கன்னியாகுமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்!

குமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.04.2026 ஞாயிறு அன்று மாலை 03.00 மணியளவில் தக்கலை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழக பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் தலைமை வகித்தார். குமரி மாவட்டக் கழகச் செயலாளர் நீதியரசர் முன்னிலை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23, தமிழ்நாடு சட்ட தேர்தலில் கழகத் தலைமைக்குழு எடுத்த தீர்மானத்தின் படி குமரி மாவட்டத்தில் எப்படி களப்பணியற்றுவது என கலந்துரையாடப்பட்டது. நிகழ்வில் மஞ்சுகுமார், நாஞ்சில் சூசையப்பா, தமிழ்மதி, அணைக்கரை பால் வண்ணன், ரமேஷ் பாபு அன்டன் பாலசிங்கம், ரெவி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழகம் எடுத்துள்ள தேர்தல் நிலைபாட்டின்படி குமரி மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய களப்பணியாற்றுவது என்றும் குறிப்பாக பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் முழுகவனம் செலுத்தி பா.ஜ.க. இல்லாத குமரி மாவட்டம் என்ற நிலை உருவாகிட கடின உழைப்பை தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
பெரியார் முழக்கம் இதழ் 30042026

You may also like...