Category: சென்னை

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

சென்னை: கழகம் 14-ம் ஆண்டு துவக்க விழா சென்னை மாவட்டக் கழகம் சார்பில் இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவு படிப்பகத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கொடியோற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கழகத் தோழர்கள் தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்),வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), ம.கி எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ப.அருண்( இளைஞரணி அமைப்பாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வடசென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), த.நா சூர்யா (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் தோழி, குறளரசி மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 12.08.2025 மாலை 5.00 மணியளவில் கோனூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து...

மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!” என்ற தலைப்பில் கழகத் தோழர்கள் ஜாதி எதிர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் செய்தி விவரம்: சென்னை: ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தெருமுனைக் கூட்டம் 12.08.2025 அன்று திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் நடைபெற்றது. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), தலைமையில், லட்சுமணன் முன்னிலையில் நடைபெற்றது. சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்களை தோழர்களை வெகுவாக ஈர்த்தது. ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நெல்லை கவின் படத்திறப்பு நடைபெற்றது. வழக்கறிஞர் சாரநாத் (மாவட்டச் செயலாளர் -விசிக) ஜாதி எதிர்ப்புப் பரப்புரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கழக செயல்பாடுகளை பாராட்டி உரை நிகழ்த்தினார். நிறைவாக சிறப்புரையாற்றிய பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் தேவை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இரண்டாம் நாள்: 13.08.2025 அன்று சென்னை சி.என்.கே சாலை...

வேலுபிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

வேலுபிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் 27.07.25 அன்று இயக்குனர் வேலு பிரபாகரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இனமுரசு சத்யராஜ் சிறப்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தபெதிக பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், ப்ளூ சட்டை மாறன், இயக்குனர் கதிர், திக பொருளாளர் வீ.குமரேசன், பாடகர் அந்தோணி தாசன், இயக்குனர் அகரன் உள்ளிட்ட பலரும் இயக்குனர் வேலு பிரபாகரனுடனான தங்கள் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். இரா. உமாபதி (திவிக சென்னை மாவட்டச் செயலாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) , ம.கி.எட்வின் பிரபாகரன் (தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபி (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் ஒருங்கிணைத்தார். பெரியார்முழக்கம்இதழ்07082025

20 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகை

20 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகை

கழக செயல் வீரர்கள் கண்ணன் மற்றும் குமார் இருவரையும் விபத்தில் கழகம் பறிகொடுத்தது. பெரியார் நினைவு நாள் சுவரொட்டிகளை ஒட்ட சென்றபோது களப்பணியில் அந்த தோழர்கள் உயிரிழத்தார்கள். உயிர் நீத்த டிசம்பர் 2005 ஆண்டு 24ம் நாள் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சுவரொட்டி அடித்து அவரது நினைவைப் போற்றி வருகிறது. இவர்களுக்கான காப்பீட்டுத் தொகைக்கான வழக்கு 20 ஆண்டு காலத்திற்கு மேல் நடந்தது. இப்போது அந்த தீர்ப்பு தோழர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பெரியார் நினைவு நாள் சுவரொட்டி சென்றபோது அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று மோதி தோழர்களின் உயிரைப் பறித்தது. இதற்காக காப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை வழக்கறிஞர் குமாரதேவன் நடத்தினார். நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக வழக்கு நிலுவையிலே இருந்தது. பிறகு முதலமைச்சர் தனிப்...

இனப்படுகொலையின் பேரவலம் கருத்தரங்கம்

இனப்படுகொலையின் பேரவலம் கருத்தரங்கம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சர்பிடி தியாகராயர் அரங்கில் ஈழ மண்ணில் செம்மணி மனிதப் புதைக்குழி இனப்படுகொலையின் பேரவலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. செம்மணி மனிதப் புதைகுழி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் தியாகு (பொதுச்செயலாளர் தமிழ் தேசிய விடுதலை இயக்கம்), கோவை இராமகிருட்டிணன் ( பொதுச் செயலாளர் தபெதிக), சி. மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) வேல்முருகன் (சட்டமன்ற உறுப்பினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்) ஆகியோர் உரையாற்றினார். பெரியார்முழக்கம்இதழ்31072025

“கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி”  நூல் வெளியீடு!

“கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி” நூல் வெளியீடு!

தாய் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் டேவிட் பெரியார் தலைமையில் “கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி” நூல் சென்னை வடபழனியில் 26.07.25 அன்று வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகள் நடத்திய தரைவழித் தாக்குதல் பற்றி விவரிக்கிறது இந்நூல். லோகு அய்யப்பன் (புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்), மல்லை சத்யா, இயக்குனர் அமீர், தமிழ் சாக்ரடீஸ், ஊடகவியலாளர் இந்திரகுமார், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, இளைய கம்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இரவி பாரதி (காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்) தொகுத்து வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். தோழர் தியாகு சிறப்புப் பிரதியினை பெற்றுக் கொண்டார். தோழமை அமைப்புத் தோழர்கள் மனிதி செல்வி உட்பட பலர் கலந்து கொண்டு நூலை வாங்கி சென்றனர். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் தபசிகுமரன் (தலைமை நிலையச் செயலாளர்), வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்), இ.ரா.உமாபதி (மாவட்டச் செயலாளர்), எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), இராவணன் (தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்),...

வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 29வது கூட்டம் அன்பு தனசேகர் (கழக தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்வை மாவட்டச் செயலாளர் இ.ரா.உமாபதி ஒருங்கிணைத்தார். மறைந்த பகுத்தறிவு இயக்குனர் வேலு பிரபாகரன் படத்தைத் திறந்து வைத்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். நினைவேந்தல் உரையாற்றிய திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கொள்கையில் சமரசமற்ற கடவுள் மறுப்பாளரின் பணிகளையும், வேலு பிரபாகரன் உடன் பயணித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். வேலுபிரபாகரன் இயக்கிய `கடவுள்’ படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), ம.கி.எட்வின் பிரபாகரன்(தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்), ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), சேத்துபட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வட சென்னை அமைப்பாளர்), ஆ.வ வேலு (வட சென்னை ஒருங்கிணைப்பாளர்), கோபி(திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), சூர்யா(திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் ஊடக நண்பர்கள்...

“மனிதம் நமது அடையாளம்!  ஜாதி அவமானம்!”

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி அவமானம்!”

சமூகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஜாதியப் படுகொலைகளை (ஆணவ கொலைகள்) தடுக்க சட்டம் மட்டும் போதாது மக்களின் மன உணர்வுகளில் இருந்து அதை நீக்க வேண்டும். நாகரீக சமூகமாக இந்த தமிழ் சமுதாயத்தை மாற்றி அமைக்கப் போராடியவர் பெரியார். அவர் தொடங்கிய இயக்கம் தொடர்ந்து ஜாதி எதிர்ப்பு, சடங்கு மறுப்பு கருத்தியலை வலிமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது. அதன் விளைவாக இன்று பல்வேறு மாற்றங்கள் வந்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் யாரும் பெயருக்குப் பின்னால் ஜாதி போடும் வழக்கத்தைப் பின்பற்றுவது இல்லை. ஆகவே அதன் தொடர்ச்சியாக திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு தலைப்புகளில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களை கள ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து SC/ST ஆணையத்திடம் மனு அளித்தது. தற்போது இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்து உள்ளது. ஜாதிவெறி சிந்தனைகளில் இருந்து இளைஞர்களை மீட்க சென்னை மாவட்டக் கழகம் “மனிதம் நமது அடையாளம்! ஜாதி...

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக 15-07-2025 மாலை 4 மணி அளவில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் மாநகரச் செயலாளர் மாதவன் முன்னிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கல்விக் கண் திறந்த காமராசர் அவர்களின் 123 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உரிமைப் பாதுகாப்புப் பரப்புரைப் பயணம் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலும், அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகிலும் காமராஜர் செய்த அரும்பணிகள் குறித்து மக்களிடத்தில் எடுத்துரைக்கும் விதமாக தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்வில் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத்தலைவர் முகில் ராசு, ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செல்வன்,மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, சரஸ்வதி,தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மற்றும் கழகத் தோழர்கள் ராஜசிங்கம்,ஸ் ரீஜா, ஆத்துப்பாளையம் மதன், முத்து...

வடசென்னையில் கழக கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னையில் கழக கலந்துரையாடல் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வடசென்னை கலந்துரையாடல் கூட்டம் 13.07.25 ஞாயிறு அன்று மாலை 06.30 மணியளவில் சென்னை அயனாவரத்தில் உள்ள சேத்துப்பட்டு இராஜேந்திரன் இல்லத்தில் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் புதிய தோழர்களை சேர்ப்பது வட சென்னையில் கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் தெருமுனை, பரப்புரை கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு வடசென்னை மாவட்டம் சார்பில் 100 உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, தோழர்கள் ராஜன், தினகரன், சிகாமணி, கழகப் பணிகளை முன்னெடுப்பதை குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத்‌ தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தமிழ்நாடு...

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

சென்னை மாவட்டக் கழகத் தோழர் கன்னியப்பன் உடல்நலக் குறைவால் கடந்த 12.07.2025 அன்று முடிவெய்தினார். அவரின் உடலுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தட்சிணாமூர்த்தி, ஏசுகுமார், மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

நிமிர்வோம் வாசகர் வட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 28வது கூட்டம் தோழர் சிரிஜன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்வை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார். மறைந்த கழகத் தோழர் கன்னியப்பன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. அரசியலாக்கப்படுகிறதா நீதித்துறை? என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். ‘அம்பேத்கரின் முகவுரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ரகசிய வரலாறு’ என்ற நூலை எட்வின் பிரபாகரன் திறனாய்வு செய்தார். பேராசிரியர் சுப்பிரமணியின் ‘இதழியல் களத்தில் பெரியார்- ஆய்வும் தொகுப்பும்’ நூலை ர.பிரகாசு திறனாய்வு செய்தார். நிகழ்வில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார அமைப்புகளைக் கட்டுப்படுத்தவும், அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைத்து மத மோதல்களைத் தூண்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலி பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள், தமிழ்நாடு அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்ய வலியுறுத்தி மனுக்களை நீதிமன்ற ஆணை நகல்களுடன் இணைத்து கோரிக்கை மனு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,மாவட்ட...

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் வருமான வரித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி 36 வருட பணிக்குப் பின் ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வு பாராட்டு விழா கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் சிறப்புடன் நடைபெற்றது. உடன் பணியாற்றிய அலுவலர்கள், உறவினர்கள், கழகத் தோழர்கள் நண்பர்கள் திரண்டு வந்திருந்தனர். அன்பு தனசேகர் மகள் வழக்கறிஞர் இளவேனில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். உரையாற்றியவர்கள் அன்பு தனசேகரின் சமூகத் தொண்டுகளை சமூக தொண்டாற்றுவதில் அவரின் ஆர்வத்தையும் பாராட்டினர். தனது பெண் மக்களை முழு சுதந்திரத்துடன் வளர்த்தார். அலுவலகத்தில் ஆளுமைகளை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். அதிகாரியாக இருந்தும் ஒரு அதிகாரியாக நடந்து கொள்ளாமல் எளிமையான மனிதராக எல்லோரிடமும் பழகியவர். தனக்கு கீழே பணியாற்றும் ஊழியர்களுக்கு உதவியவர். அமைப்புகளை உருவாக்கி வழி நடத்தியவர். பிற்படுத்தப்பட்டோர் சமூக உரிமைக்காக தொடர்ந்து களத்தில் நின்றவர். பல ஊர்களுக்கு சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தியவர். நடைபயிற்சி...

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

5/7/25 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை நங்கநல்லூரில், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் தலைமையில், ம.குகாநந்தன் முன்னிலையில் நடைபெற்றது. இரண்யா வரவேற்புரையாற்றினார். “சுயமரியாதை இயக்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள்” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். வரலாற்று ஆவணமாக இவ்வுரை அமைந்தது. “குடிஅரசு உருவாக்கிய அதிர்வலைகள்” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆழமான ஆய்வுரையை நிகழ்த்தினார். பொதுக்கூட்டத்தின் சிறப்பம்சமாக, பொதுக்கூட்ட மேடையிலேயே ஆனந்தகுமார் – ஷர்மிளா இணையரின் சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணமும் நடைபெற்றது. இந்நிகழ்வு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. கார்மேகம் – வீரமணி – பேரன்பு – திராவிட மகிழன் குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்கள் மக்களை சிந்திக்க வைத்தன. தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி நன்றியுரையாற்றினார். களப்பணியாற்றிய தோழர்களுக்கும் கலைஞர்களுக்கும் நினைவுப்பரிசாக புத்தகங்களை, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, தென்சென்னை மாவட்டத்...

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

சமூக நீதிக் காவலர் விபி சிங் பிறந்தநாளான (25/6/25), சென்னை பிரசிடென்சி கல்லூரியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாலை 5 மணியளவில், திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா.சூர்யா, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இளவரசன் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம்03072025இதழ்

தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

சென்னை கழக தலைமை அலுவலகத்தில் ஜூன் 29 மாலை 5 மணி அளவில் சென்னை மாவட்ட இளைஞரணி மற்றும் தொழில்நுட்ப அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இரு அணிகளை சேர்ந்த 40 தோழர்கள் பங்கேற்றனர். சென்னை மாவட்ட இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில், எழுத்தாளர்களை உருவாக்குவது, வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல், தோழமை உணர்வை மேம்படுத்துதல், அறிவியல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 1. மாதம் ஒரு புத்தக திறனாய்வு கூட்டத்தை இளைஞரணி முன்னெடுக்கும். 2. மாதம் இரண்டு தெருமுனை கூட்டங்கள் நடத்துவது 3. ஆண்டுக்கு இரண்டு பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக அம்பத்தூர் பகுதியில் பகுத்தறிவு பரப்புரை பிரச்சாரம் நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. தொழில்நுட்ப அணி சார்பில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தகவல் தொழிட்நுட்ப் அணி சார்பாக புகைப்படக் கருத்து வடிவ உருவாக்கம், காணொலிப் பிரச்சாரம், இணையதள வடிவமைப்பு, சமூக வலைத்தள செயல்பாடுகள், ஆவணப்படுத்துதல்,...

சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!

சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!

பாலஸ்தீன ஆதரவுக் குழு நடத்திய பாலஸ்தீன விடுதலைப் பேரணி 21.06.25 அன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதான த்தில் தொடங்கி எழும்பூர் ரவுண்டானா அருகில் நிறைவு கண்டனக் கூட்டமாக நிறை வடைந்தது. கண்டனக் கூட்டத்தில் குழந்தைகளைத் திட்டமிட்டு கொன்றுகுவிக்கும் இஸ்ரேல்! காசா மீதான இனஅழிப்புப் போரை நிறுத்தக்கோரி திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி அவர்கள் உரையாற்றினார். பேரணியில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் , மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வடசென்னை மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண், மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, தட்சணாமூர்த்தி, ஏசு குமார், தினகரன் மற்றும் கழக தோழர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

புலிகளின் தளபதி பொட்டு அம்மான்: வரலாற்று நூல் கழகத் தலைவர் வெளியீட்டார்

புலிகளின் தளபதி பொட்டு அம்மான்: வரலாற்று நூல் கழகத் தலைவர் வெளியீட்டார்

தாய் தமிழர் இயக்கம் நடத்திய அறிவரண் தளபதி பொட்டு அம்மான் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னை செங்குன்றத்தில் டேவிட் பெரியார் தலைமையில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிய இனமுரசு சத்யராஜ், நூலை மதிப்புரை ஆற்றிய திவிக-புதுவை மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், நூலைப் பற்றி அறிமுக உரை மேச்சேரி தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர். திருவல்லிக்கேணி பகுதியில் உயர்நீத்த கழகத் தோழர்கள் பத்ரி நாராயணன், தமிழரசு, கண்ணன், குமார் ஆகியோரின் குடும்பத்தினர் நூல்களை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்விற்கு கழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, துணைச் செயலாளர் இராவணன், இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவி பாரதி மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19062025இதழ்

சென்னை, கோவையில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை, கோவையில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை: மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.06.2025 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மறைந்த கழகத் தோழர் இசைக் கலைஞர் அருண் படத் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தொடர்ச்சியாக கழகம் முன்னெடுத்த பிரச்சார கூட்டங்களையும், இளைஞரணி, நிமிர்வோம் வாசகர் வட்டம், மாணவர் கழக செயல்பாடுகளையும் பட்டியலிட்டு கருத்துரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் கழகத் தோழர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவற்றை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார். தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், அருண் கோமதி, புருஷோத்தமன், தினகரன், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, தேன்மொழி, இரண்யா, பிரசாந்த், சிரிஜன், மகிழவன், நந்தகுமார், ஹர்ஷா ஆகியோர் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் கழக வார இதழான ‘புரட்சிப்...

கழகத் தலைமை அலுவலகத்தில் இட ஒதுக்கீடு அறிமுகவகுப்பு!

கழகத் தலைமை அலுவலகத்தில் இட ஒதுக்கீடு அறிமுகவகுப்பு!

01.06.2025 தமிழ்நாடு மாணவர் கழகம் முன்னெடுத்த புதிய தோழர்களுக்கான “இட ஒதுக்கீடு – அ முதல் ஃ” என்ற தலைப்பில் அறிமுக வகுப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியரசு தலைமை தாங்கினார், தோழி அனைவரையும் வரவேற்றார், தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் இளவரசன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கும் தோழர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகர் இட ஒதுக்கீடு பற்றி சிறப்பாக அறிமுக வகுப்பெடுத்தார். வகுப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற தோழர் லாவண்யா அவர்களுக்கு தோழர் அன்பு தனசேகர் பரிசுத்தொகை ரூ.1000/- வழங்கினார். நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன் உட்பட 40-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். தோழர்களுக்கு மதிய உணவை தி.வி.க மாவட்டச் செயலாளர் உமாபதி வழங்கினார். நிறைவாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்...

மாணவர்களுக்கு ஆலோசனை மய்யம்,மாணவர் கழகம் முடிவு

மாணவர்களுக்கு ஆலோசனை மய்யம்,மாணவர் கழகம் முடிவு

சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் (04/05/25) சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு குறளரசி தலைமை தாங்கினார், இளவரசன் முன்னிலை வகித்தார். சூர்யா, ஷர்மிளா, தோழி, பிரசாந்த், பேரன்பு ஆகியோர் கலந்துகொண்டனர். எடுக்கப்பட்ட முடிவுகள்: 1)கல்லூரி சேர இருக்கும் மாணவ மாணவியருக்கான வழிகாட்டுதல் தருவது. 2)இட ஒதுக்கீடு பற்றிய அறிமுக வகுப்பு இந்த மாதத்தில் நடத்துவது. 3) புதிய இசைக்குழுவை தொடங்குவது. தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக 2025-2026 ஆண்டு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். தனியார் பள்ளிகளில் 25% பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு RTE முலமும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தில் விண்ணப்பித்து தரப்படும். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி சேரும் மாணவ மாணவியருக்கான ஆலோசனை மையம். தொடர்புக்கு: பேரன்பு(சென்னை): 89731-19313, இளவரசன்(சென்னை): 88382-77257 நாகராஜன்(சேலம்): 90929-04626, ஷர்மிளா(ஈரோடு)-75987-04581 நவீன்(கோவை)-63698-18361, ஷியாம் (தஞ்சாவூர்)-90808-18987 பெரியார் முழக்கம் 22052025இதழ்

சென்னையில் சிறப்பாக நடந்த குழந்தைகள் பழகு முகாம்

சென்னையில் சிறப்பாக நடந்த குழந்தைகள் பழகு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் இணைந்து சென்னையில் 17.05.2025 அன்று ‘திராவிட வாரிசுகள்’ ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாமை நடத்தியது. இந்த பழகு முகாமில் குழந்தைகளுக்கு தலைமைப் பண்பு வளர்த்தல், பாலின சமத்துவம், கலைகள் கற்றல் இது போன்ற தலைப்பில் கலை வடிவத்திலும் விளையாட்டு, பாடல் மூலமாகவும் வகுப்புகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, முத்துராணி, விரட்டு கலைக்குழு ஆனந்த் ஆகியோர் பயிற்சி வழங்கினர். தோழர் சிற்பி ராஜனின் மந்திரமா? தந்திரமா? என்று அறிவியல் விளக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. கழகக் குடும்பங்களைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பழகு முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலந்துகொண்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர்...

கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

தோழர்‌ பத்ரி நாராயணன் நினைவு நாளில்”கற்போம்! களம் காண்போம்!” என்ற தலைப்பில் 30/04/25 அன்று சென்னை இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில், கழக இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர் ப.அருண் தலைமையில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை கழக இளைஞரணி தோழர்கள் நேர்த்தியாக செய்திருந்தனர். பயிற்சி பெற்ற 55 பேரில் 15 க்கு மேற்பட்டவர்கள்‌ பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட இயக்க வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களின் படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. கழகத்தலைவர் தனது தொடக்க உரையில் சுயமரியாதை இயக்கத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் உள்ள பண்பு ரீதியான வேறுபாடுகளை சுட்டிக்காட்டி இயக்க வரலாறுகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவையை வற்புறுத்தினார். நிறைவுரை ஆற்றிய விடுதலை இராசேந்திரன் கழகத் தோழர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமான விடையளித்தார். கருத்துரையாற்றிய அனைவருக்கும் கழக வெளியீடுகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. “கொள்கை தரும் இன்ப வாழ்வு!” எனும் தலைப்பில் மாவட்டச்...

வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, ஜான் இளமாறனுக்கு பாராட்டு!

வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, ஜான் இளமாறனுக்கு பாராட்டு!

கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ராஜ் பவன், வெல்கம் ஹோட்டல்களை முற்றுகையிட்டதாக தொடரப்பட்ட வழக்கு, எஸ்.வி.சேகர் வீட்டை முற்றுகையிட்ட வழக்கு, பெரியார் சிலையை உடைப்போம் என ஹெச்.ராஜா கூறியதற்காக சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் எதிர்வினையாற்றியதாக தொடரப்பட்ட வழக்கு, இலங்கை தமிழர் விவகாரத்தில் புத்த மட முற்றுகை வழக்கு என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த பல முக்கிய வழக்குகளில் இருந்து கழகத் தோழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் கழகத் தோழர்கள் சார்பாக ஆஜராகி விடுதலை பெற்றுத் தந்த வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, இளமாறன், ஜான் ஆகியோருக்கு பாராட்டு விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த பாராட்டு நிகழ்வில், கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகத்தினர் மீதான வழக்குகளை திறம்பட நடத்திய வழக்கறிஞர்களை பாராட்டிப் புத்தகங்களை வழங்கினார்....

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் ஒட்டிய ஸ்டிக்கர்-விடுதலை இராசேந்திரன்

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் ஒட்டிய ஸ்டிக்கர்-விடுதலை இராசேந்திரன்

ஆளுநர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. நீதிமன்ற அவமதிப்புச் சின்னமாக இங்கேயே இருக்கட்டும். உச்ச நீதிமன்றம் ஆளுநரின் மீது இரண்டு ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளது. சட்ட விரோதமாக முறைகேடாக செயல்பட்டுள்ளார் என்பது ஒன்று anti constitunal and erroneous, நல்ல எண்ணம் கொண்டவராக நடந்து கொள்ளவில்லை என்பது இரண்டு. The conduct exhibited on part of the Governor, as it clearly appears from the events that have transpired even during the course of the present litigation, has been lacking in bonafides. There have been clear instances where the Governor has failed in showing due deference and respect to the judgments and directions of this Court. In...

ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…

ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு எனும் முழக்கத்தோடு.. 25.04.2025 வெள்ளி மாலை 4.00 மணியளவில் சேலம் ரயில் நிலையத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார். கழக மாநில வெளியீட்டுச் செயலாளர் கோபி.இராம.இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ராவண பிரபு, CPML மக்கள் விடுதலை ப.செல்வகுமார், உழைப்போர் இயக்கம் கண்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கலந்து கொண்டவர்கள்: அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், தலைமைக் குழு...

பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?  தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை!

பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்? தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை!

சென்னை: 18/3/25 செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், உத்திரமேரூர் பேருந்து நிலையம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம், செய்யாறு – ஆரணி கூட்டுச் சாலை ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கருத்துரையாற்றிய தோழர்கள்: இரா. உமாபதி, ரவிபாரதி, சுகுமார், ம.கி. எட்வின் பிரபாகரன், காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு), அருண் கோமதி, திலகவதி (மக்கள் அதிகாரம்) ஆகியோர். பொன்ராஜ் – வீரமணி – கார்மேகம் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அமீன் (தமுமுக), அ.வெ.முரளி (திக), ஆதித்ய கரிகாலன் ஆகியோர் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆதித்ய கரிகாலன் தங்கும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். சுகுமாறன், குமார், சூர்யா, கோபி, இரண்யா, வீரா, அசோக், முரளி, அருண் கோமதி, அருண் (இளைஞரணி) ஆகியோர் கலந்து கொண்டனர். 19/3/25 மதுராந்தகம் பேருந்து நிலையம், சோத்துப்பாக்கம் சந்திப்பு, திண்டிவனம் காந்தி சிலை, மயிலம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சென்னை அணியின் தெருமுனைக்...

சனாதன-ஜாதி எதிர்ப்புக் கூட்டங்களுடன்  கழகம் எடுத்த அம்பேத்கர் விழாக்கள்!

சனாதன-ஜாதி எதிர்ப்புக் கூட்டங்களுடன் கழகம் எடுத்த அம்பேத்கர் விழாக்கள்!

சென்னை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, 14-04-25 காலை 9:30 மணியளவில், அடையார் அம்பேத்கர் மணி மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 10:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் மயிலாப்பூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது… மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், கழக இளைஞரணி அமைப்பாளர் ப.அருண ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். தென்சென்னை காலை 8 மணிக்கு, சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு, தோழர்கள் மாலை அணிவித்து, கொள்கை முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “அம்பேத்கருக்கு இந்துமதச் சாயம் பூசும் அவதூறுகளுக்கு மறுப்பு” நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வை திவிக தென்சென்னை மாவட்ட...

சென்னை: பூணூல் அறுப்பு வழக்கு தள்ளுபடி!

சென்னை: பூணூல் அறுப்பு வழக்கு தள்ளுபடி!

திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், லெனின் சிலையை அகற்றியதுபோல, தமிழ்நாட்டில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று 2018-இல் ஆணவத்தோடு சமூக ஊடகத்தில் பதிவிட்டார் எச்.ராஜா. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. சென்னை மாவட்டத் தோழர்கள் எச்.ராஜாவின் பேச்சுக்கு எதிர்வினையாக தியாகராயா நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் பார்ப்பனர்களின் பூணூலை அறுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. அசோக் நகர் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு, சைதாப்பேட்டை 17-வது நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 10 தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். உமாபதி, சுகுமார், இராவணன், கோபி, ஜான், அருண், பிரதீப், பிரபாகரன், திவாகர், நந்தா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 7‌ தோழர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டு 6 மாதங்கள் சிறை தண்டனைப் பெற்றனர். வழக்கறிஞர் இளமாறன், உதவியாளர் பேரன்பு ஆகியோர் வழக்கை சிறப்பாக நடத்தினார்கள். அதேபோல, 2008-இல்‌ கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்வினையாக...

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும், அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று ‘பெரியார் பணி செய்வதே என் கடன்’ என்ற லட்சிய வெறியோடு ஒரு வாரகாலம் பயணித்த கழகச் செயல் வீரர்களை இம்மாநாடு பாராட்டுகிறது, மகிழ்கிறது.இந்தப் பயணத்தில் தோழர்கள் செலுத்திய உழைப்பு வீண் போகாது; வரலாற்றில் பதியப்படும் என்று இந்த மாநாடு பெருமை அடைகிறது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

சென்னை பரப்புரைக் குழு: கிழக்கு தாம்பரம் வால்மீகி நகரில் சங்கராச்சாரியார் படத்தை சட்டைப் பையில் வைத்திருந்த வெங்கடேஷ் என்ற புதிய ஆதரவாளர் பரப்புரை பயணத்தைக் கூர்ந்து கவனித்து கூட்டம் முடிந்ததும் தோழர்களுக்கு தேநீர் வாங்கி கொடுத்தார். மேலும், “நான் ஆன்மிகவாதிதான். ஆனால் பக்தி வேறு அரசியல் வேறு” என்றும், “எனக்குப் பெரியாரை பிடிக்கும். பெரியார் இல்லை என்றால் நான் இன்றைக்கு இந்த டிராவல்ஸ் தொழிலை வைத்திருக்க முடியாது” என உணர்ச்சி பொங்க கூறினார். “இன்றைக்கு சீமான் போன்ற ஆட்கள் பெரியாரைப் பற்றி அவதூறு பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் இந்த மாறி அயோக்கியனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துங்கள். பெரியார் இல்லை என்றால் இன்றைக்கு கல்வி கற்க முடியமா தமிழர்கள்” என்றும் கூறினார். அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பரப்புரை வாகனத்திற்கு பெட்ரோலை கேனில் தர மறுத்தனர். வெங்கடேஷ் அவர்கள் சென்று கழகப் பிரச்சார ஜெனரேட்டர்க்கு 610 ரூபாய்க்கு பெட்ரோல்...

பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…

பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…

பெரியார் ஏன் எதிரிகளைப் பதறவைக்கிறார்? பரப்புரைப் பயணம் கடந்த 15-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது 16-ஆம் தேதி ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடங்கியது. கழக செயல் வீரர்கள் தனி வாகனங்களில் பயணத்தில் பங்கேற்கிறார்கள். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கழக செயல் வீரர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த பரப்புரையில் இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். கழக நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பெரியாரின் எதிர்நீச்சல் அவர் உருவாக்கிய சமூக மாற்றங்களைக் கழகப் பேச்சாளர்கள் மக்களிடம் எடுத்துக் கூறுகிறார்கள். கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. பயணங்களின் செய்தித் தொகுப்பு சென்னை: “பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” எனும் தலைப்பில் சென்னை அணி செல்லும் பரப்புரைப் பயணத்தின் தொடக்க விழா,இராயப்பேட்டையில் 15.03.2025 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் சிறப்புரையாற்றி பரப்புரைப் பயணத்தை துவக்கி வைத்தார். திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.என்.துரை, 119-வது...

இளமதி ஜேசன்‌ ஜாதி மத மறுப்பு மணவிழா

இளமதி ஜேசன்‌ ஜாதி மத மறுப்பு மணவிழா

கழக ஆதரவாளர் எம்.ஜி இளங்கோவன் – மாலதி ஆகியோரின்‌ மகள் இ.மா.இளமதி பி பி.ஜேசன் ஆகியோர் ஜாதி மத மறுப்பு மணவிழா 8.02.2025 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை ஈஞ்சம்பாக்கம் அக்கரையில் உள்ள ஜெனராஜன் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மணவிழாவை நடத்தி வைத்தார். கீழ்கண்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது. இன்று முதல் நாங்கள் வாழ்க்கை துணைவர்களாக குடும்ப வாழ்வில் நுழைகிறோம்.சம உரிமையும் தோழமையும் அன்பும் கொண்டதே குடும்பம் என்றக் கொள்கை வழியில் பயணிக்க உறுதி ஏற்கிறோம். வாழ்வில் சந்திக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சமமாக பகிர்ந்து கொண்டு இணையர்களாவும், தோழர்களாகவும் அறிவியல் நெறியில் சமூக அக்கறையோடு வாழ்ந்து காட்டுவோம் என்று உறுதி ஏற்கிறோம். என்று உறுதி ஏற்றனர். மண விழா மகிழ்வாக இணையர்கள் கழக வளர்ச்சிக்கு ரூ.5000 நன்கொடை வழங்கினர் பெரியார் முழக்கம் 06032025இதழ்

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக்கூட்டம்

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக்கூட்டம்

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக் கூட்டம் 22.02.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகரத் தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநகர அமைப்பாளர் கிருட்டிணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன், ச.மாதவன், லோகநாயகி, தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நவீன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள். சு.செ.சம்பத் (மதிமுக), இராமதாஸ் (விசிக), சாந்தகுமார் (தோழர் அறக்கட்டளை), இராவணன் (ஆதித்தமிழர் பேரவை), சித்ரா (மாமன்ற உறுப்பினர்), ஈஸ்வரன் (திமுக) உள்ளிட்ட தோழமை இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கழகத் தோழர்கள் ஸ்டாலின் ராஜா, அன்னூர் விஷ்ணு ஆகியோர் கழக வெளியீடுகளை வழங்கி சிறப்பித்தனர். கூட்டத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். பெரியார் முழக்கம் 27022025 இதழ்

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

சென்னை: மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 18-02-23 கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழக சேத்துப்பட்டு அமைப்பாளர் இராசேந்திரன் அவர்கள் கடவுள், மறுப்பு, ஆத்மா, கொள்கையை கூறினார். மாவட்டச் செயலாளர் உமாபதி தொடக்க உரையாக சென்னை மாவட்ட கழகம் கடந்த ஆண்டு செய்த சாதனைகளையும், தற்போதைய அரசியல் சூழல்களையும் விளக்கினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன்‌ சென்னையில் கடந்த ஆண்டு நடந்த “எது திராவிடம்,எது சனாதனம்” தலைப்பில் 200 கூட்டங்களைச் சிறப்பாக செய்ததற்கு உழைத்த அனைத்து தோழர்களையும்‌ பாராட்டி வருகிற பரப்புரைப் பயணத்தின் தேவைகள் குறித்துப் பேசினார். கழகத் தலைமை குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் உரைக்குப் பிறகு கழக மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் புதிய தோழர்களை இன்னும் அமைப்பாகக் கட்டமைக்க ஆலோசனைகள் வழங்கினார். தாம்பரம் பகுதி அமைப்பாளர் அருண் கோமதி நவீன காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த வேண்டியத் தேவை...

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய அரசு தமிழ்நாட்டின்‌ பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்து தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் டெல்லியில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்‌ நடந்து முடிந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்‌ தமிழ்நாடடின்‌ முக்கிய நகரங்களில் பிப்.13 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பல்கலைக் கழக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த புதிய விதிகளில் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின்‌ நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆபத்து அடங்கியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி துண்டறிக்கை அச்சிடப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டன. கழகம்‌ ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு… சேலம்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் யூஜிசி விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 13.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்...

பெரியாரை இழிவுப்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவோம்! அப்புறப்படுத்தவோம்!

பெரியாரை இழிவுப்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவோம்! அப்புறப்படுத்தவோம்!

அனைத்து சனநாயக இயக்கங்கள் சார்பாக பொதுக்கூட்டம் சென்னை மாவட்டம் திருவொற்றியூரில் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், புதுச்சேரி மாநில தலைவர் லோகு அய்யப்பன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, இளைஞரணி மாவட்டச் செயலாளர் ப.அருண், மாவட்ட கழக தோழர்கள் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துகொண்டனர். கூட்டமைப்பு சார்ந்த பொழிலன், போரசிரியர் செயராமன், வாலாசா வல்லவன், மனிதி செல்வி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 13022025 இதழ்

தினேசு-சூர்யா இணையரின் ஜாதி மறுப்புத் திருமண விழா

தினேசு-சூர்யா இணையரின் ஜாதி மறுப்புத் திருமண விழா

திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழரும், ஊடகவியலாளருமான தினேசு – சூர்யா இணையர்களின் சுயமரியாதைத் திருமணம் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 02.02.2025 அன்று சென்னையில் ராமாபுரம்‌ பகுதியில் உள்ள பாம்ஷோர் உணவகத்தில் நடைபெற்றது. எவ்வித சடங்கு சம்பிரதாயம் இன்றி எளிமையாக, இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். காசு நாகராசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சன் நியூஸ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் மு.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊடகவியலாளர் கீதா தொகுத்து வழங்கினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண் உட்பட கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர்.சன்நியூஸ் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன் பேசுகையில்,தோழர் தினேஷ் அடக்கமான சிந்தனை,படைப்பூக்கமும் நிறைந்தவர் என்று பாராட்டினார். திராவிடர்...

பேரறிஞர் அண்ணா நினைவுநாள்; கழகம் சார்பில் மரியாதை!

பேரறிஞர் அண்ணா நினைவுநாள்; கழகம் சார்பில் மரியாதை!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை இராயப்பேட்டை பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், ஓ.சுந்தரம் (திமுக), கழக இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு மற்றும் பகுதி கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். கோவை: பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆவது நினைவு நாளில் கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காந்திபுரம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு, மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. பெரியார் முழக்கம் 13022025 இதழ்

நிமிர்வோம் வாசகர் வட்ட   26-வது சந்திப்பு!

நிமிர்வோம் வாசகர் வட்ட 26-வது சந்திப்பு!

பேரறிஞர் அண்ணா 56-ஆவது நினைவுநாளை முன்னிட்டு 26-ஆவது சிறப்பு நிமிர்வோம் வாசகர் வட்டம் 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிமிர்வோம் வாசகர் வட்டப் பொறுப்பாளர் தோழர் பிரகாசு தொகுத்து வழங்க ,கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் .மேலும் ஊடகவியலாளர் கரிகாலன், “பார்ப்பனக் கைக்கூலிகள் சீமான், மணியரசன்” என்ற தலைப்பில் உரையாற்றினார் . ஊடகவியலாளர் மில்டன், “பெரியார் அண்ணாவின் தமிழ்த் தொண்டு” என்ற தலைப்பில் அண்ணா செய்த சாதனைகளையும் நிகழ்கால அரசியல் குறித்தும் சிறப்புரையாற்றினார்.கழக தோழர்கள் உட்பட நூற்றுக்கும்‌ மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்னூர் விஷ்ணு நன்றி கூறினார்‌. கழக ஏட்டின்‌ வளர்ச்சிக்கு சென்னை அடையாறு பகுதி இரா.வெங்கடேசன் ரூபாய் 7000 -கழக பொதுச் செயலாளரிடம் நிகழ்ச்சியில் வழங்கினார். தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் பேரன்பு 25-முழக்க சந்தாவுக்கான ரூபாய் 7500 தொகையைத் தலைவர் அவர்களிடம் வழங்கினார். நிகழ்வில் பிரவீன்,சுபாஷ்...

பெரியார் முழக்க சந்தா; சென்னை மாவட்டம் ரூ.30,000-/யை வழங்கியது

பெரியார் முழக்க சந்தா; சென்னை மாவட்டம் ரூ.30,000-/யை வழங்கியது

சென்னை மாவட்டக் கழக சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான புரட்சிப் பெரியார் முழக்க சந்தா தொகையாக ரூ.30,000/- 12.01.2025 அன்று திருவல்லிக்கேணியில் நடந்த பொங்கல் விழாவில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் 30012025 இதழ்

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளரும், புரட்சிப் பெரியார் முழக்கம் இதழின் ஆசிரியருமான விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ‘பெரியார் விருது’ வழங்கி பெருமை சேர்த்தது. இதற்காக பொதுச்செயலாளரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் அசோசியேசன் சங்க கட்டடத்தில் 26.01.2025 அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாணவர் நகலக உரிமையாளர் செளரிராஜன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வாலாசா வல்லவன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மருத்துவர் அமலோற்பவநாதன், வீ.அரசு, பேராசிரியர் கல்யாணி, தடா ஓ.சுந்தரம், பத்திரிகையாளர்கள் சிகாமணி, வீரபாண்டியன், சுகுணா திவாகர், வழக்கறிஞர் அஜிதா, மனநல மருத்துவர் சிவபாலன், மருத்துவர் தாயப்பன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் பொதுச்செயலாளர் உடனான தங்களது அனுபவங்கள், பொதுச்செயலாளரின் அர்ப்பணிப்புமிக்க இயக்க – எழுத்துப் பணிகளை பாராட்டிப் பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டனர்....

சென்னை – திருப்பூரில் பொங்கல் விழா

சென்னை – திருப்பூரில் பொங்கல் விழா

சென்னை : திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 25ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 12.01.2025 அன்று இராயப்பேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். கோபிநாத் வரவேற்புரை நிகழ்த்தினார். இராஜேசு – தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, கழகத் தலைமை நிலையச் தபசி குமரன், தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், வட்டச் செயலாளர் க.வே.மோகன், வி.சி.க. எஸ்.எஸ்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து அதிர்வு கலைக்குழுவின் தமிழர் மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், பகுதி மாணவிகளின் மாறுவேடப் போட்டி, பட்டுக்கோட்டை அபிராமியின் கிராமியப் பாடல்கள் மற்றும் பூவையார், கானா பிரபா, மெர்லின் ஆகியோரின் கானா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 2024ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார்...

பெருந்திரளாகப் பங்கேற்ற கழகம்

பெருந்திரளாகப் பங்கேற்ற கழகம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அருண், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவிபாரதி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் பெரியார் சாக்ரடீஸ், கடலூர் சிவா, பெங்களூரு சித்தார்த்தன், திண்டுக்கல் மாக்சிம் கார்கி உட்பட சென்னை, திருச்சி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். நீலாங்கரை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி சீமான் வீடு அருகில் உள்ள ரிலையன்ஸ் மார்க்கெட்...

வீட்டுக்குள் பதுங்கிய சீமான்!

வீட்டுக்குள் பதுங்கிய சீமான்!

ஆர்ப்பாட்டம் நடைபெறும் வரை காவல்துறை பாதுகாப்போடு சீமான் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து முடித்தவுடன், வெளியே வந்து ஊடகங்களுக்கு வீராவேசமாக பேட்டி அளித்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் வீட்டை நெருங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். “காவல்துறை பாதுகாப்பு எனக்கு வேண்டாம், ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதியுங்கள்” என முன்பே சொல்ல சீமானுக்கு தைரியம் இல்லாமல் போனது ஏன் என அந்த பேட்டியைப் பார்த்து பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர். மீண்டும் மீண்டும் பெரியார் குறித்து சீமான் வைக்கும் விமர்சனங்களால் பெரியாரின் புகழ் மென்மேலும் பரவிக் கொண்டிருக்கிறது. எதிரிகள்தான் தனக்கு விளம்பரமே என வாழ்ந்த காலத்திலேயே கூறியவர் பெரியார். இப்போது மறைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் அந்த கூற்று நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது. சீமானின் விமர்சனங்களால் பெரியார் தமிழ் குறித்தும், பெண்கள் குறித்தும் உண்மையில் என்ன கூறினார் என்று தேடித்தேடி இளைஞர்கள் படிக்கிற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் இதுவரை சென்று சேராத தரப்பினரிடமும் பெரியாரின்...

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார். பெரியார் குறித்து அவர் வைக்கும் விமர்சனங்களுக்கு ஆதாரம் கேட்டால், அவரின் சங்கி நண்பர்களான அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும், தமிழிசை செளந்தரராஜனும், துக்ளக் குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களும் ஆதாரத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை சீமானும் ஆதாரத்தைத் தரவில்லை, அவருடைய சங்கி நண்பர்களும் ஆதாரத்தைத் தரவில்லை. சீமானின் இத்தகைய அவதூறுப் பேச்சு பெரியாரிய உணர்வாளர்கள் மத்தியிலும், பொதுமக்களிடத்திலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அவதூறுப் பேச்சுக்களை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று பல்வேறு தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சீமானோ மீண்டும் மீண்டும் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனால் சனவரி 22-ஆம் தேதி பனையூரில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடப்போவதாக ‘பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ அறிவித்திருந்தது. சீமானின் அருவருப்புப் பேச்சுகளால் ஆத்திரமடைந்த பெரியாரியத் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைநகர்...

முதலமைச்சரின் தகுதியுரை

முதலமைச்சரின் தகுதியுரை

தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாள ருமான திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள், 1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் தொடர்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தி பெரியாரின் கொள்கைகளைப் பேசவும் எழுதவும் தொடங்கியவர். தந்தை பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியவர். பெரியாரின் இயக்க ஏடுகளில் 25 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றியதோடு பெரியார் பேசிய கூட்டங்களில் அவரது உரையைக் குறிப்பெடுத்து பதிவு செய்தவர். இவர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தந்தை பெரியாரின் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமைத் தளங்களில் கடந்த 58 வருடங்களாகத் தொண்டாற்றி வருகிறார். பெரியார் கண்ட கனவான ஜாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகவும் மக்களை அணிதிரட்டிப் போராடி வருபவர். மக்களை விழிப்படையச் செய்யும் வகையில்...

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

பெரியார் பேசுபொருளாக மாறியிருக்கிற காலச்சூழலில் திராவிட மாடல் அரசு எனக்கு பெரியார் விருது வழங்கி கவுரவித்திருப்பதை ஒரு மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன். பெரியார் கருத்துக்கள் நாட்டிற்கு மிக மிகத் தேவையான கருத்துக்களாக இருக்கிறது என்பதைச் சமகால சமூக – அரசியல் சூழல்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பெரியாரியலை மேலும் வலுவாகக் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளாக உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பெரியாரியத்தின் எதிரிகளே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் காலத்தில் இருந்து அவருடைய கொள்கைகள் வேகமாகப் பரவியது அவருடைய எதிரிகளால் தான் என்று பெரியாரே திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். எனவே இந்த ஒரு சூழ்நிலையில் பெரியார் விருதை வழங்கி கவுரவித்திருப்பது, பெரியாரியத் தொண்டை மேலும் உற்சாகமாகச் செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிற விருதாகவே நாங்கள் கருதுகிறோம். அதற்காக முதலமைச்சருக்கு எங்களுடைய நன்றி. பெரியாரியலுக்கு எதிராக பரப்பப்படும் தவறான திசைதிருப்பும் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உந்துசக்தியும் அதிகரித்திருக்கிறது. பெரியாரியலை இன்னும் வேகமாக முன்னெடுக்க...

இராயப்பேட்டையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு

இராயப்பேட்டையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சனவரி 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகப் பொதுச்செயலாளருக்கு பெரியார் விருதுடன், ரூ.5 இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கிக் கவுரவித்தார். ஏற்கெனவே கழகப் பணிகள் மற்றும் பொதுச்செயலாளரின் அரை நூற்றாண்டுக்கும் மேலான எழுத்துப் பணிகளுக்கான அங்கீகாரமாக, 2022-ஆம் ஆண்டில் கழகப் பொதுச்செயலாளரின் நூல்களை நாட்டுடைமையாக்கிப் பெருமை செய்தது திராவிட மாடல் அரசு. தற்போது பெரியார் குறித்த விவாதங்களும், உரையாடல்களும் தீவிரமாக நடந்துவரும் இந்த காலகட்டத்தில் பொதுச்செயலாளருக்கு பெரியார் விருது அளித்திருப்பது கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராயப்பேட்டையில் உற்சாக வரவேற்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் சரஸ்வதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி...