சென்னையில் மாணவர், இளைஞர் அணிகள் ஆலோசனை

சென்னை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 18.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமையகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கல்லூரி மாணவி தோழி தலைமைத் தாங்கினார். தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, மாணவர்கள் முன்வைத்தக் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில் எதிர்வரும் காலங்களில் மாணவர் நலன் சார்ந்தப் போராட்டங்களை முன்னெடுப்பது, தோழமை மாணவர் இயக்கங்களுடன் இணைந்துப் பணியாற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. நிறைவாகத் திருப்பூர் பிரசாந்த் நன்றி கூறினார்.
சென்னை மாவட்டக் கழக இளைஞரணியில் இளைய தலைமுறையினர் சந்திப்பு நிகழ்வு 25.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமையகத்தில் இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாசு தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி பங்கேற்றுச் சிறப்பித்தார். மேலும் இட ஒதுக்கீடு – பெரியார் – திராவிடம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் அறிவுசார் நிகழ்வாக இது அமைந்தது.
இதில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண்குமார், கழக இளைஞரணியினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்

You may also like...