பேச்சுப்போட்டியில் திருப்பூர் மகிழவன் இரண்டாம் இடம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறியாளர் அணி நடத்திய மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் இரண்டாம் இடத்தைப் பிடித்து ரூ.3,00,000/- பரிசுத் தொகையை வென்றார்.
பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததையடுத்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும் குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத்திற்கு ரூ.1000/- மற்றும் பெரியார் முழக்கத்திற்கு ரூ.5000/- நன்கொடை வழங்கினார்.

பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்

You may also like...