Category: திவிக

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்! மாபெரும் கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி!

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்! மாபெரும் கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி!

தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேசன் மற்றும் சேலம் ராயல் பவர் அரிமா சங்கம் சார்பாக நடத்திய 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி சேலம் கருப்பூர் பத்மவாணி மகளிர் கல்லூரியில் 12.01.2026 திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. பத்மவாணி மகளிர் கல்லூரி சேர்மேன் சத்யமூர்த்தி தலைமையேற்றார். சிவகேந்திரன் குட்டி (துணைத் தலைவர், தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன்) முன்னிலை வகித்தார். சிவபெருமாள் (பொதுச்செயலாளர்-தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேசன்) வரவேற்புரையாற்றினார். மகேஷ் (காஞ்சி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர்), அரிமா விவேகானந்தன் (தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன் மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளர்), பத்மவாணி மகளிர் கல்லூரி நிர்வாக அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர். சௌந்திரராஜன் (பள்ளி தாளாளர்,சௌத் இந்தியன் மெட்ரிக்குலேசன்), கஞ்சமலை (பள்ளி தாளாளர், சுவாமி விவேகானந்தா மெட்ரிக்குலேசன்), முத்து (பள்ளி தாளாளர், நார்த் பார்க் மெட்ரிக்குலேசன்), முதல்வர் சுந்தர், வழக்கறிஞர் ஆனந்த் ராஜ்...

அண்ணா சிலைக்கு மரியாதை

அண்ணா சிலைக்கு மரியாதை

பேரறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி, (3/2/26) காலை 10 மணிக்கு, பத்ரிநாரயாணன் நினைவுப் படிப்பகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று இராயப்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தோழர்கள் கொள்கை முழக்கமிட்டனர். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம. கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப. அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த. நா. சூர்யா, தோழர்கள் இரண்யா, மகிழவன், குமார், தேன்மொழி, லட்சுமணன், லீலா, துரைராசு, மனோஜ், வீரமுத்து, செய்தியாளர்‌ பிரசாந்த், சுகந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா

ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா

கழகத் தோழர்கள் ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா பிப்ரவரி-01 அன்று காலை 9 மணியளவில் மந்தைவெளியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இருவரும் இணைந்து திறந்து வைத்தனர். பேராசிரியர்.சரசுவதி, மயிலாடுதுறை இளையராசா (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இணையர்களின் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். பாரி.சிவக்குமார் நண்பரான தோழர் சக்திவேல் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை மாவட்டக் கழகம் சார்பில் பெரியார் அம்பேத்கர் படம் பரிசாக கழகத் தலைவர் அவர்கள் பாரி சிவா அவர்களிடம் வழங்கினார். கழகத் தோழர் குமரன் தன்னுடைய ஆட்டோவில் எழுதியிருந்த ” மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்ற பெரியார் வாசகத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை.இராசேந்திரன் பார்வையிட்டனர். இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன் | ந. தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், ஊடகவியலாளர் பிரகாசு,...

நாமக்கல்லில் சமத்துவ பொங்கல் விழா

நாமக்கல்லில் சமத்துவ பொங்கல் விழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கம்பன் நகரில் தேவி மாதேஸ்வரன் இல்லத்தில் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கழகத் தலைமைக் குழு உறுப்பினர் கேப்டன் அண்ணாதுரை பொங்கல் விழா சிறப்புரை நிகழ்த்தினார். இலக்கிய தளம் அன்பழகன், பகலவன் (மொழிப்போர் தியாகிகள் நினைவு குழு), மு.சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்), ஆர் கே.குமார் (தி. க மாவட்டத் தலைவர்), ஸ்ரீ வடிவேலு (நகரச் செயலாளர்), மி.த தண்டபாணி (நகரத் தலைவர்), தோழர்கள் பிரகாஷ், மோகன், கார்த்தி சரவணன் ஆகியோரின் குடும்பமும் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். கம்பன் நகர் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.பகுதிக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாலை 4-மணியளவில் அனைவருக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவாக சுதாமணி ராஜ் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் இதழ்05022026.

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!

தை-2 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது! சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 16.01.2026 காலை 10 மணி அளவில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள திருவள்ளுவர் உருவச் சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தங்கதுரை, வெற்றிமுருகன், மாநகரத் தலைவர் பாலு, மாநகர செயலாளர் ஆனந்தி, மாநகரப் பொருளாளர் பிரபு, மாநகர அமைப்பாளர் தேவராஜ், செந்தில், FM பாலமுருகன், பரமேஷ், கோகுலகண்ணன், பாரப்பட்டி முருகேசன், நவராஜ், விக்ரம், அலாவுதீன், தமிழினி, நீலகண்டன், ஹரினி, சுதர்சன் ஆகிய கழகத் தோழர்கள் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

திருப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா!

திருப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா!

திருப்பூரில் கடந்த 10- ஆண்டுகளுக்கு மேலாக கழகத்தினர் தமிழர் திருநாள் பொங்கல்விழாவை பகுதி மக்கள் மற்றும் தோழமை சக்திகளின் ஆதரவுடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வீரபாண்டி பிரிவு பாரதி நகரில் கழகப் பொருளாளர் துரைசாமி , மாஸ்கோ நகரில் மாதவன் முன்னெடுப்பிலும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். வீரபாண்டி பிரிவு: பாரதி நகர் பெரியார் படிப்பகம் பகுதியில் பொங்கல் விழா 15.01.26 அன்று காலை பொங்கல் வழங்குதலில் தொடங்கி, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் வாழ்த்துரை வழங்குதல் பரிசு வழங்குதல் என மாலை வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சரசுவதி (கழக மாநகர அமைப்பாளர்) பொங்கல் வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளை வீரபாண்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், ஆர்.குமார் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்) தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளை ஆர்.கணேசன், சி.லட்சுமணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாலை வரை விளையாட்டுப்...

பாஜக முயற்சி முறியடிப்பு!

பாஜக முயற்சி முறியடிப்பு!

திருவல்லிக்கேணி பகுதி வி.பி ராமன் சாலையில் பெரியார் சிந்தனைப் பலகை அருகில் பாஜகவினர் இரவு நேரத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பத்தை வைக்க முற்பட்டனர். செய்தியறிந்த கழகத் தோழர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்து கொடிக் கம்பத்தை எடுக்க வைத்தனர். ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் சு.கோபிநாத், சே.ராஜேஷ், த.நா.சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் குமார், யாழினி ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

சனவரி-25 அன்று நடராசன் – தாளமுத்து உள்ளிட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு மூலக்கொத்தலம் நினைவிடத்திற்கு பேரணியாகச் சென்று, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர்கள் சேத்துப்பட்டு இராசேந்திரன், மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, ம. கி. எட்வின் பிரபாகரன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.வ. வேலு, இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், சுகுமார், இரண்யா, குறளரசி, துரை, சு. கோபிநாத் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

குன்னத்தூரில் ஜாதி வெறிச்செயல்  கழகம் எதிர்வினை!

குன்னத்தூரில் ஜாதி வெறிச்செயல் கழகம் எதிர்வினை!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருப்பண நாடார் பள்ளியில் 30-01-2026 அன்று சக மாணவர்களால் 8-ம் வகுப்பு பட்டியலின வகுப்பைச் சார்ந்த ரக்சத் என்னும் மாணவன் தீயில் தூக்கி வீசப்பட்ட ஜாதி வெறிச் சம்பவம் நடந்துள்ளது. தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட மாணவனை பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். உடனே செய்தி அறிந்த திராவிடர் விடுதலைக் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் அவர்களுடைய தலைமையில் முகில் ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), செல்வக்குமார் (கோபி மாவட்டச் செயலாளர்), மாரிமுத்து (திருப்பூர் மாநகர துணை தலைவர்), கோபி அருளானந்தம், ஈசுவரமூர்த்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவனைச் சந்திக்கச் சென்றனர். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆறுதல் கூறியதோடு அவனுடைய பெற்றோர்களிடமும் மற்றும் மாணவனிடமும் தோழர் இராம.இளங்கோவன் அவர்கள் நடந்த உண்மை சம்பவங்களைக் கேட்டு அறிந்தார். பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய லெனினிய அமைப்புகளை ஒன்றிணைத்து இச்சம்பவத்திற்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தையும் மற்றும் தொடர்ந்து பள்ளியில் ஜாதிய பாகுபாடுகளுக்கு எதிராக புகாரளித்தும் கண்டும் காணாமல்...

பெரியார் பற்றிய செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா! ஜீவாவின் வாழ்க்கை வரலாறுகளில் விடுபட்டது எப்படி?ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 12-கொளத்தூர் மணி

பெரியார் பற்றிய செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா! ஜீவாவின் வாழ்க்கை வரலாறுகளில் விடுபட்டது எப்படி?ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 12-கொளத்தூர் மணி

காந்தி ஆசிரமத் தலைவர் கும்பலிங்கம் அவர்களுடைய அறிக்கை கூறுகிறது, அந்த ஆசிரமம் 11.2.1926 அன்று தொடங்கப்பட்டது என்று. இந்த செய்தியைத் தாங்கி இருக்கிற அதே ‘குடிஅரசு’ இதழின் 5ஆம் பக்கத்தில் மற்றொரு செய்தியும் பதிவாகி இருக்கிறது. அச்செய்தி “ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் 6.4.1926-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீமான்கள் பிச்சா சுப்பிரமணிய செட்டியார், ராய. சொக்கலிங்கம் செட்டியார், வ.ராமசாமி அய்யங்கார் முதலியவர்களுடன் காரைக்குடியில் இருந்து காலை 9 மணிக்கு வந்ததும், வாத்திய கோஷத்துடன் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்காக ஸ்ரீமான் கும்பலிங்கம் பிள்ளை பார்வையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காந்தி ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்ற செய்தியை நாம் பார்க்கிறோம். பெரியாரை தவிர்த்த ஜீவா ஏற்கனவே 7.4.1926 நாளிட்ட ‘குமரன்’ இதழில் வந்திருந்த செய்தியை நாம் பார்த்திருக்கிறோம். அந்த செய்தியில் இதே நாளில் “6.4.1926 அன்று பெரியார் 10 மணிக்கு சிராவயல் வந்து காந்தி கிணற்றைத் திறந்து வைத்ததும், அதேபோல மாலை 6 மணிக்கு...

தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்

தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்

இளங்கலை ஃபிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி படிப்புகளுக்கும் நீட் (NEET) நுழைவுத் தேர்வு. நீட் நுழைவுத் தேர்வு எனும் அநீதியை மருத்துவப் படிப்புகளில் அரங்கேற்றி வருவதோடு தற்போது இளங்கலை ஃபிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி படிப்புகளுக்கும் நீட்டைக் கட்டாயமாக்கி அறிவித்துள்ளது தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP). தமிழ்நாட்டை ஆண்ட அ.இ.அ.தி.மு.க-வும் ஆளுகின்ற தி.மு.க-வும் பலமுறை நீட் தேர்விற்கு எதிராகவும் தமிழ்நாட்டிற்கு நீட்டிலிருந்து விலக்கு கேட்டும் சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிருந்தார்கள். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தற்போது துணை மருத்துப் படிப்புகளுக்கும் நீட் என்பது “தமிழ்நாடு தமிழருக்கே!” என்கிற முழக்கத்தை ஓங்கி ஒலிக்க வேண்டிய தேவையை உருவாக்குகிறது! ஒவ்வொரு வருடமும் நீட் நுழைவுத் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் அதிகரித்து வரும் சூழலில் NCAHP-ன் இந்த நடவடிக்கை பச்சை அயோக்கியத்தனமே. வேறெந்த மாநிலத்தை விடவும் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பிலும், மருத்துவம்...

அமோக வரவேற்பை பெற்ற நிமிர்வோம் பதிப்பகம்!

அமோக வரவேற்பை பெற்ற நிமிர்வோம் பதிப்பகம்!

சனவரி 8 முதல் 21 வரை, 14 நாட்கள், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த 49-வது சென்னை புத்தகக் காட்சியில், கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 4 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. ம.கி. எட்வின் பிரபாகரன், புத்தகக் காட்சி சார்ந்த அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தார். நிமிர்வோம் பதிப்பகத்துக்கு அரங்கை ஒதுக்கிக் தரக்கோரி, தோழர்கள் தபசி குமரன், கு. அன்பு தனசேகர். பிரகாசு ஆகியோர் விண்ணப்பித்து, அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு, நிமிர்வோம் அரங்கை அமைக்கும் களப்பணியில் தோழர்கள் தபசி குமரன், ம. கி. ‌எட்வின் பிரபாகரன், ஆ.வ. வேலு, ர. பிரகாசு, பேரன்பு, தாமரை, ஸ்ரீலேகா, மடிப்பாக்கம் அருண், புகழேந்தி, சிபி ஆகியோர் ஈடுபட்டனர். விளம்பர பதாகை காவை. இளவரசன் செய்து கொடுத்தார். அரங்கில் வைக்க வேண்டிய 300 புத்தகத் தலைப்புகளின் பட்டியலை, தோழர்கள் ம.கி. எட்வின்...

மேட்டூரில் தை 1 தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா!

மேட்டூரில் தை 1 தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா!

மேட்டூர் நகர கழகத்தின் சார்பாக தை 1 தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் 15.01.2026 காலை 9 மணியளவில் மார்டின் (மேட்டூர் நகர தலைவர்) தலைமையில் நடைபெற்றது. சூரியகுமார் (சேலம் மேற்கு மாவட்ட தலைவர்), கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்), டைகர் பாலு (சேலம் மாவட்ட அமைப்பாளர்), குமரப்பா (மேட்டூர் நகரச் செயலாளர்), அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் அமுல்ராஜ் இசைக்குழு பறை இசை, பகுத்தறிவு திரைப்பட பாடல்கள் பாடினார்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கழகத் தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. சம்பத் (சேலம் மாவட்ட பொருளாளர்), கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), விஜயகுமார் (கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்), மகளிர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 29012026

தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

சென்னையில் கழகத்தினர் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக தமிழர் திருநாள் பொங்கல் விழாவை தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நடன நிகழச்சிகள் என கோலகல கொண்ட்டாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதன் செய்தி தொகுப்புகள்: சென்னை திருவல்லிக்கேணியில் மறைந்த கழகத் தோழர். பத்ரி நாரயணனின் முன்னெடுப்பில் பொதுமக்கள் அரசியல் கட்சியினர் என அனைவரும் இணைந்து தமிழர் திருநாள் பொங்கல் விழா கடந்த 26-ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை திருவல்லிக்கேணி பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என அனைவரும் இணைந்து, கோலாகல கொண்டாட்டத்துடன் சனவரி 13 மாலை 5 மணி அளவில் வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் நடைபெற்றது. தோழர் கார்மேகம் கலைக்குழுவினரின் பறை இசை ஆட்டம், ஒயிலாட்டம் மயிலாட்டம், கிராமிய பாடல்கள், பொக்களிக்கால் ஆட்டம், நெருப்பு நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மக்களை வெகுவாக ஈர்த்தது....

பெரியார் முழக்கம் சந்தா குவிகிறது!

பெரியார் முழக்கம் சந்தா குவிகிறது!

தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு 25 பெரியார் முழக்கத்துகான சந்தா தொகை ரூ.7,500 கழகத் தலைவரிடம் வழங்கினார். தோழர் முருகேசன் மதுரை மாவட்டக் கழகம் சார்பாக 29 பெரியார் முழக்க சந்தா மற்றும் ரூ.8,700 தொகையை பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தோழர் துரை. தாமோதரன் பெரம்பலூர் மாவட்டக் கழகம் சார்பாக ரூ.10,000 பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தோழர் வேணுகோபால் (தர்மபுரி மாவட்டத் தலைவர்) தர்மபுரி மாவட்டக் கழகம் சார்பாக ரூ.12,900 தொகையை பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தோழர் திருப்பூர் முத்து 20 பெரியார் முழக்கச் சந்தாவுகான ரூ.6000 தொகையை பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பெரியார் முழக்கம் இதழ் 29012026

பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஏரியை புனரமைத்து மேட்டூர் உபரி நீரை தேக்கி, சுற்றுலாத்தளமாக்க வேண்டி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை அப்பகுதி விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி, ஏரியை புரைமைத்து முகப்பில் சோழர்கள் சிலையை நிறுவ வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாடு ஏரி, இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில் 05.01.2025 திங்கள் காலை 10.00 மணியளவில் பனமரத்துப்பட்டி ஏரி அருகில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் தோழர் டேவிட் கலந்து கொண்டு போராட்டத்தை ஆதரித்து கண்டன உரை நிகழ்த்தினார். பெரியார் முழக்கம் இதழ் 22012026

சென்னை, கோவை, சேலத்தில் “வெனிசுலா ஆதரவுப் போராட்டம்”

சென்னை, கோவை, சேலத்தில் “வெனிசுலா ஆதரவுப் போராட்டம்”

சென்னையில் வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்காவின் போர் வெறியை முறியடிப்போம் என்ற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் 10.01.26 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) உரையாற்றினார். வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்) மற்றும் கழகத் தோழர் அசோக் ஆகியோர் பங்கேற்றனர். கோவையில் மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே மதுரோவை விடுதலை செய்,வெனிசுலாவிலிருந்து இராணுவத்தை வெளியேற்று என்ற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம், சிபிஎம்எல் ரெட் ஸ்டார், மக்கள் விடுதலை முன்னணி ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் நிர்மல் (கோவை மாநகரச் செயலாளர்) உரையாற்றினார். தோழர்கள் வெங்கட், தரணி, அறிவுக்கனல் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சேலத்தில், வெனிசுலா இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்க துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஆகியோர் கடத்தலை...

காரமடை கழகத்தோழர் ஜெகதீஷ் காலமானார்!

காரமடை கழகத்தோழர் ஜெகதீஷ் காலமானார்!

கோவை மாவட்டக் கழகத்தின் காரமடை பகுதி அமைப்பாளர் ஜெகதீஷ் 31.12.2025 அன்று மறைவுற்றார். பெரியார் கொள்கைகளை பரப்புவதிலும் பரப்புகிறவர்களுக்கு துணை நிற்பதிலும் தோழர் ஜெகதீஷ் முன்மாதிரியானவர். தோழரின் இணையர் கவிதா அவர்களும் பெரியாரிய கொள்கைப் பற்றாளராவார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி 17.01.2026 சனிக்கிழமை அன்று, மத்தாம்பாளையம், கோட்டை பிரிவு, இன்னிசை நகரில் உள்ள ஜெகதீஸ்-கவிதா இல்லத்திற்கு சென்று தோழரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். நிகழ்வில் துரைசாமி (கழகப் பொருளாளர்), ரத்தினசாமி (மாநில அமைப்புச் செயலாளர்), பன்னீர் செல்வம் (கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல்குமார் (கோவை மாநகரத் தலைவர்), அமுல்ராஜ் (மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர்), அய்யப்பன் (திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), முத்து(திருப்பூர் மாநகர அமைப்பாளர்), சண்முகம் ( பல்லடம் ஒன்றிய அமைப்பாளர்), திருப்பூர் இனியன், ராமசாமி (திருப்பூர் தெற்கு பகுதி அமைப்பாளர்), காவை அவினாசி ஆகிய கழகத் தோழர்கள்உடனிருந்தனர். பெரியார் முழக்கம் இதழ் 22012026

ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்!

ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டக் கழத்தின் சார்பில் திருப்பரங்குன்றத்தில் மதவெறியை தூண்டும் நீதிபதி சாமிநாதனே பதவி விலகு இந்து, இஸ்லாமியர் ஒற்றுமையை வலியுறுத்தி பரப்புரைக் கூட்டம் 18/12/25 அன்று மாலை 5 மணியளவில் பாக்கம் கூட்ரோடு சந்திப்பில் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் தலைமையில் நடைபெற்றது. பெரியார் தொண்டர் சிற்பி ராசன் அவர்களின் மந்திரமல்ல! தந்திரமே! என்ற சாமியார்களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் சாக்ரட்டீஸ் (மாவட்டச் செயலாளர்) முன்னிலை வகித்தார். சீனு செல்வரங்கம் (கண்டமங்கலம் மையக் குழு ஒன்றியச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர்), டிவி.நகர் ராஜா (தலித் பபாதுகாப்பு இயக்கம்), விஜி (பகுத்தறிவு வாழ்வுரிமைக் கட்சி), வீராணம் சு. ஆற்றரலசு (மேனாள் மாவட்டச் செயலாளர் விசிக), தீனா (தலைவர்,பெரியார் சிநந்தனையாளர் இயக்கம்), ந.அய்யனார் (கழக தலைமைக்குழு உறுப்பினர்) ஆகியோர் உரையாற்றினர். வழக்கறிஞர் வீ.அழகரசன் சிறப்புரையாற்றினார். கழகத் தோழர் அழகர் நன்றி கூறினார். கு.செல்வமணி (திமுக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்), ந.புருசோத்தமன் (தி.மு.க...

பொள்ளாச்சியில் சீமானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் சீமானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியாரைப் பற்றி தொடந்து அவதூறு பரப்பி வரும் சீமானைக் கண்டித்து அனைத்து கட்சி இயக்கங்கள் சார்பாக 06.01.2026 அன்று பொள்ளாச்சி காந்தி சிலை புதிய திட்ட சாலையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வே.வெள்ளிங்கிரி திவிக தலைமையில், கோ.சபரிகிரி தொடக்க உரையாற்ற கா.சு.நாகராஜ் (திராவிட இயக்க தமிழர் பேரவை), கா. மாரிமுத்து (மக்கள் விடுதலை முன்னணி), சி மாரிமுத்து (திக), தமிழ்க் குமரன் (ஜெய்பீம் அறக்கட்டளை), குட்டி (விசிக), வாணுகன் (தமிழ்ப் புலிகள் கட்சி), தமிழ்பிரபா (மே 17), கவிஞர். முருகானந்தம் (மாற்று திறனாளிகளுக்கான நியமன நகர மன்ற உறுப்பினர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். சண்முக வேல் பிரபகரன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை) நன்றியுரையாற்றினார். கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 22012026

கோபியில் தெருமுனைப் பிரச்சாரம்!

கோபியில் தெருமுனைப் பிரச்சாரம்!

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 04.01.2026 ஞாயிறு அன்று கோபி அம்மாபேட்டை ஒன்றியம் சனி சந்தை பகுதியில், ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. செல்வகுமார் (மாவட்டச் செயலாளர்) தலைமையேற்றார். சிவானந்தம் (தோணி மடுவுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்), தைரியமணி (புஇமு), பாரி (அருந்தமிழர் வாழ்வுரிமைக் கட்சி), காவலாண்டியூர் குமரேசன், நாத்திகசோதி (மாவட்டத் தலைவர்) ஆகியோர் உரையாற்றினர். பரப்புரை பயணத்தின் நோக்கத்தினை விளக்கி இராம. இளங்கோவன் (வெளியீட்டுச் செயலாளர்) விளக்க உரையாற்றினார். இரமேசு நன்றி கூறினார். பெரியார், அம்பேத்கர், கழகத்தின் செயல்பாடுகள் குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டன. கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தோழர்களும், காவலாண்டியூர் பகுதி கழகத் தோழர்களும், பெரியார் தொழிற்சங்க பேரவை தோழர்களும் கலந்து கொண்டனர். தோழருக்கான உணவு ஏற்பாடுகளை தோனிமடுவு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் ஏற்பாடு செய்தார். பெரியார் முழக்கம் இதழ் 22012026

கிராமங்கள்தோறும் பிரச்சாரம் – கோவை மாவட்டக் கழகம் முடிவு!

கிராமங்கள்தோறும் பிரச்சாரம் – கோவை மாவட்டக் கழகம் முடிவு!

கோவை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 03.01.2026 அன்று தமிழ்ப் புலிகள் கட்சி தலைமை அலுவலகத்தில் சூலூர் பன்னீர்செல்வம் (மாவட்டக் கழகச் செயலாளர் ) தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் 2025-ஆம் ஆண்டு செயல்பாடுகள், 29.12.2025 அன்று அன்று கோவையில் நடந்து முடிந்த போராட்டத்தின் நிறைகுறைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டு போராட்ட வரவு – செலவுக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் பின்வருமாறு:- 1. அண்மையில் மாரடைப்பால் முடிவெய்திய கழகக் காரமடை பகுதி அமைப்பாளர், பொறியாளர் ஜெகதீசு அவர்களுக்கு கோவை மாவட்டக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மிகவிரைவாக அவர் வாழ்ந்த காரமடையில் நினைவேந்தல் கூட்டம் நடத்துவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது. 2. கோவையில் நடந்து முடிந்த ஜாதியத் தீண்டாமைக்கு எதிரானப் போராட்டத்திற்கு முகம் அறியாத – வெளிநாட்டில் வசிக்கும் பலரும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து 100, 200, 500,1000...

இங்கர்சால் மறைவு

இங்கர்சால் மறைவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் அவர்களின் மகன் “இங்கர்சால்” 17.01.26 சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் முடிவெய்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை 4 மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்டயூரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று “இங்கர்சால்” உடலுக்கு புகழ்வணக்கம் செலுத்தி, நினைவேந்தல் உரையாற்றி இரங்கல் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் எஸ்.எம்.எஸ் சிக்பால் (ம.தி.மு.க), சந்திரசேகர் (த.பெ.தி.க), அஷ்ரப் அலி (தி.மு.க), வேலுச்சாமி (தி.க), கோபால் (பா.ஜ.க.), அருள்வடிவு (மேட்டுப்பாளையம் நகர மன்ற துணைத் தலைவர்), முனுசாமி (தி.மு.க தெற்கு நகரச் செயலாளர்) ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். துரைசாமி (கழகப் பொருளாளர்), ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), பன்னீர் செல்வம்(கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல்குமார்( கோவை மாநகரத் தலைவர்), அமுல்ராஜ் (மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர்), அய்யப்பன் (திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), சண்முகம் (பல்லடம் ஒன்றிய அமைப்பாளர்), திருப்பூர் இனியன், ராமசாமி (திருப்பூர் தெற்கு...

மண்டல் குழுப் போராளி நூல் வெளியீட்டு விழா

மண்டல் குழுப் போராளி நூல் வெளியீட்டு விழா

கிருஷ்ணகிரி ஈடன் கார்டன் வளாகத்தில் திருவள்ளுவர், பெரியார் மானுட ஒன்றிய அமைப்பின் சார்பில் திரு.வழ.முகமது சாதிக் (வெல்பேர் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர்) தலைமையில், திருவாளர்கள் கா.மாணிக்கம், கோ.தங்கராசு, ரபீக் அகமது, சென்னை அன்புசீலன், காமராசு ஆகியோர் முன்னிலையில் “மண்டல் குழுப் போராளி அறிஞர் ஆனைமுத்து” எனும் நூல் வெளியீடு 21-12-2025 அன்று நடைபெற்றது. வே.இராசா (வட்டாட்சியர் ப.நி) வரவேற்புரையாற்றினார். வழ. அன்பு தனசேகர் ( வருவாய் வரித்துறை அதிகாரி ப.நி) அறிமுகவுரையாற்றினார். கு.முத்துசாமி (செயற்பொறியாளர், மின்சார வாரியம். ப.நி) நூலை வெளியிட்டு உரையாற்றினார். கல்வி வள்ளல் PSV கல்லூரி தாளாளர் முனைவர் பி.செல்வம் சார்பாக அவர்தம் நண்பர் இராமசாமி நூலினைப் பெற்றுக் கொண்டார். பேரா.சிற்பி இராசன் அவர்கள் “மந்திரமா? தந்திரமா?” மூலம் மூட நம்பிக்கைகளைப் போக்கும் உரை நிகழ்த்தினார். கிருஷ்ணமூர்த்தி (அரசு ஊழியர் அய்க்கிய பேரவை) நன்றி கூறினார். நிகழ்வை குயில்தாசன் ஒருங்கிணைத்தார். மாணவர்களும், பொது மக்களும் பங்ககேற்று சிறப்பித்தனர்....

பாலமலை மலையாளி மக்களுக்கு பட்டா வழங்குக!

பாலமலை மலையாளி மக்களுக்கு பட்டா வழங்குக!

மேட்டூரில் வன உரிமை மீட்புக்குழுவின் சார்பில் பாலமலையில் வாழும் மலையாளி இன மக்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வன உரிமை மீட்புக்குழுவின் சார்பில் பாலமலையில் வாழும் மலையாளி இன மக்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 15.12.2025 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மேட்டூரில் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்றது. வன உரிமை மீட்புக்குழுத் தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். புள்ளாம்பட்டி ராஜேந்திரன், பெரியகுளம் ஜெயராமன், துவரங்காடு பொன்னுசாமி, ராமன் பட்டி பாலமுருகன், திம்மப்பொதி ராமலிங்கம், பாலமலையின் அனைத்து கிராமங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். பாலமலை பழங்குடி மலையாளி இன மக்களின் பட்டா நிலங்களை மோசடியாக, பழங்குடி அல்லாதவர்களுக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்றும், மலையாளி இன மக்களின் அனுபவத்தில் உள்ள நிலங்களை முறையாக அளவீடு செய்து பட்டா வழங்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசிய...

‘ஜாதி அடையாளம் அல்ல அவமானம்’ – புதுச்சேரியில் கருத்தரங்கம்!

‘ஜாதி அடையாளம் அல்ல அவமானம்’ – புதுச்சேரியில் கருத்தரங்கம்!

பெரியாரிய பற்றாளர் தோழர் சிற்பி ராசன் அவர்களின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில், ‘ஜாதி அடையாளம் அல்ல அவமானம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதுச்சேரி ராசா நகரில் டிசம்பர் 25 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. தியாகு தலைமையில் பாரதி வரவேற்புரையாற்ற புதுவை தீனா தொடக்க உரையாற்றினார். யூ2புரூடஸ் மைனர், இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), முனைவர் பன்னீர்செல்வம் (சமூக செயற்பாட்டாளர், புதுச்சேரி), வீ.ரா.பாலகிருஷ்ணன் (ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். திரைத்துறையில் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பேசிய திரை கலைஞர்களைச் சிறப்பிக்கும் விதமாக வெளிவந்துள்ள 2026-ஆம் ஆண்டுக்கான கழக நாட்காட்டியை (ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர்) பாலகிருஷ்ணன் வெளியிட அய்யா சிற்பி ராசன் பெற்றுக்கொண்டார். பா.சந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பெரியாரிய சிந்தனையாளர் இயக்கத் தோழர்கள் மற்றும் முற்போக்கு இயக்கத் தோழர்கள், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கடலூர் சிவா, சென்னை அசோக், வீரா,...

பெரியார் தொழிற்சங்கப் பேரவை பெயர்ப்பலகை திறப்பு!

பெரியார் தொழிற்சங்கப் பேரவை பெயர்ப்பலகை திறப்பு!

கருஞ்சட்டைப் படைகளுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தந்தை பெரியார் தொழிற்சங்கப் பேரவையின் பவானி கிளை பெயர் பலகைத் திறப்பு விழா நடைபெற்றது. தந்தை பெரியார் தொழிற்சங்கப் பேரவையின் பவானி கிளையின் பெயர் பலகைத் திறப்பு விழா 22. 12. 2025 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்டம், ஊராட்சி கோட்டையில் உள்ள பவானி பணிமனையில் த.பெ.தொ.பே பவானி கிளைத் தலைவர் சி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. த.பெ.தொ.பே பவானி கிளையின் துணைத் தலைவர் மா. சு. சந்திரகாந்த், அந்தியூர் கிளையின் தலைவர் கோ. செல்லத்துரை, அந்தியூர் கிளைச் செயலாளர் சி. முருகேசன், அந்தியூர் கிளை துணைச் செயலாளர் குப்புசாமி ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர். த.பெ.தொ.பே. பவானி கிளையின் தலைவர் வீ. வெங்கடாசலம், பொதுச்செயலாளர் சி. குப்புசாமி, செயலாளர் மா. சரவணன், பொருளாளர் சா. செல்வன் ஆகிய தோழர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். மக்கள் வழக்கறிஞர் ப.பா...

காரைக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்!

காரைக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்!

‘பெரியார் எனும் அறிவியல்’ என்ற தலைப்பில் பயிலரங்கம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள குறளரங்கத்தில் 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. முதல் வகுப்பாக EH you tube channel, கழக பேராவூரணி நகர அமைப்பாளர் கலைச்செல்வன் ‘மனித பரிணாமமும் பகுத்தறிவும்’ என்ற தலைப்பில் ஆரம்ப காலம் முதல் இப்பொழுது இருக்கும் காலம் வரை மனிதன் பரிணாமம் அடைந்ததைப் பற்றி அறிவியல்பூர்வ விளக்கவுரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘அறிவியல் பார்வையில் பெரியாரியம்’ என்ற தலைப்பில் பார்பனர்கள் நம் மக்களை கடவுள் பெயரைச் சொல்லி அடிமைப்படுத்தியதையும், சுரண்டி பிழைப்பு நடத்தியதையும் அதிலிருந்து பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களிடம் எடுத்துக்கூறி மீட்ட வரலாற்றைப் பற்றியும் விளக்கவுரையாற்றினார். பெரியார் தொண்டர் சிற்பி இராசனின் ‘மூடநம்பிக்கையும் அறிவியலும்’ என்ற தலைப்பில் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கடவுள் என்ற பெயரால் சாமியார்கள் மக்களை ஏமாற்றும் வகையிலும், பணம் சேர்க்கும் வகையிலும் செய்யும்...

பொதுச்செயலாளருக்கு பெரியார் விருது கொடுத்தது சரியே! பெரியார் விருதை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி

பொதுச்செயலாளருக்கு பெரியார் விருது கொடுத்தது சரியே! பெரியார் விருதை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு 5,00,000 விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப் படுகிறது. கடந்த ஆண்டு (2024) திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் புது வெண்ணாம்புதூர் என்ற ஊரைச் சார்ந்த டி. ஸ்ரீதர் என்பவர் பெரியார் பெயரில் விருது வழங்கக்கூடாது என்று ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதேபோல, விடுதலை இராசேந்திரன், கலி பூங்குன்றன், சுப.வீர பாண்டியன் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கியது தகுதியானது அல்ல என்றும், மூவருக்கும் வழங்கப்பட்ட விருதுகளைத் திரும்பப் பெற்று புதிதாகத் தகுதி பெற்ற நபர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மீண்டும் முறையீடு செய்தார். பெரியார் விருதே கூடாது என்று ரிட் மனு தாக்கல் செய்த இந்த நபர்,...

நிமிர்வோம் அரங்கில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

நிமிர்வோம் அரங்கில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சனவரியில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் முதன்முதலாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் இடம்பெற்றுள்ளது. அரங்கு எண் 10 நிமிர்வோம் பதிப்பகத்திற்கு ஒதுக்கப்பட்டது. திராவிட இயக்கத்தின் பணிகள், லட்சியங்கள், செயல்பாடுகளை விவரிக்கும் வகையிலும், திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனங்கள், அவதூறுகளுக்கு பதிலடி தரும் வகையிலும் வெளியீடுகள் நிமிர்வோம் பதிப்பக அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நிமிர்வோம் அரங்கை ஆர்வத்துடன் பார்வையிட்டு, முன்னாள் வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்துடன் செல்பி எடுத்துக்கொண்டு, நூல்களையும் வாங்கிச் செல்கின்றனர். அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் நிமிர்வோம் அரங்கிற்கு தவறாமல் வருகை தருகின்றனர். புத்தகக் காட்சி தொடங்கிய முதல் 5 நாட்களிலேயே நிமிர்வோம் அரங்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நூல்கள் விற்பனையாகியுள்ளன. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் அரங்க...

குடியுரிமையை பறிக்கும் கூட்டுச்சதி எஸ்.அய்.ஆர்.!

குடியுரிமையை பறிக்கும் கூட்டுச்சதி எஸ்.அய்.ஆர்.!

விசிக சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு எஸ்.அய்.ஆர் (S.I.R) குடியுரிமை பறிக்கும் கூட்டுச்சதி விளக்கத் தெருமுனைக் கூட்டம் டிச-7, 2025 அன்று மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ரூதர்புரம்.அ சுரேசு ( 125 வட்டச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) எஸ்.அய்.ஆர் குறித்தும் சனாதன எதிர்ப்பு களத்தில் தமிழ்நாடு எப்படி பயணிக்கிறது என்பது பற்றியும் கருத்துரையாற்றினார். யூதர் சு.கார்த்திக் (மண்டலச் செயலாளர்), வழக்கறிஞர் பி.சாரநாத் (மாவட்டச் செயலாளர்) மற்றும் பல்வேறு விசிக நிர்வாகிகள் உரையாற்றினார்கள். கழகத் தோழர்கள் குமார், பிரசாந்த் (முழக்கம் செய்தியாளர்) மற்றும் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 08012026

தோழர் லலிதா நினைவுநாளையொட்டி ஏழை – எளியோருக்கு உணவு!

தோழர் லலிதா நினைவுநாளையொட்டி ஏழை – எளியோருக்கு உணவு!

சென்னை கழகத் தோழர் புருஷோத்தமன் இணையர் லலிதாவின் நினைவு நாளையொட்டி, டிச-4, 2025, அவருடைய நந்தனம் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக்குழு உறுப்பினர்), இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, இராவணன் (மாவட்ட துணைச்செயலாளர் ), ப.அருண் ( மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), மயிலாப்பூர் பகுதித் தோழர்கள் மனோகர், சிவா, சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), சே. ராஜேஷ் (பகுதிச் செயலாளர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்), தோழர்கள் சைதை சிவா, தினகரன், இரண்யா, குறளரசி உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். புருஷோத்தமனின் மகனும் திரைப்பட இயக்குநருமான அருண் பிரபு, பேத்தி அனுகீர்த்தி அனைவரையும் வரவேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்...

குடிமங்கலத்தில் பெரியார் நினைவுநாளில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

குடிமங்கலத்தில் பெரியார் நினைவுநாளில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று “மனிதம் நமது அடையாளம் ; ஜாதி என்பதுஅவமானம்” எனும் தலைப்பில் மடத்துக்குளம் ஒன்றிய மாவட்டக் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கணக்கன் (மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர்) தலைமை தாங்கினார். சிவானந்தம் (மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர்), கடத்தூர் அய்யப்பன் (மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 11:00 மணிக்கு குடிமங்கலம் நான்கு சாலை சந்திப்பு, மதியம் 12.00 மணி அளவில் கொங்கல் நகரம் பேருந்து நிறுத்தம் அருகில், மாலை 03.00 மணியளவில் பெதப்பம் பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் என் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. துரைசாமி (கழகப் பொருளாளர்), பரிமள ராசன் (சமூக வலைதள பொறுப்பாளர்), முகில் ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), தமிழ் அமுதன் ( மார்க்சிய சிந்தனையாளர்), வழக்கறிஞர்.பெரியார்தாசன் (ஆதித்தமிழர் பேரவை), ஈழவேந்தன்...

பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!

பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: பெரியார் நினைவு நாளையொட்டி டிச.24 அன்று காந்திபுரம் பெரியார் சிலை முன்பு காலை 9.30மணிக்கு கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. ஏற்காடு: டிசம்பர்-24 அன்று கழகப் பொறுப்பாளர் ஏற்காடு பெருமாள் தலைமையில் தந்தை பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. சேலம் கிழக்கு: 24.12.2025 காலை 10.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), முத்துமாணிக்கம் (கிழக்கு மாவட்ட அமைப்பாளர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்), ரமேஷ்(இளம்பிள்ளை நகரத் தலைவர்), மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), தேவராஜ் (சேலம் மாநகர அமைப்பாளர்), வெற்றிமுருகன்(மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), பிரபு(சேலம் மாநகர பொருளாளர்) மற்றும் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம்...

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

ஈரோட்டில் கழகத் தோழர்கள் உடல் உறுப்புதானம்

ஈரோட்டில் கழகத் தோழர்கள் உடல் உறுப்புதானம்

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் 24.12.2025 அன்று ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இறப்புக்குப் பின் தங்களது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் தங்களுடைய உடல்களை முறைப்படி உடல் தானம் செய்தனர். இரத்தினசாமி, சண்முகப்பிரியன், சென்னிமலை செல்வராசு, திருமுருகன், மரவப்பாளையம் குமார், கோபிநாத், நல்லதம்பி, சி.எம். நகர் பிரபு, சுரேஷ், ராசண்ணா, மீசை முருகேஷ், கண.குறிஞ்சி இசைக்கதிர் ஆகிய 13 தோழர்கள் சட்ட முறைப்படி உடல் தானம் கொடுக்க முன்வந்துள்ளனர். பெரியார் முழக்கம் இதழ் 01012026

கழகத் தோழர் காவை.இளவரசன் அவர்களின் தாயார் மறைவுற்றார்!

கழகத் தோழர் காவை.இளவரசன் அவர்களின் தாயார் மறைவுற்றார்!

கழகத் தோழர் காவை. இளவரசன் அவர்களின் தாயர் சரசுவதி உடல் நலக்குறைவால் 17.12.2025 மாலை 4.00 மணியளவில் மறைந்தார். அவர்களின் இறுதி நிகழ்வு 18.12.2025 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் காவலாண்டியூர் இளவரசன் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்தார். கழக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் மறைந்த சரஸ்வதி அம்மாள் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்றனர். இதில் கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 01012026

களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

பெரியாரின் 52வது நினைவுநாளில் (24/12/25), கழகப் பணியில் உயிர்நீத்த தோழர்கள் கண்ணன் – குமாரின் 20-ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம், சென்னை ராயப்பேட்டை வெங்கடாசலம் தெருவில், மாலை 6 மணியளவில் சு. பிரகாஷ் தலைமையில், தோழர்கள் ப. கணேசன், ரா. குட்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இரா. உமாபதி – வீரமணி – திராவிட மகிழன் குழுவினரின் பாடல்களும், சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சியும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. 60 பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தபசி குமரன் (கழக தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), ரூதர் கார்த்திக் (விசிக தென்சென்னை மண்டலச் செயலாளர்), கழகத் தோழர் அறிவுமதி ஆகியோர் கருத்துரையாற்றினர். கருத்துரையாற்றிய ரூதர் கார்த்திக் அவர்களுக்கு கழகத் தோழரும், கண்ணன் குமார் நண்பரும், அவர்களது விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்த வீரமுத்து, கழக வெளியீடுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும்...

பொள்ளாச்சி, ஈரோடு, மயிலாப்பூரில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

பொள்ளாச்சி, ஈரோடு, மயிலாப்பூரில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

பொள்ளாச்சி: தந்தை பெரியார் நினைவு நாளான டிச-24 அன்று ஜாதி தீண்டாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தெருமுனைக் பரப்புரைக் கூட்டங்கள் பொள்ளாச்சி ஆனைமலை வேட்டைக்காரன் புதூர் பகுதியில் வே.வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது. பாடகர் கண்ணையன், வழக்கறிஞர் சேதுபதி (தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம்), தமிழ் குமரன் (ஜெய் பீம் அறக்கட்டளை), பிரபா (மே 17 இயக்கம்), பிரபாகரன் (திராவிட இயக்க தமிழர் பேரவை), வழக்கறிஞர் ரிசி (தமிழ்ப்புலிகள் கட்சி), பொறியாளர் பரமசிவம், (திக), ராஜ்குமார் (திமுக இலக்கிய அணி), முத்தமிழன் (மக்கள் விடுதலை முன்ணனி), சபரிகிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்) மற்றும் கழகத் தோழர்கள் ஆனந்த், அரிதாஸ், நடராஜ் மணி தோழமை அமைப்புத் தோழர்கள் பங்கேற்றனர். ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 21.12.2025 ஞாயிறு மாலை 6 மணி அளவில் அம்மாப்பேட்டை ஒன்றியம் குருவரெட்டியூர் பகுதியில் “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்”...

எழுத்தாளர் பாமரன் இணையர் மறைவு!

எழுத்தாளர் பாமரன் இணையர் மறைவு!

எழுத்தாளர் பாமரன் அவர்களின் இணையர் தோழர் யாழ்மொழி அவர்கள் உடல் நலக்குறைவால் 26.12.2025 அன்று இயற்கை எய்தினார். 29.12.2025 கோவை பூ மார்கெட், சிரியான் சர்ச் ரோடுல் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாரமரன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். பன்னீர் செல்வம் (கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல் (மாநகரத் தலைவர்), வெங்கட்(மாநகரச் செயலாளர்), அன்னூர் விஷ்னு, மோகன கிருஷ்ணன், நவீன் மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர். சமூக வலைதளப் பக்கத்தில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதியிருந்த பதிவில், “அன்புத் தோழர் பாமரனின் இணையர் யாழ்மொழியின் இறப்புச் செய்தி, உண்மையிலே என்னை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு சில முறைதான் அவரை நான் சந்தித்திருக்கிறேன். நீண்ட காலம் பழகியது போல் உணர்வுகளையும் உரிமைகளையும் எடுத்துக்கொண்டு கலகல என்று அவர் கொட்டிய அன்பு மொழிகள் அப்படியே என் கண் முன் தெரிகிறது. அன்புத்தோழர் பாமரனை வாழ்க்கையில் அவர் சுமந்தார்....

பெரியார் பெயரை மறைப்பதா? கழகம் எதிர்வினை!

பெரியார் பெயரை மறைப்பதா? கழகம் எதிர்வினை!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளமான ஏற்காட்டிற்கு செல்லும் வழியில் இருபது கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் ஒவ்வொரு வளைவிற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது, அதன்படி எட்டாவது கொண்டை ஊசி வளைவிற்கு தந்தை பெரியார் அவர்களின் பெயரை நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக வைக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 24 தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவு நாளை இருட்டடிப்பு செய்ய வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு தந்தை பெரியார் வளைவு என்ற பெயரின் மீது கருப்பு மையை பூசி விட்டு அதன் மீது தகடூர் அதியமான் வளைவு என்ற பதாகையை ஒட்டி பெரியாரைப் பற்றி வசைச்சொற்களால் கூச்சலிட்டுச் சென்றனர். இந்த அராஜகச் செயலைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையிடமும், நெடுஞ்சாலைத் துறையிடமும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் முறையாக மனு கொடுக்கப்பட்டது, ஆனால் காவல் துறையும், நெடுஞ்சாலைத் துறையும் சேர்ந்து...

ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், அரங்கு எண் 10-இல் இடம்பெறுகிறது. கழகத்தின் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், அரங்கு எண் 10-இல் இடம்பெறுகிறது. கழகத்தின் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!   தமிழ்நாடு  அரசை  வலியுறுத்தி  கோவையில்  போராட்டம்

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோவையில் போராட்டம்

2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ‘இது தமிழ்நாடு – இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை’ மாநாட்டில் ‘வைக்கம் போர் முடியவில்லை’ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்துப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டது. 2025-இல் கழகத் தலைமைக் குழுவில் செப்-17 முதல் செப்-24 வரை “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் நிறைவாக கோவையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களைக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கழகத்தின் சார்பில், கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கை கோரி மாநிலம் தழுவிய போராட்டம், டிசம்பர் 29-அன்று காலை 10.30 மணிக்கு...

ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் டிசம்பர் 29 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள போராட்டத்திற்கு தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் பொதுமக்கள் தங்களால் ஆன ஆதரவை கொடுத்து உதவுமாறு பொதுவெளியில் சமூக ஊடகங்களில் தோழர்கள் பலரும் பதிவிட்டனர் அந்த பதிவை பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, தங்களால் முடிந்த சிறு தொகையை அவரவர் சக்திக்கு ஏற்றவாறு நிர்மல் குமாரின் கூகுள் பே எண்ணுக்கு அனுப்பி, போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த, தற்போது கத்தாரில் பணியாற்றி வரும் தோழர் ஒருவர் இந்த போராட்டம் மிக அவசியமானது எனக்கூறி, ஆர்வத்துடன் நிதி உதவி அளித்திருப்பதோடு, கழகத்தின் இந்த போராட்டத்திற்கான தீர்மானம் 2023-இல் சேலம் மாநாட்டில் இயற்றப்பட்ட சமயத்தில் இருந்து கவனித்து வருவதாக கூறியுள்ளார்....

சட்ட எரிப்பு மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

சட்ட எரிப்பு மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

1957 நவம்பர் 26 அன்று, தந்தை பெரியாரின் கட்டளைப்படி, 10,000-க்கும் மேற்பட்ட கருப்புச் சட்டைத் தொண்டர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை எரித்தனர்! 3,000 பேர் கைது செய்யப்பட்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். இதில் 18 க்கும் மேற்பட்டோர் சிறையிலும் சிறைக்கு வெளியேயும் இறந்தனர்! சுயமரியாதையை மீட்டெடுக்கவும், ஜாதியை ஒழிக்கவும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு யாழ். வெள்ளிங்கிரி தலைமையில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பாக நடைபெற்றது. பொறியாளர் பரமசிவம் (தி.க.), சண்முகவேல் பிரபாகரன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), மணிமாறன் தென்றல் (திமுக கோவை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்), வழக்குரைஞர் சேதுபதி (தமிழர் தன்னுரிமை மீட்பு இயக்கம்), கா.மாரிமுத்து (மக்கள் விடுதலை முன்னணி), தமிழ் பிரபாகரன் (மே 17 இயக்கம்), ம.கோ.சபரிகிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்) கலந்துகொண்டு சட்ட எரிப்புப் போராட்ட நினைவுகளைப் பகிர்ந்து...

அம்பேத்கர் நினைவு நாளில் மரியாதை!

அம்பேத்கர் நினைவு நாளில் மரியாதை!

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, டிச-6,2025 காலை 8 மணியளவில், ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கொள்கை முழக்கமிட்டோம். ம.கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ம. குகாநந்தன், அருண் கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்), இமானுவேல் துரை, ஷேக் முகமது, மருத்துவர் கணேஷ், கார்த்தி ராஜேந்திரன், தீபக், மஞ்சுநாதன், மடிப்பாக்கம் அருண், புகழேந்தி, ஸ்ரீலேகா, நந்தகுமார், ராஜஸ்ரீ, ரஞ்சித், ஜெயவேல், யாழ் நிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 25122025

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

2006-இல் காசி விஸ்வநாதர் கோயில் நிலத்துக்கு சொந்தமான இடத்தில் மசூதி கட்டுவதாக வெடித்த சர்ச்சையில், இந்து முன்னணியைச் சேர்ந்த குமார பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டனர். உண்மையிலேயே அந்த இடம் கோயில் நிலம்தானா இல்லையா என்ற வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி கலவரங்களை உருவாக்கி, அதில் இந்துத்துவ குளிர் காய்ந்துகொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். இப்போது திருப்பரங்குன்றம் வரை இது தொடர்கிறது. ஆனால் இதில் இழப்புகளைச் சந்திப்பது ஹெச்.ராஜாவை போன்ற பார்ப்பனர்கள் இல்லை, அப்பாவி சாமானிய இந்துக்களே. குமார பாண்டியன் குடும்பத்தினரும் அப்படிப்பட்ட சாமானிய இந்துக்களே. கொலை செய்யப்பட்டவர்களில் குமார பாண்டியன் சகோதரரின் மகளான ருத்ரா இந்த பார்ப்பன சூழ்ச்சியை புரிந்துகொண்டு, பெரியாரியத்தை நோக்கி தனது திசையை திருப்பிக்கொண்டு, இப்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவையுடன் பயணித்து வருகிறார். அவர், “ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்” என்ற...

டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்!  ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!

டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்! ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், டிசம்பர் 29-ஆம் தேதி, ஜாதி தீண்டாமைக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகள் கோரி போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டுக் கிராமங்கள் இன்னமும் ஜாதியக் கட்டமைப்புக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையிலேயே ஒரு வெட்கப்படத்தக்க நிலையாகும். இன்னமும் கிராமங்களில் ஜாதி தீண்டாமைகள் எப்படி நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன, நிலைநாட்டப்பட்டு வருகின்றன, அதன் வடிவங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதையெல்லாம் கோவை, திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமம் கிராமமாகச் சென்று ஆராய்ந்து, அதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஆணையத்தின் முன் திராவிடர் விடுதலைக் கழகம் கையளித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ‘ஜாதி ஒரு அவமானம், மனிதம் நமக்கு அடையாளம்’ என்ற ஒரு தலைப்பில் தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, மக்களிடம் ஜாதியத் தீண்டாமைக் கொடுமைகளுக்கு...

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

கழக ஆதரவாளரான தோழர் ரஞ்சித் அவர்களின் சிற்றுண்டி கடை (SNACKIFY), இராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிலையம் அருகில் டிசம்பர்-14, 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் ப. அருண் (இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் கடை திறப்பு விழா நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) சிற்றுண்டி கடையைத் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஆர்.என்.துரை (திமுக தென்சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர்) கலந்து கொண்டார். திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் மற்றும் ரஞ்சித் குடும்பத்தினர், நண்பர்கள் உடனிருந்தனர். புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 மாவட்டச் செயலாளரிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 18122025

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

வடசென்னை கழகத் தோழர் அருள்தாஸின் தாயார் அஞ்சலை (என்கிற) அன்னை மரி முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு டிச-11, 2025 மாலை 6 மணிக்கு கே.பி.பார்க் இல்லத்தில் நடைபெற்றது. அருள்தாஸ் புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு 10 சந்தாக்களை வழங்கினார். நிகழ்வில், இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர் ), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மற்றும் ராஜன், தினகரன், விஜயன், அசோக் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 18122025