Category: தீர்மானங்கள்

கழகத் தலைமைக்குழு முடிவு திமுக கூட்டணியை ஆதரித்து      1,000 பரப்புரைக் கூட்டங்கள்

கழகத் தலைமைக்குழு முடிவு திமுக கூட்டணியை ஆதரித்து 1,000 பரப்புரைக் கூட்டங்கள்

தேர்தல் களத்தில் முழுவீச்சுடன் களமிறங்கி செயல்பட கழகம் முடிவுசெய்துள்ளது “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!” என்றத் தலைப்பில் 1000 பரப்புரைக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 15.02.2026 ஞாயிறு அன்று சேலம் மேட்டூரில் பிற்பகல் 3:30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழு கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு, இணையதளச் செயல்பாடுகள், முழக்கம் சந்தா சேர்ப்பு, மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு, கோவையில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் தாக்கங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் குழுவில் கலந்து கொண்ட கழகத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள். அனைவரின் கருத்துக்களை விவாதித்து நிறைவாக கீழ்கண்ட...

“நாத்திக வாழ்க்கை நோக்கி வாருங்கள்”

“நாத்திக வாழ்க்கை நோக்கி வாருங்கள்”

நாத்திக வாழ்வியல் ஏற்று உன்னதமான லட்சிய வாழ்க்கையை நோக்கி வருமாறு மக்களுக்கு நாத்திகர் விழா வேண்டுகோள் விடுத்தது. இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: முன்மொழிந்தவர்: இரண்யா தீர்மானம்-4: கடவுள், மத நம்பிக்கை இல்லாமல் மானுடத்தையும் அதன் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டதே நாத்திக வாழ்வியல் நெறி. சமத்துவம் மற்றும் அறிவியலை இலக்காகக் கொண்டு ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூக சமத்துவத்தை நோக்கியது. இதில் பார்ப்பனிய கருத்தியல்களான ஜாதியத்துக்கோ, பெண்ணடிமைக்கோ, மூடநம்பிக்கைக்கோ இடமில்லை. வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு சிந்தனைகள் தொடங்கிவிட்டன. உலகம் முழுவதும் கடவுள் மத கற்பனைகளை ஏற்காத நாத்திகர்கள் வாழ்கிறார்கள். கடவுள் மத நம்பிக்கை இல்லாத அதிக மக்களைக் கொண்ட நாடு பின்லாந்து. உலகிலேயே மகிழ்ச்சியாக வாழும் நாடு பின்லாந்து தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எப்படி கடவுள் மத நம்பிக்கைக்கும், அதனை பரப்புவதற்கும் உரிமை வழங்குகிறதே அதனை போல கடவுள் மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் மனசாட்சி உரிமை என்ற அடிப்படை உரிமைச்...

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு நாத்திகர் விழா கோரிக்கை

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு நாத்திகர் விழா கோரிக்கை

கொளத்தூரில் மே24-ல் நடந்த நாத்திகர் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முன்மொழிந்தவர்: ஈரோடு மணிமேகலை தீர்மானம்-1: சமூகத்தில் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும். சாமியார்களின் அதீத சக்திகளை மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கைகளை வாய்ப்பு ஆக்கிக் கொண்டு சாமியார்கள் பெண்களின் நகைகளைப் பறிப்பது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது போன்ற குற்ற செயல்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து தொலைக்காட்சிகளும் ஒவ்வொரு நாளும் இந்த குற்ற செயல்களை நிகழ்ச்சிகளாக ஒளிப்பரப்பி வருகின்றன. பேய்,பில்லி, சூனியம், பரிகாரம், தாயத்து போன்ற பல்வேறு வடிவங்களில் இந்த மோசடிகள் நடைபெறுகின்றன. அறிவியல் மனப்பான்மையை குடிமக்களிடையே உருவாக்க வேண்டும் என்று இந்திய அரசியல்சட்டப் பிரிவு (51 (A) (h) கூறுகிறது. இந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்தோடு பல்வேறு இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த இயக்கங்களுக்கு பல்வேறு நிலைகளில் அரசு ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்...

பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடிவடிக்கை

பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடிவடிக்கை

“ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பார்ப்பன சொற்பொழிவாளர்களும், பிராமணர் மாநாடு போன்ற மாநாடுகளில் உரையாற்றுபவரும் முன்வைக்கும் பல வாதங்கள் அரசியல் சட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ள சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றுக்கு எதிராகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட குற்ற வரையறைக்குள் வருவதாகவும் உள்ளன. a) அவ்வாறான உரைகள் ஆற்றப்படும் இடங்களிலேயே எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டுமாறு தோழர்களை, தமிழ்நாட்டு பார்ப்பனர் அல்லாத மக்களை, குறிப்பாக இளைஞர்களை இம்மாநாடு வேண்டி கேட்டுக்கொள்கிறது. b) தனி இடங்களில் அவ்வாறு பேசப்பட் டாலும் காணொலி வழியாக பொதுவெளியில் பரப்பப்படும் போது உரிய நிறுவனங்களுக்கு புகார் ( report) இடுமாறும், அதேவேளை காவல் நிலையங்களில் புகார் அளித்து உரிய ஒப்புகையைப் பெறுமாறும் இம்மாநாடு வேண்டி கேட்டுக்கொள்கிறது. c) பெரியார் மீதான ஆதாரமற்ற அவதூறு களை பரப்பியதற்காக புதிய தண்டனை சட்ட விதிகள் 192, 196, 352, 353 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க...

அர்ச்சகர் நியமனத்தை விரைவுப்படுத்துக

அர்ச்சகர் நியமனத்தை விரைவுப்படுத்துக

அதேபோல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் திட்டத்தை 24 பேருடன் அறநிலையத் துறை நிறுத்திக் கொண்டுவிட்டது. அர்ச்சகர் பதவிக்காகப் பயிற்சி பெற்றவர்கள் நீண்ட காலமாக காத்திருக்கி றார்கள். நீதி மன்றத்தில் உள்ள தடைகளை அகற்ற எந்த முயற்சியும் அறநிலைத்துறை எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது எனவே நீதிமன்றத் தடைகளை நீக்கி அனைத்து சாதிகளும் அர்ச்சகராகும் திட்டத்தை அடுத்தடுத்த கோயில்களில் விரிவுபடுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.” பெரியார் முழக்கம் 27032025இதழ்

இந்துசமய அறநிலையத்துறைக்கு கண்டனம்‌

இந்துசமய அறநிலையத்துறைக்கு கண்டனம்‌

“இந்துக் கோயில்களை நிர்வகிப்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அண்மைக்காலமாக மக்களிடம் இந்து மதப் பரப்புரை செய்யும் துறையாகவே மாறிவருகிறது. பழனியில் உலக முருகன் மாநாட்டைநடத்தியது. இப்போது மகா சிவராத்திரியை அறநிலையத்துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு முதன்முறையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடியதாக இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருமைப் படுகிறார். சிவராத்திரி போல் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி விழாக்களையும் அடுத்தடுத்து கொண்டாட அறநிலையத்துறை திட்டமிட்டு உள்ளதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம். மத உணர்வுகளை மக்களிடம் வளர்த்து விடும் அறநிலையத்துறையின் இந்தச் செயல்பாடுகள் மதவாத சக்திகள் வேர்ப் பிடிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று சுட்டிக் காட்டுகிறோம். அறநிலையத் துறையின் எல்லை மீறும் செயல்களுக்கு, இந்த மாநாடு கண்டனத்தைப் பதிவு செய்கிறது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்களை தடை செய்க

தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்களை தடை செய்க

“தமிழ்நாட்டு கிராமங்களில் ஜாதிய பாகுபாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் நிலவும் தீண்டாமை வடிவங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அந்த அறிக்கையை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திடம் நேரில் வழங்கினர். தலித் மக்கள் வாழும் பகுதிகளில் ரேஷன் கடைகள் நடத்தத்தடை, முடிவெட்ட மறுப்பு, இரட்டை தம்ளர் முறை, இருசக்கர வாகனங்களில் செல்லத் தடை போன்ற பல்வேறு வடிவங்களில் தீண்டாமை பின்பற்றப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக உயர்நீதிமன்றங்கள் ஜாதிக்கு எதிராகதீர்ப்புகளை வழங்கி வருவது பாராட்டி வரவேற்கத் தக்கதாகும். ஜாதி அடிப்படையில் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது. கோயில் திருவிழா விளம்பரங்களில் ஜாதிப் பெயர் போடக்கூடாது. ஜாதியை நிலை நிறுத்தும் போக்கு, செயல்பாடுகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இந்த நிலையில் தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பும் நாடகத் தொடர்கள்,...

தமிழ்நாடு முதல்வரை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது!

தமிழ்நாடு முதல்வரை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது!

“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் ஒன்றிய ஆட்சியின் திணிப்புகள், மறுப்புகளுக்கு எதிராகக் கருத்தியல் போராட்டம் நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் பாஜகவின் மெஜாரிட்டி எண்ணிக்கையைக் குறைத்து மைனாரிட்டி நிலைக்குத் தள்ளியவர்கள் தமிழ்நாட்டு வாக் காளர்கள். அதன் காரணமாக தமிழ்நாட்டு மக்களின் நிதி உரிமைகளைப் பறிப்பதோடு ஆளும் கட்சிக்குக் கடுமையான அரசியல் நெருக்கடிகளையும் ஒன்றிய பாஜக ஆட்சி உருவாக்கி வருகிறது. 1967 முதல் இருமொழிக் கொள்கையை நடை முறைப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு. கல்வி கட்டமைப்பில் இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தோல்வி அடைந்த மும்மொழித் திட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் மீது மிரட்டித் திணிக்கும் ஒன்றிய ஆட்சிக்குப் பணிய மாட்டோம், நிதி தர மறுத்தாலும் மாநில அரசு அந்த நிதியை ஒதுக்கும். மும்மொழிக் கொள்கை காவிக் கொள்கை, நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். கொள்கை என்று அறிவித்துவிட்டார் தமிழ்நாட்டின் முதலமைச்சர். 40-க்கும் மேற்பட்ட மாநில மொழிகளை இந்தி அழித்த வரலாற்றை முதலமைச்சர் சுட்டிக்...

காஞ்சி சங்கராச்சாரி “பிராமண” வெறிப் பேச்சு-நடவடிக்கை எடுக்கக் கோரி கழகம்

காஞ்சி சங்கராச்சாரி “பிராமண” வெறிப் பேச்சு-நடவடிக்கை எடுக்கக் கோரி கழகம்

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” “வாருங்கள் வரலாறு பேசுவோம்!!” என்ற‌ தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் மார்ச் 15-ல் தொடங்கி மார்ச் 22- வரை தமிழ்நாடு தழுவிய பரப்புரைப் பயணங்களை நடத்தி நிறைவு விழா மாநாட்டை மயிலாடுதுறையில் மார்ச் 22.03.2025 மாலையில் நடத்தியது. மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசியல் சட்டத்திற்கு எதிராக இனவெறியைத் தூண்டி காஞ்சி சங்கராச்சாரி பேசிய பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏப்ரல் 21-இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநாடு முடிவு செய்தது. தீர்மானத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். பலத்த கரவொலி எழுப்பி, தோழர்கள் வரவேற்றனர். கடந்த ஜனவரி 19-ஆம் தேதி பெங்களூரில் “கர்நாடக பிராமண மகாசபையில்” பேசிய‌‌ காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி, அரசியல் சட்டத்திற்கு‌ எதிராக இன‌வெறியை தூண்டிவிட்டிருக்கிறார். வேத மதத்தை காப்பாற்ற “பிராமணர்களால்” மட்டுமே முடியும் எனவே “பிராமணியத்தை” நாம் காப்பாற்றியாக வேண்டும். “பிராமணர்களை” அடையாளப்படுத்தும் சந்திய...

ஈரோடு வடக்கில் கலந்துரையாடல் கூட்டம்!

ஈரோடு வடக்கில் கலந்துரையாடல் கூட்டம்!

மாவட்ட தலைமை அலுவலகத்தில் 2.3.2025 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர். நிவாஸ் தலைமை வகிக்க மாநில வெளியிட்டுச் செயலாளர் தோழர். இராம. இளங்கோவன் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் 1: கடந்த 22 2.2025 கோபி ஒன்றிய கழகத்தின் சார்பாக நடைபெற்ற ‘பெரியார் எனும் பெரும் நெருப்பு’ கருத்தரங்கு வரவு செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டு தோழர்கள் வசம் கணக்கு ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வை சிறப்பாக நடத்திய தோழர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. தீர்மானம் 2: வருகின்ற 16 /3/2025 அன்று தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பரப்புரைப பயணம் தொடங்க இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக ஈரோட்டில் தொடங்க இருக்கும் பரப்புரைப் பயணத்தில் மாவட்டக் கழகத்தின் சார்பாக கலந்து கொள்வது எனவும், பயணக் குழுவோடு ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தோழர்கள் இணைந்து பயணிப்பது எனவும்...

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

சேலம்: கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்! 16.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் ஏற்காடு ஷோபா ஹோட்டலில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தீர்மானங்கள்: 1). ஒவ்வொரு பகுதிகளிலும் துண்டறிக்கை வாயிலாகவும், வீதி நாடகங்கள் வாயிலாகவும் தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவது எனவும், 2).தோழர்களின் சந்திப்பை விரிவு படுத்தும் வகையிலும், தொடர்புகளை விரிவு படுத்தும் வகையிலும் வருகின்ற ஜூன் மாத இறுதி வாரத்தில் ஏற்காட்டில் குடும்ப விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 3). சேலம் மாவட்டக் கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்களுக்காக மாவட்ட நிதியை உருவாக்குது எனவும், அந்த நிதியை துண்டறிக்கைகள், கூட்டங்களுக்கு பயன்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கலந்து கொண்டோர்: சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் (கி) மாவட்ட அமைப்பாளர்கள் ஏற்காடு பெருமாள், முத்துமாணிக்கம், சேலம்...

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்

21.03.2024 வியாழன் அன்று ஈரோடு, கே.கே.எஸ்.கே மகாலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இந்தியாவில் நடப்பது அரசியல் போராட்டம் அல்ல: ஆரிய திராவிடப் போராட்டம் என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்றது என்று அறிவிக்கப்பட்ட போது இது சுதந்திரம் அல்ல; பார்ப்பன பனியாவுக்கு அதிகாரத்தை மாற்றும் நாள் என்பதே பெரியாரின் நிலைப்பாடு. பெரியார் எச்சரித்த அந்த போராட்டம் தான் எதிர்வரும் தேர்தல் களத்தில் மைய கருத்தியலாக உருப்பெற்று இருக்கிறது. ஆரியம், சனாதனம் என்ற முகமூடியுடன் களத்திற்கு வந்துள்ளது. திராவிடம் தனது உண்மையான அடையாளத்தோடு சனாதனத்தை எதிர்கொண்டு வருகிறது. திராவிட சனாதன (பார்ப்பனியம்) முரண்பாடுகள் கூர்மை அடைந்து வருகின்றன. கோடான கோடி விளிம்பு நிலை இந்து மக்கள் சனாதனம் சுமத்திய சுரண்டல் அநீதிகளுக்கு பலிகடாவாக்கப்பட்டனர். இதை நேர் செய்வதற்கு சமூக நீதி, அதிகார பங்கீடு, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை,...

பாசிச பாஜகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவோம் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் பரப்புரை

பாசிச பாஜகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவோம் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் பரப்புரை

கழகத் தலைமைக்குழுக் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சேலத்தில் 02.02.2024 அன்று முகில் நகரில் கழகத் தோழர் சீனிவாசன் இல்லத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இணைய வழியாக (Skype) கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி:- எதிர்வரும் 2024 – நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கழகம் சார்பில் முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் முன்னெடுக்கவுள்ள பரப்புரைக்கான செயல் வடிவங்கள், முழக்கங்கள், பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட உள்ள துண்டறிக்கையில் இடம் பெற வேண்டிய கருத்துக்களை முன்வைத்தனர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பரப்புரை இயக்கத்துக்கான துண்டறிக்கையில் இடம்பெற வேண்டிய செய்திகளை தலைமைக்குழு முன் சமர்ப்பித்தார். நிறைவாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” எனும் முழக்கத்தோடு பரப்புரை இயக்கங்கள் வழியாக மக்களை...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்… 1 பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பல் செய்யும் கருத்தாளர்களாகவும், பொதுவுடைமைக் கட்சித் தோழர்களாகவும் இருந்து களம் கண்டு எதிரிகளால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஈகியர்களுக்கு இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மொழி உரிமைகளுக்காகவும், இந்தி, சமஸ்கிருத, ஆங்கில மொழித் திணிப்புகளை எதிர்த்து வீரச்சாவு எய்தியவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. சாதிய வன்கொடுமைகளை எதிர்த்தும், பார்ப்பனிய மற்றும் மதவெறிகளை எதிர்த்தும் களமாடி உயிர் ஈந்த எண்ணற்ற ஈகியர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மேலும், தமிழீழ மண்ணின் உரிமைகளுக்காகப் போராடி உயிர் ஈந்த இலக்கக் கணக்கானவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. 2 தமிழ்நாட்டிற்குள் செயல்படுகின்ற காப்பீட்டுக்கழகம்( எல் ஐ சி) உள்ளிட்ட பொதுத் நிறுவனங்களையெல்லாம் அம்பானி, அதானி உதுறைள்(உள்ளிட்டத் தனியார்துறை நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவரும் இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.. தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் எல்ஐ சி, தொடர்வண்டித் துறை...

திராவிடன் மாடல்: ஆரிய-திராவிடர் போராட்டத்தின் புதிய வடிவம்

திராவிடன் மாடல்: ஆரிய-திராவிடர் போராட்டத்தின் புதிய வடிவம்

இந்த நாட்டின் அரசியல், ஆரிய-திராவிடர் போராட்டமேயாகும் என்று பெரியார் சுட்டிக் காட்டினார். அதுவே ‘திராவிடன் மாடல்’, ஆர்.எஸ்.எஸ். மனுவாதத்துக்குமான போராட்டமாக பரிணமித்து இருக்கிறது என்பதை திராவிடர் விடுதலைக் கழகம் (தி.வி.க.) சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஏப்.2, 3 தேதிகளில் ஈரோட்டில் முறையே தி.வி.க. தலைமைக் குழுவும் செயலவையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை யிலும் நடந்தது. இரண்டாம் நாள் (ஏப்.3, 2022) ஈரோடு  கே.கே.எஸ்.கே. மண்ட பத்தில் நடை பெற்ற செயலவைக் கூட்டத்தில் தீர்மானங்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். 90 உறுப்பினர்களில் 86 பேர் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட ‘திராவிடன் மாடல்’ குறித்த தீர்மானம்: திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினரும், கழகத்தின் செயல்வீரரும் எளிய முறையில் தோழர்களுடன் பழகி கழகக் கொள்கைகளை பரப்புவதில் முன்னின்று செயல்பட்ட மடத்துக்குளம் மோகன் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனைகளை தனது புரட்சிகரமான...

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

*திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு தீர்மானங்கள் :* திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழுக் கூட்டம் 30.06.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் டீம் லிங்க் செயலி வழியாக நடைபெற்றது. தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழுக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன், அன்பு தனசேகர், சூலூர் பன்னீர்செல்வம், உமாபதி, மடத்துக்குளம் மோகன், அய்யனார், இளையராஜா, காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைக் குழுக் கூட்டம் காலை 10.30 மணி அளவில் துவங்கி மதியம் 2 30 மணி வரை நடைபெற்றது. கழக அமைப்பின் இணையதள செயல்பாடுகள், கருத்தரங்குகள், கொரோனா பேரிடர் காலத்தில்...

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகளை முறியடிக்க மக்களை ஒன்று திரட்டுவோம் பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சியைத் தடுக்க மக்கள் சக்தியை அணி திரட்டுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழக செயலவை அறைகூவல் விடுத்துள்ளது. நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் ஆபத்தையும் செயலவை எச்சரித்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: இந்தியாவின் மதச் சார்பற்ற அடையாளத்தை உருக்குலைத்து ‘இந்து இராஷ்டிரமாக்கும்’ முயற்சிகளை பா.ஜ.க. நடுவண் ஆட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டும் அதிகாரங்களை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மெஜாரிட்டி மக்களாக இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு இந்து நாடாகவே இருக்க வேண்டும் என்று சங்பரிவாரங்கள், பா.ஜ.க. முன் வைக்கும் கருத்துகளின் உள்ளடக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ‘மெஜாரிட்டி இந்துக்கள்’ போர்வைக்குள் மைனாரிட்டி பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு மெஜாரிட்டி இந்துக்களின் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளை சிதைத்து, பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாடே...

சங்கர் மரணத்துக்கு செயலவை இரங்கல்

சங்கர் மரணத்துக்கு செயலவை இரங்கல்

900 மாணவர்களை அகில இந்திய தேர்வில் வெற்றி பெற வைத்து சாதனை படைத்தவரும் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு அகில இந்திய தேர்வுப் போட்டிகளுக்கு பயிற்சி அளித்தவரும் சமூக நீதி உணர்வோடு சமூக நீதிக்கான திறவுகோலாக தனது சங்கர் அய்.ஏ.எஸ். அகாடமியை உருவாக்கிக் கட்டி வளர்த்தவருமான சங்கர், தனது இளம் வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பது பெரும் துயரத்தைத் தருகிறது. அவரது மறைவுக்கு இந்த செயலவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றிய திருப்பூரில் கூடிய கழக செயலவை, 2 நிமிடம் மவுனம் காத்து மரியாதை செலுத்தியது. பெரியார் முழக்கம் 18102018 இதழ்

பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக;  ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்

பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக; ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்

திருப்பூரில் அக்.13ஆம் தேதி கழக தலைமைக் குழு ஆலோசனையைத் தொடர்ந்து அடுத்த நாள் அக்.14ஆம் தேதி கழக செயலவை திருப்பூர் வாலிப்பாளையம் ‘டைய்யர்ஸ் அசோசியேஷன்’ அரங்கில் பகல் 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் தொடங்கி யது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் வரவேற்புரை யாற்றினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி செயலவையின் நோக்கங்களை விளக்கி அறிமுக உரையாற்றினார். 40 செயலவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். மாலை 6 மணி வரை செயலவை நீடித்தது. பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். செயலவை தீர்மானங்களை முன்மொழிந்து கழகத் தலைவர் நிறைவுரை யாற்றினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் வழிவகுக்கும் உச்சநீதிமன்றம் வழங்கிய மூன்று தீர்ப்பு களை இந்த செயலவை பாராட்டி வரவேற்கிறது....