மக்கள் தளபதி பள்ளீகொண்டா கிருஷ்ணசாமி இல்லத்திற்கு கழக தலைவர் சந்திப்பு 09112017

9-11-2017 அன்று காலை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வேலூர் மாவட்ட கழகச் செயலர் குடியாத்தம் சிவா, கழகத் தோழர்களுடன், வீரியமிக்க தலித் விடுதலை போராளியாய் விளங்கியவரும் , மக்களால் தளபதி என அன்போடு அழைக்கப்பட்டவருமான பள்ளீகொண்டா  கிருஷ்ணசாமி அவர்கள் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார்.

அடுத்து அவரால் நிறுவப்பட்டதும், அவர் நடத்திய 150 இரவுப் பாடசாலைகளில் ஒன்றானதும், தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசுத் தேர்வாணையத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிப் பள்ளீயாய் அவரது பெயரன் தோழர் மகேஷ் அவர்களால் தொடர்ந்து இயங்கிவரும்  பவுத்த ஆராய்ச்சி மையத்துக்கும் சென்று பார்த்ததோடு, சமூக அக்கறையோடு இயங்கிவரும் பாங்கினை வியந்து பாராட்டினார்.
img_4489

You may also like...