மனோஜ்குமார் – அஞ்சலி இணையேற்பு விழா!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தந்தை பெரியார் பிரியாணி கடை உரிமையாளர் கழகத் தோழர். கி.சுப்பிரமணியன்- சாவித்திரி ஆகியோரின் மகன் மனோஜ்குமார் அவர்களுக்கும், திருச்சி மாவட்டம், மணப்பாறை பண்ணாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த வை.சுப்பிரமணி – பார்வதி ஆகியோரின் மகள் அஞ்சலி அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 16.11.2025- அன்று, ஞாயிற்றுக்கிழமை 11 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் சீதா திருமண மண்டபம் முதன்மை அரங்கத்தில் நடைபெற்றது.
தி.மு.க. நெசவாளர் அணி மாநிலச் செயலாளர் சிந்து இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் க.நாத்திக ஜோதி வரவேற்புரையாற்றினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையுரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, கழகப் பொருளாளர். துரைசாமி, தலைமைக் கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வக்குமார், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், திராவிடர் விடுதலைக் கட்சி தலைவர் அன்பு மகேசு, அதிமுக நகரச் செயலாளர் பிரினியோ கணேஷ், எஸ்டிபிஅய் கோபிசெட்டிபாளையம் தொகுதிச் செயலாளர் சர்ஜித் ரகுமான், தி.க. பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம், உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். மாநாடுபோல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தோழர்கள், நிர்வாகிகள், மற்றும் கழகத் தோழர்கள் சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டத்திலிருந்து பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். கழக முன்னோடி அக்ரி.ஆசைத்தம்பி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மணமக்கள் சார்பில் ஈரோடு வடக்கு மாவட்ட வளர்ச்சி நிதியாக ரூ.10,000 வழங்கப்பட்டது.மதுரை, புரட்சிக் கவிஞர் பேரவை நிர்வாகி பாலசுப்பரமணியன் (நாக.பாலன்) நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் இதழ் 20112025
