பெரியாரின் இங்கிலாந்து பயணத்தில் நடந்தது என்ன?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் படத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். பெரியார் உலகமயமாகி வருகிறார் என்று பெருமிதத்துடன் முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெரியார் 16. 6 .1932 தேதியிலிருந்து 6.7.1932 வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தார். பயணத்திற்கு உடன் இருந்து உதவியவர் கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலா. இவருடன் தொடர்பு கொள்ள அறிமுக கடிதம் கொடுத்தவர்; பெர்லின் நகரில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர் டெட். இங்கிலாந்து பயண விவரங்களை பெரியார் தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அதில் 28 .6.1932 தேதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் ஸ்கார்பியோவில் 9 கருப்பின இளைஞர்கள் மீது “ரேப்” குற்றம் சாட்டி தூக்குத் தண்டனை விதித்தது அமெரிக்க அரசு. உலகம் முழுதும் தூக்குத் தண்டனைக்கு எதிராக கண்டனங்கள் வெடித்தன. இங்கிலாந்தில் நடந்த இந்த கண்டனக் கூட்டத்தில் பெரியாரும் கலந்து கொண்டார். தூக்குத் தண்டனைக்கு உள்ளான இரண்டு...
