சேரன்மாதேவி குருகுலத்தில் பணிபுரிந்தாரா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (10)- கொளத்தூர் மணி
தோழர் ஜீவா அவர்களின் காலத்தில் அவரது கருத்துக்களை நேரடியாக அறிந்து எழுதப்பட்டுள்ள தோழர் இஸ்மத் பாஷா, தோழர் கே.பாலதண்டாயுதம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் பல செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் முதன்மையானது சிராவயல் காந்தி ஆசிரமம் (பள்ளி வாசகசாலை) பற்றியது; அதாவது இந்த ஆசிரமத்தை தோழர் ஜீவானந்தம்தான் உருவாக்கினார் என்ற ஒரு அதீதமாக எழுப்பபட்டுள்ள மாய பிம்பம். தோழர் அ.ப.பாலையன் தொகுப்பாசிரியராக இருந்து தொகுத்த “ஜீவா தேடிய மானுடம்” என்ற நூலின் நான்காம் கட்டுரையான ‘பெரியார் ஜீவா – உறவும் பிரிவும்’ என்ற கட்டுரையில் “ நீண்ட நாட்கள் நடைபெற்ற கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்திலும் ஜீவா பங்கேற்கிறார் (1924) ”, (நூலில் 1924 என கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டு இருந்தாலும் 1924 ஏப்ரல் முதல் 1925 டிசம்பர் வரை போராட்டம் நடந்தது) என்றும் “சேரன்மாதேவி குருகுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜீவா, அங்கு நடைபெற்ற அநீதிக்கு எதிராக போராட்டத்தில் ஈவெரா, வரதராஜர்...
