நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம் கருத்தரங்கம்

திருப்பூர்: திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மகன் பிறந்தநாள் விழா மற்றும் ‘நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம்’ கருத்தரங்கம் 10.08.2024 அன்று பொங்குபாளையம் கூத்தநாயகி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மாநகர அமைப்பாளர் முத்து வரவேற்புரையாற்றினார். திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கோவை மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் வீ.சிவகாமி, பல்லடம் தேன்மொழி, சூலூர் தமிழ்ச்செல்வி, கோவை மாநகரச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், கழகப் பொருளாளர் சு.துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக “நூற்றாண்டு கண்ட திராவிடர் இயக்கம்” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் மகிழ்வாகப் புரட்சி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ 2000/- யைப் பெரியார் விழுது வெற்றிமாறன் கழகத் தலைவரிடம் வழங்கினார். நிறைவாக வசந்தி நன்றி கூறினார். நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் “பெரியார் அறிவு சுவடி” நூல் வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்

You may also like...