தோழர் திலீபனின் தாயார் முடிவெய்தினார்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் திலீபனின் தாயார் தாயாரம்மாள் 03.06.2024 திங்கட்கிழமை இரவு 11.30 மணி அளவில் முடிவெய்தினார். இறுதி நிகழ்வு இன்று 04.06.2024 மாலை 4.30 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் பெரப்பேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அம்மையாரின் உடலுக்கு வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
அம்மையாரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம், 15.06.2024 அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழக மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை இயக்கத்தினர் பங்கேற்கின்றனர்.

பெரியார் முழக்கம் 13.06.2024 இதழ்

You may also like...