Category: திவிக

எதையும் ஏன்? என்று கேள்வி கேள்!குழந்தைகள் மகிழ்வு பழகுமுகாம்

எதையும் ஏன்? என்று கேள்வி கேள்!குழந்தைகள் மகிழ்வு பழகுமுகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய குழந்தைகள் பழகு மகிழ்வு ஒரு நாள் முகாம் 30.05.2026 சனிக்கிழமை கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. சுகந்தன் பிரபாகரன் (தமிழ்நாடு மாணவர் கழகம்) தலைமை வகித்தார். செ.யாழ் இன்பன் (தமிழ்நாடு மாணவர் கழகம்) முன்னிலையில் நடைபெற்றது. முதல் வகுப்பாக தன்னை அறிதல் என்ற தலைப்பில் `சிறார் நண்பன்’ ஆனந்த் குழந்தைகள் தாங்கள் யார்? தங்களின் அடையாளம் என்ன? வாழ்வில் தாங்கள் அடையவேண்டிய இலக்குகளை எவ்வாறு திட்டமிடுவது? என்பது குறித்து ஒரு கலந்துரையாடலாக, செயல்பாடுகளுடன் வகுப்பு நடைபெற்றது. ஏனென்று கேள்வி கேள்? என்ற தலைப்பிலான வகுப்பை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி நடத்தினார். சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலையும் பெற வேண்டும் என்பதனை குழந்தைகள்...

ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர்களின் தந்தையார் சென்னியப்பன் (73) அவர்கள் உடல் நலக்குறைவின் காரணமாக சில நாட்களுக்கு முன்பு முடிவெய்தினார். 17.05.26 அன்று இரவு நசியனூர் சாமிக்கவுண்டன் பாளையத்தில் உள்ள சண்முகசுந்தரம் இல்லத்துக்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி  ஆறுதல் தெரிவித்தார்.

ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர்களின் தந்தையார் சென்னியப்பன் (73) அவர்கள் உடல் நலக்குறைவின் காரணமாக சில நாட்களுக்கு முன்பு முடிவெய்தினார். 17.05.26 அன்று இரவு நசியனூர் சாமிக்கவுண்டன் பாளையத்தில் உள்ள சண்முகசுந்தரம் இல்லத்துக்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆறுதல் தெரிவித்தார்.

`திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

`திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

மத நல்லிணக்கத்தை பேசும் “திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய களம் என்ற அமைப்பு இந்த படத்தை திரையிடும் முயற்சிகளில் ஈடுபட்டது. திராவிட மாடல் ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுதும் எந்த தடையுமின்றி இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு வந்தது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் திரையிடப்பட்டது. `திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்!’ என்ற வெறிக்கூச்சலோடு மதவாத சக்திகள் சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதையும்; நீதிமன்ற தீரப்பின் முரண்பாடுகளையும் இந்த ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது.தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கும் இந்த முயற்சியை திராவிட மாடல் ஆட்சி உறுதியாக முறியடித்தது. காவல்துறை அனுமதி மறுப்பதற்கு மேலிட உத்தரவு என்ற ஒரு காரணத்தை கூறுகிறது. எந்த மேல் இடத்திலிருந்து உத்தரவு வந்தது? பெரியார் அம்பேத்கரை தங்களின் கொள்கைத் தலைவராக அறிவித்துக் கொள்ளும் த.வெ.க ஆட்சி அவர்கள் வலியுறுத்திய கொள்கைக்கு...

சென்னையில் கழகம் ஆர்பாட்டம்  பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது!

சென்னையில் கழகம் ஆர்பாட்டம் பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது!

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக்கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “ஒன்றிய அரசே! பாடத்திட்டத்தில் இந்தியைத் திணிக்காதே! தமிழ்நாடு அரசே! பி.எம். பள்ளிகளை அனுமதிக்காதே” எனும் உரிமை முழக்க ஆர்ப்பாட்டம், 30/5/26 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில், மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், இரண்யா ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் நோக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – லதா – சத்யா குழுவினரின் பாடல்கள் உணர்வூட்டின. ராஜா தமிழ்தேச மக்கள் முன்னணி மும்மொழிக்கொள்கையின் ஆபத்துகளை படம்பிடித்துக் காட்டினார். தபசி குமரன் “தவெக அமைச்சர்கள் வெளிப்படுத்தும் கருத்துகளில்” அதிருப்தியை வெளிப்படுத்தினார், திமுக வழக்கறிஞர் ஆலிம் அல்புகாரி “கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு...

ஜீவா நூலுக்கு சரியான பதில்!

ஜீவா நூலுக்கு சரியான பதில்!

கம்யூனிஸ்ட்களிலிருந்து ஆள் பிடித்தாரா பெரியார்? சில நாட்களுக்கு முன்பாக முகப்புத்தகத்தில் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. அதில் ஈரோட்டுப் பாதை சரியா? என ஜீவா எழுதிய புத்தகத்தை கண்டு கொளத்தூர் மணியே ஆடிபோனார். அவரால் கூட பதில் சொல்ல முடியாத ஏற்கத்தக்க விமர்சனங்களால் ஆன புத்தகம் அது எனப் பெரியாரை இகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. இதற்கு சரியான பதிலை கொளத்தூர் மணி எழுதினார். மிகச்சரியான புள்ளிவிவரங்களுடனும், அதை அந்தகாலத்தில் நடந்த சம்பவங்களுடனும் ஒப்பிட்டு எழுதியிருப்பது மிக அருமை. என்னைப் போன்றோர் பெரியாரை சரியாக புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது. – ந.யதிந்தர். மதுரை பெரியார் முழக்கம் இதழ் 29052026

ஆனூர்.ஜெகதீசன் துணைவியார் முடிவெய்தினார்

ஆனூர்.ஜெகதீசன் துணைவியார் முடிவெய்தினார்

தோழர் ஆனூர்.ஜெகதீசன் அவர்களின் இணையர் மறைவுற்றார். அவருக்கு கழகம் சார்பில் 13.05.26 அன்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையைச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர். அவரது மறைவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் 15.05.2025 மதியம் 2 மணி அளவில் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஆனூர் ஜெகதீசன் அவர்களது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 29052026

பொம்மைகளை பகுத்தறிவு பேச வைத்த கலைவாணன் விடைபெற்றார்

பொம்மைகளை பகுத்தறிவு பேச வைத்த கலைவாணன் விடைபெற்றார்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் இரங்கல் அறிக்கை: கலைவாணன் (67) இறந்துவிட்டார் என்ற செய்தியை உள்ளம் ஏற்கவே மறுக்கிறது; அவருடன் பழகிய எவரும் அவருடைய நினைவுகளில் இருந்து மீளவே முடியாது. தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் எப்போதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கக்கூடிய உயர்ந்த பண்பாளர். அவரது தந்தை முத்துக்கூத்தன் மிகச்சிறந்த திராவிட இயக்கத்தின் கலைப் போராளி; வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் வழியாக பகுத்தறிவு சிந்தனைகளையும் திராவிட இயக்க கொள்கைகளையும் பரப்பியவர். தனது மகனை மிகச்சிறந்த கொள்கை வாரிசாக வளர்த்து எடுத்தார். மகனுக்கு என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக அவர் சூட்டிய பெயர்தான் கலைவாணன். தந்தையிடமிருந்து பெற்ற உணர்வுகளோடு தனது கலை ஆர்வத்தை மிகச் சிறப்பாக வளர்த்துக் கொண்டார் கலைவாணன். தமிழ்நாட்டில் அபூர்வமாக உள்ள பொம்மலாட்டக் கலைஞர்களில் ஒருவர் கலைவாணன்.புராணங்களுக்கும் மடமை பிரச்சாரங்களுக்கும் பயன்படுத்தப்பட்ட பொம்மலாட்ட கலை வடிவத்தை சமூக மாற்றத்திற்கு பயன்படுத்திய பெருமை முத்துக்கூத்தன் அவர்களுக்கும் கலைவாணன் அவர்களுக்கும் உண்டு. பன்முக கலைத்திறன் அவரோடு இணைந்து...

இரண்டு நாள் பயிரங்கம் சேலம் மாவட்ட இளைஞர் அணி முடிவு!

இரண்டு நாள் பயிரங்கம் சேலம் மாவட்ட இளைஞர் அணி முடிவு!

24.05.2026 அன்று மாலை 5.00 மணியளவில் இளம்பிள்ளையில் சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவசண்முகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் இளைஞர் அணியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்பைடையில்கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூத்த பெரியார் பெருந்தொண்டர் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் வயது மூப்பின் காரணமாக கடந்த 17.05.2026 அன்று காலமானார். அவரது மறைவிற்கு சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், புகழ் வணக்கத்தையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் ஜீன் மாதத்தில் இளைஞர் அணியின் சார்பில் 2-நாள் பெரியாரியல் பயிலரங்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களின் மூலமாக இயக்கச் செயல்பாடுகளையும், இளைய தலைமுறையினருக்குச் சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைச் சிந்தனைகளை இளைஞர் அணி வாயிலாக அதிகளவில் கொண்டு செல்வதெனவும் ஆலோசிக்கப்பட்டது. சேலம் மாவட்ட...

பாலியல் படுகொலை:  சிறுமியின் குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் ஆறுதல்

பாலியல் படுகொலை: சிறுமியின் குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் ஆறுதல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம்,கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பகுதியில் உள்ள சிறுமியின் இல்லத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேரில் சென்று சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். இதில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயக்குமார், கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன், ஆசிரியர் செல்வேந்திரன், சுரேஷ், ராஜா, அழகேஸ்வரி, அவினாசி, குமரன் நகர் பகுதித் தலைவர் தேவராஜ், கார்த்தி, அரவிந்த், பிரசாந்த், அமுதன், கணேஷ், அம்ஜித்கான், கோபிகிருஷ்ணன் கோபால், மணிரத்தினம், ப்ரீத்தி, ராஜேஸ்வரன், அம்முகுட்டி, செந்தமிழ் கலைஅமுதன் ஆகிய மேட்டூர், கொளத்தூர் பகுதி கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 29052026

வந்துவிட்டது கட்சிமாறல் கலாச்சாரம்!

வந்துவிட்டது கட்சிமாறல் கலாச்சாரம்!

தமிழ்நாடு இதுவரை இத்தகைய கட்சி மாறும் காட்சிகளைக் கண்டது இல்லை. குதிரை பேரம் கொடி கட்டி பறக்கிறது. பெரும்பான்மை இல்லாத ’தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ காங்கிரஸ் ஓடிப்போய் ஆதரவு அளித்தது. திமுக அணியில் இருந்து போட்டியிட்டு தவெக, அஇஅதிமுக வேட்பாளர்களைத் தோற்கடித்தவர்கள் ஒரே நாளில் அணி மாறினார்கள். அடுத்த 5-ஆண்டுகளுக்கு தவெக அணிதான் என்று கூச்சமின்றி அறிவித்தார்கள். பாஜக தலையிடாமல் தடுக்கிறோம் என்று காரணம் கூறினார்கள். ஆனால் பாஜகவின் கட்சிமாறல் கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை! காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பல மாநிலங்களில் அந்த கட்சியில் இருந்து எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசி இழுத்து கட்சி மாறசெய்யும் பாஜகவின் அரசியல் கலாச்சாரத்தை அப்படியே இப்போது வெட்கமின்றி பின்பற்றுகிறது காங்கிரஸ். அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளை உடைத்து தனது ஆட்சிகளை நியமித்துக் கொண்டது பாஜக. 2017-ல்...

கழகத்தின் மூத்த பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடை பெற்றார்!; உடல் மருத்துவமனைக்குக் கொடையளிக்கப்பட்டது

கழகத்தின் மூத்த பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடை பெற்றார்!; உடல் மருத்துவமனைக்குக் கொடையளிக்கப்பட்டது

பெரியார் கொள்கைகளை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்த கழகத்தின் மூத்த தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடைபெற்றுக் கொண்டார். அவரது விருப்பப்படி அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. கொளத்தூர் மணி கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள இரங்கல் செய்தி: திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் (83) அவர்கள் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 17.05.26 ஞாயிறு காலை 04.30 மணியளவில் காலமானார். தோழர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்கள் மூத்த பெரியார் தொண்டர் ஆவார்.தந்தை பெரியாரை நேரில் சந்தித்தவர்.தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் கொள்கைகளை பரப்பி அதனை தன் சொந்த வாழ்விலும் கடைபிடித்து செயல்படுத்திய கொள்கைப் பற்றாளர் ஆவார். மிகவும் துணிச்சலாக செயல்படக்கூடியவர். மிகவும் சுறுசுறுப்பானவர்.வயதான நிலையிலும் ஒரு இளைஞரை போல பெரியார் பணி செய்வதில் மிகுந்த ஆர்வமும்...

சென்னிமலை செல்வராஜ் இணையர் முடிவெய்தினார்!

சென்னிமலை செல்வராஜ் இணையர் முடிவெய்தினார்!

கழக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ் அவர்களின் இணையர் பழனியம்மாள் (48) 17.05.2026 முடிவெய்தினார்.. அவர்களது இறுதி நிகழ்வு மாலை 7 மணியளவில் பெருந்துறை மின் மயானத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு பழனியம்மாள் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.   மறைந்த தோழர் பழனியம்மாள் (48) அவர்களின் விருப்பப்படியும், அவரின் இணையர் செல்வராஜ் அவர்களின் விருப்பப்படியும்  பழனியம்மாள் அவர்களின் உடல் கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க  இசைவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அன்னாரின் உடல் தானமாக பெறும் நிலையில் இல்லை என்று தெரிவித்துவிட்ட நிலையில் அவரது கண்கள் மட்டும் தானமாக வழங்கப்பட்டது.   கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ப.ரத்தினசாமி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சமூக ஊடகப் பொறுப்பாளர்...

சார் பதிவாளர் சீனு.தமிழ்ச்செல்வி  பணி நிறைவு பாராட்டு விழா!

சார் பதிவாளர் சீனு.தமிழ்ச்செல்வி பணி நிறைவு பாராட்டு விழா!

தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறையில் 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி, கடந்த 30.04.2026 தேதியன்று பணி நிறைவு பெற்ற தமிழர் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் மா.கந்தசாமி அவர்களின் இணையர், “பெரியார் கொள்கையாளர்” சார்பதிவாளர் சீனு. தமிழ்ச்செல்வி பணி நிறைவு பாராட்டு விழா 02.05.2026 சனிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சீதா திருமண மண்டப்பதில் நடைபெற்றது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். தற்சார்பு விவாயிகள் சங்கத்தின் தலைவர் கி.வே.பொன்னையன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் “அரசுப் பணியில் நியாமாகவும், நேர்மையாகவும் செயல்பட்டதால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளிலும் மற்றவர்கள் ஏற்படுத்திய பிரச்சனைகளிலும் தைரியமாக எதிர்வினையாற்றியும், பெரியாரிய கொள்கையில் (கல்லைப்) போன்று உறுதியாக நின்று செயலாற்றி பணி ஓய்வு பெறும் சீனு. தமிழ்ச்செல்வியை பாராட்டி வாழ்த்துரையாற்றினார். கே.ஏ.செங்கோட்டையன் (பொது பணித்துறை அமைச்சர்), சத்யபாமா (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), வழக்கறிஞர் ப.பா.மோகன், வந்தியத்தேவன் (ம.தி....

கழகத்தை பாராட்டி குரோஷியாவிலிருந்து ஓர் உணர்ச்சி மடல்!

கழகத்தை பாராட்டி குரோஷியாவிலிருந்து ஓர் உணர்ச்சி மடல்!

கழகத்தில் புதிதாக தன்னை இணைத்துக் கொண்ட தோழர் மனோஜ் ரூ.5,000 வளர்ச்சி நிதி அளித்துள்ளார். அய்ரோப்பா குரோஷியாவில் பணியாற்றி வரும் இவர் கழக செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.தீண்டாமை, ஜாதிய வன்கொடுமைகள், பெண் அடிமைத்தனம் மற்றும் ஆதிக்க மனப்பான்மையோடு சக மனிதர்களை இழிவுபடுத்தும் பிற்போக்குச் சக்திகளிடமிருந்து, உழைக்கும் எளிய மக்களைக் காத்து நிற்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தில் என்னை ஒரு துரும்பாக இணைத்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். ஜாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் மனிதர்களைப் பிரித்து, “இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன்; இவன் படிக்க வேண்டும், இவன் குலத்தொழில் செய்ய வேண்டும்” என்று மனித மாண்பைச் சிதைக்கும் ஆரிய பார்ப்பனிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் சமரசமற்ற போர்க்களத்தில் என்னையும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறேன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் புரட்சிகரமான கொள்கைகளை...

மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு!

மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் மே-15, அன்று பகல் 12-மணியளவில் சந்தித்தனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஆகியோர் உடனிருந்தனர். முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வரவேற்று மனம் திறந்து உரையாடினார். “ஆட்சியில் இருந்தபோது உங்களை நாங்கள் சந்திக்கவில்லை; இனி அடிக்கடி சந்திப்போம் என்று கூறி விடைபெற்றனர்”. பெரியார் முழக்கம் இதழ் 21052026

கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மயூரப்ரியன் உரை மாணவர்களுக்கு சமூக அரசியல் பயிற்சி

கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மயூரப்ரியன் உரை மாணவர்களுக்கு சமூக அரசியல் பயிற்சி

இளைய தலைமுறைக்கு சமூக அரசியல் வரலாறுகளைப் புரிய வைக்கும் தேவை உருவாகி இருக்கிறது. இட ஒதுக்கீட்டு உரிமையைப் பயன்படுத்தி கல்வி வேலைவாய்ப்புகளைப் பெறும் மாணவர்களுக்கு அந்த இட ஒதுக்கீட்டின் வரலாறு, நோக்கம் பற்றிய புரிதல் இருப்பது இல்லை! சமூகம் மற்றும் கல்வி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு ஜாதி ஒரு அடையாளமாக ஏன் ஏற்கப்பட்டது என்ற சமூகப் புரிதலை இளைஞர்களிடம் விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இட ஒதுக்கீட்டு கொள்கைகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு மனுஸ்மிருதி அடிப்படையிலேயே சமூகத்தில் இட ஒதுக்கீடு இருந்தது. அதன்படி பிராமணர்களே கல்வி கற்கும் உரிமையை பெற்றிருந்தார்கள்; ‘சூத்திரர்கள்’ பிராமணர்களின் அடிமைகளாகவும், அவர்களுக்கு கல்வியே கிடைக்காமல் தடை செய்யப்பட வேண்டும் என்பதுமே எழுதப்படாத சமூக சட்டமாக இருந்தது. சமூகத்தை மனுஸ்மிருதி வழியாக பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தார்கள். சேர, சோழ, பாண்டியர்கள் மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் பள்ளிகளைக் கட்டவில்லை; கோயில்களைக் கட்டி பார்ப்பனர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்கள்....

தோப்புக்கரணம் போடுகிறார்!

தோப்புக்கரணம் போடுகிறார்!

சபாஷ்! வாழ்த்து என்று பூரித்து பூங்கொத்து கொடுத்து மாலையிட்டு பாராட்டு விழா நடத்தத் துடிக்கிறோம்; அப்படி யாருக்கப்பா! பாராட்டு விழா என்று கேட்கிறீர்களா? சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்! இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தான் அந்த பாராட்டுக்குரிய ‘மகாபுருஷர்’. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்? ‘பிராமண’ சேவையை கைக்கழுவி விட்டாரா? எதற்கெடுத்தாலும் இந்து விரோதி என்று கூச்சலிடமாட்டேன் என்று சபதமெடுத்துவிட்டாரா? ‘பிராமணர்’களைக் குறை கூறினால் மேடையில் கொதித்தெழுந்து அடிக்க பாயமாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டாரா? அப்படியெல்லாம் இல்லை! இனி இந்து மதத்தை எதிர்த்தால் மிரட்ட மாட்டேன்; நீதிமன்றம் போக மாட்டேன்; ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டேன்; மாறாக கடவுளிடம் மனு கொடுப்பேன் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். “சனாதனத்தை எதிர்க்கும் உதயநிதிக்கு நல்ல புத்தியைக் கொடு!” என்று கோவை புளியங்குளம் விநாயகரிடம் தோப்புக்கரணம் போட்டார் சம்பத் என்று தினமலர் செய்தி வெளியிட்டு இருக்கிறது. “ஓ விநாயகனே.. யானை முகத்தோனே; தும்பிக்கை நாயகனே; இது அடுக்குமா?...

எதை நோக்கிப் பயணிக்கிறது தவெக!

எதை நோக்கிப் பயணிக்கிறது தவெக!

தமிழ்நாட்டின் சமூக அரசியல் அடையாளங்களாக மூன்றை குறிப்பிடலாம். மாநில உரிமை, சமூக நீதி, மதச் சார்பின்மை என்ற மூன்று கோட்பாடுகள் தான் அவை. காமராசர் ஆட்சிக் காலத்தில் இருந்து திமுக, அதிமுக ஆட்சி வரை இதுதான் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படைக் கொள்கை. இதற்கு மாறாக ஆட்சி நடத்த முயன்ற இராஜகோபாலாச்சாரி ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார். ஜெயலலிதா ஒரு பார்ப்பனராக இருந்தாலும் கூட இந்துமத கொள்கையில் அவருக்கு ஈடுபாடு இருந்தாலும் மாநில உரிமை, சமூக நீதியைக் கொள்கையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இந்திய தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்க மறுத்தது; மதச்சார்பின்மை கொள்கையையும் ஏற்க மறுத்தது; பார்ப்பனியக் கட்சியாகவே அது திகழ்ந்தது. சோனியா காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி வந்ததற்குப் பிறகு அதில் பண்பு மாற்றங்கள் ஏற்பட்டன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் திமுகவின் வற்புறுத்தல் காரணமாக மண்டல் பரிந்துரையில்...

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

கடலூர்: ஏப்ரல்-14 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பாக கடலூர் மஞ்ச குப்பத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு பெரியார் சிவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, ராஜேந்திரன், திராவிட மகிழன், சத்யா, சதீஷ், திருமூர்த்தி, அசோக், வீரா, அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நங்கவள்ளி: ஒன்றிய கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளையொட்டி ஏப்ரல்-14 காலை 11.00 மணியளவில் நங்கவள்ளியில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கம் எழுப்பப்பட்டது. நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கவியரசு, நங்கவள்ளி பகுதி புகழேந்தி, பிரபாகரன், ஹரி, தினேஷ், சித்திக் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். சென்னை:...

விடைபெற்ற தேனிசை செல்லப்பாவுக்கு கழகம் இறுதிமரியாதை!

விடைபெற்ற தேனிசை செல்லப்பாவுக்கு கழகம் இறுதிமரியாதை!

மறைந்த பெரியார் தொண்டர் பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு, ஏப்ரல்-28 மாலை 7 மணிக்கு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், போராசிரியர் சரசுவதி ஆகியோருடன், கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செய்தனர். பெரியார் முழக்கம் இதழ் 07052026

கழகத் தோழர் பத்ரிநாரயணன் நினைவேந்தல் நிகழ்வு!

கழகத் தோழர் பத்ரிநாரயணன் நினைவேந்தல் நிகழ்வு!

இராயப்பேட்டையை பெரியார் பாசறையாக மாற்றிய கழகச் செயல் வீரர் பத்ரி நாராயணன் அவர்களின் 22-வது நினைவு நாளை முன்னிட்டு இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மயிலாப்பூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 30.04.2026‌ அன்று ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தோழர் பத்ரி நாரயணனின் நினைவுகளை பாடலாக தோழர்கள் பொன்ராஜ், சத்யா, லதா ஆகியோர் இணைந்து பாடினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் சென்னையில் தலித்துக்களையும், இஸ்லாமியர்களையும் பெரியார் இயக்கத்தின் பக்கம் ஒன்றிணைத்தவர்களில் பத்ரி முதன்மையானவர். மேலும் கொண்ட கொள்கையில் துடிப்போடு பணியாற்றிய ஆற்றல்மிகு இளைஞர் என்று கூறினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் அனைத்து இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழர் திருநாள் பொங்கல் விழாவை எழுச்சியுடன் நடத்தி வந்தவர். பத்ரியின் நினைவு நாளில் தோழர்கள் இன்றைய தலைமுறையினரை திராவிடர் இயக்கம் நோக்கி அணிதிரட்ட சூளுரைத்தனர். ஆர்.என் துரை (திமுக மாவட்டத் துணை.செயலாளர்), க.வே...

புத்துணர்வூட்டிய சென்னை பயிலரங்கம்!

புத்துணர்வூட்டிய சென்னை பயிலரங்கம்!

மறைந்த கழக செயல்வீரர் பத்ரி நாராயணனின் 22வது நினைவு நாளான ஏப்ரல்-30 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சே. ராஜேஷ் தலைமையில், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா முன்னிலையில், பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. பகுதித் தலைவர் சு. கோபிநாத் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – சத்யா – லதா, பொன்ராஜ் குழுவினரின் பாடல்கள் சிந்திக்க வைத்தன. “அமைப்பாக திரள வேண்டியதின் அவசியம் என்ன?” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். ஒரே நாளில், ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை ஒருங்கிணைப்பதன் காரணத்தை விளக்கினார். “சமகால சிக்கல்களில் பெரியாரிய பார்வை” குறித்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். கம்யூனிச இயக்கங்களும் பெரியார் இயக்கமும் ஒன்றிவரும் புள்ளிகளையும் – வேறுபடும் புள்ளியையும் எடுத்துரைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திரகுமார் தேரடி, “பெரியாரியலும்...

கன்னியாகுமரி மாவட்டக் கழக  கலந்துரையாடல் கூட்டம்!

கன்னியாகுமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்!

குமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.04.2026 ஞாயிறு அன்று மாலை 03.00 மணியளவில் தக்கலை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழக பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் தலைமை வகித்தார். குமரி மாவட்டக் கழகச் செயலாளர் நீதியரசர் முன்னிலை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23, தமிழ்நாடு சட்ட தேர்தலில் கழகத் தலைமைக்குழு எடுத்த தீர்மானத்தின் படி குமரி மாவட்டத்தில் எப்படி களப்பணியற்றுவது என கலந்துரையாடப்பட்டது. நிகழ்வில் மஞ்சுகுமார், நாஞ்சில் சூசையப்பா, தமிழ்மதி, அணைக்கரை பால் வண்ணன், ரமேஷ் பாபு அன்டன் பாலசிங்கம், ரெவி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழகம் எடுத்துள்ள தேர்தல் நிலைபாட்டின்படி குமரி மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய களப்பணியாற்றுவது என்றும் குறிப்பாக பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் முழுகவனம் செலுத்தி பா.ஜ.க. இல்லாத குமரி மாவட்டம்...

உதயநிதிக்கு கழகம் சார்பில் வரவேற்பு!

உதயநிதிக்கு கழகம் சார்பில் வரவேற்பு!

ஏப்ரல்-20, மாலை 6 மணிக்கு, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு, பிரச்சாரம் செய்ய வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, இராயப்பேட்டை வெங்கடாசலம் தெருவில், பல கட்சிகள் இணைந்து வரவேற்பு அளித்தனர். துணை முதல்வர் முன்னிலையில், திமுக – திவிகவினர் இணைந்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டனர். வி.எம் தெருவின் பெயரை, பெரியார் தொண்டர் “பத்ரி நாராயணன் தெரு” என்று மாற்றியமைக்க, பொதுமக்களிடம் நூற்றுக்கணக்கான கையெழுத்து பெற்ற கோரிக்கை மனு, சென்னை மாவட்டக் கழகம் சார்பில் வழங்கப்பட்டது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், க.வே. மோகன் தலைமையிலான வட்டக்கழக திமுகவினர் ஒருங்கிணைத்த நிகழ்வில், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் மா. வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இணையதளப் பொறுப்பாளர் விஜய் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் இராவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்...

கழகத் தோழர்கள் வாக்கு சேகரிப்பு!

கழகத் தோழர்கள் வாக்கு சேகரிப்பு!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரையில் தோழர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். திருப்பூர், அவினாசி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, மொடக்குறிச்சி, சேலம் (மேட்டூர், எடப்பாடி) புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர் (திண்டிவனம்), புதுச்சேரி, சென்னை (மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராயர் நகர், சைதை, பெரம்பூர், வில்லிவாக்கம், ஆர்.கே நகர், எழும்பூர்), காஞ்சிபுரம், உத்திரமேரூர், வேலூர், குடியாத்தம், கே.வி குப்பம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் தோழர்களே நட்சத்திர பேச்சளார்களாக வலம் வந்தனர். தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்ற நோக்கத்தில் முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் Zero BJP என்ற பெயரில் பாஜக போட்டியிடும் தொகுதிகளான திருச்செந்தூர், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர், நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் கிராமங்கள்தோறும் பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தோழர்கள் மேற்கொண்டனர். பாஜகவை வீழ்த்த களமிறங்கிய கழகத் தோழர்கள்! 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில்...

கழகத் தோழர் பிரவீன் – சமீம் மோனிஷா மதமறுப்பு திருமணம்!

கழகத் தோழர் பிரவீன் – சமீம் மோனிஷா மதமறுப்பு திருமணம்!

கழகத் தோழர் சீ. பிரவீன்குமார் – ஜா. சமீம் மோனிஷா ஆகியோரின் சுயமரியாதை திருமணம், மார்ச்-23, காலை 11 மணிக்கு, தேனாம்பேட்டை சமூகநலக் கூடத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் நடைபெற்றது. மயிலை சுகுமாரின் ஒருங்கிணைப்பில், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, விசிக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சாரநாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை மாவட்டத் தலைவர்கள் வேழவேந்தன், சேத்துபட்டு இராசேந்திரன், துணை செயலாளர் இராவணன், மாவட்ட அமைபாளர்கள் தட்சணாமூர்த்தி, ம.கி எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் கோபிநாத், சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர். கழக ஏட்டுக்கு மணமக்கள் ரூ. 2,000 நன்கொடையாக வழங்கினர். பெரியார் முழக்கம் இதழ் 23042026

இலக்கியா – விஷ்ணுராம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா!

இலக்கியா – விஷ்ணுராம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா!

கோவை மாவட்டம், சீரபாளையம் பகுதியைச் சார்ந்த (விடியல் பதிப்பகம்) விசயக்குமார் – கற்பகவள்ளி இணையரின் மகள் இலக்கியா அவர்களுக்கும் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியைச் சார்ந்த பழனிசாமி – பாக்கியலட்சுமி இணையரின் மகன் விஷ்ணுராம் அவர்களுக்கும் திருமண வரவேற்பு விழா 23.02.2026 திங்கள் அன்று மாலை 6 மணி அளவில் பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள வேல் மஹாலில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். பொள்ளாச்சி வெள்ளிங்கிரி, கோவை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, காவை.அவினாசி ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 23042026

தமிழ்ஈழம் – தினேஷ் குமார் இணையேற்பு விழா!

தமிழ்ஈழம் – தினேஷ் குமார் இணையேற்பு விழா!

தோழர் அறக்கட்டளை நிறுவனர் சாந்தகுமார் – லதா ஆகியோரின் மகள் தமிழ்ஈழம் அவர்களுக்கும் மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் அவர்களுக்கும் வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா 22.02.2025 ஞாயிறு அன்று மாலை 6 மணி அளவில் கோவை நல்லாம்பாளையம் பொன்மணி திருமண மண்டத்தில் நடைபெற்றது. புதிய குரல் நிறுவனர் ஓவியா தலைமை வகித்து வாழ்த்துரையாற்றினார். பொள்ளாச்சி உமாபதி (மாநிலச் செயலாளர், தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை), ஆறுச்சாமி (த.பெ.தி.க தலைமை நிலையச் செயலாளர்), மயூரா தாமோதரசாமி (கல்வியாளர்), முனைவர் தமிழரசி, முகம்மது ஜியாவுதின் (நீதிபதி, மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம் தமிழ்நாடு அரசு), மோகனசுந்தரம் (ராகவேந்திரா சேவா டிரஸ்ட்), திருப்பூர் தமிழ்ச்செல்வி (கருணா மனோகரன் அறக்கட்டளை), அசோக்குமார் (அறிவுச்சோலை அறக்கட்டளை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் மணமக்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த. பெ. தி. க...

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்:   திருப்பரங்குன்றம் வரலாற்று ஆய்வு நூல் அறிமுக விழா!

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்: திருப்பரங்குன்றம் வரலாற்று ஆய்வு நூல் அறிமுக விழா!

சேலம்: தமுஎகச சார்பில் எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்ட ‘திருப்பரங்குன்றம் முழு வரலாறு’ ஆய்வு நூல் அறிமுக விழா 14.03.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம் கலைஞர் கருணாநிதி திருமண மண்டபத்தில், த.மு.எ.க.ச சேலம் மாவட்ட உதவித் தலைவர் மேவை.சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது. முன்னாள் முத்தவல்லி ஜாமியா மஸ்ஜித் நாசர்,சையத் மூஸா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர்), காஜாமொய்தீன் (வி.சி.க இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநிலச் செயலாளர்), ஷேக்முகம்மது (மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்), சதாம் உசேன் (மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர்), ஷரிப் பாஷா (எஸ்.டி.பி.அய் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர்), சோபனா (த.மு.எ.க.ச மாவட்டச் செயலாளர்), பிரவீன்குமார் (மக்கள் ஒற்றுமை மேடை ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக சேலம் மாநகரச் செயலாளர் ரகுபதி வரவேற்புரையாற்றினார்....

எனக்குப் பிறகு எவன் கேட்பான்? வேன் வழங்கும் விழாவில் பெரியாரின் உணர்ச்சி உரை!

எனக்குப் பிறகு எவன் கேட்பான்? வேன் வழங்கும் விழாவில் பெரியாரின் உணர்ச்சி உரை!

வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள் உரைகளுக்குப் பின்னர் இறுதியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை: இந்தப் பொருள்களை எல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. கார் ஒன்றுதான் எனக்கு அதிகம் பயன்படும். இந்த புதிய வேனில் சவாரி செய்வதால் ஒன்றும் நான் அதிகம் வாழப் போவதில்லை. ஆனால் இதைப் போன்று விழாக்களை காணும் போது தான் எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது. இந்த கார் வாங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஏராளமாக கேட்டதற்கு மேல் அதிகமாக கொடுத்துள்ளார்கள். அதில் குறிப்பாக தஞ்சை மாவட்டம் 40,000 ரூபாய் அளித்திருக்கிறது. அந்த அளவுக்கு நமது கொள்கைக்கு நாட்டில் வெற்றி கிட்டி இருக்கிறது; செல்வாக்கு பெருகிவிட்டது. எனக்கு இன்றைக்கு வயது 94 அடுத்த மாதம் பிறந்தால் 95 வயது. 60 வருடங்களுக்கு முன்பு எமது மக்களின் யோக்கியதை என்ன அதாவது நாம் முயற்சி எடுப்பதற்கு முன்பு இந்த நாட்டு மக்களின் யோக்கிதை...

தேர்தல் பரப்புரையில் கழகத் தோழர்கள்

தேர்தல் பரப்புரையில் கழகத் தோழர்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை இயக்கங்களை நடத்தினர். கடலூர்: புவனகிரி திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரவணன் அவர்களை சந்தித்து கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பாக பயனாடை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர். திண்டிவனம் தொகுதி விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு அவர்களை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கடலூர் சிவா தலைமையில் உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), பொன்ராஜ், சத்யா, லதா கலைக்குழுவினர் மற்றும் வீரா, அசோக் ஆகியோர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரகுமாரை ஆதரித்தும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை: ஏப்ரல் 16, 2026 முதல் ஏப்ரல் 19 வரை 4 நாள் புதுக்கோட்டை சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் மருத்துவர் வை.முத்துராஜா அவர்களை ஆதரித்து கழகம் சார்பாக தெருமுனை பிரச்சாரம் செய்து மக்களிடையே ஓட்டுகளை சேகரித்தனர். உமாபதி (சென்னை...

கழக ஏட்டுக்கு வளர்ச்சிநிதி

கழக ஏட்டுக்கு வளர்ச்சிநிதி

ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முன்னெடுப்பில் பெரியார் முழக்க வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் ரூ.13, 500 வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளனர். ஆத்தூர் தோழர் கணபதி 17 பெரியார் முழக்கத்துக்கான ஆண்டு சந்தா ரூ.5,100 வழங்கியுள்ளார். தோழர் துரைராசு ரூ.3000 பெரியார் முழக்க சந்தா வழங்கியுள்ளார். பெரியார் முழக்கம் இதழ் 09042026

மேட்டூர் கிட்டு தந்தை காளியப்பன் இயற்கை எந்தினார்!

மேட்டூர் கிட்டு தந்தை காளியப்பன் இயற்கை எந்தினார்!

தோழர் மேட்டூர் கிட்டு அவர்களின் தந்தையார் காளியப்பன் 28.03.2026 அன்று இயற்கை எய்தினார். அவருடைய மறைவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி 30.03.2026 மேட்டூர் பாரதி நகரில் உள்ள இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்தார். கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச்செயலாளர் ப. இரத்தினசாமி, கோவை மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் சுதா, கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயக்குமார், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் ஐயப்பன், முத்துராஜ், ராஜா, அவினாசி ஆகியோர் கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 09042026

கடலூரில் கழகத் தலைவர் பேச்சு  பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது

கடலூரில் கழகத் தலைவர் பேச்சு பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது

கடலூர்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 28.03.2026 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகில் கடலூர் பெரியார் சிவா தலைமையில் பொதுகூட்டம் நடைப்பெற்றது. கடலூர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். அறிவழகன் முன்னிலை வகித்தார். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் ‘‘தகைசால் தமிழர்’’ தோழர் நல்லகண்ணு மற்றும் திராவிட இயக்கத் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியுமான அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி. மு. க தேர்தல் பணிக்குழு செயலாளர் வழக்கறிஞர் இள. புகழேந்தி அவர்களும் படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினர். உமாபதி, லதா, சத்யா, திராவிட மகிழன் கலைக்குழு ஆகியோரின் அரசியல் நையாண்டி மற்றும் கலைநிகழச்சி நடைபெற்றது. லோகு. அய்யப்பன் (திராவிடர் விடுகலைக் கழக புதுச்சேரி மாநில தலைவர்), இரா. உமாபதி (தலைமைக் குழு உறுப்பினர்), கே. எஸ். ராஜா...

ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஏற்காடு: 08.03.2026 அன்று ஏற்காடு பகுதியில் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்காடு டவுன், ஒண்டிக்கடை, மஞ்சக்குட்டை பகுதியில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது. ஏற்காடு ஒன்றிய செயலாளர் இரா. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் க. சரிதா முன்னிலை வகித்தார். தெருமுனைக் கூட்டத்தின் நோக்கம் குறித்து மக்களிடம் சேலம் மாவட்ட அமைப்பாளர் அ. பெருமாள், கோனூர் வைரமணி (திமுக தலைமைக் கழகப் பேச்சாளர், சேலம் மேற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவர்), தி.மு.க ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணித் தலைவர் ம. தேவபிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஏற்காடு பகுதி மக்கள் மட்டுமல்லாமல் ஏற்காடு சுற்றுலா பயணிகளும் பெருந்திரளாக நின்று கேட்டுச் சென்றனர். சுற்றுலா வந்த விசிகவை சேர்ந்த மகளிரணி தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு குடிநீர் வாங்கி கொடுத்து வாழ்த்தினார்கள். தெருமுனைக் கூட்டத்தை பொதுக்கூட்டத்தைப்போல த சுகந்தா ராமசந்திரன் (மஞ்சக்குட்டை பகுதியில் பஞ்சாயத்து தலைவர்), ராமசந்திரன்...

ஈரோடு, கடலூர், ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஈரோடு, கடலூர், ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஈரோடு: தெற்கு மாவட்டக் கழகம் சார்பாக தொடரட்டும் “தமிழ்நாட்டில் சாதனைகள், திமுக ஆட்சியை உறுதி செய்வோம்” என்கின்ற முழக்கத்தோடு அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஒருங்கிணைப்பில் 4 நாட்களில் 13 இடங்களில் தெமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தெருமுனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. 11.03.26 புதன் அன்று காலை சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் தெருமுனைக் கூட்ட மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, சண்முகப்பிரியன் (திமுக)ஆகியோர் சிறப்புரையாற்றினர். 2வது நாள் (12.03.26): வியாழன் அன்று கனி ராவுத்தர் குளம், அக்ரகாரம், காமராஜர் நகர், காந்திநகர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டங்களுக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டங்களில் அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் பரிமளராசன், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரையாற்றினார்கள்.மதிய உணவு சண்முகப்ரியன்...

திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்வோம்! சென்னையில் சுற்றிச்சுழன்று கழகம் பரப்புரை!

திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்வோம்! சென்னையில் சுற்றிச்சுழன்று கழகம் பரப்புரை!

சென்னை மாவட்டக் கழகங்களின் (தென்சென்னை, வடசென்னை) சார்பில் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்…திமுக ஆட்சியை உறுதிசெய்வேம்! என்ற தலைப்பில் தினமும் 2 கூட்டங்கள் என 30 கூட்டங்களை நடத்தியுள்ளனர். அரசியல் நையாண்டி, பாடல்கள் என கலைநிகழ்ச்சிகளுடன் மக்கள் மத்தியில் திமுக ஆட்சியை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று விளக்கி வருகின்றனர். தோழர்கள் இரா. உமாபதி – சத்யா – கார்மேகம் – பொன்ராஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் தொய்வில்லாமல் மூன்று வாரங்கள் நடைபெற்றன. தெருமுனைக் கூட்டங்களின் தொகுப்பு: மார்ச் 3 முதல் மார்ச் 9 வரையிலான 12 கூட்டங்களை, ம.கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்) – இரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மார்ச்-4: மாலை 5 மணிக்கு, பிரீத்தி தலைமையில், மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலும், மாலை 7 மணிக்கு, அபிநந்தன் தலைமையில், கீழ்க்கட்டளை பெரிய தெருவிலும், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றன.கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், U2BRUTUS மைனர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திமுக:...

தெருக்களுக்கு ஜாதிப்பெயரை நீக்கக்கோரி மனு!

தெருக்களுக்கு ஜாதிப்பெயரை நீக்கக்கோரி மனு!

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 6 தெருக்களில் ஜாதிப் பெயர் பலகை அடையாளமாக வைத்ததை கண்டித்து 09.03.2026 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், கவியரசு ஆகியோர் இருந்தனர். – பெரியார் முழக்கம் இதழ் 26032026

லெனின் சுப்பையா நினைவுநாள்

லெனின் சுப்பையா நினைவுநாள்

பெரியார் சிந்தனையாளர் இயக்கம் நடத்திய லெனின் சுப்பையா நினைவேந்தல் படத்திறப்பு மற்றும் புதுச்சேரி மண்ணில் ஓபிசி,எஸ்.சி,எஸ்.டி பூர்வீகப் பெண்களின் (தாய் வழி) பிள்ளைகள் அகதிகளாக? நீதிக்கேட்போம்! உரிமை மீட்போம் பொதுக்கூட்டம் 21.02.2026 அன்று மாலை 5-மணிக்கு சுதேசி மில் புதுச்சேரியில் நடைபெற்றது. விடுதலை கலைக்குழு தோழர்கள் பாடல்களால் லெனின் சுப்பையா அவர்களின் சமூக அரசியல் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பாடல்கள் வழியாக உணர்வு அலைகளில் காண்போரை மூழ்கடித்தார்கள். பாடல்களுக்கு இடையே இணைப்புகளையும் வழங்கினார்கள். திராவிட மகிழன் குழுவினருடன் இணைந்து லெனின் சுப்பையா பாடல்களை பாடினார். மகேசு (மக்கள் மன்றம்) லெனின் சுப்பையா மற்றும் செந்தாரகை படத்தினை திறந்து வைத்து பாடல்கள் வழியாக பாமரனுக்கும் உணர்வூட்டியவர் லெனின் சுப்பையா என்றும் புதுச்சேரி தாய்வழி பிள்ளைகள் பிரச்சனையில் போராட்டமே தீர்வு என்றார். கோவன் (செயலாளர் மகஇக) தன் பாடல்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு...

ஸ்ரீராம்-காயத்ரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா!

ஸ்ரீராம்-காயத்ரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா!

சேலம் மாவட்டம் R.T.கிருஷ்ணன் – கவிதா ஆகியோரின் மகன் ஸ்ரீராம் அவர்களுக்கும், சென்னை மாவட்டம் R.சிவகுமார் – சாந்தகுமாரி ஆகியோரின் மகள் காயத்ரி அவர்களுக்கும், 15.03.2026 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் அயோத்தியாபட்டினம் வாசு மஹால் திருமண மண்டபத்தில், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலையில், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்தார். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், செட்டியூர் மாரி, கொளத்தூர் கணேசன், அமஜத்கான், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சுதர்சன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் நாகராஜ், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், கீதா, அமுதன், ஆனந்த், வெங்கடேஷ், இனியா, நந்தினி, தமிழ்நாடு மாணவர் கழக கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சுகந்தன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்....

ஜாதிப்பெருமை நூல் அறிமுக விழா!

ஜாதிப்பெருமை நூல் அறிமுக விழா!

மதுரை: திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி இணைந்து ஜாதிப் பெருமை நூல் அறிமுக கூட்டம், மதுரையில் உள்ள மணியம்மை பள்ளியில் 08.03.2026 நடைபெற்றது. ஊடகவியலாளர் சத்யராஜ் குப்புசாமி, கனியமுதன் (விசிக துணைப் பொதுச் செயலாளர்), பேரறிவாளன் (தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர்) மற்றும் பிரபாகரன் (புஇமு) ஆகியோர் புத்தகத்திற்கான கருத்துரை நிகழ்த்தினார்கள். காமாட்சி பாண்டியன் (மதுரை மாவட்டத் தலைவர்) வரவேற்புரை ஆற்றினார். தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி தலைவர் மணிபாபா தலைமையில் நடைபெற்றது. மதுரைச் சேர்ந்த அனைத்து ஜனநாயக இயக்கங்களும், பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய தோழர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வினை தோழர் தவம் அறக்கலம் வலையொலி (YouTube) பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். குமரன் (புஇமு) நன்றி கூறினார். – பெரியார் முழக்கம் இதழ் 26032026

கோவை, திருப்பூரில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்!

கோவை, திருப்பூரில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்!

திருப்பூர்: மார்ச்04 (4வது நாள்): கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் முகில் இராசு மாவட்டத் தலைவர் முன்னிலையிலும் “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள், திமுக அரசை உறுதி செய்வோம்” என்ற தலைப்பில் 4வது நாளாக 04.03.2026 அன்று காங்கேயம், பேருந்து நிலையம், வெள்ளக்கோவில் பகுதியில், முத்தூர் (மூன்று சந்திப்பு சாலையில்), நத்தகாடையூர் ஆகிய பகுதிகளில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன. மார்ச்-05 (5வது நாள்): தாராபுரம், வட தாரை பகுதி, தாராபுரம் அய்ந்து முக்கு சாலை, தாராபுரம், அண்ணா சாலை, தாராபுரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஈரோடு இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), சூலூர் பன்னீர்செல்வம் (தலைமைக் குழு உறுப்பினர்), பரிமளராசன் (சமூக வலைதளப் பொறுப்பாளர்), முகில் இராசு (மாவட்டத் தலைவர்), சங்கீதா (மாவட்ட அமைப்பாளர்), முத்து (மாநகர அமைப்பளர்), கவி பு.இ.மு காங்கேயம் பகுதி பொறுப்பாளர், ஆறுமுகம் ஆசிரியர் (தி.க காங்கேயம் ஒன்றியத் தலைவர்) கதிர்வன் (தாராபுரம் பகுதியின்...

பாலியல் கொலையாளிக்கு துணை போகிறதா  காவல்துறை?

பாலியல் கொலையாளிக்கு துணை போகிறதா காவல்துறை?

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 11.12.2025 அன்று இரண்டரை வயது பெண் குழந்தை சாதிய மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியாக கைது செய்யாமலும், சட்டப்படியான சரியான விசாரணையை மேற்கொள்ளாமலும் அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் சுமித்ரா மிகுந்த அலட்சியமாக செயல்பட்டு வந்தார். அதனால் காவல் ஆய்வாளர் சுமித்ராவையும், இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டிருந்தால் அவர்களையும் விசாரித்து கைது செய்ய வேண்டும் என 17.03.2026 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மானுஷ், செய்தியாளர் சிவசுப்ரமணி, சமூக செயல்பாட்டாளர் சுரேஷ், செய்தியாளர் சிவகுரு மற்றும் பாதிக்கப்பட்டு இறந்த பெண் குழந்தையின் தந்தை வீட்டார் முறையிட்டனர். இதில் திராவிடர் விடுதலைக் கழக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச்...

கழகப்பணிகளைப் பாராட்டி நன்கொடை!

கழகப்பணிகளைப் பாராட்டி நன்கொடை!

கோவை:- சிறுமுகை அருகே உள்ள வெள்ளிக்குப்பம்பாளையத்தைச் சார்ந்தவர் மாரண்ணன். இவர் அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். தனது இளம் வயதில் இருந்தே பொதுவுடைமைக் கொள்கைகள் மீதும், திராவிடர் இயக்கக் கொள்கைகள் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டவர். மேலும் தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் இயக்கங்களை ஊக்குவிப்பதைத் தனது தலையாய கடமையாகக் கொண்டவர் ஆசிரியர் மாரண்ணன். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இயங்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஜாதி ஒழிப்புப் பணிகளை பாராட்டியும் மேலும் தொடர்ந்து செயல்பட விருப் பத்தைத் தெரிவித்து ரூ.10,000/-யை கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமாரிடம் அவர் வழங்கினார். பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியுடன் சில நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார். நிறைவாகக் கழகத்தின் வார இதழான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு ஆண்டு சந்தா ரூ.300/- செலுத்தி மகிழ்ந்தார். மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர் அமுல்ராஜ், மற்றும் அன்னூர் விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் இதழ்...

பொள்ளாச்சியில் நடைபெற்ற பெரியாரியல் பயிலரங்கம்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற பெரியாரியல் பயிலரங்கம்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் “தேர்தல் அரசியலும் தந்தை பெரியாரும்” என்ற தலைப்பில் “பெரியாரியல் பயிலரங்கம்” 23.02.2026 திங்கள் அன்று காலை 11 முதல் 5 மணி வரை இரண்டு வகுப்புகளாக நடைபெற்றது. கோவை மாவட்ட பொறுப்பாளர் யாழ்.வெள்ளியங்கிரி தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். ஆனைமலை நகரச் செயலாளர் ஆனந்த், அரிதாசு ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி நகரச் செயலாளர் சபரிகிரி வரவேற்புரையாற்றினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் காசு நாகராசன் “திராவிட மாடல் இன்றும் நாளையும்” என்ற தலைப்பில் திராவிட கட்சிகள் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்து மாணவ, மாணவிகள் ஆரம்ப தொடக்கப்பள்ளி தொடங்கி கல்லூரி உயர் படிப்பு முடிக்கும் வரை அவர்களை பல்வேறு திட்டங்களால் ஊக்கப்படுத்தி வாழ்வில் முன்னேற்றி சென்றதையும் நிகழ்கால திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை அறிவு ஒளி பெற செய்து கொண்டிருப்பதைப் பற்றியும், மீண்டும் இந்தத் திராவிட மாடல் அரசு ஆட்சி அமைத்திட நம்மை போன்ற...

கழகம் இறங்கியது சேலம் கிழக்கு! –  இளம்பிள்ளை  சிந்தாமணியூர்  கே.ஆர் தோப்பூர்  ஏற்காடு  சேலம் மாநகரம்   கொளத்தூர்  பகுதிகளில் கழகப் பிரச்சார அலை!

கழகம் இறங்கியது சேலம் கிழக்கு! –  இளம்பிள்ளை  சிந்தாமணியூர்  கே.ஆர் தோப்பூர்  ஏற்காடு  சேலம் மாநகரம்  கொளத்தூர் பகுதிகளில் கழகப் பிரச்சார அலை!

சேலம் கிழக்கு மாவட்டக் கழகம் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்.. திமுக ஆட்சியை உறுதிசெய்வோம்” என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை முனைப்புடன் நடத்தி வருகிறது. கிளைக் கழகத் தோழர்கள் ஏற்பாட்டில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் மக்களை சந்தித்து பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் தொகுப்பு: 3வது நாள் மார்ச்-02 இளம்பிள்ளை: கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் 02.03.2026 நாள் முழுவதும் தாரமங்கலம் பேருந்து நிலையம், சின்னப்பம்பட்டி பேருந்து நிறுத்தம், கொல்லப்பட்டி பேருந்து நிறுத்தம் ஆகிய 3 இடங்களில் கூட்டம் நடைபெற்றது. தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), குடந்தை பாலன், ரமேஷ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்) ஆகியோர் தலைமை வகித்தனர். சக்திவேல் (சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர்), டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரை ஆற்றினார். திமுக தலைமைக்...

என்.டி.ஏ தோல்வியை உறுதிசெய்வோம்! கள்ளக்குறிச்சியில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உரை

என்.டி.ஏ தோல்வியை உறுதிசெய்வோம்! கள்ளக்குறிச்சியில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உரை

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகில் உள்ள கடுவனூர் கிராமத்தில் 2005-ஆம் ஆண்டு நடந்த ஜாதிக் கலவர மோதலில் களமாடி சிறை சென்று 21 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த தோழர்கள் அ.சக்தி, ஆ.தங்கராசு, ஆ.சங்கர், மா.சங்கர் குரு, ச.கு.செயபால், ஆ.முனுசாமி, அ.பாலு, க.சங்குபாலகன், மா.குமார் உள்ளிட்ட தோழர்கள் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை பாராட்டியும், “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள், தி.மு.க ஆட்சியை உறுதி செய்வோம்! மதவெறி கூட்டணியை விரட்டி அடிப்போம்! என்ற தலைப்பிலும் 07.03.2026 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தோழர்களுக்கு கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்திற்கு மா.குமார் தலைமை வகித்தார், மு.நாகராஜ் வரவேற்புரையாற்றினர். க.இராமர் (மாவட்டச் செயலாளர்), ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), செ.பிரபு (த.பெ.தி.க.கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்) ஆகியயோர் கலவரம் மற்றும் வழக்கு குறித்து விரிவாகப் பேசினார்கள். க.மதியழகன் (மாவட்டத் தலைவர்), ந.வெற்றிவேல் (மாவட்டத் துணைச் செயலாளர்), பூ.ஆ.இளையரசன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்),...

திருப்பூர்,சேலம்,கோவையில் ஒவ்வொரு நாளும் 4 கூட்டங்கள்  கலைநிகழ்ச்சியுடன் சென்னை கூட்டங்கள் களம் இறங்கியது கழகத்தின் பரப்புரை படை!

திருப்பூர்,சேலம்,கோவையில் ஒவ்வொரு நாளும் 4 கூட்டங்கள் கலைநிகழ்ச்சியுடன் சென்னை கூட்டங்கள் களம் இறங்கியது கழகத்தின் பரப்புரை படை!

திருப்பூர், கோவை, சேலம், சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தினமும் 2 முதல் 4 இடங்களில் மாவட்டத்தின் பல முக்கிய சாலைகளில் நாள் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைமைக்குழு அறிவித்த சில நாட்களில் தோழர்கள் சுமார் 90-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களில் திமுக ஆட்சியை ஆதரித்து பரப்புரை செய்து வருகிள்ளனர். தொய்வில்லாமல் தோழர்கள் கடும் வெயிலிலும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் செய்தி தொகுப்பு. திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பில் 5 நாட்கள் தினமும் 4 இடங்களில் தேர்தல் பரப்புரை கூட்டங்களை தோழர்கள் மாவட்டத்தின் மங்கலம் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு என பல முக்கிய சாலைகளில் பரப்புரைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். முதற்கட்டமாக 5 நாட்களில் 20 கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். தோழர்களின் இந்த பரப்புரையில் பேசிய கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் முகில் இராசு (மாவட்ட தலைவர்)...

பேரறிவாளன்-தீபா இணையேற்பு விழா

பேரறிவாளன்-தீபா இணையேற்பு விழா

திருவண்ணமலை மாவட்டம் தமிழ்தாசன்- வல்லினத்தமிழ் ஆகிய இணையரின் மகன் பேரறிவாளன், கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்வம்- கோவிந்தம்மாள் ஆகிய இணையரின்மகள் தீபா ஆகிய இருவருக்கும் 09-02-2026 அன்று கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இணையேற்பு நடைபெற்றது. “விடுதலைக் குரல்” தோழர்களின் பகுத்தறிவு பாடல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர்கள் ஆ.ஆசைத்தம்பி, க.இராமர், ந.வெற்றிவேல், க.மதியழகன், மு.நாகராஜ், ஏ.ஜெயப்பிரகாஷ், இரா.கார்மேகம், மா.குமார் ,சி. சாமிதுரை, தே.இராமச்சந்திரன், பெரியார் பாரதிதாசன்,செ.வே.ராஜேஷ், ச.கு.பெரியார் வெங்கட், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ இளையரசன், த.பெ.தி.க மண்டலச் செயலாளர் செ.பிரபு (மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர்) ஆ.இராமலிங்கம், ஆ.நாகராசன் (சி.அய்.டி.யு.தொழிற்சங்கம்)உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 12032026

காவலாண்டியூர் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு திருமணம்!

காவலாண்டியூர் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு திருமணம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காடையாம்பட்டி மாதையன்-செல்வி ஆகியோரது மகள் அபிநயா, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், ஆயிக்கவுண்டன் பாளையம் வேல்முருகன்-பானுமதி ஆகியோரது மகன் தமிழ்வாணன் ஆகியோருக்கு 20.02.2026 வெள்ளிக்கிழமை காவலாண்டியூர் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈஸ்வரன் தலைமையில் தோழர்கள் கணேசன்,அவிநாசி ஆகியோரது முன்னிலையில் ஜாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. குமரேசன் மற்றும் மணமக்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 05032026