அனிதா நினைவுநாளில் உறுதியேற்பு! ‘கல்வி உரிமைகளை மீட்டெடுப்போம்’
நீட் எதிர்ப்புக்கு உயிர்ப்பலி தந்த அனிதாவின் 9-ஆம்ஆண்டு நினைவு நாள் செப்டம்பர்-1ம் தேதி மாலை 5.30 மணி அளவில் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நீட் ஒழிப்புக்கான உறுதி ஏற்பு நாளாக நடைபெற்றது. நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த நினைவு நாள் திட்டமிடப்பட்டது. கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததால் திராவிடர் கழகத்தின் தலைமையிடமான பெரியார் திடலுக்கு மாற்றப்பட்டது. பெரியார் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அனிதாவின் படத்திற்கு தலைவர்கள் பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். ஆசிரியர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ் வீரவணக்க உரையாற்றினர். நீட் எதிர்ப்பையும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும் தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது. தோழர் தியாகு உறுதிமொழியைப் படித்தார். நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர்....
