★ மூடநம்பிக்கை மற்றும் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ★ தனிச்சட்டம் எண்ணிக்கை பலமற்ற சேவை ஜாதிப் பிரிவினருக்கு சமூகநீதி இயக்கம், ★ ஆட்சிப் புலத்தில் மதத்தைத் திணிக்கும் அமைச்சர்களுக்குக் கண்டனம்! கழக மாநாட்டின் தீர்மானங்கள்
12.08.2026 அன்று காரைக்குடியில் நடைபெற்ற மாற்றத்திற்கான வாழ்வியல் பரப்புரைப் பயணங்களின் நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள். எதிர்ப்பைப் பதிவு செய்க தீர்மானம்-1: ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பார்ப்பன சொற்பொழிவாளர்களும், பிராமணர் மாநாடு போன்ற மாநாடுகளில் உரையாற்றுபவர்களும் முன்வைக்கும் பல வாதங்கள் அரசியல் சட்டம் தனது நோக்கமாக கொண்டுள்ள சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்கு எதிராகவும், பிற சமுதாய மக்களை இழிவுபடுத்துவதாகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட குற்ற வரையறைக்குள் வருவதாகவும் உள்ளன. அ) அவ்வாறான உரைகள் ஆற்றப்படும் இடங்களிலேயே எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டுமாறு தோழர்களை, பார்ப்பனரல்லாத மக்களை – குறிப்பாக இளைஞர்களை இம்மாநாடு தமிழ்நாட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறது ஆ) தனி இடங்களில் அவ்வாறு பேசப்பட்டாலும் காணொலி வழியாக பொது வெளியில் பரப்பப்படும் போது உரிய நிறுவனங்களுக்கு புகார் (Report) பதிவிடுமாறும், அதே வேளையில் காவல் நிலையங்களில் புகார் அளித்து உரிய ஒப்புகையைப் பெறுமாறும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. குரலற்ற சேவை ஜாதி...
