Category: பெரியார் முழக்கம்

பார்ப்பன “தீண்டாமை”

பார்ப்பன “தீண்டாமை”

வைணவ கோயில்களில் அர்ச்சகர் உரிமை மட்டும் அல்ல, பிரசாதம் விற்கும் உரிமையும் ‘வைணவ பிராமணர்களுக்கு’ மட்டுமே உண்டு என்று உயர் நீதிமன்றத்தில் பார்ப்பனர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். காஞ்சிபுரம் தேவநாதன் கோயிலில் பிரசாத விற்பனை நிலையம் அமைக்க இந்து அறநிலையத்துறை ஏல அறிவிப்பை வெளியிட்டது. அந்த ஏலத்தில் அனைத்து பிரிவுகளும் பங்கேற்க முடியும் என்று அறிவித்திருந்தது. இதற்கு வைணவ ‘பிராமணர்களுக்கு’ மட்டுமே உரிமை என்றும் ஏனைய சமூகத்தினர் இதில் பங்கேற்க உரிமை கிடையாது என்றும் அறநிலையத்துறை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த பார்ப்பனர் வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார். காலம் காலமாக பார்ப்பன வைணவர்களுக்கு மட்டுமே இந்த விற்பனை நிலையத்திற்கு உரிமை வழங்கப்பட்டு வருகிறது என்றும், பழக்க வழக்கங்களை மாற்றக்கூடாது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் கடந்த ஆண்டில் வைணவ பார்ப்பனர் அல்லாத ஒருவருக்கு உரிமை வழங்கப்பட்டதால் பெருமாள் வளாகத்தின் புனிதம் மீறப்பட்டது என்றும், பிரசாதத்தில் பெருமாளுக்கு எதிராக...

1947 ஆகஸ்ட் 15-ல் ஆர்.எஸ்.எஸ் ஏற்றிய ஹிட்லர் கொடி

1947 ஆகஸ்ட் 15-ல் ஆர்.எஸ்.எஸ் ஏற்றிய ஹிட்லர் கொடி

தேசத்துக்கு மாபெரும் தொண்டாற்றிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ் என்கிறார் மோடி. உலகின் மிகப்பெரும் தொண்டு நிறுவனம் என்றும் புகழாரம் சூட்டியது, சுதந்திரதின கொடியேற்று விழாவில். ஆகஸ்ட் 15 சுதந்திர நாளை பெரியார் ‘துக்க நாள்’ என்று வெளிப்படையாகவே அறிவித்தார். அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து பார்ப்பனிய பனியாவுக்கு கைமாற்றப்பட்டது என்றார். இதற்காக பார்ப்பனியம் பெரியாரை ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்தியது. பார்ப்பன தேசத்துக்கு நான் விரோதி தான் என்று பெரியார் அறிவித்தார். ஆனால் தேச பக்தி வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ் சுதந்திர தினத்தில் என்ன செய்தது? பிரிட்டிசார் ஆட்சி உரிமையைத் தங்களிடம் விட்டுச் செல்வார்கள் என்று அவர்கள் கனவில் மிதந்து கொண்டு இருந்தார்கள், வெளிப்படையாக சில இடங்களில் பேசினார்கள். இஸ்லாமிய வெறுப்பைக் கடுமையாக கண்டித்த காந்தியையும் நேருவையையும் தங்கள் எதிரிகளாக கருதினார்கள், அதற்காக காந்தியின் உயிரையே விலையாக கேட்டவர்கள், ஆகஸ்டு 15 சுதந்திர நாளில் அவர்கள் என்ன செய்தார்கள்? “இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில்...

மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!” என்ற தலைப்பில் கழகத் தோழர்கள் ஜாதி எதிர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் செய்தி விவரம்: சென்னை: ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தெருமுனைக் கூட்டம் 12.08.2025 அன்று திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் நடைபெற்றது. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), தலைமையில், லட்சுமணன் முன்னிலையில் நடைபெற்றது. சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்களை தோழர்களை வெகுவாக ஈர்த்தது. ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நெல்லை கவின் படத்திறப்பு நடைபெற்றது. வழக்கறிஞர் சாரநாத் (மாவட்டச் செயலாளர் -விசிக) ஜாதி எதிர்ப்புப் பரப்புரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கழக செயல்பாடுகளை பாராட்டி உரை நிகழ்த்தினார். நிறைவாக சிறப்புரையாற்றிய பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் தேவை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இரண்டாம் நாள்: 13.08.2025 அன்று சென்னை சி.என்.கே சாலை...

ஈரோட்டில் ஜாதிமறுப்பு இணையர்கள் ஒன்றுகூடல்;  மாவட்டக் கழகம் முடிவு

ஈரோட்டில் ஜாதிமறுப்பு இணையர்கள் ஒன்றுகூடல்; மாவட்டக் கழகம் முடிவு

ஈரோடு தெற்கு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 10.8.25 அன்று ஞாயிற்றுக்கிழமை, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு மதிமுக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். எழிலன்( மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஈரோட்டில் ஜாதி மறுப்பு இணையர்களின் ஒன்று கூடல் நிகழ்வை முழு நாள் நிகழ்வாக நடத்துவது என்றும், தமிழ்நாடு முழுவதும் இருந்து ஜாதி மறுப்பு இணையர்களை அணிதிரட்டுவது என்றும், சிறப்பு அழைப்பாளர்களாக தலைவர் பொதுச் செயலாளர் உள்ளிட்டோரை அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கிருஷ்ணன், குமார், ஆசிரியர் சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கார்மேகம், நல்லதம்பி, சசிக்குமார் போதி சத்துவா, விருதுநகர் செந்தில், வீரப்பன்சத்திரம் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். * 10.08.2025 அன்று கழக செயல்பாடுகளை இணையத்தில் தொடர்ந்து கவனித்து வந்த தோழர் ந.கெளரி சங்கர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்....

ஆணவப் படுகொலை சட்டம் கோரி பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலை சட்டம் கோரி பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும், நெல்லை கவின் படுகொலை செய்தவர்கள் அனைவரின் மீதும் கடுமையான தண்டனையை நிறைவேற்ற கோரியும் கண்டன‌ ஆர்பாட்டம் பொள்ளாச்சி மாவட்டக் கழகம் சார்பில் 6.8.2025 அன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தோழர் யாழ் வெள்ளியங்கிரி தலைமையில் நடைபெற்றது. சபரிகிரி வரவேற்புரையாற்றினார். மாரிமுத்து (தி.க), சண்முகவேல் பிரபாகரன் (திஇதபே), தமிழ் குமரன் (ஆதித்தமிழர் பேரவை), வழக்குரைஞர் சேதுபதி (தமிழ் தன்னுரிமை மீட்பு இயக்கம்), மாரிமுத்து (மவிமு), தமிழ் பிரபாகரன் (மே17), மற்றும் கழகத் தோழர்கள் ரூபா, ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இலக்கியா நன்றியுரை ஆற்றினார். பெரியார்முழக்கம்இதழ்14082025

சுயமரியாதைக்காக கருப்புச் சட்டை ஏந்திய ‘கீழப்பாலையூர்’ (13)

சுயமரியாதைக்காக கருப்புச் சட்டை ஏந்திய ‘கீழப்பாலையூர்’ (13)

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். கீழப்பாலையூர் வரலாறு இது. ராஜராஜன் காலத்தில் சமணப்பள்ளியைக் கொண்டிருந்த ஊர், தஞ்சை பெரிய கோயிலின் தென்புறக் கருவறைச் சுவற்றில் பெரிய நெல் களம் குறித்த வரலாற்றுக் குறிப்பு என திருவாரூரில் உள்ள கீழப்பாலையூருக்கு வரலாற்றுப் பெருமிதங்கள் ஏராளம் சொல்லப்படுகின்றன. ஆனால், டெல்டா பகுதியில் நிலவிய கொடூரமான ஜாதிய- பண்ணை அடிமைத் தனத்திற்குத் தப்பாத பகுதி என்ற வரலாறு பதிவாகவில்லை. சுற்றியிருந்த சுமார் 50 கிராமங்களிலும் நிலமும் ஆதிக்கமும் விரல் விட்டு எண்ணக்கூடிய பார்ப்பனர்கள் வசம்தான் இருந்தன. ராமசுப்ரமணிய ஐயர், சேஷாத்ரி ஐயர் போன்றோரிடம்தான் கீழப்பாலையூர் மண்ணும் மக்களும் சிக்குண்டு இருந்தனர். அக்ரஹாரத் தெருவுக்குள் ஆடு, மாடுகள் நுழையலாம். ஆனால், ஐயர் வயலில் கூலியாட்களாக இருந்த தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்துவிடக்கூடாது. பிற்படுத்தப்பட்டவர்கள் ஆடு,...

இந்தியாவின் முதல் நாத்திகர் மாநாடு  – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(10)

இந்தியாவின் முதல் நாத்திகர் மாநாடு – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(10)

நம் நாட்டு வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத புதுமையானதொரு மாநாடு சென்னை எழும்பூரில் அமைந்த ‘ஒயிட்ஸ் மெமோரியல் ஹால்’ என்ற மண்டபத்தில் 31-12-1933 அன்று வெற்றியாக நடந்தேறியிருக்கிறது. நாஸ்திகர் மகாநாடு என்று அழைக்கப்பட்ட அம்மாநாட்டின் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை விரிவாகப் ‘புரட்சி’ ஏடு தந்தது. நாடெங்கிலுமிருந்து கணக்கற்ற எண்ணிக்கையில் மக்கள் வந்து கலந்து கொண்டார்கள். குறிப்பாக, படிப்பறிவு பெற்ற நிறையப் பெண் வீராங்கனைகள் மாநாட்டில் பங்கேற்ற செய்தியைப் படிக்கும்போது பெருமையாக இருக்கின்றது. இம்மாநாட்டில் கருத்துரைகள் ஆற்றிய சான்றோர்தம் சுவையான சில சொற்பொழிவுகள் படிப்பவர் எவருக்கும் உணர்ச்சியூட்டும் என்பதில் அய்யமில்லை. வரவேற்புரை நிகழ்த்திய சி.கே. குப்புசாமியின் கருத்துரை ஒவ்வொருவருக்கும் சிந்தனை விருந்தாகும். “நாஸ்திகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து சென்னை மாகாணத்தில் முதன் முதலாக மாகாண நாஸ்திகர் மகாநாட்டைக் கூட்டியிருக்கிறோம். இதிலிருந்து உலகத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பாமர மக்களுக்கும் நாஸ்திக உணர்ச்சி அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாஸ்திகம் என்றால் என்ன? சர்வசக்தி, சமகுணம், தயாளகுணம், ஜீவகாருண்யம்,...

மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

தமிழ்நாடு அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் அது மிகவும் அவசியம். ஆனால் ஆணவக் கொலை தடுப்புச் சட்டங்கள் கொண்டு வருவதோடு ஜாதி எதிர்ப்பு இயக்கங்களின் கடமைகள் முடிந்து விடக்கூடாது. ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினரை ஜாதி மறுப்பாளராக மாற்ற வேண்டும். பெரியார் இயக்கம் ஜாதி ஒழிப்புக்காக ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்தது, இட ஒதுக்கீட்டுக்காகப் போராடியது. இந்த சட்டப் போராட்டங்கள் மிகவும் தேவை. அதே நேரத்தில் பெரியார் ஒவ்வொரு கூட்டத்திலும் ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை மக்களிடம் பேசினார், எழுதினார், ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தினார். இட ஒதுக்கீடு உரிமைச் சட்டங்கள் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டங்கள் என்ற சட்டப் போராட்டங்களோடு சமுதாயத்தில் ஜாதி ஒழிப்புக்கான இயக்கங்களை நடத்த வேண்டும். “மடியட்டும் ஜாதி படுகொலைகள்” என்ற தலைப்பில் 7.08.2025 பெரியார் முழக்கம் வெளியிட்டுள்ள முதல்...

பெரியார் முழக்கத்துக்கு பாராட்டு

பெரியார் முழக்கத்துக்கு பாராட்டு

“பெரியார் மண்” என்ற தலைப்பில் பெரியார் தொண்டர்கள் சாதனை குறித்து “முரசொலியில்” ர.பிரகாசு எழுதி வரும் கட்டுரைத் தொடரை “பெரியார் முழக்கம்” தொடர்ந்து வெளியிட்டு வருவது மகிழ்ச்சி தருகிறது. பெரியார் தொண்டர்கள் கிராமங்களில் நடத்தியப் புரட்சிகளை படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது. எதிர்ப்புகளில் எதிர்நீச்சல் போட்டு அவர்கள் போட்டுத் தந்த பாதைகளில்தான் நாம் இன்றைக்கு எளிதாகப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். கரடுமுரடான பாதைகளில் அவர்கள் நடந்தார்கள். நாம் நெடுஞ்சாலையில் வாகனத்தில் வசதியாக பயணிக்கிறோம். 3-ம் பக்கத்தில் “கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை” கட்டுரைகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. மதவெறிக்கு பலியான பகுத்தறிவாளர்களின் பட்டியலை ரிவோல்ட் வெளியிட்டுள்ளதை பெரியார் முழக்கம் வெளியிட்டுள்ளது மிகவும் சிறப்பு. பெரியார் நடத்திய இதழ்கள் 1930ஆம் ஆண்டிலேயே எவ்வளவு அறிவு செறிவோடு வெளிவந்திருக்கிறது என்பது வியக்க வைக்கிறது. அதே கட்டுரயில் “நான் தூக்கு மேடையில் நின்று கொண்டு பரிசுத்த நாத்திகன் என்று கூப்பாடு போட்டு சொல்வேன்” என்ற பெரியார் பேச்சை...

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு கழகம் ஆதரவு

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு கழகம் ஆதரவு

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களின் பதிவு: “வேறு எந்தப் பிரிவினரின் போராட்டத்தையும்விட தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு முன்னுரிமை தர வேண்டியதுதான் சமூக நீதி அரசின் முதன்மையான கடமையாகும்”. சென்னையில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அவர்கள் தங்களின் வேலை உத்தரவாதத்திற்கும், ஊதியம் குறைக்கப்படக்கூடாது என்பதற்கும் போராடுகிறார்கள். பேச்சுவார்த்தை என்ற பெயரில், போராட்டத்தை உடைப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன. மழை வெள்ளம் வரும்போதும், புயல் வீசும்போதும் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் சுமை, தூய்மைப் பணியாளர்கள் உழைப்பின் மீதுதான் விழுந்து கிடக்கிறது. வெள்ளத்தால் சென்னை நகரம் பாதிக்கப்பட்டபோது, தூய்மைப் பணியாளர்கள்தான் சென்னையை மீட்டெடுத்தார்கள். அதற்காக தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு பாராட்டு விருந்து அளித்து மதிப்புத்தொகை வழங்கியதையும் நினைவுபடுத்த வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடி பள்ளிகளில் படித்த மாணவர்களை உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் திட்டங்களை அமல்படுத்துகிற தமிழ்நாடு அரசு, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏன் இழுத்தடிக்க வேண்டும்? அறிவுப்பணிக்கு உயர் ஊதியம்;...

ஓட்டுத் திருட்டுகள்

ஓட்டுத் திருட்டுகள்

“தேர்தல் ஜனநாயகத்தின் முதலாளிகள் வாக்காளர்கள்” என்று சொல்லப்படுவது உண்டு. இப்போது வாக்காளர்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பறித்துக் கொண்டுவிட்டது. இதுதான் ‘ இந்துத்துவ ஜனநாயகம்’. தேர்தல் ஆணையம் நடத்திய ‘ஓட்டுத் திருட்டுகளை’ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி. வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்று அந்த எந்திரத்தை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற பொறியாளரே அமெரிக்காவிலிருந்து ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார். இப்போது ராகுல் காந்தி தேர்தல் ஆணையமே போலி வாக்காளர்களை உருவாக்கி மோசடி செய்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் மகாதேவபுரா என்ற சட்டசபை தொகுதியை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அதில் நடந்துள்ள போலி வாக்காளர் மோசடிகளை ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார். தேர்தல் ஆணையம் தொடர்ந்து மோசடிகளை செய்து வருகிறது. மகாராஷ்டிராவில் 2024 ஏப்ரலில் நடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை அடுத்த 9 மாதங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில்...

நீதிபதியின் திமிர்ப் பேச்சு  தலைமை நீதிபதி கண்டனம்

நீதிபதியின் திமிர்ப் பேச்சு தலைமை நீதிபதி கண்டனம்

ஜே.பி. ப்ர்திவாலா குஜராத் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது வழக்கு ஒன்றில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான மோசமான கருத்துக்களை கூறினார். ‘பட்டேல்’ சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடிய ஹர்திக் பட்டேல் மீது தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கு இந்த நீதிபதிக்கு முன் 2015 டிசம்பரில் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த நாட்டை சீரழிப்பது எவை என்று என்னிடம் கேட்டால் ஒன்று இட ஒதுக்கீடு; மற்றொன்று ஊழல் என்று கூறுவேன்” என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். அப்போது 58 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தனர். தீர்மானம் மாநிலங்களவையில் தாக்கல் செய்ததை அறிந்து அடுத்த சிலமணி நேரங்களிலேயே குஜராத் மாநில பாஜக ஆட்சி நீதிபதியை அவசரமாக காப்பாற்றுவதற்கு முன் வந்தது. நீதிபதியின் முன் ஒரு மனுவை தாக்கல் செய்து அவர் இட ஒதுக்கீடு பற்றிய கருத்தை நீதிமன்ற குறிப்பேடுகளிருந்து...

வருவாய்த்துறையின் அதிரடி நடவடிக்கை தீண்டாமைச் சுவர் இடிப்பு

வருவாய்த்துறையின் அதிரடி நடவடிக்கை தீண்டாமைச் சுவர் இடிப்பு

கரூர் மாவட்டம் முத்தலம்பட்டி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை தீண்டாமைச் சுவர் ஒன்று இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் வாழும் இடைநிலைச் ஜாதிகளான தொட்டிய நாயக்கர் என்ற சமூகத்தினர், அருந்ததியர் சமூக மக்கள் தங்கள் பகுதிக்குள் வர விடாமல் தடுப்பதற்காக இந்த தடுப்புச் சுவரை அரசு புறம்போக்கு நிலத்தில் எழுப்பி இருந்தனர். மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த சுவர் எழுப்பப்பட்டது. அருந்ததியர் சமூகத்தினர் தங்கள் மாரியம்மன் திருவிழாவை கொண்டாடுவதற்கு மேடை அமைப்பதற்கும்- அரசு புறம்போக்கு நிலத்தில் கழிப்பறை ஒன்றை கட்டுவதற்கும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருந்ததியினர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த சுவரை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்றும் அரசு நிலத்தில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருக்கிறது என்றும் தொட்டிய நாயக்கர் சமூக தலைவருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தனர். இது தீண்டாமைச் சுவர் அல்ல; சமூகவிரோதிகள் உள்ளே...

கிராமத் தீண்டாமைகளைத் தடுக்க கண்காணிப்புக் குழு

கிராமத் தீண்டாமைகளைத் தடுக்க கண்காணிப்புக் குழு

ஜாதிக் கட்டமைப்புகளில் இருந்து கிராமங்கள் விடுபடவில்லை.இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்துள்ள ஒரு தீர்ப்பைக் குறிப்பிட வேண்டும். தென்காசி மாவட்டத்தில் தலைவன் கோட்டை என்ற கிராமத்தில் தலித் மக்கள் வாழும் பகுதிக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்படவில்லை.பிற ஜாதியினர் வாழ்கிற பகுதிகளில் இருந்துதான் அவர்கள் தண்ணீர் எடுக்க வேண்டியிருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை வந்த நிலையில் தண்ணீர் எடுக்க தலித் மக்களுக்கு ஆதிக்க ஜாதியினர் தடை போட்டனர். தண்ணீர் பற்றாக்குறை வரும்போது ஜாதி பாகுபாடும் வந்து விடுகிறது.‌ நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. நீதிமன்றம் அரசுக்கு விளக்கம் கேட்டதற்கு பிறகு, அரசு நிர்வாகம் தலித் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கியது. இப்போது பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். `நீதிபதி ஆர்.என். மஞ்சுளா’ தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானது. “பொது வளங்கள் சரிசமமாக பாகுபாடு இன்றி வழங்கப்பட வேண்டும் என்பதைத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சுட்டிக்காட்டுகிறது” என்பதை...

மேச்சேரியில் “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கம்!

மேச்சேரியில் “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கம்!

சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் 03.08.2025 ஞாயிறு மேச்சேரி VGP மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிவ சண்முகம் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கதுரை, வெற்றிமுருகன், திவாகர் , மற்றும் ஏற்காடு தேவபிரகாஷ் (சேலம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரபாகரன்( மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜின் பகுத்தறிவு பாடல்களைப் பாடினார். U2Brutus தோழர்கள் மைனர் மற்றும் சத்யாவின் அரசியல் அரட்டை நடைபெற்றது. “மீண்டும் நடிகர்” எனும் தலைப்பில் பேரலை மில்டன், “மாடல்ல மற்றை யவை” எனும் தலைப்பில் U2Brutus மைனர், “நாக்பூர் ஏஜெண்டுகள்” எனும் தலைப்பில் இந்திரகுமார் தேரடி அவர்களும் கருத்துரை ஆற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்) நன்றி கூறினார்....

வேலுபிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

வேலுபிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் 27.07.25 அன்று இயக்குனர் வேலு பிரபாகரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இனமுரசு சத்யராஜ் சிறப்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தபெதிக பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், ப்ளூ சட்டை மாறன், இயக்குனர் கதிர், திக பொருளாளர் வீ.குமரேசன், பாடகர் அந்தோணி தாசன், இயக்குனர் அகரன் உள்ளிட்ட பலரும் இயக்குனர் வேலு பிரபாகரனுடனான தங்கள் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். இரா. உமாபதி (திவிக சென்னை மாவட்டச் செயலாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) , ம.கி.எட்வின் பிரபாகரன் (தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபி (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் ஒருங்கிணைத்தார். பெரியார்முழக்கம்இதழ்07082025

ஆணவப் படுகொலையை கண்டித்து  கோவையில் தெருமுனைக் கூட்டம்

ஆணவப் படுகொலையை கண்டித்து கோவையில் தெருமுனைக் கூட்டம்

“மடியட்டும் ஆணவப் படுகொலைகள் மனிதம் நம் அடையாளம் – ஜாதி அவமானம்” என்ற தலைப்பில் மாதவன் தலைமையில் கோவை மாவட்டக் கழகம் சார்பில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு மாலை 5 மணிக்கு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தெருமுனைக் கூட்டத்தில் ஜாதி ஆணவப் படுகொலைகள் உள்ளிட்ட ஜாதிய கொடுமைகளுக்கு காரணமானவற்றைப் பற்றி மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது. வழக்கறிஞர் வெண்மணி(திராவிட தமிழர் கட்சி), இளவேனில் (தமிழ்ப் புலிகள் கட்சி) மலரவன்(புஇமு), கா.சு.நாகராசு (திராவிட இயக்க தமிழர் பேரவை), மு.இனியவன் (மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார்) ப.மாணிக்கம் (விசிக) உள்ளிட்ட தோழமை அமைப்பு தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார்முழக்கம்இதழ்07082025

விநாயகர் ஊர்வலத்தில்   விதிமீறல்களை தடுக்க மனு

விநாயகர் ஊர்வலத்தில் விதிமீறல்களை தடுக்க மனு

கோவை: விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சியாக நீதிமன்ற ஆணைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கோவை மாநகர வடக்கு துணை காவல் ஆணையர், கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் ஜீலை 28 அன்று மனு அளிக்கப்பட்டது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பதிவு அஞ்சலில் மனு அனுப்பப்பட்டது. தோழர்கள் நிர்மல் குமார், வெங்கடேசன், கிருஷ்ணன், ஸ்டாலின், மாதவன், நவீன் கலந்து கொண்டனர். கடலூர்: விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சியாக நீதிமன்ற ஆணைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 1.8.25 அன்று பெரியார் சிவா தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. வழக்கறிஞர் இள.புகழேந்தி( திமுகவின் தேர்தல் பணி குழு...

அக்ரஹாரத் தடையை தகர்த்த கொக்கூர்

அக்ரஹாரத் தடையை தகர்த்த கொக்கூர்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். கொக்கூர் வரலாறு இது. கடந்த இதழின் தொடர்ச்சி… கொக்கூர் கிராமத்திற்குள் அக்ரஹாரம் வழியாகப் பெரியார் நுழைந்தபோது, அந்தத் தெருவில் பிறர் நுழையக் கூடாது என தடுக்கப்பட்டிருந்த தென்னை மரத் தடுப்புகள் தகர்த்து வீசப்பட்டன. பண்ணையார் ஐயர் குடும்பம் கதவைத் தாழிட்டுக்கொண்டது. மேல் சட்டையோடு, காலில் செருப்பு அணிந்துகொண்டு அக்ரஹாரத் தெருவுக்குள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் நுழைந்ததைக் கண்டு கொக்கூர் மக்கள் சுயமரியாதை உணர்வு பெற்றனர். அங்கிருந்து அரை கிலோ மீட்டருக்கு அப்பால்தான் கூட்டம் நடைபெற்றது. ஆனால் பெரியாரின் பேச்சை ஐயர் கேட்க வேண்டுமென்று அக்ரஹார முனையில் ஒலிபெருக்கி அமைத்திருந்தனர். 3 மணி நேரம் பெரியார் பேசினார். கொக்கூர் மக்களின் மூளைகளில் இடப்பட்டி ருந்த அடிமை விலங்கு அறுபட்டது. அதன்பின்னர்தான் எல்லோரும் கல்வி...

சட்டத்தில் `கடவுள்’ சொல்லை இணைக்க மறுத்த அம்பேத்கர்

சட்டத்தில் `கடவுள்’ சொல்லை இணைக்க மறுத்த அம்பேத்கர்

“அம்பேத்கரின் முகப்புரை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரகசிய வரலாறு” எனும் தலைப்பில் ஆகாஷ் சிங் ரத்தோ எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை ‘எதிர் வெளியீடு’ வெளியிட்டுள்ளது. இந்த நூலை திறனாய்வு செய்து ம.கி எட்வின் பிரபாகரன் ஜூலை 12.07.2025 அன்று நடைபெற்ற 28வது நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை (preamble) எழுதியது யார்? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, ஆய்வாளர் ஆகாஷ் சிங் ரத்தோர் ஆங்கிலத்தில் எழுதிய Ambedkar’s preamble: A secret history of the constitution of India என்ற புத்தகத்தை, எழுத்தாளர் ச.வின்சென்ட் தமிழில் மொழிபெயர்த்து, “அம்பேத்கரின் முகப்புரை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இரகசிய வரலாறு” எனும் பெயரில் நூலாகக் கொண்டு வந்துள்ளார். சந்தர்ப்பசாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, வேறு யாரும் இதனை எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பதை நிறுவுவதற்கான தரவுகளையும் மேற்கோள்களையும் தொகுத்தளித்து, அதன்மூலம் அம்பேத்கர்தான் முகப்புரையை எழுதினார் என்பதை...

திருப்பூரில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

திருப்பூரில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

மனிதம் நமதுஅடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை திருப்பூர் மாவட்டக் கழகம் நடத்தவுள்ளது. 12.08.2025 செவ்வாய்க்கிழமை: அருள்புரம் மற்றும் பொங்கலூர் பகுதியில் மாலையில் நடைபெறும். 13.08.2025 புதன்கிழமை: பல்லடம் பகுதியிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறும். பெரியார்முழக்கம்இதழ்07082025.

உபா சட்டம் தேவையா?

உபா சட்டம் தேவையா?

2018-2022 வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) சட்டத்தில் 8947 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வெறும் 252 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலாக அளித்த பதிலில், 2018 – 1,421 பேர் 2019 – 1,948 பேர் 2020 – 1,321 பேர் 2021 – 1,621 பேர் 2022 – 2,636 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 2,633 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 2,162 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 252 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதைப் போல, உபா சட்டத்தை வைத்து சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களை ஒடுக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இச்சட்டத்தின் தேவையை கேள்விக்குள்ளாக்குகிறது இந்த புள்ளி விவரங்கள். பெரியார்முழக்கம்இதழ்07082025

ஆணவப் படுகொலை சட்டம்  வரட்டும்; ஆனாலும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை தொடர வேண்டும்!

ஆணவப் படுகொலை சட்டம் வரட்டும்; ஆனாலும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை தொடர வேண்டும்!

தடைச்சட்டம் என்று ஒன்று இல்லாத காரணத்தினால் தான், ஆணவப் படுகொலைகள் நடக்கிறதா? வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்தும் கூட ஜாதியக் கொடுமைகள் நின்று விட்டதா? சட்டங்களும் வரட்டும்! ஆனால் ஆணவப் படுகொலைகளுக்கு ஊற்று எது? ஜாதிய கட்டமைப்புதான்! ஜாதியக் கட்டமைப்பை மீறக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? இல்லை. சமையலறை பெண்களுக்கே உரிமையானது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? இல்லை. சட்டங்கள் ஏதும் இல்லாமலே, இவைகள் கண்டிப்பாக வாழ்க்கையின் சட்டங்களானது எப்படி? ஆணவக் கொலையில் முதல் குற்றவாளியாக கூண்டில் ஏற்ற வேண்டியது ஜாதியையும் ஜாதி வெறியையும் தான்! பிறப்பின் அடிப்படையில் விலையில்லாமல் கிடைக்கிறது ஜாதி.‌ அந்த விலையில்லா பொருளுக்கு மதத்தின் முதலீடுகள் இருக்கின்றன.‌இவை புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமலே கிடைக்கின்ற முதலீடுகள்! மனுதர்மம், பகவத்கீதை, சாஸ்திரம், ஆகமம், வேதம், ராமாயணம், இதிகாசங்கள், சம்பிரதாயங்களில் இருந்து இந்த முதலீடுகள் வருகின்றன! பிறப்பின் அடிப்படையில் விலையில்லாமல் கிடைக்கும் ஜாதியை இந்த முதலீடுகளே‌ இயக்கிக் கொண்டிருக்கின்றன....

ஆணவப் படுகொலை: முகநூல் குழப்பவாதிகளுக்கு பதில்

ஆணவப் படுகொலை: முகநூல் குழப்பவாதிகளுக்கு பதில்

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க முதன்மைப் பணியாக நாம் கையில் எடுக்க வேண்டியது ஜாதியின் கேடுகள் குறித்தும், ஜாதி ஒழிப்பு குறித்தும் மக்களிடம் பரப்புரை செய்வதா? அல்லது ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் மட்டும் நிறைவேற்றினால் போதும் என்று கோரிக்கை வைத்து விட்டு, ஜாதி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தாமல் ஒதுங்கிகொள்வதா? ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் வேண்டாம் என்றும் அப்படி ஒரு சட்டம் தேவையில்லை என்றும் யாரும் இங்கு சொல்லவில்லை. ஆனால் அதே சமயம் அதைவிட முக்கியமானது ஜாதிய மனநிலையில் இருக்கும் இந்த சமூகத்தில் நேரடியாக மக்களிடம் சென்று ஜாதி என்கிற கட்டமைப்பு எந்த அளவிற்கு சமூகத்தை தனிமனிதர்களை மனிதத் தன்மையற்றவர்களாக மாற்றி வைத்திருக்கிறது? அது சக மனிதர்களை எவ்வாறு பிளவுபடுத்தி இருக்கிறது? சக மனிதன் மீது எந்த காரணமும் இன்றி வெறுப்பை விதைத்து இருக்கிறது? சக மனிதனை தன்னைவிட கீழானவன் என்று நம்பவைத்து இருக்கிறது? என்பதை எடுத்துச் சொல்லி அந்த...

மனிதம்-அடையாளம்; ஜாதி- அவமானம் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

மனிதம்-அடையாளம்; ஜாதி- அவமானம் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்

ஜாதிப் பெருமைக்குள் புதையுண்டு கிடக்கும் ஜாதியவாதிகளே! உங்களிடம் சில கேள்விகள்: ஜாதி என்ற அடையாளம் நாம் தேர்வு செய்ததா? படிப்பு, தொழில், வாழ்க்கையைத் தான் நாம் தேர்வு செய்கிறோம். அதேபோல் ஜாதியை நாம் தேர்வு செய்கிறோமா? ஒரு காலத்தில் நமது மூதாதையர்கள் பிறந்த ஜாதிக்கு ஒதுக்கப்பட்ட தொழிலை மட்டும் செய்து வந்தார்கள் இப்போது அந்த தொழில்களை நாம் செய்கிறோமா? இல்லை. முடி வெட்டுவது, துணி துவைப்பது, செருப்பு தைப்பது, மலம் அள்ளுவது, செக்கு ஆட்டுவதும் ஜாதிக்கான தொழில் என்ற நிலையை இப்போது நாம் பின்பற்றுகிறோமா? ஜாதியை உதறி விட்டு வேறு தொழில்களுக்கு மாறிவிட்டோமா இல்லையா? இவற்றில் எல்லாம் ஜாதியைக் கைவிடலாம்; ஆனால் திருமணத்தில் மட்டும் கட்டாயமாக ஜாதியைப் பின்பற்ற வேண்டுமா? மேல் ஜாதி, கீழ் ஜாதி, தீண்டப்படாத ஜாதி என்று நம்மைப் பிரித்தார்கள். கெட்ட ஜாதி, நல்ல ஜாதி என்று இழிவுபடுத்தினார்கள்; நான் ஏன் கீழ் ஜாதி என்று ஜாதியை எதிர்த்து...

20 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகை

20 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகை

கழக செயல் வீரர்கள் கண்ணன் மற்றும் குமார் இருவரையும் விபத்தில் கழகம் பறிகொடுத்தது. பெரியார் நினைவு நாள் சுவரொட்டிகளை ஒட்ட சென்றபோது களப்பணியில் அந்த தோழர்கள் உயிரிழத்தார்கள். உயிர் நீத்த டிசம்பர் 2005 ஆண்டு 24ம் நாள் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சுவரொட்டி அடித்து அவரது நினைவைப் போற்றி வருகிறது. இவர்களுக்கான காப்பீட்டுத் தொகைக்கான வழக்கு 20 ஆண்டு காலத்திற்கு மேல் நடந்தது. இப்போது அந்த தீர்ப்பு தோழர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பெரியார் நினைவு நாள் சுவரொட்டி சென்றபோது அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று மோதி தோழர்களின் உயிரைப் பறித்தது. இதற்காக காப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை வழக்கறிஞர் குமாரதேவன் நடத்தினார். நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக வழக்கு நிலுவையிலே இருந்தது. பிறகு முதலமைச்சர் தனிப்...

இனப்படுகொலையின் பேரவலம் கருத்தரங்கம்

இனப்படுகொலையின் பேரவலம் கருத்தரங்கம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சர்பிடி தியாகராயர் அரங்கில் ஈழ மண்ணில் செம்மணி மனிதப் புதைக்குழி இனப்படுகொலையின் பேரவலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. செம்மணி மனிதப் புதைகுழி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் தியாகு (பொதுச்செயலாளர் தமிழ் தேசிய விடுதலை இயக்கம்), கோவை இராமகிருட்டிணன் ( பொதுச் செயலாளர் தபெதிக), சி. மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) வேல்முருகன் (சட்டமன்ற உறுப்பினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்) ஆகியோர் உரையாற்றினார். பெரியார்முழக்கம்இதழ்31072025

“கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி”  நூல் வெளியீடு!

“கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி” நூல் வெளியீடு!

தாய் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் டேவிட் பெரியார் தலைமையில் “கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி” நூல் சென்னை வடபழனியில் 26.07.25 அன்று வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகள் நடத்திய தரைவழித் தாக்குதல் பற்றி விவரிக்கிறது இந்நூல். லோகு அய்யப்பன் (புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்), மல்லை சத்யா, இயக்குனர் அமீர், தமிழ் சாக்ரடீஸ், ஊடகவியலாளர் இந்திரகுமார், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, இளைய கம்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இரவி பாரதி (காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்) தொகுத்து வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். தோழர் தியாகு சிறப்புப் பிரதியினை பெற்றுக் கொண்டார். தோழமை அமைப்புத் தோழர்கள் மனிதி செல்வி உட்பட பலர் கலந்து கொண்டு நூலை வாங்கி சென்றனர். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் தபசிகுமரன் (தலைமை நிலையச் செயலாளர்), வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்), இ.ரா.உமாபதி (மாவட்டச் செயலாளர்), எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), இராவணன் (தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்),...

வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 29வது கூட்டம் அன்பு தனசேகர் (கழக தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்வை மாவட்டச் செயலாளர் இ.ரா.உமாபதி ஒருங்கிணைத்தார். மறைந்த பகுத்தறிவு இயக்குனர் வேலு பிரபாகரன் படத்தைத் திறந்து வைத்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். நினைவேந்தல் உரையாற்றிய திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கொள்கையில் சமரசமற்ற கடவுள் மறுப்பாளரின் பணிகளையும், வேலு பிரபாகரன் உடன் பயணித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். வேலுபிரபாகரன் இயக்கிய `கடவுள்’ படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), ம.கி.எட்வின் பிரபாகரன்(தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்), ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), சேத்துபட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வட சென்னை அமைப்பாளர்), ஆ.வ வேலு (வட சென்னை ஒருங்கிணைப்பாளர்), கோபி(திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), சூர்யா(திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் ஊடக நண்பர்கள்...

சேலத்தில் கழக சார்பில் தொடர் கூட்டங்கள்

சேலத்தில் கழக சார்பில் தொடர் கூட்டங்கள்

சேலம் மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்” தெருமுனைக் கூட்டம் 12.07.2025 அன்று அம்மாபேட்டை ரவுண்டானா அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் தலைமை வகித்தார். பரமேஷ் வரவேற்புரையாற்றினார். ஆத்தூர் நகரத் தலைவர் மகேந்திரன் அவர்களின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகரத் தலைவர் பாலு, ஆத்தூர் நகரத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சேலம் மாநகரப் பொருளாளர் பிரபு, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன் ஆகியோரின் அரசியல் நையாண்டி நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக சேலம் மாநகரச் செயலாளர் தோழர் ஆனந்தி நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. கலந்துகொண்டோர்: அவினேஷ், சுதர்சன், தோழர் ராஜசேகர், பாலாஜி, சித்தார்த்தன், தமிழ் இனியன்ஆகியோர். கூட்டத்திற்கு அம்மாப்பேட்டை பகுதி வாழ் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. பெண்கள், மாணவர்கள் என அனைவரும் ஆர்வமுடன்...

கொக்கூருக்கு குதிரை வண்டியில் வந்த பெரியார்

கொக்கூருக்கு குதிரை வண்டியில் வந்த பெரியார்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். கொக்கூர் என்ற ஊரின் வரலாறு இது.. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் கொக்கூர். 1940-கள் வரை பார்ப்பனிய மேலாதிக்கம் கொடூரமாக கோலோச்சியது, அந்தக் கிராமத்தில். கிருஷ்ணமூர்த்தி ஐயரின் மகன் குஞ்சிதபாதம் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் மொத்த ஊரும். பார்ப்பனர்களைத் தவிர, வேறு யாரும் மேல் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது, பள்ளிக்கூடம் செல்லக்கூடாது, முக்கிய சாலைகளைப் பயன்படுத்தக் கூடாது. தோளில் துண்டு, தலைப்பாகை கட்டவும் அனுமதி கிடையாது, ஊர்க்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. பார்ப்பனர்களின் வயல்களில்தான் வேலை செய்ய வேண்டும். ஐயர் தரும் மிகச்சொற்ப நெல்லுக்காக, அக்ரஹாரத்துக்கு வெளியே தென்னை மரத் தடுப்புக்குப் பின்னால் வரிசையில் கையைக் கட்டிக்கொண்டு நிற்க வேண்டும். ஐயரின் ஆட்கள் தரும்...

“மனிதம் நமது அடையாளம்!  ஜாதி அவமானம்!”

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி அவமானம்!”

சமூகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஜாதியப் படுகொலைகளை (ஆணவ கொலைகள்) தடுக்க சட்டம் மட்டும் போதாது மக்களின் மன உணர்வுகளில் இருந்து அதை நீக்க வேண்டும். நாகரீக சமூகமாக இந்த தமிழ் சமுதாயத்தை மாற்றி அமைக்கப் போராடியவர் பெரியார். அவர் தொடங்கிய இயக்கம் தொடர்ந்து ஜாதி எதிர்ப்பு, சடங்கு மறுப்பு கருத்தியலை வலிமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது. அதன் விளைவாக இன்று பல்வேறு மாற்றங்கள் வந்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் யாரும் பெயருக்குப் பின்னால் ஜாதி போடும் வழக்கத்தைப் பின்பற்றுவது இல்லை. ஆகவே அதன் தொடர்ச்சியாக திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு தலைப்புகளில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களை கள ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து SC/ST ஆணையத்திடம் மனு அளித்தது. தற்போது இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்து உள்ளது. ஜாதிவெறி சிந்தனைகளில் இருந்து இளைஞர்களை மீட்க சென்னை மாவட்டக் கழகம் “மனிதம் நமது அடையாளம்! ஜாதி...

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்குத் துணைநிற்போம்!

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்குத் துணைநிற்போம்!

கழகத் தலைவர் அறிக்கை! “பாஜக ஆட்சியில் நீதித்துறை தனது தன்னாட்சியை இழந்து வருவதோடு ஆளுகின்ற அரசின் ஓர் உறுப்பாக தொடர்ந்து மாறி வருகிறது.ஆர்எஸ்எஸ் சார்பு நீதிபதிகள் வெகுவாகப் பதவியில் அமர்த்தும் போக்கும் கூடுதலாகியுள்ளது. நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் அவர்களை விமர்சித்து உச்ச நீதிமன்றத்திற்கு ஆதாரங்களுடன் கொண்டு சென்றதற்காக,மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்குரைஞருமான தோழர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜி.ஆர்.சாமிநாதன். மேலும் தோழர் வாஞ்சிநாதன் பேசியதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார். மதுரையைக் குறிவைத்து இந்து பார்ப்பனியக் கூட்டம் ஒரு கலவரத் திட்டத்துடன் மதுரையின் மத நல்லிணக்க மரபை சிதைக்க களமிறங்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ, ஜனநாயக , மதச்சார்பின்மை மரபுகளைக் காக்கத் தொடர்ந்து தோழரும் வழக்குரைஞருமான வாஞ்சிநாதன் போராடி வருகிறார். வைதீக, சநாதன காலமல்ல இது. சீசருடைய...

பெரியார் நடத்திய `ரிவோல்ட்’ வெளியிட்ட பட்டியல் மதவெறிக்கு உயிர்ப் பலியானவர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (9)

பெரியார் நடத்திய `ரிவோல்ட்’ வெளியிட்ட பட்டியல் மதவெறிக்கு உயிர்ப் பலியானவர்கள் கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை (9)

கடவுள், மதத்தை எதிர்த்ததால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் பட்டியலை பெரியார் நடத்திய `ரிவோல்ட்’ ஆங்கில வார ஏடு, 7-7-1929 இதழில் வெளியிட்டது. அதன் விவரம். புதிய சிந்தனைகளை வெளியிட்டமைக்காகப் பண்டைய கிரேக்க அறிஞர் பித்தகோரஸ் பழமை வெறியர்களால் பாய்ந்து துரத்தப்பட்டு, கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். இளைஞர்களை அரசு ஏற்றுக் கொண்ட `கடவுளர்’ களிடமிருந்து பிரித்தார் என்று குற்றஞ்சுமத்தப்பட்டு, நஞ்சு தரப்பட்டு சாகடிக்கப்பட்டார் சாக்ரட்டீஸ். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் மத நிறுவனத்தைத் துணிவாக எதிர்த்த ப்ரெஷ்யாவின் ஆர்னால்டு தூக்கு மரத்தில் தொங்கவிடப்பட்டார். மத நிறுவனத்தின் தீயபண்புகளை 15ஆம் நூற்றாண்டில் எதிர்த்த இத்தாலியச் சீர்திருத்தக்காரர் சவோன ரோலாவை தேடிப் பிடித்து உயிருடன் எரித்தனர். 16-ஆம் நூற்றாண்டில் அறிவு விடுதலை வேண்டிப் போராடிய பாவியாவின் உல்ரிச் வான் ஹட்டன் உடைமைகள் அனைத்தையும் இழந்து விட்ட நிலையில் தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அடிமட்டப் பணியாளர் படையில் சேருமாறு நேரிட்டது. அதே நூற்றாண்டில் சீர்திருத்தக்காரர் தாமஸ்முவென்ஸர்...

இராயப்பேட்டையை  சேர்ந்த கழக ஆதரவாளர் தோழர் சபரி கழகத் தலைமை அலுவலகத்துக்கு ரூ.85000 மதிப்புள்ள இரண்டு குளிர்சாதனப்  பெட்டி -களை  நன்கொடையாக  வழங்கினார். தோழரை பாராட்டி கழகத் தலைவர் கொளத்தூர் மணி கழக வெளியீடுகளை வழங்கினார்.

இராயப்பேட்டையை சேர்ந்த கழக ஆதரவாளர் தோழர் சபரி கழகத் தலைமை அலுவலகத்துக்கு ரூ.85000 மதிப்புள்ள இரண்டு குளிர்சாதனப் பெட்டி -களை நன்கொடையாக வழங்கினார். தோழரை பாராட்டி கழகத் தலைவர் கொளத்தூர் மணி கழக வெளியீடுகளை வழங்கினார்.

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் அவரது மகன் இளம்பரிதியின் 12வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.12000 கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கினார். கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி குழுவில் இணைந்த தோழர் இளங்கோ (சிவகங்கை மாவட்டம்) ரூ.4000, தோழர் தாமோதரன் ரூ.1000 கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கினர். மேலும் குழுவில் இணைந்து செயல்பட உள்ளனர். கழகத் தோழர் அஜித் ரூ.1000 வழங்கினார். பெரியார்முழக்கம்இதழ்31072025

“விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல நீதித்துறை”

“விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல நீதித்துறை”

நீதித்துறை மீதான விமர்சனங்கள் வைக்கப்படும்போதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு என்கிற “பூச்சாண்டி” காட்டப்படுவது வழக்கமாகி வருகிறது. நீதிமன்றங்களும், தீர்ப்புகளும், நீதிபதிகளின் நடவடிக்கைகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையா என்றால் இல்லை…! அரசமைப்பு சட்ட சரத்து 19 (1) (a) படி இந்திய குடிமக்களுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது. இதன் பொருள், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனது கருத்துக்களை எந்த தடையும் இன்றி வெளிப்படுத்தவும், சுதந்திரமாகப் பேசவும் உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமை வரம்புகள் இல்லாமல் இல்லை. சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த உரிமை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படலாம். அதாவது சரத்து 19 (2) படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம் அல்லது ஒழுக்கம் அல்லது நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக பேச்சு மற்றும் கருத்துரிமை கட்டுப்படுத்தப்படலாம். இதில் நீதிமன்ற அவமதிப்பு என்பதைத்தான் நீதிபதி திரு.ஜி.ஆர்...

காசாவில் இனப்படுகொலை

காசாவில் இனப்படுகொலை

ஒவ்வொரு நாளும் காசாவில் இருந்து வரும் செய்திகள் உள்ளத்தை உலுக்குகிறது. இந்த படுகொலை எப்போது முடிவுக்கு வரும்? மனிதம் செத்துவிட்டதா? என்ற கேள்விகள் துளைத்தெடுக்கின்றன. நடப்பது இனப்படுகொலைதான் என்று நார்வேயில் உள்ள சர்வதேச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. தென்னாப்பிரிக்கா நாடு தொடர்ந்த இந்த வழக்கில் இந்த முடிவுக்கு வருவதற்கு சர்வதேச நீதிமன்றம் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீன போராளி குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து, இஸ்ரேலினுடைய தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதுவரை 51,821 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவார். சடலங்களை அடக்கம் செய்வதற்குக் கூட இடமில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. யுத்தம் தொடங்கியபோதே காசாவில் வாழ்ந்த மக்கள் 23 லட்சம் பேர். இதில் 90% பேர் இருப்பிடங்களை பலமுறை மாற்றிக்கொண்டு உயிர் வாழ்கின்ற கட்டாயத்திற்கு உள்ளானார்கள். 46 சதுர கிலோமீட்டர் பகுதிக்குள் இவர்கள் முடக்கப்பட்டுள்ளார்கள்....

ஜாதி ஆணவப் படுகொலை; திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்!

ஜாதி ஆணவப் படுகொலை; திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்!

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஜாதி ஆதிக்க மனநிலையில் இருந்து அம்மன நிலையில் உள்ளோர் வெளியில் வரவேண்டும் என கோரிக்கை! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ் (27) கவினை 27.7.25 அன்று பாளையங்கோட்டையில் சுஜித் என்பவர் வெட்டி படுகொலை செய்கிறார். கவின் பட்டியல் சமூகத்தையும் சுஜித் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் சார்ந்தவர்கள். சுஜித்தின் சகோதரியை கவின் காதலித்த காரணத்தினால் கவினை சுஜித் ஜாதி ஆணவப் படுகொலை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. ஜாதி ஆணவப் படுகொலை செய்த சுஜித் தானாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. கவின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டு அவர்கள் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.இந்நிலையில்...

`இந்தியா டுடே’ ஆய்வறிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

`இந்தியா டுடே’ ஆய்வறிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத் திறன் மேன்மையை ஐ.நா. அமைப்பும், ஒன்றிய அரசின் நிறுவனங்களும் பாராட்டியுள்ளன. தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் முன்னணி மாநிலமாக திகழ்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2021 மே மாதம் 7ம் நாள் பொறுப்பேற்றது முதல் நிறைவேற்றி வரும் புதுமையான, புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு மிகக் குறுகிய காலத்தில் பல வெற்றிகளை பெற்று சாதனைகள் புரிந்து தேசிய அளவில் முதல் இடம் என்னும் பெருமையை நிலைநாட்டியுள்ளது. ‘இந்தியா டூடே ஆங்கில இதழ்’ ஒன்றின் இயக்குநர் கூறுகையில், “இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளை கணித்ததாகவும், அதில் ஒட்டு மொத்த செயல் திறனிலும் சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சர், “இந்த கடிதத்தைப் படித்தபோது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; இது தனிப்பட்ட எனக்கு கிடைத்த பெருமை அல்ல, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த பெருமையாகும். தமிழ்நாட்டிற்கு...

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக 15-07-2025 மாலை 4 மணி அளவில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் மாநகரச் செயலாளர் மாதவன் முன்னிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கல்விக் கண் திறந்த காமராசர் அவர்களின் 123 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உரிமைப் பாதுகாப்புப் பரப்புரைப் பயணம் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலும், அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகிலும் காமராஜர் செய்த அரும்பணிகள் குறித்து மக்களிடத்தில் எடுத்துரைக்கும் விதமாக தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்வில் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத்தலைவர் முகில் ராசு, ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செல்வன்,மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, சரஸ்வதி,தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மற்றும் கழகத் தோழர்கள் ராஜசிங்கம்,ஸ் ரீஜா, ஆத்துப்பாளையம் மதன், முத்து...

மதப் பண்டிகைகளை மறுக்கும் மேலமெஞ்ஞானபுரம்!

மதப் பண்டிகைகளை மறுக்கும் மேலமெஞ்ஞானபுரம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். மேலமெஞ்ஞானபுரம் என்ற ஊரின் வரலாறு இது.. 1967, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த ஆண்டு. தமிழ்நாட்டு இளைஞர்களைத் தன்னகத்தே வாரி அணைத்து வைத்திருந்த தி.மு.கழகத்தின் சூழலுக்குத் தப்பாமல், தங்களையும் இணைத்திருந்த உடன்பிறப்புகள் சீ.தங்கத்துரை, சீ.டேவிட் செல்லத்துரை. தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள மேலமெஞ்ஞானபுரம் இவர்களின் சொந்த ஊர். மாணவப் பருவத்திலேயே மதத்தைக் கடந்து, பகுத்தறிவுக் கொள்கைகளின் மீது நாட்டம் கொண்டிருந்தனர். தி.மு.க. கூட்டங்களில் பங்கேற்பதும், தேர்தல் பிரச்சார நாடகங்களில் நடிப்பதும், சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்வதும் இவர்களின் பணி. கழகம் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில், சட்டமன்ற உறுப்பினர் ஆலடி அருணா அவர்களின் பரிந்துரையால் தங்கத்துரைக்கு மின்சார வாரியத்தில் வேலை. தி.மு.க. உருவாகி அப்போது 20 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், பெரியாரின்...

செயற்கை உயிர் வந்து விட்டது கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(8)     – விடுதலை இராசேந்திரன்

செயற்கை உயிர் வந்து விட்டது கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(8) – விடுதலை இராசேந்திரன்

‘இது இறைவன் கொடுத்த உடல்’ என்ற நம்பிக்கையை பொது சமூகம் ஒரளவு புறக்கணித்து விட்டது என்றே கூறலாம். குழந்தை பிறப்புக்கு இறைவனே காரணம் என்ற கூற்று வாழ்வியலில் முறியடிக்கப்பட்டு விட்டது. குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை அரசாங்கங்கள் செயல்படுத்தி வருகின்றன. அதில் வெற்றியும் பெற்று விட்டன. கருத்தடைச் சாதனங்களை கடவுள் நம்பிக்கையாளர்களே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். குழந்தை இல்லாதவர்கள் பரிகார பூஜைகளை மட்டுமே நடத்தி வந்தனர். இப்போது கருத்தரிப்பு மருத்துவ மய்யங்கள் ஊருக்கு ஊர் வந்துவிட்டன. சினை முட்டை, விந்துக்களை இணைத்து அறிவியல் முறையில் கருவை உருவாக்குகிறார்கள். கருவை சுமக்க வாடகை பெண்களும் வந்து விட்டனர். கருத்தடைத் திட்டத்தை பெரியார் தீவிரமாக ஆதரித்தார். ‘கர்ப ஆட்சி’ என்ற நூலையும் அவரே வெளியிட்டார். குடும்ப வருமானம், சிக்கன வாழ்க்கை என்று குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை பொருளியல் பார்வையில் பலரும் அணுகினார்கள். ஆனால் பெரியார் பார்வை இதில் மாறுபட்டது. பெண்ணடிமைக்கு முக்கிய...

பார்ப்பன மெகா ஊழல்

பார்ப்பன மெகா ஊழல்

சந்தா கோச்சார் ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதியானது. சந்தா கோச்சார் ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதியானது. ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார். வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின்படி சந்தா கோச் சார் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தனது கணவர் தீபக் கோச் சார் மூலம் வீடியோகான் குழுமத்திலிருந்து ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது நிரூபணமாகியுள்ளது. இந்த லஞ்ச பணம் தீபக் கோச்சாரின் என்ஆர்பிஎல் நிறுவனத்துக்கு மடைமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்கு விதிகளை மீறி ரூ.300 கோடி கடன் வழங்க அனுமதி அளித் ததற்காக சந்தா கோச்சாருக்கு அவரது கணவர் மூலம் லஞ்சப் பணத்தை வீடியோகான் குழுமம் வழங்கியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பிஎம்எல்ஏ சட்ட பிரிவு 50-ன்...

உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடுகள்           கனிமொழி எம்பி கேள்வி

உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடுகள் கனிமொழி எம்பி கேள்வி

ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளில் நில­வும் தீண்­டாமை உள்­ளிட்ட பாகு­பா­டு­கள் குறித்து தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், திமுக நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி நேற்று (21-–07–2025) எழுத்­துப் பூர்­வ­மான கேள்­வி­களை எழுப்­பி­னார். “உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளில் சமத்­து­வத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கில், யு.ஜி.சி. விதி­மு­றை­கள் 2012 இன் படி ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளில் Equal Opportunity Cells எனப்­ப­டும் சம வாய்ப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளதா? அப்­ப­டி­யா­னால், அதன் விவ­ரங்­கள் மற்­றும் அத்­த­கைய பிரி­வு­களை உரு­வாக்­கிய மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் எண்­ணிக்கை விவ­ரங்­கள் என்ன? இல்­லை­யென்­றால், சம வாய்ப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­ப­டா­த­தற்­கான கார­ணங்­கள் என்ன? ஒன்­றிய அர­சின் கல்­லூ­ரி-­­பல்­க­லைக்­க­ழக வளா­கங்­க­ளில் சாதி அடிப்­ப­டை­யி­லான பாகு­பாடு காட்­டப் பட்ட சம்­ப­வங்­கள் குறித்த தர­வு­களை அர­சாங்­கம் பரா­ம­ரிக்­கி­றதா? அப்­ப­டி­யா­னால், கடந்த ஐந்து ஆண்­டு­க­ளி­லும் நடப்பு ஆண்­டி­லும் ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் நடந்த இத்­த­கைய சம்­ப­வங்­க­ளின் விவ­ரங்­கள், கல்­லூரி வாரி­யாக/பல்­க­லைக்­க­ழக வாரி­யாக...

ஆர்.எஸ்.எஸ் கல்வி மாநாடு நடத்துவது ஏன்?

ஆர்.எஸ்.எஸ் கல்வி மாநாடு நடத்துவது ஏன்?

கேரள மாநிலம் காலடியில் நான்கு நாள் கல்வி மாநாடு ஜூலை 25 முதல் 28 வரை நிகழப்போகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், ஒன்றிய ஆட்சியின் உயர்கல்வி நிறுவனத் தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், இவர்களோடு ஆன்மீகம் பேசும் மதத் தலைவர்கள் இதில் பங்கேற்கப் போகிறார்கள். மாநாட்டைக் கூட்டி இருப்பது ஒன்றிய ஆட்சியா? கல்வியாளர்களா? கேரள மாநில அரசா? இல்லை. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூட்டி இருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையைத் தீவிரமாக செயல்படுத்துதல், பாரம்பரிய கல்வி முறையை முன்னெடுத்தல் என்பது பற்றி இவர்கள் ஆராயப் போகிறார்களாம். ஒன்றிய கல்வி அமைச்சகம் இந்த பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஒப்படைத்து விட்டது போலும். நாட்டை ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றுவதற்கு அடிப்படையாக கல்வியை காவிமயமாக்க வேண்டும் என்ற உறுதியான முடிவோடு முயற்சிகள் நடக்கின்றன. காந்தி கொலையில் தொடர்புடைய அமைப்பு, கலவரங்களை உருவாக்கிய அமைப்பு என்று பல விசாரணை ஆணையங்கள் உறுதிப்படுத்தி உள்ளன....

சமரசமற்ற கடவுள் மறுப்பாளர்  வேலுபிரபாகரன் முடிவெய்தினார்

சமரசமற்ற கடவுள் மறுப்பாளர் வேலுபிரபாகரன் முடிவெய்தினார்

“,சீரிய பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநர் – நடிகர் – ஒளிப்பதிவாளருமான தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் (வயது 68) இன்று 18.07.2025 விடியற்காலை மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைகிறோம். 1980-ஆம் ஆண்டில் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான வேலு பிரபாகரன்,பின்னர் இயக்குநராகவும் உருவெடுத்தவர்.இவர் இயக்கிய ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ போன்ற திரைப்படங்களில் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு – பெண்ணுரிமைக் கருத்துக்களையும், கடவுள் மறுப்பு – பகுத்தறிவுக் கொள்கைகளையும் அழுத்தமாகப் பேசி, பொதுமக்களாலும் அத்திரைபடங்களை நேசிக்கச் செய்தவர். தன்னை நாத்திகவாதி என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு, தமிழ்த் திரைத்துறையில் தவிர்க்க முடியாத இடத்தைத் தனக்கென கொண்டிருந்தது மட்டுமல்லாமல், திரைப்பட படப்பிடிப்புத் தளங்களில் கூட மூட நம்பிக்கை ஒழிப்புக் கருத்துக்களைப் பேசி,தன்னுடன் பணியாற்றும் திரைத்துறை நண்பர்களையும் பகுத்தறிவாளராக்கிய பெருமைக்குரியவர் வேலு பிரபாகரன். திரைத்துறையில் நடிகர் சத்யராஜ் போன்ற பலர் நாத்திகராகவும், பகுத்தறிவாளராகவும் அடிப்படைக் காரணியாய் இருந்தவர் வேலு பிரபாகரன். நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

படுகொலைகளின் பீடமாகிய ‘தர்மஸ்தலா’

படுகொலைகளின் பீடமாகிய ‘தர்மஸ்தலா’

கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் மஞ்சுநாதா என்ற கோயில் பாஜக எம்.பி வீரேந்திர ஹெக்டே கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான‌ நிலத்தில் 100க்கும்‌ மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாகவும், உடல்களைப் புதைத்ததாகவும், மஞ்சுநாதா கோயிலின் முன்னாள் ஊழியர் பீமா கடந்த ஜீலை 4-ம் தேதி புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தென் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் பத்தாண்டுகளாக பாலியல் வல்லுறவுகளும் படுகொலைகளும் நடந்து வருவதாக தற்போது ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது: 1995ம் ஆண்டு முதல் 2014 வரை, மஞ்சுநாதா கோவிலில் துாய்மைப் பணியாளராக வேலை செய்தேன். இந்த காலகட்டத்தில் கோயிலின் அருகில் ஓடும், நேத்ராவதி ஆற்றங்கரையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி புதைத்தேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளார். தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்று‌ விடுவதாக மிரட்டியதால் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக அவர் சொல்கிறார். குற்ற...

மானுடத்தை வாழவிடுங்கள்

மானுடத்தை வாழவிடுங்கள்

நாடார்கள், கவுண்டர்கள், முதலியார், வன்னியர்கள் என்று ஜாதிக்கொரு திருமண சேவை மையங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் இதற்கான விளம்பரங்கள் வரிசை கட்டி வருகின்றன. மக்களுக்கான சேவை மையங்கள் இப்போது மறைந்து விட்டன. ஜாதி கடந்த திருமணங்கள் என்றாலே அதை குற்றமாகப் பார்க்கிறது சமூகம். இதே ஜாதி நம்பிக்கையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டால் ஜாதி பார்க்க மாட்டார்கள். எந்த வகை இரத்தம் என்று தான் பார்ப்பார்கள். அது தனது ஜாதிக்காரர்கள் வகை இரத்தமாகத் தான் இருக்க வேண்டும் என்று பொங்கி எழ மாட்டார்கள். “எந்த ஜாதியாக இருந்தால் என்ன நல்ல மனசு இருக்கிறதே” என்று மாலை போட்டு பாராட்டுவார்கள். தன் வீட்டுப் பெண்ணுக்கு திருமணமாகி மணமுறிவு ஏற்பட்டு இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடும்போது மட்டும், ஜாதி தடையில்லை. பையன் நல்லவனாக இருந்தால் போதும் என்று ஜாதி மறுப்புக்கு வந்து விடுவார்கள். இந்தியாவில் ஜாதி அடையாளம் இப்படி தடுமாறுகிறது. இப்போது ‘குடிமகன்’...

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் மோடி அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 7.7.2025 அன்று மதுரையில் திருவள்ளுவர் சிலை அருகில் கிழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமாட்சி பாண்டி தலைமையில், சத்தியமூர்த்தி முன்னிலையில், வாசுகி அவர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். சிறப்புரையாக கழகத்தின் மாவட்ட காப்பாளர் தளபதி தொடக்க உரையாற்றினார். தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை இடம் மாறுதலுக்கு உட்படுத்திய ஒன்றிய மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமர்நாத் ராமகிருஷ்ணனை தமிழக தொல்லியல் துறை தலைவராக தேர்ந்தெடுத்து ஆய்வினை சிறப்புடன் நடத்த வழி செய்யவும், தமிழ்நாடு அரசை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழர் நாகரிகத்தை ‘பாரதீய’ நாகரிகம் என்று குழப்பும் சங்கி அடிமை மா.பா பாண்டியராஜனையும் – பாரதிய ஜனதா சங்கிகளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தோழமை அமைப்பு தோழர்கள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்தனர். பசும்பொன் பாண்டியன் (அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்...