வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்புக்கு இளைஞர்கள் சூளுரை : செஞ்சட்டைக் கடலில் மதுரை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் மே 29 அன்று நடந்த செஞ் சட்டைப் பேரணியால் மதுரை குலுங்கியது. கருஞ்சட்டைப் பேரணி, நீலச் சட்டைப் பேரணிகளைத் தொடர்ந்து செஞ் சட்டைப் பேரணிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருமான கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுது மிருந்தும் இளைஞர்கள் பெண்களும் ஆண்களு மாய் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து பார்ப்பபனிய பாசிசத்தை வீழ்த்துவோம்; இந்தியாவில் ஒற்றை ஆட்சியைத் திணிக்காதே; இது பெரியார் மண் – சனாதன சக்திகளை அனுமதியோம் என்று உணர்ச்சி முழக்கமிட்டு வந்தனர். திராவிடர் விடுதலைக்கழக சார்பில் சென்னை, மேட்டூர், சேலம், நங்கவள்ளி, கொளத்தூர், மயிலாடுதுறை, நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து தனிப் பேருந்துகளிலும் வேன்களிலும் திரண்டு வந்திருந்தனர்.

கழகப் பெயருடன் கழகக் கொடி செஞ் சட்டையில் அச்சிடப்பட்டிருந்தது. விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்ப் புலிகள் கட்சி, மே 17 இயக்கம், மக்கள் அதிகாரம், மார்க்சிய பெரியாரிய பொது வுடைமைக் கட்சி, திராவிடர் கழகம், நிமிர்வு பறை இசைக் குழு, நிகர்பறை இசைக் குழு, தமிழ்த் தேச விடுதலை முன்னணி, தமிழ்த்தேச நடுவம், தமிழக மக்கள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், செஞ்சட்டை அணிந்து தங்கள் அமைப்பின் கொடிகளுடன் பங்கேற்றனர்.

பழங்காநத்தம் பகுதியில் வர்க்க வர்ண ஆதிக்க ஒழிப்பு மாநாடு, நாகை திருவள்ளுவன் தலைமையில் வாலாஜா வல்லவன் வரவேற் புரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் மக்கள் அதிகாரம், கோவன் குழுவினரின் புரட்சி கர கலை நிகழ்ச்சி, கூட்டத்தினரை உணர்ச்சி மயமாக்கியது. மாநாட்டின் நோக்கத்தை விளக்கி, பொழிலன் உரையாற்றினார். தீர்மானங் களை முன் மொழிந்து கோவை இராம கிருட்டிணன் பேசினார். தொல். திருமாவளவன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி,

சு. வெங்கடேசன், எம்.பி., ஜி. இராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சந்தானம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), அதியமான் (ஆதித் தமிழர் பேரவை), ஜக்கையன் (ஆதித் தமிழர் கட்சி), வழக்கறிஞர் ப.பா. மோகன், பேராசிரியர் ஜெய ராமன், வெண்மணி (திராவிடர் தமிழர் கட்சி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் உரையாற்றினர். கூட்டமைப்பு சார்பில் “வீழட்டும், பார்ப்பனியம், சாதியம், முதலாளியம்” நூலை வெளியிட்டு, குடந்தை அரசன் உரையாற்றினார்.

இரவு 11.30 மணி வரை மாநாடு நடந்தது. நிறைவுறையாற்றிய தொல். திருமாவளவன், நான்கு வர்ணம் என்ற சதுர்வர்ணத்தை வீழ்த்த கருப்பு, நீலம், சிவப்பு என்ற மூன்று வர்ணம் போர்ப் படையாகத் திரண்டிருக்கிறது என்றார். மோடியும் அமீத்ஷாவும் பிற்படுத்தப்பட்டோ ராக இருக்கலாம்; அவர்களை இயக்குவது பார்ப் பன மூளை. பிரதமராகும் மோடியால் ஆர்.எஸ். எஸ். தலைவராக முடியுமா என்று கேட்டார்.

இளைஞர்களின் ஒன்றுபட்ட இந்துத்துவ பார்ப்பன எதிர்ப்பின் வெளிப்பாடாக பேரணி எழுச்சியுடன் அமைந்தது.

– நமது செய்தியாளர்

 

பெரியார் முழக்கம் 02062022 இதழ்

You may also like...