விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலம் கழகத் தலைவர் அறிக்கை
விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை ! அன்பார்ந்த தோழர்களே! “முருகன் முகமூடியோடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களைக் கொள்ளை அடிக்க சிலர் எடுத்த முயற்சி, பல வகைகளிலும், பல தரப்பிலும் நிகழ்ந்த அசைவுகள், நகர்வுகள், எச்சரிக்கை மணிகள் என விழிப்போடு இருந்து நா(வீ)ட்டாரால் தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால், ‘மயானக் கொள்ளை’ என்பதைப் போல மக்களையும் உடன் அழைத்துக் கொண்டு, பறைகள் முழங்க, பட்டப்பகலில், ஒலிபெருக்கிகள் அலற ஆண்டுதோறும் நடக்கும் அடுத்த ‘மனங்கள் கொள்ளை’ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் நாள் பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில் நடக்க உள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் களை, இரசாயன சாயப் பூச்சோடு இப்போதே ஜோராக உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டார்கள். மூன்று அங்குல விட்டமுள்ள...
