மதுரையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம்

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூலை 1 அன்று மெஜஸ்டிக் ஹோட்டலில்
வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் யோகேஸ் வரவேற்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமை தாங்கினார், சத்தியமூர்த்தி – முருகேசன் முன்னிலை வகித்தனர்.
சேரன் மாதேவி போராட்டம் குறித்து மாவட்ட கழக காப்பாளர் தளபதியும், திராவிடமும் சமூக நீதியும் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணித் தலைவர் ராஜிவ் காந்தியும், வைக்கம் போராட்டத்தின் தேவை நேற்றும் இன்றும் எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் கருத்துரையாற்றினார்கள்.
அழகர் பிரபாகரன், வாசுகி, வேங்கைமாறன், விஜய், வீரலட்சுமி, கண்ணன், காமாட்சி உள்ளிட்ட கழகத் தோழர்களும், பல்வேறு தோழமை அமைப்பு தோழர்களும் மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளும் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

You may also like...