் பிரபாகரன் இருவரும் இணைந்து பேச்சாளர்கள் மற்றும் இடங்களை தேர்வு செய்தனர். குறிப்பாக தோழமை இயக்கத் தோழர்கள், ஊடவியலாளர்கள் என பலர் சிறப்புரையாற்றினார்கள். கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள் சிலர் இந்த கூட்டங்களை தலைமையேற்று நடத்தினார்கள். இளைய தலைமுறையினரிடம் வெகுவாக இந்த கூட்டம் கவனிக்கப்பட்டது. அனைத்து தெருமுனைக் கூட்டங்களும் சென்னை மாவட்டக் கழக முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அருவி வலையொலியில் வீடியோ வெளிவந்துள்ளது. 10 நாட்களும் பாடல்கள் வழியாக, அரசியல் நையாண்டி வழியாக, பறை இசை வழியாக பொதுமக்களை கவரும்...

காசாவில் இனப்படுகொலை நிறுத்து சென்னையில் பேரணி

காசாவில் இனப்படுகொலை நிறுத்து சென்னையில் பேரணி

காசா மீதான போரை நிறுத்து என்ற முழக்கத்தோடு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை புதுப்பேட்டையில் பேரணியும் அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் 19.09.2025 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. பேரணியில் பங்கேற்று கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கண்டனவுரையாற்றினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த இயக்கங்கள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டனர். இளமாறன் (தமிழர் விடியல் கட்சி) ஒருங்கிணைபிபில், திருமாவளவன் (விசிக), கோவை கு. இராமகிருஷ்ணன் (தபெதிக), பேரா.ஜவாஹிருல்லா, திருமுருகன் காந்தி(மே17), நாகை திருவள்ளுவன்(தபுக), மருத்துவர் சாந்தி, மகா (மக்கள் மன்றம்), திரைக்கலைஞர்கள் பிரகாஷ்ராஜ், வெற்றிமாறன், சத்யராஜ், தீனா, அமீர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனவுரையாற்றினார்கள். பேரணியில் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 25092025