கழக ஏட்டுக்கு நன்கொடை
தமிழ்நாடு அறிவியல் மன்ற நிர்வாகிகளான ஆசிரியர்கள் சிவகாமி, ஆசிரியர் சிவகுமார் (ஈரோடு) ஆகியோர் முன்னெடுப்பில் பெரியார் முழக்கம் வளர்ச்சிக் குழு உருவாக்கப்பட்டு, பல்வேறு தோழர்கள் மாதம்தோறும் தலா ரூ.500 வழங்கி வருகிறார்கள்.
அவர்களின் பெயர் பட்டியல்: தலைமைக் குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகர், இளையராஜா, துரை. தாமோதரன், தோழர்கள் நாத்திக ஜோதி (ஈரோடு), முத்து (திருப்பூர்), சண்முகசுந்தரம் (மயிலாடுதுறை), பிரபாகரன் (மேட்டூர்), பிரபாகரன் (பவானிசாகர்), ஜோதி (மடத்துக்குளம்), சாக்கோட்டை இளங்கோவன், அஜீத் (மேட்டூர்), அறிவழகன் (கடலூர்), வீரமணி, முத்து (சத்தியமங்கலம்), சுந்தரம் (பவானி), தினேஷ், சந்தோஷ், அறிவழகன், மலைக் கொழுந்தன், வெங்கட், வீரன், கோபிநாத், வடிவேல் ராமசாமி, செளந்தர்யன், சரவணகுமார், மதன், மகேஷ், பழனிச்சாமி கோபி, அழகர் பிரபாகரன், ஆனந்த், மாதவன், இளங்கோ, ரவி, கோடி சுந்தரம்.
ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். டிசம்பர் மாத நன்கொடையாக ரூ.13,500 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்).
* கழகப் பொருளாளர் துரைசாமி 50 சந்தாவுக்கான தொகையை புரட்சிப் பெரியார் முழக்க வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.
* தோழர் கடலூர் சிவகுமார் 50 சந்தாவுக்கான தொகையை புரட்சிப் பெரியார் முழக்க வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.
* பெரியார் நினைவு நாளான டிச. 24 அன்று கழகப் பணியில் உயர்நீத்த கழகத் தோழர் குமார் அவர்களின் 20-ம் ஆண்டு நினைவு நாளில் டிசம்பர் 25 அன்று அவரின் குடும்பத்தின் சார்பாக தம்பி குட்டி புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு சந்தா தொகையாக ரூ.5000-அய் சென்னை மாவட்டக் கழகத்திற்கு சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி அவர்களிடம் வழங்கினார்.
பெரியார் முழக்கம் இதழ் 01012026
