இந்தியா கூட்டணியை ஆதரித்து கோபியில் பரப்புரை

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.01.2024 அன்று கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கோபி ஈசுவரமூர்த்தி தலைமை தாங்கினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு மற்றும் மேட்டூர் ராஜா அகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தாவை விரைந்து அனுப்புவது, பரப்புரைக் கூட்டங்கள் நடத்துவது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடர் விடுதலைக் கழகம் I.N.D.I.A கூட்டணியை ஆதரிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட செயல்பாடுகளுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் சதுமுகை பழனிச்சாமி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்பது தோழர்கள் அனைவரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டது.

கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கலைச்செல்வன், கோபி அருளானந்தம், தூ.நா. பாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர் கருப்பணன், தமிழ்நாடு அறிவியல் மன்றம் சித்தா பழனிச்சாமி, கோபி ஈசுவரமூர்த்தி, பவானி ஒன்றியச் செயலாளர் வினோத், நம்பியூர் ஒன்றியக் கழகச் செயலாளர் நம்பியூர் ரமேஷ், சத்தி ஒன்றியக் கழகச் செயலாளர் புதுரோடு சிதம்பரம், கோபி ரகுநாதன், கோபி ஜெகநாதன், வழக்குரைஞர் தமிழரசன், கவுந்தபாடி செல்வம், கவுந்தபாடி கோபால், காந்திநகர் சின்னதம்பி, அறிவுக்கனல், யாழ்மதி, அறிவரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெரியார் முழக்கம் 08022024 இதழ்

You may also like...