‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற பாஜக திட்டத்துக்கு அம்பேத்கர் தரும் பதில் இந்தியா இன்றும் ஒரே தேசமாக உருவாகவில்லை – கொளத்தூர்மணி
இந்தியா முழுவதும் ஒரே தேர்தல்’என்ற முழக்கத்தை முன்வைக்கிறது பாஜக. ஆனால் இந்தியா இன்னும் ஒரே தேசமாக இருக்கவில்லை என்கிறார் அம்பேத்கர் என்று உறுதியாக கூறியதோடு வடநாடு பிற்போக்கானது, தென்னாடு முற்போக்கானது என்றும் தெளிவுப்படுத்தியிருப்பதை கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார். சூலூரில் 30.0.2023 அன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. அம்பேத்கர் 1955இல் ‘மொழி வழி மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள்’ என்ற ஒரு புத்தகம் எழுதுகிறார். அதுவரைக்கும் ஒன்றுபட்ட இந்தியா, இந்தி ஆட்சி மொழி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த அம்பேத்கர், அந்த நூலில் இந்த நாட்டில் எவ்வளவு வேறுபாடுகள் உள்ளன, கன்னியாகுமரியில் இருப்பவர்களுக்கு டெல்லி வெளிநாடு போல் தெரிகிறது. எனவே இந்தியாவிற்கு இரண்டாவது தலைநகரம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று எழுதுகிறார். இரண்டாவது தலைநகரமாக ஹைதராபாத்தை பரிந்துரைக்கிறார். எப்போதும் இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகர் வேண்டும், ஆங்கிலேயர் இருந்தபோது இரண்டாவது தலைநகரமாக சிம்லா இருந்தது; முகலாயர்...