Category: பெரியார் முழக்கம் 2024

வி.பி.சிங் சிலைக்கு மரியாதை!

வி.பி.சிங் சிலைக்கு மரியாதை!

சமூக நீதிக் காவலரும், முன்னாள் ஒன்றியப் பிரதமருமான வி.பி.சிங் அவர்களின் 94ஆவது பிறந்தநாளையொட்டி, சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்

தோழர் விஜயன் தந்தை நினைவேந்தல் நிகழ்வு

தோழர் விஜயன் தந்தை நினைவேந்தல் நிகழ்வு

வட சென்னை கழகத் தோழர் விஜயனின் தந்தை ஏகாம்பரம் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.06.2024 அன்று புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.. தோழர் அருள்தாஸ் தலைமையில், தட்சிணாமூர்த்தி முன்னிலையில் கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஏகாம்பரம் அவர்களின் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மேலும் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், சிபிஐ (எம்) அன்பு, விசிக தமிழ்மணி, உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். தோழர் விஜயன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி தொகுத்து வழங்கினார். பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்

“நான் எரிந்து விழுந்த ராக்கெட்”

“நான் எரிந்து விழுந்த ராக்கெட்”

ஜூன் 25, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆவது பிறந்தநாள். இந்தியாவில் முதல்முறையாக அவருக்கு சிலை அமைத்த மாநிலம் தமிழ்நாடு. திராவிட மாடல் அரசு அவருக்கு முழு உருவச்சிலையை நிறுவி தமிழ்நாடு சமூகநீதி மண் என்பதை இந்திய ஒன்றியத்திற்கே உணர்த்தியது. இந்தியாவில் எந்தவொரு வீதிக்கும் வி.பி.சிங் பெயர் சூட்டியதாக வரலாறு கிடையாது. எந்தவொரு அரசுக் கட்டடத்திற்கும் அவர் பெயரை சூட்டியது இல்லை. தமிழ்நாடு மட்டும் தான் அவருக்கு உரிய மரியாதையை வழங்கியது. வி.பி.சிங், மண்டல் அறிக்கையின் ஒரு பகுதியான அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது தான் இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போது ராமன் கோயில் பிரச்சனையை கையில் எடுத்து வி.பி.சிங் அரசை கவிழ்த்தது பாஜக. அந்த நிலையில் தமிழ்நாடு முதல்வராக இருந்த கலைஞர், வி.பி.சிங்கை தமிழ்நாட்டிற்கு அழைத்து பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி, தமிழ்நாடு உங்களின் பின்னால் நிற்கிறது என்பதை வி.பி.சிங்கிற்கு...

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க! – மருத்துவர் எஸ்.காசி

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க! – மருத்துவர் எஸ்.காசி

நீட் 2024 தேர்வு முடிவுகள், இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கடந்த வரு டங்களில் ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் மட்டுமே 720/720 மதிப்பெண் பெற்று வந்த நிலை யில், இந்த வருடம் 67 பேர் 720/720 மதிப்பெண் பெற்றுள் ளனர். தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட ‘இறுதி விடைகளுடன்’ மாணவர்கள் தனது OMR (Optical Mark Recognition Sheet) நகலை ஒப்பிட்டுப் பார்த்த போது கிடைத்த மதிப்பெண்ணுக்கும், அறிவிக்கப்பட்ட மதிப்பெண்ணுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருந்ததால், முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனையடுத்து உச்சநீதி மன்றத்திலும், பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்க ளிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களில், ‘நீட் தேர்வு மைய’ அதிகாரிகளே பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று கேள்வித்தாளைக் கசியவிட்டது, ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் தொடர்ச்சியான தேர்வு எண் கொண்ட 6 பேர் 720/720 பெற்றது, 1563...

கடலூர் மாவட்ட அமைப்பாளராக மதன்குமார் நியமனம்

கடலூர் மாவட்ட அமைப்பாளராக மதன்குமார் நியமனம்

கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், 28.5.2024 அன்று கருவேப்பிலங்குறிச்சி வசந்தம் மகாலில் மாவட்டத் தலைவர் அ.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் நா.கொளஞ்சி வரவேற்புரை யாற்றினார். மாவட்டத் தலைவர் அ.மதன்குமார், மாவட்ட துணைத் தலைவர் செ.பிரகாஷ் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், தற்போதைய சூழல் குறித்தும் உரையாற்றினார்கள். மாவட்ட அமைப்பாளர் நா.கொளஞ்சி இயக்க நிலை குறித்தும், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் ப.அறிவழகன் கழகத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும் தற்போதைய சூழல் குறித்தும் பேசினார். நிறைவாக கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் “இன்றைய அரசியல் சூழலில் பெரியார் இயக்கத்தின் தேவை, எதிர்கால செயல்பாடுகள், இயக்க தோழர்களின் செயல்பாடுகள்” குறித்து விரிவாக உரையாற்றினார்கள். நிறைவாக முத்துகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கடலூர் மாவட்டத்தில் பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டு தோழர் மதன்குமார் மாவட்ட அமைப்பாளராக நியமனம்...

தலையங்கம் – தனிச்சட்டமே தீர்வு!

தலையங்கம் – தனிச்சட்டமே தீர்வு!

திருநெல்வேலி மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மிக நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். தாக்குதலில் ஈடுபட்ட ஜாதிச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதில் விளக்கியிருக்கிறார். அத்துடன், “சமூகநீதிக் கொள்கையை தனது உயிர் மூச்சாகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பெண் கல்வி – சமஉரிமை – ஜாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பகாலம் தொட்டே ஆதரித்து வரக்கூடிய இயக்கமாகும். இதனை இந்த அவையில் உள்ள அனைவரும் அறிவார்கள்” என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஜாதிப்புனிதம் கெட்டுவிடாமல் பாதுகாப்பதில் தான் இந்து மதத்தின் பெருமை அடங்கியிருக்கிறது. அத்தகைய ஜாதிப் புனிதத்தை காக்க வேண்டிய பொறுப்பு முழுமையாக பெண்களிடமே இருக்கிறது என்கிறது மனு சாஸ்திரம். “பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள்...

பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை சமர்பிப்பு!

பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை சமர்பிப்பு!

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அரசுப் பள்ளி மாணவரை, சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டினார்கள். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவர் விரிவாக ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். பள்ளிச்சூழலில் ஜாதிய மோதல்கள், விவாதங்களைத் தவிர்க்கும் பொருட்டு பல நல்ல ஆலோசனைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு : • ‘கள்ளர் மறுசீரமைப்புப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்றவற்றை நீக்கி, அரசுப் பள்ளி என அழைக்க அரசாணை வெளியிட வேண்டும். • பள்ளிப் பெயரில் ஜாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே, புதிய பள்ளித் துவங்க அனுமதி அளிக்க...

தலைவர் பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள் தாரமங்கலம் பொதுக்கூட்டத்தில் படிவம் வழங்கினர்

தலைவர் பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள் தாரமங்கலம் பொதுக்கூட்டத்தில் படிவம் வழங்கினர்

தாரமங்கலம் நகரக் கழகத்தின் சார்பில் “குடிஅரசு இதழ் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா” பொதுக்கூட்டம் 20.06.2024 அன்று தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பவளத்தனூர் சரவணன் தலைமை தாங்கினார், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் வரவேற்புரையாற்றினார், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, குடந்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் முதல் நிகழ்வாக உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி மற்றும் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ் தொடக்கவுரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கே.ஆர்.தோப்பூர் கணேசன் நன்றி கூற கூட்டம் நிறைவு...

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது!

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது!

பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது! ஊழலில் சிக்கி கைது நடவடிக்கைக்கு ஆளானவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதா? கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்! தமிழ்நாட்டு அரசு இத்துணைவேந்தர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை! சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் பதவிக் காலம் ஜூன் மாதம் 30 தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் தனக்கு மீண்டும் பணி நீடிப்பு‌ பெற தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். இத்துணைவேந்தர் மீது தனியார் நிறுவனத்தை‌ பல்கலைக்கழகத்தில் துவங்கியது‌, பட்டியலின‌‌ மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையை‌ பின்பற்றாதது‌, தமிழ்நாடு அரசு பதிவாளரைப் பணி இடை நீக்கம் செய்யுமாறு அனுப்பிய கடிதத்திற்கு‌ மதிப்பு அளிக்காமல்‌ பதிவாளரைப் பணியில் இருந்து விடுவித்தது‌, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது‌‌ போன்ற‌ குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் ஊழல்‌ தொடர்பாக‌ கைது நடவடிக்கையையும் எடுத்து உள்ள நிலையில் அவருக்கு‌ பணி நீட்டிப்பு வழங்க முடிவு...

பழிவாங்கப்படுகிறார் அருந்ததி ராய்

பழிவாங்கப்படுகிறார் அருந்ததி ராய்

ஒன்றியத்தில் மைனாரிட்டி பாஜக அதிகாரத்துக்கு வந்தவுடனே தனது அடக்குமுறைகளை ஏவத் தொடங்கிவிட்டது. உலகப் புகழ்ப்பெற்ற எழுத்தாளரும், புக்கர் பரிசைப் பெற்றவருமான அருந்ததி ராய் மீது உஃபா சட்டத்தை ஏவுவதற்கான பணிகளை தற்போது தொடங்கிவிட்டனர். அவர் மட்டுமின்றி காஷ்மீர் பேராசிரியர் சேக் சவுகத் உசைன் என்பவர் மீதும் இந்த சட்டத்தை ஏவுவதற்கான வேலைகளை செய்துவருகின்றனர். அப்படி என்ன குற்றத்தை செய்துவிட்டார் அருந்ததிராய்… சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு 2010ஆம் ஆண்டு டெல்லியில் காஷ்மீர் விவகாரம் குறித்து நடைப்பெற்ற கருத்தரங்கம் ஒன்றில் அருந்ததி ராய் பேசினார். அப்போது காஷ்மீர் குறித்த தனது கருத்துகளை அங்கு பதிவு செய்தார். பேராசிரியர் சேக் சவுகத் உசைனும் இதே கருத்தை தான் பதிவுசெய்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக இந்த கருத்தரங்கை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சட்டவிரோதமாக அங்கு எதுவும் பேசப்படவிடவில்லை. தேச விரோத சட்டங்கள் பாயும்...

கீரனூரில் இரண்டு நாள் பயிலரங்கம்! திண்டுக்கல் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடு

கீரனூரில் இரண்டு நாள் பயிலரங்கம்! திண்டுக்கல் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடு

திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் இரண்டு நாள் பெரியாரியல் பயிலரங்கம் பழனி கீரனூரில் 11.06.2024 – 12.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. பயிலரங்கை கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் ஒருங்கிணைத்தார். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் “பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் பொருத்தப்பாடு” மற்றும் ”பெரியார் மீதான அவதூறுகளும்” என்கிற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், பெரியாரின் பெண் விடுதலை என்கிற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொருப்பாளர் சிவகாமியும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலில் (இந்திய) பார்ப்பனர்களின் பங்கு என்கிற தலைப்பில் ம. கி. எட்வின் பிரபாகரனும் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் டெலஸ்கோப் மூலம் நிலவைக் குறித்து அறியும் அறிவியல் வகுப்பினை பேராவூரணி கலைச்செல்வன் நடத்தினார். முதல்நாள் நிறைவாக் சமூக ஊடகங்கள் குறித்து முகநூல் பொறுப்பாளர் பரிமளராசனும், இணையதள பொறுப்பாளர் விஜயகுமாரும் உரை நிகழ்த்தினார்கள். இரண்டாம் மற்றும் நிறைவு நாளான 12.06.2024 அன்று திராவிடர் இயக்கத்தின்...

வர்ணமும் வர்க்கமும் பின்னிப்பிணைந்தது! – ர.பிரகாசு

வர்ணமும் வர்க்கமும் பின்னிப்பிணைந்தது! – ர.பிரகாசு

டிசம்பர் 16-ஆம் தேதி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடந்த அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கத்தின் 5-வது அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “வர்க்கமும் ஜாதியும் ஒருங்கிணைந்தது, இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஜாதியால் அடக்கப்பட்டவர்கள்தான் வர்க்க சுரண்டலுக்கும் ஆளானவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் பெரு முதலாளிகளில் உயர் ஜாதிக்காரர்களே இருக்கிறார்கள். பாம்பே டையிங் நுஸ்லி வாடியா, அசிம் பிரேம்ஜி என 2 இசுலாமியர்கள் மட்டும் தவறிப்போய் வந்துவிட்டார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் கூட சொல்லிக்கொள்ள ஆள் இல்லை. வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையிலான உறவு என்னவென்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.” என்று வர்க்கத்துக்கும் வருணத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து நீண்ட உரையாற்றினார். அந்த உரையின் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமான ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. “இந்தியாவில் வரி நீதி மற்றும் செல்வ மறுபகிர்வு: சமீபத்திய சமத்துவமின்மை மதிப்பீடுகளின் அடிப்படையில் முன்மொழிவுகள்” என்ற தலைப்பில் World Inequality Lab...

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி

அயனாவரம் மதிவாணன் – ரூ.1000/- திருச்சி சௌந்திரராசன் – ரூ.1000/- நன்கொடை அளிக்க விருப்பமுள்ளோர் கீழ்க்கண்ட ஜி-பே எண் மூலமாக செலுத்தலாம். எண் : +91 63697 76351 பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

தோழர் திலீபன் பெற்றோர் படத்திறப்பு

தோழர் திலீபன் பெற்றோர் படத்திறப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபனின் பெற்றோர் பச்சையப்பன் – தாயாரம்மாள் ஆகியோரது படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் 15.06.2024 அன்று நெமிலி பெரப்பேரி கிராமத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்விற்கு வேலூர் மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் இரா.சிவா தலைமை தாங்கினார். நிகழ்வில் பச்சையப்பன் – தாயாரம்மாள் ஆகியோரது படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவிபாரதி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். நரேன் நன்றி கூறினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன், அன்பு, மற்றும் தோழர்கள், தோழமை இயக்கத்தினர், குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

தோழர் விஜயன் தந்தை முடிவெய்தினார்!

தோழர் விஜயன் தந்தை முடிவெய்தினார்!

வட சென்னை மாவட்டத் தோழர் விஜயன் அவர்களின் தந்தை கோ. ஏகாம்பரம் அவர்கள் 11.06.2024 அன்று முடிவெய்தினார். அவரது இறுதி நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த ஏகாம்பரம் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் கொள்கை முழக்கங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, எந்தவித இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு கே.பி.பார்க் பகுதியில் நடந்தது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

வினா விடை

வினா விடை

• அயோத்தி ராமன் கோயிலுக்கு விடப்பட்ட அனைத்து விமான சேவைகளும் ரத்து – செய்தி ஆமாம், பூரி ஜெகநாதன் கோயிலுக்கு திருப்பி விடப் போகிறோம். இராமன் இனி சுத்த வேஸ்ட். • விருதுநகர் மறையூரில் உள்ள கிராமக் கோயிலில் கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே சாப்பிட்டார்கள். பெண்கள் பங்கேற்க கூடாது – செய்தி ஆமாம் நாங்கள் மாமிசம் சாப்பிடுவோம், ஆனால் பெண்களை மதிக்க மாட்டோம். இதுதான் எங்கள் நாட்டார் தெய்வப் பெருமை. • பதவியேற்பு விழாவில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் எடுத்து வணங்கினார் மோடி – செய்தி என்ன இருந்தாலும் முதல்முறையாக ஒன்றை பார்க்கும் போது உணர்ச்சிப் பொங்கத்தானே செய்யும். • நீட் தேர்வு தேவையில்லாதது – அன்புமணி ஆனால் நீட் தேர்வை திணிக்கும் மோடி ஆட்சி தேசத்திற்கு தேவையானது • சித்திரையில் குழந்தை பிறந்ததால் குடும்பத்திற்கு ஆபத்து என்பதால் பேரக் குழந்தையை கொன்ற தாத்தா கைது – செய்தி ஜாதி...

தலையங்கம் – ஜாதி ஒழிப்புப் பரப்புரையை கூர்மைப்படுத்துவோம்!

தலையங்கம் – ஜாதி ஒழிப்புப் பரப்புரையை கூர்மைப்படுத்துவோம்!

நெல்லை மாவட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்த காதல் தம்பதிக்கு பாதுகாப்பு அளித்ததற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ‘வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்’ என்ற ஜாதி வெறி அமைப்பு அடித்து நொறுக்கியுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த பந்தல் சிவா என்பவரின் தலைமையில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. இதனை பெண் வீட்டாரின் வழக்கமான எதிர்ப்பு மனநிலை என்று கருதிவிட முடியாது. பந்தல் சிவா என்பவர் ஜாதியின் பெயரால் ரவுடித்தனமும், கட்டப் பஞ்சாயத்தும் செய்துகொண்டிருக்கும் நபர். “தனது சொந்த செல்வாக்கை உயர்த்திக்கொள்ள வேண்டும், ஜாதித் திமிரை வெளிக்காட்ட வேண்டும்” என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டே இத்தாக்குதலை நடத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஆளும் கூட்டணியிலும், அகில இந்திய அளவில் பிரதான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியிலும் முக்கிய அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இத்தகைய தாக்குதலை துணிச்சலாக நடத்தியிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. ஜாதிவெறி அமைப்புகளின் சட்டவிரோத துணிச்சல் போக்கை தொடக்க நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு...

ஒரு நீதிபதியின் லவ் ஜிகாத் தீர்ப்பு

ஒரு நீதிபதியின் லவ் ஜிகாத் தீர்ப்பு

சங்கிகள் நீதிபதிகளாக அமர்ந்து கொண்டு சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து வருகிறார்கள். ம.பி மாநிலத்தில் ஒரு கூத்து நடந்திருக்கிறது. 1954ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்புத் திருமணச் சட்டத்தின் நோக்கமே ”வெவ்வேறு மதத்தினருக்கு இடையில் நிகழும் திருமணங்களை சட்டப்படி பாதுகாப்பது தான். ஆனால் இப்படி நடக்கும் திருமணங்கள் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறார் ஒரு சங்கி நீதிபதி. இந்துப் பெண்ணும், முஸ்லிம் ஆணும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடிவு செய்கிறார்கள். பெண் வீட்டாரின் கொலை மிரட்டலால் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை அணுகினார்கள் அந்த தம்பதியினர். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி, பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறியதோடு, முஸ்லீம் மத சட்டத்தின் படி உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத இந்த திருமணம் செல்லாது என்று வழக்கின் நோக்கத்திற்கு அப்பால் சென்று தீர்ப்பு வழங்குகிறார். திருமணம் என்பது கூட ஒரு பக்கம் இருக்கட்டும், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது...

ஜாதிச் சங்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! – கழகத் தலைவர் அறிக்கை

ஜாதிச் சங்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! – கழகத் தலைவர் அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ஜாதிவெறி கும்பல் தாக்கிய சம்பவத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்! தாக்குதல் நடத்திய அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாட்டு அரசிற்கு கோரிக்கை! இது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் ஜாதி மறுப்பு காதல் இணைய ர்களுக்கு பாதுகாப்பு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஜாதி அமைப்பு நடத்திவரும் பந்தல் ராஜா என்பவரின் தலைமையில் வந்த ஜாதி வெறி பிடித்த 25 பேர் கொண்ட கும்பல் காவல்துறை முன்பே அலுவலக கண்ணாடிகள் கதவுகள் பிரிட்ஜ் உள்ளிட்ட உள்ளே உள்ள பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து நொறுக்கி உள்ளார்கள். திருநெல்வெலி மாநகரம் பாளையங்கோட்டை நம்பிக்கை நகரில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மதன் குமார் (28) என்பவரும்,பெருமாள் புரத்தில் வசிக்கும்...

எச்சிலில் உருள்வது யாரால்?

எச்சிலில் உருள்வது யாரால்?

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதத்தின்படி மக்களுக்கு பகுத்தறிவூட்டி மானமும் அறிவும் மிக்க சமுதாயமாய் இந்த திராவிட சமுதாயத்தை உலகிலுள்ள பிற சமுதாயங்களுக்கு ஒப்பாக கொண்டு வர தன் வாழ்நாளெல்லாம் உழைத்த தந்தை பெரியாரின் வழியில் இயங்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் கோரிக்கை மனுவை உள்ளடக்கியதே இந்த சிறு வெளியீடு. உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் அவர்களின் மூடத்தனமான திர்ப்பை கேள்விக்குள்ளாக்கி உச்சநீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற கோரிக்கை மனுவும் அதோடு பார்ப்பனர் உண்ட எச்சில் இலையில் உருண்டு புரள்வது புண்ணியம் என்று கட்டமைத்து வைத்திருக்கும் சனாதனத்தை கேள்விக்குள்ளாக்கி மக்களை கண்ணியத்தோடு வாழ வைக்க வேண்டிய முயற்சியின் ஓர் அங்கமே இந்த வெளியீடு. 32 பக்கங்கள், 30 ரூபாய். நிமிர்வோம் வெளியீடு புத்தகம் பெற ஜி பே – வாட்ஸ் அப் 94986 56683 பெரியார் முழக்கம்...

அரசியலமைப்பின் மீது உறுதியேற்ற அமைச்சர்கள்!

அரசியலமைப்பின் மீது உறுதியேற்ற அமைச்சர்கள்!

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை ஜூன் 9ஆம் தேதி பதவியேற்றது. இசுலாமிய வெறுப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இப்போது தனது அமைச்சரவையிலும் ஒரு இசுலாமியருக்கு கூட இடம் அளிக்கவில்லை. அதுமட்டுமின்றி பாஜகவின் சார்பாக அமைச்சர்களாகி இருக்கும் அனைவரும் கடவுளின் பெயராலேயே பதவியேற்றுக் கொண்டனர். ஆனாலும் இது முழுமையான பாஜக ஆட்சி இல்லை. கூட்டணி ஆட்சிதான் என்பதை உணர்த்தும் விதமான நிகழ்வுகளும் பதவியேற்பில் நடந்திருக்கின்றன. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சியின் ஜிதன்ராம் மாஞ்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராஜிவ் ரஞ்சன், அப்னா தளம் கட்சியின் அனுப்பிரியா, தெலுங்குதேசம் கட்சியின் சந்திரசேகர், இந்தியக் குடியரசு கட்சியின் ராம்தாஸ் அத்வாலே ஆகிய 5 பேரும் அரசியலமைப்பின் மீது உறுதியேற்று ஒன்றிய அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இவர்கள் யாரும் பதவியேற்பின்போது கடவுளின் பெயரைக் குறிப்பிட்டுக்கொள்ளவில்லை. இவர்கள் அனைவருமே பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் சார்பாக...

பாஜகவின் வாரிசு அரசியலைப் பாரீர்

பாஜகவின் வாரிசு அரசியலைப் பாரீர்

திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் குறித்து பாஜகவினர் விமர்சனங்களை வைக்கும்போதெல்லாம் தவறாமல் குறிப்பிடுவது ‘வாரிசு அரசியல்’. வாரிசு அரசியலால் இக்கட்சிகள் நாட்டையே சீரழித்துவிட்டன என்பதுபோல மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால் இப்போது மோடியின் மூன்றாவது ஆட்சியிலும், அமைச்சரவையிலும் வாரிசுகளாக நிரம்பிக் கிடக்கிறார்கள். அந்த பட்டியலை ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “பல தலைமுறைகளாக போராட்டம், சேவை, தியாக உணர்வுடன் உள்ள பாரம்பரியத்தை வாரிசு அரசியல் என சொல்லும் மோடியின் 3.0 அரசில் 20 வாரிசுகள் உள்ளனர். இது மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தையே காட்டுகிறது. என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். பட்டியல் 1. எச்.டி.குமாரசாமி – முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன். 2. ஜெயந்த் சவுத்ரி – முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பேரன். 3. ராம்நாத் தாக்கூர் –...

ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்புக்கு அதிருப்தி!

ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்புக்கு அதிருப்தி!

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை ஜி.ஆர்.சாமிநாதன், பாலாஜி ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் ஜி.ஆர்.சாமிநாதன் மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் உடனே விசாரணைக்கு எடுத்ததாகக் கூறினார் ஜி.ஆர்.சாமிநாதன். அத்துடன் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தையும் ரத்து செய்தார். நீதிபதி பாலாஜி குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யாததால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது. “நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவரசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்றொரு நீதிபதி பாலாஜியுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. காவல்துறைக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளார். பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எந்தவொரு...

ஜி.ஆர்.சாமிநாதனின் சித்தாந்தப் பின்புலம் – கொளத்தூர் மணி

ஜி.ஆர்.சாமிநாதனின் சித்தாந்தப் பின்புலம் – கொளத்தூர் மணி

பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக Voice of South யூடியூப் சேனலுக்கு கழகத் தலைவர் அளித்த நேர்காணலின் தொடர்ச்சி. இந்த வழக்கு மட்டுமல்ல, பல வழக்குகளில் ஜி.ஆர்.சாமிநாதன் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. அண்மையில் சவுக்கு சங்கர் என்பவரின் வழக்கில் கூட, 15 வழக்குகளை தள்ளிவைத்துவிட்டு அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். 2 செல்வாக்கு உள்ள நபர்கள் அவருடைய அறைக்குச் சென்று, சவுக்கு சங்கர் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வற்புறுத்தினார்கள் என்றும், அது நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிரானது என்பதால் உடனடியாக விசாரித்தேன் என்றும் ஜி.ஆர்.சாமிநாதன் கூறியிருக்கிறார். அது ஒருவேளை உண்மை என்றால், தானாகவே (suo moto) அவர்கள் மீது விசாரணை நடத்தலாம் அல்லது நடவடிக்கை...

தோழர் திலீபனின் தாயார் முடிவெய்தினார்!

தோழர் திலீபனின் தாயார் முடிவெய்தினார்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் திலீபனின் தாயார் தாயாரம்மாள் 03.06.2024 திங்கட்கிழமை இரவு 11.30 மணி அளவில் முடிவெய்தினார். இறுதி நிகழ்வு இன்று 04.06.2024 மாலை 4.30 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் பெரப்பேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அம்மையாரின் உடலுக்கு வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினார்கள். அம்மையாரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம், 15.06.2024 அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழக மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை இயக்கத்தினர் பங்கேற்கின்றனர். பெரியார் முழக்கம் 13.06.2024 இதழ்

குடிஅரசு கையேடு

குடிஅரசு கையேடு

1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடு தமிழ்நாட்டின் வரலாற்றுப் போக்கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கையும் சமூகப்புரட்சிப் பார்வையில் புரிந்து கொள்ளவும்; பெரியாரின் பொதுவாழ்வில் நிகழ்ந்த இயங்கியல் மாற்றங்களையும், கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப் போக்குகளையும் வெளிப்படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும். சுயமரியாதை இயக்கம் சுடர்விட்டுப் பரவி காட்டாற்று வெள்ளம்போல் சமுதாயக் கசடுகளை அடித்துச் சிதைத்தவாறு முழு வீச்சோடு களமிறங்கியது. 1938 டிசம்பர் இறுதி நாட்களில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி என்னும் தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தின் தலைவராக இந்தி எதிர்ப்புக்காய் சிறைப்பட்டிருந்த நிலையிலேயே பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். முற்று முழுதாக வேறு திசை விலகலின்றி சமுதாய சமத்துவம், பகுத்தறிவுப் பணிகளை மட்டுமே ஆற்றிவந்த அருமையான காலகட்டம் 1925 முதல் 1938 வரையிலான காலமாகும். இந்தக் கால இடைவெளியில் ‘குடி அரசு’ ஏட்டில் வெளி வந்துள்ள பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து ‘பெரியார்...

திருமணம் தனிநபரின் உரிமை

திருமணம் தனிநபரின் உரிமை

“திருமணம் என்பதில் சம்மந்தபட்ட ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தவிர, மற்ற எவருக்கும் அதில் முடிவெடுக்க உரிமையில்லை. கட்டாயத் திருமணங்கள் ஒழிக்கப்பட்டு, மேலை நாடுகளைப் போல நம் நாட்டிலும் அவரவர் வாழ்க்கைத் துணையை அவரவரே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பேசியவர் பெரியார். பேசியதோடு மட்டுமில்லாமல் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நம்மை அடிமைப்படுத்தும் பார்ப்பன மதச் சடங்குகளில் இருந்து விடுவித்துக் கொண்டு, சுயமரியாதை உணர்வோடு இணையர்களாய் கரம் கோர்ப்பதற்கான சுயமரியாதைத் திருமண முறையையும் பெரியார் அறிமுகப்படுத்தினார். முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது 1928ஆம் ஆண்டில். இன்னும் 4 ஆண்டுகளில் சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்து ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. ஆனால் இன்றைக்கும் தமிழ்நாட்டைத் தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் இத்தகைய சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. அதனாலேயே காதல் திருமணங்களோ அல்லது ஜாதி கடந்த திருமணங்களோ...

தலையங்கம் – பாஜகவின் கலவரக் கொள்கை!

தலையங்கம் – பாஜகவின் கலவரக் கொள்கை!

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜகவே மீண்டும் உருவெடுத்திருந்தாலும், அந்த கட்சி பெற்றிருக்கிற பின்னடைவு மிகப்பெரியது. பாஜகவின் இந்த பின்னடைவு குறித்து ‘ஆர்கனைசர்’ இதழில் சுட்டிக் காட்டியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ரத்தன் சாரதா, “400 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறிக்கொண்டிருந்த பாஜக தலைவர்கள் – தொண்டர்களுக்கு கள உண்மை என்ன என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது தேர்தல் முடிவுகள். எதிர்க்கட்சிகளின் தைரியத்தை பாஜகவினர் உணராமல், கருத்துக்கணிப்பு மாயையில் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். மோடியின் புகழை மட்டும் ரசித்துக்கொண்டு, களத்தில் ஒலிக்கும் குரல்களை காது கொடுத்துக் கேட்காமல் விட்டுவிட்டனர். கூட்டணி விவகாரங்களில் எடுத்த தவறான முடிவால், பாஜகவின் மதிப்பு குறைந்துவிட்டது” என்று கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். ராமர் கோயிலை முன்வைத்து 30 ஆண்டு காலமாக பாஜக முன்னெடுத்து வந்த கலவர அரசியல் காலாவதியாகிவிட்டது. மோடி பிம்பமும் மக்களிடம் எடுபடவில்லை என்ற நிலையில், பாஜகவின் கட்டமைப்பிலேயே மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்பதே...

தரத்தைக் கெடுக்கும் தேர்வு ‘நீட்’

தரத்தைக் கெடுக்கும் தேர்வு ‘நீட்’

தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்கு வதற்காக நீட் தேர்வை கொண்டு வருவதாகக் கூறினார்கள். ஆனால் நீட் எத்தகைய தரங்கெட்ட தேர்வு என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தான் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 ஆம் தேதி அவசர அவசரமாக தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது தேசியத் தேர்வு முகமை. இத்தேர்வில் நடைபெற்றிருக்கிற மோசடிகள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் தேர்வு முடிவுகளும் வெளியிடப் பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வரவைக்கும் அளவுக்கு எக்கச்சக்கமான குளறுபடிகள் நடந்திருக்கின்றன. தேர்வு நடைபெற்ற 4750 மையங்களில், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஆறு பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளார்கள். இந்த ஆறு பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளன. எனவே இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று எவராலும்...

தமிழ்நாடு வெற்றிக்கு கழகத் தோழர்களின் பங்களிப்பு!

தமிழ்நாடு வெற்றிக்கு கழகத் தோழர்களின் பங்களிப்பு!

பாஜகவுக்கும் அதற்கு பல்லக்கு தூக்கி வந்த அதிமுகவுக்கும் சரியான பாடத்தை தமிழ்நாடு தந்துள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் வென்று இந்தியா கூட்டணியில் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்து நிற்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த வெற்றிகளுக்கு பின்னால் பல இயக்கங்களின் கடும் உழைப்பு இருந்திருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே களமிறங்கியது. பாஜக – மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு இழைத்த துரோகங்களையும், தமிழக அரசின் சாதனைகளையும் தெருமுனைக் கூட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களை எந்த பொருளாதார வசதியும் இல்லாத கழகத் தோழர்கள் உற்சாகத்துடன் நடத்திக் காட்டினார்கள். குறிப்பாக சென்னையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள் இடைவிடாமல் நடத்தப்பட்டன. கழகத் தோழர்களின் இந்த உழைப்பு இந்த வெற்றிக்கு பங்களித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு மாதத்துக்கு மேல் சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து இந்தக் கொள்கைப் பணியை செய்த தோழர்களின் உழைப்பு...

திண்டுக்கல்லில் பயிலரங்கம்

திண்டுக்கல்லில் பயிலரங்கம்

திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் இரண்டு நாள் “பெரியாரியல் பயிலரங்கம்” ஜுன் 11,12 ஆகிய தேதிகளில் பழனி – தாராபுரம் சாலையில் அமைந்துள்ள கீரனூர் S.M மினி மகாலில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் – அம்பேத்கர் – மார்க்ஸ் இன்றைய பொருத்தப்பாடு என்ற தலைப்பிலும், பெரியார் மீதான அவதூறுகளும், திராவிட இயக்கத்தின் இன்றைய தேவைகளும் என்ற தலைப்பிலும் வகுப்பு நடத்தவுள்ளார். மேலும் கழக முன்னணியினர் வகுப்பெடுக்கவுள்ளனர். பயிலரங்கில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும் மருதமூர்த்தி – 9940969803 மாவட்ட அமைப்பாளர், திண்டுக்கல் பெரியார் முழக்கம் 05.06.2024 இதழ்

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அங்கு அமர்ந்து ஒரு நூலினை வாசித்தபோது… குழந்தைகளை மையப்படுத்திய கொண்டாட்டமான கல்வி அளிப்பதில் சிறந்து விளங்கும் சுவீடன், நார்வே, டென்மார்க், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கல்வி அமைப்பைப் பார்வையிட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த வாரம் சென்றிருந்தார். அந்நாடுகளின் பள்ளிக்கூட வகுப்பறை செயல்பாடுகள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாகக் கவனித்தவர் அது தொடர்பான தகவல்களை சமூக ஊடக பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதில், 75 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சுவீடன் நாட்டில் அனைவரின் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவதை வியப்புடன் பகிர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது. படிப்புக்குப் பசி ஒருபோதும் தடைக்கல்லாக இருத்தலாகாது என்று அரசு பள்ளிக்கூடத்தில் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்து...

நீதித்துறை ஒழுங்கைக் கெடுக்கும் ஜி.ஆர்.சாமிநாதன்! உள்நோக்கத்தோடு வழங்கப்படும் தீர்ப்புகள்

நீதித்துறை ஒழுங்கைக் கெடுக்கும் ஜி.ஆர்.சாமிநாதன்! உள்நோக்கத்தோடு வழங்கப்படும் தீர்ப்புகள்

பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக Voice of South யூடியூப் சேனலுக்கு கழகத் தலைவர் அளித்த நேர்காணல். நெறியாளர்: ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளித்து உள்ளீர்களே! எதனால்? கொளத்தூர் மணி : கரூர் மாவட்டம் நெரூரில் ஒரு துறவியின் சமாதிக்கு வருகிறவர்கள் உண்ணும் எச்சில் இலைகளில் பக்தர்கள் உருளுவதை ஒரு பழக்கமாக வைத்திருந்துள்ளார்கள். அதை நீண்டகாலமான பழக்கம் என்றுசொல்லி, மனித மாண்புக்கு எதிரான ஒரு செயலை செய்துகொண்டிருந்தார்கள். இதைத் தடை செய்ய வேண்டுமென்று தலித் பாண்டியன் என்பவர் 2015ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி திரு மணிக்குமார், நீதிபதி திரு வேலுமணி ஆகிய இருவர் அடங்கிய...

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

சமூகச் செயல்பாட்டாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை தொடர்பாகப் பத்தாண்டுகளாக நடைபெற்ற வழக்கில், இருவருக்கு (மட்டும்!) ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பு எழுதிய நீதிபதி பிரபாகர் ஜாதவ், “இந்த இருவர் தங்களுக்கு இடப்பட்ட வேலையைச் செய்து முடித்தவர்கள். ஆனால், அந்தத் திட்டத்தைத் தீட்டியது வேறு யாரோ(வாக இருக்கும்)” என்று குறிப்பிட்டிருந்தார். கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா என்ன? மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்பிவந்தவர் தபோல்கர். மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றில் இருந்தெல்லாம் சமூகம் விடுபட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தானே தபோல்கரைக் குறிவைத்திருக்க வேண்டும்? அந்தச் சூத்ரதாரிகளுக்கு ஏன் தண்டனை கிடைக்கவில்லை? அடுத்தடுத்துப் படுகொலைகள்: தபோல்கரைத் தனது விரோதி என்று வெளிப்படையாக எச்சரித்தவர், வீரேந்திரசிங் சரத்சந்திர தவாதே. இந்நிலையில்தான் 2013 ஆகஸ்ட் 20 அன்று புணே நகரில் காலை நடைப்பயிற்சியின்போது மிகவும் குறுகிய இடைவெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் தபோல்கர். ஆனால், தவாதே உள்ளிட்ட மூவர் போதுமான சாட்சியங்கள் இல்லை...

தலையங்கம் – மண்ணைக் கவ்வியது மதவாதம்!

தலையங்கம் – மண்ணைக் கவ்வியது மதவாதம்!

நடைபெற்று முடிந்திருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சியின் ஆணவத்தையும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துராஷ்டிரக் கனவையும் அடித்து நொறுக்கியிருக்கிறது. “கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே இல்லை, மோடி கடவுளின் அவதாரம், கடவுளுக்கு தோல்வி ஏது” என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த இந்துத்துவவாதிகளை, ஆட்சியமைக்க அல்லல்படும் நிலைக்கு மக்கள் தள்ளியிருக்கிறார்கள். நானுறு தொகுதிகளுக்கு மேல் மிக எளிதாக வென்று விடலாம் என்று கூறியதோடு மட்டுமில்லாமல், அதுதான் மக்களின் தீர்ப்பு என்பதைப் போல பெரும்பாலான ஊடகங்களையும் பேச வைத்தது பாஜக. ஆனால் பாஜக வென்றிருப்பதோ வெறும் 240 தொகுதிகளில் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்கு எதிரான மதவாத வெறுப்புப் பேச்சை நீக்கிவிட்டால் மோடியின் பரப்புரையில் வேறெதுவுமே இருக்கவில்லை. இதன்மூலம் பெரும்பான்மை இந்துக்களை அணிதிரட்டி, அவர்களின் வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என்பது பாஜகவின் கனவு. ஆனால் மக்கள் அந்த கனவில் மண்ணைத் தூவி பாஜகவை பெரும்பான்மை இல்லாமல் செய்துவிட்டார்கள். மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டுவது என்ற சபதமெடுத்தது போல செயல்பட்டவர்கள், இப்போது பெரும்பான்மைக்கு...

சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி!

சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி!

தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி! தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? இந்தியாவை ஒற்றை சர்வாதிகார மதவெறி ஆட்சியை நோக்கி இழுத்துசென்ற பாசிச சக்திகளுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது இந்த தேர்தல் முடிவுகள். மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்ற நாடு இல்லை என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் உறுதியாக்கியிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல் உணர்த்தும் பாடங்கள் என்ன? 1. ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே வரி, ஒரே மோடி என்ற ஆணவத்திற்கு மக்கள் சம்மட்டி அடிக் கொடுத்திருக்கிறார்கள். இந்தமுறை நானூறு இடங்கள் என்று முழங்கிவந்த பாஜக, கடந்தமுறை பெற்ற இடங்களை விட 59 இடங்களை இழந்திருக்கிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது பாஜக. 2. தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தேர்தல்...

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

பெருந்துறை ஒன்றிய திவிக செயலாளர் தோழர் விசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று, மேட்டுப்புதூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விசுவின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

ஈட்டியாய் கருத்தியல் பாய்ச்சிய மடத்துக்குளம் பயிலரங்கம்!

ஈட்டியாய் கருத்தியல் பாய்ச்சிய மடத்துக்குளம் பயிலரங்கம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிலரங்கம் மடத்துக்குளம் சூர்யா மகாலில் மடத்துக்குளம் மோகன் அரங்கில் மே 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் மிக சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் மே 21ஆம் தேதி காலை 9:30க்கு தோழர்கள் அறிமுக நிகழ்ச்சி தொடர்ந்து பயிலரங்கின் நோக்கம் குறித்து எடுத்துரைத்து தோழர்களை வரவேற்று கழகத்தின் வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன் உரையாற்றினார். முதல் வகுப்பு காலை 10.00 மணிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் “வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” என்னும் தலைப்பிலும், இரண்டாவது அமர்வாக பிற்பகல் 12.15 மணிக்கு தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தலைவர் சிவகாமி “கடவுள் மறுப்பு தத்துவம்” என்னும் தலைப்பிலும், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மூன்றாவது அமர்வாக மாலை 03.15 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள் “திராவிடர் இயக்க வரலாறு” எனும் தலைப்பில் வகுப்புகள் எடுத்தனர். நான்காம் அமர்வாக இரவு 07.00...

இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்!

இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்!

காசாவில் கூடாரங்களில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனர்களின் மீது நேரடியாக குண்டு வீசி படுகொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம். குண்டு வீச்சினால் கூடாரங்களில் தீப்பிடித்ததால் அங்கி ருந்த மக்கள் உயிருடன் எரிந்து பலியாகினர். அதோடு பல குழந்தைகள் தலைசிதறி பலியான கொடூரத்தை கண்டு உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. காசா மீதான போர் மற்றும் அங்கு இஸ்ரேல் நடத்திடும் கொடூர நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் மே 24 அன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பும் கூட இஸ்ரேல் ராணுவம் ஒரு நாள் கூட போர் நடவடிக்கைகளை நிறுத்தாமல் தொடர்ந்து இனப்படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக பாலஸ்தீன மக்களின் கடைசிப் புகலிடமாக இருக்கும் ரஃபா நகரிலும் இஸ்ரேல் ராணுவம் சில வாரங்களுக்கு முன்பு தரைவழித் தாக்கு தல்களை துவங்கியது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து பாலஸ்தீன ஆதரவுக் குழுக்களும், சில ஆதரவு நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. இது ரஃபா பகுதியில்...

எச்சில் இலை தீர்ப்பு

எச்சில் இலை தீர்ப்பு

எச்சில் இலையில் அங்கபிரதிஷ்டம் செய்வது குற்றமல்ல, அது 500 ஆண்டுகால சடங்கு, மகாபாரதத்திலேயே இதுகுறித்து சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இதை யாரும் தடைசெய்யமுடியாது என்று புரட்சிகரமான தீர்ப்பை வழ்ங்கியிருக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன். நாம் வணங்கும் கடவுள் கூட பிராமண எச்சில் இலை என்று சொன்னால் அதை உடனே ஏற்றுக்கொண்டு பக்தனின் கோரிக்கையை உடனடியாக தீர்த்துவைத்துவிடுவார்கள். ஆனால் சூத்திரன் எச்சில் இலை என்றால் மட்டும் அது தெய்வ குத்தம் ஆகிவிடும். இப்படி பிராமணர்களே ஒரு சடங்கை உருவாக்கிவிட்டார்கள். அதற்கு இப்போது சட்டமும் துணையாக வந்துநிற்கிறது. பிராமணர்களுக்கும் போஜனத்திற்கும் உள்ள தொடர்புக்கு ஏராளமான வரலாறுகள் இருக்கின்றன. பிராமண போஜன விருந்து போட்டால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்று அந்த காலத்தில் பிராமண போஜனங்கள் நடந்தன. பெரியாரின் தந்தை கூட அப்படி பிராமண போஜனம் நடத்தியவர் தான். அந்த போஜன விருந்திற்கு ஒரு மோசடி பார்ப்பான் வந்தான். ஊரை ஏமாற்றிய அந்த...

மனிதமே முதலில்….

மனிதமே முதலில்….

1936ஆம் ஆண்டு சென்னை நகராட்சி உறுப்பினர் பதவிக்கு பெத்துநாயக்கன்பேட்டையில் போட்டியிட்டார் அண்ணா. அண்ணாவுக்கு ஓட்டு போட்டால் ஆலயங்களில் விளக்கு எரியாது என்று எழுதியது ஜெயபாரதம் ஏடு. அதற்கு அண்ணா, “நகரின் சேரிகள் பன்னெடுங்காலமாக இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. முதலில் அவைகளுக்கு விளக்கு போட வேண்டும். அதற்குப் பிறகு பணமும் நேரமும் மிச்சமிருந்தால் ஆலயங்களில் விளக்கு எரியும். நண்டும் நட்டுவாக்கிளியும் கடித்துத் துன்பப்படும் சேரி மக்களுக்கு விளக்கு போடாமல் ஆலயங்களுக்குப் போட்டுப் பயனில்லை” என்று பதில் கொடுத்தார். அப்படியானால் உனக்கு ஓட்டு இல்லை என்று சிலர் கூற, உங்கள் ஓட்டு எனக்குத் தேவையே இல்லை என்று கூறிவிட்டார் அண்ணா. பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

ஈரோடு வடக்கு : தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு விழா 26.05.2024 சத்தி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்விற்கு வழக்கறிஞர் தமிழரசன் தலைமை தாங்கினார். சத்தி ஒன்றிய செயலாளர் சிதம்பரம் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் செகதீஸ்வரன், மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் படிப்பகத்தை கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர் கிருட்டிணசாமி நன்றி கூறினார். இதில் கோபி, நம்பியூர், தூ.நா.பாளையம் மற்றும் சத்தி ஒன்றிய கழகத் தோழர்கள், பொதுமக்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

நீதிமன்றத்தில் மத விழா!- கழகம் புகார்

நீதிமன்றத்தில் மத விழா!- கழகம் புகார்

ஈரோட்டில் அரசுக்கு சொந்தமான ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி கற்பக விநாயகர் திருக்கோவிலில் 19.05.2024 அன்று கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது. “அரசுக்கு சொந்தமான நீதிமன்ற வளாகத்திற்குள் குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது, இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லும் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே மத வழிபாட்டு விழாவை தடுத்த வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஈரோடு மாவட்ட தலைமை நீதிபதி அவர்களிடம் 17.05.24 அன்று விண்ணப்பம் அளித்திருந்தார். எனினும், அரசு விதிமுறைகளை மீறி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டிருக்கிறது. ஊடகங்களிலும் அதுகுறித்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுதொடர்பாக சட்ட ரீதியிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தெரிவித்துள்ளார். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

தலையங்கம் – பள்ளிக்கல்வித்துறையின் பணிகள் தொடரட்டும்!

தலையங்கம் – பள்ளிக்கல்வித்துறையின் பணிகள் தொடரட்டும்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய மேற்கத்திய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாடுகளின் கல்வி வளர்ச்சி, கற்றல் திறன் ஆகியவற்றை நேரில் ஆய்வுசெய்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளையும் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக நார்வே நாட்டில், பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக (The New Western Norway University) நூலகத்தைப் பார்வையிட்டு, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தலைமை நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். நார்வே நாட்டு ஆசிரியப் பெருமக்களை நமது தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தும், நமது ஆசிரியர்களை அந்நாட்டிற்கு அனுப்பியும் அறிவுசார் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் ஒன்றையும் முன்வைத்துள்ளார். ஒன்றிய பாஜக ஆட்சியில் வரலாற்றைத் திரித்து, புராண இதிகாச குப்பைகளைப் பாடத்திட்டங்களில் சேர்க்கும் மோசடியான செயல்கள் சில வடமாநிலங்களில் அரங்கேறும் சூழலில், கல்வி வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் நார்வே நாட்டுடன் தமிழ்நாடு அரசு அறிவுசார் பரிமாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது பெரும் பாராட்டுதலுக்குரியது. உலகின் மிகச்சிறந்த கல்வி கட்டமைப்புகளைக் கொண்ட...

புத்துயிர் பெறும் சமத்துவபுரங்கள்!

புத்துயிர் பெறும் சமத்துவபுரங்கள்!

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கியப் பணிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முடங்கிக் கிடந்த “பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்” புதுப்பொலிவு பெற்று வருவது குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2021ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட 238 சமத்துவபுரங்களும் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படாத 4 சமத்துவபுரங்கள் உட்பட 149 சமத்துவபுரங்களை முதற்கட்டமாக 2021-22ம் ஆண்டில் சீரமைப்பதற்காக ரூ.194.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 98% பணிகள் முடிவுற்று மீதமுள்ள சில பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. மேலும், இரண்டாம் கட்டமாக 2022-2023ம் ஆண்டில் மீதமுள்ள 88 சமத்துவபுரங்களைச் சீரமைக்க ரூ. 67.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 99% பணிகள் முடிவுற்று மீதமுள்ள சில பணிகள் முடிவுறும் தருவாயில்...

நீதிமன்ற தீர்ப்புகளை சீரழிக்கும் ஜி.ஆர்.சாமிநாதன் நீதிபதியாக நீடிக்கக்கூடாது! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கடிதம்

நீதிமன்ற தீர்ப்புகளை சீரழிக்கும் ஜி.ஆர்.சாமிநாதன் நீதிபதியாக நீடிக்கக்கூடாது! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கடிதம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அரசியல் சாசன பணிகள் மற்றும் நீதிபதி பணியின் செயல்பாடுகள் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கழகத் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார். பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது மற்ற சமூகத்தினர் உருள விதிக்கப்பட்ட தடையை ஜி.ஆர்.சாமிநாதன் நீக்கியதை ஒட்டி, அவர்மீது நடவடிக்கைகோரி அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை. உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அரசியலமைப்பு தனக்கு தந்துள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வழங்கிய தீர்ப்பு என்பது நீதித் துறையின் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நோக்கங்களுடன் பொருந்திப் போகவில்லை. தலித் பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எஸ்.வேலுமணி அடங்கிய அமர்வு 28.04.2015ஆம் ஆண்டு ( வழக்கு எண் 7068/2015) தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது, மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் வாழை இலைகள் மீது பக்தர்கள் உருளுவது என்பது மனித மாண்புக்கும், நாகரீக சமூகத்திற்கும் எதிரானது என்பதால் அதற்கு தடை...

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி!

பெரியார் முழக்க வளர்ச்சி நிதி!

• சேலம் கிழக்கு மாவட்டக் கழக அமைப்பாளர் ஏற்காடு பெருமாளின் மகன் ஈழப் பிரபாகரன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 402/500 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சிடைந்திருக்கிறார். அதன் மகிழ்வாக கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு ரூ.5,000/- நன்கொடை வழங்கியுள்ளார் ஏற்காடு பெருமாள். • கடந்த ஆண்டில் கழகம் நடத்திய “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டில் “ஜாதி மறுப்பு திருமணம்” செய்துகொண்ட ஊடகவியலாளர்கள் காயத்ரி – எழிலரசன் இணையருக்கு பெண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாக, புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு ரூ.1,000/- வளர்ச்சி நிதி வழங்கியுள்ளனர். • வெங்கடேசன், கோவை மாநகரச் செயலாளர் – ரூ.1,000/- • அழகர், மதுரை – ரூ.1,000/- • பெரியார்புக்ஸ்.காம் – ரூ.2000/- மேலும் நன்கொடை மற்றும் சந்தா செலுத்த விரும்புவோர் QR Code-யை பயன்படுத்தி தொகையை செலுத்தலாம். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

கழகத்தில் இணைத்துக்கொண்ட பெரம்பூர் விஷால்

கழகத்தில் இணைத்துக்கொண்ட பெரம்பூர் விஷால்

பெரம்பூர் விஷால், கழகத்தின் செயல்பாடுகளை இணையம் வழியாக அறிந்து கழகத்தில் இணைய விருப்பப்பட்டு 19.05.2024 அன்று மயிலாப்பூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 21வது நிமிர்வோம் வாசகர் வட்ட சந்திப்பில் மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். உடன் கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், வட சென்னை அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

தோழர் விக்னேஷ் படத்திறப்பு நிகழ்ச்சி

தோழர் விக்னேஷ் படத்திறப்பு நிகழ்ச்சி

மறைந்த கழக செயல்வீரர் தோழர் போரூர் விக்னேஷ் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 19.05.2024 அன்று கழகத் தலைமை அலுவலகத்தில், நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21வது சந்திப்பில் நடைபெற்றது. வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் விக்னேஷ் படத்தை திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், மடிப்பாக்கம் பகுதிக் கழகச் செயலாளர் எட்வின் பிரபாகரன். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பு

“குடிஅரசு இதழ் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு” விழாவை முன்னிட்டு நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21வது சந்திப்பு 19.05.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு அருண் கோமதி தலைமை தாங்கினார், சேத்துப்பட்டு இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் சிறப்பு அழைப்பார்களாக பங்கேற்ற ஊடகவியலாளர் சுகுணா திவாகர் ‘தமிழ்நாட்டின் சுடரொளி சுயமரியாதை இயக்கம்’ என்ற தலைப்பிலும், காஞ்சிபுரம் மாவட்டக் கழக அமைப்பாளர் இரவிபாரதி ‘தமிழ்ச்சூழலில் குடிஅரசு ஏற்படுத்திய அதிர்வலைகள்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். காவை அஜித் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஆய்வாளர் பழ.அதியமான், மாவட்டச் செயலாளர் உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்