Category: திவிக

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

ஈரோட்டில் கழகத் தோழர்கள் உடல் உறுப்புதானம்

ஈரோட்டில் கழகத் தோழர்கள் உடல் உறுப்புதானம்

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் 24.12.2025 அன்று ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இறப்புக்குப் பின் தங்களது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் தங்களுடைய உடல்களை முறைப்படி உடல் தானம் செய்தனர். இரத்தினசாமி, சண்முகப்பிரியன், சென்னிமலை செல்வராசு, திருமுருகன், மரவப்பாளையம் குமார், கோபிநாத், நல்லதம்பி, சி.எம். நகர் பிரபு, சுரேஷ், ராசண்ணா, மீசை முருகேஷ், கண.குறிஞ்சி இசைக்கதிர் ஆகிய 13 தோழர்கள் சட்ட முறைப்படி உடல் தானம் கொடுக்க முன்வந்துள்ளனர். பெரியார் முழக்கம் இதழ் 01012026

கழகத் தோழர் காவை.இளவரசன் அவர்களின் தாயார் மறைவுற்றார்!

கழகத் தோழர் காவை.இளவரசன் அவர்களின் தாயார் மறைவுற்றார்!

கழகத் தோழர் காவை. இளவரசன் அவர்களின் தாயர் சரசுவதி உடல் நலக்குறைவால் 17.12.2025 மாலை 4.00 மணியளவில் மறைந்தார். அவர்களின் இறுதி நிகழ்வு 18.12.2025 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் காவலாண்டியூர் இளவரசன் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்தார். கழக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் மறைந்த சரஸ்வதி அம்மாள் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்றனர். இதில் கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 01012026

களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

பெரியாரின் 52வது நினைவுநாளில் (24/12/25), கழகப் பணியில் உயிர்நீத்த தோழர்கள் கண்ணன் – குமாரின் 20-ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம், சென்னை ராயப்பேட்டை வெங்கடாசலம் தெருவில், மாலை 6 மணியளவில் சு. பிரகாஷ் தலைமையில், தோழர்கள் ப. கணேசன், ரா. குட்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இரா. உமாபதி – வீரமணி – திராவிட மகிழன் குழுவினரின் பாடல்களும், சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சியும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. 60 பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தபசி குமரன் (கழக தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), ரூதர் கார்த்திக் (விசிக தென்சென்னை மண்டலச் செயலாளர்), கழகத் தோழர் அறிவுமதி ஆகியோர் கருத்துரையாற்றினர். கருத்துரையாற்றிய ரூதர் கார்த்திக் அவர்களுக்கு கழகத் தோழரும், கண்ணன் குமார் நண்பரும், அவர்களது விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்த வீரமுத்து, கழக வெளியீடுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும்...

பொள்ளாச்சி, ஈரோடு, மயிலாப்பூரில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

பொள்ளாச்சி, ஈரோடு, மயிலாப்பூரில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

பொள்ளாச்சி: தந்தை பெரியார் நினைவு நாளான டிச-24 அன்று ஜாதி தீண்டாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தெருமுனைக் பரப்புரைக் கூட்டங்கள் பொள்ளாச்சி ஆனைமலை வேட்டைக்காரன் புதூர் பகுதியில் வே.வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது. பாடகர் கண்ணையன், வழக்கறிஞர் சேதுபதி (தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம்), தமிழ் குமரன் (ஜெய் பீம் அறக்கட்டளை), பிரபா (மே 17 இயக்கம்), பிரபாகரன் (திராவிட இயக்க தமிழர் பேரவை), வழக்கறிஞர் ரிசி (தமிழ்ப்புலிகள் கட்சி), பொறியாளர் பரமசிவம், (திக), ராஜ்குமார் (திமுக இலக்கிய அணி), முத்தமிழன் (மக்கள் விடுதலை முன்ணனி), சபரிகிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்) மற்றும் கழகத் தோழர்கள் ஆனந்த், அரிதாஸ், நடராஜ் மணி தோழமை அமைப்புத் தோழர்கள் பங்கேற்றனர். ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 21.12.2025 ஞாயிறு மாலை 6 மணி அளவில் அம்மாப்பேட்டை ஒன்றியம் குருவரெட்டியூர் பகுதியில் “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்”...

எழுத்தாளர் பாமரன் இணையர் மறைவு!

எழுத்தாளர் பாமரன் இணையர் மறைவு!

எழுத்தாளர் பாமரன் அவர்களின் இணையர் தோழர் யாழ்மொழி அவர்கள் உடல் நலக்குறைவால் 26.12.2025 அன்று இயற்கை எய்தினார். 29.12.2025 கோவை பூ மார்கெட், சிரியான் சர்ச் ரோடுல் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாரமரன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். பன்னீர் செல்வம் (கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல் (மாநகரத் தலைவர்), வெங்கட்(மாநகரச் செயலாளர்), அன்னூர் விஷ்னு, மோகன கிருஷ்ணன், நவீன் மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர். சமூக வலைதளப் பக்கத்தில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதியிருந்த பதிவில், “அன்புத் தோழர் பாமரனின் இணையர் யாழ்மொழியின் இறப்புச் செய்தி, உண்மையிலே என்னை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு சில முறைதான் அவரை நான் சந்தித்திருக்கிறேன். நீண்ட காலம் பழகியது போல் உணர்வுகளையும் உரிமைகளையும் எடுத்துக்கொண்டு கலகல என்று அவர் கொட்டிய அன்பு மொழிகள் அப்படியே என் கண் முன் தெரிகிறது. அன்புத்தோழர் பாமரனை வாழ்க்கையில் அவர் சுமந்தார்....

பெரியார் பெயரை மறைப்பதா? கழகம் எதிர்வினை!

பெரியார் பெயரை மறைப்பதா? கழகம் எதிர்வினை!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளமான ஏற்காட்டிற்கு செல்லும் வழியில் இருபது கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் ஒவ்வொரு வளைவிற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது, அதன்படி எட்டாவது கொண்டை ஊசி வளைவிற்கு தந்தை பெரியார் அவர்களின் பெயரை நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக வைக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 24 தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவு நாளை இருட்டடிப்பு செய்ய வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு தந்தை பெரியார் வளைவு என்ற பெயரின் மீது கருப்பு மையை பூசி விட்டு அதன் மீது தகடூர் அதியமான் வளைவு என்ற பதாகையை ஒட்டி பெரியாரைப் பற்றி வசைச்சொற்களால் கூச்சலிட்டுச் சென்றனர். இந்த அராஜகச் செயலைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையிடமும், நெடுஞ்சாலைத் துறையிடமும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் முறையாக மனு கொடுக்கப்பட்டது, ஆனால் காவல் துறையும், நெடுஞ்சாலைத் துறையும் சேர்ந்து...

ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், அரங்கு எண் 10-இல் இடம்பெறுகிறது. கழகத்தின் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், அரங்கு எண் 10-இல் இடம்பெறுகிறது. கழகத்தின் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!   தமிழ்நாடு  அரசை  வலியுறுத்தி  கோவையில்  போராட்டம்

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோவையில் போராட்டம்

2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ‘இது தமிழ்நாடு – இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை’ மாநாட்டில் ‘வைக்கம் போர் முடியவில்லை’ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்துப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டது. 2025-இல் கழகத் தலைமைக் குழுவில் செப்-17 முதல் செப்-24 வரை “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் நிறைவாக கோவையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களைக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கழகத்தின் சார்பில், கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கை கோரி மாநிலம் தழுவிய போராட்டம், டிசம்பர் 29-அன்று காலை 10.30 மணிக்கு...

ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் டிசம்பர் 29 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள போராட்டத்திற்கு தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் பொதுமக்கள் தங்களால் ஆன ஆதரவை கொடுத்து உதவுமாறு பொதுவெளியில் சமூக ஊடகங்களில் தோழர்கள் பலரும் பதிவிட்டனர் அந்த பதிவை பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, தங்களால் முடிந்த சிறு தொகையை அவரவர் சக்திக்கு ஏற்றவாறு நிர்மல் குமாரின் கூகுள் பே எண்ணுக்கு அனுப்பி, போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த, தற்போது கத்தாரில் பணியாற்றி வரும் தோழர் ஒருவர் இந்த போராட்டம் மிக அவசியமானது எனக்கூறி, ஆர்வத்துடன் நிதி உதவி அளித்திருப்பதோடு, கழகத்தின் இந்த போராட்டத்திற்கான தீர்மானம் 2023-இல் சேலம் மாநாட்டில் இயற்றப்பட்ட சமயத்தில் இருந்து கவனித்து வருவதாக கூறியுள்ளார்....

சட்ட எரிப்பு மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

சட்ட எரிப்பு மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

1957 நவம்பர் 26 அன்று, தந்தை பெரியாரின் கட்டளைப்படி, 10,000-க்கும் மேற்பட்ட கருப்புச் சட்டைத் தொண்டர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை எரித்தனர்! 3,000 பேர் கைது செய்யப்பட்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். இதில் 18 க்கும் மேற்பட்டோர் சிறையிலும் சிறைக்கு வெளியேயும் இறந்தனர்! சுயமரியாதையை மீட்டெடுக்கவும், ஜாதியை ஒழிக்கவும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு யாழ். வெள்ளிங்கிரி தலைமையில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பாக நடைபெற்றது. பொறியாளர் பரமசிவம் (தி.க.), சண்முகவேல் பிரபாகரன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), மணிமாறன் தென்றல் (திமுக கோவை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்), வழக்குரைஞர் சேதுபதி (தமிழர் தன்னுரிமை மீட்பு இயக்கம்), கா.மாரிமுத்து (மக்கள் விடுதலை முன்னணி), தமிழ் பிரபாகரன் (மே 17 இயக்கம்), ம.கோ.சபரிகிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்) கலந்துகொண்டு சட்ட எரிப்புப் போராட்ட நினைவுகளைப் பகிர்ந்து...

அம்பேத்கர் நினைவு நாளில் மரியாதை!

அம்பேத்கர் நினைவு நாளில் மரியாதை!

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, டிச-6,2025 காலை 8 மணியளவில், ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கொள்கை முழக்கமிட்டோம். ம.கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ம. குகாநந்தன், அருண் கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்), இமானுவேல் துரை, ஷேக் முகமது, மருத்துவர் கணேஷ், கார்த்தி ராஜேந்திரன், தீபக், மஞ்சுநாதன், மடிப்பாக்கம் அருண், புகழேந்தி, ஸ்ரீலேகா, நந்தகுமார், ராஜஸ்ரீ, ரஞ்சித், ஜெயவேல், யாழ் நிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 25122025

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

2006-இல் காசி விஸ்வநாதர் கோயில் நிலத்துக்கு சொந்தமான இடத்தில் மசூதி கட்டுவதாக வெடித்த சர்ச்சையில், இந்து முன்னணியைச் சேர்ந்த குமார பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டனர். உண்மையிலேயே அந்த இடம் கோயில் நிலம்தானா இல்லையா என்ற வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி கலவரங்களை உருவாக்கி, அதில் இந்துத்துவ குளிர் காய்ந்துகொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். இப்போது திருப்பரங்குன்றம் வரை இது தொடர்கிறது. ஆனால் இதில் இழப்புகளைச் சந்திப்பது ஹெச்.ராஜாவை போன்ற பார்ப்பனர்கள் இல்லை, அப்பாவி சாமானிய இந்துக்களே. குமார பாண்டியன் குடும்பத்தினரும் அப்படிப்பட்ட சாமானிய இந்துக்களே. கொலை செய்யப்பட்டவர்களில் குமார பாண்டியன் சகோதரரின் மகளான ருத்ரா இந்த பார்ப்பன சூழ்ச்சியை புரிந்துகொண்டு, பெரியாரியத்தை நோக்கி தனது திசையை திருப்பிக்கொண்டு, இப்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவையுடன் பயணித்து வருகிறார். அவர், “ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்” என்ற...

டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்!  ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!

டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்! ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், டிசம்பர் 29-ஆம் தேதி, ஜாதி தீண்டாமைக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகள் கோரி போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டுக் கிராமங்கள் இன்னமும் ஜாதியக் கட்டமைப்புக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையிலேயே ஒரு வெட்கப்படத்தக்க நிலையாகும். இன்னமும் கிராமங்களில் ஜாதி தீண்டாமைகள் எப்படி நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன, நிலைநாட்டப்பட்டு வருகின்றன, அதன் வடிவங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதையெல்லாம் கோவை, திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமம் கிராமமாகச் சென்று ஆராய்ந்து, அதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஆணையத்தின் முன் திராவிடர் விடுதலைக் கழகம் கையளித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ‘ஜாதி ஒரு அவமானம், மனிதம் நமக்கு அடையாளம்’ என்ற ஒரு தலைப்பில் தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, மக்களிடம் ஜாதியத் தீண்டாமைக் கொடுமைகளுக்கு...

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

கழக ஆதரவாளரான தோழர் ரஞ்சித் அவர்களின் சிற்றுண்டி கடை (SNACKIFY), இராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிலையம் அருகில் டிசம்பர்-14, 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் ப. அருண் (இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் கடை திறப்பு விழா நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) சிற்றுண்டி கடையைத் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஆர்.என்.துரை (திமுக தென்சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர்) கலந்து கொண்டார். திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் மற்றும் ரஞ்சித் குடும்பத்தினர், நண்பர்கள் உடனிருந்தனர். புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 மாவட்டச் செயலாளரிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 18122025

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

வடசென்னை கழகத் தோழர் அருள்தாஸின் தாயார் அஞ்சலை (என்கிற) அன்னை மரி முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு டிச-11, 2025 மாலை 6 மணிக்கு கே.பி.பார்க் இல்லத்தில் நடைபெற்றது. அருள்தாஸ் புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு 10 சந்தாக்களை வழங்கினார். நிகழ்வில், இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர் ), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மற்றும் ராஜன், தினகரன், விஜயன், அசோக் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 18122025

பொள்ளாச்சி, மேட்டூரில் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி, மேட்டூரில் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய் எனும் முழக்கத்தோடு 11.12.25 அன்று மாலை பொள்ளாச்சி திருவள்ளுவர் சிலை அருகில் சனநாயகக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வே.வெள்ளிங்கிரி (திவிக) தலைமையில் நடைபெற்றது. தமிழ்க்குமரன் (ஜெய் பீம் பொதுநல அறக்கட்டளை) தொடக்க உரையாற்றினார். கோபாலகிருஷ்ணன் (தமிழ்ப்புலிகள் கட்சி), மாரிமுத்து (தி.க.), ராஜ்குமார் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), க.மாரிமுத்து (மக்கள் விடுதலை முன்னணி), மணிமாறன் (திமுக), மாறன் (மக்கள் அதிகார கழகம்), முகமது யாசின் (எஸ்.டி.பி.அய்.), மனோகரன் (சிபிஎம்), பிரபாகரன் (மே 17 இயக்கம்), வழக்கறிஞர்கள் சேதுபதி (தமிழ்நாடு தன்னுரிமை இயக்கம்), சூரியகுமார் (நீலம் பண்பாட்டு மையம்), மதி.அம்பேத்கர் (விசிக) ஆகியோர் கண்டனவுரையாற்றினார்கள். மேட்டூரில் கண்டனப் பொதுக்கூட்டம்! மேட்டூர்: மேட்டூர் நகர கழகத்தின் சார்பாக மதுரை திருப்பரங்குன்ற உச்சி பிள்ளையார் கோவில் தீப வழக்கில் தமிழ்நாட்டில் பதட்டத்தை உண்டாக்க ஒருவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து கண்டனப்...

பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில், 1992-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மசூதி வழியாக நடத்தி, கலவரத்தில் முடிக்க முயன்றனர் சிலர். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது வி.எம்.தெரு. அடுத்த ஆண்டில் வி.எம்.தெருவுக்குள்ளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முயன்றார் ராமகோபாலன். அந்த முயற்சியை முறியடித்து, கலவர நோக்கத்தைத் தடுத்ததுடன், ஐஸ் அவுஸ் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு எதிர்ப்பாக பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தி, சமூகப் பதற்றத்தை தணித்தார் பத்ரி. அதேபோல, 2001-இல் அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலின்போது இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றன மேற்குலக நாடுகள். மேடை ஏறி...

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், கோவை மாநகர கழகத்தின் மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பு தபெதிக அமைத்த அம்பேத்கர் படம் முன்பு காலை 9.30 மணிக்கு கோவை தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் நிலவும் ஜாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை உறுதியாகப் போராடுவது என்று உறுதி ஏற்றனர். பன்னீர்செல்வம், வெங்கட், நிர்மல் குமார் உரையாற்றினர் தோழர்கள் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், நவீன், தரணி, சத்தியமூர்த்தி, மேட்டூர் பாலு, ஆதரவாளர்கள் சங்கனூர் கார்த்தி, பரத், இலக்கியா கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினர். திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவரது நினைவைப் போற்றும் விதமாக மாநகர அமைப்பாளர் இரா. சரசுவதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கழகப் பொருளாளர் சு.துரைசாமி, வீ.சிவகாமி (தலைவர்,...

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… எண் 61, வெங்கடாசலம் தெரு, ராயப்பேட்டை என்ற முகவரி கொண்ட ஒற்றைக் குடித்தன வாடகை வீடு, ஒரு உடைந்த நாற்காலி, ஓலைப்பாய், மர பீரோ… பத்ரி நாராயணனுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் அதற்குமேல் இல்லை. ஆனால், அவருடைய கண்ணசைவுக்கே கட்டுப்படும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை 1990-இல் உருவாக்கி வைத்திருந்தார் அவர். 1980-களில் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, பத்தாண்டுகளிலேயே பலமான கோட்டையாக ராயப்பேட்டையை மாற்றிய செயல் வீரர். ராஜீவ் காந்தி படுகொலையில் கைதாகி, 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த எழுவரை, விடுவிக்கக்கோரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டது இன்றைய...

காதலர்களின் காவல்கோட்டை காவலாண்டியூர்!

காதலர்களின் காவல்கோட்டை காவலாண்டியூர்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வலுவான கோட்டையாக சேலம் மாவட்டம் காவலாண்டியூர் திகழ்கிறது. பாலமலையை ஒட்டியுள்ள அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள் குடும்பம் குடும்பமாக கழகப் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடெங்கும் ஜாதி மறுப்பு காதல் திருமணம் புரிவோருக்கு அடைக்கலம் தந்து, இணையேற்பையும் நடத்தி வைக்கும் சமத்துவ மண். காவலாண்டியூரைச் சேர்ந்த தலைமைக் குழு உறுப்பினரான காவை ஈஸ்வரன் இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்திவைத்துள்ளார். இதனால் ஜாதிச் சங்கங்களின் அச்சுறுத்தல்கள், கொடுந்தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளார். ஆனால் ஒருபோதும் தனது இலட்சியத்தில் இருந்து பின் வாங்கியதில்லை. இந்த வரலாறுகள் எல்லாம் நிகழ்காலத்திலேயே ஊடக வெளிச்சம் பெற்று சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. DW சேனலில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலாண்டியூரின் செயல்பாடுகள் குறித்து மிக நேர்த்தியான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. காவை ஈஸ்வரன், ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்த இணையர்களின் நேர்காணல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. சமூக ஊடகங்களில் சிறு சிறு துணுக்குகளாக இலட்சக்கணக்கோரிடம் அந்த...

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஒட்டி வழக்கமான உச்சி பிள்ளையார் கோயில் பகுதிக்கு மாற்றாக, சிக்கந்தர் பாஷா தர்கா பகுதியில் தீபம் ஏற்ற வேண்டுமென்று, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட இந்த நீதிபதியின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, உறுதியான எதிர்வினையாற்றி, தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது திமுக அரசு. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருள வேண்டும் என தீர்ப்பளிப்பது, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை உமிழ்வது என தொடர்ந்து மதவாத நஞ்சை விதைக்கும் இந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித்துறையில் தொடர இடம் அளிக்கக் கூடாது என நாடு முழுக்க கண்டனங்கள் வலுத்துள்ளன. இவரை நீக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 107 பேர் கையெழுத்திட்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். நீதிபதி என்று மக்களவையிலேயே அழுத்தம் திருத்தமாகப் பதிவு...

மக்கள் திரளில் நடைபெற்ற தாரமங்கலம் பொதுக்கூட்டம்.!

மக்கள் திரளில் நடைபெற்ற தாரமங்கலம் பொதுக்கூட்டம்.!

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில்.. “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” பொதுக்கூட்டம் டிசம்பர் 14,.2025 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு தாரமங்கலம் அண்ணாதிடல் (சின்னப்பம்பட்டி சாலை) பகுதியில் மக்கள் பேராதரவுடன் நடைபெற்றது. சி.தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார். (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்),டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) , குடந்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தோழர் சிற்பி ராசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்கள், பெண்கள் என அனைவரையும் கவனம் ஈர்க்கச் செய்து மிகுந்த வரவேற்பை பெற்றது. பொதுக்கூட்டத்தில் கே.ஆர்.தோப்பூர் கண்ணன், (சேலம் மாநகரச்...

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்!   தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்! தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய நாகரீக உலகிலும் பல்வேறு வடிவங்களில் ஜாதியம் தலைதூக்கி நிற்கிறது. ஜாதிக் கயிறுகள், ஜாதிய குருபூஜைகள், ஜாதிய திருமண தகவல் மையங்கள், சமூக வலைதளங்களில் ஜாதி அடையாளத்தை வெட்கமின்றி ஒட்டிக்கொள்ளுதல் என ஜாதியை வலிமைப்படுத்தும் புதுவிதமான முயற்சிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. ஜாதிச்சங்கங்கள் இந்த வேலைகளை இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய ஜாதி வெறிச்செயல்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டிப்பதுடன், ஜாதிய நடவடிக்கைகளுக்கான எதிரான அரசின் உறுதியான சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, திராவிடர் விடுதலைக் கழகம் இந்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. தமிழ்நாடெங்கும் போராட்டத்திற்கு கழகத் தோழர்கள் தயாராகி வருவதுடன், “மனிதம் நம் அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பிலே போராட்ட நோக்கத்தை விளக்கி, பரப்புரைப் பயணங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த...

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!

சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘மனிதம் நமது அடையாளம் -ஜாதி நமக்கு அவமானம்’ என்ற முழக்கங்களோடு ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சமத்துவப் பரப்புரை தெருமுனைக் கூட்டம் 29.11.2025 காலை 11.00 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. சமுத்திரமம், மூலப்பாதை, கொங்கணாபுரம் பேருந்து நிலையம், எட்டிக்குட்டைமேடு ஆகிய நான்கு இடங்களில் பரப்புரை நடைபெற்றது. கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), கவியரசு(தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்), கொங்கணாபுரம் கோகுல் ஆகியோர் தலைமை வகித்தனர். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), முன்னிலை வகித்தனர். பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். இளம்பிள்ளை நகரச் செயலாளர் மோகன்ராஜ், குமரசேன், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), கோகுல் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. எடிசன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்....

கழக ஏட்டுக்கு தோழர் இரண்யா மாதந்தோறும் ரூ.2000 நன்கொடை

கழக ஏட்டுக்கு தோழர் இரண்யா மாதந்தோறும் ரூ.2000 நன்கொடை

கழகத் தோழர் இரண்யா சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக மாதம் ரூ.2000 கொடுப்பதாக தெரிவித்தார். டிசம்பர் மாத வளர்ச்சி நிதியாக ரூ.2000 தந்துள்ளார். சென்னை மாவட்டக் கழக தோழர் அன்பரசு முதல் கட்ட முழக்க சந்தாவாக ரூ.1000 மாவட்டச் செயலாளர் உமாபதியிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். -ஆசிரியர் பெரியார் முழக்கம் இதழ் 04122025

நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

தி.மு.க.- 75 அறிவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் 8 முதல் 16 வரை வள்ளுவர் கோட்டத்தில், சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கேற்க, ஊடவியலாளர் ர.பிரகாசு, தோழர் மகிழவன் முயற்சியில் அரங்கு ஒதுக்கப்பட்டது. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைப்பில், 9 நாட்கள் நிமிர்வோம் பதிப்பக அரங்கு செயல்பட்டது. கழக வெளியீடுகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் கழக வெளியீடுகளை தேடி வந்து வாங்கிச் சென்றனர். மொத்தம் ரூ.82,000-க்கு கழக நூல்கள் விற்பனையானது. இளைஞர் அணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு.கோபிநாத், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, காவை அஜித், முழக்கம் செய்தியாளர் பிரசாந்த், சுகந்தன், வீரா, யாழினி, அசோக், ஓவியா ஆகிய தோழர்கள் அரங்க வடிவமைப்பு பணிகளை முனைப்புடன் செய்தனர். தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி,...

பத்ரி நாராயணன் – இயக்கமாய் ஒரு தனிமனிதன்!

பத்ரி நாராயணன் – இயக்கமாய் ஒரு தனிமனிதன்!

(முரசொலி பாசறைப் பக்கத்தில் ஊடகவியலாளர் பிரகாசு எழுதி வரும் பெரியார் மண் தொடரில், ராயப்பேட்டையை இலட்சியக் கோட்டையாக்கிய கழக செயல் வீரர் மறைந்த பத்ரி நாராயணனின் குறித்து எழுதப்பட்ட கட்டுரை இது) ஒரு தனிமனிதன் வீழ்த்தப்பட்டால் அவர்களின் உடல் இயக்கம் மட்டும்தான் நின்று போகுமே தவிர, அவர்களின் சித்தாந்தம் வீழ்ந்துவிடாது. சிந்தனையாளர்களுக்கு அவர்களின் இறப்பு என்பது ஒருகாலும் மறைவாகாது’ என்பதற்கு திராவிட இயக்கத்தில் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. அதில் தலைநகர் சென்னையின் ஓர் உதாரணம் `பத்ரி நாராயணன்’. 2004-ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருந்தது. `மதமாற்றத் தடைச்சட்டம்’, `ஆடு – கோழி பலியிட தடை’ என ஆர்.எஸ்.எஸ். அரசாகவே மாறியிருந்த அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க ஓரணியில் திரண்டிருந்தன தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகள். சென்னையில் ஏப்ரல் 26-ஆம் தேதியில் இருந்து, தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது பெரியார் திராவிடர் கழகம். ஏப்ரல் 30-ஆம் நாள்...

தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

ஆஸ்திரேலியா: தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டு மாவீரர் நாள் தமிழ் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நவம்பர் 27 மாலை நடைபெற்றது இத்தாலி செயின்ட் ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார் அவர் தனது உரையில்”போர் தான் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போராட்ட களம் அரசியல் நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறது என்றும் விடுதலைப் புலிகளின் மகத்தான தியாகங்கள் குறித்தும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர் அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஐநாவின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாட்டில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை வலியுறுத்தி ஸ்ரீதர் ராஜ் உரையாற்றினார். சதீஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் பாடல்களை பாடியதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கொளத்தூரில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக 27.11.2025 வியாழக்கிழமை...

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

அரசிலமைப்புச் சட்டத்தில் 25, 26, 13, 19, 368, 372(1) ஆகிய பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கும் விதமாக உள்ளது என்றும், அவற்றை நீக்க வேண்டுமென்றும் 03.11.1957 அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக ஸ்பெசல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய பெரியார், கோரிக்கைக்கு செவிசாய்க்க அரசுக்கு 30 நாட்கள் கெடு விதித்தார். ஆனால் கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய அரசாங்கமோ, சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்று வரையறுத்து மசோதாவை இயற்றி நிறைவேற்றியது. 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமியற்றி அச்சுறுத்திய பின்பும், முதல் நாளே தந்தை பெரியாரை திருச்சியில் வைத்து கைது செய்த பின்பும், 26.11.1957-இல் நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நான்காயிரம் பேர் சிறைபுகுந்து, சிறைக்குள்ளேயும் விடுதலை ஆன ஒரு மாதத்தில் 18 பேர் உயிர் நீத்த வீரஞ்செறிந்த ஜாதி ஒழிப்புப் போராட்டம் இந்தியக் கண்டம் கண்டிராதது....

57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

மயிலாப்பூரில் கழகத் தலைமை அலுவலகத்தில் 18.11.2025 அன்று சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமையில் சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தோழர் இரண்யா கடவுள் மறுப்பு உறுதிமொழியை வாசித்தார். கடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் இருந்து தற்போது வரை 57 நிகழ்ச்சிகளை சென்னை மாவட்டக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்றிருக்கிறது. கடந்த ஜூன் முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளின் பட்டியலை தோழர் உமாபதி வாசித்தார். திமுக இளைஞர் அணி நடத்திய அறிவுத் திருவிழாவில் கழக வெளியீடுகள் ரூ. 81980 விற்பனையானது. அதை முழுபொறுப்பேற்று நடத்திய தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் மற்றும் அதற்கு மூலக் காரணமாக இருந்த தோழர் பிரகாசு இருவரையும் பாராட்டி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் சால்வை அணிவித்தார். முற்போக்கு புத்தகக் காட்சியில் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் இடம்பெற்று, நூல்கள் விற்க துணைநின்ற மாவட்டக் கழகத்தோழர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தோழர்கள் எட்வின்...

சேலம் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள்!

சேலம் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள்!

கே.ஆர்.தோப்பூரில் கணேசன் இல்லத்தில் 18.11.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: தீர்மானம்-1: “மனிதம் நமது அடையாளம் – ஜாதி நமக்கு அவமானம்” தெருமுனைக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 29,30 ஆகிய நாட்களில் புதிய பகுதிகளில் நடத்துவது. தீர்மானம்-2: டிசம்பர் 14 அன்று “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” நிறைவுக்கூட்டம் பொதுக்கூட்டமாக தாரமங்கலம் அண்ணா சிலை பகுதியில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம்-3: புரட்சிப் பெரியார் முழக்க இதழை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் கொண்டு சேர்ப்பது குறித்தும், புதிய சந்தாக்களை அதிகப்படுத்தி வருகிற டிசம்பர் 24 அன்று மாவட்டக் கழகத்திடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தீர்மானம்-4: டிசம்பர் 24 கோவையில் நடைபெறும் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்வது எனவும்...

க.கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு & நினைவேந்தல்

க.கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு & நினைவேந்தல்

திராவிடர் விடுதலைக் கழக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் கருப்பூர் க.சக்திவேல் சகோதரரும், ஓய்வுபெற்ற ஆசிரியரும், சேலம் மாவட்ட திராவிடர் கழக காப்பாளருமான க.கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 11.11.2025 செவ்வாய்கிழமை கருப்பூர் சாமிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில், திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் பழநி.புள்ளையணன் தலைமையில் நடைபெற்றது. சேலம் அம்மணி மருத்துவமனை நிர்வாக இயக்குனர், மருத்துவர் இரா. சரவணன் முன்னிலை வகித்தார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசும்போது, தோழர் க.கிருட்டிணமூர்த்தியும் அவரது குடும்பமும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததையும், அவர் பெரியாரிய இயக்கப் பணிகளை செய்த உணர்வுகளைப் பகிர்ந்து நினைவேந்தல் உரையாற்றினார். இறுதியாக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள், தி.க., தி.மு.க. தோழர்கள், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், அ.இ.தி.மு.க.வினர், பா.ம.க.வினர் பலர்...

இளங்கோவன்- வினிதா சுயமரியாதை திருமணம்!

இளங்கோவன்- வினிதா சுயமரியாதை திருமணம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், குறுக்குப்பட்டி கிராமம், பவளத்தனூர் பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர். சரவணன்- சித்ரா ஆகியோரின் மகன் இளங்கோவன் அவர்களுக்கும் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், உடையார்குடி கிராமம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன்- ஆனந்தி ஆகியோரின் மகள் வினிதா அவர்களுக்கும் 04.11.2025 காலை 11 மணியளவில் மேட்டூர்ள பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் இணையர்களுக்கு சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட இணையர்கள் கழகத் தலைவரிடம் பயணச் செலவிற்காக ரூ. 5000 வழங்கினர். பெரியார் முழக்கம் இதழ் 27112025

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்- கொளத்தூரில் கண் மருத்துவ முகாம்!

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்- கொளத்தூரில் கண் மருத்துவ முகாம்!

இலவச மருத்துவ முகாமை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். சேலம் வள்ளி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை சார்பாக 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூர் ஸ்ரீ கொளத்தூர் கஃபே, S. K. C கார்னரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். இம்முகாமை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் கழகத் தோழர். ஜலகண்டாபுரம் ரமேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் கழக தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், செட்டியூர் மாரி, கத்தரிப்பட்டி பழனியப்பன் ஆகிய கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 27112025

ஈரோடு தமிழன்பனுக்கு புகழ்வணக்கம்!

ஈரோடு தமிழன்பனுக்கு புகழ்வணக்கம்!

திராவிட இயக்கக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 22.11.2025 அன்று தனது 92ஆம் வயதில் காலமானார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் நெருங்கி பழகியவர் ஈரோடு தமிழன்பன். சீரிய பகுத்தறிவாளர். பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதுடன், சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். `வணக்கம் வள்ளுவ’ என்னும் புகழ்பெற்ற கவிதை நூலுக்காக இந்திய அரசின் சாகித்திய அகாடெமி விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ‘உலகத் தமிழ்ப் பீட விருது’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். ஈரோடு தமிழன்பனின் இழப்பு தனிப்பட்ட அவருடைய குடும்பத்திற்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த திராவிட இயக்கத்திற்குமான பேரிழப்பு. கவிதைகள், இலக்கியத்தின் ஊடாக அவர் விட்டுச்சென்ற பெரியாரியல் பணியை, விதைத்துச் சென்ற சுயமரியாதைச் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும்...

நாகரீக உலகிலும் ஜாதிவெறி தலைதூக்கலாமா?  சமத்துவ சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்க ஜாதி ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது கழகம்!

நாகரீக உலகிலும் ஜாதிவெறி தலைதூக்கலாமா? சமத்துவ சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்க ஜாதி ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது கழகம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மாநிலம் தழுவிய அளவிலான இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழகத்தின் சார்பில், சுவர் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோழர்கள் ஆத்தூர் மகேந்திரன், சென்னிமலை செல்வராசு ஆகியோர் சுவர் விளம்பரங்கள் தீட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு என பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராவதற்கான திட்டமிடல் பணிகளில் கழகத் தோழர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள், தனியார் வாகனங்களில் தோழர்களை திரட்டி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். ஏற்பாடுகள் ஒருபக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்க இந்த ஆர்ப்பாட்டம் ஏன் என்ற விவாதமும் எழத் தொடங்கியிருக்கிறது. ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது. இனி இந்த ஆர்ப்பாட்டம் தேவைதானா என்ற உரையாடலும் ஒருபக்கம் நடந்து...

மனோஜ்குமார் – அஞ்சலி இணையேற்பு விழா!

மனோஜ்குமார் – அஞ்சலி இணையேற்பு விழா!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தந்தை பெரியார் பிரியாணி கடை உரிமையாளர் கழகத் தோழர். கி.சுப்பிரமணியன்- சாவித்திரி ஆகியோரின் மகன் மனோஜ்குமார் அவர்களுக்கும், திருச்சி மாவட்டம், மணப்பாறை பண்ணாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த வை.சுப்பிரமணி – பார்வதி ஆகியோரின் மகள் அஞ்சலி அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 16.11.2025- அன்று, ஞாயிற்றுக்கிழமை 11 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் சீதா திருமண மண்டபம் முதன்மை அரங்கத்தில் நடைபெற்றது. தி.மு.க. நெசவாளர் அணி மாநிலச் செயலாளர் சிந்து இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் க.நாத்திக ஜோதி வரவேற்புரையாற்றினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையுரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, கழகப் பொருளாளர். துரைசாமி, தலைமைக் கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வக்குமார், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், திராவிடர் விடுதலைக் கட்சி தலைவர் அன்பு மகேசு, அதிமுக...

சேலம் கிழக்கு, வடக்கு மாவட்டக் கழக கலந்துரையாடல்!

சேலம் கிழக்கு, வடக்கு மாவட்டக் கழக கலந்துரையாடல்!

சேலம் கிழக்கு: இளம்பிள்ளையில் சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் கடையில் 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு: மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் 08.11.2025 சனி மாலை 6.00 மணியளவில் மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: தீர்மானம் – 1: சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 2026ஆம் ஆண்டிற்கான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு 500 சந்தாக்களை வருகிற டிசம்பர் 24 அன்று மாவட்ட கழகத்திடம் ஒப்படைப்பதென தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் – 2: நவம்பர் 26 சட்ட எரிப்பு நாளை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 10 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் – 3: டிசம்பர் 24 கோவையில் நடக்கும் தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக பெருவாரியாக தோழர்கள் கலந்து கொள்வதென...

“ஜாதி நமக்கு அவமானம்” ஈரோடு, கோவையில் தீவிர பரப்புரை!

“ஜாதி நமக்கு அவமானம்” ஈரோடு, கோவையில் தீவிர பரப்புரை!

ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 09.11.2025 ஞாயிறு மாலை பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் ‘ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமையேற்க, பரப்புரைச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகிக்க செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, விசிகவின் ஆற்றல், தலைமைக் கழகப் பேச்சாளர் .கா.சு வேலுச்சாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மமகவின் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது ஆகியோர் கருத்துரையாற்றினர். இராம. இளங்கோவன் கழக வெளியீட்டுச் செயலாளர், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி நிறைவுரையாற்றினார். பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பெரியார் குறித்த பாடலை பாட பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்கள்...

ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 09.11.2025 ஞாயிறு மாலை பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் ‘ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமையேற்க, பரப்புரைச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகிக்க செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, விசிகவின் ஆற்றல், தலைமைக் கழகப் பேச்சாளர் .கா.சு வேலுச்சாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மமகவின் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது ஆகியோர் கருத்துரையாற்றினர். இராம. இளங்கோவன் கழக வெளியீட்டுச் செயலாளர், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி நிறைவுரையாற்றினார். பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பெரியார் குறித்த பாடலை பாட பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்கள்...

ஸ்ரீகாந்தராஜ் – இளந்தென்றல் இணையேற்பு விழா!

ஸ்ரீகாந்தராஜ் – இளந்தென்றல் இணையேற்பு விழா!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த மனோகரன்- ராதை ஆகியோரின் மகன் ஸ்ரீகாந்த்ராஜ் அவர்களுக்கும், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி- கோதை ஆகியோரின் மகள் இளந்தென்றல் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 31.10.2025 வெள்ளிக்கிழமை அரியானூர் ஸ்ரீ ஆதித்யா மகாலில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மகுடஞ்சாவடி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் க.அன்பழகன் வரவேற்புரையாற்றினார். தி.க.துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஸ்ரீகாந்தராஜ்- இளந்தென்றல் ஆகியோருக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரையாற்றினார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், திமுகவை சேர்ந்த கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் திமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் எஸ். ஆர்.சிவலிங்கம், திக (பெரியார் அறக்கட்டளைத் தலைவர்) பொத்தனூர் க.சண்முகம், கழகத் தோழர்கள், திக தோழர்கள், திமுகவினர் மற்றும் பலர்...

தோழர் க.கிருஷ்ணமூர்த்தி மறைவு!

தோழர் க.கிருஷ்ணமூர்த்தி மறைவு!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் ஓமலூர் க.சக்திவேல் அவர்களின் சகோதரர், முன்னாள் சேலம் மாவட்டத் தி.க தலைவர் தோழர் க.கிருட்டிணமூர்த்திஅவர்கள் 31.10.2025 அன்று இயற்கை எய்தினார். மறைந்த கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் தோழரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, இரங்கல் உரையாற்றினார். சேலம் மாவட்ட கழகத் தோழர்கள் பலரும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 13112025

கோவையில் தீண்டாமை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்! மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!

கோவையில் தீண்டாமை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்! மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!

திருப்பூர் வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் 03-11-2025 மாலை 5 மணி அளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : தீர்மானம் -1 டிசம்பர் 24 தலைவர் பெரியார் நினைவு நாளையொட்டி கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் மாபெரும் போராட்டத்தை நடத்துவது. அதற்கான சுவர் எழுத்து, சுவரொட்டி, சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதின் மூலமாக ஜாதியத் தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் நோக்கத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்வது அதன் வாயிலாக தோழர்கள் மற்றும் மக்களை அணி திரட்டுவது தீர்மானம்- 2 கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” ஆண்டு சந்தா மூன்று மாவட்டங்கள் இணைந்து மொத்தம் 500 சந்தாக்களை நவம்பர் 03 தேதி முதல் டிசம்பர்...

அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு- பெரியார் சொன்னார்; தி.மு.க. செய்தது!

அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு- பெரியார் சொன்னார்; தி.மு.க. செய்தது!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா நிறைவையொட்டி, அதன் இளைஞர் அணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நவம்பர் 8ஆம் தேதி ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற நூலை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார். இந்நூலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர் பிரகாசு ஆகியோர் கட்டுரை எழுதியுள்ளனர். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நவம்பர் 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை முற்போக்கு புத்தகக் காட்சியும் நடைபெறுகிறது. இதில் அரங்கு எண் 22-இல் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கு பெற்றுள்ளது. கருத்தரங்கில் மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன. அதில் கடைசி அமர்வு பெரியாரிய இயக்கத் தலைவர்களைக் கொண்டு நிறைவுற்றது முத்தாய்ப்பாக அமைந்தது. புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் நடைபெற்ற அந்த அமர்வில், ‘கருஞ்சட்டை கழகமும் கருப்பு...

மடத்துக்குளம், கோவையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

மடத்துக்குளம், கோவையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

திருப்பூர்: மடத்துக்குளம் – கணியூர் காரத்தொழுவு, துங்காவி பகுதிகளில் 12-10-2025 அன்று மடத்துக்குளம் மாவட்டக் கழகம் சார்பாக தந்தை பெரியார் 147வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, ‘ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்’ என்கிற கருத்தை முன்வைத்து தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தங்கவேலு, கழக மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றியச் செயலாளர் விசிக ராஜசேகர், கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். கடத்தூர் சரவணன் நன்றி உரையாற்றினார். மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,...

தூத்துக்குடியில் ஜாதி எதிர்ப்பு பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் ஜாதி எதிர்ப்பு பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட க் கழகம் சார்பில் தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு தருவை குளம் முதன்மை சாலையில் 23.09.2025 அன்று மாலை 05.30 மணியளவில் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு “மனிதம் நமது அடையாளம் – ஜாதி நமக்கு அவமானம் ” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழகப் பொருளாளர் கே. சந்திரசேகர் தலைமை வகித்தார். வடக்கு சோட்டையன் தோப்பு ச.கா.பால சுப்பிரமணியன், ஆழ்வை ஒன்றிய கழகச் செயலாளர் ஆழ்வை இரா.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ச.ரவிசங்கர் வரவேற்புரையாற்றினார். நெல்லை மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன், தென்காசி மாவட்ட தலைவர் குறும்பை அரு.மாசிலாமணி, தென்காசி செந்தமிழ், பாலசுப்பிரமணியன், மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் செய்யது சம்சுதீன், சமம் குடிமக்கள் இயக்க மாவட்டப் பொறுப்பாளர் ஜாண்.பி.ராயர், வி.சி.க. மகேஷ், தி.மு.க. ஒட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர், இளம்பேச்சாளர் இள.கார்த்திக், மனித நேய மக்கள்...

தந்தை பெரியார் தொழிற்சங்கம் திறப்பு

தந்தை பெரியார் தொழிற்சங்கம் திறப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தந்தை பெரியார் தொழிற்சங்க பேரவையின் கிளை திறப்பு விழா ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் சார்பாக தந்தை பெரியார் தொழிற்சங்கம் திறப்பு விழா 23.10.2025 அன்று நடைபெற்றது. சி.குப்புசாமி (பொதுச் செயலாளர் தந்தை பெரியார் தொழிற்சங்க, பேரவை) தலைமையில் கோ. செல்லதுரை (அந்தியூர் கிளை தலைவர்) வரவேற்புரையாற்றினார். காவை ஈஸ்வரன் (தலைமைக் குழு உறுப்பினர்), நாத்திக ஜோதி (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர்), ஈஸ்வரன் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் விசிக, வேங்கை பொன்னுச்சாமி தமிழ்ப் புலிகள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் ஆகியோர் தொழிற்சங்கத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். கௌசல்யா அந்தியூர், பெருமாள் அந்தியூர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கழகத்தின் சார்பாக வேணுகோபால் பவானி, சேகர் வெள்ளி திருப்பூர், குமரேசன் கொளத்தூர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியாரிய உணர்வாளர்கள், தோழமை இயக்கத் தோழர்கள்...

மதுரையில் ஜாதி எதிர்ப்பு கருத்தரங்கம்

மதுரையில் ஜாதி எதிர்ப்பு கருத்தரங்கம்

ஜாதிய – வளர்க்க ஆணவப் படுகொலைகள் எதிர்ப்பு,பெண்களின் காதல் திருமணத் தேர்வு உரிமை, காதலர் உயிர் காக்க சட்டம், சமூகப் பாதுகாப்பும் என்ற தலைப்பில் சமத்துவக் கருத்தரங்கம் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் கிராமசுப்பு அரங்கம்(கவின் – சதீஷ்குமார் நினைவு அரங்கத்தில்) மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. ஜாதி ஒழிப்பு முன்னணி மதுரை மாவட்டச் செயலாளர் சீ.கா. தெய்வம்மாள் தலைமையில் நடைபெற்றது. தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் மதுரை மாவட்டச் அமைப்பாளர் கொ. மனோகரன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு பெண்கள் இயக்கத் தலைவர் தொ. ஆரோக்கிய மேரி நோக்க உரையாற்றினார். ஐந்திணை மக்கள் கட்சித் தலைவர் தேவதாசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாலின், தமிழ் புலிகள் கட்சியை முத்துக்குமார், மக்கள் தேசம் கட்சியைச் குரு விஜயன், திராவிடத் தமிழர் கட்சி விடுதலை வீரன், ஆதித்தமிழர் பேரவைச் கார்த்திக்,நீதிவேந்தன், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவை காமேஸ்வரி, மக்கள் பாதை...

சிவகிரியில் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

சிவகிரியில் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

ஈரோடு தெற்கு மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிவகிரி பேரூராட்சி, அண்ணா கலையரங்கத்தில் 11.10..2025 சனிக்கிழமை அன்று மாலை 5:30 மணி அளவில் கழக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழிலன், முன்னாள் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர்செ. சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகச் செயல்பாட்டாளர் ஈரோடு நல்லதம்பி வரவேற்புரையாற்றினார். சிவகிரி பேரூராட்சித் தலைவர் பிரதீபா கோபிநாத், சிவகிரி தி. மு. க 10 வார்டு செயலாளர் தண்டாம்பாளையம் தா. கு. அன்பரசு, சமூக நீதி மக்கள் கட்சித் தலைவர் வடிவேல்ராமன், ஆதித்தமிழர் பேரவை மாநில நிதிச் செயலாளர் பெருமாவளவன், மதிமுக ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் மு. கோபால், திகஒன்றிய பொறுப்பாளர் சிவகிரி சண்முகம், திராவிடர் எழுச்சிப் பேரவைத் தலைவர் சக்திவேந்தன், தமிழ்ப்...