ஆளுநர் பதவியை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
ஆளுநர் பதவியை ஒழித்துக்கட்ட வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பில் பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் இணைந்து, டிச-15,2025, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் உள்ளிட்ட பல இயக்கத் தலைவர்கள் சிறப்புரையாற்றினர். இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), ம.கி.எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), வீரா, அசோக் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்று கண்டனம் தெரிவித்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15012026
