சேலத்தில் இளைஞர் – மகளிர் – மாணவர் அணிகள் கலந்துரையாடல்

சேலம் : சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – மகளிர் அணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 01.09.2024 இளம்பிள்ளை நேரு,வேடியப்பன் இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. சேலம் (கி) மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலை வகித்தார்.
கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் (கி) மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் தமிழரசன் ஆகியோர் இளைஞர்கள் மத்தியில் தங்களது கள அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேலும் சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – மகளிர் அணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகக்த்திற்குப் புதியப் பொறுப்பாளர்களை நியமித்தார். அவை பின்வருமாறு:-
மாவட்ட இளைஞர் அணித் தலைவராக ஏற்காடு தேவபிரகாஷ், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராக நங்கவள்ளி பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களாக இளம்பிள்ளை தங்கதுரை, சேலம் வெற்றிமுருகன், வெள்ளார் சிவ சண்முகம், மேட்டூர் திவாகர், மேட்டூர் RS சுசீந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர்களாக மேட்டூர் RS பகுதி நாகராஜ், காவலாண்டியூர் சந்தோஷ், கொங்கணாபுரம் கவியரசு, ஏற்காடு சரிதா, ஏற்காடு ஜாஸ்மின் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்களாக கொளத்தூர் சுதா, இளம்பிள்ளை திவ்யா, காவலாண்டியூர் சரசுவதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் தாரமங்கலம் ஒன்றிய அமைப்பாளராக பவளத்தானூர் சரவணன், இளம்பிள்ளை நகரச் செயலாளராக மோகன் ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏற்காடு தேவபிரகாஷ் நன்றி கூறக் கூட்டம் நிறைவுபெற்றது.

பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்

You may also like...