‘சிட்டிசன்’ அடையாளம் ஏன் உறுத்துகிறது?
`இந்தியாவின் குடிமகன்/குடிமகள்’ என்பதற்கான சான்றாகவே கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வந்தது. வெளியுறவுத் துறை அமைச்சகம் இப்போது அதை மறுக்கிறது; அது ஒரு பயண ஆவணம் தான் என்று கூறுகிறது. அதேபோல் ஆதார் அடையாளமும் குடிமகன் அல்லது குடிமகள் என்பதற்கான சான்று இல்லை என்றும் கூறுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் குடிமகன் அல்லது குடிமகள் என்றே சட்டம் கூறுகிறது. ஆங்கிலத்தில் `சிட்டிசன்’என்று அழைக்கப்படும் இந்தச் சொல்லுக்கு ஜாதி, மத அடையாளங்கள் பாலின அடையாளங்கள் எதுவும் இல்லை. இதுதான் சங் பரிவாரங்களை உறுத்துகிறது. இந்தியாவில் வாழும் எவரும் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு தான் வாழ வேண்டுமே தவிர, அதை மறுக்கும் `சிட்டிசன்’ என்ற அடையாளத்தை ஏற்க முடியாது என்பதுதான் அவர்களின் கொள்கை. இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தும் குடிமக்கள் என்ற அடையாளத்தை அகற்றிவிட்டு இந்துராஷ்டிரத்துக்கான சனாதன அடையாளங்களை நோக்கி நாட்டை நகர்த்துகிறது சங்பரிவார். அரசியல்...
