புதுவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கு

புதுச்சேரியில், 3/2/26 அன்று மாலை 6 மணிக்கு, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் மற்றும் திராவிட இயக்க வேங்கைகள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

“1965- மொழிப்போராட்ட வரலாறு, பராசக்தி படத்தின் வாழும் சாட்சி” என்றத் தலைப்பில் பொள்ளாச்சி மா. உமாபதி (திமுக) மொழிப்போர் தியாகிகள் குறித்து பல வரலாற்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார். “தீ பரவட்டும்” என்ற தலைப்பில் இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) பேரறிஞர் அண்ணா செய்த சாதனைகளையும், தமிழ்நாட்டில் அண்ணாவின் தாக்கமும், அரசியலில் சுயமரியாதை இயக்கத் தொண்டனாக அவர் செய்த செயல்களையும் பட்டியலிட்டு உரையாற்றினார். கழகத் தோழர்கள் ப. அருண் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்), கடலூர் சிவா, திராவிட மகிழன், கு.குமார், த.யாழினி, சுகந்தன் (கொளத்தூர் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர்), அசோக் , உதயா ஆகியோர் கலந்துக் கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ்12022026.

You may also like...